25 September, 2015

Choosing Life over Limb வெட்டி விடுங்கள், விஷம் விலகும்


Change what is going on within you…
www.caseycarea.com-640

26th Sunday in Ordinary Time

In Greek history we read of a young man who so distinguished himself in public games that his fellow citizens raised a statue in his honour, to keep fresh the memory of his victories. This statue so excited the envy of another rival who had been defeated in the races that one night he stole out under cover of darkness with the intention to destroy the statue. But he only nicked it slightly. He gave it a final heave and it fell – on top of him and killed him. - Frank Michalic in ‘1000 Stories You Can Use’.

Envy always harms the subject who harbours it, and, may be, sometimes, it harms the person who is the object of envy. Our Sunday Readings, taken from the Book of Numbers (11: 25-29) and the Gospel of Mark (9: 38-48) talk of envy. Envy begins with the formula I-and-you or we-and-they. Joshua wants Moses to forbid two persons who were prophesying even though they did not come to the tent to receive the spirit. The reply given by Moses is very magnanimous:
Numbers 11: 28-29
And Joshua the son of Nun, the minister of Moses, one of his chosen men, said, "My lord Moses, forbid them." But Moses said to him, "Are you jealous for my sake? Would that all the Lord's people were prophets, that the Lord would put his spirit upon them!"

A similar scene is re-enacted in the Gospel.
Mark 9: 38-39
John said to him, "Teacher, we saw a man casting out demons in your name, and we forbade him, because he was not following us." But Jesus said, "Do not forbid him; for no one who does a mighty work in my name will be able soon after to speak evil of me.”

What is so striking in these two episodes is that envy oozes out of holy people engaged in holy purposes. If this is the case with the ‘green tree’, what would happen to the ‘dried tree’ – namely, the envy that rules the commercial and political worlds.

Jesus then goes on to use strong language to condemn those who are a cause of sin for the little ones. Millstone is the solution given by Jesus. For those who prone to sin, Jesus goes to the point of saying it is better to use a limb than life – eternal life.

I am reminded of a news story I read long back. It was about a man working in the railways in a remote part of Australia. As he was engaged in some work, he was bitten on his hand by a poisonous snake. He had hardly any chance to reach the hospital quickly. He knew that every second he waited would make his life more precarious. He chopped his hand off, using an axe. He continued to live with an amputated hand. For the question, life or limb, he had answered, life!

This may be a rare case. But, the question – life or limb – is often asked in our hospitals. This question does not pop up all of a sudden, as in the case of our friend from Australia, bitten by the snake. The question of life or limb that echoes in our hospitals often comes as the last resort to those who have not heeded earlier warnings. Imagine a person suffering from diabetes. If he takes care of his eating, and does regular exercises, he can live with this problem. Different warnings may come his way, as for instance, a small wound! But, if he ignores these warnings and goes on with his usual life style, he will have to come to the point of life or limb!

Developing healthy habits is good for all of us. Won’t you agree? Isn’t Jesus saying the same thing in Mark’s Gospel. A bit too strong. Most medicines are bitter.

 பொதுக்காலம் 26ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

வத்திக்கான் வானொலியில் என்னோடு பணியாற்றும் நண்பர் ஒருவருடன் ஞாயிறு நற்செய்தியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். "இந்த ஞாயிறு நற்செய்தியை நற்செய்தின்னு சொல்றதுக்கே தயக்கமாயிருக்கு, ஏன்னா, இயேசு, கையை, காலை வேட்டிகிறதைப் பத்திக் கொஞ்சம் கடுமையாப் பேசியிருக்கார்" என்று சொன்னேன்.
அந்த நற்செய்தியை ஒருமுறை பார்த்த நண்பர், "நல்ல வேளை, அவங்கவுங்க, தங்களுடைய கையையோ, காலையோ வெட்டிக்கிறதைப் பத்திதானே இயேசு சொல்லியிருக்கார், அடுத்தவங்க கையையோ, காலையோ வெட்டச் சொல்லலியே" என்று அவருக்கே உரிய நகைச்சுவைக் கலந்த தொனியில் சொன்னார். அவர் சொன்ன நகைச்சுவை கூற்று என் சிந்தனையை ஆரம்பித்து வைத்தது.
இயேசு வாழ்ந்த காலத்தில், யூத சமுதாயம், எளிதாக, அடுத்தவர் கையை, காலை வெட்டுகின்ற சமுதாயமாக இருந்தது. "ஆவூன்னா அரிவாளைத் தூக்கிடுறான்களே" என்று நம் திரைப்படங்களில், நகைச்சுவை நடிகர்கள் குறிப்பிடுவது, இந்த சமுதாயத்திற்குப் பொருத்தமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பழிக்குப் பழி வாங்குவதில் அதிகத் தீவிரமாய் இருந்தவர்கள் யூதர்கள். இதனால்தான், இயேசு, அவர்களைப் பார்த்து "'கண்ணுக்குக் கண்', 'பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்" (மத்தேயு 5: 38-39) என்ற மாறுபட்ட பாடத்தைச் சொல்லித்தந்தார். மறுகன்னத்தை திருப்பிக் காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவை அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நம் கதையோ வேறு.

பழிக்குப் பழி வேண்டாம், மறுகன்னத்தைக் காட்டுங்கள் என்று அமைதியாக பேசும் இயேசுவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அனால், ‘கையை, காலை வெட்டிவிடுங்கள் என்று, கடுமையாகப் பேசும் இயேசுவைப் புரிந்து கொள்வது, நமக்குக் கடினமாக உள்ளது.
சாட்டையடிபட்டு, சிலுவையில் தொங்கும் இயேசுவைப் புரிந்துகொள்ள முடிகிறது. அனால், சாட்டையைக் கையில் எடுத்துக்கொண்டு, கோவிலிலிருந்து வியாபாரிகளை விரட்டினாரே, அந்த இயேசுவைப் புரிந்து கொள்வது, கடினமாக உள்ளது.

அப்படி ஒரு சவாலை இன்றைய நற்செய்தி தருகிறது. இந்த இயேசுவைப் புரிந்து கொள்ள, அவர் சொல்லும் வார்த்தைகள் எந்த பின்னணியிலிருந்து வருகின்றன என்று தேடிப் பார்க்கவேண்டும். பின்னணியை விட்டுவிட்டு, இயேசுவின் வார்த்தைகளைத் தனியே எடுத்து, வெறும் மேற்கோளாக ஒரு சிலர் பேசும்போது, நான் சங்கடத்தில் நெளிந்ததுண்டு. மறு கன்னத்தைக் காட்டுங்கள் என்று அறிவுரை கூறும் இயேசு, தலைமைக் குருவின் ஊழியன் அவரை அறையும்போது, மறு கன்னத்தைக் காட்டவில்லையே. மாறாக, அவரிடம், ‘என்னை ஏன் அறைகிறாய்?’ என்று கேள்வி கேட்டார். சூழ்நிலை, பின்னணி இவற்றோடு, இயேசுவின் கூற்றுக்களைப் பார்ப்பது பயனளிக்கும்.

இன்று இயேசு நற்செய்தியில் கூறும் வார்த்தைகளுக்குப் பின்னணி என்ன? சென்ற வார நற்செய்தியின் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்கலாம். சென்ற வாரம், ஒரு குழந்தையை மையமாக்கி, இயேசு தன் சீடர்களுக்குச் சவால் விடுத்தார். இவர்களில் ஒருவரை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுங்கள், இவர்களைப் போல் மாறுங்கள் என்று கூறிய இயேசு, இந்தக் குழந்தைகளுக்குப் பெரியோர் வழியாக உருவாகும் ஆபத்துக்களை நினைத்துப் பார்க்கிறார். சூடாகிப் போகிறார். குழந்தைகள் மட்டும் அல்ல, குழந்தை மனம் கொண்டவர்கள், ஏழைகள்... சமுதாயத்தில் சிறியவர்கள்... "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது"  (மாற்கு நற்செய்தி 9: 42) என்று சொல்கிறார்.

சமுதாயம் என்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் அங்கம் நீக்கப்பட வேண்டும். இப்படி, சமுதாயத்திலிருந்து ஒவ்வொருவரையாக கடலில் தள்ளினால், கடல் நிறைந்து விடும், நிலம் காலியாகிவிடும். இதற்கு ஒரு மாற்று? இயேசு சொல்லும் அடுத்த வாக்கியங்கள். சமுதாயத்தில் விஷமாக மாறுவதற்கு பதில், ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி யோசித்து, அவரவர் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும். அப்படி மாற்றுவதற்கு, அவரவர் உடலில் இருக்கும் தடைகளை நீக்கவேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தவே, கண்ணைப் பிடுங்கி எறியுங்கள், கை, கால் இவற்றை வெட்டிப் போடுங்கள் என்று கடுமையாகச் சொல்வது போல் தெரிகிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்ததாய் சொல்லப்படும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இரயில்வேத் துறையில் பணிபுரிந்த ஒருவர், தனியே ஏதோ ஓரிடத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு பாம்பு அவரது கையைக் கடித்து விடுகிறது. மிகவும் விஷமுள்ள பாம்பு. மருத்துவமனை செல்வதற்கு வசதிகள் குறைவு. அதுவரை காத்திருந்தால், அவரது உயிர் போய்விடும் ஆபத்து. அவர் செய்தது என்ன? அருகிலிருந்த ஒரு கோடாலியை எடுத்தார். தன் கையை வெட்டிக்கொண்டார். இந்நாள் வரை அவர் உயிரோடு இருக்கிறார், வேலை செய்து வருகிறார், ஒரு கையோடு. அவரைப் பொருத்தவரை, கையை விட, உயிரைப் பெரிதாக மதித்ததால், அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.

இது போன்ற எத்தனையோ சம்பவங்களை நம் கேட்டிருப்போம். பல நேரங்களில் மருத்துவ மனைகளில் இந்தக் கேள்வி எழும். உங்களுக்கு கை வேணுமா? உயிர் வேணுமா? கால் வேணுமா? உயிர் வேணுமா? என்ற கேள்விகள் கேட்கப்படும். காயப்பட்டு புரையோடிப்போன கையையோ, காலையோ வெட்டி, எத்தனையோ பேருடைய உயிரை மருத்துவர்கள் காப்பாற்றுகின்றனர். உயிரா அல்லது உறுப்பா என்ற கேள்வி எழும் போது, ஒரு கையோ, காலோ, கண்ணோ இல்லாமல் உயிர் வாழ்வது மேல் என்று எத்தனையோ பேர் முடிவெடுத்திருக்கலாம். வேறு எந்த வழியும் இல்லை என்ற கடைசி நிலையில் எடுக்கப்படும் முடிவு அது.

உயிரா, உறுப்பா என்ற கடைசி நிலை ஒரு நாளில் வரும் நிலை அல்ல. அந்த நிலை, வழக்கமாக, சிறுகச் சிறுகத்தான் வரும். பாம்பு கடித்து கையை வெட்டிக்கொள்வது போன்ற சம்பவங்கள் மிக அரிதாக நடக்கும். ஆனால், மருத்துவமனைகளில் உயிரா, உறுப்பா என்ற கடைசி நிலைக்குத் தள்ளப்படும் நிலை, அடிக்கடி நடக்கும் நிகழ்வுதானே. அந்த நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுடைய வாழ்க்கையைப் புரட்டிப்பார்த்தால், கொஞ்சம் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

உதாரணமாக, முதலில் சர்க்கரை வியாதி வரும். அந்த நிலை வருவதை, பல சமயங்களில் தடுக்கலாம். பலருக்கு அது பிறவியிலேயே வந்து சேரும் பிரச்சனை. சரி... அந்த குறை இருக்கிறதென்று கண்டுபிடித்தவுடன், கவனமாகச் செயல்படலாமே. நமது உணவுப் பழக்கங்கள், தினமும் உடற்பயிற்சி, ஒரு சில மருந்துகள் என்று காட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், இந்தக் குறையோடு பல ஆண்டுகள் வாழ முடியும். அப்படி வாழ்பவர்களை எனக்குத் தெரியும். ஆனால், இந்தக் கட்டுப்பாடெல்லாம் இல்லாமல், அல்லது இந்த காட்டுப்பட்டை எல்லாம் அடிக்கடி மீறி, வம்பை வலியச் சென்று வரவழைத்துக் கொண்டவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். வழியோடு போகும் பாம்புடன், விளையாடுபவர்கள், இவர்கள். இன்னும் சிலர், பாம்பு வாழும் புத்துக்களைத் தேடிச்சென்று, புத்தில் கைகளைவிட்டு விளையாட நினைப்பவர்கள். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல பழக்கங்களைத் தேடிச் செல்பவர்களை நாம் அறிவோம்.

சர்க்கரை வியாதியால் துன்புறுகிறவர்களை மீண்டும் எண்ணிப் பார்ப்போம். கட்டுப்பாடுகள் இல்லாமல் அவர்கள் வாழும்போது, திடீரென, கையிலோ, காலிலோ, ஒரு காயம் ஏற்பட்டால், அதுவும் அவர்களுக்கு வரும் மற்றோர் எச்சரிக்கை என்று எடுத்துக்கொள்ளலாம், வாழ்வை மாற்றிக்கொள்ளலாம். அந்த எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாமல், அவர்கள் தன்னிச்சையாக வாழும்போது, இறுதியில், மருத்துவ மனைகளில் உயிரா, உறுப்பா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.

உடலுக்கு நலம் தராத பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும்.
தேவையற்ற ஆபத்துக்களை வாழ்விலிருந்து நீக்க வேண்டும்.
இந்த அறிவுரைகள், எல்லாருக்குமே நல்லதுதானே!
இயேசு இவற்றைத்தான் கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாக, கோபமாகச் சொல்லியிருக்கிறார். அவர் கோபமாக சொல்கிறாரோ, சாந்தமாகச் சொல்கிறாரோ... அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணர்வது, அதன்படி வாழ்வது, நமக்கு நல்லதுதானே!

"இவ்வுலகில் நீ காணவிழையும் மாற்றம் உன்னில் ஆரம்பமாகட்டும்" - “You must be the change you want to see in the world.” என்று சொன்னவர், மகாத்மா காந்தி.
"உனக்குள் நீ மாற்றத்தை உருவாக்கவில்லையெனில், உன்னைச் சுற்றி மாற்றத்தை உருவாக்க முடியாது" என்பது மற்றொரு பொன்மொழி.

தன் அரண்மனையைவிட்டு வெளியே வராத ஓர் அரசர், அன்று, மாறுவேடத்தில், நகர வீதிகளில் நடந்து சென்றார். ஆனால், வெகு சீக்கிரமே அரண்மனைக்குத் திரும்பிவிட்டார். அவரிடம் மந்திரி காரணம் கேட்டபோது, அரசர், தான் நடந்து சென்ற பாதையில் கல்லும், முள்ளும் இருந்ததால், அவை தன் காலைக் காயப்படுத்திவிட்டன என்று அரசர் சொன்னார். அத்துடன், இனி வீதிகளில் நடக்கும் யாருக்கும் முள் குத்தக்கூடாது என்பதற்காக, அனைத்து வீதிகளிலும், மாட்டுத் தோலை பரப்பவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கத் தயாரானார்.
இதைப்பற்றி கேள்விப்பட்ட மந்திரி, அரசரிடம் சென்று, "அரசே, ஊரெங்கும் மாட்டுத் தோலைப் பரப்புவதற்குப் பதில், உங்கள் கால்களை மாட்டுத் தோல்கொண்டு மூடிக்கொண்டு நடந்தால், பிரச்சனை தீர்ந்துவிடுமே" என்று ஆலோசனை கூறினார்.
 
ஊரையும், உலகத்தையும் மாற்றுவதற்கு ஓர் ஆரம்பமாக, நம்மை மாற்றிக் கொள்வது நல்லது. அந்த மாற்றம் இன்றே ஆரம்பமானால், மிகவும் நல்லது.

20 September, 2015

Learning from the ‘Little Professor’ ‘சிறு பேராசிரிய’ரிடமிருந்து பாடம் பயில...

 Christ with children – Christopher Santer

25th Sunday in Ordinary Time

A Sunday school teacher asked her children, as they were on the way to church service, "And why is it necessary to be quiet in church?" One bright little girl replied: "Because people are sleeping."
‘Out of the mouth of babes’ truth emerges – pure and simple. Beware!

Kids in a kindergarten class were deeply immersed in drawing. Their teacher was walking around to see each child's artwork. As she got to one little girl who was working diligently, she asked what the drawing was.
The girl replied, "I'm drawing God."
The teacher paused and said, "But no one knows what God looks like."
Without missing a beat, or looking up from her drawing the girl replied, "They will in a minute."
If I were the teacher listening to that kid, I would have learnt my catechism anew. The adult in us says that God is ‘un-seeable’ while the child (in us) says that God is ‘waiting to be seen’!

Children can teach us very profound truths, truths that have been stifled in us since we feel we have become ‘grown-ups’! Instead of learing from children, often we tend to ‘teach’ them – sometimes through words, but more often, by how we live.

I learnt one of my lessons about children in a kindergarten school where I had gone to attend the school day celebrations. The LKG angels went on stage to perform a nursery rhyme in which they were singing their daily duties. “I get up from bed, brush my teeth, take a shower…” etc. was the list sung by the children accompanied by actions. When it came to brushing the teeth, all the children were ‘brushing’ their teeth with the index finger of the right hand, while one of them was doing it with the left. When I pointed it out to the Principal sitting next to me, she gave me the ‘lesson’ about children.
She said that the kindergarten teacher, teaching a song to the kids, needed to do things in such a way that the children become her mirror images. That is, if the teacher wants the kids to do an action with their right hand, she had to do that action with her left, so that, the children would do it with their right hand. Mirror image!

Whether we like it or not, children are ‘mirror images’ of the adults. Our actions and behaviour are picked up by children more easily than our words. Here is an embarrassing event that happened in a family on a Sunday. The lady of the house was entertaining some guests who had come unannounced. When she was in their presence, she was all smiles. But, when she went into the kitchen, she was seething with anger and was cursing them. She did not bother abot her five year old daughter accompanying her, trying to help her.
It was lunch time. The Dad asked the child to say a prayer before meals. The child said, “But, I don’t know any prayer.” The Dad said, “Don’t worry, dear. Just say what Mom says.” The child closed her eyes and prayed: “God, why do you have to send these guests on a Sunday, to spoil my day? Amen” Beware! Children are ‘listening’ even when we say nothing to them.

More often we are impatient with our kids and force them into the adult world too soon. We have seen many TV programmes where little children perform dances and crack jokes that are beyond their age. Instead of dragging them into our adult world, Jesus wants us to enter their innocent world. Jesus had given a warning to his disciples and to us that ‘unless we become like little children, we cannot enter the Kingdom of Heaven’ (Mt. 18:3). Today he tells his disciples to learn from children how to be humble and unassuming.

We need to see why Jesus brought a child in the midst of his disciples. Last week we saw Jesus posing the two important questions to his disciples: ‘Who do people say that I am?’ and ‘Who do you say that I am?’ He was happy that Peter identified Jesus as the ‘messiah’. It was an appropriate moment for Jesus to tell them about his passion. The prediction of passion by Jesus shocked the disciples and Peter. Hence, Peter wanted to ‘put some sense’ into Jesus. He received a fitting reply from Jesus – “Get behind me, Satan”.   

Today’s Gospel begins with Jesus predicting his passion, the second time. The disciples were scared to respond to him. Soon their minds were preoccupied with other ‘higher’ thoughts like ‘who was the greatest’ among them. Hence, in an attempt to bring them back to the ground, Jesus placed a child in their midst. Here are the closing lines of today’s Gospel:

Mark 9: 35-37
And Jesus sat down and called the twelve; and he said to them, “If any one would be first, he must be last of all and servant of all.” And he took a child, and put him in the midst of them; and taking him in his arms, he said to them, “Whoever receives one such child in my name receives me; and whoever receives me, receives not me but him who sent me.”

Our minds go to children who have been robbed of their childhood. I am thinking especially of child labourers who are being trampled upon by adults in every possible way. I am thinking of children, like Aylan Kurdi, who for no fault of theirs, suffer the effects of crimes perpetuated by adults. We bring all these innocent children to the presence of God so that God will ‘take them in His arms’ and remind us once again that in receiving these children, we receive God!


Child drawing - God?


பொதுக்காலம் 25ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

அருள் சகோதரி ஒருவர், தன்னிடம் மறைகல்வி பயிலும் சிறுவர், சிறுமியரை வரிசையில் நிற்கவைத்து, கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவில் வாசலில் அவர்களை நிறுத்தி, "கோவிலில் திருப்பலி நடக்குபோது நாம் சப்தம் போடக்கூடாது. ஏன்? சொல்லுங்கள்" என்று கேட்டார். ஒரு சிறுவன் உடனே, "ஏன்னா, கோவில்ல எல்லாரும் தூங்கிக்கிட்டிருப்பாங்க. அதனாலதான்" என்று தயக்கமில்லாமல் பதில் சொன்னான்.
மழலையர்பள்ளி (LKG) ஒன்றில் குழந்தைகள் அனைவரும் மிக மும்முரமாக வரைந்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் ஓவியத்தையும் ஆசிரியர் பார்த்து இரசித்தபடியே சுற்றி வந்துகொண்டிருந்தார். மிக, மிக ஆழ்ந்த கவனத்துடன் எதையோ வரைந்து கொண்டிருந்த ஒரு சிறுமியை ஆசிரியர் அணுகி, "என்ன வரைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். தன் ஓவியத்திலிருந்து கவனத்தைச் சிறிதும் திருப்பாமல், "நான் கடவுளை வரைந்து கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னாள், அக்குழந்தை. உடனே ஆசிரியர், "கடவுள் எப்படியிருப்பார் என்று யாருக்குமே தெரியாதே!" என்று கூறினார். அக்குழந்தை ஆசிரியரை நிமிர்ந்துபார்த்து, "கொஞ்சம் பொறுங்கள்... இன்னும் சிறிது நேரத்தில் அவர் எப்படியிருப்பார் என்று தெரிந்துவிடும், பாருங்கள்!" என்று புன்சிரிப்புடன் பதில் சொன்னாள்.
குழந்தைகள் உலகம் அழகானது. அங்கு உண்மைகள் எளிதாகப் பேசப்படும். அங்கு, கடவுளையும் எளிதாகக் காணும் கனவுகளும், கற்பனைகளும் கரைபுரண்டோடும். அந்த உலகை நாம் கடந்துவிட்டோம் என்பதால், அதை மறந்து விடவேண்டும் என்ற அவசியமில்லை. பார்க்கப்போனால், அவ்வப்போது அந்த பள்ளிக்குள் மீண்டும் சென்று, பாடங்கள் பயில்வது நம் வாழ்வை மேன்மையாக்கும். மென்மையாக்கும். இதையொத்த ஓர் ஆலோசனையை இயேசு இன்றைய நற்செய்தி வழியே நமக்குச் சொல்கிறார். இந்த வார நற்செய்தியில் இடம்பெறும் இறுதி இறைச்சொற்றொடர்களை மையமாக வைத்து, நம் ஞாயிறு சிந்தனையை ஆரம்பிப்போம்.
மாற்கு நற்செய்தி 9: 36-37
பிறகு இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்" என்றார்.

அருள்சகோதரிகள் நடத்தும் மழலையர் பள்ளி ஆண்டு விழா ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. LKG மழலைகள் மேடையில் ஏறினார்கள், அழகான ஒரு நடனம் ஆரம்பமானது. நான் காலையில் எழுவேன், பல் துலக்குவேன், சாப்பிடுவேன்... என்று அன்றாட நிகழ்வுகளின் அட்டவணையைச் சொல்லும் ஒரு பாடல். அதற்கு ஏற்ற நடன அசைவுகள், செய்கைகள். பல் துலக்குவேன் என்று அந்தக் குழந்தைகள் பாடியபோது, எல்லா குழந்தைகளும் வலது ஆள்காட்டி விரலால் பல் தேய்த்தனர். அனால் ஒரு குழந்தை மட்டும் இடது ஆள்காட்டி விரலால் பல் தேய்த்தாள். அருகிலிருந்த அருள்சகோதரியிடம் அக்குழந்தையைச் சுட்டிக்காட்டினேன். அவர் அப்போது சொன்ன ஒரு தகவல், என்னை அதிகம் சிந்திக்கவைத்தது.

LKG குழந்தைகளுக்கு செய்கைகளுடன் பாடல்களைச் சொல்லித்தரும் ஆசிரியர்கள் குழந்தைகளின் கண்ணாடி பிரதிபலிப்பாக இருக்கவேண்டும். அதாவது, குழந்தை ஒரு செய்கையை வலது கையால் செய்யவேண்டும் என்றால், ஆசிரியர் அதை இடது கையால் செய்யவேண்டும். அதைப் பார்க்கும் குழந்தை, செய்கைகளை சரியான வழியில் செய்யக் கற்றுக்கொள்ளும் என்ற கருத்தை அந்த அருள்சகோதரி எனக்குச் சொன்னார்கள்.

அன்பர்களே, சிந்தித்துப் பார்ப்போம். நமது கண்ணாடி பிரதிபலிப்புகள், குழந்தைகள். நாம் சொல்வதை, செய்வதை பிரதிபலிப்பவர்கள். வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிகளை உபசரித்துக்கொண்டிருந்தார், ஒரு வீட்டுத்தலைவி. நான்கு அல்லது ஐந்து வயதான அவரது மகள், அம்மாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தாள். வெளியில் வந்து உபசரிக்கும்போது சிரித்துக்கொண்டிருந்த தலைவி, சமையலறைக்குள் போனதும் விருந்தாளிகளைப் பற்றி முணுமுணுத்தார். குட்டிமகள் கூட இருக்கிறாளே என்ற எண்ணம் சிறிதும் இன்றி, வந்திருந்தவர்களை வாய் நிறைய வசைப்பாடிக் கொண்டிருந்தார், அம்மா.
விருந்து நேரம் வந்ததும், அப்பா மகளிடம், "சாப்பாட்டுக்கு முன்னால், செபம் சொல்லும்மா." என்றார். "என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியாதே" என்றாள் மகள். "அம்மா என்ன சொல்வாங்களோ, அப்படி சொல்லும்மா" என்றார் அப்பா. உடனே, மகள் கண்களை மூடி, "கடவுளே, இந்த விருந்தாளிகள் எல்லாம் ஏன் இன்னக்கி பாத்து வந்து, என் உயிரை எடுக்குறாங்களோ, தெரியலியே" என்று வேண்டினாள், மகள். குழந்தைகளுக்கு முன் நாம் சொல்வது, செய்வது, எல்லாம் சரியான முறையில் இல்லாவிட்டால், இது போன்ற சங்கடங்கள் ஏற்படலாம்.

இன்னொரு நிகழ்வு. ஊடக உலகம், ஒவ்வொருவர் குடும்பத்திற்குள்ளும் எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்கிறது என்பதையும், குழந்தைகளிடமிருந்து அவர்களது குழந்தைப் பருவத்தை ஊடகம் எவ்விதம் பறித்துவிடுகிறது என்பதையும் வெளிச்சமிட்டு காட்டும் நிகழ்வு. ஒரு வீட்டுத்தலைவி, தன் வீட்டிற்கு வந்த தோழியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அருகில் ஓடிக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்வில், ஒரு பிரபலமான நடிகை, கவர்ச்சிகரமாக ஆடிக்கொண்டிருக்கிறார். வீட்டுத்தலைவி தன் தோழியிடம், "என் மகளும் இதே மாதிரி ஆடுவா" என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார். அந்நேரம், அங்கு வருகிறாள், அந்த LKG படிக்கும் குழந்தை. ஆர்வமாய் அம்மாவிடம் போய், "அம்மா, இன்னைக்கி ஸ்கூல்ல ஒரு புது ரைம் சொல்லித் தந்தாங்க." என்று சொல்லி, அந்த ரைமைச் செய்கையோடு செய்து காட்டுகிறாள், சிறுமி. அம்மாவும், தோழியும் பாராட்டுகின்றனர். பிறகு, அம்மா மகளிடம், "அந்த டான்ஸ் ஆடும்மா" என்று சொல்லி தொலைக்காட்சியில் ஆடிக்கொண்டிருக்கும் நடிகையைக் காட்டுகிறார். மகளோ, "சினிமா டான்ஸ் வேண்டாம்மா. இன்னொரு ரைம் சொல்கிறேன்." என்கிறாள். அம்மாவுக்கு கோபம். தன் தோழிக்கு முன்னால், மகள் சினிமா டான்ஸ் ஆடவில்லை என்கிற வருத்தம். "ரைம் எல்லாம் ஒன்னும் வேணாம். இந்த டான்ஸ் ஆடு." என்று மீண்டும் வற்புறுத்துகிறார் தாய். குழந்தைகளை, அவர்கள் உலகத்தில் வளர்ப்பதற்கு பதில், நம் உலகத்திற்கு, அதிலும், பளபளப்பாய், செயற்கை பூச்சுக்களுடன் மின்னும் போலியான ஊடக உலகிற்கு, அவர்களை, பலவந்தமாக இழுத்துவரும் முயற்சி இது.

அன்பர்களே, நாம் காணும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், முக்கியமாக, சிரிப்பு என்ற பெயரில் காட்டப்படும் நிகழ்ச்சிகளில், ஒரு சிறுவனோ, சிறுமியோ, அவர்கள் வயதுக்கு மீறிய கருத்துக்களைச் சொல்வதைப் பார்த்திருக்கிறோம். அவர்கள் சொல்லும் சிரிப்புக்கள், அவர்களுக்கு புரியுமோ என்னவோ தெரியாது. ஆனால் கேட்கும் இரசிகர்கள் சிரிப்பார்கள். ஒருவேளை, தன் மகனோ, மகளோ தொலைக்காட்சியில் தோன்றவேண்டும் என்பதற்காக, பெற்றோர் இந்த வசனங்களை எழுதி, அவர்களை மனப்பாடம் செய்யச் சொல்லி, அங்கே சொல்ல வைப்பார்களோ? பாவம். இதெல்லாம் குழந்தைகளைச் சித்திரவதைக்கு உள்ளாக்கும் வழிகள். குழந்தைகள் வதைப்படலம்.

முதிர்ச்சி அடைந்துவிட்டதாய் நினைத்துக்கொண்டிருக்கும் நாம், நம்மைப்போல் குழந்தைகளை மாற்ற முயல்கிறோம். நம்மிடமிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது எண்ணங்களுக்கு நேர்மாறாக, 'குழந்தைகளை, குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்; முடிந்தால், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்' என்று இயேசு வலியுறுத்துகிறார். இந்தப் பாடத்தை சீடர்கள் மனதில் ஆழப்பதிக்கவே அவர் ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். இயேசு, சீடர்கள் நடுவில், குழந்தையை நிறுத்தியது ஏன் என்ற பின்னணியை அலசிப் பாப்போம்.

சென்ற வாரம், இயேசு, சீடர்களிடம் இரு முக்கியமானக் கேள்விகளைக் கேட்டார். மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்? என்று இயேசு கேட்ட அந்த இரு கேள்விகள், சீடர்கள் மத்தியில் ஒரு தேடலை ஆரம்பித்து வைத்திருக்கும்.
தன் கேள்விகளுக்கு விடையளித்த பேதுருவை, அதுவும் தன்னை "மெசியா" என்று அடையாளப்படுத்திய பேதுருவை இயேசு புகழ்ந்தார். பேதுரு தந்த "மெசியா" என்ற பட்டத்தில் மகிழ்ச்சி, மமதை கொண்டு மயங்கிப் போகவில்லை இயேசு. மாறாக, அந்த பட்டத்தின் பின்னணியில் இருக்கும் துன்பம்சிலுவை இவற்றைப்பற்றி பேசினார். இயேசு இவ்வாறு பேசியது, பேதுருவையும், சீடர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே, பேதுரு அவரைத் தனியே அழைத்து அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். தன்னைப்பற்றியும், தன் வாழ்வின் இலக்குபற்றியும் இயேசு தெளிவாக இருந்ததால், பேதுருவைக் கோபமாகக் கடிந்துகொண்டார். சீடர்களிடம், தன் சிலுவையைப் பற்றி, மீண்டும் ஆணித்தரமாக பேசினார், இயேசு. சீடர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை, இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் நாம் வாசிக்கிறோம்.
மாற்கு நற்செய்தி 9: 31-32
"மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று இயேசு தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.

இயேசு, சிலுவையைப்பற்றி பேசியது அவர்களுக்கு விளங்காமல் போனதற்கு ஒரு காரணம் - அவர்கள் வேறு திசைகளில் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். தங்களில் யார் பெரியவன்? என்பது அவர்களது சிந்தனைகளை நிறைத்த எண்ணமாயிற்று.
இயேசு, அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஓரளவு கேட்டார். அவருக்கு அதிர்ச்சி. தான் இவ்வளவு சொல்லியும் இவர்களின் எண்ண ஓட்டம் இப்படி இருக்கிறதே என்ற அதிர்ச்சி. மற்றொரு பக்கம் ஒரு நெருடல். ஒருவேளை அவர்கள் பேசிக்கொண்டதை சரியாகக் கேட்காமல், அவர்களைத் தவறாக எடை போடுகிறோமோ என்ற நெருடல். எனவே, தன் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள, "வழியில் என்ன பேசினீர்கள்?" என்று கேட்கிறார்.

பதில் வரவில்லை. எப்படி வரும்? அவர்கள் பேசிக்கொண்டதெல்லாம் இயேசுவின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாயிற்றே. தாங்கள் பேசியதை அவரிடம் சொல்லமுடியவில்லை. அவர்களது மௌனம், அவருக்கு எரிச்சலையும், வருத்தத்தையும், ஏன் சலிப்பையும் உண்டாக்கியிருக்க வேண்டும். தன்னையும், தன் கொள்கைகளையும் சீடர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்ற வருத்தம் இயேசுவுக்குள்  இருந்தாலும், சலிப்படையாமல், மீண்டும் அவர்களுக்கு தன் எண்ணங்களைப் புரிய வைக்க முயல்கிறார்.
மாற்கு நற்செய்தி 9: 35
அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார்.

இந்தக் கருத்தை வலியுறுத்தவே, ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். குழந்தைகளைப் போல் மாறாவிடில் விண்ணரசில் நுழையமுடியாது என ஏற்கனவே அவர்களுக்கு சொல்லியிருந்தார். இப்போது மீண்டும் அந்தச் சிந்தனையை மற்றொரு வழியில் வலியுறுத்துகிறார்.
குழந்தைகளை குழந்தைகளாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களை உங்களைப் போல் மாற்றாதீர்கள், முடிந்த அளவு, நீங்கள் குழந்தைகளாக மாறுங்கள் என்று இயேசு சொல்லாமல் சொல்கிறார்.

"எந்த ஒரு குழந்தையும் பிறக்கும்போது இரு இறக்கைகளுடன் சம்மனசாய் பிறக்கிறது. அனால், கால்கள் வளர, வளர, இறக்கைகள் குறைந்து மறைந்து விடுகின்றன" என்பது பிரெஞ்சு மொழியில் ஓர் அறிஞர் சொன்ன அழகான வார்த்தைகள் இவை. கால்கள் மட்டுமல்ல, நமது எண்ணங்களும், கருத்துக்களும் வளர்ந்துவிட்டதாக நாம் எண்ணும்போது, சம்மனசுக்குரிய இறக்கைகள் மறைந்து விடுகின்றன.


அன்பர்களே, குழந்தைகளைப் பற்றி பேசும்போது,  குழந்தைப்பருவம் திருடப்பட்டு, வளர்ந்துவிட்டவர்கள் உலகில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் குழந்தைகளை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வறுமைப்பட்ட பல நாடுகளில், உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்களை, இவ்வேளையில் நினைத்துப் பார்க்கவேண்டும். நமது உழைப்பால், குழந்தைகளை வளர்க்க வேண்டியது நமது கடமை. மாறாக, அவர்களது உழைப்பில் நாம் சுகம் காண்பது பெரும் குற்றம். இன்றைய நற்செய்தி வழியாக இயேசு சொல்லித் தரும் பாடங்களை நாம் ஓரளவாகிலும் கற்றுக்கொள்ளும் வரத்தை இறைவனிடம் வேண்டுவோம். குழந்தைகளைக் குழந்தைகளாகவே வாழவிடுவோம். அவர்களை நம்மைப்போல் மாற்றாமல், முடிந்த அளவு, நாம் குழந்தைகளாக மாறுவோம்.

13 September, 2015

Not a question, but an invitation to change கேள்வி அல்ல, மாறச் சொல்லி வந்துள்ள அழைப்பு

 “Who Do People Say that I Am?”

24th Sunday in Ordinary Time

An important looking man walks into the airport. He is restless seeing the long queue and reaches the counter, bypassing those waiting there. The lady at the counter politely tells him to go back. The man is thoroughly annoyed and says: “Do you know who I am?” She looks at him with scant respect and attends to the next person in line. He raises his voice and repeats the question: “Do you know who I am?” The lady at the counter picks up her microphone and announces aloud, “Here is a gentleman who doesn’t know who he is. Can someone help him, please?” She goes back to her work.
Many of us don’t seem to know who we are. ‘Know thyself’ was proposed, by Socrates, as the crowning wisdom, a human being could achieve. Desire for self-knowledge, has made sages spend their entire life on the question: Who am I? This ‘Who am I?’ question is closely linked to ‘Who am I to others – my family, my friends, my colleagues…?’ In other words this question is similar to what we hear in our Gospel today… ‘Who do men say that I am?’ Jesus followed this up with another more important question: ‘Who do you say that I am?’ (Mark 8: 27,29)

I have heard that in government circles an exercise is taken up every day. What appears on the TV, as evening news and what appears in the morning papers are collected, categorised, prioritized and given to the Prime Minister and the Chief Minister. A special officer is appointed to do this. This is only hearsay information and you are welcome to take it with more than a pinch of salt. But, I guess such an exercise is in place in any organisation. We are aware of service agencies which provide ‘special information’ to the higher-ups!
This exercise is undertaken to feel the pulse of the people. More often, this exercise is undertaken with some trepidation. I guess the first question that confronts most of the political leaders in the morning will be: what do the people think of me and my government? In other words, who do people say that I am?

Why did Jesus ask these questions? Was he worried about his popularity? Nope! There were other reasons. This is how I interpret this Gospel event. Jesus was interested in helping his disciples share some of the popular trust people had in Him. He also wanted to prepare them for the passion message he was going to share with them. Jesus was probably giving his disciples the bitter pill (predicting his passion) coated with sugar (a profession of faith, a faith shared by common people)!

These questions of Jesus are not addressed to His disciples alone. Down the centuries they have been addressed to all of us. They have perennial value, in season and out of season.
Who do people say that Jesus is?
On quite many occasions, surveys have been undertaken to discover who has influenced the history of humankind. Almost in all of them, Jesus Christ has figured either in the first place or within the first three positions. Such has been his influence.

Who do people say that Jesus is?
People have said and, still, are saying so many things… good and bad, true and false, profession of faith and downright blasphemy! The discussions on who Jesus was, have resulted in a war of ‘words’ and, sometimes, a war of ‘swords’ that have taken people’s lives. Such war of words with no trace of love, would amount to the ‘clanging symbol’ spoken of by St Paul (I Cor. 13:1). The same idea is expressed in a different way by Apostle James in today’s second reading.
Letter of James 2: 14-17
What does it profit, my brethren, if a man says he has faith but has not works? Can his faith save him? If a brother or sister is ill-clad and in lack of daily food, and one of you says to them, “Go in peace, be warmed and filled,” without giving them the things needed for the body, what does it profit? So faith by itself, if it has no works, is dead.

Who do you say that I am?
Hey, wake up… this question is personally addressed to you and me. Who do I say that Jesus is? All the answers I have been memorising since childhood may not be helpful. Neither is Jesus interested in my memorised answers. I am now asked to face this question seriously, personally.
More than a question, it is an invitation – an invitation to be convinced of the person of Jesus so that I can follow Him more closely. Most of us become speechless and, perhaps, embarrassed by such a direct question… such a confrontation… rather, ‘care-frontation’! This invitation, this ‘care-frontation’ from Jesus is not to increase our knowledge about Him. It is an invitation to change! A true encounter with Jesus will do just that… CHANGE US!

Here is a story (by Fr Anthony de Mello?) of a drunkard who does a total turnaround. He is met by the parish priest who asks him the reason for this great change. He says that he had met Jesus. The parish priest begins his enquiry. Here is the conversation:
Priest: "You say, you have met Jesus. Now, tell me where was he born?"
Man: "Don't know, Father... Perhaps, Jerusalem?"
Priest: How long did he live?
Man: Hmm... May be 50, 60?
Priest: Where and how did he die?
Man: Don't know, Father.
Priest: (Controlling his temper) Even a little child would give me clear answers to these questions and you?.... How can you say you met Jesus?
Man: Father, I don't know the answers for these questions. I know one thing for sure. Last year, I was given to heavy drinking. My family was in ruins. My wife and children would dread my coming home in the evening. Now, for the past six months, I have given up drinking. My debts are getting cleared. My wife and children wait eagerly for my return home. My kids come running towards me when I come home. All these were possible since I met Jesus.... As for these questions, I am really sorry, I can't answer them properly.

Priest: (SILENCE)

The Priest KNEW ABOUT Jesus; but the converted person KNEW Jesus. That is the main difference. All the details the Priest knew, would answer the first question of Jesus, namely: ‘Who do people say that I am?’ But when it came to the question of ‘Who do you say that I am?’ the ex-drunkard would be a better person to answer.
Two types of knowledge. Two questions: Who do people say that I am? Who do you say that I am? One is bookish, all the details about God, Theology.... All of us need this, to some extent.
But there is another type of knowledge of God that leads one to action. Who do you say that I am? A direct encounter with God. A personal knowledge of God, Jesus... This leads to... changes, as in the case of the drunkard-turned-a-decent-Dad!

Here is a story of a world famous trapeze artist who was performing death defying stunts over a canyon exceedingly deep. In one such stunt, he was taking a wheelbarrow filled with rocks over the rope. He was blindfolded too! When he had completed this particular stunt, one of his ardent fans rushed to him, grabbed his hands and told him that he was surely the best in the world. The artist felt happy about these compliments. Then he asked his fan whether he believed in his capacity to do all these dare-devil stunts. “I believe you are the best, ever!” was his firm, affirmative answer. Then the trapeze artist told him, “Okay then, now I would like to perform the final adventure. I shall take this wheelbarrow once again over the rope. This time you sit in it.” (Story taken from “At Home With God” by Hedwig Lewis, S.J.) I presume that the ardent, enthusiastic fan must have disappeared into thin air, when he was given this ‘invitation’!

It is so easy to answer the ‘theoretical’ question: “Who do people say that I am?” But when Jesus turns around and says, “Who do YOU say that I am?” I feel like running away from this ‘care-frontation’. Am I ready to sit in the wheelbarrow and be transported by Jesus over the canyon… the canyon between reason and faith? Hm… yes, perhaps… well, you see… it’s actually like this… No clear answer seems to be forthcoming. Well, dear friends, there is no easy answer to this question - “Who do you say that I am?” The answer we give, does not come from the head but from the heart, a heart that is ready to CHANGE!

Who Do You Say That I Am?

பொதுக்காலம் 24ம் ஞாயிறு

கிராமத்திலிருந்து நகரம் வந்துசேரும் ஓர் அப்பாவியின் அனுபவம், நமது சிந்தனைகளை இன்று துவக்கி வைக்கிறது. நகரத்தில், எந்நேரமும், மக்கள், கூட்டம் கூட்டமாய் இருப்பதைப் பார்த்து மிரண்டு விடுகிறார் கிராமத்து அப்பாவி. பார்க்கும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம். இந்த வெள்ளத்தில் தானும் அடித்துச் செல்லப்படுவோமோ என்ற ஒரு பயம் அவருக்கு.
இரவில் படுத்துறங்க இடம் தேடுகிறார். ஒரு மண்டபம் கண்ணில் படுகிறது. அந்த மண்டபத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள் படுத்திருக்கின்றனர். கூட்டமாய் படுத்திருந்த அம்மனிதர்களைப் பார்க்கையில், ஏதோ வரிசையாக மூட்டைகள் கிடத்தி வைக்கப்பட்டிருப்பதைப் போல் ஓர் உணர்வு நம் நாயகனுக்கு. இந்த மூட்டைகளில் ஒரு மூட்டையாக தான் இரவில் காணாமல் போய்விடுவோமோ என்று பயந்தார்.
காலையில் எழுந்ததும் தன்னை அடையாளம் கண்டு கொள்வதற்காக, தன் காலில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு படுத்தார். இந்த அப்பாவி கிராமத்து மனிதர் செய்ததைக் கவனித்துக் கொண்டிருந்தார், நகரத்து மனிதர் ஒருவர். அவர் கொஞ்சம் குறும்புக்காரர். எனவே, அந்த கிராமத்து மனிதர் நன்கு உறங்கிய பின், அவர் காலில் கட்டியிருந்த அந்த வெள்ளைத் துணையை கழற்றி, தன் காலில் கட்டிக்கொண்டு படுத்து விட்டார்.
விடிந்தது. கிராமத்து மனிதர் எழுந்தார். அவர் காலில் கட்டியிருந்த வெள்ளைத் துணியைக் காணாமல் திகைத்தார். கொஞ்ச தூரம் தள்ளி, மற்றோருவர் காலில் அது கட்டியிருப்பதைக் கண்டார். அவரது திகைப்பு, குழப்பம், பயம் எல்லாம் அதிகமானது. நகரத்திற்கு வந்து ஒரு நாளிலேயே, ஓர் இரவிலேயே தான் காணாமற் போய்விட்டோமே என்று அவர் மிகவும் வருந்தினார். இயேசு சபையைச் சேர்ந்த Carlos Vallés என்ற ஆன்மீக எழுத்தாளர், தன் நூல் ஒன்றில் பகிர்ந்துகொண்ட கதை இது.

இந்தக் கதை, நம் வாழ்வுக்கு ஓர் உவமையாகப் பயன்படுகிறது. 'நான்' என்பதை நமக்குக் காட்ட, நமது குலம், படிப்பு, பதவி, சம்பளம் என்ற வெளிப்புற அடையாளங்களை அதிகம் நம்புகிறோமா? அவை காணாமற் போகும்போது, நாமே காணாமற் போனதைப் போல் உணர்கிறோமா? எளிதில் காணாமற்போகக் கூடிய இந்த அடையாளங்களே 'நான் யார்' என்பதைத் தீர்மானிக்க விட்டுவிட்டால், நாம் உண்மையிலேயே யார் என்பதை அறியாமல், தொலைந்துபோக நேரிடும்.
வெளி அடையாளங்களைக் கட்டி வேதனைப்பட்டு, அவை தொலைந்துபோனால், நாமும் தொலைந்துபோனதைப் போல் உணர்வது, தவறு என்பதையும், இந்த அடையாளங்கள் ஏதுமில்லாமல், அடிப்படையில், உண்மையில் நான் யார்என்பதை அறிந்துகொள்வதே, அனைத்து அறிவிலும் சிறந்தது என்பதையும், சாக்ரடீஸ் உட்பட, பல மேதைகள் சொல்லிச் சென்றுள்ளனர். 'நான் யார்' என்ற இந்தக் கேள்வி இயேசுவுக்கும் எழுந்தது. இயேசுவின் இந்தத் தேடலை இன்றைய நற்செய்தி நமக்குக் கூறுகிறது. இந்த நற்செய்தியின் இரு வாக்கியங்கள், இயேசுவின் இரு கேள்விகள் நம் சிந்தனைகளை இன்று நிறைக்கட்டும்.
"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?"
"நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?"

நான் ஆசிரியர் பணி புரிந்தபோது, அரசு அதிகாரிகள் சிலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அவ்வப்போது சொன்ன ஒரு சில தகவல்கள், இப்போது என் மனதில் நிழலாடுகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று காலை செய்தித் தாள்களில் வந்த தகவல்களையும், முந்திய நாள் இரவு தொலைக்காட்சி வழியே வந்த தகவல்களையும், சேகரித்து, வகைப்படுத்தி, பட்டியலிட்டு, நாட்டின் பிரதமர் அல்லது மாநிலத்தின் முதலமைச்சர் இவர்களிடம் கொடுப்பதற்கென ஓர் அரசு அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்..
இத்தகவல்களைத் திரட்டுவதன் வழியாக, நாட்டு நடப்புபற்றி தெரிந்துகொள்வது என்பது ஒரு புறமிருக்க, நாட்டில் தங்களைப்பற்றி, தங்கள் ஆட்சிபற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதே, இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு நாள் காலையிலும் இத்தலைவர்களின் நினைவை, மனதை ஆக்ரமிக்கும் அந்தக் கேள்வி: "நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?"
இவர்கள் மனதை இந்தக் கேள்வி ஆக்கிரமிக்கின்றது, உறுத்துகின்றது என்றுதான் சொல்லவேண்டும். காரணம், இத்தலைவர்கள், உள்ளொன்றும், வெளியோன்றும் என இரட்டை வேடமிட்டு வாழ்வதால், எது தங்கள் உண்மை நிலை என்பதே மாறி, மக்கள் முன் தங்கள் வேடம் எவ்வளவு தூரம் நிலைத்துள்ளது என்ற சந்தேகமும், பயமும் இவர்களை ஆட்டிப் படைக்கிறது. மக்களை மையப்படுத்தி, அவர்கள் நலனையே நாள் முழுவதும் சிந்தித்து, செயல்படும் தலைவனுக்கோ, தலைவிக்கோ, இந்தக் கேள்வியே எழாது. அப்படியே எழுந்தாலும், அது பயத்தை உண்டாக்காது.

இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு ஒரு முக்கிய காரணம்?... தன்னை இன்னும் சரிவர புரிந்து கொள்ளாத சீடர்களுக்கு அவர் ஒரு வாழ்வுப் பாடத்தைக் கற்றுக்கொடுக்க விழைந்தார் என்பதே. மக்கள் தன்னைப்பற்றி சொல்வதைக் கேட்டாகிலும், சீடர்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக, தன்னைப் புரிந்துகொள்ள மாட்டார்களா என்ற ஏக்கம் இயேசுவுக்கு இருந்திருக்கலாம். அல்லது, இந்தக் கேள்வி பதில் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, தன் பாடுகளைப்பற்றி சொல்லப்போவதை சீடர்கள் புரிந்துகொள்ள, மக்களிடமிருந்து அவர்கள் கேட்ட ஒரு சில விசுவாச அறிக்கைகள், அவர்களுக்கு உதவாதா என்ற ஏக்கமாக இருக்கலாம்.

மக்கள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?
இருபது நூற்றாண்டுகளாய் மனித வரலாற்றில் அதிகமான, ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியவர்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் பல நடந்துள்ளன. ஏறக்குறைய எல்லாக் கருத்துக் கணிப்புகளிலும் இயேசுவின் பெயர் முதலிடம், அல்லது, முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருந்துள்ளது. மனித வரலாற்றில் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இத்தனை ஆழமானப் பாதிப்புக்களை உருவாக்கியவர்கள் ஒரு சிலரே. இவர்களில் ஒருவர் இயேசு என்பது, மறுக்கமுடியாத உண்மை.

இன்றைய நற்செய்தியில் இயேசு கேட்கும் இரண்டாவது கேள்வி: "நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?"
ஹலோ, உங்களைத்தான்... என்னையும்தான்... இந்தக் கேள்வி நமக்குத்தான்... நாம் சிறு வயது முதல் அம்மாவிடம், அப்பாவிடம், அருள்பணியாளர்கள், சகோதரிகள், ஆசிரியர்களிடம் பயின்றவற்றை, மனப்பாடம் செய்தவற்றை வைத்து, "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற அந்த முதல் கேள்விக்குப் பதில் சொல்லிவிடலாம். ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது.
நான் கேட்டவையும், படித்தவையும் இந்தக் கேள்விக்கு பதிலாக முடியாது. நான் பட்டுணர்ந்தவை, மனதார நம்புகிறவை... இவையே இந்தக் கேள்விக்கான பதிலைத் தர முடியும்.

இயேசுவின் இந்தக் கேள்வி, வெறும் கேள்வி அல்ல. இது ஓர் அழைப்பு. அவரது பணி வாழ்விலும், பாடுகளிலும் பங்கேற்க, அவர் தரும் அழைப்பு. கேள்வி பதில் என்ற வாய்மொழி வித்தைகளைத் தாண்டி, செயலில் இறங்க இயேசு இந்த அழைப்பை விடுக்கிறார். "இயேசுவை இறைவன் என்று, தலைவர் என்று, மீட்பர் என்று நம்புகிறேன்" என்று சொல்வது எளிது. ஆனால், அந்த நம்பிக்கையை வாழ்வில் நடைமுறையாக்குவது எளிதல்ல. செயல் வடிவம் பெறாத நம்பிக்கை வீண் என்று, இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் யாக்கோபு கூறுகிறார்:
யாக்கோபு 2 14-17
என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா?
ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, "நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;" என்பாரென்றால் அதனால் பயன் என்ன?
அதைப்போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.

"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்ற முதல் கேள்விக்கு நாம் அளிக்கும் விடைகள், நம் அறிவை வளர்க்கும். நமது விவாதங்களுக்கு உதவும். பல நூறு பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாக மாறும். மனித வரலாற்றில், இயேசு யார் என்பதை விளக்க எழுந்த காரசாரமான விவாதங்கள், பலரது வாழ்வைப் பறித்ததே தவிர, அவர்கள் வாழ்வை மாற்றியதா என்பது கேள்விக்குறிதான்.
கடவுளைப் பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளை, கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால், இறைவனை, இயேசுவை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் கேட்ட கதை. நீங்களும் இதைக் கேட்டிருக்கலாம்.
குடி பழக்கத்தில் இருந்து முற்றிலும் திருந்திய ஒருவரை, பங்குத் தந்தை சந்திக்கிறார். அவரது மனமாற்றத்திற்கு, பங்குத் தந்தை காரணம் கேட்கும்போது, தான் இயேசுவைச் சந்தித்தாக சொல்கிறார், மனமாற்றம் பெற்றவர்.
அவர் உண்மையிலேயே இயேசுவைத்தான் சந்தித்தாரா என்று அறிய விழைந்த பங்குத் தந்தை, அவரிடம் சில கேள்விகளை எழுப்புகிறார். இயேசு எங்கே பிறந்தார்? எத்தனை வருடம் வாழ்ந்தார்? எத்தனை புதுமைகள் செய்தார்? எங்கே இறந்தார்? என்று பங்குத் தந்தை அடுக்கிக்கொண்டே சென்ற கேள்விகள் எதற்கும், மனம் மாறியவரால் பதில் சொல்ல முடியவில்லை. பங்குத் தந்தைக்கு ஒரே கோபம்... இந்தச் சாதாரணக் கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாதவர், எப்படி இயேசுவைச் சந்தித்திருக்க முடியும் என்று சந்தேகப்படுகிறார்.
அதற்கு, மனம் மாறிய அவர் சொல்லுவார்: "சாமி, நீங்கள் கேட்கும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்குப் பதில் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். ஆறு மாதங்களுக்கு முன்பு வரை என் வாழ்வு நரகமாக இருந்தது. நான் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, என் மனைவி, குழந்தைகளைக் கொடுமைப் படுத்தினேன். மாலையில் நான் வீடு திரும்பும் நேரத்தில் என் கண்களில் படக்கூடாது என்று, என் குழந்தைகள் தெரு முனையில் சென்று ஒளிந்து கொள்வார்கள். ஆறு மாதங்களுக்கு முன், நான் பங்கேற்ற ஒரு செப வழிபாட்டின்போது, இயேசுவைச் சந்தித்தேன். அன்றிலிருந்து என் வாழ்வு மாறியது. நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது நான் மாலையில் வீடு திரும்பும்போது, என் குழந்தைகள், தெரு முனையில் எனக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மாற்றத்தைத் தந்தது, இயேசு. அது மட்டும்தான் எனக்குத் தெரியும்" என்று அவர் சொன்னதும், பங்குத் தந்தை மௌனமானார்.

இயேசு கேட்கும் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்பது, கேள்வி அல்ல, ஓர் அழைப்பு. அவரை அனுபவப்பூர்வமாகச் சந்திக்க, அவரை நம்பி, அவரோடு நடக்க, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க, வாழ்வுப்பாதையை மாற்றியமைக்க, அவர் தரும் ஓர் அழைப்பு.
இந்த அழைப்பிற்கு நாம் தரும் பதில்கள், வார்த்தைகளாக அல்லாமல், செயல் வடிவம் பெறட்டும். குறிப்பாக, வாழ்வில் அனைத்தையும் பறிகொடுத்ததால், நம்பிக்கை இழந்திருப்போருக்கு நம்பிக்கை தரும் வகையில், நம் செயல்கள் அமையட்டும்.