28 February, 2016

Patience incarnate பொறுமையின் பிறப்பிடம்

The burning bush
3rd Sunday of Lent

Three days back, a book titled ‘L’amore prima del mondo’ was published in Italy. The same book was also published in English with the title: ‘Dear Pope Francis’ by the Loyola Press run by the Jesuits in U.S.A. This book offers the reader a heart to heart dialogue between the Pope and children around the world (aged 6 to 13), who turn to Francis as a father with questions very dear to them. One of those questions came from Aiden, a child from China. His question and the reply given by Pope Francis initiate our reflections this Sunday.
Aiden asks the Pope if his grandfather who is not Catholic will go to Heaven. The Pope says that "Jesus loves us so much and wants everyone to go to heaven. The will of God is that all be saved." To illustrate the power of God’s mercy, the Pope cites the example from the life of St John-Marie Vianney. Once, the Pope says, a lady came to St Vianney, desperate because her husband had committed suicide by jumping off a bridge. "It was hopeless - says the Pope - because she imagined that her husband was certainly in hell", but the Cure d’Ars said, "Look, between the bridge and the river is the mercy of God."

The mercy of God is a mystery that can save anyone, anytime, anywhere… anyhow. This Sunday’s readings invite us to meet this merciful God. In the first reading, taken from Exodus, (3: 1-8, 13-15) God tells Moses from the burning bush, the reason for his visit: “I have observed the misery of my people who are in Egypt; I have heard their cry on account of their taskmasters. Indeed, I know their sufferings, and I have come down to deliver them from the Egyptians.” (Ex. 3: 7-8) During this Jubilee of Mercy, we need to renew our faith in this merciful God who continuously comes into human history whenever the cry of anguish goes from people.
In the responsorial psalm, we proclaim the words: The Lord is merciful and gracious, slow to anger and abounding in steadfast love. (Ps.103: 8). Do these words come out of our deep conviction or are they merely lip-service?
In the Gospel, (Luke 13: 1-9), we hear the famous parable of the barren fig tree. This parable which talks of patience, the core of mercy, is found only the Gospel of Mercy – namely, Luke’s Gospel. 
I have an uneasy feeling that our present generation has lost the word ‘patience’ from its vocabulary. The world is always on the move at a fast pace (but, where? No one seems to be sure!) accompanied by machines that seem to work with the efficiency of nanoseconds! Unfortunately, we expect such quick results from human beings around us. The moment a child is conceived, we become restless. We wish that the child turns into an adult in no time. When the child does not cope with this speed, its repercussions take an unjust and heavy toll on the child! It is quite unjust to go looking for mature fruits from a sapling in a nursery. Today’s Gospel comes to enlighten us on the power of patience. Patience pays!

Another theme that runs through the liturgy today is the inevitable question of God’s presence and action during a calamity. God tells Moses that he has come down in response to the cries of the suffering people. As if to help Moses understand that God identifies himself with people with burning problems, God chooses the burning bush. In spite of such an identification, it is hard to believe that God is present in painful situations, whether it is human made or natural havoc.

In the Gospel, two events are talked about – Pilate mingling the blood of Galileans with the blood of their sacrifices, and the tower of Siloam falling on 18 people. The first one is human made tragedy and the other seems to be a natural calamity, if one imagines that the tower fell due to an earthquake. In addition, when we think that both these incidents happened in a holy place, the issue becomes more complicated. 

Quite a few tragedies have happened in shrines, temples, mosques and churches. We have also heard of people getting killed in road accidents while going to a shrine on a pilgrimage or returning from a shrine. Many people who survive these tragedies give up their faith since they see an intrinsic connection between God and these tragedies. It would take a long time for them to realise that road accidents and stampedes are not caused by God but by human mistakes. It is so easy to blame God for many of the human tragedies, especially when these tragedies occur in holy places.

Some people came to Jesus and shared with him a piece of news. Pilate had murdered some Galileans in the temple. What was worse, he had mingled their blood with the blood of the sacrificed animals. When this news was passed on to Jesus, those around Jesus, were not asking a political question as to the motive of Pilate. They were making statements like the following: Even holy places like a temple and holy events like sacrifices don’t seem to protect people. What Pilate did was a sacrilege. Israelites were forbidden to offer human sacrifice; but Pilate did exactly that and he dared do it in the temple itself. After having done such a heinous crime, how come God allows Pilate go scot-free? These God-related questions were buried under this piece of news shared with Jesus.

What was the response of Jesus? He seemed to side-step the (THE) issue. He seemed to turn the attention from Pilate to those who were killed. Jesus warned the people not to make a rash judgement on the poor victims. To complicate the issue further, Jesus added another instance where people were killed by the falling tower in Siloam. Are these victims more to be blamed? Jesus was surely more interested in not allowing us to sit in judgement over the people who had suffered such misfortunes. Instead, he told us clearly that such incidents should serve as occasions for our introspection and conversion… personal and communal conversion.

Personal purification is surely possible through pain, provided we are able to read the signs properly. Communal conversion is also called for in tragedies. It is so easy to blame God in any tragedy especially when it is of a great magnitude, like earthquakes and tsunamis. Isn’t this blame game a disguise to shirking our responsibilities? We need to shift the usual ‘where is God’ questions to ‘where are we’ and ‘where are human beings’ questions in such tragedies.

Science and technology are making it clear that even earthquakes, tsunamis, and hurricanes have intrinsic connection with the way our present generation is exploiting nature.
Even granting that earthquakes are more of a natural disaster, we can surely raise questions on why there are more casualties in poor countries (like Haiti and Nepal) during an earthquake. Much of the blame for such enormous numbers can be laid at the door of human beings for poor construction of houses, tardy measures during emergencies, lots of political and other interests (including the use of religion) trying to hamper aids… Wasn’t there the human negligence of communication gap during the tsunami in 2004, given the time difference between Indonesia and India? A careful analysis will surely produce a checklist where human beings will stand more accused (almost totally accused) than God. The response of Jesus, although it looks like side stepping the issue, can surely make us own up our roles and responsibilities in natural as well as human-made tragedies.

We are still left with some questions about God during times of tragedies. I can think of two of them: Why is God so slow in dealing with tragedies? God is immensely patient. This is the focus of the parable of the fig tree given in the second part of today’s Gospel. God gives a second, third, even the ‘n’th chance for sinners and those who fail to yield results.

God’s infinite patience raises another question: Okay, let God wait for the unjust to turn around. Meanwhile, can’t God do something for the people who suffer, especially the just who suffer? Well, the first reading today from Exodus (Exodus 3: 1-8, 13-15) gives us an answer to this question. When God meets Moses in the burning bush, God tells him clearly that he has heard the cries of the people and has come down. His coming down will have to be ‘incarnated’ – made a reality by us, the humans. He asks Moses to help the people. Moses hesitates. All of us hesitate. Here is the answer to our question as to why God does not act promptly. God would like to rope in our commitment in helping people and this takes a LONG TIME.

Instead of raising questions related to God’s presence and actions in tragedies and human misery, it is better to take a clue from Jesus’ response that it is high time we got converted. We need conversion personal and communal when we meet tragedies in our lives.


God is patient
தவக்காலம் 3ம் ஞாயிறு

பல நாடுகளைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் எழுதி அனுப்பியக் கேள்விகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய பதில்கள், ஒரு நூலாக வெளிவந்துள்ளன. 6 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர், பல்வேறு நாடுகளிலிருந்து திருத்தந்தைக்கு அனுப்பியக் கேள்விகளில், 30 கேள்விகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றிற்கு திருத்தந்தை பதில் அளித்துள்ளார். சீனாவைச் சேர்ந்த எய்டென் (Aiden) என்ற சிறுவன் கேட்ட கேள்வியும், அதற்கு, திருத்தந்தை கூறிய பதிலும் நமது ஞாயிறு சிந்தனையை இன்று துவக்கி வைக்கின்றன.
"இறந்துபோன என் தாத்தா கத்தோலிக்கர் அல்ல. அவர் விண்ணகத்திற்குப் போவாரா?" என்பது, எய்டென் கேட்டிருந்த கேள்வி. இக்கேள்விக்கு, திருத்தந்தை பதில் சொன்னபோது, புனித ஜான் மரிய வியான்னி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைப் பகிர்ந்துகொள்கிறார்.
ஒருநாள் புனித வியான்னியைத் தேடி வந்த ஒரு பெண்மணி, தன் கணவர் பாலத்தின் மேலிருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்டார் என்று கூறினார். அவர் செய்த பாவத்தால், கட்டாயம் நரகத்திற்குத்தான் சென்றிருப்பார் என்ற தீர்மானத்தில், அப்பெண் கதறி அழுதார். அப்போது, புனித வியான்னி, அப்பெண்ணிடம், "மகளே, அந்தப் பாலத்திற்கும், ஓடுகின்ற ஆற்றுக்கும் இடையே, இறைவனின் இரக்கம் நிறைந்திருக்கிறது. அதை நீ புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறி, அப்பெண்ணை அமைதிப்படுத்தி அனுப்பினார்.
இந்நிகழ்வை தன் பதிலாகப் பகிர்ந்துகொண்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறுவன் எய்டெனின் தாத்தாவை, இறைவனின் இரக்கம் விண்ணகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கக்கூடும் என்பதை, சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இரக்கத்தின் ஊற்றாகத் திகழும் இறைவனை, இன்றைய வாசங்களில் சந்திக்கிறோம். "எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; ...அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன்" (விடுதலைப் பயணம் 3: 7-8) என்று கூறும் இறைவனை, எரியும் புதரில் மோசே சந்தித்தார். அதேவண்ணம், இன்றைய உலகில் கொழுந்துவிட்டெரியும் பல பிரச்சனைகளின் நடுவிலிருந்து எழும் அழுகுரல்களைக் கேட்டு, இறைவன் இறங்கி வந்தவண்ணம் இருக்கிறார் என்பதை, இரக்கத்தின் ஆண்டு முழுவதும் நம்ப முயல்வோம்.
இறைவனின் பொறுமையை வலியுறுத்தும் அத்திமரம் உவமையை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். 'இரக்கத்தின் நற்செய்தி' என்று சொல்லப்படும் லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படும் இந்த உவமை, இரக்கத்தின் உயிர்நாடியாக விளங்கும் பொறுமையைப் பற்றி சிந்திக்க அழைக்கிறது.

'பொறுமை' என்ற வார்த்தை, நம் சந்ததியினர் மறந்துபோன ஒரு வார்த்தையோ என்று எண்ணத் தோன்றுகிறது. நொடிப்பொழுதில் நம் தேவைகளை நிறைவேற்றும் இயந்திரங்களால் நாம் சூழப்பட்டுள்ளோம். விசையொன்றைத் தட்டியதும், விடைகள் வெளியேறும் இன்றைய உலகில், மனிதர்களையும் இயந்திரங்களைப்போல் பாவித்து, விரைவான மாற்றங்களை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.
கருவில் குழந்தை உருவானதும், அது விரைவில் பிறந்து, வளர்ந்து, படித்து, பட்டம் பெற்று, வேலையில் அமர்ந்து... என்று அவசர அவசரமாய் கனவுகள் காண்கிறோம். நம் அவசரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் குழந்தைகள் தத்தளிக்கின்றன; தடுமாறி விழுந்து, நொறுங்கிப் போகின்றன.
தளிராக இருக்கும்போதே, அச்செடியில் முதிர்ந்த பழங்களைத் தேடிச்செல்வது அநியாயம். நம் அவசர மனநிலையைப் படம்பிடித்துக் காட்டுவதற்கும், உண்மையான வளர்ச்சி வேண்டுமெனில் பொறுமை தேவை என்பதை வலியுறுத்துவதற்கும், இயேசு கூறிய 'அத்திமரம் உவமை' உதவியாக இருக்கிறது.

அத்தி மரங்கள், சீக்கிரம் பூத்து, காய்த்து, கனிதரும் வகையைச் சேர்ந்தவை. அவற்றிற்கு அதிக உரம், நீர் தேவையில்லை. அப்படிப்பட்ட மரம், மூன்றாண்டுகள் ஆகியும், பலன் தரவில்லை. தோட்டத்து உரிமையாளர் அதை வெட்டியெறிய உத்தரவிடும்போது, தோட்டக்காரர், மேலும் ஓராண்டு பொறுமை காட்டுமாறு வேண்டுகிறார். மற்றோர் ஆண்டு தரப்படுகிறது, கூடுதல் உரமும் இடப்படுகிறது. அதேபோல், நாம் உண்மையான பலன் தருவதற்கு, இறைவன் நின்று, நிதானமாய் செயல்படுவார் என்பதை இவ்வுவமை சொல்லித்தருகிறது.

இறைவனின் பொறுமையைப் பறைசாற்ற "அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழியைப் பயன்படுத்துகிறோம். இந்தப் பழமொழியின் இரண்டாம் பகுதியில் எனக்கு உடன்பாடு இல்லை. தெய்வம் நின்று கொல்லும் என்பதை விட, தெய்வம் நின்று காக்கும் என்பதே என் உறுதியான நம்பிக்கை.
நாம் பயன்படுத்தும் இப்பழமொழியின் இரு பகுதிகளுக்கும் எடுத்துக்காட்டுகள் தருவதுபோல், இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளில், இரு நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன.
'பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான்' (லூக்கா 13: 1) என்ற செய்தி, 'அரசன் அன்று கொல்வான்' என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இச்செய்தியில் எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை, இயேசுவின் கூற்று தெளிவாக்குகிறது. அவசரப்பட்டு, அநியாயமாக, மனிதர்களைத் தீர்த்துக்கட்டும் பிலாத்தின் மீது கவனம் செலுத்தாமல், அவனால் கொலை செய்யப்பட்டவர்கள் மீது நம் கவனத்தைத் திருப்புகிறார் இயேசு. அதிலும், கொல்லப்பட்ட கலிலேயர்களை, 'பாவிகள்' என்று அவசரப்பட்டு, முத்திரை குத்திவிட வேண்டாம் என்று இயேசு எச்சரிக்கிறார்.

பிலாத்து செய்த கொலைகளைப் பற்றி பேசும் இயேசு, சூழ இருந்தோருக்கு மற்றொரு நிகழ்வையும் நினைவுபடுத்துகிறார். சீலோவாம் கோபுரம் விழுந்து 18 பேர் கொலையுண்ட செய்தி அது. கோபுரம் விழுந்ததென்று கேட்கும்போது, அது ஒரு நிலநடுக்கத்தால் ஏற்பட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் பற்றி பேசும்போது, பின்னணியில் இறைவனைப் பற்றியக் கேள்விகள் எழுவதும் இயல்பு.
இந்த நிகழ்வைக் குறிப்பிடும்போதும், 'கோபுரம் விழுந்தது' எப்படி என்ற ஆய்விலிருந்து நம் கவனத்தைத் திருப்பி, கொல்லப்பட்டவர்களை, 'பாவிகள்' என்று அவசரத் தீர்ப்பிட வேண்டாம் என்று சொல்வதிலேயே இயேசு குறியாய் இருந்தார். பலி செலுத்தியவர்களின் கொலை, கோபுரம் விழுந்து மரணம் என்ற இரு நிகழ்வுகளும் புனிதத் தலத்தில் நிகழ்ந்தன என்பது, மேலும் சில கேள்விகளை எழுப்புகின்றன.

திருத்தலங்களுக்குப் போகும் வழியில் அல்லது திருத்தலங்களுக்குச் சென்று திரும்பும்போது, அல்லது, திருத்தலங்களில், ஏற்படும் அளவுக்கதிகமான நெரிசல்களில் உயிரிழப்பவர்களைப் பற்றி அவ்வப்போது கேள்விப்படுகிறோம், இல்லையா?
நம்மால் புரிந்துகொள்ளக் கூடிய காரணம் ஏதுமின்றி ஏற்படும் துன்ப நிகழ்வுகளில், அதுவும், சிறப்பாக, திருத்தலங்களில், கோவில்களில் ஏற்படும் துன்ப நிகழ்வுகளில், பல கேள்விகள் எழும். அந்தக் கேள்விகளின் பின்னணியில் கடவுள் கட்டாயம் இருப்பார். பல நேரங்களில் இந்தக் கேள்விகளுக்கு நாமே சில குழப்பமான, அபத்தமான விளக்கங்களும் தருவோம்.

பலி செலுத்தியவர்களை பிலாத்து கொன்றான் என்ற செய்தியைக் கூறியவர்கள், அவன் செய்தது சரியா, அதைத் தடுக்க கடவுளால் முடியவில்லையா என்ற கேள்விகளுக்கு விடை தேடியே, அந்தச் செய்தியை இயேசுவிடம் கூறியிருக்கவேண்டும். சீலோவாம் கோபுரம் இடிந்து மக்கள் இறந்த நிகழ்விலும் இறைவனை இணைக்கும் பல கேள்விகள் எழுந்திருக்கும். ஆனால், இக்கேள்விகளுக்கு இயேசு நேரடியாக விடை தந்ததுபோல் தெரியவில்லை. அச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரைக் குறித்து நாம் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தைச் சரி செய்வதே இயேசுவின் முக்கிய நோக்கமாய் இருந்தது.

துன்பங்களைச் சந்திக்கும்போது, கடவுள் எங்கே? கடவுள் ஏன் இப்படிச் செய்தார்? அல்லது, கடவுள் ஏன் ஒன்றும் செய்யவில்லை? போன்ற கேள்விகள் வழக்கமாக எழும். இத்தகையக் கேள்விகளுக்குப் பதிலாக, மற்ற கேள்விகளை, எண்ணங்களை எழுப்பினால், ஒரு சில தெளிவுகள் பிறக்கும். இதோ, ஓர் எடுத்துக்காட்டு:
ஆறு ஆண்டுகளுக்கு முன் ஹெயிட்டி நாட்டிலும், சென்ற ஆண்டு, நேபாளத்திலும் ஏற்பட்ட நில நடுக்கத்தை மறந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இயற்கைப் பேரழிவுகளின்போது, நம்முடைய மனங்களில், கட்டாயம், 'கடவுள் எங்கே' என்ற கேள்வி, வெகு இயல்பாக எழுந்திருக்கும். கடவுள் எங்கே என்ற கேள்விக்குப் பதில், இந்த நிலநடுக்கத்தில் நாம் எங்கே, மனித சமுதாயம் எங்கே என்ற கேள்விகளையும் எழுப்பலாம்.
நிலநடுக்கமே இப்போது இயற்கையின் விபரீதமா அல்லது மனிதர்கள் இயற்கையை அளவுக்கதிகமாய் சீர்குலைத்து வருவதன் எதிரொலியா என்ற விவாதம் எழுந்துள்ளது. அப்படியே, நிலநடுக்கம், இயற்கையில் எழும் விபரீதம் என்பதை ஒத்துக்கொண்டாலும், ஹெயிட்டி, நேபாளம் போன்ற ஏழை நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கங்களில், பெருமளவில் உயிர்கள் பலியாவதற்கு, அங்கு கட்டப்பட்டிருக்கும் தரக் குறைவான கட்டடங்களே காரணம் என்பது வெளிச்சமாகும்போது, மனசாட்சியுள்ள மனிதர்கள் எங்கே என்ற கேள்வி ஓங்கி ஒலிக்கிறது. வறிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும்போது, வறியோரின் குடியிருப்புக்களே பெருமளவில் தரைமட்டமாகின்றன என்பதும், அந்த இடிபாடுகளில் சிக்கியிருப்போர் வறியோர் என்ற காரணத்தால், அவர்களை மீட்கும் பணிகளிலும் அக்கறையற்ற நிலை உருவாகி, இன்னும் பல நூறு உயிர்கள் பலியாகின்றன என்பதும் நம்மைப்பற்றிய கேள்விகளையே எழுப்புகின்றன. ஆசியக் கடற்கரைகளை சுனாமி தாக்கியபோதும், தகுந்த நேரத்தில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தால், பல்லாயிரம் உயிர்களைக் காப்பற்றியிருக்கலாம் என்பதை நாம் அறிவோம்.

துன்பங்கள் நிகழும்போதெல்லாம் கடவுளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, கேள்விகள் கேட்பதற்குப் பதில், நம்மை அங்கு நிறுத்தி, இத்துன்பம் நிகழ்வதற்கு நாம் எவ்வகையில் காரணமாய் இருந்தோம் என்று ஆய்வு செய்வது நல்லது. இத்துன்பங்களைத் தடுக்க, அல்லது, இத்துன்பங்களிலிருந்து மக்களைக் காக்க கடவுள் என்ன செய்யவேண்டும் என்று அவருக்கு விதிமுறைகள் வகுப்பதை விட்டுவிட்டு, இத்துன்பத்திலிருந்து மக்களை மீட்க நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திப்பது பயனளிக்கும்.
இத்தகைய அழைப்பை, இன்றைய முதல் வாசகத்தில், எரியும் புதர் வழியே இறைவன் மோசேக்கு வழங்குகிறார். மக்களின் துன்பம் கண்டு நான் இறங்கி வந்துள்ளேன். என்னோடு சேர்ந்து நீயும் எகிப்து நாட்டிற்கு வா. அங்குள்ள மக்களை மீட்டுவர என் சார்பில் நீயும் வந்து போராடு என்ற பாணியில் இறைவன் மோசேயை அழைத்தார். அதே அழைப்பு நமக்கும் தரப்படுகிறது.

கடவுள் தந்த விடுதலைப் பணியை ஏற்க, மோசே தயங்கினார். "நான் போய் என்ன செய்ய முடியும். என்னை உயிரோடு குழிதோண்டி புதைத்துவிடுவார்களே" என்று சொல்லி, ஒதுங்கிவிட மோசே எண்ணினார். இறைவன் அவருக்கு நம்பிக்கை தந்து, அவரது தயக்கங்களை நீக்கி, அவர் வழியாக ஆற்றிய விடுதலை, வரலாறானது.
துன்ப நிகழ்வுகள் நம்மையோ, நம் உலகையோ தாக்கும்போது, கடவுள் எங்கே, கடவுள் ஏன் இவ்வாறு செய்தார், அல்லது செயல்படவில்லை என்ற ஆராய்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, துன்ப நிகழ்வுகள், நம் வாழ்வைத் திருத்தி அமைக்க வழங்கப்படும் எச்சரிக்கைகள் என்பதையும், அதேநேரம், நம்மைத் தேடிவரும் அழைப்புக்கள் என்பதையும் உணர முயற்சிப்போம். உலகில் நிகழும் துயரங்களைக் குறைப்பதற்கு இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இறைவனோடு இணைந்து உழைக்கும் வரம் வேண்டுவோம்.



23 February, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 10

Pope Francis paying homage to St Padre Pio and St Leopoldo

70 வயது நிறைந்த அருள்பணியாளர் ஒருவர், ஒரு துறவு சபையில் தலைமைப் பொறுப்பில் பல ஆண்டுகள் பணியாற்றியபின், திருத்தலம் ஒன்றில் பணியாற்றச் சென்றார். திருத்தலத்திற்கு வரும் மக்களுக்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்குவது, அவரது முழுநேரப் பணியாக இருந்தது. ஒப்புரவு அருளடையாளம் வழியே பெறக்கூடிய பாவ மன்னிப்பை ஓர் அர்த்தமுள்ள அனுபவமாக மக்கள் பெறுவதற்கு, அந்த அருள் பணியாளர் உதவி செய்தார். அவரைத் தேடி, அருள்பணியாளர்கள், துறவிகள், பொதுநிலையினர், வறியோர், செல்வந்தர் என்று பலர், சாரை, சாரையாகச் சென்றனர்.
ஒருநாள் அம்மறைமாவட்டத்தின் ஆயர், அந்த அருள்பணியாளரைச் சந்திக்கச் சென்றபோது, அருள்பணியாளர், ஆயரிடம், "நான் மிக எளிதாக, மிகத் தாராளமாக மன்னித்து விடுகிறேனோ என்ற நெருடல் எனக்குள் அவ்வப்போது எழுகிறது" என்று சொன்னார். "ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?" என்று ஆயர் கேட்க, "என்னிடம் வரும் அனைவருக்கும், எப்படியாவது மன்னிப்பு வழங்கிவிட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் அதிகம் உள்ளது. இது சரியா, தவறா என்று தெரியவில்லை" என்று கூறினார்.
"அப்படி நீங்கள் உணரும்போது என்ன செய்கிறீர்கள்?" என்று ஆயர் மீண்டும் கேட்டார். அதற்கு, அந்த அருள்பணியாளர், "அந்நேரங்களில், நான் கோவிலுக்குச் சென்று, நற்கருணைப் பேழைக்கு முன் அமர்ந்து, ஆண்டவரிடம் பேசுவேன்" என்று அருள் பணியாளர் சொன்னார். "ஆண்டவரிடம் என்ன பேசுவீர்கள்?" என்று ஆயர் மறுபடியும் கேட்டதற்கு, அந்த அருள் பணியாளர், "'ஆண்டவரே, என்னை மன்னியும். இன்று நான் மிக, மிக, தாராளமாக மன்னிப்பு வழங்கிவிட்டேன். ஆனால், நான் இவ்விதம் நடந்து கொள்வதற்கு நீங்கள்தான் காரணம். இவ்வாறு மன்னிப்பதற்கு, உங்களிடமிருந்துதான் நான் பழகிக்கொண்டேன்' என்று ஆண்டவரிடம் பேசுவேன்" என ஆயருக்குப் பதில் சொன்னார். ஆயர், அந்த அருள்பணியாளரை மனதாரப் பாராட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனஸ் அயிரெஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியபோது, கப்பூச்சியன் துறவு சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் ஒருவரை, தான் சந்தித்த இந்நிகழ்வை, பிப்ரவரி 9ம் தேதி காலைத் திருப்பலியில் பகிர்ந்துகொண்டார். அன்று காலை, புனித பேதுரு பசிலிக்காவில், கப்பூச்சியன் துறவு சபையின் உலகளாவியப் பிரதிநிதிகளுக்கு தனிப்பட்ட முறையில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, 'மன்னிப்பு வழங்குவது', கப்பூச்சியன் துறவு சபையின் தனித்துவமிக்கப் பாரம்பரியம் என்று கூறினார்.
நாம் தற்போது கடைபிடித்துவரும் தவக்காலத்தில், திருஅவை விடுக்கும் முக்கியமான அழைப்பு, மனமாற்றம், மன்னிப்பு, ஒப்புரவு என்ற மூன்று அம்சங்களை உள்ளடக்கியது. இவற்றில், மன்னிப்பைப் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 9ம் தேதி பகிர்ந்துகொண்ட கருத்துக்களை இந்த விவிலியத் தேடலில் சிறிது ஆழமாகச் சிந்திக்க முயல்வோம்.
பிப்ரவரி 9ம் தேதி காலைத் திருப்பலி நடைபெற்ற வேளையில், கப்பூச்சியன் துறவுச் சபையில் வாழ்ந்து, இறந்தபின்னரும் அழியாத நிலையில் பாதுகாக்கப்பட்டுவரும் இரு புனிதர்களின் உடல்கள், புனித பேதுரு பசிலிக்காவில் மக்களின் வணக்கத்திற்கென வைக்கப்பட்டிருந்தன. 'பாத்ரே பியோ' என்று மக்களால் போற்றப்படும் பியெத்ரெல்சீனோ நகர் புனித பயஸ், மற்றும் புனித லியோபோல்தோ மாந்திச் என்ற இரு புனிதர்களும், 'ஒப்புரவு அருளடையாளத்தின் திருத்தூதர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் 14 மணி நேரங்களுக்கும் மேலாக ஒப்புரவு அருளடையாளத்தை மக்களுக்கு வழங்கிவந்த இவ்விரு புனிதர்களையும் எடுத்துக்காட்டாகக் கூறியத் திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளத்தில் அருள் பணியாளரின் முக்கியப் பணி, மன்னிப்பு வழங்குவதே என்பதை வலியுறுத்திக் கூறினார்.
கப்பூச்சியன் துறவிகளிடம் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள அருள் பணியாளர்கள் அனைவரிடமும் இம்மறையுரை வழியே தான் பேச விழைவதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், ஒப்புரவு அருளடையாளத்தை வழங்கும் அருள் பணியாளர்கள் கொண்டிருக்கவேண்டிய மனநிலையைக் குறித்து திருத்தந்தை கூறிய அறிவுரை சிறப்பு மிக்கது.
"மன்னிப்பு வழங்க உருவாக்கப்பட்டுள்ள ஒரு வடிகாலே, ஒப்புரவு அருளடையாளம். சிலவேளைகளில், உங்களால் பாவமன்னிப்பு வழங்கமுடியாத நிலை உருவாகிறது என்றே வைத்துக் கொள்வோம். அவ்வேளையிலும், இந்த அருளடையாளத்தைத் தேடி வந்திருப்பவர், வெட்கத்தால் கூனிக்குறுகிப் போகும்படி அவரிடம் பேசாதீர்கள். மன்னிப்பையும், மன அமைதியையும் நாடி வந்திருப்பவரை, தந்தைக்குரிய பாசத்தோடு அரவணைத்து, 'இறைவன் உம்மீது அன்பு கொண்டுள்ளார்' என்ற உண்மையை அவர் உணரும்படிச் செய்யுங்கள்.
பலர் என்னிடம் ஒரு கசப்பான உண்மையைக் கூறியுள்ளனர். அதாவது, ஒப்புரவு அருளடையாளத்தின்போது ஓர் அருள் பணியாளர் கேள்விகள் கேட்டு வதைத்ததால், அவர்கள் அந்த அருளடையாளத்தைப் பெற இனி ஒருபோதும் செல்வதில்லை என்று தீர்மானம் செய்துள்ளதை என்னிடம் கூறியுள்ளனர். தயவுசெய்து இவ்விதம் நடந்து கொள்ளாதீர்கள்" என்று திருத்தந்தை விண்ணப்பித்தார்.
ஒப்புரவு அருளடையாளத்தில் அருள் பணியாளர்கள் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முன்பு ஒருமுறை பேசியபோது, அந்த அருளடையாள அனுபவத்தை, நீதிமன்ற அனுபவமாக மாற்றிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். தவறு செய்தவரை, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, கேள்விகளால் அவர்களை வதைப்பது, நீதி மன்றங்களில் நடக்கக்கூடும். ஒப்புரவு அருளடையாள நேரத்தில் இந்தச் சித்ரவதை நடக்கக்கூடாது என்று திருத்தந்தை கூறியிருந்தார்.
பிப்ரவரி 9, காலைத் திருப்பலியில், கப்பூச்சியன் துறவிகளிடம் இதையொத்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டத் திருத்தந்தை, இறுதியாகக் கூறிய வார்த்தைகள் இவையே: "பரந்து விரிந்த இதயம்... மன்னிப்பு... இவையே உங்களுக்குத் தேவை. மன்னிப்பு, இறைவன் தரும் அரவணைப்பு. அது ஒரு விதை. ... இந்த அருளைப் பெற ஒவ்வொருவருக்காகவும் செபியுங்கள். எனக்காகவும் செபியுங்கள்" என்று தன் மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் தனித்துவமிக்க ஒரு நிகழ்வாக, 'இரக்கத்தின் மறைப் பணியாளர்களை' திருநீற்றுப் புதனன்று உலகெங்கும் அனுப்பிவைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ். உலகெங்கிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 1142 அருள் பணியாளர்களில், 726 அருள்பணியாளர்கள், பிப்ரவரி 9ம் தேதி, வத்திக்கானுக்கு வருகை தந்திருந்தனர். திருநீற்றுப் புதனுக்கு முந்திய செவ்வாயன்று மாலை, இம்மறைப் பணியாளர்களைச் சந்தித்தத் திருத்தந்தை, மனம் திறந்து அவர்களோடு பேசியக் கருத்துக்கள், அர்த்தமும், ஆழமும் மிகுந்தவை. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், மன்னிப்பு, மடைதிறந்த வெள்ளமென இவ்வுலகெங்கும் பரவவேண்டும் என்ற ஆவலில், இரக்கத்தின் மறைப் பணியாளர்களுக்கு, தனிப்பட்ட அதிகாரங்களை வழங்கி, உலகெங்கும் அனுப்பிவைத்தத் திருத்தந்தை, அவர்களோடு பகிர்ந்துகொண்ட ஒருசில எண்ணங்கள் இதோ:

ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் அருள்பணியாளர், இந்த அருளடையாளத்தை அணுகிவரும் மனிதர்களின் இதயங்களை, கடவுளின் இரக்கம் என்ற ஆடையால் உடுத்தி, அவர்கள் உணரும் வெட்கத்தை நீக்கி, மகிழ்வில் அவர்களை நிரப்பவேண்டும். தன்னை அணுகிவரும் எவரையும் வரவேற்க, திருஅவை ஓர் அன்னையெனக் காத்திருக்கிறார் என்ற உண்மையை, மக்கள் உணர்வதற்கு 'இரக்கத்தின் மறைப்பணியாளர்கள்' ஒரு வாய்ப்பாக அமையவேண்டும்.
ஒப்புரவு அருள் அடையாளத்தை நாடிவருபவரை வரவேற்பது, அவருக்குச் செவிமடுப்பது, அவரை மன்னிப்பது, அவர் தேடும் அமைதியை அளிப்பது என்று அனைத்திலும் செயலாற்றுவது, கிறிஸ்துவே. அந்த அருளடையாளத்தை வழங்கும் அருள் பணியாளர்கள், கிறிஸ்துவின் மன்னிப்பை முதலில் பெறவேண்டிய நிலையில் உள்ளவர்கள்.
இவ்வாறு மனம் திறந்துப் பேசியத் திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளம் தன் வாழ்வில் எவ்விதம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதையும் தன் உரையில் பகிர்ந்துகொண்டார். 1953ம் ஆண்டு, செப்டம்பர் 21ம் தேதி தான் மேற்கொண்ட ஒப்புரவு அருளடையாளத்தின்போது, தன்னை ஓர் அருள்பணியாளர் வரவேற்று, தந்தைக்குரிய பாசத்தை வெளிப்படுத்திய பாங்கு, தன் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது என்றும், அந்த அனுபவமே, இறையழைத்தல் என்ற விதையை தன் உள்ளத்தில் விதைத்தது என்றும் எடுத்துரைத்தார்.
செப்டம்பர் 21ம் தேதி, திருத்தூதரும், நற்செய்தியாளருமான புனித மத்தேயுவின் திருநாள். அத்திருநாளன்று, 17 வயதான ஹோர்கே மாரியோ பெர்கோலியோவின் வாழ்வில் உருவான மாற்றத்தின் நினைவாக, "Miserando atque eligendo" அதாவது, "இரக்கம்கொண்டு தேர்ந்தெடுத்து" என்ற சொற்களை, பெர்கோலியோ அவர்கள், தான் ஆயராகப் பணியேற்றபோது, தன் விருதுவாக்காகத் .தேர்ந்தெடுத்தார். வரி வசூலிக்கும் மத்தேயுவை, இயேசு, இரக்கம் கொண்டு அழைத்ததை மையப்படுத்தித் தேர்ந்தெடுக்கப்பட்ட இவ்விருதுவாக்கை, கர்தினால் பெர்கோலியோ அவர்கள், தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டப் பின்னரும் தன் விருதுவாக்காக, தொடர்ந்து ஏற்றுள்ளார். புனித மத்தேயு திருநாளன்று, ஓர் ஒப்புரவு அருளடையாளத்தின் வழியே தன் வாழ்வில் உருவான திருப்புமுனையைக் குறித்துப் பேசியத் திருத்தந்தை, இரக்கத்தின் மறைப் பணியாளர்களுக்கு சில எதார்த்தமான அறிவுரைகளையும் வழங்கினார்:
ஒரு சில வேளைகளில் ஒப்புரவு அருளடையாளம் பெற வருவோர், தங்கள் உள்ளத்தில் இருப்பனவற்றை வார்த்தைகளால் கூற இயலாமல் தடுமாறும்போது, அவர்கள் நிலையைக் கனிவுடன் புரிந்துகொள்ள வேண்டும். மன்னிப்பை நாடி அவர்கள் வந்துள்ளனர் என்பதையும், தங்கள் வாழ்வை மாற்றி அமைக்க விரும்புகின்றனர் என்பதையும் நாம் உணர்ந்து, அவர்களை வழிநடத்தவேண்டும்.
ஒப்புரவு அருளடையாளத்தை அணுகி வருபவர் சுமந்துவரும் வெட்க உணர்வைக் குறித்து, தன் உரையின் இறுதிப் பகுதியில் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடக்கநூலில் கூறப்பட்டுள்ள இரு நிகழ்வுகளை, எடுத்துக்காட்டாகக் கூறினார். ஆதாம், ஏவாள் இருவரும் இறைவனின் சொற்களை மீறி, விலக்கப்பட்டக் கனியைச் சுவைத்தனர். தாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்த இருவருமே, இறைவனைக் காண விருப்பமின்றி விலகிச் சென்றனர் (தொடக்க நூல் 3:8-10) என்று குறிப்பிட்ட திருத்தந்தை, பாவத்தில் விழும் மனிதர்களின் முதல் உணர்வுகள், இறைவனை விட்டு விலகிச்செல்வது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை கூறிய இரண்டாவது எடுத்துக்காட்டு, நோவாவைப் பற்றியது. நேர்மையானவர் என்றும் குற்றமற்றவர் என்றும் கூறப்படும் நோவா, மது மயக்கத்தில் நிலையிழந்து போவதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, ஆடையின்றி கிடந்த நோவாவின் மீது துணியைப் போர்த்திய அவரது இரு மகன்கள், அவருக்குரிய மதிப்பை மீண்டும் அளித்தனர் (தொ.நூல் 9:18-23) என்பதையும் .சுட்டிக்காட்டினார்.
ஒப்புரவு அருள் அடையாளம் வழங்கும் அருள் பணியாளர்கள், ஒரு நீதிபதியைப் போல் அமர்ந்திருப்பதற்குப் பதில், நோவாவின் இரு மகன்களைப் போல், தங்களை நாடிவரும் மனிதர்களின் மாண்பை மீண்டும் நிலைநிறுத்தும் வகையில், அவர்களுக்கு இறைவனின் இரக்கம் என்ற ஆடையை அணிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர் என்று திருத்தந்தை தன் உரையில் கேட்டுக்கொண்டார்.
'இரக்கத்தின் மறைப் பணியாளர்களாக' உலகெங்கும் செல்லும் அருள் பணியாளர்களுடன் தானும் துணைவருவதாகக் கூறியத் திருத்தந்தை, அவர்கள்  மேற்கொள்ளும் பணியில், புனித லியோபோல்தோ, புனித பியோ, இன்னும் பல புனிதமான அருள் பணியாளர்கள் துணைவருகின்றனர் என்ற வார்த்தைகளுடன் தன் உரையை நிறைவு செய்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 9ம் தேதி வழங்கிய இரு உரைகளும் மன்னிப்பின் அழகை வெளிச்சமிட்டுக் காட்டும் உரைகள். திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதிகளாக, அந்த மன்னிப்பை உலகெங்கும் வழங்கச் சென்றுள்ள 'இரக்கத்தின் மறைப் பணியாளர்கள்' தங்கள் பணியைத் திறம்படச் செய்வதற்கு, இறை அருளை இறைஞ்சுவோம். நாம் துவங்கியுள்ள தவக்காலத்தில், ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் அனைத்து அருள் பணியாளர்களும், விண்ணகத் தந்தையின் மன்னிப்பை அனைவரும் உணர்வதற்கு உதவி செய்வார்கள் என்று நம்புவோம்.

"இரக்கமும், நம்பிக்கையும் வாழும் ஓர் இடமாக, வரவேற்பையும், மன்னிப்பையும் வழங்கும் ஓர் இல்லமாக, திருஅவை, என்றென்றும் விளங்கவேண்டும்" (Let the Church always be a place of Mercy and Hope, where everyone is welcomed, loved and forgiven) என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையைக் குறித்து காணும் கனவு, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் தவக்காலத்தில் நனவாக வேண்டும்.

Pope Francis talking to some Missionaries of Mercy
Photo : L'Osservatore Romano


21 February, 2016

Slow, steady, day-to-day change மெதுவாக உருவாகும் மாற்றங்கள்

The Transfiguration of Our Lord
2nd Sunday of Lent
Last Sunday, the First Sunday of Lent, we were given the privilege of seeing a very private experience of Jesus, probably one of the most vulnerable moments of his life… the temptations. Today, the Second Sunday of Lent, gives us the opportunity to see him in one of his most glorious moments… the transfiguration. I would like to begin this reflection with a lesson on human anatomy.
Human skin is an amazing organ -- protective, waterproof, and exceedingly useful. It's also constantly changing and regenerating itself… Your skin is composed of several layers… It takes roughly one month for new cells to get all the way to the top layer, meaning the skin you have a month from today will be completely new compared to the skin you have now.
(How many skin cells do you shed every day? by Ed Grabianowski)

Quite a few gels and lotions are advertised with false claims that they can keep our skin fresh, young, ageless and changeless! Blatant lie! No lotion can keep our skin changeless even for an hour. Here are some ‘enlightening’ facts about our skin:
Scientists estimate that the human body is made up of around 10 trillion cells in total. Your skin makes up about 16 percent of your body weight, which means you have roughly 1.6 trillion skin cells [source: BBC]. Of course, this estimate can vary tremendously according to a person's size. The important thing is that you have a lot of skin cells. Of those billions of skin cells, between 30,000 and 40,000 of them fall off every hour. Over a 24-hour period, you lose almost a million skin cells [source: Boston Globe]… In other words, your house is filled with former bits of yourself. In one year, you'll shed more than 8 pounds (3.6 kilograms) of dead skin.
(How many skin cells do you shed every day? by Ed Grabianowski)

The commercial world often cheats us, via advertising, that instantaneous, quick changes are possible. We need to learn that such quick changes do not last long. We can’t expect caterpillars turn into butterflies at the snap of the finger. I remember an email I received long back – caterpillar into butterfly!
The little boy was thrilled to hear about the changes his caterpillar would go through. He watched every day, waiting for the butterfly to emerge. One day it happened, a small hole appeared in the cocoon and the butterfly started to struggle to come out.
At first the boy was excited, but soon he became concerned. The butterfly was struggling so hard to get out! It looked like it couldn’t break free! It looked desperate! It looked like it was making no progress!
The boy was so concerned he decided to help. He snipped the cocoon with scissors to make the hole bigger and the butterfly quickly emerged! As the butterfly came out the boy was shocked. It had a swollen body and small, shriveled wings. He continued to watch the butterfly expecting that, at any moment, the body would shrink and the butterfly’s wings would expand. But neither happened! The butterfly spent the rest of its life crawling around with a swollen body and shriveled wings. It never was able to fly…
As the boy tried to figure out what had gone wrong, his mother took him to talk to a scientist from a local college. He learned that the butterfly was SUPPOSED to struggle. In fact, the butterfly’s struggle to push its way through the tiny opening of the cocoon pushes the fluid out of its body and into its wings. Without the struggle, the butterfly would never, ever fly. The boy’s good intentions hurt the butterfly.

Struggle, sweat and, more often, tears are the integral part of change. No commercial magic can replace them. Change – slow, steady, day-to-day change – is an essential part of human beings as well as other living forms. Even after death, change (we call it decay) takes place. We are invited to think of this most common human phenomenon on the II Sunday of Lent when we think of the transfiguration of Jesus.

Last week we reflected that everyone born will have to face temptations. This week we reflect on another common human phenomenon – CHANGE! Change is a key theme during the Lenten season - change of heart, change of our lifestyle. Most of us would tend to believe that when our surrounding and the people around us change, we also change. On deeper analysis, we can see that radical, lasting changes begin from within. Here is a story from the master storyteller Fr Anthony de Mello in his famous book ‘The Song of the Bird’ - CHANGE THE WORLD BY CHANGING ME:
The Sufi Bayazid says this about himself; “I was a revolutionary when I was young and my prayer to God was: ‘Lord, give me the energy to change the world.’”
“As I approached middle age and realized that half my life was gone without my changing a single soul, I changed my prayer to: ‘Lord, give me the grace to change all those who come in contact with me. Just my family and friends, and I shall be content,’”
“Now that I am an old man and my days are numbered, my one prayer is, ‘Lord, give me the grace to change myself.’ If I had prayed for this right from the start I should not have wasted my life.”

Last Sunday, the Gospel took us to the desert. This Sunday the Gospel invites us to the mountains. Let’s go to the mountains… Archbishop Fulton Sheen has made an interesting observation comparing the Mount of Beatitudes with the Mount of Calvary:
Two mounts are related as the first and second acts in a two-act drama: the Mount of the Beatitudes and the Mount of Calvary. He who climbed the first to preach the Beatitudes must necessarily climb the second to practice what he preached. The unthinking often say the Sermon on the Mount constitutes the “essence of Christianity.” But let any man put these Beatitudes into practice in his own life, and he too will draw down upon himself the wrath of the world. The Sermon on the Mount cannot be separated from his crucifixion, any more than day can be separated from night. The day our Lord taught the Beatitudes, He signed his own death warrant. The sound of nails and hammers digging through human flesh were the echoes thrown back from the mountainside where he told men how to be happy or blessed. Everybody wants to be happy; but his ways were the very opposite of the ways of the world. 

The Transfiguration of Christ lends itself for varied reflections. I would like to reflect briefly on three aspects:
First: And as he (Jesus) was praying, the appearance of his countenance was altered, and his raiment became dazzling white. (Luke 9:29)
We need to learn anew everyday about the power of prayer and what it can do to our lives, especially during the Lenten Season and more especially during the Jubilee of Mercy.
Second: Jesus was conversing with Moses and Eli′jah about his death. Instead of relishing that ‘glorious’ moment, they spoke about death. We can surely learn a lesson here. When we are surrounded by glory, we need to keep our feet firmly rooted to the ground and not lose sight of our life’s purpose. If we start floating in the skies, without any thought to the reality around us, we may have to crash-land painfully!
Third: Deep experiences of God should take us back to the people. This is what happens in the final part of the Transfiguration event. Peter wanted to prolong the ‘experience’ by erecting tents. Evangelist Luke makes a special mention of how Peter was talking - not knowing what he said. (Luke 9:33) God intervened and said, “This is my Son, my Chosen; listen to him!” (Luke 9:35) It was an indirect reminder to Peter not to blabber, but to keep silent and listen to the Son. What would the Son say? “It is nice to stay on like this. But, we need to get back to the people to ‘transfigure’ them.”

Be the change you wish to see in the world

தவக்காலம் 2ம் ஞாயிறு

உயிரியல் தொடர்பான ஒரு பாடத்துடன் நம் ஞாயிறு சிந்தனைகளை இன்று ஆரம்பிப்போம். நமது உடலில் ஏறத்தாழ 10 இலட்சம் கோடி உயிரணுக்கள் (10 trillion cells) உள்ளதெனச் சொல்லப்படுகிறது. அவற்றில் 16 விழுக்காடு, அதாவதுஒரு இலட்சத்து 60 ஆயிரம் கோடி உயிரணுக்கள் நமது தோல் பகுதியாக உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 40,000 உயிரணுக்கள் ஒவ்வொரு மணி நேரமும் இறந்து, புது உயிரணுக்கள் உருவாகின்றன.
உங்கள் சருமத்தை இளமை மாறாமல் அதே நிலையில் வைத்திருக்க எங்கள் 'க்ரீமை'ப் பயன்படுத்துங்கள் என்று சொல்லும் அனைத்து விளம்பரங்களும் அப்பட்டமான பொய். உலகின் எந்த ஒரு க்ரீமும் நமது தோலை மாறாமல் வைத்திருக்க முடியாது. ஒரு நாளைக்கு நாம் 10 இலட்சம் உயிரணுக்களை இழக்கிறோம், உருவாக்குகிறோம். எனவே, ஏதோ ஒரு 'க்ரீம்' நமது தோலை இளமை மாறாமல் காக்கும் என்பதை நம்புவதற்குப் பதில், ஒவ்வொரு நொடியும் நமது உடல் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பதை நம்புவதே மேல். மனிதராய் பிறந்த அனைவருக்கும், உயிரினங்கள் அனைத்திற்கும் உள்ள ஓர் அடிப்படை நியதி, மாற்றம்.
தங்கள் நிறுவனப் பொருள்களைப் பயன்படுத்தினால், மாற்றங்கள் விரைவில் வரும் என்ற மற்றொரு பொய்யையும் விளம்பர உலகம் தயக்கமின்றி நம்மீது திணித்து வருகிறது. விரைவில் வரும் மாற்றங்கள், வந்த வேகத்தில் மறைந்துவிடும். நேரம் எடுத்து, மெதுவாக வரும் மாற்றங்களே நிலைத்து நிற்கும். கூட்டுப்புழு ஒரு நொடியில் வண்ணத்துப் பூச்சியாக மாறும் என்று எதிர்பார்ப்பது, ஆபத்தானது. பல ஆண்டுகளுக்கு முன்னால் "கூட்டுப் புழுவும், வண்ணத்துப் பூச்சியும்" என்ற தலைப்பில் எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு பகுதி இது:
கூட்டுப்புழுவில் ஒரு ஓட்டை விழுந்தது. அதைப் பார்த்த இளைஞன் பரபரப்படைந்தான். உள்ளிருந்து ஓர் உயிர் அசைந்து, ஆடி, ஓட்டையைப் பெரிதாக்க முயன்றதைப் பார்த்தான். கூட்டை உடைத்துக்கொண்டு, வண்ணத்துப் பூச்சி விரைவில் வெளியே வரும் என்று காத்திருந்தவனுக்கு பெரும் ஏமாற்றம். ஒருவேளை உள்ளிருந்த உயிரால் ஒன்றும் செய்ய முடியவில்லையோ என்று எண்ணினான். அதற்கு உதவி செய்யும் எண்ணத்தோடு, ஒரு கத்தியின் உதவியால், அந்த ஓட்டையை இன்னும் பெரிதாக்கினான். உள்ளிருந்து ஒரு பூச்சி வெளியே வந்தது. பார்ப்பதற்கு விகாரமாய் இருந்தது. ஊதிப் பருத்த உடல், சுருங்கிப்போன இறக்கைகள் என்று வெளியே வந்த அந்தப் பூச்சி, எவ்வகையிலும் அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த வண்ணத்துப் பூச்சியைப் போல் இல்லை.
உதவி என்று நினைத்து, அவன் செய்தது, விபரீதமாக முடிந்தது. இயற்கையின் போக்கு அவனுக்கு தெரியாது. தெரிந்திருந்தால், இப்படி அவன் செய்திருக்க மாட்டான். கூட்டுப்புழு அக்கூட்டிலிருந்து வெளியேற மேற்கொள்ளும் போராட்டம் நீண்டதொரு போராட்டம். அனால், அந்தப் போராட்டத்தின்போது அதன் உடலிலிருந்து வெளியேறும் திரவம், அந்தப் புழுவின் உடலைச் சுருக்கும், இறக்கைகளை வளர்க்கும், போராட்டத்தின் இறுதியில், அழகான வண்ணத்துப் பூச்சி, வெளியேறி, பறக்கும். மாற்றம் உருவாக, போராட்டம் தேவை. போராட்டமும், துன்பமும் ஈன்றெடுக்கும் குழந்தைதான் மாற்றம். இதைப் புரிந்துகொள்ளாமல், மாற்றங்களை விரைவில் உருவாக்க, விளம்பர, வியாபார உலகம் தரும் சுருக்கு வழிகளில் சிக்கினால், விபரீதங்கள், விவகாரங்கள், விகாரங்கள் நேர வாய்ப்பு உண்டு.

மாற்றங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஏன் என்ற கேள்வி எழுகிறதா? பதில், நம் ஞாயிறு வாசகங்களில் அடங்கியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு சந்தித்த சோதனைகளைப் பற்றி சிந்திக்கவும், இரண்டாம் ஞாயிறு, இயேசுவின் தோற்றம் மாறும் நிகழ்வைச் சிந்திக்கவும், வழிபாட்டு வாசகங்கள் அழைக்கின்றன. சோதனைகள், மனித வாழ்வின் இணைபிரியாத ஓர் அனுபவம் என்பதுபோல், உருமாற்றமும் மனித வாழ்வின் மையமான ஓர் அனுபவம். மேலும், தவக்காலத்தில் நாம் அடிக்கடி சிந்திக்கும் ஓர் எண்ணம் – மாற்றம்... குறிப்பாக, மனமாற்றம். மனம் மாறும்போது, அதற்கு இணையாக வாழ்வு மாறும், இவ்வுலகமும் மாறும்.
மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்? நமக்குள்ளிருந்தா அல்லது வெளி உலகிலிருந்தா? நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களும், சூழலும் மாறினால், நாமும் மாறுவோம் என்று பல நேரங்களில் எண்ணுகிறோம், நம்புகிறோம். தீர ஆராய்ந்தால், நமக்குள் உருவாகும் மாற்றங்களே, பிற மாற்றங்களின் அடித்தளமாய் அமையும்; அவையே, நீண்ட காலம் நீடிக்கும் என்பதை உணரலாம்.

மாற்றங்கள் நமக்குள்ளிருந்து ஆரம்பமாக வேண்டும் என்று சிந்திக்கும்போது, அருள்தந்தை அந்தனி டி மெல்லோ (Anthony de Mello) அவர்களின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. வயது முதிர்ந்த ஒருவர் தன் வாழ்வைத் திரும்பிப் பார்த்தபோது, இவ்வாறு கூறினார்: புரட்சிகளை அதிகம் விரும்பிய ஓர் இளைஞனாய் நான் இருந்தபோது, ‘கடவுளே, உலகை மாற்றும் வரம் தா! என்று வேண்டினேன். நடுத்தர வயதை அடைந்தபோது என் செபம் சிறிது மாறியது: கடவுளே, என் குடும்பத்தினரை, நண்பர்களை, என்னைச் சுற்றியுள்ளவர்களை மாற்றும் வரம் தா! என்பது என் செபமானது. இப்போது வயது முதிர்ந்த நிலையில், என் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுள்ளன என்பதை உணர்கிறேன். இப்போது நான் வேண்டுவது இதுதான்: கடவுளே, என்னையே நான் மாற்றிக்கொள்ளும் வரம்தா! என்பதே, என் இப்போதையச் செபம். இந்த செபத்தை நான் ஆரம்பத்திலிருந்தே வேண்டியிருந்தால், என் வாழ்வு எவ்வளவோ மாறியிருக்கும். ஒரு வேளை என்னைச் சுற்றியிருந்தவர்களும், இந்த உலகமும் மாறியிருக்கும் என்று அந்த முதியவர் தனக்குள் சொல்லிக்கொண்டார்.

இயேசு உருமாறிய நிகழ்வில், இரு அம்சங்களைக் கொஞ்சம் ஆழமாக அலசிப் பார்க்கலாம். ஒன்று, "அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது(லூக்கா 9:29) என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிட்டுள்ளார். செபம் ஒருவரது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி நாம் பலமுறை சிந்தித்திருக்கிறோம். செபத்தின் வல்லமையை, அதனால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் தவக்காலத்தில் ஓரளவாகிலும் நாம் உணரமுயல்வோம்.

இரண்டாவதாக, இயேசு உருமாறியபோது, மோசே, எலியா இருவருடன் பேசிக் கொண்டிருந்தார் என வாசிக்கிறோம். அவர்கள் என்ன பேசிக் கொண்டிருந்தனர்? "மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்(லூக்கா 9:31). ஒளிவெள்ளம் சூழ்ந்த உன்னதமான அந்நேரத்தில், பேசுவதற்கு வேறு எந்த விடயமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா? இயேசு, தன் மரணத்தை முன்னறிவித்ததால், மனமுடைந்து போயிருந்த சீடரின் கலக்கத்தை நீக்கத்தானே இந்த உருமாற்ற அனுபவம்? இந்நேரத்தில் மீண்டும் அதே மரணம் பற்றி பேச வேண்டுமா? நமக்கு ஒரு பாடம் இங்கே உண்டு.
புகழின் உச்சியில், மேகத்தில் மிதந்து வரும்போது, நம்மில் பலருக்கு, சூழ்நிலை மறந்துபோகும். தலைகனம் கூடிவிடும். அந்த கனம் தாங்காமல், நாம் மிதந்துவரும் மேகம் கிழிந்துபோகும், பலவந்தமாக பூமியில் விழவேண்டி வரும். அதற்கு மாறாக, என்னதான் புகழும் பெருமையும் நம்மை உச்சியில் ஏற்றி வைத்தாலும், ஏறிய ஏணியை மறக்கக்கூடாது. எவ்விடத்திலிருந்து ஏறிவந்தோம் என்பதையும் மறக்கக்கூடாது. புகழின் உச்சியில், இருக்கும்போது, பல்லக்கில் பவனி வருவதுபோல் உணர்ந்தாலும், அந்த பல்லக்கைத் தாங்கிவரும், இதுவரை நம்மைத் தாங்கிவந்த மற்றவரை மறக்காமல் வாழ்வது நல்லது. இந்தப் புகழ் உச்சி, பயணத்தின் முடிவல்ல, நாம் இன்னும் போகவேண்டிய தூரம் உள்ளது என்பதையும் மறக்கக்கூடாது. உருமாறிய இயேசு, உள்ளுணர்த்தும் பாடங்கள் இவைதான். கண்ணைப் பறிக்கும் ஒளியுடன், இயேசு உருமாறிய வேளையிலும், அவரது வாழ்வின் குறிக்கோளை, அவர் மேற்கொள்ள வேண்டிய சிலுவை மரணத்தை மறக்கவில்லை.

சொல்லப்போனால், அவர் தன் பணிவாழ்வின் துவக்கத்தில், ஒரு மலைமீது நின்று, 'பேறுபெற்றோர்' என்று பறைசாற்றியபோதே, அவர் கண்முன் கல்வாரி மலை தெரிந்திருக்க வேண்டும். இயேசுவின் மலைப்போழிவும், மரணமும் நிகழ்ந்த இருமலைகளையும் இணைத்து, பேராயர் ஃபுல்டன் ஷீன் (Fulton Sheen) என்ற புகழ்பெற்ற இறையியலாளர், 'கிறிஸ்துவின் வாழ்வு' (Life of Christ) என்ற நூலில் கூறியுள்ள கருத்துக்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன:
'பேறுபெற்றோர்' ஒலித்த மலையும், கல்வாரி மலையும் ஒன்றோடொன்று தொடர்புடையது. முதல் மலையில் ஏறி, 'பேறுபெற்றோர்' என்று கூறியவர், அதன் விலையாக, இரண்டாவது மலையிலும் ஏறவேண்டியதாயிற்று. 'பேறுபெற்றோர்' என்று போதித்ததும், சிலுவையில் அறையப்பட்டதும், பகலும், இரவும் போல், ஒன்றையொன்று தொடர வேண்டியதாயிற்று. மலைமீது ஏறி, 'பேறுபெற்றோர்' என்று இயேசு பறைசாற்றிய வேளையில், தன் மரண தண்டனை தீர்ப்புக்கு அவரே கையொப்பமிட்டார். மனிதர்கள் எவ்விதம் மகிழ்வாய் வாழமுடியும் என்று அவர் கூறிய வார்த்தைகளின் எதிரொலியாக, மனித சதையைத் துளைத்து, ஆணிகளை அறைந்த சுத்தியல் ஒலி அமைந்தது.

மலைப்பொழிவை வழங்கிய மலைக்கும், மரணத்தைச் சந்தித்த கல்வாரி மலைக்கும் நடுவே, இயேசு, மற்றொரு மலையில் உருமாற்றம் அடைந்தார். மலைப்பொழிவின் நேரத்தில் எப்படி தன் கல்வாரி மலையைக் கண்டாரோ, அதேபோல், உருமாற்றம் பெற்றபோதும், கல்வாரி மலையை இயேசு கண்டார். அதைப்பற்றி மோசே, எலியா ஆகியோருடன் பேசவும் செய்தார்.
இறை அனுபவம் எவ்வளவுதான் அற்புதமானதாக இருந்தாலும், அந்த அனுபவத்திலேயே முழு வாழ்வையும் கழித்துவிட முடியாது என்பதை இயேசு உருமாறிய நிகழ்வின் கடைசிப்பகுதி சொல்கிறது. பேசுவது என்னவென்று அறியாது, "நாம் இங்கேயே தங்கி விடலாம்" (லூக்கா 9:33) என்று சொன்ன பேதுருவின் கூற்றுக்கு "என் அன்பு மகன் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" (லூக்கா 9:35) என்று இறைவன் பதில் சொன்னார். அவ்விதம் செவிசாய்க்கும்போது, இறைமகன் இயேசு என்ன கூறுவார்? இங்கே தங்கியது போதும். வாருங்கள், மலையை விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம் என்று கூறுவார்.
கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான். ஆனால், கோவில்களிலேயே தங்கிவிட முடியாது. தங்கிவிடக் கூடாது. இறைவனைக் கண்ட, இறைவனைத் தரிசித்த அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் உலகிற்குள் செல்லவேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாதவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

மாற்றங்களைப் பற்றி சிந்திக்கும் வேளையில், தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழ் நாட்டில், மக்கள் வாழ்வை மையப்படுத்திய நல்ல மாற்றங்கள் உருவாகவேண்டும் என்று சிறப்பாக செபிப்போம்.
"இவ்வுலகில் நீ காண விழையும் மாற்றமாக, நீ முதலில் மாறு" “Be the change that you wish to see in the world.” என்று சொன்னவர், மகாத்மா காந்தி. ஒவ்வொரு மாற்றமும் நமக்குள் இருந்து உருவாக வேண்டும், ஆழ்ந்த அன்பு கொண்டால் அனைத்தும் மாறும், இறையன்பு வெறும் உணர்வாக இல்லாமல், நம் வாழ்வில் செயலாக மாறவேண்டும் என்று, இயேசுவின் உருமாற்றம் நமக்குச் சொல்லித் தரும் பல பாடங்களை இத்தவக் காலத்தில் நாம் கற்றுக்கொள்ள முயல்வோம்.