31 July, 2016

Stocking up or Sharing? பதுக்கிவைப்பதா? பகிர்ந்து தருவதா?...

The Rich Fool
18th Sunday in Ordinary Time

Once, Dr. Karl Menninger, the world-renowned psychiatrist, was talking to an unhappy but wealthy patient. He asked the patient what he was going to do with so much money. The patient replied, “Just worry about it, I suppose.” Menninger asked, “Well, do you get that much pleasure from worrying about it?” “No,” responded the patient, “but I get terrified when I think of giving some of it to somebody else.” Then Dr. Menninger went on to say something quite profound. He said, “Generous people are rarely mentally ill.”

The full quotation of Dr Karl Menninger goes like this: “Money-giving is a very good criterion of a person's mental health. Generous people are rarely mentally ill people”. I am tempted to add, à la ‘modern beatitudes’ – “Blessed are the generous, for they shall be sane.” On the other hand, those who spend their entire life trying to reap and heap treasures on earth, also heap upon themselves all sorts of sickness. Buy one, get one free… Buy greed and get sick free! We meet such a person in the parable of Jesus, popularly titled ‘the Rich Fool’. (Luke 12: 16-21)
In the eyes of God this person was utterly foolish, because he was focused on himself and was selfish to the core. While he was planning what to do with his harvested goods, he liberally used the “aggressively possessive” pronouns “I” (six times) and “my” (five times). He was possessed by his possessions, instead of possessing them. He had built a fortress of selfishness around him through which only his own sweet self could pass. This was a veritable hell, but he imagined it to be heaven – false heaven.

What prompted him to build this false heaven – this castle in the air? The fruits of the harvest. The heap of grains reaching up to the ceiling, had blinded him from all the stark reality beyond. Jesus begins this parable with a simple statement: “The land of a rich man brought forth plentifully…” Obviously this ‘plenty’ did not come out of the blue and did not come overnight. There were plenty of labourers involved in this process of production. Just imagine the scene of the labourers bringing in sacks of harvested grains to the barns. Those labourers must have been half-bent by the load they were carrying. Although they filled the barns of the rich man, they must have gone home on an empty stomach. None of these seem to bother the rich man one bit. All his attention was on the produce, not on the process and the people involved in the process! His thinking was short-circuited and warped. Naturally, God called him a ‘fool’. To the rich man, the grains simply came out of nowhere and he simply possessed them. He owed nothing to anyone! The grains filled not only his barns, but his mind and heart. There was no place for the people who were the cause and effect of this harvest.

When I was thinking how the harvested grains become the centre and the persons get ignored, my mind raced back to 2010 when I read some headlines in Indian newspapers: 
UP: Food meant for kids eaten by dogs - July 21, 2010
After UP, now food grains rot in Maharashtra - July 23, 2010
Not a single food grain should be wasted: Supreme Court - July 27, 2010
Here are the lead lines of the last headline:
New Delhi:  The Supreme Court has observed that not a single food grain should be wasted. In a strongly-worded ruling, the apex court has told the government that food grains are rotting and if you can't do anything about it, then distribute it among the poor. The court has also sought government's response on this.
Why all this fuss? Close to 3 million tonnes, let me repeat… 3 MILLION TONNES of food grains rot across India. This is not simply the Government’s inability to govern, but also an unpardonable injustice!

These news items need to be seen in a context. Only when they are seen in the context of hunger in India, we begin to realise how ‘foolish’ we – all of us in India and all of us around the globe – have been. We begin to understand how much we stand accused like the foolish rich man depicted in today’s Gospel.
These three news items are to be seen in the context of the starvation deaths that occur in India year after year. At least 6,000 children are dying every day… let me repeat, EVERY DAY in India due to hunger and malnutrition. This is how a TV programme begins… If you have time, please watch “30 Minutes: Small, Hungry & Dying” prepared by IBNLive.Com. This video is available on YouTube under the title “6000 children starve to death in India EVERY DAY.

2010 is not the only year when such an atrocity took place. In 2001 there was a similar injustice. “We produce enough and more food in our country. But, we have a faulty PDS - Public Distribution System”. These were the comments by Vajpayee, the Prime Minister of India in 2001. How did our Prime Minister get this ‘enlightenment’? That year India had a stock of 90 million tonnes of grain in government storage, while people in Kashipur District in Orissa were dying of hunger. What does it mean to have 90 million tonnes of food grains? It simply means that 20 lakh people can be fed for 2 years with that much food… Most of these food grains were rotting in the open and, people were dying in India. Have the tragedies of 2001 and 2010 taught us lessons? I am afraid, not! Three years back (2013) there was a news headline in Times of India: Food worth Rs 50 thousand crore goes waste in India every year (January 11, 2013). It is a sad irony that such a news item appeared just before the famous harvest festival – Pongal. Every harvest brings us enough and more food. Still the number of underfed people grows year after year! Why? We have a very warped value system. Topsy-turvy idea of justice!

To prove this, I would like to return to the news on the Supreme Court’s ruling in 2010: the apex court has told the government that food grains are rotting and if you can't do anything about it then distribute it among the poor. A closer look at this ruling, pains my heart… the way the court has placed the poor in this context. If you can’t do anything about storing the grains, then distribute them among the poor. The apex court of India placed more stress on storing and hoarding rather than attending to the starving millions. Since FCI was incapable of storing, the court had asked the government to feed ‘at least’ the poor… The poor, as usual, take the least place!
When will come a time when we can hear the Supreme Court of India (or the legal court anywhere in the world) to give a verdict as follows: “It is unjust to store food grains when millions are starving in the country. Hence, we order the government to distribute the food grains, first and foremost, to the starving millions.” The poor take the ‘first and foremost’ position and not the ‘at least’ position!

It’s so easy to blame the government, the court, the FCI, the selfish rich, the black marketers, the politicians, … this litany is endless. Blame them, and then what? Remember… when we point a finger at our neighbour, there are three more pointing at us.
What should we do? Where do we begin? Here is a small snippet from the life of Ernest Hemingway, the Nobel laureate. Ernest Hemingway had a very unique habit. On the first day of every New Year, he gave away some of his most precious possessions. And when people asked him why he did that, he would answer, “If I can give them away, then I own them. But if I can’t give them away, they own me.” Very simple and idealistic… or, simplistic?

Jesus, who gave this challenging parable for our reflection, has also given his warning: “Watch out! Be on your guard against all kinds of greed; a man's life does not consist in the abundance of his possessions.” (Luke 12: 15)


Rich Farmers
பொதுக்காலம் 18ம் ஞாயிறு

உலகப் புகழ்பெற்ற மனநல மருத்துவர் Karl Augustus Menningerஐத் தேடி ஒரு செல்வந்தர் வந்தார். என்னதான் முயன்றாலும் தன்னால் மகிழ்வாக வாழமுடியவில்லை என்று அந்தச் செல்வந்தர் சொன்னபோது, மருத்துவர் Menniger அவரிடம், "நீங்கள் சேர்த்துவைத்துள்ள செல்வத்தைக் கொண்டு என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார். அச்செல்வந்தர் ஒரு பெருமூச்சுடன், "ம்... என்ன செய்வது? என் சொத்துக்களைப்பற்றி கவலைப் பட்டுக்கொண்டே இருப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?" என்று சொன்னார். "இவ்விதம் கவலைப்படுவதில் நீங்கள் இன்பம் காண்கிறீர்களா?" என்று Menniger கேட்டதும், "இல்லவே, இல்லை... ஆனால், அதேநேரம், என் சொத்தில் ஒரு சிறு பகுதியையும் பிறருக்குத் தருவது என்று நினைத்தாலே பயத்தில் உறைந்து போகிறேன்" என்று பதில் சொன்னார் செல்வந்தர். அப்போது, மனநல மருத்துவர் Karl Menninger மிக ஆழமான ஓர் எண்ணத்தை வெளிப்படுத்தினார்: “Money-giving is a very good criterion of a person's mental health. Generous people are rarely mentally ill people.”"தாராள மனதுடையவர்கள் மனநோய்க்கு உள்ளாவதில்லை". இதைக் கேட்கும்போது, இயேசுவின் மலைப்பொழிவில் கூறிய பேறுபெற்றோர் வரிசையில் மற்றொரு குழுவினரையும் சேர்க்கத் தோன்றியது - "தாராள மனதுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நோயின்றி வாழ்வர்."

தன்னைச் சுற்றி செல்வத்தைக் குவித்துவைக்க வாழ்நாள் முழுவதும் உழைப்பவர்கள், நோய்களையும் கூடவே குவித்து வைக்கின்றனர். இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இத்தகையோரில் ஒருவரை, இன்றைய நற்செய்தியில் (லூக்கா 12: 13-21) நாம் சந்திக்கிறோம். அவரை இறைவன், 'அறிவிலியே' என்று அழைக்கிறார்.
இயேசு கூறிய 'அறிவற்ற செல்வன்' உவமையை நாம் ஆங்கிலத்தில் வாசிக்கும்போது, அங்கு இச்செல்வன் தனக்குத் தானே பேசிக்கொண்ட ஒரு சில வார்த்தைகளில் ‘I’ (நான்) என்ற ஒரெழுத்துச் சொல்லை ஆறுமுறையும், ‘my’ (எனது) என்ற ஈரெழுத்துச் சொல்லை ஐந்து முறையும் பயன்படுத்தியுள்ளார் என்பதைக் காணலாம். தன் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்ட அவர், தன்னைத் தாண்டிய ஓர் உலகத்தைக் காணமுடியாதவாறு பார்வையற்றுப் போனார்.
தங்களைச் சுற்றி தன்னலக் கோட்டைகளை எழுப்பி, அவற்றில் தேவைக்கு அதிகமாக செல்வங்களைக் குவிப்பவர்கள் நரகத்தை உருவாக்குகின்றனர். அந்த நரகத்தில் தங்களையேப் புதைத்துக்கொண்டு, அதை விண்ணகம் என்று தவறாகக் கற்பனை செய்து வாழும் செல்வர்கள்... பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களை 'அறிவிலிகள்' என்று அழைப்பதற்குப் பதில், வேறு எவ்விதம் அழைப்பது?

அறிவற்றச் செல்வனை இந்தப் பொய்யான விண்ணகத்தில் பூட்டியது எது? அவர் நிலத்தில் விளைந்த அறுவடை. இறைவன் தனக்குக் கொடுத்த நிலம் என்ற இயற்கைக் கொடை, அந்நிலத்தில் தங்கள் வியர்வையையும், இரத்தத்தையும் சிந்தி உழைத்த ஏழை மக்கள் ஆகிய அடிப்படை உண்மைகள் இணைந்ததால், அச்செல்வனின் இல்லம் அறுவடை பொருள்களால் நிறைந்தது. வீட்டை அடைந்த விளைபொருள்கள் மட்டுமே செல்வனின் கண்களையும் கருத்தையும் நிறைத்தனவே தவிர, அந்த அறுவடையின் அடிப்படை உண்மைகள் அவர் கண்களில் படவில்லை, எண்ணத்தில் தோன்றவில்லை.
அறுவடைப் பொருள்கள் செல்வனின் வீடு  வந்த சேர்ந்த காட்சியைச் சிறிது கற்பனை செய்துபார்ப்போம். தானிய மூட்டைகளைத் தங்கள் முதுகில் சுமந்து வந்து வீடு சேர்த்த தொழிலாளிகள், மீண்டும் நிமிர்ந்து செல்லவும் வலுவின்றி திரும்பியிருக்கக் கூடும். செல்வனின் களஞ்சியங்களை நிரப்பிய அவர்கள், தங்கள் வயிற்றை நிரப்ப முடியாமல் பட்டினியில் மயங்கி விழுந்திருக்கக் கூடும். இந்த ஊழியர்களின் ஊர்வலம் தன் கண்முன் நடந்ததைக் கண்டும், காண மறுத்தச் செல்வன், அவர்கள் கொண்டுவந்து சேர்த்த பொருள்களை - அதாவது, தானியங்களை மட்டுமே பார்க்கிறார். குவிந்துள்ள தானியங்களைப் பகிர்ந்து தருவதற்கு மறுத்து, அவற்றை இன்னும் பதுக்கி வைப்பதற்கு, தன் களஞ்சியங்களை இடித்து, பெரிதாக்கத் திட்டமிடுகிறார்.

மனித உழைப்பில் விளைந்த தானியங்கள், மனிதர்களைவிட அதிக மதிப்பு பெறுகின்றன என்பதை இந்த உவமை வழியே நான் உணர்ந்தபோது, சில ஆண்டுகளுக்கு முன் நான் வாசித்த ஒரு சில தலைப்புச் செய்திகள் மனதில் முள்ளென கீறின. இதோ, அச்செய்திகள்...
ஜூலை 21, 2010 - உத்திரப் பிரதேசத்தில் குழந்தைகளுக்குச் சேர வேண்டிய உணவை நாய்கள் சாப்பிடுகின்றன.
ஜூலை 23, 2010 - உத்திரப்பிரதேசத்தைப் போல, மஹாராஷ்ட்ராவிலும் உணவுத் தானியங்கள் அழுகிக் கிடக்கின்றன.
ஜூலை 27, 2010 - உச்ச நீதி மன்ற உத்தரவு: உணவு தானியங்களில் ஒன்று கூட இனி வீணாகக்கூடாது.
இச்செய்திகளை வாசித்தபோது, இன்றைய நமது நற்செய்தியில் கூறப்பட்டுள்ள அறிவற்ற செல்வன் செய்த அதே தவற்றை இந்திய நாடும், நாம் அனைவரும் செய்கிறோமோ என்ற கேள்வி எழுந்தது. "உணவு தானியங்களில் ஒன்று கூட வீணாகக் கூடாது. உங்களால் இந்தத் தானியங்களைச் சேமித்து வைக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள்" என்று 2010ம் ஆண்டு, ஜூலை 27 அன்று உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது.
யாருக்கு இந்த ஆணை? Food Corporation of India - FCI என்றழைக்கப்படும் இந்திய அரசின் உணவு நிறுவனத்திற்கு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஏன் இந்த ஆணை? FCIக்குச் சொந்தமான தானியக் கிடங்குகளில் 30 இலட்சம் டன் தானியங்கள் அழுகிக் கொண்டிருந்தன. சேமிக்கும் வசதிகள் இல்லை என்று கூறி, இந்திய உணவு நிறுவனம், தானிய மூட்டைகளை மண் தரைகளில், மழையில் அடுக்கி வைத்ததால், அவை அழுகிக் கொண்டிருந்தன.

இச்செய்திகளைத் தனித்துப் பார்க்கும்போது, இவற்றின் விபரீதம் நமக்குச் சரியாகப் புரியாது. இவற்றை இந்தியாவில் நிலவும் இன்னும் சில உண்மைகளோடு சேர்த்துப் பார்க்கும்போது, விபரீதம் புலப்படும். 2009ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும்... மீண்டும் சொல்கிறேன்... ஒவ்வொரு நாளும் 6,000 குழந்தைகள் உணவின்றி, பட்டினியால் இறந்தனர் என்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு காரணங்களால் தினமும் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல ஆயிரமாய் இருக்கும். ஆனால், உணவு இல்லை என்ற ஒரு காரணத்திற்காக இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 6,000. சேர்த்துவைக்க இடமில்லாமல் மழையில் குவிக்கப்பட்டு, அழுகிகொண்டிருக்கும் 30 லட்சம் டன் தானியங்கள் ஒரு புறம். பசியால், உணவில்லாமல் ஒவ்வொரு நாளும் இறக்கும் குழந்தைகள் மட்டும் 6,000 என்ற அதிர்ச்சித் தகவல் மறுபுறம்.

2001ம் ஆண்டு, இந்தியாவின் உணவுக் கிடங்குகளில் 9 கோடி டன் தானியம் முடங்கிக் கிடந்தது. 9 கோடி டன் என்பது எவ்வளவு தானியம்? இதை இப்படி புரிந்து கொள்ள முயல்வோம். இந்த உணவைக் கொண்டு, 20 இலட்சம் பேருக்கு இரண்டு ஆண்டுகள் உணவு கொடுக்கலாம். அவ்வளவு உணவு அது. இந்த அளவுக்கு அரிசியும், கோதுமையும் நமது கிடங்குகளில் குவிந்திருந்த அதே 2001ம் ஆண்டில், ஒரிஸ்ஸாவின் காசிப்பூர் பகுதியில் பல ஆயிரம் பேர் பட்டினியால் இறந்தனர். இந்தக் கொடூரத்தைப் பற்றி அப்போதையப் பிரதமர் வாஜ்பாயி அவர்கள், பாராளுமன்றத்தில் பேசியபோது, "நம் நாட்டில் தேவைக்கு அதிகமாக உணவை உற்பத்தி செய்கிறோம். ஆனால், உற்பத்தி செய்யப்படும் உணவு மக்களைச் சென்று சேர்வதில்லை. இதற்குக் காரணம், நம்மிடம் உள்ள தவறானப் பொதுப் பகிர்வு முறையே! (a faulty PDS - Public Distribution System)!" என்று கூறினார். உற்பத்தியில் குறைவில்லை ஆனால், பகிர்வதில்தான் பல குறைகள் என்று நாட்டின் பிரதமரே சொன்னார்.

நாட்டின் பிரதமர் நம்மிடம் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டியபின், நாம் ஏதும் கற்றுக்கொண்டோமா? "உணவு தானியங்களில் ஒன்று கூட இனி வீணாகக்கூடாது. ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள்" என்று உச்சநீதி மன்றம் அளித்த ஆணைக்குப் பின்னராகிலும் நாம் விழிப்படைந்துள்ளோமா என்று கேட்டால், இன்னும் இல்லை என்றுதான் வேதனையுடன் சொல்லவேண்டும். 2013ம் ஆண்டு வெளிவந்த ஒரு செய்தியில், ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 50,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு வீணாக்கப்படுகிறது என்று வாசித்தோம். இச்செய்தி நமது அறுவடைத் திருநாளான பொங்கலுக்கு முன்னர், சனவரி 11ம் தேதி வந்தது என்பது நமது வேதனையைக் கூட்டுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அறுவடைத் திருநாளன்று தேவையான அளவு தானியங்கள் அறுவடை செய்யப்படுவது நிச்சயம். ஆனால், அவை தேவையானவர்கள் வயிற்றுப் பசியைத் தீர்க்கிறதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்று சொல்லலாம்.

2010ம் ஆண்டு உச்ச நீதி மன்றம் உணவு நிறுவனத்திற்கு அளித்த அந்த ஆணையை மீண்டும் ஒருமுறை ஆழமாகச் சிந்திப்போம். "உணவு தானியங்களில் ஒன்று கூட வீணாகக் கூடாது. உங்களால் இந்தத் தானியங்களைச் சேமித்து வைக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள்" என்று உச்ச நீதி மன்றம் கொடுத்த அந்தத் தீர்ப்பை, உத்தரவைக் கேட்டு மனதில் ஆத்திரமும், வேதனையும் அதிகமானது. ஒரு நாட்டின் உச்சநீதி மன்றமே நீதியைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் ஒரு முயற்சி இது. வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சும் வார்த்தைகள் இவை.
சேமித்துவைக்க முடியவில்லை எனில், ஏழைகளுக்காவது கொடுங்கள் என்று ஒரு நாட்டின் நீதிமன்றம் கூறும்போது, அது 'சேமிப்புக்கு' முதலிடம் தருவதைக் காண முடிகிறது. சேர்த்துவைக்க, குவித்துவைக்க, பதுக்கிவைக்க உங்களுக்குத் திறன் இல்லையெனில், இருக்கவே இருக்கிறார்கள் ஏழைகள். அவர்களுக்காவது அதைத் தூக்கிப் போடுங்கள் என்ற பாணியில் ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம் பேசுவதை எவ்விதம் நீதி என்று அழைப்பது? இந்தப் பாணியில்தானே அறிவற்ற செல்வனும் குவித்துவைப்பதற்கு முதலிடம் தந்தார்?
இதற்கு மாறாக, உச்சநீதி மன்றம் பின்வருமாறு கூறியிருந்தால், அதை நாம் ஒரு நீதிமன்றம் என்று அழைக்க முடியும். "நாட்டில் இத்தனை கோடி மக்கள் உணவின்றி வாடும்போது, உங்கள் தானியக் கிடங்குகளில் அளவுக்கு அதிகமாக நீங்கள் தானியங்களைக் குவித்துவைப்பது தவறு. அதை முதலில் ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுங்கள்" என்று நமது நீதி மன்றங்கள் எப்போது சொல்லப் போகின்றன?

உச்சநீதி மன்றங்களை, உணவு நிறுவனங்களை, குற்றம் கூற நீண்டிருக்கும் நமது சுட்டுவிரல்களை நம் பக்கம் திருப்புவோம். நம் ஒவ்வொருவரிடமும் ஆழமாக வேரூன்றி, புரையோடிப் போயிருக்கும் பேராசைகளை, தேவைக்கும் அதிகமாகச் சேர்த்துவைக்கும் போக்கைப் பற்றி சிந்திக்க இன்று நமக்கு நல்லதொரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் அந்த செல்வன் நமக்கு இந்த வாய்ப்பைத் தந்திருக்கிறார்.

Ernest Hemingway என்பவர் நொபெல் பரிசு பெற்ற ஒரு பெரும் எழுத்தாளர். அவரிடம்  தனித்துவமிக்கதொரு பழக்கம் இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று, அவரிடம் உள்ள மிக விலையுயர்ந்த, அரிய பொருட்களை அவர் பிறருக்குப் பரிசாகத் தருவாராம். இதைப்பற்றி அவரிடம் நண்பர்கள் கேட்டபோது அவர், "இவற்றை என்னால் பிறருக்குக் கொடுக்கமுடியும் என்றால், இவற்றுக்கு நான் சொந்தக்காரன். இவற்றை என்னால் கொடுக்கமுடியாமல் சேர்த்துவைத்தால், இவற்றுக்கு நான் அடிமை." என்று பதில் சொன்னாராம்.
தன் சொத்துக்கு அடிமையாகி, அறிவற்றுப் போன செல்வன் உவமையைச் சொன்ன இயேசு தரும் எச்சரிக்கை இதுதான்: எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது. (லூக்கா நற்செய்தி 12: 15)


27 July, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 32

The Centurion’s Prayer lessons

Wounded Soldiers

ஒரு நாட்டின் இராணுவத்தில் வீரர்கள் சேரும்போது, தனித்தனி மனிதர்களாகத் தான் சேருகின்றனர். ஆனால், அவர்களுக்கு அளிக்கும் பயிற்சியின் முடிவில், இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், போரில் ஈடுபடும்போது, அவர்கள், ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட நண்பர்களாகி விடுவார்கள். வீரர்களிடையே உருவாகும் நட்புதான், போர்க்களங்களில் நிலவும் ஆபத்துக்களில், அவர்களுக்குப் பெரும் பலமாக, துணையாக அமைகிறது. தன் உயிரே போனாலும் பரவாயில்லை, அடிபட்ட தன் நண்பனை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று அவர்களிடையே நிலவும் ஆவல்... அதை, வெறி என்றும் சொல்லலாம், பல அற்புதக் கதைகளாக நம்மை அடைந்துள்ளது.

அத்தகைய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று:
போர்வீரர்கள் இருவர் நெருங்கிய நண்பர்கள். தங்கள் இராணுவப் பணியில் உயிர் நிலையற்றது என்பதை ஒவ்வொரு நாளும் பார்த்து வந்ததால், அவர்கள் நட்பு ஆழப்பட்டது. ஒருமுறை நடைபெற்ற போரில், தங்கள் முகாமிலும், எதிரி முகாமிலும் ஏகப்பட்ட உயிர் இழப்புகள். ஒரு நாள் மாலை, அன்றைய போர் முடிந்து முகாம் திரும்பிய வீரர், தன் நண்பன் திரும்பாததை உணர்ந்தார். தளபதியிடம் சென்று: "சார், என் நண்பன் திரும்பவில்லை. நான் மீண்டும் போர்க்களம் செல்கிறேன்" என்றார். அன்றையப் போரில் பலரை இழந்த வேதனையிலும், வெறுப்பிலும் இருந்தார் தளபதி. "ஏற்கனவே, பலரை நான் இன்று இழந்துவிட்டேன். உன் நண்பன் இந்நேரம் இறந்திருப்பான். நீ போவது வீண்" என்றார்.
தளபதி சொன்னதைக் கேளாமல், வீரர் மீண்டும் போர்க்களம் சென்றார். இரண்டு மணி நேரம் கழித்து, தன் நண்பனின் இறந்த உடலைச் சுமந்தபடி, இவரும் இன்னும் பல இடங்களில் அடிபட்டு, முகாமுக்குத் திரும்பினார். அவரைக் கண்டதும், தளபதிக்குக் கோபம் தலைக்கேறியது. "முட்டாளே, நான் ஏற்கனவே சொன்னேனே... கேட்டாயா? உன் நண்பனின் சடலத்தைப் பார்க்கப் போய் நீயும் சாக வேண்டுமா? அங்கு போனதால் என்ன சாதித்தாய்?" என்று தளபதி கத்தினார்.
"நான் போனபோது என் நண்பன் உயிரோடுதான் இருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் கண்களைத் திறந்து 'நீ எப்படியும் என்னைத் தேடி வருவேன்னு எனக்குத் தெரியும்.' என்று சொன்னான். இதைச் சொன்னபிறகு அவன் உயிர் பிரிந்தது" என்று சொன்னார், அந்த வீரர்.
வாழும்போது அவர்களிடையே மலர்ந்த நட்பு, நண்பனின் இறப்பில் மீண்டும் ஆழமாய் உயிர் பெற்றது. போர்க்களத்தில் உண்டாகும் நட்பு, விசுவாசம் ஆகியவற்றைக் கூறும் இது போன்ற பல சம்பவங்களை நாம் கேட்டிருப்போம்.

"போருக்குச் செல்லும் ஒவ்வொரு நூறு பேரிலும், பத்து பேர் போர்க்களத்திற்கு சென்றிருக்கவே கூடாது, எண்பது பேர், எதிரிகளின் தாக்குதலுக்கு இலக்காக மாறுவர், மீதி பத்துபேரில், ஒன்பது பேர் உண்மையாகவே போரிடுபவர்கள். மீதமுள்ள அந்த ஒருவர், அந்த நூறுபேரில் ஒருவர் மட்டுமே, உண்மையான வீரர், அவர் மற்றவர்களை போர்க்களத்திலிருந்து உயிரோடு திரும்பக் கொணர்வார்" என்று சொன்னவர், கி.மு. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெராக்கிளீட்டஸ் (Heraclitus) என்ற கிரேக்க மேதை. நூறுபேரில் ஒருவரானஅந்த வீரரைப்பற்றி, ஹெராக்கிளீட்டஸ் அவர்கள் கூறிய சொற்கள், நாம் சிந்தித்துவரும் நூற்றுவர் தலைவரைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. உரோமையரான நூற்றுவர் தலைவர், தன் பணியாளர் மீது அன்பும், மதிப்பும் கொண்டிருந்தார், யூதர்கள் மீது மதிப்பு கொண்டு, அவர்களுக்கு ஒரு தொழுகைக்கூடம் கட்டித்தந்தார் என்ற அம்சங்களை, சென்ற தேடலில் நாம் சிந்தித்தோம். இன்று, அந்த நூற்றுவர் தலைவர், நோயுற்றிருந்த தன் பணியாளர் சார்பில், இயேசுவுக்கு விடுத்த அழைப்பை நம் தேடலின் மையமாக்குவோம்.

அன்பும், பண்பும் கொண்ட நூற்றுவர் தலைவர், இயேசுவை, தன் வீட்டுக்கு வரவழைக்கப் பயன்படுத்திய முறை சிந்திக்கத் தகுந்தது. தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு சிறு படை, தேர் இவற்றை அனுப்பி, இயேசுவை தன் வீட்டுக்கு கொண்டு வர அவர் முயற்சித்திருக்கலாம். அவர் அப்படி செய்திருந்தால், இயேசு சென்றிருப்பாரா? அதிகாரத்தை விளம்பரம் செய்வோரிடமிருந்து எப்போதுமே விலகி நின்ற இயேசு, நூற்றுவர் தலைவர், தன்னை அதிகாரத் தோரணையில் அழைத்திருந்தால், போயிருக்க மாட்டார்.
கவிஞர் தாகூர் எழுதிய, ஒரு கவிதையின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. "இறைவா, உமக்கு என் செபம் இதுவே" ("This is my prayer to Thee") என்று ஆரம்பிக்கும் தாகூரின் வேண்டுதல்களில் ஒன்று: "தலைகனம் மிகுந்தோரின் அதிகாரத்திற்கு முன், நான் ஒரு போதும் முழந்தாள் படியிட்டு பணியாத சக்தியைத் தாரும்." (“Give me the strength never to... bend my knees before insolent might”) இத்தகைய மனநிலையைக் கொண்ட இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டிருந்த நூற்றுவர் தலைவர், தனது யூத நண்பர்கள் வழியே தன் அழைப்பை அனுப்புகிறார். விண்ணப்பம் யார் வழியாகச் சென்றாலும் பரவாயில்லை. தன் பணியாளர் நலம் பெற வேண்டும்... அதுதான் முக்கியம்.
இயேசு அவர் வீட்டுக்கு போகும் வழியில், நூற்றுவர் தலைவர் இன்னும் சில நண்பர்கள் வழியே அனுப்பிய செய்தி, அர்த்தமுள்ள பாடங்களைச் சொல்லித் தருகின்றன. அந்த வார்த்தைகளை மீண்டும் அசை போடலாம்: ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.

அருள் பணியாளர் என்ற முறையில், பல்வேறு இல்லங்களிலிருந்து எனக்கு வரும் அழைப்புக்களை எண்ணிப் பார்க்கிறேன். இந்த அழைப்புக்களில் பல்வேறு உணர்வுகள் வெளிப்படுவதை உணர்ந்திருக்கிறேன். "எங்க வீட்டுக்கெல்லாம் நீங்க வருவீங்களா?" என்று ஒரு சிலர் என்னிடம் சொல்லும்போது, அதை, உண்மையான ஏக்கம் நிறைந்த கேள்வி என்பதா, அல்லது, மறைமுகமான கேலி என்பதா, என்று புரியாமல் தடுமாறியிருக்கிறேன்.
நூற்றுவர் தலைவர் அனுப்பிய செய்தியில் மறைமுகமான, போலியான தாழ்ச்சி கிடையாது. அவர் தலைவராக இருந்ததால், பிறரது நேரத்தின் அருமை அவருக்குத் தெரிந்திருந்தது. எனவே, தான் கூப்பிட்ட குரலுக்கு இயேசு ஓடி வந்து, பணிவிடை செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதையும் தன் கூற்றில் சொல்லிக் காட்டுகிறார்.
நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் 'செல்க' என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் 'வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து 'இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்.

நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் வழியே அனுப்பிய செய்தியைக் கேட்ட இயேசு அவரைக் குறித்து வியப்புற்றார் என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிடுகிறார். (லூக்கா 7:9) நூற்றுவர் தலைவர் நிகழ்வைப் பதிவுசெய்துள்ள நற்செய்தியாளர்கள் மத்தேயு, லூக்கா இருவருமே, இயேசு வியப்புற்றார் என்பதைக் குறிப்பிட, "Thaumazo" என்ற கிரேக்கச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சொல், நான்கு நற்செய்திகளிலும், இன்னும் ஒரே ஒரு முறை மட்டுமே, அதாவது, மாற்கு நற்செய்தி 6ம் பிரிவில் மட்டுமே, பயன்படுத்தப்பட்டுள்ளது என்று, விவிலிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மாற்கு நற்செய்தி 6ம் பிரிவில், இயேசு தன் சொந்த ஊருக்குச் சென்ற நிகழ்வு விவரிக்கப்பட்டுள்ளது. தன் சொந்த ஊரின் தொழுகைக்கூடத்தில் இயேசு கற்பிக்கத் துவங்கியதும், அங்கிருந்தோரில் பலர் அவரை வியந்து பாராட்டினர். வேறு சிலரோ, "’இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?’ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்" (மாற்கு 6:3) என்று கூறும் நற்செய்தியாளர் மாற்கு, "அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு இயேசு வியப்புற்றார்" (மாற்கு 6:6) என்று இப்பகுதியின் இறுதியில் குறிப்பிடும்போது, "Thaumazo" என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

தன் சொந்த ஊரில், தன் சொந்த இனத்தவரின் நம்பிக்கையின்மையைக் கண்டு 'வியப்புற்ற' இயேசு, வேற்றினத்தவரான நூற்றுவர் தலைவரின் நம்பிக்கையைக் கண்டு வியப்புற்றார். அதேவண்ணம், வேற்றினத்தைச் சேர்ந்த கானானியப் பெண்ணின் நம்பிக்கையைக் கண்டு இயேசு பாராட்டினார் என்பதை, நற்செய்தியாளர்கள் மத்தேயு (15:21-28), மாற்கு (7:24-30) இருவரும் குறிப்பிட்டுள்ளனர். இயேசுவால் நலமடைந்த பத்து தொழுநோயாளர்கள் பற்றி லூக்கா நற்செய்தி 17ம் பிரிவில், (லூக்கா 17:11-19) நாம் வாசிக்கிறோம். நலமடைந்த பத்துபேரில், ஒரே ஒருவர் மட்டுமே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி சொன்னார். அவர் ஒரு சமாரியர். இஸ்ரயேல் மக்களால் வெறுத்து இகழப்பட்ட சமாரிய இனத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே திரும்பி வந்ததைக் கண்ட இயேசு, அவரைப் பார்த்து, "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!" என்றார். (லூக்கா 17:17-18)

இவ்வாறு இஸ்ரயேல் இனத்தைச் சேராத பலரின் உண்மையான நம்பிக்கையைக் கண்டு வியக்கும் இயேசு, இந்த நிகழ்வில், நூற்றுவர் தலைவரின் நம்பிக்கையைக் கண்டு வியக்கிறார்.
நூற்றுவர் தலைவர், தன் நண்பர்கள் வழியே அனுப்பியிருந்த செய்தியில், போலியான தாழ்ச்சி வெளிப்படவில்லை. தன்னைப் பற்றி, தனது சக்தியைப் பற்றி நன்கு அறிந்த ஒருவரே, அடுத்தவரின் சக்தியைப் பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். தன்னைக் குறித்தும், தன் சக்தியைக் குறித்தும் தெளிவு இல்லாதவர்கள், அடுத்தவரின் சக்தியை போட்டியாக, ஆபத்தாக எண்ணுவர். தன்னைக் குறித்தும், இயேசுவைக் குறித்தும் தெளிவான எண்ணங்கள் கொண்ட நூற்றுவர் தலைவர், தன் நண்பர்கள் வழியே அனுப்பிய செய்தியை, நாம் இவ்வாறு பொருள் காண முடியும்:
"ஐயா, நீங்க என் வீட்டுக்கு வந்துதான் என் ஊழியரைக் குணமாக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. உங்க சக்திய நான் மனசார நம்புறேன். நீங்க இருந்த இடத்திலேயே ஒரு வார்த்தை சொன்னாப் போதும். அந்த வார்த்தையின் சக்தியை, பலனை நாங்க உணர முடியும். ஏனெனில், வார்த்தைகளின் சக்தியை உணர்ந்தவன் நான். நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் கேட்டு நிறைவேற்றும் பணியாளர்கள் உள்ளனர்."

நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.
என்று நூற்றுவர் தலைவர் சொன்ன வார்த்தைகள், பல நூற்றாண்டுகளாக, நாம் கொண்டாடிவரும் திருப்பலியின் ஒரு முக்கிய வேண்டுதலாக அமைந்துவிட்டது.
ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.
நம்பிக்கையை வெளிப்படுத்தும் இச்சொற்கள், பொதுவாக நாம் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை அளிக்கின்றன. நாம் பேசும் ஒவ்வொரு சொல்லும், பொருள் உள்ளதாக, அதுவும் பிறருக்கு உதவும் சொல்லாக, நலம் வழங்கும் சொல்லாக இருந்தால், இவ்வுலகம் முழுமையான நலம் பெறும்.

உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், நாம் வார்த்தைகளை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்கலாம். கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு, பின்னர் வருந்துவதில் பயனில்லை.
இயேசுவின் ஒவ்வொரு சொல்லுக்கும் வலிமை இருந்தது. நாம் பேசும் சொற்களுக்கு ஓரளவாகிலும் வலிமை உள்ளதா? அல்லது, நாம் பேசுவதில் பெரும்பாலானவை போலியான, வெறுமையான வார்த்தை விளையாட்டுக்கள்தாமா?
ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.
ஒரு வார்த்தை சொல்லும்; நான் நலமடைவேன்.
இயேசுவின் குணமளிக்கும் வார்த்தைகளைப் போல, நமது சொற்களும் நலமளிக்கும், மற்றவரைக் கட்டி எழுப்பும் சொற்களாக இருக்க இறைவனை வேண்டுவோம்.

இறுதியாக ஓர் எண்ணம் – போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் நடைபெறும் 31வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள, ஜூலை 27, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்கிறார். திருத்தந்தையின் பயணமும், உலக இளையோர் நாள் நிகழ்வுகளும் எவ்வித இடையூறும் இன்றி, நலமாக நிறைவுபெற இறைவனை மன்றாடுவோம்.


24 July, 2016

The ABC of prayer செபத்தின் அரிச்சுவடி


Parable of the Friend at Midnight


17th Sunday in Ordinary Time

Aspirations, Blessings, Confusions, Desires, Expectations, Frustrations… The ABC of prayer, rather, the ABCDEF… etc. of prayer. For a person who believes, all these human experiences are part and parcel of prayer. But, we are aware that prayer does not become a part and parcel of our lives that easily. More often we grapple with many questions about prayer…
Why to pray at all? Why pray when nothing seems to happen? What to pray for? How to pray? Questions and more questions. The disciples of Jesus too had their questions about prayer. They were waiting for an opportune moment to clarify them with the Master. Such a moment was not hard to find, since Jesus was often engaged in prayer… any time of the day or night, any place. Today’s Gospel talks about one such moment. One day Jesus was praying in a certain place. When he finished, one of his disciples said to him, "Lord, teach us to pray, just as John taught his disciples." (Luke 11: 1)
It looks as if Jesus was just waiting for a request like this. He began straightaway. He did not give them a treatise on prayer. He gave them, rather, a lovely prayer, a story and a gentle warning.
(Luke 11: 1-13)
“When you pray, say: 'Father, hallowed be your name’…”. These were the opening lines of Jesus’ lesson on prayer. He went on to give them one of the most popular prayers known universally. If the present population of the world is around 7 billion, one can easily guess that at least 3 billion would be able to recite this prayer by heart. I am not only thinking of Christians, but also others who have had the ‘Christian’ influence, say, for instance, those non Christian children who have been educated in Christian schools... Such is the popularity of this prayer.
After teaching them this universal prayer, Jesus tells them a parable to illustrate that there is no when-and-where for prayer. Even midnights and closed doors need not deter us from praying… That was the nucleus of the lovely parable of the ‘midnight friend’!

I am sure most of us have heard quite many stories about prayer. I would like to share two stories which are my favourites. Both tell us that children answer most of our questions on prayer with facile innocence.
Last week I took my children to a restaurant. My six-year-old son asked if he could say grace. As we bowed our heads he said, "God is great and God is Good. Let us thank Him for the food, and I would even thank you more if mom gets us ice cream for dessert. And Liberty and justice for all! Amen!"
Along with the laughter from the other customers nearby, I heard a woman remark, "That's what's wrong with this country. Kids today don't even know how to pray. Asking God for ice-cream! Why, I never!"
Hearing this, my son burst into tears and asked me, "Did I do it wrong? Is God mad at me?" As I held him and assured him that he had done a terrific job and God was certainly not mad at him, an elderly gentleman approached the table. He winked at my son and said, "I happen to know that God thought that was a great prayer." "Really?" my son asked. "Cross my heart."
Then in theatrical whisper he added (indicating the woman whose remark had started this whole thing), "Too bad she never asks God for ice cream. A little ice cream is good for the soul sometimes."
Naturally, I bought my kids ice cream at the end of the meal. My son stared at his for a moment and then did something I will remember the rest of my life. He picked up his sundae and without a word walked over and placed it in front of the woman. With a big smile he told her, "Here, this is for you. Ice cream is good for the soul sometimes and my soul is good already."(Author Unknown, Rainbow Garden)

What to ask for in prayer can be a tricky question. Can a person ask God for ice cream? Such doubts would be cleared if one looks at the Lord’s Prayer. There is a petition asking for the Kingdom of God and another petition asking for daily bread. Most of the petitions in this prayer are simple and down-to-earth... Give us food. Give us a heart that forgives. Lead us not into temptations. Deliver us from harm... Unless we become like children, it is hard to pray this way. 

The First Reading from Genesis (18: 20-32) deals with another question: namely, how to pray. Abraham holds a tête-à-tête with God. It sounds more like a bargain in a market place… 50, 45, 40… down to 10. Since Abraham was sincere and serious in saving people, God was willing to go the distance with him. I look at this whole episode as one prolonged prayer. It looks as if God was also struggling with Abraham in this ‘prayer’.
Any struggle to establish goodness in the human family, whether it takes the obvious form of prayer or not, can be considered a prayer since cries of anguish and sincere desires that rise from the soul are heard by God.

Here is another story (abridged) about prayer-intentions.
 … Then the big night came. With his blue pinewood derby in his hand and pride in his heart, Gilbert and I headed to the big race. Once there, my little one's pride turned to humility. Gilbert's car was obviously the only car made entirely on his own. All the other cars were a father-son partnership, with cool paint jobs and sleek body styles made for speed. A few of the boys giggled as they looked at Gilbert's, lopsided, wobbly, unattractive vehicle…
As the race began it was done in elimination fashion… One by one the cars raced down the finely sanded ramp. Finally it was between Gilbert and the sleekest, fastest looking car there. As the last race was about to begin, my wide eyed, shy eight year old asked if they could stop the race for a minute, because he wanted to pray. The race stopped. Gilbert hit his knees clutching his funny looking block of wood between his hands. With a wrinkled brow he set to converse with his Father. He prayed in earnest for a very long minute and a half. Then he stood, smile on his face and announced, "Okay, I am ready."
As the crowd cheered, a boy named Tommy stood with his father as their car sped down the ramp. Gilbert stood with his Father within his heart and watched his block of wood wobble down the ramp with surprisingly great speed and rushed over the finish line a fraction of a second before Tommy's car. Gilbert leaped into the air with a loud "Thank you" as the crowd roared in approval.
The Scout Master came up to Gilbert with microphone in hand and asked the obvious question, "So you prayed to win, huh, Gilbert?" To which my young son answered, "Oh, no sir. That wouldn't be fair to ask God to help you beat someone else. I just asked Him to make it so I don't cry when I lose."
Children seem to have a wisdom far beyond us. Gilbert didn't ask God to win the race, he didn't ask God to fix the outcome, Gilbert asked God to give him strength in the outcome. (Author Unknown, Source Unknown)

Gilbert, the eight year old, knew what to expect from his Father in heaven. Probably, many of us do not have this clarity. Hence, Jesus gives us the final words of today’s Gospel: 
"So I say to you: Ask and it will be given to you; seek and you will find; knock and the door will be opened to you. For everyone who asks receives; he who seeks finds; and to him who knocks, the door will be opened. Which of you fathers, if your son asks for a fish, will give him a snake instead? Or if he asks for an egg, will give him a scorpion? If you then, though you are evil, know how to give good gifts to your children, how much more will your Father in heaven give the Holy Spirit to those who ask him!" (Luke 11: 9-13)

Our closing thoughts go to Krakow, Poland. From July 25, Monday, till July 31, next Sunday, the World Youth Day Celebrations are held in Krakow. “Blessed are the merciful, for they shall obtain mercy” is the main theme of these celebrations. Pope Francis will join the youth on July 27. We pray that the Good Lord protects and guides the youth (around 2 million of them) as well as the Holy Father during WYD 2016.

World Youth Day 2016

பொதுக்காலம் - 17ம் ஞாயிறு

ஆசைகள், அச்சங்கள், ஏக்கங்கள், கனவுகள், திட்டங்கள், இவை அனைத்தும், மனிதராய்ப் பிறந்த நம் அனைவரின் வாழ்க்கையோடு கலந்துவிட்ட உண்மைகள். மத நம்பிக்கை கொண்டவர்கள், இவற்றை, இறைவனிடம் விண்ணப்பங்களாக அனுப்ப முயல்வர். இந்த விண்ணப்பங்களை நாம் பொதுவாக செபங்கள் என்று அழைக்கிறோம். செபிப்பது, அனைவருக்கும், இயல்பான, எளிதான அனுபவம் அல்ல. இதில் போராட்டங்கள் பல நிகழும். குறிப்பாக, நாம் எழுப்பும் விண்ணப்பங்களுக்கு எதிர்பார்த்த பதில்கள் கிடைக்காதபோது, பல்வேறு கேள்விகள் நம்மைச் சூழும். ஏன் செபிப்பது? எதற்காக செபிப்பது? எப்போது, எங்கே, எப்படி செபிப்பது?... என்ற கேள்விகள் நம்மில் எழுகின்றன. செபத்தைப் பற்றிய கேள்விகளுக்கு, குழந்தைகள், தங்களுக்கே உரிய வழியில் சில பதில்கள் தருவதை நாம் காணமுடியும்.
ஒரு தாய், தன் குழந்தைகளுடன் உணவு விடுதிக்குச் சென்றார். சாப்பிடும் முன் அவர்களது ஆறு வயது சிறுவன், தான் செபிக்க விரும்புவதாகச் சொன்னான். பின் கண்களை மூடி, செபத்தை ஆரம்பித்தான். "இறைவா, நீர் நல்லவர், உம்மால் எல்லாம் செய்யமுடியும். நீர் எங்களுக்குத் தரப்போகும் உணவுக்காக நன்றி. உணவுக்குப் பின் அம்மா வாங்கித் தரப்போகும் ஐஸ் க்ரீமுக்கு இன்னும் அதிக நன்றி... ஆமென்" என்று செபித்து முடித்தான். ஐஸ் க்ரீம் கிடைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில், அவன் இந்த செபத்தை கொஞ்சம் சப்தமாகவே சொன்னதால், அந்த உணவு விடுதியில் மற்ற மேசைகளில் அமர்ந்திருந்தவர்களும் சிறுவனின் செபத்தைக் கேட்டு சிரித்தனர்.
அடுத்த மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு முதியவர், "ஹும்... இந்த காலத்துப் பிள்ளைங்களுக்கு, செபம் சொல்லக்கூடத் தெரியல. கடவுளிடம் ஐஸ் க்ரீம் கேட்டு ஒரு செபமா?" என்று உரத்தக் குரலில் சலித்துக்கொண்டார். இதைக் கேட்டதும், செபம் சொன்னக் சிறுவனின் முகம் வாடியது. "அம்மா, நான் சொன்ன செபம் தப்பாம்மா?" என்று கண்களில் நீர் மல்கக் கேட்டான். அம்மா அவனை அணைத்து, "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை" என்று தேற்ற முயன்றார்.
மற்றொரு மேசையிலிருந்து இன்னொரு வயதானப் பெண்மணி அந்தக் குழந்தையிடம் வந்து, கண்களைச் சிமிட்டி, "நான் கேட்ட செபங்களிலேயே இதுதான் ரொம்ப நல்ல செபம்" என்றார். பின்னர், தன் குரலைத் தாழ்த்தி, அச்சிறுவனிடம், "பாவம், அந்தத் தாத்தா. அவர் கடவுளிடம் இதுவரை ஐஸ் க்ரீம் கேட்டதேயில்லை என்று நினைக்கிறேன். அப்பப்ப கடவுளிடம் ஐஸ் க்ரீம் கேட்டு வாங்கி சாப்பிடுவது, மனசுக்கு ரொம்ப நல்லது" என்று சொல்லிச் சென்றார்.
சிறுவன் முகம் மலர்ந்தான். தன் உணவை முடித்தான். அவன் வேண்டிக் கொண்டதைப் போலவே, உணவு முடிந்ததும், அம்மா ஐஸ் க்ரீம் வாங்கித் தந்தார். சிறுவன் அந்த ஐஸ் க்ரீம் கிண்ணத்தை வாங்கியதும், தன் செபத்தைக் குறை கூறிய அந்தத் தாத்தா இருந்த மேசைக்கு எடுத்துச் சென்றான். பெரிய புன்முறுவலுடன், "தாத்தா, இது உங்களுக்கு. இதைச் சாப்பிட்டால், மனசுக்கு நல்லது" என்று சொல்லி, தாத்தாவுக்கு முன் ஐஸ் க்ரீமை வைத்துவிட்டுத் திரும்பிவந்தான். அங்கிருந்தவர்கள் எல்லாரும் கைதட்டி மகிழ்ந்தனர்.

எதைப்பற்றியும் செபிக்கலாம், கடவுளிடம் எதையும் கேட்கலாம் என்று சொல்லித் தருவதற்கு, குழந்தைகள் சிறந்த ஆசிரியர்கள் என்பதை மறுக்கமுடியாது. ஐஸ் க்ரீம் வேண்டும் என்ற சில்லறைத்தனமான வேண்டுதல்களையும் கேட்கலாம்; உலகில் நீதியும், அமைதியும் நிலவவேண்டும் என்ற உன்னதமான வேண்டுதல்களையும் கேட்கலாம். கேட்பது, சில்லறைத்தனமானதா, அல்லது, உன்னதமானதா என்பதை அந்த விண்ணப்பத்தை எழுப்பும் உள்ளம்தான் தீர்மானிக்க வேண்டும்.

செபிக்கக் கற்றுத்தாருங்கள் என்று தன்னை அணுகிய சீடருக்கு, செபத்தைப்பற்றிய நீண்டதொரு இறையியல் விளக்கத்தை இயேசு சொல்லித் தரவில்லை. அவர் சொல்லித் தந்ததெல்லாம் ஒரு செபம், ஒரு கதை, ஒரு நம்பிக்கைக் கூற்று. இயேசு சொல்லித் தந்த ஒரே செபமான 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே' என்ற செபம், இன்றைய நற்செய்தியாக (லூக்கா 11: 1-13) நம்மை வந்தடைந்துள்ளது. இச்செபத்தைக் கொஞ்சம் ஆய்வு செய்தால், ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளலாம். கடவுளின் அரசு வரவேண்டும் என்ற உன்னதமான கனவுடன் ஆரம்பமாகும் இச்செபத்தில், எங்களுக்கு உணவைத் தாரும், எங்கள் குற்றங்களை மன்னித்தருளும், மன்னிப்பது எப்படி என்று சொல்லித் தாரும், தீமைகளிலிருந்து காத்தருளும்... என்று, இயேசு சொல்லித்தரும் பல விண்ணப்பங்கள், வாழ்க்கைக்குத் தேவையான, மிக, மிக எளிமையான, விண்ணப்பங்கள். எளிமையையும், உன்னதத்தையும் இணைத்து செபிக்க, நமக்கு குழந்தை மனம் தேவை.

இன்றைய முதல் வாசகம் (தொடக்க நூல் 18: 20-32) செபத்தின் வேறு சில அம்சங்களை உணர்த்துகிறது. செபம் என்பது, கடவுளுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல். சில வேளைகளில், இந்த உரையாடல், உரசலாகி, உஷ்ணமாகி, வாக்குவாதமாகவும் மாறும். சோதோம் நகரைக் காப்பாற்ற, ஆபிரகாம், இறைவனுடன் பேரம் பேசும் இந்த முயற்சி, ஒரு செபம். 50 நீதிமான்கள் இருந்தால் இந்த நகரைக் காப்பாற்றுவீர்களா? என்று ஆரம்பித்து, 45, 40 பேர் என்று படிப்படியாகக் குறைத்து, இறுதியில் 10 பேர் என்ற அளவுக்கு இறைவனை இழுத்து வருகிறார், ஆபிரகாம். சந்தையில் நடக்கும் பேரம் போல இது தெரிந்தாலும், ஒரு நகரைக் காப்பாற்றவேண்டும் என்ற ஆபிரகாமின் ஆதங்கம், இதை ஒரு செபமாக மாற்றுகிறது.
நல்லதொன்று நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ஆபிரகாம் நச்சரிக்கிறார். இறைவனும், பொறுமையாய், அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுக்கிறார். இந்தப் பேரம் பேசும் போட்டியில், யார் வென்றது, யார் பெரியவர், கடவுளா, ஆபிரகாமா? என்ற கேள்விகளெல்லாம் அர்த்தமற்றவை. நல்லது நடக்கவேண்டுமென மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும், அவை, செப முயற்சிகளாய் இருந்தாலும் சரி, பிற முயற்சிகளாய் இருந்தாலும் சரி, அந்த நல்லெண்ணமே அம்முயற்சிகளைச் செபமாக மாற்றும் வலிமை பெற்றவை. தன்னை மையப்படுத்தாமல், மற்றவர்களை மையப்படுத்தி ஆபிரகாம் மேற்கொள்ளும் இந்த செபத்தை, பரிந்துரை செபம் (Intercessory Prayer) என்றழைக்கிறோம்.
நீதிமான்களை முன்னிறுத்தி ஆபிரகாம் இப்பரிந்துரை செபத்தை மேற்கொள்வது, மேலும் ஓர் உண்மையை நமக்கு உணர்த்துகிறது. தீமைகளை இவ்வுலகில் கட்டவிழ்த்துவிடும் சக்திகள் வெற்றிபெறுவதுபோல் தோன்றினாலும், அவற்றை முறியடிக்க, ஒரு சில நீதிமான்களின் நன்மைத்தனம் போதும் என்ற நம்பிக்கையை, ஆபிரகாமின் பரிந்துரை செபம் நமக்கு உணர்த்துகிறது.

பரிந்துரை செபம், இயேசு கூறும் உவமையிலும் இடம் பெறுகிறது. நள்ளிரவில் உதவிகேட்டு வந்த நண்பர், தன்னுடைய பசியைத் தீர்க்க தன் நண்பர் வீட்டின் கதவைத் தட்டவில்லை. மாறாக, தன்னை நம்பி வந்த மற்றொரு நண்பரின் பசியைப் போக்கவே அந்த அகால நேரத்தில், அடுத்தவர் வீட்டுக் கதவைத் தட்டினார்.
இந்த உவமைக்கு முன்னர் இயேசு சொல்லித் தந்த அந்த அற்புத செபத்துடன் இந்த நண்பரின் முயற்சியை இணைத்துச் சிந்திக்கலாம். அந்த அழகிய செபத்தில், 'எங்கள் அனுதின உணவை எங்களுக்குத் தாரும்' என்று வேண்டுகிறோம். 'என்னுடைய உணவை எனக்குத் தாரும்' என்ற தன்னல வேண்டுதல் அல்ல இது. இது ஒரு சமுதாய வேண்டுதல். அந்த வேண்டுதலின் ஓர் எடுத்துக்காட்டாக, தன் நண்பரின் உணவுத் தேவையை நிறைவேற்ற, நள்ளிரவு என்றும் பாராது, உதவி கேட்டுச் செல்லும் ஒருவரை இயேசு தன் உவமையில் சித்திரிக்கிறார்.
நமது சொந்தத் தேவைகளை நிறைவு செய்ய, பிறரிடம் உதவிகேட்டுச் செல்வது கடினம் என்றாலும், நமது தேவை, நம்மை உந்தித் தள்ளும். ஆனால், அடுத்தவர் தேவைக்கென பிறரது உதவியைத் தேடிச் செல்வதற்கு, கூடுதல் முயற்சி தேவை. அதுவும், மூடப்பட்ட கதவு, உதவி தர மறுக்கும் அடுத்த வீட்டுக்காரர் என்ற தடைகளையெல்லாம் தாண்டி, இந்த உதவியைக் கேட்பதற்கு, மிக ஆழமான உறுதி தேவை.
அருளாளர் அன்னை தெரேசா நம் நினைவுக்கு வருகிறார். அவர், பிறரிடம் உதவி கேட்டுச் சென்றதெல்லாம், வறியோரை, நோயுற்றோரை வாழ வைப்பதற்கு. ஒருமுறை அவர் ஒரு கடை முதலாளியிடம் தன் பணிக்கென தர்மம் கேட்டு கையை நீட்டியபோது, அந்த முதலாளி, அன்னையின் கையில் எச்சில் துப்பினார். அன்னை அதை தன் உடையில் துடைத்துவிட்டு, கடை முதலாளியிடம் சொன்னார்: "எனக்கு நீங்கள் தந்த அந்தப் பரிசுக்கு நன்றி. இப்போது, என் மக்களுக்கு ஏதாவது தாருங்கள்" என்று, மீண்டும் அவரிடம் கையேந்தி நின்றாராம். அந்த முதலாளி, இதைக் கண்டு அதிர்ச்சியில் நிலை குலைந்து, மனம் வருந்தியதாகவும், அன்னைக்கு உதவி செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

உலகில், ஒவ்வொரு நாளும், பல கோடி மக்கள் பசியோடு படுத்துறங்கச் செல்கின்றனர். அவர்கள் பசியைப் போக்க நாம் முயற்சிகள் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அடுத்தவர் பசியைப் போக்க நம்மிடம் ஒன்றும் இல்லாதபோதும், மனம் தளராது மற்றவர் உதவியை நம்மால் நாட முடிந்தால், இறை அரசு இவ்வுலகில் வருவது உறுதி.
உலகில் உள்ள ஒவ்வொருவரும் வயிறார உண்ணும் அளவுக்கு இவ்வுலகில் உணவு ஒவ்வொரு நாளும் தயாராகிறது. ஆயினும், அந்த உணவைப் பகிர்ந்துகொள்ள மனமில்லாமல், நம்மில் பலர், மீதமுள்ள உணவை குப்பையில் எறிந்துவிட்டு, கதவுகளை மூடி, படுத்துவிடுகிறோம். குப்பையில் எறியப்படும் உணவு, வறியோரிடமிருந்து திருடப்பட்ட உணவு என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொன்னது, ஓர் எச்சரிக்கையாக இவ்வேளையில் ஒலிக்கிறது.
"எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது..." (லூக்கா 11:7) என்று, காரண காரியங்களோடு, இவ்வுவமையில் சொல்லப்படும் மறுப்பை, பல வழிகளில் நாமும் சொல்லி, நம்மையே சமாதானப்படுத்தி, உறங்கியிருக்கிறோம்.
இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள மற்றோர் ஆபத்தையும் இங்கு சிந்திப்பது நல்லது. பகிர்ந்து தரவோ, அடுத்தவருக்கு உதவவோ நமக்கு மனமில்லை என்பதோடு நாம் நிறுத்திவிடாமல், நம் பிள்ளைகளின் முன்னிலையில் இவ்வகையில் நாம் சொல்வது, அவர்களுக்கும் தன்னலப் பாடங்களைச் சொல்லித் தர வாய்ப்பாக அமைகிறது.

பசியைப் போக்கும் முயற்சிகள் எடுக்கும் உலகம் ஒருபுறம். அந்த முயற்சிகளுக்குச் செவி கொடுக்காமல், கதவுகளை மூடும் உலகம் மறுபுறம். உலகை அழிக்கும் ஆயுதங்களுக்கு நாம் செலவிடும் தொகையில் ஆயிரத்தில் ஒரு பகுதியைப் பயன்படுத்தினால் போதும்... உலக மக்களின் பசியை முற்றிலும் துடைக்கலாம்... செல்வம் மிகுந்த நாடுகளில் செல்ல மிருகங்களின் உணவுக்கென செலவாகும் தொகையைக் கொண்டு, பல ஏழை நாடுகளில் மக்களின் பசியை நீக்கலாம்...
இத்தகைய ஒப்புமைப் புள்ளிவிவரங்களை நாம் இன்று முழுவதும் பட்டியலிடமுடியும். அது நமது நோக்கமல்ல. இயேசு கூறும் இந்த உவமையில் நாம் யாராக வாழ்கிறோம்? அடுத்தவர் பசியைப் போக்க முயற்சிகள் மேற்கொள்ளும் மனிதராக வாழ்கிறோமா? பிறர் பசியைப் போக்கும் வாய்ப்புக்கள், நம் வாசல் கதவைத் தட்டினாலும், கதவை மூடிவிட்டு, உறங்கும் மனிதராக வாழ்கிறோமா? என்ற கேள்வியை ஓர் ஆன்மீக ஆய்வாக மேற்கொள்வோம். மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் நாம் உறங்கிக் கொண்டிருந்தால், மற்றவர் தேவைகளை நிறைவேற்ற, மனக்கதவைத் திறந்து, மனிதராக முயல்வோம்.

இறுதியாக ஓர் எண்ணம்... ஜூலை 25, இத்திங்கள் முதல், ஜூலை 31ம் தேதி முடிய, போலந்து நாட்டின் கிரக்கோவ் நகரில் 31வது உலக இளையோர் நாள் நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்" (மத். 5:7) என்ற மையக் கருத்துடன் நடைபெறும் இந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், ஜூலை 27ம் தேதி முதல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கலந்துகொள்வார். ஏறத்தாழ 20 இலட்சம் இளையோர் கூடி வருவர் என்று எதிர்பார்க்கப்படும் இந்த இளையோர் கொண்டாட்டங்கள் எவ்வித இடையூறும் இன்றி நிறைவு பெறவேண்டும் என்று மன்றாடுவோம்.