27 September, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 41

Stop the nonsense
Image Source: Resistance Through Art

செப்டம்பர் 28, இப்புதனன்று, உலகின் பல நாடுகளில், 'பசியிலிருந்து விடுதலை பெறும் நாள்' (Freedom from Hunger Day) சிறப்பிக்கப்படுகிறது. பசி என்ற அரக்கனை, இவ்வுலகிலிருந்து, முற்றிலும் விரட்டியடிக்கமுடியும் என்பதை உலகிற்கு உணர்த்த, 2006ம் ஆண்டு முதல், இந்த உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த முயற்சியைத் துவக்கியவர்கள் உருவாக்கியுள்ள ஒரு வலைத்தளத்தில், (https://www.freedomfromhunger.org) உலகில் பசி நிலவுவதற்கு 5 காரணங்களைக் கூறியுள்ளனர். முதல் காரணம், நம் அனைவருக்கும் தெரிந்த காரணம், அதாவது, வறுமை. 2வது காரணம், ஆயுதம் தாங்கிய போர்கள் என்று கூறப்பட்டுள்ளது. போர்களின் விளைவாக உருவாகும் பசிக்கொடுமையையும், இவ்வுலகை ஆக்கிரமித்துள்ள போர்வெறி என்ற தீய ஆவியை எவ்விதம் விரட்ட முடியும் என்பதையும் இன்றைய விவிலியத் தேடலில் சிந்திக்க முயல்வோம்.
இன்று நடைபெற்று வரும் போர்களில், உள்ளத்தை துன்புறுத்தும் ஓர் அநீதி தொடர்ந்து இடம்பெறுகிறது. அதாவது, இப்போர்களைத் துவக்கியவர்கள், தொடர்பவர்கள், எவ்வித பாதிப்பும் இன்றி, பாதுகாப்பாக வாழ்கின்றனர். ஆனால், இந்த போருக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள், குறிப்பாக, குழந்தைகள், உணவின்றி, நீரின்றி, வீடின்றி, உறவுகளைப் பறிகொடுத்து வாழ்கின்றனர். ஏமன் நாட்டில் நிலவிவரும் போரினால், குழந்தைகள், ஊட்டச்சத்து ஏதுமின்றி துன்புறுகின்றனர் என்ற செய்தி சென்ற வாரம் வெளியானது. சிரியாவில், பக்ரீத் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம், ஒரு சில நாட்களே நீடித்தது என்பதையும், தற்போது அங்கு வல்லரசுகளுக்கிடையே உருவாகியுள்ள மோதல்களால், அலெப்போ நகரில் நீர் வசதி முற்றிலும் தடைபட்டுள்ளது என்றும் அறிகிறோம்.

போரின் விளைவாக உணவின்றி, நீரின்றி மக்கள் துன்புறுவதைச் சிந்திக்கும்போது, 'பசி, ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது' என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு சில மாதங்களுக்கு முன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கூறியது, நினைவுக்கு வருகிறது. இவ்வாண்டு, ஜூன் 13ம் தேதி, ஐ.நா.வின், உலக உணவு திட்டம் (World Food Programme) அலுவலகத்தில், திருத்தந்தை வழங்கிய உரையில், போருக்கும், பசிக்கும் உள்ள தொடர்பு குறித்து, தெளிவாகவும், கடுமையாகவும் பேசினார்:
"இன்று, உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்துவரும் மோதல்களைத் தீர்க்க, பேச்சு வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதைவிட, போர்க்கருவிகளே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசுகள், போராடும் குழுக்கள், பன்னாட்டு அமைப்புக்கள், அனைத்தும், ஆயுதங்களை அதிகம் சார்ந்திருப்பதால், போர்க்கருவிகள், நாடுவிட்டு நாடு கொண்டு செல்லப்படுவதற்கு தடைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், போர் நிலவும் நாடுகளில், உணவுப் பொருள்களைக் கொண்டு செல்வதற்குத் தடைகள் விதிக்கப்படுகின்றன.
போரிடும் குழுக்களின் கொள்கைகளில் உள்ள வேறுபாட்டினால், ஐ.நா.அவை, செஞ்சிலுவை சங்கம் போன்ற உலக அமைப்புக்கள், உணவு, மற்றும் மருத்துவ உதவிகளைக் கொண்டு செல்வதற்குத் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், இலாபம் ஒன்றையே கொள்கையாகக் கொண்டுள்ள ஆயுத வர்த்தகர்கள் உருவாக்கும் போர்க்கருவிகள், நாடுகளிடையே சுதந்திரமாக வலம் வருகின்றன.
இதன் விளைவாக, போர் என்ற அரக்கனுக்கு தொடர்ந்து உணவு வழங்கப்படுகிறது; ஆனால், அவ்வரக்கனின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவு கிடைப்பதில்லை. சில வேளைகளில், மக்களின் பசியே ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது" என்று திருத்தந்தை தன் உரையில் கூறினார்.

கெரசேனர் பகுதியில், ஒரு மனிதர், தீய ஆவிகளால் ஆக்ரமிக்கப்பட்டதைப் போல், இன்றைய உலகில், அரசுகளும், அடிப்படைவாதக் குழுக்களும், அவற்றிற்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களும் போர் வெறி என்ற தீய ஆவியால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளனர் என்று, எழுத்தாளரும், அருள் பணியாளருமான ஜான் டியர் (John Dear) என்பவர் கூறியுள்ளார். "Expelling the demons of war" அதாவது, "போர் என்ற பேய்களை விரட்டுதல்" என்ற தலைப்பில், அவர் எழுதியுள்ள கட்டுரை, நாம் கடந்த சில வாரங்களாகச் சிந்தித்து வரும் புதுமையை, மற்றொரு கோணத்தில் சிந்திக்க உதவுகிறது.
அடுத்த நாடுகளை ஆக்கிரமிக்க, தங்கள் நாட்டு இராணுவத்தை அனுப்பும் வல்லரசுகளுக்கு, இறைவன் தரும் பதில்போல இப்புதுமை அமைந்துள்ளது என்றும், அந்நிய நாடான உரோமையின் ஆக்கிரமிப்பில் துன்புற்ற இஸ்ரயேல் நாட்டில் பிறந்து, வளர்ந்து, பணியாற்றிய இயேசு, உரோமைய ஆக்கிரமிப்பிற்கு தரும் பதிலே, தீய ஆவியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஒருவரை விடுவித்த இப்புதுமை என்றும் அருள்பணி ஜான் டியர் அவர்கள் இக்கட்டுரையில் கூறியுள்ளார்.

இப்புதுமை நிகழ்ந்த சூழலை தன் கட்டுரையின் துவக்கத்தில் அழகாகச் சித்திரித்துள்ளார், ஆசிரியர். இயேசு, இப்புதுமையை, தனக்குப் பழக்கமான கலிலேயப் பகுதியில் ஆற்றவில்லை. ஆனால், 'கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர் பகுதி'யில் (மாற்கு 5:1) ஆற்றுகிறார். இயேசு, தன் சீடர்களுடன் இப்பகுதிக்குப் புறப்பட்டுச் சென்றதை, மாற்கு நற்செய்தி, 4ம் பிரிவில், (4:3541) வாசிக்கிறோம்.
"அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்" (மாற்கு 4,35) என்று இயேசு அழைத்ததும், சீடர்கள் மனதில் கலக்கம் தோன்றியிருக்க வேண்டும். பழக்கமில்லாத இடம், வேற்றினத்தைச் சேர்ந்த மக்கள் என்ற எண்ணங்கள், சீடர்களிடம் கலக்கத்தை உருவாக்கியிருக்க வேண்டும். சீடர்களின் உள்மன போராட்டத்தின் எதிரொலிபோல், அவர்கள் மேற்கொண்ட கடல் பயணத்தில், புயலொன்று எழுந்தது (மாற்கு 4: 37-38). சீடர்களின் உள்ளங்களிலும், கலிலேயக் கடலிலும் உருவான புயல்களை அடக்கி, இயேசு, கெரசேனர் பகுதியில் காலடி வைக்கிறார்.

இயேசு கெரசேனர் பகுதிக்கு வந்துள்ளார் என்பதை, மக்கள் உணர்வதற்குமுன், தீய ஆவி உணர்ந்தது. கல்லறையிலிருந்து வெளியேறிய அந்த மனிதர் வழியே, தீய ஆவி இயேசுவைச் சந்தித்தது. தான் ஆக்கிரமித்துள்ள ஒரு பகுதியில் 'இயேசுவுக்கு என்ன வேலை?' (மாற்கு 5:7) என்ற கேள்வியுடன், தீய ஆவி, அவரை, அங்கிருந்து விரட்ட முயன்றது. இயேசுவுக்கும், தீய ஆவியால் ஆக்கிரமிக்கப்பட்ட மனிதருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில், தன் பெயர், 'இலேகியோன்' என்று தீய ஆவி அறிமுகப்படுத்தியது. இது குறித்து, அருள்பணி ஜான் டியர் அவர்கள் அழகான விளக்கம் அளித்துள்ளார். 'இலேகியோன்' என்பது, உரோமைப் படையின் 6000 போர் வீரர்கள் கொண்ட பெரும் படைப்பிரிவு என்பதை அறிவோம். அந்த 'இலேகியோனை' கெரசேனர் பகுதியிலிருந்து வெளியேற்றும் புதுமை வழியே, இயேசு, உரோமைய ஆக்கிரமிப்பை அகற்றுகிறார் என்று கட்டுரையாளர் விளக்கம் தந்துள்ளார்.
அம்மனிதரிலிருந்து வெளியேறிய ஆவிகள், பன்றிகளுக்குள் நுழைந்து, அவை கடலில் மூழ்கின என்பதைக் குறித்து பேசும் அருள்பணி ஜான் டியர் அவர்கள், யூதேயா பகுதியை ஆக்கிரமித்திருந்த உரோமைப் படையின் சின்னமாக இருந்தது 'பன்றி' என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பன்றிகள் கடலில் மூழ்கியதைப்போல், உரோமைய ஆக்கிரமிப்பும் அழியும் என்பதை இயேசு இப்புதுமையில் வெளிப்படுத்தியுள்ளார். ஆக்கிரமிக்கும் எந்த சக்தியையும் விரட்டியடித்து, மக்களை விடுவிப்பதே, இயேசு கொணர்ந்த இறையரசின் முக்கியப்பணி என்பது, இப்புதுமையில் வெளியானது என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இப்புதுமையினால் ஒருவர் குணம் பெற்றதையும், ஏறத்தாழ 2000 பன்றிகளை தாங்கள் இழந்ததையும் கண்ட மக்கள், இயேசுவை தங்கள் பகுதியைவிட்டு போய்விடும்படி விடுத்த விண்ணப்பத்தை, கட்டுரை ஆசிரியர், ஜான் டியர் அவர்கள், இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்.
ஆயுத உற்பத்தி, அணு ஆயுத ஆய்வு ஆகிய கொடுமைகள் வழியே, 'போர்' என்ற பேய், இவ்வுலகை இவ்வளவு தூரம் ஆக்கிரமிப்பதைத் தடுக்க, பல்வேறு அமைப்புக்கள் முயன்றுவருகின்றன என்பதை, அருள்பணி ஜான் டியர் அவர்கள், எடுத்துக்காட்டுகளுடன் கூறியுள்ளார். ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களே, அந்த முயற்சிகளுக்கு எதிராக செயலாற்றுவது, இயேசுவை தங்கள் பகுதியை விட்டு போய்விடுமாறு கூறும் கெரசேனர் மக்களை ஒத்திருக்கிறது என்று அருள்பணி ஜான் டியர் அவர்கள், தன் கட்டுரையின் இறுதியில் குறிப்பிடுகிறார். இவ்வுலகை ஆக்கிரமித்துள்ள 'போர்' என்ற தீய ஆவியை விரட்டி, இறைவன் உலகை குணமாக்கும் புதுமைக்கு ஒரு முன்னோடியாக, கெரசேனர் பகுதியில் தீய ஆவிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒருவரை, இயேசு குணமாக்கியப் புதுமையைக் காணலாம் என்று அருள்பணி ஜான் டியர் அவர்கள் தன் கட்டுரையை நிறைவு செய்கிறார்.

'பசியிலிருந்து விடுதலைபெறும் நாளை'யும் போரையும் இணைத்து, நம் தேடலைத் துவக்கினோம். அதையொத்த எண்ணங்களுடன் நம் தேடலை நிறைவு செய்வோம். அரசுத் தலைவர்களாக பணியாற்றிய இருவர், போர்க்கருவிகளையும், பசியையும் இணைத்துப் பேசியிருப்பது, நம் சிந்தனைகளைத் தூண்டுகின்றது:
"செல்வமும், அதிகாரமும் மிகுந்தவர்களிடம், தொழில்நுட்பம் மிகுந்த ஆயுதங்கள் குவியும்போது, எழுத்தறிவற்றவர்கள், நோயுற்றோர், வறியோர், பசித்திருப்போர் அனைவரையும் இவ்வாயுதங்கள் கொல்லமுடியும். ஆனால், எழுத்தறிவின்மை, நோய், வறுமை, பசி ஆகியவற்றை இவ்வாயுதங்கள் கொல்லமுடியாது" என்று சொன்னவர், கியூபா நாட்டின் அரசுத் தலைவராகப் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ள ஃபிடெல் காஸ்ட்ரோ (Fidel Castro).
"உருவாக்கப்படும் ஒவ்வொரு துப்பாக்கியும், இயக்கப்படும் ஒவ்வொரு போர்க்கப்பலும், ஏவப்படும் ஒவ்வொரு இராக்கெட்டும், இறுதியில் பார்க்கப்போனால், ஒரு திருட்டுதான். உணவின்றி பசித்திருப்போரிடமிருந்தும், ஆடையின்றி குளிரில் நடுங்கிக் கொண்டிருப்போரிடமிருந்தும் திருடப்பட்டவை" என்று சொன்னவர், அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர் டுவைட் ஐசனோவர் (Dwight Eisenhower).

வறியோரிடமிருந்து திருடப்படுவதைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரைகளில் ஒருமுறை பேசியபோது, இவ்வுலகில் உணவு இல்லை என்பது, பசிக்குக் காரணம் அல்ல, மாறாக, நாம் வீசியெறியும் உணவே இவ்வுலகின் பசிக்கு முக்கியக் காரணம் என்று கூறியத் திருத்தந்தை, "குப்பையில் எறியப்படும் உணவு, வறியோரிடமிருந்து திருடப்பட்ட உணவு" என்பதை வலியுறுத்திக் கூறினார்.
தனிப்பட்ட முறையில், நாம் ஒவ்வொருவரும் குப்பையில் எறியும் உணவு, வறியோரின் பசி போக்க பயன்படுத்தப்பட வேண்டிய உணவு. அதேபோல், போர்க்களம் என்ற குப்பைமேட்டை உருவாக்கி, அங்கு, ஆயுதங்கள் என்ற குப்பையை, அரசுகள், அளவுக்கதிகமாக குவித்து வருவதால், வறியோரின் பசி தீராமல் உள்ளது.
போர் என்ற தீய ஆவியால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள அரசுகளும், ஆயுத உற்பத்தியாளர்களும், தங்கள் சுயநல பசியிலிருந்து மீண்டு வரவேண்டுமென்று மன்றாடுவோம். போர் என்ற அரக்கனின் கட்டுக்கடங்காத பேராசைப் பசியினால், மக்களை வாட்டி வதைக்கும் உண்மையான உடல் பசியைப் போக்க, செப்டம்பர் 28 கடைபிடிக்கப்படும் 'பசியிலிருந்து விடுதலைபெறும் நாள்' நம் அனைவருக்கும் தெளிவையும், துணிவையும் வழங்க இறைவனிடம் வேண்டுவோம்.


Dwight Eisenhower – Every gun that is made…


25 September, 2016

Relying on riches… Depending on the Divine… செல்வத்தைச் சார்ந்து... தெய்வத்தைச் சார்ந்து...



The Rich Man and Lazarus - Eugène Burnand

26th Sunday in Ordinary Time

‘Wall Street’ is a Hollywood movie released in 1987. At one point in the movie, the hero Gordon Gekko says: Greed is good. Greed is right, greed works. Greed clarifies, cuts through, and captures the essence of the evolutionary spirit. Greed, in all of its forms; greed for life, for money, for love, knowledge has marked the upward surge of mankind.
In 2010 another movie – possibly a sequel – was released with the title: ‘Wall Street: Money Never Sleeps’. In this movie, the same hero says: Someone reminded me I once said, 'Greed is good'. Now it seems that it's legal. Greed has been idolized in various forms and at present it seems to have been legitimized. Such a trend seems to have seeped through to the younger generations.

In May, 2013, Time magazine published a lead article with the title: ‘Millennials: The Me Me Me Generation’ written by Joel Stein. It is an interesting article on the ‘Selfie’ generation that seems to have become more and more narcissistic. If I speak more on this generation, many of you will ‘trash’ me as ‘too old’. Hence, I stop here and turn my attention in the opposite direction. In contrast to this narcissistic generation, let me present the story of an altruistic person – Albert Schweitzer!
30 year old Albert, already a Doctor in Philosophy and Theology, was at the peak of his career as a professor in Vienna. He was recognized as one of the best concert organists in all Europe. Living in Vienna, the ‘City of Music’, he was a well sought after artist. At the age of 30, he left all these and pursued medicine, with a single purpose of going to Africa to help the poor. When people asked him why, the only answer he could give was that the change was wrought by the famous parable of Jesus – The Parable of the Richman and Lazarus. Not only in Albert, but in thousands of heroic persons, this parable has brought about radical changes. This Sunday, we are invited to reflect on this parable. We hope that this parable stirs us out of our comfort zones!  

We have heard of the different stages of human growth as proposed by Sigmund Freud, the first of which is the ‘oral stage’. During the first months the infant’s palms are always closed. Whatever we extend, whether it is our finger or a toy, the infant grabs it and takes it to the mouth. For the infant the whole world is there to be consumed. With much care, we try to wean the child from this stage. We begin teaching things like sharing… “Tom, give the candy to Jerry… No, don’t grab everything… Let your sister play with the toy for a while…” We tend to ‘preach’ to the child, while we practice very different things. When a child sees the contradiction between what the adults say and do, it tends to follow the deed rather than the word. For not helping our children grow up to be caring, sharing adults, all of us need to stand accused. When we stand accused in the court of the world, the judgement from above will sound similar to the words used by Amos in today’s first reading:
Amos 6: 1, 3-7
Woe to you who are complacent in Zion, and to you who feel secure on Mount Samaria
You lie on beds inlaid with ivory and lounge on your couches. You dine on choice lambs and fattened calves…
You drink wine by the bowlful and use the finest lotions, but you do not grieve over the ruin of Joseph. Therefore you will be among the first to go into exile; your feasting and lounging will end.

Greed creates an introverted look so that we never grow beyond our baby years, namely, the ‘oral stage’. Jesus warns us of this ‘all-for-me’ attitude in the famous parable – the Richman and Lazarus. 
The detailed analysis of this parable will be quite long. We shall confine our reflections only to the first few lines where Jesus introduces the two characters – the rich man and Lazarus.
Luke 16: 19-21
There was a rich man, who was clothed in purple and fine linen and who feasted sumptuously every day.  And at his gate lay a poor man named Lazarus, full of sores,  who desired to be fed with what fell from the rich man's table; moreover the dogs came and licked his sores.

We can identify eight elements in the above lines, three to introduce the rich man and five to introduce Lazarus.
Rich man         
  • A rich man
  • Clothed in purple and fine linen
  • Feasted sumptuously every day
Poor man
  • A poor man named Lazarus
  • Lying at his gate
  • Full of sores
  • Desired to be fed with what fell from the rich man's table        
  • Dogs came and licked his sore
Combining these eight elements, one can draw three comparisons which can teach us valuable lessons. The first comparison is identification given to the rich and the poor men. The very opening lines of this parable must have shocked the Pharisees. Jesus mentions a nameless rich man and a beggar named Lazarus. Of all the parables of Jesus, this is the only parable where the character in the story gets a proper name. For a Jew, and more especially for a Pharisee, being rich is a blessing from God, while being poor is a curse from God. Jesus subverted this equation. He made the rich man a non-entity and made the beggar a real person with a proper name… and, what a name! Jesus gives this character the name of one of his close friends, Lazarus.
Some commentators have mentioned that the rich man lost his name and identity due to the wealth he had amassed. He probably found much more happiness in being called a ‘millionaire’ rather than ‘Mr.So-and-So’. Since he relied on his wealth so much, he lost his true identity. On the other hand, Lazarus (meaning, ‘God helps’), got his identity by relying on God.
Having lived in religious communities for many years now, I can safely say that in many of the houses, the names of the poor workers don’t get registered in the minds of the community members and most of the time the workers are called simply as ‘Hey, you’. Jesus calling the beggar as Lazarus is a whiplash to many of us!

The second comparison between the rich man and Lazarus runs a dagger through the heart. The rich man was dressed in purple linen, while Lazarus was covered with sores. Purple, scarlet, red… all shades of royalty. While the rich man clothed himself with royalty in an artificial way, Lazarus was regal in a very different way. He was possibly a distant image of Jesus, covered with sores, hanging on the cross, which carried the title: INRI - Jesus of Nazareth, the King of the Jews.

The third comparison is what brought trouble to the rich man. He was feasting sumptuously everyday… and therefore had to face hell. Seems like an unwarranted and disproportionate punishment. The rich man was not punished for feasting in luxury, but feasting in luxury while there was a beggar at his gate. Actually, one can argue that the rich man was a gentle person… If he wanted, he could have easily got rid of Lazarus. On second thoughts, I feel that if the rich man had done something like that, his punishment would have been less. Is this puzzling? Let me explain. If the rich man had taken some effort to get rid of the beggar, he would have at least established the fact that he had acknowledged the presence of Lazarus as a human person. The rich man in this parable did nothing positive or negative about Lazarus. He simply ignored him. For him, Lazarus was no more than a piece of furniture in his house… Perhaps, the furniture in his house would have got enough attention by being wiped with a rag. Lazarus was laid out at his gate like a piece of rag. For the rich man, Lazarus was no more than the dust under his feet. We don’t usually pay attention to the dust under our feet unless the speck of dust soars high and gets into our eyes. This is exactly what happened in the second part of the parable. Lazarus, the dust, was carried to the bosom of Abraham and became the yardstick by which the rich man’s eternity was measured.

Ignoring a human person is the worst type of treatment one can give. The rich man was guilty of this and he had to face the consequence. Far too many Lazaruses are laid out in our life’s journey. Let’s tread carefully! Treat them with care and respect!

 
 
Albert Schweitzer – Quotes
 பொதுக்காலம் - 26ம் ஞாயிறு

30 வயது நிறைந்த ஓர் இளைஞர், இறையியல், மெய்யியல் இரண்டிலும் முனைவர் பட்டம் பெற்றிருந்தார். ஆஸ்திரியாவின் புகழ்பெற்ற வியன்னாவில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். 'ஆர்கன்' என்ற இசைக்கருவியை இசைப்பதில் அதீதத் திறமை பெற்றிருந்த அவ்விளைஞரை, பல இசைக்குழுக்கள் தேடிவந்தன. மேற்கத்திய இசையின் தலைநகரம் என்றழைக்கப்படும் வியன்னாவில், அவ்விளைஞர் வாசிப்பதைக் கேட்க கூட்டம் அலைமோதும்.
புகழின் உச்சியில் வாழ்ந்த அவ்விளைஞர், அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு, தன் 30வது வயதுக்குப்பின் மருத்துவம் பயின்றார். ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஓர் ஊரில், ஒரு மருத்துவமனையை உருவாக்கி, வறியோருக்குப் பணிகள் ஆற்றினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அற்புத பணியாற்றி, பிறரன்பிற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்த இந்த மாமனிதரின் பெயர், Albert Schweitzer. தன்னலமற்ற இவரது பணியைப் பாராட்டி, 1952ம் ஆண்டு, உலக அமைதி நொபெல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
பேராசிரியராக, இசை மேதையாக வாழ்ந்துவந்த ஆல்பர்ட் அவர்கள், ஆப்ரிக்கா சென்று பணியாற்ற முடிவெடுத்தபோது, பல கேள்விகள் எழுந்தன. இயேசு கூறிய 'செல்வரும் இலாசரும்' என்ற உவமையே தனக்குள் இந்த மாற்றத்தை உருவாக்கியது என்று ஆல்பர்ட் அவர்கள் பதில் கூறினார். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வர், ஐரோப்பிய மக்கள் என்றும், இலாசர், ஆப்ரிக்க மக்கள் என்றும் தான் உணர்ந்ததால், இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறினார். Albert Schweitzer அவர்களின் வாழ்வில் மட்டுமல்ல, இன்னும் பல்லாயிரம் உள்ளங்களில், அடிப்படையான, புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்கக் காரணமாக இருந்த 'செல்வரும் இலாசரும்' என்ற உவமை, நமக்குள் மாற்றங்களை உருவாக்க, இந்த ஞாயிறு வழிபாட்டில், நம்மைத் தேடி வந்துள்ளது.

செல்வத்திற்கு அடிமையாகி, பணிவிடை செய்வதன் ஆபத்தை, சென்ற வாரம், நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை வழியாக இயேசு கூறினார். அந்த உவமையின் இறுதியில், 'கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது' (லூக்கா 16: 13) என்று கூறிய இயேசு, "நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்போது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்" (லூக்கா 16: 9) என்ற அறிவுரையையும் தந்தார்.

நிலையான உறைவிடங்களில், அதாவது, நிலைவாழ்வில் நம்மை வரவேற்கக் காத்திருக்கும் நண்பர்கள் யார்? அவர்கள், நம்மைச் சுற்றி வாழும் ஏழைகளே என்பதை, 'செல்வரும் இலாசரும்' என்ற உவமை வழியாக இயேசு இன்று கூறியுள்ளார். ஒரு வைரத்தைப்போல், வெவ்வேறு வண்ணத்தில் ஒளி தரும். இவ்வுவமையின் முழு அழகை உணர்வதற்கு நேரம் இல்லாததால், உவமையின் முதல் வரிகளில் மட்டும் நமது கவனத்தைச் செலுத்தி, பாடங்களைப் பயில முயல்வோம்.

லூக்கா நற்செய்தி 16ம் பிரிவில் (16:19-21) காணப்படும் இவ்வுவமையின் முதல் மூன்று இறைச்சொற்றோடர்களில், இவ்வுவமையின் இரு நாயகர்களை, இயேசு அறிமுகம் செய்துள்ளார். இந்த அறிமுக வரிகளில், செல்வரைப் பற்றி மூன்று குறிப்புக்களும், இலாசரைப் பற்றி ஐந்து குறிப்புக்களும் காணப்படுகின்றன.
செல்வரைப் பற்றிய மூன்று குறிப்புக்கள் இதோ:
  • செல்வர் ஒருவர் இருந்தார்.
  • விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்திருந்தார்.
  • நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
 
இலாசரைப் பற்றிய ஐந்து குறிப்புக்கள் இதோ:
  • இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்.
  • அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது.
  • அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
  • செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
  • நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.
இந்த எட்டு குறிப்புக்களையும் இணைத்துச் சிந்திக்கும்போது, மூன்று ஒப்புமைகளை நாம் உணரலாம். பாடங்கள் பல சொல்லித்தரும் ஒப்புமைகள் இவை. செல்வர் ஒருவர் இருந்தார். இலாசர் என்ற பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார்... என்பது முதல் ஒப்புமை. செல்வரைப் பெயரிட்டுக் குறிப்பிடாத இயேசு, ஏழையைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டார்; பெயர் கொடுத்ததால், கூடுதல் மதிப்பும் கொடுத்தார். இயேசு கூறியுள்ள அனைத்து உவமைகளிலும், இந்த உவமையில் மட்டுமே, கதாபாத்திரத்திரத்திற்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. தனித்துவம் மிக்க இச்சிறப்பு, தெருவில் கிடந்த ஓர் ஏழைக்குக் கிடைத்துள்ளது.

செல்வருக்கு ஏன் பெயர் கொடுக்கப்படவில்லை என்பதை இப்படியும் எண்ணிப் பார்க்கலாம். அந்தச் செல்வரின் சுய அடையாளங்கள் அனைத்தும் அவரிடம் இருந்த செல்வத்திலிருந்தே வந்ததால், அவர் தன்னுடைய பெயரை இழந்து வாழ்ந்தார் என்று எண்ணிப்பார்க்கலாம். ஒருவர் குவித்துள்ள செல்வத்தால், 'இலட்சாதிபதி', 'கோடீஸ்வரர்' என்ற பட்டங்களைப் பெற்று, அவரது பெயரை இழக்க வாய்ப்பு உண்டு. குவித்து வைத்த செல்வத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த செல்வர், தன் பெயரை இழந்துவிட்டார் என்பதை சொல்லாமல் சொல்லும் இயேசு, ஏழைக்கு 'இலாசர்' என்ற பொருத்தமான பெயரையும் தந்துள்ளார். இயேசுவின் மிக நெருங்கிய நண்பரின் பெயரும் 'இலாசர்' என்று உணரும்போது, இயேசு இக்கதையில் தன் மனதுக்குப் பிடித்த ஒரு பெயரைப் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் உணர்கிறோம்.

'இலாசர்' என்ற இந்தப் பெயர், பழைய ஏற்பாட்டில் காணப்படும், எலியேசர்என்ற பெயரை ஒத்திருந்தது. ஆபிரகாமின் நம்பிக்கைக்குரிய ஊழியன், எலியேசர். அந்தப் பெயரின் பொருள் "இறைவனே என் உதவி" (God is my help). கடவுளை நம்பி வாழ்ந்தவர், இலாசர் என்பதையும், தன் செல்வத்தை நம்பி வாழ்ந்ததால் பெயரிழந்தவர், அந்த செல்வர் என்பதையும் இயேசுவின் இந்த முதல் ஒப்புமை சொல்கிறது.
இந்த முதல் ஒப்புமை நமக்குச் சொல்லித்தரும் ஒரு முக்கிய பாடம், நாம் ஏழைகளை எவ்விதம் மதிக்கிறோம் என்பதே. நம் இல்லங்களில் பணியாற்றுவோரின் பெயர்களை அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல், அவர்களை மரியாதைக் குறைவாய், ஏக வசனத்தில், "ஏய், அடியே, இவனே" என்று அழைப்பது தவறு என்பதை, இந்த உவமையின் அறிமுக வரிகளில் இயேசு சொல்லித் தருகிறார்.

செல்வரையும், இலாசரையும் குறித்து நாம் காணும் இரண்டாவது ஒப்புமை, அவர்களின் தோற்றத்தைப் பற்றியது. செல்வர் செந்நிற மெல்லிய ஆடை அணிந்திருந்தார் என்றும்... இலாசரின் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது என்றும் இயேசு கூறுகிறார். மனதில் ஆணிகளை அறையும் வரிகள்... செல்வர் அணிந்திருந்த மெல்லியச் செந்நிற ஆடை ஒருவேளை அவரது உடலோடு ஒட்டியதாக, ஏறக்குறைய அவரது தோலைப் போல் இருந்திருக்கலாம். இலாசரோ, உடலெங்கும் புண்ணாகி, அவரும் சிவந்தத் தோலுடன் இருந்திருப்பார்.
அரசப் பரம்பரையைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் நிறம், சிவப்பு. செல்வர் தன்னைத்தானே  ஓர் அரசனாக்கும் முயற்சியில் செயற்கையாகச் செய்யப்பட்ட செந்நிற ஆடை அணிந்திருந்தார். இலாசரோ, உடலெங்கும் புண்ணாகி, இயற்கையிலேயே செந்நிறமாய் இருந்தார். யூதர்களின் அரசன் என்ற அறிக்கையுடன், சிலுவையில் செந்நிறமாய்த் தொங்கிய இயேசுவின் முன்னோடியாக இலாசரைப் பார்க்கச் சொல்லி இயேசு நமக்கு அறிவுறுத்துகிறாரோ? என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது, இந்த இரண்டாவது ஒப்புமை.

மூன்றாவது ஒப்புமையில் நாம் காணும் வரிகள் உள்ளத்தில் அறையப்பட்ட ஆணிகளை இன்னும் ஆழமாய் பதிக்கின்றன.
  • செல்வர் நாள் தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
  • இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார்.
  • செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தன் பசியாற்ற விரும்பினார்.
  • நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

செல்வர் மறுவாழ்வில் நரக தண்டனை பெற்றதற்கு இந்த ஒப்புமையில் காரணம் காணமுடிகிறது. நரக தண்டனை பெறுமளவு அச்செல்வர் செய்த தவறுதான் என்ன? அவர் உண்டு குடித்து மகிழ்ந்தார்.... ஒருவர் உண்டு குடித்து மகிழ்வதால் நரகமா? இது கொஞ்சம் மிகையானத் தண்டனையாகத் தெரிகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அன்பர்களே, அவர் உண்டு குடித்ததற்காக இத்தண்டனை கிடையாது... தேவையுடன் ஒருவர் அவருக்கு முன் கிடந்தபோது, அதனால் எவ்வகையிலும் பாதிக்கப்படாமல், நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தாரே... அதற்காக இத்தண்டனை.

ஓர் ஏழை தன் வீட்டு வாசலில் கிடப்பதற்கு அனுமதித்த செல்வரைப் பாராட்ட வேண்டாமா? அந்தச் செல்வர் நினைத்திருந்தால், காவலாளிகளை ஏவிவிட்டு, இலாசரைத் தன் வீட்டு வாசலிலிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாமே என்று, செல்வர் சார்பில் வாதாடத் தோன்றுகிறது. செல்வர், இலாசரை அப்புறப்படுத்தியிருந்தால்கூட ஒருவேளை குறைந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்குமோ என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். புதிராக உள்ளதா? விளக்குகிறேன்.
இலாசர் மீது செல்வர் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால்... அது வெறுப்பைக் காட்டும் எதிர்மறையான நடவடிக்கையாக இருந்திருந்தாலும் பரவாயில்லை. ஏனெனில், இலாசர் என்ற ஒரு ஜீவன் அங்கு இருந்ததே என்ற குறைந்தபட்ச உணர்வு செல்வருக்கு இருந்தது என்று நம்மால் சொல்லமுடியும். இவ்வுவமையில் கூறப்பட்டுள்ள செல்வரைப் பொருத்தவரை, இலாசரும், அவர் வீட்டில் இருந்த ஒரு மேசைநாற்காலியும் ஒன்றே... ஒருவேளை, அந்த மேசை நாற்காலியாவது தினமும் துடைக்கப்பட்டிருக்கும். மேசை, நாற்காலியைத் துடைக்கும் துணியைவிட கேவலமாக இலாசர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகேக் கிடந்தார் (லூக்கா 16: 20) என்று இயேசு குறிப்பிடுகிறார். 'கிடந்தார்' என்ற சொல், இலாசரின் அவலநிலையை அழுத்தமாகக் கூறுகிறது.

ஒருவர் மீது அன்பையோ, வெறுப்பையோ காட்டுவது, அவர் ஒரு மனிதப் பிறவி என்பதையாவது உறுதிப்படுத்தும் ஒரு நிலை. ஆனால், ஒருவரை குறித்து எந்த உணர்வும் காட்டாமல், அவர் ஒரு மனிதப் பிறவியே இல்லை என்பதைப்போல் ஒருவரை நடத்துவது, மிகவும் கொடுமையான தண்டனை. இத்தகையத் தண்டனையை, அச்செல்வர், இலாசருக்கு வழங்கியதால்தான் அவர் நரக தண்டனை பெற்றார். அந்தத் தெருவில் அலைந்த நாய்கள்கூட இலாசரை ஒரு பொருட்டாக மதித்தன என்பதையும், இயேசு, இந்த மூன்றாம் ஒப்புமையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

செல்வரைப் பொருத்தவரை, அவரது காலடியில் மிதிபட்ட தூசியும், இலாசரும், ஒன்று. தூசி காலடியில் கிடைக்கும்வரை பிரச்சனை இல்லை; அதே தூசி மேலெழுந்து, கண்களில் விழும்போது, பிரச்சனையாகிவிடும். தூசியாக செல்வரின் வீட்டு வாசலில் கிடந்த இலாசர், மறுவாழ்வில் மேலே உயர்த்தப்பட்டு, அந்தச் செல்வருக்குத் தீர்ப்பு வழங்கும் அளவுகோலாக மாறுகிறார் என்பதை, இன்றைய நற்செய்தியின் பிற்பகுதியில் காண்கிறோம்.

ஆபிரகாமின் மடியில் இலாசரைக் கண்ட செல்வர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும்' (லூக்கா 16: 24) என்று மன்றாடுகிறார். இந்த வரிகளைச் சிந்திக்கும் ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறுவது, நம் சிந்தனைக்குரியது. வாழ்நாளெல்லாம் தன் வீட்டு வாசலில் கிடந்த இலாசரின் பெயர் அச்செல்வருக்குத் தெரிந்திருந்ததா என்பது சந்தேகம்தான். மறுவாழ்வில் அந்த ஏழையின் பெயரை முதல் முறையாக இச்செல்வர் உச்சரித்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மறுவுலகில் அச்செல்வர் இலாசருக்கு அளித்த மதிப்பில், ஆயிரத்தில் ஒரு பகுதியை, இவ்வுலகில் அளித்திருந்தால், மீட்படைந்திருப்பாரே என்று எண்ணத் தோன்றுகிறது.

வான் வீட்டில் நுழைவதற்கு ஏழைகளை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்று சென்ற வாரம் இயேசு எச்சரித்தார். நண்பர்களாக்கிக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, மனிதப் பிறவிகள் என்ற அடிப்படை மதிப்பையாவது அவர்களுக்குக் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை மதிப்பை வழங்க மறுத்தால், நரகத்தை நாம் தெரிவு செய்கிறோம் என்பதை இன்று இயேசு தெளிவுபடுத்துகிறார். செல்வர் நரக தண்டனை பெற்றது, அவருக்குத் தரப்பட்ட ஒரு பாடம். இவ்வுலகில் இலாசர் வாழ்ந்தபோது, அவரை ஒரு மனிதப் பிறவியாகக் கூட மதிக்காமல், செல்வர் நடந்துகொண்டது, இலாசருக்கு நரக வேதனையாக இருந்திருக்கும். அந்த நரக வேதனை எப்படிப்பட்டதென்று செல்வர் உணர்வதற்கு, கடவுள் தந்த பாடம், இந்த மறுவாழ்வு நரகம். இதைக் காட்டிலும் தெளிவான பாடங்கள் நமக்குத் தேவையா, அன்பர்களே?



21 September, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 40

Assisi – Thirst for Peace

'முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று நமக்கு அமைதி தேவைப்படுகிறது. உலகெங்கும் பரவியுள்ள போருக்கு நடுவே, நாம் அமைதிக்காகச் செபிப்போம்' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 18, இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார். “Thirst for Peace: religions and cultures in dialogue” அதாவது, "அமைதிக்காகத் தாகம்: உரையாடலில் மதங்களும், கலாச்சாரங்களும்" என்ற தலைப்பில், செப்டம்பர் 18, இஞ்ஞாயிறு முதல், 20 இச்செவ்வாய் முடிய, அசிசி நகரில், ஒரு பன்னாட்டு, பல்சமய சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் சிகரமாக, செவ்வாய் மாலை 4 மணிக்கு, உலக அமைதிக்காக பல்வேறு சமயங்களும் இணைந்து செபிக்கும் நிகழ்வை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன், 1986ம் ஆண்டு, திருத்தந்தை, புனித 2ம் ஜான்பால் அவர்கள், செப்டம்பர் 20ம் தேதி, அசிசி நகருக்குச் சென்று, அங்கு பல்சமயத் தலைவர்களுடன் இணைந்து, உலக அமைதிக்காகச் செபித்ததைப் போல், தானும் இச்செவ்வாயன்று உலக அமைதி வேண்டி செபிப்பதற்காக அசிசி நகர் செல்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார். தான் மேற்கொள்ளும் இந்த செப முயற்சியில், உலகெங்கும் உள்ள பங்குகள், கத்தோலிக்க நிறுவனங்கள், துறவு இல்லங்கள், குடும்பங்கள் அனைத்திலும் உள்ளவர்கள், தன்னுடன் இணைந்து, உலக அமைதிக்காக செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்தார். திருத்தந்தையின் இந்த அழைப்பிற்குச் செவிமடுத்து, வானொலி குடும்பத்தினராகிய நாம் அனைவரும், இந்த விவிலியத் தேடல் வேளையில், திருத்தையுடன் இணைந்து, உலக அமைதிக்கென செபிப்போம்.

போரில்லா உலகிற்காக திருத்தந்தையுடன் இணைந்து செபிக்கும் இவ்வேளையில், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, போரின் அனைத்து கொடுமைகளையும் தாங்கிவரும் சிரியாவை சிறப்பாக எண்ணி, செபிக்க கடமைப்பட்டுள்ளோம். கெரசேனர் பகுதியில், தீய ஆவியால் துன்புறுத்தப்பட்ட மனிதரை இயேசு குணமாக்கிய புதுமையில் நாம் மேற்கொண்டுவரும் விவிலியத் தேடல்கள், கடந்த இரு வாரங்களாக சிரியா நாட்டைப்பற்றிய சிந்தனைகளுடன் துவங்கின. இன்று மீண்டும் சிரியா நம் சிந்தனைகளை நிரப்புகின்றன.

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் உள்நாட்டுப் போர், இன்னும் சொல்லப்போனால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுவதுபோல், சிறிதும், பெரிதுமாக உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்து வரும் மூன்றாம் உலகப் போர்’, ஒரு தீய சக்தியாக இவ்வுலகை ஆட்டிப்படைக்கிறது என்பதை நாம் மறுக்க இயலாது. வன்முறை, சுயநலம் என்ற தீய ஆவிகளால் தூண்டப்பட்டுள்ள பலர் தொடுத்துவரும் போர்கள், கெரசேனரில், தீய ஆவியால் துன்புறுத்தப்பட்ட மனிதரை நமக்கு நினைவுறுத்துவதால், போரையும், இந்தப் புதுமையையும் இணைத்துச் சிந்திக்க இன்றையத் தேடலில் முயல்வோம்.

கடந்த சனிக்கிழமை (செப்.17), வெளியான ஒரு காணொளிச் செய்தி, நம் தேடல் முயற்சிகளை இன்று துவக்கிவைக்கிறது. நான் பார்த்த அந்தக் காணொளிச் செய்தி, என் மனதில் முள்ளென தைத்துள்ளது. "கல்லறையில் வாழ்ந்துகொண்டிருக்கும் அலெப்போ நகர் குடும்பம்" (The Aleppo Family living in the cemetery) என்ற தலைப்பில் பிபிசி ஊடகத்தில் வெளியான அச்செய்தி, கெரசேனர் பகுதியில் இயேசு ஆற்றியப் புதுமையை நினைவுக்குக் கொணர்ந்தது.
The Aleppo Family living in the cemetery

தீய ஆவிகளால் வதைக்கப்பட்டதால், கல்லறைகளை தன் உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்த (மாற்கு 5,3) ஒருவரை, இயேசு குணப்படுத்தி, மீண்டும் மனித சமுதாயத்தில் இணைத்தார் என்று இப்புதுமையில் காண்கிறோம். ஆனால், சிரியாவில் நிகழ்வதோ, தலைகீழான கொடுமையாக உள்ளது. மனித சமுதாயத்தில் வாழ்ந்தவர்களை, போர் என்ற தீய ஆவி, கல்லறைகளில் வாழும்படி துரத்தியுள்ளதை, இக்காணொளிச் செய்தியில் காண்கிறோம். 40 வயதுள்ள ஒரு குடும்பத் தலைவியும், அவரது 10 வயது மகனும் கல்லறையில் அமர்ந்திருப்பதை இக்காணொளி நமக்குக் காட்டுகிறது. ஆயிஷா அலி என்ற அக்குடும்பத்தலைவி, கல்லறைமேல் அமர்ந்தபடி, தங்கள் நிலையை இவ்விதம் கூறியுள்ளார்:
"வேறு எந்த இடத்தையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. குளிர்காலம் நெருங்கிவருவதால், வேறு எங்கு செல்வதென்று தெரியாமல், இங்கு வந்துள்ளோம். பார்க்கப்போனால், இதை ஓர் ஆசீர்வாதம் என்றே கருதுகிறோம். இந்த இடத்தை யாரும் தங்கள் சொந்தமென்று உரிமை கொண்டாடப் போவதில்லை" என்று ஆயிஷா அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது மகனை, வீடியோ காமரா, நெருக்கமாகக் காட்டுகிறது. அகமது முகம்மது என்ற அந்த 10 வயது சிறுவன், மாற்றுக்கண் பார்வை கொண்டவர் என்பது தெரிகிறது. தன் மகனைப்பற்றி ஆயிஷா அவர்கள் இவ்வாறு கூறுகிறார்:
"எங்கள் வீட்டில் குண்டு விழுந்து, வெடித்தபோது, அகமதுவின் தலையில் பலமாக அடிபட்டது. மூளையில் இரத்தம் உறைந்து, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதால், மற்றவர்கள் சொல்வதை அவனால் சரிவர புரிந்துகொள்ள முடியாது. தலையில் அடிபட்டதால், அவனுக்கு மாற்றுக்கண் பார்வையும் வந்துவிட்டது" என்று ஆயிஷா அவர்கள் தன் மகனின் நிலைக்கு காரணங்களை விளக்குகிறார்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, செப்டம்பர் 12ம் தேதி முதல் சிரியாவில் அறிவிக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி, பல்வேறு உலக அமைப்புக்கள் அங்குள்ள மக்களுக்கு உதவிகளை கொண்டு செல்கின்றன என்பதை செய்திகளில் வாசிக்கிறோம். இது குறித்து ஆயிஷா அவர்கள் பேசும்போது, "இப்போது சிரியாவில் மக்களுக்கு உதவிகள் வருகின்றன என்று சொல்கிறார்கள். ஆனால், கல்லறையில் இருக்கும் எங்களைத் தேடி யாரும் வருவார்களா என்று தெரியவில்லை" என்று சொல்கிறார்.

அந்தத் தாய் கூறிய சொற்கள், நம் உள்ளங்களைக் கீறி, இரணமாக்குகின்றன. ஆனால், இவற்றைச் சொல்லும்போது, அந்தத் தாயின் கண்களில் கண்ணீரோ, அவரது குரலில் அழுகையின் தொனியோ இல்லாதது, நம்மை இன்னும் வேதனைபடுத்தி, ஓர் ஆழமான உண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, கடந்த ஐந்தாண்டுகளாய் அந்நாட்டில் நிகழ்ந்துவரும் உள்நாட்டுப் போரின் அழிவுகளை ஒவ்வொரு நாளும் கண்டவர்கள், இப்போது, அழிவையும், மரணத்தையும் கண்டு, கண்ணீர் வடிப்பதை நிறுத்தி விட்டனர் என்பதே, அந்த வேதனையான உண்மை.

அந்த அன்னை பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு சில காட்சிகள் திரையில் தோன்றுகின்றன. அவர் தன் குடும்பத்திற்கு ரொட்டி தயாரிப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, தலையில் நீர் சுமந்து வருவது போன்ற இக்காட்சிகளுடன், அவரது மகன் ஒரு கல்லறை மீது அமர்ந்து, பூனைக்குட்டியுடன் விளையாடுவதையும் நாம் காண்கிறோம். கல்லறை, அவர்களுக்கு, மிகச் சாதாரணமான உறைவிடமாக மாறிவிட்டது என்பதை, இக்காட்சிகள் சொல்லாமல் சொல்கின்றன.

சிரியாவின்  பல நகரங்கள் இன்று பெயரளவில் மட்டும் நகரங்களாக உள்ளனவே தவிர, அவை அனைத்தும் உண்மையில் 'நரகங்களாக' மாறிவிட்டன. இந்நகரங்களில் மிக அதிக அளவு அழிவைச் சந்தித்துள்ள நகரம், அலெப்போ. நரகமாக மாறிவிட்ட அலெப்போவில், வாழமுடியாத எளிய குடும்பங்களில் ஒன்று, இப்போது கல்லறையில் தஞ்சம் புகுந்துள்ளது. சிரியாவின் உள்நாட்டுப் போர், அந்நாட்டின் பாதிப் பகுதியை சிதைத்து, தரைமட்டமாக்கிவிட்டதால், அந்நாடு முழுவதையுமே, பரந்து விரிந்த ஒரு கல்லறை என்று சொன்னாலும் பொருந்தும். 
A family walks on empty streets of Aleppo

அதேபோல், மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள சில நாடுகளிலும், ஆப்ரிக்காவின் சில நாடுகளிலும் போர்கள் பல ஆண்டுகளாக நீடித்துவருவதால், அந்நாடுகளை விட்டு, கடல் வழி தப்பித்துச் செல்ல முயலும் பல ஏழைகளுக்கு, அந்தக் கடலே கல்லறையாகிவிடுவதை நாம் அறிவோம். அந்தக் குடும்பத்தலைவி ஆயிஷா அவர்கள் கூறுவதுபோல், கல்லறைகளை சொந்தம் கொண்டாட யாரும் படையெடுத்து செல்லமாட்டார்கள் என்பது, வேதனையான உண்மை.

'அரேபிய வசந்தம்' என்ற ஓர் உன்னதமான அறைகூவலுடன், 2011ம் ஆண்டு, மார்ச் 15ம் தேதி, சிரியாவில் ஆரம்பமான உள்நாட்டுப் போர், கடந்த 66 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்கின்றது. இது, வெறும் உள்நாட்டுப் போராக மட்டும் நிகழ்ந்திருந்தால், ஒருவேளை, விரைவில், ஏதோ ஒரு தீர்வு வந்திருக்கலாம். ஆனால், இந்தப் போரில், இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு, பிரித்தானியா, ஐரோப்பா என்ற பல சக்தி வாய்ந்த நாடுகள் நுழைந்துவிட்டதால், யார் பெரியவர் என்ற பலப் பரீட்சை உருவாகியுள்ளது. அரசுகளின் பெயரால் போரில் ஈடுபட்டுள்ளவர்கள் போதாதென்று, எந்த அரசாலும் கட்டுப்படுத்த முடியாத சுயநல சுறாமீன்கள், சிரியாவில் ஓடும் இரத்த வெள்ளத்தில் நீந்தி மகிழ்கின்றன. ஆம், ஆயுத விற்பனை, மனித வர்த்தகம் என்ற பல்வேறு தீய சக்திகளின் தொழிற்சாலையாக சிரியா மாறிவிட்டதால், இந்தப் போர் இன்னும் தொடர்கிறது.

சிரியாவின் உள்நாட்டுப் போர் துவங்கிய ஒரு சில நாட்களில், (மார்ச் 29, 2011) National Catholic Reporter என்ற இணையத்தள செய்தித்தாளில், "Expelling the demons of war" அதாவது, "போர் என்ற பேய்களை விரட்டுதல்" என்ற தலைப்பில், எழுத்தாளரும், அருள் பணியாளருமான John Dear என்பவர் பகிர்ந்துள்ள கருத்துக்கள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. பாலஸ்தீனாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், Ched Myers என்ற விவிலிய அறிஞர் வழங்கிய ஓர் உரையிலிருந்து, John Dear அவர்கள் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
கெரசேனர் பகுதியில் தீய ஆவி பிடித்த மனிதரை இயேசு குணமாகிய புதுமையையும், போரில் ஈடுபடும் பல வல்லரசு நாடுகளையும், குறிப்பாக, அமெரிக்க ஐக்கிய நாட்டையும் இணைத்து, Myers அவர்கள் எழுதியுள்ள ஒரு நூலின் தலைப்பு: “Binding the Strong Man: A Political Reading of Mark’s Story of Jesus” "சக்திவாய்ந்த மனிதரைக் கட்டிப்போடுதல்: மாற்கு கூறும் இயேசுவின் கதையை அரசியல் கண்ணோட்டத்துடன் வாசித்தல்". Ched Myers, John Dear இருவரும், கெரசேனர் புதுமையுடன், போர்களை இணைத்து பகிர்ந்துகொள்ளும் கருத்துக்களை அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.