30 October, 2016

Self-inviting Jesus தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் இயேசு



Jesus and Zacchaeus

Spread Love This Diwali
31st Sunday in Ordinary Time

October 29, 30 and 31, the Festival of Lights (Deepavali or Diwali) is celebrated by the Indians. Wish you all a meaningful celebration of the Festival of Lights. For the past few weeks, there have been some instructive, short videos shared in social networks, on how to celebrate Deepavali in a more mature way. One of them talked about abstaining from bursting crackers which disturb animals and birds. When I saw this video, I was questioning within myself: why we don’t speak of babies, senior citizens, patients in hospitals and pavement dwellers who get disturbed by the continuous noise of the crackers. How many huts go up in flames when the firework from a nearby bungalow, ‘misfires’ and lands on a thatched roof. Perhaps there are other videos talking about this and I did not get to see them.
One of those videos caught my attention to a great extent. It depicts a young man who piles a few 100 Rupee notes on the pavement, and sets them on fire. Another man, carrying bags of crackers, runs to him and asks him whether the young man is out of his mind by setting fire to the currency notes. The young man points to the bag of crackers and says, “Do you think you are sane in spending money on these things?”
The young man then goes on to explain how, with the money spent on crackers, which again amounts to burning money, he could have bought food and clothing for a few poor people and made their Deepavali happier. As he says these lines, we see the young man sharing packets of clothes and food items with some very poor people. Many of those poor, senior citizens bless the young man whole-heartedly. What better joy can one get than this!

This short video tells us how it is within our choice either to celebrate big festivals, putting ourselves in the centre or putting others, especially the most deserving, in the centre. Hope this Festival of Lights helps us bring more light to the lives of people living in darkness. On this Festival, it is coincidental or providential that we have a Gospel passage where we see Jesus bringing a ray of hope to a person engulfed in the darkness of social segregation. Jesus invites himself to the house of Zacchaeus, a chief tax collector - Luke 19: 1-10. It is no surprise that the Gospel of Luke, known as the ‘Gospel of Mercy’ is the only source where this lovely event is recorded.

Time and again human history keeps telling us that God and Christ have been and, can be, found in the most unexpected places. Today’s Gospel gives us one more proof of this. Zacchaeus discovers Jesus on the branches of a tree. It is, rather, Jesus who discovers Zacchaeus.

Here is how I visualise this ‘miracle’. Jesus was walking along the streets of Jericho. His fame had spread far and wide and so he was surrounded by a crowd. There were many reasons why the crowd followed Jesus. Curiosity… Hope… Jealousy. Most of the poor people who followed Jesus, were hopeful that they would be saved by Jesus – not only as individuals, but also as a nation. Those who came to Jesus, seeking a miracle, had to invent ways to tackle the crowd. The friends of the paralytic sent him down from the roof (Luke 5: 17-26). The woman with the flow of blood had to approach Jesus stealthily from behind (Luke 8: 43-38). Here is another method chosen by Zacchaeus. He climbed up the tree. A miracle brought him down.

Before we go into the miracle part of it, we need to know who this Zacchaeus is. He was a rich person. He was a tax collector. He was short. I see a connection among these three… Being rich and being a tax collector were intrinsically connected. Being a tax collector and being short were also connected. Really? Here is my theory.
Zacchaeus was born in the family of tax collectors. Hence, from his birth, he had been receiving only hatred and curses from the people around him. A child that grows up in hate-filled circumstances never really grows up – even physically! This was the case with Zacchaeus. Why was he surrounded by hatred? The Jews hated the Romans. But they hated another group MORE - the group of Jews – the tax collectors – who were the traitors. They were the sycophants of the Romans. They were simply, THE SINNERS! This label which was stuck on Zacchaeus did not allow him to grow up.

Zacchaeus was curious to see Jesus. If Jesus could have come to the street where Zacchaeus lived, he would have happily stayed at home, gone up to the terrace and seen Jesus and the crowd from the top angle. The top angle would have given Zacchaeus a powerful position. Zacchaeus felt that Jesus would not come to where he lived, since Jesus preferred the poorer section of the city. So, he ventured to meet Him. He feared the ridicule and scorn of the crowd around Jesus and, hence, he invented a new way to encounter Jesus. He climbed up the tree.

Let us come back to the miracle part… Jesus was walking along a road in Jericho. He saw Zacchaeus sitting on a tree. That was strange! A young person sitting on a tree was acceptable. Why was a middle aged person sitting there? Was he mentally disturbed? He did not seem to be so. Then why? So, Jesus turned around to those who were following him and asked them: “Who is that man?” Those around Jesus looked at the person he was pointing at. “Oh, he is a thief, a traitor a sinner…” – the ever-available-ready-made list of labels and accusations came out. Jesus, as was his wont, swept aside all those irrelevant trash and insisted on knowing his name. After squeezing their collective memory for sometime, they begrudgingly revealed the name: Zacchaeus. Jesus registered the name: ZACCHAEUS! (meaning, ‘pure’). Jesus went to the tree and called out: “Zacchaeus, come down immediately. I must stay at your house today.” This was the first part of the miracle!
Some one called Zacchaeus by name… by his REAL, ORIGINAL name. It was as if Zacchaeus was born again and he was ‘re-baptised’. A person, who came from his own tribe which had refused to acknowledge his name and preferred to call him only by labels, called him by his sweet name.

Zacchaeus was called by name and a miracle happened. The miracle of complete transformation. The Bible and our Christian tradition as well as many other religious traditions talk of persons getting completely transformed – making a complete turn-around. Another popular term for this ‘turn-around’ is ‘conversion’. (Please don’t waste your time and energy on ‘conversions’ that are being talked about by the Indian politicians.) This is a much deeper and more meaningful term. We do talk about our own conversions… our New Year resolutions or the resolutions we take after a retreat.

The conversion, the transformation of Zacchaeus is something to reflect on. He does not proclaim very vague, general platitudes like: “Oh, Lord, I shall be good. I shall not harm others. I shall give alms.” His statements are more powerful, binding commitments. Zacchaeus says: "Look, Lord! Here and now I give half of my possessions to the poor, and if I have cheated anybody out of anything, I will pay back four times the amount." Half my possessions to the poor… pay back four times, those I have cheated.
Zacchaeus speaks in the ‘present, here-and-now’ language. He is not speaking in futuristic terms – ‘I shall give…’. He is not speaking like a politician, for whom there is always the escape route called ‘tomorrow’. If I come to power, I shall do this, and that and the other. If these words remind you of some presidential candidates, I am not to blame!

The Gospel says that “Zacchaeus stood up and said to the Lord” during the dinner. He did not whisper this to Jesus. This was a proclamation made from the rooftop, almost. When Zacchaeus stood up to speak, he was SHORT, still. But when he finished saying those lines, he really STOOD TALL. When Zacchaeus climbed the tree, he was a crooked tax collector, carrying a load of labels with him. But, he was brought down from the tree by Jesus as a human being first and, perhaps later, as a saint. This great transformation took place since Jesus CALLED HIM BY NAME thus making him discover his original beauty.
Fr. James Gilhooley begins his homily on Zacchaeus, with these words: “‘A thing of beauty,’ wrote John Keats in Endymion in 1818, ‘is a joy forever.’ Someone has written that as Christians we should love beauty. He went on to say that where beauty is apparent, we should enjoy it. Where beauty is hidden, we should unveil it. Where beauty is defaced, we should restore it. Where there is no beauty at all, we should create it.”

The Gospel gives us a proof of Jesus restoring Zacchaeus to his original beauty. All of us are called to be co-creators of beauty in this world.


Diwali and child labour

பொதுக்காலம் - 31ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும், இறைவன், ஒளிமிக்க வாழ்வை வழங்கவேண்டுமென்று வாழ்த்துவோம், வேண்டுவோம். ஒளிமிக்க வாழ்வு என்று சொன்னதும், இல்லங்களில் செல்வம் நிறைவதை மட்டும் எண்ணிப்பார்க்காமல், உள்ளங்களில் அறிவொளி பெறுவதையும் எண்ணிப்பார்க்க, இந்தத் திருநாள் நம்மை அழைக்கிறது. அறிவொளி பெற்றவர்களாய், தீபாவளியை அர்த்தமுள்ள வகையில் எவ்விதம் கொண்டாடுவது என்பதைக் கூறும் சில காணொளித் தொகுப்புகள், கடந்த சில நாட்களாக, சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. அவற்றில் ஒன்று, என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது. அக்காணொளித் தொகுப்பில், பின்வரும் காட்சி இடம்பெறுகிறது:
இளைஞர் ஒருவர், சில 100 ரூபாய் நோட்டுக்களை, சாலையோரமாக அடுக்கிவைக்கிறார். பின்னர் ஒரு தீக்குச்சியைப் பற்றவைத்து, அந்த ரூபாய் நோட்டுக்களைக் கொளுத்துகிறார். அந்நேரம், அவ்வழியே, ஒரு வீட்டுத்தலைவர், தீபாவளிக்கென வாங்கிய பட்டாசு, மத்தாப்பு பைகளைச் சுமந்தவண்ணம் வருகிறார். ரூபாய் நோட்டுக்களைக் கொளுத்திக் கொண்டிருக்கும் இளைஞரைத் தடுக்க முயற்சி செய்கிறார், அம்மனிதர். "சார், உங்களுக்கென்ன புத்தி கெட்டுப்போச்சா?" என்று கேட்கும் அவரிடம், "நீங்க செய்வது மட்டும் புத்தியுள்ள செயலா?" என்று திருப்பிக் கேட்கிறார், இளையவர்.
இளைஞரையும், தன் கையிலிருந்த பட்டாசுக் கட்டுக்களையும் மாறி, மாறிப் பார்க்கும் அந்த வீட்டுத்தலைவரிடம், "சாம்பலாகும் இந்தப் பட்டாசுகளுக்கு நீங்கள் செலவழித்தப் பணத்தைக் கொண்டு, எத்தனையோ வறியோர் வீடுகளில் ஒளியேற்றியிருக்க முடியும். தீபாவளியைக் கொண்டாடமுடியாமல் தவிக்கும் அவர்களுக்கு, உடையும், உணவும் வாங்கித் தந்திருக்கலாமே" என்று கூறுகிறார் இளைஞர்.

வறியோரின் இல்லங்களில் ஒளியேற்றி, அவர்களுடன் விருந்து கொண்டாட, தீபாவளி ஒரு தகுந்த தருணம் என்று சிந்திக்கும் இஞ்ஞாயிறன்று, நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியும், இதையொத்த ஒரு நிகழ்வைக் கூறுகிறது. வறுமைப்பட்ட ஒருவர் இல்லத்திற்கு, இயேசு, தானாகவே சென்ற நிகழ்வு இது. பொருளாதார அடிப்படையில் வறுமைப்படவில்லை எனினும், சமுதாய அடிப்படையில், வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, உள்ளத்தில் வறுமையைச் சுமந்து வாழ்ந்த ஒருவரது வீட்டிற்கு, எவ்வித அழைப்பும் இன்றி, இயேசு, தானாகவே செல்கிறார். வரி வசூலிக்கும் சக்கேயுவை, இயேசு சந்தித்த இந்த நிகழ்வு, நற்செய்தியாளர் லூக்கா மட்டும் நமக்கு வழங்கியுள்ள பரிசு.

இயேசு எரிகோ நகர்வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார் என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இந்நிகழ்வை, ஒரு கற்பனைக் காட்சியாகக் காண முயல்வோம். நகர்வழியே நடந்து சென்ற இயேசுவைச் சுற்றி, வழக்கம்போல் கூட்டம் அலைமோதியது. இத்தகையக் கூட்டங்களை, பல வழிகளில் சமாளித்து, இயேசுவிடம் நலம் பெற்றவர்கள் உண்டு. கூட்டத்தில் துணிந்து புகுந்து, இயேசுவின் ஆடையைத் தொட்ட பெண், கூட்டம் நிரம்பி வழிந்த வீட்டின் கூரையைப் பிரித்து இறக்கப்பட்ட முடக்குவாத நோயாளி, கூடச் சென்ற கூட்டம் தன்னை அடக்கப்பார்த்தாலும், தூரத்தில் இருந்து கத்தி, இயேசுவின் கவனத்தை ஈர்த்த, பார்வைத்திறன் அற்றவர்... இப்படி பலர் இயேசுவைச் சுற்றியிருந்த கூட்டத்தைச் சமாளித்துள்ளனர். இயேசுவிடம் சென்றால் புதுமை நடக்கும் என்ற எதிபார்ப்புடன், இவர்கள், அவரை அணுகியவர்கள். இன்று நாம் சந்திக்கும் சக்கேயு, எந்தப் புதுமையையும் எதிர்பார்க்காமல், இயேசுவிடம் வந்தவர்.

சக்கேயுவை அறிந்துகொள்ள முயல்வோம்... அவர் செல்வந்தர், வரி வசூலிப்பவர்களின் தலைவர், குள்ளமான மனிதர். அவர், இவர் என்று, சக்கேயுவை, நாம் மரியாதையுடன் குறிப்பிடுவதை, இஸ்ரயேல் மக்கள் கொஞ்சமும் விரும்பமாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை, சக்கேயு அவர் அல்ல, ‘அவன். அவன் ஒரு பாவி, துரோகி.
சொந்த நாட்டிலேயே, அந்நியனுக்கு வரி செலுத்தி வந்ததால், இஸ்ரயேல் மக்கள், உரோமையர் மீது ஆழ்ந்த வெறுப்பு கொண்டிருந்தனர். அதைவிட, உரோமையருக்கு வரி வசூல் செய்து கொடுத்த யூதர்களைக் கண்டு, மிக அதிக வெறுப்பு அவர்களுக்கு. பாவிகள், துரோகிகள், புல்லுருவிகள், என்ற பல பழிச்சொற்களால் அவர்களை தினமும் அர்ச்சித்து வந்தனர்.
இத்தகையப் பழிச்சொற்களுக்கு உள்ளான வரிவசூலிப்பவர் ஒருவருடைய குடும்பத்தில் சக்கேயு பிறந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. நான் இவ்வாறு கூற காரணம், சக்கேயு, குள்ளமாய் இருந்தார் என்ற குறிப்பு. வரி வசூலிப்பவர் குடும்பத்தில் பிறப்பதற்கும், குள்ளமாய் இருப்பதற்கும் என்ன தொடர்பு? சக்கேயு, பிறந்தது முதல், மற்றவர்களின் வெறுப்புக்கும், கேலிக்கும் உள்ளானதால், அவரால் வளர முடியவில்லை. யூத சமுதாயம், சக்கேயுவை, பாவி, துரோகி என்று குட்டிக்கொண்டே இருந்ததால், அவர் குனிந்து, குனிந்து, குள்ளமாய்ப் போனார்.

இயேசு யார் என்று பார்க்க சக்கேயு விரும்பினார் என்று நற்செய்தி கூறுகிறது. இது வெறும் ஆர்வக்கோளாறு, ஒரு பார்வையாளரின் மனநிலை. சக்கேயு வாழ்ந்த மாடி வீட்டுப் பக்கம் இயேசு வந்திருந்தால், மாடியில், நாற்காலியில், கால் மேல் கால் போட்டு அமர்ந்து, இயேசு, தன் வீட்டைக் கடந்து போவதைப் பார்த்திருக்கலாம். மாடியிலிருந்து பார்த்திருந்தால், இயேசுவும், அந்தக் கூட்டமும் குள்ளமாகத் தெரிந்திருக்கும். ஊர் மக்களை, குள்ளமாய் பார்ப்பதில், சக்கேயுவுக்கு ஒரு தனி திருப்தி இருந்திருக்கும். ஆனால், அதற்கு வழியில்லை. இயேசு சுற்றி வந்த வீதிகள் எல்லாம், ஏழைகள் வாழும் பகுதிளாக இருந்தன. தன் வீட்டுப்பக்கம் இயேசு வரமாட்டார் என்று நன்கு அறிந்திருந்த சக்கேயு, தன்னுடைய தன்மானத்தை, தற்பெருமையை, ஒதுக்கி வைத்துவிட்டு, இயேசுவைத் தேடிச்சென்றார். வெறும் ஆர்வம்தான் அவரை இயேசுவிடம் கொண்டுவந்தது என்றாலும், மீட்பின் முதல் படிகளில் சக்கேயு ஏற ஆரம்பித்துவிட்டார். தற்பெருமையை மூட்டை கட்டிவிட்டு, ஒரு மரமேறி அமர்ந்தார். இது, சக்கேயுவின் பயணம்.

இனி, இயேசுவின் பயணம்...
எரிகோ வீதிகளில் இயேசு நடந்து சென்றபோது, தூரத்தில், ஒரு மரத்தின் மீது நடுத்தர வயதுள்ள ஒருவர் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். இயேசுவுக்கு வியப்பு. சிறுவர்கள் மரமேறி அமர்வது, சாதாரண விடயம். இந்த ஆள், ஏறக்குறைய, 30 அல்லது 40 வயதானவர். இவர் ஏன் மரமேறி அமர்ந்திருக்கிறார்? ஒருவேளை மனநிலை சரியில்லாதவரோ? அப்படியும் தெரியவில்லை. அவர் உடையைப் பார்த்தால், நல்ல வசதி படைத்தவர்போல் தெரிகிறது. பின் ஏன் மரமேறியிருக்கிறார்? என்று பல சிந்தனைகள் இயேசுவுக்குள் அலைமோதின. அவர் யார் என்று, அருகில் இருந்தவர்களிடம் கேட்டார், இயேசு. கூட்டத்தில் ஒரு சிலர், இயேசு சுட்டிக்காட்டிய மனிதரைப் பார்த்தனர். கோபம், வெறுப்பு, கேலி இவை அனைத்தும் அவர்கள் பதிலில் ஒலித்தன. "ஓ, அவனா? அவன் ஒரு பாவி... துரோகி" என்று, அவர்கள் அடுக்கடுக்காய் குத்திய முத்திரைகளை ஒதுக்கிவிட்டு, அவர் பெயர் என்ன என்று கேட்டார், இயேசு. பாவி, துரோகி என்றே, அவரை இதுவரை அழைத்துவந்ததால், அவருடைய இயற்பெயர் யாருக்கும் நினைவில் இல்லை. இயேசுவோ விடுவதாக இல்லை. மீண்டும், மீண்டும் பெயரைக் கேட்டார். தங்கள் ஞாபகச் சக்தியைக் கசக்கிப் பிழிந்து, இறுதியாக, "சக்கேயு" என்று சொன்னார்கள். இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்றார். (லூக்கா 19:5) என்ற சொற்கள் இன்றைய நற்செய்தியின் சிகரமாக அமைகின்றன.
புதுமையொன்று ஆரம்பமானது. மக்கள் தன்னை வெறுப்போடு அழைத்த அடைமொழிகளைக் கேட்டுக் கேட்டு, தன் பெயரையே மறந்துபோயிருந்த சக்கேயுவிடம், மாற்றங்கள் ஆரம்பமாயின. இயேசு, அவரைப் பெயர் சொல்லி அழைத்ததும், வெறுப்பிலும், கசப்பிலும் தன்னையே சிறைப்படுத்தியிருந்த சக்கேயு, மரத்திலிருந்து மட்டும் இறங்கவில்லை, தன் வெறுப்புச் சிறையிலிருந்தும் வெளியேறினார்.

மற்றவர்களைப் பெயர் சொல்லி அழைக்கும்போது, உறவுகள் உறுதிப்படுவதையும், ஆழப்படுவதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். முன் பின் தெரியாத ஒருவர், அதுவும், தன்னைப் பழிச்சொற்களால் வதைத்து வந்த அதே யூத குலத்தைச் சார்ந்த ஒருவர், தன்னைப் பெயர் சொல்லி அழைத்ததும், சக்கேயு மாற்றம் அடைந்தார். அந்த மனமாற்றத்தைப் பற்றி சிறிது ஆழமாகச் சிந்திப்போம்.

விவிலியத்திலும், கிறிஸ்தவ பாரம்பரியத்திலும் மனம் மாறியவர்களைப் பற்றி பல கருத்துக்கள் கேட்டிருக்கிறோம். சக்கேயுவின் மனமாற்றம், தனிச் சிறப்பு மிக்கது. "ஆண்டவரே, இனி நான் நல்லவனாக இருப்பேன். யாரையும் ஏமாற்ற மாட்டேன். தான தர்மம் செய்வேன்" என்று சக்கேயு பொதுவாகச் சொல்லியிருக்கலாம். ஆனால், சக்கேயுவின் கூற்று, மிகத் தெளிவானத் திட்டங்களாக ஒலித்தது. "ஆண்டவரே, என் உடமைகளில் பாதியை நான் எழைகளுக்குக் கொடுத்து விடுகிறேன். யாரையாவது ஏமாற்றி, எதையாவது பறித்திருந்தால், நான்கு மடங்காகத் திருப்பி கொடுத்து விடுகிறேன்." - லூக்கா 19: 8
பாதி சொத்து ஏழைகளுக்கு, ஏமாற்றியதற்கு நான்கு மடங்கு பரிகாரம். மிகத் தெளிவான மனமாற்றம். தன் வாழ்வுடன் அவர் செய்துகொண்ட ஓர் ஒப்பந்தம் என்று கூட சொல்லலாம். மேலும், சக்கேயு பயன்படுத்திய வார்த்தைகள், நிகழ்காலத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. 'நான் ஏழைகளுக்குக் கொடுப்பேன்; ஏமாற்றியவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன்' என்று எதிர்காலத்தில் பேசாமல், 'கொடுத்து விடுகிறேன்' என்று கூறுகிறார். 'வானத்தை வில்லாக வளைப்பேன்; மணலைக் கயிறாகத் திரிப்பேன்' என்று, தலைவர்கள் தாராளமாக வழங்கும் தேர்தல் கால வாக்குறுதிகள் அல்ல இவை. நிகழ்கால, நடைமுறை வாக்குறுதிகள். சக்கேயுவின் வாக்குறுதிகளைத் தொடர்ந்து, இயேசு தரும் ஆசீரும், எதிர்காலத்தை குறிக்காமல், "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" (லூக்கா 19: 9) என்று நிகழ்காலத்தில் அமைகிறது.
இந்த வாக்குறுதிகளை, சக்கேயு, 'எழுந்து நின்று' சொன்னதாக நற்செய்தி சொல்கிறது. இயேசுவிடம் இரகசியமாக முணுமுணுக்கப்பட்ட வார்த்தைகள் அல்ல... விருந்தில் கலந்து கொண்டவர்கள், விருந்து பரிமாறிய பணியாட்கள் என்று, அனைவர் முன்னிலையிலும் நிமிர்ந்து நின்று கொடுக்கப்பட்ட வாக்குறுதி இது. சக்கேயு இந்த வார்த்தைகளை 'எழுந்து நின்று' சொன்னபோது, உடல் அளவில், குள்ளமாகவேத் தோன்றினார். ஆனால், மனதளவில் உயர்ந்திருந்தார். முற்றிலும் மாற்றம் பெற்றார். தன்னுடையப் பெயரைச் சொல்லி இயேசு அழைத்த அந்த பரிவு, அன்பு, இந்த மாற்றத்தை உருவாக்கியது.
இயேசுவைச் சந்திக்கும் ஆவல், அந்த ஆவலை நிறைவேற்ற இயேசு எடுத்த முயற்சி, அச்சந்திப்பினால் உருவான வாழ்வு மாற்றம், இறைவனின் நிறைவான அன்பு, மன்னிப்பு, ஆசீர் என்று... இந்நிகழ்வு, அழகிய பல உணர்வுகளைத் தீட்டியுள்ளது.

அன்பு, மன்னிப்பு ஆகியவை, நிரந்தரமான அழகுள்ளவை. “A thing of beauty is a joy forever.” "அழகானது, என்றென்றும் ஆனந்தம் தருவது" என்று கவிஞர் John Keats அவர்கள் எழுதியுள்ளார். கிறிஸ்தவர்களையும், அழகையும் இணைத்து, வேறொருவர் எழுதியது இது: "கிறிஸ்தவர்கள் அழகை விரும்பவேண்டும். எங்கெங்கு அழகு வெளிப்படையாகத் தெரிகிறதோ, அதை மதிக்க வேண்டும். எங்கெங்கு அழகு மறைக்கப்பட்டுள்ளதோ, அதை வெளிக்கொணர வேண்டும். எங்கெங்கு அழகு அழிக்கப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் அதை மீண்டும் உருவாக்க வேண்டும். எங்கெங்கு அழகு இல்லையோ, அங்கெல்லாம் அழகைப் படைக்க வேண்டும்." இதைத்தான் இயேசு இன்று நற்செய்தியில் செய்திருக்கிறார். "நேர்மையற்ற மனிதராய் சக்கேயு மரம் ஏறினார். புனிதராய் அவரை மரத்தினின்று இறக்கினார், இயேசு."

ஒளியிழந்து வாழும் பலர் வாழ்வில் ஒளியேற்ற, நம்மை அழைக்கும் இந்த தீபாவளித் திருநாளன்று, நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தியிலிருந்து, பாடம் ஒன்றைக் கற்றுக் கொள்ளலாம்: ஒருவர் வாழ்வில் உண்மையில் ஒளியேற்ற வேண்டுமெனில், ஒருவரை உண்மையில் மாற்ற வேண்டுமெனில், ஒருவரது உண்மை அழகைப் பார்க்க வேண்டுமெனில், அவர்மீது நாம் கொண்டிருக்கும் முற்சார்பு எண்ணங்களையும், அதன் விளைவாக நாம் குத்தும் முத்திரைகளையும் கிழித்தெறிந்துவிட்டு, அவரது பெயர் சொல்லி அழைப்போம். அவருக்குரிய உண்மை மதிப்பை வழங்குவோம். அவர் உருமாறும் அழகை, புதுமையைக் காண்போம்.



26 October, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 45

“Master, I Have Brought unto Thee My Son,” by Walter Rane (Mark 9:17)

Hang glider என்ற கருவியின் உதவிகொண்டு பறந்த அனுபவம் நம்மில் பலருக்குக் கிடைத்திருக்காது. அப்படி பறந்துசெல்வோரை வீடியோக்களில் பார்த்திருக்கிறோம். அவ்வாறு பறந்துசெல்பவர்கள், தரையிறங்கும்போது, அதிக கவனமாக இறங்க வேண்டும், இல்லையேல் விபத்துக்கள் நேர வாய்ப்புண்டு. காற்றில் மிதந்து வந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து, தரையில் சிறிது நேரம் ஓடி, பின்னரே நிற்க வேண்டும். தரையைத் தொட்டதும், நிற்க முயன்றால், கால் பிசகிப்போக, அல்லது உடைந்தும் போக வாய்ப்பு உண்டு.
உடலால் காற்றில் மிதக்க முடியாவிடினும், பல நேரங்களில், கற்பனைக் குதிரையில், அல்லது, கனவுத் தேரில் ஏறி, மேகங்களில் மிதந்து வந்திருக்கிறோம். அந்நேரங்களில், வாழ்க்கையின் எதார்த்தம், திடீரென, நம்மைத் தரையிறக்கியபோது, அதிர்ச்சி அடைந்திருக்கிறோம்.
பறக்கும் அனுபவம் பற்றி, விவிலியத் தேடலில் ஏன் இன்று பேசுகிறோம் என்ற கேள்வி எழலாம். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு புதுமையில், நம் விவிலியத் தேடல் இன்று துவங்குகிறது. 'தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமாதல்' என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ள இப்புதுமை, (மத். 17:14-20; மாற். 9:14-27; லூக். 9:37-43அ) இயேசுவின் 'தோற்ற மாற்றம்' என்ற நிகழ்வைத் தொடர்ந்து, மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ளது. இப்புதுமையின் ஆரம்பச் சூழல், திடீரென தரையிறங்கியதைப் போன்ற ஓர் அனுபவத்தை, இயேசுவுக்கும், அவரது சீடர்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும்.

தோற்றம் மாறிய நிகழ்வு முடிந்து, இயேசு, மூன்று சீடர்களுடன் மலையிலிருந்து இறங்கி வந்தார். மலைமீது, எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல், ஒரு தெய்வீக அனுபவத்தைச் சுவைத்தபின், தரைக்கு வந்ததும், ஓர் இறுக்கமானச் சூழல் அவர்களை எதிர்கொண்டது. நற்செய்தியாளர் மாற்கு, இச்சூழலை, இவ்விதம் விவரிக்கிறார்:
மாற்கு 9:14-16
அவர்கள் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர். அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?" என்று கேட்டார்.

இறுக்கமான இச்சூழலை ஆய்வு செய்வது, நமக்கு சில பாடங்களைக் கற்றுத்தர இயலும். இயேசுவுடன் பலமுறை வாதாடி, ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்திருந்த மறைநூல் அறிஞர்கள், இயேசு இல்லாத வேளையில், சீடர்களுடன் வாதாட ஆரம்பித்தனர். அந்த வாதம் ஏன் எழுந்தது என்று இயேசு கேட்டபோது, மனம் நொந்திருந்த ஒரு தந்தை, நோயினால் துன்புற்ற தன் மகனைப்பற்றி இயேசுவிடம் கூறுகிறார். அவர் விவரிக்கும் சொற்களைக் கொண்டு பார்த்தால், அச்சிறுவனுக்கு உள்ளது வலிப்பு நோய் என்பதை நாம் உணரலாம்.
பல விவிலிய ஆய்வாளர்கள் கூறும் விளக்கங்களின்படி, அச்சிறுவனுக்கு 12 அல்லது 13 வயதிருக்கலாம். வளர் இளம் பருவத்தில், வலிப்பு நோயினால் துன்புறும் தன் மகனைக் கண்டு, அந்தத் தந்தை எவ்வளவு மனவேதனை அடைந்திருக்க வேண்டும்!

ஆறில் சாகலாம், நூறில் சாகலாம், ஆனால் இளமையில் சாவது கொடுமை என்ற வரிகளை எல்லாரும் கேட்டிருக்கிறோம். இளமை என்பது வாழ்வதற்கு... அந்த இளமைப் பருவத்தில் தீராத நோயுற்றிருக்கும் மகனையோ, மகளையோ காப்பதற்கு, பெற்றோர் மேற்கொள்ளும் போராட்டங்களை அறிவோம். அதேபோல், இளம் பருவத்தில், தவறானப் பழக்கங்களுக்கு அடிமையாகி, குறிப்பாக, போதைப்பொருள் போன்ற கொடிய பழக்கங்களுக்கு அடிமையாகி, அதனால் உடல் நலத்தை இழந்துவிடும் இளையோரையும், அவர்களுக்கு மறுவாழ்வு தருவதற்குப் போராடும் பெற்றோரையும் பற்றி சிந்திக்க, இந்தப் புதுமை நம்மை அழைக்கிறது. வலிப்பு நோயுடன் போராடும் ஒரு சிறுவனையும், அவனைக் காப்பாற்றப் போராடும் அவனது தந்தையையும் இந்தப் புதுமையில் சந்திக்கிறோம்.
மாற்கு 9:17-18
அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப்போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லைஎன்று கூறினார்.

குழந்தைகள் பிறப்பதென்னவோ ஒரு தாயின் உதரத்தில்தான். ஆனால், அர்த்தமற்ற காரணங்களுக்காய், ஆயிரமாயிரம் குழந்தைகள், குப்பைத் தொட்டியிலும், அனாதை இல்ல வாசல்களிலும், கோவில் முகப்புகளிலும் விடப்படுவது, இன்றும் நடக்கும் ஒரு கொடுமை. இக்குழந்தைகள் ஆதரவின்றி விடப்படுவதற்குச் சொல்லப்படும் ஒரு முக்கியக் காரணம், பிறக்கும்போதே ஏதோவொரு குறையோடு குழந்தை பிறப்பது.
குறையோடு பிறந்த ஒரு குழந்தையை யூத சமுதாயத்தில் வளர்ப்பது என்பது, மிகவும் கடினமான ஒரு சவால். எந்த ஒரு நோயும், உடல் குறையும், கடவுளின் சாபம் என்று தப்புக்கணக்கு போட்டு வந்த யூத சமுதாயத்தில், உறவினர், நண்பர்கள், ஊரார் என்று பலரும் சொன்ன பழிச் சொற்கள், அந்த சிறுவனின் பெற்றோரை, ஒவ்வொரு நாளும், வதைத்திருக்க வேண்டும்.
மேலும், குறையோடு பிறக்கும் குழந்தைகள், பெற்றோர் செய்த பாவங்களுக்குக் கிடைத்த ஒரு தண்டனை என்பதும், யூத சமுதாயத்தில் நிலவி வந்த ஓர் எண்ணம் என்பதை, நாம் யோவான் நற்செய்தியில் காண்கிறோம். யோவான் நற்செய்தி 9ம் பிரிவின் ஆரம்ப வரிகள் இந்த எண்ணத்தை உறுதிப்படுத்துகின்றன:
யோவான் 9:1-3
இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். "ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம், இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். அவர் மறுமொழியாக, "இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்" என்றார்.

இவ்வாறு, தன்னையும், தன் மகனையும் இறைவனின் சாபம் பெற்ற பாவிகள் என்று குறை கூறிவந்த அந்த யூத சமுதாயத்தின் பழிச்சொற்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, குறையோடு பிறந்த தன் மகனை வளர்க்க, அச்சிறுவனின் பெற்றோர் அதிகம் போராடியிருக்கவேண்டும்.

இந்தப் போராட்டங்களுக்குத் தீர்வாக, அச்சிறுவனின் தந்தை, சீடர்களின் செபங்களை நாடுகிறார். சீடர்கள் மேற்கொண்ட செப முயற்சி பலனளிக்கவில்லை. இதைக் கண்ட மறைநூல் அறிஞர்கள், ஒரு வாதத்தைத் துவக்குகின்றனர். இதே மறைநூல் அறிஞர்கள், அத்தந்தையையும், மகனையும் பாவிகள் என்று பலமுறை தீர்ப்பு எழுதி, முத்திரை குத்தியிருக்கவேண்டும். எனவே, அத்தந்தை இயேசுவின் சீடர்களிடம் துணைவேண்டி விண்ணப்பித்ததை, அவர்கள் ஏற்கனவே எள்ளி நகையாடியிருக்க வேண்டும். அவர்கள் எண்ணியபடியே, சீடர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோற்றுப்போனதும், மறைநூல் அறிஞர்கள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட, ஒரு விவாதத்தை சீடர்களுடன் துவக்கியிருக்க வேண்டும்.

இத்தகையைச் சூழலில் இயேசு அங்கு வந்து சேர்ந்தார். அங்கு நிலவியச் சூழலையும், சிறுவனின் தந்தை கூறிய விளக்கத்தையும் கேட்ட இயேசு, மனம் நொந்து பேசியதை, நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு பதிவு செய்துள்ளார்:
மாற்கு 9:19
இயேசு அவர்களிடம், “நம்பிக்கையற்ற தலைமுறையினரே. எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்என்று கூறினார்.
இயேசு, மலையிலிருந்து இறங்கிவந்ததும், அங்கு, சீடர்கள், மக்கள், மறைநூல் அறிஞர்கள் என்ற மூன்று குழுவினர் நின்றதை நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிடுகிறார். எனவே, நாம் வாசித்த இப்பகுதியில், இயேசு 'அவர்களிடம்' கூறினார் என்று மாற்கு குறிப்பிட்டிருப்பது யாரைப்பற்றி என்ற கேள்வி எழுகிறது. இதைக் குறித்து, சில விவிலிய ஆய்வாளர்கள் விளக்கும்போது, 'அவர்கள்' என்பது, நோயைக் குணமாக்க முடியாத சீடர்களாக இருக்கலாம்; அல்லது, அவர்களுடன் வாதத்தில் ஈடுபட்டிருந்த மறைநூல் அறிஞர்களாக இருக்கலாம்; அல்லது, பொதுவாக, அங்கு நின்றுகொண்டிருந்த அனைத்து மக்களாகவும் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.


இயேசுவின் சொற்கள், வேதனையையும், சலிப்பையும் வெளிப்படுத்தினாலும், தொடர்ந்து அவர் அங்கு ஆற்றிய புதுமை, சிறுவனை மட்டும் குணமாக்கவில்லை, மாறாக, அச்சிறுவனின் தந்தையையும் முழுமையாகக் குணமாக்கியது. இப்புதுமை நமக்குச் சொல்லித்தரும் பாடங்களை அடுத்தத் தேடலில் கற்றுக்கொள்ள முயல்வோம்.


23 October, 2016

Going to the temple to pray? to brag? கோவிலில் ஒலிப்பது இறைபுகழா? தற்புகழா?



The Parable of the Pharisee and the Tax Collector
30th Sunday in Ordinary Time

We begin this Sunday’s reflections with an interesting story that talks of narcissistic, self-worship: Girolamo Savonarola was one of the great preachers of the fifteenth century. He preached in the great cathedral of Florence, Italy, which contained a magnificent marble statue of the Blessed Virgin Mary. When Savonarola started preaching at this great cathedral, he noticed one day an elderly woman praying before this statue of Mary. He then began to notice that it was her habit to come every day and pray before the statue. Savonarola remarked one day to an elderly priest who had been serving in the cathedral for many years, "Look how devoted and earnest this woman is. Every day she comes and offers prayers to the blessed Mother of Jesus. What a marvelous act of Faith!" But the elderly priest replied, "Do not be deceived by what you see. Many years ago, when the sculptor needed a model to pose for this statue of the blessed Mother, he hired a beautiful young woman to sit for him. This devout worshiper you see here every day, was that young woman. She is worshipping who she used to be." (Rev.Jones)

In a Church, in the presence of God, Mother Mary and the Saints, is it possible to worship oneself? It is possible, says Jesus in today’s Gospel – in the Parable of the Pharisee and the Tax Collector (Luke 18: 9-14). In the 18th chapter, Luke presents two parables together - the Unjust Judge and the Widow, which we read last Sunday, and the Parable of the Pharisee and the Tax Collector.

The opening words of this parable, namely, “Two men went up into the temple to pray…” give an impression that Jesus is teaching on prayer. But, Luke’s introduction to this parable gives us a clue as to the intention of Jesus:  Jesus also told this parable to some who trusted in themselves that they were righteous and despised others. (Lk. 18:9) Luke uses a similar introduction to the parable of the Unjust Judge and the Widow: And he told them a parable, to the effect that they ought always to pray and not lose heart. (Lk. 18:1)
When we take both these parables together, what grabs our attention first is the ‘locus’ (the place of action) Jesus uses for both these parables. We expect a parable on prayer to be situated in a place of worship. But, Jesus narrated this parable without mentioning a temple. He spoke of the widow who kept pursuing the judge wherever he went – the road, the court, the judge’s house, the market place… everywhere. While running from pillar to post, the widow must have raised her heart to God in prayer in all these places. Although Jesus intended to use this parable to teach about perseverance in prayer, we can easily see that Jesus was also teaching an indirect lesson that no place is ‘unfit’ for prayer.

The most fitting place for prayer, as most of us would agree, is the temple. But, Jesus uses the temple, not to teach about prayer, but to teach about pride and/or humility. Jesus used the temple only as a backdrop, while he was concentrating on what was going on in the heart and mind of his two characters – the Pharisee and the Tax Collector. Jesus is telling us indirectly that even in the holiest of places, we can end up worshipping ourselves instead of worshipping God.

When Jesus began the parable with the words: “Two men went up into the temple to pray, one a Pharisee and the other a tax collector”, his listeners would have already drawn their conclusions… namely, the Pharisee would go home with God’s approval for his upright ways, while the tax collector would receive God’s condemnation for his devious ways. These thoughts of the people came crashing down when Jesus dropped a bomb at the end of the parable: “I tell you, this man (the tax collector) went down to his house justified rather than the other (the Pharisee); for every one who exalts himself will be humbled, but he who humbles himself will be exalted.” (Lk. 18:14)

Humility, one of the cardinal Christian virtues, is called the foundation of all the other virtues by Saint Augustine: “Humility is the foundation of all the other virtues. Hence, in the soul in which this virtue does not exist there cannot be any other virtue except in mere appearance.”

C.S.Lewis, the famous British lay theologian, in his book Mere Christianity wrote an article on pride with the title: The Great Sin. Here are some relevant excerpts:
There is one vice of which no man in the world is free; which everyone loathes when he sees it in someone else…There is no fault that makes a man more unpopular, and no fault which we are more unconscious of in ourselves. And the more we have it ourselves, the more we dislike it in others.
The vice I am talking of is Pride or Self-Conceit: and the virtue opposite to it, in Christian morals, is called Humility… According to Christian teachers, the essential vice, the utmost evil, is Pride. Unchastity, anger, greed, drunkenness, and all that, are mere fleabites in comparison: it was through Pride that the devil became the devil: Pride leads to every other vice: it is the complete anti-God state of mind.
Pride is essentially competitive – is competitive by its very nature – while the other vices are competitive only, so to speak, by accident. Pride gets no pleasure out of having something, only out of having more of it than the next man.  We say that people are proud of being rich, or clever, or good-looking, but they are not.  They are proud of being richer, or cleverer, or better looking than others. If every one else became equally rich, or clever, or good-looking there would be nothing to be proud about. It is the comparison that makes you proud, the pleasure of being above the rest. Once the element of competition has gone, pride has gone. 
I guess C.S.Lewis was thinking of the Pharisee in the temple while writing these words, especially the latter half. The Pharisee was trying to impress God, not by stating what he was, but what he was in comparison with others!

The cure for this sickness is the great virtue called Humility! Here is an interesting quote by an anonymous person: “Humility is a paradox. The moment you think you've finally found it, you've lost it. There has yet to be written a book titled, ‘Humility and How I Achieved It.’” The second line of this quote about the book on humility made me laugh. With so many ‘Do-It-Yourself’ and ‘Made Simple’ manuals available in the market, I was wondering when we would see a manual on ‘Humility - Made Simple’. Humility seems like a simple virtue, but, in reality, it is much more complicated. It is so simple that one can take it for granted and thus lose it.

Before we close today’s reflections, a word about this Sunday – the Mission Sunday. The Catholic Church celebrates the Mission Sunday on the penultimate Sunday of October. Combining Mission Sunday with the gospel lesson on humility, gives us an occasion to re-invent Mission Sunday in today’s world. The Catholic Church has been celebrating the Mission Sunday with a subtle tinge of pride about the way we have sent missionaries far and wide into the world and also have prayed for more young persons to take up mission work in the future.
Today it would make more sense if we celebrate the Mission Sunday by sending ‘missionaries’ to the peripheries of human society – as often recommended by Pope Francis. We need to celebrate the ‘Missionary Church’ more as a ‘Field Hospital’ – the famous phrase of Pope Francis!

Pope Francis in his book ‘The Name of God is Mercy’ talks of the present day mission of the Catholic Church: “The Church does not exist to condemn people, but to bring about an encounter with the visceral love of God’s mercy… I often say that in order for this to happen, it is necessary to go out: to go out from the churches and the parishes, to go outside and look for people where they live, where they suffer, and where they hope. I like to use the image of a field hospital to describe this ‘Church that goes forth’. It exists where there is combat. It is not a solid structure with all the equipment where people go to receive treatment for both small and large infirmities. It is a mobile structure that offers first aid and immediate care, so that its soldiers do not die.
“It is a place for urgent care, not a place to see a specialist. I hope that the Jubilee [The Holy Year of Mercy] will serve to reveal the Church’s deeply maternal and merciful side, a Church that goes forth toward those who are ‘wounded’, who are in need of an attentive ear, understanding, forgiveness and love.”

Let us celebrate the Mission Sunday with this tenderness, mercy and humility!

World Mission Sunday - 2016
பொதுக்காலம் - 30ம் ஞாயிறு

அன்னை மரியாவின் புகழ்பெற்ற திருத்தலம் ஒன்றில், ஓர் இளம் அருள்பணியாளர், திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார். பீடத்திற்கருகே, பளிங்கினால் செய்யப்பட்ட அன்னை மரியாவின் உருவச் சிலை வைக்கப்பட்டிருந்தது. வயதான ஒரு பெண், அந்த உருவச் சிலைக்கு முன், அன்னையின் அழகிய முகத்தை உற்று நோக்கியவாறு அமர்ந்திருந்தார். ஒவ்வொரு நாளும், அன்னையின் உருவத்திற்கு முன், அந்தப் பெண், இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்ட இளம் அருள்பணியாளர், அத்திருத்தலத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றிவந்த வயதான அருள்பணியாளரிடம் சென்று, அந்தப் பெண்ணின் பக்தியைப் பற்றி பாராட்டிப் பேசினார்.
அவர் கூறியதைக் கேட்ட அந்த வயதான அருள்பணியாளர், ஒரு புன்சிரிப்புடன், "சாமி, நீங்கள் இப்போது காண்பதை வைத்து ஏமாறவேண்டாம். பல ஆண்டுகளுக்கு முன், இந்த ஊரைச் சேர்ந்த சிற்பி ஒருவர், அன்னை மரியாவின் சிலையைச் செதுக்க, ஓர் அழகிய இளம்பெண்ணை 'மாடலாக'ப் பயன்படுத்தினார். அந்த இளம்பெண்தான் நீங்கள் இப்போது காணும் அந்த வயதானப் பெண்மணி. அவர் ஒவ்வொருநாளும், அன்னையின் திரு உருவத்திற்கு முன் அமர்ந்திருப்பது, பக்தியால் அல்ல. மாறாக, அவர், தன் இளமையையும், அழகையும் ஆராதிக்கவே அங்கு அமர்ந்துள்ளார்" என்று கூறினார்.
புனிதம் நிறைந்த ஆலயத்தில், இறைவனுக்கு முன், அன்னை மரியாவுக்கு முன், புனிதர்களுக்கு முன், ஒருவர் தன்னையே ஆராதிக்க முடியுமா? முடியும் என்று இயேசு, ஓர் உவமை வழியே கூறியுள்ளார். தன் நேரிய, புண்ணியம் மிகுந்த வாழ்வை இறைவனுக்கு முன் பறைசாற்ற கோவிலுக்குச் சென்ற ஒரு பரிசேயரை, இயேசு, இன்றைய நற்செய்தியில், நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

லூக்கா நற்செய்தி, 18ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இரு உவமைகள், சென்ற ஞாயிறும், இந்த ஞாயிறும் நமக்கு நற்செய்தி வாசகங்களாக அமைந்துள்ளன. "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர்" என்று, இன்றைய உவமையை, இயேசு ஆரம்பிக்கிறார். இறைவன், கோவில், வேண்டுதல் என்ற வார்த்தைகளைக் கேட்டதும், இவ்வுவமை, செபிப்பது பற்றிய ஒரு பாடம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், தாழ்ச்சி என்ற உயர்ந்த பாடத்தைச் சொல்லித் தரவே, இயேசு, இந்த உவமைச் சொன்னார் என்பதை, இவ்வுவமையின் அறிமுக வரிகள் நமக்குச் சொல்கின்றன: தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார் (லூக்கா 18: 9) என்று நற்செய்தியாளர் லூக்கா இவ்வுவமையை அறிமுகம் செய்துள்ளார்.
சென்ற ஞாயிறன்று நாம் சிந்தித்த 'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' என்ற உவமையை இயேசு சொன்னதற்கான காரணத்தை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு கூறியிருந்தார்: "அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்" (லூக்கா 18: 1).

அடுத்தடுத்து சொல்லப்பட்டுள்ள இவ்விரு உவமைகளில், இயேசு பயன்படுத்தியிருக்கும் கதைக்களம், நம் கவனத்தை ஈர்க்கிறது. மனிதக் கண்ணோட்டத்தின்படி, மனந்தளராமல் செபிக்கவேண்டும் என்ற கருத்தைச் சொல்ல, கோவில் பொருத்தமானதொரு கதைக்களமாகத் தெரிகிறது. ஆனால், இயேசு கோவிலைப் பயன்படுத்தவில்லை. தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன், கைம்பெண் ஒருவர், நேர்மையற்ற நடுவரை, எல்லா இடங்களிலும் தொடர்ந்தார் என்பதை, இயேசு இவ்வுவமையில் மறைமுகமாகக் கூறியுள்ளார்.
இந்தத் தொடர்முயற்சியின்போது, இக்கைம்பெண், கட்டாயம் இறைவனிடமும் தன் விண்ணப்பத்தை எழுப்பியபடியே சென்றிருப்பார். இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, இடைவிடாமல் செபிக்கவேண்டும் என்ற பாடத்தை மட்டும் அல்ல, கூடுதலாக ஒரு பாடத்தையும் இயேசு சொல்லித்தந்தார் என்பதை உணரலாம். அதாவது, வீதியோரம், நீதிமன்றம், இறை நம்பிக்கையற்ற ஒருவரின் வீட்டு வாசல் என்று, எவ்விடமானாலும், அங்கெல்லாம் இறைவனிடம் செபிக்கமுடியும் என்பதை, சென்ற வார உவமையின் வழியாகச் இயேசு சொல்லித் தந்துள்ளதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்த வார உவமையில், தற்பெருமையுடன் வாழ்வது தவறு என்ற கருத்தை வலியுறுத்த, இயேசு, கோவிலை, தன் கதைக்களமாகத் தேர்ந்துள்ளார். தற்பெருமை தாராளமாக வலம்வரும் அறிஞர்கள் அவை, அரண்மனை, அரசியல் மேடை, விளையாட்டுத் திடல் போன்ற கதைக்களங்களைப் பயன்படுத்தாமல், ஒரு கோவிலை தன் கதைக்களமாகத் தேர்ந்துள்ளார் இயேசு.
உள்ளம் என்ற கோவிலில் இறைவன் குடியிருந்தால், நாம் செல்லும் இடமெல்லாம் புனித இடங்களாகும்; அங்கெல்லாம் நம்மால் செபிக்கமுடியும். அதேநேரம், புனித இடம் என்று கருதப்படும் கோவிலே என்றாலும், அங்கு செல்லும் நம் உள்ளத்தில், 'நான்' என்ற அகந்தை நிறைந்திருந்தால், கோவிலும் சுயவிளம்பர அரங்கமாக மாறும். அங்கு நம்மை நாமே ஆராதனை செய்துவிட்டுத் திரும்புவோம் என்ற எச்சரிக்கை, இந்த உவமையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

"இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்" (லூக்கா 18: 10) என்ற வார்த்தைகளுடன், இயேசு, இந்த உவமையைத் துவக்கியதும், சூழ இருந்த மக்கள், கதையின் முடிவை, ஏற்கனவே எழுதி முடித்திருப்பர். பரிசேயர் இறைவனின் ஆசீர் பெற்றிருப்பார்; வரிதண்டுபவர், இறைவனின் கோபமான தீர்ப்பைப் பெற்றிருப்பார் என்று, மக்கள் முடிவு கட்டியிருப்பர். பரிசேயருடன் ஒப்பிட்டால், வரிதண்டுபவர், மக்கள் மதிப்பில் பல படிகள் தாழ்ந்தவர்தான். உரோமையர்களுக்காக தன் சொந்த மக்களிடமே வரி வசூல்செய்த இவரிடம், நேர்மை, நாணயம், நாட்டுப்பற்று, இறைப்பற்று என்று பல அம்சங்கள் தொலைந்து போயிருந்தன. எனவே, இறைவன் முன்னிலையில், பரிசேயருக்கு ஆசீரும், வரிதண்டுபவருக்கு சாபமும் கிடைத்திருக்கும் என்ற மனநிலையோடு கதையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களின் எண்ணங்களை, தலைகீழாகப் புரட்டிப்போட்டார், இயேசு.

இந்தத் தலைகீழ் மாற்றம் உருவாகக் காரணம், இவ்விருவரும் தங்களைப்பற்றி கொண்டிருந்த தன்னறிவு; அதன் விளைவாக, அவர்கள் இறைவனிடம் கொண்ட உறவு. இவ்விருவருமே தங்களைப்பற்றி இறைவனிடம் பேசுகின்றனர். பரிசேயரும், வரிதண்டுபவரும் கூறிய வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன: பரிசேயர் சொன்னது, 27 வார்த்தைகள். வரிதண்டுபவர் சொன்னதோ 4 வார்த்தைகள். இருவரும் 'கடவுளே' என்ற வார்த்தையுடன் ஆரம்பித்தனர். இந்த முதல் வார்த்தையைக் கேட்டதும், இதைத் தொடரும் வார்த்தைகள், செபமாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், பரிசேயர் பயன்படுத்திய ஏனைய வார்த்தைகளில், அவர் சொன்னது சுய விளம்பரம் என்பது தெளிவாகத் தெரிகிறது. 'கடவுளே' என்ற அந்த முதல் வார்த்தைக்குப் பிறகு, பரிசேயர் சொன்ன மீதி 26 வார்த்தைகளில், தன்னை, பிறரோடு ஒப்பிட்டுப் பேசிய வார்த்தைகளே (16) அதிகம். வரிதண்டுபவரோ தன்னை யாரோடும் ஒப்பிடாமல், 'தான் ஒரு பாவி' என்பதை மட்டும் நான்கு வார்த்தைகளில் கூறியுள்ளார்.

பரிசேயரின் கூற்று, இறைவனின் கவனத்தை வலுக்கட்டாயமாகத் தன்மீது திருப்ப அவர் மேற்கொண்ட முயற்சி. தன்னுடன் சேர்ந்து, அந்தக் கோவிலுக்கு வந்துவிட்ட வரிதண்டுபவரின் மீது இறைவனின் கவனம் திரும்பிவிடுமோ என்ற பயத்தில், அவரைவிட, தான், கடவுளின் கவனத்தைப் பெறுவதற்குத் தகுதி உடையவர் என்பதை, அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் பரிசேயர். சொல்லப்போனால், கடவுளின் பார்வை தன்மேல் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஆவலில், பரிசேயர், கடவுளுக்கே கடிவாளம் மாட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்கு மாறாக, வரிதண்டுபவர் தன்னைப்பற்றி அதிகம் பேசவில்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்: "இறைவா, இதோ நான், இதுதான் நான், இவ்வளவுதான் நான்." தன் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளுதல், அதனை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய அம்சங்கள், உண்மையான தாழ்ச்சியின் கூறுகள். இந்தத் தன்னறிவில், அடுத்தவரை இணைக்காமல், ஒப்பிடாமல் சிந்திப்பது, இன்னும் உயர்ந்ததொரு மனநிலை. எனவே இயேசு, வரிதண்டுபவரை உயர்த்தி, பரிசேயரை தாழ்த்தி, தன் உவமையை நிறைவு செய்தார்: பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் (லூக்கா 18: 14)

தலை சிறந்த ஏழு புண்ணியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது தாழ்ச்சி. இந்தப் புண்ணியத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. "தான் தாழ்ச்சி உள்ளவர் என்று ஒருவர் நினைக்கும் அந்த நொடியில், இந்தப் புண்ணியம் தொலைந்து போகிறது. 'நான் தாழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக அடைந்தேன்' என்ற தலைப்பில் இதுவரை ஒரு நூல் வெளிவந்ததில்லை. அப்படி ஒரு நூல் வெளிவந்தால், அதைவிட முரண்பாடு ஒன்று இருக்கமுடியாது." என்று, ஓர் அறிஞர், தன் பெயரைக் குறிப்பிடாமல் (Anonymous) கூறியுள்ளார்.

பெருமை, பணிவு என்ற இரு மனித உணர்வுகளை, மனநிலைகளை ஆய்வுசெய்ய இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கின்றது. கதாசிரியராக, கவிஞராக, இறையியல் மேதையாக, பேராசிரியாகப் பணியாற்றியவர் C.S.Lewis. இவர், Mere Christianityகுறைந்த அளவு கிறிஸ்தவம் - என்ற நூலை 1952ம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் 'The Great Sin' - பெரும் பாவம் - என்ற தலைப்பில் அகந்தையைப்பற்றி ஆழமான கருத்துக்களைக் கூறியுள்ளார். அக்கட்டுரையின் ஆரம்ப வரிகளே நம்மை ஈர்க்கின்றன:
"எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதரிடமும் ஒரு குறை உள்ளது. மற்றவர்களிடம் இக்குறையைக் கண்டு வெறுக்கும் நாம், அதே குறை நம்மிடம் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இதுதான் அகந்தை" என்று அவர் தன் கட்டுரையை ஆரம்பித்துள்ளார். பின்னர், அகந்தையின் ஒரு முக்கியப் பண்பான ஒப்புமைப்படுத்துதல் என்பதைக் குறித்து அழகாக விவரிக்கிறார்.
ஒப்புமையும், போட்டியும் இன்றி அகந்தையால் வாழமுடியாது. என்னிடம் ஒன்று உள்ளது என்று சொல்வதைவிட, ‘என்னிடம் உள்ளது, அடுத்தவரிடம் உள்ளதை விட அதிகம் என்ற கோணத்தில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவதே அகந்தை. என் திறமை, அழகு, அறிவு இவற்றில் நான் பெருமை கொள்கிறேன் என்று ஒருவர் சொல்கிறார். உண்மையில் அவர் சொல்ல முனைவது வேறு... மற்றவர்களைக் காட்டிலும், அதிகத் திறமையுள்ளவராக, அழகானவராக, அறிவுள்ளவராக இருப்பதில்தான் பெருமை - அதாவது, அகந்தை - கொள்ளமுடியும். சமநிலையில் அழகு, அறிவு, திறமை உள்ளவர்கள் மத்தியில், ஒருவர் அகந்தை கொள்ளமுடியாது. ஒப்புமையோ, போட்டியோ இல்லாதச் சூழலில் அகந்தைக்கு இடமில்லை."
இன்றைய உவமையில் நாம் காணும் பரிசேயர் தன்னை மற்றவர்களோடு ஒப்புமைப்படுத்தி, அதில் தன் பெருமையை நிலைநாட்டுகிறார். இவ்வகைப் போட்டியாலும், ஒப்புமையாலும், அகந்தையில் சிக்கியவர்கள், கடவுளோடும் தொடர்பு கொள்ளமுடியாது. அவர்களைப் பொருத்தவரை, கடவுளும் அவர்களுக்குப் போட்டியே.

இதற்கு மாற்றாக, சொல்லப்படும் புண்ணியம், அடக்கம், பணிவு, தாழ்ச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர். தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம் என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று ஆரம்பமாகும் அடக்கமுடைமை என்ற பிரிவில், அழகிய பத்து குறள்களை நமது சிந்தையில் பதிக்கிறார் திருவள்ளுவர்.

தன் அகந்தையினால் பார்வை இழந்து, இறைவனின் நியமங்களைக் காப்பதாக எண்ணி, கிறிஸ்தவர்களை அழித்துக் கொண்டிருந்த திருத்தூதர் பவுல் அடியார் சொல்லும் வார்த்தைகள் பணிவைப் பற்றிய சிந்தனைகளுக்கு முத்தாய்ப்பாக அமையட்டும்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12 : 9-10
கிறிஸ்து என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

இஞ்ஞாயிறை மறைபரப்பு ஞாயிறென்று கொண்டாட திருச்சபை நம்மை அழைக்கிறது. Mission Sunday என்ற ஆங்கிலச் சொற்றொடரை அப்படியே மொழி பெயர்த்தால், 'அனுப்பப்படும் ஞாயிறு' என்று சொல்லலாம். அனுப்பப்படுதல் என்பது அழகான ஓர் எண்ணம்.
"உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இறைவனிடமிருந்து வரும் பரிசு. இந்தப் பரிசுப் பொருள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியுடன் இவ்வுலகை அடைகிறது. 'இறைவன் இந்த உலகைக் குறித்து இன்னும் களைப்படையவில்லை' என்பதே அச்செய்தி."
இதைச் சொன்னவர் இந்திய மகாக் கவி இரவீந்திரநாத் தாகூர். நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளோம். ஒரு பரிசாக அனுப்பப்பட்டுள்ளோம். உலக வரலாற்றில், மனித வரலாற்றில் நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஓர் இடம் உண்டு. நாம் பிறந்ததற்குத் தனிப்பட்ட ஒரு காரணம் உண்டு. நமக்கேனக் குறிக்கப்பட்டுள்ள, நிர்ணயிக்கப்பட்டுள்ள அந்தக் குறிக்கோளை வேறு ஒருவராலும் நிறைவேற்ற முடியாது.

பணிவைப் பற்றி சிந்திக்கும் இந்த ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவை மறைபரப்பு ஞாயிறு அல்லது, அனுப்பப்படும் ஞாயிறைக் கொண்டாடுவது, பொருத்தமாக உள்ளது. உண்மை இறைவனை அறிவிக்க பல கோடி உன்னத உள்ளங்கள் உலகெங்கும் சென்றனர் என்பதை, பல நூற்றாண்டுகளாக, மறைபரப்பு ஞாயிறன்று பெருமையுடன் கொண்டாடி வந்துள்ளோம். இன்றைய காலக்கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியை பணிவான உள்ளத்துடன் சுமந்து சென்று, அனைவரோடும் பகிர்ந்துகொள்ள உலகெங்கும் செல்வதற்கு, குறிப்பாக, சமுதாயத்தின் விளிம்புகளுக்கத் தள்ளப்பட்டுள்ளவர்களிடம் செல்வதற்கு, இறைவன் வரம் தரவேண்டுமென்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.