20 November, 2016

Approaching the Throne of Mercy இரக்கத்தின் அரியணையை அணுகிவர...


Seven Last Words

The Feast of Christ the Universal King

Loyola College, Chennai, can be proud of so many assets. The Church of Christ the King, at the centre of the campus, is surely one of the best, if not THE best, among those assets. The larger-than-life-size figure of Christ, standing above the main altar with his majestic robe is very impressive. A life-sized statue of the crucified Christ is placed on the left of the altar at ground level. I have seen many students and others standing at the foot of the cross, touching the feet of the crucified Christ and praying.
The Feast of Christ the King brings to mind these two statues in Loyola Church. While Christ the Crucified is so accessible, Christ the King stands beyond easy reach. There is, perhaps, a lesson to be learnt in how these two statues are placed. I have an interesting fantasy: Suppose I take Jesus to Loyola Church and show him both these statues and ask him which one of these two statues would be his favourite… or which one of them would truly represent the Kingship of Christ… he would simply smile at me and ask, “Have you read today’s Gospel?”

Yes, dear friends, not only the Gospel for this year, but the Gospel passages prescribed for the Feast of Christ the King in all the three cycles - A, B, and C - give us a clear picture of what this feast is all about. Today’s gospel is a scene taken from Calvary (Luke 23: 35-43). Last year’s Gospel was the trial scene of Jesus with Pilate (John 18: 33-37) and next year’s Gospel talks of the Last Judgement (Matthew 25: 31-46). In all the three Gospels, there is hardly a hint of pomp and glory. That is the core of this Feast.

All through the life of Christ he avoided, like plague, the idea of being made a king. Right now five instances flash across my mind. The first one is from Matthew. Soon after Jesus was born, the wise men from the East came looking for the ‘King’. Although the star was leading them, their own pre-conceived notions of a king must have taken them to Jerusalem and to Herod’s palace. The capital city and the palace of the king… where else can one look for a king? They asked Herod: “Where is the one who has been born king of the Jews? We saw his star when it rose and have come to worship him.” (Matthew 2: 2) Their innocent question set in motion the massacre of the Holy Innocents.
The second instance of Christ facing the danger of becoming a king is reported by John. Jesus had fed thousands of people through a miracle. After the people saw the sign Jesus performed, they began to say, “Surely this is the Prophet who is to come into the world.” Jesus, knowing that they intended to come and make him king by force, withdrew again to a mountain by himself. (John 6: 14-15)
The third occasion was on the streets of Jerusalem as recorded in all the four Gospels. The next day the great crowd that had come for the festival, heard that Jesus was on his way to Jerusalem. They took palm branches and went out to meet him, shouting, “Hosanna! Blessed is he who comes in the name of the Lord! Blessed is the king of Israel!” (John 12: 12-13)

Both in the second as well as the third instances Jesus knew full well that his people were looking for quick solutions to their problems and hence were swayed by the frenzy of the moment. Such ‘loyalty’, Jesus knew, would vanish at the first sign of a problem. It came within days of the glorious entry of Jesus into Jerusalem. The very same streets which resounded with ‘Hosanna’, either fell silent or turned hostile with the chant of ‘crucify him’, prompted by the Pharisees and the religious leaders. Talk of crowd psychology, where ‘loyalty’ is wafer thin!

The fourth instance of Jesus facing the idea of kingship was in front of Pilate. We reflected on this passage last year. “You are a king, then!” said Pilate. Jesus answered, “You say that I am a king. In fact, the reason I was born and came into the world is to testify to the truth. Everyone on the side of truth listens to me.” (John 18: 37) Jesus was trying to tell Pilate how he was mistaken in calling him a king. But Pilate was too pre-occupied with how he should please his emperor, Caesar.

The fifth instance is given in today’s Gospel (Luke 23: 35-43). Jesus was hanging on the cross. The inscription over his head read: Jesus of Nazareth, King of the Jews! What an irony! What Jesus was running away from, all his life, is now nailed along with him on the cross. On Calvary, that day, his kingship was ridiculed by the Roman soldiers. These soldiers had a clear idea of a king or an emperor. They had served quite a few of them. This man on the cross? A king? Tell me a better joke!… They must have laughed their heart out, if they had one.
In the midst of such noisy ridicules and taunts, came the feeble voice of one of the crucified persons with a petition to the King: “Jesus, remember me when you come into your kingdom.” (Luke 23: 42) When those around Jesus could not even recognise a human being in the form of the crucified one, how come this man saw a King?
We have heard from history that some of the kings and leaders, by the dignity they showed in times of great trials, even as they walked to their gallows, have earned the respect of their worst enemies. Such was their nobility! They were truly kings! The magnanimity shown by Jesus on the cross must have influenced the ‘good thief’ to submit such a beautiful petition to the King.

In all these five instances of the Gospels, we hardly see Jesus responding to any of them (except in the case of Pilate… and since Pilate was scared of facing the ‘truth’, Jesus could not make any honest impression on him!). In the last instance, on Calvary, Jesus responded to the ‘good thief’… and, what a response! Jesus answered him, “Truly I tell you, today you will be with me in paradise.” (Luke 23: 43) Jesus exercised his regal power to assure the criminal of eternal redemption. When death beckons people, quite many of them become enlightened!

Here is a lovely anecdote on how a dying person gets enlightened by a movie:
The King of Kings is a silent film directed by Cecil B.De Mille in 1927.  It is a religious movie about the last weeks of Jesus on earth. It was a production acclaimed by world-famed scholars, the press and the public in the U. S. and abroad, as the most ambitious presentation of the final years of the life of Jesus ever pictured on the screen. It was seen by over a billion people all over the world. De Mille claimed that the most important tribute to the movie he had ever received came from a woman who had only a few days to live. Her nurse wheeled her to a hall in the hospital to see the movie. After viewing the whole movie she wrote to the producer De Mille: “Thank you sir, thank you for your King of Kings. It has changed my expected death from a terror to a glorious anticipation.”
This dying woman shared the feelings of the good thief who heard the promise of Jesus: “Today you will be with me in paradise.” Both of them were suffering, both expected death and both received new hope from the dying King of kings.
The criminal gives us a lesson in how to look for Christ the King and his Kingdom in the most ‘un-kingly’ circumstances. We pray that God, the Eternal King, helps us become humble enough to learn the lessons given by the criminal.

Two little P.S.s: November 20, this Sunday, Pope Francis closes the Holy Door in St Peter’s Basilica and thus brings to close the Extraordinary Jubilee of Mercy. Quite a few Cardinals and Bishops who, last Sunday, officiated in the closing of holy doors around the world, have expressed the following idea in various ways: Although we close the Holy Doors made of wood or metal, we need to keep the door of our hearts, made of flesh and blood, open, since the Jubilee can end, but not Mercy!
November 20, is the Universal Children's Day. November 14, the birthday of Jawaharlal Nehru, is celebrated as Children’s Day in India. When we use the word ‘celebrate’ along with Children’s Day, some uneasiness creeps in. We are sadly aware that millions of children have anything but ‘celebration’ in their life. On November 16, last Wednesday, Pope Francis, during the General Audience, made a special appeal for children. Here are his own words:
"I appeal to everyone’s conscience, to institutions and families, so that children are always protected and their welfare is protected, so that they never fall into forms of slavery, recruitment into armed groups or mistreated. I hope that the international community remain vigilant over these lives, ensuring every child the right to a school education so that their growth is serene and they can look confidently to the future".

May Christ the King, born in a manger and endured very tough childhood, and now seated on the Throne of Mercy, help millions of children to tide over their insurmountable odds. May we continue to approach the Throne of Mercy to replenish our hearts, so that we can continue the Jubilee of Mercy in the days to come, especially for the sake of needy children!

Christ the King Church, Loyola, Chennai

உலகின் அரசர் கிறிஸ்து பெருவிழா

சென்னை, லொயோலா கல்லூரி வளாகத்தின் மையத்தில் அமைந்துள்ளது, கிறிஸ்து அரசர் ஆலயம். அந்த ஆலயத்தில், பீடத்திற்கு மேல், கிறிஸ்து அரசரின் திருஉருவம், தன் இரு கரங்களையும் விரித்தபடியே நிற்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தின் இடது பக்கம், சிலுவையில் இரு கரங்களும் அறையப்பட்டுத் தொங்கும் இயேசுவின் உருவமும் வைக்கப்பட்டுள்ளது. சிலுவையில் தொங்கும் இயேசுவின் உருவம், தரைமட்டத்தில் வைக்கப்பட்டிருப்பதால், பலர் அந்த உருவத்தின் பாதங்களைத்  தொட்டபடி, கண்களை மூடி செபிப்பதைப் பார்த்திருக்கிறேன்.
கிறிஸ்து அரசரின் உருவம், எளிதில் எட்டமுடியாத உயரத்தில் இருப்பதும், சிலுவையில் தொங்கும் கிறிஸ்துவின் உருவம், மக்களின் கரங்கள் பட்டுத் தேய்ந்திருப்பதும், நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள, இஞ்ஞாயிறு கொண்டாடப்படும் கிறிஸ்து அரசர் திருவிழா நம்மை அழைக்கிறது. கல்லூரியில் உள்ள அந்தக் கோவிலுக்கு இயேசுவை அழைத்துச் சென்று, கிறிஸ்து அரசர் உருவம், சிலுவையில் தொங்கும் உருவம் இரண்டையும் காட்டி, அவ்விரு உருவங்களில் அவருக்கு மிகவும் பிடித்த உருவம், அல்லது அவரது அரசத் தன்மையைக் காட்டும் உருவம் எது என்று கேட்டால், நம் கேள்விக்குரிய பதில், இன்றைய நற்செய்தியில் உள்ளது என்று இயேசு கூறுவார்.

இன்றைய நற்செய்தி மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கென திருஅவை தெரிவு செய்துள்ள நற்செய்தியை வாசிக்கும்போது, இவ்விழாவின் மையப் பொருளை, அறிந்துகொள்ள முடியும். இன்றைய நற்செய்தியில் (லூக்கா 23: 35-43) தரப்பட்டுள்ளது, கல்வாரியில் நிகழ்ந்த காட்சி. சென்ற ஆண்டு, இவ்விழாவுக்குத் தரப்பட்ட நற்செய்தி, பிலாத்து இயேசுவைச் சந்தித்தக் காட்சி. (யோவான் 18: 33-37) அடுத்த ஆண்டு இவ்விழாவுக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி, இறுதித் தீர்வையன்று நடைபெறும் காட்சி. (மத்தேயு 25: 31-46) இம்மூன்று நற்செய்திகளையும் வாசிக்கும்போது, கிறிஸ்துவை அரசர் என்று அழைப்பதன் உட்பொருளை ஓரளவு உணர முடிகிறது.

இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, அவரை அரசராக எண்ணிப் பார்த்தவர்கள், அரசராக்க முயன்றவர்கள் ஒரு சிலர். நற்செய்தியில், இயேசுவை, அரசர் என்று கூறிய முதல் மனிதர்கள், கீழ்த்திசை ஞானிகள். இயேசு பிறந்ததும், அவரைக் காண நெடுந்தூரம் பயணம் செய்து வந்த ஞானிகள் செய்த ஒரே தவறு என்ன? அவர்கள் தேடி வந்த அரசர், உலக அரசரைப் போல் அரண்மனையில் இருப்பார் என்று தப்புக் கணக்கு போட்டனர். எனவே, ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்றனர். ஏரோதிடம், யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்என்றார்கள். (மத்தேயு 2: 2) கள்ளம் கபடின்றி அவர்கள் கேட்ட அந்தக் கேள்வி, பல நூறு கள்ளம் கபடற்ற குழந்தைகளின் உயிரைப் பலி வாங்க, காரணமானது.

இரண்டாவது நிகழ்வு, யோவான் நற்செய்தி 6ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இயேசு அப்பத்தைப் பலுகச்செய்து, மக்களின் பசியைத் தீர்த்தார். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். (யோவான் 6 : 14-15)

மூன்றாவது நிகழ்வு, எருசலேம் வீதிகளில் நடந்தது. திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டுபோய், 'ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். (யோவான் 12: 12-13) (மேலும் காண்க: லூக். 19: 38; மாற். 11: 9-10; மத். 21: 9)
வயிறார உண்டதால் மக்கள் நடுவே எழுந்த ஆர்வம், இயேசுவை அரசராக்கத் துடித்தது. தங்களை மீட்க ஒருவர் வரமாட்டாரா என்ற ஏக்கம், எருசலேம் வீதிகளில், ஆரவாரமாய், ஓசன்னா அறிக்கையாக மாறியது. ஆனால், இப்படி அந்தந்த நேரத்தின் தேவைக்கேற்ப தோன்றி மறையும் ஆர்வமோ, ஆரவாரமோ நிலைத்திருக்காது என்பது, தொடர்ந்த சில நாட்களிலேயே நிரூபணமானது. இயேசுவுக்கு அரச மரியாதை கொடுத்து வாழ்த்தியக் கூட்டம், அதே வீதிகளில், அவர் சிலுவை சுமந்து சென்றபோது, பயந்து ஒதுங்கியது, அல்லது, இயேசுவின் எதிரணியாகத் திரண்ட கூட்டத்தில் சேர்ந்துவிட்டது.

இயேசுவை அரசர் என்று கூறும் நான்காவது நிகழ்வு, பிலாத்துவின் அரண்மனையில் நடந்தது. இயேசுவை அரசர் என்று, பிறர் சொல்லக்கேட்டு பயம்கொண்ட பிலாத்து, இயேசுவிடமே, நீர் அரசரா?” என்று கேட்டார். அந்தக் கேள்வியின் உண்மையான பதிலைக் கண்டுபிடிக்கவும் பிலாத்து பயந்தார். இந்த நிகழ்வை, சென்ற ஆண்டு, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, நற்செய்தியின் வழி சிந்தித்தோம். (யோவான் 18 : 37)

அரசர் என்று இயேசு அழைக்கப்பட்ட ஐந்தாவது நிகழ்வு, கல்வாரியில் நடந்தது. இது, இன்றைய நற்செய்தியாக நம்மை வந்தடைந்துள்ளது. இயேசுவை அரசராகப் பார்க்கமுடியாத உரோமைய வீரர்களின் ஏளனக் குரலும், இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொண்ட குற்றவாளியின் ஏக்கக் குரலும் இன்றைய நற்செய்தியில் ஒலிக்கின்றன.
உரோமைய வீரர்கள், பல அரசர்களைச் சந்தித்தவர்கள். பல அரசர்களுக்குப் பணிவிடை செய்தவர்கள். அவர்களுக்குத் தெரிந்த அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலுவையில், குற்றவாளி போல் தொங்கிக் கொண்டிருந்த இயேசு, ஒரு பரிதாபமான, போலி அரசனாகத் தெரிந்தார். அவர்களது ஏளனத்திற்குத் தூபம் போடும் வகையில், அந்தச் சிலுவை மீது "இவன் யூதரின் அரசன்" என்று ஏக வசனத்தில் எழுதி, வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஏளனக் குரல்களுக்கு நேர்மாறாக, இயேசுவுடன் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் ஏக்கக் குரல், இயேசுவின் அரசத் தன்மையை வெளிப்படுத்துகிறது. இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும். (லூக்கா 23: 42) என்று, அந்தக் குற்றவாளியிடமிருந்து விண்ணப்பம் ஒன்று எழுகிறது. மனிதன் என்று கணிக்கமுடியாத அளவு காயப்பட்டு, ஒரு கந்தல் துணிபோல் சிலுவையில் மாட்டப்பட்டிருந்த அந்த உருவத்தில், ஓர் அரசரைக் கண்டார், அந்தக் குற்றவாளி. அவர் இயேசுவிடம் கண்ட அரசத்தன்மைதான் என்ன?

உலக மன்னர்களில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டபோது, அல்லது அவர்கள் தூக்கு மேடைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர்கள் காட்டிய கண்ணியம், அமைதி, ஆகியவை, எதிரிகளையும் அவர்கள் மீது மரியாதை காட்டவைத்தது என்று, வரலாறு சொல்கிறது. அந்த கண்ணியத்தை, அந்த அமைதியை, இயேசுவிடம் கண்டார், இந்தக் குற்றவாளி. அவர் கண்களில், இயேசு, அறையுண்டிருந்த சிலுவை, ஒரு சிம்மாசனமாய்த் தெரிந்தது. அவர் தலையில் சூட்டப்பட்ட முள்முடி, மணி மகுடமாய்த் தெரிந்தது. எனவே, அந்த அரசரிடம், தன் விண்ணப்பத்தை வைத்தார், அந்தக் குற்றவாளி.

நாம் சிந்தித்த முதல் நான்கு நிகழ்வுகளில், இயேசு தவறான முறையில் "அரசன்" என்று கருதப்பட்டார். அவர்களில் யாருக்கும் இயேசு சரியான பதில் கூட சொல்லவில்லை. தன்னை வாழ்வில் அரசரென அழைத்த, அல்லது அரசராக்க முயன்ற பலருக்கும் பதில் தராத இயேசு, இந்தக் குற்றவாளிக்குப் பதில் தருகிறார். தனது உண்மையான அரசை, தனது உண்மையான அரசத் தன்மையை இந்தக் குற்றவாளி கண்டுகொண்டார் என்பதை இயேசு உணர்ந்ததால், அவருக்கு மட்டும் சரியான பதிலைத் தருகிறார். நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்(லூக்கா 23: 43) என்று உறுதியளிக்கிறார், இயேசு.

1927ம் ஆண்டு வெளியான ஒரு புகழ்பெற்ற திரைப்படம், "The King of Kings". இந்த மௌனப்படம், இயேசு இவ்வுலகில் வாழ்ந்த இறுதி வாரங்களைத் திரைக்குக் கொணர்ந்தது. இத்திரைப்படம், பல கோடி மக்களால் பாராட்டு பெற்றாலும், இதன் இயக்குனர், Cecil B.De Mille அவர்கள், தனக்கு கடிதமாக வந்து சேர்ந்த ஒரே ஒரு பாராட்டு மட்டுமே தன் உள்ளத்தைத் தொட்டதென்று கூறினார். அந்த மடலை எழுதியவர், இறக்கும் நிலையில் இருந்த ஒரு பெண்.
ஒரு சில நாட்களே வாழப்போகிறோம் என்பதை உணர்ந்த அந்தப் பெண், சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம் இத்திரைப்படத்தைப் பார்த்தார். பின்னர், அவர் இயக்குனர் Cecil அவர்களுக்கு ஒரு மடல் அனுப்பினார். "The King of Kings திரைப்படத்திற்காக உங்களுக்கு மிக்க நன்றி. சாகப்போவதை எண்ணி இதுவரை பயந்த என் மனதில், இப்போது, ஆவலுடன் மறுவாழ்வை எதிர்பார்க்கும் மகிழ்வு வந்துள்ளது" என்று அப்பெண்மணி தன் மடலில் எழுதியிருந்தார். அந்தப் பெண் உணர்ந்த எதிர்பார்ப்பு, கல்வாரியில் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளியின் மனதிலும் எழுந்தது.

சிலுவை மரணங்கள் கொடூரமானவை. உரோமையர்கள் கண்டு பிடித்த சித்தரவதைகளின் கொடுமுடியாக, சிகரமாக விளங்கியது, சிலுவை மரணம். சிலுவையில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. அணு அணுவாக சித்ரவதை பட்டு சாவார்கள். கைகளில் அறையப்பட்ட இரு ஆணிகளால் உடல் தாங்கப்பட்டிருந்ததால், உடல் தொங்கும். அந்த நிலையில் மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். மூச்சு விடுவதற்கு உடல் பாரத்தை மேலே கொண்டுவர வேண்டியிருக்கும். அப்படி கொண்டு வருவதற்கு, ஆணிகளால் அறையப்பட்ட கைகளையே பயன்படுத்த வேண்டியிருக்கும். இப்படி, விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் அவர்கள் மரண வேதனை அனுபவித்தார்கள்.
இந்த வேதனையின் உச்சியில், சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம், வெறுப்புடன் வெளி வரும். தங்களை, பிறரை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு, நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்என்று வழங்கிய வாக்குறுதி, அந்தக் குற்றவாளிக்கு மட்டுமல்ல, கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, கோடான கோடி மனிதர்களுக்கு, நம்பிக்கை வழங்கியுள்ளது. அந்த நம்பிக்கையை, நாம், கிறிஸ்து அரசர் திருவிழாவில் கொண்டாடுகிறோம்.

இறுதியாக இரு எண்ணங்கள். இன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் புனிதக் கதவை மூடி, நாம் கடந்த ஓராண்டளவாய்க்  கொண்டாடிவந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிறைவுக்குக் கொணர்கிறார். மரத்தாலும், இரும்பாலும் செய்யப்பட்ட புனிதக் கதவுகள் உலகெங்கும் மூடப்பட்டாலும், இரத்தத்தாலும், சதையாலும் செய்யப்பட்ட இதயத்தின் கதவுகள் இனியும் திறந்திருக்க வேண்டும் என்று, இறைவனிடம் மன்றாடுவோம்.
இன்று, நவம்பர் 20, அகில உலகக் குழந்தைகள் நாள் (Universal Children's Day). நவம்பர் 14 கடந்த திங்களன்று இந்தியாவில் குழந்தைகள் நாள் கொண்டாடப்பட்டது. பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது மனதுக்குள் ஆயிரம் நெருடல்கள். இந்த நெருடல்களில் சிலவற்றை, நவம்பர் 16, கடந்த புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வி உரையின் இறுதியில், ஒரு விண்ணப்பமாக வெளியிட்டார்:

"நான் அனைவருடைய மனசாட்சிக்கும், அனைத்து குடும்பங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஒரு விண்ணப்பத்தை முன்வைக்கிறேன். குழந்தைகள் எப்போதும் பாதுகாக்கப்படவேண்டும், அவர்களது நலமான வாழ்வு உறுதி செய்யப்படவேண்டும். அடிமைத்தனத்தின் பல்வேறு கொடுமைகளுக்கு அவர்கள் உள்ளாகாமல் பாதுகாக்கப்படவேண்டும். ஆயுதம் தாங்கிய குழுக்கள் இவர்களை வேட்டையாடுவதிலிருந்து, காக்கப்படவேண்டும். குழந்தைகள் மீது கண்ணும் கருத்துமாக இருந்து, அவர்களுக்கு உரிய கல்வியை வழங்குவதிலும், அவர்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதிலும் அனைத்துலக சமுதாயம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்" என்று திருத்தந்தை விண்ணப்பித்தார்.
வருங்காலச் சந்ததியினரைப்பற்றியக் கவலை சிறிதும் இன்றி வாழும் நம் மனசாட்சியை இறைவன் விழித்தெழச் செய்வாராக. நிறைவுறும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி, இவ்வுலகில் உருவாக்கிய இரக்க உணர்வுகள், தொடர்ந்து நம் இதயங்களை, அயலவர் பக்கம், குறிப்பாக, குழந்தைகள் பக்கம் திருப்பட்டும்.


The Crucified King

16 November, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 47

The poor place their hands on the Pope's shoulders and pray
Photo – L’Osservatore Romano

The poor surround the Pope and pray over him
Photo – L’Osservatore Romano

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு, நவம்பர் 20, வருகிற ஞாயிறன்று நிறைவுபெறுகிறது. கடந்த ஆண்டு, டிசம்பர் 8, அமல அன்னை மரியா பெருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனிதக் கதவைத் திறந்து, இரக்கத்தின் சிறப்பு யூபிலியைத் துவக்கி வைத்தார். இவ்வாண்டு நவம்பர் 20, கிறிஸ்து அரசர் திருவிழாவன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், புனிதக் கதவை மூடுவதன் வழியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த யூபிலி ஆண்டை நிறைவுக்குக் கொணர்கிறார்.

திருஅவை வரலாற்றில், இதுவரை கொண்டாடப்பட்ட பல யூபிலி ஆண்டுகளை, பொதுவாக, திருத்தந்தையர், கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், பக்த சபையினர், இரக்கப் பணியாளர்கள், பொதுநிலையினர் ஆகியோர் கூடிவந்து சிறப்பித்துள்ளனர். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதி இருவாரங்கள் வத்திக்கானில் கூடியவர்களைப் பார்க்கும்போது, நாம் கொண்டாடிவந்த யூபிலி வரலாற்றில் ஒரு மாற்றம் நிகழ்ந்ததைக் காண முடிகிறது. ஆம், நவம்பர் 5, 6 மற்றும் நவம்பர் 11, 12, 13 ஆகிய நாள்களில், இதுவரை, திருஅவை வரலாற்றின் யூபிலி விழாக்களில் கலந்துகொள்ளாத விருந்தினர்கள், வத்திக்கானுக்கு வரவழைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் – சிறைப்பட்டோர் மற்றும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர்.

'யூபிலி' கொண்டாட்டங்கள் ஏன் உருவாக்கப்பட்டன என்ற கேள்விக்கு விவிலியத்தில், விடை தேடும்போது, சிறைப்பட்டோர் மற்றும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர் அங்கு கூறப்பட்டுள்ளனர். "ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பது, சிறைப்பட்டோர் விடுதலை அடைவது, பார்வையற்றோர் பார்வை பெறுவது, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவது" (லூக்கா 4:18-19) ஆகியவை, அருள்தரும் ஆண்டில் நிகழவேண்டிய அற்புதமானப் பணிகள் என்று இயேசு அறிவித்ததை, நாம், லூக்கா நற்செய்தி 4ம் பிரிவில் வாசிக்கிறோம். இந்தப் பட்டியலில், சிறைப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அல்லது, ஒதுக்கப்பட்டோர் இடம்பெற்றுள்ளனர். சிறைப்பட்டோரும், ஒதுக்கப்பட்டோரும் யூபிலியைக் கொண்டாட, அதிகாரப்பூர்வமாக, வத்திக்கானுக்கு அழைக்கப்பெறுவது, திருஅவை வரலாற்றில் இதுவே முதல் முறை என்று, இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பேராயர் ரீனோ பிசிக்கெல்லா (Rino Fisichella) அவர்கள் கூறியுள்ளார்.

நவம்பர் 6, கடந்த ஞாயிறு, காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் சிறைப்பட்டோரின் யூபிலித் திருப்பலியை திருத்தந்தை நிறைவேற்றினார். இத்தாலி, இங்கிலாந்து, மலேசியா, மெக்சிகோ, தென்னாப்ரிக்கா உட்பட, 12 நாடுகளிலிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்த கைதிகள், அவர்களது குடும்பத்தினர், சிறைக்காவலர்கள், கைதிகள் நடுவே பணியாற்றும் அருள்பணியாளர்கள் என, 4000த்திறகும் அதிகமானோர், இந்த யூபிலித் திருப்பலியில் கலந்துகொண்டனர்.
அதேவண்ணம், நவம்பர் 13ம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை ஆற்றிய திருப்பலியில், 22 நாடுகளில், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர் 6000த்திற்கும் அதிகமாகக் கலந்துகொண்டனர்.
பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைச் சின்னமாக விளங்கும் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், சிறைக்கைதிகளும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரும் பங்கேற்ற திருப்பலிகள் முதன்முறையாக நிகழ்ந்தன என்பது, நம் திருஅவைக்கு, புதியதோர் இலக்கணத்தை வகுக்கிறது.

எந்த ஒரு நிகழ்விலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களைச் சந்திக்கும் வேளைகளில், அவராகச் சென்று மக்களை அணைத்து ஆசீரளிப்பதும், அல்லது, மக்கள் தாங்களாகவே வந்து திருத்தந்தையை அணைப்பதும், குறிப்பாக, குழந்தைகளும், சிறுவர், சிறுமியரும் தயக்கமேதுமின்றி அவரிடம் தாவிச் செல்வதும் நாம் அடிக்கடி பார்த்துவரும் காட்சிகள். நவம்பர் 11, கடந்த வெள்ளியன்று, வத்திக்கானில் நிகழ்ந்த ஒரு காட்சி, கட்டாயம் பலரின் மனதில் முதல் முறை பதிந்த ஓர் அற்புத அனுபவமாக அமைந்திருக்கும்.
நவம்பர் 11, வெள்ளியன்று, அருளாளர் 6ம் பவுல் அரங்கத்தில், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர், ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். அச்சந்திப்பில், வறியோர் இருவர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தது, அதன்பின் திருத்தந்தை உரை வழங்கியது அகியவை வழக்கம்போல் நிகழ்ந்தன. தன் உரையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைவருக்காகவும் செபித்தபின், மேடையில் ஓர் அற்புத நிகழ்வு இடம்பெற்றது. அதாவது, மேடையில், திருத்தந்தைக்கு இருபுறமும் அமர்ந்திருந்த அனைத்து வறியோரும் திருத்தந்தையைச் சூழ்ந்து நின்று, அவரது தோள்களில் கரங்களை வைத்து செபித்தனர். அந்நேரம், "படைத்திடும் தூய ஆவியாரே இறங்கிவாரும்" என்ற பாரம்பரிய பாடலும், அதைத்தொடர்ந்து ஒரு சிறு செபமும் சொல்லப்பட்டது. வறியோரின் கரங்கள் திருத்தந்தையின் தோள்மீது பதிந்திருக்க, திருத்தந்தை கண்களை மூடி செபித்தது, பலருக்கு, 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, புனித பேதுரு வளாகத்தில் நிகழ்ந்ததை நினைவுக்குக் கொணர்ந்திருக்கும்.
வரலாற்று சிறப்புமிக்க அந்த நாளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் மேல் மாடத்தில் முதல்முறையாக மக்களைச் சந்திக்க வந்தார். அப்போது, உரோமைய ஆயராகிய தான், மக்களுக்கு ஆசீர் வழங்குவதற்கு முன், மக்கள் தனக்காக செபிக்கும்படி விண்ணப்பித்து, வளாகத்தில் கூடியிருந்தோர் முன்னிலையில், திருத்தந்தை தலைவணங்கி நின்றார். தன் தலைமைப் பணிக்கு, தனிப்பட்ட ஒரு முத்திரையை, அத்தருணத்தில், திருத்தந்தை பதித்தார் என்று, இன்றளவும் பலர் கூறி வருகின்றனர்.
அன்று மக்களின் செபங்களுக்காகத் தலைவணங்கி நின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வெள்ளியன்று, வறியோர் நடுவில் மீண்டும் தலைவணங்கி நிற்க, அவர்கள், அவரது தோள் மீது கரங்களை வைத்து செபித்தனர். வறியோரின் கரங்களால் ஒரு திருத்தந்தை ஆசீர்பெற்றது, திருஅவை வரலாற்றில், பல நூற்றாண்டுகளாக இடம் பெறாத ஒரு நிகழ்வு என்று நிச்சயம் சொல்லலாம்.

நவம்பர் 11ம் தேதி, திருத்தந்தை வழங்கிய உரையில் அவர் கூறிய ஒரு சில கருத்துக்கள் நம் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிகின்றன. கிறிஸ்டியன், இராபர்ட் என்ற இருவர் அன்றையப் பகிர்வில் கூறிய கருத்துக்களை அடித்தளமாகக் கொண்டு, திருத்தந்தை, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். வறியோர் இவ்வுலகிற்குச் சொல்லித்தரக் கூடிய நான்கு பாடங்களைக் குறித்து, திருத்தந்தை மனம் திறந்து  பேசினார். கனவு காணுதல், அழகை உணர்தல், உறுதுணையாக இருத்தல், அமைதிக்குச் சான்று பகிர்தல் என்ற நான்கு வழிகளை, வறியோர் இவ்வுலகிற்குச் சொல்லித்தர வேண்டும் என்று, திருத்தந்தை கேட்டுக்கொண்டார். கனவு காண்பதிலும், அக்கனவுகளை நனவாக்க தீவிர ஆர்வம் கொள்வதிலும், மனிதப் பிறவிகள் என்ற முறையில், வறியோருக்கும் செல்வந்தருக்கும் வேறுபாடு இல்லை என்று, கிறிஸ்டியன் சொன்னதை வைத்து, திருத்தந்தை தன் முதல் கருத்தைப் பகிர்ந்தார்:
"என்னைப் பொருத்தவரை, எவர் ஒருவர், கனவு காணும் சக்தியை இழக்கிறாரோ, அவர்தான் உண்மையான ஏழை. கூரை ஏதுமின்றி திறந்தவெளியில் படுத்திருக்கும் நீங்கள் கனவு காண்கிறீர்கள். அத்தகைய அனுபவம் எனக்கு இல்லை. ஆனால், நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உரோம் நகருக்குச் செல்லவேண்டும் என்று உங்களில் பலர் கனவு கண்டிருப்பீர்கள். இன்று அது நிறைவேறியுள்ளது. இந்த உலகம் மாறும் என்று கனவு காண்கிறீர்கள். அதுவும் நடக்கும் என்று நம்புங்கள்.
யாரால் கனவுகாண முடியும்? தேவையில் யார் இருக்கிறார்களோ, அவர்களால்தான் கனவுகாண முடியும். வாழ்வில் அனைத்தையும் அடைந்துள்ளவர்களால் கனவு காண முடியாது. மிக எளிய மக்கள், மனதில் கனவுகளைச் சுமந்து, இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.
எனவே, நான் உங்களுக்கு ஒரு விண்ணப்பத்தை முன்வைக்கிறேன். கனவு காண்பது எப்படி என்று எங்களுக்குச் சொல்லித்தாருங்கள். உறுதியான கூரைகளுக்குக் கீழ் படுத்துக்கொண்டு, உணவு, மருந்து என்பனவற்றில் தேவைகள் ஏதுமின்றி இருக்கும் எங்களுக்கு, கனவு காண்பது பற்றி சொல்லித் தாருங்கள். நற்செய்தியின் அடிப்படையில் கனவு காண்பது எப்படி என்று எங்களுக்குச் சொல்லித் தாருங்கள்."

கனவு காண்பதைக் குறித்து இவ்வாறு பேசியத் திருத்தந்தை, 'இவ்வுலக வாழ்வு அழகானது' என்று இராபர்ட் சொன்ன கருத்தைப் பாராட்டினார். பின்னர் அழகையும், மனித மாண்பையும் இணைத்து திருத்தந்தை கூறியது இதுதான்:
"மிகவும் வறுமைப்பட்ட நிலையிலும், வேதனையானச் சூழலிலும், ஒருவர் இவ்வுலகின் அழகை உணர்கிறார் என்றால், அவர் ஆழ்மனதில் தன்னைப்பற்றிய மதிப்பை இழக்கவில்லை என்பதே அதன் பொருள். நீங்கள் வறுமைப்பட்டிருக்கிறீர்கள்; ஆனால், உங்கள் அடிப்படை மாண்பை இழந்த அடிமைகளாகவில்லை. எக்காரணம் கொண்டும் உங்கள் மாண்பை இழந்துவிடாதீர்கள். வறுமை, நற்செய்தியின் உயிர் நாடியாக உள்ளது. அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதும், நற்செய்தியின் அடிப்படை உண்மைகளில் ஒன்று."
தான் வறுமையில் இருந்தாலும், தன்னைவிட மற்றொருவர் இன்னும் அதிகத் தேவையிலும், துன்பத்திலும் இருக்கிறார் என்பதை உணரும்போது, அவருக்கு உதவுவது பற்றி இராபர்ட் கூறியதை வைத்து, திருத்தந்தை தன் மூன்றாவது கருத்தை இவ்வாறு பகிர்ந்துகொண்டார்:
"வறுமை, ஒருவர் வாழ்வில் விளைவிக்கும் கனிகளில் ஒன்று, மற்றவருக்கு உறுதுணையாக இருக்கும் பண்பு. அதிக அளவு செல்வம் சேர்ந்துவிட்டால், அடுத்தவரைப் பற்றிய அக்கறை விடைபெற்று விடுகிறது. உங்கள் வறுமையின் நடுவிலும், நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும் பண்பை, இந்த உலகிற்கு நீங்கள் சொல்லித்தர வேண்டும்" என்று திருத்தந்தை வறியோரிடம் கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்டியன் தன் பகிர்வில் அமைதி பற்றி பேசியது, திருத்தந்தையின் நான்காவது கருத்தாக அமைந்தது:
"உலகில் நிலவும் கொடூரமான வறுமை, போர். செல்வம் மிக்கவர்கள், இன்னும் அதிகப் பணம், அதிக அதிகாரம், அதிக நிலப்பரப்பு என சேர்ப்பதற்காகப் போர்களை உருவாக்குகின்றனர். வறியோர், வறுமையோடு போராடினாலும், அமைதியை உருவாக்கும் கலைஞர்களாக திகழ்கின்றனர். ஊரின் ஒதுக்குப்புறமாய், ஒரு மாடடைத் தொழுவத்தில், ஒதுக்கப்பட்ட ஒரு குடும்பத்தில், இவ்வுலகின் அமைதி பிறந்தது.
அமைதியை உருவாக்குங்கள்! அமைதிக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழுங்கள்! இவ்வுலகிற்கு அமைதி தேவை; திருஅவைக்கும், அனைத்து சபைகளுக்கும், அனைத்து மதங்களுக்கும் அமைதி தேவை."

வறியோர், இவ்வுலகிற்குச் சொல்லித்தரக் கூடிய நான்கு பாடங்களை இவ்விதம் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியாக, தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு, அரங்கத்தில் இருந்த அனைத்து வறியோரிடமும் மன்னிப்பு கேட்டார்:
"நான் என் வார்த்தையால் உங்களைப் புண்படுத்தியிருந்தால், அல்லது, நான் சொல்லவேண்டியதைச் சொல்லாமல் போயிருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். நற்செய்தியின் மையக்கருத்தாய் விளங்கும் வறுமையை வாசிக்காமல் இருக்கும் கிறிஸ்தவர்கள் சார்பாக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். வறியோரைக் கண்டதும், தலையைத் திருப்பிக்கொண்டு செல்லும் கிறிஸ்தவர்கள் சார்பாக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.
நீங்கள் அளிக்கும் மன்னிப்பு, திருஅவையில் உள்ள எங்கள் அனைவர் மீதும் நீங்கள் தெளிக்கும் புனித நீர். நீங்கள் வழங்கும் மன்னிப்பு என்ற நீரினால் நாங்கள் கழுவப்பெற்றால், வறியோரை மையப்படுத்திய திருஅவையை உருவாக்க உதவியாக இருக்கும். உலகின் அனைத்து மதங்களை சார்ந்தவர்களும், ஒவ்வொரு வறியவர் வழியாகவும் ஒரு முக்கியச் செய்தியை கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, நம் வாழ்வில் உடன்வரும் இறைவன், ஓர் ஏழையாகவே நம்மை நெருங்கிவருகிறார் என்ற உண்மையைக் கற்றுக்கொள்ள வேண்டும்."

சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோருடன் திருத்தந்தை மேற்கொண்ட இந்த மனம் திறந்த உரையாடலைத் தொடர்ந்து, திருத்தந்தையின் மீது கரங்களை வைத்து எளியோர் செபித்தது, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் பொருள் நிறைந்த உன்னதமானத் தருணம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டிலும், தொடரும் ஆண்டுகளிலும் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர் நம் வாழ்வின் ஒரு முக்கியப் பங்காகவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.


13 November, 2016

Applauding the end of the world உலக முடிவை கைதட்டி இரசிக்க...

33rd Sunday in Ordinary Time

We live in a world filled, rather, ‘over-loaded’ with information. It is so filled that there is not much room for personal interpretations and hence, no room for transformation. One of my most favourite books on media is “Amusing Ourselves to Death” written by Neil Postman. This is a scathing criticism on what television had done to the American Society in the 80s. What was written by Postman in 1985 is still very relevant for the U.S. and, unfortunately, it is now almost a universal phenomenon.
One of the accusations that Postman levels against TV is, that it has kept our human family ‘amused to death’. He says that TV has turned EVERYTHING (be it politics, religion, sports, stock market etc.) into ENTERTAINMENT, including news. We are submerged in an ocean of information which keeps us fully soaked and completely passive. Add to this, the other gadgets of communication and social networks, like facebook, whatsapp… and our deluge of information and entertainment has become a destructive tsunami.

The Danish philosopher, Søren Kierkegaard, talks about our insatiable thirst for entertainment in a parable. He tells the parable of a theater where people are entertained. Here is what Kierkegaard says in his book “Either/Or”: “A fire broke out backstage in a theatre. The clown came out to warn the public; they thought it was a joke and applauded. He repeated it; the acclaim was even greater. So I think the world will come to an end amid general applause from all the wits, who believe that it is a joke.” – (Either/Or, vol. I, p. 30)
Warnings come to us in different forms. If we are part of the cheering crowd, ‘amusing ourselves to death’, this Sunday gives us one more opportunity to wake up.  Today’s readings warn us about the “Day of the Lord” that dawns on us quite unexpectedly.

We have come to the end of another liturgical year. Next Sunday we shall celebrate the Feast of Christ the King and the week after, we begin a new liturgical year with Advent. When we began this liturgical year last November, we were given a passage from Luke 21 (verses 25-28; 34-36). As we close the liturgical year, we are given a passage, again, from Luke 21 (verses 5-19). Both talk of the end of the world… Is this the best way to begin and end a liturgical year? Talk of the frightening end? I am not a great fan of the frightening part of the end, as most Hollywood films revel in. But, I do believe that the thought of our end, whether imminent or far off, can surely put things in perspective. If only all of us can be convinced, that we are all pilgrims on earth, so many problems would be solved.

Today’s Gospel begins with Jesus standing in Jerusalem temple and predicting how that magnificent structure would be destroyed. It requires lots of courage for anyone to do this – namely, stand right in the middle of the holiest spot for the Israelites and tell them that it would be totally destroyed. One can easily assign this courage (call it bravado?) of Jesus to his divine quality of knowing past-present-and-future. But, we can also see it as part of our way of ‘predicting the future’. Most of us do have premonitions of our own or some one else’s life, from the way that life shapes up. The same premonition can be had for an institution too, by the way it is run. Jesus, from the age of twelve, must have been intrigued by the commercialism that surrounded the temple of Jerusalem. At the age of 33, he felt he had had enough of that and he tried his best to cleanse the temple (Luke 19: 45-46). He probably saw that the temple was returning to its commercial ways just a few days later.
Here are the opening lines of today’s Gospel: Some of his disciples were remarking about how the temple was adorned with beautiful stones and with gifts dedicated to God. But Jesus said, “As for what you see here, the time will come when not one stone will be left on another; every one of them will be thrown down.” (Luke 21:5-6)
This is how I would like to rephrase the thoughts / words of Jesus: “You seem to admire these beautiful stones and the ‘gifts’ adorning this temple. These very same things are going to draw the envious eyes of other nations. The wealth that surrounds this temple is going to be its undoing. It would be destroyed.” It does not require a great prophetic quality to predict what would happen to an individual or an institution if only we can observe closely. Simple logic would be sufficient!

This warning given by Jesus brings to mind the present day Churches, Temples and Mosques that pride themselves as the largest, richest, greatest, tallest… etc. The more wealth is accumulated in places of worship, the greater they have to rely on fortress-like walls. Instead of relying on stone walls, if all the places of worship relied on the community of worshippers, religion will become more humane and, hence, divine!

Jesus does not stop with his prediction of the temple alone. He goes on to predict what would happen to the world and, more especially, what would become of those who follow him. He begins with those who would mislead people with ‘divine revelations’, those who would exploit the anxiety of people about the end of the world. Didn’t we hear enough of these ‘revelations’ at the turn of this millennium? The list of things Jesus had predicted almost read like our headlines today… “Nation will rise against nation, and kingdom against kingdom. There will be great earthquakes, famines and pestilences in various places, and fearful events and great signs from heaven.” (Lk 21: 10-11)
In the following lines (12-19) Jesus turns his attention to his disciples. Jesus calls a spade, a spade. If his aim was to retain a crowd around him all the time, he would not have revealed such bitter truths… the price to be paid for following him. Betrayal from one's own family, murdering courageous witnesses in order to silence them... Once again, what Jesus lists out here seems to be happening today. I am thinking of the massacre that took place in the Sunday liturgy in Baghdad on October 31.

Out of all these 15 verses given in today’s Gospel, only three verses give hopeful, soothing words. “For I will give you words and wisdom that none of your adversaries will be able to resist or contradict… not a hair of your head will perish. Stand firm, and you will win life.” (Luke 21: 15, 18-19). The ‘life’ Jesus is talking of, is the afterlife we mentioned in our last Sunday’s reflection.
In my last week’s reflection I spoke about Randy Pausch, the professor who passed away in his forties. I had also mentioned about ‘The Last Lecture’ he had given to his university staff and students. I was fortunate also to listen to the talk he gave his students on their graduation day. Here is the gist of what he said: “Pursue your dreams with passion. Before you begin pursuing, make sure what type of dreams you are chasing. Let them not be dreams to acquire more money. Those dreams will not give you satisfaction, since there would always be someone who would have more money than you. Rather follow dreams of building up human relationships.”
Relationships will save us, not money or possessions. This is exactly what Jesus is saying in today’s Gospel. This is the assurance that Jesus himself experienced in his personal life. But for his personal relationship with his Father he would have been crushed in his life. As we go through life, especially the toughest phases of our life, we can be assured that God will be with us, Christ will be with us.

What You Believe About The End Times?
பொதுக்காலம் - 33ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

தத்துவ இயல் மேதைகளில் ஒருவரான சோரென் கீர்க்ககார்ட் (Søren Kierkegaard) அவர்கள், நாடக அரங்கத்தை மையமாக வைத்து, ஓர் உவமை கூறியுள்ளார்.
ஓர் அரங்கத்தில், அலைமோதும் கூட்டத்தின் நடுவே நாடகம் அரங்கேறி வருகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகள், ஒன்றையொன்று விஞ்சும் அளவு விறுவிறுப்பாக இருப்பதால், மக்கள் தொடர்ந்து, ஆரவாரமாய், கைதட்டி இரசிக்கின்றனர்.
அவ்வேளையில், திடீரென, திரைக்குப் பின்புறமிருந்து மேடைக்கு ஓடிவரும் கோமாளி, "மக்களே, அவசரமான ஓர் அறிவிப்பு... மேடையின் பின்புறத்தில் தீப்பிடித்துள்ளது. எனவே, தயவுசெய்து, விரைவாக இங்கிருந்து வெளியேறுங்கள்" என்று கத்துகிறார்.
அவர் அப்படி கத்துவதை, நாடகத்தின் நகைச்சுவைப் பகுதி என்று மக்கள் கருதி, ஆரவாரமாய் கைதட்டி இரசிக்கின்றனர். கோமாளியோ, கரங்களைக் கூப்பி, கண்களில் கண்ணீர் வழிய, மேடையில் முழந்தாள் படியிட்டு, "தயவுசெய்து வெளியேறுங்கள்" என்று கெஞ்சுகிறார். ஆனால், அவர் அற்புதமாக நடிக்கிறார் என்று கூட்டம் பாராட்டுகிறது. திடீரென, அந்த அரங்கம் முழுவதும் தீயால் சூழ்ந்து, அனைவரும் தீக்கிரையாகின்றனர்.
"உலக முடிவும் இதுபோல்தான் இருக்கும். அந்த உண்மையை ஒரு வேடிக்கை என்று எண்ணுவோரின் கரவொலியோடு, இவ்வுலகம் முடியும்" என்று கீர்க்ககார்ட் அவர்கள், தன் உவமையை நிறைவு செய்துள்ளார்.
வாழ்வில் பல வேளைகளில், பல வடிவங்களில் வந்தடையும் எச்சரிக்கைகளில் கவனம் செலுத்தாமல், அனைத்தையும் விளையாட்டாக இரசித்துக் கொண்டிருப்பவர்களில், நாமும் ஒருவரெனில், இன்றைய ஞாயிறு வழிபாடு, மீண்டும் ஒருமுறை, நம்மை விழித்தெழச் செய்கிறது.

திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு இது. அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. அதற்கடுத்த ஞாயிறு துவங்கும் திருவருகைக் காலம், புதிய திருவழிபாட்டு ஆண்டைத் ஆரம்பித்துவைக்கிறது. இந்த ஞாயிறு, உலகமெங்கும் குறிக்கப்பட்ட ஆலயங்களில் திறக்கப்பட்டப் புனிதக்கதவுகள் மூடப்படுகின்றன. அடுத்தவாரம், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் புனிதக்கதவு மூடப்படும். அத்துடன், நாம் கொண்டாடிவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி நிறைவடையும். யூபிலி ஆண்டு நிறைவுற்றாலும், இரக்கம் நம் வாழ்வில் தொடரவேண்டும் என்பதை நினைவுறுத்த, யூபிலியின் இறுதி இரு வாரங்களில் வத்திக்கானில் இரு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்ற ஞாயிறு, சிறைப்பட்டோரின் யூபிலி, இந்த ஞாயிறு, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரின் யூபிலி.

இரக்கத்தின் சிறப்பு யூபிலியாக நாம் சிறப்பித்த இந்த வழிபாட்டு ஆண்டு முழுவதும், இரக்கத்தின் நற்செய்தி என்று அழைக்கப்படும் லூக்கா நற்செய்தியிலிருந்து நாம் வாசித்த அற்புதப் பகுதிகள் வழியாக, இறைவன் நம்மை இரக்கச் சிந்தனைகளில் நிறைத்ததற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.
நற்செய்தியின் அற்புதப் பகுதிகள் என்று சொன்னதும், எல்லாமே மனதிற்கு இதமானதைச் சொல்லும் பகுதிகள் என்று பொருள் கொள்ளக்கூடாது. நற்செய்தி என்றால், நல்லதைச் சொல்லும் செய்தி. அந்த நல்ல செய்தி, சில வேளைகளில், அச்சத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கும். நல்லவை நடக்கவேண்டும் என்ற ஆதங்கத்தோடு தரப்படும் எச்சரிக்கையும், நல்ல செய்திதானே! இந்தக் கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்தியை நாம் சிந்திக்க முயல்வோம். இன்று நமக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி வாசகத்தில், 15 இறைச்சொற்றொடர்கள் உள்ளன. அவற்றில் 13 இறைச்சொற்றொடர்கள் அழிவைக் கூறுகின்றன. இதோ, இன்றைய நற்செய்தியின் துவக்க வரிகள்...
லூக்கா நற்செய்தி 21: 5-6
அக்காலத்தில், கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்என்றார்.

இப்படி ஆரம்பமாகிறது, இன்றைய நற்செய்தி. இஸ்ரயேல் மக்களின் மதநம்பிக்கைக்கு உயிர்நாடியாக விளங்கிய எருசலேம் பேராலயத்தின் நடுவில் நின்றுகொண்டு, அந்தப் பேராலயம், கல்மேல் கல் இராதபடி இடிந்து தரைமட்டமாகும் என்று இயேசு கூறுகிறார். அவ்விதம் கூறுவதற்குத் தனிப்பட்ட ஒரு துணிவு வேண்டும். பின்வருவதை முன்கூட்டியே அறியும் அருள் இயேசுவுக்கு இருந்ததால், அவரால் இவ்வளவு உறுதியாகப் பேச முடிந்ததென்று, இந்த வீரத்திற்கு நாம் விளக்கம் சொல்லலாம்.
ஆனால், அதேநேரம், தனிப்பட்ட ஒருவரது வாழ்வு போகின்ற திசை, அவர் நடந்து கொள்ளும் முறை இவற்றை வைத்து, அவர் வாழ்வு அழிவை நோக்கிப் போகிறதா அல்லது மகிழ்வை நோக்கிப் போகிறதா என்று கணிக்கமுடியும், இல்லையா? அதேபோல், ஒரு நிறுவனம் நடத்தப்படும் முறையை வைத்தும் அதன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறலாம். எருசலேம் கோவில், எவ்விதம் நிர்வகிக்கப்பட்டது என்பதை இயேசு ஆழமாய் உணர்ந்து, வெளிப்படுத்திய எண்ணங்களே, இன்றைய நற்செய்தியில் இடம்பெற்றுள்ளன.
இயேசுவைப் பொருத்தவரை, அவர் 12 வயதிலிருந்தே, எருசலேம் ஆலயம் நடத்தப்பட்ட முறையைப் பார்த்து கவலைப்பட்டிருப்பார். அவரது கவலை, ஆதங்கம் இவற்றை ஒரு சாட்டையாகப் பின்னி, அந்த ஆலயத்தை அவர் தூய்மைப்படுத்தினார். (லூக்கா 19: 45-46) அதற்குப் பின்னும், அந்த ஆலயம், மீண்டும் தன் பழைய வியாபார நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததைப் பார்த்த இயேசு, இவ்வளவு தூரம் வருமானம் சேர்க்கும் அக்கோவில், நிச்சயம் பிற நாட்டவரின் பொறாமைப் பார்வையில் படும். அக்கோவில் சேர்த்துள்ள செல்வமே, அதன் அழிவுக்குக் காரணமாய் இருக்கும் என்பதை, சொல்லாமல் சொல்லும் வண்ணம், இயேசு, இந்த எச்சரிக்கை வார்த்தைகளைச் சொல்லியிருக்க வேண்டும்.
செல்வம் சேர்க்கும் நிறுவனங்களாக மாறும் கோவில்கள், கற்களால் எழுப்பப்படும் கோட்டைகளாக மாறிவிடுகின்றன. கோவிலில் உள்ள கடவுளைக் காப்பதைவிட, செல்வத்தைக் காப்பதற்காக வலுவானக் கற்சுவர்களை அமைத்துக்கொள்கின்றன. கற்களை நம்பி உயர்ந்து நிற்கும் கோவில்களுக்குப் பதில், மக்களை நம்பி எழுப்பப்படும் உண்மை ஆலயங்களை, அனைத்து மதங்களும் கட்டவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

முதல் இரு இறைச்சொற்றொடர்களில், எருசலேம் கோவிலின் அழிவுபற்றி பேசும் இயேசு, அதன் பின், உலகில் நிகழப்போகும் அழிவுகளைப்பற்றி கூறியுள்ளார். அவர் பட்டியலிட்டுக் கூறும் அவலங்களை அலசினால், ஏதோ நாம் வாழும் இக்காலத்தைப்பற்றி இயேசு பேசுவது போல் தெரிகிறது. இதோ, இயேசு கூறும் அந்த அவலங்கள்:
·          கடவுளின் பெயரால், உலகம் அழியப்போகிறது என்ற பயத்தால், மக்களை வழிமாறிப் போகச் செய்தல்;
·          போர் முழக்கங்கள், குழப்பங்கள், ஒன்றை ஒன்று எதிர்த்து எழும் நாடுகள்;
·          பெரிய நில நடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய்;
·          அச்சுறுத்தும் அடையாளங்கள் வானில் தோன்றுதல்
இவை அனைத்தும், நாம் வாழும் காலத்திலும் நம்மைச் சுற்றி நடப்பதை நாம் பார்த்து வருகிறோம். இந்த அவலங்களுக்கு, அழிவுகளுக்கு மத்தியில், கலங்காமல் இருங்கள் என்று இயேசு கூறுவது, நமக்கு விடுக்கப்படும் பெரும் சவால்!

இயற்கையிலும், சமுதாயத்திலும் நடக்கும் இந்த பயங்கரங்களைக் கூறிவிட்டு, பின்னர் நமது தனிப்பட்ட வாழ்வை, குறிப்பாக, தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வை  வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார், இயேசு. அங்கும், அவர் சொல்பவை, அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தும் ஒரு பட்டியல்தான்.
·          நீங்கள் விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படுவீர்கள்;
·          உங்கள் குடும்பத்தினரே உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்;
·          உங்களுக்கு எதிராகச் சான்று பகர்வார்கள்;
·          உங்களுள் சிலரைக் கொல்வார்கள்;
·          என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்
இயேசு கூறும் இத்தகையத் துன்பங்களை தங்கள் வாழ்வில் ஒவ்வொருநாளும் சந்திக்கும் பல கிறிஸ்தவர்களைப் பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. கிறிஸ்துவுக்காக வன்முறைகளைச் சந்திக்கும் இவர்களுக்காக இன்று சிறப்பாக செபிப்போம்.

இயேசு இன்றைய நற்செய்தியில் கூறிய இந்த அழிவுகளைக் கேட்கும்போது, இது என்ன நற்செய்தியா என்றுகூட கேட்கத் தோன்றுகிறது. மீண்டும் நினைவில் கொள்வோம். நற்செய்தி என்றால், இனிப்பான செய்தி அல்ல. நமக்குள் வளரும் ஒரு நோயை நமக்குச் சுட்டிக்காட்டும் மருத்துவரை எதிரி என்றா நாம் கூறுகிறோம்? கசப்பான மருந்துகளைத் தரும் அவரை, நன்மை செய்பவர் என்று நாம் நம்புவதில்லையா? அதேபோல், இயேசுவும், இவ்வுலகைப் பற்றிய கசப்பான உணமைகளைச் சொல்கிறார். முக்கியமாக, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு வரவிருக்கும் சவால்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக்குகிறார். தனக்குச் சீடர்கள் வேண்டும், தன்னைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்கவேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், கசப்பான உண்மைகளைச் சொல்லத் தேவையில்லையே!
தொண்டர்களைத் தவறான வழி நடத்தும் தலைவர்கள், எதிர்வரும் ஆபத்துக்களைச் சொல்லத் தயங்குவார்கள். அப்படியே ஆபத்துக்கள் வரும்போதும், உண்மைப் பிரச்சனைகளிலிருந்து தொண்டர்களைத் திசைத்திருப்பி, வெறியூட்டும் பாகுபாட்டு உணர்வுகளை வளர்த்து, தேவையில்லாமல் உயிர்களைப் பறிக்கும் வழிகளையேக் காட்டுவர், இந்தப் போலித் தலைவர்கள். இயேசுவின் வழி, மாறுபட்ட வழி...

இத்தனைப் பிரச்சனைகளின் மத்தியிலும் இயேசு தரும் ஒரே வாக்குறுதி... அவரது பிரசன்னம். அழிவுகளையும், குழப்பங்களையும் பட்டியலிட்ட இன்றைய நற்செய்தியில் இறுதி இரு இறைச்சொற்றொடர்களில் மட்டும் மனதுக்குத் துணிவூட்டும் நல்ல செய்தியைச் சொல்கிறார், இயேசு. விசாரணைகளின்போது, என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. (லூக்கா 21: 14-15) என்று கூறுகிறார் இயேசு. நற்செய்தியின் இறுதியிலும், இயேசு, அறுதல் தரும் வார்த்தைகளுடன் நிறைவு செய்கிறார். நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள். இயேசு கூறும் உங்கள் வாழ்வு இவ்வுலக வாழ்வு அல்ல. மறு உலக வாழ்வு.

நாம் எல்லாருமே ஒருநாள் இவ்வுலகிலிருந்து விடைபெற வேண்டும். ஆனால், அது எப்போது என்பது மட்டும் யாருக்கும் தெரியாது. ஒரு சிலருக்கு, மறுவுலக வாழ்வு நெருங்கிவருகிறது என்ற உண்மை, அவர்களுக்கு வரும் நோயால் உணர்த்தப்படுகிறது. அவ்வேளையில், அவர்களில் ஒரு சிலர் மிகுந்த தெளிவுடன் இவ்வுலக வாழவைக் குறித்து உன்னதமான உண்மைகளைக் கூறியுள்ளனர். மறுவுலக வாழ்வுக்கு நாள் குறிக்கப்பட்ட Randy Pausch என்ற பேராசிரியர், இறப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன், தன் பல்கலைக் கழகத்தில் புதிதாகப் பட்டம் பெற்ற இளையோருக்கு வழங்கிய ஓர் உரையைக் கேட்கும் வாய்ப்பு பெற்றேன். அதில் அவர் கூறுவது இதுதான்:
உங்கள் வாழ்வில் ஆழ்ந்த தாகத்தோடு கனவுகளைத் துரத்துங்கள். கனவுகளைத் துரத்துவதற்கு முன், அவை எப்படிப்பட்ட கனவுகள் என்பதைத் தீர்மானம் செய்யுங்கள். பொருளும், புகழும் சேர்க்கும் கனவுகளைத் துரத்தவேண்டாம். நீங்கள் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும், உங்களை விட வேறொருவர் இன்னும் அதிகப் பொருள் சேர்த்திருப்பார்; அது உங்களை மீண்டும் ஏக்கத்தில் விட்டுவிடும். உறவுகளைச் சேகரிக்கும் கனவுகளைத் துரத்துங்கள். உண்மையான உறவுகள், ஏக்கம் தராது. நிறைவைத் தரும்."

பணம், புகழ் என்ற சக்திகள், தாங்கள் அழிவதோடு, இவ்வுலகையும் அழித்து வருகின்றன. இந்த சக்திகளோடு உறவு கொள்வதற்குப் பதில், மனித உறவுகள் என்ற சக்தியைத் தேடிச் செல்வோம். அந்த உறவுகளுக்கெல்லாம் சிகரமாக, இறைவனின் உறவும் நம்முடன் உள்ளதென்ற நம்பிக்கையோடு, உலகப் பயணத்தை, வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம்.