09 September, 2018

Turning a deaf ear… கேட்கச் செவியிருந்தும்...


Jesus heals a deaf-mute man

23rd Sunday in Ordinary Time

September 8, the Birthday of our Mother Mary, is also a special day for the Church in Tamil Nadu. September 8 is better known as the Feast of our Lady of Velankanni, more popularly known as the Mother of Good Health (Arokia Matha). Hundreds of Thousands of people, irrespective of their religion, flock to the ‘original’ Velankanni, near Nagapattinam. There are hundreds of Shrines which bear the name of Velankanni, in quite a few countries around the world. Personally, I know of a Shrine of Velankanni in Indonesia. There is also a small chapel of our Lady of Velankanni at the Basilica of the National Shrine of the Immaculate Conception, Washington, D.C., United States. All these go to prove that we trust in Mother Mary to help us be healthy or help us regain our health.

The liturgical readings of this Sunday, following the Feast of our Lady of Good Health, give us an opportunity to reflect on ‘health’ and ‘wealth’. What are our thoughts on health and sickness? Wealth and poverty? How do we treat the sick and the poor?
For the Jewish leaders, health and wealth are blessings from God and hence, automatically, sickness and poverty are curses from God. Hence, the sick and the poor are to be shunned like plagues. Some forms of sickness, like leprosy, were the ultimate curse from God. Those who suffer from leprosy are to be banished from human community.

While these leaders were imposing more and more prescriptions that almost immobilized the sick and the poor, there were prophets like Isaiah who wished to set them free – so free, that the ‘lame man would leap like a hart’.
Isaiah 35:4-7
Say to those who are of a fearful heart, “Be strong, fear not! Behold, your God will come with vengeance, with the recompense of God. He will come and save you.” Then the eyes of the blind shall be opened, and the ears of the deaf unstopped; then shall the lame man leap like a hart, and the tongue of the dumb sing for joy. For waters shall break forth in the wilderness, and streams in the desert; the burning sand shall become a pool, and the thirsty ground springs of water.
These words of the Prophet, sound ‘fantastic’, meaning, they can only be true in fantasy and not in real life. The dreams of Prophet Isaiah, bring to mind the famous ‘The Impossible Dream’ of Joe Darian. Here are a few lines from this famous song:

To dream the impossible dream
To fight the unbeatable foe
To bear with unbearable sorrow
To run where the brave dare not go
To right the unrightable wrong
To love pure and chaste from afar
To try when your arms are too weary
To reach the unreachable star

This is my quest
To follow that star
No matter how hopeless
No matter how far
To fight for the right
Without question or pause
To be willing to march into Hell
For a heavenly cause

To be willing to march into hell for a heavenly cause… is exactly what Jesus did when he began his public ministry. He used another passage of Isaiah to inaugurate his public ministry (Is. 61:1-2) – a passage very similar to the one we read just now. When Jesus preached ‘Blessed are the poor’, and cured the sick people even breaking the law of the Sabbath, it must have shocked the Pharisees and the experts of the law. But, it must have also brought plenty of hope for the sick and the poor. Hence, the sick and the poor were flocking to Jesus wherever he went. But, not all of them!

The opening lines of today’s gospel (Mark 7:31-37), talks of a sick person who, probably, was reluctant to come to Jesus. Hence, he was ‘brought’ to Jesus. “And they brought to Jesus a man who was deaf and had an impediment in his speech; and they besought him to lay his hand upon him” (Mk 7: 32) What prevented him from seeking Jesus?
I am making the following assumption: This person was reluctant to come to Jesus since he had been told from his childhood that he was cursed by God with these sicknesses. Presuming that Jesus was ‘one of them’, this sick person did not wish to even go where Jesus was. He had built enough walls around him and imprisoned himself within those walls. Fortunately, he had some kind hearted friends who did not wish to see their friend languish in his self-built prison. Hence, they took the initiative and ‘brought’ him to Jesus.
We may remember the episode in Luke’s Gospel, where the paralytic was brought to Jesus by his friends (Lk. 5:18-25). They took the risk of going up the roof and letting the sick man ‘down with his bed through the tiles into the midst before Jesus.’ (Lk. 5:19). The following verse is very significant: And when he saw their faith he said, "Man, your sins are forgiven you." (Lk. 5:20)
Seeing the faith of the friends, Jesus worked the miracle for the paralysed person. A similar situation is painted here by Mark. The friends bring the sick person and make the request.

When a person is sick at home, the family circle or the friends circle needs to take the necessary steps to bring the person back to health. When the sick person tends to shrink within the shell of self-pity, or rely heavily on medications, the family needs to break the shell and bring the person out of these self-built prisons.
Here is an anecdote from the life of Betty Ford, the wife of Gerald Ford, the 38th President of the U.S. James W. Moore, in his book, When All Else Fails, Read the Instructions, tells about a "made-for-TV" movie years ago, titled, The Betty Ford Story. The movie was produced with the help, the support and the encouragement of former First Lady Betty Ford, to reveal, out of her own personal experience, the dangers of drugs and alcohol.
Mrs. Ford was overwhelmed by the demands and stresses of being the nation's First Lady and by the debilitating pain of arthritis. Consequently, over time, she became addicted to pain medication and alcohol. In the most powerful scene in that movie, her family confronts Mrs. Ford, and one by one, her children express their love and their concern for her. And then straightforwardly, they tell her what they are seeing - that she has become a prescription-medicine addict and an alcoholic. At first, she denies that she has a problem, but eventually she realizes what is happening and gets help.
In that poignant intervention scene, one of the children says this to her: "Mother, always before, when you had a problem, you turned to God and to your family, but lately you have shut us out. You have turned to medicine and drinking, and you are killing yourself."

Sometimes the most loving thing you can do for someone is to tell them - in love - the brutal truth. Betty Ford's family loved her enough to help her see herself as she really was. As long as there is someone who cares for us, there is hope. As long as the paralytic or the speech and hearing impaired person had family and friends who really cared, there was hope.

The healing process followed by Jesus gives us a glimpse into another aspect of healing, namely, the gift of touch and the gift of reassuring words.
And taking him aside from the multitude privately, Jesus put his fingers into his ears, and he spat and touched his tongue; and looking up to heaven, he sighed, and said to him, “Eph′phatha,” that is, “Be opened.” And his ears were opened, his tongue was released, and he spoke plainly. (Mk. 7:33-35)

“Eph′phatha,” must have been the very first word that this person heard in his entire life and it really opened up a world of love and acceptance for him. Loving touch and reassuring words can work wonders.
A lovely one-minute video is being shared on the social network for the past one year. It is about the two months old girl child Charlotte, born with a hearing impairment, getting her hearing aid and listening to her Mom Christy Keane say “I love you” for the first time. The baby girl gives an adorable smile mixed with teary eyes.

Jesus, while healing the sick person used a special word “Eph′phatha,” that is, “Be opened.”. Jesus not only opened his ears and untied his tongue, He opened the prisons of self-pity and hatred which the sick person had built around him, and helped him to walk free.

As we close our reflections, we turn our minds and hearts to the plight of thousands of other children who are not as lucky as Charlotte. May Jesus’ healing word “Eph′phatha,” open our eyes and hearts to see the harsh reality of these unfortunate children, who are abandoned for no fault of theirs. May the Mother of Good Health obtain from God more healing for the whole world, which is turning a deaf ear to the cries of the sick and the poor.


Ephphatha,

பொதுக்காலம் 23ம் ஞாயிறு

செப்டம்பர் 8, இச்சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்ட அன்னை மரியாவின் பிறந்தநாள், ஆரோக்கிய அன்னையின் விழாவாக, வேளை நகரிலும், அந்த அன்னையின் பெயரால் உலகெங்கும் உருவாக்கப்பட்டுள்ள பல திருத்தலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இன்னும் பல பங்குத்தளங்களில், இஞ்ஞாயிறன்று, ஆரோக்கிய அன்னையின் விழா கொண்டாடப்படுகிறது.
ஆரோக்கிய அன்னையின் விழாவைத் தொடர்ந்துவரும் இஞ்ஞாயிறன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்க, நம்மை அழைக்கின்றன. தவிர்க்கமுடியாத உண்மைகளாக இவ்வுலகில் நிலவும், நோய், வறுமை, துன்பம் ஆகியவற்றைக் குறித்து நம் கண்ணோட்டம் என்ன? நோயுற்றோரையும், வறியோரையும் குறித்து நம் எண்ணங்கள் என்ன? அவர்களுக்காக நாம் என்ன செய்கிறோம்? என்ற ஓர் ஆன்மீக ஆய்வை மேற்கொள்வது, பயனுள்ள ஒரு முயற்சி.

நோய், வறுமை இவற்றைப்பற்றி இஸ்ரயேல் மதத்தலைவர்கள், தவறான எண்ணங்கள் கொண்டிருந்தனர். அவர்களைப் பொருத்தவரை, நோயும் வறுமையும், பாவத்தின் தண்டனைகள். நோயுற்றோரும், வறியோரும் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள். எனவே, அவர்களை சமுதாயத்திலிருந்து விலக்கிவைப்பதே இறைவனின் விருப்பம் என்ற தவறான எண்ணங்களை, மதத்தலைவர்கள், மக்கள் மீது திணித்துவந்தனர்.
நாம் வாழும் இன்றைய சமுதாயத்திலும், சாதி, அல்லது, இன அடிப்படையில் தவறான, முற்சார்பு எண்ணங்கள், புரையோடிப் போயிருப்பதை வேதனையுடன் ஏற்றுக்கொள்வோம். இந்த சமுதாய நோயை நம்மிடமிருந்து இறைவன் அகற்றவேண்டும் என்று மனமுருகி மன்றாடுவோம்.

துன்பம், நோய், வறுமை ஆகியவற்றைக் குறித்த கேள்விகள், மனித சமுதாயத்தை எப்போதும் தாக்கிவந்துள்ளன. இக்கேள்விகளுக்கு இன்றைய வாசகங்கள் ஒரு சில தெளிவுகளைத் தருகின்றன. முதல் வாசகத்தில் ஒலிக்கும் இறைவாக்கினர் எசயாவின் வார்த்தைகளில், வெறும் வேதனை மட்டும் வெளிப்படவில்லை; மாறாக, அந்த ஆழமான வேதனையிலும், இறைவனிடம் கொண்ட விசுவாசம், அவருடைய வார்த்தைகளில் வெளிச்சமாகிறது.

புல்லை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள ஓர் ஆங்கில கவிதை, அழிவின் நடுவிலும் ஆழ்ந்த நம்பிக்கையோடு வாழமுடியும் என்பதை வலியுறுத்துகிறது. இக்கவிதையின் உரைநடை சுருக்கம் இதோ...
அண்ணனும் தம்பியும் ஒரு நாள் வீதியில் நடந்து போய்கொண்டிருக்கும்போது, திடீரென தம்பிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. "தைரியம்னா என்னாண்ணே?" என்று தம்பி அண்ணனிடம் கேட்டான். அண்ணன், தனக்குத் தெரிந்த மட்டும் விளக்கப் பார்த்தான். புலி, சிறுத்தை, யானை என்று தனக்குத் தெரிந்த மிருகங்களை எடுத்துக்காட்டுகளாகக் கூறி, தைரியத்தை விளக்கப்பார்த்தான் அண்ணன். தம்பிக்கு விளங்கவில்லை.
அவர்கள் நடந்து சென்ற வீதியின் ஓரத்தில், யாரோ ஒருவர், புல்தரை ஒன்றை எரித்து விட்டிருந்தார். முற்றிலும் எரிந்துபோன புல்தரையின் நடுவில், ஒரு சின்னப் புல் மட்டும், தலை நிமிர்ந்து, நின்று கொண்டிருந்தது. அண்ணன், தம்பியிடம், அந்த புல்லைக் காட்டி, "தம்பி இதுதான் தைரியம்" என்றான்.
கவிதை இதோடு முடிகிறது. தம்பிக்கு விளங்கியதா இல்லையா என்பதெல்லாம் நமது கவலை இல்லை. அந்தக் காட்சி நமக்கு முக்கியம். முற்றிலும் எரிந்துபோன ஒரு புல்தரையின் நடுவே நின்றுகொண்டிருக்கும் புல், நமக்கு ஒரு பாடம். தன்னைச் சுற்றி எல்லாமே அழிந்தாலும், அந்த அழிவில், கலந்து, மறைந்து போகாமல், தலை நிமிர்ந்து நிற்பதுதான் தைரியம். அதையே, நாம், நம்பிக்கையின் அடையாளமாகவும் எண்ணிப்பார்க்கலாம். இத்தகைய நம்பிக்கையை, நாம் இறைவாக்கினர் எசயாவின் சொற்களில் உணர்கிறோம்.
எசாயா 35: 4-7
உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்: இதோ, உங்கள் கடவுள் வந்து உங்களை விடுவிப்பார்.அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.

எசாயாவின் சொற்களைக் கேட்கும்போது, இது நடைமுறைக்கு ஒத்து வருமா என்ற எண்ணம் எழுகிறது. அதுவும், இன்றையச் சூழலில், மனிதகுலம் இயற்கையை அழித்துவரும் வேகத்தைக் காணும்போது, கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும் என்று சொல்வதற்குப் பதில், நீர்த் தடாகம், கனல் கக்கும் மணல்பரப்பு ஆகும் என்று மாற்றிச்சொல்லத் தோன்றுகிறது. இறைவாக்கினர் எசாயா கண்ட அந்த விசுவாசக் கனவு நமதாக வேண்டுமென, இறைவனை இறைஞ்சுவோம்.

யாக்கோபு மடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகம், வறியோரை எப்படி பார்க்கிறோம்? அவர்களை எப்படி நடத்துகிறோம்? என்ற கேள்விகளுக்கு மிகவும் தெளிவான பாடங்களைச் சொல்லித் தருகின்றது.
பொதுவாகவே, கிறிஸ்தவர்கள் மத்தியில் இரக்க குணம் அதிகம் உண்டு. நமது கோவில்கள், நிறுவனங்கள் வழியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஏழைகளுக்கு நாம் பல உதவிகள் செய்கிறோம். உண்மைதான்; மறுப்பதற்கில்லை. வறியோரைப் பார்த்து, பரிதாபப்பட்டு, இரக்கப்பட்டு, உதவி செய்கிறோம். ஆனால், நம்மில் எத்தனை பேர், ஏழைகளை மரியாதையுடன் நடத்துகிறோம்? இதுதான், திருத்தூதர் யாக்கோபு, நம்மிடம் எழுப்பும் சங்கடமான கேள்வி.

வறுமையை ஒரு சாபமாகவும், வறியோர், கடவுளின் தண்டனைக்கு ஆளானவர்கள் என்றும் நம்பிவந்த யூதர்கள் மத்தியில், இயேசு, "வறியோர் பேறு பெற்றோர்" என்று தன் மலைப்பொழிவில் சொன்னார். இயேசு இவ்வாறு சொன்னது, யூத மதத் தலைவர்களுக்கு, பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும்; தேவ நிந்தனையாகவும் ஒலித்திருக்கும். ஆனால், இதைக் கேட்ட வறியோர் மனதில், நம்பிக்கை பிறந்திருக்கும்.
புரட்சிகரமாகப் பேசி, மக்களை தன் வயப்படுத்த வேண்டும் என்று இயேசு முயன்றதில்லை. தான் ஆழ்மனதில் நம்பியவற்றை மக்களுக்குச் சொன்னார். அதையே வாழ்ந்தும் காட்டினார். இன்றைய நற்செய்தியில்மீண்டும் ஒருமுறை, இயேசு தன்  சொல்லாலும்,செயலாலும் பல பாடங்களைப் புகட்ட வருகிறார்.

மாற்கு நற்செய்தி 7: 32
காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.
என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. குறையுள்ள அந்த மனிதரை, இயேசுவிடம், மற்றவர்கள் கொண்டு வந்தனர். அந்த மனிதர் தானாகவே இயேசுவைத் தேடிவரவில்லை. தன் குறைகளைப் பார்த்து, தன்னை ஒரு பாவி என்றும், கடவுளின் தண்டனையை அனுபவிப்பவர் என்றும், முத்திரை குத்திய யூத மதத் தலைவர்கள் மேல், அவர் வெறுப்பை வளர்த்திருக்க வேண்டும். இயேசுவையும், அத்தலைவர்களில் ஒருவராக நினைத்து, அவரை அணுக, அவர் தயங்கியிருக்க வேண்டும்.

தயக்கம், குழப்பம், தன் மீது தனக்கே ஏற்பட்ட வெறுப்பு என்று பல சிறைகளை எழுப்பி, அவற்றில், தன்னையே பூட்டிக்கொண்டவர், இந்த நோயாளி. அவருடைய ஒரு சில நண்பர்கள், அவருக்கு நல்லது நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில், இயேசுவிடம் அவரைக் கொண்டுவந்தனர். முடக்குவாதத்தால் கட்டிலிலேயே முடங்கிப்போன ஒருவரை, அவரது நண்பர்கள் இயேசுவிடம் கொணர்ந்த நிகழ்வை (லூக்கா 5: 18-25) இப்போது நினைத்துப் பார்க்கலாம். இயேசு போதித்துகொண்டிருந்த வீட்டின் கூரையை பிரித்து, அவருடைய நண்பர்கள், அவரை, இயேசுவுக்கு முன் கிடத்தினர். அவர்களுடைய நம்பிக்கையைக் கண்ட இயேசு, முடக்குவாதமுற்றவரைக் குணமாக்கினார் என்று நாம் லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம். (லூக்கா 5: 20)

நோயுற்றோரை குணமாக்குவது ஓர் அற்புதம் என்றால், அவர்களை, மனிதர்களாக மதித்து நடத்துவது, வேறொருவகையில் ஓர் அற்புதம்தான். தாங்களும் மதிப்பிற்குரிய மனிதர்கள் என்ற ஓர் உணர்வை நோயாளிகள் பெறுவதே, ஓர் அற்புதம்தான். தமிழ்நாட்டின் ஒரு கல்லூரியில் நிகழ்ந்த ஓர் அற்புதம் இது.
போலியோ நோயினால் கால்கள் இரண்டிலும் சக்தி இழந்த ஓர் இளைஞனை, அவரது நண்பர், தினமும், சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு வருவார். அவர்களுக்கு வகுப்புகள் நடந்த கட்டடத்தில் லிப்ட் வசதி இல்லாததால், கால் ஊனமுற்றவறை ஒரு குழந்தையைப்போல் இரு கரங்களிலும் தூக்கிக்கொண்டு, அவரது நண்பன், இரண்டு மாடிகள் ஏறுவார். ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல... இந்த அற்புதம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். அந்த நல்ல உள்ளம் எங்கிருந்தாலும் வாழ்க!

காது கேளாத மனிதரை, இயேசுவிடம், அவரது நண்பர்கள் கொண்டு வந்ததும், இயேசு செய்தது வியப்பைத் தருகின்றது. இயேசு விரும்பியிருந்தால், ஒரு சொல் கொண்டு அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், இயேசு அவரது காதுகளில் விரல்களை வைத்தது, உமிழ்நீரால் அவரது நாவைத் தொட்டது, 'திறக்கப்படு' என்ற கட்டளையிட்டது... என்ற அனைத்து செயல்களும், நோயுற்ற அந்த மனிதரை முழுமையாகக் குணமாக்கின. ஒரு தொடுதல், ஓர் அன்பான சொல் இவை ஆற்றக்கூடிய அற்புதங்களை நாம் அறிவோம்.

2 மாதக் குழந்தையொன்று, தன் தாயின் குரலை முதல் முறையாகக் கேட்கும்போது, அக்குழந்தையின் முகத்தில் தோன்றும் புன்னகையும், அழுகையும் அழகான ஒரு 'வீடியோ' பதிவாக, 'பேஸ்புக்' போன்ற சமூக வலைத்தளங்களில் வலம்வருகிறது. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த ஒரு நிமிட 'வீடியோ'வை, 1 கோடியே 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுள்ளனர். கிறிஸ்டி (Christie Keane) என்ற இளம்பெண்ணுக்கு பிறந்த அழகான பெண் குழந்தை சார்லட் (Charlotte), பிறவியிலேயே கேட்கும் திறனின்றி பிறந்தாள். இரண்டு மாதங்கள் சென்று கேட்கும் கருவியொன்று, குழந்தையின் காதில் பொருத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, குழந்தை சார்லட், தன் தாயின் குரலை முதல் முறை கேட்டு, கண்களில் கண்ணீரோடு சிரிக்கும் அந்த வீடியோ, காண்போரின் உள்ளத்தைத் தொடுகிறது. குழந்தையின் இதயத்தில் அன்பு அதிர்வுகளை உருவாக்க, தாயின் குரல் மிகவும் முக்கியமாகத் தேவைப்படுகிறது என்பதை, இந்த வீடியோ, மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுறுத்துகிறது.

கேட்கும் திறனின்றி பிறந்த குழந்தை சார்லட், முதல் இரு மாதங்கள், பசி வந்த வேளையில் அழுதாள்; மற்ற நேரங்களில், வேறு எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் வாழ்ந்தாள் என்று, இளம்தாய் கிறிஸ்டி கூறுகிறார். இரண்டு மாதங்களுக்குப்பின், கேட்கும் கருவி பொருத்தப்பட்டு, தாயின் குரலைக் கேட்ட அன்றுதான், தன் குழந்தையின் முகத்தில் புன்சிரிப்பையும், இன்னும் சில உணர்வுகளையும் காணமுடிந்தது என்று, கிறிஸ்டி அவர்கள், ஆனந்த கண்ணீர் வடித்தவண்ணம் கூறினார்.

தாய் சேய் உறவைச் சித்திரிக்கும் இந்த உணர்வுப்பூர்வமான வீடியோவைக் காணும்போது, ஆதரவின்றி விடப்படும், ஆயிரமாயிரம் குழந்தைகள், நினைவுக்கு வருகின்றனர். கேட்கும், பார்க்கும், பேசும் திறன்கள் இல்லாமல் பிறக்கும் பல்லாயிரம் குழந்தைகள், யாருமற்ற அனாதைகளாக விடப்படும் கொடுமை, இன்றும் நம்மிடையே காணப்படுகிறது. இவர்களை, இறைவனின் சந்நிதியில் இன்று சிறப்பாக நினைவில் கொள்வோம்.

தாய்க்குரிய பரிவோடு, இயேசு, காதுகேளாதவரைக் குணமாக்கும் நிகழ்வு, நமக்கு சில பாடங்களைச் சொல்லித்தருகிறது. இந்த ஞாயிறு வழிபாட்டிலிருந்து நாம் போகும்போது, இயேசு நம் செவிகளையும், நாவையும், கண்களையும் தொட்டு, 'திறக்கப்படு' என்ற வார்த்தைகளைச் சொல்லவேண்டும் என வேண்டிக்கொள்வோம். தீமைகளைப் பார்க்காதே, கேட்காதே, சொல்லாதே என்று மூன்று குரங்குகள் வழியாக நமது காந்தி சொன்னார். இயேசுவின் 'திறக்கப்படு' என்ற கட்டளை, நல்லவற்றைப் பார், நல்லவற்றைப் பேசு, நல்லவற்றைக் கேள் என்று ஆணித்தரமாக சொல்கிறது.

வறுமை, நோய் ஆகிய சிறைகளில் நாம் சிக்கியிருக்கும்போதும், இச்சிறைகளில் சிக்கி இருப்பவர்களைச் சந்திக்கும்போதும், இறைவாக்கினர் எசாயாவின் நம்பிக்கைத் தரும் வார்த்தைகளை நிஜமாக்குவோம். முடியாது என்ற அவநம்பிக்கை, நம்மைச் சிறைப்படுத்தாமல் பார்த்துக்கொள்வோம்.

இறைவனால் இயலாதது ஒன்றுமில்லை என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தால்பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும்.... காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்.
இத்தகைய நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ள, இறைமகனும், ஆரோக்கிய அன்னையும் நமக்குத் துணை புரிவார்களாக.


04 September, 2018

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 1


Teacher’s Day - India

International Day of Charity

இமயமாகும் இளமை மனிதப்பிறவிகளை உருவாக்கும் கல்வி

இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவராகவும் (1952-1962), பின்னர், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத்தலைவராகவும் (1962-1967) பணியாற்றிய இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி, இந்தியாவில், ஆசிரியர்கள் தினமாகச் சிறப்பிக்கப்படுகிறது.
சிறியோரையும், இளையோரையும் வடிவமைப்பதன் வழியே, ஒரு நாட்டையே வடிவமைக்கும் வலிமை பெற்ற ஆசிரியர்களைப்பற்றியும், அவர்கள் சொல்லித்தரவேண்டிய கல்வியைப்பற்றியும் சிந்திக்க, ஆசிரியர் தினம் அழைப்பு விடுக்கிறது. நாத்சி வதை முகாமிலிருந்து உயிரோடு மீண்டுவந்தவர்களில் ஒருவர், கல்வியைப்பற்றி எழுதியுள்ள வரிகள் நம் சிந்தனைக்கு சவால் விடுக்கின்றன:
வதைமுகாமிலிருந்து உயிரோடு மீண்டவன் நான். மனிதர்கள் யாரும் காணக்கூடாதவற்றை என் கண்கள் கண்டன. பொறியியலை நன்கு கற்றவர்களால், நச்சுவாயுக்கூடங்கள் கட்டப்பட்டன. மருத்துவத்தை நன்கு கற்றவர்களால், குழந்தைகளுக்கு விஷ ஊசிகள் போடப்பட்டன. தாதியர் பணிகளுக்காகப் பயிற்சி பெற்றவர்களால், பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டனர். பள்ளியிலும், கல்லூரியிலும் பயின்று வந்த மாணவர்களால், பெண்களும், குழந்தைகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எனவே, நாம் சொல்லித்தரும் கல்வியைப்பற்றி எனக்கு பல ஐயங்கள் எழுகின்றன.
என் வேண்டுகோள் இதுவே: மனிதப்பிறவிகளாக வாழ்வது எப்படி என்பதை, உங்கள் குழந்தைகளுக்கு முதலில் கற்றுத்தாருங்கள். கல்விக்கூடங்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளால், படித்த அரக்கர்களையும், திறமைகள் மிகுந்த மனநல நோயாளிகளையும் உருவாக்காதீர்கள்.
படிப்பதற்கும், எழுதுவதற்கும், கணக்கிடுவதற்கும் தரப்படும் பயிற்சிகள், நம் குழந்தைகளை மனிதப்பிறவிகளாக உருவாக்கவேண்டும். அது மட்டுமே முக்கியம்.

ஆசிரியர்கள் தினமான செப்டம்பர் 5ம் தேதி, அன்னை தெரேசா அவர்கள் இவ்வுலகைவிட்டு விடைபெற்ற நினைவு நாளும் சிறப்பிக்கப்படுகிறது. புனித அன்னை தெரேசாவின் திருநாள், அகில உலக பிறரன்பு நாள் என, ஐ.நா. அவையால், 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மனிதாபிமானம் என்ற கல்வியை உலகெங்கும் சொல்லித்தந்த உன்னத ஆசிரியரான புனித அன்னை தெரேசாவுக்கு நம் உளம் நிறைந்த நன்றிகள்.

Jesus, the True Life

புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை பகுதி 1

யோவான் நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏழு புதுமைகளில், இறுதிப் புதுமை - இயேசு இலாசரை உயிர்பெற்று எழச் செய்த புதுமை. ஒரு கல்யாண விருந்தில் ஆரம்பமான புதுமைகள், இறுதியாக, ஒரு கல்லறைக்கருகே நம்மை அழைத்து வந்துள்ளன.
'கல்லறை' என்ற சொல்லைக் கேட்டதும், நம்மில் சிலருக்கு, சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ, சங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம். பொதுவாகவே, சாவு, மரணம், கல்லறை ஆகியவற்றைக் குறித்து யாராவது பேச ஆரம்பித்தால், "வேறு ஏதாவது நல்லவற்றைப் பற்றிப் பேசுவோமே" என்று சொல்லி, அந்த உரையாடலைத் திசைதிருப்ப முயல்வோம். சாவு, மரணம், கல்லறை ஆகியவை, நல்லவை அல்லாத, அமங்கலமான சொற்கள், எண்ணங்கள் என்பது நம் கணிப்பு. ஆனால், சாவு, மரணம் இவற்றையும் நல்லதொரு கோணத்திலிருந்து பார்த்தால், அந்தப் பார்வை, நமது வாழ்வைக் குறித்து பல தெளிவுகளை உண்டாக்கும்.

நாமோ, அல்லது நமக்கு நெருங்கிய ஒருவரோ ஒர் இறுதி நிலைக்கு வந்துவிடும் நேரங்களில்தாம் நாம் பெரும்பாலும் மரணத்தைப்பற்றி நினைக்கிறோம். அந்நேரங்களில், மனதில், பயம், கலக்கம் போன்ற உணர்வுகளே அதிகம் உண்டாகும். நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போது, எந்த வித படபடப்பும் இல்லாமல் மரணத்தைப் பற்றி ஏன் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை? மரணம் என்ற ஓர் எல்லைக்கு உட்பட்டதுதான் வாழ்க்கை என்பதை உணராமல், வாழ்வைப்பற்றிய ஒரு முழுமையான எண்ணத்தை எப்படி பெறமுடியும்?” இந்த எண்ணங்களைக் கூறுவது Studs Terkel என்ற அமெரிக்க எழுத்தாளர்.
வாழ்வைப்பற்றிய ஒரு முழுமையான எண்ணத்தை உருவாக்கும் முயற்சியாக, இலாசரின் மரணத்தையும், அவரை இயேசு மீண்டும் உயிர்பெற்றெழச் செய்த நிகழ்வையும், இன்றும், இன்னும் சில வாரங்களும் நாம் சிந்திக்க முயல்வோம்.

மனிதர்களாய்ப் பிறந்த நாம் அனைவரும் கட்டாயம் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். இதில் எவ்வித விதிவிலக்கும் கிடையாது. அறிவியலின் துணைகொண்டு, இந்த நியதியை மாற்றியமைக்கும் முயற்சிகளை, ஒரு சிலர் மேற்கொண்டுள்ளனர் என்பதையும், நாம் ஊடகங்கள் வழியே அறிந்து வருகிறோம்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம், 'மரணத்தின் மரணம்' (The Death of Death) என்ற நூல், ஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் வெளியிடப்பட்டது. மரபணு பொறியியலாளர்களான (Genetic engineers) José Luis Cordeiro, மற்றும், David Wood என்ற இருவரும் எழுதியுள்ள இந்நூலில், மனிதர்கள் இனி இறக்கத் தேவையில்லை என்ற கருத்தை வலியுறுத்த முயன்றுள்ளனர். இன்னும் முப்பது ஆண்டுகளில், விபத்துக்களில் மனிதர்கள் இறப்பதைத் தவிர, நோயினாலோ, வயது முதிர்ச்சியாலோ மனிதர்கள் இறக்கத் தேவையில்லை என்றும், குணமாக்கமுடியாததென கருதப்படும் பல நோய்களுக்கு மருத்துவத் தீர்வுகள் கிடைத்துவிடும் என்றும், இந்நூலில் கூறப்பட்டுள்ளது. 'Nanotechnology' என்ற தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி, மரணத்தைத் தடுத்து நிறுத்துவதோடு, உடல் முதிர்ச்சி அடைவதை நிறுத்தமுடியும் என்றும் மரபணுவில் மாற்றங்கள் கொணர்வதன் வழியே, உடல் முதிர்ச்சி அடைவதை, எதிர் திசையில் திருப்பி, இளமைப்பருவத்தை மீண்டும் அடையமுடியும் என்றும் Cordeiro அவர்களும், Wood அவர்களும் கூறியுள்ளனர்.
'மரணத்தின் மரணம்' நூல் வெளியீட்டு விழாவில், Cordeiro அவர்கள் பேசுகையில், சாகாமலிருக்க தான் முடிவெடுத்துள்ளதாகவும், இன்னும் 30 ஆண்டுகளில், தான் இப்போதிருக்கும் வயதைவிட, இளைய நிலையை அடையப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள், இவ்வுலகில் தோன்றியது முதல், சாகாவரம் பெறுவதையும், என்றும் இளமையுடன் வாழ்வதையும் கனவாகக் கண்டு வந்துள்ளனர். தற்போது, இந்தக் கனவை, அறிவியல் வழியில் நனவாக்கும் முயற்சிகள் ஒரு சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மரணம் என்ற உண்மையை மறப்பதற்கு, மறுப்பதற்கு, அல்லது, அறிவியல் வழியே மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெறுவது ஒருபுறம் எனில், மரணத்தைப்பற்றிப் பேசுவது நல்லது என்று வாதிடுவோர் மறுபுறம் உள்ளனர்.
Karen Wyatt என்ற மருத்துவர், மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளுக்காக, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார். அவர், 2016ம் ஆண்டு, ஓர் ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரைக்கு: “How Thoughts Of Death Can Be A Key To Happiness” அதாவது, "மரணத்தைப்பற்றிய எண்ணங்கள் எவ்வாறு மகிழ்வுக்கு ஒரு முக்கியத் திறவுகோலாக அமையக்கூடும்" என்று தலைப்பிட்டிருந்தார்.
இக்கட்டுரையின் துவக்கத்தில், கேரன் அவர்கள், இமயமலையில் உள்ள பூட்டான் நாட்டைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். பூட்டான் நாடு, "பூமியில் மிகவும் ஆனந்தமான நாடு" என்று ஒரு சில ஆய்வு நிறுவனங்களால் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனந்தமாக வாழ்வதற்கு ஒரு முக்கிய காரணியாக கேரன் அவர்கள் கருதுவது, அம்மக்கள் பின்பற்றும் புத்த மதப் பாரம்பரியம். இப்பாரம்பரியத்தின்படி, ஒவ்வொரு நாளும், மரணத்தைக் குறித்து அந்நாட்டு மக்கள் தியானங்கள் மேற்கொள்கின்றனர்.
ஒவ்வொருநாளும், மரணத்தை வரவேற்கும் மனப்பக்குவத்தை இம்மக்கள் உருவாக்கி வாழ்வதால், அமைதியையும், ஆனந்தத்தையும் அவர்களால் உணரமுடிகிறது என்று, கேரன் அவர்கள், தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்போரிடமிருந்து தான் கற்றுக்கொண்ட பாடங்களைத் தொகுத்து, கேரன் அவர்கள், 2011ம் ஆண்டு, ஒரு நூலை வெளியிட்டுள்ளார். "எது உண்மையிலேயே அவசியமானது: இறந்துகொண்டிருப்போரின் கதைகளிலிருந்து வாழ்வோருக்கு 7 பாடங்கள்" (What Really Matters: 7 Lessons for Living from the Stories of the Dying) என்ற தலைப்புடன் வெளியான இந்நூலில், அவர் சொல்லித்தரும் 7 பாடங்கள்: துன்பம், அன்பு, மன்னிப்பு, விண்ணகம், குறிக்கோள், சரணடைதல், நிரந்தரமற்ற நிலை. கேரன் அவர்கள் சொல்லித்தரும் இந்த 7 பாடங்களில் பலவற்றை, இலாசரை இயேசு உயிர்பெற்றெழச் செய்யும் புதுமை வழியே நாம் பயில முயல்வோம்.

இப்புதுமைக்குள் அடியெடுத்து வைப்பதற்குமுன், இப்புதுமை நிகழ்ந்த சூழலைக் குறித்து சிந்திக்க முயல்வோம். பிறவியிலிருந்து பார்வையற்ற மனிதருக்கு இயேசு பார்வை வழங்கியப் புதுமை, ஒய்வு நாளில் நிகழ்ந்தது. இந்தப் பிரச்சனை, யூதமதத் தலைவர்களின் கோபத்தைத் தூண்டியது என்று, யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் வாசிக்கிறோம். இதைத் தொடர்ந்து, 10ம் பிரிவில், இயேசு, தன்னை ஒரு நல்ல ஆயனாகவும், ஆட்டுக்கொட்டிலின் வாயிலாகவும் உருவகித்துப் பேசுகிறார். அதுமட்டுமல்ல, ஏனையோரை, கூலிக்கு மேய்ப்பவர்கள் என்றும், திருடர்கள் என்றும் உருவகித்துப் பேசுகிறார் (யோவான் 10:1-18). இயேசு கூறியவற்றைக் கேட்ட ஒரு சிலர், அவரைப் பேய் பிடித்தவர் என்றும், வேறு சிலர், அவர் பேய்பிடித்தவராக இருந்தால், புதுமைகள் செய்ய இயலாது என்றும் கூறவே, அங்கு கருத்து வேறுபாடுகள் எழுகின்றன (யோவான் 10:19-21).

10ம் பிரிவின் இரண்டாம் பாதியில், எருசலேம் கோவிலில் நிகழந்த அர்ப்பண விழாவில் கலந்துகொள்ள இயேசு மீண்டும் அங்கு சென்றதை யோவான் குறிப்பிடுகிறார் (யோவான் 10:22-23). அவ்வேளையில் மீண்டும் ஒரு மோதல் உருவாகிறது. "நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்" (யோவான் 10:24) என்று யூதர்கள் இயேசுவிடம் கேட்கும் வேளையில், இயேசு தன்னை இறைவனுடன் இணைத்துப் பேசி, "நானும், தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" (யோவான் 10:30) என்று கூறி முடிக்கிறார்.

கடினமான உண்மைகளை இயேசு கூறியதால், அவர்மீது தாக்குதல்கள் நிகழ்த்த முயற்சிகள் நடந்தன என்பதை யோவான் இப்பகுதியில் குறிப்பிடுகிறார். (யோவான் 10:31,39) வெறுப்பும், வன்முறையும் நிறைந்த இச்சூழலைவிட்டு, இயேசு விலகிச்சென்றார். தன் மீது வளர்ந்திருந்த ஆத்திரம், தன் சீடர்களையும் பாதிக்கும் என்பதை உணர்ந்த இயேசு, தன் சீடர்களுடன், யூதேயாவை விட்டு வெளியேறி, "யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்கு கொடுத்துவந்த இடத்திற்கு... மீண்டும் சென்று அங்கு தங்கினார்" (யோவான் 10:40) என்று நற்செய்தியாளர் யோவான் குறிப்பிட்டுள்ளார்.

எருசலேம் நகரில் மீண்டும், மீண்டும் வெறுப்பையும், வன்முறையையும் கண்டு, தளர்ந்துபோயிருந்த இயேசுவின் உள்ளம், தந்தையின் பாசத்தைச் சுவைக்க துடித்திருக்கவேண்டும். "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" (மாற்கு 1:11) என்று தந்தை தன்னிடம் கூறிய யோர்தான் நதியை, இயேசுவின் உள்ளம் நாடிச் சென்றது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!
தந்தையின் அரவணைப்பை, அங்கீகாரத்தை இயேசு அசைப்போட்டுக் கொண்டிருந்த வேளையில், பாசம் மிகுந்த தன் தாயையும், நண்பர்களையும் இயேசு எண்ணிப்பார்த்திருக்கக் கூடும். இயேசுவின் நெருங்கிய நண்பர்களாக இருந்த ஒரு சிறு குடும்பம், அவரது மனதில் தோன்றியிருக்க வேண்டும். அதுதான், பெத்தானியாவில் வாழ்ந்த, மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளும், அவர்களின் சகோதரர் இலாசரும்.


பாசத்திற்காக இயேசு ஏக்கம் கொண்ட அவ்வேளையில், இலாசர் நோயுற்றிருக்கும் செய்தி இயேசுவை வந்தடைகிறது. இதைத் தொடர்ந்து அங்கு நிகழ்ந்ததை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

02 September, 2018

Rituals replace Real God சடங்குகளால் இடம் பெயரும் கடவுள்


Hand Washing Tradition of the Pharisees

22nd Sunday in Ordinary Time

Isaac Ole had heard from his grandma, stories of an amazing family tradition. It seems that his father, grandfather and great-grandfather had all been able to walk across the lake on their 21st birthday. On that day, they'd walk across the lake to the boat club for their first legal drink and return home walking on the lake. So, when Isaac’s 21st birthday came around, he and his pal Sven took a boat out to the middle of the lake. Isaac stepped out of the boat and nearly drowned! Sven just managed to pull him to safety. Furious and confused, Isaac went to see his grandmother. "Grandma," he asked," it's my 21st birthday, so why can't I walk across the lake like my father, his father, and his father before him?" Granny looked into Isaac's eyes with a broad smile and said, "Because your father, grandfather and great-grandfather were born in January when the lake is frozen, and you were born in hot July!"

This may seem like a joke. But, jokes do teach us some essential lessons of life. Walking across the lake was established as the ‘family tradition’, without specifying other details like the month of January, frozen lake etc. Such ‘traditions’ are passed on from generation to generation gliding over the historical details. When these traditions get linked up with God and religion, they become ‘unchangeable rituals’. This is the power of rituals!

Our day to day life is filled with lots of rituals, starting from the way we freshen up in the morning. These rituals are a help to us, as long as they remain only that, namely, helps. The moment they assume more importance, they can become hell, instead of help. This is not a simple play on words. We are only painfully aware of the amount of violence unleashed when some rituals are tampered with. All hell breaks loose!

Today’s Gospel passage is about the ritual washing practised by the Israelites. Mark the Evangelist elaborates on this ritual in today’s Gospel.
For the Pharisees, and all the Jews, do not eat unless they wash their hands, observing the tradition of the elders; and when they come from the market place, they do not eat unless they purify themselves; and there are many other traditions which they observe, the washing of cups and pots and vessels of bronze. (Mark 7:3-4)

A quick glance at this explanation makes this ritual as one of hygiene. Returning home from the market place, it is common sense to wash one’s hands as well as wash the fruits and vegetables bought from the market before consuming them. But, this ritual implied more than that. It was a matter of cleansing oneself from the ‘contamination’ caused by coming into contact with ‘other’ groups of people. This is where this ritual of ‘ablution’ assumes greater importance. This attitude of ‘superiority’ and ‘isolation’ is challenged by Jesus throughout his life.

Similar to this ritual, the life of Israelites was filled with hundreds of other rituals. These rituals were defined and redefined by the religious leaders… Year after year, these rituals and their prescriptions seemed to expand… against the warning given to them by Moses, not to do so. We read this warning of Moses in the first reading today:
Deuteronomy 4:1-2
"And now, O Israel, give heed to the statutes and the ordinances which I teach you, and do them; that you may live, and go in and take possession of the land which the LORD, the God of your fathers, gives you. You shall not add to the word which I command you, nor take from it; that you may keep the commandments of the LORD your God which I command you.

Moses gave them a simple instruction… don’t add or delete anything, just follow them in life. Jesus was aware that this warning of Moses was not heeded. The religious leaders seemed to derive special pleasure in imposing rules and more rules on the innocent people. It is said, that out of the 10 commandments given by God to Moses, the Scribes and the Pharisees created 613 ‘commandments’ (mitzvot). When we browse through the website, we find an interesting detail about the ‘positive’ and ‘negative’ commandments. Guess what? The ‘negative’ commandments are more numerous than ‘positive’ commandments. The negative commandments number 365, which coincides with the number of days in the solar year, and the positive commandments number 248, a number ascribed to the number of bones and main organs in the human body. This is yet again one more trait of tradition, which prescribes more ‘Don’t’s than ‘Do’s!

A society which carries a heavy load of tradition, cult, ritual etc., tends to ‘deify’ these rituals. Such a situation alienates them from God and ties them to the rituals. A warning to this effect was given by Prophet Isaiah to which Jesus makes an allusion in today’s Gospel. Here is the original warning, as given by Isaiah:
Isaiah 29: 13
And the Lord said: "Because this people draw near with their mouth and honor me with their lips, while their hearts are far from me, and their fear of me is a commandment of men learned by rote.”

When rituals and rules occupy our hearts more than God, then strange things can happen. Here are two short episodes to drive home this point. The first one is shared by William Barclay:
This story is about a Muslim pursuing an enemy to kill him. In the midst of the pursuit, the Azan, or public call to prayer, sounded. Instantly the Muslim got off his horse, unrolled his prayer mat, knelt down and prayed the required prayers as fast as he could. Then he leaped back on his horse to pursue his enemy in order to kill him.

The second story comes from Msgr.Arthur Tonne, which talks of a Christian who had his priorities topsy-turvy:
About 2 o’clock on a cold, blustery morning the rectory telephone rang. “I think grandpa is dying,” an excited voice declared. As it was just two blocks away Fr. Murray decided to walk to anoint the dying man. As he passed an alley, a figure with a gun stepped out and demanded: “Give me your money.” The priest told the gunman: “My wallet is in the pocket of my coat” and proceeded to retrieve it. As the priest opened his coat, the gunman noticed his Roman collar. He said: “I am sorry. I didn’t know that you were a priest. I beg your pardon Father! Keep your money.” In grateful relief Fr. Murray offered him a cigar. But the fellow shook his head saying, “No Father, thank you very much, but I don’t smoke during Lent!” For this Christian, Lenten observance was more important than robbing people at gunpoint.

Let us close today’s reflections with some thoughts on the “World Day of Prayer for the Care of Creation” celebrated on September 1:

September 1 is the first day of the ecclesiastical year for the Orthodox.  The Orthodox offer “prayers and supplication . . . for all creation” on this day to praise and thank God and to turn sinful humanity back to its proper relationship, not only with God, but with creation. The Orthodox Church has been celebrating “The Day of Prayer for Creation” since 1989, when Ecumenical Patriarch Dimitrios instituted it.
Patriarch Dimitrios wrote that we were “created in order to refer creation back to the Creator, in order that the world may be saved from decay and death.”  His successor, Ecumenical Patriarch Bartholomew, who has been called the Green Patriarch because of his prophetic condemnation of ecological sin and his evangelical focus on a spiritual renewal concerning our relationship with the earth, shares the same concern with Pope Francis about the future of creation (Laudato Si’). Prayer for creation points to our fundamental identity and mission as Christians.
In the same year that Pope Francis published the encyclical “Laudato Si’”, namely, 2015, Pope Francis invited all Catholics to join the Orthodox Christians to observe the “World Day of Prayer for the Care of Creation” on September 1. Pope Francis’ message for the 4th World Day of Prayer for the Care of Creation focuses on water as a precious resource and describes access to it as a human right.

As we reflect on the danger of empty rituals, we pray that our life is filled with more substantial values than shallow, empty rituals. We also pray that our effort to celebrate the World Day of Prayer for the Care of Creation helps us wake up to the challenges of ecology!

Why was handwashing an issue for Jesus’ antagonists?

பொதுக்காலம் 22ம் ஞாயிறு

ஐசக் ஒலே (Isaac Ole) என்ற இளையவர், தன் பாட்டி சொன்ன கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். அவர்கள் குடும்பத்தில் நிலவும் பெருமை மிகுந்த ஒரு பாரம்பரியத்தைப்பற்றி பாட்டி சொன்னது, ஐசக்கை அதிகம் கவர்ந்தது. அதாவது, ஐசக்கின் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என்று, மூன்று தலைமுறையினர், தங்கள் 21வது பிறந்தநாளன்று, ஊருக்கு நடுவே இருந்த ஏரியில் நடந்து சென்று, மறுகரையில் இருந்த 'கிளப்'பில் முதல் முறையாக, சட்டப்பூர்வமாக மது அருந்திவிட்டு, மீண்டும் ஏரியில் நடந்து, வீட்டுக்குத் திரும்பினர் என்று பாட்டி சொன்னது, ஐசக்கின் மனதில் ஆழப் பதிந்தது.
ஐசக் ஒலே, தன் 21வது பிறந்தநாளன்று, நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு ஏரிக்குச் சென்றார். இருவரும் ஒரு படகில் ஏறி, ஏரியின் நடுப்பகுதிக்குச் சென்றனர். அங்கிருந்து அடுத்தக் கரைக்கு நடந்து செல்ல, ஐசக் படகைவிட்டு இறங்கி, நீரில் கால் வைத்தபோது, தண்ணீரில் மூழ்கினார். படகிலிருந்த நண்பர் அவரைக் காப்பாற்றி, கரை சேர்த்தார்.
அவமானமும், ஆத்திரமும் நிறைந்தவராய், வீடு திரும்பிய ஐசக், பாட்டியிடம் சென்று, "என் கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா, எல்லாரும் 21வது வயதில் ஏரியில் நடந்தார்கள் என்றால், என்னால் மட்டும் ஏன் அது முடியாமல் போனது?" என்று கத்தினார்.
பாட்டி அவரை அமைதிப்படுத்தி, அமரவைத்து, "ஏனெனில், உன் அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா எல்லாரும் சனவரி மாதம் பிறந்தவர்கள். எனவே, அவர்களுடைய பிறந்தநாளன்று, ஏரி பனியால் உறைந்திருந்தது. நீயோ, வெப்பம் நிறைந்த ஜூலை மாதம் பிறந்தவன்" என்று அன்பாக விளக்கமளித்தார்.

இது ஒரு சிரிப்புத் துணுக்கு என்றாலும், சிந்தனையைத் தூண்டும் கதை இது. பாரம்பரியம் என்ற போர்வைக்குள் மிக எளிதாக மறைக்கப்படும் உண்மைகளைப்பற்றி சிந்திக்க, இந்தத் துணுக்கு உதவியாக இருக்கும். கொள்ளுத்தாத்தா, தன் 21வது பிறந்தநாளன்று ஏரியில் நடந்தார்; தாத்தா, தன் 21வது பிறந்தநாளன்று ஏரியில் நடந்தார்; அப்பா, தன் 21வது பிறந்தநாளன்று ஏரியில் நடந்தார்... என்று வரிசையாகச் சொல்லி, 21ம் பிறந்தநாளன்று, ஆண் வாரிசுகள் ஏரியில் நடப்பது, அக்குடும்பத்தின் பாரம்பரியம் என்பதில், குடும்பத்தினர் பெருமைப்பட்டனர். ஆனால், அந்த சாகசத்தின் பின்னணியில், சனவரி மாதம், குளிர்காலம், ஏரி நீர் உறைந்திருப்பது போன்ற விவரங்கள், பாரம்பரியம் என்ற போர்வைக்குள் மறைந்துவிட்டன. பின்னணிகளை மறைத்துவிட்டு, ஏரியில் நடப்பதை மட்டும், ஒரு பாரம்பரியச் சடங்காக மாற்றிவிட்டது அக்குடும்பம். பாரம்பரியச் சடங்குகளுக்கு உள்ள சக்தி இது.

குடும்பங்களில், சமுதாயத்தில், பணியாற்றும் இடங்களில் பல பாரம்பரிய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றை ஏன் செய்கிறோம் என்பதற்குக் காரணங்களும் உள்ளன. ஆனால், காலப்போக்கில், காரணங்கள் மறக்கப்பட்டு, அல்லது, மறைக்கப்பட்டு, 'இப்படித்தான் செய்யவேண்டும்' என்ற கட்டாயமாக மாறும்போது, அவை சடங்குகளாகின்றன.
இத்தகையைச் சடங்குகள், சம்பிரதாயங்கள், கடவுளோடும், கோவிலோடும் இணைக்கப்படும்போது, அவை, இம்மியளவும் மாற்றப்பட முடியாத மதச் சடங்குகளாக மாறிவிடுகின்றன. பல வேளைகளில், இந்தச் சடங்குகளும், பாரம்பரியங்களும் கடவுளைவிட முக்கியமான இடம் பெறும் ஆபத்தும் உள்ளது. இத்தகைய ஓர் ஆபத்தைப்பற்றி சிந்திக்க, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்மை, அழைக்கின்றன. வெறுமையான சடங்குகளை மதம் என்று சொல்லும் விபரீதத்தை ஆய்வு செய்ய, இன்றைய வாசகங்கள் வாய்ப்பளிக்கின்றன.

இன்றைய நற்செய்தியில், கழுவுதல் என்ற மரபு பற்றிய விவாதம் எழுகிறது. கழுவாதக் கைகளுடன் இயேசுவின் சீடர்கள் உண்பது, பெரும் சர்ச்சையை உருவாக்குகிறது. சம்பிரதாயக் கழுவுதல் (Ritual Washing) என்பது யூதர்கள் மத்தியில் மிகக் கவனமாகப் பின்பற்றப்பட்ட ஒரு சடங்கு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் வரிகள், இதனை உறுதி செய்கின்றன:
மாற்கு நற்செய்தி 7: 3-4
பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை;4 சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.

மேலோட்டமாகப் பார்த்தால், இச்சடங்கு மக்களின் உடல் நலனை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட வழிமுறை என்று நாம் பொருள்கொள்ள முடியும். சந்தையிலிருந்து வாங்கிவரும் பொருள்கள் சுத்தமில்லாமல் இருக்க வாய்ப்புண்டு. அதேபோல், வெளியில் சென்று வீடு திரும்புவோரும் கிருமிகள் பலவற்றைச் சுமந்து வர வாய்ப்புண்டு. எனவே, கைகளையும், பொருள்களையும் கழுவுவது, உடல்நலனுக்கு உகந்தது என்பதை, யாரும் மறுக்க இயலாது.
ஆனால், பரிசேயர்களும், யூதர்களும் கழுவுதலை ஒரு சடங்காக மேற்கொள்ள அவர்களை அதிகம் தூண்டிய காரணம், புற இனத்தவருடன் அவர்கள் கொண்ட தொடர்புகள். சந்தையில் வாங்கிய பொருள்கள், வெளி உலகில் அவர்கள் நடமாடிய இடங்கள் ஆகியவை, புற இனத்தவரும் பயன்படுத்திய இடங்கள், அல்லது, பொருள்கள் என்பதால், அவை 'தீட்டுப்பட்டவையாக' மாறுகின்றன. இந்தக் காரணமே, அவர்களை, இந்த கழுவுதல் சடங்கை மிக கவனமாக மேற்கொள்ளத் தூண்டியது. இத்துணை முக்கியத்துவம் பெற்ற கழுவுதல் சடங்கைச் செய்யாமல், இயேசுவின் சீடர்கள் தங்கள் உணவை உண்டது, அதிர்ச்சியையும், சர்ச்சையையும் உருவாக்கியது என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது.

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் இதுபோன்ற பல நூறு சம்பிரதாயங்கள், மரபுகள், சடங்குகள் கூடிக்கொண்டே சென்றன. இவற்றை, கூட்டவோ, குறைக்கவோ வேண்டாம் என்று, மோசே, மக்களுக்கு தெளிவாக அறிவுறுத்தியதை, இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.
இணைச்சட்டம் 4: 1-2
இஸ்ரயேலரே! கேளுங்கள்: நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்கவும் வேண்டாம். அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத்தருகிறேன்: அவற்றைப் பின்பற்றுங்கள்.

சேர்க்கவும் வேண்டாம், நீக்கவும் வேண்டாம், கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றுங்கள் என்று மோசே கூறிய தெளிவான அறிவுரையை மறந்துவிட்டு, அவர் தந்த கட்டளைகளில் புதிய புதிய அர்த்தங்களைக் கண்டுபிடித்து, சிறிய, அல்லது பெரிய மாற்றங்களை உருவாக்கி, அவற்றை எழுதப்படாத மரபுகளாக, சட்டங்களாக மாற்றுவதில் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முழு கவனம் செலுத்தினர். இறைவன் தந்த பத்து கட்டளைகளை சிறு, சிறு பகுதிகளாகப் பிரித்து, பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் 613 சட்டங்களை வகுத்து வைத்தனர். (Hebrew: "613 mitzvot") (ஒரு சில மரபுகளின்படி, 685 சட்டங்கள் இயற்றப்பட்டன என்று சொல்வோரும் உண்டு.)

சட்டங்கள், சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், மரபுகள் என்ற பல பாரங்களைச் சுமந்து, பழகிப்போகும் ஒரு சமுதாயம், விரைவில், இவற்றையே கடவுள் நிலைக்கு உயர்த்திவிடும் ஆபத்து உண்டு. இப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகும்போது, மக்கள் இறைவனை மறந்துவிட்டு, சட்டங்களை வணங்கும் ஆபத்து உண்டென்று இறைவாக்கினர் எசாயா ஓர் எச்சரிக்கை விடுத்தார். அந்த எச்சரிக்கையை இயேசு இன்றைய நற்செய்தியில் மீண்டும் நினைவுறுத்துகிறார். எசாயா தந்த எச்சரிக்கை இதுதான்:
எசாயா 29 : 13
என் தலைவர் கூறுவது இதுவே: வாய்ச்சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்: உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்: அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது: அவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே!

மனப்பாடம் செய்த சட்டங்களை, மந்திரங்களை, உதடுகள் சொன்னாலும், உள்ளத்தில் இறையுணர்வும், மனித உணர்வும் சிறிதும் இல்லாமல் வாழமுடியும் என்பதை, விவிலிய அறிஞர் வில்லியம் பார்க்லே அவர்கள், ஒரு குட்டிக்கதை வழியே கூறியுள்ளார்.
மதப்பற்று அதிகம் உள்ள ஒருவர், தன் எதிரியைக் கொல்வதற்காக அவரைத் துரத்திச் செல்கிறார். இருவரும் குதிரையில் ஏறி, பறந்து கொண்டிருக்கின்றனர். அவ்வேளையில், நண்பகல் வழிபாட்டுக்காக அழைப்பு ஒலிக்கிறது. எதிரியைக் கொல்ல துரத்திச் செல்பவர், அந்த அழைப்பைக் கேட்டதும், குதிரையை விட்டு குதித்து, அவ்விடத்திலேயே முழந்தாள் படியிட்டு, சொல்லவேண்டிய செபங்களை அவசரம் அவசரமாகச் சொல்லி முடிக்கிறார். பின்னர், மீண்டும் குதிரையில் ஏறி, கொலைவெறியோடு, தன் எதிரியைத் துரத்திச் செல்கிறார். அவர் உதடுகள் அந்நேரத்தில் சொன்னது செபமா? சாபமா? தெரியவில்லை.

மதத்தின் உண்மைப் பொருள் மறைந்துவிடும் நேரங்களில், அந்த வெற்றிடத்தை, சடங்குகளும், சட்டங்களும் நிரப்பிவிடுகின்றன. இந்த எண்ணத்தை உணர்த்தும் மற்றொரு கதை இதோ - 'தாத்தா சாகக்கிடக்கிறார்' என்ற அவசரச் செய்தியைக் கேட்டு, இரவு நேரத்தில் பங்குத்தந்தை, அந்த முதியவர் வாழ்ந்த இல்லம் நோக்கிச் சென்றார். அப்போது, திடீரென, ஒருவர், பங்குத்தந்தையை துப்பாக்கி முனையில் மிரட்டி, பணம் கேட்டார். தன் 'பர்ஸை' எடுப்பதற்காக பங்குத்தந்தை முயன்றபோது, அவர் குரு என்பதைக் கண்டுகொண்ட மனிதர், "மன்னிக்கவும் சாமி. நீங்கள் ஒரு குரு என்று தெரியாமல் இப்படி செய்துவிட்டேன். நீங்கள் போகலாம்" என்று கூறினார். இரவு குளிராக இருந்ததால், பங்குத்தந்தை, அம்மனிதரிடம் 'சிகரெட் பாக்கெட்'டை நீட்டினார். உடனே, அம்மனிதர், "வேண்டாம் சாமி. நான் வெள்ளிக்கிழமைகளில் சிகரெட் குடிப்பதில்லை" என்று கூறினார்.
மதத்தின் சடங்குகளையும், சட்டங்களையும் பின்பற்றுவதில் நாம் காட்டும் ஆர்வம், மதத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து பின்பற்றுவதில் காணாமல் போய்விடுகிறது. இத்தகைய 'குருட்டு' ஆர்வத்தை தவறாகத் தூண்டிவிட்டு, அரசியல்வாதிகளும், சுயநலம் மிக்க மதத்தலைவர்களும் மதத்தை ஓர் ஆயுதமாக மாற்றி, அதை அழிவிற்குப் பயன்படுத்த, அனைவரையும், குறிப்பாக, இளையோரை, தூண்டி வருகின்றனர் என்பது, நாம் வேதனையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஓர் உண்மை.

உண்மையான மதம், அல்லது சமயம் சார்ந்த வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பதை, இன்றைய இரண்டாம் வாசகத்தில், யாக்கோபு தெளிவாகக் கூறியுள்ளார்:
யாக்கோபு எழுதிய திருமுகம் 1:27
தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.

புனித யாக்கோபு வரையறுத்த இந்த சமயவாழ்வை தன் சொந்த வாழ்வாக மாற்றி, வறியோருடன் மிக நெருங்கி வாழ்ந்த அன்னை தெரேசா செய்துவந்த பணியைக் கண்டு வியந்த ஒரு பத்திரிகையாளர் அவரிடம் ஒருநாள், "உங்களால் எப்படி இவ்வளவு மகிழ்வாக இப்பணிகளைச் செய்ய முடிகிறது?" என்று கேட்டார். அன்னை அவரிடம், "நான் 18 வயதில் என் குடும்பத்தினரை விட்டு, துறவற வாழ்வில் இணைந்தபோது, 'இயேசுவின் கைகளில் உன் கைகளை இணைத்துக் கொள்... அவருடன் நடந்து செல்' என்று சொல்லி, என் அம்மா என்னை வழி அனுப்பி வைத்தார்கள்... அம்மா அன்று சொன்ன வார்த்தைகளே என்னை இதுவரை மகிழ்வுடன் வைத்துள்ளன" என்று அன்னை தெரேசா அவர்கள், அந்த பத்திரிகையாளரிடம் சொன்னார்.

இறைவனுக்கு நெருக்கமாக வாழ்ந்த புனித அன்னை தெரேசாவின் திருநாளை, செப்டம்பர் 5, வருகிற புதனன்று சிறப்பிக்கிறோம். அந்த அன்னையின் பரிந்துரையால், நாம் பின்பற்றும் மதத்தின் உண்மைப் பொருளை உணர்ந்து, நம் சொல்லாலும், செயலாலும், இறைவனையும், மக்களையும் நெருங்கி வாழும் வரத்தை வேண்டுவோம்.