11 May, 2019

Efficient vs Serving Shepherd பதவி வகிக்கும் – பணியாற்றும் ஆயன்


Sheep following a shepherd

4th Sunday of Easter – Mother’s Day

Today’s liturgy gives us an opportunity to celebrate a ‘Triple Feast’: May 12, the IV Sunday of Easter is celebrated as the Good Shepherd Sunday as well as the World Day to pray for Vocations. This being the second Sunday of May, many countries around the world celebrate “Mother’s Day”. On May 13, Monday, we also celebrate the Feast of Our Lady of Fatima. We begin our reflection on this ‘Triple Feast’ with three news items.

Generally, news shared by the media snap the threads of hope in our hearts. Occasionally, we come across some news items that enkindle the fire of hope in us. Here are three such news to help our reflection:
On April 21, Easter Sunday, Ramesh Raju was standing with his family near the entrance to Zion church in Batticaloa on Sri Lanka’s east coast, waiting for the Easter service to start, when he spotted the man who had come to attack their community. “My husband sensed something was wrong,” Raju’s wife Chrishanthini told the BBC, as she described how her husband stopped the suicide attacker from entering the church, sealing his own fate but almost certainly saving many other lives. Barred from entering the church, the bomber had blown himself up outside, where there were fewer people. But in saving others, Raju sacrificed his own life.
A young flight attendant was hailed as a hero Monday (May 6) after refusing to leave the doomed Russian airliner while passengers were still aboard and died while helping them evacuate the flaming plane, according to a report. Maxim Moiseyev could not open the door in the rear of the Sukhoi Superjet 100 during the inferno, so he began guiding passengers toward the evacuation slides at the front… He lost his life after refusing to leave anyone aboard behind before fleeing himself, the news outlet reported.
On Sunday, August 16, 1987, Northwest Airlines Flight 255, crashed shortly after takeoff from Detroit Metropolitan Airport, killing all six crew members and 148 of its 149 passengers, along with two people on the ground. The sole survivor was a 4-year-old girl, Cecelia Cichan, who sustained serious injuries. It was the second-deadliest aviation accident at the time in the United States. News accounts say when rescuers found Cecelia they did not believe she had been on the plane. Investigators first assumed Cecelia had been a passenger in one of the cars on the highway onto which the airliner crashed. But when the passenger register for the flight was checked, there was Cecelia's name. Reports said: "Cecelia survived because, as the plane was falling, Cecelia's mother, Paula Chichan, unbuckled her own seat belt, got down on her knees in front of her daughter, wrapped her arms and body around Cecelia, and then would not let her go."

Ramesh Raju, Maxim Moiseyev, and Paula Cichan, in dying to save others, became living examples of the motherly love of the Good Shepherd. The IV Sunday of Easter is called the ‘Good Shepherd Sunday’. In all the three liturgical years (A,B,C), for this Good Shepherd Sunday, we have the Gospel passages taken from the Gospel of John, describing the different qualities of the Good Shepherd – especially his personal care (calling each sheep by name), and commitment (unlike the hireling).  

In the year 1963, Pope St Paul VI instituted the World Day of Prayer for Vocations on the Good Shepherd Sunday. This Sunday – May 12 – as we celebrate the 56th Vocation Sunday, Pope Francis is ordaining 19 Deacons as Priests in St Peter’s Basilica. The combination of Good Shepherd Sunday, Vocation Sunday, and Ordination Sunday is an invitation to reflect on leadership in the Church, and pray for the present and future leaders of the Church.

When we think of the great qualities required for a worldly leader, efficiency, talent for governance and decision making are spoken of first. Sensitivity, tenderness and identifying with the people are not usually considered the most important aspects. Unfortunately, these aspects are not considered the most important even for religious leaders in the 21st century. The model of leadership set by the worldly leaders has, unfortunately, become a yardstick by which Church leadership is also measured. We talk of how ‘efficient’ our Church and Religious leaders are. We are also sadly aware that quite many of our leaders – like Bishops and Religious Superiors – are given training in ‘managerial skills’ by management schools.

In our effort to project ‘efficient leadership’, the original ‘servant leadership’ of the Gospel, has become a distant memory. This Sunday gives us an opportunity to refresh our memory on ‘servant leadership’ given to us by Christ – the Good Shepherd.
The image of the Good Shepherd evokes very tender feelings and thoughts in us. Church history points out, that the Good Shepherd was one the first images used in the Christian tradition, to represent Jesus. Painting of Jesus, the Good Shepherd, is found in the catacombs of Rome. Most of the paintings of the Good Shepherd depict Jesus carrying a lamb on his shoulders with tender love. But the life of a shepherd is not all smooth and shiny. The shepherd needs to lead his flock through many dangerous circumstances and be ready to lay down his life for the sheep.

Our thoughts now turn to the second reason for today’s celebration – namely, Mother’s Day. Reading through quite a few vignettes on the evolution of this day, I was very impressed with the "Mother's Day Proclamation" by Julia Ward Howe. This proclamation was one of the early calls to celebrate Mother’s Day in the United States. Written in 1870, Howe’s Mother’s Day Proclamation was a pacifist reaction to the carnage of the American Civil War and the Franco-Prussian War. The Proclamation was tied to Howe’s feminist belief that women had a responsibility to shape their societies at the political level. Here are the famous lines of this proclamation:

Mother's Day Proclamation

Arise, then, women of this day!
Arise, all women who have hearts,
Whether our baptism be of water or of tears!
Say firmly:
"We will not have great questions decided by irrelevant agencies,
Our husbands will not come to us, reeking with carnage, for caresses and applause.
Our sons shall not be taken from us to unlearn
All that we have been able to teach them of charity, mercy and patience.
We, the women of one country, will be too tender of those of another country
To allow our sons to be trained to injure theirs."

From the bosom of the devastated Earth a voice goes up with our own.
It says: "Disarm! Disarm! The sword of murder is not the balance of justice."
Blood does not wipe out dishonor, nor violence indicate possession.
As men have often forsaken the plough and the anvil at the summons of war,
Let women now leave all that may be left of home for a great and earnest day of counsel.
Let them meet first, as women, to bewail and commemorate the dead.
Let them solemnly take counsel with each other as to the means
Whereby the great human family can live in peace,
Each bearing after his own time the sacred impress, not of Caesar,
But of God.

This poem, as we see, was written in the context of a war. Our world is constantly at war. As Pope Francis has often said, that the 21st century is witnessing ‘World War III in bits and pieces’. One of the lines in this poem talks of the smell of carnage: Our husbands will not come to us, reeking with carnage, for caresses and applause.
The latest carnage was witnessed in Sri Lanka. Most of the responses to the carnage created by terrorism is state approved military strikes, resulting in more carnage. Only mercy and pardon can break this cycle of violence and a mother is an inexhaustible source of mercy and pardon. Unless all of us deal with the human family with the qualities of a mother, wars will continue. The closing line of this poem caught my special attention:
“Let them solemnly take counsel with each other as to the means
Whereby the great human family can live in peace,
Each bearing after his own time the sacred impress, not of Caesar,
But of God.”
Imprinting the image of Caesar or God on this world… on each individual? A challenge worth considering.
The image of Caesar symbolising power has made the world a battlefield all the time. As against this, Julia’s poem talks of imprinting the image of God which symbolises peace and love. Mary, the Mother of Christ, constantly imprinted God’s image on this world not only during her life time, but also after her return to heaven. Through her apparitions in different places, in different decades, her only aim was to imprint the image of God more and more on the world. Especially, during her apparitions in Fatima, Mary had revealed about the devastations of war and the need to pray for peace.

On this special day – Good Shepherd Sunday + Mother’s Day + Feast of Our Lady of Fatima – we shall celebrate God the Mother and the Good Shepherd. We also celebrate maternal instincts given to each of us. Only with motherly care can we impress God on the world. Only with motherly care can we sustain this world in peace!

Sri Lanka attacks - Ramesh Raju with his family

Steward Maxim Moiseyev – Russian plane disaster

உயிர்ப்புக்காலம் 4ம் ஞாயிறு அன்னை தினம்

மே 12, இஞ்ஞாயிறு - உயிர்ப்புக்காலத்தின் 4ம் ஞாயிறு. இஞ்ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு என்றும், இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலகநாள் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இதே ஞாயிறு, மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறு என்பதால், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று அன்னை தினம் கொண்டாடப்படுகிறது. அத்துடன், மே 13, இத்திங்களன்று, பாத்திமா நகர் அன்னை மரியாவின் திருநாளையும் நாம் சிறப்பிக்கிறோம். நல்லாயன் ஞாயிறு, அன்னை தினம், பாத்திமா அன்னை மரியாவின் திருநாள் என்ற மூன்று கருத்துக்களையும் இணைத்து, இன்றைய ஞாயிறு சிந்தனைகளை மேற்கொள்வோம். ஊடகங்களில் வெளியான ஒரு சில செய்திகள், நம் நம் சிந்தனைகளைத் துவக்கிவைக்க, உதவியாக உள்ளன.
ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில் பெரும்பாலானவை, நம் உள்ளங்களில் ஓடும் நம்பிக்கை நரம்புகளை அறுத்துவிடுகின்றன. இருப்பினும், அவ்வப்போது, அவற்றில் வெளியாகும் ஒரு சில செய்திகள், நமக்குள் நம்பிக்கை தீபங்களையும் ஏற்றிவைக்கின்றன. அத்தகையச் செய்திகள் மூன்றின் மீது நம் கவனத்தைத் திருப்புவோம்.

உயிர்ப்பு ஞாயிறன்று, இலங்கையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களின்போது, வெடிகுண்டுகள் நிறைந்த தோள்பையுடன், மட்டக்கிளப்பு சீயோன் ஆலயத்தில் நுழையவிருந்த தீவிரவாதியை, வெளியிலேயே தடுத்து நிறுத்திய ரமேஷ் ராஜு அவர்கள், குண்டுவெடிப்பில் இறந்தார். தீவிரவாதி, கோவிலுக்குள் சென்றிருந்தால், இன்னும் பல உயிர்கள் பலியாகியிருக்கும். ரமேஷ் ராஜு அவர்கள், தன் உயிரைத் தந்து, கோவிலில், வழிபாட்டில் இருந்த அவரது மனைவி, மகள், மகன் உட்பட, பலரைக் காப்பாற்றியுள்ளார்.
மே 5, கடந்த ஞாயிறன்று, இரஷ்ய விமானம் ஒன்று, அவசரமாகத் தரையிறக்கப்பட்டபோது தீப்பிடித்ததால், அதில் பயணம் செய்த 78 பேரில், 41 பேர் உயிரிழந்தனர். இது வேதனையான செய்தி என்றாலும், அந்த அழிவின் நடுவிலும், நல்லவர் ஒருவரைப் பற்றிய செய்தியும் வெளியானது. விமானத்தில் பணியாற்றிய மாக்ஸிம் மொய்செயேவ் (Maxim Moiseyev) என்ற இளையவர், பயணிகளைக் காக்கும் முயற்சியில், தன் உயிரை இழந்தார்.
1987ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் டிட்ராய்ட் (Detroit) நகர் விமான நிலையத்திற்கருகிலேயே நடைபெற்ற ஒரு விபத்தில், விமானத்தில் இருந்த 155 பேரில், 154 பேர் கொல்லப்பட்டனர். Cecelia Cichan என்ற 4 வயது சிறுமி மட்டும் உயிர் பிழைத்தார். முற்றிலும் எரிந்துபோயிருந்த அந்த விமானத்தில், அச்சிறுமி மட்டும் உயிர் பிழைத்தது, ஓர் அதிசயம் என்று கருதப்படுகிறது. விமானம் ஆபத்தில் உள்ளது என்பதை அறிந்த Ceceliaவின் அன்னை, Paula Cichan அவர்கள், தன் இருக்கையைவிட்டு எழுந்து, Ceceliaவின் இருக்கைக்கு முன் முழந்தாள்படியிட்டு, தன் மகளை இறுக அணைத்துக்கொண்டார் என்றும், அவரது அணைப்பினால், சிறுமி Cecelia உயிர் பிழைத்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த விபத்தில், Ceceliaவின் அம்மா, அப்பா, மற்றும், 6 வயதான அண்ணன் மூவரும் உயிரிழந்தனர்.

மற்றவர்களின் உயிரைக் காக்க தங்கள் உயிரை இழந்த இந்த மூவரைப்போல், வரலாற்றில் பல்லாயிரம் பேர் உயிர் துறந்துள்ளனர். இவர்கள் அடைந்தது, வீரமரணம் என்று பொதுவாகக் கூறப்படும். ஆனால், இவர்கள் அடைந்த மரணம், வீரத்திற்கும் மேலாக, அன்பை, பரிவை, கனிவை வெளிப்படுத்தியுள்ளது என்பதை மறுக்க இயலாது. இந்த அன்பு, பரிவு கனிவு, ஆகியவற்றைக் கொண்டாட, இந்த நல்லாயன் ஞாயிறு, அன்னை தினம், பாத்திமா அன்னை திருநாள் ஆகிய மூன்றும் நம்மை அழைக்கின்றன.

1963ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், நல்லாயன் ஞாயிறை, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள் என்று உருவாக்கினார். இவ்வாண்டு, மே 12, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் 56வது உலக நாள் சிறப்பிக்கப்படும் வேளையில், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 19 தியாக்கோன்களை, அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்துகிறார். நல்லாயன் ஞாயிறு, இறையழைத்தல் ஞாயிறு, இளையோர், அருள்பணியாளர்களாக அருள்பொழிவு பெறும் ஞாயிறு என்ற எண்ணங்களை இணைக்கும்போது, திருஅவையின் இன்றையத் தலைவர்கள், நாளையத் தலைவர்கள் ஆகியோரைப்பற்றி சிந்தித்து, செபிக்க அழகியதொரு தருணத்தை இஞ்ஞாயிறு நமக்கு வழங்கியுள்ளது.

ஒரு தலைவனுக்குத் தேவையான பண்புகள் எவை என்ற கேள்வி எழுந்தால், நிர்வாகத் திறமை, அறிவுக்கூர்மை, வீரம் என்ற பண்புகளையே முதலில் எண்ணிப்பார்ப்போம். இளகிய, மென்மையான மனம், மக்களுடன் தன்னையே இணைத்துக்கொள்ளும் குணம் போன்ற பண்புகளை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. "எங்கத் தலைவருக்கு ரொம்ப இளகிய மனசு" என்று யாராவது சொன்னால், அதை, கேலி கலந்த ஒரு சிரிப்புத் துணுக்காகவே பார்ப்போம்.
உலகத் தலைவர்களிடம், பரிவு, கனிவு, மென்மை ஆகியப் பண்புகளை எதிர்பார்ப்பது வீணானது என்று எண்ணுகிறோம். அரசியல் தலைவர்களைப்போலவே, ஆன்மீகத் தலைவர்களிடமும், நாம், கனிவு, பரிவு ஆகிய குணங்களுக்கு மேலாக, நிர்வாகத் திறமைகளை எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளோம் என்பது, கவலை தரும் ஒரு போக்கு. தலைவர்களுக்குரிய பண்புகள் என்று, மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் பாடங்களை, ஆன்மீகத் தலைவர்களும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற போக்கு, மறைமாவட்டங்கள், துறவு சபைகள் ஆகியவற்றில் வலுவடைந்து வருவதைக் காணமுடிகிறது. ஆபத்தான இந்தப் போக்கிற்கு ஒரு மாற்றாக, ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் எவ்வகைப் பண்புகளை எதிர்பார்க்கவேண்டும் என்பதைச் சிந்திக்க, நல்லாயன், அன்னை என்ற இரு உருவங்களை இணைத்துவரும் இஞ்ஞாயிறு, நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நல்லாயன் என்றதும், இயேசு, ஓர் ஆட்டுக்குட்டியை, தன் தோள்மீது, அல்லது, மார்போடு அணைத்து, சுமந்துசெல்லும் அழகான உருவம், நம் உள்ளங்களில், முதலில் பதிகின்றது. ஆனால், உண்மையான ஆயன், தன் ஆடுகளை அழைத்துச்செல்லும் வழியில் சந்திக்கும் ஆபத்துக்களை, அவ்வேளையில் ஆயனிடம் வெளிப்படும் உறுதியை, தியாகத்தை, இந்த ஓவியங்கள் நினைவுறுத்துவதில்லை.
அதேபோல், அன்னை என்றதும், குழந்தையை அணைத்தல், உணவூட்டுதல், தூளியில் தாலாட்டுதல் போன்ற உருவங்களே நம் உள்ளங்களில் முதலில் தோன்றும். அன்னையாக வாழ்வதற்கு, ஒரு பெண் மேற்கொள்ளவேண்டிய போராட்டங்களையும், அந்தப் போராட்டங்களில் பெண்கள் காட்டும் வலிமையையும் நாம் எண்ணிப்பார்ப்பதில்லை.

இத்தகைய வீரத்துவ, உறுதிமிக்க உணர்வுகளே, அன்னை தினம் உருவாக காரணமாக அமைந்தன என்பதை, இன்று நாம் கொண்டாடும் அன்னை தினத்தின் வரலாறு நமக்குச் சொல்லித் தருகின்றது. அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணத்தை, 19ம் நூற்றாண்டில் வித்திட்டவர், சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe. இவர் 1870ம் ஆண்டு, சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். Mother's Day Proclamation, அதாவது, "அன்னைதின அதிகாரப்பூர்வ அறிவிப்பு"  என்ற பெயரில் அவர் வெளியிட்ட கவிதை, அன்னை தினத்தைக் கொண்டாடும் எண்ணத்திற்கு வித்திட்டது.
அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் எழுதப்பட்ட அக்கவிதையில் கூறப்பட்டுள்ள தாய்மைப் பண்புகள், இன்றைய உலகிற்கு மிகவும் தேவையானப் பாடங்களைச் சொல்லித்தருகின்றன. அன்னை, அல்லது, அம்மா என்றதும், வீட்டுக்குள், அடுப்படியில் முடங்கிக்கிடக்கும் பெண்ணாக, அவர்களை எண்ணிப்பார்த்த காலத்தைக் கடந்து, சமுதாயத்தில், நல்ல முடிவுகளை எடுக்க, குறிப்பாக, உலக அமைதியை முன்னிறுத்தி, முடிவுகள் எடுக்க, பெண்கள், வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்களது மென்மை கலந்த உறுதி, உலகின் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று, அக்கவிதை முழங்குகிறது. இதோ, அக்கவிதை:

மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே, எதிர்த்து நில்லுங்கள்!
உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.
உறுதியாகச் சொல்லுங்கள்: வாழ்வின் மிக முக்கியமானக் கேள்விகளுக்கு, விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை, குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.
சண்டைகளில், உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள், எங்கள் ஆரவார வரவேற்பையும், அரவணைப்பையும் பெறுவதற்கு, நாங்கள் இணங்கமாட்டோம்.
பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித்தரும் நிறுவனங்களிடம் எங்கள் குழந்தைகளை ஒப்படைக்க மாட்டோம்.
ஒரு நாட்டைச் சார்ந்த பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டைச் சார்ந்த பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள், அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.

அன்னையரின் ஒருமித்த தீர்மானங்களை, இவ்வாறு, தெளிவுடன் வெளியிடும் இவ்வறிக்கை, தொடர்ந்து, அமைதிக்காக ஏங்கி, ஒவ்வொரு நாளும் அலறும் பூமித்தாயுடன், அன்னையரின் குரல்களை இணைக்கிறது.
நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம், எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள், ஒருநாளும், நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே, பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.
போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச்சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும், தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும்.
போரில் இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக் குடும்பம், அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளை, பெண்கள் கலந்து பேசட்டும்.
உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை, பெண்கள், இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள் என்று, இக்கவிதையில் சித்திரிக்கப்பட்டுள்ள காட்சி, நமக்கு வேதனை தருகிறது. கண்மூடித்தனமான வெறியுடன், தீவிரவாதக் குழுக்கள், உலகில் பரப்பிவரும் கொலை நாற்றத்தை, இறுதியாக, இலங்கையில் நாம் உணர்ந்தோம். உலகெங்கும் பரவிவரும் கொலை நாற்றத்தைப் போக்க, பல்வேறு நாடுகளில், அரசுகள் மேற்கொள்ளும் இராணுவ முயற்சிகள், தகுந்த பதில்தானா என்பது தெரியவில்லை. பழிக்குப் பழி என்ற தீயை, மன்னிப்பு என்ற மழையே தணிக்கமுடியும். அப்போதுதான், இந்தக் கொலை நாற்றம் இவ்வுலகிலிருந்து முற்றிலும் நீங்கும். மன்னிப்பு மழையைச் சுமந்துவரும் கருணை மேகங்களாக இவ்வுலகில் வலம்வருவது, அன்னையரே என்பதை, யாரும் மறுக்கமுடியாது.
Julia Ward அவர்கள் எழுதிய கவிதையின் இறுதி வரிகள், மே 12, இஞ்ஞாயிறு நாம் கொண்டாடும் அன்னை தினத்தையும், மே 13, இத்திங்களன்று, நாம் கொண்டாடவிருக்கும் பாத்திமா அன்னை திருநாளையும் இணைக்க உதவியாக உள்ளன. உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை, பெண்கள், இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

அதிகாரமும், ஆணவமும் நிறைந்த, சீசரின் உருவம், உலகின் மேல் பதியப் பதிய, மென்மேலும் போர்களாலும், வன்முறைகளாலும் இந்த உலகம் சிதைந்து வருகிறது என்பதை நன்கு அறிவோம். சீசரின் உருவைப் பதிப்பதற்குப் பதிலாக, அன்பான, ஆறுதலான கடவுளின் உருவைப் பதிப்பது எப்படி என்பதை, அன்னை மரியா, தான் வாழ்ந்த காலத்தில் மட்டும் சொல்லித் தரவில்லை. அவர் விண்ணகம் சென்றபின்னரும், பல இடங்களில் தோன்றி, இந்தச் செய்தியைப் பகிர்ந்தார். சிறப்பாக, பாத்திமா நகரில் அவர் தோன்றியபோது, உலகைச் சூழ்ந்திருந்த போரைக் குறித்தும், உலக அமைதிக்காக மக்கள் செபங்களை எழுப்பவேண்டும் என்பது குறித்தும், சிறப்பான செய்திகளைக் கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வப்போது கூறிவருவதுபோல், மூன்றாம் உலகப்போரை சிறு, சிறு துண்டுகளாகச் சந்தித்து வரும் இன்றைய உலகில், அன்னை மரியா, பாத்திமா நகரில் கூறிய அச்செய்தி, மீண்டும் ஓர் அழைப்பாக நமக்கு ஒலிக்கிறது.

போர்களாலும், வன்முறைகளாலும், தொடர்ந்து காயப்பட்டு வரும் நமது உலகிற்கு, தாய்மை, பெண்மை, கனிவு, பரிவு, பொறுமை, ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. தாயின் பரிவோடு தன் ஆடுகளை வழிநடத்தும் நல்லாயனின் திருநாள், அன்னை தினம், பாத்திமா அன்னை மரியாவின் திருநாள் ஆகிய மூன்று கொண்டாட்டங்களும், நம் ஒவ்வொருவரிலும் உள்ள தாய்மையை வெளிக்கொணரும் ஒரு நாளாக, அதன் வழியாக, உலகின் அமைதிக்கு உறுதியான அடித்தளமிடும் ஒரு நாளாக இருக்க வேண்டுமென்று, சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.


04 May, 2019

Risen Christ – Wounded Healer உயிர்த்த கிறிஸ்து – காயப்பட்ட மருத்துவர்


Jesus and the disciples : Tiberias  - James Tissot

Easter – 3rd Sunday

“With malice toward none, with charity for all, with firmness in the right as God gives us to see the right, let us strive on to finish the work we are in, to bind up the nation's wounds, to care for him who shall have borne the battle and for his widow and his orphan, to do all which may achieve and cherish a just and lasting peace among ourselves and with all nations.” – These were the closing lines of the Second Inaugural Address of Abraham Lincoln on March 4, 1865. Ever since he took over as the 16th President of the United States of America, Civil War raged from 1861 to 65.

The Civil War ended on April 9, 1865 and on April 10, a crowd gathered in front of the White House and a military band was playing some festive music. Lincoln stood on the balcony of the White House and spoke. Instead of lashing out against the South, he spoke of the horrors war had brought in. He spoke of families getting back together. He spoke of a time of peace. Then he said, “In a few moments I want the band to play and I’m going to tell them what I want them to play.” Of course, the band started getting the “Battle Hymn of The Republic” ready to play. This had been the theme song of the North throughout the Civil War. But Lincoln said: “The band will now play the theme song of the people we have called our enemy. They are not our enemies anymore! We are one people again. I want the band to play ‘Dixie.'” Historians say there was a long, awkward pause. The band didn’t have the music for “Dixie,” but they finally got together and played “Dixie.” Lincoln knew that the South was not only hurting because of the horrors of the war, but also because of the shame which accompanies defeat. Lincoln was sending a clear signal to the South. Lincoln was telling everyone that there would be no punishment upon the South. Lincoln was saying that the South would be treated with love and compassion.

As against this peace-loving President, we do have quite many world leaders today who are fanning the flames of revenge, inciting violence. Unfortunately, most of the victims of this violence are innocent people, as in the case of Sri Lanka on Easter Sunday. The idea of going in search of the so called ‘enemies’ and extending our arms in peace – as exhibited by President Lincoln – is the central theme of today’s Gospel: John 21: 1-19.

In a novel, or in a movie the final pages or the final moments are usually described as the climax. In John’s Gospel we reach a climax in the 20th chapter with the encounter of Jesus with Thomas.  Then comes a P.S. in the form of the 21st chapter – one of the post-resurrection apparitions of Jesus by the Sea of Tibe'ri-as. Keeping aside all the scriptural investigations about who the author of this chapter might be (whether John himself or one of his close disciples etc.), we are thankful to God for this lovely P.S.

We know well that the whole Gospel of John is not a simple historical account of what Jesus said and did, but more of a theological treatise. In this event, by the Sea of Tibe'ri-as, we come across one such theological treatises of John.
Chapter 21 of John begins with a list of those who are taking part in this event. One of them is Thomas called the Twin. We are naturally reminded of the Gospel we heard last Sunday – how the Risen Christ ‘healed’ the ‘doubting Thomas’. In today’s Gospel too we come across another healing session – the Risen Christ healing ‘Peter the coward’, who denied Jesus. We can safely say that not only Thomas, but all the disciples doubted the Resurrection, since the notion of Resurrection is very foreign to the Jewish belief. In the same way, we can say that not only Peter, but almost all the disciples were cowards and, given a chance, they too would have denied Jesus. Thomas and Peter were representatives of the whole group. Hence, by healing these representatives Jesus healed the fears and doubts of the whole group.

The disciples, locked up in the upper room for fear of … almost everyone, including themselves – probably wanted to give up and get back to their old trade – fishing! When Peter proposed this, all of them agreed. They had made a full circle – back to square one! These were simple fishermen and Jesus called them with a promise that henceforth they would be catching men. (Lk.5: 10). It was true that during the last three years they had learnt this ‘new trade’ of catching people to some extent… but always with Jesus! Now that Jesus was gone, they did not dare think of catching people. On the other hand, the disciples feared that the people would catch them and hand them over to the Romans. Hence, they had to be in hiding. They were convinced, that without Jesus, it was useless to linger on in that life. Hence, they decided to get back to their old trade which they knew well – catching fish!

But, returning to their old ways did not prove to be easy. They went out and got into the boat; but that night they caught nothing, (John 21:3) says the Evangelist. As fishermen, they have had many a night when they caught nothing. But on that night in Tibe'ri-as when they caught nothing, their minds, inadvertently went to a similar night they had spent at the lake of Gennes'aret when they caught nothing throughout the night. But, their disappointment was turned into unbelievable joy over the rich haul of fish in the morning (unusual time for fishing, indeed). This was possible, since they had ventured into the deep and had let down their nets at the bidding of one stranger called Jesus of Nazareth. (Luke 5: 4-11)
A similar experience awaits them in Tibe'ri-as too. They are asked to let down the nets in the morning and when they obeyed, they caught 153 large fish! This time, the disciples recognize the person asking them to let down their nets at dawn!

Juxtaposing these similar-looking events at Gennes'aret and Tibe'ri-as, we learn many things about Peter as well as ourselves. When the great haul of fish was seen by Peter in Gennes'aret, he fell down at Jesus' knees, saying, "Depart from me, for I am a sinful man, O Lord." (Lk 5: 8). At the Sea of Tibe'ri-as when a similar miracle occurred, Peter sprang into the sea and reached Jesus.
At Gennes'aret, we are not sure whether Peter was aware of what he was saying – about his being sinful as well as about asking Jesus to leave him. Now, at Tibe'ri-as, Peter was very much aware that he had sinned – sinned greatly against Jesus and yet he did not want Jesus to leave him, but, rather, he went seeking Jesus.

When Peter and the other disciples reached the shore, a pleasant surprise awaited them. When they got out on land, they saw a charcoal fire there, with fish lying on it, and bread. (John 21:9). Fr Thomas Rosica, a Basilian priest, CEO, Salt & Light Catholic Media Foundation in Canada, in his book ‘Words Made Flesh – Biblical Reflections for Year C’, reflects specially on the ‘charcoal fire’ mentioned in this verse.
Fr Rosica says that this ‘charcoal fire’ reminds us about “the provocative scene from Luke’s Passion Narrative when Peter disowns Jesus (Luke 22:55)”. A similar scene is also narrated in John’s gospel (John 18:18), where we see the servants and officers making a charcoal fire in the high priest’s courtyard and Peter joining them. Fr Rosica goes on to say: “That scene presents the fire of denial and betrayal. John’s Gospel (today) offers the fire of repentance and recommitment.”

The meeting between Jesus and Peter on the shore of Tibe'ri-as, was not about the past, was not about settling scores. On the contrary it was about love, surrender and mission. Sometimes, when we are surrounded by abundant, unconditional love, we can either surrender ourselves to this undeserved love or, we can close in on ourselves, feeling very unworthy. Very often we wish that the overpowering love leaves us alone. Thus, left alone, we wallow in self-pity. This is what happened to Peter at Gennes'aret, during the first meeting with Jesus. Fortunately, Peter was willing to enter the school of love that Jesus had invited him in. Hence, after three years, here he was at Tibe'ri-as, plunging into the sea to reach Jesus, knowing full well that he had sinned against that very same person.

Once Peter took that initiative, then Jesus took over. Peter was restored to his original position as the leader of the group. The one lesson we can learn from Peter in today’s episode at the Sea of Tibe'ri-as is this: whatever we are, wherever we are, we can ALWAYS get back to God, to Christ.
This was one of the favourite themes expressed by our Holy Father Francis in many of his homilies: “Never forget this: The Lord never gets tired of forgiving us. It is we, who get tired of asking for forgiveness.”

As we contemplate the breakfast prepared with motherly love by the Risen Jesus on the shore of Tibe'ri-as, we continue to pray for the people of Sri Lanka, that the Risen Jesus envelopes them with motherly love and lead them to the joy of the Resurrection! We also pray that the people of India, especially the poor, through a fair election, will rise again to new glory! 

Jesus and Peter on the shore of Tiberias

உயிர்ப்புக்காலம் 3ம் ஞாயிறு

கறுப்பின மக்களை அடிமைகளாக நடத்துவதை, ஆதரித்தும், எதிர்த்தும், அமெரிக்க ஐக்கிய நாட்டில், வட, மற்றும், தென் மாநிலங்களுக்கிடையே நிகழ்ந்துவந்த மோதல்கள், 1861ம் ஆண்டு, உள்நாட்டுப் போராக வெடித்தது. நான்கு ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போர், 1865ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த உள்நாட்டு போரில், 7,50,000த்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அடிமைகளாக இருந்த 40 இலட்சத்திற்கும் அதிகமான கறுப்பின மக்கள் விடுதலை பெற்றனர்.
உள்நாட்டுப் போரில் அடைந்த வெற்றியைக் கொண்டாட, வாஷிங்டன் நகரில், வெள்ளை மாளிகைக்கு முன் மக்கள் கூடினர். அங்கிருந்த இசைக்குழு, வெற்றியைக் குறிக்கும் பாடல்களை இசைத்தவண்ணம் இருந்தது. மாளிகையின் மேல்மாடத்தில் வந்து நின்ற அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள், தென் மாநிலங்கள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, வட மாநிலங்கள் அடைந்த வெற்றியை பாராட்டுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், லிங்கன் அவர்களோ, போரின் கொடுமைகளைப்பற்றிப் பேசினார்; போரினால் சிதைந்துபோன குடும்பங்களும், தென் மாநிலங்களில் உருவான அழிவுகளும் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதைப்பற்றிப் பேசினார்.
தன் உரையின் இறுதியில், "இங்கிருக்கும் இசைக்குழு, நான் கூறும் ஒரு பாடலை இப்போது இசைப்பார்கள்" என்று லிங்கன் அவர்கள் கூறியதும், வட மாநிலங்களில் பிரபலமான, "குடியரசின் போர் கீதம்" என்ற வெற்றிப்பாடலை இசைப்பதற்கு, இசைக்குழுவினர் தயாரானார்கள். அவர்களிடம், லிங்கன் அவர்கள், 'Dixie' அல்லது, "Dixie's Land" என்ற பெயரில், தென் மாநிலங்களில் பிரபலமான ஒரு பாடலை இசைக்கும்படி கூறினார். அந்தப் பாடலின் இசைக்குறிப்பு இசைக்குழுவினரிடம் இல்லாததால், அவர்கள், சில நிமிடங்கள் அமைதியாக நின்றனர். இருப்பினும், அவர்களது நினைவுத்திறனைப் பயன்படுத்தி, அப்பாடலை இசைக்க வைத்தார், அரசுத்தலைவர் லிங்கன்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற கூட்டமைப்பிலிருந்து விலகிச்சென்று, உள்நாட்டுப் போரில் அனைத்தையும் இழந்து, தோல்வியில் துவண்டிருந்த தென் மாநில மக்களின் காயங்களை, மீண்டும் கீறிவிட்டு வேடிக்கைப் பார்க்காமல், அவர்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும், வழங்கும் முயற்சிகளில், அரசுத்தலைவர் லிங்கன் அவர்கள் ஈடுபட்டது, இன்றைய உலகத் தலைவர்களுடன், அவரை, ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டுகிறது.
நாம் வாழும் 21ம் நூற்றாண்டில், பல நாடுகளின் தலைவர்கள், காயப்பட்டிருக்கும் மக்களின் துன்பங்களைத் தீர்ப்பதற்குப் பதில், அந்த காயங்களை மேலும் ஆழப்படுத்தும் வண்ணம், மக்களிடையே பிளவுகளையும், மோதல்களையும் வளர்த்து வருவதை எண்ணி, நாம், வெட்கமும், வேதனையும் அடைகிறோம். இவர்கள் வளர்க்கும் பகைமை உணர்வுகளால் உயிரிழப்பது, பெரும்பாலும், அப்பாவி மக்கள் என்பதை, இலங்கையில் நிகழ்ந்த உயிர்ப்புப்பெருவிழா தாக்குதல்கள், மீண்டும் ஒருமுறை நமக்குக் கூறியுள்ளன.

காயப்பட்டவர்களை மேலும் காயப்படுத்தாமல், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அரசுத் தலைவர் லிங்கன் அவர்கள் செயல்பட்டது, இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. பாடுகள் நேரத்தில், இயேசுவைவிட்டு விலகிச்சென்றதாலும், கல்வாரி நிகழ்வுகளாலும், பல வழிகளில் காயப்பட்டிருந்த தன் சீடர்களை, உயிர்ப்புக்குப் பின், இயேசு, தேடிச்சென்று குணமாக்கிய நிகழ்வுகளில் ஒன்று, இன்றைய நற்செய்தியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது.
யோவான் நற்செய்தியின் இறுதிப் பிரிவில் இடம்பெறும் இந்நிகழ்வை, நற்செய்தியாளர் யோவான் எழுதவில்லை, மாறாக, அவரது சீடர்களில் ஒருவர், பின்னர் இணைத்தார் என்பது, விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. ஆய்வுக்கணிப்புக்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, நாம் ஆண்டவருக்கு நன்றி சொல்லவேண்டும். ஏனெனில், 21ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்நிகழ்வு, நம் வாழ்வுக்குத் தேவையான பல பாடங்களைச் சொல்லித் தருகின்றது.

யோவான் நற்செய்தி, இயேசுவின் வாழ்வை, வெறும் வரலாற்றுப் பதிவாக வழங்காமல், ஓர் இறையியல் பாடமாக வழங்கியுள்ளது என்பதை அறிவோம். இயேசுவின் கூற்றுகள், இயேசுவின் செயல்கள் அனைத்தும், யோவான் நற்செய்தியில், பல இறையியல் எண்ணங்களை, நேரடியாகவும், மறைமுகமாகவும் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கண்ணோட்டத்துடன், இன்றைய நற்செய்திப் பகுதியை நாம் அணுகுவோம்.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் ஏழு கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார், ஆசிரியர். சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல் என்று... யோவான், தன் அறிமுகத்தை ஆரம்பிக்கிறார். திதிம் என்ற தோமாவை ஆசிரியர் குறிப்பிட்டதும், நமது நினைவில், சென்ற ஞாயிறு சொல்லப்பட்ட நிகழ்வு நிழலாடுகிறது. அந்நிகழ்வில், சந்தேகத்துடன் போராடி புண்பட்டிருந்த தோமாவை, உயிர்த்த இயேசு சந்தித்து, குணமாக்கியதை, சென்றவாரம் சிந்தித்தோம். அந்நிகழ்வின் ஒரு தொடர்ச்சிபோல, மற்றொரு குணமாக்குதல் நிகழ்வு, இன்று சொல்லப்படுகிறது. இயேசுவை, தனக்குத் தெரியாது என்று மறுதலித்த பேதுருவை, உயிர்த்த இயேசு குணமாக்கும் நிகழ்வை, இன்றைய நற்செய்தி சொல்கிறது.

கதாப்பாத்திரங்களின் அறிமுகத்திற்குப் பின், இன்றைய நற்செய்தி சொல்வது இதுதான்: "அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், 'நான் மீன்பிடிக்கப் போகிறேன்' என்றார். அவர்கள், 'நாங்களும் உம்மோடு வருகிறோம்' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை." (யோவான் 21: 3)
யூதர்களுக்கும், உரோமையர்களுக்கும் பயந்து, மேல் மாடியில், பூட்டிய அறைக்குள் பதுங்கியிருந்த சீடர்கள், தங்கள் பழைய வாழ்வுக்கேத் திரும்பிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், "நான் மீன் பிடிக்கப் போகிறேன்" என்று பேதுரு கூறியது, ஓர் அழைப்பைப் போல் ஒலித்தது.

மீன் பிடிப்பதை தங்கள் வாழ்வாகக் கொண்டிருந்த எளிய மனிதர்களை, "இனி நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" (மத். 4:19; மாற். 1:17; லூக். 5:10) என்று உறுதி அளித்து இயேசு அழைத்தார். அந்த அழைப்பைச் சரியாகப் புரிந்தும், புரியாமலும், தங்களுக்குப் பழக்கப்பட்ட தொழிலை விட்டுவிட்டு, ஏதோ ஒரு துணிச்சலுடன் இயேசுவின் அழைப்பை ஏற்று, அவரைப் பின் சென்றவர்கள் சீடர்கள். இயேசு அவர்களுடன் இருந்தவரை, மக்களைப் பிடிக்கும் பணியை ஓரளவு புரிந்து செயல்பட்டனர், சீடர்கள். ஆனால், கல்வாரியில், இயேசு, சிலுவையில் இறந்தபின், நிலைமை வெகுவாக மாறிவிட்டது. சீடர்கள், மக்களைப் பிடிப்பதற்குப் பதில், மக்கள், இவர்களைப் பிடித்து, உரோமையர்களிடம் ஒப்படைத்து விடுவார்களோ என்ற பயத்தில், சீடர்கள் பதுங்கி வாழ்ந்தனர்.
மக்களைப் பிடிக்கும் கனவுகளையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, மீண்டும் பழையபடி மீன்பிடிக்கும் தொழிலுக்கேத் திரும்பலாம் என்று தீர்மானித்தனர் சீடர்கள். பேதுருவின் அழைப்பு வந்ததுதான் தாமதம்... "நாங்களும் உம்மோடு வருகிறோம்" என்று அனைவரும் புறப்பட்டனர். கடந்த மூன்றாண்டுகள் இயேசுவுடன் அவர்கள் வாழ்ந்த அற்புதமான வாழ்வு திரும்பிவரப் போவதில்லை என்ற தீர்மானத்தில், பழைய பாதுகாப்பான வாழ்வைத் தேடிச்செல்லும் மீனவர்களாக அவர்கள் மாறிவிட்டனர். அந்தப் பழைய வாழ்வில் அவர்கள் முதலில் சந்தித்தது, ஏமாற்றம். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை." (யோவான் 21: 3).

மீன்பிடித் தொழிலில், ஒன்றும் கிடைக்காமல் போன பல இரவுகளைச் சந்தித்தவர்கள் இந்தச் சீடர்கள். இருந்தாலும், அன்று, திபேரியக் கடலில், இரவு முழுவதும் முயற்சிகள் செய்தும்ஒன்றும் கிடைக்காமல் போனது, அவர்கள் மனதில், கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்த மற்றொரு நிகழ்வை நினைவுபடுத்தியிருக்கும். அந்த நிகழ்வுதானே அவர்கள் வாழ்வை முற்றிலும் மாற்றிய நிகழ்வு! லூக்கா நற்செய்தி, 5ம் பிரிவில் (5:4-11) சொல்லப்பட்டுள்ள அந்த நிகழ்விலும், அவர்கள், இரவெல்லாம் உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்வில் அடிக்கடிச் சந்தித்துப் பழகிப்போன அந்த ஏமாற்றத்தை அவர்கள் மறக்கமுடியாத ஓர் அனுபவமாக இயேசு அன்று மாற்றினார். எனவேதான், இந்த இரவிலும் அந்த நாள் நினைவு அவர்களுக்கு மீண்டும் எழுகிறது.
இயேசுவின் மரணம் என்ற பெரும் எமாற்றத்திற்குப் பின், தங்கள் பழைய வாழ்வைத் தொடரலாம் என்று எண்ணியவர்களுக்கு, ஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது. அந்த ஏமாற்றம், மீண்டும், அவர்கள் வாழ்வைப் புரட்டிப்போட்ட ஒரு மாற்றமாக அமைந்தது. கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்ததைப்போலவே, மீண்டும் ஒருமுறை, திபேரியக் கடலில் நிகழ்ந்தது. இரவு முழுவதும் உழைத்துக் காணாத பலனை, விடிந்ததும், இயேசுவின் வடிவில் அவர்கள் கண்டனர். 153 பெரிய மீன்கள் பிடிபட்டதாக, நற்செய்தியாளர் யோவான் கூறுகிறார். (யோவான் 21:11)

கெனசரேத்து ஏரியிலும், திபேரியக் கடலிலும் நடந்த இரு நிகழ்வுகளையும் இணைத்துச் சிந்திக்கும்போது, சீமோன் பேதுருவுக்கும், இயேசுவுக்கும் இடையே உருவான உறவில் ஒரு புதிய ஆழம் புலனாகிறது. இவ்விரு நிகழ்வுகளின் இணைப்பு, நமக்கு ஒரு சில பாடங்களைச் சொல்லித் தரக் காத்திருக்கிறது.
கெனசரேத்து ஏரியில் கிடைத்த அளவற்ற மீன்பிடிப்பைக் கண்டதும், பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, என்னைவிட்டுப் போய்விடும்" (லூக்கா 5:8) என்று வேண்டினார். திபேரியக் கடலில், கிடைத்த அளவற்ற மீன்பிடிப்பைக் கண்டதும், பேதுரு தண்ணீரில் பாய்ந்து சென்றார், இயேசுவை நோக்கி.
கெனசரேத்து ஏரியில் தான் ஒரு பாவி என்பதை பேதுரு உணர்ந்த வேளையில், இயேசு தன்னை விட்டு விலகவேண்டும் என்று வேண்டினார்.
திபேரியக் கடலில் மீன்பிடிக்க வருவதற்கு முன், தான் எவ்வளவு பெரிய பாவி என்பதை, பேதுரு நன்கு உணர்ந்திருந்தார். இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுதலித்த பாவி, தான் என்பதை, நன்கு உணர்ந்திருந்த பேதுரு, இம்முறை, இயேசுவை விட்டு விலகிச்செல்ல எண்ணாமல், இயேசுவை நோக்கிச் சென்றார்.

பேதுருவும், சீடர்களும், கரையை அடைந்ததும், மற்றோர் ஆனந்த அதிர்ச்சி அவர்களுக்குக் காத்திருந்தது. படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள் (யோவான் 21:9) என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். 'கரியினால் தீ மூட்டப்பட்டிருக்கும்' இந்தக் காட்சி, நம் நினைவுகளை, இயேசு தன் பாடுகளைச் சந்தித்த அந்த இரவுக்கு அழைத்துச்செல்கிறது. அங்கு, தலைமைக்குருவின் வீட்டு முற்றத்தில் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீ மூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள் (யோவான் 18:18) என்று யோவான் குறிப்பிட்டுள்ளார். அவர்களோடு நின்று குளிர் காய்ந்துகொண்டிருந்த பேதுருவிடம், "நீயும் இம்மனிதனுடைய சீடர்களில் ஒருவன்தானே?" என்ற கேள்வி எழுந்தபோது, தனக்கு இயேசுவைத் தெரியாது என்று பேதுரு மறுத்தார். தலைமைக்குருவின் வீட்டு முற்றத்தில் மூட்டப்பட்டிருந்த நெருப்பு, பேதுருவின் மறுதலிப்புக்கு ஓர் அடையாளமாக இருந்ததுபோல், திபேரிய கடலருகே மூட்டப்பட்ட நெருப்பு, பேதுருவின் மன்னிப்பிற்கு ஓர் அடையாளமாக மாறுகிறது.

பேதுருவுக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த இச்சந்திப்பில், மன்னிப்பு என்ற சொல்லோ, எண்ணமோ இடம்பெறவில்லை. அங்கு, அன்பு பறைசாற்றப்பட்டது; பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பரிமாற்றத்தில், மன்னிப்பு, மடைதிறந்த வெள்ளமெனப் பாய்ந்து, பேதுருவை மூழ்கச் செய்தது.

நம் வாழ்வைச் சிறிது அலசிப் பார்ப்போம். பிரமிப்பூட்டும் கருணை நம்மைச் சூழும்போது, எதிர்பாராத அளவில் ஒரு பேரன்பு அனுபவம் நமக்கு ஏற்படும்போது, ஒன்று, அந்த அன்புக்கு முன் முற்றிலும் சரணடைந்து மகிழ்வோம். அல்லது, அந்த அன்பைக் கண்டு பயந்து, நமக்குள் நாமே ஒளிந்து கொள்வோம். அந்த அன்பு நம்மை விட்டு விலகினால் போதும் என்றும் நினைக்கத் தோன்றும். கெனசரெத்து ஏரியில், பேதுரு, இயேசுவின் அன்பை, முதல்முறை உணர்ந்து, பயந்து, அவரை விட்டு விலகிச்செல்ல விழைந்தபோது, இயேசுவின் வாழ்வுப்பாடங்கள் அவருக்கு ஆரம்பமாயின.

இயேசுவுடன் வாழ்ந்த மூன்று ஆண்டுகளில், பேதுரு கற்றுக்கொண்ட ஓர் உயர்ந்த பாடம், இதுதான். எந்நிலையில் தான் இருந்தாலும், இயேசுவின் அன்பில், தனக்கு, எப்போதும், புகலிடமும், தஞ்சமும் உண்டு என்பதே, அந்த அழகியப் பாடம். இந்த ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொண்டால் நமக்கு மீட்பு உண்டு, வாழ்வு உண்டு. எந்நிலையில் நாம் இருந்தாலும், இயேசுவை நாம் அணுகிச் செல்லமுடியும். தந்தையாம் இறைவனில் நாம் தஞ்சம் அடையமுடியும்.

இரவெல்லாம் உழைத்தும், பயனேதும் காணாமல் களைத்து, சலித்துப்போன சீடர்களுக்கு, உயிர்த்த இயேசு, ஒரு தாயின் கனிவோடு, காலை உணவைத் தயாரித்து, பரிமாறினார்.
உயிர்த்த இயேசுவைக் காணச்சென்ற வேளையில், ஆலயத்தில், காயப்பட்டு, பரிதவிக்கும் இலங்கை மக்களை, உயிர்த்த இயேசு, தாயன்போடு அரவணைக்க வேண்டும் என்று, உருக்கமாகச் செபிப்போம்.
நல்ல தலைவர்கள் வழியே, இந்திய நாடு மீண்டும் உயிர்பெறும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்களுக்கு, உயிர்த்த இயேசு நம்பிக்கையூட்டுமாறு செபிப்போம்.


01 May, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி – உலர்ந்த கரம் உயிர்பெற... 3


Rajendra Singh – the Waterman of India

பூமியில் புதுமை – இந்தியாவின் தண்ணீர் மனிதர் - இராஜேந்திரசிங்

கோடைக்காலம் என்றதும், தமிழக மக்களை அச்சுறுத்தும் ஓர் அவலம், தண்ணீர் தட்டுப்பாடு. தண்ணீருக்காக, தமிழகம், யாரிடமும் கையேந்தவேண்டிய அவசியமில்லை என்பதை, ஆணித்தரமாகக் கூறுபவர், திருவாளர் இராஜேந்திரசிங் அவர்கள். இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்றழைக்கப்படும் இவர், இராஜஸ்தான் மாநிலத்தில் நீர்வளம் குறைவாக இருந்த 1000 கிராமங்களில் ஆண்டு முழுவதும் நீர்வசதி கிடைக்கும்படி செய்துள்ளார். அங்கு நீரின்றி காய்ந்து கிடந்த Arvari, Ruparel, Sarsa, Bhagani, Jahajwali என்ற ஐந்து நதிகளில், ஆண்டு முழுவதும், தண்ணீர் ஓடும்படி செய்துள்ளார்.
இந்தியாவின் பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு முறைகளைக் கடைப்பிடித்து, தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்த ஆயிரம் கிராமங்களுக்கு, தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தந்ததை பாராட்டி, இராஜேந்திரசிங் அவர்களுக்கு, தண்ணீருக்காக வழங்கப்படும் நொபெல் விருது என்று கூறப்படும் ஸ்டாக்ஹோம் நீர் விருது (Stockholm Water Prize), 2015ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.
இவருக்கு இவ்விருது வழங்கப்பட்ட நேரத்தில், "இன்றைய தண்ணீர் பிரச்சனையை, தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் கொண்டு மட்டும் தீர்க்கமுடியாது. இப்பிரச்சனை, உண்மையில், நமது அரசுகளின் கொள்கைகள், தலைமைத்துவம், மக்களின் பங்கேற்பு, பெண்களுக்கு அதிகாரம், நாட்டின் பாரம்பரிய முறைகள், ஆகியவற்றைச் சார்ந்தது. இவற்றை நன்குணர்ந்து, நமக்கு வழிகாட்டியிருப்பவர் இராஜேந்திரசிங்" என்று, ஸ்டாக்ஹோம் விருதுக் குழு அறிவித்தது.
ஆசியாவின் நொபெல் விருது என்றழைக்கப்படும், ரமோன் மகசேசே (Ramon Magsaysay) விருதையும் இவர் 2001ம் ஆண்டு பெற்றுள்ளார். தி கார்டியன் எனப்படும் பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான "50 people who could save the planet" அதாவது, “பூமிக்கோளத்தைக் காப்பாற்றக்கூடிய 50 மனிதர்கள் என்ற கட்டுரையில் இராஜேந்திரசிங் அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 60 வயதான திருவாளர் இராஜேந்திரசிங் அவர்கள், தமிழ் நாட்டின் நீர்வளம் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் கூறிய சில உண்மைகள்:
எந்த மாநிலத்திடமும் தண்ணீர் கேட்டு, தமிழகம் கையேந்தத் தேவையில்லை. இங்கு கிடைக்கும் மழை நீரைச் சேமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
தமிழகத்தில் மண் வளம் சிறப்பாக உள்ளது. தண்ணீர் இல்லாததால் மட்டுமே வறட்சி ஏற்பட்டுள்ளது. வறட்சி ஏற்படுவதற்கு, ஆறுகளில் மணல் அள்ளப்படுவதும் ஒரு முக்கியக் காரணம்.
இருபது விழுக்காடு மழை பெய்யும் இராஜஸ்தானில், ஆறுகளில் தண்ணீர் ஒடும்போது, எண்பது விழுக்காடு மழை பெய்யும் தமிழகத்தின் ஆறுகள் வறண்டு கிடப்பது, வியப்பாகவும், வேதனையாகவும், கண்ணீரை வரவழைப்பதாகவும் இருக்கிறது.
(ஆதாரம் - தி இந்து, ஆனந்தவிகடன், மற்றும், பிற இணையத்தளங்கள்)

Is It Lawful on Sabbath?

ஒத்தமை நற்செய்தி உலர்ந்த கரம் உயிர்பெற... 3

ஓய்வுநாளன்று, தொழுகைக்கூடம் ஒன்றில், கை சூம்பிய ஒருவரை இயேசு குணமாக்கியப் புதுமையில் நம் தேடல் பயணம் தொடர்கிறது. தொழுகைக்கூடத்தில், இயேசு, மறைநூல் அறிஞர், பரிசேயர் மற்றும் மக்கள் கூடியிருந்தனர். அவர்கள் நடுவே, வலக்கை சூம்பிய ஒருவரும் இருந்தார். அவர்கள் அனைவரும் வெவ்வேறு நோக்கங்களுடன் தொழுகைக்கூடத்திற்கு வந்திருந்தனர் என்பதை, சென்ற தேடலில் சிந்தித்தோம்.
மற்றவர்களின் நோக்கங்கள் எதுவும் தெளிவாகக் கூறப்படாத நிலையில், மறைநூல் அறிஞரும் பரிசேயரும் அங்கு வந்திருந்ததன் நோக்கத்தை மட்டும், நற்செய்தியாளர்கள் மாற்கு, மற்றும், லூக்கா தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுள்ளனர்: மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர். (லூக்கா 6:7; காண்க. மாற்கு 3:2) என்று லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம்.

ஒரு கற்பனைக் காட்சியைக் காணமுயல்வோம். இயேசுவை மையப்படுத்திய ஒரு திரைப்படத்தில் இக்காட்சி அமைக்கப்பட்டிருப்பதாக கற்பனை செய்துகொள்வோம். தொழுகைக்கூடம் ஒன்றில், இயேசு போதித்துக் கொண்டிருக்கிறார், அவரைச் சுற்றி எளிய மக்கள் அமர்ந்திருக்கின்றனர். எல்லாருடைய முகத்திலும் அமைதியும், மகிழ்வும் காட்டப்படுகின்றன. சூம்பிய கை உள்ளவரும் அவ்வப்போது அக்காட்சியில் காட்டப்படுகிறார். மென்மையான இசை பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. திடீரென, இசை மாறுகிறது. தொழுகைக்கூடத்திற்குள் மறைநூல் அறிஞரும், பரிசேயரும் நுழைவதாகக் காட்டப்படுகிறது. மக்கள் முகங்களில் ஒரு வித கலக்கம் தெரிகிறது. அதுவரை அங்கு நிலவிய இயல்பானச் சூழ்நிலை மாறி, ஓர் இறுக்கமானச் சூழல் உருவாவதை, மக்களின் முகங்களும், பின்னணி இசையும் நமக்கு உணர்த்துகின்றன.

தொழுகைக்கூடத்தில் நிலவிய அந்த இறுக்கத்தைக் குறைக்க இயேசு மேற்கொண்ட முயற்சி, இன்னும் சில சங்கடங்களை நமக்குள் உருவாக்குகிறது. இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி, "எழுந்து நடுவே நில்லும்!" என்றார். அவர் எழுந்து நின்றார். (மாற்கு 3:3; லூக்கா 6:8) என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிட்டுள்ளார்.
உடல் ஊனமுற்றவர்களை கூர்ந்து பார்ப்பதே அநாகரிகமானச் செயல் என்று இக்காலத்தில் நமக்குப் பல வழிகளில் சொல்லித்தரப்படுகிறது. அவர்களது ஊனத்தைப் பெரிதுபடுத்தாமல், அவர்களை, இயல்பான வாழ்க்கையில் ஈடுபடுத்த முயலவேண்டும் என்பது, குழந்தைகளுக்கும், இன்று பள்ளிகளில் சொல்லித்தரப்படும் ஒரு பாடம். இந்தப் பின்னணியுடன் சிந்திக்கும்போது, குறையுள்ள ஒருவரை, கூட்டத்தின் மையத்திற்கு இயேசு அழைத்தது, நமக்கு நெருடலான உணர்வுகளைத் தருகிறது.

உடல் நோய் உள்ளவர்களை, குறை உள்ளவர்களை மதிக்காத யூத சமூகத்தில், இயேசு, உடல் குறை உள்ள ஒருவரை, ஏன் கூட்டத்தின் நடுவில் வந்து நிற்கச் சொல்கிறார்? குறையுள்ளவர் மனமும், உடலும் அதிகம் பாடுபட்டிருக்க வேண்டும். இருப்பினும், அவர், தன்னை அழைத்தவர் இயேசு என்பதால், அவரது சொல்லுக்குப் பணிகிறார்.
குறையுள்ள அந்த மனிதரைப் பகடைக்காயாக்கி, அவரைவிட ஓய்வுநாள் விதிமுறைகள் மிகவும் முக்கியம் என்பதை நிலைநாட்டவும், ஓய்வுநாள் விதிகளை மீறும் இயேசுவை மக்கள் முன் மடக்கிவிடலாம் என்ற எண்ணத்துடனும் வந்திருந்த மதத் தலைவர்களின் திட்டங்களை நிலைகுலையச் செய்வதற்கு, இயேசு, இந்த சங்கடமான வழியைக் கடைபிடிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. குறையுள்ள அம்மனிதர், நடுவில் வந்து நின்றதும், அங்கிருந்த எளிய மக்களின் மனதில் இரக்கம் அதிகம் பிறந்திருக்கும். "இயேசு, இவரைக் கட்டாயம் குணப்படுத்துவார்..." என்ற நம்பிக்கையும் மக்களிடம் உருவாகியிருக்கும்.

அச்சூழலில், இயேசு ஒரு கேள்வியை எழுப்புகிறார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார். (லூக்கா 6:9; மாற்கு 3:4)
இயேசு யாரிடம் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்? மக்களிடம் அல்ல. இக்கேள்வி மதத்தலைவர்களுக்கு. இயேசுவின் கேள்விக்கு, பதில் எதையும் காணோம். ஓய்வு நாளை வைத்து, இயேசுவை மடக்கிவிடலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டிருந்த மதத் தலைவர்கள், தங்களிடமே இந்த கேள்வி எழுப்பப்படும் என்று, கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார்கள். எனவே, அவர்கள், வாயடைத்து நின்றார்கள்.
அவர்கள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தது, இயேசுவுக்கு கோபத்தையும், வருத்தத்தையும் உருவாக்கின என்று நற்செய்தியாளர் மாற்கு தனிப்பட்ட முறையில் குறிப்பிடுகிறார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, "கையை நீட்டும்" என்றார். (மாற்கு 3:4ஆ-5)

மத்தேயு நற்செய்தியில், இச்சூழல், சற்று வேறுபட்ட முறையில் கூறப்பட்டுள்ளது. ஓய்வுநாள் குறித்த விவாதத்தை, சூழ இருந்தோர் துவக்கியதாக மத்தேயு குறிப்பிட்டுள்ளார். சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம், "ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?" என்று கேட்டனர். (மத்தேயு 12:10) என்று அவர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், இயேசு அவர்களிடம் வேறொரு கேள்வியை எழுப்பி, பதிலையும் தருகிறார். அவர் அவர்களிடம், "உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா? ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை" என்றார். (மத்தேயு 12:11-12)

ஒய்வு நாளன்று, ஆடு ஒன்று, குழுயில் விழுந்தால், அதற்கு இருவகையில் உதவிகள் செய்யலாம் என்று யூத மரபு கூறுகிறது. ஒய்வு நாள் முடியும்வரை, அந்த ஆட்டிற்குத் தேவையான உணவை, அந்தக் குழியிலேயே வழங்கலாம். அல்லது, அந்தக் குழிக்குள் ஆடைகள், தலையணை போன்ற பொருள்களை அடுக்கிவைத்து, அவற்றின் உதவியுடன் ஆடு குழியிலிருந்து வெளியே வர உதவிசெய்யலாம் என்ற இரு வழிகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், இந்த வழிகளையெல்லாம் பின்பற்றாமல், ஆட்டைக் காப்பாற்றுவதற்காக, ஓய்வுநாளென்றும் பாராமல், அதை, குழியிலிருந்து வெளியே எடுத்தவர்களையும் இயேசு அறிந்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, இயேசு, ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை என்பதை திட்டவட்டமாகக் கூறுகிறார்.

"ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர்" என்று இயேசு கூறும் சொற்கள், நம் உள்ளங்களில் அம்புகளாகப் பாய்கின்றன. வளர்ச்சியடைந்துள்ளதாக தங்களையே விளம்பரப்படுத்தும் பல நாடுகளில், மனிதர்களைவிட, செல்ல விலங்குகள் உயர்ந்ததொரு நிலையில் பராமரிக்கப்படுவது, வெளிப்படையான உண்மை.
மருத்துவ உதவிகள் செய்யும் ஒரு நிறுவனம், 2017ம் ஆண்டு மேற்கொண்ட ஓர் ஆய்வில், சங்கடமான சில உண்மைகள் வெளிவந்தன. "வேதனை மிகுந்த, மெதுவான மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் ஹாரிசனுக்கு உதவி செய்ய 5 டாலர்கள் கொடுப்பீர்களா?" என்ற கேள்வியுடன் ஒரு விளம்பரம் வெளியானது. ஆய்வுக்காக வெயிடப்பட்ட இந்த விளம்பரம், இரு வேறு படங்களுடன் வெளியானது. ஒரு விளம்பரத்தில், மேற்கண்ட சொற்களுடன், ஒரு நாய்குட்டியின் படமும், மற்றொரு விளம்பரத்தில், இதேச் சொற்களுடன், ஒரு சிறுவனின் படமும் வெளியிடப்பட்டிருந்தன. நாய்க்குட்டி ஹாரிசனுக்கு உதவிகள் குவிந்த அளவு, சிறுவன் ஹாரிசனுக்கு வரவில்லை.
மற்றோர் ஆய்வு, கல்லூரி மாணவரிடையே நடத்தப்பட்டது. அவர்கள் நடுவே, மூன்று கற்பனைச் செய்திகள் பரிமாறப்பட்டன. 30 வயது நிறைந்த மனிதர், 3 வயதான குழந்தை, ஒரு நாய்க்குட்டி, ஆகியவை, 'பேஸ்பால்' (Baseball) விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டையால் அடிபட்டிருந்ததாக அச்செய்திகள் உருவாக்கப்பட்டன. அவற்றைக் கண்ட மாணவர்கள் நடுவே, அடிபட்ட நாய்க்குட்டி, குழந்தை ஆகிய இரண்டுக்கும் கிடைத்த அனுதாபம், அடிபட்ட மனிதருக்குக் கிடைக்கவில்லை. இன்றைய உலகில், மனிதர்களைவிட, விலங்குகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவது, நம் உள்ளங்களில் முள்ளாக தைக்கின்றது.

நாய்க்குட்டி, பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி ஆகிய விலங்குகளுக்கு பரிவு காட்டப்பட வேண்டும் என்பது ஏற்புடையதுதான். ஆனால், அவற்றிற்கு காட்டப்படும் அக்கறை, மனிதர்களுக்கு இல்லாமல் போவது, நம் கடின மனதைக் காட்டுகிறது. ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை என்ற முடிவை இயேசு வெளியிட்டபின், கை சூம்பியவரைக் குணமாக்கினார் என்று மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. கை சூம்பியவரை, இயேசு குணமாக்கிய வேளையிலும், அதைத் தொடர்ந்தும், தொழுகைக்கூடத்தில் நிகழ்ந்தனவற்றை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.