13 November, 2016

Applauding the end of the world உலக முடிவை கைதட்டி இரசிக்க...

33rd Sunday in Ordinary Time

We live in a world filled, rather, ‘over-loaded’ with information. It is so filled that there is not much room for personal interpretations and hence, no room for transformation. One of my most favourite books on media is “Amusing Ourselves to Death” written by Neil Postman. This is a scathing criticism on what television had done to the American Society in the 80s. What was written by Postman in 1985 is still very relevant for the U.S. and, unfortunately, it is now almost a universal phenomenon.
One of the accusations that Postman levels against TV is, that it has kept our human family ‘amused to death’. He says that TV has turned EVERYTHING (be it politics, religion, sports, stock market etc.) into ENTERTAINMENT, including news. We are submerged in an ocean of information which keeps us fully soaked and completely passive. Add to this, the other gadgets of communication and social networks, like facebook, whatsapp… and our deluge of information and entertainment has become a destructive tsunami.

The Danish philosopher, Søren Kierkegaard, talks about our insatiable thirst for entertainment in a parable. He tells the parable of a theater where people are entertained. Here is what Kierkegaard says in his book “Either/Or”: “A fire broke out backstage in a theatre. The clown came out to warn the public; they thought it was a joke and applauded. He repeated it; the acclaim was even greater. So I think the world will come to an end amid general applause from all the wits, who believe that it is a joke.” – (Either/Or, vol. I, p. 30)
Warnings come to us in different forms. If we are part of the cheering crowd, ‘amusing ourselves to death’, this Sunday gives us one more opportunity to wake up.  Today’s readings warn us about the “Day of the Lord” that dawns on us quite unexpectedly.

We have come to the end of another liturgical year. Next Sunday we shall celebrate the Feast of Christ the King and the week after, we begin a new liturgical year with Advent. When we began this liturgical year last November, we were given a passage from Luke 21 (verses 25-28; 34-36). As we close the liturgical year, we are given a passage, again, from Luke 21 (verses 5-19). Both talk of the end of the world… Is this the best way to begin and end a liturgical year? Talk of the frightening end? I am not a great fan of the frightening part of the end, as most Hollywood films revel in. But, I do believe that the thought of our end, whether imminent or far off, can surely put things in perspective. If only all of us can be convinced, that we are all pilgrims on earth, so many problems would be solved.

Today’s Gospel begins with Jesus standing in Jerusalem temple and predicting how that magnificent structure would be destroyed. It requires lots of courage for anyone to do this – namely, stand right in the middle of the holiest spot for the Israelites and tell them that it would be totally destroyed. One can easily assign this courage (call it bravado?) of Jesus to his divine quality of knowing past-present-and-future. But, we can also see it as part of our way of ‘predicting the future’. Most of us do have premonitions of our own or some one else’s life, from the way that life shapes up. The same premonition can be had for an institution too, by the way it is run. Jesus, from the age of twelve, must have been intrigued by the commercialism that surrounded the temple of Jerusalem. At the age of 33, he felt he had had enough of that and he tried his best to cleanse the temple (Luke 19: 45-46). He probably saw that the temple was returning to its commercial ways just a few days later.
Here are the opening lines of today’s Gospel: Some of his disciples were remarking about how the temple was adorned with beautiful stones and with gifts dedicated to God. But Jesus said, “As for what you see here, the time will come when not one stone will be left on another; every one of them will be thrown down.” (Luke 21:5-6)
This is how I would like to rephrase the thoughts / words of Jesus: “You seem to admire these beautiful stones and the ‘gifts’ adorning this temple. These very same things are going to draw the envious eyes of other nations. The wealth that surrounds this temple is going to be its undoing. It would be destroyed.” It does not require a great prophetic quality to predict what would happen to an individual or an institution if only we can observe closely. Simple logic would be sufficient!

This warning given by Jesus brings to mind the present day Churches, Temples and Mosques that pride themselves as the largest, richest, greatest, tallest… etc. The more wealth is accumulated in places of worship, the greater they have to rely on fortress-like walls. Instead of relying on stone walls, if all the places of worship relied on the community of worshippers, religion will become more humane and, hence, divine!

Jesus does not stop with his prediction of the temple alone. He goes on to predict what would happen to the world and, more especially, what would become of those who follow him. He begins with those who would mislead people with ‘divine revelations’, those who would exploit the anxiety of people about the end of the world. Didn’t we hear enough of these ‘revelations’ at the turn of this millennium? The list of things Jesus had predicted almost read like our headlines today… “Nation will rise against nation, and kingdom against kingdom. There will be great earthquakes, famines and pestilences in various places, and fearful events and great signs from heaven.” (Lk 21: 10-11)
In the following lines (12-19) Jesus turns his attention to his disciples. Jesus calls a spade, a spade. If his aim was to retain a crowd around him all the time, he would not have revealed such bitter truths… the price to be paid for following him. Betrayal from one's own family, murdering courageous witnesses in order to silence them... Once again, what Jesus lists out here seems to be happening today. I am thinking of the massacre that took place in the Sunday liturgy in Baghdad on October 31.

Out of all these 15 verses given in today’s Gospel, only three verses give hopeful, soothing words. “For I will give you words and wisdom that none of your adversaries will be able to resist or contradict… not a hair of your head will perish. Stand firm, and you will win life.” (Luke 21: 15, 18-19). The ‘life’ Jesus is talking of, is the afterlife we mentioned in our last Sunday’s reflection.
In my last week’s reflection I spoke about Randy Pausch, the professor who passed away in his forties. I had also mentioned about ‘The Last Lecture’ he had given to his university staff and students. I was fortunate also to listen to the talk he gave his students on their graduation day. Here is the gist of what he said: “Pursue your dreams with passion. Before you begin pursuing, make sure what type of dreams you are chasing. Let them not be dreams to acquire more money. Those dreams will not give you satisfaction, since there would always be someone who would have more money than you. Rather follow dreams of building up human relationships.”
Relationships will save us, not money or possessions. This is exactly what Jesus is saying in today’s Gospel. This is the assurance that Jesus himself experienced in his personal life. But for his personal relationship with his Father he would have been crushed in his life. As we go through life, especially the toughest phases of our life, we can be assured that God will be with us, Christ will be with us.

What You Believe About The End Times?
பொதுக்காலம் - 33ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

தத்துவ இயல் மேதைகளில் ஒருவரான சோரென் கீர்க்ககார்ட் (Søren Kierkegaard) அவர்கள், நாடக அரங்கத்தை மையமாக வைத்து, ஓர் உவமை கூறியுள்ளார்.
ஓர் அரங்கத்தில், அலைமோதும் கூட்டத்தின் நடுவே நாடகம் அரங்கேறி வருகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகள், ஒன்றையொன்று விஞ்சும் அளவு விறுவிறுப்பாக இருப்பதால், மக்கள் தொடர்ந்து, ஆரவாரமாய், கைதட்டி இரசிக்கின்றனர்.
அவ்வேளையில், திடீரென, திரைக்குப் பின்புறமிருந்து மேடைக்கு ஓடிவரும் கோமாளி, "மக்களே, அவசரமான ஓர் அறிவிப்பு... மேடையின் பின்புறத்தில் தீப்பிடித்துள்ளது. எனவே, தயவுசெய்து, விரைவாக இங்கிருந்து வெளியேறுங்கள்" என்று கத்துகிறார்.
அவர் அப்படி கத்துவதை, நாடகத்தின் நகைச்சுவைப் பகுதி என்று மக்கள் கருதி, ஆரவாரமாய் கைதட்டி இரசிக்கின்றனர். கோமாளியோ, கரங்களைக் கூப்பி, கண்களில் கண்ணீர் வழிய, மேடையில் முழந்தாள் படியிட்டு, "தயவுசெய்து வெளியேறுங்கள்" என்று கெஞ்சுகிறார். ஆனால், அவர் அற்புதமாக நடிக்கிறார் என்று கூட்டம் பாராட்டுகிறது. திடீரென, அந்த அரங்கம் முழுவதும் தீயால் சூழ்ந்து, அனைவரும் தீக்கிரையாகின்றனர்.
"உலக முடிவும் இதுபோல்தான் இருக்கும். அந்த உண்மையை ஒரு வேடிக்கை என்று எண்ணுவோரின் கரவொலியோடு, இவ்வுலகம் முடியும்" என்று கீர்க்ககார்ட் அவர்கள், தன் உவமையை நிறைவு செய்துள்ளார்.
வாழ்வில் பல வேளைகளில், பல வடிவங்களில் வந்தடையும் எச்சரிக்கைகளில் கவனம் செலுத்தாமல், அனைத்தையும் விளையாட்டாக இரசித்துக் கொண்டிருப்பவர்களில், நாமும் ஒருவரெனில், இன்றைய ஞாயிறு வழிபாடு, மீண்டும் ஒருமுறை, நம்மை விழித்தெழச் செய்கிறது.

திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு இது. அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழா. அதற்கடுத்த ஞாயிறு துவங்கும் திருவருகைக் காலம், புதிய திருவழிபாட்டு ஆண்டைத் ஆரம்பித்துவைக்கிறது. இந்த ஞாயிறு, உலகமெங்கும் குறிக்கப்பட்ட ஆலயங்களில் திறக்கப்பட்டப் புனிதக்கதவுகள் மூடப்படுகின்றன. அடுத்தவாரம், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் புனிதக்கதவு மூடப்படும். அத்துடன், நாம் கொண்டாடிவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி நிறைவடையும். யூபிலி ஆண்டு நிறைவுற்றாலும், இரக்கம் நம் வாழ்வில் தொடரவேண்டும் என்பதை நினைவுறுத்த, யூபிலியின் இறுதி இரு வாரங்களில் வத்திக்கானில் இரு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்ற ஞாயிறு, சிறைப்பட்டோரின் யூபிலி, இந்த ஞாயிறு, சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரின் யூபிலி.

இரக்கத்தின் சிறப்பு யூபிலியாக நாம் சிறப்பித்த இந்த வழிபாட்டு ஆண்டு முழுவதும், இரக்கத்தின் நற்செய்தி என்று அழைக்கப்படும் லூக்கா நற்செய்தியிலிருந்து நாம் வாசித்த அற்புதப் பகுதிகள் வழியாக, இறைவன் நம்மை இரக்கச் சிந்தனைகளில் நிறைத்ததற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.
நற்செய்தியின் அற்புதப் பகுதிகள் என்று சொன்னதும், எல்லாமே மனதிற்கு இதமானதைச் சொல்லும் பகுதிகள் என்று பொருள் கொள்ளக்கூடாது. நற்செய்தி என்றால், நல்லதைச் சொல்லும் செய்தி. அந்த நல்ல செய்தி, சில வேளைகளில், அச்சத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கும். நல்லவை நடக்கவேண்டும் என்ற ஆதங்கத்தோடு தரப்படும் எச்சரிக்கையும், நல்ல செய்திதானே! இந்தக் கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்தியை நாம் சிந்திக்க முயல்வோம். இன்று நமக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தி வாசகத்தில், 15 இறைச்சொற்றொடர்கள் உள்ளன. அவற்றில் 13 இறைச்சொற்றொடர்கள் அழிவைக் கூறுகின்றன. இதோ, இன்றைய நற்செய்தியின் துவக்க வரிகள்...
லூக்கா நற்செய்தி 21: 5-6
அக்காலத்தில், கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்என்றார்.

இப்படி ஆரம்பமாகிறது, இன்றைய நற்செய்தி. இஸ்ரயேல் மக்களின் மதநம்பிக்கைக்கு உயிர்நாடியாக விளங்கிய எருசலேம் பேராலயத்தின் நடுவில் நின்றுகொண்டு, அந்தப் பேராலயம், கல்மேல் கல் இராதபடி இடிந்து தரைமட்டமாகும் என்று இயேசு கூறுகிறார். அவ்விதம் கூறுவதற்குத் தனிப்பட்ட ஒரு துணிவு வேண்டும். பின்வருவதை முன்கூட்டியே அறியும் அருள் இயேசுவுக்கு இருந்ததால், அவரால் இவ்வளவு உறுதியாகப் பேச முடிந்ததென்று, இந்த வீரத்திற்கு நாம் விளக்கம் சொல்லலாம்.
ஆனால், அதேநேரம், தனிப்பட்ட ஒருவரது வாழ்வு போகின்ற திசை, அவர் நடந்து கொள்ளும் முறை இவற்றை வைத்து, அவர் வாழ்வு அழிவை நோக்கிப் போகிறதா அல்லது மகிழ்வை நோக்கிப் போகிறதா என்று கணிக்கமுடியும், இல்லையா? அதேபோல், ஒரு நிறுவனம் நடத்தப்படும் முறையை வைத்தும் அதன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறலாம். எருசலேம் கோவில், எவ்விதம் நிர்வகிக்கப்பட்டது என்பதை இயேசு ஆழமாய் உணர்ந்து, வெளிப்படுத்திய எண்ணங்களே, இன்றைய நற்செய்தியில் இடம்பெற்றுள்ளன.
இயேசுவைப் பொருத்தவரை, அவர் 12 வயதிலிருந்தே, எருசலேம் ஆலயம் நடத்தப்பட்ட முறையைப் பார்த்து கவலைப்பட்டிருப்பார். அவரது கவலை, ஆதங்கம் இவற்றை ஒரு சாட்டையாகப் பின்னி, அந்த ஆலயத்தை அவர் தூய்மைப்படுத்தினார். (லூக்கா 19: 45-46) அதற்குப் பின்னும், அந்த ஆலயம், மீண்டும் தன் பழைய வியாபார நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்ததைப் பார்த்த இயேசு, இவ்வளவு தூரம் வருமானம் சேர்க்கும் அக்கோவில், நிச்சயம் பிற நாட்டவரின் பொறாமைப் பார்வையில் படும். அக்கோவில் சேர்த்துள்ள செல்வமே, அதன் அழிவுக்குக் காரணமாய் இருக்கும் என்பதை, சொல்லாமல் சொல்லும் வண்ணம், இயேசு, இந்த எச்சரிக்கை வார்த்தைகளைச் சொல்லியிருக்க வேண்டும்.
செல்வம் சேர்க்கும் நிறுவனங்களாக மாறும் கோவில்கள், கற்களால் எழுப்பப்படும் கோட்டைகளாக மாறிவிடுகின்றன. கோவிலில் உள்ள கடவுளைக் காப்பதைவிட, செல்வத்தைக் காப்பதற்காக வலுவானக் கற்சுவர்களை அமைத்துக்கொள்கின்றன. கற்களை நம்பி உயர்ந்து நிற்கும் கோவில்களுக்குப் பதில், மக்களை நம்பி எழுப்பப்படும் உண்மை ஆலயங்களை, அனைத்து மதங்களும் கட்டவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

முதல் இரு இறைச்சொற்றொடர்களில், எருசலேம் கோவிலின் அழிவுபற்றி பேசும் இயேசு, அதன் பின், உலகில் நிகழப்போகும் அழிவுகளைப்பற்றி கூறியுள்ளார். அவர் பட்டியலிட்டுக் கூறும் அவலங்களை அலசினால், ஏதோ நாம் வாழும் இக்காலத்தைப்பற்றி இயேசு பேசுவது போல் தெரிகிறது. இதோ, இயேசு கூறும் அந்த அவலங்கள்:
·          கடவுளின் பெயரால், உலகம் அழியப்போகிறது என்ற பயத்தால், மக்களை வழிமாறிப் போகச் செய்தல்;
·          போர் முழக்கங்கள், குழப்பங்கள், ஒன்றை ஒன்று எதிர்த்து எழும் நாடுகள்;
·          பெரிய நில நடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய்;
·          அச்சுறுத்தும் அடையாளங்கள் வானில் தோன்றுதல்
இவை அனைத்தும், நாம் வாழும் காலத்திலும் நம்மைச் சுற்றி நடப்பதை நாம் பார்த்து வருகிறோம். இந்த அவலங்களுக்கு, அழிவுகளுக்கு மத்தியில், கலங்காமல் இருங்கள் என்று இயேசு கூறுவது, நமக்கு விடுக்கப்படும் பெரும் சவால்!

இயற்கையிலும், சமுதாயத்திலும் நடக்கும் இந்த பயங்கரங்களைக் கூறிவிட்டு, பின்னர் நமது தனிப்பட்ட வாழ்வை, குறிப்பாக, தம்மைப் பின்பற்றுகிறவர்களின் வாழ்வை  வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார், இயேசு. அங்கும், அவர் சொல்பவை, அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தும் ஒரு பட்டியல்தான்.
·          நீங்கள் விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படுவீர்கள்;
·          உங்கள் குடும்பத்தினரே உங்களைக் காட்டிக் கொடுப்பார்கள்;
·          உங்களுக்கு எதிராகச் சான்று பகர்வார்கள்;
·          உங்களுள் சிலரைக் கொல்வார்கள்;
·          என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்
இயேசு கூறும் இத்தகையத் துன்பங்களை தங்கள் வாழ்வில் ஒவ்வொருநாளும் சந்திக்கும் பல கிறிஸ்தவர்களைப் பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. கிறிஸ்துவுக்காக வன்முறைகளைச் சந்திக்கும் இவர்களுக்காக இன்று சிறப்பாக செபிப்போம்.

இயேசு இன்றைய நற்செய்தியில் கூறிய இந்த அழிவுகளைக் கேட்கும்போது, இது என்ன நற்செய்தியா என்றுகூட கேட்கத் தோன்றுகிறது. மீண்டும் நினைவில் கொள்வோம். நற்செய்தி என்றால், இனிப்பான செய்தி அல்ல. நமக்குள் வளரும் ஒரு நோயை நமக்குச் சுட்டிக்காட்டும் மருத்துவரை எதிரி என்றா நாம் கூறுகிறோம்? கசப்பான மருந்துகளைத் தரும் அவரை, நன்மை செய்பவர் என்று நாம் நம்புவதில்லையா? அதேபோல், இயேசுவும், இவ்வுலகைப் பற்றிய கசப்பான உணமைகளைச் சொல்கிறார். முக்கியமாக, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு வரவிருக்கும் சவால்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக்குகிறார். தனக்குச் சீடர்கள் வேண்டும், தன்னைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்கவேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், கசப்பான உண்மைகளைச் சொல்லத் தேவையில்லையே!
தொண்டர்களைத் தவறான வழி நடத்தும் தலைவர்கள், எதிர்வரும் ஆபத்துக்களைச் சொல்லத் தயங்குவார்கள். அப்படியே ஆபத்துக்கள் வரும்போதும், உண்மைப் பிரச்சனைகளிலிருந்து தொண்டர்களைத் திசைத்திருப்பி, வெறியூட்டும் பாகுபாட்டு உணர்வுகளை வளர்த்து, தேவையில்லாமல் உயிர்களைப் பறிக்கும் வழிகளையேக் காட்டுவர், இந்தப் போலித் தலைவர்கள். இயேசுவின் வழி, மாறுபட்ட வழி...

இத்தனைப் பிரச்சனைகளின் மத்தியிலும் இயேசு தரும் ஒரே வாக்குறுதி... அவரது பிரசன்னம். அழிவுகளையும், குழப்பங்களையும் பட்டியலிட்ட இன்றைய நற்செய்தியில் இறுதி இரு இறைச்சொற்றொடர்களில் மட்டும் மனதுக்குத் துணிவூட்டும் நல்ல செய்தியைச் சொல்கிறார், இயேசு. விசாரணைகளின்போது, என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. (லூக்கா 21: 14-15) என்று கூறுகிறார் இயேசு. நற்செய்தியின் இறுதியிலும், இயேசு, அறுதல் தரும் வார்த்தைகளுடன் நிறைவு செய்கிறார். நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள். இயேசு கூறும் உங்கள் வாழ்வு இவ்வுலக வாழ்வு அல்ல. மறு உலக வாழ்வு.

நாம் எல்லாருமே ஒருநாள் இவ்வுலகிலிருந்து விடைபெற வேண்டும். ஆனால், அது எப்போது என்பது மட்டும் யாருக்கும் தெரியாது. ஒரு சிலருக்கு, மறுவுலக வாழ்வு நெருங்கிவருகிறது என்ற உண்மை, அவர்களுக்கு வரும் நோயால் உணர்த்தப்படுகிறது. அவ்வேளையில், அவர்களில் ஒரு சிலர் மிகுந்த தெளிவுடன் இவ்வுலக வாழவைக் குறித்து உன்னதமான உண்மைகளைக் கூறியுள்ளனர். மறுவுலக வாழ்வுக்கு நாள் குறிக்கப்பட்ட Randy Pausch என்ற பேராசிரியர், இறப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன், தன் பல்கலைக் கழகத்தில் புதிதாகப் பட்டம் பெற்ற இளையோருக்கு வழங்கிய ஓர் உரையைக் கேட்கும் வாய்ப்பு பெற்றேன். அதில் அவர் கூறுவது இதுதான்:
உங்கள் வாழ்வில் ஆழ்ந்த தாகத்தோடு கனவுகளைத் துரத்துங்கள். கனவுகளைத் துரத்துவதற்கு முன், அவை எப்படிப்பட்ட கனவுகள் என்பதைத் தீர்மானம் செய்யுங்கள். பொருளும், புகழும் சேர்க்கும் கனவுகளைத் துரத்தவேண்டாம். நீங்கள் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும், உங்களை விட வேறொருவர் இன்னும் அதிகப் பொருள் சேர்த்திருப்பார்; அது உங்களை மீண்டும் ஏக்கத்தில் விட்டுவிடும். உறவுகளைச் சேகரிக்கும் கனவுகளைத் துரத்துங்கள். உண்மையான உறவுகள், ஏக்கம் தராது. நிறைவைத் தரும்."

பணம், புகழ் என்ற சக்திகள், தாங்கள் அழிவதோடு, இவ்வுலகையும் அழித்து வருகின்றன. இந்த சக்திகளோடு உறவு கொள்வதற்குப் பதில், மனித உறவுகள் என்ற சக்தியைத் தேடிச் செல்வோம். அந்த உறவுகளுக்கெல்லாம் சிகரமாக, இறைவனின் உறவும் நம்முடன் உள்ளதென்ற நம்பிக்கையோடு, உலகப் பயணத்தை, வாழ்வின் முடிவை, உலகத்தின் முடிவை எதிர்கொள்வோம்.


08 November, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 46

Cornerstone Rehab
A sign sits on Wayne Williams' front lawn in Sedalia – Photo - KRCG

அமெரிக்க ஐக்கிய நாட்டில், மிசூரி மாநிலத்தின் செடாலியா (Sedalia) என்ற ஊரில், ஒரு வீட்டிற்கு முன் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில் பின்வரும் வார்த்தைகள் காணப்பட்டன: "22 வயதான ஜெசிக்கா வில்லியம்ஸ், ஹெராயின் போதைப்பொருள் காரணமாக, 2016, பிப்ரவரி 10ம் தேதி, இங்கு காலமானார். செடாலியாவில் ஹெராயின் நடமாட்டம் உள்ளது; அதைப்பற்றி நாம் மௌனம் காத்தால், எங்கள் மகளைப்போல், இன்னும் பலரை அது கொன்றுவிடும். இதைப்பற்றிப் பேசுங்கள்"
இளம்பெண் ஜெசிக்காவின் மரணத்தைக் குறித்து வைக்கப்பட்ட அந்த அறிவிப்பு, செடாலியா நகரில் ஹெராயின் நடமாட்டத்தைக் குறைத்திருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், தங்கள் மௌனத்தால், தங்கள் மகளின் மரணத்திற்கு, தாங்களும் காரணமாக இருந்தோம் என்று, அவரது குடும்பத்தினர், அவ்வறிக்கையில் மறைமுகமாகக் கூறியிருப்பது, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
குடும்பத்தில் ஒருவர், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார் என்பதை, வீட்டிலுள்ள அனைவரும், வெளி உலகத்திற்குத் தெரிந்துவிடாமல் பாதுகாத்து வருவர். ஒருவேளை, ஜெசிக்காவின் குடும்பத்தினர் இதைப்பற்றிப் பேசியிருந்தால், இன்னும் சிலர், தங்கள் குடும்பத்திலும் இந்தப் பிரச்சனை உள்ளதென்று பேசியிருப்பர். தங்கள் பிரச்சனைக்குக் காரணமான போதைப்பொருள், தங்கள் பகுதியில் நடமாடி வருகிறது என்பதை பலரும் அறிந்து, அதைத் தடுக்க முயன்றிருப்பர்.

குடும்பத்தில் ஒருவர் நோயுற்றால், குறிப்பாக, ஒருவர் நீண்ட காலமாக நோயுற்றால், அவர்களைப்பற்றி அக்கம்பக்கத்தில் உள்ளவர்களோடு, உறவுகளோடு பேசி, ஆறுதல் தேடுவோம். ஆனால், ஒரு சில நோய்களைப்பற்றி பேசுவதற்குத் தயங்குவோம். எடுத்துக்காட்டாக, குடும்பத்தில் ஒருவருக்கு தொழுநோய் உள்ளதென்பதை யாரிடமும் சொல்லமாட்டோம். அந்த நோய், படிப்படியாக முற்றுகையில், பிறருக்குத் தெரியவரும். அதேபோல், குடும்பத்தில் ஒருவருக்கு, குறிப்பாக, இளவயதுள்ள ஒருவருக்கு, வலிப்பு நோய் இருப்பதை யாரிடமும் வெளிப்படுத்த மாட்டோம். அவர், என்றாவது ஒருநாள், வீட்டுக்கு வெளியே, அந்த நோயின் காரணமாகத் துன்புற நேர்ந்தால், அவ்வேளையில், அதுவரை மூடிவைத்த இரகசியம், வெளியே வந்துவிடும்.

கொடியப் பழக்கங்களுக்கு அடிமையான ஒருவரோடு, அல்லது, நோயுற்ற ஒருவரோடு குடும்பத்தினர் மேற்கொள்ளும் போராட்டங்களை, மாற்கு நற்செய்தி 9ம் பிரிவில் கூறப்பட்டுள்ள புதுமை, நமக்கு நினைவுபடுத்துகின்றது. இயேசு வாழ்ந்த காலத்தில், வலிப்பு நோய் உள்ளவரை, தீய ஆவி பீடித்த ஒருவராக இஸ்ரயேல் மக்கள் எண்ணி வந்தனர். குழந்தைப்பருவம் முதல் இந்த நோய் உள்ளதென்பதை உணர்ந்த அந்தப் பெற்றோர், அதைத் தீர்ப்பதற்கு பல வழிகளில் முயன்று, தோற்றுப்போயிருக்க வேண்டும். இப்போது, அச்சிறுவனின் தந்தை இயேசுவைத் தேடி வந்துள்ளார். அச்சிறுவனை தன்னிடம் கொணரும்படி இயேசு கூறியதும், அங்கு நிகழ்ந்ததை நற்செய்தியாளர் மாற்கு இவ்விதம் விவரிக்கிறார்:
மாற்கு 9:19-22
அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்என்று இயேசு கூறினார். அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, “இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?” என்று கேட்டார். அதற்கு அவர், “குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்துவருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டுஎன்றார்.

தன் மகனின் நிலையை ஊரார் முன்னிலையில் இயேசுவிடம் விளக்கியபோது, அத்தந்தையின் உள்ளம் வெகுவாகக் காயப்பட்டிருக்க வேண்டும். இந்த விளக்கங்களுக்குப் பிறகு, அவர் இயேசுவிடம் எழுப்பும் ஒரு வேண்டுதல், நம் உள்ளங்களைத் தொடுகிறது. தன் மகன் குணம்பெறவேண்டுமென்று அந்தத் தந்தை மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியடைந்தால், மனம் சோர்ந்துபோயிருந்த தந்தை, தயக்கத்துடன் எழுப்பும் அவ்வேண்டுதலும், அதற்கு இயேசு கூறிய பதிலும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.
மாற்கு 9:22-24
சிறுவனின் தந்தை உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்என்றார். இயேசு அவரை நோக்கி, “இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, “நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்என்று கதறினார்.

உள்ளத்தை உருக்கும் ஒரு காட்சி இது. பொதுவாக, ஆண்கள் அழக்கூடாது, அதுவும் போது இடங்களில், பலருக்கு முன் அழக்கூடாது என்பது, பல நாடுகளில் நிலவிவரும் வழக்கு. இங்கு நாம் சந்திக்கும் தந்தை, கூட்டத்தின் முன்னால் கதறி அழுகிறார். தன் மகனைக் காப்பாற்ற அவர் மேற்கொண்ட போராட்டங்கள், அதுவரைக் கண்ட தோல்விகள், எல்லாவற்றையும் உள்ளத்தில் போட்டு பூட்டிவைத்து, ஒருவேளை, இரவில், தனிமையில், அவர் அழுதிருக்கக்கூடும். அவ்விதம் தேக்கி வைத்த உணர்வுகளெல்லாம் மடைதிறந்து கொட்டுகின்றன, இயேசுவுக்கு முன். அவர் உள்ளத்தின் காயங்களெல்லாம் இயேசுவுக்கு முன்னால் திறக்கப்படுகின்றன.

இயேசு ஒரு சராசரி மந்திரவாதியாக இருந்திருந்தால், 'உம்மால் இயலுமானால் எங்களுக்கு உதவி செய்யும்' என்று அந்தத் தந்தை கூறியதை, தன் மந்திரச் சக்திக்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாகக் கருதி, தன் மந்திரசக்தியைத் தாறுமாறாகப் பயன்படுத்தியிருப்பார். ஆனால், இயேசு மந்திரவாதி அல்ல, மக்களின் பிணிதீர்க்க வந்த மனுமகன். எனவே, தன் சக்தி மீது சாய்ந்து நின்ற அந்தத் தந்தையை, அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் மீது சாயும்படி செய்கிறார்: "இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" என்று அந்தத் தந்தைக்கு உறுதி அளிக்கிறார். மகன் குணமாகும் அந்நேரத்தில், தந்தையும் குணமாகிறார். தான் இத்தனை ஆண்டுகளாக நம்பிவந்த இறைவன் தன்னை கைவிடவில்லை என்ற புத்துணர்வுடன், நலமடைந்த தன் மகனை அணைத்தபடி தந்தை இல்லம் திரும்புகிறார்.

இந்தத் தந்தை, தன் மகனது குறையை விளக்கும் வரிகள், அழிவைத் தேடிக்கொள்ளும் பல பழக்கங்களுக்கு அடிமையாகிப் போன இளையோரைப் பற்றி சிந்திக்க நமக்கொரு வாய்ப்பைத் தருகின்றன. போதைப்பொருள்களுக்கு அடிமையாவது, பணம் படைத்தவர்கள் மட்டுமென்று நாம் எண்ணியிருந்த காலம் உண்டு. ஆனால், இப்பழக்கம், மனித சமுதாயத்தில், ஏழை, பணக்காரர் என்ற எல்லா நிலையினரிடையேயும், எல்லா வயதினரிடையேயும் இருப்பது, அதிர்ச்சி தரும் உண்மை. குறிப்பாக, அண்மைய சில ஆண்டுகளாக, பள்ளிச் சிறுவர்கள் நடுவே, போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது என்பது, நம்மை நிலைகுலையைச் செய்துள்ள உண்மை. இதைவிட இன்னும் கொடுமையான ஓர் உண்மை என்னெவெனில், சிறுவர் சிறுமியர் விரும்பிச் சாப்பிடும் மிட்டாய்களில் போதைதரும் பொருள்கள் கலக்கப்பட்டுள்ளன என்பதுதான்.
இவ்வாண்டு (2016) ஜூலை மாதம் 5ம் தேதி வெளியான ஒரு செய்தியில், சென்னையில், போதைப்பொருள் கலந்த மிட்டாய்கள் பள்ளிச் சிறுவர்கள் மத்தியில் விற்கப்பட்டன என்றும், இந்த மிட்டாய்கள் பீஹார் மாநிலத்தில் செய்யப்பட்டு, சென்னைக்கு இறக்குமதியாயின என்றும் கூறப்பட்டது. இதில், இன்னும் வேதனையான ஒரு பின்னணி என்னவெனில், இதேபோன்ற மிட்டாய்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒருமுறை கைப்பற்றப்பட்டன என்றும், அவ்வேளையில், தகுந்த நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அந்த வழக்கு முடிக்கப்பட்டது என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மதுவுக்கும், போதை பொருள்களுக்கும் அடிமையாகி வாழ்வைத் தொலைத்துவிட்ட பல இளையோரை மீண்டும் வாழ்வுக்குக் கொண்டுவரப் போராடும் பெற்றோர், குடும்பத்தினர் எல்லாரையும் பெருமையோடு இப்போது நினைத்துப் பார்ப்போம்.
அந்த மறு வாழ்வு மையங்களில் உடல் விறைத்து, வாயில் நுரை தள்ளி படுத்திருக்கும் மகனுக்கு, அல்லது, மகளுக்கு அருகே, இரவும் பகலும் கண் விழித்து, தவமிருக்கும் பெற்றோரை, அல்லது, வாழ்க்கைத் துணையைப் பார்த்து, விசுவாசப் பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மறு வாழ்வு மையங்களில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஒரு நாள், இரு நாளில் முடியும் கதையல்ல. பல வாரங்கள், பல மாதங்கள் நடக்கும் சிலுவைப் பாதை.
இந்த மறுவாழ்வு மையங்களில் இளையோரும், அவர்களது குடும்பங்களும் மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டு எல்லாரும் மகிழ்வடையப் போவதில்லை. முக்கியமாக, இவர்களுக்கு, போதைப்பொருள்களை வழங்கி வரும் வியாபாரிகள், இந்த மறு வாழ்வு முயற்சிகளுக்கு எதிரிகள்.
2009ம் ஆண்டு, செப்டம்பர் மாதத் துவக்கத்தில் மெக்ஸிகோவின் புறநகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் நம்மை நிலை குலையச் செய்கிறது. நம் விசுவாசத்திற்கு மீண்டும் ஒரு சவாலைத் தருகிறது. மெக்சிகோ நகருக்கருகே, ஒரு மறுவாழ்வு மையத்தில், ஒரு நாள் பட்டப்பகலில், துப்பாக்கி ஏந்திய இரண்டு அல்லது மூன்று பேர் நுழைந்தனர். போதைப் பழக்கத்திலிருந்து விடுதலை பெற முயற்சிகளை மேற்கொண்டிருந்த 17 இளைஞர்களை அந்த மையத்தின் வாசலுக்கு இழுத்துச் சென்றனர். வரிசையாக அவர்களை நிறுத்தி, ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக்கொன்றனர். போதைப் பழக்கத்திலிருந்து விடுதலை பெற விழைந்தவர்களுக்கு, இவர்கள், நிரந்தர விடுதலை தந்துவிட்ட வெறியில் மறைந்து விட்டனர். காவல் துறையினர் கொலையாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்று, அடுத்தநாள் செய்தித்தாள்கள் கூறின. அவர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருப்பார்களா என்பது, பெரிய கேள்விக்குறியே!

போதைப்பொருள் வியாபாரம் இன்று உலகத்தில் பல இலட்சம் கோடி டாலர்கள் மூலதனத்துடன் நடத்தப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகளின் ஆதரவுடன் நடக்கும் இந்தத் தொழிலால் அழியும் குடும்பங்களின் கதறல்களை இன்றைய விவிலியத் தேடலில் ஓரளவு கேட்க முயன்றோம். "நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்" என்று சிறுவனின் தந்தை எழுப்பிய கதறலைப்போல், இந்த உள்ளங்கள் எழுப்பும் கதறல்கள், கட்டாயம், அந்த விண்ணகக் கதவுகளைத் திறக்கும். இப்புதுமையின் இறுதி வரிகள் இதோ:
மாற்கு 9: 26-27
தீய ஆவி அலறி, அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி, வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே அவர்களுள் பலர், “அவன் இறந்துவிட்டான்என்றனர். இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.
போதைப்பொருள் பயன்பாட்டினாலும், நோயினாலும் வாழ்வை இழந்துவரும் பலர், உலகின் கண்களுக்கு இறந்தவர்கள்போல் தெரிந்தாலும், இறைவன் அவர்களைத் தொட்டு, தூக்கி நிறுத்தி, மறுவாழ்வு வழங்குவார் என்று, இரக்கத்தின் யூபிலி ஆண்டில் நம்பிக்கை கொள்வோம்.



06 November, 2016

The Jubilee for Prisoners சிறைப்பட்டோரின் யூபிலி



Jubilee for Prisoners

32nd Sunday in Ordinary Time

In another two weeks, namely, on November 20, the Feast of Christ the King, the Extraordinary Jubilee of Mercy will come to a close. The Jubilee Year may be considered ‘extraordinary’ since it comes once every 25, 50 or 100 years; but ‘mercy’ needs to become ordinary, day to day experience of our lives. To help us realize this truth, two Jubilee celebrations are planned in Vatican this week and the next week. Yes, on November 5 & 6, we celebrate the Jubilee for Prisoners and on November 12 & 13, we celebrate the Jubilee for the Socially Marginalised (Excluded).

Throughout this Jubilee Year, many groups have celebrated their Jubilees in Vatican. We began with the Jubilee for those Engaged in Pilgrimage Work – in January. This was followed by sending forth Missionaries of Mercy in February, on Ash Wednesday. In April, May and June there were Jubilees for Boys and Girls, Deacons, Priests and Sick People. In July we had the World Youth Day programme in Krakow, Poland, with the main theme: “Blessed are the Merciful”. In September, the Jubilee for Workers of Mercy and Volunteers was celebrated in Vatican, which culminated in the Canonisation of Mother Teresa, the Messenger of Mercy. Now, we celebrate the Jubilee with two groups – Prisoners and the Socially Excluded. Why are these two groups placed right at the end of the Jubilee Year? I take this as a special message from Pope Francis asking us to integrate mercy in our daily life even beyond the Jubilee year.
The idea of the ‘Jubilee’ from the Bible includes Prisoners and the Socially Excluded. The ‘Manifesto’ of Jesus in Nazareth speaks of “proclaiming release to the captives and liberty to the oppressed” (Luke 4:18). Any Jubilee needs to address these two groups in order that it becomes truly and Biblically a ‘Jubilee’.

The Liturgy for this Jubilee for Prisoners – coinciding with the 32nd Sunday in Ordinary Time – brings to focus the idea of Resurrection and After-Life. November, being a month to remember our dear departed, impresses the idea of ‘after-life’ very much in our minds. We know that ‘after-life’ generally refers to the life after death. But, we are also aware of the fact that a ‘transformed’ life can also be thought of as an ‘after-life’ here on earth. It is also referred to as ‘getting a second chance’ or ‘turning a new leaf’. We do speak of a person recovering from a serious accident or a life-threatening illness, or, a person recovering from addiction, in such terms. Similarly, a person who loses everything due to a natural calamity or a human-made tragedy like war, gets a fresh lease of life through God’s grace or through unexpected help from fellow human beings. Such miracles happen in our times!

In a similar vein, we can think of prisoners ‘turning a new leaf’ in their lives. For this ‘turn-around’ to be effective, the society at large needs to give that person a ‘second chance’. Otherwise, there is every chance that the prisoner can get back to his cell. Here is a story that I read recently. A prisoner was getting instructions, since he was willing to receive Baptism. The Priest who was guiding him, approached him on a Saturday and said, “Tomorrow is Sunday. If you wish, I can request the warden to let you go with me to the church for Sunday Mass.” The prisoner looked at the Priest. He then showed the scars on his hands and face and said, “The warden will have no problem in granting me permission to leave the prison; but will the people in the church give me permission to enter the church?” The Priest stood shocked not knowing what to tell him.

We know of quite many men and women who leave the prison with high hopes of getting integrated into the normal society. Since many of them do not find the proper welcome, their ‘re-entry’ becomes tough. Society denies them the ‘second chance’. The reason for this hesitation or resistance comes from our prejudices. The moment we think of prison, we get caught up with hand-cuffs, prison bars and the hardened heart of a ‘criminal’.

When I heard about the Jubilee for Prisoners, one of the questions that sprang up immediately was how safe it would be to conduct a Jubilee celebration for them. I could easily envisage a battalion of prison guards standing around Vatican to ensure that no prisoner makes an escape. I am sadly aware that such thoughts and imagination come from my prejudices. Instead of counting on the blessings God will shower on such an event, I was calculating the risks involved in conducting such an event.

I have been inspired by the manifesto of Jesus where he says that his mission was ‘to set prisoners free’. I have used these words as a slogan to talk of religious commitment. The Parable of the Last Judgment, where Jesus identifies himself with the prisonr, has become the theme of my prayers and talks. Still, I see that I need to purify myself from the prejudices that cloud my mind and heart about prisoners.
In the Parable of the Last Judgment, when Jesus says, “I was hungry, I was thirsty, I was naked… etc.” I could easily accept Jesus in those roles. When Jesus says, “I was in prison…” I tend to give an explanation of my own, as to why Jesus was in prison. I find myself saying that Jesus was falsely accused and was put behind bars. Jesus does not give any such reason for his being behind bars. He simply says: “I was in prison and you came to me” (Mt. 25:36). He simply identifies himself with all the prisoners, whether falsely accused or not. Jesus, hungry, thirsty, naked, homeless, stranger etc. don’t seem to challenge me; Jesus, in prison is quite challenging.
We are aware that at least half of the prisoners all over the world have been falsely accused or caught in a spiral of events seemingly out of control. We are also sadly aware that many ‘real culprits’ are roaming the streets freely.

The Jubilee of Prisoners invites us not to play the lawyer or the judge trying to find out who is guilty or not-guilty. It invites us above all to go on our knees and wash the feet of the prisoners. That way, we may be able to partake of this Jubilee meaningfully. Pope Francis has shown the way. On March 28, 2013, Maundy Thursday, two weeks after he assumed the leadership of the Church, he went to Rome’s Casal del Marmo, the prison for minors, to celebrate the Lord’s Supper. Last year, 2015, he went to Rebibbia prison to celebrate Maundy Thursday with the prisoners. On each of these occasions he had washed the feet of 12 prisoners, including some women and muslims. On almost all the Apostolic trips he has undertaken, he has visited prisons and spent time with prisoners. Now, on November 6, this Sunday he has specially invited prisoners, prison guards and chaplains to celebrate the Jubilee with him.

In his book ‘The Name of God is Mercy’, Pope Francis talks about prisoners thus:
“I said it sincerely to the prisoners of Palmasola, in Bolivia, to those men and women who welcomed me so warmly. I reminded them that even Saint Peter and Saint Paul had been prisoners. I have a special relationship with people in prisons, deprived of their freedom. I have always been very attached to them, precisely because of my awareness of being a sinner.
“Every time I go through the gates into a prison to celebrate Mass or for a visit, I always think: why them and not me? I should be here. I deserve to be here. Their fall could have been mine. I do not feel superior to the people who stand before me. And so I repeat and pray: why him and not me?”

This is the invitation for us… to celebrate the Jubilee for Prisoners with a humble heart, knowing full well that it could have been any one of us there behind bars and only God’s mercy has been protecting us all these years.
Timothy P. Schmalz's sculpture representation, "When I Was in Prison"

பொதுக்காலம் - 32ம் ஞாயிறு

இன்னும் இரு வாரங்களில், அதாவது, நவம்பர் 20, கிறிஸ்து அரசர் விழாவன்று, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு நிறைவடையும். இரக்கத்தை மையப்படுத்திய இப்புனித ஆண்டு நிறைவுற்றாலும், தொடர்ந்து வரும் நாட்களில், இரக்கம் நம் வாழ்வாகவேண்டும் என்பதை நினைவுறுத்த, யூபிலியின் இறுதி இரு வாரங்களில் வத்திக்கானில் இரு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அவைதான், சிறைப்பட்டோரின் யூபிலி, மற்றும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோரின் யூபிலி. இவற்றில், சிறைப்பட்டோரின் யூபிலியை இன்றைய ஞாயிறு சிந்தனையின் மையமாக்க முயல்வோம்.

இந்தப் புனித ஆண்டைக் கொண்டாட, பல குழுவினர் வெவ்வேறு நாட்களில் வத்திக்கானில் கூடி வந்தனர். ஏப்ரல் மாதம், வளர் இளம் பருவத்தினர், மே மாதம், தியாக்கோன்கள், ஜூன் மாதம் அருள்பணியாளர்கள் மற்றும் நோயுற்றோர், ஜூலை மாதம், போலந்து நாட்டில் உலக இளையோர்... என்று, பல குழுவினர் யூபிலியைக் கொண்டாடியுள்ளனர். செப்டம்பர் 2ம் தேதி முதல், 4ம் தேதி முடிய, இரக்கப்பணியாளர்கள் வத்திக்கானில் யூபிலியைக் கொண்டாடியபோது, இரக்கத்தின் தூதரான அன்னை தெரேசா அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதராக உயர்த்தியது, இந்த யூபிலி ஆண்டின் ஒரு சிகர நிகழ்வாக அமைந்தது. அதேபோல், நவம்பர் 5,6 மற்றும் 12, 13 ஆகிய இரு வார இறுதி நாட்களில், மேலும் இரு சிகர நிகழ்வுகளாக, சிறைப்பட்டோரின் யூபிலியும், ஒதுக்கப்பட்டோரின் யூபிலியும் வத்திக்கானில் இடம்பெறுகின்றன.

'யூபிலி' கொண்டாட்டங்கள் ஏன் உருவாக்கப்பட்டன என்ற கேள்விக்கு விவிலியத்திலும், திருஅவை வரலாற்றிலும் விடை தேடும்போது, சிறைப்பட்டோர் மற்றும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர் அங்கு கூறப்பட்டுள்ளனர். யூபிலி ஆண்டினை, ஆண்டவர் அருள்தரும் ஆண்டென அறிவிக்க தான் வந்திருப்பதாக, இயேசு அறிவித்ததை நாம் லூக்கா நற்செய்தி 4ம் பிரிவில் வாசிக்கிறோம். "ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிப்பது, சிறைப்பட்டோர் விடுதலை அடைவது, பார்வையற்றோர் பார்வை பெறுவது, ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவது" (லூக்கா 4:18-19) ஆகியவை, அருள்தரும் ஆண்டில் நிகழவேண்டிய அற்புதமானப் பணிகள் என்று இயேசு அறிவித்தார். இந்தப் பட்டியலில், சிறைப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அல்லது, (ஒதுக்கப்பட்டோர்) இடம்பெற்றுள்ளதைக் காண்கிறோம்.
திருஅவை வரலாற்றில் இதுவரை பல யூபிலி ஆண்டுகள் கொண்டாடப்பட்டுள்ளன. பொதுவாக, அருள்பணியாளர்கள், துறவறத்தார், பக்த சபையினர், இரக்கப் பணியாளர்கள், பொதுநிலையினர் என்று பலர், இந்த யூபிலி விழாக்களைச் சிறப்பித்துள்ளனர். சிறைப்பட்டோரும், ஒதுக்கப்பட்டோரும் கூடிவந்து யூபிலியைக் கொண்டாடுவது இதுவே முதல்முறை என்று, இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பேராயர் ரீனோ பிசிக்கெல்லா (Rino Fisichella) அவர்கள் கூறியுள்ளார்.

இன்று நாம் கொண்டாடும் திருவழிபாட்டு ஆண்டின் 32வது ஞாயிறன்று, உயிர்ப்பையும், மறுவாழ்வையும் மையப்படுத்தி, வழிபாட்டு வாசகங்கள் அமைந்துள்ளன. 'மறுவாழ்வு' என்றதும், இவ்வுலக வாழ்வுக்குப் பின் வரும் மறு உலக வாழ்வையே நாம் பெரும்பாலும் எண்ணிப்பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக, நவம்பர் மாதத்தில், இறந்தோரின் நினைவாக நாம் மேற்கொள்ளும் பல முயற்சிகளில், 'மறுவாழ்வு' என்ற சிந்தனை நம்மில் ஆழமாகப் பதிகிறது.

'மறுவாழ்வு' என்பதை, மறு உலகில் நாம் பெறவிருக்கும் வாழ்வு என்றுமட்டும் எண்ணிப்பார்க்காமல், இவ்வுலகிலேயே நாம் வாழக்கூடிய மாறுபட்ட வாழ்வாகவும் எண்ணிப்பார்க்கலாம்! எடுத்துக்காட்டாக, பல ஆண்டுகளாக, தீராத ஒரு நோயினால் துன்புறும் ஒருவர், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மருத்துவ சிகிச்சை வழியே நலம்பெற்று வாழ்வதை, மறுவாழ்வு என்று கூறுகிறோம். போதைப்பொருளுக்கோ, மதுவுக்கோ அடிமையாகி, பின்னர் அதிலிருந்து விடுபட்டு வாழ்வதையும் நாம் மறுவாழ்வு என்று அழைப்பதில்லையா? அதேபோல், ஏதோ ஒரு சூழலில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு, தங்கள் வாழ்வை மாற்றி அமைத்துள்ள மனிதர்கள், மறுவாழ்வு பெற்றுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். சிறைப்பட்டோரின் யூபிலி சிறப்பிக்கப்படும் இஞ்ஞாயிறன்று, மறுவாழ்வைப் பற்றிச் சிந்திக்க, இறைவன் நமக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார்.
சிறைக்கைதிகள் மறுவாழ்வு பெறுவது, அவர்களை மட்டும் சார்ந்ததல்ல, அவர்களைச் சுற்றியுள்ள சமுதாயமும் அவர்களை வாழவைக்க வேண்டும். இதை எண்ணிப் பார்க்கும்போது, அண்மையில் வாசித்த ஓர் உண்மை நிகழ்வு மனதில் நிழலாடுகிறது:
சிறைக்கைதிகளில் ஒருவர் திருமுழுக்கு பெறுவதற்கு தன்னையே தயார் செய்து வந்தார். அவருக்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்துவைத்த அருள்பணியாளர், அவரிடம், "நாளை ஞாயிற்றுக்கிழமை. நீங்கள் என்னுடன் கோவிலுக்கு வருவதாக இருந்தால், சிறைக்காவலரிடம் நான் அனுமதி பெறுகிறேன்" என்று கூறினார். அந்தக் கைதி, தன் கைகளிலும், முகத்திலும் கத்தியால் கீறப்பட்ட தழும்புகளை அருள்பணியாளரிடம் காட்டி, "பாதர், சிறையிலிருந்து வெளியேச் செல்வதற்கு எனக்கு எளிதாக அனுமதி கிடைத்துவிடும். ஆனால், இந்தத் தழும்புகளுடன் நான் கோவிலுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்குமா?" என்று கேட்டார். அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், அருள்பணியாளர் அமைதியாக நின்றார்.
மனமாற்றம் பெற்று மறுவாழ்வைத் துவக்கும் எத்தனை கைதிகள், மீண்டும் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத கொடுமையால், சிறைவாழ்வே மேல் என்று எண்ணி வருகின்றனர்! இவர்களை மீண்டும் சமுதாயத்தில் இணைப்பதற்குத் தடையாக இருப்பன, நாம் உள்ளத்தில் அவர்களைப்பற்றி செதுக்கி வைத்திருக்கும் முற்சார்பு எண்ணங்களே.

'சிறைப்பட்டோரின் யூபிலி'யைக் கொண்டாட, ஆயிரக்கணக்கான கைதிகள் வத்திக்கானில் கூடுகின்றனர் என்று கேள்விப்பட்டதும், என் மனதில் 'இது ஓர் ஆபத்தான முயற்சி' என்ற எண்ணமே முதலில் தோன்றியது. 'கைதிகள்' என்றதும், கைவிலங்குகள், கம்பிக்கதவுகள், கடினமான இதயங்கள் என்று எனக்குள் நானே உருவாக்கிக்கொண்ட முற்சார்பு எண்ணங்களே, என்னில் இந்த அபாயச் சங்கை அலறவைத்தது. சிறைப்பட்டோர், வத்திக்கானில் யூபிலி கொண்டாடுகின்றனர் என்றதும், அதனை, அருள்நிறைந்த ஒரு வாய்ப்பாக எண்ணிப்பார்க்காமல், ஆபத்தாக எண்ணிப் பார்க்க வைத்தது.
"சிறைப்பட்டோருக்கு விடுதலை வழங்குவதை" தன் பணிவாழ்வின் குறிக்கோள் என்று இயேசு கூறியதை, நானும், ஒரு விருதுவாக்காகக் கூறியுள்ளேன். "சிறையிலிருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்று இறுதி தீர்வையில் இயேசு கூறும் வார்த்தைகளையும் தியானித்திருக்கிறேன். இருப்பினும், சிறைப்பட்டோர் மீது நான் கொண்டிருக்கும் தவறான முற்சார்பு எண்ணங்கள் இன்னும் தூய்மைபெற வேண்டும் என்பதை உணர்கிறேன்.

இறுதித் தீர்வையின்போது, "பசியாய் இருந்தேன், தாகமாய் இருந்தேன்..." என்று இயேசு, தன்னையே அடையாளப்படுத்துவதை என்னால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. "சிறையிலிருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்று அவர் கூறும்போது, "எந்தக் குற்றமும் செய்யாத இயேசு, சிறையில் அடைக்கப்பட்டார்" என்று, அந்தக் கூற்றுக்கு, நானாகவே ஒரு விளக்கம் தரும்போது, இயேசுவை ஒரு சிறைக்கைதியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், இயேசு, அவ்விதம் தன்னை அடையாளப் படுத்தவில்லை. "குற்றமேதும் புரியாதபோது, நான் சிறையிலிருந்தேன்" என்று அவர் கூறாமல், பொதுவாக, "நான் சிறையிலிருந்தேன்" என்று மட்டும் கூறியுள்ளார். குற்றம் புரிந்தோ, புரியாமலோ, சிறையில் தள்ளப்பட்டுள்ள அனைவரோடும் இயேசு தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டார். இது நமக்குச் சவாலாக அமைகிறது.
உலகின் பல நாடுகளில், சிறையிலிருப்போரில் பாதிக்கும் மேற்பட்டோர், குற்றமற்றவர்கள் என்பதை நாம் அறிவோம். மீதிப் பாதியில், பல்லாயிரம் கைதிகள், சூழ்நிலை காரணமாக ஒருமுறை தவறு செய்தவர்கள் என்பதையும் நாம் அறிவோம். அதேவேளையில், தெளிவாக, திட்டமிட்டு குற்றம் புரியும் பலரை, எந்தச் சட்டமும் நெருங்காமல் இருப்பதையும், அந்தக் குற்றவாளிகளில் பலர், ஆட்சிப் பீடங்களில் அமர்ந்து, அடுத்தவரை குற்றவாளிகள் என்று அநியாயமாகத் தீர்ப்பு வழங்குவதையும் நாம் வேதனையுடன், வெட்கத்துடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
யார் குற்றவாளி, யார் நிரபராதி என்பதைத் தீர்மானிக்கும் நீதியிருக்கையில் நாம் அமர்ந்திருந்தால், சிறைப்பட்டோரின் யூபிலியைக் கொண்டாடும் இஞ்ஞாயிறன்று, அந்த இருக்கையைவிட்டு எழுந்து நிற்போம். ஏதோ ஒரு காரணத்தால், அல்லது, காரணம் எதுவுமே இல்லாமல், சிறையில் தள்ளப்பட்டுள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு முன் மண்டியிட்டு, அவர்கள் காலடிகளைக் கழுவ முற்படுவோம். அவர்களை ஓரளவு புரிந்துகொள்ள, இது ஒரு சிறந்த வழி.

தன் தலைமைப் பணிக்காலத்தின் ஆரம்பத்திலிருந்து, இந்தப் பணிவு வழியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு அடிக்கடி நினைவுறுத்தி வருகிறார். 2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி தன் தலைமைப்பணியை ஏற்ற திருத்தந்தை, மார்ச் 28ம் தேதி, புனித வியாழன் மாலை, ஆண்டவரின் இறுதி இரவுணவு திருப்பலியை வளர் இளம் கைதிகள் நடுவில் நிறைவேற்றினார். அவ்வேளையில், 12 இளம் கைதிகளின் காலடிகளைக் கழுவி முத்தமிட்டார், திருத்தந்தை. காலடிகள் கழுவப்பெற்ற கைதிகளில், இருவர் இஸ்லாமியர், இருவர் இளம் பெண்கள். பொருள் நிறைந்த அந்தத் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை, இளம் கைதிகளிடம் கூறிய ஒரே ஓர் அறிவுரை இதுதான்: "மனம் தளராமல் முயலுங்கள். உங்கள் நம்பிக்கையை யாரும் திருடிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்". தான் மேற்கொண்ட பல அயல்நாட்டுப் பயணங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறைக்கைதிகளைச் சந்தித்துள்ளார். சிறைகளுக்குச் சென்ற பொழுதெல்லாம், "நம்பிக்கை தளரக்கூடாது" என்பதை ஒரு தாரக மந்திரமாக அவர் கூறி வந்துள்ளார்.
நவம்பர் 6, இஞ்ஞாயிறு காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் சிறைப்பட்டோரின் யூபிலித் திருப்பலியை திருத்தந்தை நிறைவேற்றுகிறார். இத்தாலி, இங்கிலாந்து, மலேசியா, மெக்சிகோ, தென் ஆப்ரிக்கா உட்பட, 12 நாடுகளிலிருந்து வத்திக்கானுக்கு வருகை தந்துள்ள 4000த்திற்கும் அதிகமான கைதிகள், சிறைக்காவலர்கள், சிறையில் அருள்பணியாற்றுவோர், இந்த யூபிலியில் கலந்துகொள்கின்றனர். பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைச் சின்னமாக விளங்கும் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், ஆயிரக்கணக்கில் சிறைக்கைதிகள் பங்கேற்கும் முதல் திருப்பலி இது என்பது, நம் திருஅவைக்கு, புதியதோர் இலக்கணத்தைத் தருகிறது.

இந்த யூபிலியின் ஒரு சில சிறப்பு அம்சங்களைக் குறித்து பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் செய்தியாளர்களிடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்: "இந்த யூபிலி திருப்பலியில் பயன்படுத்தப்படும் அப்பங்களை மிலான் நகரின் ஓப்பெரா’ (Opera) சிறைக்கைதிகள் உருவாக்கியுள்ளனர். இத்திருப்பலியின்போது, பீடத்திற்கருகே வைக்கப்பட்டுள்ள ஒரு மரச்சிலுவை, 14ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. 14ம் நூற்றாண்டு முதல், இன்று வரை கொண்டாடப்பட்ட அனைத்து யூபிலிகளிலும் பங்கேற்றப் பெருமை கொண்டது, அச்சிலுவை. அச்சிலுவைக்கருகே, 'இரக்கத்தின் அன்னை மரியா'வின் திரு உருவம் வைக்கப்பட்டுள்ளது. அன்னை மரியா தன் கரங்களில் குழந்தை இயேசுவைத் தாங்கியிருப்பது போலவும், குழந்தை இயேசுவின் கரங்களில், திறக்கப்பட்டுள்ள கைவிலங்கு ஒன்று இருப்பது போலவும் இந்த ஓவியம் அமைந்துள்ளது" என்று பேராயர் பிசிக்கெல்லா கூறினார்.
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் சிகர நிகழ்வுகளில் ஒன்றான 'சிறைப்பட்டோரின் யூபிலி', கைதிகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் அருள் வழங்கும் தருணமாக அமையட்டும். 'சிறைப்பட்டோரை'க் குறித்து நாம் கொண்டுள்ள முற்சார்பு விலங்குகளை, குழந்தை இயேசு, நம் உள்ளங்களிலிருந்து அகற்றுமாறு மன்றாடுவோம். தங்களுக்கென 'மறுவாழ்வை' அமைத்துக்கொள்ள முயலும் கைதிகளுக்கு, இறைவன், அருள் நிறைந்த மறுவாழ்வை வழங்கவேண்டும் என்றும் மன்றாடுவோம்.