09 July, 2021

Fr Stan Swamy – a Prophet, a Martyr, a Saint அருள்பணி ஸ்டான் – இறைவாக்கினர், புனிதர்

Fr Stan Swamy

15th Sunday in Ordinary Time

The entire episode leaves behind a feeling that Stan Swamy was virtually thrust a sentence of death without charges being framed against him and without a trial. I wonder if his soul will be able to rest in peace, but I hope it does. I suppose all that can be said is “Father, forgive them for they know not what they do”.
These words, were written on July 5, last Monday, the day when Fr Stan Swamy, (Fr. Stanislaus Lourduswamy SJ) the Jesuit Priest, breathed his last in the Holy Family Hospital, Mumbai. These words capture the atrocious crime committed by the central government of India, especially, the ‘honourable’ prime minister Narendra Modi, the ‘honourable’ home minister Amit Shah and their ‘honourable’ slave - the National Intelligence Agency. These words were not penned by a journalist, but by Shri Madan B. Lokur, a former judge of the Supreme Court of India.

Ever since Fr Stan was arrested, and, especially after his death, there has been an explosion of reactions from, practically, all over the world. One of the reactions is centred around the strong opinion that Fr Stan did not die, but was killed by the government of India and the judicial system. Another reaction is in the form of seeing his death from a spiritual perspective. In this sense, he is being called a prophet, a martyr, a true disciple of Christ and a saint. Here are two samples of these different reactions:

The press statement released by Archbishop Antony Pappusamy. President of TNBC – the Tamil Nadu Bishops’ Council, was a forthright condemnation of the government:
“We strongly condemn the government for hunting down and wrongfully portraying, a Christian religious who showed sincerity in his mission, strong will power in justice, and half a century of tireless labour to protect human dignity, as an anti-social and a person creating chaos…
If this is the way a republic government behaves towards a person fighting for human rights, then there would come forward many more Swamys to take part in the freedom march of the people.”  

The condolence message from Cardinal Charles Maung Bo SDB, the President of FABC – the Federation of the Asian Bishops’ Conferences goes like this:
With deep anguish and sorrow, we mourn the death of the martyr of the marginalized people, Fr. Stan  Swamy SJ. …  His mission will continue and will never succumb to evil.
India has a glorious history, as the cradle of many world religions, but she also nurses a wounded history. Even the great Mahatma Gandhi, the saint who lived for the poor, was arrested and incarcerated under sedition laws by British officials. The same Gandhi is the pivot of Indian history today. We take solace in the thought that Fr. Stan Swamy, too, followed Gandhi’s nonviolent path, with a great love for those in the margins. He is the latest saint of the modern India’s poor.
Fr. Stan Swamy redefined his priesthood, extending his altar to the streets and hills of those obnoxious corners of injustice, breaking the bread of good news of human dignity and justice especially among the indigenous (tribal-Adivasi) people. For too long, the innocent tribals trudged a merciless way of the Cross inflicted on them by corporate greed and unjust laws. His tireless struggle to liberate these marginalized communities brought him to the peak of Calvary, of incarceration, deprivation and ultimate death. He died as a true disciple of Christ.

Identifying Fr Stan as a prophet, and a true disciple of Christ, brings us to this Sunday’s liturgy. Last Sunday and this Sunday the Church has given us an opportunity to think of the prophets.
July 4, last Sunday, in all the Catholic Churches around the world the liturgical readings focussed on the plight of the prophets. Most of the prophets had to face the tough opposition from their own people, especially the rich and the powerful. Most of them were rejected and killed.
While those readings were being read in our churches, on Sunday, July 4, Stan Swamy was bearing witness to that message as he lay critically ill in a Mumbai hospital. The next day, July 5, Monday, around 1.20 in the afternoon, he breathed his last – a prophet rejected and killed by the powerful.

Most of the prophets were not interested in pleasing people, especially those in power, in order to promote themselves. A powerful example of a self-effacing prophet is Amos, whom we meet in the First Reading today (Amos 7:12-15).
The whole book of Amos is a record of all the visions of Amos… visions that were supposed to serve as warning to the people of Israel. Amos reels off all these warnings one by one to the people.
There is only one section in this book where another person – Amaziah, the priest of Bethel, speaks (Amos 7: 10-17). Our first reading is taken from this section. It is a conversation between Amaziah and Amos. This conversation brings out the stark contrast between a person who dedicates her/himself to the service of God, risking one’s own life, as against another person, who takes up the service of God as a means to enhance personal gains.

Amaziah and the other priests were leading a secure, prosperous life in Bethel since they were serving the king. Amos entered this scene and began speaking what God had told him to speak. His messages were a threat to the life of compromise the priests were leading. Hence, Amaziah told Amos to leave their territory. He also suggested that Amos could go to Judah and earn a living by prophesying there.
Amaziah’s words added fuel to the fire that was already burning within Amos. He claimed that he was ‘no prophet, nor a prophet’s son’. When Amos said this, he meant that he was not the type of prophet as defined by Amaziah, namely, a person who earned a living by prophesying. If earning a living was his aim, he could as well have been a herdsman, emphasised Amos! Talk of true and false prophets! It is needless to say, that we need more and more true prophets like Amos in today’s world.
Fr Stan was a descendent of Amos who lived not for his personal gains. He had lived most of his Jesuit life, never seeking the limelight. When the government of India thrust him into limelight, by arresting him, and denying the basic necessities, he was still thinking of his fellow prisoners who were languishing in the prison along with him.
While he was admitted in the hospital, his friends called him to assure him of their prayers. Fr Stan would accept their prayers graciously, but immediately add that they need to pray for thousands of prisoners, especially the Adivasi prisoners who are languishing in prisons, denied of all judicial procedures. A person who constantly carries the people in his/her heart is truly a prophet! Fr Stan was truly one of them! 

The Gospel reading today taken from Mark gives us an account of Jesus sending his disciples on a mission (Mark 6: 7-13). This passage gives us some lessons on discipleship or how to live like a prophet.
The first lesson comes from the verse: “Jesus gave them authority over unclean spirits.” (Mark 6:7) Jesus did not give his disciples authority over the people, but only authority over the evil forces that had imprisoned them. Jesus himself had not used his authority over the people, but only on the evil they were suffering from.
In contrast to this, what we find today is appalling. We know that those who profess to serve the people, use all their authority over them in order to crush them. On the other hand, these leaders serve all the evil forces which need to be crushed.
When these fake ‘servants of the people’ meet a true servant of the people, a true disciple of God, they want to get rid of him/her. The present ‘servants’ of India have gotten rid of Fr Stan, since he was a living challenge to their phony life of service!

The second and third lessons of Jesus come from his instructions to the disciples. The first instruction is that the disciples need a simpler life-style while they are on a mission. In our present-day context, we tend to plan every detail of our mission in such a way that we end up with more efficiency and less effectiveness. Jesus insisted that our mission began first with how we lived and then with what we said! The simple life-style also implied that the disciples shared the life of those whom they served. Any one who has lived with Fr Stan can easily vouch for his very simple life style, which was totally in tune with the life of the poor, tribal people he was serving.
The third and final lesson is a new insight we can derive from what Jesus said: “If any place will not receive you and they refuse to hear you, when you leave, shake off the dust that is on your feet for a testimony against them.” (Mark 6:11) ‘Shaking off the dust’ is usually interpreted as a warning against those who refused hospitality. We can also see this as a healthy psychological suggestion coming from Jesus. We can imagine Jesus telling his disciples: “When you leave a place that has not welcomed you, don’t carry hurt-feelings and unpleasant memories with you. Remove them from your mind and heart as you would shake off the dust from your feet.” Very often in life when we face unwelcome situations, we tend to carry those feelings and memories not as dust on our feet, but as dust in our eyes, hurting us constantly!
While most of us were furious with the prison authorities denying basic necessities to Fr Stan, suffering from Parkinson’s and other ailments, he was concentrating on the loving gestures of the fellow prisoners who were helping him with his food and bathing. Given his magnanimous heart, we can be sure that even now he is blessing all those prison authorities from heaven!

Let us close our reflection with an examen of consciousness. Of the many write-ups on Fr Stan Swamy that have appeared in the mainstream and the social media, the reflections of Mr Valson Thampu, former Principal of St. Stephen's College, Delhi, help us to make an examen of consciousness. Let these words help us not only to appreciate Fr Stan Swamy, a true prophet and a true disciple of Christ, but also examine ourselves and see where we stand…
Fr. Stan Swamy is no more. I feel awkward about mourning his death. Instead, I feel a strange sort of happiness. An eerie sort of relief, if you don't mind.
Who are we to mourn his death? We, who dare not utter a word, fearing for our skin?
Who are we to feel sorry for the loss of this noble soul, when our concerns rarely go beyond the stomach?
I feel sorry for those of us who are left behind. We may not be shut up in prisons. There is no need to. We are our own prisons.
So, we survive like scarecrows. But prisons too have their days; and then they will be no more. A new sun will arise, and mock its debris….
Sleep well, Fr. Stan. Your struggle is over. Ours remains; except that we are unequal to it. Our struggle now is only with ourselves; or, what is left of us.

Fr Stan Swamy
 
பொதுக்காலம் 15ம் ஞாயிறு
ஸ்டான் சுவாமி அவர்கள் செய்த குற்றம் என்ன என்பதை நிரூபிக்காமல், வழக்கு எதையும் நடத்தாமல், அவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது ஆன்மா உண்மையிலேயே அமைதி அடையுமா என்று தெரியவில்லை. அது அமைதி அடையும் என்று நம்புகிறேன். இவ்வேளையில் சொல்லக்கூடியது எல்லாம் இதுதான்: "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில், தாங்கள் செய்வது என்னெவென்று இவர்களுக்குத் தெரியவில்லை."
ஜூலை 5, கடந்த திங்களன்று இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி (ஸ்தனிஸ்லாஸ் லூர்துசுவாமி சே.ச.) அவர்கள், மும்பை திருக்குடும்ப மருத்துவமனையில் இறையடி சேர்ந்த அதே நாள், செய்தித்தாளில் வெளியான ஒரு கட்டுரையில், இவ்வரிகள் இடம்பெற்றிருந்தன. இதை எழுதியவர் ஒரு செய்தியாளர் அல்ல, மாறாக, இவ்வரிகளை எழுதியவர், இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, திருவாளர் மதன் லோகுர் (Madan Lokur) அவர்கள்.
இன்று, நடுவண் அரசையும், இந்தியாவையும் ஆட்டிப்படைக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீதும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் மீதும், அவர்களுக்கு கைகட்டி, வாய்ப்பொத்தி, அடிமைப்பணி புரியும் தேசிய புலனாய்வுத் துறை, மற்றும் நீதித்துறை ஆகியவை மீதும், முன்னாள் நீதிபதி லோகுர் அவர்கள், இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து உலகெங்கிலுமிருந்து கருத்துக்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, ஜூலை 5, கடந்த திங்களன்று, அவர் இறந்த செய்தி வெளியானதும், இந்த கருத்துக்கள் எரிமலையாக வெடித்துச் சிதறியவண்ணம் உள்ளன. ஸ்டான் அவர்கள் மரணமடையவில்லை, அவர் இந்திய நடுவண் அரசால், இந்திய நீதித்துறையால் கொல்லப்பட்டார் என்ற கருத்து மிக அதிகமாக ஓங்கி ஓங்கி ஒலித்தது, ஒருபுறம். மற்றொருபுறம், அவர், ஓர் இறைவாக்கினராக, நீதியின் சாட்சியாக, இயேசுவின் உண்மைச் சீடராக வாழ்ந்தார், இறந்தார் என்ற கண்ணோட்டத்தில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இதோ, இவ்விரு கண்ணோட்டங்களின் எடுத்துக்காட்டுகள்:

இந்தியத் தலத்திருஅவையின் சார்பில் வெளியான கருத்துக்களில், தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரான பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கை, தயக்கம் ஏதுமின்றி, இந்திய அரசின் மீது வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது. 'தந்தை ஸ்டான் சுவாமி அவர்களின் பணி வாழ்வை தொடர்ந்து முன்னெடுப்போம்' என்ற தலைப்பில், பேராயர் பாப்புசாமி அவர்கள், இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கிறித்தவத் துறவியொருவர் தன் பணிவாழ்வில் காட்டிய நேர்மையை, நீதியின்பால் காட்டிய உறுதியை, மானுட மாண்பைக் காக்கின்றவகையில் அரை நூற்றாண்டு உழைத்த ஒரு துறவியை, சமூக விரோதியாக, கலகக்காரராகச் சித்தரித்து, நாளும் துரத்திவந்த அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று, பேராயர் பாப்புசாமி அவர்கள், இவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
சனநாயக நாட்டில் மனித உரிமைகளைக் காக்க வாழ்ந்த ஒருவருக்கு சனநாயக அரசு இப்படித்தான் நடந்துகொள்ளுமானால், ஸ்டான் சுவாமியைப் பின்பற்றி, இனி எத்தனையோ சுவாமிகள் தோன்றி, மக்கள் விடுதலைப் பயணத்தில் பங்கேற்பர் என்பது உறுதி, என்ற உறுதிமொழியுடன், தமிழக ஆயர் பேரவையின் சார்பாக, பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை நிறைவடைகிறது.

அருள்பணியாளர் ஸ்டான் அவர்களின் அடக்கத் திருப்பலி, மும்பையில் நடைபெற்ற நாளான ஜூலை 6ம் தேதி, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், அநீதிகள் பெருகியிருக்கும் தெருக்களிலும், மலை முகடுகளிலும், தன் பலிபீடத்தை நிறுவி, அருள்பணித்துவத்திற்கு ஒரு புதிய இலக்கணத்தை வகுத்தார் என்றும், பழங்குடியினரிடையே, மனிதமாண்பு, மற்றும், நீதி, ஆகிய நற்செய்தியை பகிர்ந்துகொண்டார் என்றும் கூறினார்.
பன்னாட்டு வர்த்தகப் பேராசையினால் ஒவ்வொரு நாளும் சிலுவையில் அறையப்பட்ட அப்பாவி பழங்குடியினரிடையே உழைத்துவந்த அருள்பணி ஸ்டான் அவர்கள், இறுதியில் தானே சிலுவையில் அறையப்பட்டு, கிறிஸ்துவின் உண்மையான சீடராக உயிர்துறந்தார் என்றும், காந்தியடிகளின் வன்முறையற்ற அகிம்சை வழியைப் பின்பற்றிய அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இந்தியாவின் வறியோர் நடுவே வாழ்ந்த இன்றைய புனிதர் என்றும் கர்தினால் போ அவர்கள், தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

அருள்பணி ஸ்டான் அவர்களின் மரணத்தையொட்டி எழுப்பப்பட்டுவரும் கண்டனக் குரல்கள், மற்றும் ஆன்மீகக் கண்ணோட்டம் என்ற இருவகையான பதிலிறுப்புக்களில், இந்த ஞாயிறன்று, நாம், அருள்பணி ஸ்டான் அவர்களின் வாழ்வையும், மரணத்தையும், இறைவாக்கினர் ஒருவரின் வாழ்வோடும், மரணத்தோடும் ஒப்பிட்டு சிந்திக்க முயல்வோம்.

சென்ற ஞாயிறும், இந்த ஞாயிறும் இறைவாக்கினர்களை மையப்படுத்திய வாசகங்கள் நம் வழிபாட்டில் இடம்பெற்றுள்ளன. ஓர் இறைவாக்கினர் எவ்வாறு தன் சொந்த ஊரிலேயே துன்பங்களை எதிர்கொள்கிறார் என்பதை, ஜூலை 4, சென்ற ஞாயிறு வழிபாட்டில் நாம் சிந்தித்த வேளையில், மும்பை மருத்துவமனையில், அருள்பணி ஸ்டான் அவர்கள், மரணத்தின் நுழைவாயிலை நெருங்கிக்கொண்டிருந்தார். அதற்கடுத்த நாள், ஜூலை 5, திங்களன்று, இந்திய நேரம், பிற்பகல் 1.20 மணியளவில், அவர் தன் உயிரை இறைவனின் கரங்களில் ஒப்படைத்தார். சக்தியும், செல்வமும், சுயநலமும் மிகுந்தவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஓர் இறைவாக்கினராக, அதேவேளையில் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதியாக அவர், இவ்வுலகிலிருந்து விடுதலை பெற்றார்.

இறைவாக்கினர்கள் அனைவருமே, தங்களை முன்னிறுத்தாமல், இறைவனையும், அவர் தங்களுக்கு வழங்கிய செய்தியையும், முன்னிறுத்தி உழைத்தவர்கள். தங்களையே மறைத்து, அழித்து, இறைவனை மட்டுமே வெளிப்படுத்திய இறைவாக்கினர்களில் ஒருவரான ஆமோஸ், இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு அறிமுகமாகிறார்.
விவிலியத்தில் நாம் சந்திக்கும் அத்தனை இறைவாக்கினர்களும் தீப்பிழம்புகள். இவர்களில், இறைவாக்கினர் ஆமோஸ், மிக உக்கிரமாக எரிந்த ஒரு தீப்பிழம்பு. அவரது நூலில் நாம் கேட்பதெல்லாம், இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் விடுத்த எச்சரிக்கைகள்.
இறைவாக்கினர் ஆமோஸ் நூலில் 9 பிரிவுகள் உள்ளன. 146 இறைவாக்கியங்கள் உள்ளன. இவற்றில் 5 இறைவாக்கியங்களே ஒரு நிகழ்வாகத் தரப்பட்டுள்ளன. இறைவாக்கினர் ஆமோசுக்கும், தலைமைக் குருவான அமட்சியாவுக்கும் இடையே நிகழும் உரையாடல் அது. இந்த உரையாடல் இன்றைய முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது. ஏனைய 141 இறைவாக்கியங்கள், ஆமோஸ் வழியாக, இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் விடுத்த எச்சரிக்கைகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஆமோஸ் கூறிவந்த கசப்பான உண்மைகளைக் கேட்க மறுத்த தலைமைக்குரு அமட்சியா, பெத்தேல் பகுதியைவிட்டு ஆமோசை ஓடிப்போகச் சொல்கிறார். "அரசனின் இடமான பெத்தேலில் இறைவாக்கு உரைக்காதே, வேண்டுமெனில் யூதேயா நாட்டுக்கு ஓடிப்போய், அங்கு இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்" என்று அமட்சியா அறிவுரைத் தருகிறார்.
அமட்சியா சொல்வதை ஆழ்ந்து சிந்தித்தால், அவர், இறைவாக்கினர் என்ற வேடமணிந்த ஓர் அரசியல்வாதி என்பதைப் புரிந்துகொள்ளலாம்: "ஆமோஸ், பெத்தேலில் நாங்கள் அரசனைப் புகழ்ந்து பாடி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறோம். அரசனுக்கும், மக்களுக்கும், நீ கூறும் எச்சரிக்கைகள், எங்கள் பிழைப்பைக் கெடுத்துவிடும். எனவே, எங்கள் பிழைப்பைக் கெடுக்காமல், நீ யூதேயாவுக்குப் போய், அங்கே இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்" என்பதே, ஆமோசுக்கு, அமட்சியா கூறும் அறிவுரை. ஓர் இறைவாக்கினர் எவ்வாறெல்லாம் வாழக்கூடாது என்பதை, அமட்சியாவின் சொற்களில் நாம் கற்றுக்கொள்ளலாம்.

அமட்சியாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஆமோஸ் என்ற தீப்பிழம்பு, இன்னும் அதிகமாகக் கொழுந்துவிட்டு எரிகிறது. "இறைவாக்கு உரைப்பது ஒரு பிழைப்புக்கென்றால், நான் இறைவாக்கினன் அல்ல. அரசனுக்குத் துதிபாடும் இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் அல்ல" என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். "நான் பிழைப்பு தேடிக்கொள்ள வேண்டுமெனில், ஆடு, மாடு மேய்த்து வாழமுடியும்" என்று சுட்டிக்காட்டுகிறார், ஆமோஸ்.
பிழைப்புக்காக இறைவாக்கு உரைப்பது, மந்திரம் சொல்வது, பலிகள் ஆற்றுவது, போதிப்பது என்று வாழ்ந்த போலி இறைவாக்கினர்கள் மத்தியில், ஆமோஸ் போன்ற உண்மை இறைவாக்கினர்கள் அன்று வாழ்ந்தனர், இன்றும் வாழ்கின்றனர். பிழைப்பைத் தேடிக்கொள்வது வேறு; வாழ்வை, குறிப்பாக, நிலைவாழ்வைத் தேடிக்கண்டடைவது வேறு, என்பதைத் தெளிவுபடுத்தி, அந்த வாழ்வுப்பாதையைப் பிறருக்குக் காட்டிவரும் அருள்பணி ஸ்டான் போன்ற இறைவாக்கினர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இயேசு தன் சீடர்களை அருள்பணிக்கு அனுப்பிவைக்கும் இன்றைய நற்செய்திப் பகுதியும் ஒரு சில முக்கியமான பாடங்களைச் சொல்லித்தருகிறது.
முதல் பாடம்... இயேசு தன் சீடர்களை அனுப்பிய வேளையில், அவர்களுக்கு அதிகாரம் அளித்தார் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். எவ்வகை அதிகாரம்? இயேசுவின் சீடர்கள், மக்களுக்குப் பணிபுரியச் செல்கின்றனர். அம்மக்கள் மீது அதிகாரம் செலுத்த இயேசு அவர்களை அனுப்பவில்லை. மாறாக, அம்மக்கள் மத்தியில் வளர்ந்திருந்த தீய சக்திகள் மீது அதிகாரம் அளித்தார். மக்களுக்காகப் பணிபுரிந்த இயேசு, அவர்களை, தீய சக்திகளிலிருந்து விடுதலை செய்யவே, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினார். அதே பாடத்தை, தன் சீடர்களுக்கும் இயேசு சொல்லித்தந்தார். அதே சக்தியை, அவர்களுக்கும் வழங்கினார்.
மக்களுக்குப் பணியாற்றுவதாக மேடைகளில் முழங்கி, வாக்குகளைப் பெற்று, ஆட்சியில் அமரும் அரசியல்வாதிகள், மக்களை வதைக்கும் தீய சக்திகளுடன் கரம்கோர்த்து, மக்களை நசுக்குவது, உலகெங்கும் நிகழ்கிறது. இத்தகைய போலியான மக்கள் பணியாளர்கள், அருள்பணி ஸ்டான் போன்ற உண்மையான மக்கள் பணியாளர்களைச் சந்திக்கும் வேளையில், தங்கள் வேடம் கலைந்துவிடும் என்ற அச்சத்தில், உண்மைப் பணியாளர்களை இவ்வுலகினின்றே அகற்றிவிடுவதை நாம் மீண்டும், மீண்டும் கண்டுவருகிறோம்.

பணியாளர், வார்த்தைகளால் மட்டும் போதிப்பது பயனளிக்காது, அவரது வாழ்வாலும் போதிக்கவேண்டும் என்பது, இயேசு சொல்லித்தரும் இரண்டாவது பாடம். பணியாளரின் வாழ்வு, மிக எளிமையான வாழ்வாக இருக்கவேண்டும் என்பதை, பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” (மாற்கு 6: 8-9) என்ற இயேசுவின் வார்த்தைகள் தெளிவாக்குகின்றன. வாழ்க்கைப் பயணம் எளிமையாய் அமைந்தால், தேவையில்லாத சுமைகளை உள்ளத்தில் தாங்கி, பயணம் முழுவதும் பாடுபடவேண்டாம் என்று இயேசு சொல்வது எல்லாருக்கும் பொதுவான ஒரு நல்ல பாடம்.
அருள்பணி ஸ்டான் அவர்கள் வாழ்ந்த மிக எளிமையான வாழ்வுக்கு பல நூறுபேர் சாட்சிகள். தன் பணியின் இலக்குமக்களென அவர் தெரிவுசெய்த பழங்குடியினர், மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆகியோரின் வாழ்வு முறை, அவரது வாழ்வு முறையாக மாறியது.

"உங்களை வரவேற்பவருடன் தங்கி இருங்கள், வரவேற்க மறுப்பவர்களிடமிருந்து விரைவில் விலகிச்செல்லுங்கள்" என்பது, இயேசு நமக்குச் சொல்லித்தரும் மூன்றாவது பாடம். வரவேற்பு இல்லாத இடங்களிலிருந்து செல்லும்போது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்” என்பதை இயேசு குறிப்பிட்டுச் சொல்கிறார்.
கால் தூசியை உதறிவிடுவதை, நாம் வழக்கமாக, ஒரு கோபச்செயலாக, நம்மை வரவேற்காதவர்களுக்குத் தரும் எச்சரிக்கையாகவே சிந்தித்துள்ளோம். இச்சொற்களை மற்றொரு கோணத்திலும் சிந்திக்கலாம். பணிசெய்ய செல்லுமிடத்தில், சரியான வரவேற்பு இல்லையென்றால், அந்த கசப்பான எண்ணங்களைச் சுமந்துகொண்டு, அடுத்த இடம் செல்லவேண்டாம். அந்த கசப்பை அங்கேயே விட்டுவிடுங்கள். காலில் படிந்த தூசியைத் தட்டுவதுபோல், உங்கள் உள்ளத்திலிருந்து கசப்பான எண்ணங்களை தட்டிவிட்டுப் புறப்படுங்கள் என்று இயேசு தன் சீடர்களுக்குச் சொல்வதாக நாம் எண்ணிப்பார்க்கலாம்.
நம் உறவுகள், அல்லது, நண்பர்கள் நடுவே சரியான வரவேற்பு நமக்குக் கிடைக்கவில்லையென்ற கசப்பான எண்ணங்களை நம்மில் எத்தனை பேர் சுமந்து வருந்துகிறோம். பல வேளைகளில், இந்தக் கசப்புணர்வுகள், காலில் படிந்த தூசியாக இல்லாமல், கண்களில் விழுந்த தூசியாக உறுத்திக்கொண்டே இருக்கும். எந்த ஒரு கசப்பான நினைவையும், எண்ணத்தையும் கால் தூசியெனக் கருதி உதறிவிடுவதும், கண் தூசியாக சுமந்து வருந்துவதும் நமக்குத் தரப்பட்டுள்ள சுதந்திரம்.

இத்தகையச் சுதந்திரத்தை தகுந்தமுறையில் பயன்படுத்தியவர், அருள்பணி ஸ்டான் என்பது நிச்சயம். பார்க்கின்சன்ஸ் என்ற நரம்புத்தளர்ச்சி நோயாலும், முதிர்ந்த வயதுக்கே உரிய உடல்நலக் குறைவுகளாலும் துன்புற்ற ஸ்டான் அவர்களுக்கு, சிறை அதிகாரிகள், அடிப்படை தேவைகளையும் மறுத்தனர் என்பதைக் கேள்விப்பட்ட நாம், ஆத்திரம் அடைந்தோம். ஆனால், அவரோ, தனக்குக் கிடைக்காதவற்றை கால் தூசியாகத் தட்டிவிட்டுவிட்டு, தனக்கு உதவிகள் செய்த உடன் சிறைக்கைதிகளைப் பற்றியே பேசிவந்தார் என்பது, அவர் பெற்றிருந்த உள்மனச் சுதந்திரத்தை உலகறியச் செய்தது.

இறைவாக்கினர்களாய், இறைவனின் பணியாளராய் வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவருமே கற்றுக் கொள்ளக்கூடியப் பாடங்களை, இன்றைய வாசகங்கள் வழியே, அருள்பணி ஸ்டான் சுவாமி போன்ற இறைவாக்கினர்கள் வழியே, நமக்குச் சொல்லித்தந்த இறைவனுக்கு, நன்றி பகர்வோம்.

நம் சிந்தனைகளை நிறைவு செய்வதற்குமுன், ஓர் ஆன்மீகத் தேடலுக்கு நம்மையே உட்படுத்துவோம். அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களைக் குறித்து ஜூலை 5ம் தேதி திங்கள் முதல் வெளியாகிவரும் பல்வேறு பதிவுகளில், புதுடில்லி புனித ஸ்தேவான் கல்லூரியின் முன்னாள் முதல்வர், அருள்திரு வால்சன் தம்பு (Valson Thampu) அவர்களின் சிந்தனைகள், ஓர் ஆன்ம ஆய்வு செய்ய நம்மை அழைக்கிறது.
"தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள் இனி இல்லை. அவரது மரணத்திற்காக துக்கம் கொள்வது எனக்கு சங்கடத்தைத் தருகிறது. அதற்குப்பதில், எனக்குள் ஒரு புதிரான மகிழ்வு உண்டாகிறது. இதை, ஒருவகையான நிம்மதி என்றும் சொல்லலாம்.
நம் உயிரைக் காத்துக்கொள்ளும் அச்சத்தால், ஒரு வார்த்தையும் சொல்ல துணிவில்லாதபோது, அவருடைய மரணத்திற்காக துக்கம் கொள்ள நாம் யார்?
நம்முடைய கவலைகளெல்லாம் நம் வயிற்றைத் தாண்டிச்செல்ல தயங்கும்போது, இந்த உன்னத ஆன்மாவின் மரணத்திற்காக வருத்தமடைய நாம் யார்?
அவர் விட்டுச் சென்ற நம் அனைவருக்காகவும் நான் வருத்தமடைகிறேன். நாம் சிறைகளில் அடைக்கப்படப்போவதில்லை. அது தேவையும் இல்லை. நாமே நமது சிறைகளாயிற்றே.
தந்தை ஸ்டான் அவர்களே, நன்றாக துயில் கொள்ளுங்கள். உங்கள் போராட்டம் முடிவுற்றது. எங்களுடையது, இன்னும் தொடர்கிறது. எங்கள் போராட்டம் உங்கள் போராட்டத்திற்கு இணையல்ல. ஏனெனில், எங்கள் போராட்டம், எங்களைச்சுற்றியே அமைந்துள்ளது."

06 July, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல்கள் 14,53 – இறைப்பற்று இல்லார் 2

The fool has said…

கடவுள் மறுப்பு, கடவுள் நம்பிக்கை என்ற கருத்துக்களை மையப்படுத்திய நூல்கள், பல ஆண்டுகளாக, நம் மத்தியில் வலம்வருவதை அறிவோம் என்றும், அவற்றில், கடந்த 20 ஆண்டுகளில் வெளிவந்த சில நூல்கள், 14 மற்றும் 53 ஆகிய திருப்பாடல்களில்  நாம் மேற்கொண்டுள்ள தேடலுக்கு உதவியாக இருக்கும் என்றும், சென்ற விவிலியத்தேடலில் குறிப்பிட்டோம். இந்நூல்களில், "I Don't Have Enough Faith to Be an Atheist", அதாவது, "ஒரு கடவுள் மறுப்பாளராக இருக்கத் தேவையான அளவு நம்பிக்கை என்னிடம் இல்லை" என்ற தலைப்பில், Norman Geisler, Frank Turek என்ற இரு எழுத்தாளர்கள், 2004ம் ஆண்டு வெளியிட்ட நூலின் முதல் பிரிவில் கூறப்பட்டிருந்த ஒரு சில கருத்துக்களை, சென்ற தேடலில் சிந்தித்தோம். கடவுள் மறுப்பு, கடவுள் நம்பிக்கை என்ற கருத்துக்களை இணைத்து, 2011ம் ஆண்டு வெளியான மற்றொரு நூல், இன்றைய விவிலியத்தேடலுக்கு உதவியாக உள்ளது.

'கடவுள் இறந்துவிட்டாரா?' என்ற கேள்வியுடன் வெளியான Time வார இதழைப்பற்றி சென்ற வாரம் சிந்தித்தோம். அந்த சிந்தனையில், Time இதழ் வெளியான 1966ம் ஆண்டுக்குப்பின் பிறந்த தலைமுறையினரிடம், 'கடவுள் இறந்துவிட்டாரா' என்ற கேள்வியைக் கேட்டால், 'கடவுளா, அது யார்?' என்ற பதில்கேள்வி கேட்கக்கூடிய அளவுக்கு, கடவுளைப்பற்றி அக்கறையற்றிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டோம். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பீட்டர் ஹிட்சென்ஸ் (Peter Hitchens) என்பவர், 2011ம் ஆண்டு, "The Rage Against God: How Atheism Led Me to Faith", அதாவது, "கடவுளுக்கு எதிரான ஆத்திரம்: எவ்விதம் கடவுள் மறுப்புக் கொள்கை, என்னை, மத நம்பிக்கைக்கு அழைத்துச் சென்றது" என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். இந்நூலின் முதல் பிரிவை, "The Generation Who Were Too Clever to Believe", அதாவது, "நம்பிக்கை கொள்வதற்கு இயலாத அளவு மிக அறிவாளியான தலைமுறை" என்ற தலைப்பில் ஹிட்சென்ஸ் அவர்கள் தன் கருத்துக்களைக் கூறியுள்ளார்.

அறிவுக்குறைவானவர்களே மத நம்பிக்கை கொண்டிருக்கமுடியும் என்றும், அந்நிலையைத் தாண்டி, தாங்கள் அறிவில் வளர்ந்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருக்கும் தலைமுறையே, தன் தலைமுறை என்றும் ஹிட்சென்ஸ் அவர்கள் முதல் பிரிவில் பேசுகிறார். அப்பிரிவை,  தன் வாழ்வில் நிகழ்ந்த ஓர் அனுபவத்தோடு துவக்குகிறார். அவர் தன் 15வது வயதில், கேம்பிரிட்ஜ் (Cambridge) பள்ளியை முடித்துவிட்டு வெளியேறிய வேளையில், தான் அறிவில் அதிகம் வளர்ந்தவர் என்பதையும், தனக்கு மத நம்பிக்கை தேவையில்லை என்பதையும், நண்பர்கள் நடுவே உணர்த்த விரும்பினார். எனவே, பள்ளி இறுதிநாளில், தன் நண்பர்கள் குழுவுக்கு முன், தான் பள்ளிக்கு வந்தபோது, தன் குடும்பத்தினர் தனக்கு வழங்கியிருந்த விவிலியத்தை, தீயிட்டுக் கொளுத்திய நிகழ்வை இவ்வாறு விவரிக்கிறார்:

"அன்று பிற்பகலில் என் விவிலியத்தை தீயிட்டுக் கொளுத்தினேன். அப்போது எனக்கு 15 வயது. நான் பற்றவைத்ததும், விவிலியம், சட்டென தீப்பிடித்து, ஒளிமயமாய் எரிந்து, சாம்பலாகும் என்று நான் எதிர்பார்த்தேன். அவ்வாறு நடக்கவில்லை. மாறாக, அந்த விவிலியம், மெதுவாக எரிந்தது. எவ்வளவோ பலமாக ஊதியும், நான் பற்றவைத்த நெருப்பு, கொழுந்துவிட்டு எரியவில்லை. என்னைச் சுற்றிநின்ற நண்பர்கள், பொறுமை இழந்து, ஒவ்வொருவராகச் கலைந்துசென்றனர். அவர்கள் அவ்வாறு கலைந்துசென்றது, நான் செய்த விடயம் எவ்வளவு சின்னத்தனமான முயற்சி என்பதை, சொல்லாமல் சொன்னது. இறுதியில், அந்த இடத்தில், நான் இருந்தேன். எனக்குமுன், பாதி எரிந்து கருகிப்போயிருந்த விவிலியம் இருந்தது" என்று பீட்டர் ஹிட்சென்ஸ் அவர்கள், முதல் பிரிவின் துவக்கத்தில் கூறியுள்ளார்.

அறிவில் வளர்ந்துவிட்டதாக எண்ணும் பலர், 'கடவுள் இல்லை' என்றும், மத நம்பிக்கை, அறிவில் குறைந்தவர்களுக்கே தேவை என்றும் கூறுவது, தான் மேற்கொண்ட விவிலிய எரிப்பு முயற்சியைப் போன்று அரைகுறையானது, என்று கூறும் ஹிட்சென்ஸ் அவர்கள், இந்த பரிதாப நிலையிலிருந்து தான் எவ்வாறு மீண்டும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு திரும்பினார் என்பதை, தன் நூலில் விளக்கிக் கூறியுள்ளார்.

கடவுள் மறுப்பு நிலையிலிருந்து, மத நம்பிக்கைக்கு, அதுவும் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு திரும்பிவர தனக்குக் கிடைத்த வாய்ப்பு, இங்கிலாந்தில் பல இளையோருக்குக் கிடைப்பதில்லை என்பதை, ஹிட்சென்ஸ் அவர்கள், இந்நூலில், வருத்தத்துடன், ஏக்கத்துடன், குறிப்பிடுகிறார். அத்தகைய வருத்தமும், ஏக்கமும், 14ம் திருப்பாடலின் முதல் வரிகளில் ஒலிப்பதை நாம் உணரலாம். “கடவுள் இல்லை” என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். நல்லது செய்வோர் எவருமே இல்லை. (திபா 14:1) என்று 14ம் திருப்பாடல் ஆரம்பமாகிறது.
இதே எண்ணம், ஒரு சில வார்த்தை மாற்றங்களுடன் 53ம் திருப்பாடலின் முதல் வரிகளிலும் ஒலிக்கிறது. “கடவுள் இல்லை” என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; அவர்களுள் சிலர் கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்; நல்லது செய்வார் யாரும் இல்லை. (திபா 53:1)

ஏறத்தாழ ஒத்த கருத்துக்களையும், ஒரே விதமான சொற்களையும் கொண்டுள்ள 14 மற்றும் 53ம் திருப்பாடல்களில், ஒரு சில வேற்றுமைகளை நாம் காணலாம். 14ம் திருப்பாடல், 7 இறைவாக்கியங்களையும், 53ம் திருப்பாடல், 6 இறைவாக்கியங்களையும் கொண்டுள்ளன. இத்திருப்பாடல்களின் முதல் நான்கு இறைவாக்கியங்களில் கூறப்பட்டுள்ள சொற்கள், ஒரு சில இடங்களில் மட்டுமே வேறுபடுகின்றன. நான்காம் இறைவாக்கியத்தைத் தொடர்ந்து, 14ம் திருப்பாடலில் 5 மற்றும் 6 ஆகிய இரு இறைவாக்கியங்களில் கூறப்பட்டுள்ள சொற்களும், கருத்துக்களும், 53ம் திருப்பாடலில் இடம்பெறும் 5ம் இறைவாக்கியத்தில் கூறப்பட்டுள்ள சொற்கள் மற்றும் எண்ணங்களிலிருந்து வேறுபட்டுள்ளன.

இவ்விரு திருப்பாடல்களில், 'கடவுள் இல்லை' என்று சொல்லும் அறிவிலிகளின் சிந்தனைகள், மற்றும், செயல்கள் ஒரு புறமும், அனைத்தையும் அறிந்த இறைவன் விண்ணிலிருந்து பார்க்கிறார் என்று மறுபுறமும், கூறப்பட்டுள்ளன. இடையிடையே, தாவீதின் உள்ளத்திலிருந்து எழும் கேள்விகளும், கவலைகளும் இப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இறுதியில், இஸ்ரயேல் மக்களுக்கு இறைவனின் ஆசீரும், மீட்பும் கிடைக்கட்டும் என்ற வேண்டுதலுடன் இவ்விரு திருப்பாடல்களும் நிறைவடைகின்றன.
சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! ஆண்டவர் (கடவுள்) தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக! (திபா 14:7, 53:6)

கடவுள் இல்லை என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொள்வோரை, தாவீது, 14 மற்றும் 53ம் திருப்பாடல்களின் ஆரம்பத்தில், 'அறிவிலிகள்' என்று அடையாளப்படுத்துகிறார். விவிலியத்தில் 'அறிவிலிகள்' என்ற சொல் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்வது, பயனுள்ள ஒரு முயற்சியாக நமக்கு அமையும்.
'அறிவிலிகள்' என்ற சொல், விவிலியத்தில் 110 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில், இச்சொல், புதிய ஏற்பாட்டில், 12 முறையும், பழைய ஏற்பாட்டில் 98 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, பழைய ஏற்பாட்டின் 'நீதிமொழிகள்' நூலில் மட்டும், இச்சொல் 71 முறை இடம்பெற்றுள்ளது.

நீதிமொழிகள் நூலின் 10ம் பிரிவில், ஞானமுள்ள பிள்ளைகளுக்கும், அறிவற்ற மக்களுக்கும் உள்ள வேறுபாடுகள் வெளிச்சமிட்டு காட்டப்பட்டுள்ளன.
ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர்; அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரமளிப்பர்.
ஞானமுள்ளோர் அறிவுரைகளை மனமார ஏற்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.
ஞானமுள்ளோர் அறிவைத் தம்மகத்தே வைத்திருப்பர்; மூடர் வாய் திறந்தால் அழிவு அடுத்து வரும்.
தீங்கிழைப்பது மதிகெட்டோர்க்கு மகிழ்ச்சிதரும் விளையாட்டு; ஞானமே மெய்யறிவு உள்ளோர்க்கு மகிழ்ச்சி தரும். (நீதிமொழிகள் 10:1,8,14,23)

புதிய  ஏற்பாட்டில், இறைவனின் வார்த்தைகளைக் கேட்டு செயல்படாதவர்களை, இயேசு 'அறிவிலிகள்' என்று கூறியுள்ளார் (மத்தேயு 7:26). லூக்கா நற்செய்தியில் இயேசு கூறும் 'அறிவற்ற செல்வன் உவமையில், அச்செல்வனை, அறிவிலியே என்று கடவுள் அழைப்பது, ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கிறது: (லூக்கா 12:20)
இவ்வுலகம் 'ஞானம்' என்று கருதுவது, இறைவனுக்குமுன் 'மடமை'யாகக் கருதப்படுவதைச் சுட்டிக்காட்டி, திருத்தூதர் பவுல், கொரிந்து நகர மக்களுக்கு, பின்வரும் அறிவுரையைப் பதிவு செய்துள்ளார்: இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக் கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். இவ்வுலக ஞானம் கடவுள்முன் மடமையாய் உள்ளது. (1 கொரி. 3:18-19)

இவ்வுலகின் ஞானத்தால் நிறைந்திருப்பவர்கள், 'கடவுள் இல்லை' என்று சொல்லும்போது, அவர்களை, தாவீது, 'அறிவிலிகள்' என்றழைப்பதில் வியப்பேதும் இல்லை. தாங்கள் பெற்றுள்ள அறிவுத்திறனை கடவுளுக்கும் மேலாக பெரிதென எண்ணி, தடம்புரண்டு, வழிதவறிச் செல்வோரின் இழிநிலையை, அவர்கள் சீர்கெட்டு அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்.... தீங்கிழைக்கும் யாவரும் அறிவை இழந்துவிட்டார்களோ? உணவை விழுங்குவதுபோல் என் மக்களை விழுங்கப்பார்க்கிறார்களே! (திபா 14:1, 53:4) என்று 14, மற்றும் 53 ஆகிய இரு திருப்பாடல்கள் விவரிக்கின்றன.

இறைப்பற்று இல்லார் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் 14, மற்றும் 53 ஆகிய இவ்விரு திருப்பாடல்களில் நாம் மேற்கொண்ட தேடலை, வேதனை நிறைந்த ஒரு செய்தியுடன் இன்று நிறைவு செய்வோம்.
கடவுள் இல்லை, அல்லது, தாங்களே கடவுள் என்ற அகந்தையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும், மக்களின் நலனுக்காகப் போராடிவரும் நீதிமான்கள் பலரை, சிறையிலடைத்து, கொடுமைப்படுத்தி வருவதை நாம் அறிவோம். இவர்களது சித்ரவதைகளுக்கு உள்ளானவர்களில் ஒருவரான, இயேசுசபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஜூலை 5, இத்திங்களன்று இறையடி சேர்ந்தார்.
தங்களை கடவுளாக எண்ணிபிருக்கும் இவ்விரு இந்தியத் தலைவர்களையும், அவர்களுக்கு சாமரம் வீசும் இந்தியப் புலனாய்வுத் துறை போன்ற கூலிப்படைகளையும், கடவுள் விண்ணகத்தினின்று உற்றுநோக்குகின்றார் (திபா 53:1) என்பதை நம்புகிறோம். இத்தலைவர்கள், தங்கள் தவறுகளை உணர்ந்து, உண்மையை ஏற்றுக்கொண்டு, தங்கள் மனசாட்சிக்கு செவிமடுத்து வாழ, இறைவன், அவர்களுக்கு உள்ளொளி வழங்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், 14 மற்றும் 53ம் திருப்பாடல்களில் நாம் மேற்கொண்ட தேடலை நிறைவு செய்வோம்.

02 July, 2021

Prophet, rejected at home புறக்கணிக்கப்பட்ட இறைவாக்கினர்

  
Prophet not accepted

14th Sunday in Ordinary Time

Three years ago, some of my friends had sent me via WhatsApp, a strange picture with a stranger caption. The picture showed a snake displaying its seven-headed hood on a roadside. The caption below the picture said that that snake was found in Honduras and a seven-headed snake was a sure sign that the end of the world was imminent.
On closer look, I could easily find out that the picture was not taken in Honduras, but in India. I made further ‘investigation’ into this picture and found out that this was the ‘cut-and-paste’ work of a person who knew a bit of ‘photo-shop’. What was more disturbing was the fact that that picture had been doing ‘repeated rounds’ in the web for the past eight years with many other captions. In 2018, the caption was ‘the imminent end of the world’. I won’t be surprised if this picture and ‘end-of-the-world’ message are still doing the rounds in WhatsApp, especially during the COVID-19 pandemic!

With our high-tech communication gadgets and applications, we are flooded with pictures, videos and texts every day. This flood, I am afraid, sweeps us off our feet and we add to this flood without a second thought. When we receive a message, we are keener on sharing it with others immediately rather than take time to verify its veracity, source etc. Thus, we seem to spread enough fake news.

A recent article (June 8, 2021) written by Katharina Buchholz (https://www.statista.com) has addressed the question of how fake news got spread in India during the pandemic. The title of the article was: COVID & WhatsApp Cause Surge of Fake News in India. Here are a few extracts from this article:
With a new wave of COVID-19, a new surge of fake news also washed over India. A scientific study carried out by doctors from Rochester, New York, and Pune, India, and published in the peer-reviewed Journal of Medical Internet Research gives some insights into the behavior of Indian internet users during the pandemic on one of the prime sources of COVID-19 misinformation in the country, WhatsApp.
The survey found that around 30 percent of Indians used WhatsApp for COVID-19 information, and just about as many fact-checked less than 50 percent of messages before forwarding them… The survey also looked at age groups and found that those over the age of 65 were more likely to receive misinformation and were also more likely to believe and act on it, while this was least likely for those under the age of 25…
Three quarters of Indians found that an attached link or mention of a source made a message more trustworthy – even though this does not necessarily make a claim legitimate. Only a third of Indians said that they trusted messages from a known sender more than from an unknown one.

Not paying attention to truth, forming very quick and emotional judgements based on prejudices, are human tendencies that are called into question in our liturgical readings today. This Sunday’s readings (Ezekiel and Mark) also bring into focus a common human experience based on our prejudice – namely, exclusion and rejection.

Rejection is one of the most poignant of all human experiences. In the first reading from Ezekiel (Ez. 2:2-5), God seems to complain about being rejected by the ‘hard faced, obstinate hearted’ Israel (Ez. 2:4). The Gospel of Mark (Mark 6:1-6) tells us about how Jesus felt excluded and rejected in ‘his own country’.
The event of Jesus returning to his hometown is described in all the three synoptic gospels. This ‘home-coming’ began well with Jesus teaching in the synagogue. The initial reaction of the people was one of wonder and astonishment.
Many who heard him were astonished, saying, “Where did this man get all this? What is the wisdom given to him? What mighty works are wrought by his hands! (Mk. 6:2)
But, this lofty admiration did not last long. It soon turned into hostile feelings. What brought about this change? Prejudice!
“Is not this the carpenter, the son of Mary and brother of James and Joses and Judas and Simon, and are not his sisters here with us?” And they took offense at him. (Mk. 6:3)

When Jesus began to speak, people focused on ‘what’ he was saying and hence they were amazed. But, soon thoughts of ‘who’ was speaking surfaced and the mood changed. This ‘who’ was the all too familiar ‘Jesus, the carpenter, the son of Mary, the brother of….’ Talk of ‘familiarity breeding contempt’! Familiarity breeds prejudice too! Even Jesus was not spared of this prejudiced ‘don’t-we-know-this-guy’ attitude!

It was the turn of Jesus to be amazed at their closed-circuited (short-circuited) vision. He then speaks those famous lines which have been used in-context and out-of-context: "A prophet is not without honour, except in his own country, and among his own kin, and in his own house." (Mk. 6:4)
What struck me most in these words of Jesus was how he described his identity as a prophet. While the people had given him the labels – ‘the carpenter’ and ‘the son of Mary’ etc., he tried to identify himself as a prophet.

To be a prophet is not easy. The most challenging aspect of a prophet’s life is to follow the promptings of God, come, what may! This special call usually landed all the prophets in difficulties. They were excluded and rejected. Still, they did not compromise.

Compromise is the most important lesson drilled into us day after day. We are asked to ‘adjust’ and ‘adapt’ in order to ‘flow with the crowd’. To take the trodden path is safer than taking the road less travelled or the road not taken.
St Paul, who, on the road to Damascus was struck down, lost his eye-sight temporarily and took a different road, once he regained his sight. This road was not easy at all. It was strewn with many thorns. Paul talks about a thorn that was given to him to keep him from being too elated (2 Cor. 12:7-10). When he begs of God to remove that thorn from him, God does not promise him that he would remove the thorn, but he said to him, “My grace is sufficient for you, for my power is made perfect in weakness.” (2 Cor. 12:9)

We thank God for the thousands of prophets and messengers of the Good News, down the centuries, even to this day, who have taken the road less travelled or the narrow path, relying on God’s promise that His grace is sufficient.

Today’s Gospel ends with a warning… And he could do no mighty work there, except that he laid his hands upon a few sick people and healed them. And he marveled because of their unbelief. (Mk. 6: 5-6) Jesus’ hands were tied by the prejudice of the people. God, as we know well, can only stand at the door and knock. It is up to us to let God in… If we close our hearts with the key of prejudice there is no other choice for God except to wait!

Jesus driven away from the synagogue

பொதுக்காலம் 14ம் ஞாயிறு

மூன்று ஆண்டுகளுக்கு முன், Whatsapp வழியே, சில நண்பர்கள், ஒரு படத்தையும், அத்துடன், ஓர் எச்சரிக்கையையும் என்னுடன் பகிர்ந்துகொண்டனர். ஏழு தலைகள் கொண்ட பாம்பு ஒன்று, சாலையோரத்தில் படமெடுத்து ஆடுவது போன்று, அந்தப் படம் அமைந்திருந்தது. படத்திற்குக் கீழ், அந்தப் பாம்பு, ஹொண்டுராஸ் நாட்டில் காணப்பட்டதாகவும், ஏழு தலை நாகம், உலக முடிவுக்கு ஓர் அறிகுறி என்றும், எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
அந்தப் படத்தை சிறிது ஆழமாக ஆய்வுசெய்தபோது, அதன் தவறுகள் வெளிச்சமாயின. அந்தப்படம், ஹொண்டுராஸில் அல்ல, இந்தியாவில் எடுக்கப்பட்டது என்பதும், கம்ப்யூட்டர் நுணுக்கங்கள் தெரிந்த ஒருவர், படமெடுத்து ஆடும் ஒரு பாம்பின் தலையை, ஏழுமுறை வெட்டி ஒட்டி, அந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் என்பதும், புரிந்தது.
இன்னும் சற்று ஆழமாக ஆய்வுசெய்தபோது, அந்தப் படம், வெவ்வேறு தலைப்புக்களோடு, கடந்த எட்டு ஆண்டுகளாக, Whatsapp உலகத்தில் பயணித்துவருகிறது என்பதும் தெரியவந்தது. இந்த ஏழு தலைகொண்ட நாகத்தின் படமும், 'உலக முடிவு வந்துவிட்டது' என்ற எச்சரிக்கையும், தற்போதைய பெருந்தொற்று காலத்தில், மீண்டும் வலம்வந்திருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். கோவிட் பெருந்தொற்றைவிட, அதைப்பற்றிய தவறான தகவல்களும், வதந்திகளும் விரைவாகப் பரவி, மக்களை, கூடுதல் வேதனையிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன என்பதை நாம் அறிவோம்.

பிரமிக்கத்தக்க தொழில் நுட்பங்களால், நம்மிடையே, தகவல் பரிமாற்றங்கள், தாறுமாறாகப் பெருகிவிட்டன. நம்மை வந்தடையும் ஒரு தகவலை உள்வாங்கி, அதில் உள்ள உண்மையையும், அதனால் விளையக்கூடிய நன்மை, அல்லது, தீமையையும் குறித்து சிறிதும் சிந்திக்காமல், அதை உடனே மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற அவசரம், நம்மிடம் அதிகமாகியுள்ளதை எண்ணி, கவலை எழுகிறது. இத்தகைய அவசரப் பரிமாற்றங்களால், வதந்திகளும், பொய்ச் செய்திகளும் அதிகம் பரவுகின்றன.

அண்மையில் (ஜூன் 8, 2021) Katharina Buchholz என்ற பெண்மணி எழுதியிருந்த ஒரு கட்டுரை, சமூக ஊடகங்கள் வழியே எளிதில் பரவும் 'fake news' என்ற பொய் செய்திகளைப் பற்றி கருத்துக்களை வெளியிட்டது. "COVID & WhatsApp Cause Surge of Fake News in India" அதாவது, "இந்தியாவில், பொய்ச் செய்திகள் மிக அதிகமாகப் பரவக் காரணமான கோவிட் மற்றும் WhatsApp" என்ற தலைப்பில் வெளியான அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள ஒருசில எண்ணங்கள் இதோ:
கோவிட்-19ன் புதிய அலையுடன், பொய்ச் செய்திகளின் அலையும் இந்தியாவை மூழ்கச் செய்துள்ளது. நியூ யார்க் நகரிலும், இந்தியாவின் பூனே நகரிலும் உள்ள சில மருத்துவர்கள் இணைந்து, 'மருத்துவ வலைத்தள ஆய்வு' என்ற இதழில் வெளியிட்ட ஒரு கட்டுரையில், இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பரவும் தவறான தகவல்களுக்கு, Whatsapp அதிக காரணம் என்பதைக் கூறியுள்ளனர். இவர்கள் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின்படி, இந்தியாவில், 30 விழுக்காடு மக்கள் Whatsapp பயன்படுத்துகின்றனர் என்றும், இவர்களுக்கு வந்துசேரும் தகவல்களில் 50 விழுக்காடு தகவல்கள் உண்மையா என்பதை கண்டுபிடிக்காமல், அதை மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொள்கின்றனர் என்றும், மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சொல்லப்படும் செய்திகளையும், அவற்றில் உள்ள உண்மைகளையும் சரிவரப் புரிந்துகொள்ளாமல், நமக்குள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் முற்சார்பு முடிவுகளின் (prejudice) அடிப்படையில் அவசரப்பட்டு நாம் செயல்படுவதை, இன்றைய ஞாயிறு வாசகங்கள் கேள்விக்குள்ளாக்குகின்றன. முற்சார்பு முடிவுகளால், நாம் அனைவரும், வாழ்வில் சந்தித்திருக்கும், அல்லது, சந்திக்கவிருக்கும், வேதனையான ஓர் உண்மையை, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன. அந்த அனுபவம்... புறக்கணிப்பு! மனித அனுபவங்களிலேயே ஆழமான காயங்களை உருவாக்கவல்லது, புறக்கணிப்பு. அதிலும், காரணம் ஏதுமின்றி, அல்லது, உண்மைகளைச் சொன்ன காரணத்திற்காக, நாம் புறக்கணிக்கப்படும்போது, அந்த வேதனை மிகக் கொடுமையாக இருக்கும்.

தன்னைப் புறக்கணித்து, தனக்கெதிராகக் கிளர்ச்சிசெய்யும் இஸ்ரயேல் மக்களைப்பற்றி, இறைவாக்கினர் எசேக்கியேலிடம், இறைவனே முறையிடுகிறார் என்பதை, முதல் வாசகம் கூறுகிறது. தன் சொந்த ஊருக்குச் சென்ற இயேசுவை, மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள் என்பதை, இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.

சொந்த ஊருக்குத் திரும்பிய இயேசு செய்த முதல் செயல், தொழுகைக்கூடத்தில் கற்பித்தது! இயேசு பேச ஆரம்பித்ததும், அங்கு உருவான மகிழ்வானச் சூழலை நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு விவரிக்கிறார: அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!” என்றார்கள்.  (மாற்கு 6:2)
நேரம் செல்லச் செல்ல, மக்களின் வியப்பு, விடைபெற்றது, தயக்கங்கள் தோன்றின. அவ்வுணர்வுகள், இயேசுவைப் புறக்கணிக்க வழிவகுத்தன. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம், மக்கள் இயேசுவைப்பற்றி கொண்டிருந்த முற்சார்பு முடிவுகள்! வழக்கு ஆரம்பமாகுமுன்னரே, தீர்ப்பு வழங்குவதைத்தான், முற்சார்பு முடிவுகள் (Prejudice) என்று கூறுகிறோம்.
“இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள் (மாற்கு 6:3) என்று, இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.

இயேசு பேச ஆரம்பித்ததும், அவர் என்ன சொன்னார் என்பதை மக்கள் கவனித்தனர். எனவே, மகிழ்வும், வியப்பும் அடைந்தனர். ஆனால், விரைவில், அவர்கள் எண்ணங்கள் மாறின. ‘என்ன சொன்னார்’ என்பதிலிருந்து, 'யார் சொன்னார்' என்று ஊர் மக்கள் சிந்திக்க ஆரம்பித்ததும், அவர்கள் வியப்பு, தயக்கமாகவும், வெறுப்பாகவும் மாறியது.
சொல்லப்படும் கருத்தை விட்டுவிட்டு, சொல்பவர் யார் என்பதில் நம் கவனம் திரும்பும்போது, இந்தப் பிரச்சனை உருவாகும். அதிலும், சொல்பவரது குடும்பம், குலம், செய்யும் தொழில் ஆகியவற்றைக்குறித்து முற்சார்பு முடிவுகளை நாம் எடுத்திருந்தால், பிரச்சனை பெரிதாகி, சொல்லப்பட்ட கருத்துக்களுடன், சொல்பவரும் சேர்த்து ஒதுக்கப்படுவார்.

இயேசு தன் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்ற காலக்கட்டத்தில், அவர் புகழ் ஓரளவு பரவியிருந்தது. ஆயினும், ஊர்மக்கள் அவரை இன்னும் பழையவராக, தங்களுக்கு பழக்கமானவராக எண்ணியதால், தடைச்சுவர்கள் எழுந்தன. நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பலரின் உயர்ந்த அம்சங்களைக் காண்பதற்கு, நமது நெருக்கமே ஒரு தடையாகிவிடும். "ஓ, இவர்தானே" என்ற முத்திரைகள் எளிதில் நம் கைவசம் இருக்கும். இயேசுவுக்கும் இத்தகைய 'ரெடிமேட்' முத்திரைகள் குத்தப்பட்டன. "இவர் தச்சர் அல்லவா?, இவர் மரியாவின் மகன்தானே!" என்று, ஊர்மக்கள் எடுத்திருந்த முற்சார்பு முடிவுகள், அவரையும், அவர் சொன்ன உண்மைகளையும் ஒதுக்கிவைத்தன.

ஒருவரது பிறப்பையும், அவர் செய்யும் தொழிலையும் வைத்து, நாம் எடுக்கும் அவசரமான, அவலமான முடிவுகள், எவ்வளவு தூரம் நமது சமுதாயத்தைப் பாதித்துள்ளன என்பதை, நாம் விளக்கத் தேவையில்லை. இத்தகைய முற்சார்பு முடிவுகளுக்கு இயேசுவே பலியானார் என்பது, இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் ஓர் எச்சரிக்கை!

மக்களின் முற்சார்பு முடிவுகளால், தான் புறக்கணிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த இயேசு, பொருள் செறிந்த வார்த்தைகளைச் சொன்னார்: “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்.” (மாற்கு 6:4) இயேசு கூறிய இந்தப் பொன்னான வார்த்தைகள், அன்றுமுதல் இன்றுவரை, பல்வேறு சூழல்களில், பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தன் பிறப்பையும், தொழிலையும் வைத்து, தன்னை, குறைவாக மதிப்பீடு செய்திருந்த தன் ஊர்மக்களிடம், இயேசு, தன்னை ஓர் இறைவாக்கினராக ஒப்புமைப்படுத்திப் பேசினார். இயேசுவின் அடையாளம், பிறப்பினாலோ, அவர் செய்த தொழிலாலோ வரவில்லை. இறைவாக்கினராக, இறைவனின் வாக்காக வாழ்ந்ததே, அவருக்குரிய தனித்துவமான அடையாளம் என்பதை, தன் சொந்த ஊர் மக்களுக்கும், நமக்கும் நினைவுறுத்துகிறார் இயேசு.

இறைவாக்கினராக வாழ்வது, அன்றும், இன்றும், என்றும், சவால்கள் நிறைந்த வாழ்க்கை. ஓர் இறைவாக்கினர் சந்திக்கும் மிகப்பெரும் சவால், தன் மனசாட்சியின் வழியாகப் பேசும் இறைவனின் குரலுக்கு, எப்போதும், எந்நிலையிலும், என்ன விலை கொடுத்தாகிலும், செவிமடுத்து வாழ்வது. இதனால், இறைவாக்கினர், தன் வாழ்வின் பெரும்பாலான நேரங்களில், தனித்தே நிற்கவேண்டியிருக்கும். பத்தோடு பதினொன்றாக, கூட்டத்தோடு கூட்டமாகக் கரைந்து வாழாமல், ஆயிரத்தில் ஒருவராக தனித்துநிற்பது, இறைவாக்கினர்கள் தேர்ந்துகொண்ட குறுகலான, கடினமான வழி.

இன்றைய உலகம் அழுத்தந்திருத்தமாகச் சொல்லித்தரும் ஒரு முக்கியப் பாடம் - ஊரோடு ஒத்துவாழ்வது. வாழ்க்கையின் குறிக்கோள், மனசாட்சியின் தூண்டுதல் போன்ற அனைத்தையும் மறந்துவிட்டு, அல்லது, புதைத்துவிட்டு, பலரும் போகும் பாதையிலேயே பயணம் செய்யத்தூண்டுகிறது, இவ்வுலகம். தனித்து நிற்பதால், மற்றவர்களின் தாக்குதல்களுக்கு எளிதான இலக்காகிவிடுவோம், எனவே, கூட்டத்தோடு கூட்டமாக வாழ்வதே பாதுகாப்பு என்று, பலவழிகளில் பாடங்கள் சொல்லித்தருகிறது, இவ்வுலகம். உலகம் சொல்லித்தரும் பாடங்களிலிருந்து விலகி, தங்கள் குறிக்கோளை அடைய, தங்கள் மனசாட்சியின் குரலுக்குப் பணிய, தங்களுக்கென பாதைகளை உருவாக்கிக் கொள்ளும் பல்லாயிரம் இறைவாக்கினர்கள், இன்றும், இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தனியொரு பாதையை அமைத்து, இறைவாக்கினராக வாழ்ந்த திருத்தூதர் பவுல், உடலில் தைத்த முள்ளைப்போல் தன்னை வதைக்கும் ஒரு பெருங்குறையைப் பற்றி, இன்றைய 2ம் வாசகத்தில் (2 கொரிந்தியர் 12: 7-10) பேசுகிறார். அந்தக் குறையை நீக்கும்படி அவர் இறைவனை வேண்டியபோது, இறைவன் அவரிடம், "என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" (2 கொரி. 12:9) என்று கூறியதையும் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்கிறார். திருத்தூதர் பவுலைப்போல பல்லாயிரம் இறைவாக்கினர்கள், இறைவனின் அருளை மட்டுமே நம்பி வாழ்ந்ததையும், அவ்வண்ணம் வாழ, நம்மைத் தூண்டிவருவதையும், இவ்வேளையில் நன்றியோடு எண்ணிப்பார்ப்போம்.

பலரும் செல்லாத பாதைகளில், தனித்து தங்கள் பயணத்தை மேற்கொண்ட வீர உள்ளங்களுக்கு...
அப்பயணங்களின் வழியே, புதிய பாதைகளை அடுத்தத் தலைமுறைகளுக்கு வகுத்துத் தந்த வழிகாட்டிகளுக்கு...
உலகம் காட்டும் வழிகளில் ஓடிக்கொண்டிருக்கும் கூட்டத்திலிருந்து விலகி, இறைவன் காட்டும் வழியில் சென்றதால் புறக்கணிக்கப்பட்ட புண்ணியவான்களுக்கு...
வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட மக்கள் செவிசாய்த்தாலும், சாய்க்காவிட்டாலும் (எசே. 2: 4-5) இறைவார்த்தையைத் துணிவுடன் எடுத்துரைத்த இறைவாக்கினர்களுக்கு...
இன்று இறைவனிடம் சிறப்பாக நன்றி சொல்வோம்.

இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதியில் நமக்கு ஓர் எச்சரிக்கையும் தரப்பட்டுள்ளது. அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் இயேசுவால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார் (மாற்கு 6:6) என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் வாசிக்கிறோம். அற்புதங்களை ஆற்ற வல்ல இறைவனையே கட்டிபோட்டுவிடும் நமது முற்சார்பு முடிவுகளை அகற்றி, மூடப்பட்டக் கல்லறைகளாக மாறியிருக்கும் நமது உள்ளங்களை இறைவன் திறந்து, நமக்கு உயிர் தர வேண்டும் என்று உருக்கமாக மன்றாடுவோம்.