19 August, 2018

Justice begins from within… உள்ளிருந்து உருவாகும் நீதி


Giles Duley at Ted talks

20th Sunday of Ordinary Time – Justice Sunday

“Do you ever have one of those mornings, when you just can't be bothered to put your legs on?” When I read that line, I was literally jolted… Have I ever given a thought to my legs when I get up from bed? Very, very rarely… How much have I taken my legs… why? even my life for granted! Giles Duley, the person who has posed this question, is the focus of this Sunday’s reflection.

In India, the Sunday following the Independence Day (August 15), is observed as Justice Sunday. Hence, today, August 19th, we shall focus our thoughts on Justice. When I listened to Giles Duley on Ted.com, I felt as if I was listening to a homily shared for this specific Sunday – Justice Sunday. Before going to his talk, let’s get introduced to Giles.

Giles Duley was a fashion photographer who, some years ago, got tired of celebrity photoshoots and the attendant egos and tantrums that often accompanied them. He flung his camera on the photoshoot bed and it bounced out the window into the streets of SoHo, London. At that point he decided to change course and dedicated himself to using his camera to "tell unheard stories of those caught in conflict and economic hardship around the world." His work took him to Sudan, Angola, Ukraine and Bangladesh, among other places. In 2011, whilst on foot patrol in Afghanistan, Giles stepped on an improvised explosive device. He was severely injured, losing both legs and his left arm. It was only the quick response by the medic on patrol and the crew that saved his life. Despite the fact that the horrific accident left Giles a triple amputee, he continues to dedicate his life to telling stories through photography.

Two turning points in Giles Duley’s life… one, when his camera leapt out of the window and two, when he stepped on the explosive device in Afghanistan. The first one – losing his camera –  changed him from seeing the artificial world of glamour through the eyes of the camera, to seeing the real world with his own eyes. The second one – losing his limbs – transformed him into a living witness of the ravages of war. Here are a few thoughts Giles had shared at TEDxObserver. The title of the programme was - Giles Duley: When a reporter becomes the story.

He begins his talk by saying, “I spent the last forty years hiding behind a camera, so I didn’t have to speak…” He then goes on to speak about three stories that have inspired him and his assignment in Afghanistan in Februray, 2011. “In Afghanistan I became part of the story… I never set out to Congo, to Angola, to Bangladesh to take photographs; I went to those places because I wanted to make some changes and photography was my tool. Then I became aware that my body was in many ways a living example of what war does to somebody. I could use my own experience, my own body to tell that story… The stories I had documented have given me the courage to get back on my new legs and come here to tell you their stories and my own story.”

Then Giles shows a slide where his broken body is depicted in typical fashion photography style and then he goes on to say: “It’s a self-portrait, because I wanted to tell what a bomb does to somebody, but also to show… that losing your limbs doesn’t end your life; that you can have what people say disability, but not be disabled; that you can be able to do anything if you put your mind to it and a belief in it. It is strange that when I look back the past one year, I realise that I have a lot of things now, I didn’t have then.”

The closing thoughts of his talk gripped me… “Ten years ago when I sat down to work out what I could do to make a difference in this world, I realised that my photography was a tool and a way to do it. That’s what is really the key – that we all be part of that wheel… to be cogs in the wheel of change. We can all make a difference. Everybody has an ability to use something to make a difference to the world. We can all sit in front of TV and go… ‘I don’t know what to do about it’ and forget about it. The reality is that we can all do something. It might be just writing a letter. It might be standing on a soap box and talking… but every single one of us here, if we want to make a difference, we can and there is nothing to stop us…”

Change and transformation are key to social justice. All of us would agree that if Justice is to be established, the human family needs to undergo lots of changes - very fundamental, radical changes. But, we disagree on where this change should begin… Should it begin within or without? Many of us will have a long list of changes that need to take place in the world - a change in the government, a change in the mindset of the rich, a change in the caste or class structure, a change in this, a change in that etc. These changes, we believe, would bring about Justice. But, we forget that unjust tendencies that are nurtured within each of us is THE cause of our unjust society. So, changes need to begin from within.

Changes in the government, and social structure, which are not accompanied by changes from within, can only be a ‘band-aid’ solution. When the human family is hurt by injustice, it is easy and quick to stick a band-aid without trying to heal the wound. The wound of social injustice is a festering wound that needs a much radical (in the literal sense of the word – namely, getting to the roots) treatment than a mere band-aid. ‘Band-aid’ treatments have been highlighted in every speech made by politicians (including the Independence Day and Republic Day speeches). 

On the other hand, the radical, transforming treatment is given by Jesus in today’s Gospel (John 6: 51-58) to the people who came looking for him. The Israelites had witnessed the miraculous feeding accomplished by Jesus. It was not merely an experience that filled their stomach, but also their hearts, since they witnessed a dinner where everyone was treated as equal. They came searching for Jesus, the miracle worker, who can fulfill not only their physical need, but also the social need of equality. Knowing their ‘hidden agenda’, Jesus challenged them to become ‘givers’ rather than mere ‘receivers’. He kept repeating to them that he was willing to give himself and invited them to do so.

Let me close my reflection with a short passage from my favourite writer – Fr Ron Rolheiser: When the chaos that lies within the recesses of our private lives remains untouched and untamed, it will remain untouched and untamable in the world at large. As long as the demons and chaos within our hearts lie untouched and untamed, our social action is not worthy to be called spirituality. It is merely political action, nothing more. It is power doing battle with power. Ultimately it will be successful or unsuccessful on the basis of the Machiavellian principle of “might is right.”  The kingdom of God does not work by this kind of power. It works by conversion. Conversion, in the final analysis, is an eminently personal act.

--------------------------------------
Here are a few extracts from the Pastoral Letter published for this Justice Sunday, by the Office for Justice, Peace and Development - Catholic Bishops' Conference of India (CBCI):

I RESPECT YOU

The very fabric of society is unravelling in this present culture of intolerance and indifference.  A particularly gruesome incident was the abduction, rape and murder of Asifa Bano, an eight-year old child, in January this year.  Society failed little Asifa in various ways.
Yet hope was not lost.  Society worked together, to show solidarity with Asifa and others wronged like her, to come up with the slogan “I Respect You”.  Several campaigns were held in protest against gender crimes, and called for justice to be delivered. This Justice Sunday, the Church in India would like to take up the “I Respect You” slogan in a larger context, and use it to combat the intolerance and indifference that plagues us today. 

Four layers of respect
We must first and foremost have respect for God – our Creator, Redeemer, Comforter and Advocate.  We respect God when are reverent while receiving the Eucharist. We respect God, as we ought to, when we accord the Lord the primary place in our lives.  In today’s difficult times, it is imperative that we carve out the proper space for God, and spend time in daily prayer.
Secondly, we must respect others in their capacity as fellow humans and children of God. Respect cannot be conditional on someone’s gender, caste or religion, for all are equal in the sight of God and everyone is created in God’s likeness… Gender crimes are not violence against women, but violence against humanity. 
Third, we must respect ourselves.  In respecting God and in respecting others, we cannot forget that we can do so in our full capacity only when we value ourselves.  Self-care cannot be neglected. In our fast-paced lives, it is easy for us to stress ourselves to the point of burn-out. So let us also make an effort to take care of, and respect, ourselves.  We must not give in to the temptations of suicide or self-disparagement.
Fourthly, we must respect Creation that is akin to us human beings in being the handiwork of God.  As stewards of Creation, we should strive to nurture it, rather than destroy Creation by our resource-intensive lives that trade the bounty of nature for transient human convenience.

#MoreThanAnImage: Giles Duley
https://www.youtube.com

பொதுக்காலம் - 20ம் ஞாயிறு - நீதி ஞாயிறு

"நண்பர்களே, காலையில் நீங்கள் படுக்கையைவிட்டு எழும்போது, 'நான் இன்று என் கால்களை எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன? பொருத்தாவிட்டால்தான் என்ன?' என்ற உணர்வு உங்களுக்கு எழுந்ததுண்டா?" (“Do you ever have one of those mornings, when you just can't be bothered to put your legs on?” – Giles Duley)
இந்தக் கேள்வியை நம் முன் வைப்பவர், மனித நேயமும், சமுதாயச் சிந்தனையும் கொண்ட ஜைல்ஸ் டூலி (Giles Duley) என்ற புகைப்படக் கலைஞர். இவர் 2011ம் ஆண்டு முதல், இரு செயற்கைக் கால்களுடன் வாழ்பவர். இவரைப்பற்றி இந்த ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்துகொள்வதற்குக் காரணம் உண்டு. ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படும் இந்திய சுதந்திர நாளைத் தொடர்ந்துவரும் ஞாயிறை, நீதி ஞாயிறென, இந்தியத் திருஅவை சிறப்பிக்கிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் 19, கொண்டாடப்படும் நீதி ஞாயிறன்று, ஜைல்ஸ் டூலி அவர்களைப்பற்றி பேசுவது பொருத்தமாகத் தெரிகிறது. Ted.com என்ற இணையத்தளத்தில் இவர் வழங்கிய ஓர் உரை, நீதி ஞாயிறுக்குரிய மறையுரையைப் போல ஒலிக்கிறது.

தன் 20வது வயதில், விளம்பர உலகில், புகைப்படக் கலைஞராக, தொழிலைத் துவங்கியவர், ஜைல்ஸ். இசை உலகில் சிறந்து விளங்கிய பல புகழ்பெற்ற பாடகர்களையும், பாடகர் குழுக்களையும் படம் பிடித்து, புகழ்பெற்ற இதழ்களில் வெளியிட்டு, பரிசுகள் பல பெற்றார். பத்தாண்டுகளாக இவர் தினமும் கண்டுவந்த அந்த செயற்கையான, பளபளப்பான உலகம், இவருக்கு, சலிப்பைத் தந்தது. அந்த உலகிற்கே உரிய ஆணவம் கொண்ட நட்சத்திரங்களுடன், பலநாட்கள் மோத வேண்டியிருந்ததால், இவரது சலிப்பு, கசப்பாக மாறிவந்தது.
ஒரு நாள் இரவு, இத்தகையதொரு மோதலுக்குப் பின் வீட்டுக்கு வந்தவர், தான் வைத்திருந்த விலையுயர்ந்த காமிராவை கோபத்துடன் கட்டிலில் எறிந்தார். ஸ்ப்ரிங் கம்பிகளால் ஆன அந்தக் கட்டில் சன்னலுக்கருகே இருந்தது. இவர் கோபத்தில் எறிந்த காமிரா, ‘ஸ்ப்ரிங் கட்டிலில் விழுந்து, துள்ளி, அவர் தங்கியிருந்த பல மாடிக் கட்டிடத்தின் சன்னல் வழியே அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. அத்தருணத்தில், தன் வாழ்வில் முக்கியமான ஒரு மாற்றம் ஏற்பட்டது என்று, ஜைல்ஸ் அவர்கள் கூறுகிறார்.

அந்த இரவுவரை, செயற்கைத்தனம் நிறைந்த ஊடக உலகை, தன் காமிராக் கண்களால் கண்டுவந்த அவர், அடுத்தநாள் முதல், இயற்கையான, உண்மை உலகை தன் சொந்தக் கண்களால் காண ஆரம்பித்தார். அந்த இயற்கை உலகில் அவர் கண்ட உண்மைகளை, புகைப்படங்களாய் பதிவுசெய்தார். உலகின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பே இல்லாமல் துன்புற்றவர்களை, படங்களில் பதிவுசெய்ய ஆரம்பித்தார்.

இந்த முயற்சி, அவரை, ஆப்கானிஸ்தானுக்கு இட்டுச்சென்றது. அங்கு, அவர் வாழ்வில், மீண்டும், ஒரு மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்தது.  பல ஆண்டுகள் யுத்த பூமியாக இருந்துவரும் அந்நாட்டில், போரின் தாக்கங்களால் துன்புறும் மக்களின் கதையைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார் ஜைல்ஸ். அப்போது ஒரு நாள், பாதையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை இவர் மிதித்ததால், இரு கால்களையும், இடது கையையும் பாதி இழந்தார். இது நடந்தது, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம். மருத்துவமனையில் இருந்தபோது, இருமுறை இவர் மரணத்தின் வாயில்வரை சென்று திரும்பினார். இப்போது, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, தன் சொந்த அனுபவங்களை மேடையேறி பேசிவருகிறார் ஜைல்ஸ். இவர் Ted.com என்ற இணையத்தளத்தில் வழங்கிய உரையின் ஒரு பகுதி, நீதி ஞாயிறுக்கேற்ற மறையுரைபோல் ஒலிக்கிறது. அந்த உரையில் அவர் பகிர்ந்துகொண்ட எண்ணங்கள் இதோ:
விளம்பர உலகில் இருந்தவரை மற்றவர்களையே நான் படங்களாகப் பதிவு செய்து அவர்கள் கதைகளைச் சொல்லிவந்தேன். ஆப்கானிஸ்தானில் அன்று நிகழ்ந்த விபத்துக்குப் பின், நானே ஒரு கதையானேன். போரினால் மனிதர்களுக்கு என்ன இழப்பு நேரிடுகிறது என்பதைக் காட்ட, என் உடல், ஒரு காட்சிப் பொருளாகிவிட்டது. என் கதையை இப்போது நானே சொல்லிவருகிறேன். இந்த விபத்தால் நான் கற்றுக்கொண்ட உண்மைகளை, என் கதையில் சொல்கிறேன்.
ஜைல்ஸ் டூலி அவர்கள் கற்றுக்கொண்ட உண்மைகள் எவை?
·          உடல் உறுப்புக்களை இழந்தாலும், நீங்கள் வாழ்வை இழக்கவில்லை.
·          அங்கக் குறையுள்ளவர் என்று உலகம் உங்களைச் சொல்லலாம். ஆனால், அகக் குறையுள்ளவர் அல்ல, நீங்கள்.
·          எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும், சாதிக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்துவிட்டால், எதையும் உங்களால் செய்யமுடியும்.
இந்த விபத்துக்குப்பின், என் வாழ்வை பின்னோக்கிப் பார்த்தால், புதிரான ஓர் உண்மை புலப்படுகிறது. முழு உடலுடன் நான் வாழ்ந்தபோது அடையாத பல நல்லவற்றை இப்போது நான் அடைந்துள்ளேன்.

இவ்வளவு உயர்வான எண்ணங்களைப் பேசும் ஜைல்ஸ் அவர்கள், மனச் சோர்வுறும் நேரங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும், செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் போராடவேண்டியிருக்கும் அவருக்கு, சிலநாட்களில், காலை விடியும்போது, தன் செயற்கைக் கால்களை மாட்டிக்கொண்டு, படுக்கையைவிட்டு இறங்கவேண்டுமா என்ற கேள்வி எழாமல் இல்லை. 'நான் இன்று என் கால்களை எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன? பொருத்தாவிட்டால்தான் என்ன?' என்ற உணர்வுடன் போராடியிருக்கிறார்.

இத்தனை போராட்டங்கள் மத்தியிலும், ஜைல்ஸ் அவர்கள், செல்லுமிடங்களில் எல்லாம் சொல்லிவரும் ஒரு முக்கிய கருத்து இதுதான்: "நாம் எல்லாருமே மனதுவைத்தால், இந்த உலகை மாற்றமுடியும். உலகில் நிகழும் அவலங்களை ஊடகங்கள் காட்டும்போது, அவற்றைப் பார்த்து, விரக்தியுற்று, செயலிழந்து போகாமல், அந்த அவலங்களைப்பற்றி கருத்துக்களைப் பரிமாறுவோம். மாற்றங்களைக் கொணரும் வழிகள் பிறக்கும். சிறு, சிறு காரியங்களில் மாற்றங்களை உருவாக்கினால், பெரும் மாற்றங்களும் உருவாகும் என்று நம்புவோம்" என்பதே, அவர் மீண்டும், மீண்டும் எடுத்துச்சொல்லும் முக்கியப் பாடம்.
ஊடகங்கள் காட்ட மறந்த, அல்லது, காட்ட மறுக்கும் மனிதர்களை, ஜைல்ஸ் அவர்கள், தன் புகைப்படங்கள் வழியே மக்களின் நினைவுகளில் பதிக்கிறார். அதிலும் குறிப்பாக, போரினால் தங்கள் உறுப்புக்களை இழந்தாலும், நம்பிக்கை இழக்காமல் வாழ்வைத் தொடரும் பலரின் புகைப்படங்கள், மற்றும் கதைகளை "Legacy of War" என்ற வலைத்தளம் வழியே, நமக்கு வாழ்க்கைப் பாடங்களாக்குகிறார்.

"நாம் எல்லாருமே மனதுவைத்தால், இந்த உலகை மாற்றமுடியும்... சிறு, சிறு காரியங்களில் மாற்றங்களை உருவாக்கினால், பெரும் மாற்றங்களும் உருவாகும் என்று நம்புவோம்" என்று ஜைல்ஸ் அவர்கள் கூறும் பாடத்தை, நீதி ஞாயிறின் மையப் பொருளாக நாம் எண்ணிப்பார்க்கலாம். நீதி ஞாயிறு என்றதும், கொடிபிடித்து, கோஷம் எழுப்பி, ஊர்வலம் சென்று, உரிமைகளைப் பெறுவது என்ற கோணத்தில் நம் எண்ணங்கள் ஓடலாம். இவை அனைத்தும் தேவைதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், வெளிப்படையான இம்முயற்சிகளுடன், நமது கடமை முடிந்துவிட்டால், பயனில்லை. நமது சொற்களால் நீதியைப்பற்றி முழக்கமிட்டுவிட்டு, நமது வாழ்விலும், செயல்களிலும் நீதியை செயல்படுத்தவில்லையெனில், நமக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வேறுபாடுகள் இருக்காது. அவர்களும் நீதியைப்பற்றி, வறியோரைப்பற்றி, வாய் நிறைய... சில நேரங்களில், வாய் கிழியப் பேசுகின்றனர். இதுவே நமது பாணியாகவும் இருந்தால் பயனில்லையே!

நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில், அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், இந்த மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்? உள்ளிருந்தா? வெளியிலிருந்தா? என்பதில் கருத்து வேறுபாடுகள் பல உள்ளன. வெளியிலிருந்து மாற்றங்கள் வரவேண்டும்... பணம் படைத்தவர்கள் மாறவேண்டும்; அரசின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும்; அவர் மாறவேண்டும்; இவர் மாறவேண்டும்; அது மாறவேண்டும்; இது மாறவேண்டும் என்று நீளமான பட்டியல் ஒன்றை தயாரித்துக் காத்திருப்பவர்கள், நம்மில் அதிகம் பேர் உள்ளனர். உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெளி மாற்றங்கள் நிகழ்ந்தால், அது வெளிப்பூச்சாக மாறும் ஆபத்து உண்டு.

வெளி உலகில் நாம் காணும் குழப்பங்கள், அக்கிரமம், அநீதி இவை அனைத்துமே மனித மனங்களில் உருவாகும் எண்ணங்கள்தானே. உள்ளத்திலிருந்து கிளம்பும் இந்தக் குழப்பங்களைத் தீர்க்காமல், மாற்றங்களைக் கொணர்வதற்கு, கட்சிகள் சேர்ப்பதையும், குண்டுகள் வீசுவதையும், நம்பி வாழ்வது, புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கு, ஒப்புக்காக மருந்திட்டு, கட்டு போடுவதற்குச் சமம். சமுதாயப் புண்களுக்கு, போராட்டம், உண்ணாவிரதம், மாநாடு என்று, அரசியல் தலைவர்கள் சொல்லித்தரும் மேலோட்டமான மருந்துகள் இடுவது எளிது. ஆனால், புரையோடிப் போயிருக்கும் அந்தப் புண்களைத் திறந்து, வேர்வரைச் சென்று குணமாக்குவது, கடினமானது, கசப்பானது. இப்படிப்பட்ட ஒரு கடினமான, கசப்பான உண்மையைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்லித்தருகிறார்.

5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்தபோது, வயிறார உண்டவர்கள், இயேசுவை மீண்டும் தேடி வந்தனர். ஏன்? அனைவரும் சமமாக அமர்ந்து உண்ட அந்த அனுபவம், அவர்களுக்கு இனிமையாக இருந்தது. அத்தகைய சமபந்தியை, இயேசு, மீண்டும், மீண்டும், அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும் என்ற ஆவலில், அவர்கள் இயேசுவைத் தேடிவந்தனர். சமதர்ம சமுதாயம் என்ற மாற்றத்தை, மிக எளிதாக உருவாக்கும் ஒரு மந்திரவாதியாக அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர்களது பார்வை சரியானது அல்ல என்று இயேசு அவர்களிடம் எச்சரிக்கை கொடுத்தார். அப்பங்களை வயிறார உண்டதால்தான் நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள், மற்றபடி, என் சொற்களோ செயல்களோ உங்களை என்னிடம் அழைத்து வரவில்லை என்ற எச்சரிக்கையை இரு வாரங்களுக்கு முன் மக்களுக்குக் கொடுத்தார். அதேபோல், அவர்கள் தேடும் உணவு, அவர்கள் தேடும் எளிதான வாழ்வு, ஆபத்தானது என்பதையும், வேறொரு வகையான உணவு, வேறொரு வகையான வாழ்வு உண்டு என்பதையும் சென்ற வாரமும், இந்த வாரமும் இயேசு நற்செய்தியில் எடுத்துரைக்கிறார். இடித்துரைக்கிறார்.

அவர்கள் தேடிவந்த அப்பங்களுக்குப் பதில், தன் சதையையும், இரத்தத்தையும் தருவதாகக் கூறுகிறார் இயேசு. சதை, இரத்தம், என்று இயேசு கூறிய சொற்கள், அம்மக்களை  நிலைகுலையச் செய்கின்றன. அப்பத்தால் எங்கள் பசியைப் போக்கும் என்று இயேசுவைத் தேடிவந்தால், தன் சதையையும், இரத்தத்தையும் தருவதாக இவர் கூறுகிறாரே... என்று அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். இருந்தாலும், இயேசு, "என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகினால் நிலைவாழ்வு பெறுவீர்கள்" என்ற அந்தக் கசப்பான உண்மையை மீண்டும் மீண்டும் சொல்கிறார்:

வாழ்வின் பிரச்சனைகளுக்கு மேலோட்டமான, எளிதான தீர்வுகளைத் தேடிவந்த அந்த மக்களிடம் "உலக மீட்புக்காக, சமுதாய மாற்றத்திற்காக நான் என்னையே உங்கள் உணவாக்குகிறேன். என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகி, என் தியாக வாழ்வில் நீங்களும் பங்கேற்றால், நீங்கள் எதிர்பார்க்கும் சமபந்தி ஒவ்வொரு நாளும் நடக்கும், வாழ்வு நிறைவாகும்" என்ற உண்மையை, இயேசு, சென்ற ஞாயிறன்றும், இந்த ஞாயிறன்றும், சொல்லித்தருகிறார்.

சமுதாய மாற்றங்களை, நீதி நிறைந்த சமுதாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மிடமும், இயேசு, இதையொத்த எண்ணங்களையேச் சொல்கிறார். மாற்றங்கள் உன்னிடமிருந்து ஆரம்பமாகட்டும், இந்த மாற்றங்கள் வெறும் வார்த்தைகளாக அல்ல, உன் சதையாக, இரத்தமாக மாறட்டும். இந்த மாற்றங்களை உருவாக்க, உன் சதையை, இரத்தத்தை நீ இழக்க வேண்டியிருக்கலாம்... என்ற சவால்களை இயேசு இன்று, இந்த நீதி ஞாயிறன்று நம்முன் வைக்கிறார். நமது பதில் என்ன?

2018ம் ஆண்டு நீதி ஞாயிறுக்கென இந்திய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி மடலின் சுருக்கம்:
"உன்னை (உங்களை) நான் மதிக்கிறேன்" (I Respect You) என்ற மையக்கருத்தை, 2018ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் நீதி ஞாயிறுக்கென, இந்திய ஆயர் பேரவை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஞாயிறுக்கென வெளியிடப்பட்டுள்ள மேய்ப்புப்பணி மடலின் ஆரம்பத்தில், இவ்வாண்டு சனவரி மாதம், காஷ்மீரில், அசீஃபா பானோ என்ற 8 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை நினைவுகூரப்பட்டுள்ளது. இந்தக் கொடுமைக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள் "உன்னை (உங்களை) நான் மதிக்கிறேன்" என்ற சொற்களை, தங்கள் போராட்டங்களின் மையக்கருத்தாகக் கொண்டிருந்தனர் என்பதை, இம்மடல் கூறியுள்ளது. நாம் அளிக்கும் மதிப்பு, அல்லது, மரியாதை, நான்கு நிலைகளில் வெளியாக வேண்டும் என்று, இந்திய ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
உண்மைக் கடவுளைப் புறந்தள்ளி, ஏனைய 'கடவுள்களை' உருவாக்கிவரும் இன்றைய உலகில், உண்மைக் கடவுளுக்கு முதலிடமும், மதிப்பும் தருவது, முதல் நிலை.
வேறுபாடுகள் நிறைந்த இவ்வுலகில், அடுத்தவரை மனமார மதிப்பது, 2வது நிலை. பாலின அடிப்படையில் நிகழும் குற்றங்களைக் களைவதற்கு, பெண்கள் மீது உண்மையான மதிப்பை இந்திய சமுதாயம் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று இம்மடலில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
வெற்றியை நோக்கி வேகமாகச் செல்லும்படி உந்தித்தள்ளும் இவ்வுலகில், இந்த வேகத்தினால் சோர்ந்துபோய் ஒவ்வொருவரும் தங்களையே இழக்கின்றனர். எனவே, ஒவ்வொருவரும், நம்மை நாமே மதிப்பது மிகவும் முக்கியம் என்பது 3வது நிலை.
4வதாக, படைப்பு அனைத்தையும் மதிப்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.


15 August, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் – பகுதி 6


Nehru delivering the famous “Tryst with Destiny” speech in 1947

இமயமாகும் இளமை நள்ளிரவில் நாம் பெற்ற சுதந்திரம்

1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 14ம் தேதிநள்ளிரவு நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், இந்தியாவின் முதல் பிரதமர், ஜவகர்லால் நேரு அவர்கள், முதல் சுதந்திர உரையை டில்லி சட்டப்பேரவையில் வழங்கினார். "Tryst with Destiny" அதாவது, "இலக்குடன் காதல் வயப்படுதல்" என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை, 20ம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட தலைசிறந்த உரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவ்வுரையிலிருந்து சில துளிகள்:
நள்ளிரவு நேரத்தில், உலகம் உறங்கும் வேளையில், இந்தியா சுதந்திரத்திற்கும், வாழ்வுக்கும் விழித்தெழும். இன்று நாம் கொண்டாடும் சாதனை, நமக்காகக் காத்திருக்கும் இன்னும் பெரிய சாதனைகளுக்கு ஒரு வாயிலாக, வாய்ப்பாக உள்ளது. இந்தியாவுக்குப் பணியாற்றுவது, அங்கு துயருறும் கோடிக்கணக்கானவர்களுக்கு பணியாற்றுவது என்று பொருள். வறுமை, அறியாமை, நோய், ஏற்றத்தாழ்வு அனைத்தையும் முடிவுக்குக் கொணர்வது என்று பொருள்.
இந்தச் சாதனைப் பயணத்தில் அனைவரும் இணைய விண்ணப்பிக்கிறோம். அற்பத்தனமாக, அழித்து ஒழிக்கும் விமர்சனங்களுக்கோ, விரக்திக்கோ, அடுத்தவரை குறை சொல்வதற்கோ இது நேரமல்ல. நம் குழந்தைகள் அனைவரும் தங்குவதற்கேற்ற சுதந்திர இந்தியா என்ற மாண்புமிகு மாளிகையை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
இந்நாளில் நம் சிந்தனைகள், நம் சுதந்திரத்தை வடிவமைத்த தேசத்தந்தையின் பக்கம் முதலில் திரும்புகின்றன. நம்மைச் சூழ்ந்திருந்த இருளை விரட்டியடிக்க, அவர், சுதந்திர தீபத்தை உயர்த்திப் பிடித்தார். எவ்வளவுதான் கடுமையாக புயல் வீசினாலும், அது, சுதந்திர தீபத்தை அணைத்துவிட நாம் அனுமதிக்க மாட்டோம்.
அடுத்ததாக, நமது சிந்தனைகள், தங்கள் உயிரை இழக்கும் வரையில், நம் சுதந்திரத்திற்காக உழைத்த தொண்டர்கள், வீரர்கள் பக்கம் திரும்புகின்றன.
நமக்கு முன் கடினமான பணியொன்று காத்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வின் இலக்கை அடையும்வரை நமக்கு ஓயவில்லை.
நாம் அனைவரும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய நாட்டின் பிள்ளைகளான நம் அனைவருக்கும் சம உரிமைகள், சிறப்பு உரிமைகள், கடமைகள் என அனைத்தும் சமமாக உள்ளன. குழுவாதங்களை அல்லது குறுகிய சிந்தனைகளை என்றும் ஆதரிக்கவோ, ஊக்கப்படுத்தவோ கூடாது. குறுகிய சிந்தனைகளை, கருத்தளவிலோ, செயல்பாட்டளவிலோ, நடைமுறைப்படுத்தும் மக்களைக் கொண்டிருக்கும் நாடு, சிறந்த நாடாக இருக்க முடியாது.
பழமையும், புதுமையும் நிரந்தரமாகக் கலந்திருக்கும் நம் தாய் நாடான இந்தியாவுக்கு நமது வணக்கம். அவளது பணியில் நம்மையே பிணைப்போம்.
ஜெய்ஹிந்த்!

Jesus heals on the Sabbath

புதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் பகுதி 6

யோவான் நற்செய்தியில் காணப்படும் ஏழு புதுமைகளில், மூன்று, குணமளிக்கும் புதுமைகள். அவற்றில் இரண்டு, ஓய்வுநாளில் இடம்பெறுகின்றன. நாம் சென்ற விவிலியத் தேடலில் குறிப்பிட்டதுபோல், ஓய்வுநாள் புதுமைகள், ஊருக்கு வெளியிலோ, தனிப்பட்டவர் இல்லத்திலோ நிகழவில்லை. பலரும் கூடிவரும் பொதுவான இடங்களில், நிகழ்ந்தன. எனவே இவற்றை வெறும் நிகழ்வுகளாக மட்டும் அல்லாமல், பாடங்களாகவும் வழங்கினார், இயேசு.
இவ்விரு புதுமைகளில், நற்செய்தியாளர் யோவான், சொல்லாமல் சொல்லித்தரும் மற்றொரு பாடம் என்னவெனில், அதுவரை மனிதர்களின் கவனத்தைப் பெறாமல், சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்த இருவர், குணமடைந்தபின், இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றும் சாட்சிகளாக மாறினர் என்பது.

பெத்சதா குளத்தருகே நிகழ்ந்த புதுமையில், 38 ஆண்டுகள், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், அந்த குளத்தருகிலேயே கிடந்தவர், குணமடைந்த அன்றே, மக்களின் கவனத்தை ஈர்க்கிறார். அத்தனை ஆண்டுகளாக, தரையோடு, தரையாகக் கிடந்த அந்த மனிதருக்கு, இயேசு வழங்கிய ஒரு கட்டளையை அவர் தட்டாமல் பின்பற்றியது, பிரச்சனைகளை உருவாக்கியது. குணமானவர், 38 ஆண்டுகளாக படுத்திருந்த அந்தப் படுக்கையை, குளத்தருகே விட்டுவிட்டு, அவர் மட்டும் நடந்து சென்றிருந்தால், யாருடைய கவனத்தையும் ஈர்த்திருக்க மாட்டார். எந்த பிரச்சனையும் எழுந்திருக்காது. ஆனால், 'எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்' (யோவான் 5:8) என்று இயேசு கூறியதை தட்டாமல் பின்பற்றியதால், அவர் மற்ற யூதர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பெத்சதா குளத்தைச் சுற்றியிருந்த மண்டபங்களில், அடைபட்டுக்கிடந்த மனிதர், தன் படுக்கையை எடுத்துக்கொண்டு வெளி உலகில் அடியெடுத்து வைத்தபோது, அவரைச் சந்தித்த யூதர்களின் கண்ணில் முதலில் பட்டது, அவர் படுக்கையைச் சுமந்து சென்ற குற்றம். யூதர்களில் ஒருசிலர், அந்தக் குளத்தினருகே அவர் படுத்துக்கிடந்ததைப் பார்த்திருக்கக்கூடும். இன்று அவர் நடந்துவந்ததைக் கண்ட அவர்கள், அவர் குணமடைந்ததை எண்ணி மகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் கவனத்தை முதலில் ஈர்த்ததுஅவர் குணம் அடைந்த அற்புதம் அல்ல, மாறாக, அவர் படுக்கையைச் சுமந்து சென்றார் என்ற குற்றம் மட்டுமே. உடனே அவர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிடுகின்றனர்: "ஓய்வு நாளாகிய இன்று படுக்கையை எடுத்துச் செல்வது சட்டத்திற்கு எதிரான செயல்" (யோவான் 5:10) என்று கூறுகின்றனர்.

இத்தனை ஆண்டுகள், தன் படுக்கையிலேயே சிறைப்பட்டிருந்தவருக்கு, ஒய்வு நாளும், மற்ற நாள்களும் ஒன்றுபோலவே இருந்திருக்கும். எனவே, யூதர்கள் கூறியதை அவர் பெரிதுபடுத்தாமல், தன்னை குணமாக்கியவர், படுக்கையை எடுத்துக்கொண்டு போகச் சொன்னதால், தான் அவ்வாறு செய்வதாகக் கூறினார். உடனே, அங்கு ஒரு வழக்கு ஆரம்பமாகிறது. இயேசுவின் மீது குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.

பெத்சதா குளத்தருகே உருவான பிரச்சனையை 9 இறைவாக்கியங்களில் விவரிக்கும் நற்செய்தியாளர் யோவான், சிலோவாம் குளத்தருகே உருவான பிரச்சனையை 34 இறைவாக்கியங்கள் வழியே விவரித்துள்ளார். அது ஓர் இறையியல் பாடமாக அமைந்துள்ளது என்பது, பல விவிலிய ஆய்வாளர்களின் கருத்து.
இயேசு உமிழ் நீரால் சேறு உண்டாக்கி, பார்வையற்றவர் கண்களில் பூசினார். சிலோவாம் குளத்தில் கண்களைக் கழுவச் சொன்னார். அவரும் போய் கழுவினார். பார்வை பெற்றார். பார்வை பெற்றவர், நேராக தன் இல்லம் சென்றிருந்தால், அத்துடன், இப்புதுமை அமைதியாக முடிந்திருக்கும், சுபம் போட்டிருக்கலாம். புகழை விரும்பாத இயேசுவுக்கும் அது மிகவும் பிடித்த செயலாக இருந்திருக்கும். ஆனால், நடந்தது வேறு. "அவரும் போய் கழுவி, பார்வை பெற்றுத் திரும்பிவந்தார்" (யோவான் 9:7)

அவர் திரும்பிவந்ததால், பிரச்சனைகள் ஆரம்பமாயின. இந்தப் பிரச்சனையை ஒரு வழக்கைப்போல் யோவான் பதிவுசெய்துள்ளார். எந்த ஒரு வழக்கிலும், இருபுறமும் சொல்லப்படும் கருத்துக்களுக்குச் செவிமடுத்து, தீர்ப்பு வழங்கப்படும். ஆனால், இந்த வழக்கிலோ, இயேசு ஒரு குற்றவாளி என்ற தீர்ப்பு, ஏற்கனவே எழுதப்பட்டபின், வழக்கு ஆரம்பமானது.

பார்வை பெற்றவர், கோவில் வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்தவர். அவர் பிறவியிலேயே பார்வைத்திறன் இன்றி பிறந்தவர் என்று கூறப்பட்டிருப்பதால், அவர், பல ஆண்டுகள், கோவில் அருகே அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்திருக்க வேண்டும். அத்தனை ஆண்டுகளாக, அவரைக் கண்டும் காணாமல் வாழ்ந்தனர் யூதர்கள். அவர், பார்வை பெற்றதும், மற்றவர் கண்களும், அவரை ஒரு மனிதராகப் பார்க்கும் வண்ணம் திறக்கப்படுகின்றன.
பார்வை பெற்றவர் தான் தர்மம் கேட்டு வாழ்ந்த இடத்திற்கு திரும்பி வர காரணம் என்ன? தனக்கு இந்தப் புதுமையை, பெரும் நன்மையைச் செய்தவர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள, அவருக்கு தன் நன்றியைக் கூற, அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். உடல் குறைகளின் காரணமாக, கோவில் வாசலில், தன்னோடு அமர்ந்து, பிச்சை எடுத்துவந்த தன் நண்பர்களிடம், தனக்கு நடந்ததை எடுத்துச்சொல்லி, மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளவும், முடிந்தால், அவர்களையும், புதுமை செய்யும் அந்த மகானிடம் அழைத்துச் செல்லவும், அவர் திரும்பி வந்திருக்க வேண்டும். இவ்வகை நல்ல எண்ணங்களுடன் வந்தவர், தான் பெரியதொரு பிரச்சனையில் சிக்கிக் கொள்வோம் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். புதுமை நடந்தது, ஓர் ஒய்வு நாள் என்பதுதான் பிரச்சனை.

வாழ்க்கையில் மலைபோல் குவிந்திருக்கும் பிரச்சனைகளில் தினமும் வாழ்ந்தவர்கள் அந்தப் பிச்சைக்காரர்கள். அவர்களுக்கு, நல்ல நாள், பெரிய நாள், ஒய்வு நாள் என்றெல்லாம் பாகுபாடுகள் இருந்ததில்லை. எனவே, கண் பார்வை பெற்றவருக்கு அது ஒய்வு நாள் என்பதே தெரிந்திருக்க நியாயமில்லை.
அதுவரை அவரது குறையைப் பார்த்து, தர்மம் செய்து வந்த பலர், அவர் குணமான பின் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் சந்தேகப்பட்டனர். இவர் அவரல்ல, அவரைப் போல் இருக்கிறார் என்ற பல சந்தேகங்களை எழுப்பினர். (யோவான் 9:8-9)

உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தால், உடலில், முக்கியமாக, முகத்தில் ஏற்படும் மாற்றங்களை நாம் பார்த்திருக்கிறோம். லியொனார்தோ தா வின்சி என்ற உலகப்புகழ் பெற்ற ஓவியரின் வாழ்வில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் சம்பவம் நினைவுக்கு வருகிறது.
தா வின்சி அவர்கள், "இறுதி இரவுணவு" என்ற உலகப் புகழ் மிக்க ஓவியத்தை வரைவதற்கு ஆட்களைத் தேடுகிறார் என்று அறிந்ததும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அவரது இல்லம் நோக்கி படையெடுத்தனர். அந்தக் கூட்டத்தில், அமைதியாக, கொஞ்சம் ஒதுங்கியே நின்ற 20 வயது இளைஞன் ஒருவரை, தா வின்சி அவர்கள் முதலில் தெர்தேடுத்தார். அவரை அமரவைத்து, இயேசுவை வரைந்து முடித்தார். பின்னர், ஒவ்வொரு சீடரையும் வரைவதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்து, வரைந்து கொண்டிருந்தார். ஆறு ஆண்டுகளாய்த் தீட்டப்பட்ட இந்த ஓவியத்தின் இறுதி கட்டமாக, யூதாஸை வரைய ஆரம்பித்தார், தா வின்சி. உரோமையச் சிறையிலிருந்து அனுப்பப்பட்ட ஓர் இளைஞனை வைத்து, தா வின்சி அவர்கள் யூதாஸை வரைந்துகொண்டிருந்தபோது, அங்கு அமர்ந்திருந்த கைதி கதறி அழுதான். தான் வரைவதை நிறுத்திவிட்டு, தா வின்சி அவர்கள், அந்த இளையவரிடம் அமர்ந்து, அவரது கண்ணீருக்குக் காரணம் கேட்டார். ஐயா, ஆறு வருடங்களுக்கு முன் நீங்கள் தீட்டிய இயேசுவும் நான்தான் என்று அந்த இளையவர் சொன்னார்.
நம்மில் பலருக்குத் தெரிந்த கதை இது. இந்நிகழ்வு உண்மையாக நடந்ததா என்பது தெரியவில்லை. ஆனால், ஓர் இளைஞன் தன் பழக்க வழக்கங்களில் மாறும்போது, அவரது வெளித்தோற்றமும் வெகுவாக மாறிவிடுவதை எல்லாருமே பார்த்திருக்கிறோம், உணர்ந்திருக்கிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது அனைவரும் அறிந்த பழமொழி. பார்வையிழந்து, பரிதாபமாய் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர், இயேசுவின் அருளால் பார்வை பெற்றதும், அடையாளம் தெரியாத அளவு மாறியிருந்தார்.

பார்வை பெற்றவர், சந்தேகத்தோடு தன்னைப் பார்த்தவர்களிடம் "நான்தான் அவன்" என்று பெருமையோடு, பூரிப்போடு சொன்னார் (யோவான் 9:9). 'நான்தான் அவன்' என்று அவர் கூறிய அந்த நேரத்திலிருந்து, இறைவனின் கருணைக்கு, புதுமைக்கு, தான் ஒரு சாட்சி என்று, புதிய வாழ்வை ஆரம்பித்தார். சிலோவாம், அதாவது, அனுப்பப்பட்டவர் என்ற பொருள்படும் குளத்தில் கண்களைக் கழுவி பார்வை பெற்ற அவர், இறைவனின் கருணையை எடுத்துரைக்க அனுப்பப்பட்டவராக மாறினார். அனுப்பப்பட்டவரின் சாட்சிய வாழ்வு, பிரச்சனையோடு ஆரம்பித்தது. இந்தப் பிரச்சனை சென்ற திசையில், நாம் அடுத்த வாரம் பயணிப்போம்.


12 August, 2018

The only species that loves violence - Humans வன்முறையை விரும்பும் ஒரே உயிரினம் - மனிதர்கள்


I am the Living Bread

19th Sunday in Ordinary Time

A few years back I saw a short video featuring two panthers and a stag. The moment I mentioned ‘two panthers and a stag’, many of us may have already decided the outcome of this feature – namely, the panthers would have hunted down the stag and torn it to pieces. No! A BIG NO! The panthers and the stag were playing with one another like little children. The only thing missing was the innocent giggle of the children. At the end of this short video, the following lines appeared on the screen: “When animals are not hungry, there is no violence. Why then humans resort to violence for no reason at all?”
This question seems to bind together hunger and violence. We must acknowledge that there is no easy answer to the question: ‘Why human violence?’ In the last few years we have seen an uncontrolled and indiscriminate outburst of violence which has not spared even innocent children.
73 years back such an atrocious, indiscriminate violence was unleashed on Japan by the U.S. Government. In the past week, when August 6 and 9 passed us by, our thoughts, naturally, revisited the atrocity committed against unsuspecting, innocent human beings in Hiroshima and Nagasaki.

I feel that the question that appears at the end of the short video, linking hunger and violence, actually does injustice to the animal kingdom. The word ‘violence’ cannot be associated with animals. When they kill other animals to satisfy their hunger, we cannot term that killing as ‘violence’. The term ‘violence’ belongs to the human species and our violence erupts due to the different forms of hunger we suffer from.

For the past three weeks, our Sunday reflections revolve around the 6th chapter of St John. All the three Sundays relate a few biblical events dealing with hunger and feeding. Although these readings talk of the physical hunger of individuals and people, when one goes deeper into the passages, we can see other forms of hunger that we humans suffer from and the consequences of such hungers!

For instance, today’s first reading, taken from I Kings, 19:4-8, talks of the Prophet Elijah, praying to God in the wilderness for his death and the angel of the Lord visiting him with food. On the surface, this looks like a simple anecdote of a hungry man being fed by the angel. But, on a deeper analysis, we begin to wonder why Elijah was in the wilderness and why did he pray for his death. The answer to these questions reveals to us the hunger for revenge nursed by a queen. Prophet Elijah was running away from queen Jezebel who was hungry to devour the prophet, since he had interfered with her ‘god’ - Baal. Elijah had proved to King Ahab that Baal, brought into Israel by Jezebel, was a false god.

Creating and worshipping false gods (like power, money etc.) is an insatiable hunger for some human beings. Those who have the courage to tear down the façade of such false gods are put to death. That was the story of Jezebel and Elijah. God intercepted Elijah’s wishful trip to death and gives him enough strength to carry on his mission of demolishing false gods. Strengthened by the nourishment from the angel, Elijah continued his struggle with the worldly powers, sheltering and worshipping false gods!

When I read this incident, my mind thought of many other struggles taken up by people against false gods and worldly powers. The people of Tamil Nadu have taken up a struggle against the government, demanding that the government close down liquor shops in Tamil Nadu. It is a pity that the political leaders are trying to highjack this meaningful struggle with their meaningless accusations of one another. We pray that the Government of Tamil Nadu listens to the painful cry of the people trying to tell the hard truth that liquor is a false god and its worship by the government is not justified at any cost! We also remember the struggle of the people against the ‘temples’ called ‘Sterlite’ and ‘Koodankulam’. We remember the thousands of people, common people, who had protested against these ‘gods’ and laid down their lives. May those who have laid down their lives against these false gods, inspire the rest of us to carry on with the struggle!

Listening to the truth is, perhaps, one of the hardest challenges for human beings. It requires a noble mind to swallow the bitter pill of truth. More often, when a bitter ‘truth-pill’ is given, one tends to spit it out and, get angry with the one who provided the ‘truth pill’. This is the scene described in today’s Gospel – John 6: 41-51. The opening lines of today’s gospel give us enough food for thought:
The Jews then murmured at him, because he said, ‘I am the bread which came down from heaven’. And they said, “Is not this Jesus, the son of Joseph, whose father and mother we know? How is it then that he says, ‘I have come down from heaven’?” Jesus therefore answered and said unto them, “Murmur not among yourselves”. (John 6: 41-43)

Let us back track a little bit. People in thousands followed Jesus to the desert to listen to him. Jesus had pity on them and fed them with five loaves and two fish. (Gospel on the 17th Sunday) Having seen an easy way to fill their stomach, they followed Jesus to the next spot. Jesus, if he were an ordinary ‘fame hungry’ or ‘power hungry’ person, he would have performed miracles to keep the people always following him, singing ‘hosanna’. But, Jesus was different. He did not hesitate to tell them the hard truth:
 “Truly, truly, I say to you, you seek me, not because you saw signs, but because you ate your fill of the loaves. Do not labor for the food which perishes, but for the food which endures to eternal life” (John 6: 26-27) - (Gospel of last Sunday)

This was indeed a bitter pill to swallow. Sometimes, when faced with bitter truths, some tend to resort to a defence tactics – namely, trying to find loop holes in not ‘what is said’ but ‘who said it’. This is what happened to Jesus when he invited the people to a higher plane of getting nourished by the person of Jesus. The Jews (namely, the religious leaders) began attacking the person of Jesus rather than what he said. Jesus does not buckle down under this attack, but continues to invite them to a share of his life – eternal life! We shall continue this incident from Chapter 6 of St John’s gospel for another two weeks to come. For the time being, we shall leave this conversation at this point and turn our attention to August 6 and 9.

On August 6 and 9, 1945, two atom bombs were dropped in Hiroshima and Nagasaki. More than 240,000 innocent civilians were killed by the two atomic bombs. Half this number died on those two days or in a few days later. But the other half had suffered for years and died a slow death. One of them is Sadako Sasaki. Here is an extract on this little girl, titled:
Sadako Sasaki’s Cranes for Peace
Sadako Sasaki was two years old when the bomb was dropped on Hiroshima. Ten years later, she was diagnosed with leukemia, and informed that she had only one year to live.
Sadako’s friends reminded her of a Japanese legend: that if you make a thousand paper cranes, you get one wish. Sadako spent the remainder of her life folding paper cranes – but had only reached 644 when she died. After her death, her friends continued making her paper cranes, and raised the money to build a monument in her honour. Now, children from all over the world fold paper cranes to be placed beneath her statue in commemoration of the atrocities suffered in Hiroshima.

We are aware that paper cranes don’t fly. But the dreams and desires of thousands of children who made those paper cranes can fly beyond human made boundaries and create a world without war. August 9, 2015, being a Sunday, Pope Francis spoke on the 70th anniversary of the bombing of Nagasaki in his Angelus at St Peter’s Square. Here are the thoughts shared by Pope Francis on that day:
Dear brothers and sisters, seventy years ago, on 6 and 9 August 1945, the terrible atomic bombings of Hiroshima and Nagasaki took place. Although much time has passed, this tragic event still incites horror and repulsion. It has become the symbol of the boundless destructive power of man when he makes distorted use of scientific and technical advancements, and serves as a perpetual warning to humanity to forever repudiate war and ban nuclear arms and all weapons of mass destruction. This sad anniversary calls us above all to pray and work for peace, to spread throughout the world an ethic of brotherhood and a climate of peaceful coexistence among peoples.
He closed his Angelus message with a strong plea to put an end to the insatiable hunger of human beings for war:
From every land may a single voice be raised: no to war, no to violence and yes to dialogue, yes to peace! With war, you always lose. The only way to win a war is to not make it!

May Sadako and millions of children, killed in senseless wars, like the ones waged in Syria and Yemen, plead before the throne of God, to bring lasting peace to our war-torn planet. May the paper cranes fly high!

Statue of Sadako Sasaki in Hiroshima

பொதுக்காலம் 19ம் ஞாயிறு

சென்ற வார ஞாயிறு சிந்தனையில் நாம் எண்ணிப்பார்த்த ஒரு குறும்படத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். இரு சிறுத்தைகளும், ஒரு மானும் இணைந்து விளையாடும் அழகை, அந்தப் படம் வெளிக்கொணர்ந்தது. அந்த குறும்படத்தின் இறுதியில் திரையில் தோன்றும் சொற்கள், இன்றைய நம் சிந்தனைகளை ஆரம்பித்து வைக்கின்றன. "மிருகங்களுக்குப் பசியில்லாதபோது, வன்முறையும் இல்லை. மனிதர்கள் மட்டும் ஏன் காரணம் ஏதுமின்றி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்?" என்ற கேள்வியுடன் அந்தக் குறும்படம் முடிவுற்றது.
பசியையும், வன்முறையையும் இணைக்கும் இந்தக் கேள்விக்கு, எளிதான விடைகள் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, நாம் வாழும் இன்றைய உலகில், காரணம் ஏதுமின்றி வெடிக்கும் வன்முறைகளால், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும், குழந்தைகள், குறிப்பாக, பெண் குழந்தைகள் துன்புறுவதையும் காணும்போது, வன்முறைகளுக்கு முடிவே கிடையாதா என்ற விரக்திக்கு நாம் அடிக்கடி தள்ளப்படுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்குப் பசி வந்தால், பத்து பண்புகள் பறந்து போய்விடும் என்பதை, தமிழ் மூதறிஞர் ஔவைப்பாட்டி சொல்லிச் சென்றார். மானம், குலப்பெருமை, கற்ற கல்வி, அழகிய தோற்றம், பகுத்தறிந்து பார்க்கும் அறிவு, தானம் செய்வதால் வரும் புகழ், தவம் மேற்கொள்ளும் ஆற்றல், முன்னேற்றம், விடாமுயற்சி, பெண்மீது கொள்ளும் காதல் உணர்வு ஆகிய பத்து பண்புகளும், பசியால் வாடும் ஒருவரிடமிருந்து ஓடிவிடும் என்பதை 'நல்வழிப்பாடல்' என்ற தொகுப்பில் பட்டியலிட்டுள்ளார், ஔவைப்பாட்டி.
அவர் இங்கு 'பசி' என்று குறிப்பிடுவது, நமது வயிற்றுப் பசி. உடல் தொடர்புடைய இந்தப் பசி, நமக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், அதைத் தாண்டி, மனிதர்கள் மட்டும் அறிவுப்பசி, அதிகாரப்பசி, ஆணவப்பசி, ஆசைப்பசி, காமப்பசி, கோபப்பசி என்று, வேறு பல வடிவங்களிலும் 'பசி'யால் வாடுகின்றனர். வயிற்றை வாட்டும் பசி என்றால், அதை உணவைக்கொண்டு தீர்த்துவிடலாம். ஆனால், நமது மனதையும் அறிவையும் வாட்டும் வேறு பல பசிகளை, தீர்க்கும் வழியறியாது தவிக்கும்போது, வன்முறை என்ற வழியை தெரிவு செய்கிறோம்.

கடந்த இரு ஞாயிறு வழிபாடுகளில், பசியையும், உணவையும் இணைக்கும் விவிலியப் பகுதிகளைச் சிந்தித்து வந்துள்ளோம். இன்று, மூன்றாவது வாரமாக, பசியும், உணவும் நம் சிந்தனைகளை மீண்டும் நிறைக்கின்றன. இந்த வாசகங்களில், வயிற்றுப்பசி, உணவளித்தல் என்ற கருத்துக்கள் மையமாகக் காணப்பட்டாலும், இவற்றைச் சிறிது ஆழமாக அலசும்போது, மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பல்வேறு பசிகள், இந்த வாசகங்களில் வெளிப்படுவதையும் நாம் உணரலாம். எடுத்துக்காட்டாக:
பாலைநிலத்தில் அமர்ந்து, தாம் சாகவேண்டுமென்று மன்றாடிய இறைவாக்கினர் எலியாவுக்கு, வானதூதர் உணவளிக்கும் நிகழ்வு, இன்றைய முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது (1அர.19:4-8). இப்பகுதியை மேலோட்டமாக சிந்திக்கும்போது, பசித்திருந்த இறைவாக்கினருக்கு வானதூதர் உணவளித்தார் என்ற அளவில் நமது சிந்தனைகள் நின்றுபோக வாய்ப்புண்டு. ஆனால், எலியா ஏன் பாலை நிலத்திற்குச் சென்றார் என்பதை சிந்திக்கும்போது, இந்த நிகழ்வில் புதைந்திருக்கும் வேறுவகையானப் பசிகளும், அவை உருவாக்கும் வெறிகளும் வெளிப்படுகின்றன.

இஸ்ரயேல் அரசன் ஆகாபுவின் மனைவி ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறியில் –பசியில் - இருந்ததால், எலியா, பாலை நிலத்திற்கு ஓட வேண்டியதாயிற்று. அரசி ஈசபேல் வணங்கிவந்த பாகால் தெய்வம், பொய்யான தெய்வம் என்பதை, இறைவாக்கினர் எலியா, அரசருக்கும், மக்களுக்கும் உணர்த்தியதால், ஈசபேல், எலியாவைக் கொல்லும் வெறி கொண்டார்.

தெய்வ வழிபாடு என்பது, மனிதர்கள் மேற்கொள்ளும் ஓர் உன்னத முயற்சி. ஆனால், உண்மை தெய்வங்களை புறந்தள்ளிவிட்டு, பணம், பதவி, போன்ற பொய் தெய்வங்களை வழிபடும் மனிதர்களை அவ்வப்போது சந்தித்து வருகிறோம். அத்தகைய வழிபாடுகளில் ஈடுபட்டிருப்போரிடம், அத்தெய்வங்கள் பொய்யானவை என்பதைத் துணிந்து சொன்ன மனிதர்களை, அவர்கள், தங்கள் கொலைப்பசிக்கு இரையாக்கியுள்ளதையும் நாம் அறிவோம். அவர்களில் ஒருவரான அரசி ஈசபேல், எலியாவைக் கொல்லத் துரத்துகிறார்.
தமிழகத்தில், 'ஸ்டெர்லைட்', கூடங்குளம், 'டாஸ்மாக்' என்ற பல அரக்கர்களை வழிபட்டு வரும் அரசுக்கும், முதலாளிகளுக்கும் எதிராக மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள், நம் நினைவுகளை கீறுகின்றன. இந்தப் போராட்டங்களில் உயிர் துறந்த தியாக உள்ளங்கள் இறைவனின் அமைதியில் இணையவேண்டும் என்றும், இவர்கள், தொடர்ந்து, மக்களின் போராட்டங்களுக்கு உந்துசக்தியாக இருக்கவேண்டும் என்றும் சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.
போலி தெய்வங்களோடும் அவற்றை வழிபடும் மனிதரோடும் மேற்கொள்ளும் போராட்டம் நீண்டது என்றும், அப்போராட்டத்திலிருந்து தப்பித்துச் செல்லாமல், அதைத் துணிவுடன் சந்திக்க, இறைவன் நமக்குத் தேவையான சக்தியை, தன் வானதூதர் வழியாக, வழங்குவார் என்றும் இன்றைய முதல் வாசகம் சொல்லித் தருகிறது. வானதூதர் தந்த உணவினால் ஊட்டம் பெற்ற இறைவாக்கினர் எலியா, தன் போராட்டத்தைத் தொடர, இறைவனின் மலையை அடைந்தார் என்று இன்றைய முதல் வாசகம் நிறைவு பெறுகிறது.

பொதுவாகவே, உண்மைகள் கசக்கும். அந்தக் கசப்பான மருந்தை அருந்தி, குணம் பெறுவதற்குப் பதில், மருந்தைத் துப்பிவிட முயல்கிறோம். ஒருசில வேளைகளில், அந்த மருந்தைத் தந்தவர் மீதும் நமது கோபத்தைக் காட்டுகிறோம். இத்தகைய ஒரு சூழலை இன்றைய நற்செய்தி சித்திரிக்கிறது. இதோ, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள்:
யோவான் நற்செய்தி 6: 41-51
அக்காலத்தில், “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ‘நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன் என இவர் எப்படி சொல்லலாம்?” என்று பேசிக்கொண்டார்கள்.

இயேசு கூறிய உண்மைகளைக் கேட்பதற்கு, அவரைத் தேடி ஆயிரக்கணக்கான மக்கள், பாலைநிலம் சென்றனர் என்பதையும், அவர்களது உள்ளப் பசியைப் போக்கிய இயேசு, அவர்களது வயிற்றுப் பசியையும் தீர்த்தார் என்பதையும் இருவாரங்களுக்கு முன் நற்செய்தியாகக் கேட்டோம். தங்கள் பசி போக்கும் எளிதான குறுக்கு வழி, இயேசு, என்றெண்ணிய மக்கள், அவரைத் தேடி மீண்டும் சென்றனர் என்பதை, சென்ற வார நற்செய்தியில் கேட்டோம். தன்னை தேடி வந்த மக்களைப் பயன்படுத்தி, தன் புகழை வளர்த்துக்கொள்ளும் பசிகொண்ட சாதாரண அரசியல் தலைவராக இயேசு வாழ்ந்திருந்தால், உணவைப் பலுகச் செய்த புதுமையை மீண்டும், மீண்டும் அவர்கள் நடுவில் நிகழ்த்தி, தன் புகழ் பசியைத் தீர்த்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, இயேசு, மக்களின் நலனை முன்னிறுத்தி, அவர்களுக்கு சில உண்மைகளைக் கூறினார்.
மக்கள் பேராசைப் பசி கொண்டதும், அதைத் தீர்க்க, தன்னை ஒரு குறுக்கு வழியாகக் கருதி, அவர்கள் தேடி வந்ததும் தவறு என்ற உண்மைகளை, இயேசு, வெளிப்படையாகக் கூறினார். அவர் வழங்கிய கசப்பு மருந்தை ஏற்க மறுத்த யூதர்கள், மருந்தைக் கொடுத்த இயேசுவை எதிர்க்கும் முயற்சிகளில் இறங்கினர்.

உண்மையைக் கூறும் ஒருவரை, கருத்தளவில் எதிர்க்க முடியாதவர்கள், பொதுவாகப் பயன்படுத்தும் மற்றொரு வழி, உண்மையைச் சொன்னவரின் பிறப்பு, குலம் இவற்றை கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குவது! இத்தகைய எதிர்ப்புக் கணைகளையே, யூதர்கள் இயேசுவின் மீது தொடுத்தனர். தனது பிறப்பைக் குறித்து அவர்கள் ஏவியக் கணைகளைப் பொருட்படுத்தாத இயேசு, மனம் தளராமல், மக்களுக்கு நலம் தரும் உண்மைகளைத் துணிவுடன் சொன்னார். இந்த உண்மைகளை இன்னும் இரு வாரங்கள் நமது  ஞாயிறு வழிபாட்டில் தொடர்ந்து பயில முயல்வோம்.

இறுதியாக ஓர் எண்ணம்... கடந்த வாரம், ஆகஸ்ட் 6, 9 ஆகிய இரு தேதிகளைக் கடந்துவந்தபோது, உலகின் கவனம் மீண்டும் ஜப்பானை நோக்கித் திரும்பியது. 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமா நகரிலும், 9ம் தேதி நாகசாகி நகரிலும் அமெரிக்க ஐக்கிய நாடு அணுகுண்டுகளால் தாக்கியபோது, 1,29,000த்திற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அணுக்கதிர் வீச்சுக்களால் பாதிக்கப்பட்ட 1 இலட்சத்திற்கும் அதிகமானோர், பல்வேறு நோய்களால் துன்புற்று இறந்துள்ளனர்.
1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்தபோது, சடக்கோ சசாக்கி (Sadako Sasaki) என்ற பெண் குழந்தைக்கு 2 வயது. பத்தாண்டுகள் கழித்து, அப்பெண்ணுக்கு, இரத்தத்தில் புற்றுநோய் உள்ளதென்று  கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இனி ஓராண்டு வாழக்கூடும் என்றும் கூறப்பட்டது.
சடக்கோவின் தோழிகள் அவரிடம் ஜப்பானில் நிலவும் ஒரு புராணக் கதையைக் கூறினர். அதாவது, ஒருவர், 1000 காகித நாரைகளைச் செய்தால், அவர் விழையும் ஓர் ஆசை நிறைவேறும் என்ற கதையைச் சொன்னார்கள். அதன்படி, சிறுமி சடக்கோ, காகித நாரைகளைச் செய்ய ஆரம்பித்தார். அவர் 644 நாரைகள் செய்து முடித்த வேளையில் இறந்தார். அவர் இறந்ததும், அவரது தோழிகள் சேர்ந்து, பல்லாயிரம் காகிதக் நாரைகளைச் செய்து, நிதி திரட்டி, சிறுமி சடக்கோ நினைவாக ஒரு சிலையை உருவாக்கினர்.
சிறுமி சடக்கோ, 1000 நாரைகளைச் செய்யத் துவங்கிய வேளையில், அவர் மனதில் என்னென்ன ஆசைகள் இருந்திருக்கும் என்பதைச் சிறிது கற்பனை செய்து பார்க்கலாம். தான் உயிர் வாழவேண்டும் என்ற ஆசை, கட்டாயம் அச்சிறுமியின் மனதில் இருந்திருக்கும். அத்துடன், தான் துன்புறுவதுபோல், இனி உலகில் எந்தக் குழந்தையும் துன்புறக் கூடாது என்ற ஆசையும் அவர் மனதில் இருந்திருக்கும் என்று நம்பலாம்.
இன்றளவும், சிறு குழந்தைகள், காகித நாரைகளை செய்து, அந்தச் சிலைக்கருகே காணிக்கையாக வைக்கின்றனர். ஹிரோஷிமா, நாகசாகியில் நிகழ்ந்தது, இனி, உலகில் ஒருபோதும் நிகழக்கூடாது என்ற ஆசையுடன், குழந்தைகள் இந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர். அக்குழந்தைகள் ஆசைப்படும் அமைதியான உலகை உருவாக்குவது, நமது தலைமுறையின், குறிப்பாக, இளைய தலைமுறையினரின் கடமை.
2015ம் ஆண்டு, ஆகஸ்ட் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆனதால், அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹிரோஷிமா, நாகசாகி தாக்குதல்களின் 70ம் ஆண்டு நினைவை தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்டார். அவ்வேளையில் அவர் கூறிய சொற்களுடன் இன்றைய நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
"ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு வீசப்பட்டது, ஓர் அடையாளமாக விளங்குகிறது. அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் தவறாகப் பயன்படுத்தும்போது, மனிதர்களிடம் வெளிப்படும் அழிவு சக்திக்கு ஓர் அடையாளமாக இந்நிகழ்வு விளங்குகிறது" என்று தன் துயரங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இறுதியில், "போரை வெல்வதற்கு ஒரே வழி, போரிடாமல் இருப்பது" என்று அழுத்தந்திருத்தமாக கூறி முடித்தார்.

போரற்ற, வன்முறையற்ற பூமி உருவாகவேண்டும்; போர்க்கருவிகளை, அணு ஆயுதங்களை உருவாக்கி, வர்த்தகம் செய்யும் மனிதர்களின் வெறி அடங்கவேண்டும்; என்ற நமது ஆவல், வெறும் காகிதப் பறவைகளாக தொங்கிக் கொண்டிராமல்உண்மையானப் பறவைகளாக விடுதலை வானில் சிறகடித்துப் பறக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.