26 February, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி – முடங்கியவருக்கு முழு விடுதலை


Gautham Sarang with his Dad and friends

பூமியில் புதுமை நவீன வாழ்க்கைமுறை வேண்டாம்

கல்வி என்பது, பாடப் புத்தகத்தில் இல்லை; அது, தீர்வுகளைக் காண்பதில் அடங்கியிருக்கிறது என்கிறார், கெளதம் சாரங் என்ற இளையவர். பள்ளிக்கு செல்லவில்லை, பட்டமும் வாங்கவில்லை. ஆனால், கெளதம் அவர்களால், ஆறு மொழிகளை சரளமாகப் பேசமுடியும், இணையத்தளங்களை வடிவமைக்கமுடியும், இயற்கைக்கு எந்தக் கெடுதலும் விளைவிக்காத வீடுகளைக் கட்டமுடியும்.
கெளதமின் பெற்றோர், கோபாலகிருஷ்ணன் மற்றும் விஜயலட்சுமி இருவரும், அரசுப் பள்ளி ஆசிரியர்களாகப் பணியாற்றியபோது, நிஜ வாழ்வின் சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லாமல், அதற்குத் தேவையான நம்பிக்கையை வழங்காமல், நுகர்வை மட்டும் கற்பித்துவரும் இக்கல்விமுறைக்கு, மாற்று தேவை என்றுணர்ந்தனர். எனவே, இருவரும், தங்கள் அரசுப்பணியை விட்டுவிட்டு, கேரள மாநிலம், அட்டப்பாடி, கூலிக்கடவு அருகே அமைந்துள்ள ஒரு காட்டுப் பகுதியில், தொண்ணூறுகளில் குடியேறினர். தங்கள் மகனை அவர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை.

"நாம் வாழும் இயற்கைச் சூழல் பாதுகாக்கப்பட்டால்தான் நமக்கு எதிர்காலம் என்றால், அதைக்குறித்து சொல்லித்தருவதுதானே கல்வி?" என்று கேட்கும் கௌதம் அவர்கள், தன் மூன்று குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல், அவர்களை, அவர்கள் சூழலில் வளரவிட்டு, இவரே கற்பிக்கிறார். அவர் தன் குடும்பத்தோடு தங்கியிருக்கும் வீடு, அவரே வடிவமைத்துக் கட்டியது. சூழலுக்கு எந்த ஊறும் விளைவிக்காத வகையில், மூங்கில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது, அந்த வீடு.
"பள்ளிக்கு செல்லாதீர்கள். பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பிரச்சாரம் செய்வது என் நோக்கமல்ல. அடுத்த தலைமுறைக்கும் இந்தப் புவி வேண்டும். அதற்கு, நம் வாழ்வு முறையில், சில மாற்றங்கள் வேண்டும். அவற்றைச் சொல்லித் தருவதற்கு கல்விமுறையில் மாற்றங்கள் வேண்டும் என்கிறேன். அவ்வளவுதான்" என்கிறார் கௌதம்.

கெளதம் மற்றொரு விடயத்தையும் முன் வைக்கிறார். "கிராமத்தில் குடியேறுவது, ஒரு வித ஃபேஷனாக, இப்போது மாறிவருகிறது. அதாவது, நகரத்தில் இலட்சங்கள், கோடிகள் என சம்பாதித்துவிட்டு, கிராமம் சென்று, விவசாயம் செய்கிறேன், கிராமத்தில் வாழ்கிறேன் என்கிறார்கள். இது வரவேற்க வேண்டிய விஷயம்தான் என்றாலும், இதில் ஒரு பெரும் சிக்கல் உள்ளது. இவர்கள், கிராம வாழ்க்கையைப் பின்பற்றுவதற்கு பதிலாக, இவர்கள் வாழ்ந்த நுகர்வு மயமான நகர வாழ்க்கையை கிராமத்தில் திணிக்கிறார்கள். அதுதான் பெரும் சிக்கல். இயற்கையுடன் இணைந்த வாழ்வை வாழ நீங்கள் கிராமத்திற்குதான் செல்லவேண்டும் என்பது இல்லை. நீங்கள் இருக்கும் இடத்திலேயே இயன்ற வரை நுகர்வை குறைத்து வாழுங்கள்" என்கிறார் கௌதம்.
இயற்கையைச் சிதைக்காமல், மனிதத்துடன் வாழ்வதே, கெளதம் சாரங் அவர்களின் வாழ்க்கைத் தத்துவம். (பி.பி.சி. தமிழ்)

பி.பி.சி. தமிழ் இணையத்தில் மு.நியாஸ் அகமது அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து...

There was no longer room for them – Mark 2:2

ஒத்தமை நற்செய்தி முடங்கியவருக்கு முழு விடுதலை - 1

 இவ்வுலகத்தில் உங்களை எது அதிக ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது?” என்று ஒரு முறை தலாய்லாமா அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அவர் சொன்ன பதில், நமது விவிலியத்தேடலை, இன்று ஆரம்பித்து வைக்கிறது:
"இவ்வுலகில் என்னை அதிகம் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது, மனிதர்களே. அவர்கள் தங்கள் உடல்நலனைத் தியாகம் செய்து, பணம் திரட்டுகிறார்கள். பின்னர் திரட்டிய பணத்தைத் தியாகம் செய்து, உடல்நலனை மீண்டும் பெற முயற்சி செய்கிறார்கள்.
எதிர்காலத்தைப் பற்றிய கவலையால், மனிதர்கள், நிகழ்காலத்தை அனுபவிக்காமல் போகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் நிகழ்காலத்திலும் வாழ்வதில்லை... எதிர்காலத்திலும் வாழ்வதில்லை. இறக்கவே போவதில்லை என்ற கற்பனையில் மனிதர்கள் வாழ்கிறார்கள்... இறுதியில் வாழாமலேயே இறந்துவிடுகிறார்கள்" என்று, தலாய்லாமா அவர்கள் சொன்னார்.
இயேசுவின் குணமளிக்கும் புதுமைகளை சிந்தித்துவரும் இவ்வேளையில், தலாய்லாமா அவர்களின் கூற்று, உடல் நலத்தை இழப்பது, மீண்டும் பெறுவது ஆகியவற்றைக் குறித்து வெகு ஆழமான சிந்தனைகளை உருவாக்குகிறது.

ஒத்தமை நற்செய்திகள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளில், இடம்பெற்றுள்ள பொதுவான புதுமைகளில், முதல் மூன்று புதுமைகளை, கடந்த 5 வாரங்களாக சிந்தித்து வந்துள்ள நாம், இன்று, நான்காவது பொதுவானப் புதுமையில் அடியெடுத்து வைக்கிறோம். அதுதான், இயேசு, முடக்குவாதமுற்ற ஒருவரை குணமாக்கும் புதுமை.

இயேசு ஆற்றியப் புதுமைகளில், அவரை மையப்படுத்தி சிந்தனைகளை எழுப்புவது, நம் வழக்கம். அதே நேரத்தில், இயேசு, அந்தப் புதுமைகளை ஆற்றியபோது இருந்தச் சூழல், அப்புதுமைகளில் பங்கு பெற்றோர், போன்ற அம்சங்களையும் சிந்திப்பது பயனளிக்கும். இன்று, அந்தக் கோணத்தில், நமது தேடலைத் துவக்குவோம்.
கப்பர்நாகும் ஊரில், இயேசு, சீமோனுடைய மாமியாரைக் குணமாக்கிய புதுமையைத் தொடர்ந்து, அங்கு நடந்ததை, நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு கூறினார்: மாலை வேளையில், கதிரவன் மறையும் நேரத்தில் நோயாளர்கள், பேய்பிடித்தவர்கள் அனைவரையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள். நகர் முழுவதும் வீட்டு வாயில்முன் கூடியிருந்தது. (மாற்கு 1: 32-33)
இவ்வார்த்தைகளின் எதிரொலியாக, இன்று நாம் சிந்திக்கும் புதுமையின் துவக்க வரிகள் ஒலிக்கின்றன.
சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. (மாற்கு 2: 1-2)

மாற்கு கூறும் இவ்விரு நிகழ்வுகளிலும் இயேசுவை நாடி கூட்டமாய் வந்தவர்களில் பெரும்பாலானோர் நோயுற்ற ஏழைகள் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அந்தக் கூட்டத்தில் ஒரு சில மறைநூல் அறிஞர்களும் இருந்தனர் என்பதை, இந்தப் புதுமையின் பிற்பகுதியில் வாசிக்கிறோம். (மாற்கு 2: 6-7)
ஆனால், நற்செய்தியாளர் லூக்காவோ, இப்புதுமையின் ஆரம்பத்திலேயே, பரிசேயர்களும், திருச்சட்ட ஆசிரியர்களும் அங்கிருந்தனர் என்று அறிமுகம் செய்து வைக்கிறார்:
லூக்கா, 5: 17
ஒரு நாள் இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது. கலிலேய, யூதேயப் பகுதிகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும், எருசலேமிலிருந்தும் வந்திருந்த, பரிசேயரும், திருச்சட்ட ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள்.

லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ள இந்த அறிமுக வரிகளை சிறிது ஆழமாகச் சிந்திக்கும்போது, சில நெருடலான எண்ணங்கள் தோன்றுகின்றன. இயேசுவின் வல்லமை, ஒரு சில புதுமைகளின் வழியே, அதிலும் சிறப்பாக, குணமளிக்கும் புதுமைகளின் வழியே, பல இடங்களிலும் பேசப்பட்டு வந்தது. இதைக் கேள்விப்பட்டு, பலர், இயேசுவிடம் என்னதான் நடக்கிறதென்பதைக் காணும் ஆர்வத்தில் அங்கு வந்தனர். ஏராளமான எளிய மக்கள், இது போன்ற புதுமை தங்கள் வாழ்விலும் நடக்காதா என்ற ஏக்கத்தோடு, நம்பிக்கையோடு, இயேசுவைத் தேடி வந்தார்கள்.
இவர்களெல்லாம் வந்தது சரிதான். ஆனால், மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள், திருச்சட்ட ஆசிரியர்கள் ஆகியோருக்கு அங்கே என்ன வேலை? அதுவும் யூதேயாப் பகுதியில் உள்ள எல்லா ஊர்களிலிருந்தும், எருசலேமிலிருந்தும் அவர்கள் வந்திருந்ததாக நற்செய்தியாளர் லூக்கா சிறப்பான முறையில் குறிப்பிட்டுள்ளார்.

அன்பர்களே, ஒரு கற்பனை நிகழ்வுடன் இதைப் புரிந்துகொள்ள முயல்வோம். தமிழ்நாட்டில், மதுரை, அல்லது, திருநெல்வேலிக்கு அருகே, ஒரு சிற்றூரில் வாழும் தனி மனிதர் ஒருவரிடம், அசாத்திய சக்திகள் வெளிப்படுவதாகவும், அவர் வழியாக, நல்ல காரியங்கள் நடப்பதாகவும், அந்த ஊரை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் போகின்றனர் என்றும் செய்திகள் வருகின்றன என்று வைத்துக்கொள்வோம்.
விரைவில், அந்த ஊருக்கு, சென்னையிலிருந்து, அல்லது, டெல்லியிலிருந்து, அரசு அதிகாரிகளும், மதத் தலைவர்களும் போக வேண்டிவரும். இவர்கள் ஏன் அங்கு போக வேண்டும்? அந்நிகழ்வுகளில் பங்கேற்கவா? பயன் பெறவா? இல்லை. அந்த சம்பவத்தைப் பற்றி மேலிடத்திற்கு விவரங்கள் சொல்ல வேண்டும்... அல்லது அந்த சம்பவத்தின் மையமாக இருப்பவர் எப்படிப்பட்ட ஆள், அவர் செய்யும் காரியங்கள் சட்டபூர்வமானவைதானா என்ற கேள்விகளுக்கு விடை தேடவேண்டும்... இவையே, இந்த அரசு அதிகாரிகளின் முக்கிய நோக்கம். மேலிடத்தின் கை பொம்மைகள் இவர்கள்.

நலம் நாடிவந்த ஏழைகள், குறை காணவந்த அறிஞர்கள் என்ற இந்த இருவேறு வகைப்பட்டவர்களை இணைத்து நாம் சிந்திக்கும்போது, இந்தியாவிலும், உலகின் பல்வேறு வறுமைப்பட்ட நாடுகளிலும், நிலவும் மருத்துவ உலகத்தைப் பற்றி எண்ணிப்பார்க்க நமக்கு ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியாவில் பலகோடி ஏழை மக்கள் நாடிச்செல்லும் மருத்துவ உதவிகளைப் பற்றி நாம் எண்ணிப்பார்க்கலாம். ஆஸ்துமா நோயினால் துன்புறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளன்று ஆந்திராவின் ஐதராபாத் நகரில் நடைபெறும் மீன் மருத்துவத்தைத் தேடிச் செல்வதுபற்றி நமக்குத் தெரியும். அதேபோல், எலும்பு முறிவுக்கு தமிழ்நாட்டில் புத்தூர் எனுமிடத்தில் கிடைக்கும் மருத்துவ உதவிகள் பற்றியும் நமக்குத் தெரியும். கை, கால் இழந்தோருக்குச் செயற்கை உறுப்புக்களைப் பொருத்துவதில் புகழ்பெற்ற ஜெய்ப்பூர், வேலூரில் புகழ்பெற்ற கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (Christian Medical College) மருத்துவமனை என்று பல இடங்கள் நம் மனக்கண் முன் விரிகின்றன.

மேலே குறிப்பிட்ட இந்த மருத்துவ உதவிகள் அனைத்திற்கும் ஒரு பொதுவான அம்சம் உண்டு. இவை அனைத்துமே இலவசமாக, அல்லது, மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் மருத்துவ வசதிகள். அமெரிக்கா, ஐரோப்பா, இன்னும் பல நாடுகளில் மருத்துவத்திற்கு ஆகும் செலவைவிட, ஆசியாவில், குறிப்பாக, இந்தியாவில் ஆகும் செலவு, மிக மிகக் குறைவு. இதைக்குறித்து நாம் பெருமைப்பட வேண்டும்.

அதேநேரம், இயேசுவின் குணமளிக்கும் செயல்களைக் குறை கூறுவதற்கென்றே வந்திருந்த மறைநூல் அறிஞர்களைப் போல்,  செலவு குறைந்த இந்த மருத்துவ உலகின் உதவிகளை குறைகூற, அல்லது, இவற்றைத் தடுக்க, அண்மையக் காலங்களில், ஆசிய நாடுகளில் படையெடுத்திருக்கும் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மருந்துகள் தயாரிப்பதில் யாருக்கு உரிமம் உண்டு என்பதைக் குறித்து, இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு வழக்கு நடைபெற்றது. நோவார்டிஸ் (Novartis) என்ற வெளிநாட்டு மருத்துவ நிறுவனம் தொடுத்த அந்த வழக்கு வேதனையும், அதிர்ச்சியும் தந்தது. அந்நிறுவனம் தொடுத்த வழக்கின் முக்கிய வாதம் இதுதான். இந்திய மருத்துவ நிறுவனங்கள் தாயரிக்கும் குறைந்த விலை மருந்துகளுக்கு, குறிப்பாக, புற்றுநோய்க்கென இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை உச்சநீதி மன்றம் தடைசெய்ய வேண்டும் என்பதே, நோவார்டிஸ் நிறுவனத்தின் வாதம். ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், நல்ல வேளையாக, இந்திய உச்ச நீதி மன்றம், 2013ம் ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதி, நோவார்டிஸ் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.
வீடு தீப்பற்றி எரியும்போது, தண்ணீர் ஊற்றி அணைப்பதற்குப் பதில், தண்ணீர் ஊற்றுபவர்களைத் தடை செய்யவேண்டும் என்று கூச்சலிடும் இந்த நோவார்டிஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் ஒரே குறிக்கோள் என்ன?... எரியும் வீட்டிலிருந்து என்னென்ன பறிக்க முடியும் என்பது ஒன்றே.

இயேசுவைச் சுற்றி கூடியிருந்த மதத் தலைவர்கள், அவரிடம் குற்றம் காணவேண்டும், அவர்மீது குற்றப் பத்திரிகை பதிவுசெய்ய வேண்டுமென வந்திருந்தனர். அந்நேரத்தில், இன்னும் நான்கு பேர், தங்கள் நண்பனைக் கட்டிலோடு சுமந்தவண்ணம் அங்கு வந்து சேர்ந்தனர். ஒரு வகையில் சொல்லப்போனால், இவர்கள்தாம் இப்புதுமையின் நாயகர்கள். இவர்கள் நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைப் பயில, அடுத்தத் தேடலில் முயல்வோம்.


24 February, 2019

Turning the other cheek… மறு கன்னத்தைக் காட்டவும்...



7th Sunday in Ordinary Time

In life, we experience moments when we wish to be like god, and, moments when we wish god to be like us. In moments of feeling wronged, mistreated or humiliated, we sense a rush of hatred and revenge. We would like to possess god-like power to bring ‘our enemies’ down.
To justify such emotions, we find support from sacred scriptures and images. Various religions have depicted gods and goddesses as destroyers of evil - Zeus, and Thor holding a lightning or a hammer as instruments of punishment and goddess Kali holding a sword, and wearing a necklace of skulls.

The Bible portrays God who says: “vengeance is mine, I will repay, says the Lord.” (cf. Deuteronomy 32:35, Romans 12:19). We see God destroying people with flood and fire when they commit crimes. In Tamil, we use a proverb that says: “The king kills instantly, but God kills slowly.” This is similar to the proverb: “The millstones of the gods grind late, but they grind fine.” There is an old Irish blessing that goes like this, “May God bless those who love us. And those who do not love us, may He turn their hearts. And if He does not turn their hearts, may He turn their ankles so we may know them by their limping.”

Thus, we do get a mixed up image of God – the judge and the destroyer! As against these images, today’s liturgical readings challenge us to break the chains of hatred and vengeance. Jesus tells us clearly that God is all merciful and that we need to “be merciful, even as your Father is merciful”. (Luke 6:36)

In the first reading (I Samuel 26: 2,7-9, 12-13, 22-23) we meet David who spared the life of Saul for the second time (the first one is reported in I Samuel 24) in spite of having all the facility to kill him. We read: “There lay Saul sleeping within the encampment, with his spear stuck in the ground at his head; and Abner and the army lay around him. Then said Abi′shai to David, “God has given your enemy into your hand this day; now therefore let me pin him to the earth with one stroke of the spear, and I will not strike him twice.” (I Sam. 26: 7-8)
David left the scene, taking the spear of Saul with him as a proof. When he called out from a distance, Saul woke up with a shock and he searched for his spear to kill David. But, David changed the spear into a symbol of the peace treaty. Today’s first reading closes with the words:  “Here is the spear, O king! … the Lord gave you into my hand today, and I would not raise my hand against the Lord’s anointed.” (I Sam. 26: 22-23)

While David says that he ‘would not raise his hand against the Lord’s anointed’, Jesus says in today’s Gospel to ‘raise our hands’ – not against others, but as a gesture of blessing and embrace… raise our hands to bless and embrace, not only the Lord’s anointed, but our enemies as well.

Today’s Gospel (Luke 6: 27-38) is a continuation of last Sunday’s ‘sermon on the plains’. The full text of the ‘sermon on the plains’, especially the passage we hear today, is quite challenging to our ideas. It is diametrically opposed to the ‘practical’ counsels of the world.
What Jesus tells us in today’s Gospel sounds very ideal and, perhaps, can serve as noble quotes to decorate our churches and schools. But, they are too lofty for us to practice. “Love your enemies, do good to those who hate you, bless those who curse you, pray for those who abuse you. To him who strikes you on the cheek, offer the other also; and from him who takes away your coat do not withhold even your shirt.” (Lk. 6:27-29)

‘Offering the other cheek’ was the guiding principle of the non-violent struggles led by Mahatma Gandhi and Martin Luther King. The Sermon on the Mount was a great source of inspiration for Gandhi. 
In the movie ‘Gandhi’, the great Indian leader is shown, walking one day, with a Presbyterian missionary, Charlie Andrews. The two suddenly find their way blocked by young thugs. The Reverend Andrews takes one look at the menacing gangsters and decides to run. Gandhi stops him and asks, "Doesn't the New Testament say if an enemy strikes you on the right cheek, you should offer him the left?" Andrews mumbles something about Jesus speaking metaphorically. Gandhi replies, "I'm not so sure. I suspect he meant you must show courage; be willing to take a blow, several blows, to show you will not strike back nor will you be turned aside."

The words of Jesus asking his disciples to offer the other cheek have been a source of inspiration as well as a subject for very different interpretations. Gandhi’s interpretation in this movie sounds quite chivalrous. According to Gandhi, turning the other cheek meant showing courage in adversity.

All the challenges placed before us by Jesus in today’s Gospel, are not meant to exhibit one’s courage, not even to gain one’s spiritual stamina. If we turn the other cheek only for our own benefit, it is of less importance. We need to turn the other cheek; we need to give the shirt to the one who takes our coat, in order to win over the so called ‘enemy’.

When I was searching the internet with the phrase – turn the other cheek – I came across very many life events that inspired me. These events are not simply stories of forgiveness. They are stories where the ‘enemy’ was won over by the ‘disciple’. Here is one of them. This took place in the subway of New York in February, 2008:

Julio Diaz has a daily routine. Every night, the 31-year-old social worker ends his hour-long subway commute to the Bronx one stop early, just so he can eat at his favorite diner. But one night last month, as Diaz stepped off the No. 6 train and onto a nearly empty platform, his evening took an unexpected turn.
He was walking toward the stairs when a teenage boy approached and pulled out a knife. “He wants my money, so I just gave him my wallet and told him, 'Here you go,'” Diaz says. As the teen began to walk away, Diaz told him, “Hey, wait a minute. You forgot something. If you're going to be robbing people for the rest of the night, you might as well take my coat to keep you warm.”
The would-be robber looked at Diaz in total bewilderment. He asked him, “Why are you doing this?” Diaz replied: "If you're willing to risk your freedom for a few dollars, then I guess you must really need the money. I mean, all I wanted to do was get dinner and if you really want to join me ... hey, you're more than welcome.”
Diaz says he and the teen went into the diner and sat in a booth. “The manager comes by, the dishwashers come by, the waiters come by to say hi,” Diaz says. “The kid was like, 'You know everybody here. Do you own this place?'”
“No, I just eat here a lot,” Diaz says he told the teen. “He says, 'But you're even nice to the dishwasher.'” Diaz replied, “Well, haven't you been taught you should be nice to everybody?”
“Yea, but I didn't think people actually behaved that way,” the teen said.
When the bill arrived, Diaz told the teen, “Look, I guess you're going to have to pay for this bill 'cause you have my money and I can't pay for this. So if you give me my wallet back, I'll gladly treat you.” The teen “didn't even think about it and returned the wallet”, Diaz says. “I gave him $20 ... I figure maybe it'll help him. I don't know.” Diaz says he asked for something in return — the teen's knife — “and he gave it to me.”
Afterward, when Diaz told his mother what happened, she said, “You're the type of kid that if someone asked you for the time, you gave them your watch.”

This episode closes with the words of wisdom from Julio Diaz. He says: “I figure, you know, if you treat people right, you can only hope that they treat you right. It's as simple as it gets in this complicated world.”

The words of Diaz is an echo of what Jesus says in today’s Gospel: As you wish that men would do to you, do so to them.” (Lk. 6:31)

Every day there are hundreds of ‘Julio Diaz’es practising what Jesus has said, in so many subtle and obvious ways. Unfortunately, most of these incidents do not grab the headlines in our media. Our media is interested only in ‘eye-for-an-eye’ revenge stories.

Last Sunday we mentioned about the Bulwama attack in Jammu-Kashmir in India. The rhetoric of hatred and revenge has saturated our media to a nauseating level. Two days back one of the union ministers has said that the water flowing to Pakistan from eastern rivers will be diverted to Jammu-Kashmir and Punjab.

Let us pray that before the whole world becomes blind following the ‘eye-for-an-eye’ formula, we wake up with a slap on our face, and that we are willing to wake up again and again by ‘turning the other cheek’!

Our closing thoughts are on the three days meeting held in Vatican (February 21 to 24) on the ‘Protection of Minors in the Church’. We pray that the leaders of the Church as well as the world leaders acknowledge the crime perpetuated against innocent, defenceless children and women and take strong steps to stop this atrocity. We shall pray in a special way for the victims of these abuses that they are able to forgive the culprits and move ahead in life!

“Turning the Other Cheek : King and Gandhi”

பொதுக்காலம் 7ம் ஞாயிறு

நம்மில் எத்தனை பேர், அவ்வப்போது, கடவுளைப்போல் மாற விழைகிறோம், அல்லது, கடவுளை, நம்மைப்போல் மாற்ற விழைகிறோம்? நமக்கெதிராக பிறர் தவறிழைக்கும்போது, நம்மை அவமானப்படுத்தும்போது, கோபமும், பழிவாங்கும் உணர்வுகளும், நம்முள் பொங்கி எழுகின்றன. அந்த உணர்வுகளை நியாயப்படுத்த, கடவுளையும் நம்மோடு கூட்டு சேர்த்துக்கொள்கிறோம். கடவுளைப் போன்ற சக்தி நமக்கிருந்தால், அல்லது, கடவுள் நம் பக்கமிருந்தால், நம் பகைவர்கள் அழிந்துபோவர் என்று நாம் எண்ணிப்பார்க்கிறோம்.
'நியாயம்' என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் இவ்வெண்ணங்களை உறுதிசெய்யும் வண்ணம், நம் மதங்களில், பழி தீர்க்கும் தெய்வங்கள் உள்ளனர். மின்னலை கரத்தில் ஏந்தி நிற்கும் கிரேக்கக் கடவுள் சீயுஸ் (Zeus), இடி, மின்னல், புயல் ஆகியவற்றின் அடையாளமாக, கரத்தில் சுத்தியலை ஏந்தி நிற்கும், ஜெர்மானியக் கடவுள் தோர் (Thor), கரங்களில், இரத்தம் தோய்ந்த வாள், சூலாயுதம் ஆகியவற்றைத் தாங்கி, கழுத்தில், மண்டையோடுகளால் செய்யப்பட்ட மாலையை அணிந்து நிற்கும் காளி (Kali) தேவதை... என, பழிதீர்க்கும் கடவுள், பல வடிவங்களில் இருக்கிறார்.

"பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன" (இணைச்சட்டம் 32:35, உரோமையர் 12:19, எபிரேயர் 10:30) என்று கூறும் கடவுளையும், தீமை செய்த மனிதர்களை, வெள்ளத்தினாலும், நெருப்பினாலும் அழிக்கும் கடவுளையும் விவிலியத்தில் சந்திக்கிறோம்.
நம் பழமொழிகளில், தண்டனை வழங்கும் கடவுளை, நேரடியாகவும், மறைமுகமாகவும் குறிப்பிடுகிறோம். "அரசன், அன்று கொல்வான்; தெய்வம், நின்று கொல்லும்" என்ற பழமொழியில், பொறுமையாக, ஆனால், நிச்சயமாக, இறைவன் தண்டனை வழங்குவார் என்று கூறி சமாதானம் அடைகிறோம்.
அயர்லாந்து மக்களின் மரபில் கூறப்படும் ஓர் ஆசீரில், கடவுள் வழங்கக்கூடிய தண்டனையை, சிறிது நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டுள்ளது: "நம்மீது அன்பு கொள்வோரை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. அன்பு செய்யாதவரை, அவர் மனம் திரும்பச் செய்வாராக. அவர்கள் மனம் திரும்ப மறுத்தால், அவர்கள் கணுக்காலையாவது கடவுள் திருப்பிவிடட்டும். அவ்வாறு, அவர்கள் நொண்டிச் செல்லும்போது, நம் பகைவர்கள் யார் என தெரியட்டும்."

பழிக்குப் பழி, அல்லது, தவறு செய்வோரைத் தண்டிப்பது, மனிதருக்குள்ள இயல்பு என்ற கருத்தோடு நின்றுவிடாமல், அத்தகையப் பண்பு, இறைவனிடமும் உள்ளது என்று சொல்லும் அளவு, நம் மதங்களும், மரபுகளும் பாடங்கள் சொல்லித்தரும் வேளையில், இன்றைய ஞாயிறு வாசகங்கள், இந்த எண்ணங்களுக்கு சவால்களாக ஒலிக்கின்றன.
'பழிக்குப் பழி', கிறிஸ்தவ வாழ்வுமுறை அல்ல என்பதை, இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் மிகவும் அழுத்தந்திருத்தமாகக் கூறுகின்றன. இந்தக் கண்ணியமான, அதேநேரம், கடினமானப் பாடத்தைக் கற்றுக்கொள்ள, இறைவன், நம் ஒவ்வொருவருக்கும், திறந்த மனதைத் தரவேண்டும் என்ற வேண்டுதலுடன், நம் சிந்தனைகளைத் துவக்குவோம்.

தன் கண்முன் உறங்கிக்கொண்டிருக்கும் எதிரியைக் கொல்லாமல், அமைதியாகச் செல்லும் தாவீதை, இன்றைய முதல் வாசகத்தில் (1 சாமுவேல் 26: 2, 7-9, 12-13, 22-23) சந்திக்கிறோம்.
தாவீதைக் கொல்லும் வெறியுடன் அலைந்து, திரிந்த மன்னன் சவுல், களைப்புற்று, ஓரிடத்தில் உறங்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கருகே அவரது ஈட்டியும் நிலத்தில் குத்தப்பட்டு நிற்கிறது. இதைக் கண்ட தாவீதின் மனதில் கட்டாயம் போராட்டம் எழுந்திருக்கும். அவருடைய போராட்டத்தை இன்னும் கடினமாக்கும்வண்ணம், அவருடன் சென்ற தோழர் அபிசாய், "இந்நாளில், கடவுள், உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார். ஆதலால், இப்பொழுது, நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதிய குத்தப்போகிறேன்" (1 சாமு. 26:8) என்று கூறுகிறார்.
உறங்கும் எதிரி, ஊன்றப்பட்ட ஈட்டி, கொலை செய்ய தயாராக இருந்த கூலிப்படை என, அனைத்தும் தனக்கு ஆதரவாக இருந்தாலும், தாவீது, சரியான முடிவெடுக்கிறார். இவ்வுலகப் பார்வையில், ஏன், சொல்லப்போனால், மத நூல்கள் ஆங்காங்கே கூறும் படிப்பினைகளின் அடிப்படையில், தாவீது எடுத்த முடிவை, தவறான முடிவு என்று கூறமுடியும்.

பழிக்குப்பழி என்ற உணர்வால் மட்டும் தாவீது ஆட்கொள்ளப்பட்டிருந்தால், தனக்குக் கிடைத்த வாய்ப்பை, இறைவன் தந்த அடையாளமாக எடுத்துக்கொண்டு, சவுலைக் கொன்றிருக்கலாம். ஆனால், மன்னன் சவுலைக் கொல்ல, ஒருமுறையல்ல, இருமுறை அவருக்குக் வாய்ப்பு கிடைத்தாலும் (1 சாமுவேல் 24:1-15; 26:7-24), அவற்றைப் பயன்படுத்தாமல், சவுலை உயிரோடு விட்டுவிட்டுச் சென்றார், தாவீது.
அத்துடன் நின்றுவிடாமல், சவுல் தன் தவறை உணர்ந்து, நல்வழி திரும்பவேண்டும் என்ற ஆவலில், சவுலின் ஈட்டியை தன்னுடன் எடுத்துச்சென்றார். தூரத்திலிருந்து தாவீது எழுப்பிய குரல், சவுலின் தூக்கத்தைக் கலைத்தது. கண்விழித்த மன்னன் சவுல், தாவீதின் குரலைக் கேட்டதும், அவரைக் கொல்லும் வெறியுடன் தன் ஈட்டியைத் தேடியிருக்க வேண்டும். அதே ஈட்டியை, சமாதானத்தின் அடையாளமாக மாற்ற விழைந்த தாவீது, அவரிடம் பேசினார்.
1 சாமுவேல் 26: 22-23
தாவீது, "அரசே உம் ஈட்டி இதோ உள்ளது. இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதை கொண்டு போகட்டும். அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப, ஆண்டவர் உம்மை ஒப்புவித்தும், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை" என்றார்.
"உம்மேல் நான் கை வைக்கவில்லை" என்று தாவீது கூறும் சொற்களை, "உமக்கெதிராக என் கரத்தை உயர்த்தவில்லை" என்று ஒரு சில மொழிபெயர்ப்புகளில் காண்கிறோம்.

பகைவருக்கு எதிராக, அவர்களை அழிக்க கரங்களை உயர்த்துவதற்குப் பதில், அவர்களை அரவணைக்க, ஆசீர்வதிக்க, நாம் கரங்களை உயர்த்தவேண்டும் என்று, இன்றைய நற்செய்தியில் இயேசு அழைப்பு விடுக்கிறார்.
இன்றைய நற்செய்திப்பகுதி, (லூக்கா 6:27-38) சென்ற வாரம் நாம் கேட்ட சமவெளிப் பொழிவின் தொடர்ச்சியாக உள்ளது. இதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் நாம் கேட்கவிருக்கிறோம். சமவெளிப்பொழிவு முழுவதிலும், குறிப்பாக, இன்றைய நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ள பகுதியில், இயேசு கூறும் அறிவுரைகளைக் கேட்கும்போது, 'இவை, ஏட்டளவில் மட்டுமே பதிவுசெய்து, பத்திரப்படுத்தக்கூடிய அறிவுரைகள்; நடைமுறை வாழ்வுக்கு எள்ளளவும் உதவாத அறிவுரைகள்' என்று முடிவுகட்ட, இவ்வுலகம் நமக்குச் சொல்லித்தருகிறது.
'பகைவருக்குப் பகைமை; வெறுப்போருக்கு, வெறுப்பு; சபிப்போருக்குச் சாபம்' என்பது, இவ்வுலகம் சொல்லித்தரும் மந்திரம். ஆனால், இயேசு இன்றைய நற்செய்தியில், "பகைவரிடம் அன்பு, வெறுப்போருக்கு நன்மை, சபிப்போருக்கு ஆசி, இகழ்ந்து பேசுபவருக்கு இறைவேண்டல், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னம், மேலுடையை எடுத்துக்கொள்பவருக்கு அங்கி..." என்று சவால்களை ஒன்றன்பின் ஒன்றாக, அடுக்கி வைக்கிறார்.

மறுகன்னத்தைக் காட்டுவது, மேலுடையுடன் அங்கியையும் சேர்த்துத் தருவது, ஆகிய நற்செயல்கள், நாம் புண்ணியத்தில் வளர்வதற்குச் சிறந்த வழிகள் என்ற கோணத்திலும் எண்ணிப்பார்க்கலாம். ஆனால், அது, இயேசுவின் கண்ணோட்டம் அல்ல. மறுகன்னத்தைக் காட்டுவதால், நமக்குள் நல்ல மாற்றங்கள் உருவாகும் நேரத்தில், நம்மைத் தாக்கும் பகைவரிடம் மாற்றம் எதுவும் நிகழவில்லையெனில், நாம் மறுகன்னத்தைக் காட்டுவதில் அர்த்தமில்லை. நாம் மறுகன்னத்தைக் காட்டுவதால், நமது பகைவரிடமும் மாறுதல்கள் வரவேண்டும். அந்த மாறுதல்கள், திரைப்படங்களில் வருவதுபோல், ஒரு நொடியில், ஒரு நாளில் வராது என்பதை, நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும், அம்மாறுதல்கள் வரும்வரை, நாம் இந்த நற்செயல்களை, நம்பிக்கையோடு தொடரவேண்டும். இதுதான் இயேசு நமக்கு முன் வைக்கும் சவால்.

'மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்' (லூக்கா 6:29) என்று இயேசு கூறிய சொற்களை, மகாத்மா காந்தி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் போன்றோர், தங்கள் அறவழி, அகிம்சை வழிப் போராட்டங்களின் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டனர் என்பதை, வரலாறு சொல்கிறது.
'காந்தி' என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது: காந்தி அவர்களும், அவரது நண்பரும், கிறிஸ்தவப் போதகருமான சார்லி ஆண்ட்ரூஸ் அவர்களும் ஒரு நாள் வீதியில் நடந்து செல்லும்போது, ஒரு ரௌடி கும்பல் திடீரென அவர்களை வழிமறித்து நிற்கும். அவர்களைக் கண்டதும், "வாருங்கள், நாம் வேறுவழியில் சென்றுவிடுவோம்" என்று சார்லி, காந்தியிடம் சொல்வார். "உன் எதிரி உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தைக் காட்டவேண்டுமென்று இயேசு சொல்லவில்லையா?" என்று கேட்பார். அதற்கு சார்லி, "சொன்னார்... ஆனால், அதை ஓர் உருவகமாய்ச் சொன்னார்" என்று பூசி மழுப்புவார். காந்தி அவரிடம், "இயேசு அப்படிச் சொன்னதாக எனக்குத் தோன்றவில்லை. எதிராளிகள் முன்னிலையில் நாம் துணிவுடன் நிற்கவேண்டும். அவர்கள் எத்தனை முறை அடித்தாலும், திருப்பி அடிக்கவோ, திரும்பி ஓடவோ மறுத்து, துணிவுடன் நிற்கவேண்டும் என்பதையே இயேசு சொல்லித்தந்தார் என்று நினைக்கிறேன்" என்று, காந்தி அவரிடம் சொல்வதாக, அக்காட்சி அமைந்தது. இக்காட்சியில், காந்தியடிகள் கூறும் வார்த்தைகள், 'ஹீரோத்தனமாகத் தெரியலாம், அல்லது, பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம்.

மலைப்பொழிவில் இயேசு கூறிய சவால்களை தன் வாழ்வில் பின்பற்ற முயன்ற காந்தியடிகள், "கண்ணுக்குக் கண் என்று உலகத்தில் எல்லாரும் வாழ்ந்தால், உலகமே குருடாகிப்போகும்" என்று சொன்னார். பழிக்குப் பழி வேண்டாம். சரி... அதற்கு அடுத்த நிலையை நாம் சிந்திக்கலாம் அல்லவா? காந்தியின் நண்பர் சார்லி சொல்வதை, அல்லது, "துஷ்டனைக் கண்டால், தூர விலகு" என்று நமது தமிழ் பழமொழி சொல்லித் தருவதை கடைபிடிக்கலாமே!
துஷ்டனைக் கண்டு நாம் தூர விலகும்போது, நமக்கு வந்த பிரச்சனை அப்போதைக்குத் தீர்ந்துவிடலாம். ஆனால், அப்பிரச்சனையின் பிறப்பிடமான அந்த துஷ்டன் மாறுவதற்குத் தேவையான வாய்ப்பை நாம் தரவில்லையே. அந்த வாய்ப்பைத் தருவது பற்றித்தான் இயேசு சொல்லித்தருகிறார். மறுகன்னத்தைக் காட்டும்போது, மேலுடையுடன் அங்கியையும் சேர்த்துத் தரும்போது, நமது பகைவரிடமும் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பை நாம் உருவாக்குகிறோம் என்று இயேசு கூறுகிறார்.

மறுகன்னத்தைக் காட்டுதல், மேலாடையுடன் அங்கியை வழங்குதல் என்ற செயல்களால் பிறருக்குள் உருவாகும் மாற்றங்களைக் கூறும் பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று:
2008ம் ஆண்டு, நியூயார்க் நகரில், கடும் குளிர் நிலவிய ஓர் இரவில், Subway இரயிலில் ஜூலியோ டயஸ் என்ற இளையவர் பயணம் செய்துகொண்டிருந்தார். தனது இரயில் நிலையம் வந்ததும் இறங்கி நடந்தார். அந்த நடைமேடையில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை. அந்நேரம், இளைஞன் ஒருவன், பின்புறமாய் வந்து, ஜூலியோவின் முதுகில் ஒரு கத்தியை வைத்து, அவரது பர்ஸைப் பறித்தான். அவன் ஜூலியோவைத் தாண்டி முன்னே சென்றபோது, ஜூலியோ அவனிடம், "நண்பா, ஒரு நிமிடம். நீ ஒன்றை மறந்துவிட்டாய். இன்றிரவு, இன்னும் ஒரு சிலரை மிரட்டி நீ பணம் பறிப்பதாக இருந்தால், உனக்கு இது தேவைப்படும்" என்று கூறி, ஜூலியோ, குளிருக்காக, தான் அணிந்திருந்த மேல் 'கோட்'டை கழற்றி, அவனிடம் நீட்டினார்.
அதைப் பார்த்ததும் இளைஞனின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. "ஏன் என்னிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?" என்று தட்டுத் தடுமாறி பேசினான். ஜூலியோ அவனிடம், "இவ்வளவு 'ரிஸ்க்' எடுத்து, நீ பணம் திரட்டவேண்டும் என்றால், உண்மையிலேயே உனக்கு பணம் அதிகத் தேவை என்பதைப் புரிந்துகொண்டேன். இன்றிரவு, நீ சந்திக்கப் போகும் ஆபத்துக்களில், குளிர் என்ற அந்த ஆபத்தையாவது நான் குறைக்கலாமே. அதனால், இதை அணிந்துகொள்" என்றார். இளைஞன் நெகிழ்ந்துபோய் நின்றபோது, அவனை, உணவருந்த அழைத்துச் சென்றார், ஜூலியோ. உணவு முடிந்து, பில் வந்தபோது, "நீதான் பணம் கட்டவேண்டும். என் பர்ஸ் உன்னிடம் தான் உள்ளது" என்று ஜூலியோ சொன்னதும், இளைஞன் அவரிடம் பர்ஸைக் கொடுத்தான். ஜூலியோ,  அவனுக்கு, மேலும் ஒரு 20 டாலர்கள் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக இளைஞன் தனக்கு ஏதாவது தர வேண்டுமென்று அவர் கேட்டபோது, இளைஞன், தன்னிடம் இருந்த கத்தியை ஜூலியோவிடம் கொடுத்தான்.

பகைவரிடமும் மாற்றங்களைக் கொணரவேண்டும் என்ற எண்ணத்துடன், மறுகன்னத்தைக் காட்டும் பல உன்னத உள்ளங்கள் இன்றும் வாழ்கின்றனர். இவர்கள் ஆற்றும் உன்னதச் செயல்களில், ஆயிரத்தில் ஒன்று, என்றாவது, நமது செய்தித் தாள்களில், தொலைக்காட்சிகளில் இடம் பெறலாம். மற்றபடி, நமது ஊடகங்கள் தரும் பெரும்பாலான செய்திகள், "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" செய்திகளே.

பிப்ரவரி 14, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா என்ற இடத்தில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலின் எதிரொலிகள் இன்னும் அடங்கவில்லை. பழிக்குப் பழி என்ற ஒரு மந்திரத்தையே முன்வைக்கும் இந்த முயற்சிகளில், பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கும் நதி நீரையும் நிறுத்திவிடும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அறியும்போது, நம் சமுதாயத்தில் வேரூன்றியிருக்கும் வெறுப்புக் கலாச்சாரத்தைக் கண்டு, வேதனையடைகிறோம்.

இதே கலாச்சாரம், அமெரிக்க ஐக்கிய நாடு, வட கொரியா, சிரியா, ஏமன், உட்பட, பல நாடுகளில், பல வழிகளில், வெளிப்படுவது, நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது. பழிக்குப் பழி என்று, மனித வரலாற்றை, இரத்தத்தில் எழுதுவோரைப்பற்றி, ஒரு சீனப் பழமொழி இவ்வாறு சொல்கிறது: "பழிக்குப் பழி வாங்க நினைப்பவர், இரு சவக் குழிகளைத் தோண்ட வேண்டும். ஒன்று மற்றவருக்கு, மற்றொன்று தனக்கு."

மன்னிப்பதால், மறுகன்னத்தைக் காட்டுவதால் இவ்வுலகம் நம்பிக்கையில் வளரும் என்பதை அனைவரும் உணரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று மன்றாடுவோம். மறுகன்னத்தை நாம் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களின் மனங்களை மாற்றும் கனிவையும், துணிவையும், இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

இறுதியாக, சிறுவர்கள், சிறுமிகள், அருள் சகோதரிகள் என, வலுவற்றோர் பலருக்கு எதிராக, திருஅவையிலும், இவ்வுலகத்திலும் நிகழும் பாலியல் கொடுமைகளை களையும் நோக்கத்தில், 'திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு' என்ற தலைப்பில், கடந்த மூன்று நாள்களாக வத்திக்கானில் நடைபெற்ற ஒரு கூட்டம், இஞ்ஞாயிறன்று நிறைவுக்கு வந்துள்ளது. இந்தக் கொடுமையைச் செய்தவர்கள், அதற்குரிய விளைவுகளை ஏற்று, தங்கள் தவறுகளை உணர்ந்து, மனம் மாறி வாழவேண்டும் என்று செபிப்போம். அதைவிட முக்கியமாக, இந்தக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு தீங்கிழைத்தவர்களை மன்னிக்கும் மனதைப் பெற்று, தங்கள் காயங்களை ஆற்றும் வலிமை பெறவேண்டும் என்று, இறைவனிடம் உருக்கமாக வேண்டுவோம்.


20 February, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி புதுமை – தொழுநோயாளரைத் தொட்டு - 3


Sudarshan Pattnaik's sand sculpture

பூமியில் புதுமை - தேவை... சிறு மனமாற்றமே

நெகிழி என்றழைக்கப்படும் பிளாஸ்டிக்பொருள்களின் பயன்பாடு, தமிழக அரசால் தடைசெய்யப்பட்டதிலிருந்து, நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கு, பல கருத்துக்கள், நம் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அவற்றில், துணிப்பை பிரசாரகர் என்ற புனைப்பெயருடன், தி இந்து நாளிதழில், கிருஷ்ணன் சுப்ரமணியன் என்பவர் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில எண்ணங்கள் இதோ...
நம்ம ஊர் தெருமுனை தேநீர்க் கடைகளில், கண்ணாடி குவளைகளைத் துறந்து, சுத்தம், வேகம், எளிது என்ற பெயரில், நெகிழி சார்ந்த பொருட்களுக்கு வேகமாக நகர்ந்துவிட்டோம். நெகிழியில் சூடான பொருட்களை ஊற்றும்போது அதிலிருந்து கசியும் வேதிப்பொருள் உடலுக்குப் பேராபத்து ஏற்படுத்துவது ஒருபுறம். மற்றொருபுறம், நெகிழிக் குவளைகள் மக்காதது போலவே, காகிதக் குவளைகளில் பூசப்பட்டிருக்கும் நெகிழியை (coating), தனியே பிரித்து மறுசுழற்சி செய்ய முடியாது. இவை இரண்டுமே, மாநகராட்சிகளுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் குப்பையைக் கையாள்வதில் பெரும் சவாலாகவே இருந்து வருகின்றன.
நம் நாட்டில் எத்தனை குவளைகள் தூக்கி எறியப்படுகின்றன என்பதற்கு கணக்கு எதுவும் இல்லை. பேருந்து நிறுத்தங்களில், நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஹோட்டல்களில், இரயில் தண்டவாளங்களில் காகிதக் குவளைகள் கணக்கற்று இன்றும் சிதறிக் கிடக்கின்றன. (தி இந்து)
இந்த நிலையை மாற்ற, நாம் மீண்டும் நெகிழியற்ற பொருள்களைப் பயன்படுத்தும் மனமாற்றத்தைப் பெறவேண்டும் என்று, கிருஷ்ணன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். நம்மிடம் உருவாகவேண்டிய மாற்றங்கள், எவ்வளவு எளிதானவை என்பதைச் சுட்டிக்காட்ட, இக்கட்டுரை ஆசிரியர், தன் நண்பர்கள் சிலர் தற்போது பின்பற்றும் ஒரு பழக்கத்தைக் குறிப்பிடுகிறார்.
என்னுடைய நண்பர்கள் சிலர் அதிகமாகப் பயணம் செல்லக் கூடியவர்கள். தங்களுடைய கைப்பைகளில் எப்போதுமே ஒரு எவர்சில்வர் குவளை, தட்டு, தேக்கரண்டி, வைத்திருப்பார்கள். பேருந்து நிறுத்தங்களில், இரயில்களில், உணவு பரிமாற பயன்படுத்தப்பட்டு, பின்னர் தூக்கி எறியப்படும் குவளைகள், தட்டுகளைத் தவிர்க்க, இவர்களின் கைப்பையில் எடுத்துச்செல்லும் எவர்சில்வர் பாத்திரங்களிலே உணவை வாங்கிக்கொள்கின்றனர். பயணங்களில் பாத்திரங்களைக் கழுவுவதற்கு தண்ணீர் கிடைக்கிறதா என்று கேட்டால், “கை கழுவும் தண்ணீரில் சிறிது மிச்சம் செய்தால் பாத்திரத்தையும் கழுவிவிடலாம் என்று, அதில் அடங்கியுள்ள எளிமையைப் புரிய வைக்கிறார்கள். (தி இந்து)
இத்தகைய சின்ன, சின்ன மாற்றங்களை நாம் ஒவ்வொருவரும் கொணர்ந்தால், நம்மை வாழவைக்கும் இந்தப் பூமியை, நாம் வாழவைப்போம்.

Pope Francis kisses Vincio Riva

Pope meets Oreste Tornani

ஒத்தமை நற்செய்தி புதுமை தொழுநோயாளரைத் தொட்டு - 3

53 வயதான வின்சியோ ரீவா (Vincio Riva) என்ற இத்தாலியருக்கு, 2013ம் ஆண்டு, நவம்பர் 6ம் தேதி, அவர் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக அமைந்தது. அன்று, அவர், வத்திக்கான், புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தை வழங்கிய புதன் மறைகல்வி உரையில் கலந்துகொள்ள, தன் அத்தை கேத்தரீனா அவர்களுடன் வந்திருந்தார்.
அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வின்சியோ அவர்களை அணைத்து, முத்தமிட்டு, ஆசீர் வழங்கிய காட்சி, உலக ஊடகங்களில், ஆழமான தாக்கங்களை உருவாக்கியது. காரணம் என்ன? வின்சியோ அவர்கள், neurofibromatosis என்ற அரியதொரு நோயால் பாதிக்கப்பட்டு, உடலெங்கும், குறிப்பாக, முகமெங்கும் கொப்பளங்கள் நிறைந்த விகாரத்தோற்றம் கொண்டவர்.
15 வயதில், வின்சியோ அவர்களை இந்நோய் தாக்கியதையடுத்து, அவரைக் கண்டு ஒதுங்கிச் சென்ற, காண மறுத்த மக்களால், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் வேதனைகளை அனுபவித்துள்ளார். அந்த நோய்க்குப் பின், தன் தந்தையும் தன்னை அணைத்ததில்லை என்று, வின்சியோ அவர்கள், ஊடகங்களிடம் கூறினார்.
புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தையின் ஆசீரை தூரத்திலிருந்து பெறுவோம் என்ற நம்பிக்கையில் வின்சியோ அவர்கள் அங்கு வந்தார். ஆனால், திருத்தந்தை, வின்சியோ அவர்களைக் கண்டதும், அவரை தன் மார்போடு அணைத்து முத்தமிட்டது, அவரை ஆனந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒரு வார்த்தையும் சொல்லாமல் நிகழ்ந்த இந்த அணைப்பைக் குறித்து, வின்சியோ அவர்கள் பேட்டியளித்தபோது, "நான் விண்ணகத்தில் இருந்ததைப்போல் உணர்ந்தேன். எனக்கிருந்த வியாதி, தொற்று வியாதியா, இல்லையா என்பதை அறியாத திருத்தந்தை, அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், என்னை அணைத்து, என் முகத்தில் முத்தமிட்டபோது, என் உள்ளத்திலிருந்து பெரியதொரு பாரம் கரைந்ததைப் போல் இருந்தது. இறைவன் என்னைக் காக்கின்றார் என்ற உறுதியுடன், நான் இனி என் வாழ்வைத் தொடரமுடியும்" என்று கூறினார்.
புனித பேதுரு வளாகத்திலிருந்து அவர் புறப்பட்ட நேரத்தில், தன் அத்தையிடம், இதோ, இந்தக் கணத்தில், இந்த வளாகத்தில், நான் என் வேதனைகளையெல்லாம் விட்டுவிட்டு புறப்படுகிறேன் என்று கூறினார். சில நிமிடங்களே நீடித்த அந்தச் சந்திப்பைக் குறித்து ஊடகங்களிடம் பேசிய அவரது அத்தை கேத்தரீனா அவர்கள், "திருத்தந்தை அவர்கள், வின்சியோவை அணைத்து நின்றதைக் கண்டபோது, அவர், அவரை கைவிடப் போவதில்லை என்பதை உணர முடிந்தது" என்று கூறினார்.

நவம்பர் 6ம் தேதி நிகழ்ந்த இச்சந்திப்பை, ஊடங்களில் கண்ட மற்றொரு இத்தாலியர், இரு வாரங்கள் சென்று, நவம்பர் 20ம் தேதி நிகழ்ந்த புதன் பொது மறையுரையில் கலந்துகொள்ள, புனித பேதுரு வளாகத்திற்குச் சென்றார். 60 வயது நிறைந்த ஒரெஸ்தே தொர்னானி (Oreste Tornani) அவர்கள், 30 வயது இளைஞனாக இருந்தபோது, அவருக்கும், வேறு இருவருக்கும் நிகழ்ந்த ஒரு மோதலில், தொர்னானி அவர்களின் முகத்தில் குண்டடிபட்டது. பல அறுவை சிகிச்சைகளுக்குப் பின் அவர் உயிர் பிழைத்தார். ஆனால், அவர், தன் முகத்தை பெருமளவு இழந்தார். அருவருப்பூட்டும் அவரது முகத்தைக் கண்டு, அவரை விட்டு விலகிச் சென்றவர்களே அதிகம். எனவே அவர், மனிதர்களைச் சந்திப்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார். வின்சியோ ஆவர்களை திருத்தந்தை அணைத்து முத்தமிட்டதை ஊடகங்கள் வழியே அறிந்த தொர்னானி அவர்கள், திருத்தந்தையைச் சந்திக்க பேதுரு வளாகத்திற்குச் சென்றார். அவரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புடன் பேசி, அவரை அணைத்து, ஆசீர்வதித்தார்.

இவ்விரு நிகழ்வுகளும் ஊடகங்களில் வெளிவந்தபோது, இலட்சக்கணக்கான மக்கள் திருத்தந்தையின் பரிவுள்ள உள்ளத்தைப் பாராட்டினர். ஒரு சிலரோ, அவர், இன்னும் சிறிது கவனமாக இருக்கலாமே என்ற பாணியில் சிந்தித்தனர். குறிப்பாக, வின்சியோ ரீவா அவர்களின் நோய், தொற்றுநோயா என்பதை அறியாமல், திருத்தந்தை அவரை அணைத்து முத்தமிட்டது, பலருக்கு அச்சத்தையும், கேள்வியையும் உருவாக்கியிருக்கும்.

தொழுநோயாளர் ஒருவர், இயேசுவை அணுகியபோது, இத்தகைய அச்சம் அங்கும் நிலவியது. இயேசுவை அணுகிவந்த தொழுநோயாளரைக் கண்டதும், கூட்டத்தினர், பயந்து, அலறி, இயேசுவின் பக்கம் திரண்டிருக்க வேண்டும். அவர்களில் பலர், கோபத்தில், அங்கிருந்த கற்களைத் திரட்டியிருக்க வேண்டும். சூழ இருந்தவர்களை ஆக்ரமித்த அச்சமும், வெறுப்பும், இயேசுவைப் பாதிக்கவில்லை. அவர், அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறி, தொழுநோயாளரை நோக்கிச் சென்றார்.

இயேசு, தூரத்தில் நின்றவாறு ஒரு சொல்லால் அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால், இயேசு, தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, மாற்கு 1: 41-42
இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.
Jesus touched the leprosy patient and healed him

இயேசுவின் இந்தச் செயல், சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது, இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக, கூட்டத்தில் இருந்தோரும் குணம்பெறவேண்டும் என்பதே, அவர் எண்ணம். சட்டங்களால் கட்டுண்டு, சகமனிதர்களை, மிருகங்களிலும் கேவலமாக நடத்திவந்த இஸ்ரயேல் மக்களைக் குணமாக்கவே, இயேசு தொழுநோயாளியைத் தொட்டார். இயேசுவின் தொடுதலால், தொழுநோயாளி குணமானார். அதே தொடுதலால், இயேசுவைச் சுற்றி இருந்தவர்களும், ஓரளவாகிலும் குணமாகி இருக்கவேண்டும்.

தொழுநோயாளர் நலமடைந்ததும், இயேசு அவரிடம் கூறும் சொற்கள், ஒரு சில சிந்தனைகளை எழுப்புகின்றன.
மாற்கு 1: 43-44
இயேசு அவரிடம், "இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்" என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.
மோசே எழுதிவைத்த சட்டத்தின்படி, தொழுநோய் நீங்கிவிட்டதென்பதை உறுதி செய்வதற்கு, குருக்களுக்கு மட்டுமே அதிகாரம் இருந்தது. இந்த நோய் உருவானதும், அதை உறுதி செய்து, நோயுற்றவரை, 'தீட்டுடையவர்' என்று முடிவு செய்வது குருவே (லேவியர் 13:3). 'தீட்டுடையவர்' என்று தீர்மானிக்கப்பட்டத் தொழுநோயாளர், சமுதாயத்திலிருந்து வெளியேறி, தனித்து வாழவேண்டும்.
அவர் தொழுநோயிலிருந்து குணமானதும், மீண்டும் தீட்டு அகற்றப்பட்டவர் என்பதை உறுதி செய்யும் அதிகாரம், குருவுக்கே இருந்தது. தீட்டகற்றும் காணிக்கை, குளியல் போன்ற வழிமுறைகள், லேவியர் நூலில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது (லேவியர் 14:1-32). எனவே, இயேசு, தொழுநோயிலிருந்து குணமானவரை குருவிடம் செல்லும்படி கண்டிப்பாகக் கூறி அனுப்பினார். ஆனால், குணமான நோயாளி, இயேசு கூறியவற்றைப் பின்பற்றவில்லை என்பதையும், அதனால் இயேசுவுக்கு நேர்ந்த இக்கட்டான நிலையையும் நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு கூறியுள்ளார்:
மாற்கு 1: 45
ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

இந்த இறைவாக்கியத்தில், நற்செய்தியாளர் மாற்கு பயன்படுத்தியுள்ள ஆனால் என்ற முதல் சொல், ஓர் உண்மையை தெளிவாக்குகிறது. அதாவது, குணம் பெற்ற நோயாளியிடம், இயேசு, "இதை யாருக்கும் சொல்லவேண்டாம்", "நீர் போய் உம்மை குருவிடம் காட்டும்" என்ற இரு கட்டளைகளைத் தந்தார். ஆனால், குணமடைந்தவரோ, இவ்விரு கட்டளைகளையும் பின்பற்றவில்லை. அதற்கு மாறாக, "இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார்". அதனால், இயேசுவுக்கு சில சங்கடங்கள் உருவாயின.

இந்தப் புதுமையின் ஆரம்பத்தையும், முடிவையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஓர் அழகிய உண்மை தெளிவாகிறது. புதுமையின் ஆரம்பத்தில், மக்கள் நடுவே நடமாட இயலாமல், ஊருக்கு வெளியே வாழ்ந்துவந்த தொழுநோயாளர், இயேசுவை அணுகினார். ஆனால், அவர் குணம் அடைந்ததும், "இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பியதால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியாமல், ஊருக்கு வெளியே தனிமையான இடங்களில் தங்கிவந்தார்". இயேசு, ஏறத்தாழ, அந்த தொழுநோயாளரின் நிலைக்கு உள்ளானார்.

உலகின் பாவங்களை, நோய்களை, தன் மீது ஏற்றுக்கொண்டு, நோயுற்றோர் அடைந்த இன்னல்களை தன் துயரங்களாக மாற்றவே  இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்பதை, நற்செய்தியாளர் மாற்கு, இப்புதுமை வழியே, மறைமுகமாகக் கூறியுள்ளதுபோல் தெரிகிறது.
ஒத்தமை நற்செய்திகளான மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்றிலும் பதிவுசெய்யப்பட்டுள்ள அடுத்த பொதுவான புதுமை, முடக்குவாதமுற்றவரை இயேசு குணமாக்கும் புதுமை. இப்புதுமையில், நம் தேடல் பயணத்தை, அடுத்த வாரம் மேற்கொள்வோம்.