28 May, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி - கடலும், காற்றும், அடிபணிய 1


Biodiversity Loss

பூமியில் புதுமை – மனித இனத்தால் அழியும் பன்முக உயிரினங்கள்

பூமிக்கோளத்தில், உயிர்கள் தோன்றிய காலம் முதல் நிகழ்ந்த, காலநிலை மாற்றம், எரிமலை வெடிப்பு, வேற்றுக் கோளங்கள் மற்றும், விண்மீன் கற்களின் மோதல், போன்ற காரணங்களால், டைனசோர் உட்பட, பல்வேறு உயிரினங்கள், பெருமளவு அழிவைச் சந்தித்துள்ளன. பரிணாம வளர்ச்சியாலும், பல உயிரினங்கள் மறைந்துள்ளன.
கடந்த 6 கோடியே 50 இலட்சம் ஆண்டுகளாக, உலகில் உள்ள தாவர, மற்றும் விலங்கினங்கள், பெருமளவு அழிவுகளிலிருந்து தப்பித்து வந்துள்ளன. ஆனால், 1970ம் ஆண்டு முதல், மனித இனத்தின் பல்வேறு செயல்பாடுகளால், தாவர, மற்றும் விலங்கினங்கள் பெருமளவு அழிவைச் சந்தித்து வருவதாக, WWF (World Wildlife Fund) எனப்படும், உலக வனவாழ்வு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.
உயிர்களின் பன்முகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழலியல் பன்னாட்டு அரசுகளின் அமைப்பு, 2019ம் ஆண்டு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், உலகிலுள்ள 10 இலட்சம் உயிரினங்கள் அழிவை நோக்கிச் செல்லும் ஆபத்தில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. உயிர்களின் பன்முகத்தன்மை அழிந்து வருவதற்கு, கூறப்பட்டுள்ள காரணங்களில் ஒரு சில:
Habitat Loss - அரியவகை உயிரினங்களின் உறைவிடங்கள் அழிக்கப்பட்டு, அங்கு மனிதரின் குடியேற்றமும், அவர்களது தொழில் முயற்சிகளும் துவக்கப்படுதல்.
Over Exploitation - தேவைக்கும் அதிகமாக ஏனைய உயிரினங்களையும், அவற்றின் உறைவிடங்களையும் சுரண்டுதல்.
Agricultural Intensification - உணவைப் பெருக்கும் முயற்சியாக, வேளாண்துறையில், வேதியியல் பொருள்களின் அதிகமான பயன்பாடு.
Pollution - மனிதர்கள் பயன்படுத்தி, தூக்கியெறியும் ஞெகிழிப் பொருள்களின் தாக்கம். Ellen MacArthur  அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ஞெகிழிப் பொருள்களின் பயன்பாட்டிலும், தூக்கியெறிதலிலும் தற்போதையப் போக்கினை மக்கள் தொடர்ந்தால், 2050ம் ஆண்டிற்குள், கடல்களில் வாழும் மீன்களின் எண்ணிக்கையைவிட, கடல்களில் கலக்கும் ஞெகிழிப் பொருள்களின் குப்பை கூடுதலாக இருக்கும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. (ஆதாரம் - https://populationmatters.org/the-facts/biodiversity)

Sleeping Jesus

ஒத்தமை நற்செய்தி - கடலும், காற்றும், அடிபணிய 1

ஒத்தமை நற்செய்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ள 12 பொதுவானப் புதுமைகளில், 6வது புதுமையில் நம் தேடல் பயணம் இன்று துவங்குகிறது. 'காற்றையும், கடலையும் அடக்குதல்' என்ற தலைப்பில், மத்தேயு மாற்கு ஆகிய இரு நற்செய்திகளிலும், (மத். 8:23-27; மாற். 4:35-41), 'காற்றையும், நீரின் கொந்தளிப்பையும் அடக்குதல்' என்ற தலைப்பில் லூக்கா நற்செய்தியிலும் (லூக். 8:22-25) இப்புதுமை கூறப்பட்டுள்ளது.
Hendrik Van der Loos என்ற எழுத்தாளர், "இயேசுவின் புதுமைகள்" (The Miracles of Jesus) என்ற நூலில், இயேசு ஆற்றியப் புதுமைகளை, இருவகையாகப் பிரித்துள்ளார். மக்களை மையப்படுத்தியும், இயற்கையை மையப்படுத்தியும் இயேசு புதுமைகள் செய்தார் என்பதை, அவர் விளக்கிக்கூறியுள்ளார். மக்களை மையப்படுத்தியப் புதுமைகள், குணமளிக்கும் புதுமைகளாக, தீய ஆவியை விரட்டும் புதுமைகளாக, இறந்தோருக்கு உயிரளிக்கும் புதுமைகளாகக் கூறப்பட்டுள்ளன. இயற்கையின் மீது இயேசு கொண்டிருந்த சக்தியை வெளிப்படுத்தும் புதுமைகளாக, கடலையும், காற்றையும் அடக்குதல், கடல் மீது நடத்தல், பல்லாயிரம் பேருக்கு உணவளித்தல், தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுதல் ஆகியப் புதுமைகள் கூறப்பட்டுள்ளன.

நாம் தேடலை மேற்கொண்டுள்ள இப்புதுமையின் நிகழ்களத்தை, கலிலேயக் கடல், திபேரியக் கடல் (யோவான் 6:1), அல்லது, கெனசரேத்து ஏரி என பல்வேறு பெயர்களுடன் நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்புதுமையின் அறிமுக வரிகள், மாற்கு நற்செய்தியில் இவ்வாறு பதிவாகியுள்ளன:
மாற்கு 4:35-38
அன்றொரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, "அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்" என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன. அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்.

இவ்வறிமுக வரிகள், இயேசு தன் சீடர்களுக்கு விடுத்த ஓர் அழைப்புடன் ஆரம்பமாகின்றன. "அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்" (மாற். 4:35; லூக். 8:22) என்று இயேசு விடுத்த இவ்வழைப்பு, இயேசு விடுத்த முதல் அழைப்பை, சீடர்களுக்கு நினைவுறுத்தியிருக்கும். மீன்பிடிப்பதை, தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தோரிடம், "என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" (மாற். 1:17) என்று இயேசு விடுத்த முதல் அழைப்பு, அவர்கள் வாழ்வை மாற்றியது. உவமைகள், மற்றும், புதுமைகள் வழியே, மனிதர்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இயேசுவைப் பின்தொடர்ந்த சீடர்களை, அடுத்த நிலைக்கு அழைத்தார், இயேசு.
'அக்கரைக்குச் செல்வோம்' என்று இயேசு விடுத்த அழைப்பில் கூறப்பட்டுள்ள 'அக்கரை', புறவினத்தார் வாழ்ந்த கெரசேனர் பகுதி. எனவே, இயேசு, தன் சீடர்களை, புறவினத்தார் வாழும் பகுதியில் உழைப்பதற்கு அழைத்தார் என்ற கண்ணோட்டத்தில், இவ்வழைப்பை எண்ணிப்பார்க்கலாம்.

இயேசுவின் அழைப்பைக் கேட்டு சீடர்கள் பயணம் மேற்கொண்ட கலிலேயக் கடல், அல்லது, கெனசரேத்து ஏரி, கடல் மட்டத்திற்குக் கீழ் அமைந்துள்ள நீர்நிலை. அந்த நீர்நிலையைச் சுற்றி, மலைகள் அமைந்துள்ளன. கடல் மட்டத்திற்குக் கீழ் அமைந்திருந்ததாலும், மலைகள் அந்த நீர்நிலையைச் சூழ்ந்திருந்ததாலும், அங்கு அடிக்கடி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, புயல்கள் எழுந்தன.
குறிப்பாக, மாலை நேரங்களில், பயல்கள் எழுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. அத்தகையதொரு மாலைப்பொழுதில், 'அக்கரை செல்வதற்கு' இயேசு அழைப்பு விடுத்தது, சீடர்களிடம் தயக்கத்தை உருவாக்கியிருக்கும். இருப்பினும், இயேசு அவர்களுக்கு வழங்கிய முதல் அழைப்பினால் ஈர்க்கப்பெற்று, தங்கள் உறவுகளை, படகை, வலைகளை விட்டு வந்த சீடர்கள், தற்போது, மற்றொரு சவாலைச் சந்திக்க, தங்கள் பயணத்தைக் துவக்கினார்கள்.

அவர்கள் எதிர்பார்த்துச் சென்ற புயல், விரைவில் அவர்களைத் தாக்கியது. அவ்வேளையில், அப்படகில், இயேசு உறங்கிக்கொண்டிருந்தார் என்ற குறிப்பை, மூன்று நற்செய்தியாளர்களும் தெளிவாகப் பதிவுசெய்துள்ளனர்.
இயேசுவின் மனிதத்தன்மையை வெளிக்கொணரும் சில செயல்கள், விவிலியத்தில், மிக அரிதாகக் கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, இயேசு அழுதார் என்ற விவரம், நற்செய்திகளில் இரு முறை மட்டுமே இடம்பெற்றுள்ளது. இலாசரின் கல்லறை அருகே இயேசு அழுதார் என்று (யோவான் 11:35) நற்செய்தியாளர் யோவானும், இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார் (லூக்கா 19:41) என்று, நற்செய்தியாளர் லூக்காவும் குறிப்பிட்டுள்ளனர்.
சமாரியாவில் உள்ள சிக்கார் என்ற ஊருக்குச் சென்றபோது, பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார் (யோவான் 4:6) என்று யோவான் குறிப்பிட்டுள்ளார். கண்ணீர் விடுவது, களைப்புறுவது ஆகிய குறிப்புக்கள், இயேசுவை, முழுமையான மனிதர் என்று காட்டுகின்றன. நாம் சிந்திக்கும் இப்புதுமையில், இயேசு உறக்கத்தில் ஆழ்ந்தார் என்ற விவரம், இந்த ஒரு நிகழ்வில் மட்டுமே கூறப்பட்டுள்ளது.

புயல் நடுவே, படகில் உறங்கிக்கொண்டிருந்த இயேசு, புயலில் சிக்கிய மற்றொரு கப்பலில் உறங்கிக்கொண்டிருந்த இறைவாக்கினர் யோனாவை (யோனா 1:5) நினைவுறுத்துகிறார் என்று, ஒரு சில விவிலிய விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர்.
யோனா 1:4-5
ஆண்டவர் கடலில் கடுங்காற்று வீசும்படி செய்தார். கடலில் பெரும் கொந்தளிப்பு உண்டாயிற்று; கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது. கப்பலில் இருந்தவர்கள் திகிலடைந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தம் தம் தெய்வத்தை நோக்கி மன்றாடலானார்கள். கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அவர்கள் அதிலிருந்த சரக்குகளைக் கடலில் தூக்கியெறிந்தார்கள். யோனாவோ ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப் போய்ப் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

புயல் நடுவே, இயேசு தூங்கினார் என்பதை, மூன்று நற்செய்தியாளர்களும் வெவ்வேறு வழிகளில் கூறியுள்ளனர். இயேசு தூங்கிக் கொண்டிருந்தார் (மத். 8:24) என்று மத்தேயுவும், அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார் (லூக். 8:23) என்று லூக்காவும் சொல்லும்போது, மாற்கு இன்னும் சிறிது கூடுதலாக, அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார் (மாற். 4:38) என்று இந்தக் காட்சியைச் சித்திரிக்கிறார்.

புயலுக்கு நடுவிலும் ஒருவரால் தூங்க முடியுமா? முடியும். மனசாட்சியோடு மல்யுத்தம் செய்யாமல், மன நிம்மதியோடு தூங்கச் செல்பவர்கள், நன்றாகத் தூங்கமுடியும். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் குழந்தையைப் பார்த்திருக்கிறீர்களா? அவ்வப்போது, குழந்தையின் உதட்டோரத்தில் ஒரு சின்னப் புன்னகை தோன்றும். வானதூதர்கள் வந்து குழந்தையிடம் பேசுகின்றனர் என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அத்தகைய ஒரு தூக்கத்தில் இயேசுவும் ஆழ்ந்திருந்தார்.

நாள் முழுவதும் மக்கள் பலரைக் குணமாக்கிய திருப்தி அவருக்கு. உடல் நலம் மட்டுமல்ல. உள்ள நலமும் மக்களுக்குத் தந்த திருப்தி. தான் சொன்ன வார்த்தைகள், பலருடைய மனதையும் குணமாக்கியிருக்கும் என்று அவர் நம்பினார். நாள் முழுவதும் நல்லவற்றையே செய்து வந்த இயேசு, உடலளவில் களைத்துப் போனார். மனதளவில், மனசாட்சி அளவில், 'தெம்பாக' இருந்தார். உடல் களைப்பு, உள்ளத் தெம்பு... நல்ல உறக்கத்திற்கு இந்த இரண்டும் தேவை.

நம்மில் பலருக்கு ஒரு நாள் முடியும்போது, உடல் சோர்ந்து விடுகின்றது. மனமோ, தேவையான, அல்லது, தேவையற்ற நினைவுகளைச் சமந்து, அலைபாய்கிறது. எனவே, உடல் தூங்க முனைந்தாலும், உள்ளம் தூங்க மறுப்பதால், போராட்டம் ஆரம்பமாகிறது. ஒரு சிலர் இந்த போராட்டத்திற்கு காணும் ஒரு தீர்வு என்ன?... தூக்க மாத்திரைகள் அல்லது மது பானங்கள். இவை, தீர்வுகளா? தீமைகளா? சிந்திப்பது நல்லது.

நமக்கெல்லாம் தெரிந்த ஒரு வழியைச் சிந்தித்துப் பார்க்கலாம். நாள் முழுவதும் நமது சொல், செயல் இவற்றால் மனதில் பாரங்கள் சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படியே, நம்மையும் மீறி, வந்து சேரும் பாரங்களை, படுக்கைக்குப் போகுமுன், கடவுள் பாதத்திலோ அல்லது வேறு வழிகளிலோ இறக்கி வைக்க முயலவேண்டும்.
நமக்கெல்லாம் தெரிந்த ஓர் ஆங்கிலப் பழமொழி: A joy shared is doubled, a sorrow shared is halved. அதாவது, இன்பத்தைப் பகிர்ந்தால், இரட்டிப்பாகும்; துன்பத்தைப் பகிர்ந்தால் பாதியாகக் குறையும். பாரங்கள் பாதியான, அல்லது பாரங்களே இல்லாத மனதைப் படுக்கைக்குச் சுமந்து சென்றால், சீக்கிரம் தூக்கம் வரும்.

புயல் வீசியது, இயேசு தூங்கிக்கொண்டிருந்தார். புயலையும் மீறி, சீடர்கள் எழுப்பிய கூப்பாடு, இயேசுவை விழித்தெழ செய்தது. இயேசு எழுந்தார், புயலை அடக்கினார். அதன் பிறகு, தன் சீடர்களைப் பார்த்து, "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" (மாற்கு 4:40) என்று கேட்டார்.
 இயேசு, தன் சீடர்களிடம் கேட்ட இக்கேள்வி, புயலையும், நம்பிக்கையையும் சேர்த்துப் பார்க்க ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. புயல் வீசும் நேரத்தில் நம் நம்பிக்கை எங்கே போகிறது? ஆழ் மனதில் அதுவும் தூங்கிக் கொண்டிருக்கிறதா? அல்லது, எழுந்து நின்று சப்தம் போட்டு இறைவனை அழைக்கிறதா? அல்லது புயல் வரும்போதெல்லாம் நம்பிக்கை நமக்கு டாட்டா காட்டிவிட்டு, நடுக்கடலில் நம்மைத் தத்தளிக்க விட்டுவிடுகிறதா? இக்கேள்விகளுக்குரிய பதில்களை நாம் அடுத்தத் தேடலில் புரிந்துகொள்ள முயல்வோம்.

26 May, 2019

“Waging Peace” "அமைதிக்காகப் போரிடுதல்"


Peace I leave with you…

6th Sunday of Easter

Accidents involving passenger aircrafts are becoming more and more frequent these days. Here is one more such problematic flight. I am not sure whether this incident really happened, but it serves as a parable to reflect on the Gospel today.

Here is the incident… The passengers settled in their seats and the flight took off. The plane was cruising at a height of 30,000 feet when there was a sudden jolt. For those who were accustomed to air-pockets, this seemed different. Soon a murmur (call it a rumour) went around the passengers that there was a major mechanical failure. Many of them closed their eyes and gripped their seats; while some others began reciting their prayers. Since the turbulence went on for what seemed like an interminable period, even the crew began feeling a bit concerned. Almost all who were aboard that plane were ready to press their panic buttons. Almost all… except one little girl, aged 10. She was reading her comic book. The man sitting next to her asked her: “Don’t you feel scared?” The girl looked up from her book with an angelic smile and said: “Nope… My Dad is the pilot of this plane!” The secret of her remaining so peaceful was that her Dad was in charge!

Today we are invited to reflect on what keeps us peaceful. What keeps / does not keep the world peaceful? Jesus talks of his gift of peace to his disciples. He speaks of this peace amidst an ambience of uncertainty, doubt and fear that prevailed during the Last Supper.
“Peace I leave with you; my peace I give to you. Not as the world gives do I give to you. Let not your hearts be troubled, neither let them be afraid.” (John 14:27)
This promise of Jesus brings to focus two types of peace – peace given by Jesus and peace given by the world. We are given a choice of this or that and not both. This is our challenge. Most of us would like to have ‘both’. In fact we would like to have the best of all possible worlds!

We are not sure what kind of peace the world of Jesus’ time promised to his disciples. But, we can be sure that whether it is Jesus’ time or our own, the peace defined by the world would be diametrically opposed to the peace of the Kingdom, promised by Jesus.
Here are some ‘definitions’ of peace ‘according to the world’:
It is easier to lead men to combat, stirring up their passion, than to restrain them and direct them toward the patient labors of peace. - Andre Gide
If they want peace, nations should avoid the pin-pricks that precede cannon shots. - Napoleon Bonaparte
Yes, we love peace, but we are not willing to take wounds for it, as we are for war. - John Andrew Holmes
I prefer peace. But if trouble must come, let it come in my time, so that my children can live in peace. - Thomas Paine

In most of the quotes on peace, we can see that Peace is defined mainly as the absence of conflict. Herodotus, the Greek historian who lived in 5th Century B.C. contrasts war and peace in a graphic way: In peace, sons bury their fathers. In war, fathers bury their sons.
I remember the statement made by a mother from Sri Lanka describing the effect of decades of civil war suffered by the people there. She said: “In nature, a tree has its roots buried underground, while the branches, leaves and fruits are above the ground. In our country, we have buried the fruits of our wombs under the ground and we, the roots, stay above the ground, uprooted!” This shocking picture, painted by this mother, seems to portray the reality of almost all the countries around the world today.

Planting a tree with its roots above the ground and the leaves under the soil can only mean one thing – madness. But, this seems to be the logic of most of the government plans. In most of the countries,  under the pretext of national interest, the business interests of a few millionaires are safe-guarded by the government. (Some political leaders are proud to call themselves ‘watchmen’ of the people, while in reality they are ‘watchmen of the wealthy’!) In order to protect the commercial interests of the wealthy few, countries are willing to sacrifice thousands of their young men and women in the battle field. The defence budgets of almost all the countries have madness written all over. According to Stockholm International Peace Research Institute (SIPRI), world military expenditure in 2018 totalled $1822 billion. These are clear symptoms of the madness undertaken by our governments in planting trees upside down!

The U.N. and other global institutions have said over and over again that unless governments come forward to abolish the scandalous chasm that exists between the rich and the poor in every country and between the rich and poor countries, it would be impossible to ensure peace in the world. The U.N. also claims that if only 5% of the defence budget of the world is spent on human development goals, it would be easier to achieve our millennium goals. None of the recommendations of the U.N. seems to have made any impact on the warped, ‘warmongering’ minds of our governments. They believe that peace can be ensured ONLY by military power.

Against such a background, the words of Jesus seems to make more sense than ever before. “Peace I leave with you; my peace I give to you. Not as the world gives do I give to you.” Peace as promised or given by the world is simply the peace of a graveyard. Peace as promised by Jesus is a way of life. How does one achieve this peace? “We can never obtain peace in the outer world until we make peace with ourselves” says Dalai Lama.

I am sure many of us (including myself) felt good heaping criticisms against governments for not working towards peace. But, the last quote from Dalai Lama seems to challenge us fair and square. How do we begin to achieve peace? From ourselves. My favourite columnist Fr Ron Rolheiser expresses the same idea in another way, when he talks of ‘Waging Peace’.
When we cannot get along with each other within our own marriages and families, we should not be surprised that countries do not get along with each other. When we cannot move beyond past hurts in our own lives, we should not expect the issues causing violence in Northern Ireland, Israel, Bosnia, Iran, and Africa, can be resolved simply by better politics. When we spend billions of dollars a year on cosmetics and clothing that serve to build up our appearance so as to be less vulnerable, we have no right to self-righteously demand that governments cut their budgets for defence…
Hence, waging peace requires more than simply confronting the powers that be. What must, ultimately, be confronted is our own greed, our own hurt, our own jealousy, our own inability to forgive, compromise, and respect. More than we need to convert bad systems, we need to convert ourselves…

Waging Peace is ultimately a process to reconcile warring interests within us and within our groups. A true desire (call it a thirst) for reconciliation is what the world needs badly. The scene from today’s first reading not only presents us with one of the first great controversies of the early Church, but also gives us some excellent insights into how to resolve conflicts and how to achieve reconciliation in the Church.
As Fr Thomas Rosica puts it very succinctly, “Through prayer, fasting, consultation and voting, decisions are made. Underlying all of this is the desire to preserve peace at all costs, without compromising on principles and human rights. After all, Jesus’ farewell gift to the Church is peace not division and discord.” (Words Made Flesh -  Year C)

Unfortunately, in recent days we have resorted to other means of resolving the problems of the Church. Instead of relying on the Holy Spirit and our capacity for dialogue, some of the representatives of the Church seem to place more trust in the media outlets making our problems more sensational. Any controversy within the Church is a fodder for the circus called ‘sensationalism’ that ensures the rating of the media.

Here is an anecdote by Fr Rolheiser that gives us a clue as to where we can look for guidance in our struggle for Peace…
There is a story told about a Lutheran pastor, a Norwegian, who was arrested by the Gestapo during the Second World War. When he was brought into the interrogation room, the Gestapo officer placed his revolver on the table between them and said: "Father, this is just to let you know that we are serious!" The pastor, instinctually, pulled out his Bible and laid it beside the revolver. The officer demanded: "Why did you do that?"
The pastor replied: "You laid out your weapon - and so did I!"
In waging peace we must keep in mind what our true weapons are and who the real enemy is.

The way governments are run in various countries, seem to crush our hopes for a more peaceful, and a more just society. Against such a ‘hopeless’ situation, I wish to close my reflections with the famous words of Martin Luther King Junior who was fighting for peace built on justice:
“I refuse to accept the view that mankind is so tragically bound to the starless midnight of racism and war that the bright daybreak of peace and brotherhood can never become a reality... I believe that unarmed truth and unconditional love will have the final word.”
- Martin Luther King, Jr.

This is the type of peace that Christ wanted to leave with his disciples, when he said: “Peace I leave with you; my peace I give to you. Not as the world gives do I give to you. Let not your hearts be troubled, neither let them be afraid.” (John 14:27) 

Peace I leave with you…

உயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு

விமானம் ஒன்று ஏறத்தாழ 30,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென குலுங்கியது; ஒரு பக்கமாகச் சாய்ந்தது. விமானத்தின் இயந்திரம் பழுதடைந்துவிட்டதாகவும், ஓர் இறக்கை, சிறிது உடைந்துவிட்டதாகவும், பயணிகள் மத்தியில், வதந்திகள் பரவியதால், அவர்களது அச்சம் கூடியது. ஒரு சிலர், கண்களை மூடிக்கொண்டு, இருக்கையைக் கெட்டியாகப் பிடித்தபடி அமர்ந்திருந்தனர். வேறு சிலர், தங்களுக்குத் தெரிந்த செபங்களைச் சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலை, பல நிமிடங்கள் நீடித்ததால், விமானப் பணியாளர்கள் நடுவிலும் கலக்கம் தோன்றியது. ஏறத்தாழ, விமானத்தில் இருந்த அனைவரையுமே, அச்சம் ஆட்கொண்டது... ஒரே ஒருவரைத் தவிர! ஆம், விமானத்தில் பயணம் செய்த பத்து வயது சிறுமி ஒருவர், எவ்வித பயமுமின்றி ஒரு கார்ட்டூன் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அச்சிறுமி தனியே பயணம் செய்தார் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. அருகில் அமர்ந்திருந்த பெரியவர், அச்சிறுமியிடம், "உனக்குப் பயமாக இல்லையா?" என்று கேட்டார். அதற்கு அச்சிறுமி, ஒரு தெய்வீகப் புன்னகையுடன், "எனக்குப் பயமே இல்லை... ஏன்னா, எங்க அப்பாதான் இந்த விமானத்தை ஓட்டுகிறார்" என்று பதில் சொன்னார்.

இது, உண்மை நிகழ்வா என்பது தெளிவில்லை; ஆனால், இது ஓர் உவமையாக, நம் சிந்தனைகளை இன்று துவக்கி வைக்கிறது. அனைவரையும் அச்சுறுத்திய ஒரு சூழலில், தன் தந்தையின் மீது அச்சிறுமி கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கை, அச்சிறுமியின் அமைதிக்கு காரணமானது. நம் வாழ்வில், இடம்பெறும், குழப்பம், கலக்கம், இவற்றின் நடுவே, எது நமக்கு அமைதியைத் தரமுடியும் என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு நமக்கொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குழப்பமும், கலக்கமும் நிலவிய இறுதி இரவுணவின்போது, இயேசு, தன் சீடர்களுக்குத் தந்த பிரியாவிடை செய்தியின் ஒரு பகுதி, இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது.
யோவான் நற்செய்தி 14: 27
"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம்; மருளவேண்டாம்." 
உலகம் தரும் அமைதி, இறைவன் தரும் அமைதி என்ற இரு வேறு துருவங்களைப்பற்றி சிந்திக்க, இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

உலகம் தரும் அமைதி என்று சொல்லும்போது, நம்மில் பலர் எண்ணிப்பார்ப்பது, போரும், வன்முறையும் இல்லாத ஒரு நிலை. அமைதி என்ற சொல்லுக்கு உலகத் தலைவர்கள் தரும் ஒரு சில இலக்கணங்கள் இதோ:
"நாடுகளிடையே பீரங்கிகளால் உருவாகும் காயங்கள் தேவையில்லையெனில், சிறு குண்டூசி கொண்டு உருவாகும் காயங்களைத் தவிர்க்கவேண்டும். அதுதான் அமைதிக்கு வழி" என்று சொன்னவர் நெப்போலியன் போனபார்ட்.
If they want peace, nations should avoid the pin-pricks that precede cannon shots. - Napoleon Bonaparte
அமைதியைப் பற்றி அண்ணல் காந்தி அவர்கள் சொன்ன பல கூற்றுகளில் சிறந்ததொரு கூற்று: "கண்ணுக்குக் கண் என்று வாழ்வதால், உலகமே பார்வை இழந்துவிடும்."
An eye for an eye only ends up making the whole world blind. - Mahatma Gandhi
"நாடுகளிடையே உருவாகும் உறவு, அமைதி அல்ல. போரற்ற நிலை அமைதி அல்ல. அமைதி என்பது ஒரு வகை மனநிலை. சலனமற்ற மனநிலையே அமைதியைத் தரும். அமைதி நிறைந்த மனிதர்கள் நடுவில்தான், நிலையான அமைதி வந்து சேரும்." என்று சொன்னவர் ஜவகர்லால் நேரு.
Peace is not a relationship of nations. It is a condition of mind brought about by a serenity of soul. Peace is not merely the absence of war. It is also a state of mind. Lasting peace can come only to peaceful people. - Jawaharlal Nehru

கி.மு. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த Herodotus என்ற கிரேக்கச் சிந்தனையாளர், அமைதி நிறைந்த நாட்டிற்கும், போர் சூழ்ந்த நாட்டிற்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாட்டை இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்: "அமைதி நேரங்களில், மகன்கள் தங்கள் தந்தையரை அடக்கம் செய்வர். போர்க்காலங்களில், தந்தையர் தங்கள் மகன்களை அடக்கம் செய்வர்."
In peace, sons bury their fathers. In war, fathers bury their sons. - Herodotus
Herodotus அவர்களின் கூற்று, மனிதரிடையே வேரூன்ற முடியாமல் தவிக்கும் அமைதியைப்பற்றி சிந்திக்க, நம்மைத் தூண்டுகின்றது. இலங்கை, உள்நாட்டுப் போரினால் காயப்பட்டு கிடந்தபோது, ஒரு தாய் கூறிய வார்த்தைகள், நம் உள்ளங்களில் முள்ளாகத் தைக்கின்றன: இயற்கை நியதியின்படி, ஒவ்வொரு மரத்திலும் வேர்கள் பூமிக்கடியில் இருக்கும். மரத்தின் பலன்களான மலர், காய், கனி ஆகியவை, பூமிக்கு மேல் இருக்கும். எங்கள் நாட்டிலோ நாங்கள் பெற்று வளர்த்த கனிகளான எங்கள் பிள்ளைகள் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கின்றனர். வேர்களாகிய நாங்களோ, பூமிக்குமேல், உயிரற்ற, நடைபிணங்களாகத் திரிகிறோம் என்று அந்தத் தாய் கூறிய வார்த்தைகள், இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கு இன்று பொருந்தும்.

வேர்கள் பூமிக்கு மேலும், கிளைகள், பூமிக்குள்ளும் இருக்கும்படி மரங்களை யாராவது நட்டுவைத்தால், அவரை மதி இழந்தவர் என்று எளிதில் கூறலாம். ஆனால், உலகில் இன்று இதுதானே நடைமுறை வழக்காக உள்ளது. ஆக்கப்பூர்வமானப் பணிகளில் ஈடுபட்டு, கனிகளை வழங்கவேண்டிய இளையோர், ஒவ்வொரு நாட்டிலும், அழிவுதரும் போர்க்களங்களில் பணியாற்றுவதை, நாம் எவ்வகையில் நியாயப்படுத்த முடியும்?
தலைகீழாக நடப்பட்ட மரங்களைப்போல், மனித சமுதாயத்தை தலைகீழாக மாற்றிவரும் அரசுகள், தாங்கள் செய்வது மதியற்றச் செயல் என்பதை உணர்ந்தும், ஒரு சில கோடீஸ்வரர்களின் சொத்துக்களையும், வர்த்தகத்தையும் காப்பதற்காக, இளையோரைப் பணயம் வைத்து, போர்புரிகின்றன. இராணுவத்திற்கும், போர்க் கருவிகளுக்கும் செலவழிக்கும் பல இலட்சம் கோடி மதிப்புள்ள தொகையை நியாயப்படுத்தும் போக்கும் நமது அரசுகளிடையே அதிகமாகி வருகிறது.

Stockholm International Peace Research Institute (SIPRI) என்பது, உலக அமைதியை வளர்க்கும் வழிகளை ஆய்வு செய்யும் ஒரு மையம். ஒவ்வோர் ஆண்டும், உலகின் அரசுகள், இராணுவத்திற்குச் செலவிடும் தொகைகளின் பட்டியலை, இம்மையம் வெளியிட்டு வருகிறது. இம்மையம் வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையின்படி, உலகின் அனைத்து நாடுகளும் இணைந்து, 2018ம் ஆண்டில் இராணுவத்திற்கு செலவிட்டத் தொகை 1822 பில்லியன் டாலர்கள். அதாவது, 1,27,016 கோடி ரூயாய்கள்.
உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் இத்தொகை பிரித்து அளிக்கப்பட்டால், ஒவ்வொருவருக்கும் குறைந்தது, 239 டாலர்கள் கிடைக்கும். பல ஆசிய நாடுகளில், தொழிலாளிகள் பெறும் நாள் கூலி 1 அல்லது 2 டாலர்கள் என்பதை இங்கு நினைவுகூர்வது நல்லது.
பொருளாதாரப் பாகுபாடுகளும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் ஆழமாக வேரூன்றியிருக்கும் உலகில், அமைதி நிலவுவது அரிது என்று, ஐ.நா.உட்பட பல உலக அமைப்புக்கள் கூறி வருகின்றன. இருப்பினும், அவற்றைப் பொருட்படுத்தாமல், இன்னும் தங்கள் படைபலத்தைக் கொண்டு அமைதியை நிலைநாட்ட விரும்பும் உலக அரசுகள், மதியொடு செயல்படுகின்றனவா என்ற கேள்வி, நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது.
நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில், படைக்கருவிகளுக்கும், இராணுவப் பராமரிப்புக்கும் செலவிடப்படும் தொகையில், நூற்றில் ஒரு பங்கை, மக்கள் முன்னேற்றத்திற்கென, ஒவ்வோர் அரசும் செலவிட்டால், உலகின் வறுமையும், பட்டினியும் அறவே ஒழிக்கப்படும் என்று, ஐ.நா.அவை கூறிவருவது, செவித்திறனற்றோருக்கு ஊதப்படும் சங்காக ஒலித்துக்கொண்டே உள்ளது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், உலகம் தரும் அமைதி, கல்லறையில் காணப்படும் அமைதி. இந்தக் கல்லறை அமைதிக்கு மாற்றாக, இயேசு காட்டும் அமைதி, வாழ்வை வலியுறுத்தும் அமைதி. இவ்வகை அமைதியைக் காண, தலாய் லாமா அவர்கள் தரும் ஆலோசனை இது: "நம் உள் மனதில் அமைதியைப் பெறாமல், வெளி உலகில் அமைதியைப் பெறமுடியாது".

உலக அமைதிக்கென அரசுகள் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று கண்டனம் செய்வதுடன், நம் பணி முடிந்துவிட்டதென திருப்தி காண்பது, நமக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால், உலகில் அமைதி உருவாக, அது நமக்குள் முதலில் உருவாகவேண்டும் என்ற சவாலை, இயேசுவும், தலாய் லாமாவும் நமக்குமுன் வைக்கின்றனர்.

"Waging Peace", அதாவது, "அமைதிக்காகப் போரிடுதல்" என்ற தலைப்பில், அருள்பணி Ron Rolheiser அவர்கள் எழுதியுள்ள மறையுரையில், உலக அரசுகளைக் கண்டனம் செய்வதற்குப் பதில், நம் வாழ்வு முறையை ஆய்வுசெய்ய அழைப்பு விடுக்கிறார். இதோ அவரது கருத்துக்களில் சில:
"நம் குடும்பங்களில், திருமணங்களில் உறவுகள் முறிந்து, வன்முறைகள் நிலவும்போது, உலக அரசுகள் நடுவே, வன்முறையற்ற உறவுகள் நிலவவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. நம் வாழ்வில் ஏற்பட்ட பழையக் காயங்களை மன்னித்து, முன்னோக்கிச் செல்ல, நமக்கு மனமில்லாதபோது, நாடுகளிடையே உருவான வரலாற்றுக் காயங்களை மறந்து, அரசுத் தலைவர்கள் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. நம் குடும்பங்களில், சுற்றங்களில், நாம் வாழும் சூழல்களில், உண்மையானத் தேவைகள் உள்ளன என்பதை நன்கு அறிந்தபோதிலும், நம் உடல்தோற்றம், முகஅழகு என்ற வெளிப்பூச்சுக்களுக்கு நாம் அதிகம் செலவழிக்கிறோம். இந்நிலையில், அரசுகள், உலக அரங்கில் தங்கள் வெளித் தோற்றத்தைப் பாதுகாக்க, இராணுவத்திலும், படைக் கருவிகளிலும் செலவு செய்வதை நாம் கேள்வி கேட்கக்கூடாது.
எனவே, "அமைதிக்காகப் போரிடுதல்" என்பது, அரசுகள் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பனவற்றிலிருந்து ஆரம்பமாவதில்லை. நாம் வளர்த்துக் கொள்ளும் பேராசை, மன்னிக்க மறுக்கும் மனநிலை, அணியவிரும்பும் முகமூடிகள் ஆகியவற்றைக் களைவதிலிருந்து ஆரம்பமாகவேண்டும். நம்மைச் சூழ்ந்துள்ள அரசுகள், நிறுவனங்கள், அமைப்பு முறைகள் ஆகியவற்றில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்பதைவிட, நம்மில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்பதே முக்கியம்."

"அமைதிக்காகப் போரிடுதல்" என்பதைச் சிந்திக்கும்போது, நம் ஒவ்வொருவருக்குள்ளும், நம் உறவுகளுக்குள்ளும் உருவாகும் மோதல்களுக்கு எவ்விதம் தீர்வு காண்கிறோம் என்பதை ஒரு முக்கிய அளவுகோலாக, நாம் சிந்தித்துப் பார்க்கலாம். துவக்க காலத் திருஅவையில் உருவான ஓர் உரசலுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்பதை இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. திருத்தாதர் பணிகள் 15 1-2, 22-29
கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்ளும் பிற இனத்தவருக்கு விருத்தசேதனம் தேவையா இல்லையா என்ற முக்கியமான கேள்வி, எருசலேமில் நிகழ்ந்த முதல் சங்கத்தில், எழுந்தபோது, அதற்கு, அவர்கள் எவ்விதம் தீர்வு கண்டனர் என்பதை உணர்கிறோம். எருசலேம் சங்கம் முதல், இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் முடிய, கத்தோலிக்கத் திருஅவை, பல்வேறு பிரச்சனைகளுக்கு, எவ்வாறு தீர்வுகள் கண்டது என்ற வரலாறு, நமக்கு பெரும் பாடமாக அமைந்துள்ளது.
பொதுவாக, திருஅவையில் எழுந்த பல கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க, தூய ஆவியாரின் வழிநடத்தலையும், இறைவாக்கையும் நம்பி, தீர்வுகள் காணப்பட்டன. செபம், உண்ணா நோன்பு, மனம் திறந்த உரையாடல், உண்மைக்குச் செவிமடுத்தல் என்ற உயர்ந்த வழிகள் பின்பற்றப்பட்டன.

இன்று, நாம் வாழும் காலத்தில், அரசியல், வணிகம், விளையாட்டு, கல்வி, கலை என்ற பல தளங்களில், சிறு பொறிகளைப்போல் உருவாகும் உரசல்களை, மேலும் ஊதி பெரிதாக்கும் முயற்சிகளே அதிகம் நிகழ்கின்றன. இந்த நெருப்பை, மேலும் தூண்டி வளர்க்க, நம் ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும், சாமரம் வீசுகின்றன. மதம் சார்ந்த ஆன்மீகத் தளங்களிலும், உரசல்கள் எழும்போது, இறைவனின் வழிநடத்தலைத் தேடுவதற்குப் பதில், ஊடகங்களை நாடி, பிரச்சனைகளை விளம்பரம் செய்யும் போக்கு அதிகமாகியுள்ளதைக் கண்டு மனம் வருந்துகிறோம்.

"இவ்வுலகில் நீ காணவிழையும் மாற்றங்கள், முதலில் உன்னில் நிகழட்டும்" "Be the change that you wish to see in the world" என்று, மகாத்மா காந்தி அவர்கள் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. நம்மிடம் ஆரம்பமாகும் மாற்றங்களுக்கு அடித்தளமாக இருக்கவேண்டிய சக்தி என்ன என்பதை விளக்க, அருள்பணி Ron Rolheiser அவர்கள் ஒரு சிறு நிகழ்வைக் குறிப்பிடுகிறார்:
இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்தபோது, நார்வே நாட்டைச் சேர்ந்த லூத்தரன் சபை போதகர் ஒருவரை, நாத்சி படையினர் கைது செய்து, விசாரணை அதிகாரிக்கு முன் நிறுத்தினர். விசாரணை துவங்குவதற்குமுன், அவ்வதிகாரி, தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மேசை மீது வைத்து, "போதகரே, இந்த விசாரணையின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்தவே, நான் இதை மேசைமீது வைத்தேன்" என்று கூறினார். உடனே, போதகர், தான் வைத்திருந்த விவிலியத்தை, அந்தத் துப்பாக்கிக்கு அருகே வைத்தார். "ஏன் இவ்வாறு செய்தீர்?" என்று அதிகாரி கேட்டதும், போதகர், அவரிடம், "நீங்கள் உங்களிடம் இருந்த ஆயுதத்தை எனக்கு முன் வைத்தீர்கள். நானும் அதேபோல் செய்தேன்" என்று அமைதியாகப் பதிலளித்தார்.
உலகில் அமைதி நிலவ, அரசுகள் போர்கருவிகளை நம்புகின்றன. ஆனால் அந்த அமைதி நமக்குள்ளிருந்து பிறக்க வேண்டும் என்பதை உணரும் நாம், நம்மிடம் உள்ள சிறந்த கருவியான விவிலியத்தை, நற்செய்தியை முன்னிறுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.

நமக்குள் எப்போது அமைதி உருவாகும்? நம்முள் பிளவுபட்டிருக்கும் பல பகுதிகள் ஒன்றிணைந்து வரும்போது அமைதி உருவாகும். நமது உள் உலகம், வெளி உலகம் என்ற விமானங்கள் நிலைதடுமாறி, தாறுமாறாகப் பறந்தாலும், அந்த விமானங்களை இயக்குபவர், தந்தையாம் இறைவன் என்பதை நாம் ஒவ்வொருவரும் நம்பி ஏற்றுக்கொண்டால், தடுமாற்றங்கள் மத்தியிலும் உண்மை அமைதியை நாம் உணர முடியும்.
உண்மையையும், நீதியையும் நிலைநாட்ட தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து, அதற்காக தன் உயிரையும் இழந்த மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், அமைதியைப் பற்றி சொன்ன வார்த்தைகளுடன் இன்றைய நம் சிந்தனைகளை நாம் நிறைவு செய்வோம்:
(I refuse to accept the view that mankind is so tragically bound to the starless midnight of racism and war that the bright daybreak of peace and brotherhood can never become a reality... I believe that unarmed truth and unconditional love will have the final word. - Martin Luther King, Jr.)
"இனவெறி, போர் என்ற இருளுக்குள் மனித சமுதாயம் புதைந்துவிட்டது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அமைதியும், உடன்பிறந்த உணர்வும் உதயமாகும் காலைப்பொழுது புலரும் என்பதை நான் எதிர்பார்க்கிறேன். எவ்வித படைக்கருவியையும் பயன்படுத்தாமல் சொல்லப்படும் உண்மையும், நிபந்தனையற்ற அன்புமே இறுதியில் நிலைக்கும் என்பதை நான் நம்புகிறேன்."

21 May, 2019

விவிலியத்தேடல் : ஒத்தமை நற்செய்தி – உலர்ந்த கரம் உயிர்பெற... 5


Anti-Sterlite protesters in Thoothukudi on May 22, 2018

பூமியில் புதுமை – 'ஸ்டெர்லைட்' படுகொலையின் முதல் ஆண்டு

மே 22, இப்புதனன்று, World Biodiversity Day, அதாவது, உயிர்களின் பன்முகத்தன்மை உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது. முன்னேற்றம் என்ற பெயரில், சுற்றுச்சூழலையும், உயிரினங்களையும் அழிக்கும்வண்ணம் நடைபெற்றுவரும் முயற்சிகளுக்கு ஓர் எச்சரிக்கையாக, 2012ம் ஆண்டு நடைபெற்ற, Rio+20 உலக உச்சி மாநாட்டின் இறுதியில், "The World We Want: A Future for All" அதாவது, "நாம் விழையும் உலகம்: அனைத்திற்கும் ஓர் எதிர்காலம்" என்ற தலைப்பில் ஓர் அறிக்கை வெளியானது. ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் ‘All’ என்ற சொல், 'அனைவருக்கும்' என்றும், 'அனைத்திற்கும்' என்றும், இருவகை பொருள் தரும். அச்சொல்லை, இவ்வறிக்கையில் பயன்படுத்தியதன் வழியே, எதிர்காலம், அனைத்து உயிரினங்களின் உரிமை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
உயிர்களின் பன்முகத்தன்மை உலக நாளை சிறப்பிக்கும்வேளையில், மனித உயிர்களுக்கே ஆபத்தாக அமையும் பல்வேறு தொழிற்சாலைகளையும், அவை, சுற்றுச்சழலுக்கும், மனிதர்களுக்கும் விளைவிக்கும் எதிர்மறைத் தாக்கங்களையும், நாம் எண்ணிப்பார்க்கிறோம். இவ்வுலக நாளை சிறப்பிக்கும் மே 22ம் தேதி, நம் எண்ணங்கள் தமிழகத்தின் தூத்துக்குடி நகரை நோக்கிச் செல்கிறது.
1998ம் ஆண்டு, தூத்துக்குடியில் செயல்படத் துவங்கிய 'ஸ்டெர்லைட்' (Sterlite) தாமிர உருக்காலைக்கு எதிராக, 1999ம் ஆண்டு முதல் போராட்டங்கள் ஆரம்பமாயின. தூத்துக்குடியின் நிலம், நீர், காற்று அனைத்திலும் நச்சுப்பொருள்களைக் கலந்து வந்த அந்த ஆலையை மூடவேண்டும் என்று மக்கள் போராடி வந்தனர். பல்வேறு போராட்டங்களின் சிகரமாக, 2018ம் ஆண்டு மே 22ம் தேதி, பல்லாயிரம் மக்கள், போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் கொல்லப்பட்டனர், இன்னும் பலர் காயமடைந்தனர். ஆயுதம் ஏந்தாமல், அறவழிப் போராட்டம் மேற்கொண்ட மக்கள் மீது, திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை இது என்று, விசாரணைகள் பலவற்றில் கூறப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு மே 22ம் தேதி, தூத்துக்குடியில், தங்கள் சுற்றுச்சூழலைக் காப்பதற்காக போராடி, உயிர் துறந்த தியாக உள்ளங்களை, இன்று நன்றியோடு எண்ணி, நம் வணக்கங்களைச் செலுத்துவோம்.

A meeting of the Pharisees and the Herodians

ஒத்தமை நற்செய்தி உலர்ந்த கரம் உயிர்பெற... 5

வலது கை சூம்பிய ஒருவரை, ஒய்வு நாளன்று, தொழுகைக்கூடம் ஒன்றில், இயேசு குணமாக்கிய புதுமையை, கடந்த சில வாரங்களாக, விவிலியத் தேடலில் சிந்தித்து வந்தோம், இன்று நிறைவு செய்கிறோம். இயேசு அப்புதுமையைச் செய்தபோது, சூழ இருந்த எளிய மக்கள் மகிழ்வில் நிறைந்திருப்பர். ஆனால், அதே வேளை, அத்தொழுகைக்கூடத்தில் எதிர்ப்பும், வெறுப்பும், உருவாயின என்பதையும் நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பரிசேயரும், மறைநூல் அறிஞரும், கோபவெறி கொண்டு, இயேசுவை ஒழிக்க திட்டமிட்டனர் என்பதை, நற்செய்தியாளர்கள், மத்தேயுவும், லூக்காவும் குறிப்பிட்டுள்ளனர். (மத்தேயு 12:14, லூக்கா 6:11) பரிசேயர்கள் மேற்கொண்ட கொலைத்திட்டத்தைக் குறித்து, மற்றொரு குறிப்பை, நற்செய்தியாளர் மாற்கு இணைத்துள்ளார். உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர் (மாற்கு 3:6) என்று மாற்கு நற்செய்தியில் வாசிக்கிறோம்.
கொள்கை அளவில், இரு வேறு துருவங்களாக இருந்த, பரிசேயர்களும், ஏரோதியரும் இணைந்துவந்தனர். காரணம் என்ன? அவர்கள் இருவருக்கும் ஒரு பொதுவான எதிரி இருந்தார். அவர்தான் இயேசு.

அரசியல் உலகில், நண்பர்களும், எதிரிகளும், ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மாறுவர் என்பதை, நாம், பல நாடுகளில் பார்த்து வருகிறோம். பாம்பும், கீரியும், போல ஒருவரையொருவர் அழிக்க ஆசைப்படும் அரசியல்வாதிகள், தேர்தல் நேரத்தில், கரங்கள் கோர்த்து மேடைகளில் தோன்றுவதைப் பார்த்து, வேதனையடைந்திருக்கிறோம். இத்தகைய ஒரு காட்சியை நமக்கு நினைவுறுத்துகிறார், நற்செய்தியாளர் மாற்கு. இத்தருணத்தில், மே, 23, இவ்வியாழனன்று, இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வெளிவரவிருப்பதை சற்று எண்ணிப்பார்ப்போம். மக்கள் நலனில் அக்கறையுள்ள தலைவர்களை, மக்கள் தெரிவு செய்திருப்பர் என்ற நம்பிக்கையுடன் நாம் தேடலை மேற்கொண்டுள்ள புதுமைக்குத் திரும்புவோம்.

இயேசுவைக் கொல்வதற்கு முயன்ற பரிசேயர், மறைநூல் அறிஞர், ஏரோதியர் ஆகியோரைக் கண்டு, நாம் கோபமடைகிறோம். ஒரு மனிதர் நல்லது செய்யும்போது, மாலையிட்டு, மரியாதை செய்வதற்குப் பதிலாக, கோபவெறி கொண்டு இயேசுவைக் கொல்ல நினைக்கிறார்களே, இவர்களெல்லாம் மனிதர்கள்தானா? என்ற கண்டனக் கேள்வி நமக்குள் எழ வாய்ப்புண்டு. தயவுசெய்து, அவசரப்பட்டு, நீதி இருக்கையில் அமர்ந்து, தீர்ப்பை வாசித்துவிட வேண்டாம். வழக்கு என்று வரும்போது, இரு பக்கங்கள் உண்டல்லவா? இயேசுவின் பக்கம் நியாயம் இருப்பது வெட்ட வெளிச்சம். ஆனால், அவருக்கு எதிர்பக்கம் இருந்தோருக்கும், ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கவேண்டும். அதைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

எதிராளிகளின் பக்கம்தான் என்ன? அவர்களது கோபத்தையோ, அதன் நியாய, அநியாயத்தையோ புரிந்து கொள்வதற்கு முன்னால், அவர்கள் யாரெனப் புரிந்துகொள்ள முயல்வோம். இயேசுவுக்கு எதிராக கூட்டணி அமைத்த பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், ஏரோதியர்... இவர்கள் அனைவரைப்பற்றியும் புரிந்துகொள்ள ஒரு விவிலியத் தேடல் போதாது. இப்போதைக்கு, இக்குழுவிலிருந்து, பரிசேயர்களைப்பற்றி மட்டும் புரிந்துகொள்ள முயல்வோம்.

பரிசேயர்கள் என்றதும் நம் மனதில் வில்லன்களைப் போன்ற உருவங்கள் தோன்றலாம். பரிசேயர்களை, வெளிவேடக்காரர்கள் என்று, இயேசு சாடியதால், அவர்களை, வில்லன்களைப்போல் எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. பரிசேயர்கள் அனைவரையும், வெளிவேடக்காரர்கள் என்று முத்திரை குத்திவிட வேண்டாம். அவர்களில் பெரும்பாலானோர், அடிப்படையில் நல்லவர்கள். கடவுளின் கட்டளைகளையும், மோசே தந்த கட்டளைகளையும் மிக நுணுக்கமாக, துல்லியமாகக் கடைபிடித்தவர்கள். மக்களும் அவற்றைக் கடைபிடிக்கவேண்டும் என ஆர்வம் கொண்டவர்கள். அவர்களது ஆர்வத்தை, ஒருவகையான வெறி என்றும் கூறலாம்.
அவர்கள் வாழ்வை அதிகம் வழிநடத்தியவை - ஒய்வுநாள் ஒழுங்குகளும், தொழுகைக்கூட நியதிகளும். இறைவன் தந்த கட்டளைகளிலேயே மிக முக்கியமாக அவர்கள் கருதியது, ஒய்வு நாள் கட்டளையே. இதைப்பற்றி, விடுதலைப் பயண நூல் கூறுவது இதுதான்:      

விடுதலைப்பயணம் 20/1, 8-11
கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: ஓய்வுநாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வுநாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வுநாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.

புனிதமான ஒய்வுநாளைப்பற்றி மோசே இவ்வளவுத் தெளிவாகக் கூறியும், அந்த கட்டளையை மீறும் பலரைக் கண்டு பரிசேயர்கள் கோபமுற்றனர். ஒய்வுநாள் என்றால் என்ன, அன்று செய்யக்கூடிய, செய்யக்கூடாத வேலைகள் என்ன, என்ற விளக்கங்களை மக்களுக்கு தந்தனர். ஒய்வுநாளைப் பற்றி, பரிசேயர்கள் தந்த விளக்கங்கள் என்ற அலங்காரம், அந்த அடிப்படை கட்டளையையே மறைக்கும்வண்ணம் குவிந்துவிட்டது.

திருநாட்களில், இறைவனின், அல்லது புனிதர்களின் திரு உருவை, தேரில் ஏற்றி,  ஊர்வலமாகக் கொண்டுசெல்வதற்குமுன், அந்தத் தேரை அலங்காரம் செய்வோம். அந்த அலங்காரங்களும், பூக்களும், பல வேளைகளில், நாம் ஏற்றிவைத்த திருஉருவத்தையே மறைத்துவிடும். சில வேளைகளில், இந்த அலங்காரங்களைச் செய்தவர்கள், அல்லது, பூக்களுக்கு நிதி உதவி செய்தவர்களின் பெயர்கள் பெரிதாக எழுதப்பட்டு, தேரின் முன்புறம், வைக்கப்படும். இறைவனை விட, புனிதர்களை விட பூக்களும், அலங்காரமும், அவற்றைச் செய்தவர்களும் முக்கியமாகிவிடும் ஆபத்து எழுவதில்லையா? அதைப்போலத்தான் இதுவும். இறைவன் தந்த ஒய்வு நாள் கட்டளையை விட, அதற்கு சொல்லப்பட்ட விளக்கங்கள், பெரும் மலையாக உயர்ந்துவிட்டதால், பரிசேயர்களும், மக்களும், கடவுள் தந்த ஒய்வு நாள் கட்டளையின் அடிப்படை நோக்கத்தை மறந்து விட்டனர். இதைத்தான் இயேசு கடுமையாக எதிர்த்தார்.

பரிசேயர்களின் வழிமுறைகளை இயேசு கண்டனம் செய்ததற்கு மற்றொரு காரணம், அவர்கள், மக்களை விட, சட்டதிட்டங்களுக்குத் தந்த அளவு கடந்த முக்கியத்துவம். மனிதர்களின் வாழ்வு எவ்வகையில் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை; சட்டங்கள் காப்பாற்றப்பட வேண்டுமென சொல்வது தவறு. சட்டங்களைத் தந்த கடவுளுக்கு இணையாக, சிலசமயம், கடவுளுக்கும் மேலாக, சட்டங்களையே கடவுளாக்குவது, மதியற்ற செயல் என்பதை, இயேசு உணர்ந்திருந்தார்; பரிசேயரை உணரவைக்க முயன்றார். முடியவில்லை.

தேவைக்கும் அதிகமாக சட்டங்களுக்கு முதலிடம் தருவதால், நாம் எப்படி சிறைபடுவோம் என்பதைக் கூறும் ஒரு கதை இது.
துறவிகள் மடம் ஒன்றில், அனைவரும் பூஜைக்கு அமர்ந்தனர். அந்த மடத்திற்கு புதிதாக வந்து சேர்ந்த ஒரு பூனை, பூஜை நேரத்தில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. பெரிய குரு, அந்தப் பூனையை ஒரு தூணில் கட்டிவைக்கச் சொன்னார். பின்னர் பூஜையை நடத்தினார். இப்படியே, அடுத்த சிலநாட்கள், பூனை கட்டப்பட்டது, பூஜை நடந்தது. ஒரு மாதம் கழித்து, பூஜையின் ஆரம்பத்தில், பூனையைக் காணவில்லை. சீடர்கள், மடம் முழுவதும் தேடி, பூனையைக் கண்டுபிடித்து, கொண்டுவந்து, தூணில் கட்டிவைத்துவிட்டு, பூஜையை ஆரம்பித்தனர். பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற எண்ணம் உருவானது.
சில ஆண்டுகள் கழித்து, அந்தப் பூனை இறந்தது. கதை இதோடு முடிந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். ஆனால், இல்லை. இறந்தப் பூனையைப் போல் இன்னொரு பூனையை வாங்கிவர சீடர்கள் புறப்பட்டுச் சென்றனர். அந்தப் பூனை, இறந்த பூனையைப் போலவே வெள்ளையாக இருக்கவேண்டும், என்ற நிபந்தனையுடன் இத்தேடல் நடைபெற்றது.
பெரும் முயற்சிகள் எடுத்து, வெள்ளைப் பூனையைக் கண்டுபிடித்தனர். அதைக் கொண்டுவந்து, மடத்தில், முந்தையப் பூனை கட்டப்பட்ட அதே தூணில் கட்டிய பிறகே, பூஜையைத் துவக்கினர். பூஜைக்குத் தடையாக அலைந்துகொண்டிருந்ததால் கட்டப்பட்ட பூனை, பூஜைக்குத் தேவைப்படும் அளவு முக்கியத்துவம் அடைந்தது. பூனை இல்லாமல் பூஜை இல்லை என்ற சூழ்நிலை உருவானது.

பூஜைகளை மறக்கச்செய்யும் அளவு, பூனைகளைத் தொழுவது ஆபத்து என்றும், பூனையை மறந்துவிட்டு, பூஜையில் கவனம் செலுத்துங்கள் என்றும் இயேசு சொன்னார், அதை, செயலிலும் காட்டினார்.
கடவுள் தந்த ஒய்வுநாள், மனிதருக்கு நலம் பயக்கும் வழிகளைச் சொல்லித்தர ஏற்படுத்தப்பட்டது. எப்போதும் வேலை, வேலை என்று அலைய வேண்டாம். அதனால், உடல் நலம், மன நலம், குடும்ப நலம் எல்லாம் கெடும். வேலை, சம்பாதிக்கும் பணம் ஆகியவற்றைவிட, இன்னும் மேலானவை, வாழ்க்கையில் உள்ளன. மேலான அவ்வுண்மைகளைத் தேடிக் கண்டுபிடிக்க, ஓய்வு தேவை. இறைவனை, குடும்பத்தை, உறவுகளை நினைத்துப் பார்க்க ஒய்வுநாள் தேவை. இதுதான், ஒய்வுநாளைப் பற்றி, இறைவன் சொல்லித்தர விரும்பிய முக்கியப் பாடம். ஆனால், ஒய்வுநாளைப் புனிதமாகக் கருதச்சொன்ன கடவுளையே மறந்துவிட்டு, பரிசேயர்கள், மனிதாபிமானமற்ற வகையில் ஒய்வுநாளை வழிபட ஆரம்பித்தது, இயேசுவை அதிகமாய் பாதித்திருக்க வேண்டும். எனவேதான், அவர், ஒய்வுநாள் விதிகளை மீறினார். அதுவும் தொழுகைக்கூடத்தில், ஒய்வுநாள் விதிகளை மீறி, மனிதர்களுக்கு நலம் அளித்தார். நலம் பெற்ற மனிதர்களும், நலம் தரும் புதுமையைப் பார்த்தவர்களும், கடவுளைப் புகழ்ந்தபோது, இயேசு, ஒய்வு நாளின் தலைவனாகிய கடவுளை மீண்டும் மக்கள் மனங்களில் அரியணை ஏற்றினார். கடவுளுக்குரியதை கடவுளுக்குத் தந்த திருப்தி இயேசுவுக்குக் கிடைத்தது.