29 October, 2019

விவிலியத்தேடல்: தீய ஆவி பிடித்தவர் குணமடைதல் – பகுதி 1

Pacaya-Samiria National Reserve in Peru

பூமியில் புதுமை – அமேசானின் பக்காய சமீரியா காடு

தென் அமெரிக்க கண்டத்தின் ஒன்பது நாடுகளில் பரவியிருக்கும் அமேசான் மழைக்காடுகளில், பெரு நாட்டில் அமைந்துள்ள காடுகள், ‘பக்காய சமீரியா (Pacaya Samiria) தேசியப் பாதுகாப்பு வனப் பகுதி என்றழைக்கப்படுகிறது. "கண்ணாடிகளின் காடு" என்று பொருள்படும் இப்பகுதி, பெரு நாட்டு அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பெரு நாட்டின் நிலப்பரப்பில் 1.5 விழுக்காட்டுப் பகுதியைக் கொண்டுள்ள பக்காய சமீரியா காடு, 50 இலட்சம் ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இப்பகுதியில், ஆண்டுக்கு 2000 முதல், 3000 மி.மீ. அளவுக்கு மழை பொழிகிறது. 20 முதல், 33 டிகிரி செல்சியஸ் தட்பவெட்ப நிலை ஆண்டு முழுவதும் நிலவுகிறது.
இப்பகுதியில் இரு காலநிலைகள் காணப்படுகின்றன. அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் முடிய, உயர்மட்ட நீர் காலம் என்றும், மே மாதம் முதல், செப்டம்பர் முடிய அடிமட்ட நீர் காலம் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் இக்காட்டுப் பகுதியில் ஊடுருவிச் செல்லும் ஆற்றின் தண்ணீர் மட்டம் குறைவாகக் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு அது தகுந்த காலம் என்று சொல்லப்படுகிறது.
பக்காய சமீரியா காட்டில் 527 பறவை இனங்கள், 102 பாலூட்டி இனங்கள், 269 மீன் வகைகள் மற்றும் 1800க்கும் அதிகமான தாவர வகைகள் உள்ளதென கணிக்கப்பட்டுள்ளது.

Jesus teaching in the synagogue

தீய ஆவி பிடித்தவர் குணமடைதல் பகுதி 1

ஒத்தமை நற்செய்திகள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவுசெய்யப்பட்டுள்ள பொதுவான 12 புதுமைகளில், இவ்வாண்டின் துவக்கத்திலிருந்து, நாம், விவிலியத் தேடலை மேற்கொண்டோம். கடந்த 40 வாரங்களுக்கும் மேலாக, நமது தேடல் பயணம் தொடர்ந்துள்ளது. இந்த 12 புதுமைகளில், இறுதி இரு புதுமைகளை மையப்படுத்தி, கடந்த 6 வாரங்கள், நம் தேடல் பயணத்தை வழிநடத்தியவர், அருள்பணி விக்டர் தாஸ். அவருக்கு, வத்திக்கான் வானொலி குடும்பத்தினர் சார்பில் நன்றி.
12 பொதுவானப் புதுமைகளைத் தொடர்ந்து, இந்த மூன்று நற்செய்திகளில் ஏதாவது இரண்டில், அதாவது, மத்தேயு-மாற்கு, அல்லது, மாற்கு-லூக்கா, அல்லது, லூக்கா-மத்தேயு என்று, இரு நற்செய்திகளில், சொல்லப்பட்டுள்ள 5 புதுமைகளில், நம் தேடல் பயணத்தைத் தொடர்வோம்.

நாம் இதுவரை சிந்தித்த 12 பொதுவானப் புதுமைகள், மாற்கு நற்செய்தியில் எந்த வரிசையில் பதிவுசெய்யப்பட்டிருந்தனவோ, அதை அடித்தளமாகக் கொண்டு, நம் தேடல் பயணத்தை மேற்கொண்டோம். அந்த வரிசையில், முதல் பொதுவானப் புதுமை, சீமோன் பேதுருவின் மாமியாரை இயேசு குணமாக்கும் புதுமை என்றும், இப்புதுமை, கப்பர்நாகும் ஊரில் நிகழ்ந்ததென்றும் குறிப்பிட்டோம். கப்பர்நாகும் ஊரில், பேதுருவின் வீட்டில் நிகழ்ந்த இப்புதுமைக்கு முன்னதாக, அதே ஊரின் தொழுகைக்கூடத்தில், இயேசு ஆற்றிய ஒரு புதுமையை, நற்செய்தியாளர்கள் மாற்கும், லூக்காவும் குறிப்பிட்டுள்ளனர். இயேசு ஆற்றிய முதல் புதுமையாக, இவ்விரு நற்செய்தியாளர்களும் கூறும் அப்புதுமையில் – தீய ஆவி பிடித்த ஓருவரை இயேசு குணமாக்குகிறார். இப்புதுமையில் நம் தேடலை இன்று துவங்குகிறோம்.

மாற்கு நற்செய்தியின் முதல் பிரிவு, திருமுழுக்கு யோவான் முழங்கும் உரையுடன் ஆரம்பமாகி, இயேசுவின் திருமுழுக்கு, சோதனைகள், சீடர்களை அழைத்தல் என்ற மூன்று நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது. இவற்றைத் தொடர்ந்து, கப்பர்நாகும் ஊரில், தொழுகைக்கூடத்தில் நிகழ்ந்த இப்புதுமை கூறப்பட்டுள்ளது.
லூக்கா நற்செய்தியிலோ, இயேசுவின் பிறப்பு, குழந்தைப்பருவ நிகழ்வுகள், மற்றும் திருமுழுக்கு பெறுதல் ஆகிய நிகழ்வுகள், முதல் மூன்று பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தொடர்ந்து, நான்காவது பிரிவின் முதல் பகுதியில், பாலை நிலத்தில், இயேசு சந்தித்த சோதனைகள், அவர் வளர்ந்த ஊரான நாசரேத்தின் தொழுகைக்கூடத்தில் வழங்கிய உரை, மற்றும், அதனால் எழுந்த எதிர்ப்பு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. தான் வளர்ந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படாத இயேசு, கப்பர்நாகும் ஊரில், தொழுகைக்கூடத்தில், தன் முதல் புதுமையை ஆற்றினார் என்று நற்செய்தியாளர் லூக்கா கூறியுள்ளார்.

இப்புதுமையை, நான்கு பகுதிகளாகப் பிரித்து, நம் தேடலை மேற்கோள்வோம். 1 - அறிமுகப்பகுதி; 2 - தீய ஆவி பிடித்தவரின் அறிக்கை; 3 - தீய ஆவி பிடித்தவர் நலம் பெறுதல்; 4 இப்புதுமை, மக்களிடம் உருவாக்கிய வியப்பு என்று, நான்கு பகுதிகளில் நாம் சிந்திப்போம்.
இப்புதுமையின் அறிமுகப்பகுதியில், நற்செய்தியாளர்கள் மாற்கும், லூக்காவும் ஏறத்தாழ ஒரேவிதமான சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர். இப்புதுமையின் அறிமுகப்பகுதியை, மாற்கு நற்செய்தியிலிருந்து கேட்போம்:
மாற்கு 1: 21-22 (லூக்கா 4: 31-32)
அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.

ஓய்வுநாள்களில், இயேசு, தொழுகைக்கூடத்தில் கற்பித்தது, அவரது போதனை, மக்களை வியப்பில் ஆழ்த்தியது, அவர் அதிகாரத்தோடு கற்பித்தது என்ற மூன்று அம்சங்கள், மாற்கு, லூக்கா ஆகிய இரு நற்செய்திகளிலும் ஒரே விதமாகக் கூறப்பட்டுள்ளன. இயேசு அதிகாரத்தோடு கற்பித்தார் என்பதை வலியுறுத்த, நற்செய்தியாளர் மாற்கு, கூடுதலாக ஒர் ஒப்புமையை பயன்படுத்தியுள்ளார்.
தொழுகைக்கூடத்தில் மக்களுக்கு கற்பித்துவந்த மறைநூல் அறிஞர்களைப் போல அல்லாமல், தனித்துவம் மிக்க அதிகாரத்துடன் இயேசு கற்பித்தது, மக்களை வியப்படையச் செய்தது என்பதை, அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார் என்று சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார் மாற்கு. இயேசு பெற்றிருந்த அதிகாரம் எத்தகையது என்பதை சிந்திப்பது, நமக்கு ஒரு சில வாழ்வுப் பாடங்களைச் சொல்லித்தரக்கூடும்.

அதிகாரம் என்ற சொல்லைக் கேட்டதும், இன்றைய உலகை, தங்கள் அதிகாரத்தால் ஆட்டிப்படைக்கும் ஒரு சில தலைவர்களின் உருவங்கள் நம் நினைவுகளில் தோன்றியிருக்கும். இந்தத் தலைவர்கள், அதிகாரம் என்ற சொல்லுக்கு, தவறான இலக்கணம் வகுத்துக்கொண்டிருப்பவர்கள். இவர்களை, நமது ஊடகங்கள், மீண்டும், மீண்டும் நம்மீது திணிப்பதால், அதிகாரம் என்றாலே இப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகமும், கலக்கமும் நமக்குள் உருவாகின்றன.

உலகில் இன்று 195 நாடுகள் உள்ளன. இவற்றில் அரசுத் தலைவர்களாகவும், பிரதமர்களாகவும் பணியாற்றுவோரின் எண்ணிக்கை, ஏறத்தாழ 300 இருக்கும். இவர்களில், உலகினரின் கவனத்தை அடிக்கடி ஈர்ப்பது, ஒரு சில நாடுகளின் தலைவர்களும், பிரதமர்களும் மட்டுமே. ஊடகங்களால், மீண்டும், மீண்டும், வெளிச்சமிட்டுக் காட்டப்படும் இந்தத் தலைவர்கள், தங்கள் ஆணவத்தால், தொடர்ந்து தவறுகள் செய்வதை, ஊடகங்கள் பேசி வருகின்றன. "Power corrupts; absolute power corrupts absolutely" அதாவது, "அதிகாரம், கேடு விளைவிக்கிறது; முழுமையான அதிகாரம், கேட்டினை, முழுமையாக விளைவிக்கின்றது" என்ற ஆங்கிலக் கூற்றின் எடுத்துக்காட்டுகளாக வாழும் இத்தலைவர்கள், அதிகாரம் என்ற சொல்லுக்கு தவறான இலக்கணங்களாகத் திகழ்கின்றனர்.

அதிகாரம் என்று தமிழில் பயன்படுத்தப்படும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் 'Authority'. இந்தச் சொல்லுக்கு Oxford அகராதியில் வேறுபட்ட இரு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் வகை அர்த்தம், நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சக்தி, பதவி, நிறுவனம் என்ற அம்சங்களைக் கொண்டது. இரண்டாவது வகை அர்த்தம்தான், நாம் இன்று சிந்திக்க வேண்டியது. இதில், Authority என்ற வார்த்தைக்கு ‘the power to influence others, especially because of one’s commanding manner or one’s recognized knowledge about something’ என்று அர்த்தம் தரப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர் தனது அறிவு, பண்பு ஆகியவற்றால், பிறர் மீது நேர்மறை தாக்கங்களை உருவாக்கும் திறமையே Authority என்ற சொல்லின் இரண்டாவது அர்த்தம்.

இந்த இரண்டாவது அர்த்தத்தை வார்த்தைகளால் விளக்குவதற்குப் பதில், ஒரு கற்பனைக் காட்சியின் வழியே புரிந்துகொள்ள முயல்வோம். உயர்ந்த பதவியில் இருக்கும் பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டத்தைக் கற்பனை செய்துகொள்வோம். கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்குள் ஒவ்வொரு தலைவரும் நுழையும்போது, அவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும், அவர்களைச்சுற்றி பாதுகாப்பிற்காக, பலர் வருவர். அந்தத் தலைவரைப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், கரவொலி எழுப்ப வேண்டியிருக்கும்.
அந்நேரம், அந்த அரங்கத்திற்குள், புனித மதர் தெரேசா, அல்லது, காந்தியடிகள், அல்லது, மக்களின் மனங்களில் உயர்ந்த இடம் பிடித்திருக்கும் ஓர் உன்னத மனிதர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரைப்பற்றி அறிவிப்புக்கள் தேவையில்லை, அவரைச்சுற்றி பலர் நடந்து வரவும் தேவையில்லை. அவர் அங்கு நுழைந்ததும், அந்த அரங்கத்தில் உருவாகும் மரியாதை, தனிப்பட்ட வகையில் இருக்கும். அங்கு இருப்பவர்கள், எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமல், எழுந்து நிற்பார்கள். கரவொலி எழுப்புவதற்குப் பதில், அவரைக் கையெடுத்து கும்பிடுவார்கள். இதுதான் உள்ளூர உருவாகும் மரியாதை. இந்த மரியாதைக்குக் காரணம், அந்த மாமனிதர்கள் நம் உள்ளங்கள் மீது கொண்டிருக்கும் அதிகாரம். இந்த அதிகாரம்தான் 'Authority' என்ற வார்த்தைக்குத் தரப்படும் இரண்டாவது வகையான அர்த்தம்.

இந்த இரண்டாவது வகையில் மற்றோர் அம்சமும் அடங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்டத் துறையில் ஒருவர் பெற்றுள்ள ஆழமான புலமைத்துவம், அந்தப் புலமைத்துவத்தின் அடிப்படையில் அதைப் பற்றிப் பேசுவதற்கோ, எழுதுவதற்கோ அவர் சுயமாகப் பெறும் அதிகாரம்... இது, இந்த இரண்டாவது அர்த்தத்தில் பொதிந்துள்ள மற்றோர் அம்சம். பல ஆண்டுகள், பல்லாயிரம் சோதனைகளை மேற்கொண்டு, பல நூறு தோல்விகளைச் சந்தித்து, மின்விளக்கை உருவாக்கியவர், தாமஸ் ஆல்வா எடிசன் என்பதை நாம் அறிவோம். மின்விளக்கைப் பற்றிப் பேச இவரைவிட யாருக்கு அதிகாரம் இருக்கமுடியும்? எடிசன் எந்த ஒரு பள்ளியிலும் பயின்றதாகத் தெரியவில்லை. கல்வி பயிலவே அருகதையில்லை என்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவர், தன் சொந்த படைப்பாற்றல் கொண்டு 1000க்கும் அதிகமான கண்டுபிடிப்புக்களை உலகறியச் செய்தார். தன் கண்டுபிடிப்புக்களைப் பற்றி பேசும் அதிகாரமும் பெற்றார்.

அதிகாரம் என்பது, நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்கமுடியும், தீர்க்கவும் முடியும். நமது குடும்பங்களில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பேரவைகள் வரை அதிகாரம் பல பிரச்சனைகளை உருவாக்கியவண்ணம் உள்ளது.

போட்டியிட்டுப் பெறும் பதவிகளால் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரம் நிரந்தமானது அல்ல. மாறாக, உன்னதமான பண்பு, அல்லது உயர்ந்த அறிவு இவற்றைக் கொண்டு ஒருவர் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம், அவரது வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த அதிகாரத்தில், பொதுவாக, ஆணவம் இருக்காது. அடுத்தவரை அடக்கி ஆளவேண்டும் என்ற ஆவல் இருக்காது. ஒருவர் சுயமாக தனக்குள் வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மன சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேச வைக்கும்.

இயேசுவின் அதிகாரம், இந்த வகையைச் சார்ந்தது. அவர் எந்த ஒரு குருவிடமோ, பள்ளியிலோ பயிலவில்லை. இறைவனைப்பற்றி தன் வாழ்வில் ஆழமாக உணர்ந்து தெளிந்தவற்றை மக்களிடம் பகிர்ந்துகொண்டார். எனவே, அவர் சொன்னவை, மக்களை வியப்பில் ஆழ்த்தின. மோசேயின் சட்டங்களிலிருந்து, மனப்பாடம் செய்தவற்றைச் சொல்வதுபோல், மறைநூல் அறிஞர்கள் கூறிவந்த பாடங்களுக்கும், இயேசு தன் சொந்த அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மைகளைச் சொன்னதற்கும் வேறுபாடுகள் இருந்தன. கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை இயேசு ஆழமாக உணர்ந்ததால், அவர் இந்த அதிகாரத்துடன் போதித்தார்.
மக்களுக்கு கற்பிப்பதற்காக இயேசு பயன்படுத்திய இந்த அதிகாரத்தை இன்னும் சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ளவும், அந்த அதிகாரத்தால், கப்பர்நாகும் தொழுகைக்கூடத்தில் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புக்களை சிந்திக்கவும் நாம் அடுத்தத் தேடலில் முயல்வோம்.


26 October, 2019

The Danger of Self-worship தன்னையே ஆராதிக்கும் ஆபத்து

Green Diwali

The Publican and the Pharisee

30th Sunday in Ordinary Time

October 27, this Sunday, the Festival of Lights (Deepavali or Diwali) is celebrated. We begin today’s reflection, wishing all our Hindu friends a meaningful celebration of the Festival of Lights. Every year, during the Deepavali season, some instructive, short videos get shared in social networks, on how to celebrate Deepavali in a more responsible way.
One of those videos caught my attention to a great extent. It depicts a young man who piles a few 100 Rupee notes on the pavement, and sets them on fire. Another man, carrying bags of crackers, runs to him and asks him whether the young man is out of his mind by setting fire to the currency notes. The young man points to the bag of crackers and says, “Do you think you are sane in spending money on these things?”
The young man then goes on to explain how, with the money spent on crackers, which again amounts to burning money, he could have bought food and clothing for a few poor people and made their Deepavali happier. As he says these lines, we see the young man sharing clothes and food items with some very poor people. Many of those poor, senior citizens bless the young man whole-heartedly. What better joy can one get than this!

October 27, this Sunday, an important event takes place in Vatican. The Synod on Amazon, with the theme: Amazonia: New Paths for the Church and for an Integral Ecology, which began on October 6, comes to a close with the Mass celebrated by Pope Francis in St Peter’s Basilica. One of the main themes discussed during the Synod is the protection of the environment. It is interesting to note that this Synod comes to a close on the feast of Deepavali, which, constantly brings concerns about the environment to the fore. Noise pollution and the pollution of the atmosphere with sulphur, leading to respiratory problems are the challenges Deepavali poses every year.

We are very much aware of how animals and birds are disturbed by the bursting of crackers. We can surely think of babies, senior citizens, patients in hospitals and pavement dwellers who get disturbed by the continuous noise of the crackers. How many huts go up in flames when the fireworks, ‘misfire’ and land on a thatched roof. Added to all these, we should also be thinking of hundreds of children who work like slaves to produce these crackers. We pray that the good Lord truly enlightens our minds to see the ‘darker side’ of this festival of light.

Light which is the central theme of the great festival of Deepavali, also stands as a symbol of humility. A lamp is lighted to dispel the darkness around. It does not draw attention to itself. The moment a light draws attention to itself, negative effects follow. When we keep looking at light itself, our eyes begin to get irritated. Staring at a bright light like the sun, can cause damage to our eyes. Hence, by definition, a light burns brightly in order to shed light on its surrounding, without drawing attention to itself. This can easily become a symbol for humility! In today’s Gospel (Luke 18:9-14) we are invited to reflect on the virtue of humility.

The opening words of this parable, namely, “Two men went up into the temple to pray…” give an impression that Jesus is giving a lesson on prayer. But, Luke’s introduction to this parable gives us a clue as to the intention of Jesus:  Jesus also told this parable to some who trusted in themselves that they were righteous and despised others. (Lk. 18:9) Luke uses a similar introduction to the parable of the Unjust Judge and the Widow which we reflected on last Sunday: And he told them a parable, to the effect that they ought always to pray and not lose heart. (Lk. 18:1)

When we take both these parables together, what grabs our attention first is, the ‘locus’ (the place of action) Jesus uses for both these parables. We expect a parable on prayer to be situated in a place of worship. But, Jesus narrated the parable on prayer without mentioning a temple. He spoke of the widow who kept pursuing the judge wherever he went – the road, the court, the judge’s house, the market place… everywhere. While running from pillar to post, the widow must have raised her heart to God in prayer in all these places. Although Jesus intended to use this parable to teach about perseverance in prayer, we can easily see that Jesus was also teaching an indirect lesson that no place can be labeled as ‘unfit’ for prayer.

The most fitting place for prayer, as most of us would agree, is the temple/church. But, Jesus uses the temple, not to teach about prayer, but to teach about pride and/or humility. Jesus used the temple only as a backdrop, while he was concentrating on what was going on in the heart and mind of his two characters – the Pharisee and the Tax Collector. Jesus is telling us indirectly that even in the holiest of places, we can end up worshipping ourselves instead of worshipping God.

Here is an interesting story that talks of narcissistic, self-worship: Girolamo Savonarola was one of the great preachers of the fifteenth century. He preached in the great cathedral of Florence, Italy, which contained a magnificent marble statue of the Blessed Virgin Mary. When Savonarola started preaching at this great cathedral, he noticed one day an elderly woman praying before this statue of Mary. He then began to notice that it was her habit to come every day and pray before the statue. Savonarola remarked one day to an elderly priest who had been serving in the cathedral for many years, "Look how devoted and earnest this woman is. Every day she comes and offers prayers to the blessed Mother of Jesus. What a marvelous act of Faith!" But the elderly priest replied, "Do not be deceived by what you see. Many years ago, when the sculptor needed a model to pose for this statue of the blessed Mother, he hired a beautiful young woman to sit for him. This devout worshiper you see here every day, was that young woman. She is worshipping who she used to be." (Rev.Jones)

In a Church, in the presence of God, Mother Mary and the Saints, is it possible to worship oneself? It is dangerously possible, says Jesus in the Parable of the Pharisee and the Tax Collector.

An analysis of the words used by the Pharisee and the Tax Collector helps us understand what is/isn’t true prayer. Both of them begin their statements calling on God. This usually indicates that what follows this would be a prayer. But, after the first word – God – the Pharisee says 32 words, most of which are self-promotion and comparison with others with the generous use of the ‘I’.
The Tax Collector on the other hand, uses six words after calling on God and they are a simple acknowledgement of who he is. This simple, humble statement of self-revelation, reaches God more easily. We hear from the first reading of this Sunday - Wisdom of Sirach - how the prayer of the humble person pierces the clouds: The prayer of the humble pierces the clouds, and he will not be consoled until it reaches the Lord. (Sir.35:17)

The humble statement of the Tax Collector is pleasing to God and hence, Jesus concludes the parable with his famous words of reversal, which must have shocked his listerners.
When Jesus began the parable with the words: “Two men went up into the temple to pray, one a Pharisee and the other a tax collector”, his listeners would have already drawn their conclusions… namely, the Pharisee would go home with God’s approval for his upright ways, while the tax collector would receive God’s condemnation for his devious ways. These foregone conclusions of the people came crashing down when Jesus dropped a bomb at the end of the parable: “I tell you, this man (the tax collector) went down to his house justified rather than the other (the Pharisee); for every one who exalts himself will be humbled, but he who humbles himself will be exalted.” (Lk. 18:14)

Humility, one of the cardinal Christian virtues, is called the foundation of all the other virtues by Saint Augustine: “Humility is the foundation of all the other virtues. Hence, in the soul in which this virtue does not exist there cannot be any other virtue except in mere appearance.”

C.S.Lewis, the famous British lay theologian, in his book Mere Christianity wrote an article on pride with the title: The Great Sin. Here are some relevant excerpts:
There is one vice of which no man in the world is free; which everyone loathes when he sees it in someone else…There is no fault that makes a man more unpopular, and no fault which we are more unconscious of in ourselves. And the more we have it ourselves, the more we dislike it in others.
The vice I am talking of is Pride or Self-Conceit: and the virtue opposite to it, in Christian morals, is called Humility… According to Christian teachers, the essential vice, the utmost evil, is Pride. Unchastity, anger, greed, drunkenness, and all that, are mere fleabites in comparison: it was through Pride that the devil became the devil: Pride leads to every other vice: it is the complete anti-God state of mind.
Pride is essentially competitive – is competitive by its very nature – while the other vices are competitive only, so to speak, by accident. Pride gets no pleasure out of having something, only out of having more of it than the next man.  We say that people are proud of being rich, or clever, or good-looking, but they are not.  They are proud of being richer, or cleverer, or better looking than others. If every one else became equally rich, or clever, or good-looking there would be nothing to be proud about. It is the comparison that makes you proud, the pleasure of being above the rest. Once the element of competition has gone, pride has gone. 
I guess C.S.Lewis was thinking of the Pharisee in the temple while writing these words, especially the latter half. The Pharisee was trying to impress God, not by stating what he was, but what he was in comparison with others!

Here is an interesting quote by an anonymous person: “Humility is a paradox. The moment you think you've finally found it, you've lost it. There has yet to be written a book titled, ‘Humility and How I Achieved It.’” The second line of this quote about the book on humility made me laugh. With so many ‘Do-It-Yourself’ and ‘Made Simple’ manuals available in the market, I was wondering when we would see a manual on ‘Humility - Made Simple’. Humility seems like a simple virtue, but, in reality, it is much more complicated. It is so simple that one can take it for granted and thus lose it.

As we celebrate the Festival of Lights (Deepavali), may Christ, the true Light of the world, dispel the darkness of pride from within us. 

Village without crackers

The Pharisee and the Tax Collector

பொதுக்காலம் - 30ம் ஞாயிறு

அக்டோபர் 27, இஞ்ஞாயிறன்று, தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில், இறைவன், அனைவருக்கும், ஒளிமிகுந்த வாழ்வை வழங்கவேண்டுமென வாழ்த்துகிறோம், வேண்டுகிறோம்.
ஒளிமிகுந்த வாழ்வு என்பதை, செல்வம் நிறைந்த, ஒளிமயமான எதிர்காலம் என்ற கோணத்தில் மட்டும் எண்ணிப்பார்க்காமல், உள்ளங்களில் அறிவொளி பெறுவதையும் எண்ணிப்பார்க்க, இந்தத் திருநாள் நம்மை அழைக்கிறது. அறிவொளி பெற்றவர்களாய், தீபாவளியை, அர்த்தமுள்ள வகையில் எவ்விதம் கொண்டாடுவது என்பதைக் கூறும் சில காணொளித் தொகுப்புகள், சமூக வலைத்தளங்களில் வலம் வந்தவண்ணம் உள்ளன. அவற்றில் ஒன்று, பின்வரும் காட்சியைச் சித்திரிக்கிறது:
இளைஞர் ஒருவர், சில 100 ரூபாய் நோட்டுக்களை, சாலையோரமாக அடுக்கிவைக்கிறார். பின்னர் ஒரு தீக்குச்சியைப் பற்றவைத்து, அந்த ரூபாய் நோட்டுக்களைக் கொளுத்துகிறார். அந்நேரம், அவ்வழியே, ஒரு வீட்டுத்தலைவர், தீபாவளிக்கென வாங்கிய பட்டாசு, மத்தாப்பு பைகளைச் சுமந்தவண்ணம் வருகிறார். ரூபாய் நோட்டுக்களைக் கொளுத்திக் கொண்டிருக்கும் இளைஞரைத் தடுக்க முயற்சி செய்கிறார், அம்மனிதர். "சார், இப்படி பணத்தை நெருப்புவைத்து கொளுத்துகிறீர்களே, உங்களுக்கென்ன புத்தி கெட்டுப்போச்சா?" என்று கேட்கும் அவரிடம், பையிலிருக்கும் பட்டாசு கட்டுகளைக் காட்டி, "நீங்க செய்வது மட்டும் புத்தியுள்ள செயலா?" என்று திருப்பிக் கேட்கிறார், இளையவர். தன் கையிலிருந்த பட்டாசுக் கட்டுக்களை, கேள்விக்குறியுடன் பார்க்கும் அந்த வீட்டுத்தலைவரிடம், "சாம்பலாகும் இந்தப் பட்டாசுகளுக்கு நீங்கள் செலவழித்தப் பணத்தைக் கொண்டு, எத்தனையோ வறியோர் வீடுகளில் ஒளியேற்றியிருக்க முடியும். தீபாவளியைக் கொண்டாடமுடியாமல் தவிக்கும் அவர்களுக்கு, உடையும், உணவும் வாங்கித் தந்திருக்கலாமே" என்று கூறுகிறார் இளைஞர்.
இளையவர் இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது, அவர், தெருவோரம் படுத்திருக்கும் சில முதியோருக்கு உணவும், உடையும் வழங்குவதுபோல் காட்சிகள் திரையில் தோன்றுகின்றன. வறியோரின் இல்லங்களில் நம்பிக்கை ஒளியேற்ற, தீபாவளி ஒரு தகுந்த தருணம் என்பதை இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்ற மன்றாட்டுடன் இன்றைய சிந்தனைகளைத் துவக்குவோம்.

அக்டோபர் 27, இஞ்ஞாயிறன்று, மற்றொரு முக்கிய நிகழ்வு, வத்திக்கானில் இடம்பெறுகிறது. அமேசான் பகுதியை மையப்படுத்தி, அக்டோபர் 6ம் தேதி துவங்கிய ஆயர்களின் சிறப்பு மாமன்றம், இந்த ஞாயிறு நிறைவுபெறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை, தன் குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த மாமன்றம், தீபாவளித் திருநாளன்று நிறைவு பெறுவது, பொருத்தமாக உள்ளது. தீபாவளிக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், இடையே உள்ள தொடர்பை நினைவுறுத்துகிறது.

தீபாவளி என்றாலே, அனைவரின் நினைவுக்கும் வருவது, பட்டாசுகள். காதைப் பிளக்கும் வெடிகளை வெடித்தால்தான் தீபாவளி என்று நினைப்பவர்கள் பலர். ஆனால், பட்டாசுகள் இல்லாமல், வெடி சப்தம் இல்லாமல், தமிழகத்தின் ஒரு சில கிராமங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தீபாவளியைக் கொண்டாடி வருகின்றன.
அவற்றில் முக்கியமானவை, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள கூந்தன்குளம், மற்றும், ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு ஆகிய கிராமங்கள். இக்கிராமங்களில் உள்ள சரணாலயத்திற்கு வரும் பறவைகளை அச்சுறுத்தாமல் இருக்க, இக்கிராம மக்கள், பட்டாசுகளை, பல ஆண்டுகளாகத் தவிர்த்து வருகின்றனர். அதேபோல, திருவிழா நேரங்களில், ஒலிப்பெருக்கிகளையும் அவர்கள் பயன்படுத்துவதில்லை.
சுற்றுச்சூழலை சீரழிக்காமல், பறவைகளையும், மிருகங்களையும் துன்புறுத்தாத வண்ணம் தீபாவளியைக் கொண்டாடமுடியும் என்பதற்கு, இவ்வூர் மக்கள் வழிகாட்டிகள். பறவைகளும், விலங்குகளும் மட்டுமல்லாமல், வயது முதிர்ந்தோர், நோயுற்றோர், குழந்தைகள் ஆகியோரும், பட்டாசு ஒலியாலும், அவற்றிலிருந்து எழும் கந்தகப் புகையாலும் துன்புறுவதை, நாம் நன்கு அறிவோம். காசைக் கரியாக்காமல், வறியோரின் இல்லங்களில் ஒளியேற்றி, சுற்றுச்சூழலை சீரழிக்காமல், பிற உயிரினங்களை வதைக்காத வண்ணம் தீபாவளியைக் கொண்டாடும்போது, அது உண்மையில் ஒளி மிகுந்த வாழ்வை அனைவருக்கும் உருவாக்கும்.

தீபாவளித் திருநாளை அடையாளப்படுத்தும் தீபங்கள், இஞ்ஞாயிறு வழிபாட்டு வாசகங்களுடன் நம்மைத் தொடர்பு படுத்துகின்றன. ஏற்றப்படும் தீபம், தன்னைச் சுற்றியுள்ள பொருள்களை ஒளிர்விப்பதை, தன் பணியாகக் கொண்டுள்ளது. தான் எவ்வளவு தூரம் ஒளிவிடமுடியும் என்பதை விளம்பரப்படுத்த, விளக்கு எரிவதில்லை. ஒளிவிளக்குகள், தங்கள் மீது நம் கவனம் அனைத்தையும் கட்டிப்போடும்போது, அதனால் தீமைகளே விளைகின்றன. ஒளிரும் விளக்கை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருந்தால், நம் கண்களில் கண்ணீர் வரக்கூடிய அளவு, எரிச்சல் உண்டாகலாம். ஏன், சில வேளைகளில், கதிரவன் போன்று, மிக சக்திவாய்ந்த ஒளியை, நீண்ட நேரம், நேரடியாக காணும்போது, கண்கள் பழுதடையவும் வாய்ப்புண்டு. இதற்கு மாறாக, தன்னை விளம்பரப்படுத்தாமல், தான் எரிந்து, தன்னைச் சுற்றியுள்ள உலகை ஒளிர்விக்கும் விளக்கே பயன்தரும். அவ்வகையில் பயன்தரும் விளக்கு, பணிவுக்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டு. ஒளியின் திருநாளன்று, பணிவுப்பாடங்களைக் கற்றுக்கொள்ள, இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கிறது.

லூக்கா நற்செய்தி, 18ம் பிரிவில், ஒன்றன்பின் ஒன்றாகக் கூறப்பட்டுள்ள இரு உவமைகள், (லூக்கா 18:1-8; 18:9-14) சென்ற ஞாயிறும், இந்த ஞாயிறும் நமக்கு நற்செய்தி வாசகங்களாக அமைந்துள்ளன. "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர்" என்று, இன்றைய உவமையை, இயேசு ஆரம்பிக்கிறார். இறைவன், கோவில், வேண்டுதல் என்ற வார்த்தைகளைக் கேட்டதும், இவ்வுவமை, செபிப்பது பற்றிய ஒரு பாடம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், பணிவு என்ற பாடத்தைச் சொல்லித்தரவே, இயேசு, இந்த உவமையைச் சொன்னார் என்பதை, இவ்வுவமையின் அறிமுக வரிகள் நமக்குச் சொல்கின்றன: தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார் (லூக்கா 18: 9) என்று நற்செய்தியாளர் லூக்கா இவ்வுவமையை அறிமுகம் செய்துள்ளார்.
சென்ற ஞாயிறன்று நாம் சிந்தித்த 'நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்' என்ற உவமையை இயேசு சொன்னதற்கான காரணத்தை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு கூறியிருந்தார்: "அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்" (லூக்கா 18: 1).

அடுத்தடுத்து சொல்லப்பட்டுள்ள இவ்விரு உவமைகளில், இயேசு பயன்படுத்தியிருக்கும் கதைக்களம், நம் கவனத்தை, முதலில் ஈர்க்கிறது. நமது கண்ணோட்டத்தின்படி சிந்தித்தால், மனந்தளராமல் செபிக்கவேண்டும் என்ற கருத்தைச் சொல்ல, கோவில் பொருத்தமானதொரு கதைக்களமாகத் தெரிகிறது. ஆனால், இயேசு, அந்த உவமையில், கோவிலைப் பயன்படுத்தவில்லை. தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன், கைம்பெண் ஒருவர், நேர்மையற்ற நடுவரை, எல்லா இடங்களிலும் தொடர்ந்தார் என்பதை, இயேசு இவ்வுவமையில் மறைமுகமாகக் கூறியுள்ளார்.
இந்தத் தொடர்முயற்சியின்போது, இக்கைம்பெண், இறைவனிடம் தன் விண்ணப்பத்தை எழுப்பியபடி, ஒவ்வொரு இடமாகச் சென்றிருப்பார். இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, இடைவிடாமல் செபிக்கவேண்டும் என்ற பாடத்தை மட்டும் அல்ல, கூடுதலாக ஒரு பாடத்தையும் இயேசு சொல்லித்தந்தார் என்பதை உணரலாம். அதாவது, வீதியோரம், நீதிமன்றம், இறை நம்பிக்கையற்ற நடுவரின் வீட்டு வாசல் என்று, எவ்விடமானாலும், அங்கெல்லாம் இறைவனிடம் செபிக்கமுடியும் என்பதை, சென்ற வார உவமையின் வழியாகச் இயேசு சொல்லித் தந்துள்ளதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்த வார உவமையில், தற்பெருமையுடன் வாழ்வது தவறு என்ற கருத்தை வலியுறுத்த, இயேசு, கோவிலை, தன் கதைக்களமாகத் தேர்ந்துள்ளார். பொதுவாக, தற்பெருமை தாராளமாக வெளிவரும் இடங்களான, அறிஞர்கள் அவை, அரண்மனை, அரசியல் மேடை, விளையாட்டுத் திடல் போன்ற கதைக்களங்களைப் பயன்படுத்தாமல், ஒரு கோவிலை தன் கதைக்களமாகத் தேர்ந்துள்ளார் இயேசு.
உள்ளம் என்ற கோவிலில் இறைவன் குடியிருந்தால், நாம் செல்லும் இடமெல்லாம் புனித இடங்களாகும்; அங்கெல்லாம் நம்மால் செபிக்கமுடியும். அதேநேரம், புனித இடம் என்று கருதப்படும் கோவிலே என்றாலும், அங்கு செல்லும் நம் உள்ளத்தில், 'நான்' என்ற அகந்தை நிறைந்திருந்தால், கோவிலும் சுயவிளம்பர அரங்கமாக மாறும். அங்கு நம்மை நாமே ஆராதனை செய்துவிட்டுத் திரும்புவோம் என்ற எச்சரிக்கை, இந்த உவமையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அன்னை மரியாவின் புகழ்பெற்ற திருத்தலம் ஒன்றில், ஓர் இளம் அருள்பணியாளர், திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார். பீடத்திற்கருகே, பளிங்கினால் செய்யப்பட்ட அன்னை மரியாவின் உருவச் சிலை வைக்கப்பட்டிருந்தது. வயதான ஒரு பெண்மணி, அந்த உருவச் சிலைக்கு முன், அன்னையின் அழகிய முகத்தை உற்று நோக்கியவாறு அமர்ந்திருந்தார். ஒவ்வொரு நாளும், அன்னையின் உருவத்திற்கு முன், அந்தப் பெண், இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்ட இளம் அருள்பணியாளர், அத்திருத்தலத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றிவந்த வயதான அருள்பணியாளரிடம் சென்று, அந்தப் பெண்ணின் பக்தியைப் பற்றி பாராட்டிப் பேசினார்.
அவர் கூறியதைக் கேட்ட அந்த வயதான அருள்பணியாளர், ஒரு புன்சிரிப்புடன், "சாமி, நீங்கள் இப்போது காண்பதை வைத்து ஏமாறவேண்டாம். பல ஆண்டுகளுக்கு முன், இந்த ஊரைச் சேர்ந்த சிற்பி ஒருவர், அன்னை மரியாவின் சிலையைச் செதுக்க, ஓர் அழகிய இளம்பெண்ணை 'மாடலாக'ப் பயன்படுத்தினார். அந்த இளம்பெண்தான் நீங்கள் இப்போது காணும் அந்த வயதானப் பெண்மணி. அவர் ஒவ்வொருநாளும், அன்னையின் திரு உருவத்திற்கு முன் அமர்ந்திருப்பது, பக்தியால் அல்ல. மாறாக, அவர், தன் இளமையையும், அழகையும் ஆராதிக்கவே அங்கு அமர்ந்துள்ளார்" என்று கூறினார்.
புனிதம் நிறைந்த ஆலயத்தில், வழிபாட்டில் கலந்துகொள்வோரும், வழிபாட்டை நடத்துவோரும், இறைவனுக்கு முன், அன்னை மரியாவுக்கு முன், புனிதர்களுக்கு முன், தங்களையே ஆராதிக்க முடியுமா? முடியும் என்று இயேசு, இன்றைய உவமை வழியே நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

"இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்" (லூக்கா 18: 10) என்ற வார்த்தைகளுடன், இயேசு, இந்த உவமையைத் துவக்கியதும், சூழ இருந்த மக்கள், கதையின் முடிவை, ஏற்கனவே எழுதி முடித்திருப்பர். பரிசேயர் இறைவனின் ஆசீர் பெற்றிருப்பார்; வரிதண்டுபவர், இறைவனின் கண்டனத் தீர்ப்பைப் பெற்றிருப்பார் என்று, மக்கள் முடிவு கட்டியிருப்பர். பரிசேயருடன் ஒப்பிட்டால், வரிதண்டுபவர், மக்கள் மதிப்பில் பல படிகள் தாழ்ந்தவர்தான். உரோமையர்களுக்காக தன் சொந்த மக்களிடமே வரி வசூல்செய்த இவரிடம், நேர்மை, நாணயம், நாட்டுப்பற்று, இறைப்பற்று என்று பல அம்சங்கள் தொலைந்து போயிருந்தன. எனவே, இறைவன் முன்னிலையில், பரிசேயருக்கு ஆசீரும், வரிதண்டுபவருக்கு சாபமும் கிடைத்திருக்கும் என்ற மனநிலையோடு கதையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களின் எண்ணங்களை, தலைகீழாகப் புரட்டிப்போட்டார், இயேசு.

இந்தத் தலைகீழ் மாற்றம் உருவாகக் காரணம், இவ்விருவரும் தங்களைப்பற்றி கொண்டிருந்த தன்னறிவு; அதன் விளைவாக, அவர்கள் இறைவனிடம் கொண்ட உறவு. இவ்விருவருமே தங்களைப்பற்றி இறைவனிடம் பேசுகின்றனர். பரிசேயரும், வரிதண்டுபவரும் கூறிய வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன:
பரிசேயர் சொன்னது, 27 வார்த்தைகள். வரிதண்டுபவர் சொன்னதோ, 4 வார்த்தைகள். இருவரும் 'கடவுளே' என்ற வார்த்தையுடன் ஆரம்பித்தனர். இந்த முதல் வார்த்தையைக் கேட்டதும், இதைத் தொடரும் வார்த்தைகள், செபமாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், பரிசேயர் பயன்படுத்திய ஏனைய வார்த்தைகளில், அவர் சொன்னது, சுய விளம்பரம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த சுய விளம்பரத்தில் அவர், தன்னை, பிறரோடு ஒப்பிட்டுப்பேசிய வார்த்தைகளே அதிகம் (16). வரிதண்டுபவரோ, தன்னை யாரோடும் ஒப்பிடாமல், 'தான் ஒரு பாவி' என்பதை மட்டும் நான்கு வார்த்தைகளில் கூறியுள்ளார்.

பரிசேயரின் கூற்று, இறைவனின் கவனத்தை வலுக்கட்டாயமாகத் தன்மீது திருப்ப, அவர் மேற்கொண்ட முயற்சி. வரிதண்டுபவரின் மீது இறைவனின் கவனம் திரும்பிவிடுமோ என்ற பயத்தில், அவரைவிட, தான், கடவுளின் கவனத்தைப் பெறுவதற்குத் தகுதி உடையவர் என்பதை, அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் பரிசேயர். சொல்லப்போனால், கடவுளின் பார்வை தன்மேல் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஆவலில், பரிசேயர், கடவுளுக்கே கடிவாளம் மாட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
இதற்கு மாறாக, வரிதண்டுபவர், தன்னைப்பற்றி அதிகம் பேசவில்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்: "இறைவா, இதோ நான், இதுதான் நான், இவ்வளவுதான் நான்." வரிதண்டுபவர் கூறிய நான்கு சொற்கள், வானத்தைப் பிளந்து, இறைவனை அடைந்தன. இதையே, இன்றைய முதல் வாசகத்தில், சீராக்கின் ஞானம் அழகாகக் கூறியுள்ளது: "தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை." (சீராக் 35:17)

தன் உண்மை நிலையைப் புரிந்துகொள்ளுதல், அதனை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய அம்சங்கள், உண்மையான தாழ்ச்சியின் கூறுகள். இந்தத் தன்னறிவில், அடுத்தவரை இணைக்காமல், ஒப்பிடாமல் சிந்திப்பது, இன்னும் உயர்ந்ததொரு மனநிலை. எனவே இயேசு, வரிதண்டுபவரை உயர்த்தி, பரிசேயரை தாழ்த்தி, தன் உவமையை நிறைவு செய்தார்: பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் (லூக்கா 18: 14)

இந்த உவமையைக் கேட்கும் வேளையில், 'கடவுளே, நான் அந்த பரிசேயரைப்போல் இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்' என்ற எண்ணம், ஒரு செபத்தின் வடிவில், நம் உள்ளத்திலிருந்து எழ வாய்ப்புண்டு. அப்படி எழுந்திருந்தால், நமக்கும், அந்தப் பரிசேயருக்கும் வேறுபாடு இல்லை என்ற கசப்பான உண்மையை, இயேசு நம்மை நோக்கி கூறியிருப்பார்.

தலை சிறந்த ஏழு புண்ணியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது தாழ்ச்சி. இந்தப் புண்ணியத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. தற்பெருமை, பணிவு என்ற இரு மனித உணர்வுகளை, மனநிலைகளை ஆய்வுசெய்ய இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கின்றது.
கதாசிரியராக, கவிஞராக, இறையியல் மேதையாக, பேராசிரியாகப் பணியாற்றியவர் C.S.Lewis. இவர், அடிப்படை கிறிஸ்தவம் என்று பொருள்படும், Mere Christianity என்ற நூலை 1952ம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலில் 'The Great Sin' - பெரும் பாவம் - என்ற தலைப்பில் அகந்தையைப்பற்றி ஆழமான கருத்துக்களைக் கூறியுள்ளார். அக்கட்டுரையின் ஆரம்ப வரிகளே நம்மை ஈர்க்கின்றன:
"எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதரிடமும் ஒரு குறை உள்ளது. மற்றவர்களிடம் இக்குறையைக் கண்டு வெறுக்கும் நாம், அதே குறை நம்மிடம் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இதுதான் அகந்தை" என்று அவர் தன் கட்டுரையை ஆரம்பித்துள்ளார். பின்னர், அகந்தையின் ஒரு முக்கியப் பண்பான ஒப்புமைப்படுத்துதல் என்பதைக் குறித்து அழகாக விவரிக்கிறார்.
ஒப்புமையும், போட்டியும் இன்றி அகந்தையால் வாழமுடியாது. என்னிடம் ஒன்று உள்ளது என்று சொல்வதைவிட, ‘என்னிடம் உள்ளது, அடுத்தவரிடம் உள்ளதை விட அதிகம் என்ற கோணத்தில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவதே அகந்தை. என் திறமை, அழகு, அறிவு இவற்றில் நான் பெருமை கொள்கிறேன் என்று ஒருவர் சொல்கிறார். உண்மையில் அவர் சொல்ல முனைவது வேறு... மற்றவர்களைக் காட்டிலும், அதிகத் திறமையுள்ளவராக, அழகானவராக, அறிவுள்ளவராக இருப்பதில்தான் பெருமை - அதாவது, அகந்தை - கொள்ளமுடியும். சமநிலையில் அழகு, அறிவு, திறமை உள்ளவர்கள் மத்தியில், ஒருவர் அகந்தை கொள்ளமுடியாது. ஒப்புமையோ, போட்டியோ இல்லாதச் சூழலில் அகந்தைக்கு இடமில்லை."
இன்றைய உவமையில் நாம் காணும் பரிசேயர், தன்னை மற்றவர்களோடு ஒப்புமைப்படுத்தி, அதில் தன் பெருமையை நிலைநாட்டுகிறார். இவ்வகைப் போட்டியாலும், ஒப்புமையாலும், அகந்தையில் சிக்கியவர்கள், கடவுளோடும் தொடர்பு கொள்ளமுடியாது. அவர்களைப் பொருத்தவரை, கடவுளும் அவர்களுக்குப் போட்டியே.

இதற்கு மாற்றாக, சொல்லப்படும் புண்ணியம், அடக்கம், பணிவு, தாழ்ச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர். தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம் என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று ஆரம்பமாகும் அடக்கமுடைமை என்ற பிரிவில், அழகிய பத்து குறள்களை நமது சிந்தனையில் பதிக்கிறார் திருவள்ளுவர்.

தன்னை முன்னிலைப்படுத்தாமல், தன்னை எரித்து, பிறருக்கு ஒளியூட்டும் விளக்கை மையமாக வைத்து கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளன்று, பணிவான மனதோடு பணியாற்றும் பாடத்தை, தீபங்களிடமிருந்து கற்றுக்கொள்ள இறைவன் நமக்குத் துணை செய்வாராக!


19 October, 2019

‘Baptised and Sent…’ ‘திருமுழுக்கு பெற்று, அனுப்பப்பட்டு...’

Baptised and Sent

29th Sunday in Ordinary Time – Mission Sunday

October 20, this Sunday, we, Catholics, spread throughout the world, celebrate ‘the 93rd Mission Sunday’. Usually, when we speak of a feast day, we tend to use the words – Today the Catholic Church celebrates such and such a feast. Such an expression makes us more of spectators than participants. This Sunday, however, all of us together can truly and meaningfully say, that we celebrate the ‘Mission Sunday’, since we participate in the Mission of the Church!

When we hear the word ‘Mission’, our minds naturally associate the word ‘Missionaries’. The term ‘missionaries’ brings to mind only priests and religious, whereas the term ‘mission’ includes all of us. Every one of us is ‘missioned’, namely, ‘sent’.
Pope Francis, for this year’s Mission Sunday has written a message with the title: “Baptised and Sent: The Church of Christ on Mission in the World.” It is interesting to note that the Pope has not used words like ‘Consecrated and Sent’ or ‘Ordained and Sent’. Those words would have made the ‘act of sending’, namely, ‘mission’, specific to Bishops, Priests and Religious.  But, by saying, ‘Baptised and Sent’, Pope Francis has made it clear that all the Baptised persons are Sent to carry out a mission in this world.

There is a beautiful saying attributed to Rabindranath Tagore, namely: “Every child comes with the message that God is not yet discouraged of man.” Every one of us coming into this world is a gift from God, a messenger sent by God, bringing a positive message to the world.
Cardinal Henry Newman, one of the five Blesseds canonized last Sunday, in one of his meditations, has said: “God has created me to do him some definite service. He has committed some work to me which he has not committed to another”.
Helen Keller emphasises our ‘mission’ in these words: “I am only one, but still I am one. I cannot do everything, but still I can do something; and because I cannot do everything, I will not refuse to do something that I can do.”

Stringing together the thoughts of Tagore, Newman and Keller, we can see that the very first ‘mission’ given to each one of us is to cherish ourselves and others as lovely gifts come into this world. Each of us is given a specific mission to fulfil in this world. No one else is assigned to do this mission. How great this world would turn out to be, if every child realises, that he or she is a unique gift sent into this world for a unique purpose! More than ever, our present day world needs positive reassuring messages like this, especially the message that ‘God is not yet discouraged of man’.

This year, the Mission Sunday has a special significance. In 1919, Pope Benedict XV wrote the Apostolic Letter ‘Maximum Illud’ to clarify the Catholic Church’s understanding of missions. During the Angelus Prayer on World Mission Sunday, October 22, 2017, Pope Francis publicly announced to the whole Church his intention to designate an Extraordinary Missionary Month for October 2019 to celebrate the 100th anniversary of Pope Benedict XV's Apostolic Letter Maximum Illud.

In this letter, Pope Benedict XV has emphasised the universality of the Catholic Church and its Mission. Here are some extracts from this letter:
The Catholic Church is not an intruder in any country; nor is she alien to any people. It is only right, then, that those who exercise her sacred ministry should come from every nation, so that their countrymen can look to them for instruction in the law of God and leadership on the way to salvation. Wherever the local clergy exist in sufficient numbers, and are suitably trained and worthy of their holy vocation, there you can justly assume that the work of the missionary has been successful and that the Church has laid her foundations well. And if, after these foundations have been laid and these roots sunk, a persecution should be raised to dislodge her, there need be no reason to fear that she could not withstand the blow. (No.16)

Pope Benedict XV has expressed his pain on receiving reports that subtle forms of ‘colonization’ had taken place in some countries in the name of ‘mission’.
We have been deeply saddened by some recent accounts of missionary life, accounts that displayed more zeal for the profit of some particular nation than for the growth of the kingdom of God… This is not the way of the Catholic missionary, not if he is worthy of the name. No, the true missionary is always aware that he is not working as an agent of his country, but as an ambassador of Christ. And his conduct is such that it is perfectly obvious to anyone watching him that he represents a Faith that is alien to no nation on earth, since it embraces all who worship God in spirit and in truth… (No.20)

Pope Benedict XV has mentioned, in a special way, the missionary works undertaken by Religious Sisters:
We must not go further without saying something about the work that is being done by women, for since the very earliest days of the Church they have always been remarkable for their diligence and zeal in assisting the preachers of the Gospel. We want to single out here, and single out for Our highest praise, those many women who have vowed their virginity to God and have gone to pursue their vocation on the missions. (No.30)

Towards the end of this apostolic letter, the Pope has suggested three general ways in which a Catholic could assist the missionary effort, and missionaries themselves. The first is Prayer. The way Pope Benedict XV has combined Prayer and Missionary efforts, brings us to this Sunday’s Readings. The Pope makes a reference to the prayer made by Moses for his people. The first reading today (Exodus 17:8-13) talks of this incident. Here are the reflections made by Pope Benedict XV:
There are three general ways in which a Catholic can assist the missionary effort, and missionaries themselves constantly remind us of them. The first is within everyone’s capacity. This first means is prayer, prayer that God may grant the missions His merciful aid. We have already insisted that the toil of our missionaries would be futile and barren unless divine grace rendered it vital and fruitful… While the Israelites fought their battle with Amalek, Moses took his stand on a great hill and, lifting up his hands, implored God’s aid for his people. The teachers of the Gospel are manfully at work in the Lord’s vineyard, and it is the duty of all the faithful to follow the example of Moses and grant them the support of their prayers.

Dire needs bring people to their knees, as it brought Moses. Once the needs are fulfilled, do we forget prayer? The answer lies in the passages from Luke’s Gospel for today (Luke 18: 1-8) as well for 17th Sunday in Ordinary Time – Luke 11: 1-13. In both these passages Jesus talks about prayer not as a lofty philosophical treatise, but as simple life stories. Isn’t Christ telling us clearly that prayer should become part of our life and not a matter of intellectual discussion or an antidote used only during emergencies and dire needs? Prayer is the air we breathe, not an oxygen mask!

When I was thinking how best to combine Mission Sunday with the readings on prayer given to us today, the image of St Teresa of Child Jesus flashed across my mind. It is appropriate that the Extraordinary Missionary Month began on October 1, the Feast of St Teresa of Child Jesus, with the vespers in St Peter’s Basilica presided over by Pope Francis. St Teresa, along with St Francis Xavier, are declared as the Patrons of Mission Countries. One can easily understand why St Francis Xavier is given the honour as the Patron of Missions, since he travelled far and wide in quite a few Mission Countries and brought people to Christ and Christ to the people. St Teresa of Child Jesus did not leave the portals of her cloistered convent. All she did was to pray. Her prayers were equally powerful as the preaching of St Xavier in leading thousands of souls to Christ. Hence, Mission is to be seen both as proclamation as well as Prayer. In such a context, this Sunday’s readings on prayer make much sense for the Mission Sunday!

We pray the good Lord to enlighten our hearts and minds to make prayer an integral part of our lives and thus become Missionaries in our own right! We pray in a special way that each of us become ‘missionaries of hope’ for this world gripped in hopelessness!

Eugène Burnand |The Unjust Judge

பொதுக்காலம் 29ம் ஞாயிறு - மறைபரப்புப்பணி ஞாயிறு

அக்டோபர் 20, இஞ்ஞாயிறன்று, உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களாகிய நாம், 'மறைபரப்புப்பணி ஞாயிறை'க் கொண்டாடுகிறோம். பொதுவாக, எந்த ஒரு திருநாளையும் பற்றி குறிப்பிடும்போது, அத்திருநாளை கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடுகிறது என்றே நாம் பெரும்பாலும் கூறுவது வழக்கம். அவ்வாறு கூறும்போது, அந்தத் திருநாளில் நாம் பங்கேற்பாளர்களாக இல்லாமல், பார்வையாளர்களாக மாறும் உணர்வைப் பெறுகிறோம். இந்த வழக்கத்திற்கு மாறாக, 'மறைபரப்புப்பணி ஞாயிறை' நாம் கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, இந்தத் திருநாளில் நாம் முழுமையாகப் பங்கேற்கும் உணர்வைப் பெற வாய்ப்பு உண்டு. உண்மையிலேயே, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, ஈடுபாட்டுடன் கொண்டாட வேண்டிய திருவிழா இது!

மறைபரப்புப்பணி என்றதும், அது, ஆயர்கள், குருக்கள், துறவியருக்கென ஒதுக்கப்பட்ட பணி என்று எண்ணி, நம்மில் பலர் ஒதுங்கிவிடக்கூடும். ஆனால், இந்த நாளைக் குறிக்க, ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் Mission Sunday, அதாவது, “அனுப்பப்படும் ஞாயிறு என்ற பதம், இந்நாளைக் குறித்த தெளிவுகளைத் தருகிறது.
இவ்வாண்டின் மறைபரப்புப்பணி ஞாயிறுக்கென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்கு, “Baptized and Sent” அதாவது, "திருமுழுக்கு பெற்று, அனுப்பப்பட்ட..." என்று தலைப்பிட்டுள்ளார். இச்செய்திக்கு, "அருள்பொழிவு பெற்று அனுப்பப்பட்ட..." என்று தலைப்பிட்டிருந்தால், அது, அருள்பொழிவு பெற்றுள்ள பணியாளர்களை குறிக்கும். ஆனால், மறைபரப்புப்பணி, திருமுழுக்கு பெற்ற அனைவருக்கும் உரியது என்பதை தெளிவுபடுத்த, இத்தலைப்பைத் தெரிவுசெய்துள்ளார் திருத்தந்தை.

அக்டோபர் 13, கடந்த ஞாயிறு, வத்திக்கானில் புனிதராக உயர்த்தப்பட்ட ஐவரில் ஒருவர், கர்தினால் ஜான் ஹென்றி நியூமன். அவர் தனது தியான உரை ஒன்றில் கூறிய சொற்கள் நம் நினைவில் அலைமோதுகின்றன: "ஒரு தனிப்பட்ட பணியை ஆற்றுவதற்கென்று கடவுள் என்னைப் படைத்துள்ளார். மற்றவர்கள் யாரிடம் ஒப்படைக்காத ஒரு தனிப்பட்ட பணியை அவர் என்னிடம் மட்டுமே ஒப்படைத்துள்ளார்." - “God has created me to do him some definite service. He has committed some work to me which he has not committed to another”.

மனிதராய் பிறந்த நாம் ஒவ்வொருவரும், இவ்வுலகில் தனிப்பட்டதொரு பணியை ஆற்ற அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை, இந்த நாள் நமக்கு நினைவுறுத்துகிறது. "உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், இறைவனிடமிருந்து வரும் பரிசு. இந்தப் பரிசுப் பொருள் ஒவ்வொன்றும், 'இறைவன் மனிதரைக் குறித்து இன்னும் களைப்படையவில்லை' என்ற செய்தியுடன் இவ்வுலகை அடைகிறது" என்று சொன்னவர், இந்திய மகாக்கவி இரவீந்திரநாத் தாகூர். நாம் ஒவ்வொருவரும், இவ்வுலகிற்கு, இறைவன் தந்த பரிசாக, அவரது அன்புச் செய்தியைத் தாங்கிவரும் தூதராக, அனுப்பப்பட்டுள்ளோம். குறிப்பாக, மனிதர்களைக் குறித்து இறைவன் இன்னும் களைப்போ, சலிப்போ அடையவில்லை என்ற நம்பிக்கை செய்தியை உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரப்புவதற்கு நாம் அனுப்பப்பட்டுள்ளோம். நம்பிக்கை இழந்து தவிக்கும் இன்றைய உலகில், நம்பிக்கை என்ற மறையுண்மையை பரப்புவது, மிக மிக முக்கியமான, அவசரமானத் தேவை.
மறையுண்மைகளைப் பரப்புவதற்கு, கோவில்களும், பிரசங்க மேடைகளும் தேவையில்லை. கிறிஸ்துவையும், நம்பிக்கை நிறைந்த அவரது நற்செய்தியையும், வார்த்தைகளால் அல்ல; மாறாக, உண்மையான கிறிஸ்தவ வாழ்வால், மக்களுக்குக் கொண்டுசெல்ல, நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

வார்த்தைகளால், பறைசாற்றப்படும் நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும் நற்செய்தி இன்னும் ஆழமான தாக்கங்களை உருவாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வாழ்க்கையால் நற்செய்தியைப் பறைசாற்றிய பலரில், Dr. Albert Schweitzer அவர்களும் ஒருவர். அவர் வாழ்வில் நடந்த நிகழ்வு இது...
ஆல்பர்ட் அவர்கள், ஆப்ரிக்காவில், வறியோர் நடுவே மேற்கொண்ட அற்புதமான மருத்துவப் பணிகளுக்காகவும், அணு ஆய்வுகள் இவ்வுலகிற்குத் தேவையில்லை என்ற எண்ணத்தை உலகில் பரப்ப அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் 1952ம் ஆண்டு உலக அமைதி நொபெல் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவ்விருதைப் பெற்ற அடுத்த ஆண்டு, அவர், அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு சென்றார். அவரை வரவேற்க பத்திரிக்கையாளர்கள், பெரும் தலைவர்கள் என்று, பலர், அவர் வரவிருந்த இரயில் நடைமேடையில் காத்திருந்தனர்.
ஆல்பர்ட் அவர்கள் இரயிலை விட்டு இறங்கியதும், கரவொலியும், காமிரா ஒளிவிளக்களும் அந்த இடத்தை நிறைத்தன. தன்னை சிறிது நேரம் மன்னிக்க வேண்டும் என்று வேண்டியபடி அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு சென்றார் ஆல்பர்ட். அந்த நடைமேடையில், இரு பெட்டிகளைச் சுமந்தபடி தவித்துக் கொண்டிருந்த வயதான கறுப்பின பெண்மணி ஒருவருக்கு உதவிசெய்து, அவரை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டார். பின்னர், அவருக்காகக் காத்திருந்தவர்களிடம் திரும்பிவந்தார் ஆல்பர்ட். இதைக்கண்ட ஒரு பத்திரிகையாளர் மற்றொருவரிடம், "நான் இதுவரை கோவில்களில் மறையுரைகளைக் கேட்டிருக்கிறேன். இதுதான் முதல்முறையாக, ஒரு நடமாடும் மறையுரையை, என் கண்முன் காண்கிறேன்" என்று கூறினார்.

ஆல்பர்ட் அவர்கள், 25 வயது இளைஞனாக இருந்தபோது, மறையுரை வழங்குவதிலும், இறையியல் வகுப்புக்கள் நடத்துவதிலும் தன்னிகரற்ற புகழ் பெற்றிருந்தார். ஆனால், தனது 30வது வயதில், தனக்குப் புகழ் சேர்த்த அனைத்தையும் துறந்து, மருத்துவம் படித்து, ஆப்ரிக்காவில், மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியில் மருத்துவ மனையொன்றை நிறுவி, பணிசெய்யத் துவங்கினார். பல்வேறு இடர்கள், சிறைவாசம் என்று, அவர் வாழ்வில் சவால்கள் வந்தாலும், வறுமையில் வாடிய ஆப்ரிக்க மக்களுக்கு மருத்துவப் பணிகளைப் பல ஆண்டுகள் செய்துவந்தார். இளமையில் நற்செய்தியையும், கிறிஸ்தவ மறையையும் வார்த்தைகளாய் பறைசாற்றிப் புகழ்பெற்ற ஆல்பர்ட் அவர்கள், தன் வாழ்வின் பிற்பகுதியில் நற்செய்தியை வாழ்வாக்கினார். ஆல்பர்ட் அவர்களைப் போன்றோர், தங்கள் வாழ்வையே மறைபரப்புப் பணியாக மாற்றியதைக் கொண்டாட, இந்த ஞாயிறன்று நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு நாம் கொண்டாடும் மறைபரப்புப்பணி ஞாயிறு, கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கத்தோலிக்கத் திருஅவையின் மறைபரப்புப் பணியைக் குறித்து, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் எழுதிய 'Maximum Illud' என்ற திருத்தூது மடல், 1919ம் ஆண்டு வெளியானது. அம்மடல் வெளியானதன் முதல் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு அக்டோபர் மாதத்தை 'சிறப்பான மறைபரப்புப்பணி மாதமாக'க் கொண்டாட அழைப்பு விடுத்தார்.

ஐரோப்பியக் கண்டத்திலிருந்து, ஆப்ரிக்க, ஆசிய கண்டங்களில் மறைபரப்புப் பணியாற்றச் சென்ற அருள்பணியாளர்களும், துறவியரும், அறிந்தும், அறியாமலும், ஐரோப்பிய கலாச்சாரத்தையும், காலனியக் கருத்தியல்களையும், கிறிஸ்தவ மதத்துடன் இணைத்து, மக்கள் நடுவே பரப்பிவந்தனர். இந்தப் போக்கைத் தருத்தியமைக்க, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், 'Maximum illud' என்ற திருத்தூது மடலை வெளியிட்டார்.
மறைபரப்புப்பணி என்பது, மற்றொரு நாட்டை ஆக்ரமிக்கச் செல்லும் அரசியல் படையெடுப்பு அல்ல என்பதை, திருத்தந்தை, மிகத்தெளிவாக இம்மடலில் கூறினார்:
கத்தோலிக்கத் திருஅவை எந்த ஒரு நாட்டிலும் அத்துமீறி நுழைவதில்லை; எந்த மக்களிடமிருந்தும் வேறுபட்டு நிற்பதில்லை. (எண் 16)

ஒரு சில நாடுகளில், மறைபரப்புப் பணியாளர்கள், ஆர்வம் மிகுதியாலும், தவறான கண்ணோட்டத்தாலும், மறைபரப்புப் பணிகளை, அரசியல் வழிகளில் ஆற்றிவந்தனர் என்பதை அறிந்த திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், இம்மடல் வழியே, தன் வேதனையை வெளிப்படுத்தினார்:
ஒரு சில நாடுகளில் நடைபெறும் மறைபரப்புப்பணியில் இறையரசின் வளர்ச்சியைக் காட்டிலும், ஒரு சில நாடுகளின் இலாபத்தை வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதைக் கண்டு, நான் வேதனையடைகிறேன்... இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வோர், மறைபரப்புப்பணியாளர்கள் என்ற பெயருக்கு அருகதை அற்றவர்கள். உண்மையான மறைபரப்புப்பணியாளர், தன் நாட்டின் தரகராக அல்ல, மாறாக, கிறிஸ்துவின் தூதராகச் செயலாற்றுபவர். (எண் 20)

இவ்வாறு, கத்தோலிக்கத் திருமறையை, ஐரோப்பிய, மேற்கத்தியக் கலாச்சாரத்திலிருந்து விடுவித்த்தோடு, இறையரசில் அனைத்து மக்களுக்கும், கலாச்சாரங்களுக்கும் இடம் உண்டு என்ற உண்மையை வெளிப்படுத்தி, கத்தோலிக்க மறைபரப்புப் பணிக்கு புதியதோர் இலக்கணத்தை வகுத்த 'Maximum illud' என்ற திருத்தூது மடலின் முதல் நூற்றாண்டை நாம் கொண்டாடுகிறோம்.

இத்திருத்தூது மடலின் இறுதிப்பகுதியில், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், மறைபரப்புப்பணியில் அனைத்து கத்தோலிக்கர்களையும் மூன்று வழிகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மூன்று வழிகளில் முதல் வழி, செபம். உலகெங்கும் நிகழும் மறைபரப்புப்பணிகளுக்கும், பணியாளர்களுக்கும் செபிப்பது, ஒவ்வொரு கத்தோலிக்கரும், அவரவர் இருந்த இடத்திலேயே ஆற்றக்கூடிய உதவி என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
மறைபரப்புப்பணியையும், செபத்தையும் இணைத்து திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ள கருத்து, இன்று நாம் கொண்டாடும் மறைபரப்புப்பணி ஞாயிறையும், இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள வாசகங்களையும் இணைக்க உதவியாக உள்ளது. மறைபரப்புப்பணி ஞாயிறன்று செபத்தைப் பற்றிய வாசகங்கள் ஏன் என்று சிந்திக்கும்போது, மனதில் முதலில் தோன்றுவது, குழந்தை இயேசுவின் புனித தெரேசா.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த சிறப்பான மறைபரப்புப்பணி மாதம், அக்டோபர் 1ம் தேதி, மறைபரப்புப்பணி நாடுகளின் பாதுகாவலர்களில் ஒருவரான புனித குழந்தை இயேசுவின் தெரேசா திருநாளன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், மாலை வழிபாட்டுடன் ஆரம்பமானது.

புனித குழந்தை இயேசுவின் தெரேசா, மறைபரப்புப்பணியாளர்களின் காவலர் என்ற பெருமைக்குரியவர். பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து, கிறிஸ்துவை, பல கோடி மக்களுக்கு அறிமுகம் செய்த, புனித பிரான்சிஸ் சேவியரும், ஒரு மைல் கூட பயணம் செய்யாமல், தான் வாழ்ந்த துறவு மடத்தில், செபங்கள் செய்த, புனித தெரேசாவும், மறைபரப்புப் பணியாளர்களின் காவலர்கள் என்று, திருஅவை அறிவித்துள்ளது.
புனித சேவியர், தன் போதனைகளால், பல்லாயிரம் உள்ளங்களை இறைவனிடம் அழைத்து வந்ததுபோல், புனித தெரேசாவும், தன் செபங்களால், பல்லாயிரம் மனங்களை இறைவனிடம் கொணர்ந்தார். மறைபரப்புப் பணியில், இறைவனைப் பறைசாற்றுதல் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் இறைவனை நோக்கி எழுப்பப்படும் செபங்களும் முக்கியம் என்பதை நாம் ஆழமாக உணர, இந்த ஞாயிறன்று செபத்தைப் பற்றிய வாசகங்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன என்று எண்ணிப் பார்க்கலாம்.

செபத்தின் வல்லமையால் இஸ்ரயேல் மக்கள் போரில் வெற்றி கொள்வதை, விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் (விடுதலைப் பயணம் 17:8-13) நமக்குக் கூறுகிறது. மத்தியக் கிழக்குப் பகுதியின் பல நாட்டினருக்கும், கனவிலும், நனவிலும் அச்சமூட்டுபவர்களாக இருந்தவர்கள், அமலேக்கியர்கள். அவர்களை எதிர்க்க யாருக்கும் துணிவு இல்லை. அவர்கள் இஸ்ராயேல் மக்களுக்கு எதிராகப் போர் தொடுக்க வந்தனர். இந்தச் செய்தியே இஸ்ராயேலரின் நம்பிக்கையைக் குலைத்து, அவர்களது தோல்வியை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், மோசேயின் செபம், அவர்களை வெற்றியடையச் செய்தது.

செபத்தின் வலிமையால், எதிர்வரும் சக்திகளை முறியடிக்கலாம் என்பதை விடுதலைப் பயண நூல் வாசகம் சொல்கிறது. மனம் தளராமல் செபிப்பதால், நீதியை நிலை நிறுத்த முடியும் என்பதை இன்றைய நற்செய்தி (லூக்கா நற்செய்தி 18:1-8) சொல்கிறது. தொடர்ந்து செபியுங்கள், தளராது செபியுங்கள், உடல் வலிமை, மன உறுதி இவை குலைந்தாலும், பிறர் உங்களைத் தாங்கிப் பிடிக்க, தொடர்ந்து செபியுங்கள்... என்பவை, இன்றைய வாசகங்கள் வழியே நமக்குத் தரப்பட்டுள்ள பாடங்கள். இவை, சவால்கள் நிறைந்த, அதே வேளை, வாழ்க்கைக்குத் தேவையானப் பாடங்கள்.

அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார் (லூக்கா 18: 1) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. செபிப்பதை குறித்து, நற்செய்தியாளர் லூக்கா பதிவுசெய்துள்ள உவமைகளில், நள்ளிரவில் நண்பர் என்ற உவமையை (லூக்கா நற்செய்தி 11: 1-13) சில வாரங்களுக்கு முன் நம் ஞாயிறு வழிபாட்டில் சிந்தித்தோம். நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் என்ற உவமையை இன்று சிந்திக்கிறோம்.

'நள்ளிரவில் நண்பர்' என்ற உவமையில், மூடிய கதவைத் தொடர்ந்து தட்டிக்கொண்டிருந்த நமது நாயகன், ஒரே இடத்தில் நின்று, ஒரு சில மணித்துளிகளில் தன் தேவையை நிறைவேற்றிக் கொண்டார். லூக்கா 18ம் பிரிவில் நாம் சந்திக்கும் கைம்பெண்ணோ ஒரே நாளில், ஒரே இடத்தில் நின்றபடி தான் தேடியதைப் பெறவில்லை. பல நாட்கள், ஏன்? பல மாதங்கள், பல ஆண்டுகள், விடாமுயற்சியுடன், நீதிமன்றத்திற்கும், நடுவரின் வீட்டுக்கும், நடுவர் சென்ற அனைத்து இடங்களுக்கும் நடையாய் நடந்து சென்று, தான் தேடியதைப் பெற்றார் என்பதை உணரலாம். எவ்வளவு காலம் இந்தக் கைம்பெண் தன் முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை லூக்கா நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. "நடுவரோ நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை" (லூக்கா 18:4) என்ற ஒரே ஒரு குறிப்பை மட்டுமே இந்த உவமையில் காண்கிறோம்.

ஏழைகளுக்கு நீதி கிடைக்க, அல்லது அவர்கள் விண்ணப்பித்த கோரிக்கைகளை நிறைவேற்ற நீதி மன்றங்களும், அரசு அலுவலகங்களும் எத்தனை காலம் எடுக்கின்றன என்பது நமக்குத் தெரிந்த கதைதானே! இவர்களில் பலர் எதிர்பார்த்து, காத்திருந்த தீர்ப்புகளோ, விண்ணப்பித்திருந்த கோரிக்கைகளோ அவர்களின் மரணத்திற்குப் பிறகு வந்தடைந்த செய்திகளையும் நாம் அவ்வப்போது கேட்டுவருகிறோம். பல ஆண்டுகள், நீதி மன்றங்களின் வாசல்களிலும், அரசு அலுவலகங்களின் வாசல்களிலும் தவமிருந்து தங்கள் வேண்டுதல்களின் பலன்களைக் காணவிழையும் பல கோடி ஆதரவற்ற ஏழை மக்களின் பிரதிநிதியாக இந்த உவமையின் நாயகியான கைம்பெண்ணை நாம் சந்திக்கிறோம். இந்த உவமையில் இயேசு நேர்மையற்ற நடுவரைப் பற்றி அதிகம் பேசியிருந்தாலும், மனம் தளராது, மீண்டும், மீண்டும், மீண்டும் நடுவரைச் சென்று சந்தித்த அந்தக் கைம்பெண்தான் இந்த உவமையின் நாயகி.

இறைவனுக்கு அஞ்சாமல், மனிதர்களை மதிக்காமல், ஊழலில் ஊறிப்போன நடுவரிடம், ஒரு கைம்பெண் நீதி பெறுகிறார். இலஞ்சம் கொடுத்துப் பெறவேண்டியதை, இலட்சிய வெறிகொண்டு பெறுகிறார். நல்லது கெட்டது என்பதையெல்லாம் பார்க்க மறுத்து, பாறையாகிப்போன நடுவரின் மனதை, தன் தொடர்ந்த வேண்டுதல் முயற்சிகளால் தகர்த்துவிடுகிறார் அந்தக் கைம்பெண்.

கடுகளவு நம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கையுடன் செபங்கள் எழுப்பப்பட்டால், மலைகள் பெயர்ந்துவிடும், மரங்கள் வேருடன் எடுக்கப்பட்டு, கடலில் நடப்படும். எரிக்கோவின் மதில்கள் இடிந்துவிழும், நம்மை எதிர்கொள்ளும் தீய சக்திகள் அடிபணியும், மனசாட்சியை மழுங்கடித்துள்ள நீதிபதிகளும் நீதி வழங்கமுடியும் என்ற நம்பிக்கையை நாம் இவ்வுலகில் பரப்ப அழைக்கப்பட்டுள்ளோம். நம்பிக்கையற்ற உலகில், நம்பிக்கையை வளர்ப்பது, நாம் ஆற்றக்கூடிய தலைசிறந்த மறைபரப்புப்பணி!