27 March, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... பகுதி 10


Students take center stage
at 'March for Our Lives' rally

The Real Situation in Tuticorin | Sterlite protest

இமயமாகும் இளமை - "நம் உயிர்களுக்காக அணிதிரள்வோம்"

மார்ச் 25, ஞாயிறன்று, கத்தோலிக்க உலகெங்கும், 33வது உலக இளையோர் நாள், மறைமாவட்ட அளவில் கொண்டாடப்பட்டது. அதற்கு முன்னர், மார்ச் 24, சனிக்கிழமை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெரும்பான்மையான நகரங்களிலும், மும்பை உட்பட, உலகின் பெரு நகரங்கள் பலவற்றிலும், இளையோரின் பேரணிகள் நிகழ்ந்தன. "நம் உயிர்களுக்காக அணிதிரள்வோம்" (March for Our Lives) என்ற முழக்கத்துடன் நடைபெற்ற பேரணிகள், இளையோரின் பண்புகளை உலகிற்குப் பறைசாற்றின. இளையோர், ஒற்றுமையுடன் செயல்படுவர் என்பதையும், தீர்க்கமாக, தெளிவாக சிந்திக்கும் திறன் கொண்டோர் என்பதையும், இப்பேரணி தெளிவாக உணர்த்தியது.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகர், வாஷிங்டனில் நடைபெற்ற பேரணியில் 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மாணவியர். கறுப்பினத்தவர், வெள்ளையினத்தவர், இஸ்பானியர் என்ற எவ்வித பாகுபாட்டையும் முன்னிறுத்தாமல், அனைவரும் இணைந்து வந்து குரல் எழுப்பியது, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. தங்கள் உயிருக்கு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலாக இருக்கும் துப்பாக்கி வன்முறைகளை, அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்ற அறைகூவலுடன், இளையோர் இந்தப் பேரணியை மேற்கொண்டனர்.
வாஷிங்டனில் பேரணி நடைபெற்ற நேரம், இந்தியாவில் சனிக்கிழமை மாலை நேரம். சனிக்கிழமை மாலை துவங்கி, ஞாயிறு முழுவதும், தமிழகத்தின் தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் விரிவாக்கத்தை எதிர்த்து, பொதுமக்கள், குறிப்பாக, இளையோர், பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்தனர். தூத்துக்குடியில் பயிலும் கல்லூரி மாணவர்கள், மார்ச் 26, இத்திங்களன்று, வகுப்புகளை புறக்கணித்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன.
ஸ்டெர்லைட் போராட்டத்தின் எதிரொலி, இத்திங்களன்று, இலண்டன் மாநகரில் கேட்டது. ஸ்டெர்லைட் நிறுவனம், 'வேதாந்தா' என்ற குழுமத்தின் ஓர் அங்கம் என்பதால், வேதாந்தா கூட்டு நிறுவனத்தின் உரிமையாளர், அனில் அகர்வால் அவர்களின் இலண்டன் வீட்டுக்கு முன், இந்த போராட்டம் நிகழ்ந்தது. தற்போது நடைபெற்றுவரும் இந்த போராட்டம், மெரினா கடற்கரையில் கூடிய இளையோரையும், அவர்களுக்கு உறுதுணையாக உலகின் பல நாடுகளில் எழுந்த போராட்டங்களையும் நினைவுக்குக் கொணர்ந்தது.
துப்பாக்கி பயன்பாட்டை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில், ஒரு சிறுவன், "இன்னும் அதிகமாக புத்தகங்கள் தாருங்கள்; துப்பாக்கிகள் அல்ல" (Give us more books not guns) என்ற வாசகத்தை ஏந்தி நின்றான். அதேபோல், தூத்துக்குடி போராட்டத்தில் ஒரு சிறுவன், "காப்பர் (தாமிரம்) உனக்கு; கேன்சர் (புற்றுநோய்) எனக்கா?" என்ற கேள்வி எழுதப்பட்டிருந்த அட்டையைத் தாங்கி நின்றான்.
இளையோரும், சிறாரும், சமுதாய நலனுக்காகப் போராடத் துணிந்திருப்பது, இனி வரும் காலம், இளையோரின் கரங்களில் பாதுகாப்பாக உள்ளது என்ற நம்பிக்கையை வளர்த்துள்ளது!
St. John the Evangelist

புதுமைகள் தண்ணீர் திராட்சை இரசமாக... பகுதி 10

நான்கு நற்செய்திகளிலும், யோவான் நற்செய்தி, இறுதியாக வெளிவந்தது என்பது நாம் அறிந்த தகவல். இந்த நற்செய்தியில், இயேசுவின் வாழ்வும், போதனைகளும், வெறும் வரலாற்றுக் குறிப்புகளாக பதிவு செய்யப்படவில்லை; மாறாக, ஓர் இறையியல் பாடமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது, பல விவிலிய விரிவுரையாளர்களின் கருத்து. இயேசுவின் சீடர்களிலேயே மிகக் குறைந்த வயதுடையவராய் இருந்த யோவான், ஏனைய சீடர்களைப் போல் மறைசாட்சியாய் கொல்லப்படாமல், 90 வயதுக்கும் மேல் வாழ்ந்தார் என்பது, வரலாற்று குறிப்பு.
தான் இயேசுவுடன் வாழ்ந்த வாழ்வை, வயது முதிர்ந்த காலத்தில் அசைபோட்டு, யோவான் உருவாக்கிய நூலே அவரது நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது. இயேசுவின் வாழ்வு நிகழ்வுகளை யோவான் அசைபோட்டதுபோல், நாமும், இயேசு ஆற்றிய முதல் அரும் அடையாளத்தை அசைபோட, இத்தேடலில் மீண்டும் முயல்வோம்.

யோவான் நற்செய்தியில் இடம்பெற்றுள்ள 20 பிரிவுகளை, இரு பகுதிகளாகப் பிரிக்க இயலும். முதல் 11 பிரிவுகள், "அரும் அடையாளங்களின் நூல்" (The Book of Signs) என்றும், 12 முதல் 20 முடிய உள்ள 9 பிரிவுகள், "மகிமையின் நூல்" (The Book of Glory) என்றும் அழைக்கப்படுகின்றன.
முதல் 11 பிரிவுகளில், இயேசு ஆற்றிய 7 அரும் அடையாளங்களை நற்செய்தியாளர் பதிவு செய்துள்ளார். தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது (யோவான் 2:1-11), அரச அலுவலர் மகனைக் குணமாக்கியது (4:43-54), 38 ஆண்டுகளாக நோயுற்றவரை குணமாக்கியது (5:1-15), ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு உணவளித்தது (6:1-14), தண்ணீர் மீது நடந்தது (6:16-21), பார்வையற்றவருக்கு பார்வை அளித்தது (9:1-34), மற்றும், இலாசரை உயிர்ப்பித்தது (11:17-44) ஆகியவை, யோவான் நற்செய்தியின் முதல் 11 பிரிவுகளில், பதிவுசெய்யப்பட்டுள்ள புதுமைகள்.
இந்த 7 அரும் அடையாளங்களில், 5000 பேருக்கு இயேசு உணவளித்த புதுமை, நான்கு  நற்செய்திகளிலும் இடம்பெற்றுள்ளது. இயேசு ஆற்றிய குணமளிக்கும் புதுமைகளும், உயிர்ப்பிக்கும் புதுமைகளும் நான்கு நற்செய்திகளிலும் வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு வடிவங்களில் இடம்பெற்றுள்ளன. கானா திருமண விருந்தில், தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியப் புதுமை, யோவான் நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ளது.

கானா திருமண விருந்தில் இயேசு ஆற்றிய 'முதல் அரும் அடையாளம்' (யோவான் 2:11), ஒரு சிலருக்கு மட்டுமே, அதாவது, இயேசுவின் சீடர்களுக்கும், விருந்தில் உதவிகள் செய்த பணியாளருக்கும் மட்டுமே, தெரிந்திருந்தது என்பதை, நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுகிறார். "இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்" (யோவான் 2:11) என்று நற்செய்தியாளர் யோவான், இந்தப் புதுமையை நிறைவு செய்துள்ளார்.
இந்தப் புதுமையின் நேரடியான நோக்கமும், தாக்கமும், சீடர்களிடம் நம்பிக்கையை உருவாக்குவது என்பதை, யோவான் தெளிவாகக் கூறியுள்ளார். இயேசு ஆற்றிய அனைத்துப் புதுமைகளும், அவரது சக்தியைப் பறைசாற்றும் விளம்பரங்களாக அமையவில்லை, மாறாக, மக்களின் நம்பிக்கையை வளர்க்கும் தருணங்களாக அமைந்தன.

இயேசு, தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியப் புதுமையில் இரு அம்சங்கள் கவனத்திற்குரியவை என்று, Blair Van Dyke என்ற பேராசிரியர் கூறியுள்ளார்.
முதல் அம்சம் - படைக்கப்பட்ட பொருள்கள் மீது இயேசு கொண்டுள்ள அதிகாரம். தண்ணீரை, திராட்சை இரசமாக மாற்றும் வல்லமை கொண்ட இயேசு, மரத்தை, பாறையாகவும், பாறையை, தண்ணீராகவும், தண்ணீரை, திராட்சை இரசமாகவும் மாற்றும் வல்லமை பெற்றவர் என்பதை, நற்செய்தியாளர் யோவான் நமக்கு உணர்த்துகிறார். மனிதன் என்ற நிலையில், இயற்கையின் அனைத்து விதிகளுக்கும் இயேசு உட்பட்டவர் என்றாலும், அந்த விதிகளை, தேவைப்பட்ட நேரத்தில் மாற்றுவதற்கும் அவரிடம் வல்லமை இருந்தது என்பதே, இப்புதுமையில் நாம் புரிந்துகொள்ளும் முதல் அம்சம்.

இரண்டாவது அம்சம் - காலத்தின்மீது இயேசு கொண்டிருந்த அதிகாரம். பொதுவாக, திராட்சை இரசத்தை உருவாக்க, பல ஆண்டுகள் தேவைப்படும். திராட்சை செடியை நட்டு, அது கோடியாக வளர்ந்து, கனிகள் தருவதற்கு, குறைந்தது, மூன்றாண்டுகள் ஆகும். அந்த கனிகளைப் பறித்து, சாறாகப் பிழிந்து, அதை திராட்சை இரசமாக மாற்றுவதற்கு, குறைந்தது, 3 மாதங்கள் தேவைப்படும். மிக உயர்ந்த தரமான திராட்சை இரசத்தை உருவாக்க, பல ஆண்டுகள் தேவைப்படும்.
எனவே, திராட்சை செடியில் துவங்கி, நல்ல, உயர்ந்த தரமான திராட்சை இரசம் உருவாக, குறைந்தது, 4 முதல், 40 ஆண்டுகள் வரையிலும் கூட ஆகலாம். ஆனால், கானா திருமணத்தில், இயேசு, நல்ல, உயர்தரமான திராட்சை இரசத்தை சில நொடிகளில் உருவாக்கினார். 40 ஆண்டுகளில் உருவாகும் திராட்சை இரசத்தை, ஒரு நொடியில் உருவாக்கியதால், காலத்தின் மீது இயேசுவுக்கு இருந்த அதிகாரம் தெளிவாகிறது.

காலத்தை அளக்க நாம் பயன்படுத்தும், நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு என்ற அளவுகள், காலத்தைக் கடந்த கடவுளுக்கு இல்லை. இந்த எண்ணத்தை, திருத்தூதர் பேதுரு, தன் திருமுகத்தில் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்:
பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் 3:8
அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிடவேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள் போலவும் இருக்கின்றன.
திருத்தூதர் பேதுரு இவ்வாறு கூறும்போது, அவர் உள்ளத்தில், திருப்பாடல் 90ல் கூறப்பட்டுள்ள வரிகள் எதிரொலித்திருக்கும்:
திருப்பாடல் 90:2,4
மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும், இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.

படைக்கப்பட்ட பொருள்கள் மீதும், காலத்தின் மீதும் இயேசு கொண்டிருந்த அதிகாரம், அவர் ஆற்றியுள்ள குணப்படுத்தும் புதுமைகளில் சிறப்பாக வெளிப்படுகின்றது என்று பேராசிரியர் Van Dyke அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
எடுத்துக்காட்டாக, படைக்கப்பட்ட மனித உடலில் உருவாகும் குறைகளை, நோய்களை இயேசு குணமாக்கும்போது, மனித உடல்மீது அவர் கொண்டுள்ள அதிகாரம் எளிதாக விளங்குகிறது. குறிப்பாக, படைப்பின் அடித்தளமான உயிர், உடலைவிட்டு பிரிந்துவிட்டாலும், அந்த உயிரை மீண்டும் உடலோடு இணைக்கும் சக்தி இயேசுவிடம் இருந்ததென்பதை, உயிர்ப்பித்த புதுமைகள் கூறுகின்றன.

ஒருவர் உடல் நலனை இழப்பதற்கு பல நாட்கள், அல்லது, பல ஆண்டுகள் ஆகலாம். அதேவண்ணம், அவரைக் குணமாக்க, மருத்துவமுறைப்படி, நாட்களோ, மாதங்களோ ஆகின்றன. ஒரு சில நோயுற்றவர்கள், இறுதிவரை, மருந்து, மாத்திரையுடன் தங்கள் எஞ்சிய நாட்களை கழிக்கவேண்டிய நிலையையும் நாம் அறிவோம்.
பல ஆண்டுகள் குறையுடன் துன்புற்றவரின் வாழ்வில், இயேசு, ஒரு சொல்லால், ஒரு செயலால், நொடிப்பொழுதில் உடல் நலனைக் கொணர்ந்தார். இயேசு ஆற்றிய குணமளிக்கும் புதுமைகள் இரண்டில், அந்த நோய் எவ்வளவு காலம் நீடித்தது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. யோவான் நற்செய்தி 5ம் பிரிவில் கூறப்பட்டுள்ள நிகழ்வில், 38 ஆண்டுகளாக நோயுற்றவரை இயேசு குணமாக்கினார் என்றும், லூக்கா நற்செய்தி 8ம் பிரிவில், 12 ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் துன்புற்ற பெண்ணை இயேசு குணமாக்கினார் என்றும் கூறப்பட்டுள்ளது. 38 ஆண்டுகளாக நோயுற்றிருந்தவர், இயேசு தந்த ஒரு கட்டளையால் குணமானார். 12 ஆண்டுகளாக நோயுற்றிருந்த பெண், இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டதால் குணமானார்.

படைப்பின் மீதும், காலத்தின் மீதும் அதிகாரம் கொண்ட இயேசு, அரச அலுவலர் மகனைக் குணமாக்கிய புதுமையில், அடுத்தவாரம், நம் தேடல் பயணத்தைத் துவங்குவோம்.


25 March, 2018

Processions – to build up or to tear down ஆக்கவும், அழிக்கவும்... ஊர்வலங்கள்


Mosaic - Jesus enters Jerusalem

Student-led protests against gun violence

Palm Sunday

Last Sunday (March 18), we spoke of two processions – protests – that took place, one in Mumbai on March 11 and 12 and another that took place on March 12, 1930, in Gujarat. The first one was the Farmers protest in Mumbai city and the second one was the Salt march led by Gandhiji.
This week we begin our reflections again with processions, since we commemorate the Palm Sunday procession that took place 2000 years ago in the city of Jerusalem. Palm Sunday inaugurates the Holy Week and it is also the 33rd World Youth Day. Hence, our reflections revolve around processions, holiness and youth.
Let us begin with a procession taken out by the youth in Washington on March 24, Saturday. Around 500,000 - mainly high school students - gathered in Washington D.C. for what was known as ‘March For Our Lives’. The March For Our Lives, was a rally organized by students who survived the Feb. 14 school shooting in Parkland, Fla., demanding stricter gun control in the U.S.

NY Times (March 24) reports of protests taking place in many states in the U.S. as well as in other countries like Geneva, London, Sydney, Berlin, Paris and Amsterdam. It also reports of ‘counter-protests’ gaining momentum. For instance, NY Times says: “In Salt Lake City, demonstrators carried pistols, flags and toddlers swaddled in blankets. One of their signs read: “What can we do to stop mass shootings? SHOOT BACK.” In Boston, opposing groups of protesters shouted at one another before the police intervened.”

The counter protests lead us to reflect on how crowds can be swayed either way. Vested interests (like the NRA – National Rifle Association in the U.S.) organize processions and protests to safeguard their interests. Such efforts usually sow dissension and division among the people. We are also sadly aware of a procession that is going around India to create more disharmony and hatred. The ‘Ram Rajya Rath Yatra’ organized by the Vishwa Hindu Parishad is an example of how a procession can generate hatred.
The Indian Express, New Delhi, reported on March 21: “While the main agenda of the yatra is to administer a pledge to the people for construction of the Ram temple on the disputed land in Ayodhya, it also seeks to re-establish ‘Ram Rajya’, include Ramayana in school syllabus, declare Thursday as the official weekly off in the place of Sunday and observe ‘National Hindu Day’.”
All of us know that Ram, for the sake of peace in his father’s kingdom, relinquished the throne and went to the forest. With VHP trying to re-establish ‘Ram Rajya’ where peace is the main casualty, Ram would, once again, go into the forest!

The very first ‘Palm Sunday’ (Not sure, whether it was a Sunday at all!) saw a spontaneous procession marching into Jerusalem. This procession must have entered Jerusalem like a tornado. Most of the people in Jerusalem, especially those in power, were caught off-guard by this ‘tornado’ called Jesus, and His people who amounted to nothing in the eyes of the Roman authorities as well as the Jewish big-wigs.
Tornado is also referred to as ‘twister’ since it twists and turns things at will! Jesus’ entry into Jerusalem must have turned the lives of the religious leaders and the Roman officials topsy-turvy. As if this was not enough, Jesus entered the very fortress of the religious leaders – namely, the Temple – and began to put things in order. Putting things in order? Well, depends on which perspective one takes. For those in power, things were thrown completely out of order; but for Jesus and for those who believed in His ways, this was a way to set things straight. This is typical of a tornado… uprooting, turning things topsy-turvy. A tornado is, possibly, a wake-up call to begin anew!

With the Palm Sunday, begins the Holy Week. Of all the 52 weeks of the year, the Church calls this week Holy. What is so holy about it? What is so holy about the betrayal of a friend, the denial of another friend, the mock trial, false witnesses, the condemnation of the innocent and the brutal violence unleashed on Jesus…? None of these comes close to the definition of holiness. But, for Jesus, definitions are there only to be ‘redefined’. By submitting Himself to all the events of the Holy Week, He wanted to redefine God – a God who was willing to suffer. He had already defined love as “Greater love has no one than this, that someone lay down his life for his friends.” (John. 15: 13) If human love can go to the extent of laying down one’s life for friends, then God’s love can go further… to lay down His life for all, including the ones who were crucifying Him. Such a God would normally be unthinkable unless otherwise one is willing to redefine God. Jesus did that. He had also redefined holiness and made it very clear that in spite of all the events that took place during this week, one could call this week Holy since these events resulted in the Supreme Sacrifice.
Death by crucifixion was the most painful torture the Romans had invented. The cross was the most despised form of punishment reserved for the worst criminals. Jesus on the Cross has made this most derogatory symbol of punishment and death into a symbol of veneration. It is meaningful that St John Paul II, on a Palm Sunday, gave the youth a cross to carry with them to all the World Youth Days.

Palm Sunday is also celebrated as the World Youth Day. Pope St John Paul II established this day in 1985, the International Year of the Youth. As we celebrate the 33rd World Youth Day, this Sunday, we are especially aware of the Synod of Bishops to be held in Vatican this year. The 15th Ordinary General Assembly of the Synod of Bishops is scheduled to take place 3–28 October, 2018, with the theme: "Young People, Faith, and Vocational Discernment".

The theme proposed for this 33rd World Youth Day is the assurance given by the Angel Gabriel to the young village girl, Mary: “Do not be afraid, Mary, for you have found favour with God.” (Luke 1:30). When we reflect on these words, some thoughts on courage and grace strike us. The angel tells Mary not to be afraid and in the same breath gives the reason for not being afraid – namely, finding favour with God.

We are aware that youth is associated with bravery, courage, daring etc. This freedom to face up to the challenges can sometimes be misled and become a façade to hide the insecurities felt by the youth. We have an example in Nikolas Cruz, the 19 year old young man, who is accused of shooting to death 17 persons in a Florida school. Nikolas has not had a healthy family life and was expelled from this school for disciplinary reasons. Instead of facing up to his inadequacies, he took the gun-wielding ‘cowboyish’ role to settle scores with the school. The gun gave him his false security.

In one of the websites trying to gather support for Nikolas, there is a very poignant statement: “The kids who need the most love will ask for it in the most unloving ways.” How true! As we celebrate the World Youth Day, we think of millions of young men and women who, for lack of love, take upon themselves self-destructive life style or violence as the way of life. Every act of terrorism can vouch for this.

We pray that the Palm Sunday, celebrated as the World Youth Day, and the Holy Week events inspire every one of us to celebrate this week not as a ritual ceremony but as an integral part of our lives. Palm Sunday, Holy Week and the World Youth Day… all the three invite us to keep our focus on the cross, an instrument of violence and hatred turned into an instrument of love and salvation! 


Student-led protests against gun violence

குருத்தோலை ஞாயிறு

சென்ற ஞாயிறு சிந்தனையில் இரு ஊர்வலங்களைப் பற்றி குறிப்பிட்டோம். இவ்வாண்டு, மார்ச் 11,12 தேதிகளில், மும்பை மாநகரில் நடைபெற்ற விவசாயிகள் பேரணி, 1930ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி, காந்தியடிகள் துவக்கிய உப்பு சத்தியாகிரக ஊர்வலம் என்ற இரு ஊர்வலங்களைக் குறித்து பகிர்ந்துகொண்டோம்.
குருத்தோலை ஞாயிறான இன்று, ஊர்வலங்களைப் பற்றி சிந்திக்க மீண்டும் நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 24, இச்சனிக்கிழமை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகர், வாஷிங்டனில் இடம்பெற்ற ஊர்வலம் அது. அமெரிக்க சமுதாயத்தைச் சிதைத்துவரும் துப்பாக்கி பயன்பாட்டைத் தடை செய்யவேண்டுமென்ற கோரிக்கையுடன், 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானோர், பள்ளி மாணவ, மாணவியர்.

இவ்வாண்டு, திருநீற்றுப் புதனும், காதலர் நாளும் இணைந்துவந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், ஓர் உயர்நிலைப்பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கித் தாக்குதலில், 17 பேர் உயிரிழந்த கொடுமை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பள்ளிகளில் பயிலும் இளோயோரை விழித்தெழச் செய்துள்ளது. "துப்பாக்கி கலாச்சாரத்தை வளர்த்துவரும் வயது முதிர்ந்தோரே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்ற கேள்வியை முன்வைத்து, இளையோர் இந்த ஊர்வலத்தை தலைநகர் வாஷிங்டனில் நடத்தியுள்ளனர்.
மற்றோர் ஊர்வலம், இந்தியாவின் பல மாநிலங்களில் வலம் வருகிறது. 'இராம இராஜ்ஜிய இரத யாத்திரை' என்ற பெயரில் நடைபெற்றுவரும் இந்த ஊர்வலம், அயோத்தியில் இராமர் கோவிலை எழுப்பும் சூளுரையுடன் துவக்கப்பட்டுள்ளது. இராம இராஜ்ஜியத்தை உருவாக்க, இந்த யாத்திரை நடைபெறுகிறது என்பதை இராமர் அறிந்தால், அவர் வேதனையடைவார். தன் தந்தையின் இராஜ்ஜியத்தில் அமைதி வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, தம்பிக்கு அரியணையை வழங்கிவிட்டு, காட்டுக்குச் சென்றவர் இராமர். அவரது பெயரைப் பயன்படுத்தி, மத உணர்வைத் தூண்டி, 'இராம இராஜ்ஜியத்தை' உருவாக்க முயலும் இந்த ஊர்வலத்தைக் கண்டால், இராமர் மீண்டும் காட்டுக்குச் சென்றிருப்பார் என்பது உறுதி.

தனி மனித, அல்லது, தனிப்பட்ட ஒரு குழுவின் சுயநலனை முன்னிறுத்தி, மேற்கொள்ளப்படும் ஊர்வலங்கள், மக்களைப் பிளவுபடுத்தி, வன்முறைகளை வளர்த்துள்ளன. இந்த வன்முறைகள் நாடுவிட்டு நாடு பரவும் வேளையில் வெடிக்கும் போர்களில், மீண்டும் ஊர்வலங்கள் நடைபெறுகின்றன. உயிரோடு போர்க்களம் செல்லும் ஆயிரமாயிரம் இளையோர், சடலங்களாக, அல்லது, நடைப்பிணங்களாகத் திரும்பிவரும் ஊர்வலங்களை இவ்வுலகம் இன்றும் கண்டுவருகிறது. இதற்கு மாறாக, மக்கள் நலனை மையப்படுத்தி, மேற்கொள்ளப்படும் ஊர்வலங்கள், மக்களை ஒருங்கிணைத்து, நம்பிக்கையை வளர்த்துள்ளன.

நம்பிக்கையை வளர்த்த ஓர் ஊர்வலத்தை இந்த ஞாயிறன்று நாம் கொண்டாட வந்திருக்கிறோம். குருத்தோலை ஞாயிறென நாம் கொண்டாடும் இந்த விழாவில், இயேசு எருசலேம் நகரில் அமைதியின் மன்னனாக நுழைந்த நிகழ்வைக் கொண்டாடுகிறோம்.
போருக்குப் புறப்படும் மன்னன் குதிரை மீதும், சமாதானத்தைக் கொணரும் மன்னன் கழுதையின் மீதும் அமர்ந்து வருவது, இஸ்ரயேல் சமுதாயத்தில் நிலவிய மரபு. தான் அமைதியின் மன்னன் என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட, இயேசு ஒரு கழுதைக்குட்டியின் மீது அமர்ந்து எருசலேம் நகருக்குள் நுழைந்தார். எளிமையும், அமைதியும் கொண்ட மன்னராக இயேசு எருசலேமில் நுழைந்த குருத்தோலை ஞாயிறைக் கொண்டாடும் வேளையில், எளிமையையும், அமைதியையும் விரும்பும் தலைவர்கள் சமுதாயத்தை வழிநடத்தவேண்டும் என்று மன்றாடுவோம். அதேவேளையில், சுயமாகச் சிந்திக்கும் திறன்படைத்த தொண்டர்களும், தனிமனிதத் துதி பாடாமல், மக்கள் நலனுக்காக உழைக்க முன்வரும் தொண்டர்களும், இவ்வுலகில் பெருகவேண்டும் என்று சிறப்பாக செபிப்போம்.

இயேசு எருசலேமில் நுழைந்தபோது, மக்கள், எதேச்சையாக, மானசீகமாக அவருக்குமுன் ஊர்வலமாக சென்றனர். திருவிழா நாட்களில், எருசலேமில், தானாகவே உருவாகும் இத்தகையக் கூட்டங்கள், மதத் தலைவர்களுக்கும், உரோமைய அரசுக்கும் அச்சத்தை உருவாக்கின. இயேசுவைச் சுற்றி உருவான இந்தக் கூட்டத்தைக் கண்டு, அதிகார வர்க்கம் ஆட்டம் கண்டிருக்கவேண்டும்.
இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களின் அதிகார வாழ்வு ஆட்டம் கண்டது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரமாக, எருசலேம் நகரில் இயேசு ஊர்வலமாய் வந்தார். அதைத் தொடர்ந்து, மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் அவர் நுழைந்து, அங்கு குப்பையாய் குவிந்திருந்த அவலங்களை அப்புறப்படுத்தினார். எனவே, முதல் குருத்தோலை ஞாயிறு, அதிகார அமைப்புகளை, தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளியாக அமைந்தது!

குருத்தோலை ஞாயிறு முதல், உயிர்ப்பு விழா வரை உள்ள இந்த எழுநாட்களையும், தாய் திருஅவை, புனிதவாரம் என்றழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனிதவாரம் என்று அழைக்க வேண்டும்? இயேசு, இவ்வுலகில்  வாழ்ந்த இறுதி நாட்களை நாம் நினைவு கூறுகிறோமே, அதனால்... ஆனால், அந்த இறுதி நாட்களில் நடந்தவற்றில் புனிதம் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லையே!
நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக்கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். ஏனைய நண்பர்கள் ஓடி, ஒளிந்து கொண்டனர். மனசாட்சி விலைபோனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில், உண்மை உருகுலைந்தது. இயேசு என்ற இளைஞன், நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும், தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில், அந்த இளைஞனை அடித்து, கிழித்து, ஒரு கந்தல் துணியைப்போல் சிலுவையில் தொங்கவிட்டனர்.
நாம் இங்கே பட்டியலிட்டவற்றில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. ஆம், வேறொரு இலக்கணம்தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற மறையுண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள், துன்பப்படக் கூடியவர்தான். அதுவும், அன்புக்காக, எத்தகைய துன்பமாயினும், எவ்வளவு துன்பமாயினும், மனமுவந்து ஏற்பவரே நம் கடவுள் என்று, கடவுளைப்பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை, இயேசு, அந்தச் சிலுவையில் சொல்லித்தந்தார். புனிதவார நிகழ்வுகள் வழியே, நாம் கற்றுக்கொள்ளக் கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல உள்ளன. கற்றுக்கொள்ளச் செல்வோம் கல்வாரிக்கு.

புனிதவாரம் முழுவதும் நம் சிந்தனைகளில் அடிக்கடி பதிக்கப்படும் ஓர் அடையாளம்... சிலுவை. உரோமையர்கள் கண்டுபிடித்த சித்திரவதைக் கருவிகளிலேயே மிகவும் கொடூரமானது, சிலுவை. மிகப் பெரும் பாதகம் செய்த குற்றவாளிகளை நிர்வாணமாக்கி, அவர்கள் உள்ளங்களை அவமானத்தால் நொறுக்கி, உயிர்களைப் பறிக்கும் கொலைக் கருவிதான் சிலுவை. அந்த அவமானச் சின்னத்தை, அந்தக் கொலைக்கருவியை, நாம் கோவில் கோபுரங்களிலும், பீடங்களிலும் வைத்து வணங்குகிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்... இயேசு. சிலுவையில் அறையுண்ட இயேசு, தன் கொடிய மரணத்தின் வழியே, கோடான கோடி மக்களுக்கு மீட்பைக் கொணர்ந்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் குருத்தோலை ஞாயிறன்று, உலக இளையோர் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, வத்திக்கானில் கூடிவரும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் மையக் கருத்தாக விளங்குவது, இளையோர். இந்த மாமன்றத்திற்கு முன்னேற்பாடாக குருத்தோலை ஞாயிறன்று, 33வது உலக இளையோர் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. வானதூதர் கபிரியேல், "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்" (லூக்கா 1: 30) என்று இளம்பெண் மரியாவிடம் கூறிய சொற்கள், இவ்வாண்டு கொண்டாடப்படும் உலக இளையோர் நாளின் விருதுவாக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது வாக்கில் காணப்படும் இரு பகுதிகளை சிறிது ஆழமாக ஆய்வுசெய்வது பயனளிக்கும். இளம்பெண் மரியாவிடம், 'அஞ்சவேண்டாம்' என்று கூறும் வானதூதர், அதே மூச்சில், 'கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்' என்றும் கூறியுள்ளார்.
இளையோரிடம், "அஞ்சவேண்டாம், துணிவு கொள்ளுங்கள்" என்று சொல்லும்போது, இளையோர் பெறவேண்டிய துணிவு, இறைவன் வழங்கும் அருளால் உருவாகவேண்டிய துணிவு என்பதையும் வலியுறுத்திக் கூறவேண்டும். ஏனெனில், இளையோரை துணிவுகொள்ளச் செய்வதற்கு பல வழிகள் உள்ளன.

பொதுவாக, இளையோரைக் குறித்துப் பேசும்போது, 'இளம்கன்று பயமறியாது' என்று கூறுகிறோம். அவர்கள் துணிவுடன் செயலாற்றத் தூண்டும் வகையில், 'துணிந்தவனுக்கு, தூக்குமேடை பஞ்சுமெத்தை' போன்ற வீர வசனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய கூற்றுகள், இளையோரிடையே உணர்வுகளைத் தூண்டி, அவர்களது, துணிவை, வீரத்தை, தவறான வழிகளில் வெளிப்படுத்த வழியாகின்றன.
பல வேளைகளில், இளையோர் கொண்டுள்ள துணிவு, அவர்களது அச்சத்தை, இயலாமையை, தாழ்வு மனப்பான்மையை மூடி மறைக்கும் போலியான துணிவாக வெளிப்படக்கூடும். புளோரிடா மாநிலத்தில், பள்ளியில் துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்ட நிக்கோலஸ் குருஸ் (Nikolas Cruz) என்ற 19 வயது இளையவர், அப்பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். அவர், வாழ்வில் சந்தித்த பல பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள விருப்பமின்றி, தன்னையே தனிமைப்படுத்திக் கொண்டார். இறுதியில், தன்னை வெளியேற்றிய பள்ளியின் மீது பழியைத் தீர்த்துக்கொள்ள முடிவு செய்தார். அவர் பழக்கப்படுத்திக்கொண்ட துப்பாக்கி, அவருக்கு, தவறான, போலியான துணிவைத் தந்தது. 17 உயிர்களை பலி வாங்கினார்.

இந்தக் கொடுமையால் தங்கள் நண்பர்களை இழந்த அந்தப் பள்ளி மாணவர்கள், தங்களை இந்த வேதனைக்கு உள்ளாக்கிய இளையவர் நிக்கோலஸ் மீது தங்கள் பழியைத் தீர்த்துக்கொள்ளாமல், துப்பாக்கி பயன்பாட்டைக் குறித்து கேள்விகள் எழுப்பும் தெளிவைப் பெற்றனர். அதன் விளைவாக, அவர்கள் பங்கேற்ற கூட்டங்களிலும், தொலைக்காட்சி நிகழ்வுகளிலும், அமெரிக்க சமுதாயத்தில், கட்டுப்பாடு ஏதுமின்றி வளர்ந்துவிட்ட துப்பாக்கி கலாச்சாரத்தைக் கேள்வி கேட்கும் துணிவைப் பெற்றுள்ளனர். இது இறைவன் அவர்களுக்கு வழங்கியுள்ள அருள் என்று நாம் எண்ணிப்பார்க்கலாம்.    

பழிக்குப் பழி என்ற வெறியை இளையோரிடம் தூண்டி விடுவது எளிது. அரசியல் தலைவர்கள் பலரும், அரசியல் உலகில் அடியெடுத்துவைக்க நினைக்கும் பலரும், இளையோரின் துடிப்பையும், துணிவையும் தங்கள் சுயநலனுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதைக் கண்டு வேதனைப்படுகிறோம்.

இளையோர் உலக நாளைச் சிறப்பிக்கும் இன்று, தன்னலத் தலைவர்களால், தவறான வழிகளில் நடத்திச் செல்லப்படும் இளையோரை, இறைவன் தன் அருளால் நிறைத்து, அவர்கள் இவ்வுலகில் நன்மையை நிலைநாட்டும் துணிவைப் பெறவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.
"இளையோர், நம்பிக்கை மற்றும் அழைத்தலைத் தேர்ந்து தெளிதல்" (Young People, the Faith and Vocational Discernment) என்ற மையக்கருத்துடன், அக்டோபர் மாதம் நிகழவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக சிறப்பாக செபிப்போம்.

"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்ற விருதுவாக்குடன் பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகள், அனைத்து இளையோரையும் செயல்வீரர்களாக, சிறப்பாக, இறைவனின் சொற்படி செயலாற்றும் வீரர்களாக உருவாக்கவேண்டுமென்று மன்றாடுவோம்.


20 March, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – தண்ணீர் திராட்சை இரசமாக... பகுதி 9


Woman of Steel: Kiran Kanojia

இமயமாகும் இளமை தூண்டுதலாக, துணையாக இருக்கும் தந்தை

2011ம் ஆண்டு, டிசம்பர் மாதம் ஒரு நாள், கிரண் கனோஜியா (Kiran  Kanojia) என்ற இளம்பெண், ஹைதராபாத் இரயில் நிலையத்திலிருந்து பயணமானார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி வந்த கிரண் அவர்கள், தன் 21வது பிறந்தநாளை, பெற்றோருடன் கொண்டாட சென்றுகொண்டிருந்தார்.
அந்த துரித இரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், இரு இளைஞர்கள், கிரண் அவர்களின் கைப்பையைப் பறிக்க முயன்றனர். அப்போது நிகழ்ந்த போராட்டத்தில், அவ்விரு இளைஞர்கள், கிரண் அவர்களை, ஓடும் இரயிலிலிருந்து வெளியே தள்ளிவிட்டனர்.
இந்த விபத்தில் தன் இடது காலை இழந்த கிரண் அவர்கள், ஒட்டப்பந்தயங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு வடிவத்தில் செய்யப்பட்ட செயற்கைக் காலுடன், நீண்ட தூர ஒட்டப்பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். 2014ம் ஆண்டு நடைபெற்ற 'ஏர்டெல் மாரத்தான்' போட்டியில் தன் முதல் பதக்கத்தை வென்றார் கிரண். பாராலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்று, இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தருவதை தன் கனவாக, இலட்சியமாகக் கொண்டு, பயிற்சிகள் எடுத்து வருகிறார். தன்னை இவ்வளவு தூரம் ஊக்குவித்து, உற்சாகப்படுத்த, தன் தந்தை எப்போதும் தன்னுடன் இருக்கிறார் என்று, கிரண் அவர்கள், தன் பேட்டிகளில் கூறிவருகிறார்.
மார்ச் 18, ஞாயிறு, தென் கொரியாவின் Pyeongchang நகரில், மாற்றுத்திறனாளிகளின் குளிர்கால பாராலிம்பிக் விளையாட்டுக்கள் நிறைவடைந்தன. மார்ச் 19, திங்கள், புனித யோசேப்பு திருநாளன்று, உலகின் பல நாடுகளில் தந்தை நாள் கொண்டாடப்பட்டது. மாற்றுத்திறன் கொண்ட பல இளையோர் தங்கள் கனவுகளை நனவாக்க, தூண்டுதலாக, துணையாக இருந்துவரும் தந்தையருக்குத் தலை வணங்குவோம்.

The First Miracle

புதுமைகள் தண்ணீர் திராட்சை இரசமாக... பகுதி 9

கடந்த 8 வாரங்களாக தேடல் பயணத்தை மேற்கொண்ட கானா திருமண புதுமையை ஒருங்கிணைத்து, அசைபோட வந்திருக்கிறோம். கானா திருமண விருந்தில் இயேசு ஆற்றிய முதல் அரும் அடையாளத்தைக் குறித்து நற்செய்தியாளர் யோவான் பதிவு செய்துள்ள இறைவாக்கியங்களில் சில, நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைப் பயில முயல்வோம்.

"மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்." (யோவான் 2:1)
யோவான் நற்செய்தியில், இரண்டு நிகழ்வுகளில் மட்டுமே 'இயேசுவின் தாய்' இடம்பெறுகிறார். ஒன்று, கானா திருமணம் (யோவான் 2:1-11); மற்றொன்று, கல்வாரி மலை நிகழ்வுகள் (யோவான் 19:25-27). இயேசுவின் தாய் 'அங்கு இருந்தார்' என்று கானா திருமணத்தில் அவரை அறிமுகம் செய்யும் யோவான், சிலுவை அருகில் இயேசுவின் தாய் 'நின்று கொண்டிருந்தார்' (யோவான் 19:25) என்று கூறியுள்ளார்.
"இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்" என்ற எளிய சொற்கள், மரியாவின் சிறப்பானதொரு குணநலனை நம்முள் ஆழப் பதிக்கின்றன. எங்கெல்லாம் தன் உதவி தேவை என்று அன்னை மரியா உணர்கிறாரோ, அங்கெல்லாம், எவ்வித அழைப்பும் இல்லாமல் சென்று, அவர்களோடு தங்கி, உதவி செய்வது, அவரது தனிப்பட்ட குணம். தன் உறவினரான எலிசபெத்து, முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியை வானதூதர் கபிரியேல் வழியே அறிந்ததும், "மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்" (லூக்கா 1:39-40) என்று நற்செய்தியாளர் லூக்கா கூறியுள்ளார்.
இயேசுவைப் பற்றிய தவறான வதந்திகள் பரவின என்பதை, மாற்கு நற்செய்தி 3ம் பிரிவில், வாசிக்கிறோம். இயேசு மதிமயங்கி இருக்கிறார், தீய ஆவி பிடித்தவராய் இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். (மாற்கு 3:21) இச்சூழலில், தன்னை தீய ஆவி எதுவும் நெருங்கவில்லை என்பதை இயேசு விளக்கிக் கூறினார். அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள் (மாற்கு 3:31) என்று நற்செய்தியாளர் மாற்கு குறிப்பிடுகிறார். தன் மகனைக் குறித்து ஊரில் பல்வேறு வதந்திகள் எழுந்ததும், அவருக்கு அருகில் இருப்பதற்காக மரியா விரைந்து சென்றார்.
இவ்வாறு, தேவையுள்ள இடங்களில் பிரசன்னமாவது அன்னை மரியாவின் அழகு. கானாவில் திருமணம் ஒன்று நிகழப்போகிறது என்பதை அறிந்ததும், திருமண வீட்டாரின் பல தேவைகளை நிறைவு செய்ய, திருமணத்திற்கு முன்னரே அங்கு சென்றுவிட்டார் என்பதைக் கூறவே, "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்" என்ற எளிய சொற்களில் புனித யோவான் அன்னை மரியாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.  

இயேசுவின் தாய் அவரை நோக்கி, திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்றார். (யோவான் 2:3)
இறை வல்லுனர்கள் பலர், மரியாவின் இந்தக் கூற்றை, அழகான ஒரு செபம் என்று கூறுகின்றனர். திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்று சொல்வது, சாதாரணமான, எதார்த்தமான ஒரு கூற்று. அதை செபம் என்ற கோணத்தில் எண்ணிப்பார்க்க நாம் தயங்கலாம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், இது ஓர் அழகிய செபம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இயேசு சொல்லித்தந்த வானகத்திலுள்ள எங்கள் தந்தையே என்ற செபத்தை ஆய்வு செய்தால், நம் தயக்கம் நீங்கி, தெளிவு பிறக்கும். பெரும் இறையியல், மெய்யியல் தத்துவங்களெல்லாம் இந்த செபத்தில் இடம்பெறவில்லை. அங்கு இயேசு சொல்லித்தரும் விண்ணப்பங்கள் எல்லாமே, அன்றாட வாழ்வுக்குத் தேவையானவை. எங்கள் அனுதின உணவைத் தாரும், மன்னிக்கும் மனதைத் தந்தருளும், தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும் என்ற விண்ணப்பங்களே, இச்செபத்தில் இடம்பெற்றுள்ளன.

செபம் என்றதும், இது வேண்டும், அது வேண்டும் என்று, நீண்ட பட்டியல்களை, கடவுளிடம் அனுப்புவதற்கு பதில், நமது உண்மை நிலையை, நம்மிடம் உள்ள குறைகளைச் சொல்வது, இன்னும் அழகான செபங்கள். இத்தகைய செபத்தைச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. இத்தகைய செபத்தைச் சொல்வதற்கு, ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். நமது தேவைகளை, நம்மைவிட, நம் இறைவன் நன்கு அறிவார்; அவரிடம் குறையைச் சொன்னால் போதும், மற்றவை அனைத்தையும் அவர் பார்த்துக்கொள்வார் என்று எண்ணுவதற்கு, நிறைவான நம்பிக்கை வேண்டும். "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று அன்னை மரியா இயேசுவிடம் கூறுவது, இத்தகைய நம்பிக்கையுடன் எழுப்பப்பட்ட செபமே!

இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார். (யோவான் 2:5)
'இயேசு சொல்வதைக் கேளுங்கள்' என்று அன்னை மரியா கூறவில்லை. மாறாக, ‘அவர் சொல்வதைச் செய்யுங்கள் என்பதே அவர் விடுத்துள்ள அழைப்பு. இந்தக் கூற்றில் உள்ள மற்றொரு முக்கியமான சொல், 'சொல்வதெல்லாம்' என்ற சொல். இறைவன் நம்மிடம் சொல்வனவற்றையெல்லாம் செய்வதே சரியான வழி. இதற்கு மாறாக, இறைவன் சொல்வதில் நமக்கு விருப்பமானவற்றை மட்டும் தெரிவுசெய்து செயலாற்றுவது, அன்னை மரியா நமக்கு விடுத்துள்ள அழைப்பு அல்ல.
இறைவன் சொல்வதைக் கேட்டு செயல்பட்டால் அற்புதங்கள் நிகழும் என்பதை தன் வாழ்வில் உணர்ந்திருந்ததால், 'அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்று அன்னை மரியா கூறினார்.

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்று அன்னை மரியா கூறிய இந்த நான்கு சொற்களே, விவிலியத்தில் அவர் கூறிய இறுதிச் சொற்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த நான்கு சொற்களே, அன்னை மரியா, நமக்கு விட்டுச்சென்றுள்ள விலைமதிப்பற்ற பாரம்பரியம். இந்த நான்கு சொற்கள், நம் வாழ்வின் அடித்தளமாக மாறினால், நம் குறைகள் நீங்கி, நிறைவு தோன்றும் அற்புதத்தை நம்மால் காணமுடியும்.

மரியா பணியாளர்களிடம் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். புதுமை நிகழ்ந்த வேளையில், அன்னை மரியா அங்கிருந்ததாக நற்செய்தி கூறவில்லை. இதுதான், அன்னை மரியாவின் அழகு, இதுவே அவரது இலக்கணம். குறைகள் உருவானதும் வந்து நிற்கும் அன்னை மரியா, அவரது பரிந்துரையால் புதுமைகள் நிகழும் வேளையில், அந்தப் புகழில் பங்கேற்காமல் மறைந்துவிடுவார்.

கானா திருமணத்தில், தண்ணீர் திராட்சை இரசமாக மாறியப் புதுமையை, நற்செய்தியாளர் யோவான், பின்வரும் வரிகளில் குறிப்பிட்டுள்ளார்:
யோவான் 2:7-9
இயேசு பணியாளரிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள் என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார்.
பணியாளர்கள் தொட்டியில் ஊற்றியது தண்ணீர். ஆனால், அதை அவர்கள் மொண்டு எடுத்துச் சென்றபோது, அது திராட்சை இரசமாக மாறியிருந்தது. எப்போது, எப்படி இந்தப் புதுமை நடந்தது என்பதை ஆய்வு செய்யும்போது, அழகிய, ஆழமான எண்ணங்கள் தோன்றுகின்றன.
வழக்கமாக, இயேசுவின் புதுமைகளில், அவர் சொல்லும் ஒரு சொல்லோ, அல்லது அவரது ஒரு செயலோ புதுமைகள் நிகழ காரணமாக அமையும். ஆனால், இந்தப் புதுமையைப்பற்றி நற்செய்தியில் நாம் வாசிப்பது இதுதான். இயேசு, இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்றார். பின்னர், இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள் என்றார். இவ்விரு கூற்றுகளுக்குமிடையே, அவர், நீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் மீது கைகளை நீட்டியதாகவோ, தண்ணீரைத் தொட்டதாகவோ, ஆசீர் அளித்ததாகவோ, நற்செய்தியில் குறிப்பிடப்படவில்லை.

இயேசு கூறிய இவ்விரு கூற்றுகளுக்கிடையே, நற்செய்தியாளர் யோவான், ஓர் அழகிய வாக்கியத்தைப் பதிவுசெய்துள்ளார். 'தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு சொன்னதும், பணியாளர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள். இதுதான் அந்த வாக்கியம். மிகவும் பொருள்நிறைந்த வாக்கியம். எப்போது அந்தப் பணியாளர்கள் விளிம்பு வரை, அதாவது, தொட்டிகள் நிறைந்து வழியும் வரை நீர் நிரப்பினார்களோ, அப்போதே அந்தத் தண்ணீர், திராட்சை இரசமாக மாறிய புதுமை நிகழ்ந்துவிட்டது.

திராட்சை இரசம் தீர்ந்துவிட்டச் சூழலில், அந்தப் பிரச்சனைக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத ஒரு செயலாக, கை கால் கழுவப் பயன்படுத்தப்படும் 'தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு சொன்னதைக் கேட்டு, பணியாளர்கள், குழப்பமும், எரிச்சலும், அடைந்திருக்கலாம். இந்த எரிச்சலோடு, பணியாளர்கள் செயல்பட்டிருந்தால், அத்தொட்டிகளை, ஏனோதானோவென்று,  அரைகுறையாய் நிரப்பியிருப்பார்கள். ஆனால், நற்செய்தியாளர் யோவான், அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள் என்று தெளிவாகக் கூறியுள்ளார்:. அவ்வாறெனில், அந்த பணியாளர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த உள்ள மாற்றம்தான், தண்ணீர் இரசமாக மாறிய அந்த மாற்றத்தையும் உருவாக்கியது.
தங்கள் அதிர்ச்சி, தயக்கம், எரிச்சல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, பணியாளர்கள், தாங்கள் செய்யும் செயலை முழுமையாகச் செய்த அந்த நேரத்திலேயே, அவர்கள் ஊற்றிய தண்ணீர் திராட்சை இரசமாக மாற ஆரம்பித்துவிட்டது. முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் மன நிறைவைத் தருவதோடு, வாழ்வில் மாற்றங்கள் பலவற்றையும் உருவாக்கும்.

நம்பிக்கையோடு இறைவனிடம் நம் குறைகளைக் கூறுதல், இயேசு சொல்வதையெல்லாம் செய்தல், அவர் சொல்வதன் பொருள் தெளிவாகத் தெரியவில்லை எனினும், ‘விளிம்பு வரை நிறையுமளவு முழுமையான மனதுடன் பணியாற்றுதல் என்ற பாடங்களை, தண்ணீர் திராட்சை இரசமாக மாறும் புதுமை நமக்குச் சொல்லித் தந்துள்ளது.