29 April, 2018

No pain… no gain வலியின்றி வெற்றியில்லை


Prayers of the People: Fruit of the Vine, Fifth Sunday of Easter

5th Sunday of Easter

There are seven occasions in John’s Gospel where Jesus has made the famous ‘I am’ statements. All these statements are self-defining lines, not as a person blowing one’s own trumpet, but as someone trying to dispel darkness and resolve doubts and debates.
“I am the bread of life; he who comes to me shall not hunger.” John 6:35
“I am the light of the world; he who fallows me shall not walk in the darkness, but shall have the light of life.” John 8:12  
“I am the gate; if anyone enters through me, he shall be saved, and shall go in and out, and find pasture.” John 10:9
“I am the good shepherd; the good shepherd lays down his life for his sheep.” John 10:11
“I am the resurrection and the life; he who believes in me shall live even if he dies.” John 11:25
“I am the way, and the truth, and the life; no one comes to the Father, but through me.” John 14:6
“I am the true vine, you are the branches.” John 15:5

There are quite many hymns composed on these ‘I am’ statements of Jesus. These statements have also been used as famous quotes inscribed on trophies and imprinted on clothing. As hymns and quotes these statements sound very solemn and grand. But, we need to look at the context in which these statements were made, in order to understand them better.
Last week we considered one of these ‘I am’ statements of Jesus, - “I am the good shepherd; the good shepherd lays down his life for his sheep.” (John 10:11) This statement of Jesus was given as a reply to the debate started by the religious authorities. The curing of the visually challenged person triggered a hot debate and the Pharisees branded Jesus as a sinner and as an agent of the devil. Jesus clarified his role as the good shepherd (John 10). It is also possible to interpret Jesus comparing himself to a Good Shepherd in order to save the person who was ‘cast out’ by the religious authorities. This could be seen as Jesus trying to help the person, healed of his physical blindness, not to be blinded in spirit, by the threats of the religious authorities. Similarly all the ‘I am’ statements of Jesus were statements of clarification and assurance in the midst of doubts and debates.

Life’s trials can either break us into pieces or make us stronger. During trials, our true convictions come to light. These moments, as it were, give us an opportunity to define and re-define ourselves better. We also admire those who, due to their self-assurance (and not fake arrogance), remain calm during trials. We see this happening in Jesus’ life over and over again.
While the first five ‘I am’ statements in the above list were spoken in public, the last two were part of the private farewell discourse of Jesus to his disciples. Today’s gospel is part of this farewell discourse during the Last Supper. The mood at the Last Supper must have been quite depressing. To add to this gloom, Jesus had predicted that one of them would betray him and another would deny him. In a close knit group, such as the one around Jesus, such predictions must have sounded very shocking.

To assure the disciples that pain is part of a fruitful life, Jesus speaks of the vine and the branches. All of us know that the best wine that comes from the best vineyard is the final result of patience and perseverance. The idea of God as the vinedresser, Jesus as the true vine and we as branches is very consoling. Jesus has not promised only gladness right through. He speaks of branches that would be cut off and also branches that would be pruned in order to yield better results. No one will be spared of pain. But, the end result will be excellent fruit! To produce an excellent bunch of grapes the vine and the branches will have to suffer pruning. To produce an excellent wine, the grapes will have to be crushed. No pain… no gain. But amidst all this, the promise is – the enduring presence of Jesus and the personal care of God, the vinedresser.

Most of our pains arise out of conflicts between two worlds that we live in. The first chapter of ‘Living a Life That Matters’ written by my favourite author Harold S.Kushner talks about these two worlds – the world of work and commerce as well as the world of faith. The world of work and commerce honours people for being attractive and productive. It reveres winners and scorns losers, as reflected in its treatment of devoted public servants who lose an election or in the billboard displayed at the Atlanta Olympic Games a few years ago: ‘You don’t win the silver medal, you lose the gold.’ As in many contests, there are many more losers than winners, so most of the citizens of that world spend a lot of time worrying that they don’t measure up.
But, fortunately, there is another world … the world of faith, the world of the spirit. Its heroes are models of compassion rather than competition. In that world, you win through sacrifice and self-restraint. You win by helping your neighbour and sharing with him rather than finding his weakness and defeating him. And in the world of the spirit, there are many more winners than losers. (Kushner)
Jesus, during the Last Supper was talking to a bunch of disciples who felt themselves to be losers. Jesus was trying to tell them that they would be productive as long as they remain with Jesus and submit to the ‘pruning’ of the Father.

‘Jesus nut’ or ‘Jesus pin’ is the main rotor retaining nut (MRRN) that holds the main rotor to the mast of some helicopters, such as the UH-1 Iroquois helicopter; or more generally is any component which represents a single point of failure with catastrophic consequences. The term ‘Jesus nut’ may have been coined by American soldiers in Vietnam; the Vietnam War was the first war to feature large numbers of soldiers riding in helicopters. If the Jesus pin were to fail in flight, the helicopter would detach from the rotors and the only thing left for the crew to do would be to "pray to Jesus." (Wikipedia)
If we, the branches, are attached to the vine, we shall bear abundant fruit. If ‘Jesus nut’ is attached to the helicopter called life, we can soar higher and higher. If we detach ourselves from ‘Jesus nut’ we have no other option but to crash!
We pray that the Good Shepherd, who is also the True Vine from which life flows, and the ‘nut’ that binds the rotor of our flight, may lead us to ‘greener pastures, more fruitful life and safer flight’!
---------------------------------------
P.S.: A closing thought on April 29… The Day of Remembrance for all Victims of Chemical Warfare is an annual event held on April 29 as a "tribute to the victims of chemical warfare, as well as to reaffirm the commitment of the Organization for the Prohibition of Chemical Weapons (OPCW) to the elimination of the threat of chemical weapons..." It is officially recognised by the United Nations (UN) and has been celebrated since 2005.
Our minds are filled with the news and pictures of the alleged ‘chemical warfare’ conducted in Syria. In this context, I would like to gratefully acknowledge a voluntary group called ‘The White Helmets’, doing a wonderful service to the victims of the Syrian war.
Here is an excerpt from Wikipedia: The White Helmets, is a volunteer organisation that operates in parts of rebel-controlled Syria and in Turkey. The majority of their activity in Syria consists of urban search and rescue in response to bombing, medical evacuation, evacuation of civilians from danger areas, and essential service delivery. As of April 2018, the organisation claims to have saved over 114,000 lives and to have lost the lives of 204 White Helmet volunteers in the process.
The organisation has been the target of a ‘disinformation’ campaign by supporters of Syrian President Bashar al-Assad, Russia-sponsored media organisations such as Russia Today (RT), and alt-right personalities, with false claims of close ties with terrorist activities and other conspiracy theories.

Who are the White Helmets? - YouTube

பாஸ்கா காலம் 5ம் ஞாயிறு

மரத்தில் இருந்த இலைக்கு 'போர்' அடித்தது. இன்னும் எத்தனை நாள் இந்த மரத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பது என்ற சலிப்பு அதற்கு. வானில் சிறகடித்துப் பறந்த பறவைகளைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட்டது. இலையின் ஏக்கம், எரிச்சலாக மாறியது. இந்தப் பாழாய்போன மரத்திலிருந்து எப்போதுதான் எனக்கு விடுதலை கிடைக்குமோ என்று புலம்பித் தீர்த்தது.
இலை, ஏங்கிக் காத்திருந்த அந்த விடுதலை நாள் வந்தது, இலையுதிர் காலத்தில். மரத்திலிருந்து விடுதலை பெற்ற இலை, தன்னை இதுவரைத் தாங்கி, வளர்த்துவந்த மரத்திற்கு விடைகூடச் சொல்லாமல், வீசியத் தென்றலில் மிதந்து சென்றது. பறவையைப் போல தானும் பறக்க முடிகிறதே என்று இலைக்கு நிலைகொள்ளா மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி, ஒரு சில நொடிகளே நீடித்தது.
உதிர்ந்த இலை, இறுதியில் தரையில் விழுந்தது. என்னதான் முயன்றாலும், அதனால் மீண்டும் பறக்க முடியவில்லை. தான் பறந்தபோது, தன்னைத் தாங்கியதுபோல் தெரிந்த காற்று, இப்போது, தன் மீது புழுதியை வாரி இறைத்தது. காய்ந்து விழுந்த மற்ற இலைகள் அதன் மீது விழுந்து மூடின. மனிதர்கள் அதனை மிதித்துச் சென்றனர். இலைக்கு மூச்சுத் திணறியது.
கண்களில் நீர் பொங்க, அண்ணாந்து பார்த்தது இலை. தான் வாழ்ந்த மரக்கிளையில் அசைந்தாடிய மற்ற இலைகள், தன்னைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதைப்போல் இருந்தது. "நான் அங்கேயே தங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்ற ஏக்கம் இலையைச் சூழ்ந்தது.

மரத்துடன் இணைந்திருக்கும் வரையில் இலைக்கு இன்பமான வாழ்வு. பிரிந்தால், தாழ்வு... மரணம். இதையொத்த கருத்தை இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகிறார் இயேசு:
நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. (யோவான் 15:5)

உவமைகளிலும், உருவகங்களிலும் பேசுவது, இயேசுவுக்குக் கைவந்த கலை என்று நமக்குத் தெரியும். நானே வாழ்வு தரும் உணவு, நானே உலகின் ஒளி, நல்ல ஆயன் நானே என்று, இயேசு, தன்னை, உருவகப்படுத்திக் கூறியுள்ள வாக்கியங்கள், யோவான் நற்செய்தியில் ஏழுமுறை இடம்பெற்றுள்ளன. நம் வாழ்விலும், நம்மைப்பற்றியும், அடுத்தவரைப்பற்றியும், அவ்வப்போது உருவகங்களில் பேசுகிறோம். விளையாட்டாக, கேலியாகச் சொல்லும் உருவகங்களைவிட, இக்கட்டான, நெருக்கடியான வேளைகளில் நாம் சொல்லும் உருவகங்கள் ஆழந்த பொருளுள்ளவை. "உங்களை நான் மலைபோல நம்பியிருக்கிறேன்" என்று, ஓர் இக்கட்டானச் சூழலில், நண்பரிடம் சொல்லும்போது, அவர்மீது நமக்கு உள்ள ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படும். "என் மகள் கணக்குல புலி" என்று ஒரு தந்தை சொல்லும்போது, அவரது மகளைப்பற்றி அவர் கொண்டிருக்கும் உள்ளார்ந்த பெருமிதம் வெளிப்படும்.

நமது உண்மையான இயல்பு எப்போது அதிகம் வெளிப்படுகின்றது? எதிர்ப்பு, குழப்பம், போராட்டம் இவை பெருகும்போது, நமது உண்மை இயல்பு வெளிப்படும். வாழ்க்கை, மிகச் சீராக, சுமுகமாகச் செல்லும்போது, நாம் எதை நம்புகிறோம், எது நமது வாழ்வின் அடிப்படை என்ற கேள்விகளெல்லாம் எழாது. ஆனால், போராட்டங்களில், சங்கடங்களில் நாம் சிக்கிக்கொள்ளும்போது, நாம் எப்படிப்பட்டவர்கள், எதை நம்பி வாழ்கிறோம் என்ற உண்மைகள் வெளிப்படும். உண்மைத் தங்கமோ, போலித் தங்கமோ அழகியதொரு கண்ணாடி பேழைக்குள் இருக்கும்போது, ஒரே விதத்தில் மின்னும். வேறுபாடு தெரியாது. தீயில் இடப்பட்டால் தான் உண்மைத் தங்கமும், போலித் தங்கமும் தங்கள் உண்மை நிலைகளை வெளிப்படுத்தும்.

யோவான் நற்செய்தியில், இயேசு தன்னை உருவகப்படுத்திப் பேசிய 'நானே' என்ற வாக்கியங்கள் அனைத்தும், எதிர்ப்புகள், குழப்பங்கள் மத்தியில் சொல்லப்பட்டவை என்பதை உணரலாம். "நல்ல ஆயன் நானே" என்று இயேசு கூறியதை, சென்ற வார நற்செய்தியாக நாம் கேட்டோம். "உண்மையான திராட்சைச் செடி நானே" என்று, இயேசு, இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.
"நல்ல ஆயன் நானே" என்று இயேசு சொன்னது, தன் புகழைப் பறைசாற்ற, அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. ஒரு நெருக்கடியான நேரத்தில், அதுவும், தன்னால் நன்மைபெற்ற ஒருவர், மதத்தலைவர்களிடமிருந்து வெறுப்பைத் தேடிக்கொண்டார் என்பதை அறிந்த நேரத்தில், இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னார்.
பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்குகிறார். அந்த அன்பான, அற்புதமானச் செயலுக்குத் தவறானக் காரணங்கள் சொல்லி, இயேசுவை ஒரு பாவி என்று முத்திரை குத்துகின்றனர், பரிசேயர்களும், மதத்தலைவர்களும் (யோவான் 9:24); அது மட்டுமல்ல, இயேசுவின் புதுமையால் பார்வை பெற்றவரையும், யூத சமூகத்திலிருந்து வெளியேத் தள்ளினர் (யோவான் 9:34) என்று வாசிக்கிறோம். இந்நேரத்தில் இயேசு அங்கு செல்கிறார்.
பிறவியிலேயே பார்வை இழந்ததால், தன்னை ஒரு பாவி என்று முத்திரை குத்தி, வெறுத்து ஒதுக்கிய சமுதாயம், தான் பார்வை பெற்றபிறகும் தன்னை ஒதுக்கிவைத்ததை அறிந்து, அம்மனிதரின் உள்ளம் வேதனையில் வெந்து போயிருக்கும். அவர் உள்ளத்தில் நிறைந்த வேதனையாலும், வெறுப்பாலும், அவர் மீண்டும் தன் பார்வையை இழந்துவிடக்கூடாது என்ற பரிவினால், இயேசு, ஒரு நல்லாயனாக, அவரைத் தேடிச்சென்றார். 9ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்நிகழ்வைத் தொடர்ந்து வரும் 10ம் பிரிவில் இயேசு 'நல்ல ஆயன் நானே' (யோவான் 10:14) என்று தன்னையே அடையாளப்படுத்துகிறார்.

இதைவிட நெருக்கடியான ஒரு சூழலில், தன் சீடர்கள் தவித்தபோது, இயேசு, தன்னை ஒரு திராட்சைச் செடியாகவும், அவர்களை, கிளைகளாகவும் ஒப்புமைப்படுத்திப் பேசினார். தன் சீடர்களுடன் இறுதி இரவுணவைப் பகிர்ந்தபோது, இயேசு, இவ்வார்த்தைகளைச் சொன்னார். அந்த இறுதி இரவுணவு, கலகலப்பான, மகிழ்வானச் சூழலில் பகிரப்பட்ட உணவு அல்ல என்பது நமக்குத் தெரியும். பயம், கலக்கம், சந்தேகம் என்ற எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னார்.
இறுதி இரவுணவின்போது, சீடர்கள் கலக்கமடையக் காரணம் என்ன? பன்னிரு சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுப்பார்; மற்றொரு சீடர், இயேசுவை மறுதலிப்பார் என்ற இரு பெரும் கசப்பான உண்மைகளை, இயேசு அவ்வேளையில் பகிர்ந்துகொண்டார். உண்மைகள் பொதுவாகவே கசக்கும்; அதுவும், நம்பிக்கைத் துரோகம், மறுதலிப்பு என்ற உண்மைகள் பெரிதும் கசக்கும். இயேசு கூறிய கசப்பான உண்மைகளால், நம்பிக்கை இழந்து, பயத்தில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம், தன்னை ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்தி இயேசு பேசுகிறார். அந்தச் செடியின் கிளைகளாக, தன் சீடர்கள் வாழவேண்டும் என்பதை அவர்கள் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிப்பதற்காக இயேசு இவ்வுருவகத்தைப் பயன்படுத்துகிறார்.
திராட்சைச் செடியும், கொடியும், பல சவால்களை நமக்கு முன் வைக்கின்றன. செடியுடன் கொடிகள் இணைந்துவிட்டால், எல்லாம் சுகமாக இருக்கும் என்ற தவறான கற்பனையை இயேசு தரவில்லை. என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் என் தந்தை தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். (யோவான் 15:2) என்று இயேசு கூறினார். கனிகொடாத கொடிகள் வெட்டப்படும். கனிதரும் கொடிகளும், கூடுதல் கனி தரவேண்டுமெனில், துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இயேசு சொல்கிறார்.
திராட்சைச் செடியும், கொடியும் பல வேதனைகளைத் தாங்கினால் மட்டுமே, தரமானக் கனிகள் தோன்றும். அதேபோல், சுவையுள்ள இரசமாக மாறுவதற்கு, திராட்சைக் கனிகள் கசக்கிப் பிழியப்படவேண்டும். இத்துன்பங்களில் எல்லாம் இயேசு தரும் ஆறுதலான எண்ணங்கள் எவை? திராட்சைத் தோட்டத்தை கவனத்தோடு, கரிசனையோடு நட்டு வளர்ப்பவர் விண்ணகத் தந்தை என்பதும், கிளைகள் அனுபவிக்கும் துன்பங்களில் இயேசுவும் உடனிருப்பார் என்பதும், இயேசு தரும் ஆறுதலான எண்ணங்கள்.

இயேசுவுடன் இணையும் வாழ்வு, பயன்தரும் வாழ்வாக, உயர்ந்து செல்லும் வாழ்வாக அமையும் என்பதை விளக்க மற்றோர் உருவகம் உதவியாக இருக்கும். அமெரிக்க இராணுவத்தில், பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களில், மேலே சுழலும் இறக்கைகளை ஹெலிகாப்டருடன் பிணைக்க, MRRN என்ற திருகாணிகளைப் பயன்படுத்தினர். MRRN என்றால், Main Rotor Retaining Nut, அதாவது, ‘சுழல் விசையுடன் பிணைத்து வைக்கும் மையத் திருகாணி என்று பெயர். இப்பெயர், சொல்வதற்கு, நீளமாக, கடினமாக இருந்ததால், இதற்குப் பதில், இராணுவ வீரர்கள், இந்தத் திருகாணியை, 'இயேசு திருகாணி' (Jesus Nut) என்று பெயரிட்டனர். இந்தப் பெயர் வைக்கப்பட்டதன் காரணத்தை வீரர்களிடம் கேட்டபோது, அவர்கள் தந்த விளக்கம், அழகான உருவகமாகத் தெரிந்தது.
ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருக்கும்போது, இந்த MRRN, அல்லது, 'இயேசு திருகாணி' கழன்றுவிட்டால், மேலே சுற்றும் இறக்கைகள் ஹெலிகாப்டரிலிருந்து பிரிந்துவிடும். அந்த இறக்கைகளின் சுழற்சியால் அதுவரை வானத்தில் தாங்கப்பட்ட ஹெலிகாப்டர், நேரே பூமியில் விழுந்து நொறுங்க வேண்டியதுதான். அந்நேரத்தில், ஹெலிகாப்டரில் இருப்பவர்களை, இயேசு மட்டுமே காப்பாற்றமுடியும் என்பதை வீரர்கள் உணர்ந்ததால், அந்த மையத் திருகாணிக்கு, 'இயேசு திருகாணி' என்று பெயரிட்டனர்.
ஹெலிகாப்டரின் இறக்கைகள் போல சுற்றிச் சுழலும் நமது வாழ்வை, இறுகப் பிணைப்பதற்கு இயேசு என்ற திருகாணி இல்லையெனில், வானில் பறப்பதாய் நாம் நினைக்கும் வாழ்வு, பாதாளத்தில் மோதி, சிதற வேண்டியதுதான்.

பொறுமையாக, கடின உழைப்புடன் வளர்க்கப்பட்ட திராட்சைத் தோட்டம் வளமான, சுவையான கனிகளைத் தருவதுபோல், நாம் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளும், இனி தொடரப்போகும் முயற்சிகளும் நல்ல கனிகளைத் தரவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.
இயேசு என்ற செடியுடன் இணைந்திருக்கும் வரை, நாம் மிகுந்த கனி தருவோம்.
இயேசு என்ற திருகாணியுடன் இணைந்திருக்கும் வரை, வானில் உயரப் பறப்போம்.

ஏப்ரல் 29 - வேதியல் போரினால் துன்புறுவோரை நினைவுகூரும் உலக நாள்

ஏப்ரல் 29, இஞ்ஞாயிறன்று, வேதியல் போரினால் துன்புறுவோரை நினைவுகூரும் உலக நாள் கடைபிடிக்கப்படும் வேளையில், சிரியாவில் துன்புறும் மக்கள் நம் நினைவுகளில் தோன்றுகின்றனர். இவர்களைக் காப்பதற்காக, தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும்  ஓர் இளையோர் அணியை, பெருமையுடன், நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறோம்.
சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் இடங்களில், வெள்ளை நிற தலைக்கவசம் அணிந்த வீரர்கள், பொதுமக்களைக் காப்பாற்ற விரைந்து செல்கின்றனர். சிரிய - இரஷ்ய கூட்டுப் படைகளின் தாக்குதலால் தரைமட்டமான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கிக் கிடக்கும் மக்களை மருத்துவனைகளில் சேர்க்கும் பணியை வெள்ளைத் தலைக்கவசங்கள் (White helmets) என்ற தன்னார்வ அமைப்பு செய்து வருகிறது.
ஜேம்ஸ் லெ மெசுரியெர் (James Le Mesurier) என்பவர் நிறுவிய இந்த அமைப்பில் 3000த்திற்கும் அதிகமான தன்னார்வப் பணியாளர்கள் உள்ளனர். சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கிய 2014ம் ஆண்டு முதல் இயங்கிவரும் ஒயிட் ஹெல்மெட்ஸ் அமைப்பைச் சார்ந்த பலர், பொறியாளர்கள், ஓவியர்கள், வங்கி அதிகாரிகள், மற்றும் மாணவர்கள். இவ்வமைப்பில், பெண்களும் பணியாற்றுகின்றனர். இதுவரை 1,14,000க்கும் அதிகமான உயிர்களை ஒயிட் ஹெல்மெட்ஸ் அமைப்பினர் காப்பாற்றியுள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
மீட்புப் பணிகள் மட்டுமல்லாது, வானிலிருந்து கட்டிடங்களை நோக்கி குண்டுகள் விழும்போது, எப்படி தற்காத்து கொள்ளவேண்டும் என்ற பயிற்சியையும் சிரிய மக்களுக்கு அளிக்கும் இவ்வமைப்பினர், போர் பகுதிகளில் நடக்கும் அட்டூழியங்களை நேரடியாகப் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இவர்கள் இந்தக் கொடூரங்களை உலகறியச் செய்வதனால், இவர்களை, தீவிரவாதிகளுக்கு துணை செல்லும் அமைப்பினர் என்று, சிரியா அரசும், இரஷ்ய அரசும் பழி சுமத்தி வருகின்றன. இருந்தாலும், இவர்கள் தங்கள் பணியை இதுவரை கைவிடவில்லை.
ஆபத்து நிறைந்த இப்பணியை ஒவ்வொரு நாளும் ஆற்றிவரும் இவ்வீரர்களில், இதுவரை, 204 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இவ்வமைப்பின் அறிக்கையொன்று கூறுகிறது.


24 April, 2018

விவிலியத்தேடல் : புதுமைகள் – அரச அலுவலர் மகன் குணமடைதல் – பகுதி 4


To change or Not to change…

இமயமாகும் இளமை -  அவர் மாறத் துவங்கினார்...

"நீ மாறவேண்டும், நீ மாறவேண்டும்" என்ற சொற்களை மீண்டும், மீண்டும் கேட்டுவந்த ஓர் இளைஞர், எங்கிருந்து துவங்குவது, எப்படி மாறுவது என்று தெரியாமல் குழம்பிப்போனார். மற்றவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் தன்னிடம் உருவாகவில்லையே என்ற ஏக்கத்தில், அவர், இன்னும் மோசமாக மாறிவந்தார்.
அவர்மீது ஆழ்ந்த அன்பு கொண்டிருந்த ஓர் இளம்பெண்ணும், "நீ மாறவேண்டும்" என்ற பல்லவியை நாள்தோறும் பாடி வந்தது, இளைஞரை மேலும் விரக்தி அடையச் செய்தது. ஒருநாள், அந்த இளம்பெண், இளைஞரிடம் வந்து, "நீ இப்போது இருப்பதுபோலவே எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நீ மாறவேண்டாம்" என்று சொன்னார். இதைக் கேட்ட இளைஞரின் உள்ளத்திலிருந்த இறுக்கங்களும், ஏக்கங்களும் மறைந்தன.
அவர் மாறத் துவங்கினார்.

Go, your son will live…

புதுமைகள் அரச அலுவலர் மகன் குணமடைதல் பகுதி 4

யோவான் நற்செய்தி 4ம் பிரிவில் இடம்பெற்றுள்ள புதுமை, அரச அலுவலர் மகனை இயேசு குணப்படுத்தும் புதுமை. இந்தப் புதுமையின் இறுதியில், "இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே" (யோவான் 4 54) என்ற குறிப்பை நற்செய்தியாளர் யோவான், பதிவுசெய்துள்ளார். கலிலேயாவில் உள்ள கானாவில், தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது, இயேசு செய்த 'முதல் அரும் அடையாளம்'. அரச அலுவலர் மகனைக் குணமாக்கியது, அவர் கலிலேயாவில் செய்த இரண்டாவது அரும் அடையாளம். இவ்விரு நிகழ்வுகளுக்கும் இடையே, இயேசு, எருசலேம் நகரில், அரும் அடையாளங்களைச் செய்திருந்தார் (யோவான் 2:23). இருப்பினும், 'இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே' என்ற சொற்களை, நற்செய்தியாளர் யோவான் ஏன் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார் என்ற கேள்வி, விவிலிய ஆய்வாளர்களைக் கவர்ந்துள்ளது.
யோவான், தன் நற்செய்தியை வெறும் வரலாற்றுப் பதிவாக மட்டும் எழுதவில்லை, மாறாக, ஓர் இறையியல் பாடமாக எழுதியுள்ளார் என்பதை நாம் அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறோம். இறையியல் கண்ணோட்டத்துடன் சிந்தித்திருக்கும் சில விவிலிய ஆய்வாளர்கள், இயேசு, கானாவில் செய்த முதல் அரும் அடையாளத்திற்கும், கலிலேயாவுக்கு வந்தபின் செய்த இரண்டாவது அரும் அடையாளத்திற்கும் இடையே உள்ள ஒப்புமைகளைப் பதிவு செய்துள்ளனர்.

1. இவ்விரு அரும் அடையாளங்களும் 'மூன்றாம் நாளில்' நிகழ்ந்தன. (யோவான் 2:1; 4:43) 'மூன்றாம் நாள்' என்ற குறிப்பு, விவிலியத்தில் பல இடங்களில் காணப்படுகின்றது. ஆபிரகாம், தன் மகனைப் பலியிடச் சென்றபோது, மூன்றாம் நாள், இறைவன் குறித்திருந்த மலையை அவர் அடைந்தார். (தொடக்க நூல் 22:4-5)
இஸ்ரயேல் மக்களைச் சந்திக்க, இறைவன், மூன்றாம் நாள், பேரிடி, மின்னல், கார்மேகம் புடைச்சூழ வந்தார் என்று விடுதலைப்பயண நூல் கூறுகிறது. (வி.ப. 19:16-19)
பெரிய மீனின் வயிற்றில் சிறைப்பட்டிருந்த இறைவாக்கினர் யோனாவை, அந்த மீன், மூன்றாம் நாள் கரையில் கக்கியது (யோனா 1:17, 2:1). அதேபோல், கல்லறையில் புதைக்கப்பட்ட இயேசுவும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் (மத்தேயு 12:40, 16:21; 17:23).
எனவே, 'மூன்றாம் நாள்' என்ற குறிப்பை, வெறும் காலத்தை உணர்த்தும் குறியீடாக அல்லாமல், மாற்றத்தை உணர்த்தும் ஓர் இறையியல் குறியீடாக நற்செய்தியாளர் யோவான் பயன்படுத்தியுள்ளார்.

2. கானா திருமண விருந்தில், 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது' என்ற குறையை, அன்னை மரியா, இயேசுவின் கவனத்திற்குக் கொணர்ந்தபோது, இயேசு, அவரிடம் கடினமாகப் பேசுவதுபோன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார் (யோவான் 2:4). அதேபோல், தன் மகன் உடல் நலமற்று இருக்கிறான் என்ற குறையை, அரச அலுவலர் தெரிவித்தபோதும், இயேசு அவரைக் கடிந்துகொள்வதுபோல் பேசுகிறார் (யோவான் 4:48).

3. இவ்விரு நிகழ்வுகளிலும், கட்டளைகள்போல் ஒலிக்கும் இயேசுவின் சொற்கள், புதுமைகளை நிகழ்த்துகின்றன. "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" (யோவான் 2:7) என்று கானா திருமண விருந்தில் இயேசு கூறிய சொற்களும், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" (யோவான் 4:50) என்று அரச அலுவலரைப் பார்த்து இயேசு கூறிய சொற்களும் புதுமைகளை ஆற்றின.

4. இவ்விரு புதுமைகளிலும், இயேசு கூறியச் சொற்களின் மீது நம்பிக்கை கொண்டு, அவரது கட்டளைகள் நிறைவேற்றப்படுகின்றன. 'தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு கூறியதைக் கேட்டு, பணியாளர்கள் அத்தொட்டிகளை விளிம்புவரை நிரப்பினார்கள் என்றும், அந்த நம்பிக்கையே, தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியது என்றும் சிந்தித்தோம். அதேபோல், 'நீர் புறப்பட்டுப்போம். உன் மகன் பிழைத்துக் கொள்வான்' என்று இயேசு கூறியதை நம்பி, அரச அலுவலர் புறப்பட்ட அந்த நேரமே, அவரது மகன் குணமடைந்தான்.

5. கானா திருமண விருந்தில், புதுமையாக உருவான திராட்சை இரசத்தைப்பற்றி பணியாளர்கள் அறிந்திருந்தனர், பந்தி மேற்பார்வையாளருக்கோ, மணமகனுக்கோ அதைக் குறித்து ஒன்றும் தெரியவில்லை (யோவான் 2:9). அதேபோல், மகன் குணமான அதிசயத்தை முதலில் தெரிந்துகொண்டவர்கள், அந்த அலுவலரின் பணியாளர்கள். அவர்கள் தங்கள் தலைவனைத் தேடிச்சென்று இந்த நல்ல செய்தியைக் கூறினர். (யோவான் 4:51-52)

6. கானாவில் இயேசு முதல் அரும் அடையாளத்தைச் செய்ததும், அவருடைய சீடர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர் (யோவான் 2:11). கலிலேயாவில் இயேசு செய்த இரண்டாவது அரும் அடையாளத்தைக் கண்டு, 'அரச அலுவலரும், அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்' (யோவான் 4:53). யோவான் நற்செய்தியின் 20ம் பிரிவில், அரும் அடையாளங்களையும், நம்பிக்கையையும் இணைத்து, யோவான் கூறியுள்ள இறுதி வரிகள், இந்த நற்செய்தியில் கூறப்பட்டுள்ள அரும் அடையாளங்கள் அனைத்தும், மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க செய்யப்பட்டன என்ற கருத்துடன் நிறைவடைகிறது. வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன. (யோவான் 20:30-31)

இவ்விரு அரும் அடையாளங்கள் வழியே, படைக்கப்பட்ட பொருள்கள் மீதும், காலம், தூரம் ஆகியவற்றின் மீதும் இயேசுவுக்கு இருந்த சக்திகளை நாம் புரிந்துகொள்கிறோம். இயேசு, தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியப் புதுமையில், முதல் இரு சக்திகள் வெளிப்படுகின்றன.
முதலில் - படைக்கப்பட்ட பொருள்கள் மீது இயேசு கொண்டுள்ள அதிகாரம். மனிதன் என்ற நிலையில், இயற்கையின் அனைத்து விதிகளுக்கும் இயேசு உட்பட்டவர் என்றாலும், அந்த விதிகளை, தேவைப்பட்ட நேரத்தில் மாற்றுவதற்கும் அவரிடம் வல்லமை இருந்தது. எனவே, அவரால் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்ற முடிந்தது என்பதை, இப்புதுமையில் நாம் புரிந்துகொள்கிறோம்.

இரண்டாவது - காலத்தின்மீது இயேசு கொண்டிருந்த அதிகாரம். பொதுவாக, திராட்சை இரசத்தை உருவாக்க, பல ஆண்டுகள் தேவைப்படும். திராட்சை செடி நடப்படும் நேரம் துவங்கி, அது கொடியாக வளர்ந்து, கனி தந்து, அந்த கனிகளைக் கொண்டு, தரமான திராட்சை இரசத்தை உருவாக்க, குறைந்தது, 4 முதல், 40 ஆண்டுகள் வரையிலும் கூட ஆகலாம். ஆனால், கானா திருமணத்தில், இயேசு, உயர்தரமான திராட்சை இரசத்தை ஒரு நொடியில் உருவாக்கினார். 40 ஆண்டுகளில் உருவாகவேண்டிய உயர்தரமான திராட்சை இரசத்தை, ஒரு நொடியில் உருவாக்கியதால், காலத்தின் மீது இயேசுவுக்கு இருந்த அதிகாரம் தெளிவாகிறது.

அரச அலுவலர் மகனை இயேசு குணமாக்கிய இரண்டாவது அரும் அடையாளத்தின் வழியே, தூரத்தின் மீது அவர் கொண்டிருந்த சக்தி வெளியாகிறது. கப்பர்நாகும் ஊருக்கும், கானாவுக்கும் இடையே உள்ள 25 கி.மீ. தூரத்தை, இயேசுவின் வார்த்தைகள் கடந்து சென்றன. "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்று இயேசு கூறிய அந்த நொடியில் அலுவலரின் மகன் பிழைத்தெழுந்தான் என்பதை இப்புதுமையில் காண்கிறோம்.

இறுதியாக, இந்தப் புதுமை வழியே நாம் கற்றுக்கொள்ளக் கூடிய மிக முக்கியமான பாடம் ஒன்று உள்ளது. அதுதான், அரச அலுவலரிடம் படிப்படியாக வளர்ந்த நம்பிக்கை என்ற பாடம். அவரது நம்பிக்கையின் வளர்ச்சியை மூன்று படிகளாக நாம் புரிந்துகொள்ள முயல்வோம்.

தன் மகன் சாகும் நிலையிலிருந்ததால், அவனைக் குணமாக்கும் பல வழிகளை அரச அலுவலர், பதைபதைப்புடன், தீவிரமாக, துரிதமாகத் தேடிக்கொண்டிருந்தார். அவ்வேளையில், அவர், இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஒருவருக்கு, அந்த நீரில் மிதந்து வரும் எந்த ஒரு பொருளும், தன்னைக் காக்க வந்த படகு போலத் தெரியுமல்லவா? அத்தகைய நிலையில், இருந்த அரச அலுவலர், இயேசுவைப்பற்றிக் கேள்விப்படுகிறார். எருசலேமில், கானாவில் நிகழ்ந்த அரும் அடையாளங்களை நேரில் கண்டவர்கள், அந்த அலுவலரிடம் இயேசுவைப்பற்றி கூறியிருக்கலாம். அவர்கள் கூறியவற்றை நம்பி, அரச அலுவலர், கப்பர்நாகுமிலிருந்து கானாவுக்கு விரைந்து செல்கிறார். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை நம்பி, முயற்சிகளை மேற்கொள்வது, நம்பிக்கையின் முதல் படி.

அரச அலுவலர், கானாவில், இயேசுவைச் சந்தித்தவேளையில், இயேசு, புதுமைகள் எதையும், அவர் கண்முன் நிகழ்த்தவில்லை. இருப்பினும், இயேசுவைச் சந்தித்ததும், அரச அலுவலருக்கு நம்பிக்கை பிறந்திருக்கவேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரைக் கண்டதும், அவர் மீது நமக்கு உருவாகும் நல்லெண்ணங்கள், நம்பிக்கையின் இரண்டாவது படி.

இவ்விரு படிகளையும் அரச அலுவலர் கடந்திருந்தாலும், அவருடைய நம்பிக்கை இன்னும் அரைகுறையாகத்தான் இருந்தது. எனவேதான், அரச அலுவலர் இயேசுவை, தன்னுடன் கப்பர்நாகும் வந்து தன் மகனைக் குணமாக்கவேண்டும் என்று விண்ணப்பிக்கிறார். இயேசு நேரடியாக வந்தால் மட்டுமே தன் மகனுக்குக் குணம் கிடைக்கும் என்று அரச அலுவலர் நினைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பொதுவாக, குணமளிக்கும் புதுமைகளில், அப்புதுமையைச் செய்பவர், நோயுற்றவரைத் தொடவேண்டும், அல்லது, நோயுற்றவருக்கு முன் நின்று ஒரு மந்திரத்தைச் சொல்லவேண்டும், அல்லது, தன் சக்தி அடங்கிய ஒரு பொருளை அனுப்பி, அதை நோயாளி மீது வைக்கும்படி சொல்லவேண்டும். இவைகளே குணமாக்கும் வழிகள் என்பது, அன்றும், இன்றும் நிலவிவரும் பொதுவான நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில், அரச அலுவலர், இயேசுவை, தன் இல்லத்திற்கு வரும்படி அழைக்கிறார். அதுவும், அவர் விடுத்த வேண்டுதலில், அவசரமும், பரிதவிப்பும் கலந்து ஒலிக்கின்றன: "ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்" (யோவான் 4:49) என்று இயேசுவை வற்புறுத்தி அழைக்கிறார்.

பொதுவாக, தன்னை நாடி வருபவர்கள் கேட்பதை, கேட்டபடியே செய்வது இயேசுவின் வழக்கம். அரச அலுவலர் அவரது வீட்டுக்கு வரும்படி இயேசுவை அழைத்தபோது, அவருடன் செல்லாமல், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்று சொல்லி அனுப்புகிறார். இங்கு, நாம் அரச அலுவலரின் நம்பிக்கையில் உருவாகும் மூன்றாவது படியைக் காணலாம். முன்பின் அறிமுகம் இல்லாத இயேசு தன்னிடம் கூறியச் சொற்களை நம்பி அரச அலுவலர் தன் இல்லம் திரும்புகிறார். இது, நம்பிக்கையின் மிக உயர்ந்த நிலை.
கானா திருமண விருந்தில், இயேசுவை முன்பின் பார்த்திராத பணியாளர்கள், அவர் சொற்களைக் கேட்டு, முழுமனதுடன், தொட்டிகளை, விளிம்புவரை தண்ணீரால் நிரப்பியபோது, அந்த தண்ணீர், திராட்சை இரசமாக மாறியது. அதேபோல், இயேசுவை முன்பின் பார்த்திராத அரச அலுவலர், "நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்" என்று இயேசு சொன்னதை நம்பி புறப்பட்ட அந்த நொடியில், அவரது மகன் நலமடைந்தான்.
இயேசுவின் சொற்கள் புதுமைகளை ஆற்றும் வல்லமை கொண்டது என்பதை நம்பிய பணியாளர்களும், அரச அலுவலரும், நமக்கு, நம்பிக்கை பாடங்களைச் சொல்லித் தருவார்களாக.


22 April, 2018

The courage to follow the Good Shepherd நல்லாயனின் பின் செல்லும் துணிவு

Three Priests on board the Titanic

4th Sunday of Easter – Good Shepherd Sunday

A recent headline (April 18, 2018) from the BBC website caught my attention: Autistic teen's Lego Titanic replica on display in US. Here are some excerpts from this news: A 26ft-long (8m) Lego cube model of the Titanic built by an autistic boy from Iceland has been unveiled at a Tennessee museum. Brynjar Karl Birgisson, 15, used actual blueprints of the doomed ship to decide how many Lego bricks it would require. The massive model ship took him over 700 hours and more than 65,000 Lego bricks to assemble.
Mr Birgisson says the model, which has travelled across Europe, helped him with his condition. "The whole journey has helped me out of my autistic fog," said Mr Birgisson, who built the ship when he was 10 years old. "I've trained myself to be 'as normal as possible', whatever normal means." (Source: BBC)

Although ‘Titanic’ sank more than one hundred years ago, (April 15, 1912) it still floats across the imagination of many. The word ‘titanic’ originally means ‘of exceptional strength, size, or power’. Based on this meaning, the ship ‘Titanic’ set sail from Southampton, England, with an aura of ‘unsinkable assurance’. Four days after leaving Southampton, Titanic collided with an iceberg and sank in the North Atlantic Sea.
Although this tragedy leaves us with lots of questions, quite a few remarkable incidents of courage and sacrifice that emerged on board, leaves us also with a sense of admiration and wonder. One of them is about three priests – Fathers Thomas Byles, Juozas Montvila, and Joseph Benedikt Peruschitz. These three priests declined the offer of getting into the life-boats and stayed on with the people, stranded on the ship, offering them final absolution and praying with them as the ship plunged into the icy waters of the Atlantic. The bodies of the three priests were never recovered.

Born as the eldest of seven children of a Congregationalist minister, Fr Thomas Byles converted to Catholicism. Ordained a priest in 1902, he was assigned to be the parish priest at Saint Helen’s in Ongar, Essex in 1905.  The parish was poor and had few parishioners, but Father Byles was devoted to them and served them generously until 1912 when he left for New York, to bless the wedding of his brother (who also converted to Catholicism).
Father Juozas Montvila was a 27 year old priest from Lithuania fleeing Tsarist oppression.  He had been ministering to Ukrainian Catholics and he had been forbidden to do so any longer by the Tsarist regime that was attempting to force Eastern Rite Catholics into the Russian Orthodox Church. Father Montvila planned to serve the numerous Ukrainian Catholic immigrants in the United States.
Father Joseph Benedikt Peruschitz was a 41 year old Catholic priest from Germany. He was on his way to join the faculty at Saint John’s Abbey in Collegeville, Minnesota. Although all the three priests set out with ‘private missions’, they joined hands in the common mission of becoming shepherds of the abandoned people on board the Titanic.

Father Byles did not view his trip on the Titanic as a vacation from his priestly duties. He spent Saturday April 13, hearing confessions, and on Sunday April 14, he said two masses for the second and third class passengers. When the Titanic struck the iceberg, Father Byles was walking on the upper deck reading his breviary. He immediately sprang into action. He assisted many third class passengers up to the boat deck and onto the life boats. As the ship was sinking, he said the rosary and heard confessions. Near the end, he gave absolution to more than a hundred passengers trapped on the stern of the ship after all the lifeboats had been launched.
Like Father Byles, Fathers Montvila and Peruschitz went among the passengers, praying with all, Catholic and non-Catholic, and granting absolution. Also like Father Byles they were offered seats in the lifeboats and declined them, realizing that the place for a priest was on board the Titanic with those who were about to die. Like the good shepherd described by Jesus in today’s Gospel (John 10: 11), all the three laid down their lives for the sheep. A stained-glass window placed in the church of St Helen as a memorial to its former Parish Priest, Fr Byles, depicts Christ the Good Shepherd.

When the Centenary of the sinking of the Titanic was commemorated in 2012, it reopened some of the ‘wounds’ in our collective consciousness. One of them being, the pride of the owners that their ship can never be sunk. Due to this pride, they did not stack up life-saving equipments for all those on board. Life boats and life vests only for 700 were carried on the ship, in which more than 2,200 persons travelled. The pride that declared that Titanic was ‘unsinkable’ sank to the bottom of the Atlantic, dragging along with it, the life of more than 1,500.
This year marks another centenary of another tragedy, namely, the I World War. Since that war lasted four years, (1914 to 1918), this year marks the final year of these commemorative years. Centenary commemoration of the First World War, once again, brought to our minds the ‘senseless’ massacre of hundreds of thousands of lives due to the pride and selfishness of some leaders.

Many leaders who have been the cause of many massacres, and battles have not been the victims… Only innocent people have died in millions. These leaders have crowded the pages of past history as well as the present. These selfish megalomaniacs have been referred to as ‘thieves and hirelings’ by Jesus in today’s Gospel (John 10: 10, 12-13).

The recent explosion of rage in India over the rape and murder of 8 year old Asifa Bano, brings to mind these ‘thieves and hirelings’. In this case, the ‘shepherds’ themselves (those who play responsible roles in society) became ravenous ‘wolves’. It is sickening to talk about this atrocity done to Asifa. But, talk we must, since this is a clear instance to showcase how ‘bad shepherds’ turn into ‘wolves’.
One of the accused in Asifa’s case, is a 60 plus years old person who is the custodian (or priest) of a temple. He had made use of the temple for this atrocity. What can be more sickening than this! At least one of these accused is a police inspector. A temple priest and a police officer, who are usually considered as ‘shepherds’ to protect the sheep, have become wolves. What is more disturbing is the fact that one of those accused is a young man of 19 years (first reported as 15 years old). What type of a society will such young men create, is anyone’s guess, rather, nightmare!

We tend to point fingers at others and then… walk away, feeling good. We do this more often when political and religious leaders are on the other side of our pointing finger! Every time we do this, we are also brought to realise the hard truth that there are other fingers pointing towards us. These fingers pointing towards us tell us that these ‘wolves’, did not drop down from the skies all on a sudden. They have been part of a family, a school and a community. Hence, these leaders have been formed by parents, elders, teachers, and friends like us. As we look around in families and other circles of influence, we find that there are ‘true shepherds’ as well as ‘thieves and hirelings’. The more the latter, the larger the risk for the future generations!

In this context, we need to talk about a video that did the rounds in the social media three years ago. It is about a small girl handling a real machine gun! Here is an extract from the news that appeared on BBC on this disturbing video:
The small Kurdish girl pictured firing a huge machine gun
The girl looks about six or seven years old. She chats away with an off-camera adult, possibly her father, who asks her how many Islamic State fighters she has killed. "Four hundred!" she says, speaking in a Kurdish dialect. Then the little girl leans over a machine gun bigger than she is, and using both hands, she fires away into the distance. As the shots echo across the desert, the man behind the camera eggs her on: "Kill! Kill!" (Source: BBC)

If the off-screen voice in this video belongs to the father of the child, it is really a tragedy! Most of the leaders we have spoken of in today’s reflections may have been fed with the ‘poison of hatred’ in their childhood, by those very close to them – namely, parents, teachers and friends. If only our families can become nurseries where love and forgiveness are planted and nurtured, we can resolve all the problems we face.

As we celebrate the Good Shepherd Sunday, the Church invites us to celebrate the 55th World Day of Prayer for Vocations. On this day, as has been his custom, Pope Francis is ordaining 16 Deacons as Priests. We pray that these 16 Priests as well as many other Priests to be ordained in the coming days and weeks, follow the Good Shepherd as their only model.
We are aware that the moths of April and May are crucial for young men and women to chalk out their future plans in terms of further studies, job, life-partner etc. We are also aware that some of these young men and women wish to follow the call of God to serve the people as Religious and Priests. We bring all the young men and women to the loving embrace of God so that they can be guided well in their decision-making process!

Let me close with a moving, up-lifting real-life incident that shows a priest who, true to his vocation, acts as a true shepherd on a battlefield: A soldier dying on a Korean battle field asked for a priest. The Medic could not find one. A wounded man lying nearby heard the request and said, “I am a priest.” The Medic turned to the speaker and saw his condition, which was as bad as that of the other. “It will kill you if you move,” he warned. But the wounded chaplain replied. “The eternal life of a man’s soul is worth more than a few hours of my life.” He then crawled to the dying soldier, heard his confession, gave him absolution and the two died peacefully.
Brynjar Karl Birgisson - Builder, Titanic Replica in Lego

உயிர்ப்புக்காலம் 4ம் ஞாயிறு நல்லாயன் ஞாயிறு

நான்கு நாட்களுக்கு முன், (ஏப்ரல் 18, 2018) பிபிசி ஊடகத்தில் வெளியான செய்தி இது. ஐஸ்லாந்தைச் சேர்ந்த பிரைன்ஜர் கார்ல் பிர்கிஸ்ஸன் (Brynjar Karl Birgisson) என்ற 15 வயது இளையவர், 'லெகோ' (Lego) என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் துண்டுகளைக் கொண்டு, 'டைட்டானிக்' (Titanic) கப்பலின் வடிவத்தை உருவாக்கியுள்ளார். 65,000த்திற்கும் அதிகமான 'லெகோ' துண்டுகளைக் கொண்டு 26 அடி நீளத்திற்கு, அவர் இந்தக் கப்பலை உருவாக்கியுள்ளார். இதைச் செய்து முடிக்க, அவருக்கு, மொத்தத்தில், 700 மணி நேரங்களுக்கு மேல் ஆயிற்று என்று கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, அவர், சிறுக, சிறுக உருவாக்கிய இந்தக் கப்பல் வடிவம், தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இந்தக் கப்பலை உருவாக்கிய இளையவர் பிரைன்ஜர் அவர்கள், 'ஆட்டிசம்' எனப்படும் மாற்றுத்திறன் கொண்டவர். "என்னைச் சூழ்ந்திருக்கும் 'ஆட்டிசம்' என்ற மூடுபனியை விட்டு நான் வெளியேறுவதற்கு, 'டைட்டானிக்' கப்பல் கட்டும் முயற்சி எனக்குப் பெரும் உதவியாக இருந்தது" என்று அவர் கூறியுள்ளார். 'டைட்டானிக்' கப்பல், கடலில் மூழ்கி, 100 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இருந்தாலும், அக்கப்பல் இன்னும் பலரது கற்பனைக் கடலில் மிதந்து வருகிறது. அக்கப்பலைப் பற்றிய விவரங்களும், கதைகளும் இன்னும் நம்மை ஈர்த்து வருகின்றன.

"எதுவும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது" என்ற ஆணவ அறிக்கையுடன், 1912ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ம் தேதி புறப்பட்ட 'டைட்டானிக்' கப்பல், ஏப்ரல் 15ம் தேதி, அட்லான்டிக் கடலில், ஒரு பனிப்பாறை மீது மோதி, இரு துண்டுகளாகப் பிளந்து, கடலில் மூழ்கியது. அக்கப்பலின் வீழ்ச்சி, மனித ஆணவத்திற்கு விழுந்த மரண அடி. ஆனால், 'டைட்டானிக்' மூழ்கிய நேரத்தில் நிகழ்ந்த வீரச் செயல்கள், மனிதத் தியாகத்தை உயர்த்திப் பிடிக்கும் தீபங்களாக ஒளி வீசுகின்றன. அந்த தியாகத் தீபங்களில் மூன்று, Thomas Byles, Benedikt Peruschitz, Juozas Montvila, என்ற மூன்று அருள் பணியாளர்களைப் பற்றியவை.
எந்த சக்தியாலும் இந்தக் கப்பலை அழிக்கமுடியாது என்ற அகந்தையுடன் 'டைட்டானிக்' பயணித்ததால், 2200க்கும் மேற்பட்ட பயணிகளையும், பணியாளர்களையும் ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல், 700 பேர் தப்பிக்கத் தேவையான உயிர் காக்கும் படகுகளை மட்டும் சுமந்து சென்றது. எனவே, அது மூழ்கும் நிலையில் இருந்தபோது, 700 பேருக்கு மட்டுமே தப்பித்துச் செல்லும் உதவிகள் வழங்கப்பட்டன. ஏனைய 1500க்கும் மேற்பட்டோர், பனிப்பாறைகள் நிறைந்த கடலில் மூழ்கி, இறக்கும் வண்ணம் கைவிடப்பட்டனர்.
உயிர்காக்கும் படகுகளில் தப்பித்துச்செல்ல, இம்மூன்று அருள் பணியாளர்களுக்கும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. அவற்றை மறுத்துவிட்டு, மரணத்தை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கியபடி, அம்மக்களுடன் இணைந்து செபித்தபடி, அம்மூவரும் கடலில் மூழ்கி இறந்தனர். இந்த விபத்தைக் குறித்து எழுதப்பட்ட வரலாற்றில், இவர்களது பெயர்கள் பெரிதாகப் பேசப்படவில்லை; இவர்களது உடல்களும் மீட்கப்படவில்லை. ஆனால், இவர்களது இறுதிநேர ஆன்மீகப் பணிகளைக் கண்ட பலரும், அவர்கள் தலைமுறையினரும் இவர்களை, பெருமையுடன், நன்றியுடன், இன்றும் எண்ணி வருகின்றனர். இன்று நாம் கொண்டாடும் நல்லாயன் ஞாயிறன்று, இந்த மூன்று அருள்பணியாளர்களைப்பற்றி சிந்திப்பது பயனளிக்கும்.

ஆங்கிலிக்கன் சபையில் பிறந்த Thomas Byles அவர்கள், தன் 24வது வயதில் கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்து, 32வது வயதில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். தன்னைத்தொடர்ந்து, கத்தோலிக்கத் திருஅவையில் இணைந்த தன் தம்பியின் திருமணத் திருப்பலியை நிகழ்த்த, அருள்பணி Byles அவர்கள், நியூ யார்க் நகர் நோக்கி பயணம் செய்தார். அருள்பணி Peruschitz அவர்கள், புனித பெனடிக்ட் துறவுச் சபையைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவின் Minnesota  மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்க, கப்பலில் சென்று கொண்டிருந்தார்.
டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முந்தின நாள், ஏப்ரல் 14, ஞாயிறன்று, அருள்பணி Byles அவர்களும், அருள்பணி Peruschitz அவர்களும், கப்பலில் பயணித்த கத்தோலிக்கர்களுக்கு, ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றினர்.
இம்மூன்று அருள் பணியாளர்களில் இளையவரான அருள்பணி Juozas Montvila அவர்களின் வயது 27. லித்துவேனியா நாட்டில் பிறந்த இவர், தன் 23வது வயதில் கீழைவழிபாட்டுமுறை திருஅவையில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இரஷ்ய அரசின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டிருந்த கத்தோலிக்கர்களுக்கு, இரகசியமாக அருள்பணி புரிந்துவந்த இவர், அமேரிக்கா சென்று, இன்னும் சற்று சுதந்திரமாக தன் அருள்பணிகளைத் தொடரும் நோக்கத்துடன் கப்பலில் புறப்பட்டார்.

இம்மூவரின் வாழ்விலும் நல்லாயன் இயேசுவின் பண்புகள் வெளிப்பட்டதை உணர்கிறோம். அச்சுறுத்தும் ஓநாயாக அரசின் அடக்குமுறைகள் சூழ்ந்தாலும், தன் ஆடுகளுக்குத் தேவையான ஆன்மீக உதவிகள் செய்த அருள்பணி Montvila அவர்கள், வேற்றுநாட்டில் சுதந்திரமாகப் பணியாற்றலாம் என்ற எண்ணத்துடன் கப்பல் பயணத்தை மேற்கொண்டார். இளையோரை நல்வழிப்படுத்தும் கல்விப்பணியை மேற்கொள்ள, கடல் பயணம் மேற்கொண்டவர், அருள்பணி Peruschitz அவர்கள். இங்கிலாந்தின் Essex பகுதியில், St Helen என்ற கோவிலில், 10 ஆண்டுகளாக பங்குத்தந்தையாகப் பணியாற்றிவந்த அருள்பணி Byles அவர்கள், தன் தம்பியின் திருமணத்தை முன்னின்று நடத்த, சென்று கொண்டிருந்தார்.
இவ்விதம், தனிப்பட்டத் திட்டங்களுடன் புறப்பட்ட இம்மூவரும், ஆபத்து சூழ்ந்த நேரத்தில், தங்கள் உயிரைக் காத்துக்கொள்வதிலும், தங்கள் பயணத் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் கருத்தாய் இருந்திருந்தால், உயிர்காக்கும் படகுகளில் ஏறியிருப்பர். ஆனால், இவர்கள் அந்த வாய்ப்பை புறந்தள்ளிவிட்டு, இறைமக்களான ஆடுகளுக்காக தங்கள் உயிரையும் வழங்கத் துணிந்தனர்.
இம்மூவரையும் புனிதர்களாக உயர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாலும், இம்மூவரும் மக்களால் ஏற்கனவே புனிதர்களென போற்றப்படுகின்றனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. திருத்தந்தை புனித 10ம் பயஸ் அவர்கள், அருள்பணி Byles அவர்களின் மரணத்தைப்பற்றி கேள்விப்பட்டபோது, அது ஒரு மறைசாட்சிய மரணம் என்று குறிப்பிட்டார். அருள்பணி Byles அவர்கள், பங்குத் தந்தையாகப் பணிபுரிந்து வந்த St Helen கோவிலில் இவர் நினைவாக உருவாக்கப்பட்ட ஒரு வண்ணக்கண்ணாடி சன்னலில் (Stained-glass window) பொறிக்கப்பட்டுள்ள உருவம் என்ன தெரியுமா? நல்லாயனாம் இயேசுவின் உருவம்.

1912ம் ஆண்டு, 'டைட்டானிக்' கப்பல் மூழ்கியதன் நூற்றாண்டு நினைவை 2012ம் ஆண்டு, கடைபிடித்தபோது, இக்கப்பலை உருவாக்கியவர்களின் ஆணவம், 1500க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கியது என்ற எண்ணம், நம்மை காயப்படுத்தியது. 1914ம் ஆண்டு துவங்கி, 1918ம் ஆண்டு முடிய நடைபெற்ற முதல் உலகப்போரின் நூற்றாண்டு நினைவுகள் 2014ம் ஆண்டு முதல், இவ்வாண்டு முடிய ஆங்காங்கே கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு முறையும் நூற்றாண்டு நினைவுகள் கொண்டாடப்படும்போது, வரலாற்றுக் காயங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இலட்சக்கணக்கில் நிகழ்ந்த உயிர்ப்பலிகள், வரலாற்றுப் புள்ளிவிவரங்களாக, இன்று நம்மிடையே பயன்படுகின்றன. இந்த உயிர்ப்பலிகளுக்குக் காரணமாக இருந்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள், இந்த மனித வேட்டையில் உயிரிழந்ததாக வரலாறு சொல்லவில்லை.

அகந்தை, தன்னலம், பேராசை, பழிவாங்கும் வெறி ஆகியத் தனிமனிதத் தீமைகளுக்குக் கொள்கை என்ற பெயர் சூட்டி, அக்கொள்கைகளுக்காக, மக்களைப் பலி கொடுக்கும் தலைவர்கள், மனித வரலாற்றின் பக்கங்களை, அன்றும், இன்றும் நிரப்பி வருகின்றனர். இத்தகையத் தலைவர்களை, 'கூலிக்கு மேய்ப்பவர்' என்று, இன்றைய நற்செய்தியில் இயேசு குறிப்பிடுகிறார். "நல்ல ஆயர், ஆடுகளுக்காக தம் உயிரைக் கொடுப்பார்... கூலிக்கு மேய்ப்பவர், ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார்" (யோவான் 10: 11-12).
கூலிக்கு மேய்ப்பவர் ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகும் அவலத்தையாவது ஓரளவு சகித்துக்கொள்ளலாம். ஆனால், இன்று, ஆடுகளைக் காப்பதாக மேடைகளில் முழங்கிவிட்டு, தலைவர்களாகப் பொறுப்பேற்ற பிறகு, தங்களை நம்பி பின்தொடரும் ஆடுகளை வேட்டையாடும் ஓநாய்களாக தலைவர்கள் மாறுவதை, நாம் உலகெங்கும் சந்தித்து வருகிறோம். ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பவர் நல்ல ஆயர் என்று இயேசு கூறியதற்கு நேர் எதிர் துருவமாக, ஆடுகளின் உயிர்களை பறிக்கும் ஓநாய்கள், தலைவர்களாக பொறுப்பேற்றுள்ளது, இன்று நாம் சந்திக்கும் வேதனையான உண்மை.

கால்நடைகளை மேய்க்கும் நாடோடி இனத்தைச் சேர்ந்த அசிஃபா பானோ (Asifa Bano) என்ற 8 வயது சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் ஒருவர், ஒரு கோவிலின் நிர்வாகியாக இருந்ததால், அக்கோவிலிலேயே இந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில், நால்வர், காவல்துறையைச் சேர்ந்தவர்கள். மேலும், இவர்களில் ஒருவர், 19 வயதான இளையவர் என்பதை அறியும்போது, நம் மனம் பதைபதைக்கிறது. தங்கள் தலைவர்கள், இப்போது ஓநாய்களாக மாறி, அப்பாவி ஆடுகளை வேட்டையாடுவதையும், வேட்டையாடியபின், எவ்வித தண்டனையும் பெறாமல், வெற்றிக் களிப்புடன் சுற்றிவருவதையும் காணும் அடுத்தத் தலைமுறையினர், எவ்வித சமுதாயத்தை உருவாக்கப் போகின்றனரோ என்பதை எண்ணி, மனம் அஞ்சி நடுங்குகிறது.

சமுதாயத்தையும், தலைவர்களையும் குறை கூறிவிட்டு, அத்துடன் நம் கடமை முடிந்ததென்று ஒதுங்கிப்போவது, பழகிப்போன பொழுதுபோக்காக நமக்கு மாறிவிட்டதோ என்று கவலைப்பட வேண்டியுள்ளது. ஓநாய்களாக மாறும் தலைவர்கள் எங்கிருந்து உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்யும்போது, அங்கு, குற்றவாளிக் கூண்டில் நாம் ஒவ்வொருவரும் நிற்கவேண்டியுள்ளது. இந்த ஓநாய்கள், ஏதோ ஒரு குடும்பத்திலிருந்துதானே உருவாகியிருக்கவேண்டும்! குடும்பங்களில் ஓநாய்கள் எவ்விதம் உருவாகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள, சமூக வலைத்தளத்தில் பதிவாகியிருந்த ஒரு காணொளியை ஆய்வு செய்வோம்.
வலைத்தளங்கள் வழியே அவ்வப்போது பகிரப்படும் செய்திகள், காணொளிகள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கின்றன. அவற்றில் ஒன்று இது... ஈராக் நாட்டின் குர்திஷ் (Kurdish) இனத்தைச் சேர்ந்த, 6 அல்லது 7 வயதே நிறைந்த ஒரு சிறுமி, ஒரு பாலை நிலத்தில் எதையோ குறிபார்த்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் பயன்படுத்துவது, விளையாட்டுத் துப்பாக்கி அல்ல, Machine gun எனப்படும் உண்மையான துப்பாக்கி. இந்தக் காணொளியைப் படமாக்கியவர், அச்சிறுமியின் தந்தை என்பது ஊடகங்களின் கணிப்பு. வீடியோ காமிராவை இயக்கிக் கொண்டிருந்த அவர், சிறுமியிடம், "நீ இன்று எத்தனை ISIS தீவிரவாதிகளைக் கொன்றாய்?" என்று கேட்க, அச்சிறுமி காமிரா பக்கம் திரும்பி, தன் பிஞ்சு விரல்களை காட்டி, கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன், "400 பேர்" என்று கூறுகிறாள். தொடர்ந்து அச்சிறுமியிடம், "கொல், அவர்களைக் கொல்" என்று அக்குரல் கூற, சிறுமியும் தொடர்ந்து சுடுகிறாள்.

நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும் இந்த வீடியோ, இன்றைய உலகின் வன்முறைகளுக்கு ஒருவகையில் பதில் தருகிறது. பிஞ்சு மனங்களில் வெறுப்பு என்ற நஞ்சைக் கலந்து ஊட்டுவது, குழந்தைகளுக்கு மிக நெருங்கியவர்களான பெற்றோரும், உற்றாரும் என்ற உண்மை, நம் அனைவரையும் குற்ற உணர்வோடு தலைகுனிந்து நிற்கச்செய்கிறது. நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடும் இன்று, நாம் ஒவ்வொருவரும், நம் குடும்பங்களில், நாம் வாழும் சூழல்களில், மற்றவர்களை நல்வழியில் நடத்தும் வழிகாட்டிகளாக, நல்ல மேய்ப்பர்களாக வாழ்கிறோமா என்ற ஆன்மத் தேடலை மேற்கொள்வோம்.

நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளையும் திருஅவை சிறப்பிக்கிறது. ஏப்ரல் 22, இஞ்ஞாயிறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் 16 தியாக்கோன்களை அருள்பணியாளர்களாக திருப்பொழிவு செய்கிறார். இதேவண்ணம், உலகெங்கும், ஏப்ரல், மே மாதங்களில், இளையோர் பலர் அருள்பணியாளர்களாக திருப்பொழிவு பெறுகின்றனர். இவர்கள் அனைவரும், நல்லாயனாம் இயேசுவைப்போல, மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட நல்ல மேய்ப்பர்களாக வாழவேண்டும் என்று செபிப்போம்.

ஏப்ரல், மே மாதங்கள், முடிவுகள் எடுக்கும் நேரம். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை, இன்று, சிறப்பாக, இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசுவின் அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை, இறைவன் வழிநடத்த வேண்டுமென்று, நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளன்று மன்றாடுவோம்.