29 December, 2018

Growing-up pains of the Holy Family திருக்குடும்பம் – வளர்ப்பு வலிகள்


Jesus in Jerusalem temple with the Elders

The Feast of the Holy Family

Norman Vincent Peale, a great preacher and the author of many inspiring books, including the famous ‘The Power of Positive Thinking’, reflects on Christmas in these words: "Christmas waves a magic wand over this world, and behold, everything is softer and more beautiful."
Christmas, this year, is less beautiful and less magical because of the natural disasters faced by India and Sri Lanka – the floods of Kerala in August, the ‘Gaja’ tempest that devastated Tamil Nadu and the recent floods in Sri Lanka. Added to these natural disasters, human beings, in particular, the selfish politicians, have piled up more agonies on poor people, especially the farmers, many of whom have committed suicide.
In every disaster, be it a natural or human-made, it is the family that suffers the most. While we can easily find friends to celebrate an achievement, it is the family that we turn to while we are in tears; when we need a shoulder to lean on. We have come to celebrate ‘family’ today. It is quite fitting that the Church has allotted the Sunday after Christmas for the Feast of the Holy Family.
We shall share our reflections along two lines:
  • The ‘history’ behind the Feast of the Holy Family.
  • The challenges faced by the Holy Family.

The History: The feast of the Holy Family was more of a private devotion popularised by some religious congregations for many centuries. The Church made this feast more ‘official’ in the year 1921. The reason behind such a move, as we can see, was the First World War. This war was over in 1918. As in the case of every disaster, the major casualty of this war was the family. The tragic death of dear ones killed on the warfront, orphaned children, destroyed ‘homes’…This list would be endless. We lose more and gain almost nothing from any war. It is a pity that human beings have refused to learn this simple truth: NOBODY wins NOTHING from NO WAR… (Pardon my English! This is my way of stressing how senseless war is!) Wishing to infuse some hope in the hearts of people devastated by this war, the Church officially integrated the Feast of the Holy Family in the liturgical cycle.

The feast of the Holy Family as we have today is a gift of the Second Vatican Council which took place in the 60s. What was so special about the 60s? Although there was no major political war, people had to face other types of wars. The world was experiencing quite a few changes. One of the major crises was the ‘rebellion’ of the youth. Young people were very disillusioned with the way the world was shaping up. Some of them tried to set things right; many others tried to ‘escape’ reality, since it was too hard to face. Many of them sought peace and love outside families. The Church, in an attempt to restore family as the locus of a healthy human and Christian life, included the Feast of the Holy Family as part of the octave of Christmas – the Sunday after Christmas.

The Feast of Christmas and the Feast of the Holy Family are wrapped in holy light and placed on our altars. Our Christmas story is very much ‘sanitized’! Hence, many of us miss out on the ‘unholy events’ and the pain that surrounded the first Christmas and the Holy Family. What was the original Christmas like? Lot more stark, horrible, horrifying realties stared Mary, Joseph and Jesus – right in their eyes. It is surely good to celebrate Christmas in such colourful, glorious, holy ways. But we also need to think of the first Christmas in its original colour. Was there any colour at all, we wonder!

The Challenges: Let us reflect on the Holy Family from this ‘colourless’ black-and-white perspective. The original Holy Family was not all the time praying, singing praises to God, sharing pleasantries to one another. They had to face their share of challenges. One such challenge is given in today’s gospel, in the form of the 12 year old Jesus getting lost in Jerusalem. - Luke 2: 41-52

When a newborn arrives in a family, lot of changes and adjustments are required, especially for the parents and more especially for the mother. She needs to change her daily schedule according to the schedule of the babe, especially her sleeping hours. As the baby grows up, many more changes are demanded of the parents. These changes are mostly physical. When the child steps into his/her teens, once again, lot more demands are made on the parents in terms of changes in perspective. Coming of age is a moment of celebration in many cultures. It is also a time of concern. The shift from childhood to adolescence is well described by Fr Ernest Munachi in his homily: You know your boy is growing up when he stops asking where he came from and begins to not tell you where he is going.

All of us know that teen is a very challenging time for the boy or girl growing up as well as for the parents. Those who are stepping into the portals of adulthood would indicate a few / some / all of the following directly and indirectly:
  • That they need to be paid their due respect.
  • That they should not be asked too many questions.
  • That they have a right to experiment with life, even if that means breaking a few ‘do’s and ‘don’t’s… especially, the don’ts.

Jesus is brought to Jerusalem since he has ‘come of age’ according to the Jewish custom. Jesus stays back in Jerusalem to attend a scripture session with the scholars. Wow, that’s wonderful… Please don’t rush in with your compliments. This was not wonderful for Mary and Joseph. They had to endure two days of torture. They knew that the city of Jerusalem, during the festival days, had taken a heavy toll on families. Many youngsters simply vanished during those days and resurfaced in a revolutionary group many years later. Many others were captured by Roman soldiers without reason or rhyme. Some of those parents would have ‘met’ their sons on the cross outside the walls of Jerusalem after many years. All those and many other horrible thoughts would have rushed through the minds of Joseph and Mary. That’s why I asked you not to rush in with your compliments for Jesus staying back in Jerusalem. A ‘sanitized perspective’ of the Holy Family may not allow us to see all these stark realities.

Both Joseph and Mary must have gone back to Jerusalem wondering where to look for their son in the great city and in the midst of a festive crowd? Fortunately, both knew that their child was special. They had also seen his preferences. Led by their instincts, they went to the Temple. Their instincts were right. He was there in the Templesitting among the teachers, listening to them and asking them questions’.

What would you and I have done in such a situation? We would have rushed in; would have apologised to the elders for our son being a bit impetuous; taken our son out and given him a piece of our minds… Well, we could learn some lessons from Mary and Joseph. They waited for the session to get over. The mother then opens her heart out to her son. He seems to respond in a very cold way, trying to tell them that he has come of age. Such a cold response would have hurt Mary. The gospel says that both Mary and Joseph did not understand this. Don’t we hear an echo of what we have whispered or said aloud in our families – not able to understand what was happening to our teenage son or daughter? Joseph and Mary did face the challenge of not being able to understand Jesus. The very next line has this lovely statement: But his mother treasured all these things in her heart. I am sure Joseph too would have done the same!

Here again there is a lesson for us: Even if we don’t understand our children who are growing up, even if we don’t understand what they are trying to say or not say, we need to treasure them and their said or unsaid statements in our hearts. Not easy, but necessary!

The event of Jesus getting lost in Jerusalem brings to mind some of the unfortunate people. I am thinking of parents who have lost their children in a festival and the children who have lost their parents in crowds. I am thinking of the hardcore criminals who kidnap children lost in such festivals and turn them into beggars or peddlers of drugs. Jesus was raised in the small town of Nazareth. He comes to the city and gets lost.
So many young men and women, leaving their villages and reaching the ‘concrete jungle’ called a city, get lost in so many ways! Spare a thought for the parents who have lost their sons or daughters in the wilderness called a city!
All of them (including the heartless thugs who kidnap children) require our prayers.

Here are some parting thoughts: We began our reflection with the natural disasters suffered by families. On December 22, there was an eruption of a volcano in one of the islands in Indonesia which resulted in a tsunami, claiming more than 400 lives and thousands of injured and lost persons. This brings to memory the powerful earthquake that took place in Indonesia on the Feast of the Holy Family (December 26, Sunday) in 2004 and the resultant tsunami that swept away more than 2,27,000 lives in various Asian countries.
Let us offer all the families who have lost their near and dear ones in this recent tsunami as well as all the natural and human-made tragedies of 2018! We also pray for families suffering under eruption of emotional volcanoes and tsunamis! May the Holy Family help these families to find solace and peace in family support.

Josph and Jesus in Nazareth

 திருக்குடும்பத் திருவிழா

"நேர்மறையாய் சிந்திப்பதால் விளையும் சக்தி" - ("The Power of Positive Thinking") என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர், நார்மன் வின்சென்ட் பீல் (Norman Vincent Peale)  என்ற மறைபோதகர். கிறிஸ்து பிறப்பு விழாவைக் குறித்து இவர் எழுதியுள்ள ஓர் அழகிய உருவகம், இன்றைய நம் சிந்தனைகளைத் துவக்கி வைக்கிறது. "உலகத்தின் மீது வீசப்படும் ஒரு மந்திரக்கோல் போல் கிறிஸ்மஸ் விழா வருகிறது. இந்த மந்திரக்கோல் வீசப்பட்டதும், அனைத்தும், இன்னும் மென்மையாக, இன்னும் அழகாக, மாறிவிடுகின்றன" (“Christmas waves a magic wand over this world, and behold, everything is softer and more beautiful.”) என்று வின்சென்ட் பீல் அவர்கள் கூறியுள்ளார்.
கிறிஸ்மஸ் விழா என்ற மந்திரக்கோல் உருவாக்கும் மென்மை உணர்வுகளையும், அழகையும், உணரமுடியாத வகையில், நாம் கடந்துவந்துள்ள 2018ம் ஆண்டில், இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன. நவம்பர் மாதம், தமிழ்நாட்டைத் தாக்கிய கஜா புயல், ஆகஸ்ட் மாதம், கேரளாவைத் தாக்கிய பெருமழை, வெள்ளம், டிசம்பர் மாதம் இலங்கையைச் சூழ்ந்த மழை, வெள்ளம் ஆகியவை, கிறிஸ்மஸ் விழாவின் மந்திரச் சக்தியைக் குறைத்துள்ளன என்பதை உணர்கிறோம்.

இயற்கைப் பேரிடர்கள் உருவாக்கும் அழிவுகள் போதாதென்று, மனிதர்கள், குறிப்பாக, மனசாட்சியற்ற அரசியல்வாதிகள் உருவாக்கும் அழிவுகள் உலகின் பல நாடுகளில், எளிய மக்களின் வாழ்வை நிலைகுலையச் செய்துள்ளன. இயற்கைச் சீற்றங்களானாலும் சரி, அரசியல் அராஜகங்களானாலும் சரி, இவற்றில் பெரிதும் பாதிக்கப்படுவது, குடும்பங்களே. கொண்டாட்டங்கள் என்றதும் கூடிவரும் கூட்டம், திண்டாட்டம் என்றதும் விலகிச் செல்வது பொதுவாக நிகழும் எதார்த்தம். கொண்டாட்டமாயினும், திண்டாட்டமாயினும் நமக்கு உறுதுணையாக நிற்பது, நம் குடும்பங்களே.
இந்த உண்மையை நாம் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தொடரும் இந்த விழாக்காலத்தில், குடும்பங்களைக் கொண்டாடவேண்டும் என்று அன்னையாம் திருஅவை விழைகிறார். கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத் திருவிழாவாகக் கொண்டாட, அன்னையாம் திருஅவை நம்மை அழைக்கிறார்.

திருக்குடும்பத் திருவிழாவின் சிந்தனைகளை இரு பகுதிகளாக மேற்கொள்வோம். திருக்குடும்பத் திருவிழா உருவான வரலாறு நமக்குள் உருவாக்கும் எண்ணங்களை முதலில் பகிர்ந்து கொள்வோம். இரண்டாவதாக, திருக்குடும்பம் எதிர்கொண்டதாக இன்றைய நற்செய்தியில் நாம் காணும் ஒரு முக்கியப் பிரச்சனையையும், அது, நமக்கு நினைவுறுத்தும் இன்றைய பிரச்சனைகளையும் சிந்திப்போம்.

முதலில், இத்திருவிழாவின் வரலாறு... பல நூற்றாண்டுகளாக, திருக்குடும்பத் திருநாள், தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக, துறவறச் சபைகளால் வளர்க்கப்பட்டு வந்தது. 1893ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்களால், இத்திருவிழா, திருஅவையின் வழிபாட்டு காலத்தில் இடம்பெற்றது. ஒரு சில ஆண்டுகளில், இத்திருவிழா, திருவழிபாட்டிலிருந்து நீக்கப்பட்டது. 1921ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால், இத்திருவிழா மீண்டும் திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ம் ஆண்டு முடிவுக்கு வந்த உலகப்போரினால், ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத் தலைவனையோ, மகனையோ போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள், ஆழ்ந்த துயரத்தில், அவநம்பிக்கையில் மூழ்கின. அக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில், திருக்குடும்பத் திருநாளை மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களைக் கட்டியெழுப்ப, திருஅவை முயன்றது.

1962ம் ஆண்டு துவங்கிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது, திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களை, திருஅவை, மீண்டும் புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம், 60களில் நிலவிய உலகின் நிலை. முதலாம், மற்றும், இரண்டாம் உலகப் போர்களால், கட்டடங்கள் பல சிதைந்தது உண்மை. ஆனால், அதைவிட, அதிகமாகச் சிதைந்திருந்தன, குடும்பங்கள். வேறு பல வடிவங்களில், குடும்பங்கள், தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.
தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று, பல வழிகளில், உலகம் முன்னேறியதைப் போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, குடும்பம் என்ற அடித்தளம், நிலை குலைந்தது. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள், வீட்டுக்கு வெளியே நிம்மதியைத் தேடி அலைந்தனர். அந்த நிம்மதியை, அன்பை வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச் சொன்னது, திருஅவை. அனைத்து குடும்பங்களுக்கும் எடுத்துக்காட்டாக, திருக்குடும்பத்தை முன்னிறுத்திய திருஅவை, கிறிஸ்மஸ் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத் திருவிழாவாக, 1969ம் ஆண்டு அறிவித்தது.

திருக்குடும்பத் திருவிழாவன்று, அக்குடும்பம் சந்தித்த ஒரு பிரச்சனை, இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது. இயேசு, மரியா, யோசேப்பு என்ற மூன்று புனிதப் பிறவிகளால் உருவாக்கப்பட்ட திருக்குடும்பம், எந்நேரமும் அமைதியாக, மகிழ்வாக எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்த்தென்று நாம் கற்பனை செய்துகொள்வதால், அவர்களை பீடமேற்றி விடுகிறோம். ஆனால், அவர்கள் மத்தியிலும் பிரச்சனைகள் இருந்தன. இன்னும் சொல்லப்போனால், குழந்தை இயேசு பிறந்த்து முதல் பிரச்சனைகள், ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்தன. அவர்கள் அந்தப் பிரச்சனைகளைச் சந்தித்த விதமும், அவற்றிற்குத் தீர்வு கண்டவிதமும் நமக்குப் பாடங்களாக அமையவேண்டும். பெற்றோருடன் எருசலேம் கோவிலுக்குச் செல்லும் சிறுவன் இயேசு, அவர்களுக்குத் தெரியாமல் அங்கேயேத் தங்கிவிடும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. - லூக்கா நற்செய்தி 2: 41-52

நம் குடும்பங்களில் குழந்தை ஒன்று பிறந்ததும், பெற்றோர், முக்கியமாக தாய், தனது தினசரி வாழ்க்கையை அந்தக் குழந்தைக்காக அதிகம் மாற்றி அமைத்துக்கொள்வதைக் காண்கிறோம். இந்த மாற்றங்கள், பெரும்பாலும், உடல் சார்ந்த சவால்கள். அவற்றில் ஒன்று, அந்தத் தாய் தன் தூக்கத்தை இழக்க, அல்லது, மாற்றியமைக்க வேண்டிய சவால்.
அதே குழந்தை, ‘டீன் ஏஜ் (Teenage) என்றழைக்கப்படும் வளர் இளம் பருவத்தில் அடியெடுத்து வைக்கும்போது, பெற்றோர் மீண்டும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சவால்கள், பெரும்பாலும், வளரும் பிள்ளையைப் புரிந்து கொள்வதில் எழும், மனம் சார்ந்த சவால்களாக இருக்கும்.

நமது குடும்பங்களில் ஒரு மகளோ, மகனோ தோளுக்கு மேல் வளர்ந்ததும், தாங்கள் தனித்து வாழமுடியும் என்பதை பல வழிகளில் உணர்த்துவார்கள். தங்களுக்குரிய சுதந்திரத்தையும், மரியாதையையும் மற்றவர்கள் கொடுக்க வேண்டுமென எதிர்பார்ப்பர். 12 வயதைத் தாண்டி, ‘டீன் ஏஜ் எனப்படும் பருவத்தில் காலடி வைத்துவிட்டதால், தன்னை மற்றவர்கள் கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்துவதை விரும்பமாட்டார்கள்.
குழந்தைப் பருவத்திலிருந்து, டீன் ஏஜ் பருவத்திற்கு வந்துவிட்டதை, நம் பிள்ளைகள் எப்படி நமக்கு உணர்த்துவர் என்பதை, Ernest Munachi என்ற அருள்பணியாளர் அழகாகக் கூறியுள்ளார்: "'நான் எங்கிருந்து வந்தேன்?' என்ற 'அப்பாவித்தன'மானக் கேள்வியை எழுப்பிவரும் வரை நம் மகனோ, மகளோ தன் குழந்தைப் பருவத்தைத் தாண்டவில்லை என்பதை நாம் உணரலாம். 'நீ எங்கே போயிருந்தாய்?' என்ற கேள்வியை எப்போது அவர்கள் விரும்பவில்லையோ, அப்போது அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்டார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார். எங்கே போனாய், என்ன செய்தாய், ஏன் இவ்வளவு லேட்டாக வருகிறாய்... போன்ற கேள்விகளை இனி தங்களிடம் கேட்கக்கூடாது என்பதை, நேரடியாகச் சொல்லாமல், தங்கள் நடத்தையினால், டீன் ஏஜ் இளையோர் உணர்த்துவர். இத்தகைய மாற்றங்கள், பல நேரங்களில், பெற்றோருக்கு, பிரச்சனைகளை, புதிய சவால்களை உருவாக்கும்.

அன்று, எருசலேமில் நடந்ததாக இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பதும், வளர் இளம் பருவத்தில் அடியெடுத்துவைத்த ஓர் இளையவரைப் பற்றியதே. 12 வயதை நிறைவு செய்த ஆண்மகனை, கோவிலுக்கு முதன்முறையாக அதிகாரப் பூர்வமாகக் கூட்டிச்செல்லும் வழக்கம், யூதர்கள் மத்தியில் இருந்தது. அதுவரை குழந்தையாக இருந்த அச்சிறுவன், இனி, தனித்து முடிவுகள் எடுக்கும் தகுதிபெற்ற ஓர் ஆண்மகன் என்பதை உறுதி செய்யும் வகையில், இப்பழக்கம் அமைந்தது.

வளர் இளம் பருவத்தில் அடியெடுத்துவைத்த இயேசு, தன் சுதந்திரத்தை நிலைநாட்ட செய்யும் முதல் செயல் என்ன? அப்பா, அம்மாவிடம் சொல்லாமல், கோவிலில் நடந்த மறைநூல் விவாதம் ஒன்றில் அவர் கலந்துகொண்டார். நல்ல விஷயம் தானே! இதை ஏன் ஒரு பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்? என்று நாம் கேள்வியை எழுப்பலாம்.

கழுவித்துடைத்த ஒரு திருப்பொருளாக திருக்குடும்பத்தை நாம் பார்த்து பழகிவிட்டதால், இப்படிப்பட்டக் கேள்வியை எழுப்புகிறோம். ஆனால், பிள்ளையைத் தொலைத்துவிட்ட பெற்றோரின் நிலையில் இருந்து இதைப் பார்த்தால், அது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பதை நாம் உணரலாம். மகனைக் காணாமல், பதைபதைத்துத் தேடிவரும், மரியாவும், யோசேப்பும், மூன்றாம் நாள், இயேசுவை, கோவிலில் சந்திக்கின்றனர். அச்சந்திப்பில் நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

தங்கள் மகன் மறைநூல் அறிஞர்கள் நடுவே அமர்ந்து, அவர்களுக்கு இணையாக, சிலவேளைகளில், அவர்களுக்கு மேலாக, விவாதங்கள் செய்ததைக் கண்டு, அவரது பெற்றோர் வியந்தனர், மகிழ்ந்தனர். அதே சமயம் பயந்தனர். வயதுக்கு மீறிய அறிவுடன், திறமையுடன் செயல்படும் குழந்தைகளால் பெற்றோருக்குப் பெருமையும் உண்டு, சவால்களும் உண்டு. மரியா, தன் மகனைப் பார்த்து, தன் ஆதங்கத்தை எடுத்துக் கூறுகிறார். இயேசுவோ, அவர் அம்மா சொல்வதைப் பெரிதுபடுத்தாமல், தான் இனி தனித்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.

இயேசு, மரியாவுக்குச் சொன்ன பதில், அந்த அன்னையின் மனதைப் புண்படுத்தியிருக்க வேண்டும். அதுவும், மற்றவருக்கு முன்னால், தன் மகன் அப்படிப் பேசியதால், அந்த அன்னையின் மனது இன்னும் அதிகம் வலித்திருக்கும். மகன் சொல்வதில் என்னதான் நியாயம் இருந்தாலும், வலி வலிதானே! அந்த வேதனையில், மரியா, கோபப்பட்டு, மேலும் ஏதாவது சொல்லியிருந்தால், பிரச்சனை பெரிதாகியிருக்கும். குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள, பொது இடங்கள் நல்லதல்ல என்ற ஒரு சின்ன பாடத்தையாவது, அன்னை மரியாவிடம் நாம் கற்றுக்கொள்ளலாமே!

மரியா, இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவில்லை; இருந்தாலும், அவற்றை, தன் மனதில், ஒரு கருவூலமாகப் பூட்டி வைத்துக்கொண்டு கிளம்பினார். இயேசுவும் அவர்களோடு சென்றார். தான் தனித்து முடிவெடுக்க முடியும் என்பதை, பெற்றோருக்கு உணர்த்திய இயேசு, அடுத்த 18 ஆண்டுகள் செய்தது என்ன? பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார் இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் (லூக்கா 2: 51-52) என்று இன்றைய நற்செய்தி நிறைவடைகிறது.

திருவிழாவுக்குச் சென்றவேளையில், இயேசு காணாமல் போய்விடும் நிகழ்வு, இன்றைய சமுதாயத்தில் நிகழும் ஒருசில கொடுமைகளை நினைவுக்குக் கொணர்கிறது. திருவிழாக் கூட்டங்களில் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு, தவிக்கும் பெற்றோரையும், பெற்றோரை இழந்து, தனித்து விடப்படும் குழந்தைகளையும், நினைத்துப் பார்ப்போம். இவ்வாறு பிரிந்தவர்களை, இறைவன், மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று மன்றாடுவோம். இவ்விதம் காணாமல்போகும் குழந்தைகளைக் கடத்திச்சென்று, பிச்சை எடுப்பதற்கும், இன்னும் பல தவறான வழிகளுக்கும் இவர்களைப் பயன்படுத்தும் மனசாட்சியற்ற மனிதர்களை நினைத்துப்பார்ப்போம். அவர்களுக்காகவும் நாம் செபிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நாசரேத்து என்ற சிற்றூரில், கிராமத்தில் வளர்ந்து வந்த இயேசு, எருசலேம் என்ற நகரத்திற்குச் சென்று காணாமல் போகிறார் என்பதும், ஒரு சில சிந்தனைகளை, செபங்களைத் தூண்டுகிறது. கிராமங்களில், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு மேற்படிப்பிற்கெனச் சென்று, பல வழிகளில் காணாமல் போய்விடும் இளையோரை இப்போது நினைத்துப் பார்க்கிறோம். நகரத்திற்குத் தங்கள் மகனையோ, மகளையோ அனுப்பிவிட்டு, பின்னர், அவர்களை, நகரம் என்ற அக்காட்டில் தொலைத்துவிட்டுத் தவிக்கும் பெற்றோரையும் இப்போது நினைத்துப் பார்க்கிறோம். பல வழிகளில் தங்களையேத் தொலைத்துவிட்டு தவிக்கும் இளையோரும் பெற்றோரும் தங்கள் குடும்ப உறவுகள் வழியே, மீண்டும் தங்களையேக் கண்டுகொள்ள வேண்டும் என, திருக்குடும்பத்தின் இயேசு, மரியா, யோசேப்பு வழியாக இறைவனை இறைஞ்சுவோம்.

இறுதியாக, நம் எண்ணங்கள், இந்தோனேசியாவை நோக்கித் திரும்புகின்றன. 2004ம் ஆண்டு டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, சனிக்கிழமையன்று வந்தது. அதற்கடுத்த நாள், டிசம்பர் 26, ஞாயிறன்று, திருக்குடும்பத் திருவிழா வந்தது. 2004ம் ஆண்டு, திருக்குடும்பத் திருவிழாவன்று, இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கருகே, ஏற்பட்ட மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம், பல ஆசிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சுனாமியாக உருவெடுத்து, 2,27,000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துச் சென்றது. பல இலட்சம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. ஆசியாவின் 14 நாடுகளுக்கு, அழிவையும், கண்ணீரையும் கொண்டு வந்தது.
இவ்வாண்டு, டிசம்பர் 22, சனிக்கிழமையன்று, அதேப் பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும், நிலச்சரிவும் உருவாக்கிய சுனாமியில், 400க்கும் அதிகமான உயிர்கள் பலியாயின. இன்னும் பல நூறு பேர் காயமுற்றுள்ளனர், அல்லது, காணாமற் போயுள்ளனர். இந்த இயற்கைப் பேரிடரால் சிதைந்துபோயிருக்கும் குடும்பங்கள் அனைத்தையும், திருக்குடும்பத்தின் ஆறுதலான அரவணைப்பில் ஒப்படைப்போம்.

புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால் சிதைந்துபோகும் குடும்பங்களுக்காக இறைவனிடம் வேண்டுவோம். அதேபோல், கருத்து வேறுபாடுகளால், மனதளவில் உருவாகும் எரிமலை வெடிப்புகளாலும், சுனாமிகளாலும் சிதைந்துபோகும் உறவுகளையும், குடும்பங்களையும் இவ்வேளையில் இறைவனிடம் ஒப்படைப்போம், அக்குடும்பங்களில் அமைதியும், அன்பும் மீண்டும் உருவாகவேண்டும் என்று மன்றாடுவோம்.


26 December, 2018

விவிலியத்தேடல் : யோவான் நற்செய்தி புதுமைகள், மீள்பார்வை – 4


Thenmukilan and his NASA-selected painting

இமயமாகும் இளமை - நாசா நாள்காட்டியில் பழநி மாணவர் ஓவியம்

திண்டுக்கல் மாவட்டம், பழநியைச் சேர்ந்த நடராஜன் - சந்திராமணியின் மகன் தேன்முகிலன். இவர், பழநி அருகே உள்ள வித்யாமந்திர் பள்ளியில், 8-ம் வகுப்பு படிக்கிறார்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA), ஒவ்வோர் ஆண்டும், நாள்காட்டியை வெளியிட்டு வருகிறது. இந்த நாள்காட்டியை உருவாக்க, ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு தலைப்பைக் கொடுத்து, பன்னாட்டளவில் ஓவியப் போட்டிகளை நடத்தி வருகிறது. இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் ஓவியங்கள், நாள்காட்டியில் இடம்பெறும்.
2019-ம் ஆண்டு நாள்காட்டிக்குத் தேவையான ஓவியங்களைத் தேர்வு செய்ய நாசா நிறுவனம் நடத்தியப் போட்டியில், 4 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், 194 நாடுகளிலிருந்து கலந்துகொண்டனர். இதில், இறுதியாக, 12 மாணவர்களின் ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன. இப்போட்டியில் பங்கேற்ற தேன்முகிலன் அவர்கள், விண்வெளியில் உணவு என்ற தலைப்பில் வரைந்திருந்த ஓவியம் தேர்வு செய்யப்பட்டு, 2019ம் ஆண்டு, நாள்காட்டியில், நவம்பர் மாத பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. விண்வெளியில் காய், கனி வகைகளைப் பயிர் செய்வதே, விண்வெளி உணவுக்கு சிறந்த வழி என்ற கருத்துடன், இளையவர் தேன்முகிலன் அவர்கள், இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். (தி இந்து)

Jesus cried with a loud voice, Lazarus, come out.

யோவான் நற்செய்தி புதுமைகள், மீள்பார்வை 4

1888ம் ஆண்டு, ஏப்ரல் 13ம் தேதி, பிரெஞ்சு நாளிதழ் ஒன்றில், "மரண வியாபாரி இறந்தான்" (“The Merchant of Death is Dead") என்ற தலைப்புச் செய்தி வெளியானது. அச்செய்தி யாரைக்குறித்து எழுதப்பட்டிருந்ததோ, அந்த 'வியாபாரி' அந்த நாளிதழை அன்று வாசித்தார். நம்முடைய மரணச் செய்தியை, நாமே வாசிக்கும் வாய்ப்பு, நம்மில் யாருக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இந்த அனுபவத்தைப் பெற்றவர், ஆல்ஃபிரட் நொபெல் (Alfred Nobel).
அவரது அண்ணன், லுட்விக் நொபெல் (Ludvig Nobel) அவர்கள், 1888ம் ஆண்டு, ஏப்ரல் 12ம் தேதி இறந்தார் என்பதைக் குறிப்பிடுவதற்குப் பதில், ஆல்ஃபிரட் இறந்துவிட்டதாக, அந்த நாளிதழ் தவறானச் செய்தியை வெளியிட்டிருந்தது. ஆல்ஃபிரட் அவர்கள், அச்செய்தியை, தொடர்ந்து வாசித்தார். முன்னெப்போதும் இல்லாத வேகத்தில், அதிக மக்களைக் கொல்லும் வழிகளைக் கண்டுபிடித்து பணக்காரராக மாறிய ஆல்ஃபிரட் நொபெல், நேற்று இறந்தார் ("Dr. Alfred Nobel, who became rich by finding ways to kill more people faster than ever before, died yesterday.") என்று, அச்செய்தியின் துவக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

ஆல்ஃபிரட் நொபெல் அவர்கள், வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர் என்பதை நாம் அறிவோம். அதேபோல், பீரங்கி போன்ற இராணுவக் கருவிகளை உருவாக்கும் போபர்ஸ் (Bofors) நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்தார் ஆல்ஃபிரட். எனவே அவரைப் பற்றி வெளிவந்த செய்தி, கண்டனத் தொனியுடன் வெளியாகியிருந்தது. பல்லாயிரம் உயிர்களை கொல்லும் கருவிகளை உருவாக்கி, பணம் திரட்டும் பயங்கர மனிதர் அவர் என்பதைக் கூற, அவரை, மரண வியாபாரி என்று செய்திகள் விவரித்தன.

நாம் இறந்தபின் நம்மைப்பற்றி சொல்லப்படும் கருத்துக்கள் நமது உண்மை நிலையைத் தோலுரித்துக் காட்டும். ஆல்ஃபிரட் அவர்கள், தன்னைப்பற்றிய மரணச் செய்தியைப் படித்ததால், அறிவொளி பெற்றார் என்றே சொல்லவேண்டும். அழிவுக் கருவிகளையும், வெடிமருந்தையும் கொண்டு தான் சம்பாதித்த செல்வத்தையெல்லாம், நொபெல் விருதுகள் வழங்கும் அறக்கட்டளையை நிறுவுவதற்கு அவர் அளித்தார். இந்த ஒரு செயலால், அவர் வரலாற்றில் இன்றும் வாழ்கிறார்.

வரலாற்றில் புகழ்பெற்ற பலர் தங்கள் கல்லறையில் எழுதக்கூடிய வாக்கியங்களைத் தாங்களே சொல்லிச் சென்றுள்ளனர். 1931ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி இவ்வுலகிலிருந்து விடைபெற்ற புகழ்பெற்ற கவிஞர் கலீல் கிப்ரான் அவர்களின் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வரிகள் இவை: என் கல்லறையில் இந்த வார்த்தைகளை எழுதி வையுங்கள். நானும் உங்களைப் போல் உயிரோடுதான் இருக்கிறேன். உங்கள் அருகிலேயே நிற்கிறேன். கண்களை மூடி, சுற்றிலும் பாருங்கள்... உங்களுக்கு முன் நான் நிற்பதைக் காண்பீர்கள்.

கல்லறை நமது முடிவல்ல, நமது வாழ்வு இன்னும் தொடர்கிறது என்பதை நமக்கு நினைவுறுத்தும் நிகழ்வு, இயேசு இலாசரைக் கல்லறையில் இருந்து உயிருடன் எழுப்பும் புதுமை (யோவான் நற்செய்தி 11: 1-45). இயேசு ஆற்றிய புதுமைகளிலேயே மிகப் புகழ்பெற்ற புதுமையாகக் கருதப்படுவது, இயேசு, இலாசரை உயிர் பெற்றெழச் செய்த புதுமை. இறந்தோரை இயேசு உயிர் பெற்றெழச் செய்தார் என்பது நமக்குத் தெரியும். நயீன் நகர கைம்பெண்ணின் மகன், தொழுகைக் கூடத்தலைவரான யாயீர் என்பவரின் மகள் ஆகியோரை இயேசு உயிர் பெற்றெழச் செய்தார். ஆனால், இலாசரை உயிர் பெற்றெழச் செய்ததில் ஒரு தனி சிறப்பு உண்டு. மற்றவர்கள் இறந்த உடனேயே இயேசு அங்கு பிரசன்னமாகி, அவர்களை உயிர் பெற்றெழச் செய்தார். இலாசரையோ, அவர் புதைக்கப்பட்டபின், நான்காம் நாள் உயிர் பெற்றெழச் செய்தார்.

இறந்த ஒருவரின் ஆன்மா அவருடன் கல்லறையில் மூன்று நாட்கள் இருக்கும், மூன்றாம் நாள் அந்த ஆன்மா உடலிலிருந்து நிரந்தரமாக பிரிந்துவிடும், அதன் பின்னர் அந்த உடல் அழுகிப்போக, அழிந்துபோக ஆரம்பிக்கும்... இதுவே யூதர்கள் மத்தியில் நிலவி வந்த நம்பிக்கை. இலாசர் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. எனவே அவரது உடல் அழிய ஆரம்பித்திருக்கும். அந்நேரத்தில் இயேசு அங்கு வந்து சேர்ந்தார். தாமதமாக வந்த இயேசுவைக் கண்டு, இலாசரின் சகோதரிகளான மார்த்தாவும், மரியாவும், ஒருவகையில் ஆறுதல் அடைந்தாலும், "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" (யோவான் 11: 21,32) என்ற தங்கள் ஆதங்கத்தையும், ஏக்கத்தையும் வெளிப்படுத்தினர்.

வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இறைவன் தாமதிப்பதாக எத்தனை முறை நாம் உணர்ந்திருக்கிறோம். எதிர்பார்க்கும் நேரத்தில், எதிர்பார்க்கும் இடத்தில் எதிர்பார்க்கும் வகையில், கடவுள் வருவதில்லை. எதிர்பாராத வகையில் நம் வாழ்வில் நுழைவதுதான் கடவுளின் அழகு. தாமதமாய் வந்த இயேசுவிடம் தன் ஆதங்கத்தைக் கூறிய மார்த்தா, உடனேயே இயேசுவின் மீது தான் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் எடுத்துரைத்தார்.
யோவான் நற்செய்தி 11: 21-22
மார்த்தா இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் என்றார்.
மார்த்தாவின் இந்த நம்பிக்கை அவருக்குப் பின் வந்த பலருக்கு வழி காட்டியது.

உயிரற்ற பிணமும், கடவுள் கைபட்டால், புதுமைகளாய் மாறும். ஆனால், இந்தப் புதுமை நிகழ்வதற்கு கடவுள் இருந்தால் மட்டும் போதாது. நாமும் அவரோடு ஒத்துழைக்க வேண்டும் என இறைவன் விரும்புகிறார். இப்போதுகூட (அதாவது, நம்பிக்கையற்ற இச்சூழலிலும் கூட) நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும் என்று மார்த்தா கூறிய அந்த நம்பிக்கை வரிகளில் இந்த ஒத்துழைப்பு ஆரம்பமானது. இயேசு இதே நம்பிக்கையை, ஒத்துழைப்பை இலாசர் கல்லறையைச் சுற்றி நின்றவர்களிடமும் உருவாக்க நினைத்தார். எனவே, மூன்று கட்டளைகள் இடுகிறார். முதல் கட்டளை அங்கிருந்த யூதர்களுக்கு.

"கல்லறை வாயிலை மூடியிருக்கும் கல்லை அகற்றுங்கள்." இது இயேசு வழங்கிய முதல் கட்டளை. "கல்லே அகன்று போ" என்று இயேசு சொல்லியிருந்தால், ஏன், நினைத்திருந்தாலே போதும், அந்தக் கல்லறைக் கல் அகன்று போயிருக்கும். இயேசு தனது இறை வல்லமையால் கல்லறையின் கல்லை அகற்றியிருந்தால், சூழ நின்றவர்கள் அவரை இன்னும் அதிகம் நம்பியிருப்பார்கள். இந்தப் புதுமைக்கு இன்னும் அதிக மெருகு கூடியிருக்கும்... இப்படி எண்ணத் தோன்றுகிறது நமக்கு.

ஆனால், இயேசுவின் எண்ணங்கள் வேறுபட்டிருந்தன. இயேசு புதுமைகள் செய்தது, தன் வலிமையை, கடவுள் தன்மையைக் காட்சிப்பொருளாக்க அல்ல. புதுமைகளின் வழியே மக்களின் மனங்களில், வாழ்வில் மாற்றங்கள் உண்டாக்கவேண்டும் என்பதே, அவரது எண்ணம். அந்தக் கல்லறையைச் சுற்றி நின்றவர்கள், நான்காம் நாளில் ஒன்றும் நடக்காது என்ற அவநம்பிக்கையுடன் அங்கு வந்தவர்கள். அவர்கள் கொண்டிருந்த அவநம்பிக்கையை உடைக்க விரும்பினார் இயேசு. நான்கு நாட்கள் என்ன, நாலாயிரம் ஆண்டுகள் ஆனாலும், கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த விரும்பினார்.

கல்லறையிலிருந்து இலாசரை உயிரோடு எழுப்ப அந்த மக்களுக்கு சக்தி இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கல்லறைக் கல்லை அகற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு என்று இயேசுவுக்குத் தெரியும். எனவே, மனிதர்களால் முடிந்தவற்றை மனிதர்களே செய்யட்டும் என்று இயேசு இந்தக் கட்டளையைத் தருகிறார்.

கல்லறையைச் சுற்றி நின்றவர்களிடம், மூடியிருந்த கல்லை அகற்றச் சொன்னார். கல்லை நகர்த்துவதில் மற்றொரு பிரச்சனை இருந்தது. அதை மார்த்தா நேரடியாகவே இயேசுவிடம் கூறுகிறார். நான்கு நாட்கள் ஆகிவிட்டன. நாற்றம் எடுக்குமே என்பதே அப்பிரச்சனை.
மார்த்தா, இறந்த காலத்தில் வாழ்ந்தார். இயேசு, அவரை, நிகழ் காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் அழைத்தார். இறந்த காலம், அழிந்து, அழுகி, நாற்றம் எடுக்கும். அங்கேயே இருப்பது நல்லதல்ல. அந்த இறந்த காலத்தை மூடியிருப்பது பெரும் கல்லானாலும், மலையே ஆனாலும், அதை அகற்றி, அடுத்த அடி எடுத்துவைக்க இயேசு அழைக்கிறார்.

இயேசு கொடுத்த இரண்டாவது கட்டளை இலாசருக்கு: "இலாசரே, வெளியே வா" என்பது, அக்கட்டளை. இறந்த பிணமாய், கட்டுண்டு கிடந்த இலாசர், இயேசுவின் குரல் கேட்டு, கட்டுகளோடு வெளியே வந்தார். எல்லாம் முடிந்துவிட்டது, அழிந்துவிட்டது என்று புதைக்கப்பட்டுள்ள நம் கனவுகளும், கடவுளின் குரல் கேட்டால், மீண்டும் உயிர்பெறும். இறைவனின் குரல் கேட்டும் கல்லறைகளில் தங்களையே மூடிக்கொள்ளும் பலரை இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கலாம்.

வெளியே வரும் இலாசரைக் கண்டதும், இயேசு மீண்டும் மக்களுக்குத் தரும் மூன்றாவது கட்டளை: "கட்டுகளை அவிழ்த்து அவனைப் போக விடுங்கள்" என்பது. உயிர் பெற்று வந்துள்ள இலாசரால் தன் கட்டுகளைத் தானே அவிழ்த்துக் கொள்ளமுடியாது. அந்த நல்ல காரியத்தை அவரைச் சுற்றி இருப்பவர்களே செய்யமுடியும். நடைப் பிணங்களாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஒருவேளை, அந்நிலையில் நாமும் அவ்வப்போது இருந்திருக்கிறோம். இந்த நடைப் பிணங்களைக் கட்டியிருக்கும் கட்டுகளை அவிழ்க்க, இறைவன், நமக்கு கட்டளைகள் இடுகிறார்.

இலாசரின் கல்லறைக்கு முன் நின்று, இயேசு வழங்கிய மூன்று கட்டளைகளும், ஆண்டின் இறுதி வாரத்தில் இருக்கும் நம்மை விழித்தெழச் செய்வதற்கு விடுக்கப்பட்டுள்ள கட்டளைகளாக ஒலிக்கின்றன. ஆண்டின் இறுதி வாரத்தில், நாம் கடந்துவந்த ஆண்டை திரும்பிப் பார்க்கும் முயற்சியில், ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. இயற்கைப் பேரிடர்கள், அரசியல் அநீதிகள் என்று, நம் ஊடகங்கள், பெரும்பாலும், அழிவுகளையே வெளிச்சமிட்டு காட்டுவதால், உலகம், ஒரு கல்லறை போல, நம்மில் பலருக்குத் தோன்றலாம்.
நம்பிக்கைகள் புதைந்துபோனதுபோல் ஊடகங்கள் காட்டும் இந்தக் கல்லறைக்கு முன் இயேசு நின்று, கல்லை அகற்றுங்கள், வெளியே வாருங்கள், கட்டுகளை அவிழ்த்து விடுங்கள் என்று கூறும் கட்டளைகள் நாம் நம்பிக்கையுடன் விழித்தெழுவதற்கு உதவட்டும். புலரும் புதிய ஆண்டு, புது வாழ்வையும், கூடுதல் சக்தியையும் நம் அனைவருக்கும் அளிக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய ஆண்டினை வரவேற்போம்.

யோவான் நற்செய்தியில், இயேசு செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள ஏழு அரும் அடையாளங்களில், கடந்த ஓராண்டளவாக,  நம் தேடல் பயணத்தைத் தொடர, வழிகாட்டி வந்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். இனி வரும் வாரங்களில், மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற மூன்று ஒத்தமை நற்செய்திகளில் கூறப்பட்டுள்ள புதுமைகளில் நம் தேடல்களை மேற்கொள்வோம்.


23 December, 2018

200th Birthday of ‘Silent Night’ ‘அமைதியான இரவு’ பாடல் – 200வது பிறந்தநாள்


The Silent Night Chapel in the village of Oberndorf

IV Sunday of Advent

This Sunday’s reflection consists of two sections: The first is on one of the all-time favourite Christmas Carol, sung throughout the world, namely, “Silent Night” and the second is on today’s Gospel, featuring the Visitation.

First – “Silent Night”

I have taken some excerpts from the articles “The Carol and Its Message of Peace” that appeared in Austria.info and “Silent Night: Austria’s Melodic Message of Peace” that appeared in BBC – Travel section and modified them to suit our purpose.

Every Christmas Eve, hundreds of people from all over the world crowd outside the octagonal-shaped chapel in Oberndorf, Austria, to sing along to one of the world’s most-beloved Christmas carols: Silent Night. Amid sparkling white lights on a December night, two men, one strumming a guitar, stand in front of the small chapel and sing, in German, “Stille Nacht, Heilige Nacht”, much like the song was first performed on Christmas Eve in 1818. And then carollers, bundled against the cold, sing the song in various languages. It’s a scene especially poignant this holiday season, as 24 December 2018 marks the 200th anniversary of the song’s humble origins in Oberndorf.

On Christmas Eve in 1818, Joseph Mohr, a young priest, assigned to the newly established parish of St Nicholas, asked his friend, Franz Xaver Gruber, an organist and a teacher, to compose a melody to a poem he had written two years earlier. Happy with the results, Fr Mohr included the song in a short ceremony following Christmas Mass that same evening. Fr Mohr sang tenor and strummed along on guitar, while Gruber sang bass, before a congregation of boat builders, labourers and others.

What inspired Fr Mohr to write the poem is unknown. Some have speculated that the inspiration may have come from the yearning for continued peace in the wake of the Napoleonic Wars, which raged from 1803 to 1815 and caused economic and other hardships in the region. Around that time, Europe also experienced the ‘Year Without A Summer’, months of colder-than-normal weather in 1816 that led to crop failures and famine, caused by a volcanic eruption in Indonesia the previous year.

The fact that Fr Joseph Mohr, the author of "Silent Night" wrote the lyrics in German is symbolic that this carol has always played an integral role in overcoming barriers. This was unusual in the early nineteenth century, when religious texts were generally composed in Latin – a language understood only by the educated classes. Fr Mohr, a down-to-earth man, had a particular concern for the poor and needy and felt inspired to create a sense of community and mutual understanding. The German text – which could easily be understood by everyone – was undoubtedly an audible manifestation of this.

Over the past two centuries, Silent Night has become a cultural phenomenon, a staple of the Christmas canon in cultures around the globe. The song has been translated into more than 300 languages and dialects, including Latin, and in 2011 was added to the UNESCO Intangible Cultural Heritage list. The yearning for peace that flows through this song has inspired the hearts of soldiers during the I World War, if only fleetingly.

When the war began in June-July 1914, many thought that it would be over soon and that the soldiers would return home for Christmas. The bitter truth dawned on them soon. The war prolonged. December was spent in the battlefield. There were quite a few attempts to stop the war or, at least, stop it temporarily on Christmas Day. Pope Benedict XV, who had called this war ‘a senseless massacre’, sent an appeal to the leaders of the world for an official Christmas truce in the war in Europe, saying, "that the guns may fall silent at least upon the night the angels sang." The guns did fall silent. An unofficial Christmas truce was followed by the soldiers.
On the night of Dec. 24, 1914, the weather abruptly became cold, freezing the water and slush of the trenches in which the men bunkered. On the German side, soldiers began lighting candles. British sentries reported to commanding officers there seemed to be small lights raised on poles or bayonets.
Although these lanterns clearly illuminated German troops, making them vulnerable to being shot, the British held their fire. Within moments of that sighting, the British began hearing a few German soldiers singing a Christmas carol. It was soon picked up all along the German line as other soldiers joined in harmonizing.
The words heard were these: "Stille nacht, heilige nacht." British troops immediately recognized the melody as "Silent Night" quickly neutralizing all hostilities on both sides. One by one, British and German soldiers began laying down their weapons to venture into no-man's-land, a small patch of bombed-out earth between the two sides…
That night, former enemy soldiers sat around a common campfire. They exchanged small gifts from their meager belongings - chocolate bars, buttons, badges and small tins of processed beef. Men who only hours earlier had been shooting to kill were now sharing Christmas festivities and showing each other family snapshots.

We pray that the elusive gift of peace comes to us as we celebrate the 200th birthday of “Silent Night”!

Second – The Gospel on Visitation

Now, we turn our attention to the Gospel – Luke 1:39-45. The Gospel gives us the famous scene of the Visitation. The barren woman and the virgin met to recount what the Lord had done in their lives. Both Elizabeth and Mary were invited by God to bear witness to one great truth, namely, that nothing is impossible for God. Both knew that there was no logical explanation to what they were asked to do… rather, what they were asked to be! Both said almost a blind ‘yes’, relying on God and God alone. They did not have any other support – not even their families. Even their families would not have understood their position: the barren woman, quite advanced in age, conceiving? Unthinkable, they would have said. A virgin conceiving out of wedlock? Unthinkable, unacceptable, unpardonable. They would have stoned her to death.

As the Bible often illustrates, God usually takes us by surprise. Sometimes, as with Elizabeth, God moves too slowly. Sometimes, as with Mary, he moves too quickly. Like Elizabeth, some of us have been praying for a long time for something to happen. We began to think that it might never happen. On the other hand, like Mary, some of us find that too many things happened too quickly in our lives. God had conceived something in our life that we didn't ask for. We were thrust into situations we never bargained for. Whether nothing seems to be happening in our lives, or whether too many things are happening in our lives, we need to have the humility to let go and allow God to enter our lives. This is the core of Christmas. The challenge of Christmas!

It is fascinating that, according to Luke's gospel, after Mary discovered that she would give birth to the Messiah, the first person she went to, with haste, was not Joseph or her parents, but her relative Elizabeth, whose life was also clearly out of control. Mary probably thought that only Elizabeth would understand her situation. Elizabeth not only understood Mary but blessed her in some of the most beautiful words a human person can ever hear. In blessing Mary, Elizabeth blessed herself. When Elizabeth heard Mary's greeting, we are told that the child within her leapt for joy. When Elizabeth experienced this, her only question was to ask, "And why has this happened to me that the mother of my Lord comes to me?" Why me?

Elizabeth asked the “why” question and did not get an answer. Mary asked the “how” question at the annunciation. She too did not get an adequate answer. When they met, they still had lots of unanswered questions locked up within. But, they did not ‘waste’ their time in a question-and-answer session. They did not indulge in any intellectual arguments. They simply allowed themselves to be drenched in God’s shower of blessings. Simply exclamations. No explanations.
Trying to explain life is only another way of trying to control it. One of the central messages of Christmas is that we are not in control of the blessings. There is no logic to a blessing, only gratitude. We pray that during this Christmas, we may be like Mary and Elizabeth accepting the gifts that come our way with childlike gratitude and sharing these blessings with people around us!

A closing thought…
Pope Benedict XVI assumed the leadership of the Church in 2005, the Year of the Eucharist. On May 31, 2005, during the prayer meeting in the Vatican gardens for the conclusion of the Marian month, he gave a short reflection, combining the Visitation and the Year of the Eucharist. Here is an excerpt from his reflection:
Today, in particular, we pause to meditate on the mystery of the Visitation of the Virgin to St Elizabeth… In a certain way we can say that her journey was - we like to emphasize in this Year of the Eucharist - the first "Eucharistic procession" in history. Mary, living Tabernacle of God made flesh, is the Ark of the Covenant in whom the Lord visited and redeemed his people. Jesus' presence filled her with the Holy Spirit.
When she entered Elizabeth's house, her greeting was overflowing with grace: John leapt in his mother's womb, as if he were aware of the coming of the One whom he would one day proclaim to Israel. The children exulted, the mothers exulted. This meeting, imbued with the joy of the Holy Spirit, is expressed in the Canticle of the Magnificat. 

Mary Visits Elizabeth

திருவருகைக் காலம் 4ம் ஞாயிறு

கிறிஸ்மஸ்விழாக்காலத்தின் உயிர்நாடியாக விளங்கும் பல பாடல்களில், அதிகம் புகழ்பெற்ற ஒரு பாடல், "அமைதியான இரவு" என்று துவங்கும், "Silent Night" என்ற பாடல். இப்பாடலுடன் தொடர்புடைய சில எண்ணங்கள், நம் சிந்தனைகளின் முதல் பகுதியாக அமைகின்றன.

ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 24ம் தேதி இரவு, ஆஸ்திரியா நாட்டின் ஒபென்டோர்ஃப் (Obendorf) என்ற ஊரில், ஒரு சிற்றாலயத்திற்கு முன், மக்கள் கூடி வருவர். குறிப்பிட்ட நேரத்தில், அச்சிற்றாலயத்திற்கு முன் இருவர் வந்து நிற்பர். ஒருவர் 'கிட்டார்' இசைக்கருவியை மீட்ட, இருவரும் சேர்ந்து, "Silent Night" பாடலை, அது, முதன்முதலில் இயற்றப்பட்ட ஜெர்மன் மொழியில், "Stille Nacht, Heilige Nacht" என்று பாடுவர். அதைத் தொடர்ந்து, அங்கு குடியிருப்போர் அனைவரும் இணைந்து, அப்பாடலை, அவரவர் மொழிகளில் பாடுவர்.
இவ்வாண்டு, இந்நிகழ்வு, இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், இப்பாடல் இயற்றப்பட்டு, முதல் முறையாக, ஒபென்டோர்ஃப் சிற்றாலயத்தில், 1818ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி இரவு பாடப்பட்டதால், இவ்வாண்டு, டிசம்பர் 24ம் தேதி, இப்பாடல், தன் 200வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.

கடந்த 200 ஆண்டுகளாக, மக்களைக் கவர்ந்துள்ள இப்பாடல், 300க்கும் அதிகமான மொழிகளில் பாடப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டு, UNESCO நிறுவனம், இப்பாடலை, கலாச்சார பாரம்பரிய சொத்து (Intangible Cultural Heritage) என அறிவித்துள்ளது. 'அமைதியான இரவு, புனிதமான இரவு' என்ற அழகிய உருவகங்களுடன் துவங்கும் இப்பாடலின் வரிகளை எழுதியவர், 25 வயதான ஜோசப் மோர் (Josef Mohr) என்ற இளம் அருள்பணியாளர். இதற்கு இசை அமைத்தவர், 30 வயதான Franz Xaver Gruber என்ற ஆசிரியர்.
அருள்பணி மோர் அவர்கள், இப்பாடலை எழுதியதன் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லையெனினும், அவர் வாழ்ந்த காலத்தில், 1815ம் ஆண்டு, இந்தோனேசியாவில், Tambora எரிமலையில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்பு, 1816ம் ஆண்டு, ஐரோப்பாவில் நிலவிய கடும் குளிரினால் உருவான பஞ்சம், மற்றும் 1803ம் ஆண்டு முதல், 1815ம் ஆண்டு முடிய நடைபெற்ற நெப்போலியப் போர்கள்(Napoleonic Wars) ஆகியவை, இப்பாடலை எழுத அவரைத் தூண்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இயற்கைப் பேரிடர்கள் நடுவிலும், மனிதர்களால் உருவாக்கப்படும் போர்கள் நடுவிலும், நாம் இறைவனின் அமைதியைப் பெறவேண்டும் என்ற வேண்டுதலுடன், இப்பாடல், கடந்த 200 ஆண்டுகளாக, ஒவ்வொரு கிறிஸ்மஸ் காலத்திலும் தொடர்ந்து ஒலித்து வருகிறது.

அமைதி நிலவ வேண்டும் என்ற ஏக்கத்துடன் எழுப்பப்பட்டு வரும் இப்பாடல், ஏதோ ஒரு வழியில், உலக அமைதிக்கு வழி வகுத்துள்ளது என்பதற்கு, 1914ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி இரவு, ஒரு சான்றாக அமைந்துள்ளது.
1914ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் முதல் உலகப் போர் ஆரம்பமானது. அந்தப் போர் விரைவில் முடிந்து, வீரர்கள் எல்லாரும் கிறிஸ்மஸுக்கு வீடு திரும்புவர் என்றுதான் ஆரம்பத்தில் அனைவரும் நினைத்தனர். ஆனால், உண்மை நிலை விரைவில் புரிய ஆரம்பித்தது. டிசம்பரிலும் போர் தொடர்ந்தது. போரை முற்றிலுமாக நிறுத்த, அல்லது குறைந்த பட்சம் தற்காலிகமாவது நிறுத்துவதற்குத் தேவையான முயற்சிகள் ஆரம்பமாயின. பிரித்தானியாவைச் சேர்ந்த 101 இல்லத்தலைவிகள் இணைந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா நாடுகளில் இருந்த இல்லத்தலைவிகளுக்கு அனுப்பிய ஒரு மடல், போர் நிறுத்த முயற்சிகளை ஆரம்பித்து வைத்தன. இந்தப் போரை, "பயனற்றப் படுகொலை" (useless massacre) என்று கூறிய திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், போரில் ஈடுபட்டிருந்த அத்தனை நாட்டுத் தலைவர்களுக்கும், டிசம்பர் 7ம் தேதி, விண்ணப்பம் ஒன்றை அனுப்பினார். "விண்ணகத் தூதர்களின் பாடல்களை, கிறிஸ்மஸ் இரவில், இந்த உலகம் கேட்கவேண்டும். அதற்காகவெனினும், அந்த இரவில், துப்பாக்கிச் சப்தங்களை நிறுத்துங்கள்" என்று திருத்தந்தை விண்ணப்பித்திருந்தார்.

இல்லத் தலைவிகளும், திருத்தந்தையும் மேற்கொண்ட முயற்சிகள் ஓரளவு பயன் தந்தன. அதிகாரப் பூர்வமற்ற போர் நிறுத்தம், டிசம்பர் 24ம் தேதி காலையிலிருந்து கடைபிடிக்கப்பட்டது. அன்றிரவு, வழக்கத்திற்கும் அதிகமாக, குளிர் வாட்டியெடுத்தது. பிரித்தானியப் படைவீரர்கள், தாங்கள் தங்கியிருந்த பதுங்குக் குழிகளில் மெழுகுதிரிகளை ஏற்றிவைத்தனர். போர்க்களங்களில், இருளில் விளக்கேற்றுவது முட்டாள்தனம். விளக்குகள், எதிரிகளின் கவனத்தை ஈர்க்கும்; பதுங்கு குழிகள் தாக்கப்படும் என்ற போர்க்கள விதிகளை எல்லாம் பிரித்தானிய வீரர்கள் அறிந்திருந்தாலும், கிறிஸ்மஸ் இரவைக் கொண்டாட, விளக்குகளை ஏற்றி, "Silent Night" என்ற கிறிஸ்மஸ் பாடலைப் பாட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில், அருகிலிருந்த பதுங்குக் குழியிலிருந்து ஜெர்மானிய வீர்கள், அதே பாடலை, "Stille Nacht, Heilige Nacht" என்று, ஜெர்மன் மொழியில் பாட ஆரம்பித்தனர்.

இப்பாடலை இருவேறு மொழிகளில் பாடியவாறு, ஜெர்மானிய, பிரித்தானியப் படைவீரர்கள், எரியும் மெழுகு திரிகளைக் கையிலேந்தி, பதுங்குக் குழிகளைவிட்டு வெளியேறினர். பதுங்குக் குழிகளைவிட்டு வெளியேறும் எந்த வீரனும் கையில் துப்பாக்கி ஏந்தியபடியே வெளியேறவேண்டும்; தோல்வி அடைந்து சரண் அடையும்போது மட்டுமே, துப்பாக்கி ஏதுமின்றி, நிராயுதபாணியாய் தலைக்கு மேல் கரங்களை உயர்த்தியவண்ணம், வெளியேற வேண்டும் என்பவை, போர்க்களத்தில் பின்பற்றவேண்டிய விதிகள்.
ஆனால், 1914ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி இரவு, அந்தப் போர்க்களத்தில், "Silent Night" பாடல், போர்க்கள விதிகளை மாற்றியமைத்தது. ஆயுதங்களுக்குப் பதிலாக எரியும் மெழுகு திரிகளைத் தாங்கி வெளியே வந்தனர், இரு நாட்டு வீர்களும். தங்களிடம் இருந்த பிஸ்கட், ரொட்டி, சாக்லேட், பழங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து உண்டனர். ஒருவருக்கொருவர், வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்னர், மீண்டும் தங்கள் பதுங்குக் குழிகளுக்குத் திரும்பிச் சென்றனர். "நான் என் வாழ்வில் அனுபவித்த மிகச் சிறந்த கிறிஸ்மஸ் விருந்து இதுதான்" என்று, அவ்வீரர்களில் பலர், தங்கள் குடும்பத்தினருக்குக் கடிதங்கள் அனுப்பினர்.

1914ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி, கிறிஸ்மஸ் இரவில், "Silent Night" கிறிஸ்மஸ் பாடல், துப்பாக்கிச் சப்தங்களை மௌனமாக்கி, எதிரிகளை ஒருங்கிணைத்தது. நாம் வாழும் இன்றைய உலகில், பெரும் திருவிழாக் காலங்களிலும், துப்பாக்கிச் சப்தங்கள் ஒலிக்கின்றன. அதுவும், கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட மக்கள் கூடிவரும் கோவில்களில், தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
இவ்வுலகில் அமைதி உருவாகும் என்ற கனவுடன் பாடப்பட்டு வரும் 'அமைதியான இரவு' பாடல், தன் 200வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், இவ்வுலகம், அமைதியில் வாழ்வதற்குத் தேவையான அருளை, இன்று, மீண்டும் ஒருமுறை, இறைவனிடம் மன்றாடுவோம்.

நம் சிந்தனைகளின் இரண்டாம் பகுதியில், அன்னை மரியாவும், எலிசபெத்தும் சந்தித்த நிகழ்வின்மீது நம் கவனத்தைத் திருப்புவோம். கிறிஸ்மஸ் நெருங்கிவரும் நேரத்தில், பல பங்குகளில், பள்ளிகளில், கிறிஸ்மஸ் நாடகங்கள் அரங்கேறுவது வழக்கம். இந்நாடகங்களில், மரியாவுக்கு வானதூதர் தோன்றுவது, முதல் காட்சி. மரியா எலிசபெத்தைச் சந்திப்பது, இரண்டாவது காட்சி. பின்னர், மாட்டுத் தொழுவம், இடையர், மூவேந்தர் என்று... காட்சிகள் தொடரும்.
அழகான இக்காட்சிகளில் நடிப்பவர்கள் எல்லாரும் குழந்தைகள் என்பதால், இரசிப்போம், சிரிப்போம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன், இப்படி ஒரு நாடகம் முடிந்து திரும்பிவரும் வழியில், ஒரு நண்பர் திடீரென, "முதல் கிறிஸ்மஸ் இவ்வளவு அழகாக இருந்திருக்குமா?" என்ற கேள்வியை எழுப்பினார். நம்மைச் சிந்திக்கவைக்கும் கேள்வி இது.

முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு அழகாக, மகிழ்வாக இருந்திருக்க வாய்ப்பில்லை. யூதேயா முழுவதும் உரோமைய ஆதிக்கமும், அராஜகமும் பரவியிருந்தன. இந்த அடக்கு முறைக்கு, உரோமைய அரசு, படை வீரர்களை அதிகம் பயன்படுத்தியது. அடுத்த நாட்டை அடக்கியாளச் செல்லும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்படுவது, அந்நாட்டில் இருக்கும் பெண்கள். பகலோ, இரவோ எந்த நேரத்திலும் இந்தப் பெண்களுக்குப் படைவீர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளம் கிராமத்துப் பெண் மரியா.
தன் சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையில் அடைக்கப்பட்டதைப்போல் உணர்ந்த மரியாவின் உள்ளத்தில் "இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் காட்டமாட்டாயா இறைவா?" என்ற வேதனை நிறைந்த கேள்வி விண்ணகத்தை நோக்கி எழுந்திருக்கவேண்டும். மரியா எழுப்பிவந்த வேண்டுதல்களுக்கு விடை வந்தது. எப்படிப்பட்ட விடை அது! மணமாகாத அவரை தாயாகுமாறு அழைத்தார் இறைவன்.

இது அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனையை வழங்கியத் தீர்ப்பு. மணமாகாத இளம் பெண்கள் தாயானால், அவர்களை ஊருக்கு நடுவே நிறுத்தி, கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பது, யூதர்களின் சட்டம். இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. அதுவும் உரோமையப் படைவீரர்களால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி, கருவுற்ற பல இளம்பெண்கள் இவ்வகையில் கொல்லப்பட்டதை மரியா நேரில் கண்டிருக்கவேண்டும். அவர்களில் சிலர், இளம்பெண் மரியாவின் தோழிகளாகவும் இருந்திருக்கக்கூடும். தாங்கள் செய்யாத ஒரு குற்றத்திற்காக, அந்த இளம்பெண்கள் கொடுமையாகக் கொல்லப்பட்டதைப் பார்த்த மரியா, பின்னர், தனிமையில் வந்து கதறி அழுதிருக்க வேண்டும்.
மணமாகாமல் தாயாகும் நிலைக்கு, இறைவன் தந்த இவ்வழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக்கொள்வதும், வலியச்சென்று, தூக்குக் கயிறை எடுத்து, கழுத்தில் மாட்டிக்கொள்வதும் ஒன்றுதான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை அதீத நம்பிக்கை அந்த இளம் பெண்ணுக்கு! பெரும் போராட்டத்தின் இறுதியில், 'இதோ உமது அடிமை' என்று சொன்னார் மரியா. அவரது நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் வானதூதர் இன்னொரு செய்தியைச் சொன்னார். அவரது உறவினராகிய எலிசபெத்து கருதரித்திருக்கிறார் என்பதே அச்செய்தி. குழந்தைப்பேறு இல்லாததால், ஊராரின் பழிச்சொற்களைக் கேட்டு, கேட்டு மனம் வெறுத்து, வீட்டுக்குள் தன்னையே சிறைபடுத்திக்கொண்ட எலிசபெத்தைச் சந்திக்க மரியா சென்றார். இந்நிகழ்வு இன்றைய நற்செய்தியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. - லூக்கா நற்செய்தி 1: 39-45

இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் மரியாவும், எலிசபெத்தும் சொல்லித்தரும் பாடங்கள் பல உள்ளன. இவ்விருவரும் தங்கள் வாழ்வில் இறைவனைத் தேடியவர்கள். தன்னைத் தேடியவர்களைத் தேற்ற, இறைவன் அன்று வந்தார்; இன்று வருகிறார்; இனியும் வருவார் என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் ஓர் அற்புத விழாவே, கிறிஸ்மஸ். இது, மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம்.

இறைவன் நம் வாழ்வில் செயலாற்றும் பல்வேறு வழிகளை, இவ்விரு பெண்களின் வாழ்வும் சித்திரிக்கிறது. எலிசபெத்தின் வாழ்வில், மிக, மிகத் தாமதமாகச் செயல்பட்ட இறைவன், மரியாவின் வாழ்வில் ஒரு புயலென நுழைந்தார். மிகத் தாமதமாகவோ, அல்லது, புயல் வேகத்திலோ, வாழ்வில் காரியங்கள் நிகழும்போது, கூடவே கேள்விகள் பலவும் எழுகின்றன. ஏன் எனக்கு? ஏன் இப்போது? போன்ற கேள்விகள், மரியாவின் உள்ளத்திலும், எலிசபெத்தின் உள்ளத்திலும் கட்டாயம் எழுந்திருக்கவேண்டும்.

கேள்விகள் எழுவது இயற்கை. ஆனால், எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள், விளக்கங்கள் கிடைக்காது. மரியா வானதூதரைச் சந்தித்தபோதும், மரியா, எலிசபெத்தைச் சந்தித்தபோதும், ஒரு சில கேள்விகள், வெளிப்படையாகக் கேட்கப்பட்டன. பல கேள்விகள் அவர்கள் மனதில் அடைபட்டிருந்தன. கேள்விகள் கார் மேகங்களாகச் சூழ்ந்திருந்தாலும், அந்த மேகங்களிலிருந்து பெய்த இறைவனின் கருணை என்ற மழையில் அவர்கள் இருவரும் நனைந்தனர். கடவுளைக் கேள்விக் கணைகளால் துளைப்பதற்குப் பதில், கடவுளின் கருணை மழையில் நனைவது மேலான ஒரு வழி. இது, மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் இரண்டாவது பாடம்...

இவ்விருவருக்கும் இடையே நிகழ்ந்த அச்சந்திப்பு ஒருவரை ஒருவர் வாழ்த்துவதிலும், ஆசீர்வதிப்பதிலும், இறைவனைப் புகழ்வதிலுமே நிறைந்தது. "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" - லூக்கா 1: 42 என்று எலிசபெத்து மரியாவைப் புகழ்ந்த இச்சொற்களைப்போல், நாம் தினமும் ஒருவர் ஒருவரை வாழ்த்தினால், ஆசீர்வதித்தால், இந்த பூமியில் எவ்வளவு நலம் வளரும்! பிறரை வாழ்த்தும்போது, ஆசீர்வதிக்கும்போது நாமும் வாழ்த்தப்பெறுகிறோம், ஆசீர் பெறுகிறோம். வயதில் முதிர்ந்தவர்கள், "மவராசனா இரு" "மவராசியா இரு" என்று வாழ்த்தும்போது எழும் நிறைவு, கேட்பவரையும் நிறைக்கிறது, கொடுப்பவரையும் நிறைக்கிறது. மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் மூன்றாவது பாடம் இது.

2005ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவையில் திருநற்கருணை ஆண்டு சிறப்பிக்கப்பட்ட வேளையில் தன் தலைமைப் பொறுப்பை ஏற்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அவ்வாண்டு மே 31ம் தேதி, அன்னை மரியாவின் வணக்க மாதத்தை நிறைவு செய்யும் செப வழிபாட்டில், அன்னை மரியாவும், எலிசபெத்தும் சந்தித்த நிகழ்வையும், திருநற்கருணை பவனியையும் இணைத்து, வழங்கிய அழகான எண்ணங்கள் நம் சிந்தனைகளை நிறைவு செய்கின்றன:
"இளம்பெண் மரியா, எலிசபெத்தைச் சந்திக்க மேற்கொண்ட பயணத்தை, வரலாற்றில் நிகழ்ந்த முதல் திருநற்கருணை பவனியாக நாம் கருதலாம். இறைவனை தன் கருவில் தாங்கியதன் வழியே, வாழும் நற்கருணைப் பேழையாக விளங்கிய மரியா, மக்களை மீட்க, இறைவன் இறங்கிவந்து தங்கிய உடன்படிக்கைப் பேழையாகவும் விளங்கினார். மரியாவும், எலிசபெத்தும் சந்தித்த வேளையில், அவர்களுக்கிடையே, முதல் நற்கருணை ஆசீர் நிகழ்ந்தது. அவர்கள் இருவர் மட்டும் அல்லாமல், அவர்கள் கருவில் வளர்ந்துவந்த குழந்தைகளும் மகிழ்வால் நிறைந்தனர். அம்மகிழ்வின் சிகரமாக, அன்னை மரியாவின் புகழ் பாடல் எழுந்தது."

இந்த கிறிஸ்மஸ் காலத்தில், குழந்தை இயேசுவை, நம் இல்லங்களிலும், கோவில்களிலும் ஓர் அலங்காரப் பொருளாக மட்டும் வைத்துவிடாமல், அவரை, நம் உள்ளங்களில் சுமந்துசெல்லும் பேழைகளாக மாறுவோம். கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் வேளையில், அன்னை மரியாவையும் எலிசபெத்தையும் போல, உள்ளார்ந்த அன்புடன், ஒருவர் ஒருவருக்கு, ஆசீர் வழங்குவோம், ஆசீர் பெறுவோம்.