30 June, 2020

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – பெருமளவு மீன்பிடிப்பு புதுமை 2



Praying for the sick

விதையாகும் கதைகள் : ஆனந்த அதிர்ச்சி தரும் ஆண்டவன்

இளம் அருள்பணியாளர் ஒருவர், புதிதாக, ஒரு பங்கில் பணிபுரியச் சென்றார். அந்தப் பங்கைச் சேர்ந்த மிக வயதான ஒரு பெண்மணி, உடல்நிலை மிகவும் நலிந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் எந்த நேரத்திலும் இறக்கலாம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டதால், அவரைக் காண்பதற்கு இளம் அருள்பணியாளர், மருத்துவமனைக்குச் சென்றார்.
மருத்துவமனையில் அப்பெண்ணை சந்தித்து, இருவரும், பத்து நிமிடங்கள் பல்வேறு விடயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அருள்பணியாளர் புறப்படும் வேளையில், தனக்காகச் செபிக்கும்படி, அப்பெண்மணி கேட்டுக்கொண்டார். அருள்பணியாளர் அவரிடம், "என்ன கருத்துக்காக நாம் செபிக்கலாம்?" என்று பொதுப்படையாகக் கேட்டபோது, அப்பெண்மணி, "இது என்ன கேள்வி, சாமி? நான் பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று செபியுங்கள்" என்று கூறினார்.
அவரது உடல்நிலையைப்பற்றி நன்கு அறிந்திருந்த அந்த இளம் அருள்பணியாளர், என்ன சொல்லி செபிப்பதென்று புரியாமல், மிகுந்த தயக்கத்துடன், நம்பிக்கையற்ற ஒரு தொனியில், அப்பெண்மணியின் தலைமீது கரங்களை வைத்து, அவர் பூரண குணமடையவேண்டும் என்று செபித்தார். அவர் அந்த செபத்தை முடிக்கும் வேளையில், அப்பெண், 'ஆமென்' என்று உரக்கச் சொன்னார். அதுவரை, படுத்த படுக்கையாய் இருந்த அப்பெண், மலர்ந்த முகத்துடன், "ஆண்டவர் உங்கள் செபத்தைக் கேட்டுவிட்டார் என்று நினைக்கிறேன். நான் பூரண குணமடைந்ததைப் போல் உணர்கிறேன்" என்று சொன்னார்.
அது மட்டுமல்ல. அவர் படுக்கையைவிட்டு எழுந்து, அருகிலிருந்த அறைகளுக்குச் சென்று, "நான் குணமடைந்துவிட்டேன்" என்று அனைவரிடமும் கூறினார். அந்த இளம் அருள்பணியாளர், தன் கண்முன்னே நிகழ்வனவற்றை நம்பமுடியாமல், ஒருவித மயக்க நிலையில், மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தார். பின்னர், வானத்தைப் பார்த்து, "இறைவா, இப்படி ஓர் அதிர்ச்சியை இனிமேல் தராதீர்!" என்று ஆண்டவனுக்குக் கட்டளையிட்டார்.
அதிர்ச்சி தருவது, குறிப்பாக, ஆனந்த அதிர்ச்சி தருவது, ஆண்டவனின் அழகு.

“Put out into the deep”


லூக்கா நற்செய்தி பெருமளவு மீன்பிடிப்பு புதுமை 2

மகன் தந்தையிடம் புதிர் ஒன்றைத் தொடுத்தான். "அப்பா, ஒரு குளத்தின் கரையில் மூன்று தவளைகள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒன்று, குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. இப்போது, எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று கேட்டான். "இது என்ன பெரிய புதிர்... மீதி இரண்டு தவளைகள் இருக்கும்" என்று பெருமையாகச் சொன்னார் தந்தை.
"அப்பா, கேள்வியைச் சரியாகப் புரிந்துகொண்டு பதில் சொல்லுங்கள். மூன்று தவளைகளில் ஒன்று, குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. இப்போது சொல்லுங்கள், எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று மகன், கேள்வியை மீண்டும் கேட்டான்.
அப்பா எதையோப் புரிந்துகொண்டவர்போல், ", புரிகிறது. கரையில் ஒன்றும் மீதி இருக்காது. ஒரு தவளை குதித்ததும், மற்ற தவளைகளும் குளத்திற்குள் குதித்துவிடும்" என்று சொன்னார். அவரது அறிவுத்திறனை அவரே மெச்சிக்கொண்டு, புன்னகை பூத்தார்.
மகன் தலையில் அடித்துக்கொண்டு, சலிப்புடன் விளக்கினான்: "அப்பா, மீண்டும் தவறாகச் சொல்கிறீர்கள். மூன்று தவளைகளும் கரையில்தான் இருக்கும். அவற்றில் ஒன்று குளத்திற்குள் குதிக்க, தீர்மானம் செய்ததே ஒழிய, இன்னும் குதிக்கவில்லை" என்று விளக்கம் கொடுத்தான். தந்தையின் முகத்தில் இறுக்கம் தெரிந்தது. இலேசாகக் கொஞ்சம் அசடும் வழிந்தது.
தீர்மானங்கள் எடுப்பதற்கும், தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்கும் உள்ள இடைவெளியைக் குறித்துக்காட்டும் கதை இது.

லூக்கா நற்செய்தி 5ம் பிரிவில் பெருமளவு மீன்பிடிப்பு நடைபெறும் புதுமையில், இயேசு, சீமோனிடம் ஆழத்திற்குச் செல்லும்படிவிடுக்கும் ஓர் அழைப்பு, இந்தக் கதையை நினைத்துப் பார்ப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது. கெனசரேத்து ஏரிக்கரைக்கு வந்த இயேசுவை, மக்கள் கூட்டம் நெருக்கிக் கொண்டிருந்ததால், அவர், கரையோரமாய் நின்றுகொண்டிருந்த சீமோனின் படகில் ஏறி அமர்ந்து, மக்களுக்குப் போதித்தார் என்பதை சென்ற வார விவிலியத்தேடலில் சிந்தித்தோம்.

சீமோனின் படகை தன் பிரச்சார மேடையாகப் பயன்படுத்திவிட்டு, இயேசு மீண்டும் தன் வழியே சென்றுவிடவில்லை. இன்னும், சொல்லப்போனால், சீமோனின் வாழ்வை தன் பக்கம் முழுமையாகத் திருப்புவதற்குத்தான், இயேசு, கெனசரேத்து ஏரிக்கரைக்கு வந்தார் என்ற கோணத்தில், சென்ற வாரம் நாம் சிந்தித்தோம். சீமோனையும், அவருடன் இருந்த மீன்பிடித் தொழிலாளர்கள் சிலரையும் தன் பக்கம் ஈர்க்க, இயேசு விடுத்த ஓர் அழைப்பு, ஒரு புதுமையாக உருவெடுத்தது. இயேசு விடுத்த அந்த அழைப்பை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:
லூக்கா 5:4-5
இயேசு பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார்.

ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று இயேசு தந்த ஆலோசனையில், நம் சிந்தனைகளை ஆழப்படுத்துவோம்.

“A ship in harbour is safe, but that’s not what ships are built for” அதாவது, "துறைமுகத்தில் நிற்கும் கப்பல் பாதுகாப்பாக இருக்கும், ஆனால், துறைமுகத்தில் நிற்பதற்காக கப்பல்கள் கட்டப்படுவதில்லை" என்ற கூற்றை நாம் அறிவோம்.
சுகமாக, தண்ணீரில் மிதப்பதற்கு அல்ல, மாறாக, தண்ணீரைக் கிழித்துக்கொண்டு பயணங்கள் செய்வதற்கே, கப்பல்கள் கட்டப்படுகின்றன. பலவேளைகளில், அப்பயணங்களில், அலைகளும், புயல்களும் கப்பலைச் சூழ்ந்துவரும். அலைகளுக்கும், புயல்களுக்கும் அஞ்சி, கப்பல், கரையோரத்திலோ, துறைமுகத்திலோ நின்றுவிட்டால், அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாது.
கரையோரத்தில் இருக்கும் நீரில் ஆழம் இருக்காது; துறைமுகத்தில் இருக்கும் நீரில் சலனம் ஏதும் இருக்காது. ஆழமற்ற, சலனமற்ற நீரில் மிதக்கும் கப்பலுக்கோ, படகுக்கோ ஆபத்து ஏதும் இருக்காது. ஆனால், அந்தக் கப்பலால், படகால், பயனும் இருக்காது. துறைமுகத்தில் நின்று சுகம் காணும் கப்பல், துருபிடித்துப் போகும்.

நமது வாழ்வை, ஒரு படகாக, கப்பலாக உருவகித்துப் பார்ப்போம். வாழ்வில் நாம் சந்திக்கும் உறவுகள், சிந்திக்கும் உண்மைகள் ஆகியவற்றில், ஆழங்களைக் காண்பதற்கு அஞ்சி, நம் வாழ்க்கைப் படகை, ஆழமற்ற பகுதிகளில், மேலோட்டமாக ஓட்டிச் செல்வதற்கு இவ்வுலகம் சொல்லித்தருகிறது.
பணியிடங்களில் நாம் உருவாக்கும் உறவுகள், பெரும்பாலும் மேலோட்டமான அறிமுகங்களில் ஆரம்பமாகி, மேலோட்டமாகவே செல்கிறது. விரைவில், அந்த உறவில் சலிப்பு உண்டாகி, பிரிந்துவிட வேண்டியுள்ளது. இதைத்தான், இன்றைய உலகில் 'Hi-Bye' உறவுகள் என்று கூறுகிறோம்.
குடும்ப உறவுகளிலும், நேருக்குநேர் அமர்ந்து, முகமுகமாகப் பார்த்து, பேசி, உறவுகளை ஆழப்படுத்திக் கொள்வதற்குப் பதில், நம்மிடம் உள்ள கைப்பேசிகள், கணனிகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் நாம் அதிக ஈடுபாட்டைக் காட்டுகிறோம்.
கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கத்தால், இல்லங்களில் அடைபட்டிருக்கும் சூழல் உருவான வேளையில், ஒரு சில இல்லங்களில், குடும்பத்தினர் கூடிவந்து, பேசி, சிரித்து, உணவு உண்டதையும், உறவுகளில் புதிய ஆழத்தைக் கண்டதையும், ஓர் அழகிய அனுபவமாக, சமூக வலைத்தளங்களில், அவ்வப்போது கூறிவருகின்றனர்.

உறவுகளில் ஆழம் காண அஞ்சுவதுபோலவே, நம் சிந்திக்கும் பழக்கங்களிலும் ஆழங்களைச் சந்திக்க தயங்குகிறோம். நமக்குள் உருவாகும் சிந்தனைகளில், ஆழத்திற்குச் செல்லும் பொறுமையின்றி, எதையும் மேலோட்டமாக சிந்திக்க தூண்டப்படுகிறோம். நாம் வாழும் அவசர உலகில், எந்த ஒரு விடயத்தையும், ஆற, அமர, சிந்தித்து, செயல்பட, நமக்கு நேரமும் இருப்பதில்லை, பொறுமையும் இருப்பதில்லை. இவ்வாறு, துரிதமாக, மேலோட்டமாக செல்லும் நம் வாழ்க்கைப் படகை, "ஆழத்திற்கு தள்ளிக்கொண்டு போக" இயேசு அழைக்கிறார்.

இயேசு விடுத்த இந்த அழைப்பில் மற்றுமோர் அழகிய அம்சம் உள்ளது. அவர், சீமோனின் படகிலிருந்து போதித்தபின், படகைவிட்டு இறங்கி, கரையில் நின்றுகொண்டு, சீமோனிடம், "ஆழத்திற்குச் செல்லுங்கள்" என்று கட்டளையிடவில்லை. மாறாக, "ஆழத்திற்கு வாருங்கள்" என்று கூறுகிறார். அதாவது, சீமோனும், மற்றவர்களும் ஆழத்திற்குச் செல்லும் வேளையில், இயேசு தன்னையும் அவர்களோடு இணைத்துக் கொள்கிறார்.

ஆழத்திற்குச் செல்வது, எளிதான காரியம் அல்ல... ஆழத்திற்குச் செல்வதற்கு, ஏகப்பட்டத் தயக்கங்கள் நமக்குள் எழலாம். எதையும், ஆழமாக அறிந்து, புரிந்து செயல்படுவதற்கும், ஆழமான, அர்ப்பண உணர்வுடன், உறவுகளை வளர்ப்பதற்கும், தனிப்பட்டத் துணிச்சல் தேவை. அத்தகைய ஆழத்திற்குச் செல்லுமாறு அழைக்கும் ஆண்டவன் நம்மோடு வரும்போது, நம்மால் துணிந்து செல்லமுடியும்.

தன்னை நம்பி, தனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு, படகை ஆழத்திற்குக் கொண்டு சென்ற சீமோனின் எளிமையான உள்ளம் இயேசுவைக் கவர்ந்திருக்கவேண்டும். தங்கள் சொல்லுக்குக் கட்டுப்படும் எளியோரை, சுயநலனுக்காக, சொந்த இலாபங்களுக்காகப் பயன்படுத்தும் தலைவர்களை நாம் அறிவோம்.
இயேசுவின் எண்ணங்கள், நம் சுயநலத் தலைவர்களைவிட வேறுபட்டவை. சீமோனை இன்னும் தன் வயப்படுத்த, அவர் வழியாக, இன்னும் பலரைத் தன் வயப்படுத்த நினைத்தார் இயேசு. சீமோனை, மனிதரைப் பிடிப்பவராக மாற்ற விழைந்த இயேசு, அதற்கு முன், புது வழியில் மீன்பிடிக்கும் முறையைச் சொல்லித்தர விழைந்தார். பகல் வேளையில், ஏரியில் வலைகளை வீசச் சொன்னார்.

இயேசு விடுத்த இந்தக் கட்டளை, சீமோனுக்கும், படகில் இருந்த ஏனையோருக்கும் ஒரு புதிராக ஒலித்திருக்கும். இதைக் கேட்டு, சீமோனும், உடன் இருந்தோரும், அதிர்ச்சியும், கொஞ்சம் எரிச்சலும் அடைந்திருக்கலாம். மீன்பிடிக்கும் தொழிலில் பல ஆண்டுகள் ஊறித் தேர்ந்த அவர்களது திறமையையும், அனுபவத்தையும் கேலி செய்வதுபோல் இருந்தது, இயேசுவின் கட்டளை.

சீமோன் நினைத்திருந்தால், இயேசுவிடம் அவர் இவ்விதம் சொல்லியிருக்கலாம்: "ஐயா, பிறந்ததுமுதல், மீன்பிடித்து வாழ்பவர்கள் நாங்கள். இந்த கெனசரேத்து ஏரியில் எங்களுக்கு தெரியாதது அதிகம் இல்லை. உங்களுக்கு இந்தத் தொழிலைப்பற்றி எவ்வளவு தெரியும் என்பதும் எங்களுக்குத் தெரியாது. ஆனால், பகல்நேரத்தில் எங்களை மீன்பிடிக்கச் சொல்வது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இந்தப் பகல் நேரத்தில் நாங்கள் வலை வீசினால், பார்ப்பவர்கள், எங்களைப் பைத்தியக்காரர்கள் என்று சொல்வார்கள். உங்கள் ஆலோசனைக்கு நன்றி. நீங்கள் விரும்பினால், இந்த ஏரியைச் ஒருமுறை இந்தப் படகில் சுற்றிவிட்டு, கரைக்குத் திரும்புவோம்" என்று, சீமோன், தன் நிலைப்பாட்டை, நல்லவிதமாகக் கூறியிருக்கலாம்;

மாறாக, கள்ளம் கபடமற்ற சீமோன், தன் இயலாமையையும், இயேசுவின் மீது தனக்கு உருவாகியிருந்த நம்பிக்கையையும் இவ்விதம் சொல்கிறார்: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” (லூக்கா 5:5) என்பது, சீமோனின் மறுமொழியாக இருந்தது. இக்கூற்றில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் ஒரு சில உள்ளன. அவற்றையும், இந்தக் கூற்றைத் தொடர்ந்து, பகல் நேரத்தில் கெனசரேத்து ஏரியில் நிகழ்ந்த புதுமையையும் நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

26 June, 2020

Ready to welcome ‘unknown Angels’ ‘வானதூதர்களை’ வரவேற்போம்

Welcome sign

13th Sunday in Ordinary Time

Many of the tourists who visit India, Sri Lanka or other Asian countries, are usually impressed by the welcome and hospitality they receive. Some of them recount their experience after they return to their homeland. I remember one Jesuit who, when he heard that I was from Tamil Nadu, began speaking about the warm reception he had in various villages in Tamil Nadu.
In recent years, with the onslaught of western culture, our welcoming nature has diminished a bit. During the last three months, an unknown, unseen and ‘uninvited guest’ has occupied our towns and villages to such an extent that we are scared of inviting anyone to our houses. At this moment, Mother Church proposes the theme of ‘hospitality’ for our Sunday liturgy. 

This Sunday’s Liturgy invites us to reflect on one of the most beautiful aspects of human life – namely, hospitality! ‘Atithi Devo Bhava’ in Sanskrit means "Guest is God" or “God in the guise of a Guest”. Although in recent years India and Sri Lanka have suffered from the disease of ‘us’ and ‘them’, the original implication of this famous phrase remains intact in most parts of India, especially in our villages. For most Indians, the guest deserves attention and respect as does God.

The first reading (2 Kings 4: 8-11, 14-16) speaks of the lady from Shunem entertaining Prophet Elisha. She begins her hospitality with providing a meal and goes on to build an upper room in her house for the holy man of God. Giving accommodation for a guest in one’s house is a decent form of hospitality. But, building a separate room exclusively for the use of a particular guest, is a very high form of hospitality. Prophet Elisha, having enjoyed this hospitality, blesses the lady with a child. Hospitality fills the host and the guest with blessings!

In the closing lines of today’s gospel, Jesus talks of the blessings that will be showered on those who practice hospitality in ever so minute levels. Even ‘a cup of cold water’ will not go unrewarded, says Jesus! This is the final part of the discourse given by Jesus in chapter 10 of Matthew.

This chapter contains the long discourse Jesus gave to his chosen apostles. He begins this discourse giving the apostles power to heal, to raise the dead and to cast out demons etc. Then the discourse becomes heavier and ‘point-blank’ when Jesus lists out the problems that his disciples will have to face in the world. He does not mince words when he says that one’s own family members will turn against the disciples. Against such odds, Jesus wants his disciples to be courageous even to the point of death. This was the theme of last Sunday’s gospel (Matthew 10: 26-33).

This Sunday’s gospel begins with more challenging statements of renunciation. After such a heavy dose of warning and challenges, Jesus concludes the discourse with consoling words of what happens to people who are kind to them:
“Whoever welcomes a prophet as a prophet will receive a prophet’s reward, and whoever welcomes a righteous person as a righteous person will receive a righteous person’s reward. And if anyone gives even a cup of cold water to one of these little ones who is my disciple, truly I tell you, that person will certainly not lose their reward.” (Matthew 10: 41-42)

When Jesus spoke of these gestures of hospitality, his mind must have savoured the moments of welcome and hospitality he had enjoyed in his ministry - the welcome he enjoyed in the house of Martha, Mary and Lazarus; the wedding at Cana; the cool water he received from the Samaritan woman on a hot day etc. Such hospitality kept Jesus going.

The early Church would never have made it, had it not "practiced hospitality" as Paul mandated in Romans 12. Travelling missionaries stayed in homes ... conducted worship in homes ... served the Sacrament in homes ... and took up collections for those engaged in the work of the Gospel in homes. In the first two centuries of the Church's existence, any talk about "the house of God" literally meant a house ... somebody's house ... where the people of God gathered and shared the word of God and ‘broke the bread’.
Only after Constantine gave the official recognition to Christianity, places of Christian worship were erected. Prior to this, houses of simple people were turned into ‘churches’. The welcome, hospitality and sharing practised by the early Christians attracted others to join ‘the way’.

What happened to this noble Christian hospitality? we cry. Well, what happened to hospitality was insecurity. When people no longer felt safe, they began erecting walls of security and separation! They installed locks, buzzers, cameras, gatehouses and tall hedges ... along with any number of things that controlled access. Every house in a city has become more of a fortress with so many security gadgets.

It is a pity that our world is getting more and more polarised into ‘us’ and ‘them’. We have world leaders who dream of building walls to protect ‘us’ against ‘them’. In this context, we pray that the good old virtue of ‘hospitality’ is revived from its slumber. May the early Christians re-educate us in the art of hospitality and restore us as a human family!

On July 14, 2015, NASA’s space probe, the ‘New Horizons’, flew close to the farthest planet in the solar system – Pluto, and began sending pictures of our distant – very distant – cousin. The ‘New Horizons’ began its mission in January, 2006. Travelling at the speed of 50,000 kmph, for nine years, it ‘touched’ Pluto. The distance between the Earth and Pluto is around 6 billion kilometres (depending on the orbital positions of the Earth and Pluto). Traversing such an unthinkable distance at such an incredible speed, without colliding with other planets, thousands of satellites, and millions of asteroids… is a scientific miracle, indeed. We the ‘earthlings’ have made attempts to ‘shake hands’ with the most distant relatives of the solar family – Pluto and its moons!

It is significant that on the very same July 14, 2015, when the ‘New Horizons’ made this historic contact with our ‘distant cousin’, Iran and some powerful nations arrived at a nuclear deal in Vienna! This news made the human family breathe a sigh of relief, at least for a brief period. We are aware that this deal is not a guarantee for a nuclear-free, safe world. In the past two years, we have been listening to two ‘immature’ world leaders, talking openly about how they would destroy one another with their nuclear power.

Although the ‘New Horizons’ ‘touching’ Pluto, and the Iran deal, happening on the same day was not pre-planned, it gives us an opportunity to put them together and see where we are heading. Our so called progress takes us far beyond unthinkable distances across space in a smooth, serene fashion, while we stumble and fall in our efforts to bridge distances between nations and cultures! I am reminded of the famous lines from a passage titled – ‘The Paradox of our Times’: “We've been all the way to the moon and back, but have trouble crossing the street to meet a new neighbour. We conquered outer space but not inner space.”

We have taken enormous efforts to ‘shake hands’ with Pluto, but hesitate to do so with the person living across the street. Especially with Covid 19, any form of physical touch is dreaded across the globe. Our fear of face-to-face, person-to-person relationship has resulted in inventing hundreds of communication gadgets. We are willing to spend hours together with these gadgets, communicating with persons, thousands of miles away, known as well as unknown, while face-to-face communication with family members have diminished to a minimum.

On this Sunday, when we reflect on the virtuous practice of hospitality, let us ask the Lord to renew in our hearts, true sentiments of welcome and hospitality. As we emerge from the clutches of the unwanted and uninvited guest – Covid 19 – let us be more sensitive to welcome those who have lost everything in their life due to this virus. When we welcome these unfortunate guests, we shall also be welcoming angels in disguise into our homes!   

Let brotherly love continue. Do not neglect to show hospitality to strangers, for thereby some have entertained angels unawares. (Hebrews 13:1-2)

Be not inhospitable to strangers

பொதுக்காலம் 13ம் ஞாயிறு


இந்தியாவிலும், இலங்கையிலும், பயணங்கள் மேற்கொள்ளும் அயல்நாட்டவர், நாம் வழங்கும் வரவேற்பினால் பிரமிப்படைவதைக் காணலாம். நமது வரவேற்பையும், விருந்தோம்பலையும் பற்றி அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியபிறகும் பேசிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். நமது கலாச்சாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் விருந்தோம்பல் பண்பு, அண்மைய ஆண்டுகளில், தேய்ந்து, மறைந்து வருவது, மனதை பாரமாக அழுத்துகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி, அழையாத ஒரு விருந்தினராக வந்து, நம் நாடுகளிலும், நகரங்களிலும் தங்கிவிட்டதால், நமது விருந்தோம்பல் பண்பு காயப்பட்டிருப்பதை நாம் உணர்கிறோம். இத்தகையச் சூழலில், விருந்தோம்பலைக் குறித்து சிந்திக்க, இந்த ஞாயிறு வழிபாடு, நம்மை அழைக்கிறது.

இந்தியப் பாரம்பரியத்தில், விருந்தினருக்கு உயர்ந்த மரியாதை வழங்கப்பட்டது. 'Atithi Devo Bhava' என்ற சொற்கள், இந்திய வேத நூல்களில் காணப்படுகின்றன. இதன் பொருள்: "விருந்தினர், கடவுளுக்குச் சமமானவர்". இதையொத்த எண்ணத்தை, 'விருந்தோம்பல்' என்ற பிரிவில் திருவள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார்:
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத்தவர்க்கு.
அதாவது, நாள் முழுவதும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, அடுத்த விருந்தினரை எதிர்பார்த்து காத்திருப்போர், வானவர் மத்தியில் நல்ல விருந்தினர் ஆவார் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.
வானவரின் மத்தியில் விருந்தினர் ஆவது போல், வானவர் என்று தெரியாமலேயே, அவர்களை அழைத்து, விருந்து படைத்த ஆபிரகாமை நாம் விவிலியத்தில் சந்திக்கிறோம். (தொடக்க நூல் 18:1-8) ஆபிரகாம் பெற்ற இந்த அற்புத அனுபவம், கிறிஸ்தவர்களின் அடிப்படை அனுபவமாக விளங்கவேண்டும் என்று, எபிரேயருக்கு எழுதப்பட்டத் திருமுகம் நமக்கு அறிவுறுத்துகிறது:
எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 13: 1-2
சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு.

வந்திருக்கும் விருந்தினர் வானவராவதும், விருந்தினரை வரவேற்று, உபசரிப்பவர்கள், வானவர் நடுவே விருந்தினராவதும், விருந்தோம்பலின் அழகான விளைவுகள். இக்கருத்துக்களை வலியுறுத்தும் வகையில், இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியின் இறுதிப் பகுதியும் அமைந்துள்ளன.

சூனேம் நகரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், இறைவாக்கினர் எலிசாவை வரவேற்று, உபசரித்ததை இன்றைய முதல் வாசகம் (2 அரசர் 4:8-11, 14-16) விவரிக்கின்றது. உணவு படைப்பதோடு துவங்கும் இந்த உபசரிப்பு, இறைவாக்கினர் வந்து தங்குவதற்கு உறைவிடம் உருவாக்கித்தரும் முயற்சியாக வளர்கிறது. அதுவும், சூனேம் நகரப் பெண்மணி, இறைவாக்கினருக்கென தன் வீட்டின் மேல்தளத்தில் புதிதாக அறை ஒன்றைக் கட்டி, அதை அவருக்கென ஒதுக்கி வைப்பதை இன்றைய வாசகம் விவரிக்கிறது. அப்பெண், மாடியில் அறையைக் கட்டி, அதில் இறைவாக்கினரைத் தங்கவைத்ததைக் குறித்து, விவிலியப் பேராசிரியர், அருள்பணி முனைவர் இயேசு கருணா அவர்கள் பகிர்ந்துகொள்ளும் எண்ணங்கள் அழகானவை:

மாடியறை நிறைவான தனிமையை நமக்கு தருகிறது. தெருவில் போவோர், வருவோர், மாடியறையைத் தட்டுவதில்லை. மாடியறையில் பக்கத்துவீட்டுக்காரர்கள் தொல்லையில்லை. மாடிவீடு நம்மை மேலே உயர்த்தி வைப்பதால், நாம் எல்லாரையும் விட பெரியவர் என்ற பெருமித உணர்வை நமக்குத் தருவதோடு, நம்மைக் கடவுளுக்கும் நெருக்கமாக்குகிறது. இன்னும் முக்கியமாக, மாடியறைக்கான வழி, வீட்டுக்குள்ளே இருப்பதால், மாடியறைக்கான உரிமை, வீட்டு உரிமையாளர்களுக்கும், மிக நெருக்கமானவர்களுக்கும் தவிர, வேறு யாருக்கும் வழங்கப்படுவதில்லை. இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, சூனேம் நகரத்துப் பெண், தன்னிடம் இருந்த மிகச் சிறந்ததை இறைவாக்கினர் எலிசாவுக்குக் கொடுக்கின்றார் என்பதை உணர்கிறோம்.

இத்தகைய விரும்தோம்பலால் உள்ளம் நிறைவடைந்த இறைவாக்கினர் எலிசா, குழந்தைப்பேறு இன்றி தவித்த சூனேம் நகரப் பெண்ணுக்கு குழந்தை வரம் கொடுக்கும் ஆசீரோடு இன்றைய முதல் வாசகம் நிறைவு பெறுகிறது. விருந்தோம்பல் நிகழும்போது, அதனைத் தருவோரும், பெறுவோரும் ஆசீர்வாதங்களால் நிறைவர் என்பதை இவ்வாசகத்தின் வழியே நாம் புரிந்துகொள்கிறோம்.
ஒருவரை ஏற்றுக்கொள்பவர், அதாவது வரவேற்று, உபசரிப்பவர், தகுந்த பலனைப் பெறுவார் என்பதை, இன்றைய நற்செய்தியில், இயேசு, ஓர் உறுதிமொழியாக வழங்குகிறார்.
இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தி, மத்தேயு பத்தாம் பிரிவின் இறுதிப் பகுதி. இயேசு, திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து, பணியாற்ற அனுப்பியபோது, அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகள், இப்பிரிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நோய்களைக் குணமாக்கவும், இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்யவும், பேய்களை ஓட்டவும் (மத். 10:8) அதிகாரங்களை வழங்கும் சக்திமிகுந்த சொற்களுடன், இயேசுவின் அறிவுரை ஆரம்பமாகிறது. இதைத் தொடர்ந்து, தன் சீடர்கள் சந்திக்கப்போகும் ஆபத்துக்களைக் குறித்து இயேசு வழங்கும் எச்சரிக்கைகள், இப்பிரிவின் அடுத்தப் பகுதியாக அமைந்துள்ளன. (மத். 10: 16-32). இந்த எச்சரிக்கைகளின் ஒரு பகுதியை, நாம் சென்ற ஞாயிறு, நற்செய்தியாகக் கேட்டோம்.

சீடர்கள் சந்திக்கவிருக்கும் ஆபத்துக்களை, மூடி மறைக்காமல் தெளிவாகக் கூறிய இயேசு, இப்பிரிவின் இறுதிப் பகுதியில், இன்னும் சில சவால்களை, சீடர்கள் முன் வைக்கிறார். அதுவே, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளாக ஒலிக்கின்றது. "தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்" (மத். 10:38) என்ற தெளிவான சவாலை விடுக்கும் இயேசு, கனிவு ததும்பும் சொற்களுடன் தன் அறிவரையை நிறைவு செய்கிறார்:
மத்தேயு 10: 40-42
உங்களை ஏற்றுக்கொள்பவர், என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை, அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர், இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை, அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர், நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார். இச்சிறியோருள் ஒருவருக்கு, அவர் என் சீடர் என்பதால், ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும், தம் கைம்மாறு பெறாமல் போகார் என, உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

'ஏற்றுக்கொள்ளுதல்', அதாவது, 'வரவேற்று உபசரித்தல்', 'ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் கொடுத்தல்' என்ற எண்ணங்களையெல்லாம் இயேசு தன் சீடர்களிடம் கூறியபோது, தனது பணிவாழ்வில் கிடைத்த விருந்தோம்பலை அவர் உள்ளம் அசைபோட்டிருக்க வேண்டும். மார்த்தா, மரியா, இலாசர் ஆகிய நண்பர்களிடையே அவர் பெற்ற வரவேற்பு, கானா திருமண விருந்து, தொழுகைக்கூடத் தலைவன் வீட்டில் கிடைத்த விருந்து, சமாரியப் பெண் தந்த குளிர்ந்த நீர்... இவை அனைத்தும் இயேசுவின் உள்ளத்தில் தோன்றியிருக்கும். தனக்குக் கிடைத்த விருந்தோம்பல் அனுபவங்கள் தன்னை வளமடையச் செய்துள்ளதுபோலவே, தன் சீடர்களின் வாழ்வையும் வளமையாக்கும் என்பதை இன்றைய நற்செய்தியில் இயேசு உறுதியுடன் கூறுகிறார். அத்துடன், தன் சீடர்களுக்கு வரவேற்பளிக்கும் மக்களும், தகுந்த பலனைப் பெறுவர் என்பதையும், இயேசு தெளிவுடன் கூறியுள்ளார்.

இயேசு சொல்லித்தந்த விருந்தோம்பலும், வரவேற்பும், ஆதிக் கிறிஸ்தவர்கள் நடுவே நிலவிய அடித்தளமான அனுபவம் என்றால், அது மிகையல்ல. கிறிஸ்தவ மறையை இத்தனை நூற்றாண்டுகளாக வாழவைத்ததன் ஒரு முக்கிய காரணம், ஆதி கிறிஸ்தவர்கள், மற்றும், ஏனைய நல்ல உள்ளங்கள், சீடர்களுக்குத் தந்த வரவேற்பும், விருந்தோம்பலும். இந்த வரவேற்பு இன்றி, கிறிஸ்தவ மறை உயிர் வாழ்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். கிறிஸ்துவின் சீடர்கள், ஊர், ஊராக, அல்லது, நாடுவிட்டு நாடு சென்றபோது, அவர்களை வேட்டையாடி, கொல்வதற்கு, பல்வேறு குழுக்கள் இருந்தாலும், அவர்களை வரவேற்பதற்கு ஒரு சில இல்லங்கள் திறந்திருந்தன. இந்த இல்லங்களில், சீடர்களுடன் கூடிய மக்கள் நடுவே, நற்செய்தி பகிர்ந்துகொள்ளப்பட்டது; இயேசுவின் இறுதி உணவு, நினைவுகூரப்பட்டது. ஆழமாகச் சிந்தித்தால், சீடர்களை வரவேற்ற இந்த இல்லங்களே, முதல் ஆலயங்களாக விளங்கின.

உரோமையப் பேரரசன் கான்ஸ்டன்டைன், 4ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட பின்னரே, கிறிஸ்தவர்களின் வழிபாட்டிற்கென, ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அதுவரை, கிறிஸ்தவர்கள், மறைவிடங்களில், பூமிக்கடியில், இரகசியமாக கூடி வழிபட்டனர் என்பதை அறிவோம். முதல் மூன்று நூற்றாண்டுகள், சாதாரண மக்கள் வாழ்ந்த இல்லங்களே, கிறிஸ்தவ மறையை வளர்த்த நாற்றங்கால்களாய் விளங்கின. அத்தனை கொடுமைகளுக்கும் மத்தியில், கிறிஸ்தவர்களிடையே நிலவிய வரவேற்பு, விருந்தோம்பல், பகிர்தல் ஆகிய பண்புகளே, கிறிஸ்தவம் நோக்கி மக்களை ஈர்த்தன.

இன்று கிறிஸ்தவ விருந்தோம்பலின் நிலை என்ன? பொதுவாக, இவ்வுலகில் விருந்தோம்பல் என்ற பண்பு குறைந்து, மறைந்துவருவது போலவே, கிறிஸ்தவ சமுதாயங்களிலும் மறைந்துவருகின்றது. இன்று, உலகெங்கும், நகரங்களில் வாழும் ஒவ்வொருவர் இல்லமும், பல்வேறு பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட அரணாக மாறியுள்ளது. அயலவர்மீது அச்சமும், சந்தேகமும் அதிகரித்துவிட்டதால், வரவேற்பு, விருந்தோம்பல், ஆகிய அழகிய அம்சங்கள், காற்றோடு கரைந்துவிட்டன. நமது சுயநல நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதால், 'தவித்த வாய்க்குத் தண்ணீர் தரும்' அடிப்படை ஈரமும் நமக்குள் வறண்டு வருவதை உணர்கிறோம்.

அயலவரை, உறவினரை முகமுகமாய் சந்திப்பது ஆபத்து என்பதால், கருவிகளின் துணையை நாடுகிறோம். இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் தொடர்புசாதனக் கருவிகள், தூரங்களை அழித்துவிட்டன என்று பெருமைப்படுகிறோம். ஆயிரமாயிரம் மைல்களுக்கப்பால் இருப்போரையும், நம் கருவிகள் வழியே சந்தித்து, கைகுலுக்கும் அளவுக்கு, நம் தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது என்றும் பெருமைப்படுகிறோம். இவ்வுலகத் தொடர்புகள் போதாதென்று, விண்வெளியில் உள்ள கோளங்களையும் தொட்டுவிடுமளவு நம் தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டன.

2015ம் ஆண்டு, ஜூலை மாதம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் விண்வெளி ஆய்வு மையம், NASA ஏவிய ஒரு விண்கலம், சூரியக் குடும்பத்தின் எல்லையில் சுற்றிவரும் கோளமான புளூட்டோவை (Pluto) நெருங்கி, அங்கிருந்து தெளிவான புகைப்படங்களை அனுப்பியது. 2006ம் ஆண்டு, சனவரி மாதம், விண்ணில் ஏவப்பட்ட 'புதியத் தொடுவானங்கள்' (New Horizons) என்ற இந்த விண்கலம், மணிக்கு, ஏறத்தாழ 50,000 கி.மீ. வேகத்தில் 9 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, சூரியக் குடும்பத்தின் தூரத்து உறவினரைத் தொட்டுவிட்டது. பூமிக்கும், புளுட்டோவுக்கும் இடையே உள்ள தூரம் ஏறத்தாழ 600 கோடி கி.மீட்டர்கள் என்று கூறப்படுகிறது.

விண்வெளியில் 600 கோடி கி.மீட்டர்களைக் கடந்து, புளுட்டோவைத் தொட்டுவிட வழிகளை கண்டுபிடித்த நாம், பக்கத்து வீட்டாரைத் தொட்டுவிட, அவர்களை வரவேற்க வழிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எழுகிறது. விண்வெளியை வெல்லும் நாம், நம் மனவெளியை வெல்ல முடியவில்லையே என்ற நெருடல் எழுகிறது.

"நமது காலத்தின் முரண்பாடு" (The Paradox of Our Time) என்ற தலைப்பில், Bob Moorehead என்பவர் எழுதிய வரிகள், இந்த நெருடலை வெளிப்படுத்துகின்றன. 1995ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக் குறுங்கட்டுரையில், இடம்பெறும் வார்த்தைகள், இன்று நமக்கு முன் கேள்விகளைத் தொடுக்கின்றன:
பெரும் முயற்சிகள் எடுத்து, விண்வெளியைக் கடந்து, நாம் நிலவைத் தொட்டுவிட்டு வந்துள்ளோம்; ஆனால், தெருவைக் கடந்து, அடுத்த வீட்டுக்காரரைச் சந்திக்க, நாம் தயங்குகிறோம். விண்வெளியை வென்றுவிட்டோம், ஆனால், ஆழ்மன வெளியை வெல்லவில்லை.
(We've been all the way to the moon and back, but have trouble crossing the street to meet a new neighbor. We conquered outer space but not inner space.)

இந்திய, இலங்கை கலாச்சாரத்தின் ஆணிவேர்களில் ஒன்றாக திகழும் விருந்தோம்பல் பண்பை நாம் மீண்டும் உயிர்பெற்றெழச் செய்யவேண்டும். கோவிட்-19 தொற்றுக்கிருமியின் தாக்கம் குறைந்து, நாம் மீண்டும் இயல்பு வாழ்வைத் தொடரும் வேளையில், இந்தக் கொள்ளைநோயின் தாக்கத்தால் அனைத்தையும் இழந்து தவிப்போரை வரவேற்கும் மனதை இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம். நாம் வரவேற்கும் அந்த விருந்தினர்கள் நடுவே, வானதூதர்களும், இறைவாக்கினர்களும் இருக்கக்கூடும். அவர்களை வரவேற்பதால், நம் இல்லங்கள் ஆசீரால் நிறைவனவாக!