31 July, 2020

Sharing begins at home நமக்குள்ளிருந்து துவங்கும் பகிர்வு

The little boy offers five loaves and two fish

https://chongsoonkim.blogspot.com

18th Sunday in Ordinary Time

From her personal experience, St. Mother Teresa relates a story showing how generous the poor are, and how ready to share what little they have with others because they themselves have experienced hunger and poverty. Learning of a poor Hindu family in Calcutta who had been starving for many days, Mother Teresa visited them and gave a parcel of rice to the mother of the family. She was surprised to see that the woman divided the rice into two equal portions and gave one to her Moslem neighbour. When Mother Teresa asked her why she had done such a sacrificial deed, the woman replied: “My family can manage with half of what you brought. My neighbour’s family is in greater need because they have several children who are starving."

We salute this lady and millions of other magnanimous persons, who, although they live in poverty, yet teach the world the power and beauty of sharing. Today’s liturgical readings invite us to reflect on the noble quality of ‘sharing’ that is very much needed in today’s world.

In the first reading from Isaiah, (Is. 55:1-3) God invites everyone, making a specific reference to those who have no money. “Ho, everyone who thirsts, come to the waters; and he who has no money, come, buy and eat! Come, buy wine and milk without money and without price.” (Is. 55:1)

Today’s Gospel (Matthew 14: 13-21) talks of how Jesus fed more than 5000 persons ‘miraculously’ from limited resources at His disposal. Among the 30 plus miracles of Jesus, this is the only miracle recorded by all the Evangelists. (Matthew 14: 13-21, Mark 6:35-44, Luke 9:12-17, and John 6:1-14)

From the account of Matthew, two elements caught my attention. I believe that those two elements paved the way for the miracle. The miracle was the result of Jesus “seeing a great throng; and having compassion on them” (cf. Mt 14:14). The second element was the honest offer made by the disciples: “We have only five loaves here and two fish.” (Mt. 14:17). They were keen on sending the crowd back home. But, when Jesus pushed them a little more, they were willing to offer all that they had.

If only such honest offers are made around the globe, no one need to go to bed hungry. We know that we produce enough food so that everyone in the world can easily be fed. But, due to the selfishness and avarice of a few, who wish to hoard up food and are not willing to share, thousands of people, especially children, die of hunger every day.

Like these selfish monsters, even governments hoard up grains which either rot or become food for rats. In 2001, late Mr Vajpayee, the then Prime Minister of India, made a statement in the Parliament: “We produce enough and more food in our country. But we have a faulty PDS - Public Distribution System”. How did Mr Vajpayee get this ‘enlightenment’? That year, India had a stock of 90 million tonnes of grain in government storage – FCI (Food Corporation of India), while people in Kashipur District, Orissa were dying of hunger. Most of those food grains were rotting in the open while people were dying of hunger. Has the tragedy of 2001taught us lessons? I am afraid, not!

In the present crisis of the COVID-19 pandemic, things have become worse. When thousands of poor people are starving to death due to this pandemic and the resultant lockdown, the Government of India, instead of feeding the poor, is planning to produce ethanol using the food grains stocked up in FCI. Here is a news item published in the Indian Express on May 6, 2020:

Diverting rice to produce ethanol during pandemic is unethical

Indian Express, May 6, 2020.

In the middle of the COVID-19 pandemic and a country-wide lockdown came an announcement that was difficult to believe. The press release said the National Biofuel Coordination Committee (NBCC) chaired by the Union Minister of Petroleum and Natural Gas has decided to use “surplus” rice available with the Food Corporation of India (FCI) for conversion to ethanol. This is ostensibly for making alcohol-based hand-sanitisers and for the blending of ethanol with petrol. This decision is not only audacious but also an affront to the millions of people who are deeply affected by food insecurity.

The images of exhausted migrants with their families trudging back from cities to villages are still vivid. Some have died on the way for the want of food and water. Distribution of food rations and cooked food is still far from adequate. The urgent priority is to transfer grain from godowns to ration shops and NGOs helping in food packet distribution — certainly not diverting rice to ethanol producers.

Over the past twenty-five years, food production has exceeded world population growth by about 16%. This means that there is no good reason for any human being in today's world to go hungry. The problem is not how much food is available; the problem is distribution. The problem of distribution is not confined to the so-called ‘developing’ countries, but to the so-called ‘developed’ countries as well… to INDIA as well as to the US.

“The problem in feeding the world’s hungry population lies with our political lack of will, our economic system biased in favour of the affluent, our militarism, and our tendency to blame the victims of social tragedies such as famine. We all share responsibility for the fact that populations are undernourished. Therefore, it is necessary to arouse a sense of responsibility in individuals, especially among those more blessed with this world’s goods.” (Pope St John XXIII, Mater et Magistra)

Let us come back to the Miracle of Jesus feeding the people. There are two interpretations for this miracle. That Jesus fed the hungry people by multiplying food is the usual, traditional interpretation. But, there are other Biblical scholars who think that this was not a miracle of multiplication done by one person, but the ‘multiplier effect’ created by one person resulting in a miraculous sharing.

The latter interpretation is prompted by one detail given by John’s Gospel. While all the four gospels talk of the five barley loaves and two fish, only John speaks of ‘a little boy having the five loaves and two fish’ (cf. John 6:9). How is it that a child carried food to the desert? When a family goes on a journey, children do not think of carrying food. This is the job of the parents. They foresee what would be required by children and get prepared.

For the Jews, this foresight was almost second nature. Having suffered slavery and shortage of food for generations, they were careful to carry food whenever they left their house. So, here was a family which had come to the desert to meet Jesus. The mother of the family had prepared five loaves and two fish for the family to eat. The child was simply carrying the food packet. We can easily presume that many of those who were there around Jesus, carried some food.

As it was getting late, they began to feel the pangs of hunger. They were hesitant to open their packets since they knew that what they had was insufficient to feed the crowd. Hesitations, questions, calculations are typical of adults. Thank God, children are different. Hence, the miracle happened. The little lad heard Jesus discussing with his disciples about feeding the people. Without a second thought, the lad offered what he had carried from home – five loaves and two fish! Once the crowd saw this, then it was easy for them to open their packets and share!

Five loaves + two fish + Jesus’ blessing = more than 5000 people fed + 12 baskets of left-overs!

Not a simple mathematics, but pure magic! I consider this – namely, that Jesus and the child inspiring the people to share – a much more powerful miracle than simply Jesus multiplying the loaves!

The world needs extraordinary miracles of sharing. How do we get rid of the scandal of millions dying of hunger? We can pray for God’s direct intervention; we can hope for efficient actions of governments; we can fight with the haves to share with the have-nots… OR, as the little lad did, we can start sharing.

During this pandemic, we keep hearing of thousands of individuals who have shared all their savings to feed the poor people. Following the example of the adults, children have broken their ‘piggy-bank’ savings to help the poor. These news items fill us with hope, especially when the younger generation takes the initiative to conquer selfishness with sacrifice.

Here is a true incident that took place after the earthquake and tsunami that devastated Japan. This letter, written by the Vietnamese immigrant Ha Minh Thanh working in Fukushima as a policeman to a friend in Vietnam, was posted on New America Media on March 19. The earthquake and the tsunami occurred on March 11, 2011. Here is the letter:

“I am currently in Fukushima, about 25 kilometers away from the nuclear power plant. I have so much to tell you that if I could write it all down, it would surely turn into a novel about human relationships and behaviours during times of crisis.

Brother, there was a really moving incident. It involves a little Japanese boy who taught an adult like me a lesson on how to behave like a human being. Last night, I was sent to a little grammar school to help a charity organization distribute food to the refugees. It was a long line that snaked this way and that and I saw a little boy around 9 years old. He was wearing a T-shirt and a pair of shorts.

It was getting very cold and the boy was at the very end of the line. I was worried that by the time his turn came there wouldn't be any food left. So, I spoke to him. He said he was at school when the earthquake happened. His father worked nearby and was driving to the school. The boy was on the third-floor balcony when he saw the tsunami sweep his father's car away.

I asked him about his mother. He said his house is right by the beach and that his mother and little sister probably didn't make it. He turned his head and wiped his tears when I asked about his relatives.

The boy was shivering so I took off my police jacket and put it on him. That's when my bag of food ration fell out. I picked it up and gave it to him. "When it comes to your turn, they might run out of food. So here's my portion. I already ate. Why don't you eat it?"

The boy took my food and bowed. I thought he would eat it right away, but he didn't. He took the bag of food, went up to where the line ended and put it where all the food was waiting to be distributed.

I was shocked. I asked him why he didn't eat it and instead added it to the food pile. He answered: "Because I see a lot more people hungrier than I am. If I put it there, then they will distribute the food equally."

When I heard that I turned away so that people wouldn't see me cry.

A society that can produce a 9-year-old who understands the concept of sacrifice for the greater good must be a great society, a great people.”

To create a great society, a great people, a great humanity, each one of us needs to chip in and share what we have!

Denizens, social outfits feed Ranchi's poor and destitute

https://timesofindia.indiatimes.com

பொதுக்காலம் 18ம் ஞாயிறு

புனித அன்னை தெரேசா, ஒரு நாள், ஒரு பையில் அரிசி எடுத்துக்கொண்டு, ஓர் ஏழைப் பெண்ணின் இல்லத்திற்குச் சென்றார். அப்பெண்ணும் அவரது குழந்தைகளும் பல நாட்களாக, பட்டினியாய் கிடந்தனர் என்பதை அன்னை அறிந்திருந்ததால், அவரைத் தேடிச்சென்றார். அன்னை கொண்டுவந்த அரிசியை, நன்றியோடு பெற்றுக்கொண்ட அப்பெண், அடுத்து செய்தது, அன்னையை வியப்பில் ஆழ்த்தியது. தான் பெற்ற அரிசியை, அப்பெண், இரு பங்காகப் பிரித்தார். ஒரு பங்கை, தனக்கு அடுத்த வீட்டில் வாழ்ந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினார். அன்னை அவரிடம் காரணம் கேட்டபோது, அப்பெண், "அன்னையே, நீங்கள் தந்த அரிசியில் பாதிப் பங்கைக் கொண்டு எங்களால் சமாளிக்கமுடியும். ஆனால், அடுத்த வீட்டிலோ, அதிகக் குழந்தைகள் உள்ளனர். அவர்களும் பல நாட்கள் பட்டினியாய் கிடக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும்" என்று பதில் சொன்னார்.

புனித அன்னை தெரேசா மட்டுமல்ல, அவரது பரிவால் தொடப்பட்ட பல்லாயிரம் வறியோர், பகிர்தல் என்ற உன்னதப் பண்பை, இன்றும், இவ்வுலகில் பறைசாற்றி வருகின்றனர். இந்த நல்ல உள்ளங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறி, இன்றைய ஞாயிறு வழிபாட்டைத் (சிந்தனையைத்) துவக்குகிறோம். இன்றைய உலகில் பீடமேற்றி வணங்கப்பட்டுவரும் சுயநலம், பேராசை ஆகிய நோய்களுக்கு மருந்தாக விளங்கும், பகிர்வைக் குறித்து சிந்திப்பதற்கு, இன்றைய வழிபாட்டு வாசகங்கள் வாய்ப்பளிக்கின்றன.

பணம் ஏதுமற்ற மக்களின் பசியையும், தாகத்தையும் போக்க, இறைவன் விடுக்கும் அழைப்பு, இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு ஒலிக்கிறது:  

இறைவாக்கினர் எசாயா 55: 1

இறைவன் கூறுவதாவது: தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்: கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றி, திராட்சை இரசமும், பாலும், வாங்குங்கள்.

பணமில்லாத வறியோரும் பசியாறி, தாகம் தீர்த்து, நிறைவு பெறலாம் என்று, இறைவன், இறைவாக்கினர் வழியே விடுத்த அந்த அழைப்பிற்கு, நடைமுறை வடிவம் தந்த இயேசுவை, இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம். தனிமையான ஓரிடத்திற்குச் சென்ற தன்னைத் தொடர்ந்துவந்த மக்கள்மீது இயேசு பரிவு கொண்டார் என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. அந்தப் பரிவு, ஒரு புதுமையைத் துவக்கிவைத்தது. அடுத்து, தங்களிடம் உள்ள உணவு மிகக் குறைவே என்றாலும், அதை பகிர்ந்துகொள்ள முன்வந்த சீடர்களின் மனநிலை, இப்புதுமையின் அடுத்தக் கட்டம் என்று நாம் எண்ணிப்பார்க்கலாம்.

இவ்வுலகில் அனைவரும் உண்பதற்குத் தேவையான அளவு உணவு உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இருந்தும், உணவை, பணமாக மாற்றும் பேராசையினால், உணவைப் பதுக்கும் சுயநல வெறி வளர்ந்துவிட்டதால், பசியும், பட்டினியும், இவ்வுலகில் தாண்டவமாடுகின்றன. அதிலும் குறிப்பாக, இந்தக் கொள்ளைநோய் காலத்தில், உணவின்றி தவிப்போரின் எண்ணிக்கை உலகெங்கும், பலமடங்காக உயர்ந்துள்ளது.

இலாபம் தேடும் சுயநல வெறியால், தனி மனிதர்கள், உணவைப் பதுக்குவது ஒரு புறம் என்றால், இந்தியா போன்ற நாடுகளில், மக்களைச் சென்றடையவேண்டிய உணவு, உணவுக்கிடங்குகளில் அழுகிவருவதையும், அவற்றை, எலிகள் உண்பதையும் நாம் செய்திகளாகக் கேட்டு வருகிறோம்.

FCI (Food Corporation of India) என்றழைக்கப்படும் இந்திய உணவு நிறுவனத்தின் கிடங்குகளில், 2001ம் ஆண்டு, 9 கோடி டன் தானியம் முடங்கிக்கிடந்தது. 9 கோடி டன் தானியத்தைக் கொண்டு, 20 இலட்சம் பேருக்கு இரண்டு ஆண்டுகள் உணவு கொடுக்கலாம். அவ்வளவு உணவு அது. அந்த அளவுக்கு அரிசியும், கோதுமையும், இந்திய உணவுக்கிடங்குகளில் குவிந்திருந்த அதே 2001ம் ஆண்டில், ஒடிஸ்ஸா மாநிலத்தின் காசிப்பூர் பகுதியில் பல ஆயிரம் பேர் பட்டினியால் இறந்தனர். இக்கொடூரத்தைப்பற்றி, அப்போதையப் பிரதமர் வாஜ்பாயி அவர்கள், பாராளுமன்றத்தில் பேசியபோது, "நம் நாட்டில் தேவைக்கு அதிகமாகவே உணவை உற்பத்தி செய்கிறோம். ஆனால், உற்பத்தி செய்யப்படும் உணவு மக்களைச் சென்று சேர்வதில்லை. இதற்குக் காரணம், நம்மிடமுள்ள பொதுப் பகிர்வுமுறையில் தவறு உள்ளது! என்று கூறினார். உற்பத்தியில் குறைவில்லை ஆனால், பகிர்வதில்தான் குறைகள் உள்ளன என்று நாட்டின் பிரதமரே சொன்னார்.

இந்தியாவின் பகிர்வுமுறையில் குறைகள் உள்ளதென, நாட்டின் பிரதமர் சுட்டிக்காட்டியபின், நாம் ஏதும் கற்றுக்கொண்டோமா? இல்லை. இல்லவே இல்லை. பிரதமரின் இந்த கண்டனக்கூற்று வெளியாகி 20 ஆண்டுகள் சென்று, இதைவிடக் கொடுமையான விடயங்கள் இந்தியாவில் நிகழ்கின்றன. கோவிட்-19 கொள்ளைநோய் கொண்டுவந்துள்ள பசியையும், பட்டினியையும் நீக்குவதற்குத் தேவையான உணவு, நம் உணவுக்கிடங்குகளில் இருந்தும், அவற்றை வறியோருக்கு வழங்காமல், அந்த தானியங்களைக் கொண்டு, எத்தனால் (Ethanol) என்ற திரவத்தைத் தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்போவதாக இந்திய அரசு அறிவித்தது.  

தொற்றுக்கிருமியின் தாக்கத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, மக்கள், கரங்களைக் கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் hand sanitizer திரவங்களை உருவாக்க, இந்த எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. மக்களின் வயிற்றைக் கழுவ பகிர்ந்தளிக்கப்படவேண்டிய உணவு தானியங்கள், வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்கள் வயிறை நிரப்பும் உணவுக்கு முன்னும் பின்னும் கரங்களைக் கழுவப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை உணரும்போது, நம் உள்ளமும், வயிறும், பற்றியெரிகின்றன.

மக்களின் பசியைப் போக்க இயேசு ஆற்றிய புதுமைக்குத் திரும்புவோம். 5000க்கும் அதிகமான மக்களுக்கு இயேசுவும், சீடர்களும் உணவளித்த இந்தப் புதுமை, நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. இந்தப் புதுமையை இருவேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கலாம். இயேசு தனி ஒருவராய் உணவைப் பலுகச்செய்தார் என்று சிந்திப்பது ஒரு கண்ணோட்டம். மற்றொரு கண்ணோட்டம், இயேசு அன்று நிகழ்த்தியது, ஒரு பகிர்வுப் புதுமை என்ற கண்ணோட்டம். இந்தக் கண்ணோட்டத்தில் சிந்திக்க, நமக்கு உதவியாக இருப்பது, யோவான் நற்செய்தியில் நாம் காணும் ஒரு குறிப்பு.

ஐந்து அப்பங்களும், இரண்டும் மீன்களும் அங்கிருந்தன என்பதை நான்கு நற்செய்திகளும் கூறினாலும், யோவான் நற்செய்தியில் மட்டும், அந்த உணவு, ஒரு சிறுவனிடம் இருந்தது என்ற குறிப்பு காணப்படுகிறது (யோவான் 6:9). சிறுவன் எதற்காக உணவுகொண்டு வந்திருந்தான்? என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில்கள், நமக்குப் பாடங்களாக அமைகின்றன.

பொதுவாக, வெளியூர் செல்லும்போது, முன்னேற்பாடாக, உணவு எடுத்துச் செல்லவேண்டும் என்று, சிறுவர், சிறுமிகள் எண்ணிப்பார்ப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான உணவைத் தயாரித்து, எடுத்துச்செல்வது, பெற்றோரே. யூதர்கள் மத்தியில் இத்தகைய முன்னேற்பாடுகள் கூடுதலாகவே இருந்தன. காரணம் என்ன?

பல தலைமுறைகளாய், யூதர்கள் அடிமை வாழ்வு வாழ்ந்ததால், உணவின்றி தவித்தவர்கள். எனவே, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது, மடியில் கொஞ்சம் உணவு எடுத்துச்செல்வது அவர்கள் வழக்கம். அன்றும், இயேசுவைத் தேடிச்சென்ற அந்தக் கூட்டத்தில், ஒரு குடும்பம் இருந்தது. தாங்கள் செல்வது எவ்விடம் என்பதை சரியாக அறியாததால், குடும்பத்தலைவி முன்மதியோடு செயல்பட்டார். குடும்பமாய்ச் சென்ற தங்களுக்குத் தேவையான ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் அவர் தயாரித்திருந்தார். அந்த உணவு பொட்டலத்தை சிறுவன் சுமந்து வந்திருந்தான்.

மாலையானதும், பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. அங்கிருந்த பல யூதர்களிடம் உணவுப் பொட்டலங்கள் இருந்தன. ஆனால், யார் முதலில் பிரிப்பது? பிரித்தால், பகிர வேண்டுமே என்ற எண்ணங்கள், அந்த பாலை நிலத்தில் வலம் வந்தன! இயேசுவின் படிப்பினைகளில் பகிர்வைப்பற்றி பேசினார், சரிதான். ஆனால், எப்படி இத்தனை பேருக்குப் பகிரமுடியும்? நமக்கெனக் கொண்டுவந்திருப்பதைக் கொடுத்துவிட்டால், நாம் என்ன செய்வது? என்ற கேள்விகளில், பெரியவர்களும், இயேசுவின் சீடர்களும் முழ்கியிருந்தார்கள். மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடுவது நல்லது என்று சீடர்கள் சிந்தித்தனர் (காண்க. மத். 14:15). நல்லவேளை, குழந்தைகளின் எண்ண ஓட்டங்கள், பெரியவர்களின் எண்ண ஓட்டங்களைப் போல் இல்லாததால், அந்தப் புதுமை நிகழ வாய்ப்பு உருவானது.

மக்களுக்கு உணவளிப்பது பற்றி இயேசு சீடர்களிடம் பேசுவதைக் கேட்ட ஒரு சிறுவன், அம்மா தன்னிடம் கொடுத்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொண்டு வந்து கொடுத்தான். பின்விளைவுகளைச் சிறிதும் கணக்கு பார்க்காமல், கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன், அச்சிறுவன், இயேசுவிடம் வந்து, தன்னிடம் இருந்ததையெல்லாம் பெருமையுடன் தந்ததை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அந்தக் குழந்தையின் செயலால் தூண்டப்பட்ட மற்றவர்களும், தாங்கள் கொண்டுவந்திருந்த உணவைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர். ஆரம்பமானது ஓர் அற்புத விருந்து.

ஒரு சிறுவன் ஆரம்பித்த பகிர்வு, ஒரு பெரிய விருந்தை ஆரம்பித்து வைத்தது. அந்த பகிர்வின் மகிழ்விலேயே அங்கிருந்தவர்களுக்கு பாதிவயிறு நிறைந்திருக்க வேண்டும். எனவேதான், அவர்கள் உண்டதுபோக, மீதியை, 12 கூடைகளில் சீடர்கள் நிறைத்ததாக இன்றைய நற்செய்தி கூறுகிறது. (காண்க. மத். 14:20) இயேசு அன்று நிகழ்த்தியது, ஒரு பகிர்வின் புதுமை.

தனியொருவராய் இயேசு அப்பங்களைப் பலுகச்செய்தார் என்பது புதுமைதான். ஆனால், தன் அற்புதச் சக்திகொண்டு அப்பங்களைப் பலுகச்செய்ததைவிட, தன் படிப்பினைகளால் மக்கள் மனதை மாற்றி, இயேசு, அவர்களைப் பகிரச்செய்தார் என்பதை, நாம் மாபெரும் ஒரு புதுமையாகக் கருதலாம்.

வானிலிருந்து இறைவன் இறங்கி வந்து புதுமை செய்தால்தான், இவ்வுலகின் பசியைப் போக்கமுடியும்; சக்திவாய்ந்த அரசுகள் மனது வைத்தால்தான், இந்தக் கொடுமை தீரும்; இருப்பவர்கள் பகிர்ந்து கொண்டால்தான், இல்லாதவர் நிலை உயரும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பதை விட்டுவிட்டு, அச்சிறுவனைப் போல், நாம் ஒவ்வொருவரும் பகிர்வு என்ற புதுமையை ஆரம்பித்துவைக்கலாம்.

கோவிட்-19 கொள்ளைநோய், பல்லாயிரம் மக்களின் உயிர்களைப் பறித்ததைக் காட்டிலும், பல கோடி மக்களின் வாழ்வாதாரங்களை வேரோடு சாய்த்துவிட்டது என்பது மிகப்பெரும் கொடுமை. இந்தக் கொடுமையைக் களைய, பல்லாயிரம் தனி மனிதர்கள், தங்களால் இயன்ற அளவில் பகிர்வுப் புதுமைகளை ஒவ்வொரு நாளும் நடத்திவருகின்றனர். பெரியவர்கள் காட்டும் வழியைப் பின்பற்றி, பல சிறுவர், சிறுமியரும், இளையோரும், தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு, வறியோருக்கு உணவு வழங்கிவரும் செய்திகள், நம் உள்ளங்களில் நம்பிக்கையை விதைத்துள்ளன.

வாழ்வை வேரோடு சாய்த்துவிடும் வேதனைகள் நடுவிலும், சிறுவர், சிறுமியர் வெளிப்படுத்தும் உன்னதமானப் பண்புகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி, ஜப்பான் நாட்டை உலுக்கியெடுத்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி, ஆகியவற்றின் பேரழிவுகள் நடுவே, அங்கு நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வு, பகிர்வின் பாடங்களை நமக்குள் ஆழமாகப் பதிக்கின்றது. அந்தப் பேரழிவைத் தொடர்ந்து, இடர்துடைப்புப் பணிகளில் ஈடுபட, வியட்நாம் நாட்டிலிருந்து, ஃபுக்குஷிமா (Fukushima) நகருக்குச் சென்ற Ha Minh Thanh என்ற இளையவர், தன் நண்பருக்கு எழுதிய மடலில், இந்நிகழ்வை இவ்வாறு விவரித்துள்ளார்:

நான் இப்போது, ஃபுக்குஷிமாவில் பணியாற்ற வந்துள்ளேன். நேற்றிரவு இங்கு நடந்த ஒரு நிகழ்வு என்னைப் பெரிதும் பாதித்தது. அந்நிகழ்வின் நாயகனான சிறுவன், வயதில் வளர்ந்துவிட்ட எனக்கு முக்கியமான வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித்தந்தான்.

நேற்றிரவு, இப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், உணவுப் பொட்டலங்களை வழங்க ஒரு நிறுவனம் வந்திருந்தது. அங்கு வரிசையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் நான் இருந்தேன். மிகவும் நீளமான அந்த வரிசையின் கடைசியில், 9 வயது நிறைந்த ஒரு சிறுவன், குளிரில் நடுங்கியபடி, நின்றுகொண்டிருந்தான். அவன், உணவு வழங்கும் இடத்திற்குச் செல்வதற்குள், உணவு தீர்ந்துபோய்விடும் என்று நான் அஞ்சினேன்.

அச்சிறுவனை அணுகி, பேசத் துவங்கினேன். அச்சிறுவன், அந்தப் பள்ளியின் மாணவன் என்பதை அறிந்தேன். அவனது அப்பா, பக்கத்திலிருந்த ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தார். ஒவ்வொருநாளும், அவர், அச்சிறுவனை பள்ளிக்கு காரில் கொண்டுவந்து இறக்கிவிட்டு, தன் தொழிற்சாலைக்குச் செல்வார். நிலநடுக்கம் ஏற்பட்ட நாளன்று, சுனாமி வரும் என்ற அறிவிப்பு தொடர்ந்ததால், சிறுவனை அழைத்துச்செல்ல அப்பா காரில் வந்தார். சிறுவன், பள்ளியின் மூன்றாம் மாடியில் நின்றுகொண்டிருந்தான். அவ்வேளையில், அங்கு, திடீரென வந்த சுனாமியில், தன் அப்பாவின் கார் அடித்துச் செல்லப்படுவதை, சிறுவன், மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் வாழும் வீடு, கடற்கரைக்கருகே இருந்ததால், அவன் அம்மாவும், தங்கையும் வீட்டோடு அடித்துச் செல்லப்பட்டனர். அவனுடைய ஏனைய உறவினர்களைப் பற்றிக் கேட்டதும், அச்சிறுவன் தலையை மறுபக்கம் திருப்பிக்கொண்டு அழுதான்.

தன் கதையை அச்சிறுவன் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவன் குளிரில் நடுங்கியதைப் பார்த்தேன். நான் அணிந்திருந்த 'கோட்'டைக் கழற்றி, அவன் மீது போர்த்தினேன். அப்போது, எனக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த உணவுப் பொட்டலம், அந்த 'கோட்' பையிலிருந்து, வெளியே விழுந்தது. அதை எடுத்து, அச்சிறுவனிடம் கொடுத்தேன். "நீ உணவு பெற செல்வதற்குள், அங்குள்ள உணவுப் பொட்டலங்கள் தீர்ந்துபோகலாம். நான் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன். அதனால், நீ இதைச் சாப்பிடு" என்று அவனிடம் கூறினேன்.

அந்த உணவுப் பொட்டலத்தைப் பெற்றுக்கொண்ட சிறுவன், தலைவணங்கி எனக்கு நன்றி சொன்னான். பின் அவன் செய்தது, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவன் அந்த உணவுப்பொட்டலத்தை எடுத்துச்சென்று, உணவு வழங்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த மற்ற பொட்டலங்களுடன் அதை வைத்துவிட்டு திரும்பிவந்தான்.

அவனிடம், "நீ ஏன் சாப்பிடவில்லை? உனக்குப் பசிக்கவில்லையா?" என்று கேட்டேன். அச்சிறுவன் என்னிடம், "எனக்குப் பசிக்கிறது. ஆனால், என்னைவிட அதிகப் பசியில் இருப்பவர்கள் இந்த வரிசையில் நிற்கின்றனர். நான் அந்த உணவுப் பொட்டலத்தை அங்கு வைத்ததால், இன்னும் சிலருக்கு அது சமமாகப் பகிர்ந்து தரப்படும்" என்று கூறினான். அச்சிறுவன் கூறியதைக் கேட்டதும், கண்ணீர், என் கண்களை நிறைத்தது.

மற்றவர்கள் நன்மைபெற வேண்டும் என்பதற்காக, தன் உணவைத் தியாகம் செய்யும் அளவு, 9 வயது சிறுவன் ஒருவன் சிந்திக்கமுடிந்தால், அவன் வளர்ந்த குடும்பமும், அவன் வாழும் சமுதாயமும் உன்னதமானவை என்பதை, அன்று நான் புரிந்துகொண்டேன் என்று அந்த வியட்நாம் இளையவர் தன் மடலில் எழுதியிருந்தார்.

மனம் இருந்தால், அந்த மனதில் பரிவிருந்தால், பகிரவேண்டும் என்ற கனவிருந்தால், கொள்ளை நோய்களும், நிலநடுக்கங்களும், சுனாமிகளும், சூறாவளிகளும் நம் மனிதாபிமானத்தை அழித்துவிட முடியாது. பகிர்ந்துவாழும் மனதை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று, இந்த ஞாயிறு வழிபாடு நமக்குச் சவால் விடுக்கிறது. நமது பதில் என்ன?


28 July, 2020

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – கைம்பெண்ணுக்கு கருணைப் பரிசு 2



Smoke from the incense sticks

விதையாகும் கதைகள் : கடவுளுக்கும் கரி பூசும் சுயநலம்

பக்தர் ஒருவர், ஒவ்வொருநாளும் கோவிலுக்குச் செல்வார். கோவிலில் வைக்கப்பட்டிருந்த பல தெய்வங்களில், அவர் மனதுக்குப் பிடித்த ஒரு தெய்வத்தை மட்டும் தினமும் தொழுதுவிட்டுத் திரும்புவார். தான் வாங்கிச்செல்லும் ஊதுபத்திகளை, அந்தத் தெய்வத்திற்கு முன் கொளுத்தி வைத்து வணங்குவார்.
ஒவ்வொருநாளும், அவ்வாறு வணங்கும்போது, அவருக்குள் ஒரு சிறு நெருடல் உருவாகும். தனக்குப் பிடித்த தெய்வத்திற்கென்று தான் கொளுத்தி வைக்கும் ஊதுபத்திகளின் நறுமணப்புகை, மற்ற தெய்வங்களுக்கும் செல்கிறதே என்று, பக்தருக்குள் இலேசான எரிச்சல் உண்டாகும்.
தன் நெருடலையும், எரிச்சலையும் சமாளிக்க, அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அடுத்த நாள், அவர், ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்தபோது, அந்தப் புகை, தன் தெய்வத்தை மட்டும் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்துடன், அந்த ஊதுபத்திகளை சுற்றி, ஒரு குழாயையும் பொருத்தி வைத்தார். அவர் எதிர்பார்த்தவாறே, நறுமணப்புகை, நேராக, அவரது தெய்வத்தை மட்டுமே சேர்ந்தது. பக்தருக்கு பெரும் திருப்தி. இவ்வாறு அவர் தொடர்ந்து செய்து வந்ததால், நாளடைவில், அந்தப் புகையால், அவருக்குப் பிடித்தமான தெய்வத்தின் முகம் கறுத்துப்போனது.
தெய்வ வழிபாட்டிலும், தான், தனது என்ற குறுகிய வட்டங்களை வரையும் சுயநலம் புகுந்தால், கடவுளின் முகத்தில் நாம் கரி பூசிவிடக்கூடும், எச்சரிக்கை! இறைவனின் பெயரால் நாம் எழுப்பிவரும் தடுப்புச் சுவர்களை தகர்த்தெறிந்தால் மட்டுமே, உண்மை இறைவனை நம்மால் வழிபடமுடியும்.

Jesus meeting the widow of Nain


லூக்கா நற்செய்தி கைம்பெண்ணுக்கு கருணைப் பரிசு 2

2016ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவையில், இரக்கத்தின் சிறப்பு யூபிலி சிறப்பிக்கப்பட்ட வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் மறைக்கல்வி உரை ஒன்றில், நயீன் ஊரைச்சேர்ந்த கைம்பெண்ணின் மகனை இயேசு உயிர்ப்பித்த புதுமையை மையப்படுத்திப் பேசினார். இப்புதுமையில் புதைந்துகிடக்கும் சில நுணுக்கமான விடயங்களை, தனக்கே உரிய பாணியில் திருத்தந்தை விளக்கிக் கூறினார். அன்று, அவர் வழங்கிய ஒரு சில எண்ணங்களை, இன்றையத் தேடலில் நாம் மீண்டும் அசைபோட முயல்வோம்.

இறந்த ஒருவருக்கு, இயேசு, மீண்டும் உயிர்தரும் புதுமை, நான்கு நற்செய்திகளில், மூன்று முறை மட்டுமே இடம்பெற்றுள்ளது. தொழுகைக்கூடத் தலைவர் யாயீரின் மகளுக்கு உயிர்தரும் புதுமை (மத்தேயு 9:18-26; மாற்கு 5:21-43; லூக்கா 8:40-56), மார்த்தா, மரியா ஆகியோரின் சகோதரரான இலாசருக்கு உயிர்தரும் புதுமை (யோவான் 11:1-44), மற்றும், நாம் தற்போது தேடலை மேற்கொண்டுள்ள நயீன் ஊரைச்சேர்ந்த கைம்பெண்ணின் மகனுக்கு இயேசு உயிர்தரும் புதுமை (லூக்கா 7:11-17).

முதல் இரு புதுமைகளில், நோயுற்றவர் அல்லது, இறந்தவர் சார்பில், இயேசுவிடம் விண்ணப்பங்கள் விடுக்கப்பட்டன. நயீன் ஊரிலோ, யாருடைய விண்ணப்பமும் இன்றி, இயேசு, தானாகவே முன்வந்து, இப்புதுமையைச் செய்கிறார். உயிர் தருதல் என்பது, மிக அரிதான, அற்புதமான புதுமைதான். இருப்பினும், அதைவிட, இப்புதுமையின் இதயத் துடிப்பாக விளங்குவது, அந்தக் கைம்பெண் மீது இயேசு காட்டிய பரிவு என்ற கருத்துடன், திருத்தந்தை, தன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார். நற்செய்தியாளர் லூக்கா, இப்புதுமையில் பல நுணுக்கங்களைப் பதிவு செய்துள்ளார் என்று கூறியத் திருத்தந்தை, இப்புதுமையின் அறிமுகப் பகுதியில் கூறப்பட்டுள்ள இரு வேறுபட்ட கூட்டத்தினரைக் குறித்து அழகாக விவரித்தார்:

"நயீன் என்ற சிறு நகரத்தின் வாயிலில், இரு குழுக்களைச் சேர்ந்தவர்கள், எதிரெதிரே வந்தனர். இவ்விரு குழுவினரும், ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் அல்ல. அவர்களிடையே, பொதுவான விடயங்கள் எதுவும் கிடையாது. சீடரும், பெருந்திரளான மக்களும்’ (லூக்கா 7:11) இயேசுவைப் பின்தொடர்ந்து, ஊருக்குள் செல்ல முற்பட்டனர்; ஊருக்குள்ளிருந்து வந்தவர்கள், உயிரற்ற ஓர் இளைஞனை சுமந்தவண்ணம், கைம்பெண்ணான அவரது தாயுடன் நடந்து வந்தனர்" என்று திருத்தந்தை, இச்சூழலை விவரித்தார்.

இவ்விரு கூட்டத்தினரும் எதிரெதிர் திசைகளில் வந்தது மட்டுமல்ல, அவர்களின் மனநிலையும் எதிரெதிர் துருவங்களாய் இருந்தன. இதைப் புரிந்துகொள்ள, நம் நினைவுகளைச் சிறிது பின்னோக்கி நகர்த்துவோம். லூக்கா நற்செய்தி, 7ம் பிரிவில், 11 முதல் 17 முடிய உள்ள 7 இறைவாக்கியங்களில், கைம்பெண்ணின் மகன் உயிர் பெறும் புதுமை சொல்லப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, 7ம் பிரிவின் முதல் பத்து இறைவாக்கியங்களில், நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைந்த புதுமை சொல்லப்பட்டுள்ளது.

அந்தப் புதுமை முடிந்த கையோடு, இயேசுவுடன், சீடரும், பெருந்திரளான மக்களும் நயீன் நகருக்குச் சென்றனர் என்ற கோணத்தில் கற்பனை செய்துபார்த்தால், இயேசுவைச் சூழ்ந்து சென்ற கூட்டத்தில் இருந்தவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளலாம். சீடர்களும், சூழ இருந்தவர்களும், நூற்றுவர் தலைவரின் பணியாளர் குணமடைந்த புதுமையைப்பற்றி பெருமையாகப் பேசியவாறே, அந்நகரின் வாயிலை அடைந்திருக்க வேண்டும். உரோமையப் படைத்தளபதி ஒருவரே, இயேசுவின் சக்தியை உணர்ந்துவிட்டார் என்று, தங்களுக்குள் பேசியபடி வந்த அக்கூட்டத்தினரின் உள்ளமெல்லாம் பெருமையால் நிறைந்திருக்கும்; எனவே, அவர்கள் தலை நிமிர்ந்து, ஊரை நோக்கி நடந்து சென்றிருக்கவேண்டும்.

இதற்கு முற்றிலும் மாறாக, ஊருக்குள்ளிருந்து வந்த கூட்டத்திலோ, வெறுமையும், வேதனையும் நிறைந்திருந்தன. அவர்கள் மெளனமாக, துயரத்துடன், தலையைத் தாழ்த்தியபடி நடந்து வந்திருக்கவேண்டும்.

முன்பின் அறிமுகம் இல்லாத இவ்விரு கூட்டத்தினரும், மாறுபட்ட மனநிலைகளுடன் இருந்ததால், ஒருவரையொருவர் கடந்து சென்றிருக்கவேண்டும் என்று இச்சூழலை விவரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகையச் சூழலில், இயேசு ஒரு மாற்றத்தைக் கொணர்ந்தார் என்பதை, தன் புதன் மறைக்கல்வி உரையில் சுட்டிக்காட்டினார். கைம்பெண்ணான தாயைக் கண்டு, பரிவுகொண்டு, "அழாதீர்" என்று முதலில் அவரைத் தேற்றிய இயேசு, பின்னர், தன் புதுமையை ஆற்றினார். இஸ்ரயேல் சமுதாயத்தில் ஒரு கைம்பெண்ணின் நிலை என்ன என்பதை, நன்கு உணர்ந்திருந்த இயேசு, இப்புதுமையை, எவ்வித அழைப்போ, விண்ணப்பமோ இன்றி ஆற்றினார்.

யூத சமுதாயத்தில், பொதுவாகவே, பெண்கள் குடிமக்களுக்குரிய உரிமைகள் அதிகமின்றி வாழ்ந்தனர். அதிலும், கைம்பெண்கள், இன்னும் பரிதாபமான நிலையில் வாழ்ந்துவந்தனர். நிலம், வீடு, சொத்து என்று, எவ்வித உரிமையும் இன்றி, ஒரு பெண்ணின் வாழ்வு, கணவரைச் சார்ந்தே அமைந்திருந்தது. எனவே, கணவனின் மறைவுக்குப்பின், சமுதாயத்தின் கருணையால் வாழவேண்டிய நிலைக்கு கைம்பெண்கள் தள்ளப்பட்டனர். இவ்வாறு, சமுதாயத்தின் கீழ்மட்டத்திற்குத் தள்ளப்பட்டிருந்த, கைம்பெண்களின் நம்பிக்கையாக தான் இருப்பதாக, இறைவாக்கினர்கள் வழியே இறைவன் கூறியுள்ளார்:
எரேமியா 49:11
ஆண்டவர் கூறுவது இதுவே: "அனாதைகளைப்பற்றிக் கவலை கொள்ளாதே. நான் அவர்களை வாழவைப்பேன். உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்."
அத்துடன், கைம்பெண்களுக்கு எதிராக தீங்கிழைப்போருக்கு இறைவனே நீதி வழங்குவார் என்று, விவிலியத்தின் பல இடங்களில் எச்சரிக்கைகள் ஒலிக்கின்றன. இதோ, இரு எடுத்துக்காட்டுகள்:
விடுதலைப் பயணம் 22:22-23
விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன்.
மலாக்கி 3:5
அப்போது, “சூனியக்காரர், விபசாரிகள், பொய்யாணையிடுவோர், கூலிக்காரருக்குக் கூலி கொடுக்காத வம்பர், கைம்பெண்ணையும் அனாதைகளையும் கொடுமைப்படுத்துவோர், அன்னியரின் வழக்கைப் புரட்டுவோர், எனக்கு அஞ்சி நடக்காதோர் ஆகிய அனைவர்க்கும் எதிராகச் சான்று பகர்ந்து தண்டனைத் தீர்ப்பு வழங்க நான் விரைந்து வருவேன்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.
இஸ்ரயேல் மக்கள், வேற்றுநாட்டில் அடிமைகளாய் இருந்ததை மறவாமல் வாழவேண்டும் என்று, கடவுள் அவர்களுக்கு பலமுறை நினைவுறுத்தி வந்தார். அடிமைத்தனத்தால் துன்புற்ற அம்மக்கள், வாழ்வின் ஆதாரங்களை இழந்தோரை ஆதரிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தி வந்தார்:
எசாயா 1:17
நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.

அன்னியரை, அனாதைகளை, கைம்பெண்களை பரிவுடன் நடத்தவேண்டும் என்று, மோசே வழியே இறைவன் கட்டளையிட்டார். அந்தப் பரிவின் ஒரு வெளிப்பாடாக, அறுவடை நேரத்தில், நிலத்தின் உரிமையாளர், தன் நிலத்தையோ, திராட்சைத் தோட்டத்தையோ முழுக்க, முழுக்க அறுவடை செய்யக்கூடாது என்று, சட்டம் இயற்றப்பட்டது. காரணம், நிலத்திலோ, தோட்டத்திலோ அறுவடைக்குப்பின் விழுந்து கிடக்கும் தானியங்களும், பழங்களும் அன்னியருக்கு, அனாதைகளுக்கு, கைம்பெண்களுக்கு விட்டுவைக்கப்பட வேண்டும் என்று காரணமும் சொல்லப்பட்டது.
இணைச்சட்டம் 24: 19-22
உன் வயலில், விளைச்சல் அறுவடை செய்யும்போது, அரிக்கட்டினை மறந்து வயலிலே விட்டுவந்தால், அதை எடுக்கத் திரும்பிப் போகாதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. அப்போது நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார். நீ உன் ஒலிவ மரத்தை அடித்து உதிர்க்கும்போது, உதிராததைப் பறிக்காதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. நீ உன் திராட்சைத் தோட்டக் கனிகளைச் சேகரித்தபின், பொறுக்காமல் கிடப்பதை எடுக்கச் செல்லாதே. அதை அன்னியருக்கும் அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் விட்டுவிடு. எகிப்து நாட்டில் நீ அடிமையாய் இருந்ததை நினைவிலிருத்தி, இவற்றைச் செய்யும்படி, நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

யூத சமுதாயத்தால் கடைநிலைக்குத் தள்ளப்பட்டிருந்த நயீன் கைம்பெண்ணுக்கு இருந்த ஒரே நம்பிக்கையான அவரது மகன், இதோ, பிணமாக எடுத்துச் செல்லப்படுகிறார். தான் பெற்ற பிள்ளையைப் புதைப்பதுதான், பெற்றோருக்குப் பெரும் வேதனை, பெரும் தண்டனை. தான் பெற்ற பிள்ளை, சாகும் நிலையில் இருக்கும்போது, எத்தனை பெற்றோர், அந்தப் பிள்ளைக்குப் பதிலாக, தங்கள் உயிரை எடுத்துகொள்ளுமாறு இறைவனிடம் வேண்டுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
நயீன் கைம்பெண்ணும் இப்படி வேண்டியிருப்பார். தன் ஒரே மகனைக் காப்பாற்ற, சாவோடு போராடியிருப்பார். அவரது வேண்டுதல்கள், போராட்டங்கள் எல்லாம் தோல்வியடைந்து, இப்போது அப்பெண், வாழ்வின் விளிம்புக்கு, விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்பட்டிருந்தார். மகனது அடக்கத்தை முடித்துவிட்டு, தன் வாழ்வையும் முடித்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன், ஒரு நடைபிணமாக, அந்த சவ ஊர்வலத்தில், நடந்து சென்றிருக்கலாம், அந்தக் கைம்பெண். அவ்வேளையில், அவரது வாழ்வில் இயேசு நுழைகிறார்.

கொரோனா தொற்றுக்கிருமியின் கொள்ளைநோய் காலத்தில், எதிர்காலத்தைக் குறித்த பல பாரமான கேள்விகளால் மனம் தளர்ந்து, தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட இளையோரைக் குறித்து நாம் அவ்வப்போது செய்திகளைக் கேட்டுவருகிறோம். இதுபோன்ற பல்வேறு காரணங்களால், தங்கள் உறவுகளை இழந்து, தனித்து விடப்பட்டுள்ள கைம்பெண்களை இவ்வேளையில் எண்ணிப்பார்ப்போம். நயீன் கைம்பெண்ணின் வாழ்வில் இயேசு குறுக்கிட்டதுபோல், அவர்கள் வாழ்விலும் இறைவன் குறுக்கிட்டு, நம்பிக்கையை வளர்க்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், இன்றையத் தேடலை நாம் நிறைவு செய்வோம்.