29 July, 2017

The Kingdom with a price-tag இறையரசின் ‘விலை’


Parables of the Treasure and the Pearl


17th Sunday in Ordinary Time

Let us begin our Sunday reflection with the dream sequence recorded in the first reading today.
At Gibeon the Lord appeared to Solomon in a dream by night; and God said, “Ask what I shall give you.” And Solomon said, “O Lord my God, Give thy servant therefore an understanding mind to govern thy people, that I may discern between good and evil; for who is able to govern this thy great people?” (I Kings 3: 5,7,9)

We shall add some imagination to this dream sequence. Imagine a Church where this Sunday’s Liturgy is celebrated. Many Presidents and Prime Ministers of the world are attending this Mass. When the First Reading is being read, let us imagine that we have access to the mind voice of these political bigwigs. If so, we can hear many of them saying something like this: “When God is offering a blank cheque, ‘Ask what I shall give you’, Solomon should have grabbed the opportunity to ask for a longer reign, great wealth, a long, healthy life and the utter defeat of all the enemies… But, Solomon asked for the inconsequential gift – wisdom! What a pathetic specimen of a king!” The world leaders in the Church would not have appreciated Solomon.

But, God appreciated Solomon in the following words: “Because you have asked this, and have not asked for yourself long life or riches or the life of your enemies, but have asked for yourself understanding to discern what is right, behold, I now do according to your word. Behold, I give you a wise and discerning mind, so that none like you has been before you and none like you shall arise after you. I give you also what you have not asked, both riches and honor, so that no other king shall compare with you, all your days.” (I Kgs. 3: 11-13)

A discerning mind not only differentiates between good and bad, but also chooses the best among the many good things on offer. This is the gift prayed for by Solomon. It is somewhat similar to the MAGIS spoken of by St Ignatius of Loyola (whose Feast is celebrated on Monday, July 31). Ignatius is also known for his very enlightening Rules for Discernment of Spirits, constantly discerning to do everything for the ‘greater glory of God’!

Of all the riches and treasures one can desire in this world, a discerning mind is a gift of the highest order. Today’s Gospel gives us an opportunity to think of the treasures that we bump into in our life’s journey. The parables of the hidden treasure in the field and the pearl of great value give us an opportunity to reflect on the treasures we receive from God.
Our first thoughts are on the words ‘treasure’ and ‘pearl’. Treasure usually refers to a valuable object we discover from the earth. Many times, this treasure is a precious stone like a diamond. When Jesus compares the treasure and the pearl to the kingdom of heaven, my mind was thinking of the ‘diamond’ and the ‘pearl’ as symbols of the Kingdom.

The way a ‘diamond’ and a ‘pearl’ are formed, gives us some clues about the characteristics of the Kingdom. Carbon molecules, under great pressure and temperature, become a diamond. I guess the higher the pressure and greater the temperature, the diamond formed, will be of greater value. Similarly, in our lives, the values of the kingdom tend to shine forth when great pressure and temperature affect us. The way a carbon molecule responds to pressure and temperature can be a lesson for us!
Turning our attention to the ‘pearl’, we find that when a foreign element – like a water drop – enters the oyster, it creates a protective shell around the ‘intruder’ and this turns out to be a pearl. This again shows how, when unwanted, uninvited elements creep into our lives, we need to make them into ‘pearls’. Thus the first lesson taught by a diamond and a pearl is that struggles bring out the best in us. Similarly, the Kingdom values are formed not in a cozy milieu, but more often amidst opposition.

Discovering these precious ‘treasures’ is an art. Not every one of us does this. ‘VALUE WHAT YOU HAVE’ is a lovely incident that tells us of how we fail to see the treasures that surround us:
The owner of a small business, a friend of the poet Olavo Bilac, met him on the street and asked him, “Mr Bilac, I need to sell my small farm, the one you know so well. Could you please write an announcement for me for the paper?”
Bilac wrote: “For sale: A beautiful property, where birds sing at dawn in extensive woodland, bisected by the brilliant and sparkling waters of a large stream. The house is bathed by the rising sun. If offers tranquil shade in the evenings on the veranda.”
Some time later, the poet met his friend and asked whether he had sold the property, to which he replied: “I’ve changed my mind when I read what you had written. I realised the treasure that was mine.”

Sometimes we underestimate the good things we have, chasing after the mirages of false treasures. We often see people letting go of their children, their families, their spouses, their friends, their profession, their knowledge accumulated over many years, their good health, the good things of life. They throw out what God has given them so freely, things which were nourished with so much care and effort.
Look around and appreciate what you have: your home, your loved ones, friends on whom you can really count, the knowledge you have gained, your good heath… and all the beautiful things of life that are truly your most precious treasure…

It is not enough to discover the ‘treasures’, but pay the price for them. The persons in today’s Gospel ‘sold all that they had’ in order to get the treasure and the pearl. This is possible only when we see the great value of the discovery we have made. The world today seems to define ‘value’ in terms of a price-tag. In the different translations of the parable of the pearl, two different phrases are used, namely, “a pearl of great value” and “a pearl of great price”. All values do not and should not have a ‘price-tag’. Unfortunately, this trend seems to dominate our social discourse. Our media seems to attach a price tag to everything, be it a natural calamity, a terrorist attack, an epidemic or the victory or defeat of a political leader. Due to this great emphasis on looking at all events of the world as market shares, we are driven to think in terms of what is ‘useful’ and ‘profitable’. This ‘commercial’ yardstick tends to measure even our relationships in these terms. From this perspective, senior persons, sick persons are ‘measured’ as of less or no value at all… Hence, they can be disposed, thrown away. Pope Francis keeps warning us quite often about this ‘throw-away’ culture that tends to blunt our conscience.

The worst form of our market-driven society is the rampant human trafficking that is taking place all over the world. This is the modern form of slavery. July 30, this Sunday, is observed as the ‘World Day against Trafficking in Persons’ by the U.N.
The International Labour Organization (ILO) estimates that 21 million people are victims of forced labour globally. This estimate also includes victims of human trafficking for labour and sexual exploitation… Every country in the world is affected by human trafficking… Children make up almost a third of all human trafficking victims worldwide, according to the United Nations Office on Drugs and Crime Global Report on Trafficking in Persons. Additionally, women and girls comprise 71 per cent of human trafficking victims, the report states. (U.N. Report)

As we reflect on the parables of the treasure and the pearl, we pray that we may have the eyes and heart to discover the innumerable treasures God has stacked up inside and around us. May we become courageous enough to sacrifice everything we have in order to possess the values of the Kingdom! May we also see and ‘value’ other human beings as treasures and pearls – not with a ‘price-tag’, but with the sense of ‘preciousness’, since they are made in the image of God!

World Day against Trafficking in Persons - 30 July
பொதுக்காலம் 17ம் ஞாயிறு

இன்றைய முதல் வாசகத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கனவு காட்சி, நம் ஞாயிறு சிந்தனையைத் துவக்கி வைக்கிறது:
1 அரசர்கள் 3: 5, 7,9
அன்றிரவு கிபயோனில் ஆண்டவர் சாலமோனுக்குக் கனவில் தோன்றினார். "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!" என்று கடவுள் கேட்டார். அதற்குச் சாலமோன், "என் கடவுளாகிய ஆண்டவரே, உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான, ஞானம் நிறைந்த உள்ளத்தை, அடியேனுக்குத் தந்தருளும்" என்று கேட்டார்.

இந்தக் கனவுக் காட்சியுடன் சிறிது கற்பனையைக் கலந்து, நம் சிந்தனைகளைத் துவக்குவோம். இன்றைய ஞாயிறு வழிபாடு நடைபெறும் ஆலயம் ஒன்றில், பல்வேறு நாடுகளின் அரசுத்தலைவர்கள் கலந்துகொள்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். அந்த வழிபாட்டில், இன்றைய முதல் வாசகம் வாசிக்கப்படும்போது, அங்கு அமர்ந்திருக்கும் தலைவர்களின் உள்ளங்களில், எவ்வகை எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கலாம். "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!" என்று கேட்கும் இறைவனிடம், தன் பதவிகால நீட்டிப்பு, அளவற்ற செல்வம், உடல்நலம், எதிர்கட்சிகளின் தோல்வி என்ற முக்கியமான வரங்களைக் கேட்பதற்குப் பதில், எதற்கும் உதவாத, தேவையற்ற வரமான ஞானத்தை வேண்டிக்கேட்ட மன்னன் சாலமோனை, ஆலயத்தில் அமர்ந்திருக்கும் தலைவர்கள், பிழைக்கத்தெரியாத மனிதர் என்று, எண்ணி, தங்களுக்குள் ஏளனமாகச் சிரித்திருப்பர்.

சாலமோனின் இந்த வேண்டுதல், இறைவனை மகிழ்வுறச் செய்தது என்பதை, இன்றைய வாசகம், தெளிவாகக் கூறியுள்ளது.
1 அரசர்கள் 3: 10-13
சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது. கடவுள் அவரிடம், "நீடிய ஆயுளையோ, செல்வத்தையோ நீ கேட்கவில்லை. உன் எதிரிகளின் சாவையும் நீ விரும்பவில்லை. மாறாக, நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். இதோ! நான் இப்பொழுது, நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை. அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்" என்றார்.

பகுத்தறிவு என்பது, மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள தலைசிறந்த ஒரு கொடை. நன்மை, தீமை இவற்றை பகுத்து, பிரித்து அறிவது மட்டும் பகுத்தறிவு அல்ல, அதற்கும் மேலாக, நல்லவற்றிலும், மிக உயர்ந்தவற்றை தேர்ந்து தெளிவதே, உண்மையான பகுத்தறிவு, உண்மையான ஞானம். இத்தகைய ஓர் அறிவுத்திறனையே, சாலமோன், விரும்பி, வேண்டி, கேட்டுக்கொண்டார்.
நல்லவற்றிலும், மிக உயர்ந்தவற்றை தேர்ந்து தெளிய, தனிப்பட்ட மனநிலை தேவை. ஜூலை 31, இத்திங்களன்று, புனித லொயோலா இஞ்ஞாசியாரின் திருநாளைக் கொண்டாடவிருக்கிறோம். இப்புனிதர் வழங்கிய ஆன்மீக முயற்சிகளில், 'தேர்ந்து தெளிதல்' என்பது மிக முக்கியமான ஒரு பாதை. மேலும், "இறைவனின் அதிமிக மகிமைக்கே" என்பது, இப்புனிதர் வழங்கிய விருதுவாக்கு. இறைவனின் மகிமையை நிலைநாட்டுவது என்பதோடு நின்றுவிடாமல், இறைவனின் மகிமையை இன்னும் கூடுதலாக நிலைநாட்ட தேவையான மனநிலையைத் தருமாறு வேண்டினார், அப்புனிதர்.
MAGIS என்றழைக்கப்படும் இன்னும் கூடுதலாக என்ற மனநிலையை உருவாக்க, இன்றைய நற்செய்தி அழைப்பு விடுக்கிறது. வாழ்வில் நம்மை வந்தடையும் நல்லவற்றிலும், மிகச் சிறந்தவற்றை கண்டுபிடித்து, அவற்றை உரிமையாக்கிக் கொள்ள, நம்மிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்யும் மன உறுதி வேண்டும் என்பதையே, இன்றைய நற்செய்தி வலியுறுத்துகிறது.
இறையரசைத் தேடிக் கண்டுபிடித்தல், அதைப் பெறுவதற்கு, நம்மிடமுள்ள அனைத்தையும் தியாகம் செய்தல் என்ற கருத்துக்களை, மூன்று உவமைகள் வழியே இயேசு இன்று சொல்லித் தருகிறார். புதையல், முத்து, மீன்கள் நிறைந்த வலை என்ற இம்மூன்று உவமைகளில், நமது சிந்தனைகளை புதையல், முத்து என்ற இரு உவமைகள் பக்கம் திருப்புவோம்.

'புதையல்' என்ற சொல், பொதுவாக, பூமியிலிருந்து கிடைக்கும் அரியக் கருவூலங்களைக் குறிக்கும். இந்த அரியக் கருவூலங்களில் ஒன்றாக அடிக்கடிப் பேசப்படுவது, வைரம். வைரங்கள் எவ்விதம் உருவாகின்றன என்பதை ஆய்வு செய்தால், அது, இறையரசின்  பண்புகளைப் புரிந்துகொள்ள உதவும்.
பூமிக்கடியில் புதையுண்டு போகும் நிலக்கரி, அங்கு நிலவும் மிக உயர்ந்த அழுத்தம், மிக அதிக வெப்பநிலை ஆகியவற்றை, தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வைரமாக மாறுகின்றது. எவ்வளவுக்கெவ்வளவு அழுத்தமும், வெப்பமும் கூடுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, அங்கு உருவாகும் வைரமும், உயர்ந்த தரமுள்ளதாக மாறுகின்றது. அதேபோல்வாழ்வில் அழுத்தமும், வெப்பமும் கூடும் வேளைகளில், இறையரசின் விலைமதிப்பற்ற மதிப்பீடுகளைக் கொண்டு வாழும் வைரங்களாக நாமும் மாறமுடியும் என்பது, வைரமாகும் நிலக்கரி நமக்குச் சொல்லித்தரும் பாடம்.

அடுத்தது, நம் எண்ணங்கள் முத்தை நோக்கித் திரும்புகின்றன. ஆழ்கடலில் வாழும் சிப்பிக்குள் உருவாகும் அரியக் கருவூலம், முத்து. முத்து உருவாகும் விதம், இறையரசின் மற்றொரு பண்பை நமக்குச் சொல்லித் தருகிறது. வெளியிலிருந்து, சிப்பிக்குள் நுழையும் அன்னியத் துகளோ, துளியோ சிப்பிக்குள் மாற்றங்களை உருவாக்குகின்றன. உத்தரவின்றி உள்ளே நுழைந்துவிடும் வேற்றுப் பொருளைச் சுற்றி, சிப்பி உருவாக்கும் காப்புக் கவசமே, விலையேறப்பெற்ற முத்தாக மாறுகிறது. அதேபோல், நமது உள்ளங்களில், உத்தரவின்றி நுழையும் அன்னிய எண்ணங்களையும், கருத்துக்களையும், அழகிய முத்தாக மாற்றும் வலிமை பெற்றவர்கள் நாம் என்பதை, முத்து உவமையிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.

புதையல், முத்து என்ற சொற்களைக் கேட்டதும், அவற்றின் 'விலை' என்னவாக இருக்கும் என்று நாம் சிந்திக்க வாய்ப்புண்டு. வர்த்தக உலகம் நம்மீது திணித்திருக்கும் ஆபத்தான ஒரு கண்ணோட்டம் இது. இன்றைய உலகில், எல்லாவற்றிற்கும் விலை குறிக்கப்படுகிறது என்பது, மிகவும் வேதனையான நடைமுறை. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டை புயல், வெள்ளம், சூறாவளி என்ற இயற்கைச் சீற்றங்கள் தாக்கும்போது, அவற்றால் ஏற்படும் உயிர்ச் சேதங்களைப் பற்றிப் பேசும் அதே மூச்சில், அந்த இயற்கைப் பேரிடரால் உருவான அழிவுகள் இவ்வளவு மில்லியன் டாலர்கள் என்ற கணக்கும் பேசப்படுகிறது. நாட்டில் நிகழும் விபத்து, தீவிரவாதிகளின் தாக்குதல், கொள்ளை நோய், வறட்சி என்ற அனைத்தும், பணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. அதேபோல், ஒரு நாட்டில், ஒரு குறிப்பிட்ட தலைவர், தேர்தலில் வென்றாலோ, தோற்றாலோ, அதுவும், பங்குச்சந்தை குறியீட்டைக் கொண்டு பேசப்படுகிறது.
இவ்விதம் உலக நிகழ்வுகள் அனைத்திற்கும் விலை நிர்ணயிக்கப்படுவதால், நமது எண்ண ஓட்டங்கள், வர்த்தகப் பாணியிலேயே அதிகம் செல்கின்றன. இந்நிகழ்வுகளின்போது வெளிப்படும் மனிதாபிமானம், பிறரன்புப் பணிகள், தியாகங்கள் போன்ற இறையரசின் உன்னத விழுமியங்கள் அதிகம் பேசப்படுவதில்லை.

வர்த்தக உலகின் அளவுகோல்களைக் கொண்டு, வாழ்வின் அனைத்து உண்மைகளையும் அளக்கும்போது, அங்கு, இலாபம், நஷ்டம் என்ற கேள்விகள் எழுகின்றன. உபயோகமானவை, உபயோகமற்றவை என்று தரம் பிரிக்கப்படுகின்றன. இந்தக் கண்ணோட்டத்தின் மிகக் கொடூரமான வெளிப்பாடு, மனித வர்த்தகம்.
ஜூலை 30, இஞ்ஞாயிறன்று, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் கடைபிடிக்கப்படுகின்றது. எதையும் விலைப்பேசத் துடிக்கும் வர்த்தக மனப்பான்மை நம்மிடையே வளர்ந்துவிட்டதால், மனிதர்கள், குறிப்பாக, பெண்களும், குழந்தைகளும் வர்த்தகப் பொருள்களாக மாறியுள்ளனர். உலகெங்கும் இன்று 2 கோடிக்கும் அதிகமானோர், வியாபாரப் பொருள்களைப்போல் விற்கப்படுகின்றனர். இவர்களில் 76 விழுக்காட்டினர், பெண்கள், மற்றும் சிறுவர், சிறுமியர். அநீதியான இச்சூழல் மாறி, மனிதர்களை, மதிப்பு நிறைந்த கருவூலங்களாக, முத்துக்களாக கருதும் மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள இன்று இறைவனிடம் வேண்டுவோம்.

புதையல், முத்து, இவற்றின் மதிப்பை உணர்ந்த இருவர், தங்களிடம் இருந்த அனைத்தையும் கொடுத்து அவற்றைப் பெற்றனர் என்று இன்றைய நற்செய்தியில் கேட்கும்போது, உன்னதமானவற்றை நாம் பெறுவதற்கு, அனைத்தையும் தியாகம் செய்யும் துணிவு வேண்டும் என்பதை உணர்கிறோம். இலாப, நஷ்டம் பார்த்து, அனைத்தையும் பேரம் பேசி வாழும் இவ்வுலகப் போக்கிலிருந்து விடுதலை பெற்று, இத்தகையத் துணிச்சலான முடிவை எடுப்பதற்கு இறைவன் வழிகாட்ட வேண்டும்.

உள்ளார்ந்த உண்மை மதிப்பை உணர்ந்தால், அதற்காக எதையும் இழக்க நாம் துணிவு கொள்வோம். பெரும்பாலான நேரங்களில் நமக்குள்ளும், நம் குடும்ப உறவுகளிலும் புதைந்துள்ள விலைமதிப்பற்ற முத்துக்களை, வைரங்களை உணராமல், நாம் வாழ்ந்து வருகிறோம். கருவூலங்களைக் கண்டுகொள்ளாமல் வாழும் நம்மை விழித்தெழச் செய்யும் சிறு கதை இது:
பல ஆண்டுகள், ஊரில், ஒரு குறிப்பிட்ட இடத்தில், அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்தவர், ஒருநாள் இறந்தார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒன்று கூடி, அவர் தர்மம் கேட்டு வந்த இடத்திலேயே அவரைப் புதைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் புதை குழியைத் தோண்டியபோது, அவர் அமர்ந்திருந்த அந்த இடத்தில் விலைமதிப்பற்ற ஒரு புதையல் இருந்ததைக் கண்டனர்.

புதையலுக்கு மேல் அமர்ந்துகொண்டு, வாழ்நாள் முழுவதும் தர்மம் கேட்ட இவரைப் போலத்தான் நாமும்... நமக்குள் புதைந்திருக்கும், நம்மைச் சூழ்ந்திருக்கும் எத்தனையோ கருவூலங்களைப் புரிந்துகொள்ளாமல், உலகம் உருவாக்கித்தரும் பொய்யான மதிப்பீடுகளைத் துரத்திச் செல்வதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை, சக்தியை நாம் வீணாக்குகிறோம். பல வேளைகளில், இந்தப் பொய்யான மாயைகளை அடைவதற்கு நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று, நம்மிடம் உள்ள புதையல்களை, முத்துக்களை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.
இறைவன், நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ள புதையலையும், முத்தையும் அடையாளம் காணும் தெளிவை, இறைவன் நமக்கு வழங்க மன்றாடுவோம். நாம் அடையாளம் கண்ட கருவூலங்களைப் பெறுவதற்கு, அல்லது, தக்கவைத்துக் கொள்வதற்கு, எத்தகையத் தியாகத்தையும் செய்யும் துணிவையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.
நம்மைச் சுற்றி வாழ்வோரை, வர்த்தகப் பொருள்களாகக் காணாமல், அவர்களை, விலைமதிப்புக்களையெல்லாம் கடந்த இறைவனின் சாயல்களாகக் காணும் கண்ணோட்டத்தை இறைவன் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.


25 July, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 30

Paid in full with one glass of milk

பாசமுள்ள பார்வையில் - ஒரு 'டம்ளர்' பாலைக்கொண்டு...

சிறுவன் ஒருவன், தன் படிப்புச் செலவுக்குப் பணம் சேர்க்க, ஞாயிற்றுக் கிழமைகளில் வீடு, வீடாகச் சென்று பொருள்கள் விற்றுவந்தான். அன்றும் அவ்வாறே அவன் சென்றபோது, யாரும் அவனிடம் பொருள்கள் வாங்கவில்லை. வெயில் சுட்டெரித்தது. களைப்பாகவும், பசியாகவும் இருந்தது. படிப்பை நிறுத்திவிடலாம் என்று நினைத்தபடி, அருகிலிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். இளம் பெண்ணொருவர் வெளியே வந்ததும், அவரிடம், "குடிக்க கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?" என்று கேட்டான். சிறுவன் இருந்த நிலையைப் பார்த்த அந்த இளம் பெண், உள்ளே சென்று, ஒரு பெரிய 'டம்ளர்' நிறைய பால் கொண்டுவந்து கொடுத்தார். சிறுவன், அதை, ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்துவிட்டு, "நான் உங்களுக்கு எவ்வளவு தரவேண்டும்?" என்று கேட்டான். அப்பெண்ணோ, "ஒன்றுமில்லை. அன்பாகச் செய்யும் உதவிக்கு விலை எதுவும் கிடையாது என்று எங்கள் அம்மா சொல்லித்தந்திருக்கிறார்கள்" என்று கூறினார். ஹாவர்ட் கெல்லி (Howard Kelly) என்ற அச்சிறுவன், அப்பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டு, அந்த வீட்டைவிட்டுக் கிளம்பியபோது, அவன் உடலில் புது சக்தி பிறந்ததைப் போல் உணர்ந்தான். அவனுக்கு, இறைவன் மீதும், மனிதர்கள் மீதும் நம்பிக்கை பிறந்தது. தன் படிப்பை எப்படியும் தொடர்வது என்ற உறுதியும் பிறந்தது.
ஆண்டுகள் உருண்டோடின. அந்த இளம்பெண், விவரிக்கமுடியாத ஓர் அரிய நோயினால் துன்புற்றார். அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகள், அவர் இருந்த ஊரில் இல்லையென்பதால், அருகிலிருந்த நகருக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த ஒரு பெரிய மருத்துவமனையில், ஹாவர்ட் கெல்லி, மருத்துவராகப் பணியாற்றிவந்தார். அவரிடம் அப்பெண்ணின் மருத்துவ 'ரிப்போர்ட்' கொடுக்கப்பட்டது. மருத்துவர் கெல்லி, அந்த ஊரின் பெயரைப் பார்த்ததும், அந்தப் பெண்ணைச் சந்திக்கச் சென்றார். அவர்தான் தனக்கு ஒரு 'டம்ளர்' பால் கொடுத்தவர் என்பதை, டாக்டர் கெல்லி புரிந்துகொண்டார். ஆனால், அப்பெண்ணுக்கு, டாக்டரை அடையாளம் தெரியவில்லை.
டாக்டர் கெல்லி தீவிர முயற்சிகள் எடுத்து, அப்பெண்ணைக் குணமாக்கினார். அப்பெண்ணின் மருத்துவச் செலவுக்குரிய 'பில்'லைத் தனக்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். 'பில்' வந்ததும், அதில் சில வார்த்தைகளை எழுதி, அப்பெண் இருந்த அறைக்கு 'பில்'லை அனுப்பி வைத்தார், டாக்டர் கெல்லி. 'பில்'லைப் பார்க்கத் தயங்கினார், அப்பெண். தன் வாழ்நாளெல்லாம் உழைத்தாலும், அந்த 'பில்' தொகையை தன்னால் கட்டமுடியாது என்று அவருக்குத் தெரியும். மனதை, ஓரளவு திடப்படுத்திக்கொண்டு, 'பில்'லைப் பார்த்தார். அந்தத் தொகை உண்மையிலேயே பெரிய தொகைதான். ஆனால், அந்தத் தொகைக்கருகே, "இந்த 'பில்' தொகை முழுவதும் கட்டப்பட்டுவிட்டது, ஒரு 'டம்ளர்' பாலைக்கொண்டு" என்று எழுதப்பட்டிருந்தது.

Job appeals to God directly

வேதனை வேள்வியில் யோபு – பகுதி 30

யோபுக்கும், அவரது நண்பர்கள் மூவருக்கும் இடையே நடைபெறும் வழக்கு, இறுதி நிலையை அடைந்துள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை, நாம் இந்த வழக்கில் இன்று கலந்துகொள்கிறோம். நீதி மன்றங்களில் நாம் காணும் வழக்குகளுக்கும், இந்த வழக்கிற்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு, இந்த வழக்கில், நீதிபதியாக வீற்றிருக்கவேண்டிய இறைவன், இன்னும் அவர்கள் முன்பு தோன்றவில்லை என்பது.
மற்றொரு வேறுபாடு, 29ம் பிரிவு முதல், 31ம் பிரிவு முடிய, யோபு வழங்கும் இறுதி வாதங்களில் கூறப்படும் கருத்துக்கள். பொதுவாக, நீதி மன்றங்களில், வழக்கறிஞர்கள், தங்கள் வாதங்களை மாறி, மாறி, சமர்ப்பித்தபின், இறுதியாக, தங்கள் கருத்துக்களைத் தொகுத்து வழங்கி, 'தேட்ஸ் ஆல் யுவர் ஆனர்' என்று முடிப்பர் என்பதை அறிவோம். இந்த இறுதி வாதங்களில், தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும், நன்மைகளையும், எதிர் தரப்பில் இருக்கும் குறைகளையும், வெளிச்சமிட்டுக் காட்டுவது, வழக்கறிஞர்களின் வேலை.

யோபு வழங்கும் இறுதி வாதத்தில், ஒரு மாறுதலைக் காண்கிறோம். அவர், தான் வாழ்வில் பெற்ற நன்மைகளைத் தொகுத்து, 29ம் பிரிவில் தந்துள்ளார். அதை, சென்ற வாரம் நாம் சிந்தித்தோம். 30ம் பிரிவிலோ, தனக்கு நேர்ந்த துன்பங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். அவர் இந்தக் துன்பங்களை அடைந்ததற்கு காரணமே, அவர் செய்த பாவத்தின் விளைவு என்பது, எதிர் தரப்பு வழக்கறிஞர்களான யோபின் நண்பர்கள், மாறி, மாறி முன்வைத்த வாதம். அந்த வாதத்திற்கு வலிமை சேர்ப்பதுபோல், யோபு மீண்டும் தன் துன்பங்களை பட்டியலிட்டுள்ளார். ஒரு நீதி மன்றத்தில் இவ்வாறு நிகழ்ந்திருந்தால், யோபு, தன் வழக்கை கட்டாயம் இழந்திருப்பார். ஆனால், யோபு, தன் வழக்கை, இறைவன் முன் வைக்கிறோம் என்ற நம்பிக்கையில், தன் துன்பங்களை, தயக்கமின்றி பட்டியலிட்டுள்ளார்.

வீட்டிலும், நாட்டிலும், தான் அடைந்திருந்த மதிப்பையும், அதற்குக் காரணமாக இருந்த தனது நற்செயல்களையும், 29ம் பிரிவில் அசைபோட்ட யோபு, 30ம் பிரிவை, "ஆனால்" என்ற சொல்லுடன் துவக்குகிறார். நமது பேச்சு வழக்கில், "ஆனால்" என்ற சொல்லை ஒருவர் பயன்படுத்தும்போது, அவர் அதுவரை கூறிவந்த கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்தைச் சொல்லப்போகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அத்தகைய ஒரு மாற்றம் இங்கு நிகழ்கிறது. 29ம் பிரிவில் ஒலித்த மகிழ்வுப் பாடலுக்கு முற்றிலும் எதிராக, 30ம் பிரிவில், யோபின் புலம்பலைக் கேட்க, 'ஆனால்' என்ற அந்த சொல் நம்மை தயார் செய்கிறது.
யோபு 30: 1 அ
ஆனால், இன்று என்னை, என்னைவிட இளையோர் ஏளனம் செய்கின்றனர்

தன்னைக்கண்டு மரியாதையுடன் ஒதுங்கிச் சென்ற இளையோர், (யோபு 29:8) இப்போது தன்னை ஏளனம் செய்யுமளவு துணிவு கொண்டுள்ளனர் என்பதை, யோபு, தன் முதல் புலம்பலாகக் குறிப்பிடுகிறார். இதைத் தொடர்ந்து, தன்னை ஏளனம் செய்யும் இளையோர் எப்படிப்பட்டவர்கள் என்று யோபு விவரிப்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது. தான் வளமுடன், நலமுடன் வாழ்ந்தபோது, தனக்குச் சொந்தமான ஆட்டு மந்தையைக் காப்பதற்கு தான் வைத்திருந்த நாய்களைவிட, இவ்விளையோரின் தந்தையர் தாழ்ந்தவர் என்று யோபு கூறும் ஒப்பீட்டைக் கேட்கும்போது, அவரது உள்ளத்தில் பொங்கியெழும் ஆத்திரத்தையும், வேதனையையும் புரிந்துகொள்கிறோம்.
யோபு 30: 1
இன்று என்னை, என்னைவிட இளையோர் ஏளனம் செய்கின்றனர்; அவர்களின் தந்தையரை என் மந்தையின் நாய்களோடு இருத்தவும் உடன்பட்டிரேன்.
என்று ஆரம்பமாகும் யோபின் ஆத்திரமும், வேதனையும், 30ம் பிரிவு முழுவதும் வெடித்துச் சிதறுகின்றன.

இந்த அறிமுக வரிகளைத் தொடர்ந்து, 30ம் பிரிவின் 2 முதல் 8 முடிய உள்ள இறைச்சொற்றொடர்கள், தான் மதிப்புடன் வாழ்ந்தபோது, இந்த இளையோரின் குடும்பங்கள் வாழ்ந்துவந்த இழிநிலையைச் சித்திரிக்கின்றன:
யோபு 30: 3,7
அவர்கள் பட்டினியாலும் பசியாலும் மெலிந்தனர்; வறண்டு, இருண்டு அழிந்த பாலைக்கு ஓடினர்... புதர்களின் நடுவில் அவர்கள் கத்துவர்; முட்செடியின் அடியில் முடங்கிக் கிடப்பர்.
மனித சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக வாழவும் தகுதியற்றவர்களாக இருந்த இத்தகையோரின் ஏளனத்திற்கு தான் உள்ளானதை எண்ணி, யோபு மனமுடைந்து பேசுகிறார்:
யோபு 30: 9-10
இப்பொழுதோ, அவர்களுக்கு நான் வசைப்பாட்டு ஆனேன்... என்னை அவர்கள் அருவருக்கின்றனர்; என்னைவிட்டு விலகிப் போகின்றனர்; என்முன் காறித் துப்பவும் அவர்கள் தயங்கவில்லை.

ஊராரின் ஏளனம், யோபை ஏன் இவ்வளவுதூரம் பாதித்தது என்பதைப் புரிந்துகொள்ள, யோபு வாழ்ந்த காலத்தில் நிலவியச் சூழலை, கருத்தில் கொள்வது பயனளிக்கும் என்று, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) அவர்கள், யோபைக் குறித்து எழுதியுள்ள தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். யோபு வாழ்ந்த காலத்தில், சமுதாயத்தில் ஒருவர் பெற்ற மதிப்பு அரியதொரு சொத்தாகக் கருதப்பட்டது. இன்றும், பல நாடுகளில், பாரம்பரியத்தில் ஊறியுள்ள இடங்களில், ஒருவரது 'கௌரவம்' மிக உயர்ந்த நிலை வகிக்கிறதை நாம் உணர்வோம். அந்த 'கௌரவத்தை' இழப்பதற்குப் பதில், ஒருவர் தன் உயிரையும் இழக்கத் துணிவதை நாம் அறிவோம். அதேபோல், குடும்ப கௌரவத்தைக் குலைக்கும் வண்ணம் நடந்துகொள்பவரை கொலை செய்துவிட்டு, அதை, 'கௌரவக் கொலை' என்று கூறுவதையும் நாம் அறிவோம். இந்தப் பின்புலத்திலிருந்து பார்க்கும்போது, யோபு, தன்னை பிறர் மதிக்கவில்லை என்பதை பெரும் புலம்பலாக வெளிப்படுத்தும்போது, அதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இன்று நிலவும் பொது வாழ்வில், குறிப்பாக அரசியல் உலகில், ஒருவர் பேரும் புகழும் பெறுவதை முதல்தரமானச் சொத்தாகக் கருதுவதற்குப் பதில், அவர் குவித்து வைத்திருக்கும் பணமே முதல்தரச் சொத்தாகக் கருதப்படுகிறது. பணம் இருந்தால், பேரும் புகழும் பெறமுடியும் என்று நம்பும் காலம் இது. குற்றங்களில் பிடிபட்டு ஒருவர் தன் பேரையும் புகழையும் இழந்தாலும், அவற்றை, பணத்தைக் கொண்டு வாங்கிவிடலாம் என்ற துணிவில், அரசியல்வாதிகளின் நடத்தை, நாளுக்குநாள் நெறிகெட்டு வருவதைக் காண்கிறோம்.

ஊராரின் ஏளனத்திற்கு, குறிப்பாக, தான் வளர்க்கும் நாய்களுக்கு இணையாக நிற்கவும் தகுதியற்றோரின் ஏளனத்திற்கு, தான் உள்ளாகிவிட்டோமே என்று யோபு புலம்புவது, அவரது தன்னிரக்கத்தை (Self pity) வெளிப்படுத்துகிறது என்று, ஹெரால்டு குஷ்னர் அவர்கள், தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். அடுத்தவர் என்ன சொல்வார் என்பதில் கவலை கொள்ளும் மனிதர்கள், வரலாற்றில் எப்போதுமே வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு, யோபு மற்றுமோர் எடுத்துக்காட்டு. யோபின் சுய மதிப்பு, எவ்வளவு தூரம், மற்றவரைச் சார்ந்திருந்தது என்பதை, குஷ்னர் அவர்கள், தன் நூலில் விளக்குகிறார்.

புகழின் உச்சியில் யோபு வாழ்ந்தபோது, அவர், தன்னிடமிருந்த செல்வங்களிலும், நற்பண்புகளிலும் நிறைவு கண்டதைக் காட்டிலும், மற்றவர் தனக்கு வழங்கிய மரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்; அதில் அதிக நிறைவு கண்டார். எனவே, அவர், தன் செல்வம், புதல்வர், புதல்வியர், உடல்நலம் அனைத்தையும் இழந்தபோது அடைந்த துன்பத்தைவிட, மக்களின் மதிப்பை இழந்துவிட்டோம் என்பதே, அவரை, பெரும் வேதனைக்கு உள்ளாக்கியது என்று, குஷ்னர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்களின் மதிப்பை மையப்படுத்தி யோபு அடைந்துள்ள இந்த வேதனை நிலையை விளக்க, குஷ்னர் அவர்கள் பயன்படுத்தும் ஓர் உருவகம், அழகான ஓர் உண்மையை நம் அனைவருக்கும் கற்றுத்தருகிறது.
16ம் நூற்றாண்டில், முகம்பார்க்கும் கண்ணாடிகள், தொழிற்சாலைகளில், பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டபோது, மக்களின் தினசரி வாழ்வில் கண்ணாடிகள் முக்கிய மாற்றங்களைக் கொணர்ந்தன. அதுவரை, மக்கள், தங்கள் தோற்றம் எப்படியிருக்கும் என்பதை முழுமையாக உணராமல் வாழ்ந்தனர். ஒவ்வொருவரும், தன் சுய உருவம் (Self-image) பற்றி கொண்டிருந்த மதிப்பீடு, அடுத்தவர் தங்களைப் பார்க்கும் பார்வை வழியே வந்தது. தன்னைப் பார்ப்பவர்களின் முகங்களில் தெரியும் விருப்பு, வெறுப்பு, மதிப்பு, அல்லது, ஏளனம் இவற்றைக்கொண்டே ஒருவரது சுய மதிப்பு அளவிடப்பட்டது.
முகம்பார்க்கும் கண்ணாடிகள் அறிமுகமானபின், தங்கள் முகத்தை, உடலை அவர்கள் கண்ணாடியில் கண்டபோது, தங்களைப்பற்றி இன்னும் சற்று தெளிவான மதிப்பை ஒவ்வொருவரும் பெற்றனர் என்று கூறும் ஹெரால்டு குஷ்னர் அவர்கள், முகம்பார்க்கும் கண்ணாடிகள் இல்லாத காலத்தில் யோபு வாழ்ந்ததால், அடுத்தவர் தன்மீது காட்டிய மதிப்பைக் கொண்டு, தன் சுய மதிப்பை அவர் அளந்தார் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லையே என்று விளக்குகிறார்.

முகம் பார்க்கும் கண்ணாடி முதல், நம்மை நாமே படமாகப் பதிவு செய்யும் 'செல்ஃபி' வரை, நான், எனது, என்றே நமது உலகம் சுழன்று வந்தாலும், அடுத்தவர் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதற்கு நாம் தரும் முக்கியத்துவம், இன்னும் நம் வாழ்வில் உயர்ந்ததோர் இடத்தைப் பிடித்துள்ளது என்பதை நம்மால் மறுக்க இயலாது.
தன்னை இவ்வுலகம் மதிக்கவில்லை என்று புலம்பும் யோபு, தனது செல்வம், பெருமை, உடல்நலம் அனைத்தையும் படிப்படியாக இழந்ததை, 30ம் பிரிவில் விவரிக்கும் வரிகள், நம் உள்ளத்தை பாதிக்கின்றன. இவ்வரிகளில் புதைந்திருக்கும் வேதனையையும், அதன் எதிரொலிபோல், விவிலியத்தின் வேறு நூல்களில் நாம் காணும் பகுதிகளையும், அடுத்தவாரம் புரிந்துகொள்ள முயல்வோம்.


23 July, 2017

Seeds and weeds கதிர்களும் களைகளும்

The Wheat and the Weeds

16th Sunday in Ordinary Time

In today’s Gospel (Matthew 13: 24-43), Jesus presents us with three parables, namely, the parable of the wheat and the weed, the parable of the mustard seed, and the parable of the leaven. Jesus presents these parables to explain one of the main characteristics of the Kingdom of God, namely, PATIENCE. For the present generation, running at break-neck speed, Jesus presents these three parables as ‘speed-breakers’ or speed bumps! Let us try to slow down and listen!

Last Sunday Jesus presented a sower who was reckless in sowing, rather, in scattering the seeds all over the place. This Sunday he presents two sowers - one who sows good seeds in broad daylight and ‘the enemy’ who sows weeds ‘while men were sleeping’, namely, at night. This parable has the protagonist and the villain!
When we read the opening lines of this parable, our attention turns to the ‘villain’, rather than to the one who had done all the hard work of sowing good seeds. We are intrigued with someone taking such a lot of effort to sow weeds. We know that in any field, weeds come up on their own, in spite of all the care taken. But, here we see weeds being intentionally sown, to jeopardize the growth of the good seeds. Most of the media time and space are devoted to these ‘villains’ sowing weeds.

All of us are aware of the cyber attack that takes place now and then. This is a good example of how some persons spend such a lot of brain power to paralyze the normal functioning of the world. We have heard of persons, who were sacked from some of the computer firms, planting ‘viruses’ in computers. This is a good example of ‘sowing weeds instead of seeds’. We are also sadly conscious of the ‘terrorist groups’ whose main job seems to be plotting and planting destruction!

When faced with such an abundance of weeds, our first instinct is to weed them out. The workers in today’s parable were ready to begin weeding as soon as they spotted the weeds. Here is the scene as described by Jesus:
Matthew 13: 26, 28-30
So when the plants came up and bore grain, then the weeds appeared also. The servants said to the house-holder, ‘Then do you want us to go and gather them?’ But he said, ‘No; lest in gathering the weeds you root up the wheat along with them. Let both grow together until the harvest’

The enthusiasm shown by the servants to gather the weeds, is similar to the rash efforts taken by the police and the judiciary in ‘weeding out’ criminals from society. Unfortunately, in their hurry, they pick the wheat instead of the real weed. In the first week of June, a young man named Richard Anthony Jones was freed from prison after being wrongfully confined there for 17 years. Here are some excerpts about this case as reported in BBC on 11 June, 2017:

A US prisoner who spent 17 years in jail for a robbery he did not commit has spoken of his relief that researchers found his lookalike. Richard Anthony Jones from Kansas was released from jail after witnesses said they could not tell the two men apart. A judge ruled there was no evidence to keep him in jail.
Mr Jones said finding a photo of the other man - who as well as looking like him, shares the same first name - was a "needle in a haystack moment". 'I don't believe in luck, I believe I was blessed,' Mr Jones told the Kansas City Star.
So far no criminal case has been filed against his double - known only as Ricky - who gave evidence at Mr Jones's robbery retrial and denied committing the crime. While not saying Ricky was responsible, the judge found that based on the new evidence, no reasonable juror would have convicted Mr Jones.
Mr Jones said that he began to despair that he would ever be released from jail after repeated efforts to appeal against his 19-year conviction for a 1999 robbery. "All my appeals had been denied. It has been a rough ride," he said. But in 2015 he told researchers from the Midwest Innocence Project - a group that aids wrongly convicted prisoners - about a man called Ricky he had heard about. Mr Jones had been told by fellow inmates that he looked identical to Ricky. "When I saw the picture of my double it all made sense to me," he said. Mr Jones had been convicted based mostly on eyewitness evidence.
There was no physical, DNA or fingerprint evidence that linked him to the crime. Richard Anthony Jones celebrated with his family last week after being released from jail. Lawyers for Mr Jones also said he was with his girlfriend and her family at the time members of the public were robbed in a park. They argued that police identity procedures 17 years ago were deeply flawed.

Police and court procedures are still deeply flawed, especially when the ‘so-called-criminal’ happens to be a common man with no power. In so many cases, innocent people are framed as ‘weeds’ in order to protect some bigwigs. What impresses us in the case of Mr Jones is his statement to the Kansas City Star: 'I don't believe in luck, I believe I was blessed.' In my opinion, if a person could make such a statement after the bitterness of 17 years in prison for no fault of his, then he - Mr Jones - has grown up to  be ‘a true wheat’, ripe enough to be gathered into the Kingdom. We pray that the police and the judiciary develop more patience and sharpen their sense of justice while dealing with innocent, simple people.

Patience is the key factor emphasized in the parables of the mustard seed and the leaven. When talking of patience, I am reminded of the guy whose weakness was impatience. He prayed earnestly to God to cure him of his weakness, saying: “God, give me patience – and I want it now, immediately!”

Patience is becoming a precious virtue in the present ‘instant era’. We are looking for instant results, starting from instant noodles! This is in complete anti-thesis to the growth of a mustard seed and the leavening of the flour. They don’t happen in an instant.

We are reminded of the ‘instant era’ man, who planted some seeds at the backyard of his house. Every morning he would go to the garden, dig up the seeds he planted and see whether any growth had taken place. In his anxiety to see ‘instant growth’ he had denied the possibility of any growth at all. The same is true for the flour to be leavened. Once the flour is leavened, it needs to ‘sit’ overnight. If, in our anxiety, we keep checking the flour, it will not be leavened properly.

Our ‘instant era’ has robbed us not only of our patience, but also of our capacity for clear, independent thinking, forming proper judgment, our sense of sifting the grain from the chaff etc. With our advanced technology, we are flooded with information. We don’t have time to sift them through, trying to weed out things that don’t help us.

Instead of patient nurturing of worthwhile information, we are being chocked by carefully planted weeds called ‘dis-information’ that serves no one. Unfortunately, we, in our turn, sow these weeds in our neighbour’s smart phones.

The parable of the wheat and the weed hints at each of us being a fertile soil for wheat and weeds.  In each of us there are elements of the Kingdom of God and elements that are deeply opposed to it.  Relying on the power of God, we, too, must learn to be patient with the evil ones, starting with ourselves.  Here is Karl Rahner’s piece of advice to the enthusiastic “weed”-gatherers: "The number-one cause of atheism is Christians themselves.  What an unbelieving world finds simply unbelievable is the presence of those who proclaim God with their mouths and deny Him with their lifestyles. Perhaps, the best defense of God would be to just keep our mouths shut and to live as He told us to.  The Gospel would then have such a power and attraction that we wouldn't have to worry about defending it.”

May this Sunday’s parables help us to learn the art of patience.

பொதுக்காலம் 16ம் ஞாயிறு

புகழ்பெற்ற ஆன்மீக வழிகாட்டியும், இயேசுசபை அருள்பணியாளருமான, Anthony de Mello அவர்களின் 'One Minute Wisdom' அதாவது, 'ஒரு நிமிட ஞானம்' என்ற நூலில் காணப்படும் எளியதொரு கதை இது:
குரு எப்போதும் கதைகளையேக் கூறிவந்தார். அவர் கூறிய கதைகள், சீடர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தாலும், இன்னும் ஆழமான உண்மைகளை, தங்கள் குரு கற்றுத் தரவேண்டும் என்று, சீடர்கள் கேட்க ஆரம்பித்தனர். அவர்கள் என்னதான் வற்புறுத்திக் கேட்டாலும், குரு சொன்ன ஒரே பதில் இதுதான்: "மனிதர்களுக்கும், உண்மைக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதையே. இதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை."
உண்மைக்கும், நமக்கும் இடையே உள்ள சுருக்கமான வழி, கதைகளே என்று, இயேசு உணர்ந்திருந்தார். எனவே, அவர், இறைவனையும், இறையரசையும் அறிமுகம் செய்வதற்கு உவமைகளைப் பயன்படுத்தினார். சென்ற ஞாயிறு, 'விதைப்பவர் உவமை'யை வழங்கிய இயேசு, இந்த ஞாயிறு, மூன்று உவமைகளை வழங்குகிறார். வயலில் தோன்றிய களைகள், கடுகு விதை, புளிப்பு மாவு என்ற இந்த மூன்று உவமைகளும், விண்ணரசின் பண்புகளை விளக்கும் உவமைகள் என்று இயேசு கூறியுள்ளார்.
விண்ணரசின் முக்கியப் பண்பான வளர்ச்சி பற்றி, இவ்வுவமைகள் வழியே, இயேசு சொல்லித்தருகிறார். எந்த ஒரு வளர்ச்சியும், மின்னலைப்போல் தோன்றி மறைவது இல்லை; உண்மையான வளர்ச்சி, பல தடைகளைத் தாண்டி, மெதுவாக, ஆனால், உறுதியாக, இறுதியாக வெளிப்படும்; அதைக் காண்பதற்கு, பொறுமை தேவை என்ற பாடங்களை இன்றைய மூன்று உவமைகளும் நம் உள்ளங்களில் ஆழமாகப் பதிக்கின்றன. அனைத்திற்கும், உடனுக்குடன் தீர்வுகள் காணவேண்டும் என்ற அவசரம் கொண்டிருக்கும் நமக்கு, இந்த அவசரத்தால், பயிரையும், களையையும், நல்லவற்றையும், தீயவற்றையும் பகுத்துப்பார்க்கப் பொறுமையின்றித் தவிக்கும் நமக்கு, இன்றைய உவமைகள், 'வேகத் தடையை'ப் (Speed breaker / speed bump) போல வந்து சேருகின்றன.

விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார் (மத்தேயு 13: 3) என்று சென்ற வார உவமையை அறிமுகம் செய்த இயேசு, இந்த வாரம், இருவர் விதைப்பதைப் பற்றி குறிப்பிடுகிறார்:
மத்தேயு 13: 24-25
இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான் என்று இயேசு இந்த உவமையைத் துவக்குகிறார்.
இந்த அறிமுக வரிகளை வாசிக்கும்போது, விதை விதைத்தவரைக் காட்டிலும், இரவோடிரவாக, களைகளை விதைத்துச் சென்றவர், நம் கவனத்தை ஈர்க்கின்றார், நமக்குள் நெருடல்களை உருவாக்குகின்றார். எந்த ஒரு நிலத்திலும், பயிர்களுடன் ஒரு சில களைகளும் வளர்வது இயற்கைதான். ஆனால், களைகள், பயிர்களைவிட அதிகம் பெருகவேண்டும் என்ற எண்ணத்துடன், களைகளை விதைப்பவர், இன்றைய உலகில், திட்டமிட்டு தீமைகளை வளர்ப்போரை நினைவுபடுத்துகிறார். தானாகவே மலிந்துவரும் தீமைகள் போதாதென்று, ஒரு சிலர் திட்டமிட்டு தீமைகளை விதைத்து, அவை வளர்வதைக் கண்டு இரசிக்கும் அவலத்தை நாம் அறிவோம்.
எடுத்துக்காட்டாக, ஒரு சில கணணி நிறுவனங்களில் பணிபுரிந்தோர், குற்றங்களில் சிக்கி, அந்நிறுவனங்களை விட்டு வெளியேற்றப்பட்டபோது, அந்நிறுவனங்கள் உருவாக்கிய கணணி மென்பொருள்களில் 'virus' எனப்படும் களைகளை நுழைத்துச் சென்றனர் என்பதை நாம் அறிவோம். கணணிகள் வழியே, தகவல் தொழிநுட்ப உலகில் அவ்வப்போது விதைக்கப்படும் களைகளான 'virus'கள் இவ்வுலகிற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன. இவ்வாண்டு மேமாதம், கணணி உலகில் நிகழ்ந்த ஒரு 'சைபர் தாக்குதலால்' (Cyber attack) 99 நாடுகளில், கோடிக்கணக்கான கணணிகள் செயலிழந்தன. குறிப்பாக, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் மருத்துவமனைகள் முடங்கிப்போயின.

இறையரசின் வளர்ச்சிக்காகப் பொறுமையாகக் காத்திருப்பதுபோல், இறையரசிற்கு தடையாக வளர்ந்துள்ள களைகளை அகற்றுவதிலும் நாம் பொறுமையைக் கடைபிடிக்கவேண்டும் என்பதை, இயேசு, தன் முதல் உவமையில் தெளிவாக்குகிறார். களைகளைக் கண்டதும், அவற்றை அகற்றிவிட விரும்பிய பணியாளர்களிடம், வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள்என்று நில உரிமையாளர் அறிவுரை வழங்குகிறார்.

களைகளை அகற்றிவிட பணியாளர்கள் காட்டிய அவசரத்தை, பல்வேறு நாடுகளில், காவல்துறையும், நீதித்துறையும் காட்டிவருகின்றன. களைகளை அகற்றுகிறோம் என்ற போர்வையில், இத்துறைகள் காட்டியுள்ள வேகமும், அவசரமும், பல அப்பாவியான பயிர்களைப் பலிவாங்கியுள்ளன என்பது, நாம் அடிக்கடி கேட்கும் செய்திதானே!
இவ்வாண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வெளியான ஒரு செய்தி, பயிரா, களையா என்பதை அறியும் பொறுமையின்றி செயலாற்றிய காவல் மற்றும் நீதித்துறைகளைப் பற்றியது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கான்சாஸ் நகரில், தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற ஓர் இளைஞர், 17 ஆண்டுகள் சென்று, குற்றமற்றவர் என்று, கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் விடுவிக்கப்பட்டார்.
ரிச்சர்ட் அந்தனி ஜோன்ஸ் என்ற இவ்விளைஞர், 1999ம் ஆண்டு, பூங்கா ஒன்றில் மக்களிடமிருந்து கொள்ளையடித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டதால், 19 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்தக் கொள்ளை நடந்ததைக் கண்ட சிலர், அதைச் செய்தது ரிச்சர்ட்தான் என்று அடையாளப்படுத்தியதை வைத்து, நீதிபதியும், 'ஜூரி' என்றழைக்கப்படும் நடுவர் குழுவும் இணைந்து, ரிச்சர்டுக்குச் சிறைதண்டனை வழங்கினர். தான் இக்குற்றத்தைச் செய்யவில்லை என்றும், குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தில், தான் மற்றோர் இடத்தில் இருந்ததாகவும், இளையவர் ரிச்சர்ட், பலமுறை எடுத்துச் சொல்லியும், பயனின்றி போனது.
அவர் சிறையில் 15 ஆண்டுகள் கழித்தபின், அச்சிறைக்கு வந்த வேறு சில கைதிகள், ரிச்சர்ட், தங்களுக்குத் தெரிந்த மற்றொரு நண்பரைப்போலவே இருக்கிறார் என்று கூறினர். அந்த நண்பரின் பெயரும் 'ரிச்சர்ட்' என்பதை அவர்கள் கூறியதும், ரிச்சர்ட், தன் வழக்கறிஞர்கள் வழியே, இந்த மற்றொரு ரிச்சர்ட்டைக் கண்டுபிடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இரண்டாவது ரிச்சர்டின் புகைப்படங்கள் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இருவரும், ஒரே தோற்றமும், ஒரே பெயரும் கொண்டிருந்ததால், பூங்காவில் கொள்ளையடித்தவர் யார் என்பதை அடையாளப்படுத்தியவர்கள் தவறு செய்திருக்கலாம் என்று நீதிமன்றம் உணர்ந்து, சிறையில் இருந்த ரிச்சர்ட் அவர்களுக்கு விடுதலை வழங்கியது. குற்றம் செய்த ஒருவரைப்போல இருந்த ஒரே காரணத்திற்காக, இளையவர் ரிச்சர்ட், தனக்கு விதிக்கப்பட்ட 19 ஆண்டுகள் தண்டனையில், 17 ஆண்டுகளை சிறையில் கழிக்க நேரிட்டது.
தன் விடுதலையைத் தொடர்ந்து, இளையவர் ரிச்சர்ட் செய்தியாளர்களிடம் கூறிய கருத்துக்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன: "ஒரே வகையான தோற்றமும், ஒரே பெயரும் கொண்டிருப்பது, மிக, மிக அரிதான ஓர் ஒற்றுமை. இதைக் கொண்டு, முதலில், எனக்கு தண்டனையும், இப்போது, விடுதலையும் கிடைத்திருப்பது, அரியவகை அதிசயம் என்றே சொல்லவேண்டும். இதை நான், அதிர்ஷ்டம் என்று நம்பமாட்டேன். இது எனக்குக் கிடைத்த ஆசீர் என்றே நம்புகிறேன்" என்று ரிச்சர்ட் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக, 17 ஆண்டுகள் சிறையில் துன்புற்றபின்னரும், தனக்குக் கிடைத்த விடுதலை, வெறும் அதிர்ஷ்டம் அல்ல, அது ஓர் 'ஆசீர்வாதம்' என்று கூறுமளவு பக்குவப்பட்டிருந்த இளையவர் ரிச்சர்ட் அவர்கள், சிறையில் இருந்த பல்வேறு களைகள் நடுவே ஒரு பயிராகவே வளர்ந்தார் என்பதை நம்மால் உணரமுடிகிறது. பயிரையும், களையையும் பிரித்துப்பார்க்கும் பொறுமையின்றி, அல்லது, பல வேளைகளில், களைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், அப்பாவி மக்களை பழிவாங்கும் நீதித்துறைக்கும், காவல் துறைக்கும், இறைவன், பொறுமையையும், நேரிய சிந்தனையையும் வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

பயிரையும், களைகளையும் பகுத்துப் பார்க்க நமக்குப் பொறுமை தேவை என்பதே, இவ்வுவமையில் இயேசு சொல்லித்தரும் முக்கியமானப் பாடம். 'அகழ்ந்தாரைத் தாங்கும் நிலம்' என்று, நிலத்தை, நாம், பொறுமைக்கு எடுத்துக்காட்டாகக் கூறுகிறோம். தன்னில் விதைக்கப்பட்ட பயிர்களையும், களைகளையும் எவ்விதப் பாகுபாடுமின்றி, வளரவிடுகிறது, நிலம். அந்த நிலத்தைப் பின்புலமாகக் கொண்டு தன் உவமையைக் கூறியுள்ள இயேசு, பொறுமையுடன் காத்திருந்து, பயிர்களும், களைகளும் முற்றிலும் வளர்ந்தபின் அவற்றை பிரிப்பதே இறையரசின் அழகு என்று, இவ்வுவமையில் சொல்லித்தருகிறார்.
அதேவண்ணம், கடுகுவிதை உவமையும், புளிப்பு மாவு உவமையும் பொறுமையைச் சொல்லித்தருகின்றன. விதைகளை விதைத்த மறுநாளே செடிகளை எதிர்பார்ப்பது மதியீனம் என்பதை அறிவோம். ஒருவர் தன் வீட்டின் பின்புறம் இருந்த சிறு தோட்டத்தில் சில விதைகளை ஊன்றி வைத்தார். ஒவ்வொருநாளும் காலையில், தோட்டத்திற்குச் சென்று, மண்ணைத் தோண்டி, தான் ஊன்றிய விதைகள் வளர்ந்துவிட்டனவா என்று அவர் பார்த்து வந்தாராம். அந்த விதைகள் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் அறிவோம். அதேபோல், மாவில் புளிப்புமாவைக் கலந்தபின், அதை மூடி வைக்கவேண்டும். மாவு முழுவதிலும் புளிப்பு ஏறுவதற்குக் காத்திருக்கவேண்டும். புளிப்பு ஏறிவிட்டதா என்று பார்க்க, அந்த மாவு உள்ள பாத்திரத்தை அடிக்கடி திறந்தால், உள்ளிருக்கும் மாவில் புளிப்பெற வாய்ப்பில்லை. பயிர்களும், களைகளும் வளரும் நிலம், பூமியில் ஊன்றிய கடுகு விதை, புளிப்பு மாவு கலக்கப்பட்ட மாவு, என்ற மூன்று உவமைகளும் நமக்குச் சொல்லித்தரும் ஒரே பாடம், பொறுமை!

பொறுமையைப் பற்றி சிந்திக்கும்போது, இளையவர் ஒருவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டது நம் நினைவுக்கு வருகிறது. பொறுமையின்றி எப்போதும் பதட்டத்துடன் வாழ்ந்துவந்த அந்த இளையவர், இறைவனிடம் வேண்டினார்: "இறைவா, எனக்குப் பொறுமையைத் தாரும். இப்போதே, இந்த நொடியே அதை எனக்குத் தாரும்" என்று வற்புறுத்தி வேண்டினாராம்.
நாம் எதிர்பார்ப்பவை அனைத்தும், துரிதமாக, உடனடியாக கிடைக்கவேண்டும் என்று அவசரப்படுவது நாம் வாழும் 'உடனடி யுகத்தின்' (Instant Era) இலக்கணமாகிவிட்டது. 'துரித உணவு' (fast food) என்ற நிலையைக் கடந்து, உடனடி உணவுகளை தயாரிக்கத் துவங்கிவிட்டோம். உடனடி நூடுல்ஸ் (instant noodles), உடனடி தோசை, உடனடி இட்லி என்று, அனைத்திற்கும் 'ஆலாய்ப் பறக்க' ஆரம்பித்துவிட்டோம்.
அதேபோல், டிஜிட்டல் வழி தகவல் பரிமாற்றத்தால், நம் விரல் நுனியில் அனைத்துச் செய்திகளையும் ஒரே நேரத்தில் பெற விழைகிறோம். நம்மீது திணிக்கப்படும் செய்திகள், நூற்றுக்கணக்கில் நம்மை வந்தடைவதால், எந்த ஒரு செய்தியையும், ஆர, அமர, முழுமையாகப் பார்த்து, படித்து, சிந்தித்து, செயல்படும் பொறுமை நம்மிடம் இல்லை. நம்மை வந்தடையும் செய்திகளில், எவை தேவையானவை, தேவையற்றவை, எவை பயனுள்ளவை என்று தரம்பிரித்துப் பார்த்து, பயனுள்ள செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் பக்குவத்தையும் நாம் இழந்துவிட்டோம்.
இதனால், நம் மத்தியில், உண்மையானச் செய்திகள், பயனுள்ள தகவல்கள் ஆகிய பயிர்கள் வளர்வதற்குப் பதில், நம் அவசர சிந்தனை எனும் நிலத்தில், வதந்திகள், புறணிகள், அவதூறுகள் என்ற களைகளே மண்டிக்கிடக்கின்றன. நாமும், நம் பங்கிற்கு, அடுத்தவருக்கு இச்செய்திகளை அனுப்புவதன் வழியே, அவரது தொடர்புக் கருவிகள் என்ற நிலத்தில், இந்தக் களைகளை அவசரமாக விதைத்துவிடுகிறோம்.

நாம் ஒவ்வொருவருக்குள்ளும் கதிர்கள், களைகள் இரண்டைும் வளர்கின்றன. கதிர்களை வளர்ப்பதும், களைகளை வளர்ப்பதும் நமக்குத் தரப்பட்டுள்ள சுதந்திரம் என்பதை பின்வரும் கதை நமக்குச் சொல்லித் தருகிறது.
செரோக்கி (Cherokee) என்ற அமெரிக்கப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தன் பேரனுக்கு, வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லித் தந்தார். "எனக்குள் இரு ஓநாய்கள் உள்ளன. ஒரு ஓநாய் மிகவும் நல்லது. சாந்தம், பொறுமை, கருணை, அமைதி என்ற நல்ல குணங்கள் கொண்டது. மற்றொரு ஓநாய் பொல்லாதது. கோபம், ஆணவம், பொய்மை என்ற பல எதிர்மறை குணங்கள் கொண்டது. இவ்விரு ஓநாய்களும், எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே உள்ளன. இதே சண்டை, உனக்குள்ளும் நடக்கிறது. உலக மக்கள் அனைவருக்குள்ளும் நடக்கிறது" என்று முதியவர் சொன்னார்.
சிறிது நேர சிந்தனைக்குப் பின், பேரன் தாத்தாவிடம், "இந்தச் சண்டையில் எந்த ஓநாய் வெல்லும்?" என்று கேட்டான். அதற்கு தாத்தா பேரனிடம், "நீ எந்த ஓநாய்க்கு அதிக உணவளிக்கிறாயோ, அதுதான் வெல்லும்" என்றார்.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் நல்லவை, தீயவை இணைந்து வளர்கின்றன. முழுமையான வளர்ச்சி அடைந்தபின்னரே அவற்றின் பண்புகள் வெளிப்படும். நாம் எந்த ஓநாயை ஊட்டி வளர்க்கிறோமோ அந்த ஓநாயே வெற்றிபெறும்.
நாம் கதிர்களை கருத்துடன் வளர்த்தால், களைகள் கருகிப் போகும். நாம் களைகளை வளர்ப்பதில் கருத்தைச் செலவிட்டால், கதிர்கள் காணாமற்போகும். நாம் வளர்ப்பது கதிரா, களையா என்பதைப் புரிந்துகொள்ள, முதலில், பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் கதிர்களை வளர்க்கிறோமா? களைகளை வளர்க்கிறோமா? கடவுளுக்கு முன் பதில் சொல்வோம்.