29 December, 2020

விவிலியத்தேடல்: இயேசு ஆற்றிய புதுமைகள் – மீள்பார்வை 3

  
Kate and David with their twins Jamie and Emily

விதையாகும் கதைகள் : நோயைக் கடந்துவாழும் இறையன்பு

Kate Ogg என்ற இளம் தாயின் கருவில் வளர்ந்துவந்த இரட்டைக் குழந்தைகள், 6 மாதங்களிலேயே பிறந்துவிட்டனர். அவ்விரு குழந்தைகளில், ‘எமிலி என்ற பெயர் கொண்ட பெண் குழந்தை, பிழைத்துவிட்டதாகவும், 'ஜேமி' என்ற பெயர் கொண்ட ஆண் குழந்தை, பிறந்த சில நிமிடங்களில் இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

ஜேமியை தன்னிடம் கொண்டுவரும்படி, தாய் Kate மருத்துவர்களிடம் கெஞ்சிக் கேட்டார். அவர் தன் மகனுக்கு இறுதி விடை வழங்க உதவியாக, அக்குழந்தையை அவரிடம் கொடுத்தனர். அக்குழந்தையை தன் மார்போடு அணைத்து, இளம் தாய் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த வேளையில், அக்குழந்தையிடம் இலேசான அசைவுகள் உருவானதை, தாய் Kate உணர்ந்தார்.

இறந்த உடலில் இத்தகைய சிறு அசைவுகள் எழுவது சாத்தியம் என்று மருத்துவர்கள் சொன்னபோது, அந்த அன்னை மட்டும், தன் மகன் ஜேமியை இன்னும் இறுக்கமாக தன்னுடன் அணைத்துக்கொண்டார். சில நொடிகள் சென்று, அக்குழந்தையின் கண்கள் திறந்தன. தன் மகன் ஜேமிக்கு பிரியாவிடை வழங்க அந்த அன்னை வழங்கிய அணைப்பு, அவனை இவ்வுலகிற்கு வரவேற்க, அவர் தந்த அணைப்பாக மாறியது.

இளம் தாய் Kate அவர்களின் அணைப்பில், ஜேமி உயிர் பெற்றதற்கு, அறிவியல் விளக்கங்கள் எதையும், மருத்துவர்களால் தர இயலவில்லை. தற்போது, எமிலியும், ஜேமியும், 10 வயதுள்ள சிறுமியாக, சிறுவனாக, நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மருத்துவத்தால் விளக்கமுடியாத இத்தகைய நிகழ்வுகள், உலகில் ஒவ்வொருநாளும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக, இந்த கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும், கொள்ளைநோய்களைக் கடந்து, இறைவனின் அன்பு என்றும் நிலைக்கும் என்ற செய்தியை, சுமந்து வந்துள்ளது. 

When God Stps In Miracles Happen

இயேசு ஆற்றிய புதுமைகள் மீள்பார்வை 3

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் ஒருவர், தன் அறையின் சுவரில், ஓர் அழகிய பீங்கான் தட்டை சட்டமடித்து மாட்டியிருந்தார். பீங்கான் தட்டின் மீது வண்ணத்துப்பூச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அந்த பீங்கான் தட்டு, முழுமையான தட்டாக இல்லாமல், பல்வேறு துண்டுகள் ஒட்டப்பட்ட தட்டாக இருந்தது. தன்னைச் சந்திக்கும் ஒவ்வோரிடமும், அந்த ஓவியத்தைக் காட்டி, அதன் பின்னணிக் கதையைக் கூறிவந்தார் பேராசிரியர்:

அந்த ஓவியத்தை வரைந்தது, அவரது 5 வயது மகன் எரிக் (Eric). அவன் பள்ளியில் தன் ஓவியக்கலை வகுப்பில் மிகக் கவனமாக வரைந்த படம் அது. அதை உருவாக்க, அவரது மகனுக்கு பல நாள்கள் ஆயின. கிறிஸ்மஸ் விடுமுறைக்கு முன் பள்ளியில், கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அவ்வேளையில், சிறுவர், சிறுமியர், தங்கள் பெற்றோருக்கென தாங்கள் உருவாக்கியிருந்த ஓவியங்களை பரிசாக வழங்கினர். தான் உருவாக்கிய ஓவியத்தை, தன் பெற்றோருக்கு வழங்க, எரிக் விரைந்துசென்ற வேளையில், வழியில் ஏதோ ஒன்று, அவன் காலை இடறிவிட, அவன் கையிலிருந்த பீங்கான் தட்டு, தரையில் விழுந்து, பல துண்டுகளாக உடைந்தது. தட்டு உடைந்த சப்தம், அந்த அரங்கத்தை அமைதியாக்கியது. எரிக், தரையில் அமர்ந்து அழுதான்.

அழுதுகொண்டிருந்த மகன், அரங்கத்தில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததைக் கண்டு சங்கடமடைந்த தந்தை, அவனிடம் சென்று, "சரி மகனே, அது உடைந்தால் பரவாயில்லை" என்று எரிக்கை சமாதானப்படுத்த முயன்றார். கூடவே ஓடிவந்த அம்மாவோ, "அது எப்படி பரவாயில்லை என்று சொல்வது? இது உண்மையிலேயே பெரிய வருத்தம்தான்" என்று சொல்லியபடி, அவரும் தரையில் மகனுடன் அமர்ந்து, அவனை அணைத்துக்கொண்டு அழுதார்.

ஒரு சில நிமிடங்கள் இருவரும் அழுதபின், அந்த அன்னை, "சரி, இப்போது நாம் இந்த துண்டுகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போவோம். இவற்றைக்கொண்டு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்" என்று கூறியபடி, அந்த பீங்கான் தட்டின் துண்டுகளை திரட்டி எடுத்துக்கொண்டு, எரிக்கை அழைத்துச்
சென்றார்.

வீட்டுக்குச் சென்றதும், கண்ணாடித் துண்டுகளை ஒட்டும் திறன்கொண்ட பசையின் உதவியுடன், அந்த அன்னையும், எரிக்கும் சேர்ந்து, உடைந்துபோன துண்டுகளை இணைத்தனர். ஒன்றுசேர்க்கப்பட்ட தட்டு, முன்பிருந்ததைவிட இன்னும் அழகாகத் தெரிந்தது. அந்த ஓவியத்தட்டை, பேராசிரியர், தன் அலுவலகத்தின் சுவரில் மாட்டி, எல்லாருக்கும் அதைப்பற்றி கூறினார்.

வாழ்வில் நிகழும் தவறுகளும், இழப்புக்களும் மனதைக் காயப்படுத்துகின்றன என்பது உண்மை. அந்த இழப்புக்களிலிருந்து கூடுதலான அழகுடன் நம் உள்ளங்கள் குணமாவது, புதுமை என்பதை, வாழ்வுப்பள்ளி நமக்கு கற்றுத்தருகின்றது. நாம் கடந்த மூன்று ஆண்டுகளாக தேடலை மேற்கொண்ட புதுமைகள் தொடரின் நிறைவில், இந்த எண்ணம், புதுமைகளைக் குறித்த தெளிவானப் புரிதலை உருவாக்குகின்றது.

நாம் தற்போது சிந்தித்த இந்நிகழ்வை, சிறிது ஆழமாக ஆய்வு செய்வோம். சிறுவன் எரிக், அந்த அரங்கத்தில் தடுமாறி கீழே விழுந்தபோது, ஏதோ ஓர் அரியசக்தியால், அவன் கையிலிருந்த பீங்கான் தட்டு, அவனுடன் சேர்ந்து கீழே விழாமல், அதுமட்டும் அந்தரத்தில் மிதந்திருந்தால், அந்நிகழ்வு, அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் பெரும் வியப்பைத் தந்திருக்கும். அந்நிகழ்வு, ஒரு புதுமை என்று, பலராலும் பேசப்பட்டிருக்கும். அந்த பரபரப்பு, ஒரு சில நாள்கள் நீடித்திருக்கும்.

அதற்கு மாறாக, அந்த அரங்கத்தில் அன்று உண்மையில் நிகழ்ந்ததை, மற்றுமொரு கோணத்தில், ஒரு புதுமையாக நாம் எண்ணிப்பார்க்கலாம். எந்த ஓர் அற்புத சக்தியும், அந்த தட்டு உடையாமல் காக்கவில்லை என்றாலும், அது உடைந்தபின், அதை, அந்த அன்னையும் மகனும் சேர்ந்து, மீண்டும் இணைத்ததால், அவர்கள் உணர்ந்த நிறைவு, அக்குடும்பத்தினரின் உள்ளங்களில் நீடித்த தாக்கத்தை உருவாக்கிய புதுமையாக நாம் எண்ணிப்பார்க்கலாம்.

இயேசு ஆற்றிய புதுமைகள், ஒரு நொடிப்பொழுது வியப்பை வழங்கிய மந்திர, தந்திரக் காட்சிகள் அல்ல, மாறாக, அவை, தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வில், நீடித்த மாற்றங்களை உருவாக்கிய அருள்நிறை தருணங்களாக இருந்தன. இவ்வேளையில், இயேசு ஆற்றிய புதுமைகளில், நாம் ஆங்காங்கே சிந்தித்த இன்னும் சில அம்சங்களை, மீண்டும் அசைப்போடுவது பயனளிக்கும்.

இயேசு ஆற்றிய பெரும்பாலான புதுமைகள், தனிப்பட்ட மனிதர்களின் நலனை மையப்படுத்தி செய்யப்பட்ட நற்செயல்கள். 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு உணவளித்தது, உட்பட, வெகுசில புதுமைகளே, மக்கள் கூட்டத்திற்குமுன் செய்யப்பட்டன. பெரும்பாலான புதுமைகளில், தன் சக்தியைப்பற்றி கூறாமல், "உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கியது" என்று இயேசு கூறுவதையும் காண்கிறோம். அத்துடன், புதுமைகளால் நலம்பெற்றவர்கள், அதைப்பற்றி யாருக்கும் சொல்லவேண்டாம் என்பதையும், இயேசு, வலியுறுத்திக் கூறியுள்ளதை நாம் நற்செய்திகளில் காண்கிறோம். இவை அனைத்திற்கும் மேலாக, இயேசு, சட்டங்களைக் காட்டிலும், மனிதர்களின் விடுதலைக்கு முதலிடம் வழங்கினார் என்பதை, ஒய்வு நாளில், தொழுகைக்கூடத்தில் அவர் ஆற்றிய புதுமைகள் நமக்கு உணர்த்தியுள்ளன.

நான்கு நற்செய்திகளிலும், புதுமைகளைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள மூன்று சொற்கள், புதுமைகளின் இன்னும் சில அம்சங்களை உணர்ந்துகொள்ள உதவியாக இருக்கும். ‘துனாமிஸ்’ (Dunamis) என்ற கிரேக்கச் சொல்லுக்கு, 'வல்லமை' என்று பொருள். இறைவனின் வல்லமையால் நிறையப்பெற்ற இயேசு, இயற்கையை மீறிய வல்லமையோடு, புதுமைகள் ஆற்றினார். இரத்தப் போக்கினால் வருந்தியப் பெண், இயேசுவின் மேலுடையைத் தொடும் நிகழ்வில், நற்செய்தியாளர் மாற்கு ‘துனாமிஸ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் - மாற்கு 5: 29-30
இயேசு ஆற்றிய புதுமைகளைப்பற்றி பேசும்போது, நற்செய்தியாளர்கள் பயன்படுத்தும் இரண்டாவது சொல், 'செமெயியோன்' (Semeion). கிரேக்க மொழியில், இச்சொல்லுக்கு, 'அடையாளம்' என்று பொருள். இச்சொல்லை, நற்செய்தியாளர் யோவான், அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.
புதுமைகளைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ள மூன்றாவது சொல், ‘தேரெசா’ (Teresa). இந்தச் சொல், புதுமைகள் நிகழும்போது மக்களிடையே ஏற்பட்ட வியப்பு, திகைப்பு, மலைப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
புயல்காற்று சூழ்ந்த படகில் உறங்கிக்கொண்டிருந்த இயேசு, விழித்தெழுந்து, காற்றையும், அலைகளையும் அடக்கியபோது, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே! இவர் எத்தகையவரோ?" (மத். 8:27) என்று சீடர்கள் வியந்ததாக மத்தேயு நற்செய்தி கூறுகிறது.

இயேசு ஆற்றிய புதுமைகளைக் கண்டவர்கள், வியப்பு, மலைப்பு, திகைப்பு ஆகிய புனிதமான உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு மாற்றாக, ஏரோது மன்னன், இயேசுவின் புதுமைகளை, கண்கட்டி வித்தையைப்போல் வேடிக்கைப் பார்க்கும் ஆவலில் இருந்தான் என்று நாம் லூக்கா நற்செய்தியில் (லூக்கா 23: 8-9) வாசிக்கிறோம்.
சிலுவையில் இயேசு அறையப்பட்டிருந்த வேளையிலும், அவர் தன்னைக் காத்துக்கொள்ள சிலுவையிலிருந்து இறங்கிவந்தால், அவரை நம்புவதாக, சிலுவையைச் சுற்றி நின்றவர்களும், மதத்தலைவர்களும் சவால்விடுத்ததை, மத்தேயு நற்செய்தியில் (மத்தேயு 27:38-43) வாசிக்கிறோம்:

தன்னையே விளம்பரப்படுத்தவோ, தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவோ, இயேசு புதுமைகளை ஆற்றவில்லை. தன் சக்தியை கேலிசெய்தவர்களுக்கு சரியான பதில் சொல்லும்வண்ணம் அவர் புதுமைகளை ஆற்றவில்லை. அவர் ஆற்றிய புதுமைகள் எல்லாமே, அதிகத் தேவையில் உள்ள மக்களுக்கு ஆற்றப்பட்ட புதுமைகளாக அமைந்தன.

தன்மீது நம்பிக்கை கொள்பவர்கள், தன்னைவிட அதிகமான, சக்தி மிகுந்த புதுமைகளை ஆற்றுவர் என்பதையும், இயேசு இறுதி இரவுணவின்போது தெளிவாகக் கூறினார்: நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். (யோவான் 14 12)

அவர் கூறியதைப்போலவே, இயேசுவிடம் நம்பிக்கை கொண்டவர்கள் கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, உன்னதமான புதுமைகளைச் செய்தவண்ணம் உள்ளனர். புதுமைகளின் காலம் இன்றும் நம்மிடையே தொடர்ந்துவருகிறது. அவற்றைக் காண்பதற்கு நம்பிக்கை நிறைந்த கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற தத்துவச் சிந்தனையாளர்களில் ஒருவர், Ralph Waldo Emerson. அவர் வாழ்ந்த காலத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள், இயற்கையை விட்டு விலகிவந்ததால், இறைவனையும் விட்டு விலகிச்சென்றனர் என்பதை, தன் கட்டுரைகளில் வருத்தத்துடன் குறிப்பிட்டு வந்தார். 'இயற்கை' என்ற தலைப்பில், எமர்சன் அவர்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரையில், விண்மீன்களைப் பற்றி அழகானதோர் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்:
"வானில் தோன்றும் விண்மீன்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் நம் கண்களுக்குத் தோன்றினால், நாம் அவற்றை நம்பிக்கையுடன் ஆராதிப்போம். அந்த விண்மீன்கள் வழியே, கடவுளின் நகரம் நமக்குக் காட்டப்பட்டது என்ற நினைவை, பத்திரமாகப் பாதுகாத்து, அடுத்தத் தலைமுறைகளுக்கு, அந்நினைவை, ஒரு கருவூலமாக விட்டுச்செல்வோம். ஆனால், அழகின் தூதர்களான விண்மீன்கள், ஒவ்வோர் இரவும் தோன்றி, இவ்வுலகை வெளிச்சமாக்குவதால், அவை விடுக்கும் வியத்தகு அழைப்பைக் காணத் தவறுகிறோம்" என்று எமர்சன் அவர்கள் கூறியுள்ளார்.

இரவில் தோன்றும் உண்மையான நட்சத்திரங்களைப் பார்த்து வியப்பதற்குப் பதில், நம் தொலைக்காட்சியில் தோன்றும் போலி நட்சத்திரங்களைப் பார்த்து வியக்கிறோம். ஒவ்வொரு நாளும் தோன்றும் விண்மீன்களைப் போலவே, நம்மைச்சுற்றி ஒவ்வொரு நாளும் பல நூறு புதுமைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இவை அனைத்தையும் கண்டு, வியக்கும் பக்குவத்தை நாம் அடைந்தால், ஒவ்வொரு நாளும், நாம் முழந்தாள் படியிட்டு, நன்றி செபங்களை எழுப்புவோம்.

ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 31, ஆண்டின் இறுதிநாளன்று, கத்தோலிக்கத் திருஅவையில், Te Deum என்றழைக்கப்படும் நன்றி வழிபாடு நிகழ்ந்து வருகின்றது. நாம் கடந்து வந்துள்ள 2020ம் ஆண்டில் இறைவனின் கருணை நம்மை வழிநடத்தியதற்காகவும், நம்மைச் சுற்றி புதுமைகளை ஒவ்வொருநாளும் புரிந்து வருவதற்காகவும், டிசம்பர் 31, இவ்வியாழன் மாலையில், ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

நிறைவுபெறும் 2020ம் ஆண்டில், கோவிட்-19 கொள்ளைநோய், நம் முகங்களில் கவசங்களை மாட்டிவிட்டது. சாவையும், நோயையும், மட்டுமே பெரிதாகக் காட்டி, வேறு நல்லவற்றைக் காண இயலாமல், நம் கண்ணோட்டத்தைக் குறுக்கிவிட்ட கடிவாளமாகவும் மாறிவிட்டது. இந்த கவசங்களையும், கடிவாளங்களையும் விரைவில் நீக்கும் புதுமைகள், புத்தாண்டில் நடைபெறும் என்று ஆண்டவனை வேண்டி, அவர் தரும் நம்பிக்கையுடன் 2021ம் ஆண்டை வரவேற்போம்.

26 December, 2020

“Seeing stars from behind prison bars” "சிறைக்கம்பிகளுக்குப் பின்னிருந்து விண்மீன்கள்"

 
Flight into Egypt – Eugène Girardet

The Feast of the Holy Family

Close on the heels of the Birthday of Baby Jesus, come two feasts focussing on families and children. The Sunday following Christmas is the Feast of the Holy Family and on December 28, Monday, we celebrate the Feast of the Holy Innocents.

For the past few years, Christmas is tinged with painful memories of the tsunami that struck the shores of many Asian countries. In the year 2004, December 25 was a Saturday and the next day, December 26, Sunday, was the Feast of the Holy Family. The tsunami that caused havoc on December 26th, the Feast of the Holy Family, left thousands and thousands of families completely or partially uprooted.
If a family was uprooted completely, it looked like a blessing, since all the members of the family were gone and no painful memories lingered. But there were thousands of other families where the tsunami had taken away some members, while the rest were left in agony and despair.
This year, 2020, another tsunami called COVID-19 has caused havoc in millions of families throughout the world and is still causing pain. In the midst of these painful moments, the Church is inviting us to celebrate the Feast of the Holy Family. 

The history of the Feast of the Holy Family tells us that it was precisely at critical, painful moments in history that this Feast was established and revived.
The feast of the Holy Family was more of a private devotion popularised by some religious congregations for many centuries. The Church made this feast more ‘official’ in the year 1921. The reason behind such a move, as I see, was the First World War. This war was over in 1918. One of the casualties of this war was the family. The tragic death of dear ones killed on the battlefield, orphaned children, destroyed ‘homes’… Wishing to infuse some hope in the hearts of people devastated by this war, the Church officially integrated the Feast of the Holy Family in the liturgical cycle.

The feast of the Holy Family as we have today is a gift of the Second Vatican Council which took place in the 60s. What was so special about the 60s? Although there was no major political war, people had to face other types of wars. The world was experiencing quite a few changes. One of the major crises was the ‘rebellion’ of the youth. Young people were very disillusioned with the way the world was shaping up. Some of them tried to set things right; many others tried to ‘escape’ reality, since it was too hard to face. Many of them sought peace and love outside families. The Church, in an attempt to restore family as the locus of a healthy Christian life, included the Feast of the Holy Family as part of the Octave of Christmas – the Sunday after Christmas. Thus, the history of this feast tells us that the Church was not a silent spectator to the destruction caused to the basic foundation of human society – namely, family – but made the family the locus of hope! 

The pandemic has deprived this Christmas Season of its special feature, namely, celebration with family and friends. The pandemic has locked us up in our homes and our media channels are feeding us with negative news most of the time. When we hear of these depressing news day after day, we tend to lose faith in almost everything and be filled with negative feelings.

To help us overcome this negativity, the readings of this Sunday emphasize the theme of ‘faith’. The exemplary faith, against all odds, shown by Abram – later, Abraham – is highlighted both in the First Reading taken from Genesis (Genesis 15:1-6, 21:1-3) and the Second Reading taken from the Letter to the Hebrews (Hebrews 11:8,11-12,17-19).

The invitation of God to Abram, given at the beginning of the first reading stirs up thoughts in us, especially in the context of how we need to say goodbye to 2020. The Lord took Abram outside and said, “Look up at the sky and count the stars—if indeed you can count them.” Then he said to him, “So shall your offspring be.” (Gen.15:5) 

The Lord invites us to ‘go outside’ and ‘look up at the sky’, instead of looking at the TV or the newspapers as we say goodbye to 2020. Looking up at the sky helps us to sing with full gusto, ‘Te Deum’ praising God for blessing us with the year, 2020. This invitation of God helped Abraham to become the father of all believers. Abram believed the Lord, and he credited it to him as righteousness. (Gen.15:6)

In the second reading, taken from the Letter to the Hebrews, we hear the eulogy of the faith of Abraham. Chapter 11 of Hebrews is a treatise on Faith. It begins with the words: Now faith is confidence in what we hope for and assurance about what we do not see. This is what the ancients were commended for. (Heb.11:1-2) Then it goes on to explain the faith of Abraham. And so from this one man, and he as good as dead, came descendants as numerous as the stars in the sky and as countless as the sand on the seashore. (Heb.11:12) 
Abraham, advanced in age, with his wife Sarah, who was past the age to conceive, both, ‘as good as dead’, became parents of a nation, with descendants as numerous as the stars in the sky and as countless as the sand on the seashore

It is so easy to imprison ourselves in negative thoughts and feelings. This is obvious in the opening lines of today’s first reading. God meets Abram and tells him: “Fear not, Abram, I am your shield; your reward shall be very great.” (Gen. 15:1) Abram did not allow these consoling words of God to enter his heart, since his preoccupation was that he was ‘childless’. In order to get him out of his negative mindset, God asks him to get out and look up at the stars.

In our families when problems arise, it is natural to get ourselves locked in self-made prisons. On the other hand, even when one is locked up in prison, one can develop a positive outlook. We are reminded of the famous quote by Dale Carnegie: “Two men looked out from prison bars. One saw the mud, the other saw stars.” It was the same Dale Carnegie who wrote the famous book: How to Stop Worrying and Start Living”. 

The idea that even from behind prison bars, one can see stars, reminds me of the poem written by Fr Stan Swamy from his prison cell in Mumbai. I consider this a Christmas gift that Fr Stan has given to all of us - his Jesuit companions and all his friends. 83 year of age, Parkinson’s, other health complications… have not imprisoned Fr Stan. Here is the poem: 
Prison life, a great leveller 

Inside the daunting prison gates
All belongings taken away
But for the bare essentials
‘You’ comes first
‘I? comes after
‘We’ is the air one breathes
Nothing is mine
Nothing is yours
Everything is ours
No leftover food thrown away
All shared with the birds of the air
They fly in, have their fill and happily fly out
Sorry to see so many your faces
Asked them: “Why are you here?”
They told it all, not mincing words
From each as per capacity
To each as per need
Is what socialism all about
Lo, this commonality is wrought by compulsion
If only all humans would embrace it freely and willingly
All would truly become children of Mother Earth

Stan Swamy
(Letter of Fr Stan Swamy SJ, from Taloja prison, to his Jesuit Companions and friends, through Fr Joseph Xavier SJ) 

May the human family be sustained by the positive spirit of modern-day prophets like Fr Stan Swamy!
 
The Holy Family

திருக்குடும்பத் திருநாள்

கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, குடும்பத்தையும், குழந்தைகளையும் கொண்டாடும் இரு திருநாள்கள் இடம்பெறுகின்றன. இயேசுவின் பிறந்தநாளைத் தொடர்ந்துவரும் ஞாயிறன்று, திருக்குடும்பத் திருநாளும், டிசம்பர் 28, திங்களன்று, மாசற்றக் குழந்தைகள் திருநாளும் கொண்டாடப்படுகின்றன. குடும்பங்களையும், குடும்பங்களின் அடித்தளமாக, எதிர்காலமாக விளங்கும் குழந்தைகளையும் மையப்படுத்தி சிந்திக்க, ஒரு வாய்ப்பு, இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, கிறிஸ்மஸ் காலத்தில், ஒரு துயர நினைவும் நம்மைத் தொடர்ந்தவண்ணம் உள்ளது. அதுதான், எதிர்பாராமல் நம்மைத் தாக்கிய சுனாமிப் பேரழிவின் நினைவு. சரியாக பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர், 2004ம் ஆண்டு டிசம்பர் 25, கிறிஸ்துபிறப்புப் பெருவிழா, சனிக்கிழமையன்று வந்தது. அதற்கடுத்த நாள், டிசம்பர் 26, ஞாயிறன்று, திருக்குடும்பத் திருவிழா வந்தது.
2004ம் ஆண்டு, திருக்குடும்பத் திருவிழாவன்று, பல ஆசிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சுனாமி, 2,30,000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துச்சென்றது. பல இலட்சம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. ஆசியாவின் 14 நாடுகளுக்கு, அழிவையும், கண்ணீரையும் கொண்டு வந்த பேரழிவு அது.
நிறைவுறவிருக்கும் இந்த 2020ம் ஆண்டில், கோவிட்-19 என்ற மற்றொரு சுனாமி, இதுவரை, உலகெங்கும், ஏறத்தாழ 8 கோடி மக்களின் நலனைக் கெடுத்துள்ளது. 17 இலட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்துச் சென்றுள்ளது. இந்த கொள்ளைநோய் என்ற சுனாமியின் பசி இன்னும் அடங்க மறுக்கிறது.

திருக்குடும்பத் திருநாள், சுனாமிப் பேரழிவு என்ற இரண்டு கருத்துக்களையும் இணைத்துச் சிந்திக்கும்போது, கத்தோலிக்கத் திருஅவையில் திருக்குடும்பத் திருநாள் உருவானதற்கு முக்கிய காரணமாக இருந்தது, அழிவுகளே என்ற வரலாற்று உண்மை, நம் நினைவில் நிழலாடுகிறது.

பல நூற்றாண்டுகளாக, திருக்குடும்பத் திருநாள், தனிப்பட்ட ஒரு பக்திமுயற்சியாக துறவற சபைகளால் வளர்க்கப்பட்டு வந்தது. இத்திருநாள், 1921ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால், திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ம் ஆண்டில் முடிவுற்ற உலகப்போரினால், ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத்தலைவனை, அல்லது, மகனை, போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள், ஆழ்ந்த துயரத்திலும், அவநம்பிக்கையிலும் மூழ்கியிருந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும்வகையில், திருக்குடும்பத் திருநாளை, வழிபாட்டின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தி, குடும்பங்களில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப, திருஅவை முயன்றது.

1962ம் ஆண்டு துவங்கிய 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது, திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களை, திருஅவை மீண்டும் புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம், அன்றைய உலகின் நிலை. குறுகிய கால இடைவெளியில் நிகழ்ந்த முதல், மற்றும் இரண்டாம் உலகப்போர்களால், குடும்பங்கள் அதிகமாகச் சிதைந்திருந்தன. வேறு பல வடிவங்களில், குடும்பங்கள், தினசரி போர்களைச் சந்திக்கவேண்டியிருந்தது. தொழில்மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று, பல வழிகளில், உலகம் முன்னேறியதைப்போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, குடும்பம் என்ற அடித்தளம், நிலைகுலைந்தது. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள், வீட்டுக்கு வெளியே நிம்மதியைத் தேடி அலைந்தனர். அந்த அமைதியை, அன்பை, வீட்டுக்குள், குடும்பத்திற்குள், தேடச்சொன்னது, திருஅவை. குடும்ப உணர்வுகளை வளர்க்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவுக்கு அடுத்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத் திருநாளாக, திருஅவை அறிவித்தது.
அகந்தை, சுயநலன், ஆகியவற்றால் எழுந்த பகைமை உணர்வுகள், போர்களாக வெடித்தபோது, மனிதர்கள் எழுப்பியிருந்த பல கட்டடங்கள் தரைமட்டமாயின. அவற்றிற்கும் மேலாக, அவர்கள் உருவாக்கிய குடும்பங்கள் சிதைந்துபோயின. இந்த அழிவுகளை, கைகட்டி நின்று, வேடிக்கை பார்ப்பதற்குப் பதிலாக, எல்லாம் அழிந்தது என்று மனம்தளர்ந்து போவதற்குப் பதிலாக, கத்தோலிக்கத் திருஅவை, மனித சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு வழிகாட்டியது. அந்த வழிகாட்டுதலின் ஒரு பகுதிதான், நாம் இன்று கொண்டாடும் திருக்குடும்பத் திருநாள். 

நமது வழிபாட்டு ஆண்டின் மிக முக்கிய திருநாளாகவும், குடும்பங்கள் இணைந்து வருவதற்கு ஏற்ற நாளாகவும் விளங்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவை, நம் குடும்பத்தினர், மற்றும், நண்பர்களுடன் கொண்டாடமுடியாமல், இந்தக் கொள்ளைநோய் நம்மை சிறைப்படுத்திவிட்டது. இந்தக் கொள்ளைநோயைக் குறித்தும், இதை தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொண்டு, அரசியல் தலைவர்கள் மேற்கொண்டுள்ள அநீதியான அடக்குமறைகளைக் குறித்தும், கடந்த ஓராண்டளவாக நம்மை வந்தடைந்துள்ள செய்திகள், அயர்வையும், சலிப்பையும் உருவாக்குகின்றன. 'சே, என்ன உலகம் இது' என்று, நமக்குள் உருவாகும் சலிப்பு, நம் உள்ளங்களில் நம்பிக்கை வேர்களை அறுத்துவிடுகிறது.

நம் சலிப்பையும், மனத்தளர்ச்சியையும் நீக்கும் மருந்தாக, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்பிக்கையைப் பற்றி பேசுகின்றன. பிள்ளைப்பேறின்றி தவித்த ஆபிரகாமிடம், "வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்" (தொ.நூ. 15:5) என்று, ஆண்டவர் வாக்களிக்கிறார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார் (தொ.நூ. 15:6) என்று முதல் வாசகம் வலியுறுத்திக் கூறுகிறது.

உடலளவில், வயது முதிர்ச்சி, உள்ளத்தளவில், பிள்ளைப்பேறு இல்லையே என்ற ஏக்கம் ஆகிய காரணங்களால், தளர்ந்திருந்த ஆபிரகாம் வளர்த்துக்கொண்ட நம்பிக்கையைப் பற்றி, எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம், பின்வரும் சொற்களில் விவரிக்கின்றது:
ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். (எபிரேயர் 11: 11-12)

இயலாது, முடியாது, நிகழாது, 'சான்ஸே இல்லை”, என்று, பலவழிகளில், நம் உள்ளங்களை நிரப்பும் நம்பிக்கையற்ற எண்ணங்கள், ஆபிரகாமின் உள்ளத்திலும் எழுந்திருக்கும். இருப்பினும் அவர், தனது ஆற்றலின் மேல் நம்பிக்கை வைப்பதற்குப் பதில், 'வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என கருதினார்' (எபி. 11:11) என்பதை, இரண்டாம் வாசகம் தெளிவாக்குகிறது. நம்பிக்கையின் அடித்தளம், நம்மையோ, நமக்கு அளிக்கப்பட்ட வாக்கையோ சார்ந்தது அல்ல, அது, வாக்களித்த ஆண்டவரைச் சார்ந்தது என்பதை, நாம் கற்றுக்கொள்ள, இன்றைய வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன. 

நம் நம்பிக்கைக்குத் தேவையான மற்றோர் அடித்தளம், பரந்து, விரிந்த கண்ணோட்டம் என்பதையும், இன்றைய வாசகங்கள் சொல்லித்தருகின்றன. தனக்கு வாரிசு இல்லை என்பதால் மனமுடைந்து, நம்பிக்கையிழந்து தவித்த ஆபிரகாமை, 'ஆண்டவர் வெளியே அழைத்து வந்து, வானத்தை நிமிர்ந்து பார்க்கும்படி கூறினார்' (காண்க. தொ.நூ. 15:5) என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. 

'வெளியே வா', 'வானத்தை நிமிர்ந்து பார்' என்று இறைவன் ஆபிரகாமுக்கு வழங்கிய இவ்விரு அழைப்புக்களும், குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தேவையான அழைப்புக்கள். குடும்பத்திற்குள்ளும், வெளி உலகத்திலிருந்தும் பிரச்சனைகள் உருவாகும் வேளையில், அவை, நம் எண்ணங்களை ஆக்ரமித்துவிடுவதால், நம் கண்ணோட்டம் குறுகிப்போகிறது. 

பிரச்சனைகள் எழுவது இயல்புதான். ஆனால், பிரச்சனைகள் மட்டுமே நம் வாழ்வாகிவிட்டன என்ற விரக்தி நம்மைச் சிறைப்படுத்தும்போது, நம்மால் வானத்தைக் காணமுடியாமல் போகிறது. "ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்." (தொ.நூ. 15:1) என்று ஆண்டவர் கூறும் நம்பிக்கைச் சொற்களுடன் இன்றைய முதல் வாசகம் துவங்குகிறது. ஆனால், இறைவனின் சொற்களை செவிமடுக்கும் மனநிலையில் இல்லாத ஆபிராம், 'என்ன பெரிய கேடயம்? என்ன பெரிய கைம்மாறு? எனக்குத்தான் பிள்ளைவரம் இல்லையே' என்று தன் குறைபாட்டிலேயே சிறைப்பட்டிருக்கிறார். எனவே, ஆண்டவர் அவரை அந்தச் சிறையிலிருந்து வெளியேறி, வானத்தை நிமிர்ந்து பார்க்க அழைக்கிறார்.

சிறையில் அடைபட்ட இருவரைப்பற்றி கூறப்பட்டுள்ள ஓர் கூற்று, நம் நினைவில் எழுகிறது: "இருவர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னிருந்து பார்த்தனர், ஒருவர் மண்ணைப் பார்த்தார், மற்றொவர் விண்மீனைப் பார்த்தார்" (“Two men looked out from prison bars, One saw the mud, the other saw stars.”) என்ற இந்தக் கூற்றினை, Dale Carnegie என்பவர் கூறியதாகச் சொல்லப்பட்டுள்ளது. இவர் எழுதிய How to Stop Worrying and Start Living, அதாவது, "கவலைப்படுவதை நிறுத்திவிட்டு வாழத் துவங்குவது எப்படி" என்ற நூல், புகழ்பெற்றது. நம் சொந்த வாழ்விலோ, குடும்ப வாழ்விலோ பிரச்சனைகள் என்ற சிறையில் சிக்கிவிட்டதைப்போல் உணரும்போது, விண்மீனைக் காண்கிறோமா அல்லது, மண்ணை மட்டும் காண்கிறோமா என்பது, நம் மனநிலையைப் பொருத்தது.

சிறையில் இருந்தாலும், அங்கும் உன்னதமானவற்றை சிந்திக்கமுடியும் என்பதை, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார். இந்திய அரசால் அநீதியான, பொய்யான பழிகள் சுமத்தப்பட்டு, மும்பைச் சிறையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ள அருள்பணி ஸ்டான் அவர்கள், அண்மையில் தன் சிறை அனுபவத்தை ஒரு கவிதை வடிவில் அனுப்பியுள்ளார். “Prison life, a great leveller”, அதாவது, "அனைத்தையும் சமமாக்கும் சிறைவாழ்வு" என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்தக் கவிதையின் வரிகள், தமிழில்:
அச்சுறுத்தும் இந்தச் சிறையின் கதவுகளுக்குப்பின்,
மிக அவசியமானவை தவிர,
மற்றெல்லா உடைமைகளும் அகற்றப்படுகின்றன
'நீ' என்பது முதலாகவும்
'நான்' என்பது அடுத்ததாகவும் மாறுகிறது
'நாம்' என்பதே இங்கு சுவாசிக்கப்படும் காற்று
எதுவும் என்னதில்லை
எதுவும் உன்னதில்லை
எல்லாமே நம்மது
மீதமான உணவு தூக்கியெறியப்படுவதில்லை
அவை, வானத்துப் பறவைகளுடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன
பறவைகள் சிறை வளாகத்திற்குள் பறந்து வருகின்றன
வயிறார உண்டபின் பறந்து செல்கின்றன
பல இளையோரை இங்கு காண்பது வேதனையளிக்கிறது
'நீங்கள் ஏன் இங்கிருக்கிறீர்கள்' என்று கேட்டேன்
எதையும் மூடி மறைக்காமல் அவர்கள் அனைத்தையும் சொன்னார்கள்
ஒவ்வொருவரிடமிருந்தும் அவரால் முடிந்தது
ஒவ்வொருவருக்கும் அவருக்குத் தேவையானது
இதுதானே பொதுவுடைமைக் கோட்பாடு
இதோ, இங்கே, அத்தகையச் சமுதாயம்
கட்டாயத்தின்பேரில் உருவாக்கப்பட்டுள்ளது
இந்நிலையை எல்லா மனிதர்களும்
சுதந்திரமாக, விருப்பப்பட்டு அரவணைத்தால்
நாம் அனைவருமே பூமித்தாயின் குழந்தைகளாவோம்

இன்று நாம் விழா கொண்டாடும் இயேசு, மரியா, யோசேப்பு என்ற திருக்குடும்பத்தைப் பற்றி இப்போது பெருமையாக, புனிதமாக எண்ணி வருகிறோம். ஆனால், அவர்கள் வாழ்ந்த காலத்தில் அக்குடும்பத்தைச் சுற்றி நிகழ்ந்தது எதுவும் புனிதமாகவோ, பெருமை தருவதாகவோ இல்லையே! பச்சிளம் குழந்தை இயேசு பிறந்ததும், இரவோடிரவாக அவர்கள் வேறொரு நாட்டிற்கு புலம்பெயர்ந்து ஓடவேண்டியிருந்தது. இளம்பெண் மரியாவும், இளைஞன் யோசேப்பும், தங்கள் பிரச்சனைகளிலேயே சிறைப்பட்டுவிடாமல், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு, வானத்தை தங்கள் உள்ளங்களில் உருவாக்கிக்கொண்டு, வாழ்வைத் தொடர்ந்தனர்.

தங்களைச் சுற்றி நடந்த அத்தனை அவலங்களையும் மீறி, புனிதத்தையும் பெருமையையும் நிலைநாட்டிய மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு, அந்தக் குழந்தைக்காக உயிர் துறந்த மாசில்லாக் குழந்தைகள், ஆகிய இவர்களால்தான், கிறிஸ்மஸ் காலம் ஒரு கொண்டாட்டமாக மாறியுள்ளது. மலை போல, சுனாமி அலை போல, துயர் வந்தாலும், மனித குலத்தில் இன்னும் நம்பிக்கை வேரூன்ற, அருள்பணி ஸ்டான் சுவாமி போன்ற மனிதர்கள் இருப்பதாலேயே, உலகத்தில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கிறிஸ்து பிறப்புப் பெருவிழா, திருக்குடும்பத் திருவிழா, மாசற்றக் குழந்தைகள் திருவிழா, ஆகிய அனைத்தும், துன்பத்திலும், இரத்தத்திலும் தோய்ந்திருந்தாலும், நம்பிக்கை தரும் விழாக்களாக, நம் மத்தியில் வலம் வருகின்றன.

ஆண்டின் இறுதி நாள்களில் இருக்கும் நாம், பரந்து விரிந்த வானத்தின் மீதும், பரந்த உள்ளம் கொண்ட நல்லவர்கள் மீதும், நம் பார்வையைப் பதிக்க, இறைவன் நமக்கு சிறப்பான வரமருள செபிப்போம். நல்லவற்றை உள்ளத்தில் பதிக்கும் ஒரு முயற்சியாகத்தான், ஆண்டின் இறுதி நாளன்று, 'இறைவா, உம்மைப் போற்றுகிறோம்' என்ற பொருள்படும்,  'தே தேயும்' (Te Deum) என்ற நன்றிப் பாடலைப் பாடும்படி, தாய் திருஅவை நம்மை அழைக்கிறார்.

கோவிட்-19 கொள்ளைநோயினால், இவ்வுலகமே ஏறத்தாழ ஒரு சிறைக்கூடமாக மாறிவிட்ட சூழலிலும், நம்மிடையே வாழும் ஒரு சிலர், வானத்தையும், விண்மீன்களையும் காண்பதற்கு, நம்பிக்கைப் பாடங்களைச் சொல்லித்தருகின்றனர். அவர்களுக்காக, நாம், இறைவனுக்கு நன்றி சொல்வோம்.