31 August, 2019

Care for Creation… Care for guests… படைப்பைப் பாதுகாக்க... விருந்து படைக்க...


World Day of Prayer for the Care of Creation
Season of Creation

22nd Sunday in Ordinary Time

Today’s reflections are centred around two ideas – one, on September 1, and the other, on the 22nd Sunday. September 1 is designated as the “World Day of Prayer for the Care of Creation.”

In his letter, establishing this special day of prayer, Pope Francis wrote:
The annual World Day of Prayer for the Care of Creation will offer individual believers and communities a fitting opportunity to reaffirm their personal vocation to be stewards of creation, to thank God for the wonderful handiwork which he has entrusted to our care, and to implore his help for the protection of creation as well as his pardon for the sins committed against the world in which we live.
While there are many World Days to highlight various aspects of the world and human life, a World Day of Prayer brings to focus that it is not the human effort alone that can solve the problems faced by the world. We need to raise our hearts to God for help.

Pope Francis did not create this day for the first time. He has invited all the Catholics to join our Orthodox brothers and sisters who have been observing this Day of Prayer from 1989. Pope Francis wrote about this Ecumenical effort:
The celebration of this Day, on the same date as the Orthodox Church, will be a valuable opportunity to bear witness to our growing communion with our Orthodox brothers and sisters. We live at a time when all Christians are faced with the same decisive challenges, to which we must respond together, in order to be more credible and effective. It is my hope that this Day will in some way also involve other Churches and ecclesial Communities, and be celebrated in union with similar initiatives of the World Council of Churches.
It is interesting that this letter of Pope Francis was released on August 6, the Feast of the Transfiguration. More than ever, we are aware that the world needs to be transfigured. With the ongoing fire in the Amazon rain forest, we need to double our prayers to save the planet from the greedy clutches of business vultures.

Starting on September 1, until the Feast of the ‘nature-loving saint’, St Francis of Assisi, on October 4, we celebrate ‘The Season of Creation’. The Season of Creation is a month-long prayerful efforts directed towards the state of the world, its beauty and the ecological crises that threaten it and all its inhabitants. This year, closely following the Feast of St Francis of Assisi, we begin the Special Assembly for the Amazon of the Synod of Bishops on October 6,  with the topic: Amazonia: New Paths for the Church and for an Integral Ecology. Let this Sunday, which falls on the World Day of Prayer for the Care of Creation, redouble our efforts, to pray for our planet earth and for the Synod on Amazon.

This Sunday – the 22nd Sunday in Ordinary Time – invites us to reflect on a common human experience, namely, dinner etiquettes - hosting a dinner, and attending a dinner.

The Gospel today (Luke 14: 1,7-14) talks of Jesus being invited to a dinner by a Pharisee, who happened to be a ruler, on a Sabbath Day! (Pharisee + Ruler + Sabbath … the picture gets more complicated, meaning… ritualistic!) Instead of simply attending the dinner, Jesus begins teaching them some ‘strange’ lessons as to how to conduct a dinner and how to attend a dinner. I call these lessons ‘strange’, because all the proposals that came from Jesus were very strange for the Jews.

A Jewish dinner would have quite a few rituals to be followed… the ritual of washing before entering the house, the ritual of wishing one another, and many other rituals before, during and after the meal… This being a Sabbath, there would have been extra rituals, perhaps. Was Jesus familiar with all those rituals? Not having been trained as a Pharisee and not caring for empty rituals all his life, Jesus would not have followed the required rituals minutely. To make things more complicated, the Gospel says that Jesus was being watched! Here are the opening words of today’s Gospel: One Sabbath when he went to dine at the house of a ruler who belonged to the Pharisees, they were watching him. (Luke 14: 1)

Jesus was not a stranger to being watched or gazed at. He has always been surrounded by common people who paid close attention to all he said and all he did. That was the adoring gaze of the poor people and Jesus, perhaps, would have enjoyed that attention. Now, the gaze of the Pharisees would have been more uncomfortable to Jesus.
I put myself in the place of Jesus. If I am being watched at a dinner, I would like to hide from the gaze of those people. I would be extra careful not to make a mistake. I would like to escape from the dinner scene as quickly as possible. Jesus was quite different. When surrounded by those scrutinising Pharisees, he taught them a few things that were ‘more proper’ than the rituals they had in their minds. He gave a very practical advice to those who were seeking the first place.

While the ‘dinner-lessons’ of the world are more to do with the external factors like – how to dress, how to sit, how to eat etc., the dinner-lessons of Jesus were about the inner attitudes like humility and courtesy. His lesson on humility is crowned by the famous words: “For every one who exalts himself will be humbled, and he who humbles himself will be exalted.” (Luke 14:11). Today’s first reading from Sirach is also a lesson in humility. (Sirach 3:17-18, 20, 28-29)

Jesus’ lesson in humility can easily be misinterpreted. I imagine myself entering a banquet hall. The words of Jesus ring in my heart… “Go and sit in the lowest place” So, I choose the last place, wishing, that the host sees me and takes me to the higher place. Dinner begins. The host comes around wishing everyone. As he comes close to me I am waiting to hear him say: “Oh, Father, why are you here? Come up higher…” But… to my great disappointment, nothing like that happens. He comes, greets me and… and… moves on. No invitation to move up. All my efforts at humility are wasted. Surely Jesus did not talk of this type of humility.

Jesus then turned to the host and gave him another lesson. Usually a formal dinner is loaded with calculations. On the part of the host, there are calculations in terms of whom to invite, who takes which seat of honour, how many types of liquor to serve, how many dishes… etc. etc… On the part of the guests, there are calculations as to what to wear for this occasion, what presents to take, how much to eat, whom to meet and whom to avoid… etc. etc… The more the calculations, the more artificial the dinner!

In some other dinners, like the one given by Herod, when liquor overflows, lines of decency and civilization get erased. Some twisted, perverted thinking creeps in… all in the name of enjoying a dinner. The result? The head of John the Baptist on a platter! (Dear Friends, August 29, last Thursday, we remembered the beheading of John the Baptist. It is a pity that such a saintly person like John the Baptist had to be killed for such silly reasons… namely, the promises blurted out by the intoxicated Herod during a dinner!) Whenever Jesus attended a ‘big’ dinner, the dinner-tragedy of his cousin John must have haunted him.

In contrast to those artificial dinners, those excesses of dinner parties, Jesus taught them and still teaches us as to how a real dinner should be conducted…
Luke 14: 12-14
Jesus said also to the man who had invited him, "When you give a dinner or a banquet, do not invite your friends or your brothers or your kinsmen or rich neighbours, lest they also invite you in return, and you be repaid. But when you give a feast, invite the poor, the maimed, the lame, the blind, and you will be blessed, because they cannot repay you. You will be repaid at the resurrection of the just."

“When you give a banquet, invite the poor” – Lk. 14:13

பொதுக்காலம் - 22ம் ஞாயிறு

இன்றைய ஞாயிறு வழிபாட்டில், நாம், இரு முக்கிய கருத்துக்களைக் குறித்து சிந்திப்போம்; செபிப்போம். முதல் கருத்து - செப்டம்பர் 1, இஞ்ஞாயிறன்று நாம் சிறப்பிக்கும் படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாள்.
படைப்பின் பாதுகாவலர்கள் என்று நமக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அழைப்பைப் புதுப்பிக்கும் வகையில், நாம் படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாளில் பங்கேற்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு விடுத்த ஒர் அழைப்பின் அடிப்படையில், இன்று 5ம் முறையாக, செப்டம்பர் முதல் தேதியை, படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாளாக, நாம் கடைபிடிக்கிறோம். இந்த செபநாள் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய மடலில், "இறைவன் நமக்களித்துள்ள படைப்பு என்ற கொடைக்காக நன்றி செலுத்துவதோடு, படைப்பிற்கு எதிராக நாம் புரிந்துவரும் குற்றங்களுக்காக, அவரிடம் மன்னிப்பு கேட்பதற்கும் இந்த நாள் நமக்கு உதவட்டும்" என்று எழுதியிருந்தார். திருத்தந்தை அனுப்பிய இவ்வழைப்பு, இரு பாடங்களை நமக்கு உணர்த்துகிறது.

முதல் பாடம்... 'படைப்பைப் பாதுகாக்கும் உலக நாள்' என்று, இந்நாளை அழைப்பதற்குப் பதில், 'படைப்பைப் பாதுகாக்கும் உலக செபநாள்' என்று திருத்தந்தை அறிவித்தார். 'உலக நாள்' என்பது, ஓர் எண்ணத்தை உயர்த்திப் பிடிக்க, விளம்பரப்படுத்த, உருவாக்கப்படும் நாள்; 'உலக செபநாள்' என்பதோ, இறைவனை நோக்கி நம் எண்ணங்களை உயர்த்தி, செபிக்கும் நாள். இயற்கையைக் காப்பதற்கு, மனிதர்களாகிய நாம் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளுடன், செபமும் தேவை என்பதை நாம் உணரவேண்டும்.
மனிதர்களின் அளவுகடந்த பேராசையால் அழிந்துவரும் இயற்கையை, மனிதர்கள் மனதுவைத்தால் காக்கமுடியும். இதற்கு, ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மனமாற்றம் தேவை. இந்த மனமாற்றத்தை இறைவன் வழங்க, இந்த செபநாளன்று உருக்கமாக செபிப்போம். குறிப்பாக, உலகின் நுரையீரல் என்று கருதப்படும் அமேசான் காடுகள், கடந்த சில வாரங்களாக எரிந்துகொண்டிருப்பதை மனதில் இருத்தி, படைப்பைப் பாதுகாக்க, நம் செப முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.

1989ம் ஆண்டு முதல், கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ் சபையினர், செப்டம்பர் முதல் தேதியை, படைப்பின் பாதுகாப்பிற்காக செபிக்கும் உலகநாளாக அர்ப்பணித்து வருகின்றனர். இதை உணர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே நாளை, படைப்பைப் பாதுக்காக்கும் செப நாளாகக் கடைபிடிக்க, கத்தோலிக்கத் திருஅவையினருக்கும் அழைப்பு விடுத்தார். இது, நமக்கு இரண்டாவது பாடத்தைச் சொல்லித் தருகிறது.
மனிதர்களாகிய நாம், நமக்குள் உருவாக்கியிருக்கும் மதம், மொழி, நாடு, இனம் என்ற பல பிரிவுகளையும் மறந்து, ஒன்றிணைந்து முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே, இவ்வுலகை, இயற்கையை, நாம் பாதுகாக்கமுடியும் என்ற பாடத்தையும், ஆர்த்தடாக்ஸ் சபையினரோடு இந்நாளைச் சிறப்பிக்க, திருத்தந்தை வழங்கிய இந்த அழைப்பு நமக்குச் சொல்லித் தருகிறது.

அத்துடன், செப்டம்பர் 1ம் தேதி முதல், ‘படைப்பின் பாதுகாவலர் என்று வணங்கப்படும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அடிகளாரின் திருநாளான அக்டோபர் 4ம் தேதி முடிய, படைப்பின் காலம் என்று கொண்டாட, திருத்தந்தையோடு இணைந்து, கிறிஸ்தவ சபைகளும், கத்தோலிக்க அமைப்புக்களும் அழைப்பு விடுத்துள்ளன. எனவே, செப்டம்பர் 1ம் தேதி, இஞ்ஞாயிறு முதல், அடுத்துவரும் 35 நாட்களுக்கு, படைப்பின் காலம் என்ற இம்முயற்சியில் நம்மையும் இணைத்துக் கொண்டு, இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் இந்த பூமிக்கோளத்தை நாம் ஒவ்வொருவரும் எவ்வகையில் பாதுகாக்கமுடியும் என்று ஆய்வுசெய்வோம்.
படைப்பின் காலம் முடிவுறும் அக்டோபர் 4ம் தேதியைத் தொடர்ந்து, அக்டோபர் 6ம் தேதி, ஞாயிறன்று, வத்திக்கானில், படைப்பைச் சார்ந்த மற்றொரு முயற்சி துவங்கவிருக்கிறது. அமேசான் பகுதியை மையப்படுத்தி, அக்டோபர் 6ம் தேதி முதல், 27ம் தேதி, முடிய நடைபெறும் ஆயர்களின் சிறப்பு மாமன்றம் என்ற முயற்சி, நல்ல பலன்களை வழங்க தூய ஆவியாரின் துணையை நாடுவோம். 

இஞ்ஞாயிறன்று, நம்மை சிந்திக்கவும், செபிக்கவும் அழைக்கும் இரண்டாவது கருத்து -  மனித வாழ்வில் நிகழும் விருந்தோம்பல் என்ற அழகிய அனுபவம்.
இயேசு கலந்துகொண்ட ஒரு விருந்தைப் பற்றி, அந்த விருந்தில் இயேசு சொல்லித்தந்த பாடங்களைப்பற்றி சிந்திக்க, இன்றைய நற்செய்தி நமக்கு வாய்ப்பளிக்கிறது. விருந்தைப்பற்றி இவ்வுலகம் சொல்லித்தரும் விதிமுறைகளை ஆய்வு செய்தால், ஓர் அடிப்படையான அம்சம் வெளிப்படும். உலகம் சொல்லித்தரும் விருந்து விதிமுறைகள், வெளிப்புறத்தைச் சார்ந்தவை. நம் உள்ளங்களில், அகந்தை, பகைமை போன்ற உணர்வுகள் அலைமோதினாலும், விருந்து நேரத்தில், வெளிப்படையாக அவற்றைக் காட்டிக்கொள்ளாமல், 'ஜென்டில்மேன்' என்ற முகமூடி அணிந்து, விருந்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று உலகப் பாடங்கள் சொல்லித்தருகின்றன.

இதற்கு மாறாக, இன்றைய நற்செய்தியில், (லூக்கா 14:1,7-14) இயேசு சொல்லித்தரும் விதிமுறைகளை ஆய்வுசெய்தால், அவை, உள்மனநிலையைச் சார்ந்த விதிமுறைகள் என்பதை உணரலாம். இந்த விதிமுறைகளை இயேசு துணிவுடன் கூறிய அந்தச் சூழலை நினைத்துப் பார்த்தால், இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பு, பல மடங்கு உயரும்.

யூத விருந்துகளில், அதுவும், பரிசேயர் தலைவர் வீட்டில், ஒய்வு நாளில் நடந்த விருந்தில், பல சடங்குகள் இருந்திருக்கவேண்டும். இயேசு அவற்றையெல்லாம் அறிந்திருந்தாரா? சரிவரத் தெரியவில்லை. அத்துடன், அர்த்தமற்ற சடங்குகளும், சம்பிரதாயங்களும் இயேசுவுக்குப் பிடிக்காது என்பதும் நமக்குத் தெரிந்த ஓர் உண்மை. இத்தகைய சுதந்திர மனநிலையோடு வாழ்ந்தவரை, பரிசேயர் வீட்டு விருந்து கட்டிப்போட முயன்றது. இன்றைய நற்செய்தியின் துவக்கத்தில் நாம் காணும் "அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்" என்ற சொற்கள், இந்த விருந்தின் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றன. பரிசேயர் தலைவர் வீட்டில் கூடியிருந்தவர்கள் அனைவரும், தன்னை, கூர்ந்து கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும், தன் மனதில் தோன்றிய உண்மைகளை, இயேசு பாடங்களாகப் புகட்டினார்.

அவரது முதல் பாடம், விருந்துக்கு வந்திருந்த விருந்தாளிகளுக்கு... இரண்டாவது பாடம், விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு... நமது எண்ண ஓட்டங்களின்படி பார்த்தால், இயேசுவுக்கு இது வேண்டாத வேலை என்று நினைக்கத்தோன்றும். விருந்துக்குப் போனோமா, சாப்பிட்டோமா, வந்தோமா என்று இல்லாமல், இயேசு, ஏன் வீணாக வம்பை விலைக்கு வாங்குகிறார்? என்ற கேள்வி எழும். குறை கண்ட இடத்தில், அந்தக் குறையை, தன் விருந்தோடு சேர்ந்து விழுங்காமல், அதை எடுத்துச்சொன்னார் இயேசு. இயேசு வழங்கிய முதல் பாடம், விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு... அதுவும், அவர் கலந்துகொண்ட விருந்தில் பலர் முதன்மையான இடங்களைத் தேடிச்சென்றனர் என்பதை உணர்ந்து, இயேசு அவர்களுக்கு பணிவு பாடத்தைச் சொல்லித்தந்தார். - லூக்கா 14: 7-11. அவர் சொல்லித்தந்த பணிவு பாடங்களுக்கு சிகரமாக, தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். என்ற புகழ்பெற்ற அறிவரையை வழங்குகிறார், இயேசு. தாழ்ச்சியைக் குறித்து, இன்றைய முதல் வாசகத்திலும், சீராக்கின் ஞானம், அழகிய பல அறிவரைகளை வழங்கியுள்ளது.

விருந்து நேரங்களில், அவரவர், தங்கள் பெருமைகளைப் பறைசாற்றவேண்டும் என்று, இவ்வுலகம் சொல்லித்தரும் பாடங்களுக்கு முற்றிலும் மாறாக, இயேசு சொல்லித்தரும் தாழ்ச்சிப் பாடம், மாற்றுச் சிந்தனைகளை உருவாக்குகிறது. இயேசுவின் இந்தப் பாடத்தைக் கேட்கும்போதெல்லாம், என் மனத்திரையில் ஒரு கற்பனைக்காட்சி அரங்கேறும்.
நான் ஒரு விருந்துக்குப் போகிறேன். விருந்து நடக்கும் அரங்கத்தில் நுழைந்ததும், "கடைசி இடத்தில் அமருங்கள்" என்று இயேசு சொன்னது என் காதில் ஒலிக்கிறது. கடைசி இருக்கைக்குப் போகிறேன். ஆனால், மனதுக்குள் ஓர் ஏக்கத்துடன், எதிர்பார்ப்புடன் அந்த இருக்கையில் சென்று அமர்கிறேன். விருந்துக்கு என்னை அழைத்தவர், நான் கடைசி இடத்தில் அமர்ந்திருப்பதை எப்படியாவது பார்த்துவிடுவார், உடனே ஓடிவந்து, "என்ன இங்கே உட்கார்ந்துவிட்டீர்கள்? முதல் இடத்திற்கு வாருங்கள்" என்று அங்கிருந்தவர்கள் முன்னிலையில் என்னை அழைத்துச்செல்வார் என்ற எதிர்பார்ப்புடன், நான் கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்.
விருந்து ஆரம்பமாகிறது. பலரையும் வாழ்த்தியபடியே வீட்டுத்தலைவர் வருகிறார். என் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், சிரித்தபடியே அமர்ந்துள்ளேன். வீட்டுத்தலைவர் என்னருகே வந்து, என்னையும் வாழ்த்துகிறார்... அதற்குப் பிறகு... அதற்குப் பிறகு... அவ்வளவுதான்... மற்றபடி, "நண்பரே, முதல் இடத்திற்கு வாருங்கள்" என்ற அழைப்பு அவரிடமிருந்து வரவில்லை. என் மனம் உடைந்துபோகிறது. இயேசு சொன்னதுபோல் கடைசி இடத்தைத் தேடிச்சென்று அமர்ந்த என் தாழ்ச்சி, அர்த்தமில்லாமல் போகிறது.

நான் இப்போது சித்திரித்தக் காட்சியைக் கற்பனை செய்யும்போது, நமக்குள் சிரிப்பு எழுகிறது, உண்மைதான்... ஆனால், இத்தகையத் 'தாழ்ச்சி'யை எத்தனை முறை நாம் பல வடிவங்களில் முயற்சி செய்திருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்ப்பது பயனளிக்கும். இயேசு கூறிய தாழ்ச்சி இதுவல்ல. முதலிடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு  கடைசி இடத்திற்குச் செல்லுங்கள் என்று, அவர் சொல்லவில்லை. அப்படிச் செய்வது, தாழ்ச்சியே அல்ல. தாழ்ச்சி என்ற பெயரில் நடத்தப்படும் நாடகம், வெளிவேடம்! வெளிவேடமிடும் பல வரைமுறைகளைத்தான் விருந்து வழிமுறைகள் என்று இவ்வுலகம் சொல்லித் தருகிறது. உயர்குடி மக்களின் விருந்தில் மருந்துக்கும் காணமுடியாத தாழ்ச்சியைப் பற்றி இயேசு சொல்லித்தந்த பாடம், பரிசேயர் வீட்டில் பலரை சங்கடத்தில் நெளியவைத்திருக்கும்.

இயேசுவின் அடுத்தப் பாடம், அந்த விருந்தை ஏற்பாடு செய்திருந்த பரிசேயர் தலைவருக்கு. இது உண்மையிலேயே மிக அதிகமான துணிச்சல் என்று சொல்லத் தோன்றுகிறது. செல்வந்தர்கள் நடத்தும் விருந்துகளில், கணக்குகள் நிரம்பி வழியும். யாரை அழைக்கவேண்டும், யாருக்கு எந்தெந்த இருக்கைகள், எத்தனை வகை மது பானங்கள், உணவு வகைகள் என்று, விருந்து கொடுப்பவரின் கணக்கு மிக நீண்டதாக இருக்கும். விருந்தில் கலந்துகொள்பவர்களின் கணக்கு வேறுபட்டிருக்கும். என்ன உடுத்துவது, என்ன பரிசு தருவது, எவ்வளவு சாப்பிடுவது, யாரைச் சந்திப்பது, யாரைக் கண்டும் காணமல் போவது என்று, விருந்தினர்களின் கணக்குகள் நீளும். கணக்குப் பார்த்து, பார்த்து, அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும், செயற்கைத்தனம் அதிகம் பளிச்சிடும்.

ஒரு சில விருந்துகளில், மது அதிகமாகி, மதி குறைந்து போகும். மூன்று நாட்களுக்கு முன், ஆகஸ்ட் 29ம் தேதி, திருமுழுக்கு யோவான் தலை வெட்டுண்டு உயிர் துறந்த திருநாளை நினைவுகூர்ந்தோம். அவரது தலை வெட்டப்பட்டது, ஒரு விருந்து நேரத்தில். மதுவின் போதையில், ஏரோது மன்னன், வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்க, அது யோவானின் தலை வெட்டப்படும் அளவுக்கு அத்துமீறிச் சென்றது. ஒவ்வொரு விருந்துக்கும் சென்றபோதெல்லாம் இயேசுவின் மனதில் இந்த வேதனை நிழலாடியிருக்கும்.
இப்படிப்பட்ட செயற்கைத் தனமான, அல்லது, வரம்புகளை மீறும் விருந்துகளுக்கு ஒரு மாற்று மருந்தாக, இயேசு கூறும் விருந்து ஒன்று உள்ளது. எந்தக் கணக்கும் பார்க்காமல், எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் தரப்படும் விருந்து அது. நீதி, அன்பு, உண்மை என்ற அனைத்து சுவைமிக்க ஆன்ம உணவையும் படைக்கும் இத்தகைய விருந்தைப்பற்றி இயேசு கூறும் வார்த்தைகள், இன்றைய நம் சிந்தனைகளை நிறைவு செய்யட்டும்.

லூக்கா 14: 12-14 
பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்என்று கூறினார்.


27 August, 2019

விவிலியத்தேடல்: யாயிர் மகளும், யாருமறியா பெண்ணும் - 3


Earth Overshoot Day - 2019

பூமியில் புதுமை: ஜூலை 29ம் தேதி - 'அளவை மீறிய நாள்'

இத்தாலியின் La Stampa என்ற செய்தித்தாளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய பேட்டி ஒன்று, ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாகியிருந்தது. இப்பேட்டியில், அக்டோபர் மாதம், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் மாமன்றம் குறித்து, திருத்தந்தையிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சுற்றுச்சூழல் குறித்தும், வரவிருக்கும் மாமன்றம் குறித்தும், திருத்தந்தை பகிர்ந்துகொண்ட ஒரு சில கருத்துக்கள் இதோ...
அமேசான் பகுதியை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்களின் சிறப்பு மாமன்றம், "இறைவா உமக்கேப் புகழ்" என்ற திருமடலின் குழந்தை என்று, திருத்தந்தை, இப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சுற்றுச்சூழல் தொடர்பாக தன்னை வந்தடைந்த ஒரு சில அதிர்ச்சித் தகவல்களை, திருத்தந்தை, இப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார்:
"அண்மையில் நான் 7 மீனவர்களைச் சந்தித்தேன். அவர்கள், கடந்த சில மாதங்களாக, கடலிலிருந்து, 6 டன் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை திரட்டியதாகக் கூறினர். அது, எனக்கு அதிர்ச்சி அளித்தது. ஐஸ்லாந்தில் ஒரு பெரிய பனிப்பாறை மீட்கமுடியாத வண்ணம் உருகிவிட்டதாகவும், அதற்கு ஓரு நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளதாகவும் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். சைபீரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால், கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் உருகுகின்றன என்ற செய்தி என்னை அதிர்ச்சியடையச் செய்தது. இவற்றையெல்லாம் விட, மற்றொரு தகவல் எனக்கு அதிக அதிர்ச்சியளித்தது" என்று திருத்தந்தை கூறியதும், அந்த அதிர்ச்சித் தகவல் என்ன என்று பேட்டியாளர் கேட்டபோது, திருத்தந்தை, 'The Overshoot Day', அதாவது, 'அளவை மீறிய நாள்' என்ற தகவல் குறித்துப் பேசினார்.
நமது பூமிக்கோளம், இயற்கை வழிகளில் சக்திகளை உருவாக்கி வருகின்றது. அச்சக்திகளை நாம் பயன்படுத்த, பயன்படுத்த, அவை மீண்டும் நம் பூமியாலும், இயற்கையாலும் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு, பூமிக்கோளம், தன் சக்தியை உருவாக்கிக்கொண்டே இருப்பதால், தன்னையே புதுப்பித்துவருகிறது. ஒவ்வோர் ஆண்டும், நமது பூமி உருவாக்கும் சக்திக்கு இணையாக, அல்லது, அதைவிடக் குறைவாக, நாம் இயற்கை சக்திகளைப் பயன்படுத்தினால், பூமி, தன் சக்தியை தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கும். அதனால் பூமி வாழும்.
பூமி உருவாக்கிவரும் சக்தியிலிருந்து, இவ்வாண்டு டிசம்பர் மாதம் முடிய நாம் பயன்படுத்த வேண்டிய சக்தி அனைத்தையும், ஜூலை 29ம் தேதி, அதாவது, 5 மாதங்களுக்கு முன்னதாகவே, நாம் பயன்படுத்தி முடித்துவிட்டோம். இதனால், ஜூலை 30ம் தேதி முதல், நாம், ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் சக்தியை, மறுபடியும் உருவாக்க இயலாத நிலையில், நமது பூமியும், இயற்கையும் அழிந்து வருகின்றன. எனவே, ஜூலை 29ம் தேதி, 'அளவை மீறிய நாள்' என்ற எச்சரிக்கையை நமக்கு விடுத்துள்ளது. இந்த அதிர்ச்சித் தகவல், தன்னை அதிகம் பாதித்ததாக, திருத்தந்தை இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். (நன்றி - La Stampa)

The woman with an issue of blood - Howard Lyon

யாயிர் மகளும், யாருமறியா பெண்ணும் - 3

மனிதர்கள் கூடிவரும் வேளைகளில், எதிர்பாராத வழிகளில், ஆபத்துக்கள் சூழ்வதை அவ்வப்போது கேள்விப்படுகிறோம். திருவிழாக்கள், கட்சிக் கூட்டங்கள், விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என்று, பல தருணங்களில், உயிர் பலிகள் நிகழ்வதை செய்திகளாக வாசிக்கிறோம். குறிப்பாக, அளவுக்கதிகமாக மக்கள் கூடிவரும் திருத்தலங்களில், ஏதோ ஒரு மூலையில் ஆரம்பமாகும் வதந்திகளால் மக்கள் நெரிசல்கள் உருவாகி, மனித உயிர்கள் பலியாவது வேதனை தரும் உண்மை.
2015ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், மெக்காவில் கூடிய 20 இலட்சம் மக்கள் நடுவே திடீரென எழுந்த ஒரு குழப்பத்தால், கூட்டத்தில் மிதிபட்டு 700க்கும் அதிகமானோர் இறந்தனர். அதேவண்ணம், இந்தியாவில் 2016ம் ஆண்டு, அக்டோபர் மாதம், வாரணாசியில் கூடிய 1 இலட்சத்திற்கு அதிகமானோர் நடுவில், திடீரென ஏற்பட்ட ஒரு நெரிசலில், 25 உயிர்கள் பலியாயின; 50க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். ஊர்வலமாக, ஒரு பாலத்தைக் கடந்துகொண்டிருந்த கூட்டத்தில், பாலம் இடிந்து விழப்போகிறது என்று யாரோ கிளப்பிவிட்ட ஒரு வதந்தியால், இவ்விபத்து நிகழ்ந்ததெனச் சொல்லப்படுகிறது.

நெரிசலில் மிதிபட்டு இறப்போரைக் குறித்த விவரங்களைத் திரட்டும்போது, இவை, பெரும்பாலான நேரங்களில், புண்ணியத் தலங்களில், திருவிழாக் காலங்களில் நிகழ்ந்துள்ளன என்பதை, பல ஆதாரங்களுடன், விக்கிப்பீடியா வெளியிட்டுள்ளது. ஆண்டவனைக் காணவந்த இடத்தில், ஒருசில மனிதர்கள் செய்யும் தவறுகளால், பெரும்பாலான மக்கள் மிதிபட்டு இறப்பது, ஊர்வலங்களையும், கூட்டங்களையும்பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
எந்த ஓர் ஊர்வலத்திலும், பல்வேறு எண்ணங்கள் வலம்வரும். ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள், எதற்காகச் செல்கிறோம், எதை நோக்கிச் செல்கிறோம் என்பதில் ஒருவேளை தெளிவாக இருப்பர். ஆனால், ஊர்வலம் செல்லும்போது, ஆர்வத்தால் தூண்டப்பட்டு, வழியில் இணைபவர்களும் உண்டு. இன்னும் சிலர், ஊர்வலத்தில் கலகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இணையக்கூடும்.

கூட்டங்களை, ஊர்வலங்களைப் பற்றி இன்றைய விவிலியத் தேடலில் எண்ணிப்பார்க்க இரு காரணங்கள் உண்டு. செப்டம்பர் 8ம் தேதி நடைபெறவிருக்கும் ஆரோக்கிய அன்னை திருநாளையொட்டி, வேளாங்கண்ணி திருத்தலத்தில், ஆகஸ்ட் 29, இவ்வியாழனன்று, நவநாள் பக்திமுயற்சிகள், கொடியேற்றத்துடன் துவங்குகின்றன. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், இன்னும் பிற நாடுகளிலிருந்தும், வேளாங்கண்ணி திருத்தலத்தில், மக்கள் கூட்டம், இந்நாள்களில் அலைமோதும் என்பதை நாம் அறிவோம். இவ்வேளையில், சில நாள்களுக்கு முன், வேளாங்கண்ணியை நோக்கி, திருப்பயணமாகச் சென்ற பக்தர்கள் சிலர், இந்து அடிப்படைவாதக் குழுவினரால் தாக்கப்பட்ட செய்தியைக் கேட்டோம். அன்னையைத் தேடிச்செல்வோர் அனைவரும், ஆபத்து ஏதுமின்றி, இத்திருநாளை சிறப்பிக்கவேண்டும் என்று செபிப்பது, முதல் காரணம்.

நாம், கடந்த இரு வாரங்களாகச் சிந்தித்து வரும் புதுமையிலும், ஓர் ஊர்வலம் இடம்பெறுகிறது என்பது இரண்டாவது காரணம். இறக்கும் நிலையிலிருந்த தன் மகளை, இயேசு குணமாக்கவேண்டும் என்று, தொழுகைக்கூடத் தலைவர் யாயிர் வேண்டியதையடுத்து, யாயிருடன் இயேசு புறப்பட, அவர்களைப் பின்தொடர்ந்து, ஒரு கூட்டம், ஊர்வலமாகக் கிளம்பியது.

யாயிரின் இல்லம் நோக்கிச் சென்ற அந்த ஊர்வலத்தில், பல்வேறு நோக்கங்கள் கொண்டவர் கலந்துகொண்டனர். சாகக்கிடக்கும் மகளைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம், யாயிர் மனதிலும், இயேசுவின் மனதிலும் மேலோங்கியிருக்க வேண்டும். தொழுகைக்கூடத் தலைவரின் மகள் சாகக்கிடக்கிறார் என்ற செய்தியும், அவரைக் குணமாக்க இயேசு செல்கிறார் என்ற செய்தியும், ஊரெங்கும் பரவியதால், 'என்னதான் நடக்கப்போகிறது' என்று காண ஆர்வம் கொண்டவர்கள், அந்த ஊர்வலத்தில் இணைந்திருக்கக்கூடும். தொழுகைக்கூடத் தலைவரே தங்கள் தலைவர் இயேசுவின் முன் மண்டியிட்டுவிட்டார், இனி தங்கள் புகழ் நாடெங்கும் பரவப்போகிறது என்ற பெருமையுடன், சீடர்கள் அந்த ஊர்வலத்தில் சென்றிருக்கக்கூடும். இயேசுவின் பணிகளில் குறைகாண்பதையே தங்கள் தொழிலாகக் கொண்டிருந்த மதத் தலைவர்கள், மீண்டும் குறைகாணும் நோக்கத்துடன், அந்த ஊர்வலத்தில் கலந்திருக்கக்கூடும்.

வேதனை, எதிர்பார்ப்பு, பெருமை, குறைகாணும் ஆர்வம் என்ற பல்வேறு உணர்வுகள் கலந்திருந்த அந்த ஊர்வலத்தில், நம்பிக்கை என்ற உணர்வும் நுழைந்தது. பன்னிரு ஆண்டுகளாய் தன்னை வதைத்துவந்த இரத்தப்போக்கு நோயை, இயேசு குணமாக்குவார்; அவரது ஆடையின் ஓரங்கள் போதும் தன்னைக் குணமாக்குவதற்கு, என்ற அபார நம்பிக்கையுடன், ஒரு பெண், அந்தக் கூட்டத்தில் இயேசுவை நெருங்கினார்.
இரத்தப்போக்கு நோயுள்ள பெண், சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்படவேண்டும் என்பது, இஸ்ரயேல் மக்களிடையே கடைபிடிக்கப்பட்ட விதி. ஆனால், இவரோ, கூட்டத்தின் மத்தியில், முண்டியடித்து, முன்னேறிக்கொண்டிருந்தார். "நான் அவர் ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" (மாற்கு 5:28) என்ற ஒரே மந்திரம், அவர் மனமெங்கும் நிறைந்திருந்தது.

அந்தப் பெண்ணுக்குத் தெரியும்... இயேசுவுக்கு முன்னால், சட்டங்களும், சம்பிரதாயங்களும் சாம்பலாகிப்போகும் என்று, அவருக்குத் தெரியும். வேலிகள் கட்டுதல், வேறுபாடுகள் காட்டுதல், விலக்கிவைத்தல் போன்ற இதயமற்ற போலிச்சட்டங்கள், இயேசுவிடம் பொசுங்கிப்போகும் என்று, அவருக்கு நன்றாகத் தெரியும். அந்தத் துணிவில்தான் அவர் முன்னேறிக் கொண்டிருந்தார்.
இருந்தாலும் அவருக்குள் ஒரு சின்ன பயம். முன்னுக்கு வந்து, முகமுகமாய்ப் பார்த்து, இயேசுவிடம் நலம் வேண்டிக்கேட்க, ஒரு சின்ன பயம். அவருடைய பயம், இயேசுவைப்பற்றி அல்ல. அவரைச் சுற்றியிருந்த சமூகத்தைப்பற்றி... முக்கியமாக இயேசுவைச் சுற்றியிருந்த ஆண் வர்க்கத்தைப்பற்றி.
கூட்டத்தில், அந்த குழப்பத்தின் மத்தியில், இயேசுவை அணுகுவதைத் தவிர வேறு வழி அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை. கூட்டத்தில் நுழைந்தார், இயேசுவை அணுகினார். அவர்மீது தான் வளர்த்திருந்த நம்பிக்கையை எல்லாம் திரட்டி, அவரது ஆடையின் விளிம்பைத் தொட்டார். குணம்பெற்றார். இயேசுவின் "ஆடையைத் தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்று போயிற்று" (மாற்கு 5:29) என்று நற்செய்தியாளர் மாற்கு கூறியுள்ளார்.

பொதுவாக, குணமளிக்கும் புதுமைகளில், இயேசு, நோயுற்றவர்களைத் தொடுவதன் வழியே, அவர்கள் நலம் அடைந்ததை, நாம் நற்செய்திகளில் பல இடங்களில் காண்கிறோம். தன் வாழ்வின் இறுதிவரை, இயேசு, தன் தொடுதலால் மக்களுக்கு நன்மைகள் செய்தார் என்பதை நற்செய்தியாளர்கள் குறிப்பிடத் தவறவில்லை.
கெத்சமனித் தோட்டத்தில், அவரைக் கைதுசெய்ய வந்திருந்த தலைமைக்குருவின் பணியாளர்கள் ஒருவரை, ஒரு சீடர் வாளால் தாக்கவே, அப்பணியாளரின் காது துண்டிக்கப்படுகிறது. அப்போது அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு கூறியுள்ளார்: அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து, "விடுங்கள், போதும்" என்று கூறி, அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார். (லூக்கா 22:50-51)

வேறு சிலப் புதுமைகளில், நோயுற்றோர், இயேசுவின் ஆடையைத் தொட்டதால் குணமடைந்தனர் என்பதையும் நாம் நற்செய்திகளில் வாசிக்கிறோம். எடுத்துக்காட்டாக, அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொதுவிடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர் (மாற்கு 6:56, காண்க. மத்தேயு 14:36) என்று மாற்கு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது. இப்புதுமையிலும், இயேசுவின் ஆடையின் ஓரங்கள், இரத்தப்போக்கு நோயுள்ள பெண்ணை குணமாக்குவதைக் காண்கிறோம்.

"அவரது ஆடையின் ஓரங்கள் போதும் எனக்கு. குணம் பெற்றதும், கூட்டத்திலிருந்து நழுவிவிடலாம்" என்று வந்த பெண்ணை, இயேசு ஓரங்களிலேயே விட்டுவிட்டுப் போயிருக்கலாம். விளம்பரங்களை விரும்பாத இயேசு, வழியில் நடந்த அந்தப் புதுமையை, பெரிதுபடுத்தாமல் போயிருக்கலாம். ஆனால், அவருக்கு வேறு எண்ணங்கள் இருந்தன.

எந்த ஒரு புதுமையிலும், உடல் அளவில் நோயை குணமாக்குவது மட்டும் இயேசுவின் நோக்கமல்ல, மாறாக, அப்புதுமை வழியே, சமுதாயத்திற்கு நன்மை கொணர்வதையும் இயேசு விரும்பினார் என்பதை அறிவோம். இப்புதுமையிலும், சமுதாயத்தை குணமாக்கும் புதுமையை இயேசு தொடர்கிறார். குணமடைந்த பெண்ணின் உதவியுடன், இயேசு, கூட்டத்தை குணமாக்கும் புதுமையை, நாம், அடுத்தத் தேடலில் ஆய்வு செய்வோம்.


24 August, 2019

Pearly Gates… Wide? Narrow? விண்ணக வாயில்... விரிவானதா? குறுகியதா?

The Narrow Door

21st Sunday in Ordinary Time

St Peter at the Pearly Gates of Heaven is the core of many jokes… Here is a very familiar one:
A Pastor who had served 40 odd years and a cab driver arrive at the Pearly Gates. Saint Peter welcomes the cab driver with great excitement, while the Pastor is almost ignored. The heart-broken Pastor asks for explanation and Saint Peter says: “Results… Up here we go by results… While you preached, people slept. While he drove, people prayed.”

Jokes, in my opinion, are like sugar coated pills… They help us swallow some hard, bitter truths. For instance, in the above mentioned joke, there is an implied truth that the yardsticks used on earth will have no relevance in heaven. According to our ‘earthly standards’, the Reverend Pastor must have had a more royal welcome than a ‘mere taxi driver’. If we think that this is just joke, think again. This could be true in heaven.
Who goes to heaven? Who gets a grand welcome there? Such questions are best left to God (and to St Peter) to decide. It would be better if we worry about how we are going to reach there. This is the focus of today’s liturgical readings - Isaiah 66: 18-21 and Luke 13: 22-30.

Here is a story about God, which has taught me not to put God and Heaven into our worldly, human moulds: God walked into the heavenly court. It was overcrowded. It looked as if everyone was there. Wasn’t there supposed to be some screening done as to who enters the heavenly court? God told the angel to bring the Ten Commandments. It was brought and the angel read the first commandment: “I am the LORD your God…You shall have no other gods before me.” (Ex. 20: 2-3) All those who had violated the first commandment were asked to leave the heavenly court. The same procedure was followed for the other commandments. By the time the tenth commandment were read, the heavenly court was practically empty except for a few persons. God thought for a while. He felt that the heavenly court was too empty and far too silent. So, he turned around to the angel and said: “Bring everyone back!”

A nice story, one would say. Will the real God do this? Well… hmm… let me see… It would be difficult to give a ready, affirmative answer to this question. But, dear friends, God’s very essence is to bring everyone back Home. This is the theme that runs through in the First Reading and the Gospel today. Isaiah (66: 18-21) talks of God’s universal love this way:
"And I… am about to come and gather all nations and tongues, and they will come and see my glory. They will proclaim my glory among the nations. And they will bring all your brothers, from all the nations, to my holy mountain in Jerusalem as an offering to the LORD -on horses, in chariots and wagons, and on mules and camels," says the LORD.
In the Gospel of Luke (13: 29), Jesus goes one step… nay, quite a few steps further and says:
“People will come from east and west and north and south, and will take their places at the feast in the kingdom of God.”
Not only will they come to the Kingdom, the holy mountain… but they will have a feast there.

Everyone… let me repeat loud and clear… EVEYONE is welcome to the Kingdom from all corners of the world. The Jewish leaders, refused to accept the universal salvation preached by Jesus. For them, Israel was a chosen race, set apart from the others. To have a common meal with the others – the gentiles, the publicans, the tax collectors… was unthinkable. The God of Israel would never allow this. For them, ‘Will everyone be saved?’ is a rhetorical question with an assured ‘no’ for an answer. But, for God and Jesus this surely is what they are looking for.
A person approached Jesus with this question. Today’s Gospel begins with this question. Then Jesus went through the towns and villages, teaching as he made his way to Jerusalem. Someone asked him, "Lord, are only a few people going to be saved?" (Luke 13: 22-23)
Jesus gives the assurance that salvation is for everyone - Luke 13: 29. But, before he goes on to say this, he gives an idea of what this salvation means. He gives the famous imagery of the narrow door. Jesus said to them, "Make every effort to enter through the narrow door, because many, I tell you, will try to enter and will not be able to.” (Luke 13: 24)

This statement of Jesus sounds similar to the ‘exclusive salvation’ preached by the Jewish leaders. But, a deeper analysis would show us a world of difference between the thoughts of Jesus and those of the Jewish leaders.
For the Jewish leaders, their God was private and exclusive. Their salvation… a birthright. For Jesus, God was the Father of all who offers salvation as a gift to all. It is up to each one to accept or reject the gift. According to the Jewish leaders, a Jew was simply required to approach the Pearly Gates of Heaven and they would swing open. Jesus gave them a rude shock… the door to Heaven is narrow, through which many would try to enter and not succeed.
Probably Jesus was thinking of the Pharisees and other religious leaders who would find it difficult to enter this narrow door with their dress and headgear intact. If only they could give these up?... Jesus had longed for this. In today’s Gospel, Jesus goes on to give a parable about those standing outside and having a discussion with the owner of the house. I would like to elaborate this parable with some ‘extra-fittings’!

When the Jewish leaders approached the door of salvation, they were rudely shocked. It was too narrow. They also saw quite a few ‘ordinary’ people entering there. How could they, the leaders, enter THAT door along with THEM? There was probably another door meant for them EXCLUSIVELY. So they stood outside and began to shout to the owner of the house. They expected him to come out and take them in through another door, a door large enough, so that they could easily go in without shedding any of their regal accessories.
They waited and nothing happened. There was no sign of the house owner. They kept on shouting. Then came a voice from within: “I don’t know you or where you come from.” The leaders were quite surprised. They began to tell him that they had wined and dined with him, listened to his teachings etc. None of these seemed to have impressed the owner. He never came out. The leaders could only hear his stern voice ordering them to leave.
While this was going on, simple folks who had come without any additional accessories, entered the narrow door with ease. Most of these simple folks were taught by these same leaders as to how they should work for their salvation. They must have been quite amused to see the difficulty their leaders had entering the portals of salvation. The leaders had nowhere to hide. They were on the verge of tears!
Here comes the punch line from Jesus:
There will be weeping there, and gnashing of teeth, when you see Abraham, Isaac and Jacob and all the prophets in the kingdom of God, but you yourselves thrown out. People will come from east and west and north and south, and will take their places at the feast in the kingdom of God. Indeed there are those who are last who will be first, and first who will be last. (Luke 13:28-30)

The readings from Isaiah and the Gospel of Luke give us a clear picture of what Salvation is. Salvation means…
that we believe in a God who welcomes everyone and celebrates a feast with them;
that we have a heart which can enter the narrow door without any difficulty;
that we participate in this ‘inclusive feast’ with an open and simple mind.


Narrow Gate Hard to Enter

பொதுக்காலம் 21ம் ஞாயிறு

நாம் அடிக்கடி கேட்ட ஒரு சிரிப்புத் துணுக்குடன் இன்றைய சிந்தனைகளைத் துவங்குவோம். விண்ணக வாயிலருகே புனித பேதுரு நின்றுகொண்டிருந்தார். வயது முதிர்ந்த ஓர் அருள்பணியாளரும், பேருந்து ஓட்டுனர் ஒருவரும் அங்கு வந்தனர். அருள் பணியாளரை ஆர்வமின்றி வரவேற்ற புனித பேதுரு, ஓட்டுனரை மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்றார். இதைக் கண்ட அருள்பணியாளர், மனம் உடைந்தவராய், பேதுருவிடம் விளக்கம் கேட்டார். புனித பேதுரு அவரிடம், "சாமி, நீங்கள் பிரசங்கம் வைத்தபோது, கோவிலென்றும் பாராமல், மக்கள் தூங்கினார்கள். ஆனால், இந்த ஓட்டுனர் பேருந்தை ஓட்டியபோது, சாலையென்றும் பாராமல், மக்கள் செபித்தார்கள்" என்று விளக்கம் அளித்தார்.
விண்ணகத்தையும், புனித பேதுருவையும் இணைத்து சொல்லப்படும் பல சிரிப்புத் துணுக்குகளை நாம் கேட்டிருக்கிறோம். சிரிப்புத் துணுக்குகள், வெறும் சிரிப்பதற்கு மட்டும்தானா? அல்லது, அவை நம்மைச் சிந்திக்கவும் அழைக்கின்றனவா? தெனாலி இராமன் கதைகள் சிரிப்பதற்கும், அதே நேரம் சிந்திப்பதற்கும் சொல்லப்பட்ட கதைகள் என்பதை நாம் அறிவோம். கசப்பான மருந்துகளை தேனில் குழைத்தோ, அல்லது இனிப்பான ஒரு மேல்பூச்சுடன் செய்யப்பட்ட ஒரு மாத்திரையாகவோ நாம் உட்கொள்வதில்லையா? அதேபோல், கசப்பான உண்மைகளை, சிரிப்பு வடிவில் கேட்கும்போது, அவை நம் மனதில் இன்னும் ஆழமாகப் பதிய வாய்ப்புண்டு.
விண்ணகத்தைப்பற்றி, அங்கு அளிக்கப்படும் வரவேற்பைப்பற்றி நாம் கொண்டுள்ள முடிவுகளை உடைத்து, வேறுபட்ட உண்மைகளைச் சொல்லித்தர, மேலே நாம் கூறிய அருள் பணியாளர், ஓட்டுனர் கதை உதவி செய்யலாம். விண்ணகத்தில் யாருக்கு வரவேற்பு இருக்கும், எத்தகைய வரவேற்பு  இருக்கும் என்ற முடிவுகள் எடுப்பது நம் பணியல்ல. நாம் அங்கு நுழைவதற்கு எவ்வகையில் நம்மையே தயார் செய்வது என்ற முடிவுகள் எடுப்பது மட்டுமே நமது பணி. யார் மீட்படைவார்? யார் அடையமாட்டார்? என்ற கேள்விகளின் முடிவுகளைக் கடவுளிடம் விட்டுவிட்டு, நாம் எவ்விதம் மீட்படைய முடியும் என்பதைச் சிந்திக்க இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

விண்ணகத்தையும் புனித பேதுருவையும் இணைத்துச் சொல்லப்படும் சில கதைகள் நம் முற்சார்பு எண்ணங்களைப் புரட்டிப்போடுவதுபோல், இறைவனையும், விண்ணகத்தையும் இணைத்துச் சொல்லப்படும் பல கதைகள் என் எண்ணங்களைப் புரட்டிப்போட்டுள்ளன. அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த கதை இது:
விண்ணகத்தில், மக்களால் நிறைந்து வழிந்த மாமன்றத்திற்கு இறைவன் வந்தார். அலைமோதிய கூட்டத்தைக் கண்ட இறைவன், வானதூதரிடம் பத்துக் கட்டளைகள் அடங்கிய பலகையை எடுத்து வரச்சொன்னார். வானதூதர் கொண்டு வந்தார். அந்தக் கட்டளைகளை ஒவ்வொன்றாக வாசிக்கச் சொன்னார். "நானே உன் கடவுளாகிய ஆண்டவர்... என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது." (விடுதலைப் பயணம் 20 : 2-3) என்ற முதல் கட்டளையை வானதூதர் வாசித்தார். அந்தக் கட்டளையை மீறியவர்கள் விண்ணகத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. பலர் வெளியேற வேண்டியிருந்தது. இப்படி ஒவ்வொரு கட்டளையும் வாசிக்கப்பட, அக்கட்டளைகளை மீறிய மக்கள் வெளியேற்றப்பட்டனர். இறுதிக் கட்டளை வருவதற்குள், விண்ணகம் ஏறத்தாழ காலியாகி விட்டது. ஒரு சிலர் மட்டும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர்.
கடவுள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். அவர் அந்த மாமன்றத்திற்குள் வந்தபோது இருந்த அந்த கட்டுக்கடங்காத கூட்டம், அங்கு ஒலித்த ஆரவாரம் இவற்றிற்கும், இப்போது ஒரு சிலரே நின்று செபித்துக் கொண்டிருந்த இந்த அமைதிக்கும் இருந்த வேறுபாடு அவரை ஆழ்ந்த சிந்தனையில் மூழ்க வைத்தது. பின்னர் ஏதோ ஒரு தீர்மானத்தோடு, கடவுள் வானதூதரிடம் திரும்பி, "வெளியில் அனுப்பப்பட்ட அனைவரையும் உள்ளே வரச்சொல்லுங்கள்" என்றார். மீண்டும் விண்ணகம் நிறைந்தது, மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. கடவுளும் மகிழ்ந்தார்.

கதையாக, கற்பனையாக இப்படி கடவுளை நினைத்துப் பார்க்கலாம். சிரித்துக் கொள்ளலாம். ஆனால், உண்மையில் நம் கடவுள் இப்படி நடந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தால், ம்... வந்து... என்று சிந்திக்கத் துவங்குவோம். உடனடியாகப் பதில் சொல்ல முடியாமல் தயங்குவோம். ஆழ்ந்து சிந்தித்தால், கடவுள் என்ற இலக்கணத்தின் ஒரு முக்கிய அம்சத்தை இக்கதை நமக்குச் சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அனைவரையும் அன்புடன் அழைத்து, அணைத்து விருந்து கொடுக்கும் கடவுள்தான் நம் கடவுள். இஞ்ஞாயிறன்று நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள முதல் வாசகம் தரும் செய்தி இதுதான்:
எசாயா 66 : 18, 20
பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்: அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்... அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின் மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர்.

எருசலேமிலுள்ள தன் திருமலைக்கு அனைவரையும் இறைவன் அழைத்துவருவார் என்று எசாயா கூறும் ஒன்றிப்பையும் தாண்டி, இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் கூறும் வார்த்தைகள் மிக உயர்ந்த சவாலை நம்முன் வைக்கின்றன:
லூக்கா நற்செய்தி 13 : 30
இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.
பல திசைகளிலிருந்தும் மக்கள் இறைவனின் திருமலைக்குச் திரண்டு வருவது மட்டுமல்ல, அந்த மலையில் அனைவருக்கும் சமபந்தியும் இருக்கும். அனைவரும், மீண்டும் சொல்கிறேன்... ஒருவர் கூட மீதம் இல்லாமல் அனைவரும் வாழ்வு பெறவேண்டும், மீட்பு பெறவேண்டும் என்பது மட்டுமே இறைவனின் விருப்பம்... இயேசுவின் விருப்பம். நிபந்தனையற்ற அன்பு என்று நாம் நம்பும், நாம் வணங்கும் கடவுளின் முக்கிய அம்சமே, பாகுபாடுகள் அற்ற குடும்பமாக நம்மை ஒன்றிணைப்பதே...

நம்மில் சிலருக்கு, இந்த சமத்துவத்தை ஏற்பதற்கு அதிகத் தயக்கமாய் இருக்கும். பாவிகள், புண்ணியவான்கள் எல்லாருக்கும் மீட்பு உண்டு. இறையரசில் இவர்கள் இருவருக்கும் எவ்வித வேறுபாடும் இருக்காது என்று சொல்வது, உலகில் நாம் பயன்படுத்தும் அளவுகோல்களை உடைத்தெறியும் ஒரு சவாலாக ஒலிக்கிறது.
யூதர்கள், புற இனத்தார் அனைவருக்கும் மீட்பு உண்டு என்ற அந்த எண்ணத்தை சாதாரண, எளிய இஸ்ராயலர்கள் ஏற்றுக்கொண்டாலும், அவர்களது மதத் தலைவர்களால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தாங்கள், கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட குலம், பிற இனத்தவரிடையே இருந்து, தனித்து பிரிக்கப்பட்டு, மீட்கப்பட்ட குலம்... அப்படியிருக்க, சமாரியர், வரி வசூலிப்பவர், ஆயக்காரர் என்று பிறரோடு ஒரே மலையில் அமர்ந்து, சமபந்தியில் விருந்து உண்பதா? நடக்கவே நடக்காது. இஸ்ராயலரின் கடவுள் இப்படி செய்யமாட்டார் என்பது மதத்தலைவர்களின் அசைக்கமுடியாத எண்ணம்.

இறைவனின் திருமலையில் அனைவரும் இணைந்துவர முடியுமா? ஏற்றுக் கொள்வதற்குக் கடினமான அந்தக் கேள்வியை ஒருவர் இயேசுவிடம் சிறிது வித்தியாசமாகக் கேட்கிறார். இந்தக் கேள்வியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:
லூக்கா 13 : 22 - 23
இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார்.
இந்தக் கேள்விக்கானப் பதிலை இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு கூறியுள்ளார். எல்லாத் திசைகளிலிருந்தும், எல்லா மக்களும் இறையரசின் விருந்தில் பங்கு கொள்வர் என்பது இயேசுவின் திண்ணமான பதில். ஆனால், இப்பதிலை இயேசு உடனே சொல்லாமல், மீட்புப் பெறுவது எவ்வாறு என்ற பாடத்தை, ஒரு சவாலாக முதலில் நமக்கு முன் வைக்கிறார்.
"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்." (லூக்கா 13 : 24)
இயேசு சொல்லும் இக்கூற்றை மேலோட்டமாகப் பார்த்தால், தவறான எண்ணங்கள் எழ வாய்ப்புண்டு. "ஒரு சிலருக்கே, அதுவும், இஸ்ராயலருக்கே மீட்பு உண்டு" என்று மதத்தலைவர்கள் சொல்லித் தந்ததும், இயேசுவின் இந்தக் கூற்றும் ஒன்றுபோல தெரியலாம். ஆனால், மதத் தலைவர்களின் எண்ணங்களுக்கும், இயேசுவின் எண்ணங்களுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு.
இறைவனைத் தங்கள் தனியுடைமையாக்கி, மீட்பையும் தங்கள் தனிப்பட்டச் சொத்து என்று உரிமை கொண்டாட மதத் தலைவர்கள் நினைத்தனர், போதித்து வந்தனர். இயேசுவோ, இறைவன் எல்லாருக்கும் பொதுவான தந்தை என்றும், அவர் தரும் மீட்பு எல்லாருக்கும் கொடுக்கப்படும் பரிசு என்றும் கூறினார். இந்தப் பரிசை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் எடுக்கும் முடிவு. விண்ணகத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும், ஆனால், இது குறுகலான, இடுக்கமான வாயில். முயற்சி செய்துதான் உள்ளே நுழையமுடியும். இவை இயேசுவின் எண்ணங்கள்.

இறையரசில் நுழைவது, விண்ணக விருந்தில் பங்கு கொள்வது மிகவும் பெருமைக்குரிய உயர்ந்த நிலைதான். ஆனால், அந்நிலையை அடைய, நாம் வாழ்வில் திரட்டி வைத்திருக்கும் ஏனையப் பெருமைகளையெல்லாம் களையவேண்டும். பெருமைகளைக் களைவது எளிதல்ல என்பதை இயேசு, "பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற் போகும்" என்று சுட்டிக்காட்டினார். அவர் இப்படிச் சொன்னபோது, அவர் மனதில் யூதமதக் குருக்களை அதிகம் எண்ணியிருப்பார். அவர்களை மனதில் வைத்து, தொடர்ந்து ஒரு கதையும் சொன்னார். அந்தக் கதையை நான் கொஞ்சம் விரிவாகக் கற்பனை செய்து பார்க்கிறேன்.

மீட்பின் வாயில்வரை வந்துவிட்ட யூதமதக் குருக்கள், அந்தக் குறுகிய வாயிலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வாழ்வில் திரட்டி வைத்திருந்த பெரும் ஆடைகள், மகுடம் இவற்றுடன் அக்குறுகிய வாயில் வழியே அவர்களால் நிச்சயம் செல்லமுடியாது என்பதை உணர்ந்தனர். எனவே, அவர்கள் என்ன செய்தனர்? மீட்பின் வாயிலில் நின்றுகொண்டு, வீட்டு உரிமையாளரை வெளியில் வரச்சொல்லி அழைத்தனர்.
வீட்டு உரிமையாளர் வெளியில் வருவார்; வேறு பெரியதொரு வாயில் வழியாகவோ, அல்லது, குறுகிய வாயிலை இடித்து பெரிதாக்கியோ, தங்களை உள்ளே அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர், அந்த மதத்தலைவர்கள். வீட்டு உரிமையாளர் வெளியில் வரவில்லை. உள்ளிருந்து அவர் தந்த பதில் வந்தது. "நீங்கள் யார்? உங்களை எனக்குத் தெரியாதே" என்ற குரல் மட்டும் ஒலித்தது.
அதிர்ச்சியில் வாயடைத்துப்போன மதத் தலைவர்கள் சுதாரித்துக்கொண்டு, தங்கள் அருமை, பெருமைகளை எல்லாம் பட்டியலிட்டு முழங்கினர். அந்த வீட்டுத் தலைவனுடன் தாங்கள் உண்டது, குடித்தது, அவருடன் பழகிய நாட்கள், அவர் தங்களுக்குச் சொன்ன போதனைகள் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னார்கள். வீட்டுத் தலைவரின் பொறுமை அதிகம் சோதிக்கப்பட்டுவிட்டதால், "உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றும் தெரியாது" என்று கடூரமாகச் சொல்லி, அவர் அவர்களை அவ்விடத்தைவிட்டுப் போகச்சொன்னார்.

இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த அதே வேளையில் அங்கு வந்த பல்லாயிரம் எளிய மக்கள், தங்கள் அருமை, பெருமை என்று எதையும் சுமந்து வராத எளிய மக்கள் அந்த மீட்பின் வாயில் வழியே எளிதாக, மகிழ்வாக உள்ளே சென்ற வண்ணம் இருந்தனர். மீட்பைப்பற்றி எடுத்துரைத்த தங்கள் தலைவர்கள் அந்த வாயில் வழியே வரமுடியாமல் தவித்ததை வேடிக்கை பார்த்தபடி, அந்த எளிய மக்கள் சென்றது, வெந்துப் போயிருந்த அத்தலைவர்களின் நெஞ்சில் அம்புகளாய்த் தைத்தன. புலம்பலிலும், கோபத்திலும் மதத்தலைவர்கள் பற்களைக் கடித்துக்கொண்டு அங்கு நின்றுகொண்டிருந்தனர். இக்கதையை இயேசு இவ்விதம் முடிக்கிறார்.
லூக்கா நற்செய்தி 13 : 28ஆ-30
இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும், நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.

எல்லாரையும் அழைத்து, அணைத்து, எல்லாருக்கும் சமபந்தி விருந்து படைக்கும் அன்புத் தந்தையாக இறைவனைக் காணவும், அவ்விருந்தில் கலந்துகொள்ள, நம் தற்பெருமைகளை எல்லாம் களைந்துவிட்டு, அனைவரோடும் அந்தக் குறுகலான வாயில் வழியே நுழைந்து செல்லவும், எவ்விதப் பாகுபாடும் வேறுபாடும் இல்லாமல் அவ்விருந்தில் அ-னை-வ-ரு-ம் கலந்து கொள்வதைக் கண்டு மனநிறைவு அடையவும், இறைவன் நம் குறுகிய மனக்கதவுகளை திறப்பாராக. நம் மனதில் குறுகிய வாயில்களை அமைத்திருந்தால், அந்த வாயில்களை இடித்து, பெரிதாக்குவராக.