27 April, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 19


From withered hands to winning hands

இயேசு, ஒய்வு நாளில், தொழுகைக் கூடத்தில் ஆற்றியதாக லூக்கா நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள முதல் புதுமை, அவரைக் குறித்து நல்ல எண்ணங்களை மக்கள் மனதில் பதித்தன என்று இப்புதுமையின் இறுதி வரிகள் கூறுகின்றன. ஆனால், லூக்கா நற்செய்தி, 6ம் பிரிவில் மீண்டும் இயேசு ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்தில் ஆற்றும் மற்றொரு புதுமை, மாறுபட்ட பதிலிறுப்பை உருவாக்குகிறது. இந்தப் புதுமையை நம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.
என்று சென்ற விவிலியத் தேடலை நிறைவு செய்தோம். இன்று தொடர்கிறோம்.

லூக்கா நற்செய்தி ஆறாம் பிரிவில் இயேசு ஆற்றிய புதுமையில் ஒரு பிரச்சனையைச் சந்திக்கிறார். சந்திக்கிறார் என்பதை விட, பிரச்சனையை ஆரம்பிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. பிரச்சனையைத் துவக்கிவைக்கும் வண்ணம் இயேசு ஆற்றிய புதுமையை லூக்கா நற்செய்தியிலிருந்து கேட்போம்.

லூக்கா நற்செய்தி 6: 6-11
மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர். இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி, “எழுந்து நடுவே நில்லும்!என்றார். அவர் எழுந்து நின்றார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார். பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, “உமது கையை நீட்டும்!என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது. அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.

வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றைப் பட்டியலிடத் தேவையில்லை. நாம் வாசித்த நற்செய்தியில், தொழுகைக் கூடத்தில் இருந்தவர்கள் அங்கு சென்றதன் காரணங்களைப் பற்றி கொஞ்சம் சிந்திக்கலாம். இயேசு தொழுகைக் கூடத்தில் இருந்தார். காரணம்? மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல. மக்கள் அங்கு வரக் காரணம் என்ன? இயேசுவின் போதனைகளைக் கேட்க. அவரது போதனைகள், மற்ற மறை நூல் அறிஞர்களின் போதனைகள் போல் இல்லாமல், நன்றாக இருப்பதாக செய்தி பரவி வந்ததால், அவரது போதனையைக் கேட்க மக்கள் வந்திருந்தனர். போதனையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில், வலக்கை சூம்பிய ஒருவர் இருந்தார். ஒரு வேளை, இயேசுவிடம் தன் குறையைச் சொல்லி, ஏதாவது ஒரு தீர்வு காணலாம் என்று நம்பிக்கையோடு வந்திருப்பார்.

பரிசேயரும், மறைநூல் அறிஞரும் தொழுகைக் கூடத்தில் இருந்தனர். அவர்கள் வந்தததற்குக் காரணம் என்ன? இயேசுவின் போதனைகளைக் கேட்கவா? செபம் செய்யவா? அல்லது மக்களை செபத்திலும், தொழுகையிலும் வழிநடத்தவா? ஒருவேளை, இந்த காரணங்களுக்காக அவர்கள் அங்கு வந்திருக்கலாம். ஆனால், இயேசுவை அந்த தொழுகைக்கூடத்தில் பார்த்ததும், அவர்களுக்குள் பல்வேறு பகைமை உணர்வுகள் அலைமோதியிருக்க வேண்டும். இயேசுவைச் சுற்றி கூடியிருந்த மக்கள் கூட்டம், அவர் கூறிய சொற்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்ததும் மதத் தலைவர்களின் பொறாமையை இன்னும் தூண்டியிருக்க வேண்டும். இந்த உணர்வுகளோடு அவர்கள் மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, இயேசுவுக்கு முன்னால் குறையுள்ள அந்த மனிதரைக் கண்டனர். அவரைக் கணடதும், மதத்தலைவர்கள், தாங்கள் தொழுகைக்கூடத்திற்கு வந்ததற்கான குறிக்கோளை அடைந்துவிட்டதைப் போல் உணர்ந்தனர். அவர்கள் உதட்டோரம் இலேசான ஒரு புன்னகை. மக்கள் முன் இயேசுவை அவமானப்படுத்த இதைவிட அவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்று கணக்கு போட்டனர்.
கை சூம்பிய அந்த மனிதருக்கு இயேசு உதவாவிடில், அவர் இதயமற்றவர் ஆகிவிடுவார். ஆனால், அந்த மனிதர் மேல் இரக்கம் காட்டி, அவரை குணமாக்கினால், மோசே வழியே இறைவன் தந்த ஓய்வு நாள் சட்டத்தை மீறுபவர் ஆகிவிடுவார். நல்லது செய்தாலும் தவறு, செய்யாமல் போனாலும் தவறு. இயேசு தங்களிடம் அன்று வசமாக மாட்டிக்கொண்டார் என்று, அவர்கள் கணக்கு போட்டனர்.
அவர்கள் போட்ட கணக்கில் ஒரே ஒரு தவறு செய்தனர்... இயேசுவின் அறிவுத்திறனை, அவர்கள் சிறிது குறைவாக மதிப்பிட்டுவிட்டனர். நாம் வாசித்த நற்செய்தியில் "அவர்கள் எண்ணங்களை அறிந்த இயேசு..." என்ற அழகான ஒரு சொற்றொடரை வாசிக்கிறோம். இன்றைய பேச்சு வழக்கில் இதைச் சொல்ல வேண்டுமென்றால், இயேசு அவர்களை அளந்து வைத்திருந்தார் என்று சொல்லலாம்.

ஒரு கற்பனைக் காட்சியைக் காண்பதற்கு உங்களை அழைக்கிறேன். இயேசுவைப் பற்றிய ஒரு திரைப்படத்தில் வருவது போலவும் இந்த காட்சியைக் கற்பனை செய்து கொள்ளலாம். இயேசு போதித்துக் கொண்டிருப்பார், அவரைச் சுற்றி எளிய மக்கள் அமர்ந்திருப்பர். எல்லாருடைய முகத்திலும் ஒரு வித அமைதி, ஆவல் காட்டப்படும். சூம்பியக் கை உள்ளவரும் அவ்வப்போது காட்டப்படுவார். மென்மையான இசை பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கும். திடீரென, இசை மாறும். காமெரா ஒரு பகுதியைக் காட்டும். அங்கு பரிசேயரும், மறைநூல் அறிஞரும் நின்று கொண்டிருப்பர். அவர்களைக் காணும் மக்கள் முகங்களில் ஒரு வித கலக்கம் தெரியும். இது வரை அங்கு இருந்த இதமானச் சூழ்நிலை மாறி, ஒரு இறுக்கமானச் சூழல் உருவாகும்.
வாழ்க்கையில் இதை நாம் கட்டாயம் உணர்ந்திருப்போம். நல்லதொரு சூழலில் நண்பர்களுடன் நாம் பேசி, சிரித்துக்கொண்டிருக்கும் வேளையில், நமக்குப் பிடிக்காத ஒருவர் அப்பக்கம் வந்தால், ஆனந்தமாய் இருந்த சூழல் மாறி, ஒரு வித மௌனம், இறுக்கமான மௌனம், அங்கு குடிகொள்வதை உணர்ந்திருப்போம். தொழுகைக் கூடத்தில் நிலவிய இறுக்கத்தைக் குறைக்க, அல்லது, உடைக்க, இயேசு முன்வருகிறார். சூம்பிய கையுடையவரிடம், "எழுந்து நடுவே நில்லும்." என்கிறார். இயேசு இவ்வாறு கூறியது, அங்கு நிலவிய இறுக்கத்தை இன்னும் கூட்டியது என்றே சொல்லவேண்டும்.

உடல் ஊனமுற்றவர்களை கூர்ந்து பார்ப்பதே அநாகரிகமானச் செயல் என்று இக்காலத்தில் நமக்குப் பல வழிகளில் சொல்லித்தரப்படுகிறது. அவர்களது ஊனத்தைப் பெரிதுபடுத்தாமல், முடிந்தவரை, அவர்களை, இயல்பான வாழ்க்கையில் ஈடுபடுத்த அனைவரும் முயலவேண்டும் என்பது, இன்று பள்ளிகளில், குழந்தைகளுக்கும் சொல்லித்தரப்படும் ஒரு பாடம். உடலில் நோயோ, குறையோ உள்ளவர்களை மதிக்காத யூத சமூகத்தில், உடல் குறை உள்ள ஒருவரை, இயேசு, ஏன் கூட்டத்தின் நடுவில் வந்து நிற்கச் சொல்கிறார்? குறையுள்ளவர் மனமும், உடலும் அதிகம் பாடுபட்டிருக்குமே. உடல் குறையுள்ளவர்களை சமுதாயத்தின் ஓரத்தில் தள்ளி, அவர்களை வேதனைப்படுத்தும் தன் சமூகத்தினர், குறிப்பாக, மதத் தலைவர்கள் இத்தருணத்தில் நல்ல பாடங்களைப் பயிலவேண்டும் என்ற ஆவலில், இயேசு, கைசூம்பிய மனிதரை தொழுகைக் கூடத்தின் நடுவே நிறுத்துகிறார்.

குறையுள்ள அந்த மனிதரைப் பகடைக்காயாக்கி, அவரை குணமாக்கினாலும், குணமாக்காவிட்டாலும் இயேசுவை எப்படியாவது மடக்கிவிடலாம் என்று நினைத்த அந்த மதத் தலைவர்களின் திட்டங்களை நிலைகுலையச் செய்வதற்கு, இயேசு, இந்த வழியைக் கடைபிடிக்கிறார். ஊனமுள்ள அந்த மனிதர் நடுவில் வந்து நின்றதும், அவரது குறையைக் கண்டதும், அங்கிருந்த எளிய மக்களின் மனதில் இரக்கம் அதிகம் பிறந்திருக்கும். "ஐயோ பாவம் இந்த மனுஷன். இவரைக் கட்டாயம் இயேசு குணப்படுத்துவார்..." என்று பரிதாபமும், நம்பிக்கையும் கலந்த மன நிலையில் அந்த மக்கள் அமர்ந்திருக்கின்றனர். இயேசுவின் கேள்வி, அவர்களைத் தட்டி எழுப்புகிறது. இயேசு அவர்களை நோக்கி, உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று கேட்டார்.

இயேசு யாரிடம் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்? மக்களிடம் அல்ல. தன் போதனைகளால், ஏற்கனவே மக்களின் மனதில் ஓய்வுநாளைப் பற்றி நல்ல கருத்துக்களை உருவாக்கியிருப்பார். இந்தக் கேள்வி மதத்தலைவர்களுக்கு. அவர்களிடமிருந்து பதில் எதையும் காணோம். ஓய்வுநாளை வைத்து இயேசுவை மடக்கிவிடலாம் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்த மதத் தலைவர்கள், தங்களிடமே இந்த கேள்வி எழுப்பப்படும் என்று கொஞ்சமும் நினைத்திருக்க மாட்டார்கள். வாயடைத்து நின்றார்கள்.
அங்கே நிலவிய அமைதியை, நல்லது செய்வதற்கு, மக்களும், மதத் தலைவர்களும் தந்த சம்மதமாக இயேசு எடுத்துக்கொண்டு, நல்லது செய்கிறார். நோயுற்றவரின் கை நலமடைந்தது. சூழ இருந்த மக்களின் மனங்களும் நலமடைந்தது. தான் வாய் திறந்து வார்த்தைகளால் எதுவும் கேட்காமலேயே இயேசு தனக்கு ஆற்றிய இந்த அற்புதத்தைக் கண்டு, அந்த மனிதர் தன் வாழ்நாளெல்லாம் நன்றியுடன் வாழ்ந்திருப்பார். அனால், இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், தொழுகைக் கூடத்தில் காத்திருந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் கோபவெறி கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர் என்று, இந்த நற்செய்திப் பகுதி நிறைவடைகிறது.

ஒரு மனிதர் நல்லது செய்யும்போது, மாலையிட்டு மரியாதை செய்வதற்கு பதிலாக, கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்களே, இவர்களெல்லாம் மனிதர்கள்தானா? என்ற நியாயமானக் கோபம் நமக்கு எழலாம். தயவுசெய்து உடனே நீதி இருக்கையில் அமர்ந்து, தீர்ப்பை வாசித்துவிட வேண்டாம். வழக்கு என்று வரும்போது இரு பக்கமும் உண்டல்லவா? இயேசுவின் பக்கம் நியாயம் இருப்பது வெட்ட வெளிச்சம். ஆனால், அவருக்கு எதிர்பக்கம் இருப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும், இல்லையா?  அடுத்த விவிலியத்தேடலில் மறை நூல் அறிஞர், பரிசேயர் இவர்கள் பக்கமிருந்து ஓய்வுநாள் பற்றிய எண்ணங்களை அறிய முயல்வோம்.

25 April, 2016

Deep-rooted Love ஆணிவேராகும் அன்பு



A new commandment I give you

5th Sunday of Easter

A few years back, I received a newsletter from one of the universities in Los Angeles. It carried a story of a student who had joined the university to pursue his studies, after spending 20 years in prison for a crime he did not commit. In 1992, at the age of 16, Franky Carrillo Jr. was sentenced to 30 years to life in prison, plus a second life sentence, for a murder he didn’t commit. In 2011, Franky was released after witnesses who testified in his murder trial admitted they had lied. 20 long years for nothing. Nothing? Well, Franky Carrillo does not think so. When I read his interview in the newsletter, I was very impressed by his comments and they are the starting points for this Sunday’s reflections for me. Here is an excerpt from that interview:
When you told other prisoners you were innocent, did they
believe you?
Surprisingly, they did. I realized at some point that I needed to tell someone. That was healthy, and it helped me stay true to my battle. Whether it was my roommate, someone in the yard, a cop or a teacher, I was always glad that the response was that they knew I didn’t belong there even before they heard my story. Their feedback encouraged me to not give up.
These words of Franky gave me a clue as to what keeps our hopes alive. More than all the external helps that Franky would have received from outside the prison, it is the affirmation from fellow prisoners that must have been more helpful to Franky.

Here is another prison-story that gives us the same idea – namely, that hope and change in prison happen from within.  In 1921, Lewis Lawes became the warden at Sing Sing Prison. No prison was tougher than Sing Sing during that time. But when Warden Lawes retired some 20 years later, that prison had become a humanitarian institution. Those who studied the system said credit for the change belonged to Lawes. But when he was asked about the transformation, here's what he said: "I owe it all to my wonderful wife, Catherine, who is buried outside the prison walls." Catherine Lawes was a young mother with three small children when her husband became the warden. Everybody warned her from the beginning that she should never set foot inside the prison walls, but that didn't stop Catherine! When the first prison basketball game was held, she went ... walking into the gym with her three beautiful kids, and she sat in the stands with the inmates. Her attitude was: "My husband and I are going to take care of these men and I believe they will take care of me! I don't have to worry."
She insisted on getting acquainted with them and their records. She discovered one convicted murderer was blind so she paid him a visit. Holding his hand in hers she said, "Do you read Braille?" "What's Braille?" he asked. Then she taught him how to read. Years later he would weep in love for her. Later, Catherine found a deaf-mute in prison. She went to school to learn how to use sign language. Many said that Catherine Lawes was the body of Jesus that came alive again in Sing Sing from 1921 to 1937. Then, she was killed in a car accident.
The next morning Lewis Lawes didn't come to work, so the acting warden took his place. It seemed almost instantly that the prison knew something was wrong. The following day, her body was resting in a casket in her home, three-quarters of a mile from the prison. As the acting warden took his early morning walk he was shocked to see a large crowd of the toughest, hardest-looking criminals gathered like a herd of animals at the main gate. He came closer and noted tears of grief and sadness. He knew how much they loved Catherine. He turned and faced the men, "All right, men, you can go. Just be sure and check in tonight!" Then he opened the gate and a parade of criminals walked, without a guard, the three-quarters of a mile to stand in line to pay their final respects to Catherine Lawes. And every one of them checked back in. Every one! They learned the commandment of love as practiced by Catherine. [Stories for the Heart compiled by Alice Gray (Portland: Multnomah Press, 1996), pp. 54-55.]

Today’s readings tell us about love, hope and transformation that took place among the first Christians when they were faced with tough situations. Both the passages from the Acts of the Apostles as well as the Book of Revelation talk of hope. This hope was born amidst the most trying period of Christian history. The Book of Revelation was written by St John when he was exiled by Roman emperor Domitian to the island of Patmos. One can imagine Christians huddled together in some hidden cave, or underground place reading these words of St John:
Rev. 21: 1-5
Then I saw a new heaven and a new earth, for the first heaven and the first earth had passed away, and the sea was no more. And I saw the holy city, new Jerusalem, coming down out of heaven from God, prepared as a bride adorned for her husband. And I heard a loud voice from the throne saying, “Behold, the dwelling place of God is with man. He will dwell with them, and they will be his people, and God himself will be with them as their God. He will wipe away every tear from their eyes, and death shall be no more, neither shall there be mourning, nor crying, nor pain anymore, for the former things have passed away.” And he who was seated on the throne said, “Behold, I am making all things new.”
The hope these words created in them, the hope born of love had kept them alive amidst all those tough years. The great Roman Empire, which relied on power, is no more, whereas Christianity, which relied only on love and hope, has flourished for the past 20 centuries.

Early Christians were identified by the sharing of their wealth, as suggested in the Acts. (Acts 2: 44-45; 4: 32-35) This sharing was prompted by their sharing of the Bread which was a lovely commemoration of what Jesus did during the Last Supper. It is during this Supper, Jesus gave them the new commandment of love. We recall this in today’s Gospel:
John 13: 34-35
Jesus said to his disciples: “A new commandment I give to you, that you love one another: just as I have loved you, you also are to love one another. By this all people will know that you are my disciples, if you have love for one another.”

I am sure all of us have heard stories centred on the theme of love. Here is a story that caught my attention recently. In the lovely book, Chicken Soup for the Soul, there's a story about a man who came out of his office one Christmas morning and found a little boy from a nearby project looking with great admiration at the man’s new vehicle. The little boy asked, "Does this car belong to you?" And the man said, "Yes. In fact my brother gave it to me for Christmas. I've just gotten it."  With that, the little boy's eyes widened. He said, "You mean to say that somebody gave it to you? And you didn't have to pay anything for it?"  And the man said, "That's right.  My brother gave it to me as a gift." With that the little boy let out a long sigh and said, "Boy, I would really like..."  And the man fully expected the boy to say, "I would like to have a brother like that, who would give me such a beautiful car," but instead the man was amazed when the little boy said, "Wow! I would like to be that kind of brother.  I wish I could give that kind of car to my little brother."

The little boy really understood what Jesus said to his disciples – “Love one another just as I have loved you.” It is not a love that expects to be loved back… It is not “Love me just as I have loved you.” It is simply a love that is ready to give and give… not give and take. Such love will keep our hopes alive even in the most trying circumstances of our lives – as happened to Franky Carrillo and as happened in Sing Sing Prison.

Sing Sing prison

உயிர்ப்புக் காலம் 5ம் ஞாயிறு

அமெரிக்காவின் Los Angeles நகரில், இருபது ஆண்டுகளுக்குமுன், Franky Carrillo என்ற 16 வயது இளைஞர், கொலைகுற்றம் சுமத்தப்பட்டு, 30 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குத் தீர்ப்பிடப்பட்டார். 20 ஆண்டுகள் சிறையில் இருந்தபின், விடுதலைபெற்று, இயேசு சபையினர் நடத்தும் ஒரு கல்லூரியில் தற்போது அவர் சட்டப்படிப்பைத் தொடர்ந்தார். 1992ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலையில் Frankyக்கு எதிராகச் சான்று பகர்ந்தவர்கள், 2011ம் ஆண்டு தாங்கள் கூறியது பொய் என்று ஒத்துக்கொண்டதால், Franky விடுதலை செய்யப்பட்டார். தான் செய்யாத ஒரு கொலைக்காக, 20 ஆண்டுகள் சிறையில் இருந்த Franky, ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள், நமது ஞாயிறு சிந்தனையை ஆரம்பித்து வைக்கின்றன.
அவரிடம் பேட்டி எடுத்த நிருபர், "தவறாகத் தீர்ப்பிடப்பட்டு, 20 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது உங்களால் எப்படி நம்பிக்கை இழக்காமல் வாழ முடிந்தது?" என்று கேட்டார். அதற்கு, Franky: "சிறையில் இருந்த கைதிகள், அங்கு காவல் செய்த அதிகாரிகள் அனைவரும் நான் குற்றமற்றவன் என்பதை நம்பினர். அடிக்கடி அதை என்னிடம் கூறிவந்தனர். அதுதான் என்னை நம்பிக்கையுடன் வாழவைத்தது" என்று பதில் சொன்னார்.
சிறையிலிருந்த Frankyக்கு வெளியிலிருந்து உதவிகளும், ஆதரவும் வந்திருக்கும். சிறையில் அவரைச் சந்திக்கச் சென்ற பெற்றோரும், நண்பர்களும் அவருக்குக் கட்டாயம் நம்பிக்கை அளித்திருப்பர். ஆனால், அதைக் காட்டிலும், சிறைக்குள்ளிருந்து Franky பெற்ற நம்பிக்கையே அவருக்கு இன்னும் அதிக உதவியாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

சிறை என்ற நம்பிக்கையற்ற சூழலில் உருவான நம்பிக்கைக்கும், மாற்றங்களுக்கும் இதோ மற்றுமோர் எடுத்துக்காட்டு... கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டோரை கடுமையான காவலில் வைத்திருக்கும் Sing Sing சிறை நியூயார்க் நகரில் உள்ளது. (தற்போது இது, Ossining சிறை என்று அழைக்கப்படுகிறது.) 1921ம் ஆண்டு Lewis Lowes என்பவர் அச்சிறையின் கண்காணிப்பாளராக நியமனம் பெற்று அங்கு சென்றார். 20 ஆண்டுகள் கழித்து, அவர் பணிஒய்வு பெற்றபோது, அச்சிறையில் அற்புதமான பல மாற்றங்கள் உருவாகியிருந்தன. இந்த மாற்றங்களுக்குக் காரணம் தன் அன்பு மனைவி Catherine என்று கூறினார் Lewis.
Lewis இச்சிறைக்கு பணியேற்கச் சென்றபோது, அவர் மனைவி Catherineஇடம் அனைவரும் தந்த ஒரே அறிவுரை... எக்காரணம் கொண்டும் அவர் அந்தச் சிறைக்குள் காலடி எடுத்துவைக்கக் கூடாது என்பதே. ஆனால், அவரோ, அங்கு சென்ற ஒரு மாதத்திற்குள், தன் அழகான மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அச்சிறையில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டியைக் காணச்சென்றார். அவரைத் தடுக்க முயன்ற அனைவரிடமும் அவர் சொன்னது இதுதான்: என் கணவரும், நானும் இம்மனிதர்களைப் பாதுகாக்க வந்திருக்கிறோம். பதிலுக்கு, அவர்களும் எங்களைப் பாதுகாப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
விரைவில், Catherine கைதிகளிடம் தனியே பேச ஆரம்பித்தார். அவர்களில் ஒருவர் பார்வைத்திறன் அற்றவர் என்பதை அறிந்த Catherine, அவருக்காக Braille மொழியைக் கற்று, அதை அவருக்கும் சொல்லித்தந்து, Braille மொழியில் இருந்த பல புத்தகங்களை அவர் வாசிக்க உதவினார். மற்றொரு கைதி பேசவும், கேட்கவும் முடியாதவர் என்பதை அறிந்து, தான் சைகை மொழியைக் (Sign language) கற்றுக்கொண்டு, அவருடன் பல மணிநேரங்கள் பேசிக்கொண்டிருந்தார்.
Lewisம் Catherineம் Sing Sing சிறைக்குப் பொறுப்பேற்று 16 ஆண்டுகள் சென்ற நிலையில், 1937ம் ஆண்டு, Catherine ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். சிறைக்கு வெளியே, ஒரு மைல் தூரத்தில் இருந்த கண்காணிப்பாளர் இல்லத்தில் Catherine உடல் வைக்கப்பட்டிருந்தது. Catherine மரணத்தைப் பற்றி அறிந்த கைதிகள் அனைவரும், சிறையின் நுழைவாயிலுக்கருகே திரண்டு, மௌனமாகக் கண்ணீர் வடித்தபடி நின்றனர். வன்முறையில் இறுகிப்போன அவர்களுக்குள் இத்தகையதொரு மாற்றத்தைக் கண்ட உதவிக் கண்காணிப்பாளர் கதவுகளைத் திறந்துவிட்டார். அவர்கள் அனைவரும் Catherineக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டுத் திரும்பலாம் என்று கூறினார். அனைவரும் அமைதியாக Catherine வீட்டுக்குச் சென்று, மரியாதை செலுத்தினர். மாலையில் ஒருவர் தவறாமல் அனைவரும் மீண்டும் சிறைக்குத் திரும்பினர். ஒருவரும் தப்பித்துச் செல்லவில்லை. Catherine உடல், அந்தச் சிறைக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது.

மாற்ற முடியாதவர்கள் என்று சமுதாயம் அடைத்து வைத்திருந்த அந்தக் கைதிகள் மத்தியில் தங்களையே முற்றிலும் இணைத்துக்கொண்டு, அவர்களுக்குள் மாற்றத்தை உருவாக்கிய Lewisம் Catherineம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? குற்றம் ஏதும் செய்யாமல், 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட Frankyயின் மனதில் நம்பிக்கையை அணையாமல் காத்த மற்ற கைதிகள் நமக்கு என்ன சொல்லித்தர விழைகின்றனர்? நம்பிக்கையற்றதாகத் தெரியும் ஒரு சூழலில், அச்சூழலுக்கு உள்ளிருந்து பிறக்கும் நம்பிக்கையே, சக்தி வாய்ந்த, நீடித்த மாற்றங்களைக் கொணரும். இத்தகைய மாற்றங்களைச் சிந்திக்க இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

கிறிஸ்துவைப் பின்தொடர்ந்த சீடர்களும், அவர்கள் காட்டிய வழியைத் தொடர்ந்தவர்களும் துவக்கத்தில் சந்தித்தவை வன்முறையும், மரணமும் மட்டுமே. உரோமைய அரசு, கிறிஸ்தவர்களை வேட்டையாடியது. கிறிஸ்தவர்களை மிருகங்கள் கிழித்து உண்பதைக் காண ஆயிரக்கணக்கான உரோமையர்கள் கூடிவந்து இரசித்தனர். இத்தகையக் கொடுமைகள் மத்தியில், கிறிஸ்தவர்களை வாழவைத்தது, அவர்கள் மத்தியில் உருவாகியிருந்த நம்பிக்கை அன்பின் அடிப்படையில் பிறந்த நம்பிக்கை.
அதிகாரத்தை நம்பி வாழ்ந்த உரோமைய அரசு இன்று இல்லை; ஆனால், அன்பை மட்டுமே நம்பி வாழ்ந்த கிறிஸ்தவ சமுதாயம் இன்று உலகெங்கும் பரவியுள்ளது. இந்த நம்பிக்கைச் செய்தியை கிறிஸ்தவர்கள் பரிமாறிக்கொண்டது, இன்று நம்மிடையே புதிய ஏற்பாட்டு நூல்களாக உருவாகியுள்ளன.

புதிய ஏற்பாட்டின் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்தும், திருவெளிப்பாடு நூலிலிருந்தும் நாம் இன்று கேட்கும் சொற்கள், நம்பிக்கையை வளர்க்கும் சொற்கள். இன்றைய இரண்டாம் வாசகம் திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள ஓர் அழகிய பகுதி. நம்பிக்கையில் தோய்த்து எடுக்கப்பட்ட பகுதி.
உரோமைய அரசர் தொமிசியன் (Domitian) காலத்தில், எருசலேம் கோவில் அழிக்கப்பட்டது. கிறிஸ்தவ சமயத்தை ஏற்றவர்கள் பெருமளவில் வேட்டையாடப்பட்டனர். புனித யோவானை பத்மோஸ் (Patmos) தீவுக்கு நாடுகடத்தினார் தொமிசியன். அங்கு, கிறிஸ்தவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் வகையில் புனித யோவான் திருவெளிப்பாடு நூலை எழுதினார். கிறிஸ்தவக் குடும்பத்திற்கு நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் எழுதப்பட்ட இந்நூலில் காணப்படும் நம்பிக்கைச் சொற்கள் இதோ:

திருவெளிப்பாடு 21: 1-5
பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன... அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன்... பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்: அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது: முன்பு இருந்தவையெல்லாம் மறைந்துவிட்டன என்றது. அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன் என்று கூறினார்.

கிறிஸ்தவ நம்பிக்கையின் ஆணிவேர் அன்பு ஒன்றே. வேறு எதுவும் முதல் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கவில்லை. அப்பம் பகிர்தலிலும், தங்கள் உடைமைகளைப் பகிர்வதிலும் கிறிஸ்தவர்களின் அடையாளம் அமைந்திருந்தது என்பதை திருத்தூதர் பணிகள் நூல் சொல்கிறது. (திருத்தூதர் பணிகள் 2: 44-45; 4: 32-35) அப்பம் பகிரும் அந்த அற்புத நிகழ்வை முதன் முதலாக கிறிஸ்து ஆற்றியபோது, சீடர்களுக்கு அவர் விட்டுச்சென்ற ஒரு முக்கிய கட்டளையை இன்றைய நற்செய்தி நமக்கு நினைவுபடுத்துகிறது:
யோவான் நற்செய்தி : 13: 34-35
இயேசு தம் சீடர்களிடம், “‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்என்றார்.

அன்பை மையப்படுத்தி சொல்லப்படும் ஆயிரமாயிரம் கதைகளில், அண்மையில் என் கவனத்தைக் ஈர்த்த ஒரு கதை இது... 'Chicken Soup for the Soul' என்ற நூலில் காணப்படும் கதை இது...
உணவகத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விலையுயர்ந்த காரை, அவ்வழியே வந்த ஓர் ஏழைச் சிறுவன் வியப்புடன் பார்த்தபடியே நின்றான். காரின் உரிமையாளர் அங்கு வந்ததும், அவரிடம், "இந்தக் கார் உங்களுடையதா?" என்று கேட்டான். அதற்கு அவர், "ஆம், என் அண்ணன் இதை எனக்கு கிறிஸ்மஸ் பரிசாகத் தந்தார்" என்று சொன்னார். அச்சிறுவன் உடனே, "நீங்கள் எதுவும் சிறப்பாகச் செய்ததால் அவர் உங்களுக்கு இதைக் கொடுத்தாரா?" என்று கேட்டதற்கு, கார் உரிமையாளர், "இல்லையே... அவருக்கு என் மேல் மிகுந்த அன்பு உண்டு. எனவே எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்" என்று பதில் சொன்னார். சிறுவன் ஒரு பெருமூச்சுடன், "ம்... எனக்கும்..." என்று ஆரம்பித்தான். "ம்... எனக்கும் இப்படி ஓர் அண்ணன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!" என்று சிறுவன் சொல்லப்போகிறான் என்று கார் உரிமையாளர் நினைத்தார். ஆனால், அச்சிறுவனோ, "ம்... எனக்கும் உங்கள் அண்ணனைப் போல ஒரு மனம் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். நானும் என் தம்பிக்கு இதுபோன்ற ஒரு காரை அன்பளிப்பாகத் தர முடியுமே!" என்று சிறுவன் சொன்னான்.

அன்பைப் பெறுவதற்குப் பதில், அன்பை அளிப்பது, அன்பளிப்பால் அடுத்தவரை நிறைப்பது, எவ்வளவோ மேல். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் தலைசிறந்த வார்த்தைகளால் சொல்லிச் சென்றார்: நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் என்னிடம் அன்பு செலுத்துங்கள் என்று சொல்வதற்குப் பதில், உன்னதமான ஒரு சவாலை நமக்கு விட்டுச் சென்றார். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். இத்தகைய அன்பு வளரும் இடங்களில் நம்பிக்கையும் தானே செழித்து வளரும்.


20 April, 2016

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 18

Jesus in the synagogue of Nazareth

இவ்வாண்டு, சனவரி 12ம் தேதி, 'இறைவனின் பெயர் இரக்கம்' என்ற நூல் வெளியீட்டு விழாவில், இத்தாலிய நடிகரும், இயக்குனருமான ரொபெர்த்தோ பெநிஞ்னி (Roberto Benigni) அவர்கள் கலந்துகொண்டார். திருத்தந்தையின் நூலை அவர் வாசித்ததிலிருந்து, இரக்கத்தைப் பற்றி தான் அறிந்ததை அவர் இவ்வாறு விளக்கினார்:
"இரக்கம், சாய்வு நாற்காலியில் அமர்ந்து, புன்னகைக்கும் ஒரு புண்ணியம் அல்ல. அது, செயல்வடிவில் வெளியாகும் புண்ணியம். திருத்தந்தையைப் பொருத்தவரை, இரக்கம் என்பது, சர்க்கரையில் தோய்த்தெடுக்கப்பட்ட புண்ணியம் அல்ல. தேவைப்பட்டால், அது, மிகக் கசப்பான உண்மைகளை வெளிப்படுத்தும் புண்ணியம்" என்று பெநிஞ்னி அவர்கள் கூறினார்.
இரக்கத்தைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை சரியாகப் புரிந்துகொண்டால், அது, எளிதான, மிருதுவான உணர்வு அல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். இரக்கம், ஓரிடத்தில் தங்கியிராது; தேவைப்பட்டால், அது, எதிர்ப்புக்கள் எழும் சூழல்களுக்குச் சென்று, அங்கு உண்மையை நிலைநாட்டும் என்பது, திருத்தந்தை வழங்கும் கருத்துக்களில் வெளிப்படுகிறது. இந்தப் பின்னணியில் இன்று நாம் இயேசுவின் புதுமைகளில் நம் தேடலைத் தொடர்கிறோம்.

இயேசு ஆற்றிய புதுமைகள், அவரது இரக்கத்தை வெளிப்படுத்தும் அடையாளங்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், இயேசுவின் இரக்கம், வெறும் பரிதாபத்தால் எழும் உணர்வு அல்ல. அவரது இரக்கம், தேவையில் தவிப்பவர்களைத்  தொடும் அதே வேளையில், அந்தத் தேவைகளை, தவிப்பை, உருவாக்குபவர்களையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்பதை, இயேசுவின் புதுமைகள் நமக்குச் சொல்லித் தருகின்றன. இந்தக் கோணத்தில், நாம், இயேசு, ஒய்வு நாளில் ஆற்றிய புதுமைகளைச் சிந்திக்கவேண்டும்.
குணமாக்கும் புதுமைகளில் பலவற்றை, இயேசு ஒய்வு நாட்களில் நிகழ்த்தினார். லூக்கா நற்செய்தியில் பதிவுசெய்யப்பட்டுள்ள புதுமைகளில் மூன்றில் ஒரு பகுதி, ஓய்வு நாட்களில் நிகழ்ந்தவை. இயேசு ஆற்றியதாக லூக்கா கூறும் முதல் புதுமையே, ஒய்வு நாளில், தொழுகைக் கூடத்தில் நடந்தது. இந்தப் புதுமையைச் சிந்திப்பதற்கு முன், இப்புதுமை நிகழ்ந்த சூழலை நாம் சிந்திப்பது பயனளிக்கும்.

இந்தப் புதுமை, லூக்கா நற்செய்தி, 4ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இதே பிரிவில் கூறப்பட்டுள்ள மற்ற நிகழ்வுகள், இப்புதுமையையும், இயேசுவையும் இன்னும்  புரிந்துகொள்ள உதவும். லூக்கா நற்செய்தி, 4ம் பிரிவின் ஆரம்பத்தில், இயேசு அலகையால் சோதிக்கப்பட்ட நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன (லூக். 4:1-13). இந்தச் சோதனைகளின் இறுதியில், அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது. (லூக். 4:13). என்று, நற்செய்தியாளர் லூக்கா கூறும் வார்த்தைகள், ஓர் எச்சரிக்கை போல் ஒலிக்கின்றன. 'ஏற்ற காலம் வரும்வரை' என்ற சொற்றொடரை, பல விவிலிய விரிவுரையாளர்கள், இயேசுவின் பாடுகளோடு இணைத்துச் சிந்தித்துள்ளனர். ஆனால், அலகை அவ்வளவு நேரம் காத்திருக்கவில்லை என்பதை லூக்கா நற்செய்தியின் 4ம் பிரிவே நமக்கு உணர்த்துகிறது.
சோதனைகளை எதிர்கொண்ட இயேசு, அடுத்ததாக, தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு செல்கிறார். அலகை அவரைத் தொடர்கிறது. நாசரேத்து தொழுகைக் கூடத்தில், தன் பணிவாழ்வைப் பற்றிக் கூறுகிறார், இயேசு. தன் பணிவாழ்வின் முக்கிய இலக்கு, சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் வறியோர், சிறைப்பட்டோர், நோயுற்றோர், மற்றும் ஒடுக்கப்பட்டோர் என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசு தேர்ந்துள்ள இம்மக்கள், இறைவனாலும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை சுட்டிக்காட்ட, இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து ஒரு பகுதியை இயேசு வாசிக்கிறார்.
இயேசு வாசித்த வார்த்தைகள், இறைவாக்கினர் கூறிய வார்த்தைகளே என்றாலும், அவற்றை நாசரேத்து மக்கள் மறந்திருக்க வேண்டும். அவர்களை அவ்விதம் மறக்கச் செய்யும் வண்ணம், மதத் தலைவர்கள், ஏழைகளை, சிறைப்பட்டோரை, நோயோற்றோரை, இறைவனின் தண்டனை பெற்றவர்கள் என்று அம்மக்களுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.
சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டவர்களை இயேசு மீண்டும் மையத்திற்குக் கொண்டுவர முயன்றதால், தொழுகைக் கூடத்தில் எதிர்ப்பு உருவாகிறது. பொதுவாக, தொழுகைக் கூடத்தில், இறைவனைத் தேடி, அவர் தரும் அமைதியை, அருளை, தேடிச் செல்வோம். அங்கு, அந்த அமைதியைக் குலைக்க யாராவது முயன்றால், அவரை, அவ்விடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, மீண்டும் தங்கள் வழிபாட்டைத் தொடரவேண்டும்.
நாசரேத்திலோ, இயேசுவை, தொழுகைக் கூடத்திலிருந்து மட்டுமல்ல, இவ்வுலகிலிருந்தே வெளியேற்றும் வண்ணம் வெறி கொண்டனர் மக்கள். அந்தக் கொலை வெறியை, நற்செய்தியாளர் லூக்கா இவ்விதம் விவரிக்கிறார்: தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். (லூக்கா 4:28-29).

தொழுகைக் கூடங்களில் இத்தகைய வெறி உருவாகக்கூடுமா? உருவாகியுள்ளது என்பதை நாம் மிகுந்த வேதனையோடு உணர்ந்து வருகிறோம். அண்மைய ஆண்டுகளில், தொழுகைக் கூடங்களும், ஆலயங்களும் கட்டுக்கடங்காத வெறிக்கு இலக்காகி வருவதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆலயங்களுக்குள்ளும், ஆலயங்களுக்கு வெளியிலும் உருவாகும் இத்தகைய வெறியைத் தூண்டிவிடுவது, தீய சக்திகளே என்பதை அனைவரும் அறிவோம். இந்தத் தீயச் சக்திகள், இறைவனின் பெயரால், மதத்தின் பெயரால் செயலாற்றுவது, நம் வேதனையைக் கூட்டியுள்ளது. இயேசுவை சோதனைகளுக்கு உள்ளாக்கிய தீயோன், அலகை, சாத்தான், அவரைத் தொடர்ந்து, நாசரேத்துக்கு சென்றது என்பதையே, இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

தன் சொந்த ஊரில், அதுவும், தொழுகைக் கூடத்தில் எதிர்ப்பையும், வெறியையும் உணர்ந்த இயேசு, 'நமக்கேன் வம்பு' என்ற எண்ணத்தில், 'இனி தொழுகைக் கூடங்களில் நுழைய வேண்டாம்' என்று தீர்மானித்திருந்தால், மீட்பளிக்கும் நற்செய்தி தொடர்ந்திருக்காது. இயேசு, தான் சென்ற அடுத்த ஊரில், மீண்டும் தொழுகைக் கூடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதை, லூக்கா நற்செய்தியின் 4ம் பிரிவு நமக்கு உணர்த்துகிறது. கப்பர்நாகூம் ஊரில், தொழுகைக் கூடத்தில் இயேசு தன் போதனைகளை வார்த்தைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், செயல் வடிவிலும் வெளிப்படுத்தினார். இயேசு ஆற்றிய முதல் புதுமை என்று, லூக்கா நற்செய்தியில் நாம் காண்பது இதுதான்:
லூக்கா 4: 31-37
பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நாகும் ஊருக்குச் சென்று, ஓய்வு நாள்களில் மக்களுக்குக் கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் அதிகாரத்தோடு கற்பித்தார். தொழுகைக் கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், "ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்" என்று உரத்த குரலில் கத்தியது. "வாயை மூடு, இவரை விட்டு வெளியே போ" என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது பேய் பிடித்தவரை அவர்கள் நடுவே விழச்செய்து, அவருக்கு ஒரு தீங்கும் இழைக்காமல் பேய் அவரைவிட்டு வெளியேறிற்று. எல்லாரும் திகைப்படைந்து, "எப்படிப் பேசுகிறார், பாருங்கள்! அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக் கட்டளையிடுகிறார்; அவையும் போய்விடுகின்றனவே!" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டனர். அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெங்கும் பரவியது.

ஓய்வு நாளை மீறுவது பெரும் பிரச்சனை. அதையும் இறைவன் சந்நிதியில், தொழுகைக் கூடத்தில் மீறுவது, அதைவிட பெரும் பிரச்சனை. இயேசு ஏன் இப்படி செய்தார்? அவர் பிரச்சனைகளைத் தேடிச் சென்றாரா? மேலோட்டமாகப் பார்த்தால், அப்படி தோன்றலாம். ஆனால் இன்னும் ஆழமாய்த் தேடினால், இயேசு, இவற்றை ஒரு தீர்மானத்தோடு செய்வது விளங்கும். தன் புதுமைகளால் தனியொருவர் மட்டும் பயன் பெறவேண்டும் என இயேசு நினைத்திருந்தால், ஊருக்கு வெளியே, தனியொரு இடத்தில் புதுமைகளைச் செய்திருக்கலாம். அல்லது, தேவையுள்ளவர் வீடு தேடிச்சென்று, புதுமைகள் செய்திருக்கலாம். இத்தகையப் புதுமைகளும் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், ஓய்வு நாளன்று, தொழுகைக் கூடத்தில் ஆற்றிய புதுமைகளில், இயேசுவின் எண்ணங்கள் வேறு வகையில் இருந்ததால், பிரச்சனைகளுக்கு மத்தியில், கேள்விகளுக்கு மத்தியில் புதுமைகளை ஆற்றுகிறார். யூதர்களுக்கும், யூத மதத்தலைவர்களுக்கும் ஒய்வு நாள் குறித்த பாடங்களைச் சொல்லித்தருவது, இயேசுவின் தலையாயக் குறிக்கோளாகத் தெரிகிறது. நாமும் இந்தப் பாடங்களைக் கற்றுக்கொள்வது நல்லதுதானே.

தனிப்பட்டோரின் உடல் நோயை மட்டும் குணமாக்குவது, இயேசுவின் நோக்கம் அல்ல, மாறாக, மனதிலும், சமுதாயத்திலும் காணப்படும் நோய்களை குணமாக்குவதும் இயேசுவின் நோக்கம். இயேசுவின் இரக்கம் வெறும் பரிதாபத்தால் எழும் பதிலிறுப்பு அல்ல. ஒய்வு நாளையும், தொழுகைக் கூடத்தையும் இணைத்து இயேசு ஆற்றிய முதல் புதுமை, அவரைக் குறித்து நல்ல எண்ணங்களை மக்கள் மனதில் பதித்தன என்று இப்புதுமையின் இறுதி வரிகள் கூறுகின்றன. ஆனால், லூக்கா நற்செய்தி, 6ம் பிரிவில் மீண்டும் இயேசு ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்தில் ஆற்றும் மற்றொரு புதுமை மாறுபட்ட பதிலிறுப்பை மக்கள் மத்தியில் உருவாக்குகிறது. இந்தப் புதுமையை நம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.


16 April, 2016

Tenderness in Leadership மென்மையான தலைமைத்துவம்

 The Good Shepherd



4th Sunday of Easter – The Good Shepherd Sunday

When Emperor Alexander the Great was crossing the Makran Desert, on his way to Persia, his army ran out of water. The soldiers were dying of thirst as they advanced under the burning sun. A couple of Alexander's lieutenants managed to collect some water from a passing caravan and brought it in a helmet. Alexander asked, “Is there enough for both me and my men?” “Only you, sir,” they replied. Alexander then lifted up the helmet as the soldiers watched. Instead of drinking, he tipped it over and poured the water on the ground. The men let up a great shout of admiration. They knew their general would not allow them to suffer anything he was unwilling to suffer himself.

Sensitivity of Alexander and his desire to be identified with his soldiers are strongly portrayed in this episode. Sensitivity, tenderness and identifying with people are not usually considered the most important aspects of a worldly leader. Unfortunately, these aspects are not considered the most important even for religious leaders in the 21st century. The model of leadership set by the worldly leaders has, unfortunately, become a yardstick by which Church leadership is also measured. We talk of how ‘efficient’ our Church or Religious leaders are. We are also sadly aware that quite many of our leaders – like Bishops, religious Superiors – are given training in ‘managerial skills’ by management schools. In our effort to project ‘efficient leadership’, the original ‘servant leadership’ of the Gospel, has become a distant memory. This Sunday gives us an opportunity to refresh our memory on ‘servant leadership’ given to us by Christ – the Good Shepherd. The Fourth Sunday of Easter is called the Good Shepherd Sunday. This is also The World Day of Prayer for Vocations. Hence, we can see this Sunday as an invitation to reflect on leadership in the Church and pray for the present and future leaders of the Church.

What are the primary qualities expected of Church / Religious Leader? Instead of browsing through erudite articles from books, let us try to learn from an open book, living in Vatican. Yes… I am talking of Pope Francis, who has been, for the past three years, giving a fresh outlook on how to be a leader and how to look at leadership in the Church. It is interesting to see that his leadership style seems to have rubbed on to the world leaders as well – at least to some extent, the latest one being one of the Presidential candidates of the U.S.

Last month on Maundy Thursday, (March 24) the WIN/Gallup International, the world’s leading association in market research and polling, had published a global opinion poll conducted in 64 countries across the globe about the image of Pope Francis. Jean-Marc Leger, President of WIN/Gallup International said “Pope Francis is a leader who transcends his own religion. Our study shows that an ample majority of citizens of the world, of different religious affiliations and across regions, have a favourable image of the Pope”. This favourable image, in my opinion, comes from his humility and tenderness.

It was a ‘graceful coincidence’ that Pope Francis assumed leadership of the Church on March 19th,  the Feast of St Joseph who was the humble, unassuming head of the Holy Family. During the inaugural Mass, Pope Francis emphasized on the theme of sensitivity and tenderness in his homily. What he preached, he had practiced during his interactions with the people gathered in St Peter’s Square. Before the Inaugural Mass, when he took a ride in the Square, he was keen on reaching out to the people, especially to the sick. He got down from his vehicle to embrace and kiss a differently-abled person. During the homily he spoke of the aspect of sensitivity very clearly. Here is an excerpt from his homily:
Please, I would like to ask all those who have positions of responsibility in economic, political and social life, and all men and women of goodwill: let us be “protectors” of creation, protectors of God’s plan inscribed in nature, protectors of one another and of the environment. Let us not allow omens of destruction and death to accompany the advance of this world! But to be “protectors”, we also have to keep watch over ourselves! Let us not forget that hatred, envy and pride defile our lives! Being protectors, then, also means keeping watch over our emotions, over our hearts, because they are the seat of good and evil intentions: intentions that build up and tear down! We must not be afraid of goodness or even tenderness!
Here I would add one more thing: caring, protecting, demands goodness, it calls for a certain tenderness. In the Gospels, Saint Joseph appears as a strong and courageous man, a working man, yet in his heart we see great tenderness, which is not the virtue of the weak but rather a sign of strength of spirit and a capacity for concern, for compassion, for genuine openness to others, for love. We must not be afraid of goodness, of tenderness!

‘The Name of God is Mercy’ is the title of a new book released in January 2016. This book contains the interview given by Pope Francis to Andrea Tornielli. In this book, Pope Francis talks about his predecessor, Pope John Paul I. Cardinal Albino Luciani, who became Pope John Paul I, although was in office only for 33 days, impressed the world by his simplicity and tenderness. Here is what Pope Francis says about Pope Luciani: “There is the homily when Albino Luciani said he had been chosen because the Lord preferred that certain things not be engraved in bronze or marble but in the dust, so that if the writing had remained, it would have been clear that the merit was all and only God’s. He, the bishop and future Pope John Paul I, called himself ‘dust’.”

Identifying with the people is another key feature of any leader, especially of the leaders of the Church. This has been the special feature of our Holy Father in the past three years. We are aware that he has almost always used the word ‘Bishop of Rome’ rather than the word ‘Pope’ to refer to himself. I think this is a conscientious decision he has made, namely, to identify himself as the pastor of a particular flock rather than as the head of a nameless entity called the universal church. From the moment he appeared on the balcony of St Peter’s Basilica on the night he was elected, to this day, he has made it very clear that he was walking along with the people. Quite often he has mentioned that he was a sinner like any of us, requiring our prayers.
After speaking of Pope John Paul I, Pope Francis goes on to say: “I have to say that when I speak of this, (namely, the idea of ‘dust’) I always think of what Peter told Jesus on the Sunday of his resurrection, when he met him on his own, a meeting hinted at in the Gospel of Luke. What might Peter have said to the Messiah upon his resurrection from the tomb? Might he have said that he felt like a sinner? He must have thought of his betrayal, of what had happened a few days earlier when he pretended three times not to recognise Jesus in the courtyard of the High Priest’s house. He must have thought of his bitter and public tears… If Peter did all of that, if the gospels describe his sin and denials to us, and if despite all this Jesus said [to him], ‘tend my sheep’ (John 21), I don’t think we should be surprised if his successors describe themselves as sinners. It is nothing new.”
It is very clear that Pope Francis goes out of his way to take care of the lost and wounded sheep. His trip to Greek island of Lesbos this Saturday (April 16) is one more occasion to help us understand the type of leadership he has brought into Vatican!

We pray God that the Holy Spirit guides Pope Francis, and all of us to become more authentic leaders. Authentic leadership comes from our internal conviction that we are primarily called to be caring and loving shepherds filled with sensitivity, tenderness and the desire to identify ourselves with the people whom we serve. If only the Leaders put into practice the most important qualities lived by Jesus, the Good Shepherd, the youth – the future leaders – would easily recognize God’s call in their lives.
Pope Francis arrives at the camp for refugees in Lesbos island (Picture: EPA)

உயிர்ப்புக் காலம் 4ம் ஞாயிறு
மாவீரன் அலெக்சாண்டர் ஒருமுறை தன் படையுடன் மக்ரான் என்ற பாலைநிலத்தைக் கடக்கவேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலும், எரிக்கும் மணலும் வீரர்களின் உயிரைக் குடிக்கும் தீயாய் மாறின. அலெக்சாண்டரும் தாகத்தால் துடித்தார். மன்னரின் தாகத்தை அறிந்த இரு தளபதிகள் பல இடங்களில் அலைந்து, அவ்வழியே சென்ற பயணிகளிடம் கெஞ்சி மன்றாடி, தங்கள் தலைக்கவசத்தில் சிறிது தண்ணீர் கொண்டுவந்தனர். அத்தளபதிகளின் விசுவாசத்தை அலெக்சாண்டர் பாராட்டினார். பின்னர், அவர்களிடம், "வீரர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழி உண்டா?" என்று கேட்க, அவர்கள், "இல்லை மன்னா. உங்கள் ஒருவருக்கு மட்டுமே தண்ணீர் கிடைத்தது" என்று சொன்னார்கள். அலெக்சாண்டர் கவசத்தைக் கையில் எடுத்தார். வீரர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர். வீரர்களுக்குத் தண்ணீர் இல்லாதபோது, தனக்கும் தண்ணீர் தேவையில்லை என்று சொல்லியபடி, கவசத்தில் இருந்த நீரை மணலில் ஊற்றினார், அலெக்சாண்டர். துன்பம் என்று வந்தால், தங்களுடன் தலைவனும் சேர்ந்து துன்புறுவார் என்பதை உணர்ந்த வீரர்கள், தங்கள் தலைவனைப் பெருமையுடன் எண்ணி ஆர்ப்பரித்தனர்.
ஒரு தலைவனுக்குத் தேவையான பண்புகள் எவை என்ற கேள்வி எழுந்தால், நிரவாகத் திறமை, அறிவுக் கூர்மை, வீரம் என்ற பண்புகளையே முதலில் எண்ணிப் பார்ப்போம். இளகிய, மென்மையான மனம், மக்களுடன் தன்னையே ஒருவராக இணைக்கும் விருப்பம் போன்ற பண்புகளை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. மாவீரன் அலெக்சாண்டரைப்பற்றி நாம் பகிர்ந்த இந்த நிகழ்வில், அவரது இளகிய, மென்மையான மனமும், வீரர்களுடன் தன்னையே ஒருவராக இணைத்துக்கொள்ளும் தியாகமும் தெளிவாகின்றன. உலகத் தலைவர்களிடம் இத்தகையப் பண்புகளை எதிர்பார்ப்பது செயற்கையானது, நடைமுறைக்கு ஒத்துவராது என்பது நமது உறுதியான எண்ணம். அரசியல் மற்றும் வர்த்தகத்தலைவர்கள், தலைமைத்துவத்தைப்பற்றி உருவாக்கித் தந்துள்ள தவறான இலக்கணம், இவ்விதம் நம்மை எண்ணத் தூண்டுகிறது.
உலகத் தலைவர்களிடம் காணப்படும் நிர்வாகத்திறமை, அறிவுக்கூர்மை போன்ற பண்புகளையே ஆன்மீகத் தலைவர்களிடம், மதத் தலைவர்களிடம், திருஅவைத் தலைவர்களிடம் நாம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டோம். தலைவர்களுக்குரிய பண்புகள் என்று மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் பாடங்களை ஆன்மீகத் தலைவர்களும் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற போக்கும் உருவாகி வருவதைக் காணமுடிகிறது. ஆபத்தான இந்தப் போக்கிற்கு ஒரு மாற்றாக, ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் எவ்வகைப் பண்புகளை எதிர்பார்க்கவேண்டும் என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.
உயிர்ப்புக் காலத்தின் 4ம் ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஞாயிறு, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள் என்றும் அழைக்கப்படுகிறது. நல்லாயன் ஞாயிறு, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாள், என்ற இரு எண்ணங்களையும் இணைக்கும்போது, திருஅவையின் இன்றையத் தலைவர்கள், நாளையத் தலைவர்கள் ஆகியோரைப்பற்றி சிந்தித்து, செபிக்க அழகியதொரு தருணத்தை இஞ்ஞாயிறு உருவாக்கித் தருகிறது.
திருஅவையின் இன்றையத் தலைவர்களிடமும், நாளையத் தலைவர்களிடமும் நாம் எதிர்பார்க்கும், அல்லது எதிர்பார்க்க வேண்டிய பண்புகள் எவை என்பதை, கடந்த மூன்றாண்டுகளாக, தன் சொல்லாலும், செயலாலும், திருஅவைக்கு மட்டுமல்ல, உலகத் தலைவர்களுக்கும் பல வழிகளில் உணர்த்தி வருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் அனைத்து அரசியல் தலைவர்களைவிட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மக்களிடையே அதிக நன்மதிப்பை பெற்றுள்ளார் என்று, கடந்த மாதம், புனித வியாழனன்று வெளியான ஒரு கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. WIN/Gallup International என்ற ஒரு நிறுவனம், 64 நாடுகளில், 1000க்கும் அதிகமான மக்களிடையே மேற்கொண்ட ஒரு கருத்துக்கணிப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதம் என்ற எல்லையைத் தாண்டி, அனைத்து மதத்தினரிடையிலும், மத நம்பிக்கையற்றவர் நடுவிலும் நன்மதிப்பு பெற்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மென்மையும், பணிவும் நிறைந்த அவரது பண்பே, உலகத் தலைவர்கள் அனைவரையும் விட, மக்கள் மனங்களில் உயர்ந்ததோர் இடத்தில் அவரை வைத்துள்ளது என்பது, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஓர் உண்மை.
மூன்றாண்டுகளுக்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் தலைவராகப் பணியேற்ற நாளன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் பல்லாயிரம் மக்களும், பல உலகத் தலைவர்களும் இந்தப் பணியேற்புத் திருப்பலியில் கலந்துகொள்ள வந்திருந்தனர். திருப்பலிக்கு முன், திறந்த ஒரு வாகனத்தில் அவர் வளாகத்தைச் சுற்றி வந்தபோது, அங்கிருந்த ஒவ்வொருவரையும் கரம்நீட்டி அவரால் தொடமுடியவில்லை என்றாலும், அவரது செய்கைகளாலும், முகத்தில் வெளிப்படுத்திய உணர்வுகளாலும், அம்மக்களின் மனங்களைத் தொட்டார் என்பது தெளிவானது. ஓரிடத்தில், வாகனத்தை நிறுத்தச்சொல்லி, இறங்கிச்சென்று, அங்கிருந்த ஒரு மாற்றுத் திறனாளியை அரவணைத்து, அவர் நெற்றியில் திருத்தந்தை முத்தமிட்டது, மக்கள் மத்தியில் ஆழ்ந்ததோர் தாக்கத்தை உருவாக்கியது.
அவர் மக்களைச் சந்தித்த அத்தனை தருணங்களிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு நேரம் ஒதுக்கி, அவர்களைத் தொட்டு ஆசீர்வதிப்பதை, தன் சந்திப்பின் ஒரு முக்கிய செயலாகவே ஆற்றிவருகிறார். மூன்றாண்டுகளுக்கு முன், உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் வலம் வந்தபோது, மாற்றுத் திறனாளியான Dominic Gondreau என்ற 8 வயது சிறுவனை அணைத்து முத்தமிட்டது, பல கோடி மக்களின் மனதில் பதிந்த ஓர் அழகிய காட்சியாக அமைந்தது. "கடவுள் எங்கள் குடும்பத்தை அணைத்து அளித்த ஒரு முத்தமாக இதைக் கருதுகிறோம்" என்று Dominicகின் தாய் Christiana கூறியுள்ளார்.
2013ம் ஆண்டு, அக்டோபர் மாதம், வத்திக்கானில் 'அகில உலகக் குடும்ப நாள்' கொண்டாடப்பட்டபோது, மனநல வளர்ச்சி குன்றிய ஒரு சிறுவன், புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தையுடன் செலவிட்ட மணித்துளிகள் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன என்பதை அறிவோம். கொலம்பியா நாட்டில் பிறந்த கார்லோஸ், என்ற இச்சிறுவன், பெற்றோரை இழந்தவன். உரோம் நகரில் ஓர் இத்தாலியக் குடும்பத்தில் வளர்ந்து வருபவன். அச்சிறுவனுடைய வளர்ப்புத்தாய் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "திருத்தந்தையிடமிருந்து என் மகன் பெற்ற அசீர், அவனுக்கு மட்டும் கிடைத்த ஆசீர் அல்ல. ஆதரவு ஏதுமின்றி உலகில் விடப்படும் அனைத்து குழந்தைகளுக்கும் திருத்தந்தையின் ஆசீர் அன்று கிடைத்தது என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்" என்று கூறினார்.
தன் இளகிய, மென்மையான மனதையும், மக்களோடு தன்னை இணைத்துக்கொள்ள விழையும் ஆவலையும் செயல்வழி வெளிப்படுத்தும் திருத்தந்தை, தலைமைப் பணியேற்றத் திருப்பலியில் வழங்கிய மறையுரையில், தலைமைப் பணியின் இலக்கணத்தை வரையறுத்தார். தலைமைத்துவம், ஒரு பணியே அன்றி, பதவியோ, அதிகாரமோ அல்ல என்பதைத் தெளிவாக்கினார். தலைவர், இளகிய, மென்மையான மனம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்தத் தயங்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இதோ, திருத்தந்தை ஆற்றிய மறையுரையிலிருந்து ஒரு சில எண்ணங்கள்: நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் அஞ்சக்கூடாது. பாதுகாவல் என்ற பணிக்கு, நன்மைத்தனமும், மென்மையும் கொண்டிருப்பது அவசியம். மென்மையான மனது கொண்டிருப்பதை வலுவிழந்த நிலையாகக் காண்பது தவறு, மென்மை உணர்வுகள் கொண்டோரிடமே, கனிவு, கருணை, பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்ற நற்பண்புகள் காணப்படும். எனவே, நன்மைத்தனத்தையும், மென்மையான உணர்வுகளையும் கண்டு நாம் அஞ்சக்கூடாது. அன்புடன் பணிபுரிபவர்களால் மட்டுமே அகிலத்தைப் பாதுகாக்க முடியும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தியக் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, இவ்வாண்டு சனவரி மாதம் ஒரு நூலாக வெளியிடப்பட்டது. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் வெளியான இந்நூலுக்கு, 'இறைவனின் பெயர் இரக்கம்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு முந்தையத் திருத்தந்தையர்களில் ஒருவரான, முதலாம் ஜான் பால் அவர்களைப் பற்றி கூறும் ஒரு கருத்து, திருஅவையின் தலைவர்கள், மனதில் பதிக்கவேண்டிய கருத்தாகத் தெரிகிறது. திருஅவையின் தலைமைப் பொறுப்பிற்கு, தனக்கு எவ்வகையிலும் தகுதியில்லை என்பதை, ஆல்பினோ லூச்சியானி என்றழைக்கப்படும் திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள், ஓர் அழகிய உருவகத்துடன், ஒரு மறையுரையில் கூறியதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்நூலில் நினைவு கூர்ந்துள்ளார்: "ஆல்பினோ லூச்சியானி அவர்கள் வழங்கிய ஒரு மறையுரையில் தன்னைப் பற்றி பேசியது, எனக்கு நினைவிருக்கிறது. ஒரு சில விடயங்களை, செப்புத் தகட்டிலோ, பளிங்குக் கல்லிலோ எழுதுவதற்குப் பதில், தூசியில் எழுதுவதை, இறைவன் விரும்புகிறார். அவ்விதம் எழுதுவது நிலைத்து நின்றால், அது, தூசியின் சக்தியால் அல்ல, மாறாக, இறைவனின் சக்தியால் என்பது மிகத் தெளிவாகப் புரியும். உரோமையின் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் ஜான்பால் அவர்கள், தன்னை 'தூசி'க்கு ஒப்புமைப்படுத்தியுள்ளார்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
திருஅவையின் தலைவராக 33 நாட்களே பணியாற்றிய திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள், ஓர் உன்னத மனிதராக, பணிவும், பண்பும் நிறைந்த தலைவராக மக்களால் போற்றப்படுபவர். நல்லதொரு மேய்ப்பராக விளங்கிய அவரைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள வார்த்தைகளை, நல்லாயன் ஞாயிறன்று மீண்டும் நினைவில் பதிப்பது, நமக்கு நல்லது.
நல்லாயன் ஞாயிறன்று, நல்ல ஆயராக தன் வாழ்வாலும், மரணத்தாலும் சான்று பகர்ந்த ஓர் அருள் பணியாளரின் எடுத்துக்காட்டுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம். மூன்று ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா, அமெரிக்க இராணுவத்தில் மிக உயரிய விருது ஒன்றை, மறைந்த அருள் பணியாளர் Emil Kapaun அவர்களுக்கு வழங்கினார். வீரத்துடன் போரிட்டு, எதிரிகளை வீழ்த்தி, வெற்றிபெறும் வீரர்களுக்கு பொதுவாக வழங்கப்படும் விருது இது. ஆனால், தன் இராணுவப் பணியில் ஒரு நாளும் ஆயுதங்களைப் பயன்படுத்தாத அருள் பணியாளர் Emil Kapaun, கோரிய போரில், வீரர்கள் மத்தியில் ஆற்றிய ஆன்மீகப் பணிகளுக்காக இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருது வழங்கும் நிகழ்வில், அரசுத்தலைவர் ஒபாமா தன் உரையில் கூறியது இதுதான்: "துப்பாக்கியால் ஒரு முறை கூட சுடாத ஓர் அமெரிக்க வீரரை இன்று நாம் கௌரவப்படுத்துகிறோம். அருள் பணியாளர் Emil Kapaun இராணுவத்தில் பணியாற்றியபோது பயன்படுத்திய ஒரே ஆயுதம் அன்பு - தன் நண்பருக்காக உயிரைத் தந்த அன்பு" என்று கூறினார் ஒபாமா.
ஏப்ரல், மே மாதங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும் நேரம். பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசு விடுக்கும் இறை அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை இறைவன் வழிநடத்த வேண்டுமென்று மன்றாடுவோம்.


Pope Francis washing the feet of refugees on Maundy Thursday