28 March, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 13

Not by Accident – Isabel Fleece

16 வயதுநிறைந்த Ned Fleece என்ற இளையவர், முதன்முறையாக ஓட்டுநர் உரிமத்தைப் பெற்ற சில நாட்களில், தன் பெற்றோருடன், ஒரு சிறு தீவுக்கு விடுமுறையைக் கழிக்கச் சென்றார். உரிமம் பெற்ற மகிழ்ச்சியில், சின்னச் சின்ன வேலைகளுக்கும் அவர் காரில் செல்வதை விரும்பினார். அவர்கள் விடுமுறையைக் கழித்த தீவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததால், பெற்றோரும் அவரது ஆசையைத் தடுக்கவில்லை.
ஒருநாள், இளையவர் Nedம், உறவுக்காரப் பெண் Katherineம் அருகிலிருந்த அவர்கள் வீட்டில் ஏதோ ஒன்றை எடுத்து வர, காரில் சென்றனர். அரைமணி நேரத்தில் இருவரும் திரும்பிவிடுவர் என்று எதிர்பார்த்த Nedன் பெற்றோருக்கு, ஒரு மணி நேரம் சென்று, அதிர்ச்சிதரும் செய்தியொன்று வந்து சேர்ந்தது. அவர்கள் மகன் ஒட்டிச்சென்ற கார், விபத்திற்குள்ளானது என்ற செய்தி அது.
செய்தியைக் கேட்டதும், Nedன் தாய், இசபெல் (Isabel Fleece) அவர்கள், கணவரோடும், மற்ற பிள்ளைகளோடும் சேர்ந்து செபித்தார்: "இறைவா, இந்தச் செய்தியை, எவ்வளவுக்கெவ்வளவு நன்மைதரும் செய்தியாக மாற்றமுடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு அதை மாற்றியருளும்" என்று அவர்கள் செபித்தபின், விபத்து நடந்த இடத்திற்குச் சென்றனர். இளையவர், Ned விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததையும். கூடச்சென்ற Katherine சிறு காயங்களுடன் தப்பித்ததையும் அறிந்தனர். வேறு யாருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி, விபத்து நிகழ்ந்திருந்தது.
விபத்து நிகழ்ந்து 4 ஆண்டுகள் கழிந்தபின், இசபெல் அவர்கள், சிறு நூல் ஒன்றை வெளியிட்டார். அந்நூலின் தலைப்பு, "Not by Accident". இந்நூலின் தலைப்பை, தமிழில் சொல்லவேண்டுமெனில், "விபத்தினால் அல்ல" என்று சொல்லலாம், அல்லது, "எதேச்சையாக அல்ல" என்றும் சொல்லலாம். தன் மகனின் விபத்து, சந்தர்ப்ப வசமாக, எதேச்சையாக நிகழ்ந்ததல்ல, மாறாக, இறைவனின் விளக்கமுடியாத ஒரு திட்டத்தால் நிகழ்ந்தது என்பதை, இசபெல் அவர்கள், இந்நூலில் விளக்க முயற்சி செய்துள்ளார். "What I learned from my son's untimely death" - அதாவது, "என் மகனின் அகால மரணத்திலிருந்து நான் கற்றுக்கொண்டவை" என்பது, இந்நூலின் உபதலைப்பு. சற்றும் எதிர்பாராத நேரத்தில், சூழலில் நிகழ்ந்த இவ்விபத்தில் மகனைப் பறிகொடுத்த தாய் எழுதிய இந்நூலின் அறிமுகப் பிரிவு, யோபு நூலில் நாம் மேற்கொண்டுவரும் விவிலியத் தேடலை இன்று துவக்கி வைக்கிறது.

1964ம் ஆண்டு வெளியிடப்பட்டு, பல மறுபதிப்புக்களைக் கண்ட இந்நூலின் அறிமுகப் பிரிவில், இசபெல் அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள், நம் சிந்தனையைத் தூண்டுகின்றன: "என் கடைசி மகன் Ned, 1960ம் ஆண்டு, ஒரு கார் விபத்தின் வழியே, இறைவன் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அந்நாள் முதல், இறைவன், எவ்விதம் எங்கள் குடும்பத்தை தன் அரவணைப்பில் வைத்து, அமைதி வழங்கினார் என்பதை, மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும் என்ற தூண்டுதல் எனக்குள் எழுந்தவண்ணம் இருந்தது" என்று, இவ்வறிமுகப்பகுதியைத் துவக்கும் இசபெல் அவர்கள், தொடர்ந்து, அந்த விபத்தைக் குறித்து சுருக்கமாக விவரிக்கிறார். பின்னர், அவர் கூறும் வார்த்தைகள் மிக ஆழமானவை:
"விபத்து நிகழ்ந்ததும், எனக்குள் ஏராளமான கேள்விகள் எழுந்தன. 'இது எப்படி நிகழ்ந்தது?' 'எங்கே நிகழ்ந்தது?' என்ற கேள்விகளுடன், 'இது ஏன் நிகழ்ந்தது?' என்ற கேள்வி, மீண்டும், மீண்டும் எனக்குள் எழுந்தது. இக்கேள்விகள், என் மனதை, சக்திகொண்ட மட்டும் பலமாக அறைந்தன. அப்போது, என்னிடமிருந்து எழுந்த ஒரே பதில் இதுதான்: இறைவனின் குழந்தைக்கு ஒரு விபத்து நிகழும்போது, அவ்விபத்தைச் சூழ்ந்து எழும் கேள்விகள் முக்கியமல்ல, அக்கேள்விகளைச் சூழ்ந்து நிற்கும் இறைவன், அளவற்றவர் என்பதே முக்கியம்".

துன்பம் நம்மைத் தாக்கும்போது, கேள்விகள் எழுவது இயற்கை; ஆயினும், அக்கேள்விகளில் மட்டும் தங்கிவிடாமல், அக்கேள்விகளைச் சூழ்ந்து நிற்கும் இறைவனைக் குறித்து சிந்திப்பது மிக முக்கியம் என்று, இசபெல் அவர்கள், இந்நூலின் வழியே சொல்லித்தருகிறார். 'Not by Accident' என்ற இந்நூல், பல்லாயிரம் பேருக்கு, அவர்களது துயரங்களில் ஆறுதல் வழங்கியுள்ளது. தங்கள் துயரங்களின் நடுவே, இறைவனின் பராமரிப்பை முற்றிலும் புரிந்துகொள்ள முடியவில்லையெனினும், அதை ஏற்றுக்கொள்வதற்கு, இந்நூலில் கூறப்பட்டுள்ள சிறு தியானங்கள் உதவி செய்துள்ளன என்பது, இந்நூலை வாசித்த பலரின் கருத்து.

துயரங்களில் ஆறுதல் பெற, நாம் பல வழிகளைத் தேடுகிறோம். தனித்திருத்தல், தியானம் செய்தல், நூல்களை வாசித்தல், என்ற தனிப்பட்ட முயற்சிகள் உதவுகின்றன. அல்லது, அடுத்தவர் துணையைத் தேடுகிறோம். நமக்கு மிக நெருங்கிய உறவுகளும், நண்பர்களும் உதவி செய்யலாம். அல்லது, நம்மையொத்த துயரைச் சந்தித்தவர்கள், தங்கள் அனுபவத்திலிருந்து நமக்குக் கூறும் ஆலோசனைகள், உதவி செய்யலாம். பல நகரங்களில் இத்தகையக் குழுக்கள் இயங்கிவருவதை அறிவோம். குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோர், விபத்துக்களில் தங்கள் இளையோரை இழந்த பெற்றோர் என தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இக்குழுக்கள், குறிப்பிட்ட நாள்களில் சந்தித்து, தங்கள் வேதனைகளையும், அவற்றை மேற்கொண்ட வழிகளையும் பகிர்ந்துகொள்வது, பலருக்குப் பெரும் உதவியாக உள்ளது.

தங்கள் மகன் ஆரோன், Progeria என்ற குணமாக்கமுடியாத, அரியவகை நோயினால் இறந்ததும், யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்களும், அவரது மனைவியும், ஆறுதல் பெறமுடியாமல் தவித்தனர். பின்னர், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கென உருவாக்கப்பட்டிருந்த ஒரு குழுவில் இணைந்து, தங்களுக்குத் தேவையான ஆறுதலைப் பெற்றனர் என்பதை, 'ஆண்டவர் என் ஆயன்' என்ற நூலில் ஹெரால்டு குஷ்னர் அவர்கள் கூறியுள்ளார். அதேபோல், தன் மகனை விபத்தில் இழந்த இசபெல் அவர்கள், இத்தகையத் துயரத்தில் சிக்கியிருந்த பலருக்கு, குழுப்பகிர்வுகளில் ஆலோசனை வழங்கியதன் வழியாகவும், தான் எழுதிய நூலின் வழியாகவும் உதவியாக இருந்துள்ளார்.

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இழப்புகள், பல்வேறு சூழல்களில், பல வடிவங்களில் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், இழப்புக்களைச் சந்தித்தவர்கள் கூடிவரும்போது, அவர்கள் மத்தியில் உருவாகும் 'புரிதல்', ஆறுதலையும், தெளிவையும் தருகின்றது. அத்தகையப் 'புரிதல்' இல்லாதபோது, குழுப்பகிர்வுகளில், அல்லது, நண்பர்களின் பகிர்வுகளில், ஆறுதலும், தெளிவும் கிடைப்பதற்குப் பதில், இன்னும் ஆழமான காயங்கள் உருவாக அதிக வாய்ப்புண்டு.
Job Rebuked by His Friends – William Blake

'புரிதல்' இல்லாத ஒரு சூழல், யோபின் வாழ்வில், அவரது நண்பர்கள் வடிவில் வந்து சேர்ந்தது. யோபுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் புரிந்துகொள்ளாமல், ஏட்டளவில் தாங்கள் கற்றுவைத்திருந்த, தாங்கள் நம்பிவந்த கருத்துக்களை வலியுறுத்திக் கூறினர், அவரது மூன்று நண்பர்கள்.
அவர்களில், முதலில் பேசிய எலிப்பாசு, யோபின் நல்ல குணங்களைப்பற்றி துவக்கத்தில் பேசினார். "பலருக்கு அறிவுரை பகர்ந்தவர் நீர்! தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியவர் நீர்!  உம் சொற்கள், தடுக்கி விழுவோரைத் தாங்கியுள்ளன; தள்ளாடும் கால்களை உறுதியாக்கியுள்ளன" (யோபு 4:3-4) என்று யோபின் குணங்களைப் பாராட்டியபின், அவரது நேர்மையைக் குறித்து தனக்கிருந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினார், எலிப்பாசு.

இரண்டாவதாகப் பேசிய பில்தாது என்பவரோ, ஆரம்பத்திலேயே தன் பொறுமையை இழந்து, யோபைக் கடிந்துகொள்கிறார். "எதுவரை இவ்வாறே பேசிக் கொண்டிருப்பீர்? உம் வாய்ச்சொற்கள் புயல்காற்றைப் போல் இருக்கின்றன" (யோபு 8:2) என்று ஆரம்பிக்கும் பில்தாது அவர்கள், தொடர்ந்து யோபின் புதல்வர்களைப் பற்றி கூறும் ஒரு கூற்று, நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது.
யோபு அடைந்த இழப்புக்களிலேயே பேரிழப்பாக இருந்த அவரது பிள்ளைகளின் மரணம் குறித்து பில்தாது அவர்கள் இவ்வாறு கூறுகிறார்: "உம் புதல்வர்கள் அவருக்கெதிராய்ப் பாவம் செய்ததால், குற்றப்பழியின் ஆற்றலிடம் அவர்களைக் கையளித்தார்." (யோபு 8:4). இக்கூற்றிலிருந்து வெளிப்படும் பில்தாதின் இரு குணங்கள், நமக்கு பாடங்களாக அமைகின்றன. பில்தாது இவ்வாறு கூறுவது, அவரை, கடின உள்ளம் கொண்டவராகவும், மற்றவர் மனங்களைப் புண்படுத்துகிறவராகவும் காட்டுவதோடு, அரைகுறையான அறிவோடு, அடுத்தவரைத் தீர்ப்பிடுபவராகவும் காட்டுகிறது.

ஒருவர் இறந்தபின், பொதுவாக, அவரைப்பற்றிய குறைகளை நாம் வெளிப்படையாகப் பேசுவதில்லை. நாம் கடைபிடிக்கும் இக்கட்டுப்பாட்டை, இறந்தவருக்கு நாம் காட்டும் மரியாதை என்ற கோணத்தில் பார்க்கலாம், அல்லது, இறந்தோரின் சுற்றங்களை மேலும் புண்படுத்தாத நாகரீகம் என்ற கோணத்திலும் பார்க்கலாம்.
தான் இழந்த அனைத்திலும், தன் புதல்வர், புதல்வியரின் மரணமே, மிகப் பெரிய இழப்பாக யோபின் மனதை புண்படுத்தியிருக்கவேண்டும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், பில்தாது, யோபின் பிள்ளைகளை, பாவிகள் என்று முத்திரை குத்தியது, அவரை, நாகரீகம் தெரியாத, மென்மை உணர்வுகளற்ற ஒரு மனிதராகக் காட்டுகிறது.

தன் ஏழு புதல்வரும், மூன்று புதல்வியரும் பாவத்தில் விழக்கூடியவர்கள் என்பதை, யோபு நன்கு அறிந்திருந்தார். குறிப்பாக, அவர்கள் வெவ்வேறு நாள்களில், தங்கள் இல்லங்களில் விருந்து வைக்கும்போது, அங்கு தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் என்று யோபு முன்கூட்டியே சிந்தித்து, அதற்குத் தகுந்த பரிகாரத்தையும் தேடிவந்தார் என்று முதல் பிரிவில் கூறப்பட்டுள்ளது..
யோபு நூல் 1: 5
விருந்து நாள்களின் முறை முடிந்ததும், யோபு அவர்களை வரவழைத்துத் தூய்மைப்படுத்துவார். "என் பிள்ளைகள் ஒருவேளை பாவம் செய்து, உள்ளத்தில் கடவுளைத் தூற்றியிருக்கக்கூடும்" என்று யோபு நினைத்து, காலையில் எழுந்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எல்லாருக்காகவும் எரிபலியை ஒப்புக்கொடுப்பார். யோபு எப்பொழுதும் இவ்வாறு செய்வது வழக்கம்.

ஒவ்வொரு விருந்துக்கும் பிறகு, யோபு மேற்கொண்ட இந்தப் பரிகார முயற்சிகளைக் கண்டு, யோபின் நண்பர்கள் அவரிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். தன் பிள்ளைகள் ஒருவேளை தவறு செய்திருக்கலாம் என்ற எண்ணத்தில் தான் அவ்வாறு செய்வதாக யோபு விளக்கம் கூறியிருக்கலாம்.
யோபு கூறிய இந்த விளக்கத்தை கேட்ட நண்பர்களில் ஒருவரான பில்தாது, 'தன் பிள்ளைகள் பாவம் செய்திருக்கக்கூடும்' என்று யோபு சொன்னதை வைத்து, 'யோபின் புதல்வர்கள் பாவம் செய்தவர்கள், எனவே, தண்டனை பெற்றார்கள்' என்று அவர் முடிவெடுத்தது தவறு. தனது தவறான முடிவை, துன்பங்களுடன் போராடிக்கொண்டிருந்த யோபிடம் கூறியது, அதைவிட பெரியத் தவறு.
அரைகுறையாய் அறிந்த விவரங்களின் அடிப்படையில், அல்லது, முற்சார்பு எண்ணங்களின் அடிப்படையில், நாம் எடுத்த தவறான முடிவுகளை எண்ணிப் பார்க்க, பில்தாதின் கூற்று நம்மை அழைக்கிறது. அதேவண்ணம், துயரில் இருப்போருக்கு ஆறுதல் தருவதற்குப் பதில், நம் சொற்களால் கூடுதல் வேதனை தந்த தருணங்களை எண்ணிப்பார்க்கவும், பில்தாதின் சொற்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன.
பில்தாதுக்கும், யோபுக்கும், இடையே நிகழ்ந்த உரையாடலில், நம் தேடல் தொடரும்.


26 March, 2017

Receiving inner sight உண்மை உள்ளொளி பெற...



But, now I see…
4th Sunday of Lent

This Sunday, the 4th Sunday of Lent is celebrated as ‘Laetare Sunday’ – Rejoicing Sunday. Rejoicing is part and parcel of our lives. We have hundreds of reasons to rejoice. Surely one of them is when we experience forgiveness - giving and receiving. To celebrate this Rejoicing Sunday meaningfully, Pope Francis suggested a ‘feast of forgiveness in 2014.
“This coming Friday and Saturday will be a special penitential moment, called “24 hours for the Lord”. It will be — we could call it — a feast of forgiveness, which will take place simultaneously in many dioceses and parishes around the world. It will be a feast of forgiveness.” This was the invitation for the ‘Feast of Forgiveness’ extended to the whole world by Pope Francis, on March 23, 2014.

For the past three years we have been celebrating this ‘Feast of Forgiveness’ on the eve of the 4th Sunday of Lent. This year, on 24 and 25 of March we celebrated the sacrament of reconciliation along with “24 hours for the Lord”. For this year’s celebration of the ‘Feast of Forgiveness’, the theme chosen was: “I desire mercy” (Mt. 9.13)
Close on the heels of this meaningful Feast of Forgiveness we get a Gospel passage this Sunday, from John (9: 1-41), which talks of Jesus healing a person who was visually challenged from birth. I consider it as a worthwhile exercise to combine ‘forgiveness’ and ‘receiving sight’ (enlightenment) in our Sunday reflection.

In 2012, a French Canadian film Rebelle (in English, War Witch) received many awards in different film festivals. Rachel Mwanza, a young lady of 17, the protagonist of this movie, also received quite a few awards. Rachel is the protagonist for our reflections today. The article on Rachel published by the French journal ‘La Croix’ gives us the much needed hope in the youth. I wish to share this hope and also hold Rachel as an example of having the lovely blend of forgiveness and enlightenment.

Let me share some of the salient features from the life of Rachel:
Rachel, third in a family of six children, spent the first part of her childhood in a region of the Kasai province, a thousand kilometers from Kinshasa. In 2004, everything changed. Her father sent the mother and the three younger children to Kinshasa, promising to join them. But, he never did.
In the capital of the Democratic Republic of Congo (Kinshasa), the situation deteriorates. Manipulated by a "false prophet", her mother suspected Rachel of being responsible for their misfortune. The little girl is accused of witchcraft and must undergo expensive exorcism sessions of unprecedented violence. Her grandmother is particularly hostile to her, up to rubbing her eyes with chilly to "punish". She was barely 10 years. For four years, rejected by her family and neighbors, who see her as a witch, Rachel lived outdoors. At night, she ran and hid herself to escape predators.

The article goes on to explain all the horrors this 10 year old girl faced in the next 7 years. Rachel is very clear that she shared her miseries in various groups not to gain sympathy for herself; she wants to use her fame to fight for street children. After she won the award for the film ‘Rebelle’, she was invited to speak at a meeting in Kinshasa. When she spoke of her life, many cried. She says to the reporter of this article: “People cried listening to my testimony, but I do not want them to cry for me. I want them to cry for street children. Do you find it normal that girls are sleeping outside and run at night to avoid being raped? Do you find it normal that girls are forced into prostitution? This is not fair. That's what needs to be changed.”

She also says that she considered wearing the school uniform a greater honour than the red-carpet she walked during film festivals. She wants to create a foundation for street children along with UNESCO.
All her thoughts clearly show that she is an enlightened soul. The closing lines of this article are the main focus of our reflection. They go like this: When asked if she was angry against her grandmother, she replied simply: "Why would I want it? What's the point?" Faced with this immense wisdom, one suddenly feels very small.
All true religions teach that enlightenment is achieved by a free spirit. In order to free the spirit, one needs to learn the art of forgiveness. This is clearly seen in Rachel’s statement about her grandmother. 

While searching the internet with the combination of words - ‘forgiveness’ and ‘receiving sight’ (enlightenment), I was struck by the thought that most of the results of this search revolved around the Biblical events. When I reversed the search with the ante-thesis of these words, namely, ‘revenge’ and ‘going blind’, I could find many news items and world events. One of these news items caught my special attention. It was from Iran.

In 2004, Rachel’s grandmother rubbed chilly in the eyes of the child. That same year, a young man in Iran threw acid on the face of a young lady, who refused to marry him. Seven years later, when the judgement of this case came out, it shocked the world. Here is a report from ‘The Guardian’ dated 13, May 2011:
In a literal application of the sharia law of an eye for an eye, Iran is ready for the first time to blind a man with acid, after he was found guilty of doing the same to a woman who refused to marry him.
Majid Movahedi, 30, is scheduled to be rendered unconscious in Tehran's judiciary hospital at noon on Saturday while Ameneh Bahrami, his victim, drops acid in both his eyes, her lawyer said.
Bahrami who had asked for an eye for an eye retribution in the court, was disfigured and blinded by Movahedi in 2004 when he threw a jar of acid in her face while she was returning home from work.  

The shock of this court verdict turned into solace on the day when the ‘punishment’ was supposed to be carried out. Here is a report from CNN, dated 1, August 2011:
Tehran, Iran (CNN) -- A woman blinded in an acid attack seven years ago said Sunday she stopped the "eye for an eye" punishment for her attacker because "such revenge is not worth it." A physician was to drop acid -- under legal supervision -- into the eyes of Majid Movahedi on Sunday, according to Fars News Agency, to punish him for throwing acid in Bahrami's face. The act disfigured her face and blinded her. "I never intended to allow Majid to be blinded," Ameneh Bahrami told CNN. "... Each of us, individually, must try and treat others with respect and kindness in order to have a better society."
Bahrami stopped the punishment minutes before it was carried out, she said, adding that Movahedi already had been given anesthetic. She said two men were instrumental in bringing about her change of heart: a doctor at a clinic in Spain and Amir Sabouri, an Iranian who helped her get medical attention. Sabouri told her to forgive Movahedi and prove to the world that Iranians are kind and forgiving, she said.

There are millions of angels like Rachel and Ameneh who walk this planet. They teach us that enlightenment can be achieved by letting go (of past hurts) and letting God. This was done by the person who was cured by Jesus of his blindness (John 9). As a beggar, this person must have accumulated lots of hurts in his life. When he was ready to let go of these hurts, he received not only his physical sight, but also spiritual enlightenment to such an extent that he was able to ‘teach’ the Pharisees.

In the Gospel passage, John 9: 1-41, the miracle of Jesus curing the visually challenged person is reported in 7 verses, while the conversations that take place as a result of this miracle, occupy 34 verses. Evangelist John, as we know, is not a person who records only the events in the life of Jesus, but, also gives theological interpretations about the event. Last week we heard the lengthy conversation between Jesus and the Samaritan woman near the well. This week we have the curing of the visually challenged person, followed by a heated discussion between the Pharisees and the cured person. The parents of the visually challenged person are also summoned for questioning.

The evangelist portrays the visually challenged person as not only gaining the physical ability of sight but also the inner light to believe in Jesus even when he had not seen Him. The progressive enlightenment of the visually challenged person is indicated by the titles he gives to Christ – from ‘the man called Jesus’ (Jn. 9:11) to ‘He is a prophet’ (Jn. 9:17). Ultimately, when he meets Jesus face to face, he surrenders with: ‘Lord, I believe – in the Son of Man’ (Jn. 9: 35-38).
On the other hand, we see the Pharisees gradually lose sight and become more and more blind in their rigid ritualistic practices. The parents of the visually challenged person are portrayed as ‘partially blinded’ persons. While they were ready to accept their visually challenged son as the ‘will of God’, they were scared to accept him as the miraculous sign of God’s mercy. They were blinded by the fear of rules and regulations, instilled in their hearts by the Pharisees.

Lent is a good time to reflect on where we stand, especially in our willingness to let go of past hurts so that we can gain a clearer vision of Christ. Letting go of hurts (forgiveness) is a sure way to Letting God into our lives. That is true enlightenment!


62nd Berlinale International Film Festival – Rachel Mwanza
தவக்காலம் 4ம் ஞாயிறு

தவக்காலத்தின் 4ம் ஞாயிறு, Laetare Sunday - அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று அழைக்கப்படுகிறது. நாம் வாழ்வில் மகிழ்வடைய, பல நூறு காரணங்கள் இருக்கும். அவற்றில், மிக முக்கியமான ஒரு காரணம் - நாம் மன்னிப்பு பெற்ற, மன்னிப்பு வழங்கிய அனுபவங்கள். இந்த மகிழும் ஞாயிறைக் கொண்டாடுவதற்கு, தகுந்ததொரு முன்னேற்பாடாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டு, 'மன்னிப்பு விழா'வை உருவாக்கினார். "வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களில், 'ஆண்டவருக்கென 24 மணி நேரத்'தை ஒதுக்கி, நாம் அதை 'மன்னிப்பின் விழா' என்று கொண்டாடுவோம்" என்று திருத்தந்தை அவர்கள் விடுத்த ஓர் அழைப்பு, திருஅவையில், மன்னிப்பு விழாவை உருவாக்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக, தவக்காலத்தின் 4ம் ஞாயிறுக்கு முந்தைய இரு நாள்கள், இந்த மன்னிப்பு விழா கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள பல கோவில்கள் 24 மணி நேரங்கள் திறக்கப்பட்டு, அங்கு, ஒப்புரவு அருளடையாளம் வழங்க அருள்பணியாளர்கள் காத்திருப்பது, இந்த மன்னிப்பு விழாவின் முக்கிய அம்சமாக இருந்துவருகிறது.

இவ்வாண்டு, மார்ச் 24,25 ஆகிய இரு நாட்கள் நாம் கொண்டாடிய இந்த மன்னிப்பு விழாவிற்கு, வழங்கப்பட்ட மையக்கருத்து, "நான் இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத். 9:13). நாம் கொண்டாடிய இந்த மன்னிப்பு விழாவைத் தொடர்ந்துவரும் மகிழும் ஞாயிறன்று, பார்வையற்ற ஒருவரை இயேசு குணப்படுத்தும் நிகழ்வு, நற்செய்தியாக (யோவான் 9: 1-41) நமக்குத் தரப்பட்டுள்ளது. 'மன்னிப்பையும்' ‘பார்வை பெறுவதை'யும் இணைத்துச் சிந்திக்க, மகிழும் ஞாயிறு நம்மை அழைக்கிறது.

2012ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில், Rebelle அதாவது, 'புரட்சியாளர்' என்ற பிரெஞ்ச் மொழித் திரைப்படத்தில் நடித்த Rachel Mwanza என்ற 17 வயது இளம்பெண், சிறந்த நடிகர் என்ற விருது பெற்றார். விருது பெற்ற இளம் பெண் இரேச்சல், நமது ஞாயிறு சிந்தனையின் மையமாகிறார். இவ்விளம் பெண்ணின் வாழ்வில், 'மன்னிப்பும்' 'பார்வை பெறுதலும்' இணைந்திருப்பதால், இப்பெண் நம் சிந்தனைகளின் மையமாகிறார்.

ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசில், ஓர் எளியக் குடும்பத்தில், கடைசிக் குழந்தையாகப் பிறந்தவர், இரேச்சல். அவருக்கு 8 வயதானபோது, வாழ்க்கை முற்றிலும் மாறியது. இரேச்சலின் தந்தை, தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும், அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து, Kinshasa நகருக்கு அனுப்பிவைத்தார். விரைவில் அவர்களுடன் தானும் சேர்வதாகக் கூறியத் தந்தை, அத்துடன் அவர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் மறைந்தார். Kinshasaவில் அத்தாயும், குழந்தைகளும், வயதான தங்கள் பாட்டியோடு அடுக்கடுக்காய் துன்பங்களைச் சந்தித்தனர்.
அக்குடும்பத்தின் துன்பங்களுக்கு, கடைசியாகப் பிறந்த இரேச்சல்தான் காரணம் என்று, அந்நகரில் இருந்த ஒரு 'போலிச்சாமியார்' கூறினார். அக்குழந்தை ஒரு சூனியக்காரி என்றும், அவரைப் பிடித்துள்ள பேயை ஓட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறினார். இரேச்சலின் பாட்டி, குழந்தைப் பருவத்திலிருந்தே இரேச்சலை வெறுத்தவர். எனவே, போலிச்சாமியார் இவ்விதம் சொன்னதும், பேய்பிடித்த அக்குழந்தையைத் தண்டிக்க, பாட்டி, சிறுமியின் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட்டுத் தேய்த்தார். அப்போது இரேச்சலுக்கு வயது பத்து. இதைத் தொடர்ந்து, இரேச்சல் தன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.

அடுத்த 7 ஆண்டுகள், இளம்பெண் இரேச்சல், வெளி உலகில் சந்தித்த துன்பங்களை இக்கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். தன் துன்பங்களைக் கேட்டு மக்கள் கண்ணீர் விடவேண்டும் என்பது தன் நோக்கமல்ல, மாறாக, இத்தகையத் துன்பங்களைச் சந்திக்கும் ஏனைய ஆப்ரிக்கக் குழந்தைகளின் வாழ்வில் மாற்றங்களைக் கொணர்வதற்காகவே, தன் வாழ்வின் துயரங்களை, உலகின் பல அரங்குகளில், தான் பேசி வருவதாக இரேச்சல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இக்கட்டுரையின் இறுதியில், கூறப்பட்டுள்ள அற்புத வரிகளே, இளம்பெண் இரேச்சலை நம் சிந்தனைகளின் மையமாக்கியுள்ளன. அந்த இறுதி வரிகள் இதோ: "இரேச்சலின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த பாட்டியின்மீது அவர் கோபமாய் இருக்கிறாரா என்று கேட்டபோது, அவர், ‘நான் ஏன் கோபப்படவேண்டும்? அதனால் என்ன பயன்?’ என்று பதில் சொன்னார். இத்தகைய உன்னதமான சிந்தனைக்கு முன் நாம் மிகச் சிறியவர்களாகிறோம்" என்ற வார்த்தைகளுடன் இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.

இரேச்சல் அவர்களின் வாழ்வை முற்றிலும் புரட்டிப்போட்டு, அவரை வீதிக்குக் கொணர்ந்தது - பாட்டி அவர் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த அந்தக் கொடூரம். அந்நிகழ்வால், அக்குழந்தை, தன் கண் பார்வையையே இழந்திருக்க வாய்ப்புக்கள் இருந்தன. கண்பார்வையை இழக்காமல் அவரைக் காத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். அதைவிட மேலாக, அந்நிகழ்வோ, அதைத் தொடர்ந்த துன்பங்களோ, அந்த இளம்பெண்ணின் மனக் கண்களைக் குருடாக்கி, அவரை வெறுப்பில் புதைந்துபோகச் செய்யாமல் காத்ததற்காக, இறைவனுக்கு, சிறப்பான நன்றியைக் கூறுவோம். 'மன்னிப்பும்' 'பார்வை பெறுதலும்' ஒன்றோடொன்று பிணைந்தது என்பதை, இரேச்சல் அவர்களின் வாழ்க்கை தெளிவாகக் காட்டுகிறது.

'மன்னிப்பு' 'பார்வை பெறுதல்' என்ற இவ்விரு வார்த்தைகளையும் இணைத்து, இணையத்தளத்தில் தேடினால், நாம் காணும் பல முதல் தகவல்கள், மதத் தொடர்புடைய தகவல்களாகவே உள்ளன. மன்னிப்பதால், அகக்கண்கள் திறந்து, ஆண்டவனைக் காணமுடியும் என்று, அனைத்து உண்மையான மதங்களும் சொல்லித்தருகின்றன. 'கண்ணுக்குக் கண்' என்ற பழிவாங்கும் பாடங்களைச் சொல்லித்தரும் இவ்வுலகப் போக்கு, நம் அனைவரையும் பார்வை இழக்கச்செய்கிறது. 'பழிக்குப் பழி' என்ற உணர்வால் நாம் எவ்வளவுதூரம் பார்வை இழக்கமுடியும் என்பதைக் கூறும் ஒரு நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன், ஈரான் நாட்டில் நிகழ்ந்தது.

இரேச்சலின் கண்களில் அவரது பாட்டி மிளகாய்ப் பொடியைத் தேய்த்த ஆண்டு 2004. அதே ஆண்டு, ஈரானில், தன் காதலை நிராகரித்த அமேனே (Ameneh Bahrami) என்ற இளம்பெண்ணின் முகத்தில் அமிலம் வீசினார் மஜீத் (Majid Movahedi) என்ற இளைஞர். இதனால், இளம்பெண் அமேனேயின் முகமெல்லாம் எரிந்துபோய், இடது கண்ணில் அவர் பார்வை இழந்தார். 2011ம் ஆண்டு, இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, உலகை அதிர்ச்சியடையச் செய்தது. அமில வீச்சினால் இடது கண்ணில் பார்வையை இழந்த இளம்பெண் அமேனே போலவே, மஜீத்தின் இடது கண்ணிலும் அமிலம் ஊற்றப்பட்டு, அவரும் பார்வை இழக்கவேண்டும் என்பதே அத்தீர்ப்பு. நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு இளம்பெண் அமேனே முதலில் துணைபோனார் என்பது உண்மை.
இத்தீர்ப்பை செயல்படுத்தக்க்கூடாது என்று உலகின் பல மனிதாபிமான அமைப்புக்கள் விண்ணப்பித்தாலும், ஈரான் சிறை அதிகாரிகள், 2011ம் ஆண்டு மேமாதம் ஒரு நாள், இத்தீர்ப்பை நிறைவேற்ற, மஜீத்துக்கு மயக்க மருந்தை முதலில் கொடுத்தனர். அவர் மயக்கத்தில் இருந்த நேரம், அமில வீச்சில் கண்ணிழந்த இளம்பெண் அமேனே அவர்கள், அத்தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று விண்ணப்பித்ததால், மஜீத்தின் கண்களில் அமிலம் ஊற்றப்படவில்லை. இளம்பெண் அமேனே அவர்களின் அகக் கண்கள் திறந்ததால், மஜீத்தின் கண்கள் காப்பாற்றப்பட்டன.

'கண்ணுக்கு கண்' என்று வாழும் இவ்வுலகப் போக்கிற்கு மாற்றுச் சாட்சியங்களாக இரேச்சல், அமேனே போன்ற இளம்பெண்கள் 'மன்னிப்பு' பாடங்களைச் சொல்லித் தருவதால், இவ்வுலகம் இன்னும் முழுமையாகக் குருடாகாமல் வாழ்கிறது. உடலில் உள்ள கண்களில் வேதனையை அனுபவித்தாலும், ஊனக் கண்களின் பார்வையை இழந்தாலும், அகக் கண்களால் அற்புதமான உண்மைகளைக் காணமுடியும் என்பதைச் இரேச்சல், அமேனே என்ற இவ்விரு இளம்பெண்களும் நமக்குச் சொல்லித்தருகின்றனர்.

இதேபோல், இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் பார்வை இழந்த மனிதரும், உடலில் மட்டும் பார்வை பெறாமல், உள்ளத்திலும் பார்வை பெறுவதைக் காண்கிறோம். இயேசு, பார்வை இழந்தவரை குணமாக்கியப் புதுமை, யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் முதல் ஏழு இறைச்சொற்றொடர்களில் முடிவடைகிறது. ஆனால், இப்புதுமையைத் தொடர்ந்து 34 இறைச்சொற்றொடர்களில் வழியாக நற்செய்தியாளர் யோவான், ஓர் இறையியல் பாடத்தை நடத்துகிறார். நாம் அனைவரும் அகம், புறம் இவற்றில் பார்வை பெறுவது, பார்வை இழப்பது என்பன குறித்த பாடங்கள் இவை.
பார்வை இழந்த மனிதர், உடலளவில் மட்டுமல்லாமல், உள்ளத்திலும் பார்வை பெறுகிறார். தன் விசுவாசக் கண்களால் இயேசுவைக் கண்டுகொள்கிறார். இதற்கு நேர் மாறாக, உடலளவில் தெளிவான பார்வை கொண்டிருந்ததாக எண்ணிக்கொண்டிருந்த பரிசேயர்கள், படிப்படியாகத் தங்கள் அகத்தில் பார்வை இழப்பதையும், யோவான் கூறியுள்ளார். இவ்விரு துருவங்களுக்கும் இடையே, பார்வை பெற்ற மனிதரின் பெற்றோர், அரைகுறையாய் பெறும் பார்வையைக் குறித்தும், யோவான் பாடங்கள் சொல்லித் தருகிறார்.

இயேசு உமிழ் நீரால் சேறு உண்டாக்கி, பார்வையற்றவர் கண்களில் பூசினார். சிலோவாம் குளத்தில் கண்களைக் கழுவச் சொன்னார். அவரும் போய் கழுவினார். பார்வை பெற்றார். பார்வை பெற்ற மகிழ்வோடு அவர் தன் வழியே போயிருந்தால், புதுமை முடிந்திருக்கும், சுபம் போட்டிருக்கலாம். புகழை விரும்பாத இயேசுவுக்கும் அது மிகவும் பிடித்த செயலாக இருந்திருக்கும். பார்வை பெற்றவர் திரும்பி வந்ததால், பிரச்சனைகள் ஆரம்பமாயின.

பார்வை பெற்றவர் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தவர். அவர் திரும்பி வந்தபின், பெரியதொரு பிரச்சனையில் சிக்கிக்கொள்வோம் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். புதுமை நடந்தது ஓர் ஒய்வு நாள் என்பதுதான் பிரச்சனை. மலைபோல் குவிந்திருந்த பல பிரச்சனைகள் நடுவே தினமும் வாழ்ந்தவர்கள், அந்தப் பிச்சைக்காரர்கள். அவர்களுக்கு, நல்ல நாள், பெரிய நாள், ஒய்வு நாள் என்ற பாகுபாடுகள் எல்லாம் இருந்ததில்லை. இத்தகையப் பாகுபாடுகளால் தங்கள் பார்வையைக் குறுக்கிக் கொண்டவர்கள், பரிசேயர்கள். 'ஓய்வுநாள்' என்பது, இறைவன் தந்த கொடை என்பதை மறந்து, அதை ஒரு பிரச்சனையாக்கிய, பரிசேயர்கள், பார்வை பெற்றவரை கேள்விகளால் துளைத்தனர்.

பார்வை பெற்றவர் தன் ஊனக் கண்களால் இயேசுவை இன்னும் பார்க்கவில்லை, ஆனால், அகக் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிட்டார். எனவே, பரிசேயர்கள் கேட்ட கேள்விகள் அவரை பயமுறுத்தவில்லை. அகக்கண்களால் தான் கண்ட இயேசுவைப்பற்றி அச்சமின்றி அறிக்கையிட்டார். தங்களை எதிர்க்கத் துணிந்த அந்தப் பிச்சைக்காரரின் பெற்றோரை அழைத்து, அவர்களையும் கேள்விகளால் வாட்டியெடுத்தனர் பரிசேயர்கள்.

தங்கள் மகன் பார்வையற்றிருந்தபோது, அதை இறைவனின் சித்தம் என்று ஏற்றுக்கொண்ட அந்த பெற்றோர், பார்வை பெற்று, இறைவனின் புதுமைக்கு ஒரு சாட்சியாக நின்ற தங்கள் மகனை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கினர். பரிசேயரின் சட்ட திட்டங்கள், அவ்வளவு தூரம், அவர்களைப் பயமுறுத்தி, பார்வை இழக்கச் செய்திருந்தது. பிறந்தது முதல், தன் பெற்றோரையோ, பரிசேயர்களையோ பார்த்திராத அம்மனிதர், அன்று, முதல் முறையாக, தன் பெற்றோரையும், பரிசேயரையும் பார்க்கிறார். தன் பெற்றோரது பயத்தைக் கண்டு அவர் பரிதாபப்பட்டிருப்பார். அதற்கும் மேலாக, அவருடைய பரிதாபத்தை அதிகம் பெற்றவர்கள் அந்த பரிசேயர்கள். கடவுளுக்கும், ஆலயத்திற்கும் மிக நெருக்கத்தில் வாழும் அவர்கள், கடவுளைக் காணமுடியாத குருடர்களாய் இருக்கிறார்களே என்று, அவர் பரிதாபப்பட்டிருப்பார்.

பார்வை பெற்றவரின் சாட்சியம், தீவிரமாக, துணிச்சலாக இருந்ததால், அவரை, கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர், பரிசேயர்கள். அதுவரை ஒதுங்கியிருந்த இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார். அச்சந்திப்பில், அம்மனிதரின் சாட்சியம் இன்னும் ஆழப்பட்டது. முழுமை அடைந்தது. தனக்கு புதுமை செய்தவர், 'இயேசு' என்றும், 'இறைவாக்கினர்' என்றும் (யோவான் 9:15,17) படிப்படியாக ஏற்றுக்கொள்ளும் அளவு, அக ஒளி பெற்ற அவர், இறுதியில், இயேசுவைச் சந்தித்தபோது, அவரது அகம் முழுவதும் இறை ஒளியால் நிறைந்தது. இயேசுவின் முன் "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்" (யோவான் 9:38) என்று முழுமையாய் சரணடைந்தார்.

உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளால் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதைப் பலவாறாக நாம் கூறுவோம். பொதுவாக, எந்த ஒரு உணர்ச்சியுமே ஓர் எல்லையைத் தாண்டும்போது, அந்த உணர்ச்சி நம்மைக் குருடாக்கி விடுவதாகத்தான் அடிக்கடி கூறுகிறோம். 'கண்மூடித்தனமான காதல்' என்றும், "கண்ணு மண்ணு தெரியாமல்" செயல்படுதல் என்றும் பல விதமான எண்ணங்கள் நம் பேச்சு வழக்கில் உள்ளன!

உள்ளத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகளால், குறிப்பாக, வெறுப்பால், மன்னிக்க முடியாத ஆத்திரத்தால் நமது அறிவுக் கண்கள் குருடாகிப் போகாமல் வாழ, இறைவனின் அருளை நாடுவோம். இரேச்சல், அமேனே, இயேசுவின் அருளால் பார்வை பெற்றவர் போன்ற எத்தனையோ நல்ல உள்ளங்கள் நமக்குச் சொல்லித்தரும் இந்த அற்புதப் பாடத்தை வாழ்வாகக முயல்வோம். மன்னிப்பு பெறுவதாலும், தருவதாலும், நாம் பெறும் பார்வை, பழுதற்றதாய், பாசமுள்ளதாய், அமையட்டும்!


21 March, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 12

Job 7:11

உலகப்புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான, கலீல் கிப்ரான் அவர்கள் கூறியுள்ள ஒரு கூற்று, யோபு நூலில் நாம் மேற்கொண்டுள்ள தேடலை இன்று துவக்கி வைக்கிறது. "வேதனையிலிருந்து கூடுதல் சக்தியுடன் பலர் வெளியேறியுள்ளனர்; இவர்களது வாழ்வை நாம் திரும்பிப் பார்க்கும்போது, அங்கு தெரிவன, பல தழும்புகள்" என்று கிப்ரான் அவர்கள் கூறியுள்ளது, யோபுக்கு அதிகம் பொருந்தும். வேதனை வேள்வியில் தகனமாகிக் கொண்டிருந்த யோபுக்கு, ஆறுதல் சொல்லும் நோக்கத்தில் வந்த நண்பர்கள், ஆறுதலுக்குப் பதில், யோபுக்கு ஆழமான மனக்காயங்களை உருவாக்கினர்.
இந்த நண்பர்களில் ஒருவரான எலிப்பாசு, யோபு, ஏதோ ஒரு வகையில் குற்றம் புரிந்திருக்கவேண்டும் என்ற முடிவுடன் பேசியபோது, 'தான் குற்றமற்றவர்' என்பதை வலியுறுத்திக் கூறும் யோபு, தொடர்ந்து வாழ்வை ஓர் அழகிய கவிதை வடிவில் விவரிக்கிறார். "மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போராட்டம்தானே?" (யோபு 7:1) என்று ஆரம்பமாகும் இந்தக் கவிதை வரிகளில், பல உருவகங்கள் வழியே வாழ்வின் இன்னல்களை விளக்கியுள்ளார். இந்த வரிகளை வாசிக்கும்போது, வாழ்வைக் குறித்து, கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் மனதில் ஒலிக்கின்றன:
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

வாழ்க்கை என்றால், வேதனையும், குழப்பமும் இயல்பாகவே அமையும் என்பதை, பல அறிஞர்களும், கவிஞர்களும், பல உருவங்களில் கூறியுள்ளனர். அதே எண்ணங்களை யோபு நூல் 7ம் பிரிவு, முதல் 6 இறைச்சொற்றொடர்களில் இந்நூலின் ஆசிரியரும் கூறியுள்ளார். இந்தக் கவிதை வரிகளைத் தொடர்ந்து, யோபு, இறைவனிடம் பேச முயல்கிறார். இந்த வரிகள், இன்றைய நம் தேடலின் மையமாகிறது. யோபு நூல் 7ம் பிரிவு, 6 முதல், 21 முடிய உள்ள 16 இறைச்சொற்றொடர்களில், யோபின் வேதனை, கோப உணர்வுடன் வெளிப்படுகின்றது.
யோபு நூல் 7: 11
நான் என் வாயை அடக்கமாட்டேன்; என் மனத்தின் வேதனையை எடுத்துரைப்பேன்; உள்ளக் கசப்பில் முறையிடுவேன்.
என்று இறைவனிடம் நேருக்கு நேர் பேச ஆரம்பிக்கிறார், யோபு. இந்த வரிகளை வாசிக்கும்போது, வளர் இளம் பருவத்தில், அல்லது இளம் பருவத்தில் உள்ள ஒரு மகனோ, மகளோ தன் பெற்றோருக்கு முன் தன் ஏக்கத்தை, கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு காட்சி மனதில் பதிகிறது. பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் பேசும் இளைஞனைப் போல, யோபும் இறைவன் முன் பேசுகிறார். இறைவன், மனிதரை ஒரு பொருட்டாக மதிப்பது ஏன் என்ற கேள்வியுடன் யோபு தொடர்ந்து பேசுகிறார்:
யோபு நூல் 7: 17-18
மனிதர் எம்மாத்திரம், நீர் அவர்களை ஒரு பொருட்டாய் எண்ண? உமது இதயத்தை அவர்கள்மேல் வைக்க? காலைதோறும் நீர் அவர்களைச் ஆய்ந்தறிய? மணித்துளிதோறும் அவர்களைச் சோதிக்க?
என்று யோபு எழுப்பும் இக்கேள்விகள், 8ம் திருப்பாடலை நம் நினைவுக்குக் கொணர்கிறது.
திருப்பாடல் 8: 4
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்?
என்று கேள்விகளை எழுப்பும் திருப்பாடலின் ஆசிரியர், அடுத்த வரிகளிலேயே அழகான பதிலையும் வழங்கியுள்ளார்:
திருப்பாடல் 8: 5-8
ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.

மனிதர்கள் மீது இறைவன் ஏன் அக்கறை கொள்ளவேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர், கேள்விகளை எழுப்பி, மனிதர்களை இன்னும் உயர் நிலைக்கு அழைத்துச் செல்லவே, அவர்கள் மீது அக்கறை கொண்டார் என்று பதிலும் கூறியுள்ளார்.
இதற்கு மாறாக, மனிதர் மீது இறைவன் கொள்ளும் அக்கறை குறித்து, யோபு நூல் 7ம் பிரிவில் எழுப்பப்படும் கேள்விகளைத் தொடர்ந்து, இன்னும் சில கேள்விகள் வழியே, தன்னை இறைவன் இடைவிடாமல் கண்காணிக்கிறார் என்பதை, யோபு, கோபத்துடன் எடுத்துரைக்கிறார்:
யோபு 7: 19-20
எவ்வளவு காலம் என்மேல் வைத்த கண்ணை எடுக்காதிருப்பீர்? என் எச்சிலை விழுங்குமளவுக்குக் கூட என்னை விடமாட்டீரா? மானிடரின் காவலரே! நான் பாவம் இழைத்துவிட்டேனா? உமக்கு நான் செய்ததென்னவோ? என்னை உம் இலக்காக ஆக்கியதேன்? உமக்கு நான் சுமையாய்ப் போனதேன்?

இறைவன் மனிதரை நினைவில் கொண்டதற்குக் காரணம், அவர்களை படைப்பின் ஆளுநர்களாக மாற்றுவதற்கே என்பது, திருப்பாடல் ஆசிரியரின் கண்ணோட்டம். இக்கண்ணோட்டம், இறைவனை, அக்கறையோடு நம்மைக் கண்காணிக்கும் பெற்றோருக்கு ஒப்புமைப்படுத்துகிறது. இறைவன் மனிதரை ஒரு பொருட்டாக எண்ணுவது, அவர்கள் தவறு செய்யும்போது, அவர்களைத் தண்டிப்பதற்கே என்பது, யோபு நூல் ஆசிரியரின் கண்ணோட்டம். இக்கண்ணோட்டம், குறைகள் கண்டுபிடிக்கும் ஒரு பெற்றோராக, இறைவனைக் காட்டுகிறது. இவ்விரு கண்ணோட்டங்களையும் நம் குடும்பங்களில் நிகழும் ஓர் அனுபவத்தின் உதவிகொண்டு, யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் அவர்கள், தன் நூலில் இவ்வாறு விளக்குகிறார்:

பத்து வயது மகன், தன் வீட்டுத் தோட்டத்தில், தான் பள்ளியில் கற்றுக்கொண்ட ஒரு சில விளையாட்டு சாகசங்களைச் செய்துகொண்டிருக்கும்போது, வீட்டுக்குள் இருக்கும் தன் பெற்றோரை அழைக்கிறான். "அம்மா, அப்பா, இங்க வந்து பாருங்க" என்று அவன் அழைத்ததும், அங்கு செல்லும் பெற்றோருக்கு முன், தன் சாகசங்களை இன்னும் திறமையாகச் செய்துகாட்டுகிறான் மகன். சாகசங்களைக் காணும் பெற்றோர், தன்னைப் பாராட்டுவர், உற்சாகப்படுத்துவர், என்ற எண்ணத்தில், அச்சிறுவன் பெற்றோரின் கனிவுப் பார்வையை தன் பக்கம் திருப்புகிறான்.
அதே நேரம், வீட்டுக்குள், தன் அறையில் தனித்திருக்கும் பதினாறு வயது இளம்பெண், தன் அப்பாவோ, அம்மாவோ அனுமதியின்றி தன் அறைக்குள் நுழைவதை விரும்புவதில்லை. "தயவுசெய்து, என்னைத் தனியே விடுங்கள்" என்பதை, அப்பெண் பல வழிகளில் தன் பெற்றோருக்கு உணர்த்துகிறார். குற்றம் காண்பதற்கே, தன் பெற்றோர் தன்னை கண்காணிக்கின்றனர் என்பது, அவ்விளம்பெண்ணின் கண்ணோட்டம்.

பெற்றோரின் கண்முன்னே சாகசங்கள் செய்து பெருமைகொள்ளும் சிறுவனின் கண்ணோட்டம், திருப்பாடல் 8ல் காணப்படும் வரிகளில் புலனாகிறது என்றும், குற்றம் காண்பதற்கென்றே தன் பெற்றோர் தன்னை இடைவிடாமல் கண்காணிக்கின்றனர் என்ற இளம்பெண்ணின் கண்ணோட்டம், யோபு நூலில் வெளியாகிறது என்றும், ஹெரால்டு குஷ்னர் அவர்கள் தன் நூலில் விளக்கியுள்ளார்.

7ம் பிரிவில் யோபு வெளிப்படுத்தும் கோபம், பல விவிலிய விரிவுரையாளர்களை சங்கடம் அடையச் செய்துள்ளது. "யோபு துன்புற்றபோது, எதிர்த்துப் போராடினார். ஆனால், ஆபிரகாம், தாவீது போன்றோர் துன்புற்றபோது, அதை, பொறுமையுடன் ஏற்றுக்கொண்டனர்" என்று சில விரிவுரையாளர்கள் கூறியுள்ளனர். "யோபு துன்புற்றபோது, கடவுளுக்கு எதிராக அவர் முறையீடு செய்யாமலிருந்திருந்தால், விவிலிய நாயகர்களில் அவரே அதிக அளவு பெருமை பெற்றிருப்பார்" என்று வேறு சில விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
யோபு ஆத்திரமடைந்ததைக் குறித்து தன் நூலில் விவாதிக்கும் ஹெரால்டு குஷ்னர் அவர்கள், கடவுள் மீது கோபப்படுவது, ஏற்றுக்கொள்ளக்கூடிய பண்புதானா என்ற கேள்வியை எழுப்புகிறார். இதற்குப் பதில் சொல்லும்போது, இறைவனுக்கு, போலி வார்த்தைகளால் முகத்துதி செய்பவர்களைவிட, நேரிய மனதுடன், உள்ளதை உள்ளவாறு சொல்பவர்கள் மேல் என்று குறிப்பிடுகிறார்.

உண்மையான அன்பு உள்ள இடத்தில், கோபமும் இருக்கும் என்று கூறும் குஷ்னர் அவர்கள், கணவன்-மனைவிக்கிடையே இருக்க வேண்டிய உண்மையான உறவைக் குறித்து பேசுகிறார். தன் கணவர்மீது உண்மையிலேயே அன்புகொண்டிருக்கும் மனைவி, அவரிடம் தன் வருத்தம், கோபம் இவற்றை வெளிப்படுத்தும் சுதந்திரத்தையும் பெற்றிருக்கவேண்டும். கணவருக்குப் பிடிக்காது என்ற காரணத்தால், தன் கோபத்தையும், வருத்தத்தையும் மூடி மறைத்து, புன்னகை செய்யும் மனைவி, உண்மையில் அன்பு காட்டுபவராக இருக்கமுடியாது.
அதேபோல், ஓர் இளைஞன், தன் பெற்றோருக்குப் பிடிக்காது என்று தானே நினைத்துக்கொண்டு, தன் உண்மையான உணர்வுகளை அவர்களிடம் வெளிப்படுத்தத் தயங்கினால், அங்கு, பெற்றோர்-பிள்ளைகளிடம் உண்மையான அன்பு இல்லை என்றே சொல்லவேண்டும்.

இவ்விரு எடுத்துக்காட்டுகளைக் கூறும், ஹெரால்டு குஷ்னர் அவர்கள், இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே உள்ள உறவில், உள்ளத்தின் உண்மை உணர்வுகளை மறைத்து, வெறும் புகழுரைகளாக மட்டும் நம் செபங்கள் இருந்தால், அது போலியான பக்தி என்று கூறியுள்ளார். இறைவன் மீது ஆழ்ந்த, உண்மையான அன்பு கொண்டதாலேயே, யோபு, அவர் மீது தன் கோபத்தையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினார் என்று, குஷ்னர் அவர்கள் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இறைவன் மீது அச்சம் கொண்டு உருவாகும் ஓர் உறவினால், நாம் இறைவன் முன் ஓர் அடிமையாக ஆராதனை செய்யமுடியும், அத்தகைய இறைவன் மீது அன்பு உருவாகாது. என் புகழுரைகளை மட்டும் கேட்கும் கடவுளைக் காட்டிலும், ஆத்திரத்தோடு நான் வெளிப்படுத்தும் என் உண்மை உணர்வுகளுக்குச் செவிமடுக்கும் இறைவனையே நான் வழிபட விரும்புகிறேன் என்று, ஹெரால்டு குஷ்னர் அவர்கள், யோபு நூல் 6,7 பிரிவுகள் பற்றிய தன் விளக்கத்தை நிறைவு செய்துள்ளார்.

யோபின் 2வது நண்பர், பில்தாது கூறிய அறிவுரைகளும், அவற்றிற்கு யோபு அளித்த பதிலுரையும் நம் அடுத்த தேடலை வழிநடத்தும்.