29 June, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல்கள் 14,53 – இறைப்பற்று இல்லார் 1

The Fool says - There is no God

வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு முக்கியப் பிரச்சனையை, இன்றைய விவிலியத்தேடலில் சிந்திக்க முயல்வோம். 'வாழ்வின் முக்கியப் பிரச்சனை' என்று நான் குறிப்பிட்டதும், நம் உள்ளங்களில் பல்வேறு எண்ணங்கள் எழுந்திருக்க வாய்ப்புண்டு. கோவிட் பெருந்தொற்றினால் உருவாகியுள்ள நலம்சார்ந்த பிரச்சனை, குடும்ப உறவுகளில் நிலவும் பிரச்சனை, நம் வேலை தொடர்பான பிரச்சனை, நம் பிள்ளைகளின் கல்வி, மற்றும், எதிர்காலம் பற்றிய பிரச்சனை, என்று, பல பிரச்சனைகள், வாழ்வின் முக்கியப் பிரச்சனைகளாக நமக்குத் தோன்றியிருக்கலாம். நாம் இன்று சிந்திக்க வந்திருப்பது, இவை அனைத்தையும்விட முக்கியமான, அடித்தளமான ஒரு பிரச்சனை. அதுதான், கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்சனை.

இவ்வாறு நான் சொன்னதும், நம்மில் பலர், ", அந்தப் பிரச்சனையா?" என்று சொல்லியிருக்கக்கூடும். "ஓ, அந்தப் பிரச்சனையா?" என்ற அந்தக் கேள்வியில், கொஞ்சம் ஏமாற்றம், கொஞ்சம் அலட்சியம், கொஞ்சம் சலிப்பு ஆகியவை கலந்திருப்பதை நாம் உணரலாம். வாழ்வில் முக்கியம் என்று நாம் கருதும் பிரச்சனைகள் நடுவே, கடவுள் முதலிடம் வகிக்கவில்லை என்பதை, ஏமாற்றம், அலட்சியம், சலிப்பு ஆகிய உணர்வுகளால் வெளிப்படுத்துகிறோம். கடவுள் நம் வாழ்வில் முதலிடம் வகிக்கவில்லை என்றாலும், நம் எண்ணங்களின் ஏதோ ஒரு மூலையில் அவர் இருக்கிறார் என்பது உண்மை. இந்தப் பெற்றுந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகளும், வேதனைகளும் நம்மில் பலருக்கு கடவுளைப்பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது என்பதை மறுக்க இயலாது. கடவுள் இருக்கிறாரா, இல்லையா? அவர் இருந்தால், என்னதான் செய்துகொண்டிருக்கிறார்? போன்ற கேள்விகள், கட்டாயம், நம் வாழ்வில், அவ்வப்போது, அல்லது, அடிக்கடி எழுந்திருக்கும்.

கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியை இன்று நாம் சிந்திப்பதற்கு ஒரு  முக்கியக் காரணம், இன்று நாம் தேடலை மேற்கொண்டுள்ள திருப்பாடல்கள் 14 மற்றும் 53. ஏறத்தாழ ஒரே சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இவ்விரு திருப்பாடல்களும் 'இறைப்பற்று இல்லார்' என்று தலைப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இப்பாடல்கள், இறைவன்மீது பற்றின்றி வாழ்வோரைப்பற்றி அல்ல, மாறாக, இறைவன் என்று ஒருவர் இல்லை என்று சொல்வாரைக் குறித்து எழுதப்பட்டுள்ளன. "கடவுள் இல்லை என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக்கொள்கின்றனர்" (திருப்பாடல் 14:1, 53:1) என்ற அறிமுக வரிகளுடன் துவங்கும் இத்திருப்பாடல்கள், நம்மை, ஓர் ஆன்மீகத்தேடலுக்கு அழைக்கின்றன.

'கடவுள் இல்லை' என்ற கூற்றை, அறிவிலிகள் தங்களுக்குள் சொல்லிக்கொள்கின்றனர் என்று திருப்பாடலின் ஆசிரியர் கூறியுள்ளது, முதலில் நம் கவனத்தை ஈர்க்கிறது. தாவீது வாழ்ந்த காலத்தில், 'கடவுள் இல்லை' என்ற கூற்று, அல்லது, எண்ணம், அவரவர் உள்ளத்தில் இருந்தது, அது வெளியில் பறைசாற்றப்படவில்லை என்ற கருத்து, முதல் வரியிலேயே நமக்கு உணர்த்தப்படுகிறது. ஆனால், இன்றைய உலகில், 'கடவுள் இல்லை' என்ற கூற்றை மிக எளிதாக நாம் கேட்கமுடிகிறது. அதுவும், அறிவியலில் பல ஆய்வுகள் செய்துள்ள அறிஞர்கள், 'கடவுள் இல்லை' என்று கூறுவதை, ஒரு பொழுதுபோக்காக, அல்லது, தங்கள் வாழ்வின் முக்கியப்பணியாக செய்துவருவதை நம்மால் காணமுடிகிறது.

'கடவுள் இல்லை' என்ற கடவுள் மறுப்பு நிலை, கடவுளுக்கு எதிராகச் சொல்லப்படும் கூற்றா, அல்லது, மதங்கள் காட்டும் கடவுளுக்கு எதிராகச் சொல்லப்படும் கூற்றா என்பதை முதலில் நாம் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றிற்கு அடித்தளமிட்டவர்களில் ஒருவரான, ஈ.வே.ரா.பெரியார் அவர்கள், 'கடவுள் இல்லை' என்று முழக்கமிட்டவர் என்பதை வரலாற்றில் காண்கிறோம். அவரது 'கடவுள் இல்லை' முழக்கத்தை இருவேறு வழிகளில் புரிந்துகொள்ளலாம். பெரியார் அவர்கள், ‘கடவுள் என்ற உண்மை இல்லை என்பதைக் கூறினாரா, அல்லது, சாதிய வேறுபாடுகளை வலியுறுத்திய பிராமணர்கள் முன்வைத்த அநதக் கடவுள் இல்லை என்பதைக் கூறினாரா என்ற விவாதம், இன்றும் தொடர்ந்துவருவதை அறிவோம். பெரியாரின் கடவுள் மறுப்பைக் குறித்து எழுந்துள்ள இந்த இருவேறு கருத்துக்களைப் போலவே, மனித வரலாற்றில், பல்வேறு நாடுகளில், பல்வேறு வடிவங்களில், கடவுள் மறுப்புக் கொள்கைகள் உருவெடுத்தன.
இன்று உலகில் நிலவும் கடவுள் மறுப்பு கொள்கை, உண்மையிலேயே கடவுளை மறுக்கிறதா, அல்லது, அநீதிகளைப் பின்பற்றும் மத அமைப்புக்கள் கூறும் கடவுளை மறுக்கிறதா? என்ற கேள்வியை நாம் சிந்திப்பது பயனுள்ள முயற்சி.

National Geographic என்ற இணைய இதழில், 2016ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், "The World's Newest Major Religion: No Religion", அதாவது, "உலகின் மிகப் புதிதான பெரும் மதம்: மதம் அற்ற நிலை" என்ற தலைப்பில்கட்டுரையொன்று வெளியானது. கேப் புல்லார்ட் (Gabe Bullard) என்பவர் எழுதியிருந்த இக்கட்டுரையின் ஆரம்பத்தில், 21ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து, பல மதப்பாரம்பரியங்கள், படிப்படியாகக் குறைந்து, மறைந்து வருவதைப் பற்றிய புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன.

Time ஆங்கில இதழ், 55 ஆண்டுகளுக்கு முன், 1966ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஓர் அட்டைப்படத்தை வெளியிட்டது. "Is God Dead?", அதாவது, "கடவுள் இறந்துவிட்டாரா?" என்ற கேள்வி, அந்த அட்டைப்படத்தில், பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது. 1923ம் ஆண்டு முதல் தன் வாரஇதழை வெளியிட்டுவந்த Time நிறுவனம், தன் அட்டைப்படத்தில், நிகழ்வுகள் அல்லது மனிதர்கள் ஆகியோரை படங்களாக வெளியிட்டன. முதன்முதலாக, 1966ம் ஆண்டு, ஏப்ரல் 6ம் தேதி வெளியிட்ட இதழில், "Is God Dead?" என்ற மூன்று சொற்களை மட்டும் அட்டைப்படத்தில் அச்சிட்டது, இந்த அட்டைப்படம், பலரின் கவனத்தை ஈர்த்ததோடு, பெரும் விவாதங்களையும் எழுப்பியது.

Time இதழ் வெளியிட்ட இந்தக் கேள்வியைப்பற்றி தன் கட்டுரையில் குறிப்பிடும் புல்லார்ட் அவர்கள், இன்றும் இந்தக் கேள்வி, நம்மிடையே பலமுறை எழுப்பப்படுகிறது என்று கூறுகிறார். 'கடவுள் இறந்துவிட்டாரா' என்ற கேள்விக்கு, சுருக்கமான 'ஆம்' அல்லது, 'இல்லை' என்ற பதில்கள், நாம் வாழும் காலத்தில் கிடைக்கப்போவதில்லை என்று கூறும் புல்லார்ட் அவர்கள், இந்த Time இதழ் வெளியான ஆண்டுக்குப்பின், கடந்த 50 ஆண்டுகளில் பிறந்து வளர்ந்தவர்களிடம், 'கடவுள் இறந்துவிட்டாரா' என்ற கேள்வியைக் கேட்டால், பதிலுக்கு, 'கடவுளா, அது யார்?' என்ற கேள்வி எழக்கூடும் என்று புல்லார்ட் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
கடவுளைப்பற்றியும், மதத்தைப்பற்றியும் அக்கறையில்லை என்று சொல்லிக்கொள்ளும் போக்கு, 21ம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் பரவிவரும் அதே வேளையில், கடவுளைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம்கொண்ட இளையோரின் எண்ணிக்கையும் கூடிவருவதை நம்மால் காணமுடிகிறது.

கடவுள் மறுப்பு, கடவுள் நம்பிக்கை என்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் நூல்கள், பல ஆண்டுகளாக நம் மத்தியில் வலம்வருவதை அறிவோம். அவற்றில், கடந்த 20 ஆண்டுகளில் வெளிவந்த சில நூல்கள், நாம் மேற்கொண்டுள்ள தேடலுக்கு உதவியாக உள்ளன.

Norman Geisler, Frank Turek என்ற இரு எழுத்தாளர்கள் "I Don't Have Enough Faith to Be an Atheist", அதாவது, "ஒரு கடவுள் மறுப்பாளராக இருக்கத் தேவையான அளவு நம்பிக்கை என்னிடம் இல்லை" என்ற தலைப்பில், 2004ம் ஆண்டு, நூலொன்றை வெளியிட்டனர். இந்நூலின் முதல் பிரிவு, ”Can We Handle the Truth?” அதாவது, "உண்மையை நம்மால் கையாளமுடியுமா?" என்ற கேள்வியை முன்வைக்கிறது. இப்பிரிவு, வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) அவர்களது கூற்றுடன் ஆரம்பமாகிறது. "மனிதர்கள் அவ்வப்போது உண்மையின்மீது மோதி விழுகின்றனர். ஆனால், அவர்களில் பலர், மீண்டும் எழுந்து, ஒன்றும் நிகழாததுபோல், விரைந்து செல்கின்றனர்" (“Men stumble over the truth from time to time, but most pick themselves up and hurry off as if nothing happened”) என்ற கூற்று, உண்மையைச் சந்திக்கும் சக்தி, நாம் வாழும் அவசர உலகில் பலருக்கு இல்லை என்பதைக் கூறுகிறது. உண்மையை நாம் சந்திக்கும்போதும், அதன்மீது மோதும்போதும், உண்மை நம்மை பாதித்துவிடக்கூடாது என்ற பதட்டத்தில், அச்சூழலைவிட்டு விரைவில் வெளியேற முயல்கிறோம் என்று முதல் பிரிவில் கூறும் இந்நூலின் ஆசிரியர்கள், "A Few Good Men" என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியைக் குறிப்பிடுகின்றனர்.

கடற்படையைச் சேர்ந்த ஒரு தளபதி, தனக்குக்கீழ் பணியாற்றிய ஒரு வீரரைக் கொல்வதற்கு, வேறு இரு வீரர்களுக்கு அனுமதி அளித்தார் என்பதை நிரூபணம் செய்யும் ஒரு வழக்கு, இத்திரைப்படத்தின் கருவாக அமைந்துள்ளது. கொல்லப்பட்ட வீரரின் சார்பில் இந்த வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர், நீதிமன்றத்தில், தளபதியை, கேள்விகளால் துளைத்தெடுக்கிறார். ஒரு கட்டத்தில், "உண்மையைச் சொல்லுங்கள்" என்று கத்துகிறார், வழக்கறிஞர். அப்போது அந்த தளபதி அவரிடம், "உண்மையை உன்னால் கையாளமுடியாது" என்று பதிலுக்குக் கத்துகிறார்.
"உண்மையை உன்னால் கையாளமுடியாது" என்று அத்தளபதி கூறுவது, 21ம் நூற்றாண்டில் வாழும் பலரை நோக்கி விடுக்கப்படும் ஒரு சவால் என்று இந்நூலின் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் முன்வைக்கும் ஒரு விவாதம் நம் கவனத்தை ஈர்க்கிறது. "நம் வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் உண்மை இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எடுத்துக்காட்டாக, நாம் அன்புசெலுத்தியவர்கள் நம்மிடம் உண்மையாக இருக்கவேண்டும், நமது மருத்துவர்கள் நம் உடல்நலம் பற்றிய உண்மைகளை நேரடியாகச் சொல்லவேண்டும், நமக்குக் கீழ் பணியாற்றுவோர், நமக்குச் சொல்லித்தரும் ஆசிரியர்கள், அரசில் பணியாற்றுவோர் எல்லாரும் உண்மை பேசவேண்டும். நாம் காணும் செய்திகள், நாம் வாங்கும் பொருள்களில் எழுதப்பட்டுள்ள விவரங்கள், எல்லாவற்றிலும் உண்மை இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆனால், வாழ்வில், மிக முக்கியமாக விளங்கும் மதம் சார்ந்த, அல்லது நன்னெறி சார்ந்த விடயங்களில் உண்மையைச் சந்திக்க மறுக்கிறோம். அதற்கும் மேலாக, மதம் உண்மையாக இருக்கமுடியாது என்று, நாமாகவே, எவ்வித ஆதாரமும் இன்றி முடிவெடுக்கிறோம் என்று Norman Geisler, Frank Turek என்ற ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

நம் வாழ்வின் அடித்தளமாக விளங்கும் கடவுள் என்ற உண்மையைச் சந்திக்க மறுக்கும் மனிதர்களைக் குறித்து, 14, மற்றும் 53ம் திருப்பாடல்களில் கூறப்பட்டுள்ள எண்ணங்களில், நம் தேடல் பயணம், அடுத்தவாரம் தொடரும்.

25 June, 2021

God did not make death சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை

 
God did not make death

13th Sunday in Ordinary Time

In December 2019 it was a ripple in Wuhan, China and today it is a tsunami that has devastated many countries in the world. That is the story of COVID-19, in brief! What began as an unknown virus attacking ‘some’ people unknown to us, has reached the inner circles of our families. All of us has had a close encounter with death, courtesy COVID!
Even after 18 months, no clear theories have emerged as to how this virus erupted and what are the adverse effects of this virus in our body. There have been at least 18 various theories in these 18 months.

We know that those working in the medical field are not models of humility. There are exceptions, of course, but they are only that - EXCEPTIONS! The normal doctor, or, the so-called medical expert, hardly accepts that his/her knowledge of this virus, as well as all the other diseases is limited. Instead of accepting this obvious truth, they tend to propose various interpretations as to what is happening to our body. In order to make this sound impressive, they propose a battery of tests, most of which are not necessary at all.

Similar to these ‘medical experts’ who propose half-baked theories and hit-and-go solutions, there have been ‘spiritual experts’ who have tried to explain the why of this deadly virus. Their easy theory is that God has sent this virus into the world as a punishment for our misdeeds. Amidst all the cacophony of these spiritual experts, today’s First Reading from the Book of Wisdom clearly states that God is only on the side of life and not of death:
Wisdom 1: 13-15; 2: 23-24
God did not make death, nor does he rejoice in the destruction of the living. For he fashioned all things that they might have being, and the creatures of the world are wholesome; There is not a destructive drug among them nor any domain of Hades on earth, for righteousness is undying. For God formed us to be imperishable; the image of his own nature he made us. But by the envy of the devil, death entered the world, and they who are allied with him experience it.

In the past 18 months, at least one truth has been nailed into us. Our insatiable selfish aggression of nature has brought about not only the dangerous climate changes, but, also this destructive virus. It is ‘by the envy of the devil (called selfishness) death entered the world’! As if the scourge of death brought about by this virus is not enough, we have witnessed the selfish world leaders engaged in various types of massacres throughout the world even during this pandemic.

The most recent massacre was carried out by the Israel government against hapless Palestinians in Gaza. An outbreak of violence in the Israeli–Palestinian conflict commenced on 10 May 2021, and continued until a ceasefire came into effect on 21 May. Israel began a campaign of airstrikes against Gaza; by 16 May, some 950 targeted attacks had demolished, completely or partially: 40 schools and four hospitals. In addition, at least 19 medical facilities have been damaged or destroyed by Israeli bombardment. By 17 May, the United Nations estimated that Israeli airstrikes destroyed 94 buildings in Gaza, comprising 461 housing and commercial units. As a result of the violence, at least 256 Palestinians, including 66 children, have been killed. (Wikipedia)

Just two days before the ceasefire came into effect, 19 May, BBC website published an article titled:  Israel-Gaza violence: The children who have died in the conflict. The opening lines of this article goes like this: When an Israeli strike hit al-Wihda street in central Gaza City early on Sunday, at least 13 members of the extended al-Kawalek family are believed to have been killed, buried in the rubble of their own home. Many of the victims were children, with one said to be as young as six months.

The article then goes on to explain the children killed in that airstrike, with their photos – all innocent and charming. One of the photos published in this article pained me a lot. It was a picture circulating online. It showed 10-year-old Aziz al-Kawalek, the only surviving member of his direct family, sitting by his mother's body. Aziz was looking at his mother’s body, wrapped in a white cloth. There was no emotion in his face, only a blank, forlorn look!
This picture, to me is a sample of what our present world is doing to children. For no fault of theirs, they have to face an agonizing future. I am thinking of the hundreds of thousands of children who have lost their parents and loved ones due to this pandemic and due to the various conflicts raging in Gaza, Myanmar, Syria (for more than 10 years) and many countries in Africa.

The present generation with its atrocious selfishness, have sacrificed children on the altar of greed. As against this situation, the Gospel passage invites us to reflect on how to respect life. For the Israelites, blood is a source of life and energy as long as it runs within the human body. Once blood oozes out of human beings in the form of disease, then that person is considered impure, almost ‘untouchable’. This is the case presented to us in today’s Gospel.

All the three synoptic gospels talk of the two events we read in today’s Gospel. (Mt. 9: 18-26; Mk. 5: 21-43; Lk. 8: 40-56) A casual reading of this passage, makes us feel as if the evangelists have artificially contrived to put these two events together. But, a closer analysis would show us quite a few insights.
Both the persons cured by Jesus are female figures, one, a lady, who was suffering from a flow of blood for TWELVE YEARS… the other, a child, who was TWELVE YEARS old!
The lady was gradually losing her life for twelve years, while the child, growing in life for 12 years, suddenly loses it!
The lady with a flow of blood took the effort to touch the garment of Jesus, while Jesus took the effort to go to the house of Ja'irus to touch and raise the child from her deathbed.

When I was reading this passage, I found another important reason why these two events were put together. To me, these events, considered together, teach us an important lesson about how God acts in our lives and in the world. God can… and, usually, does make fringes the centre and vice versa!

Today’s Gospel passage begins with an exciting news… Then came one of the rulers of the synagogue, Ja'irus by name; and seeing Jesus, he fell at his feet, and besought him, saying, "My little daughter is at the point of death. Come and lay your hands on her, so that she may be made well, and live." (Mk. 5: 22-23)

Ja'irus falling at the feet of Jesus was headline news. This news must have spread like wild fire in the town. More than the news of a dying child, the ruler of a synagogue falling at the feet of Jesus must have been the talk of the town. Naturally a large crowd gathered, and, hence we read: And a great crowd followed him and thronged about him. (Mk. 5: 24)
Ja'irus falling at the feet of Jesus and Jesus being followed by a large crowd are great ‘centre-stage’ events. But, if we read this passage carefully, we can see that these were not the key events. The incident of the woman with the flow of blood becomes more important.

A lady…
A sick lady…
A lady with a flow of blood… was thrice discriminated in the Jewish society. And she was in the crowd trying to touch Jesus… She knew full well that she was taking a great risk. All those whom she touched, were, according to the law, becoming defiled. If this came to light, she would be stoned to death. Knowing the implications of all these, still, she went ahead and broke the law. She knew that for Jesus these rigid laws were meaningless. She was confident that the whole person of Jesus was a source of healing, including the hem of his garments! With all the trust she had built up, she approached Jesus, touched his garments and was instantly healed!

Jesus, who shunned all publicity, acted strangely in this case. He could have easily allowed the lady to go home healed, but unnoticed. But, He had other ideas. He did not wish to leave her in the fringes, and wanted to bring her to the centre of the crowd. Bringing this lady to the centre was a big risk. The crowd could have easily turned hostile and stoned her to death for defiling all of them. Jesus knew this risk. Still, he wanted to do this!

He wanted the lady to be healed, not only physically but also emotionally. Through her healing, he also wanted her to heal the crowd. Hence, Jesus brought the lady to the centre and made her speak the whole truth… the truth of her 12 years of agony suffered at the hands of society. When Jesus told her: "Daughter, your faith has made you well; go in peace, and be healed of your disease" (Mk. 5:34), we can easily imagine that he also told her, “Daughter, you have also healed this society. Go in peace!” Jesus had the consummate art of bringing the fringe-people to the centre of the human society!

After this event, the original story continues – namely, the healing of Ja'irus’ daughter. This ‘news-worthy’ event began with a bang, with a great thronging crowd. But, when the real miracle took place, there were very few people around Jesus. Even these few were strictly forbidden to speak about the event. And he strictly charged them that no one should know this (Mk. 5:43). The evangelists of the synoptic Gospels, by putting these two events together, tell us clearly that God’s way of looking at events are very different from ours!
God can… and, usually, does make fringes the centre, and vice versa!

We hope and pray that in the post-pandemic world we learn to appreciate the gift of life God has given to each of us and cherish this gift. May God teach us the difference between what is truly essential (centre) and what is superfluous (fringes). May God help us to care for our children and leave a hope-filled world for them.

A Flow of Blood and a Raising from the Dead

பொதுக்காலம் 13ம் ஞாயிறு

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், உலகின் ஏதோ ஒரு மூலையில், யாரோ ஒரு சிலர் நடுவே பரவியிருந்த ஒரு தொற்றுநோய், அடுத்த சில நாள்களில், வாரங்களில், பல நாடுகளில் பரவியது. 2020ம் ஆண்டின் துவக்கத்தில், இந்த நோய்க்கு ஒரு பெயர் சூட்டி, தற்போது, 'கோவிட்-19' என்ற பெருந்தொற்று, அனைவரும் பயந்து ஒதுங்கும் நோயாக மாறிவிட்டது. எங்கோ, யாருக்கோ என்று ஆரம்பமான ஒரு நோய், நமக்கு மிக அருகில், நம் உறவினர் நடுவே பரவியபோது, மரணத்தை நாம் மிக அருகில் சந்திக்க ஆரம்பித்தோம்.

18 மாதங்கள் கடந்தபின்னரும், இந்த நோயின் ஆரம்பம், இது நமக்குள் உருவாக்கும் தாக்கங்கள் ஆகியவற்றைக் குறித்து, மருத்துவ உலகம் வெவ்வேறான கருத்துக்களை வெளியிட்டுவருகிறது. பொதுவாகவே, ஒரு நோயைக்குறித்து, அதுவும், புதிதாகத் தோன்றியுள்ள ஒரு நோயைக்குறித்து, தெளிவான ஆய்வுகளும், முடிவுகளும் வெளிவராத வேளையிலும், மருத்துவர்கள், தங்களுக்கு இந்நோயைப்பற்றித் தெரியாது என்பதை, அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதற்குப் பதிலாக, தங்களுக்குத் தெரிந்த அரைகுறை கருத்துக்களை, கோட்பாடுகளாக, உண்மைகளாக சொல்ல முற்படுவர்.

உடல் மருத்துவர்களைப்போலவே, உள்ள மருத்துவர்களான, ஆன்மீகவாதிகளும், மதத்தலைவர்களும், உலகில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளைப்பற்றி, தங்களுக்கு சரிவரத் தெரியவில்லை என்றாலும், அவற்றை, கடவுளோடு தொடர்புபடுத்தி, அரைகுறையான, அவசரமான, சிலவேளைகளில், தவறான கோட்பாடுகளை, மக்கள்மீது திணிக்க முயல்வதைக் காணலாம். மரணத்தைக் கொணர்ந்துள்ள கோவிட்-19 பெருந்தொற்று, கடவுளிடமிருந்து தண்டனையாக வந்துள்ளது என்று, ஆன்மீகவாதிகள் எழுப்பிவரும் குரல்களுக்கு மத்தியில், இன்றைய முதல் வாசகம், கடவுளுக்கும், மரணத்திற்கும் தொடர்பில்லை என்ற உண்மையை உரக்கக்கூறுகிறது. அரைகுறை ஆன்மீகவாதிகளுக்கு செவிமடுப்பதற்குப் பதில், சாலமோனின் ஞான நூல் வழியே, இறைவன் உணர்த்தும் உண்மைக்கு செவிமடுப்போம்:
சாலமோனின் ஞான நூல் 1: 13-15; 2: 23-24
சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை.
கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.

அழிவைத் தரும் நஞ்சு எதுவும் இல்லாத உலகையும், நலம் நிறைந்த வாழ்வையும் கடவுள் உருவாக்கினார் என்றும், அலகையின் பொறாமையால் சாவு இவ்வுலகில் நுழைந்தது என்றும் சாலமோனின் ஞான நூல் தெளிவாகக் கூறியுள்ளது.

சாவை இவ்வுலகில் நுழைத்த கோவிட்-19 கிருமி, நிச்சயமாக இறைவனிடமிருந்து வரவில்லை, அது, மனிதர்களாகிய நம்மை அடிமைப்படுத்தியிருக்கும் சுயநலம் என்ற அலகையினால் நுழைந்தது என்பது, மிக, மிக தெளிவாக நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இத்தகையத் தெளிவான பாடங்களை உணரமறுத்து, இந்த பெருந்தொற்று காலத்திலும், தங்கள் ஆணவத்தையும் அதிகாரத்தையும் நிலைநாட்ட, உயிர்ப்பலிகள் நிகழ்த்திவரும் சுயநலத்தலைவர்களை இவ்வேளையில் எண்ணி வேதனையடைகிறோம். இந்த சுயநலத்தின் கோரவடிவங்களில் ஒன்றாக, இஸ்ரேல் அரசு, புனிதபூமியின் காசாப்பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்கள்மீது நடத்திய தாக்குதல்களை எண்ணிப்பார்க்கலாம்.

இவ்வாண்டு மே மாதம், இஸ்ரேல் அரசு, காசாப்பகுதியில் மேற்கொண்ட வெறித்தனமான வான்வழித் தாக்குதல்களில், பாலஸ்தீன மக்களின் குடியிருப்புக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் அழிவுற்றன. கொல்லப்பட்ட 256 பாலஸ்தீன மக்களில், 66 குழந்தைகள், 35 பெண்கள், 16 வயதுமுதிர்ந்தோர் அடங்குவர். இத்தாக்குதல்களைக் குறித்து, பிபிசி இணையத்தளம், மே 19ம் தேதி வெளியிட்டச் செய்தி நம் உள்ளத்தை வதைத்தது. அச்செய்தியில், கொல்லப்பட்ட குழந்தைகளின் படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அத்துடன், இந்தத் தாக்குதல்களால் தங்கள் குடும்பத்தினரை இழந்துள்ள ஒரு சில குழந்தைகளின் படங்களும் வெளியாயின. அவற்றில், 10 வயதான Aziz al-Kawalek என்ற சிறுவனின் படம் நம் உள்ளத்தைக் கீறி வதைக்கின்றது.

சிறுவன் அஸீஸின் குடும்பத்தினர் அனைவரும், இஸ்ரேல் அரசின் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர். ஏதோ ஒரு தற்காலிக் கூடாரத்தில், சிறுவன் அஸீஸ், கொல்லப்பட்டு, போர்வையால் மூடப்பட்டுள்ள தன் அம்மாவின் உடலருகே, வெறித்த பார்வையுடன் அமர்ந்திப்பதை, இந்தப் படத்தில், காணமுடிகிறது. பெரியவர்களாகிய நாம் செய்துள்ள தவறுகள், நம் அடுத்த தலைமுறையை எவ்வளவுதூரம் பாதிக்கின்றன எனபதை உணர்த்தும் ஆயிரமாயிரம் செய்திப்படங்களில் இதுவும் ஒன்று.

கோவிட் பெருந்தொற்றினால் பெற்றோரை இழந்து தவிக்கும் பல்லாயிரம் குழந்தைகள், இந்நாள்களில், நம் சிந்தனைகளில் வலம்வருகின்றனர். இவர்களுக்கு அரசுகள் உதவித்தொகைகள் வழங்கிவருவதை நாம் அறிவோம். இந்த உதவித்தொகை ஏதோ ஒரு வகையில் இக்குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், எவ்வித தவறும் செய்யாத அக்குழந்தைகள் இழந்துள்ள குழந்தைப்பருவத்திற்கு என்ன உதவியை நாம் வழங்கமுடியும்? பெருந்தொற்று கொணர்ந்துள்ள மரணங்கள் போதாதென்று, இஸ்ரேல், மியான்மார், சிரியா, ஒரு சில ஆப்ரிக்க நாடுகள் ஆகியவற்றில் நடைபெறும் தாக்குதல்களில் குழந்தைகள் பலியாவது எவ்வகையில் நியாயம்?

உயிர்களின் மதிப்பையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பற்றி சற்றும் அக்கறை கொள்ளாத நம் தலைமுறைக்கு, இந்த உண்மைகளை உணர்த்த, இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள இரு புதுமைகள் உதவியாக இருக்கும். மேலோட்டமாகப் பார்க்கும்போது, தொடர்பற்ற இருவேறு புதுமைகள் இணைக்கப்பட்டுள்ளதைப்போல் தோன்றலாம். ஆனால், ஆழமாகச் சிந்திக்கும்போது, அழகான ஒப்புமைகளும், வேற்றுமைகளும் வெளியாகும்.
இரு பெண்கள் குணமடைகின்றனர். நோயுள்ள ஒரு பெண்ணும், நோயுற்று இறந்த ஒரு சிறுமியும் இயேசுவால் வாழ்வுபெறுகின்றனர். நோயுள்ள அந்தப் பெண், பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால், தன் உயிரை, கொஞ்சம், கொஞ்சமாய் இழந்து வந்தவர். சிறுமியோ, அதே பன்னிரு ஆண்டுகளாய், சுகமாக, மகிழ்வாக வாழ்ந்து, திடீரென உயிரிழந்தவர்.
இரத்தப்போக்கு நோயுள்ள பெண், தானே வலியவந்து, இயேசுவைத் தொடுகிறார். அதுவும், பிறருக்குத் தெரியாமல், கூட்டத்தோடு, கூட்டமாய் வந்து, அவரது ஆடையின் விளிம்புகளைத் தொடுகிறார். குணமடைகிறார். உயிரிழந்த சிறுமியையோ, இயேசு, தேடிச்சென்று, தொட்டு உயிரளிக்கிறார்.

இவ்விரு நிகழ்வுகளையும் நற்செய்தியாளர் மாற்கு இணைத்து சொல்லியிருப்பது, நம் வாழ்வுக்குத் தேவையான ஒரு முக்கியமானப் பாடத்தைச் சொல்லித்தருகின்றது. நாம் மையம் என்று கருதுபவை ஓரமாகவும், ஓரங்கள் மையமாகவும் மாறும் என்பதே, அந்தப் பாடம். இந்த எண்ணத்தை சிறிது ஆழமாகச் சிந்திப்பது பயனளிக்கும்.

இறக்கும் நிலையில் இருக்கும் தன் மகளை, காக்க வரும்படி, தொழுகைக்கூடத்தின் தலைவன் யாயிர், இயேசுவின் கால்களில் விழுந்தார் என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இது சாதாரண செய்தி அல்ல, தலைப்புச் செய்தி. நமது ஊடகங்கள் அன்று இருந்திருந்தால், இந்நிகழ்வைப் பலவாறாகத் திரித்துச் சொல்லியிருக்கும். ஒரு சிறுமி சாகக்கிடக்கிறார் என்ற முக்கிய செய்தியைவிட, தொழுகைக்கூடத்தின் தலைவன் யாயிர், இயேசுவின் கால்களில் விழுந்தார் என்ற செய்தியைப் பெரிதுபடுத்தி, அதை, முதல் பக்கத்தில், படமாக வெளியிட்டு, யார் பெரியவர் என்ற விவாதத்தைக் கிளறியிருக்கும்.
ஒருவேளை, இயேசுவின் காலத்திலும் இந்தக் கேள்வி எழுந்திருக்கக்கூடும்! யாருக்கு? இயேசுவுக்கா? யாயிருக்கா? இல்லை. குழந்தையின் நலனில் அக்கறைகொண்ட யாயிருக்கும், இயேசுவுக்கும் இந்த எண்ணமே எழுந்திருக்காது. இவ்விருவரையும் சுற்றி இருந்தவர்களுக்கு, அந்தக் கேள்வி எழுந்திருக்கும்.

யாயிரின் வேண்டுதலைக் கேட்டு, இயேசு புறப்பட்டபோது, 'பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்' என்று நற்செய்தி சொல்கிறது. இந்த ஊர்வலமும் முக்கியச் செய்திதான். ஆனால், இதுவரை நாம் சிந்தித்த எதுவும் இன்றைய நற்செய்தியின் முக்கியச் செய்தி அல்ல. உலகின் பார்வைக்கு மையமாகத் தெரியும் இவை அனைத்தும், ஓரங்களில் ஒதுக்கப்பட்டன. ஓர் ஓரத்தில் ஆரம்பித்த நிகழ்வு, மையமாக மாறியது. அதுதான், பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் துன்புற்ற பெண், குணமடைந்த நிகழ்வு.

பெயரற்ற அந்தப் பெண் கூட்டத்தில் இருந்தார். ஒரு பெண், நோயுள்ள பெண், அதுவும் இரத்தப்போக்கு நோயுள்ள பெண், கூட்டத்தில் இருந்தார் என்பது, யூதர்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும். இரத்தப்போக்கு நோயுள்ள பெண், சமுதாயத்தினின்று விலக்கி வைக்கப்படவேண்டும் என்பது, இஸ்ரயேலர்களின் விதி. ஆனால், இவரோ, கூட்டத்தின் மத்தியில் முண்டியடித்து முன்னேறிக் கொண்டிருந்தார். "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்ற ஒரே மந்திரம், அவரை உந்தித்தள்ளியது. நோயைக் காரணம்காட்டி, ஒருவரை விலக்கிவைக்கும் இதயமற்ற போலிச்சட்டங்கள், இயேசுவுக்கு முன்னால் பொசுங்கிப்போகும் என்று, அப்பெண்ணுக்கு நன்றாகத் தெரியும். அந்தத் துணிவில், அவர் முன்னேறிக் கொண்டிருந்தார்.
இருந்தாலும், அவருக்குள் ஒரு சின்ன பயம். முன்னுக்கு வந்து, முகமுகமாய்ப் பார்த்து, இயேசுவிடம் நலம் வேண்டிக்கேட்க ஒரு சின்ன பயம். அவருடைய பயம், இயேசுவைப்பற்றி அல்ல. அவரைச் சுற்றியிருந்த ஆண்களை, மதத்தலைவர்களைப்பற்றி.
கூட்டத்தின் மத்தியில், இயேசுவை அணுகுவதைத் தவிர, வேறு வழி அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை. கூட்டத்தில் நுழைந்தார், இயேசுவை அணுகினார். அவர்மீது தான் வளர்த்திருந்த நம்பிக்கையை எல்லாம் திரட்டி, அவரது ஆடையின் விளிம்பைத் தொட்டார். குணம்பெற்றார்.

"அவரது ஆடையின் ஓரங்கள் போதும் எனக்கு. குணம் பெற்றதும் கூட்டத்திலிருந்து நழுவிவிடலாம்" என்று எண்ணி வந்த பெண்ணை, இயேசு, ஓரங்களிலேயே விட்டுவிட்டுப் போயிருக்கலாம். விளம்பரங்களை விரும்பாத இயேசு, அங்கு நடந்த புதுமையைப் பெரிதுபடுத்தாமல் போயிருக்கலாம். ஆனால், அவருக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. கூட்டத்தில் குணமானப் பெண், கூட்டத்தையும் குணமாக்கவேண்டும் என்று இயேசு எண்ணினார். சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டவர்களை, மையத்திற்குக் கொண்டுவரும் கலை, இயேசுவுக்கு நன்கு தெரிந்த கலை.

இயேசு நின்றார். கூட்டமும் நின்றது. தன் மேலுடையைத் தொட்ட பெண்ணை கூட்டத்தின் மையத்திற்குக் கொணர்ந்தார். இயேசுவின் ஆடையைத் தொட்டதால் அந்தப் பெண் உடலளவில் குணமானார். இயேசுவின் இந்த அழைப்பு, அவர் மனதையும் குணமாக்கியது. பன்னிரு ஆண்டுகளாக, அந்தப் பெண்ணின் தலைமுதல் கால்வரை புரையோடிப் போயிருந்த வேதனைகள், வெறுப்புக்கள் எல்லாம் அப்போது கரைந்தன.
இரத்தப்போக்கு நோயுள்ள பெண்ணென்று தன்மீது தீட்டுக்களைச் சுமத்தி, தன்னை ஒதுக்கிவைத்த சமுதாயத்தின் மேல், அந்தச் சமுதாயத்தை சட்டங்களால் கட்டிப்போட்ட மதத்தலைவர்கள் மேல், இப்படிப்பட்ட ஒரு மதத்தின் மையமென்று சொல்லப்பட்ட அந்தக் கடவுள் மேல், பன்னிரு ஆண்டுகளாய் அந்தப் பெண் வளர்த்து வந்திருந்த வெறுப்புக்கள் எல்லாம், அந்தக் கணத்தில் விடைபெற்று மறைந்தன. விடுதலை பெற்றார் அவர்.

தன்னைக் கண்டதும், தன் கதையைக் கேட்டதும், அந்தக் கூட்டம் கொதித்தெழும், தங்களைத் தீட்டுப்படுத்தியப் பெண்ணைத் தீர்த்துக்கட்ட கல்லெடுக்கும் என்று அப்பெண்ணுக்குத் தெரியும். கல்லால் சமாதியே கட்டினாலும் பரவாயில்லை. தான் அடைந்த மீட்பைப்பற்றி அவர்களிடம் சொல்லவேண்டும் என்று அப்பெண் தன் கதையைச் சொன்னார். "நிகழ்ந்தது அனைத்தையும் அவர் சொன்னார்" (மாற்கு 5:33) என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. அவரது கதையைக் கேட்ட கூட்டம், அதிர்ச்சியில் உறைந்துநின்றது. இயேசு, அந்தப் பெண்ணிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" (மாற்கு 5:34) என்று சொன்னார். அவர் அவ்வாறு சொன்னபோது, "உன்னால், இன்று, இக்கூட்டத்தில் பலர் குணம்பெற்றனர். சட்டங்களுக்கும், சம்பிரதாயங்களுக்கும் அடிமையாகி, மனிதரை மதிக்கத்தெரியாமல் இறுகிப்போயிருந்த பலர், இன்று, உன்னால் குணம்பெற்றனர், சமாதானமாகப் போ!" என்று, இயேசு, ஆசீர் வழங்கி அனுப்பினார் என்று நாம் கற்பனைசெய்து பார்க்கலாம்.

இதன்பின், யாயிரின் மகள் குணமான நிகழ்வையும் இன்று நாம் வாசிக்கிறோம். இந்த நிகழ்வின்போது, அவ்வில்லத்தில் கூடியிருந்த அனைவரையும் இயேசு வெளியில் அனுப்பிவிட்டு, (மாற்கு 5:40) இப்புதுமையைச் செய்கிறார். தனிப்பட்ட வகையில் இந்தப் புதுமை நிகழ்ந்திருந்தாலும்தொழுகைக்கூடத் தலைவனின் மகள் உயிர்பெற்ற நிகழ்வு, அடுத்தநாள் தலைப்புச்செய்தியாக வந்திருக்கவேண்டும். ஆனால், இயேசு “‘இதை யாருக்கும் தெரிவிக்கக்கூடாது' என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்" (மாற்கு 5:43) என்று இன்றைய நற்செய்தி முடிவடைகிறது.

ஆரவாரமாக ஆரம்பித்த ஒரு நிகழ்வு யாருக்கும் தெரியக்கூடாது என்ற கட்டளையுடன் முடிகிறது. ஆனால், யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் ஆரம்பமான அந்தப் பெண்ணின் புதுமையை இயேசு ஊரறியச் செய்கிறார்.
ஓரங்கள் மையமாவதும், மையங்கள் ஓரமாவதும் இறைவனின் கணக்கு.

மரணம் என்ற நஞ்சை இவ்வுலகில் புகுத்திய பெருந்தொற்றின் தாக்கம் குறைந்தபின், நாம் தொடரப்போகும் காலத்தில், இறைவன் வழங்கியுள்ள வாழ்வு என்ற மிக உயர்ந்த கொடையை, நாம் ஒவ்வொருவரும் இன்னும் அதிகமாகப் பேணிக்காக்கும் அருளை இறைவனிடம் வேண்டுவோம். இந்த வாழ்வை, நாமும், நம்மைச் சுற்றியுள்ள உயிர்களும், குறிப்பாக, வருங்காலத் தலைமுறையினரும் முழுமையாக அனுபவிக்கும் வண்ணம், நமது தலைமுறையினரின் வாழ்வுமுறை, குறிப்பாக, அரசியல் தலைவர்களின் ஆணவ வழிமுறைகள் மாறவேண்டுமென மன்றாடுவோம்.