28 August, 2020

Like a fire shut up in my bones... எலும்புகளை எரிக்கும் எரிநெருப்பைப் போல...

 

His Word, like a burning fire

https://thepreachersword.com

22nd Sunday in Ordinary Time

When the Second Millennium – the 20th century – was coming to a close, many opinion polls were conducted on various aspects of the century. One of them was conducted by researchers at UW–Madison and Texas A&M University. They compiled the list reflecting the opinions of 137 leading scholars of American public address. The experts were asked to recommend speeches on the basis of social and political impact, and rhetorical artistry. The mastery and magic of Dr Martin Luther King Jr.’s famous “I Have a Dream” speech earned it top honours in a new list of the 100 best political speeches of the 20th century.

Here is a write-up about this famous speech, given in Wikipedia:

That speech delivered from the steps of the Lincoln Memorial, was a defining moment of the American Civil Rights Movement. Delivered to over 200,000 civil rights supporters, the speech was ranked the top American speech of the 20th century by a 1999 poll of scholars of public address. According to U.S. Representative John Lewis, who also spoke that day as the President of the Student Non-Violent Coordinating Committee, "Dr. King had the power, the ability, and the capacity to transform those steps on the Lincoln Memorial into a monumental area that will forever be recognized. By speaking the way he did, he educated, he inspired, he informed not just the people there, but people throughout America and unborn generations." (Wikipedia)

Yes, generations would have profited by this speech via channels like YouTube. We are thinking of this speech today, since we remembered this speech last Friday, August 28. We are also thinking of the speaker - Dr Martin Luther King Jr., since this Sunday’s liturgy invites us to reflect on the life of a prophet, a disciple of Christ. Martin, without doubt, was a prophet and a disciple of Christ in the 20th century.

Just to refresh our memory, here are a few lines from this famous speech:

I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed: "We hold these truths to be self-evident: that all men are created equal."

I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the colour of their skin but by the content of their character.

I have a dream today.

I have a dream that one day, down in Alabama, with its vicious racists, with its governor having his lips dripping with the words of interposition and nullification; one day right there in Alabama, little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers.

I have a dream today.

I have a dream that one day every valley shall be exalted, every hill and mountain shall be made low, the rough places will be made plain, and the crooked places will be made straight, and the glory of the Lord shall be revealed, and all flesh shall see it together.

Reading this speech in 2020, images of ‘black and white persons joining hands’ flood our minds, not as citizens of an equal society, but to protest against the killing of George Floyd (May 25) and the shooting of Jacob Blake (August 23) in the back, in front of his children. The protests organized in quite a few countries under the banner ‘Black Lives Matter’, tell us clearly that the dream of Martin Luther King is far from reality – not only in the U.S. but all over the world!

On the 57th anniversary of the famous speech “I Have a Dream”, the Bishops of the United States have urged Catholics to pray and fast for an end to racism. Bishop Shelton Fabre, chair of the anti-racism committee of the U.S. bishops’ conference, asked Catholics to pray and fast for an end to racism, either on Friday (Aug.28) or on September 9, the feast of St. Peter Claver – the Jesuit priest and abolitionist who ministered to African slaves in 17th-century South America.

The mainstream, as well as, social media in the U.S. enjoy relative freedom. Hence, the atrocities and the racial unrest in the U.S. have been seen by the whole world. Such atrocities do happen in other countries as well, but are not seen due to the control by the government.

I have watched “I Have a Dream” speech in the YouTube many times. I have been impressed with the way Martin Luther King got the whole crowd engaged in what he was saying. Although this was a political speech, it was received as a homily since people responded to his words with their approval of ‘Yes’ and ‘Amen’. Martin, a Baptist preacher, had interwoven the dreams of Prophets Isaiah and Amos along with his own.

Dr King not only spoke like a prophet but also led the life of a prophet. Most of the prophets were called to point out what was wrong with their society. They had to tell people the bitter truth. When Martin spoke about the racially segregated American society, and spelt out his dreams for that society, he was 36 years old. The very next year, in 1964, King became the youngest person to receive the Nobel Peace Prize. Four years later, in 1968, he was killed. No prophet has been accepted in his own country, or, for that matter, by the world at large.

Many Prophets, when they stood up against powerful kings, drunk with unlimited power, were killed mercilessly. The first martyr in the New Testament is St John the Baptist for challenging King Herod. On August 29, this Saturday we commemorated the beheading of St John. John was a fire-brand all through his life and he blazed a trail, which was followed by thousands of prophets!

The world tried to ‘integrate’ Prophets in the mainstream life and failed miserably. Hence, they were eliminated. Knowing that the life of a prophet is always to swim against the current, many prophets tried to flee from their mission. But God pursued them until they completed their mission. In the first reading today, Jeremiah expresses his agony of being a prophet.

Jeremiah 20:7-9

You deceived me, LORD, and I was deceived; you overpowered me and prevailed.

I am ridiculed all day long; everyone mocks me.

Whenever I speak, I cry out proclaiming violence and destruction.

So the word of the LORD has brought me insult and reproach all day long.

But if I say, “I will not mention his word or speak anymore in his name,” his word is in my heart like a fire, a fire shut up in my bones.

I am weary of holding it in; indeed, I cannot.

Truly agonising words!

Jesus, a model and an inspiration for all the Prophets, knew that the world around him would not tolerate him and his message. Today’s gospel (Matthew 16: 21-27) begins with Jesus predicting his passion and death. Peter, as a true representative of the world, and, all of us, takes him aside to put some sense into Him. Jesus, who had given one of the best compliments to Peter for his confession (as heard in the last Sunday’s gospel) now calls him a Satan. Jesus then goes on to talk about the price a prophet needs to pay and the ultimate reward awaiting a prophet.

The world needs prophets… prophets like Jeremiah, prophets like Martin Luther King Jr. The world needs to hear the bitter truth of what is wrong with it. Most of us prefer to keep silent and not speak up when things go wrong. That is why Martin Luther King once said: “History will have to record that the greatest tragedy of this period of social transition was not the strident clamor of the bad people, but the appalling silence of the good people.” Very true even today!

The opening slate of the famous movie JFK by Oliver Stone shows a quote by an American poet Ella Wheeler Wilcox: “To sin by silence when we should protest makes cowards out of men.” President John F Kennedy (JFK), as we all know, was shot dead in November 1963, the same year that Martin Luther King delivered his memorable “I have a dream” speech. In the movie script of JFK, there is a line spoken by the actor playing the role of Jim Garison, the District Attorney of Orleans Parish, Louisiana: “Telling the truth can be a scary thing sometimes. It scared President Kennedy, and he was a brave man. But if you let yourself be too scared, then you let the bad guys take over the country. Then everybody gets scared.” These lines of Mr Garison, more than ever, ring true in our present world.

The scare tactics employed using the COVID-19 virus, have given free rein for many world leaders to unleash autocratic anarchy. Anyone who raises a voice, any prophet who tells the truth is put behind bars without proper trial. We need to pray that the post-COVID world will see many prophets challenging the dictatorial behaviour of the present day leaders.

Let me close these reflections with quotes from a famous Jewish writer Elie Wiesel. Eliezer Wiesel is a Romania-born American novelist, political activist, and Holocaust survivor of Hungarian Jewish descent. He is the author of over 50 books, the best known of which is ‘Night’, a memoir that describes his experiences during the Holocaust and his imprisonment in several concentration camps. Wiesel was awarded the Nobel Peace Prize in 1986.

“I swore never to be silent whenever and wherever human beings endure suffering and humiliation. We must always take sides. Neutrality helps the oppressor, never the victim. Silence encourages the tormentor, never the tormented.” Elie Wiesel

“The opposite of love is not hate, it's indifference. Indifference, to me, is the epitome of evil. Because of indifference, one dies before one actually dies.” Elie Wiesel

On August 29, this Saturday, many shrines of our Lady of Good Health have begun the Novena to Our Lady culminating on September 8, the Feast of the Birth of Virgin Mary. We pray, through the intercession of our Lady of Good Health, that God drives away the COVID-19 virus, as well as the viruses of social inequality and injustice away from us.

His Word, like a burning fire

https://www.pinterest.it

பொதுக்காலம் 22ம் ஞாயிறு

இருபது ஆண்டுகளுக்குமுன், இருபதாம் நூற்றாண்டின் இறுதியை நாம் நெருங்கியவேளையில், அந்த நூற்றாண்டை, பின்னோக்கிப் பார்த்தோம். அந்த நூற்றாண்டைப்பற்றிய ஆய்வுகளும், கருத்துக்கணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.

20ம் நூற்றாண்டில் வழங்கப்பட்ட தலைசிறந்த சொற்பொழிவுகளைக் குறித்து, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள Wisconsin-Madison மற்றும் Texas A&M என்ற இரு பல்கலைக் கழகங்களின் ஆய்வாளர்கள் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பின் இறுதியில், அந்நாட்டில், கறுப்பின மக்களுக்காகப் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள் வழங்கிய "I have a dream" அதாவது, "எனக்கொரு கனவு உண்டு" என்ற உரையே, தலை சிறந்த உரை என்று கணிக்கப்பட்டது.

1963ம் ஆண்டு, ஆகஸ்ட் 28ம் தேதி, சக்திமிக்க அந்த உரை வழங்கப்பட்டதால், அந்நிகழ்வை நினைவுகூர்ந்த இவ்வெள்ளியன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிலவும் இனவெறியை இறைவன் குணமாக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், கத்தோலிக்கர் அனைவரும், உண்ணா நோன்பிருந்து இறைவனை மன்றாடுமாறு, அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்தனர். அந்த உரை வழங்கப்பட்டு, 57 ஆண்டுகள் கழிந்தபின்னரும், மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கண்ட சமத்துவமும், நீதியும், இன்னும் நிறைவேறாதக் கனவாகவே உள்ளன என்பதை அந்நாட்டில் நிகழ்ந்த கொடுமைகள் நினைவுறுத்தின.

இவ்வாண்டு, மே, 25ம் தேதி, மின்னியாபொலிஸ் நகரில், கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் (George Floyd) அவர்கள், காவல் துறையைச் சேர்ந்த ஒருவரால் கழுத்தில் மிதிபட்டு இறந்தது, ஆகஸ்ட் 23ம் தேதி, கடந்த ஞாயிறன்று, கெனோஷா என்ற நகரில், கறுப்பினத்தவரான ஜேக்கப் பிளேக் (Jacob Blake) அவர்கள், காவல்துறையினரால் ஏழுமுறை சுடப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது, ஆகிய நிகழ்வுகள், மார்ட்டின் லூத்தர் அவர்கள் கண்ட கனவிலிருந்து வெகு தூரம் விலகி நிற்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டை, உலகிற்கு காட்டிவருகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஊடகங்களும், சமுதாய வலைத்தளங்களும், சற்று சுதந்திரமாகச் செயல்படுவதால், இச்செய்திகள் உலகெங்கும் பரவியுள்ளன. ஆனால், பல்வேறு நாடுகளில், ஊடகங்களும், சமுதாய வலைத்தளங்களும், வெகுவாக முடக்கப்படுவதால், இத்தகைய அநீதிகள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. சமத்துவமின்மை, அநீதி ஆகியவை, அனைத்து நாடுகளிலும், நீக்கமற நிறைந்துள்ள கிருமிகள் என்பதை, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி, ஒவ்வொரு நாளும் நமக்கு நினைவுறுத்தி வருகிறது.

சமுதாய அநீதிகள் என்ற கிருமிகளுக்கு எதிராகக் குரலெழுப்பிய இறைவாக்கினர்களைப்பற்றி சிந்திக்க, இந்த ஞாயிறு வாசகங்கள், நம்மை அழைக்கின்றன. "எனக்கொரு கனவு உண்டு" என்ற அந்த உரையை வழங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் இறைவாக்கினர் என்பதை மறுக்கமுடியாது.

1963ம் ஆண்டு, ஆகஸ்ட் 28ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகரான வாஷிங்டனில், ஆபிரகாம் லிங்கன் நினைவு மண்டபத்தின் முகப்பில் நின்றபடி, 36 வயது நிரம்பிய இளம் கிறிஸ்தவப் போதகர் மார்ட்டின் அவர்கள் வழங்கிய உரை, ஒரு மறையுரை அல்ல. அது ஓர் அரசியல் உரை. இருந்தாலும், அவர் வழங்கிய அந்த அரசியல் உரையை, ஒரு மறையுரையைப் போல மக்கள் கேட்டு, ஆமென், ஆமென் என்று அடிக்கடி சொல்வதை, வீடியோப் பதிவுகளில் நாம் காணமுடிகிறது.

இதோ, அவ்வுரையின் ஒரு சில வரிகள்....

எனக்கொரு கனவு உண்டு... "எல்லா மனிதரும் சமம் என்பது நமக்கு மிகவும் தெளிவாகத் தெரியும் ஓர் உண்மை" என்று இந்த நாடு சொல்லும் உறுதிப்பிரமாணம் உண்மையாகும் என்ற கனவு எனக்கு உண்டு.

எனக்கொரு கனவு உண்டு... எனது நான்கு பிள்ளைகளும் வாழப்போகும் இந்த நாட்டில், அவர்களது குணத்தையும் அறிவுத்திறனையும் பார்த்து அவர்கள் மதிக்கப்படுவார்களே தவிர, அவர்களது தோல் நிறத்தை வைத்து அல்ல என்ற கனவு எனக்கு உண்டு.

ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும், ஒவ்வொரு மலையும், குன்றும் தாழ்த்தப்படும், கரடு முரடான பகுதிகள் சம நிலமாக்கப்படும், கோணலான பாதைகள் நேராக்கப்படும் இறைவனின் மகிமை தெளிவாகும், இதை அனைவரும் ஒருசேரக் காண்பர். எனக்கொரு கனவு உண்டு...

இறைவாக்கினர்கள் எசாயா, ஆமோஸ் ஆகியோர் கண்ட கனவுகளைத் தன் கனவுடன் இணைத்து, மார்ட்டின் அவர்கள் வழங்கிய அந்த உரையை, அங்கு கூடியிருந்த இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆரவாரமாய் வரவேற்றனர். வார்த்தைகளில் சொல்லமுடியாமல், அவர்கள் உள்ளத்தில் புதைந்திருந்த பல ஏக்கங்களுக்கு வார்த்தை வடிவம் கொடுத்த மார்ட்டின் அவர்களின் கனவை, தங்கள் கனவாக, நன்றியோடு ஏற்றுக்கொண்டனர். அந்த உரையைத்தொடர்ந்து, அமெரிக்காவில், கறுப்பின மக்களுக்கு சமஉரிமைகள் வேண்டும் என்ற போராட்டம், உச்சநிலையை அடைந்தது. மார்ட்டின் அவர்கள் வழங்கிய அந்த உரை, ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பல கோடி மக்களை சென்றடைந்துள்ளது. அவர்கள் மனதை சமத்துவ சமுதாயம் நோக்கி நடத்திச் சென்றுள்ளது.

ஆனால், மார்ட்டின் அவர்கள் வழங்கிய அந்த உரை, எல்லா மக்களையும் மகிழ்விக்கவில்லை. அந்த உரையைக் கேட்ட பலர், தங்கள் தூக்கத்தை, நிம்மதியை இழந்தனர். சமத்துவக் கனவை மக்கள் மனதில் விதைத்த மார்ட்டின் அவர்கள் தொடர்ந்து வாழ்ந்தால், வெள்ளையினத்தவரின் ஆதிக்கத்திற்கு பெரும் ஆபத்து என்று அவர்கள் நினைத்தனர். 36ம் வயதில் கறுப்பின மக்களிடையே நம்பிக்கையை வளர்த்த மார்ட்டின் அவர்கள், 37வது வயதில் உலக அமைதிக்கென வழங்கப்படும் நொபெல் விருதைப் பெற்றார். ஈராண்டுகள் சென்று, 39வது வயதில், சுட்டுக்கொல்லப்பட்டார். இறைவாக்கினர் எவரும், இவ்வுலகின் வெற்றிகளைக் குவித்ததாக, நிம்மதியாக வாழ்ந்ததாக, வரலாறு கிடையாது.

இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில், அதிகாரம் என்ற போதையில் மூழ்கியிருக்கும் தலைவர்கள் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டும் இறைவாக்கினர்கள் கொடூர மரணங்களுக்கு உள்ளாயினர் என்பதை வரலாறு பலமுறை நமக்கு உணர்த்தியுள்ளது. இவர்களின் ஒரு முன்னோடியாக, நாம், புனித திருமுழுக்கு யோவானை எண்ணிப்பார்க்கலாம். மன்னன் ஏரோதின் தவறைச் சுட்டிக்காட்டிய யோவானின் தலை வெட்டப்பட்ட நாளை, ஆகஸ்ட் 29, இச்சனிக்கிழமை சிறப்பித்தோம்.

தன் சொல், செயல், அனைத்தின் வழியாகவும், தீமையைச் சுட்டெரிக்கும் சுடராக வாழ்ந்த திருமுழுக்கு யோவானைப்போல், பல்லாயிரம் இறைவாக்கினர்கள், வரலாற்றில் ஒளிர்ந்துள்ளனர். அந்த வரிசையில், 20ம் நூற்றாண்டு இறைவாக்கினர்களில் ஒருவராக, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களை நாம் எண்ணிப்பார்க்கலாம்.

மகாத்மா காந்தி அவர்களின் அகிம்சைக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர், வெள்ளையினத்தவருக்கு எதிராக மேற்கொண்ட சமஉரிமை போராட்டத்தில், காந்தியைப்போல, அகிம்சை வழிகளையே கடைபிடித்தார். இறைவாக்கினராக வாழ்வது எளிதல்ல என்பதையும், எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்காக உயிர் தியாகம் உட்பட, பல தியாகங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், மார்ட்டின் அவர்கள் உணர்ந்திருந்தார். "ஒரு கொள்கைக்காக இறக்கத் துணியாதவன், வாழவே தகுதியற்றவன்" என்பது, மார்ட்டின் அவர்களின் புகழ்பெற்ற ஒரு கூற்று.

இறைவாக்கினர்கள் பலர், இறைவன் வழங்கிய கொள்கைகளை தங்கள் வாழ்வில் பின்பற்றியவர்கள். அக்கொள்கைகளைவிட்டு விலகி வாழ்ந்த சமுதாயம் சரியில்லை என்பதை, துணிவுடன் எடுத்துச்சொல்லும் பணியை, இறைவன் அவர்களுக்கு அளித்தார். விவிலியத்தில் நாம் சந்திக்கும் ஒரு சில இறைவாக்கினர்கள், இறைவன் அளித்த இந்த ஆபத்தான பணியை ஏற்க மறுத்து, ஓடி ஒளிந்தனர். ஆனாலும், அந்தப் பணியை நிறைவேற்றும்வரை, இறைவன் அவர்களை விடவில்லை. இப்படி, தன்னை இடைவிடாமல் துரத்திவந்த இறைவனிடம், இறைவாக்கினர் எரேமியா பேசுவதை, இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்கிறோம். - இறைவாக்கினர் எரேமியா 20: 7-9 

நான் வாயைத் திறந்தாலே உண்மைகளைச் சொல்லவேண்டியுள்ளது, அதுவும் கசப்பான உண்மைகளைச் சொல்லவேண்டியுள்ளது. எனக்கு ஏன் வம்பு என்று, பேசாமல் இருந்தாலும், உமது வார்த்தைகள், என் மனதில், நெருப்பாய் எரிந்துகொண்டிருக்கின்றன என்று, ஆண்டவரிடம் முறையிடுகிறார் எரேமியா. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்த எரேமியாவைப்போல, பலகோடி இறைவாக்கினர்கள் எண்ணியிருப்பர், சொல்லியும் இருப்பர்.

இத்தகையைச் சூழலில், நம்மில் பலர், மௌனம் காப்பதே சிறந்த வழி என்று எண்ணுவது இயல்பு. மௌனம் காக்க முடிவெடுப்போரைக் குறித்து, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கூறிய ஒரு கூற்று, நினைவில்கொள்ளத்தக்கது:

சமுதாய மாற்றத்தை நோக்கிச்செல்லும் இக்காலத்தின் மிகப்பெரும் வேதனை என்னவென்று சிந்தித்தால், அது, தீமைகளைச் செய்யும் ஒரு சிலரது கூப்பாடு அல்ல... நல்லவர்களின் அதிர்ச்சியூட்டும் அமைதியே, பெரும் வேதனைதரும் காரியம். மார்ட்டின் அவர்கள் கூறிய இந்த வார்த்தைகள், இன்றும், பொருள் உள்ளவைகளாகத் தெரிகின்றன.

மௌனம் காப்பதே சிறந்த வழி என்று நம்மில் பலர் நினைப்பதைக் குறித்து, Ella Wheeler Wilcox என்ற அமெரிக்க கவிஞர் கூறும் சொற்கள், கூர்மையாக நம் உள்ளங்களில் பதிகின்றன:: "எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டிய வேளையில் மௌனம் காத்து, பாவம் புரிவது, நம் அனைவரையும் கோழைகளாக்குகிறது".

மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், தன் புகழ்பெற்ற உரையை வழங்கிய அதே 1963ம் ஆண்டு, அமெரிக்க அரசுத்தலைவராக இருந்த ஜான் F.கென்னடி அவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையைத் தொடர்ந்து நடந்த ஒரு வழக்கை மையப்படுத்தி JFK என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது. மக்கள் காக்கும் மௌனத்தைப்பற்றி, Ella Wheeler அவர்கள் கூறிய சொற்கள், இத்திரைப்படத்தின் ஆரம்பத்தில் திரையில் தோன்றுகின்றன.

கென்னடி அவர்கள் அரசுத்தலைவராக இருந்தபோது, வியட்நாம் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. அவ்வேளையில், கென்னடி அவர்கள், அப்போரிலிருந்து தங்கள் நாட்டை விலக்கிக்கொள்ளும் எண்ணத்தில் இருந்தார். அந்தப் போரினால் இலாபம் திரட்டிவந்த ஆயுத உற்பத்தி நிறுவனங்களை சேர்ந்த செல்வந்தர்கள், அரசுத்தலைவர் கென்னடி அவர்கள் போரிலிருந்து விலகிக்கொள்ளும் முடிவை மாற்றும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், கென்னடி அவர்கள், தன் முடிவில் தீவிரமாக இருந்ததைக் கண்ட அச்செல்வந்தர்கள், அரசுத்தலைவரைக் கொன்றனர் என்ற கதைக்கருவை அடிப்படையாகக்கொண்டு, இத்திரைப்படம் அமைக்கப்பட்டிருந்தது.

அரசுத்தலைவர் ஜான் F.கென்னடி அவர்களைக் கொன்றது, தனியொரு மனிதர் அல்ல, அவருக்குப் பின்புலத்தில் சதிகாரக் கும்பல் ஒன்று செயல்பட்டது என்பதை, நீதிமன்றத்தில் நிரூபிக்க, வழக்கறிஞர் ஜிம் கேரிசன் (Jim Garison) என்பவர் வாதிடும் காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம்பெறுகின்றன. கேரிசன் அவர்களின் வேடத்தில் நடிப்பவர், ஒரு காட்சியில் பேசும் வசனம், இன்றைய நம் சிந்தனைகளுக்கு, குறிப்பாக, நாம் வாழும் இந்த கொள்ளைநோய் காலத்திற்கு, கூடுதலான அர்த்தம் வழங்குகின்றது:

"உண்மையைச் சொல்வது, சிலநேரங்களில் நம்மை அச்சுறுத்துகிறது. அரசுத்தலைவர் கென்னடி அவர்களையும் அது அச்சுறுத்தியது. ஆனால், அவர் துணிவுள்ளவராக இருந்தார். உன்னை நீயே அச்சத்திற்குள் அடைத்துக்கொண்டால், தீயோர் இந்த நாட்டை அபகரிப்பதற்கு நீ வழிவகுக்கிறாய். அதன் பின், எல்லாருமே அச்சத்தில் வாழவேண்டியுள்ளது" என்று கேரிசன் அவர்கள் நீதிமன்றத்தில் கூறுவார்.

நாம் வாழும் கொள்ளைநோய் காலத்தில், அச்சுறுத்தல் என்ற யுக்தி, எவ்விதம் ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பதை நாம் உணர்கிறோம். கோவிட்-19 தொற்றுக்கிருமியைப்பற்றி, குழப்பமான, முரணான கருத்துக்களையும், அந்தத் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையையும், ஒவ்வொருநாளும் வெளியிட்டு, மக்களை அச்சத்தில் அடைபட்டுக்கிடக்க வைத்துவிட்டன, அரசுகளும், ஊடகங்களும். இந்த அச்சத்தையும், அதனுடன் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகளையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அநீதியான சட்டங்களையும், அடக்குமுறைகளையும் மக்கள் மீது திணித்துவரும் பல அரசியல் தலைவர்களை, அண்மைய ஆறு மாதங்களில் உலகின் பல நாடுகளில் கண்டுவருகிறோம்.

இந்த உலகம் நம்மீது திணிக்கவிரும்பும் அநீதிகளுக்கு துணைபோகும்போது, இவ்வுலகம் நம்மை பாராட்டும், நாம் உலகையே வென்றதுபோன்ற உணர்வையும் தரும். அதற்கு மாறாக, நம் மனசாட்சி சொல்வதைக் கேட்டு வாழும்போது, போராட்டங்களைச் சந்திக்கவேண்டியிருக்கும், அந்தப் போராட்டத்தில், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களைப்போல், மகாத்மா காந்தியைப்போல், நம் உயிரையும் வழங்கவேண்டியிருக்கும். இந்த சவாலை இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் கூறியுள்ளார். ஒரு கேள்வியின் வடிவில் இயேசு விடுத்த இந்தச் சவாலை, இலொயோலா இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சேவியரிடம் கூறி, அவரை விழித்தெழச் செய்தார். இதோ இயேசு நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் அந்த உன்னத சவால்:

மத்தேயு நற்செய்தி 16: 26

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

இந்தக் கொள்ளைநோயோடு வாழ்வதற்கும், கொள்ளைநோயை வெல்வதற்கும் நாம் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளின் ஒரு முக்கியப் பகுதியாக, கொள்ளைநோய் காலத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரச்சட்டங்கள் தவறு என்பதை எடுத்துச்சொல்லும் இறைவாக்கினர்கள், துணிவுடன் வெளிவரவேண்டும் என்று சிறப்பான முறையில் மன்றாடுவோம்.

ஆகஸ்ட் 29, இச்சனிக்கிழமையன்று, நலம் வழங்கும் ஆரோக்கிய அன்னையின் திருத்தலங்கள் அனைத்திலும் கொடியேற்றப்பட்டு, நவநாள் பக்தி முயற்சிகள் துவங்கியுள்ளன. இந்த அன்னையின் பரிந்துரையால் நம்மைச் சூழ்ந்திருக்கும் கோவிட்-19 கொள்ளைநோயும், இன்னும், நம் உலகை பல காலமாகச் சூழ்ந்து வதைக்கும் அநீதிகள், பாகுபாடுகள் ஆகிய கொள்ளைநோய்களும் நம்மைவிட்டு நீங்கவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.

இறைவாக்கினராக வாழ, ஒவ்வொருநாளும், பல வடிவங்களில் நமக்கு வரும் அழைப்புக்களை ஏற்க, இறைவன் நமக்கு அருளையும், துணிவையும் வழங்குவாராக!

 

25 August, 2020

விவிலியத்தேடல்: லூக்கா நற்செய்தி – கூன் விழுந்த பெண் குணமடைதல் 1

  

Mysore Palace

https://theculturetrip.com

விதையாகும் கதைகள் : அரண்மனையும் ஒரு சத்திரமே...

ஆன்மீகத்தில் முதிர்ச்சிபெற்ற ஒரு துறவி, ஒரு நாள், அந்நாட்டின் அரசன் வாழ்ந்துவந்த அரண்மனைக்குள் நுழைந்து, நேரே அரசவைக்குள் சென்றார். அவரைக் கண்ட அரசன், அரியணையிலிருந்து எழுந்து, அவரை வணங்கி, "குருவே, உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். "மன்னா, நான் இந்தச் சத்திரத்தில் சிலநாள்கள் தங்கவேண்டும்" என்று அத்துறவி சொன்னார்.

துறவி, நகைச்சுவையாகப் பேசுகிறார் என்றெண்ணிய அரசன், ஒரு புன்னகையுடன், "நீங்கள் தாராளமாகத் தங்கலாம். ஆனால், இது, சத்திரம் அல்ல. இது, என் அரண்மனை" என்று கூறினார்.

"மன்னா, இவ்வரண்மனை, உனக்குமுன் யாருக்குச் சொந்தமாக இருந்தது?" என்று துறவி கேட்டதும், "என் தந்தைக்குச் சொந்தமாக இருந்தது" என்று பெருமையுடன் கூறினார் அரசன். துறவி உடனே, "சரி, அவர் இப்போது எங்கே?" என்று கேட்க, "அவர் இறந்துவிட்டார்" என்று சிறிது சோகத்துடன் பதில் சொன்னார்.

"உன் தந்தைக்கு முன், இது யாருக்குச் சொந்தமாக இருந்தது?" என்று துறவி மீண்டும் கேட்டார். அதற்கு அரசர், "இந்த அரண்மனை என் தாத்தாவுக்குச் சொந்தமாக இருந்தது. அவரும் இப்போது இல்லை" என்று பதில் சொன்னார்.

துறவி, அரசனை உற்றுநோக்கி, "இந்தக் கட்டடத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாரும், ஒரு சில ஆண்டுகள் இங்கு தங்கிவிட்டு, பின்னர் மறைந்துவிட்டனர். அப்படியானால், இந்தக் கட்டடம், சிலகாலம் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள ஒரு சத்திரம்தானே!" என்று கேட்டபோது, மன்னன் மௌனமானார்.

தங்கிச் செல்லும் சத்திரங்களை, தங்கள் நிரந்தரமான உறைவிடங்களாகக் கருதுவது, அறிவு முதிர்ச்சி அல்ல!

Story of the women bent double - Luke 13

https://www.psephizo.com

லூக்கா நற்செய்தி கூன் விழுந்த பெண் குணமடைதல் 1

ஏனைய மூன்று நற்செய்திகளிலும் பதிவாகாமல், லூக்கா நற்செய்தியில் மட்டும் பதிவாகியுள்ள ஐந்து புதுமைகளில், கெனசரேத்து ஏரியில், பெருமளவு மீன்பிடிப்பு நிகழ்ந்த புதுமை (லூக்கா 5:1-11) மற்றும், நயீன் ஊரைச் சேர்ந்த கைம்பெண்ணின் இறந்த மகனை உயிர்பெற்றெழச் செய்த புதுமை (லூக்கா 7:11-17) என்ற முதலிரு புதுமைகளில், கடந்த சில வாரங்கள் நாம் தேடலை மேற்கொண்டோம். இன்று, இவ்வரிசையில், மூன்றாவதாக, 18 ஆண்டுகளாக தீய ஆவி பிடித்த பெண்ணை இயேசு குணமாக்கியப் புதுமையில் (லூக்கா 13:10-17) நம் தேடலைத் துவக்குகிறோம்.

இப்புதுமைக்குள் அடியெடுத்து வைப்பதற்குமுன், நற்செய்தியாளர் லூக்கா, தன் நற்செய்தியில், எத்தருணத்தில் இப்புதுமையைப் பதிவுசெய்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்வது பயனளிக்கும்.

ஒவ்வொரு நற்செய்தியாளரும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, ஒரு குறிப்பிட்ட மக்களை மனதில் கொண்டு, தங்கள் நற்செய்தியை எழுதினர் என்பதை அறிவோம். நற்செய்தியாளர் லூக்கா, புறவினத்தாருக்கு இயேசுவை அறிமுகப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள், அவரது நற்செய்தியாகவும், திருத்தூதர் பணிகள் நூலாகவும் வெளியாயின. அதிலும், அவர், இயேசுவின் மனிதத் தன்மையை, இன்னும் சிறப்பாக, அவரது பரிவை  வெளிச்சமிட்டுக் காட்டும்வண்ணம், தன் நற்செய்தியை உருவாக்கியிருப்பதால், இந்த நற்செய்தியை 'கருணையின் நற்செய்தி' என்றும் அழைக்கிறோம். இயேசு, தன் பணிவாழ்வில் வழங்கிய உரைகளையும், ஆற்றிய செயல்களையும், நற்செய்தியாளர் லூக்கா, தொகுத்து வழங்கும் வேளையில், கூன் விழுந்த ஒரு பெண்ணைக் குணமாக்கும் இப்புதுமைக்கு வழங்கியிருக்கும் இடம், நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது.

நற்செய்தியாளர் லூக்கா, 7ம் பிரிவில், நூற்றுவர் தலைவரின் பணியாளரைக் குணமாக்கியப் புதுமையையும், அதைத் தொடர்ந்து, நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனுக்கு இயேசு உயிர் வழங்கியப் புதுமையையும் ஒன்றன்பின் ஒன்றாக பதிவு செய்திருந்தார். "ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்" (லூக்கா 7:7) என்று நூற்றுவர் தலைவர் வெளியிட்ட நம்பிக்கை அறிக்கைக்கு ஏற்ப, அவ்வில்லத்திற்குச் செல்லாமலேயே, தன் சொற்களின் வல்லமையால், அந்த ஊழியரை இயேசு குணமாக்கினார் என்பதை, நற்செய்தியாளர் லூக்கா உணர்த்தினார். அதைத் தொடர்ந்து, நயீன் ஊரில் நடந்த அடுத்தப் புதுமையிலோ, யூத சட்டங்களை மீறும் வண்ணம், இறந்த உடல் வைக்கப்பட்டிருந்த பாடையைத் தொட்டு, புதுமையை ஆற்றும் இயேசுவை, லூக்கா நமக்கு வழங்குகிறார். இயேசு, தன் சொல்லாலும், கனிவுள்ள செயல்களாலும் புதுமைகள் செய்தார் என்பதை இணைத்துக் காட்ட, நற்செய்தியாளர் லூக்கா, இவ்விரு நிகழ்வுகளையும் தொடர்ந்து பதிவு செய்துள்ளார் என்ற கோணத்தில் நாம் சிந்திக்கலாம்.

இன்று நாம் தேடலைத் துவக்கியுள்ள புதுமை, லூக்கா நற்செய்தி, 13ம் பிரிவின் 10வது இறைவாக்கியத்தில் ஆரம்பமாகிறது. இப்பிரிவின் முதல் 5 இறைவாக்கியங்களில், (லூக்கா 13:1-5) வேதனைதரும் இரு செய்திகளைக் குறித்து, இயேசு கூறும் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதைத் தொடரும் நான்கு இறைவாக்கியங்களில் (லூக்கா 13:6-9), பொறுமையை வலியுறுத்தும் 'காய்க்காத அத்திமரம்' உவமையை இயேசு கூறுகிறார். தொடர்ந்து, கூன் விழுந்த பெண்மணியை இயேசு குணமாக்கும் புதுமையை, நற்செய்தியாளர் லூக்கா இணைத்துள்ளார் (லூக்கா 13:10-17).

அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். (லூக்கா 13:1)  என்று, லூக்கா நற்செய்தி 13ம் பிரிவு ஆரம்பமாகிறது. இச்செய்தியை ஏன் இயேசுவிடம் கூறினர் என்ற கேள்வி எழுகிறது. கோவிலில், அல்லது, ஒரு திருத்தலத்தில், பலி செலுத்திக் கொண்டிருந்தவர்களை, பிலாத்து கொன்றது சரியா, தவறா என்ற கேள்விக்கு, அரசியல் பதில்கள் பல இருக்கலாம். ஆனால், அந்தப் பதில்களைத் தேடி, இயேசுவிடம் வரத் தேவையில்லை. இச்செய்தியை இயேசுவிடம் சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம், இந்நிகழ்வில், கடவுள் எங்கே இருக்கிறார் என்ற விளக்கம் பெறுவதற்காகத்தான்.

கோவிலில், பலி நேரத்தில், இந்தக் கொலை நடந்திருக்கிறதே. கோவில், பலி இவையெல்லாம் அந்த கலிலேயரைக் காப்பாற்றமுடியவில்லையா? கோவிலில், பலி நேரத்தில், பிலாத்து கொலை செய்திருக்கிறானே, அவனைக் கடவுள் ஒன்றும் செய்யமாட்டாரா? என்ற கேள்விகளுக்கு இயேசு விடைதரக்கூடும் என்ற நம்பிக்கையில், அவரிடம் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொண்டனர்.

ஒரு சில விவிலியப் பதிப்புகளில், பிலாத்து செய்தது, இன்னும் பயங்கரமாய் கூறப்பட்டுள்ளது. "பிலாத்து அவர்களைக் கொன்று, அவர்கள் இரத்தத்தை அந்தப் பலியின் இரத்தத்தோடு கலந்தான்" என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இது சாதாரண கொலை அல்ல. இஸ்ராயேல் மக்களிடையே தெய்வநிந்தனை என்று தடை செய்யப்பட்டிருந்த மனிதப்பலியை, பிலாத்து நடத்தினான். இறைவனின் சந்நிதியை, இஸ்ராயலரின் வாழ்வு நெறிகளை, மோசே தந்த சட்டங்களைக் களங்கப்படுத்தும் ஒரு பெரும் குற்றத்தை, செய்த பிலாத்துவை, கடவுள் ஒன்றும் செய்யமாட்டாரா? என்ற கேள்விக்கு விடைதேடியே, இச்செய்தி இயேசுவிடம் சொல்லப்பட்டது.

இக்கேள்விகளுக்கு இயேசு நேரடியாக விடை தந்ததுபோல் தெரியவில்லை. சொல்லப்பட்ட செய்திக்கு, நடந்த நிகழ்வுக்கு இயேசு விளக்கம் சொல்லவில்லை. மாறாக, அந்நிகழ்வினால் பாதிக்கப்பட்டோரைக் குறித்து, அவசரத் தீர்ப்புக்களை வழங்கவேண்டாம் என்று எச்சரிப்பதே, இயேசுவின் முக்கிய நோக்கமாய் இருந்தது. அவர்கள் சொன்ன செய்தியையும், வேறொரு செய்தியையும் இணைத்து, இப்பகுதியில், இயேசு கூறும் விளக்கம், நமக்கு ஒருசில வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுத்தருகிறது.

கோவிலில் நடந்த இந்த கொலையைப் பற்றிய செய்தியுடன், சீலோவாமில் கோபுரம் ஒன்று விழுந்ததால் 18 பேர் உயிரிழந்த நிகழ்வை இயேசு இணைத்தார். பிலாத்து செய்த கொலை போன்று, மனிதர்களால் மனிதர்களுக்கு அழிவுகள் ஏற்படும்போதும், கோபுரத்தின் இடிபாடு போன்று இயற்கை வழியே, அல்லது விபத்துக்கள் வழியே மனிதர்களுக்கு அழிவுகள் ஏற்படும்போதும், அவை ஏன் நடந்தன என்ற விளக்கங்களை தருவதைவிட, அந்த அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று அவசர முடிவுகள் எடுக்கவேண்டாம் என்பதைச் சொல்வதில் இயேசு குறியாய் இருந்தார். பாதிக்கப்பட்டவர்களை, பாவிகள் என்று அவசரத் தீர்ப்பிடவேண்டாம். அவர்களைவிட நாம் பெரும் பாவிகள். எனவே இந்நிகழ்வுகள் நமக்கு எச்சரிக்கைகளாய் இருக்கட்டும் என்பதையே இயேசு இந்த நற்செய்திப் பகுதியில் வலியுறுத்துகிறார்.

துன்பங்கள் நிகழும்போது, கடவுளையோ, பிறரையோ காரணம் காட்டுவதற்குப் பதில், அத்துன்பம் நிகழ்வதற்கு, நாம் எவ்வகையில் காரணமாய் இருந்தோம் என்று ஆய்வுசெய்வது நல்லது. அத்துன்பங்களைத் தடுக்க, அல்லது, அத்துன்பங்களிலிருந்து மக்களைக் காக்க கடவுள் என்ன செய்யவேண்டும் என்று அவருக்கு ஆலோசனைகள் வழங்குவதை விட்டுவிட்டு, அத்துன்பத்திலிருந்து மக்களை மீட்க, நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திப்பது பயனளிக்கும்.

2010ம் ஆண்டு ஹெயிட்டி நாட்டிலும், 2015ம் ஆண்டு, நேபாளத்திலும் நில நடுக்கங்கள் ஏற்பட்டபோது, நம்முடைய மனங்களில், 'கடவுள் எங்கே' என்ற கேள்வி, வெகு இயல்பாக, எளிதாக, எழுந்திருக்கும். கடவுள் எங்கே என்ற கேள்விக்குப் பதில், இந்த நிலநடுக்கத்தில் நாம் எங்கே, மனித சமுதாயம் எங்கே என்ற கேள்விகளையும் எழுப்பலாம்.

நிலநடுக்கமே, இப்போது, இயற்கையில், தானாக ஏற்படும் விபரீதமா, அல்லது, மனிதர்கள், இயற்கையை, அளவுக்கதிகமாய் சீர்குலைத்து வருவதன் எதிரொலியா, என்ற விவாதம் எழுந்துள்ளது. நிலநடுக்கம், இயற்கையில் ஏற்படும் விபரீதம் என்றே ஏற்றுக்கொண்டாலும், ஹெயிட்டி, நேபாளம் போன்ற ஏழை நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கங்களில், பெருமளவில் உயிர்கள் பலியாவதற்கு, அங்கு கட்டப்பட்டிருக்கும் தரம்குறைந்த கட்டடங்களே காரணம் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும்போது, மனசாட்சியுள்ள மனிதர்கள் எங்கே என்ற கேள்வியும் ஓங்கி ஒலிக்கிறது.

வறிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும்போது, வறியோரின் குடியிருப்புக்களே பெருமளவில் தரைமட்டமாகின்றன என்பதும், அந்த இடிபாடுகளில் சிக்கியிருப்போர் வறியோர் என்ற காரணத்தால், அவர்களை மீட்கும் பணிகளிலும் அக்கறையற்ற தாமதங்கள் உருவாகி, இன்னும் பல நூறு உயிர்கள் பலியாகின்றன என்பதும், மனிதர்களாகிய நம்மைப்பற்றிய கேள்விகளையே அதிகம் எழுப்புகின்றன.

இன்று, இவ்வுலகை, பெருமளவு வதைத்துவரும் கோவிட்-19 கொள்ளைநோயை, கடவுள் வழங்கிய தண்டனையாக பறைசாற்றிவரும் பல மதத்தலைவர்களை, இந்நாள்களில் கண்டுள்ளோம். ஆழமாக ஆய்வு செய்தால், நம் கட்டுக்கடங்காத பேராசையின் காரணமாக, இயற்கையை நாம் சீரழித்ததால், இயற்கை, இந்தக் கிருமியின் வடிவில் பதிலிறுத்துள்ளது என்பது, இக்கொள்ளைநோயைப் பற்றி சொல்லப்படும் ஒரு விளக்கம். இதைவிடக் கொடுமையான ஒரு விளக்கமும் அவ்வப்போது சொல்லப்படுகிறது. அணுசக்தியை ஆயுதங்களாக உருவாக்கியதுபோல், நுண்கிருமிகளை ஆயுதங்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஓர் ஆய்வுக்கூடத்திலிருந்து வெளியேறிய கிருமியே, கோவிட் 19 என்ற கொள்ளைநோயாக உருவாகியுள்ளது என்ற கருத்தும் அவ்வப்போது சொல்லப்படுகிறது.

துன்ப நேரங்களில், கடவுளை எளிதாக குற்றம் கூறி, அவரை நோக்கி, நாம் வழக்கமாக எழுப்பும் கேள்விகளை, நம் மனதை நோக்கியும், சமுதாயத்தை நோக்கியும் எழுப்பி, நம் தேடல்களைத் தொடர்ந்தால், இன்னும் பல தெளிவுகள் கிடைக்கும்.

உலகெங்கும், அநியாயங்கள் பல நடந்தும், கடவுள் ஏன் சும்மா இருக்கிறார்? என்பது, கடவுளைப்பற்றி அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. இக்கேள்விக்குப் பதில்கூறும்வண்ணம், இயேசு கூறிய 'காய்க்காத அத்திமரம்' உவமையையும் (லூக்கா 13:6-9), அதைத் தொடர்ந்து, கூன் விழுந்த பெண்ணை அவர் குணமாக்கியப் புதுமையையும், நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.