29 December, 2015

விவிலியம் - காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் – பகுதி 3

Pope St. John XXIII announcing the Second Vatican Council

Second Vatican Council in session at St Peter’s Basilica

கிரகோரியன் நாள்காட்டியின்படி, ஆண்டின் முதல் மாதம், Janus என்ற உரோமையத் தெய்வத்தின் பெயரால், ஜ()னவரி என்றழைக்கப்படுகிறது. Janus தெய்வத்திற்கு இரு முகங்கள். ஒரு முகம் பின்னோக்கிப் பார்ப்பதுபோலவும், மற்றொரு முகம் முன்னோக்கிப் பார்ப்பது போலவும் அமைந்திருக்கும். முடிவுற்ற ஆண்டைப் பின்னோக்கிப் பார்க்கவும், புலரவிருக்கும் புத்தாண்டை முன்னோக்கிப் பார்க்கவும் Janus தெய்வம் நினைவுறுத்துவதால், ஆண்டின் முதல் மாதம் இந்தத் தெய்வத்தின் பெயரைத் தாங்கியுள்ளது. ஆண்டின் இறுதிநாளையும் புதிய ஆண்டின் முதல் நாளையும்  நெருங்கிவந்துள்ளோம்.
முடிவுறும் இந்த 2015ம் ஆண்டை, கடந்த சில நாட்களாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், நாளிதழ்களும், இணையத் தளங்களும் அலசி வருகின்றன. ஊடகங்கள் வெளியிட்டு வரும் பின்னோக்கிய அலசல்கள், இவ்வுலகைக் குறித்த ஓர் அயர்வையும், சலிப்பையும் உருவாக்குகின்றன. 'சே, என்ன உலகம் இது' என்று நமக்குள் உருவாகும் சலிப்பு, நம் உள்ளங்களில் நம்பிக்கை வேர்களை அறுத்துவிடுகிறது.
ஆனால், ஊடகங்கள் நமக்கு முன் படைக்கும் இருண்ட உலகம், உண்மையான உலகம் அல்ல என்பதை நாம் உணரவேண்டும். ஒவ்வொரு நாளும் 100 நிகழ்வுகள் நடந்தால், அவற்றில் 10 நிகழ்வுகள் எதிர்மறையான, துயரமான நிகழ்வுகளாகவும், மீதி 90 நிகழ்வுகள், நேர்மறையான, நம்பிக்கை தரக்கூடிய நிகழ்வுகளாகவும் உள்ளன என்பதே எதார்த்தமான உண்மை. ஆனால், நல்ல நிகழ்வுகளை காட்டுவது, விறுவிறுப்பைத் தராது என்பதாலும், அவற்றால், இலாபம் இல்லை என்பதாலும், ஊடகங்கள், மீண்டும், மீண்டும் வன்முறைகளையும் குற்றங்களையும் விறுவிறுப்பாகப் படைக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஊடகங்கள் காட்டிவரும் அந்நிகழ்வுகளின் தொகுப்பையே, ஆண்டின் இறுதியில் மீண்டும் ஒரு சேரத் திரட்டி நம்முன் படைக்கின்றன, நம் மனதின் நம்பிக்கையைச் சிதைக்கின்றன.

நம்பிக்கையைச் சிதைக்கும் ஊடகங்களின் முயற்சிகளுக்கு ஒரு மாற்றாக,  நல்லவர்களின் கூற்றுக்களும் செயல்பாடுகளும் அவ்வப்போது, ஆங்காங்கே எழுந்தவண்ணம் உள்ளன. எடுத்துக்காட்டாக, தமிழ் நாட்டை நிலைகுலையச் செய்த மழையிலும், வெள்ளத்திலும், ஆயிரமாயிரம் நல்ல மனிதர்கள், எவ்வித ஆர்ப்பாட்டமும், விளம்பரமும் இன்றி, பணிகள் ஆற்றியது, ஊடகங்களில் அதிகம் வெளிவராத உன்னத சிகரங்கள். அச்சிகரங்களைத் தொட விருப்பமில்லாத ஊடகங்கள், அரசியல் சகதியையும், சாக்கடையையும் மட்டுமே மீண்டும், மீண்டும் காட்டின என்பதை நாம் அறிவோம். நல்லவேளை, அண்மையக் காலங்களில் பரவி, பெருகி வரும் சமூகவலைத் தளங்களின் உதவியுடன் நல்லவர்கள் செய்துவந்த உன்னத செயல்களும் நம்மை வந்தடைந்தன.

இவ்வாண்டு நிகழ்ந்த பல நல்ல நிகழ்வுகளில் ஒன்றாக, இம்மாதம் 8ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினைத் துவக்கியுள்ளது, நமக்கு நம்பிக்கை தரும் ஒரு புகலிடமாக அமைந்துள்ளது. இந்தச் சிறப்பு யூபிலி ஆண்டு, 2ம் வத்திக்கான் சங்கம் நிறைவுற்றதன் 50ம் ஆண்டைக் கொண்டாடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. திருஅவை வரலாற்றில் புத்துணர்வையும், ஏன், சொல்லப்போனால், ஒருவகை புரட்சியையும் உருவாக்கிய 2ம் வத்திக்கான் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது பொருத்தம்தான் என்றாலும், அந்த சிறப்பு கொண்டாட்டத்திற்கு ஏன் இரக்கத்தின் சிறப்பு யூபிலி என்ற மையக்கருத்தை திருத்தந்தை தேர்ந்தார் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

இக்கேள்விக்குப் பதில் தருவதுபோல், 'இரக்கத்தின் முகம்' என்ற பெயரில் இந்த யூபிலி ஆண்டைக் குறித்து வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வமான ஆவணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கும், இரக்கத்திற்கும் உள்ள தொடர்பை, ஆழமாக விளக்கியிருந்தார். திருத்தந்தை வழங்கிய விளக்கம் இதோ:
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வழியாக, திருஅவை, தன் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்தது. இறைவன், மனிதர்களுக்கு நெருக்கமானவர் என்ற பாணியில் பேச, சங்கத்தின் தந்தையர் தீர்மானித்தனர். அதேவண்ணம், மதில் சுவர்களால் சூழப்பட்டிருந்த கோட்டைபோல் தோன்றிய திருஅவை, அந்நிலையிலிருந்து வெளியேறி, புதிய வழியில் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும் என்றும் சங்கத் தந்தையர் முடிவெடுத்தனர்.

2ம் வத்திக்கான் சங்கம் துவக்கி வைத்த மாற்றங்களைக் குறித்து, தன் ஆவணத்தில், இவ்வாறு கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மாற்றங்களுக்கும், இரக்கத்திற்கும் உள்ள தொடர்பை, சங்கத்தின் துவக்கத்திலும், முடிவிலும் பேசிய இரு திருத்தந்தையரின் வார்த்தைகள் வழியே நினைவு கூர்ந்துள்ளார். 2ம் வத்திக்கான் சங்கத்தின் துவக்கத்தில், புனித 23ம் ஜான் அவர்கள் கூறிய மனதைத் தொடும் வார்த்தைகள் இதோ:
கிறிஸ்துவின் மணமகளான திருஅவை, கண்டிப்பான கரத்தை உயர்த்துவதற்குப் பதில், இரக்கத்தின் மருந்தைப் பயன்படுத்த விரும்புகிறார். பொறுமை, கனிவு, பரிவு கொண்ட அன்னையாக, அனைவருக்கும், குறிப்பாக, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற குழந்தைகளுக்கு தன்னை வெளிப்படுத்த விரும்புகிறார் என்ற கனிவானச் சொற்களுடன் திருத்தந்தை, புனித 23ம் ஜான் அவர்கள், வத்திக்கான் சங்கத்தைத் துவக்கிவைத்தார். அதே கனிவுடன், சங்கத்தின் இறுதியில் அருளாளர் ஆறாம் பவுல் அவர்கள் இவ்வாறு பேசினார்:
"2ம் வத்திக்கான் சங்கத்தின் தலையாயப் பண்பாக விளங்கியது, பிறரன்பு. நல்ல சமாரியர் என்ற மனநிலையே சங்கத்தின் ஆன்மீகமாக விளங்கியது. திருஅவையும், ஏனையச் சபைகளும் ஒருவர் ஒருவர் மீது கொண்டிருக்கும் பாசமும், மதிப்பும், இச்சங்கத்தில் வெளிப்பட்டன. குற்றங்கள் கடிந்துகொள்ளப்பட்டன; ஆனால், தவறு செய்தவர் மீது, அன்பும், மதிப்பும் காட்டப்பட்டன. நம்மைப் பீடித்துள்ள நோய்களைக் குறித்து, மனம் தளரும் வண்ணம் ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பதில், மனதைத் தேற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன."

இரக்கத்தை வலியுறுத்தி இரு திருத்தந்தையர், சங்கத்தின் துவக்கத்திலும் இறுதியிலும் கூறிய வார்த்தைகளை தன் ஆவணத்தில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இரக்கத்தை, திருஅவை தொடர்ந்து சுவைக்கவும், குறிப்பாக, வன்முறைகளாலும், வெறுப்பாலும் காயப்பட்டு, கதறியழும் மனித குலத்திற்கும், பூமிக் கோளத்திற்கும் இரக்கம், மிக, மிக அவசியமான மருந்து என்பதை மனிதர்களாகிய நாம் உணரவும், இந்த யூபிலி ஆண்டு உதவவேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுத்துள்ளார்.

50ம் ஆண்டை, பொன்விழாவைக் குறிக்க நாம் பயன்படுத்தும் 'யூபிலி' என்ற சொல், விவிலியத்திலிருந்து வந்த சொல். 'யூபிலி' என்ற சொல், விவிலியத்தில் எவ்விதம் உருவானது என்பதையும், அந்த யூபிலியைக் கொண்டாட இஸ்ரேல் மக்களுக்குத் தரப்பட்டிருந்த வழிமுறைகளையும் அறிந்துகொள்வது பயனளிக்கும்.
இஸ்ரயேல் மக்களுக்கு 7 என்ற எண், பொருள் நிறைந்த எண். அது, முழுமையை, நிறைவைக் குறிக்கும் ஓர் எண். நிறைவை மட்டுமல்ல, ஓய்வையும் வலியுறுத்தும் ஓர் எண் அது. ஏழாவது நாள், ஒய்வு நாள் என்பதுபோல், ஏழாம் ஆண்டும் ஒய்வு ஆண்டாகக் கருதப்பட்டது. லேவியர் நூல் 25ம் பிரிவில், ஏழாம் ஆண்டைக் குறித்து இவ்வாறு வாசிக்கிறோம்:
லேவியர் 25: 1-4
ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; நான் உங்களுக்கு வழங்கும் நாட்டில் நீங்கள் வந்து சேரும்போது, நாடு ஆண்டவருக்கென்று ஓய்வு நாளைக் கொண்டாட வேண்டும். ஆறு ஆண்டுகள் வயலைப் பயிரிட்டுத் திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்கி அவற்றின் பலனைச் சேர்ப்பாய். ஏழாம் ஆண்டு ஆண்டவருக்காக ஓய்ந்திருக்கும் ஆண்டு, நிலத்துக்கும் ஓய்வு வேண்டும்.

ஒவ்வோர் ஏழாம் ஆண்டும் ஒய்வு ஆண்டாக இருப்பதைப்போல், ஏழுமுறை தொடரும் ஒய்வு ஆண்டுகளுக்கு அடுத்துவரும் ஆண்டு, யூபிலி ஆண்டு என்று இறைவனால் ஒதுக்கப்பட்டுள்ளது. லேவியர் நூல் 25ம் பிரிவில் யூபிலி குறித்து நாம் வாசிப்பது இதுதான்:
லேவியர் 25: 8-12
தொடர்ந்து வரும் ஏழு ஓய்வு ஆண்டுகளை ஏழேழு ஆண்டுகளாக ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்; பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச்செய்யுங்கள்.
ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு. அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப்பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும்.
ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம்; கிளைநறுக்காத திராட்சைச் செடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம். ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு; அது உங்களுக்குத் தூயது.

யூபிலி ஆண்டின் துவக்கச் செயலாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது, எக்காளம் முழங்குதல். யூபிலி ஆண்டுக்கென பயன்படுத்தப்பட்ட இந்த தனிப்பட்ட எக்காள முழக்கம், ஆட்டுக் கொம்பினால் செய்யப்பட்ட ஊது குழலிலிருந்து ஒலிக்கப்பட்டது. ஆட்டுக் கொம்பைக் குறிக்கும் 'யோபேல்' (Yobel) அல்லது, 'யோவேல்' (Yovel) என்ற சொல்லே, 'யூபிலி' என்ற சொல்லுக்கு வேர்ச்சொல்லாக அமைந்தது. எக்காள ஒலியுடன் துவங்கும் யூபிலி ஆண்டில், நாட்டில் வாழ்வோருக்கெல்லாம் தன்னுரிமை வழங்குதல்; அவரவர் தங்கள் நிலப்பகுதிக்கும், இனத்தாரிடமும் திரும்புதல்; நிலத்திற்கு ஓய்வளித்தல் என்ற மூன்று கடமைகளை நிறைவேற்றுமாறு, இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு ஆணையிடுகிறார்.

விவிலியத்தில் கூறப்பட்டுள்ள யூபிலி என்ற சொல்லும், யூபிலி ஆண்டிற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளும் யூத, மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியங்களைத் தாண்டி, உலக சமுதாயத்தின் சிந்தனைகளில் தாக்கங்களை உருவாக்கியுள்ளன என்பதை, நாம் கடந்துவந்த மில்லென்னிய ஆண்டான, 2000மாம் ஆண்டு உணர்த்தியது. யூபிலி ஆண்டின் கடமைகள், உலக சமுதாயத்திற்கு விடுத்துள்ள சவால்களை நம் அடுத்தத் தேடலில் தொடர்ந்து சிந்திப்போம்.

27 December, 2015

Feast of the Holy Family திருக்குடும்பத் திருவிழா

Luc Olivier Merson, French, 1846-1920 - Rest on the Flight into Egypt, 1879

Norman Vincent Peale, a great preacher and the author of many inspiring books, including the famous ‘The Power of Positive Thinking’, reflects on Christmas in these words: "Christmas waves a magic wand over this world, and behold, everything is softer and more beautiful."
Christmas, this year, is less beautiful and less magical because of the flood waters that engulfed many parts of Tamil Nadu and Sri Lanka. Christmas, this year, is ‘less merry’ due to the flood of refugees that reached the shores of Europe. The image of the lifeless body of Alan (Aylan) Kurdi washed ashore in Turkey, is the modern image of Child Jesus born in a manger and whisked away as a refugee to a foreign land to escape a blood thirsty tyrant.
In every disaster, be it a natural or human-made, it is the family that suffers the most. While we can easily find friends to celebrate an achievement, it is the family that we turn to while we are in tears; when we need a shoulder to lean on. We have come to celebrate ‘family’ today. It is quite fitting that the Church has allotted the Sunday after Christmas for the Feast of the Holy Family.
I wish to share my reflections along two lines:
  • The ‘history’ behind the Feast of the Holy Family.
  • The challenges faced by the Holy Family.

The History: The feast of the Holy Family was more of a private devotion popularised by some religious congregations for many centuries. The Church made this feast more ‘official’ in the year 1921. The reason behind such a move, as I see, was the First World War. This war was over in 1918. As in the case of every disaster, the major casualty of this war was the family. The tragic death of dear ones killed on the warfront, orphaned children, destroyed ‘homes’…This list would be endless. We lose more and gain almost nothing from any war. It is a pity that human beings have refused to learn this simple truth: NOBODY wins NOTHING from NO WAR… (Pardon my English!) Wishing to infuse some hope in the hearts of people devastated by this war, the Church officially integrated the Feast of the Holy Family in the liturgical cycle.
The feast of the Holy Family as we have today is a gift of the Second Vatican Council which took place in the 60s. The Second Vatican Council began in 1962 and ended on December 8, 1965. We are celebrating the 50th anniversary of the end of the Second Vatican Council with the start of the Extraordinary Jubilee of Mercy.
What was so special about the 60s? Although there was no major political war, people had to face other types of wars. The world was experiencing quite a few changes. One of the major crises was the ‘rebellion’ of the youth. Young people were very disillusioned with the way the world was shaping up. Some of them tried to set things right; many others tried to ‘escape’ reality, since it was too hard to face. Many of them sought peace and love outside families. The Church, in an attempt to restore family as the locus of a healthy human and Christian life, included the Feast of the Holy Family as part of the octave of Christmas – the Sunday after Christmas.

In many schools and parishes around India, the week leading up to Christmas will be filled with lots of activities. (I am sure this is true of many countries.) One of them is invariably the Nativity Drama, mostly enacted by children. This drama usually begins with the Annunciation scene where a lovely girl dressed in white and blue will be praying. An angel – a cute looking, doll-like child all dressed up in white silk and two wings – will tell Mary that she is to become the mother of Jesus. Mary, without much hesitation, would say ‘yes’. Then she would go to Elizabeth and sing and dance the ‘Magnificat’. Then would come the manger, the shepherds and the Magi… all lovely scenes. I have enjoyed these shows where adorable little ones tried to remind me of the great mystery of the Incarnation.
But, deep down I also felt uneasy that we had ‘sanitized’ the Christmas story so much. What was the original Christmas like? Lot more stark, horrible, horrifying realties stared Mary, Joseph and Jesus – right in their eyes. It is surely good to depict Christmas in such nice, glorious, holy ways. But we also need to think of the first Christmas in its original colour. Was there any colour at all, I wonder!

The Challenges: I want to reflect on the Holy Family from this ‘colourless’ black-and-white perspective. The original Holy Family was not all the time praying, singing praises to God, sharing pleasantries to one another. They had to face their share of challenges. One such challenge is given in today’s gospel, in the form of the 12 year old Jesus getting lost in Jerusalem. - Luke 2: 41-52
When a newborn arrives in a family, lot of changes and adjustments are required, especially for the parents and more especially for the mother. She needs to change her daily schedule according to the schedule of the babe, especially her sleeping hours. As the baby grows up, many more changes are demanded of the parents. These changes are mostly physical. When the child steps into teen age, once again lot more demands are made on the parents in terms of changes in perspective. Coming of age is a moment of celebration in many cultures. It is also a time of concern.
All of us know that teen is a very challenging time for the boy or girl growing up as well as for the parents. Those who are stepping into the portals of adulthood would indicate a few / some / all of the following directly and indirectly:
  • That they need to be paid their due respect.
  • That they should not be asked too many questions.
  • That they have a right to experiment with life, even if that means breaking a few ‘do’s and ‘don’t’s… especially, the don’ts. 
Jesus is brought to Jerusalem since he has ‘come of age’ according to the Jewish custom. Jesus stays back in Jerusalem to attend a scripture session with the scholars. Wow, that’s wonderful… Please don’t rush in with your compliments. This was not wonderful for Mary and Joseph. They had to endure two days of torture. They knew that the city of Jerusalem, during the festival days, had taken a heavy toll on families. Many youngsters simply vanished during those days and resurfaced in a revolutionary group many years later. Many others were captured by Roman soldiers without reason or rhyme. Some of those parents would have ‘met’ their sons on the cross outside the walls of Jerusalem after many years. All those and many other horrible thoughts would have rushed through the minds of Joseph and Mary. That’s why I asked you not to rush in with your compliments for Jesus staying back in Jerusalem. A ‘sanitized perspective’ of the Holy Family may not allow us to see all these stark realities.
Both Joseph and Mary must have gone back to Jerusalem wondering where to look for their son in the great city and in the midst of a festive crowd? Fortunately, both knew that their child was special. They had also seen his preferences. Led by their instincts, they went to the Temple. Their instincts were right. He was there in the Templesitting among the teachers, listening to them and asking them questions’.
What would you and I have done in such a situation? We would have rushed in; would have apologised to the elders for our son being a bit impetuous; taken our son out and given him a piece of our minds… Well, we could learn some lessons from Mary and Joseph. They waited for the session to get over. The mother then opens her heart out to her son. He seems to respond in a very cold way, trying to tell them that he has come of age. Such a cold response would have hurt Mary. The gospel says that both Mary and Joseph did not understand this. Don’t we hear an echo of what we have whispered or said aloud in our families – not able to understand what was happening to our teenage son or daughter? Joseph and Mary did face the challenge of not being able to understand Jesus. The very next line has this lovely statement: But his mother treasured all these things in her heart. I am sure Joseph too would have done the same!
Here again there is a lesson for us: Even if we don’t understand our children who are growing up, even if we don’t understand what they are trying to say or not say, we need to treasure them and their said or unsaid statements in our hearts. Not easy, but necessary!
Here are some parting thoughts: The event of Jesus getting lost in Jerusalem brings to mind some of the unfortunate people. I am thinking of parents who have lost their children in a festival and the children who have lost their parents in crowds. I am thinking of the hardcore criminals who kidnap children lost in such festivals and turn them into beggars or peddlers of drugs. Jesus was raised in the small town of Nazareth. He comes to the city and gets lost. Having taught in a city college for 15 years, I do think of young men who complete their school studies in villages and small towns, come to the city college and get lost. Spare a thought for the parents who have lost their sons or daughters in the wilderness called a city!
All of them (including the heartless thugs who kidnap children) require our prayers.    
Open Letter from Palestinian Refugee Family

கிறிஸ்மஸ் காலம் குடும்ப உணர்வை வளர்க்கும் ஓர் அழகிய காலம். கிறிஸ்துபிறப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் ஞாயிறன்று திருக்குடும்பத் திருவிழாவைக் கொண்டாட திருஅவை நம்மை அழைக்கின்றது. திருக்குடும்பத் திருவிழா உருவான வரலாற்றை நான் பின்னோக்கிப் பார்த்தபோது, என் மனதில் எழுந்த எண்ணங்களை முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இரண்டாவதாக, திருக்குடும்பம் எதிர்கொண்டதாக இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் பிரச்சனையைப் பற்றி சிந்திப்போம். மூன்றாவதாக, இந்த நற்செய்தி நிகழ்ச்சி நமக்கு நினைவுறுத்தும் இன்றைய பிரச்சனைகளையும் நாம் சிந்திப்போம்.

பல நூற்றாண்டுகளாக, திருக்குடும்பத் திருநாள் தனிப்பட்ட ஒரு பக்தி முயற்சியாக துறவற சபைகளால் வளர்க்கப்பட்டு வந்தது. 1893ம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் திருஅவையின் திருவிழாவாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு சில ஆண்டுகளில் இத்திருவிழா திருவழிபாட்டிலிருந்து நீக்கப்பட்டது. 1921ம் ஆண்டு திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் இத்திருவிழா மீண்டும் திருவழிபாட்டின் ஓர் அங்கமாக இணைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. அதுதான், அப்போது நடந்து முடிந்திருந்த முதல் உலகப்போர். 1918ல் நடந்து முடிந்த உலகப்போரில் ஆயிரமாயிரம் குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. வீட்டுத் தலைவனையோ, மகனையோ போரில் பலிகொடுத்த பல குடும்பங்கள் ஆழ்ந்த துயரத்தில், அவநம்பிக்கையில் மூழ்கியிருந்தன. இக்குடும்பங்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தரும் வகையில் திருக்குடும்பத் திருநாளை மீண்டும் அறிமுகப்படுத்தி, குடும்பங்களைக் கட்டியெழுப்ப திருஅவை முயன்றது.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவை நாம் இப்போது இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டாகக் கொண்டாடி வருகிறோம். 1962ம் ஆண்டு துவங்கிய இப்பொதுசங்கத்தின்போது திருக்குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களை திருஅவை மீண்டும் புதுப்பித்தது. இதற்கு முக்கிய காரணம், அன்றைய உலகின் நிலை. முதலாம், இரண்டாம் உலகப் போர்களால், கட்டிடங்கள் பல சிதைந்தது உண்மை. ஆனால், அதைவிட, குடும்பங்கள் அதிகமாகச் சிதைந்திருந்தன... வேறு பல வடிவங்களில் குடும்பங்கள் தினசரி போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. தொழில் மயமான உலகம், அறிவியல் முன்னேற்றங்கள் என்று பல வழிகளில் உலகம் முன்னேறியதைப் போலத் தெரிந்தது. ஆனால், அதேவேளை, குடும்பம் என்ற அடித்தளம், நிலை குலைந்தது. ஹிப்பி கலாச்சாரம், போதைப் பொருட்களின் பரவலான பயன்பாடு என்று, மக்கள் வீட்டுக்கு வெளியே நிம்மதியைத் தேடி அலைந்தனர். அந்த அமைதியை, அன்பை வீட்டுக்குள், குடும்பத்திற்குள் தேடச்சொன்னது திருஅவை. குடும்ப உணர்வுகளை வளர்க்கும் கிறிஸ்மஸ் பெருவிழாவைத் தொடர்ந்துவரும் ஞாயிறை, திருக்குடும்பத் திருவிழாவாக அறிவித்தது, திருஅவை.

திருக்குடும்பம் ஒரு தலைசிறந்த குடும்பம். அந்தக் குடும்பத்தில் வாழ்ந்த இயேசு, மரியா, யோசேப்பு அனைவரும் தெய்வீகப் பிறவிகள். அவர்களைப் பீடங்களில் ஏற்றி வணங்க முடியும். அவர்களை வைத்து விழாக்கள் கொண்டாட முடியும். ஆனால், அந்தக் குடும்பத்தைப்போல் வாழ்வதென்றால்... நடக்கக்கூடிய காரியமா? இது பொதுவாக நமக்குள் எழும் ஒரு தயக்கம்.
இயேசு, மரியா, யோசேப்பு என்ற மூன்று புனிதப் பிறவிகளால் உருவான அக்குடும்பம், எந்நேரமும் அமைதியாக, மகிழ்வாக எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்ததாக நினைக்கவேண்டாம். அவர்கள் மத்தியிலும் பிரச்சனைகள் இருந்தன. அவர்கள் அந்தப் பிரச்சனைகளைச் சந்தித்த விதமும், அவற்றிற்குத் தீர்வு கண்டவிதமும் நமக்குப் பாடங்களாக அமையவேண்டும். திருக்குடும்பம் சந்தித்த ஒரு பிரச்னையை இன்றைய நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கிறது. பெற்றோருடன் எருசலேம் கோவிலுக்குச் செல்லும் சிறுவன் இயேசு, அவர்களுக்குத் தெரியாமல் அங்கேயேத் தங்கிவிடும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. - லூக்கா நற்செய்தி 2: 41-52

ஒரு குடும்பத்தில் குழந்தை ஒன்று பிறந்ததும், பெற்றோர், முக்கியமாக தாய், தனது தினசரி வாழ்க்கையை அந்தக் குழந்தைக்காக அதிகம் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் உடல் ரீதியாக எழும் சவால்கள். இதே குழந்தை, ‘டீன் ஏஜ் (Teenage) என்றழைக்கப்படும் வளர் இளம் பருவத்தில் அடியெடுத்து வைக்கும்போது, பெற்றோர் மீண்டும் பல மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் பெரும்பாலும் மனதளவில், வளரும் பிள்ளையைப் புரிந்து கொள்வதில் எழும் சவால்களாக இருக்கும்.
நமது குடும்பங்களில் ஒரு மகளோ, மகனோ தோளுக்கு மேல் வளர்ந்ததும், தாங்கள் தனித்து வாழமுடியும் என்பதை எப்படி உணர்த்துவர்?... தங்களுக்குரிய மரியாதையை மற்றவர்கள் கொடுக்க வேண்டுமென எதிர்பார்ப்பர். 12 வயதைத் தாண்டி, ‘டீன் ஏஜ் வயதில் காலடி எடுத்து வைத்துவிட்டதால், தன்னை மற்றவர்கள் இனிமேல் கேள்விகள் கேட்டு தொல்லைப்படுத்துவதை விரும்பமாட்டார்கள்.
"'நான் எங்கிருந்து வந்தேன்?' என்ற 'அப்பாவித்தன'மானக் கேள்வியை எழுப்பிவரும் வரை நம் மகனோ, மகளோ தன் குழந்தைப் பருவத்தைத் தாண்டவில்லை என்பதை நாம் உணரலாம். 'நீ எங்கே போயிருந்தாய்?' என்ற கேள்வியை எப்போது அவர்கள் விரும்பவில்லையோ, அப்போது அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்டார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்று அருள்தந்தை Ernest Munachi அவர்கள் கூறியுள்ளார். எங்கே போனாய், என்ன செய்தாய், ஏன் இவ்வளவு லேட்டாக வருகிறாய்... போன்ற கேள்விகளை இனி தங்களிடம் கேட்கக்கூடாது என்பதை நேரடியாகச் சொல்லாமல், தங்கள் நடத்தையினால் டீன் ஏஜ் இளையோர் உணர்த்துவர்.
இதுவரைத் தங்களைச் சுற்றி நாடும், வீடும் கட்டியிருந்த வேலிகளைத் தாண்டுவதில், அல்லது அந்த வேலிகளை உடைத்து வெளியேறுவதில் டீன் ஏஜ் இளையோர் குறியாய் இருப்பார்கள். அந்த நேரத்தில் குடும்பங்கள் அவர்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல், அவர்கள் வாழ்வையே கேள்விக்குறியாக மாற்றும்போது, அவர்களது தோழர்கள், தோழிகள், சொல்வது, குடும்பத்தினர் சொல்வதைவிட முக்கியமாகிப் போகும். இந்த மாற்றங்கள், பல நேரங்களில், பெற்றோருக்குப் பிரச்சனைகளை, புதிய சவால்களை உருவாக்கும்.

அன்று எருசலேமில் நடந்ததாக இன்றைய நற்செய்தியில் நாம் வாசிப்பதும், வளர் இளம் பருவத்தில் அடியெடுத்துவைத்த ஓர் இளையவரைப் பற்றியதே. 12 வயதை நிறைவு செய்த ஆண்மகனை, கோவிலுக்கு முதன்முறையாக அதிகாரப் பூர்வமாகக் கூட்டிச்செல்லும் வழக்கம் யூதர்கள் மத்தியில் இருந்தது. 12 வயதுக்கு மேல் ஒவ்வோர் ஆண்மகனும் ஆண்டுக்கு ஒருமுறையாகிலும், குறிப்பாக, எருசலேம் திருவிழாவின்போது, கோவிலுக்குக் கட்டாயம் செல்லவேண்டும். இதுவரை குழந்தையாக இருந்த அச்சிறுவன், இனி தனித்து முடிவுகள் எடுக்கும் தகுதிபெற்ற ஓர் ஆண்மகன் என்பதை உறுதி செய்யும் வகையில் இப்பழக்கம் அமைந்தது.
வளர் இளம் பருவத்தில் அடியெடுத்துவைத்த இயேசு, தன் சுதந்திரத்தை நிலைநாட்ட செய்யும் முதல் செயல் என்ன? அப்பா, அம்மாவிடம் சொல்லாமல், கோவிலில் நடந்த மறைநூல் விவாதம் ஒன்றில் அவர் கலந்துகொண்டார். நல்ல விஷயம் தானே! இதை ஏன் ஒரு பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்? என்று நாம் கேள்வியை எழுப்பலாம்.
கழுவித் துடைத்த ஒரு திருப்பொருளாக திருக்குடும்பத்தை நாம் பார்த்து பழகிவிட்டதால், இப்படிப்பட்டக் கேள்வியை எழுப்புகிறோம். ஆனால், பிள்ளையைத் தொலைத்துவிட்ட பெற்றோரின் நிலையில் இருந்து இதைப் பார்த்தால், அது எவ்வளவு பெரிய பிரச்சனை என்பதை நாம் உணரலாம். மகனைக் காணாமல் பதைபதைத்துத் தேடிவரும் மரியாவும் யோசேப்பும் மூன்றாம் நாள் இயேசுவைக் கோவிலில் சந்திக்கின்றனர். அச்சந்திப்பில் நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

தங்கள் மகன் மறைநூல் அறிஞர்கள் மத்தியில் அமர்ந்து, அவர்களுக்கு இணையாக, சிலவேளைகளில் அவர்களுக்கு மேலாக, விவாதங்கள் செய்ததைக் கண்டு, அவரது பெற்றோர் வியந்தனர், மகிழ்ந்தனர்... அதே சமயம் பயந்தனர். வயதுக்கு மீறிய அறிவுடன், திறமையுடன் செயல்படும் குழந்தைகளால் பெற்றோருக்குப் பெருமையும் உண்டு... சவால்களும் உண்டு. மரியா தன் மகனைப் பார்த்து, தன் ஆதங்கத்தை எடுத்துக் கூறுகிறார். இயேசுவோ அவர் அம்மா சொல்வதைப் பெரிதுபடுத்தாமல், தான் இனி தனித்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்துவிட்டதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.
இயேசு மரியாவுக்குச் சொன்ன பதில் அந்த அன்னையின் மனதைப் புண்படுத்தியிருக்க வேண்டும். அதுவும், மற்றவருக்கு முன்னால் அப்படிப் பேசியதால், அந்த அன்னையின் மனது இன்னும் அதிகம் வலித்திருக்கும். மகன் சொல்வதில் என்னதான் நியாயம் இருந்தாலும், வலி வலிதானே! அந்த வேதனையில் அவர் கோபப்பட்டு மேலும் எதாவது சொல்லியிருந்தால், பிரச்சனை பெரிதாகி இருக்கும்.

குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள பொது இடங்கள் நல்லதல்ல என்ற ஒரு சின்ன பாடத்தையாவது, அன்னை மரியாவிடம் நாம் கற்றுக்கொள்ளலாமே. மரியா இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளவில்லை, இருந்தாலும் அவற்றைத் தன் மனதில் ஒரு கருவூலமாகப் பூட்டி வைத்துக்கொண்டு கிளம்பினார். இயேசுவும் அவர்களோடு சென்றார். தான் தனித்து முடிவெடுக்க முடியும் என்பதை, பெற்றோருக்கு உணர்த்திய இயேசு, அடுத்த 18 ஆண்டுகள் செய்தது என்ன? பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார் இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார் (லூக்கா 2: 51-52) என்று இன்றைய நற்செய்தி நிறைவடைகிறது.

இறுதியாக, ஒரு சில எண்ணங்கள்... திருவிழாவுக்குச் சென்றவேளையில், இயேசு காணாமல் போய்விடும் சம்பவம், இன்றைய நிகழ்வுகளை நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. திருவிழாக் கூட்டங்களில் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு, தவிக்கும் பெற்றோரை... பெற்றோரை இழந்து, தனித்து விடப்படும் குழந்தைகளை... நினைத்துப் பார்ப்போம். இவர்களை மீண்டும் இறைவன் ஒன்றிணைக்க வேண்டும் என்று மன்றாடுவோம். இவ்விதம் காணாமல்போகும் குழந்தைகளைக் கடத்திச்சென்று, பிச்சை எடுப்பதற்கும், இன்னும் பல தவறான வழிகளுக்கும் இவர்களைப் பயன்படுத்தும் மனசாட்சியற்ற மனிதர்களை நினைத்துப் பார்ப்போம். இவர்களுக்காகவும் நாம் செபிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நாசரேத்து என்ற சிற்றூரில், கிராமத்தில் வளர்ந்து வந்த இயேசு, எருசலேம் நகரத்திற்குச் சென்று காணாமல் போகிறார் என்பதும் ஒரு சில சிந்தனைகளை, செபங்களைத் தூண்டுகிறது. கிராமங்களில், சிறு ஊர்களில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு மேற்படிப்பிற்கென அல்லது வேலைத்தேடிச் சென்று, பல வழிகளில் காணாமல் போய்விடும் இளையோரை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். நகரத்திற்குத் தங்கள் மகனையோ, மகளையோ அனுப்பிவிட்டு, பின்னர் அவர்களை நகரம் என்ற காட்டில் தொலைத்துவிட்டுத் தவிக்கும் பெற்றோரையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். பல வழிகளில் தங்களையேத் தொலைத்துவிட்டு தவிக்கும் இளையோரும் பெற்றோரும் தங்கள் குடும்ப உறவுகளில் மீண்டும் தங்களையேக் கண்டுகொள்ள வேண்டும் என திருக்குடும்பத்தின் இயேசு, மரியா, யோசேப்பு வழியாக இறைவனை இறைஞ்சுவோம்.


22 December, 2015

விவிலியம்: காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் – பகுதி 2


2015ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு துவங்கியுள்ளது. இதற்கு முன்னதாக, கத்தோலிக்கத் திருஅவையில் 2000மாம் ஆண்டு, யூபிலி ஆண்டு கொண்டாடப்பட்டது. திருஅவை வரலாற்றில், 1300ம் ஆண்டு வரை, யூபிலி கொண்டாட்டங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. 1300ம் ஆண்டு, திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள், அந்த ஆண்டை, ஒரு புனித ஆண்டாக அறிவித்தார்.
புனித ஆண்டை அறிவிக்கும் எண்ணம், திருத்தந்தையிடமிருந்தோ, அல்லது வேறு மதத் தலைவர்களிடமிருந்தோ உருவானதாகத் தெரியவில்லை. மக்கள் காட்டிய விசுவாச உணர்வே, இந்த அறிவிப்பை, திருத்தந்தையிடமிருந்து வரவழைத்தது. மக்களின் விசுவாசமே, யூபிலி ஆண்டுகள் உருவாகக் காரணமாக இருந்தததென்பது, யூபிலி ஆண்டு வரலாற்றிற்கு ஓர் உன்னத அடித்தளத்தை அமைக்கிறது.

13ம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில், உலகின் பல பகுதிகளில் போர்கள் நிகழ்ந்துவந்தன. கொள்ளை நோய்களும் மக்களை வாட்டி வதைத்தன. எனவே, பல கிறிஸ்தவர்கள், இறைவனின் இரக்கத்தையும், மன்னிப்பையும் தேடி, திருத்தூதர்களான புனித பேதுரு, பவுல் ஆகிய இருவரின் கல்லறைகளில் கூடி, செபிக்கத் தீர்மானித்தனர். தங்கள் தீர்மானத்தை நிறைவேற்ற, அவர்கள் உரோம் நகர் நோக்கி, திருப்பயணம் மேற்கொண்டனர். ஒரு சிலரது முயற்சியெனத் துவங்கிய இத்திருப் பயணத்தில் வழியெங்கும் ஆயிரமாயிரமாக கிறிஸ்தவர்கள் இணைந்தனர். அவர்கள் அனைவரும் 1299ம் ஆண்டு, கிறிஸ்மஸ் விழாவன்று உரோம் நகரை அடைந்தனர். அவர்களின் எண்ணிக்கை 200,000த்திற்கும் அதிகமாக இருந்ததென்று ஒரு சில வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன.
எந்த ஒரு மதத் தலைவரின் தூண்டுதலும் இன்றி, மக்கள் தாங்களாகவே மேற்கொண்ட இந்த முயற்சியைக் கண்ட திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள், 1300ம் ஆண்டினை 'பாவ மன்னிப்பு ஆண்டென' அறிவித்தார். அந்த ஆண்டு, உரோம் நகருக்கு திருப்பயணம் மேற்கொண்டு, ஒப்புரவு அருள் அடையாளத்தைப் பெறும் அனைத்து விசுவாசிகளும் தங்கள் பாவங்களுக்குரிய தண்டனைகளிலிருந்து விடுதலை பெறுவர் என்று திருத்தந்தை அறிவித்தார். இதுவே, முதல் யூபிலி ஆண்டெனக் கொண்டாடப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித ஆண்டுகளைக் கொண்டாடவேண்டும் என்ற வழிமுறையையும் திருத்தந்தை 8ம் போனிபாஸ் அவர்கள் வகுத்தார்.
அவருக்குப் பின் வந்த திருத்தந்தையர், 100 ஆண்டுகள் என்பது மிக நீண்ட கால அளவு என்ற காரணத்தாலும், ஒருவரது வாழ்நாளில் ஒரு முறையாகிலும் புனித ஆண்டை, அல்லது யூபிலி ஆண்டைக் கொண்டாட வாப்பளிக்க வேண்டும் என்ற காரணத்தாலும் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை யூபிலியைக் கொண்டாட வழிமுறைகள் வகுத்தனர். எனவே, 1300ம் ஆண்டு முதல் 2000மாம் ஆண்டு முடிய, 700 ஆண்டுகளில் 26 முறை புனித ஆண்டுகள் கொண்டாடப்பட்டுள்ளன. இவை, சாதாரண யூபிலி ஆண்டுகள் என்று அழைக்கப்பட்டன. சாதாரண யூபிலி ஆண்டுகளில் நிகழ்ந்த சில நிகழ்வுகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன:

1575ம் ஆண்டு திருத்தந்தை 13ம் கிரகரி அவர்கள் அறிவித்திருந்த யூபிலி ஆண்டைக் கொண்டாட, 300,000த்திற்கும் அதிகமான திருப்பயணிகள் உரோம் நகருக்கு வந்தனர் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1675ம் ஆண்டு, திருத்தந்தை 10ம் கிளமென்ட் அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த யூபிலி ஆண்டில், சுவீடன் நாட்டு அரசி, கிறிஸ்டீனா அவர்கள், உரோம் நகருக்கு, திருப்பயணியாக சென்றார். அங்கு, தாழ்ச்சியின் அடையாளமாகவும், தன் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், அரசி கிறிஸ்டீனா அவர்கள், மூவொரு இறைவன் மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த நோயாளிகளின் காலடிகளைக் கழுவினார். இதே யூபிலி ஆண்டில், உரோம் நகரில் உள்ள கொலோசியம் திடல், கிறிஸ்தவ மறைசாட்சிகளின் பெயரால் அர்ச்சிக்கப்பட்டது.
1700ம் ஆண்டு, யூபிலி கொண்டாடப்பட்ட வேளையில், திருப்பயணிகளின் தேவைகளை நிறைவேற்ற, திருத்தந்தை 12ம் இன்னொசென்ட் அவர்கள், வானதூதரான புனித மிக்கேல் பெயரால் ஒரு பயணியர் விடுதியைத் திறந்து வைத்தார்.
இந்த வரலாற்றுக் குறிப்பை வாசிக்கும்போது, கடந்த வாரம், டிசம்பர் 18, வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் இயங்கிவரும் காரித்தாஸ் பிறரன்பு விடுதிக்குச் சென்று, அங்கு, திருக்கதவைத் திறந்துவைத்த நிகழ்வு மனதில் நிழலாடுகிறது. 600க்கும் மேற்பட்ட வறியோருக்கு ஒவ்வொரு நாளும் உணவு வழங்குவதிலும், 200க்கும் அதிகமான வீடற்றவருக்கு படுக்கை வசதிகள் செய்துத் தருவதிலும் ஈடுபட்டுள்ள உரோம் காரித்தாஸ் விடுதியின் கதவுகளை, புனிதக் கதவாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திறந்து வைத்தது, பொருளுள்ள அடையாளமாகத் தெரிகிறது. இறைவனின் இல்லங்களில் மட்டுமல்ல, பிறரன்பு இல்லங்களிலும் திருக்கதவுகள் உள்ளன என்ற உண்மையை உணர்த்தியது.
1725ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் பெனடிக்ட் அவர்கள் அறிவித்திருந்த யூபிலி ஆண்டையொட்டி, விடுதலைபெற்ற 500க்கும் அதிகமான கிறிஸ்தவ அடிமைகள், இந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உரோம் நகருக்கு திருப்பயணம் மேற்கோண்டனர்.
1750ம் ஆண்டு திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள் அறிவித்திருந்த யூபிலி ஆண்டில், பெருமளவில் திருப்பயணிகள் கலந்துகொண்டனர் என்றும், முதல் முறையாக, அமெரிக்கக் கண்டத்திலிருந்தும், ஆசியக் கண்டத்திலிருந்தும் திருப்பயணிகள் உரோம் நகருக்குச் சென்றிருந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த யூபிலி ஆண்டையொட்டி, அசிசிநகர் புனித பிரான்சிஸ் துறவுசபையைச் சேர்ந்த புனித லியோனார்ட் என்ற துறவி, உரோம் நகரின் புகழ்பெற்ற கொலோசியம் திடலில், சிலுவைப்பாதைத் தலங்களை நிறுவினார்.

20ம் நூற்றாண்டைக் காயப்படுத்திய இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டில் யூபிலி ஆண்டை அறிவித்த திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், உலக அமைதிக்காகச் சிறப்பாகச் செபிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதே ஆண்டு, நவம்பர் முதல் தேதி, திருத்தந்தை அவர்கள், மரியன்னையின் விண்ணேற்பு, ஒரு விசுவாச சத்தியம் என்பதையும் அறிக்கையிட்டார்.
2000மாம் ஆண்டு கொண்டாடப்பட்ட யூபிலி, 25,50,100 என்ற எண்களைத் தாண்டி, 1000 என்ற எண்ணுடன் ஒரு மில்லென்னியம் என்ற அளவில் கொண்டாடப்பட்ட முதல் யூபிலியாகத் திகழ்ந்தது. 'கிறிஸ்து, நேற்றும், இன்றும், என்றும்' என்ற விருதுவாக்குடன் கொண்டாடப்பட்ட இந்த யூபிலி, பெரிய யூபிலி என்றும் அழைக்கப்பட்டது.
1300க்கும், 2000த்திற்கும் இடைப்பட்ட 7 நூற்றாண்டுகளில், 1800, மற்றும் 1850 ஆகிய இரு ஆண்டுகள், பல்வேறு அரசியல் நெருக்கடிகளின் காரணத்தால் யூபிலி ஆண்டு கொண்டாட்டங்கள் தடைபட்டன. இந்த 700 ஆண்டுகளில் கொண்டாடப்பட்ட 26 யூபிலிகள், சாதாரண யூபிலி ஆண்டுகள் என்றழைக்கப்பட்டன.
இந்த யூபிலி ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றைத் தொகுத்து சிந்திக்கும்போது, யூபிலி என்பது, ஒருவரது தனிப்பட்ட வாழ்வைச் சீரமைக்கும் ஒரு பக்தி முயற்சியாக மட்டும் இல்லாமல், சமுதாயத்தைச் சீரமைக்கும் முயற்சிகளையும் கொண்டதாக இருந்ததென்பதை உணரலாம். விவிலியத்தில் கூறப்பட்டுள்ள யூபிலி என்ற எண்ணம், தனிப்பட்ட, மற்றும் சமுதாயச் சீரமைப்பு இரண்டையும் வலியுறுத்துகின்றது. இக்கருத்தின் எதிரொலியை, திருஅவை வரலாற்றில் சாதாரண யூபிலிகள் கொண்டாடப்பட்டபோது காண முடிகிறது.
25,50,100 ஆகிய எண்களையொட்டி அறிவிக்கப்பட்ட சாதாரண யூபிலிகள் அல்லாமல், குறிப்பிட்ட காரணங்களுக்காக, திருத்தந்தையர், சிறப்பு யூபிலி ஆண்டுகளை அறிவித்துள்ளனர். இந்தப் பழக்கம் 16ம் நூற்றாண்டில், ஆரம்பமானது. முதல் சிறப்பு யூபிலி ஆண்டு 1585ம் ஆண்டு மே 25ம் தேதி திருத்தந்தை 5ம் சிக்ஸ்துஸ் (1585-1590) அவர்களால் அறிவிக்கப்பட்டது. அவர் தனது தலைமைத்துவப் பணியின் ஆரம்பமாக இதனை அறிவித்தார்.
கிறிஸ்தவர்கள் மத்தியில் அமைதியை ஊக்குவிக்கவும், திருஅவைத் தலைவர்களின் சிறப்புத் தேவைகளுக்குப் பதிலளிக்கவும், பொதுச் சங்கத்தின் வெற்றி, துருக்கிக்கு எதிரான மோதல், அன்னையின் அமல உற்பவக் கோட்பாட்டு அறிக்கையின் 50ம் ஆண்டு நிறைவு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணங்களைக் குறிக்கவும் சிறப்பு யூபிலி ஆண்டுகள் அறிவிக்கப்பட்டன.
இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, கி.பி.33ம் ஆண்டு, அவர், சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்ற கணிப்பின் அடிப்படையில், 1933ம் ஆண்டு, நமது மீட்பின் 1900மாம் ஆண்டினை, சிறப்பு யூபிலி ஆண்டாகக் கொண்டாட, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, 1983ம் ஆண்டு, மீட்பு வரலாற்றின் 1950 ஆண்டுகள் நிறைவுற்றன என்பதால், அதை ஒரு சிறப்பு யூபிலி ஆண்டென திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அறிவித்தார். 20ம் நூற்றாண்டில் அறிவிக்கப்பட்ட சிறப்பு யூபிலி ஆண்டுகள், இவை இரண்டு மட்டுமே!
21ம் நூற்றாண்டின் முதல் சிறப்பு யூபிலி ஆண்டாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையும் சேர்த்து, இதுவரை, கத்தோலிக்கத் திருஅவையில் 65 சிறப்பு யூபிலி ஆண்டுகள் இடம்பெற்றுள்ளன என்று வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன.
தற்போது நாம் சிறப்பித்துவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டிற்குக் காரணம், 50 ஆண்டுகளுக்குமுன், 1965ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி நிறைவுற்ற 2ம் வத்திக்கான் சங்கம். மதில் சுவர்களால் சூழப்பட்ட ஒரு கோட்டைபோல், பல நூற்றாண்டுகளாகக் காட்சியளித்த திருஅவையை, ஒரு தாயாக இவ்வுலகிற்குக் காட்டிய பெருமை, 2ம் வத்திக்கான் சங்கத்தையே சேரும். அச்சங்கம் முடிந்து 50 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளதைக் கொண்டாடவும், திருஅவை இன்றைய உலகில் ஒரு தாயாக தன் பணியைத் தொடரவும், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்.

இந்த சிறப்பு யூபிலி ஆண்டினை, ஏன் 'இரக்கத்தின் யூபிலி' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார் என்பதையும், 'யூபிலி' என்ற வார்த்தைக்கு விவிலியம் தரும் பொருள், யூபிலி ஆண்டில் ஆற்றவேண்டிய கடமைகள் என்று விவிலியம் கூறுவனவற்றையும் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.


20 December, 2015

“The one who is on fire cannot sit on a chair” "பற்றியெரிபவர், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது"

Emmanuel – God with us
  
IV Sunday of Advent

Sometimes, out of the blue there comes a word, a picture or a person who spark off a string of thoughts in us. This week, as I was preparing for the Sunday reflection, a sentence (I don’t know whether this is a proverb or not!) gripped me strongly. I wish to begin my reflections with that sentence: “He (She) who is on fire cannot sit on a chair.” I was instantly reminded of the famous bestseller written by Robert Fulghum – “It Was on Fire When I Lay Down on It”. The first sentence talks of a person who is on fire and, hence, cannot rest. Fulghum’s title seems to suggest that even when our surrounding is on fire, we could ‘sleep’ or ‘sleep-walk’ through it!
People who reacted (or pro-acted) to the tragedy of Chennai floods belong to both these groups. When the flood waters swelled, so many young women and men, refusing to stay in-doors, swung into action with no help from the government. Actually the arrival of the government officials complicated the help process in so many places. I thought to myself – who needs the Central or the State Government, when the youth can rise up to an emergency like this? How I wish these young men and women respond with such dedication and determination when elections sweep across India like floods!

In contrast to these young women and men, we also saw leaders flying in helicopters or sitting in front of TV sets or in front of TV cameras. Many of these leaders did not put even one foot in the flood waters. They were not on fire but, on the contrary, were sitting cosily when their surrounding was on fire and watching the ‘fun’! But, their statements were on fire, shamelessly dishing out platitudes like ‘being-with-the-people’! To add insult to injury, the minions of our leaders made deliberate mistakes to boost the image of their leaders at the expense of the suffering people. Talk of rubbing salt in the wound!
It is common knowledge how the flood relief vehicles and packages were forced to exhibit the picture of a leader. The Central Government website published a picture of Prime Minister Narendra Modi surveying the flood situation in Chennai from a helicopter. This picture was ‘photoshopped’ and drew lots of criticisms. The minions in PM’s office withdrew this picture in minutes. I am sure the younger generation which is very versatile in the power of the new media, were alert to the efforts of these sycophants! How I wish these young women and men who can challenge the leaders on social media, can also challenge them in elections!

I shall continue to wish and pray that the youth of India (or, for that matter, youth all over the world) get more and more involved in public life for the betterment of society. For the time being, I wish to turn back to the Gospel of today, talking of a young lady going in search of an elderly lady who was in need of help. Such instances took place in Chennai floods and will continue to take place as long as there are people who are on fire! The fire within these persons can be quenched only when they reach out and fulfil the needs of others. Those who need and those who fulfil those needs are those who can truly celebrate Christmas!

One Christmas, while his nation – El Salvador – was suffering a terrible civil war, Archbishop Oscar Romero spoke these words: “No one can celebrate a genuine Christmas without being truly poor. The self-sufficient, the proud, those who, because they have everything, look down on others, those who have no need even of God - for them there will be no Christmas... Only the poor, the hungry, those who need someone to come on their behalf, will have that someone. That someone is God, Emmanuel, God with us.”
Recently Pope Francis released his message for the 49th World Day of Peace, to be celebrated by the Catholic Church on the 1st of January, 2016. “Overcome Indifference and Win Peace” is the title of his message. In it, he speaks of how self-sufficiency leads us to become indifferent to God, to human beings and to the environment. Here are some relevant lines from this message:
The first kind of indifference in human society is indifference to God, which then leads to indifference to one’s neighbour and to the environment… We have come to think that we are the source and creator of ourselves, our lives and society. We feel self-sufficient, prepared not only to find a substitute for God but to do completely without him. As a consequence, we feel that we owe nothing to anyone but ourselves, and we claim only rights.

Our story from today’s Gospel features two women, Mary and Elizabeth who were in need of God. One can even say that they were desperately in need of God. Elizabeth’s need was more personal than that of Mary’s. Elizabeth wanted God o redeem her from the cruel condemnation her society had heaped upon her for being barren. Mary wanted God to redeem her society suffering under the tyranny of the Roman occupation as well as from other forms of slavery. God fulfils their needs … and how!
The Gospel gives us the famous scene of the Visitation. The barren woman and the virgin met to recount what the Lord had done in their lives. (Luke 1: 39-45) Both Elizabeth and Mary were invited by God to bear witness to one great truth, namely, that nothing is impossible for God. Both knew that there was no logical explanation to what they were asked to do… rather, what they were asked to be. Both said almost a blind ‘yes’, relying on God and God alone. They did not have any other support – not even their families. Even their families would not have understood their position: the barren woman, quite advanced in age, conceiving? Unthinkable, they would have said. A virgin conceiving out of wedlock? Unthinkable, unacceptable, unpardonable. They would have stoned her to death.

Perhaps for us living in the 21st century such news would not create any excitement. With all the advanced biotechnology at our disposal, the barren can easily conceive. With the unbridled life-style prevalent today, the virgin shall conceive… what is so great about this? I can well imagine many of us asking this question with a shrug of the shoulders. What is so great about this? A typical question for our times. Nothing seems great, nothing seems wonderful. Our generation seems to have lost the sense of wonder. If this is the case with us, what will happen to the generationext? The word ‘wonder’ may vanish from their dictionary! What a pity!

Setting aside our brainy questions, let us look at this event with a believing heart. As the Bible constantly illustrates, God's timing usually takes us by surprise. Sometimes, as with Elizabeth, God moves too slowly. Sometimes, as with Mary, he moves too quickly. Like Elizabeth, some of us have been praying for a long time for something to happen. We began to think that it might never happen. On the other hand, like Mary, some of us find that too many things happened too quickly in our lives. God had conceived something in our life that we didn't ask for. We were thrust into situations we never bargained for. Whether nothing seems to be happening in our lives, or whether too many things are happening in our lives, we need to have the humility to let go and allow God to enter our lives. This is the core of Christmas. The challenge of Christmas.

It is fascinating that, according to Luke's gospel, after Mary discovered that she would give birth to the Messiah, the first person she went to, with haste, was not Joseph or her parents but her relative Elizabeth whose life was also clearly out of control. Mary probably thought that only Elizabeth would understand her situation. Elizabeth not only understood Mary but blessed her in some of the most beautiful words a human person can ever hear. In blessing Mary, Elizabeth blessed herself. When Elizabeth heard Mary's greeting, we are told that the child within her leapt for joy. When Elizabeth experienced this, her only question was to ask, "And why has this happened to me that the mother of my Lord comes to me?" Why me?
We are a people who want to make sense of our lives. We wish to find and give explanations. No adequate explanations come forth. We find it hard to explain the tragedies that occur in our lives and around us. It is harder still to explain the blessings that have come to us without reason. "Why me," we ask. The explanations are not there.

Elizabeth asked the “why” question and did not get an answer. Mary asked the “how” question at the annunciation. She too did not get an adequate answer. When they met, they still had lots of unanswered questions locked up within. But, they did not ‘waste’ their time in a question-and-answer session. They did not indulge in any intellectual arguments. They simply allowed themselves to be drenched in God’s shower of blessings. Simply exclamations. No explanations.
Trying to explain life is only another way of trying to control it. One of the central messages of Christmas is that we are not in control of the blessings. There is no logic to a blessing, only gratitude. We pray that during this Christmas, we may be like Mary and Elizabeth accepting the gifts that come our way with childlike gratitude.

Just a closing thought… All of us know the famous myth of ‘The Frog and the Princess’. We know that the ugly frog turns into a handsome prince once it is kissed by the princess. It is said that once the TV show "Sesame Street" had put a twist on this myth, namely, that once the princess kisses the frog, she turns into a frog herself. This is closer to the Christmas story where God kisses the human family and becomes one among us!
The Visitation: Model for the New Evangelization

திருவருகைக் காலம் - 4ம் ஞாயிறு

சற்றும் எதிர்பாராத வேளைகளில், நம் கண்ணில்படும் ஒரு படம், ஒரு நிகழ்வு, அல்லது, ஒரு மனிதர் நமக்குள் பல சிந்தனைகளைக் கிளறிவிடுவதை நாம் அனைவருமே உணர்ந்திருப்போம். இந்த வாரம் என் கண்ணில் பட்ட ஓர் ஆங்கிலக் கூற்று, ஒரு தொடர் சிந்தனையை இன்று துவக்கி வைக்கிறது. "He (She) who is on fire, cannot sit on a chair" என்ற அக்கூற்றை, நேரடியாக, வார்த்தைக்கு, வார்த்தை மொழி பெயர்ப்பு செய்வது கடினம் என்பது எனக்குத் தெரிந்தது. இந்த எண்ணத்தைத் தமிழில் சொன்னால், அது இவ்விதம் ஒலிக்கலாம்: "சுடர்விட்டெரியும் ஒருவரால் சும்மா இருக்க முடியாது" அல்லது, "பற்றியெரியும் மனிதரால், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது".
'சுடர்விட்டெரிந்த' அல்லது, 'பற்றியெரிந்த' ஓர் இளம்பெண், கருதாங்கியிருந்த மற்றொரு வயதானப் பெண்ணைச் சந்திக்கச் சென்ற நிகழ்வு, இன்றைய நற்செய்தியாக நம்மைத் தேடி வந்துள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில், சென்னையை வெள்ளம் சூழ்ந்தபோது, இதையொத்த நற்செய்திகளை நாள்தோறும் கேட்டோம். பல்லாயிரம் மனிதர்கள், குறிப்பாக, இளம் பெண்களும், ஆண்களும் மற்றவரின் துயர் கண்டு சும்மா இல்லாமல், சுறுசுறுப்பாக, வெள்ளத்திலும், சகதியிலும் இறங்கி பணியாற்றினர். ஒரு கோணத்தில் சிந்தித்தால், இத்தகைய மனிதர்கள் இருக்கும்வரை, மாநில, மத்திய அரசுகள் நமக்குத் தேவையில்லாமல் போய்விடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
இதை நம்பிக்கை என்று சொல்வது, ஒரு சிலருக்குக் கேள்விகளை எழுப்பலாம். இப்போது இயங்கிவரும் பாணியில் அரசுகள் இயங்கிவந்தால், அவை நமக்குத் தேவையேயில்லை. அதற்குப் பதில், தேர்தல்கள் வரும்வேளையில், அவற்றையும் வெள்ள அபாயமென எண்ணி, மக்களின் துயர்துடைக்க, தேர்தல் என்ற வெள்ளத்தில் இறங்கும் இளையோரால் எவ்வளவோ நன்மைகள் விளையும். இத்தகையச் சூழல் உருவாவதை, நம்பிக்கை என்று சொல்லாமல் வேறு எவ்விதம் சொல்வது?
தேவையில் இருந்த வயதானப் பெண் எலிசபெத்தை, இளம்பெண் மரியா தேடிச் சென்றார் என்ற நற்செய்தியை வாசித்ததும், சென்னை வெள்ளத்தில், துன்பத்தில் இருந்தோரைத் தேடிச்சென்ற இளம் பெண்களும், ஆண்களும் மனத்திரையில் வலம் வருகின்றனர். அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

சாதாரண, எளிய, மனிதர்கள், மற்ற மனிதர்களின் துன்பத்தைக் கண்டு பதறியதால், பற்றியெரிந்ததால், அவர்களால் தங்கள் வீடுகளில் அமர்ந்திருக்க முடியவில்லை. அதேவேளையில்மத்திய, மாநில அரசின் பெரும்புள்ளிகள், வெள்ளத்தில் பரிதவித்த நகரை, பறக்கும் பல்லக்கில் இருந்தபடியோ, தொலைக்காட்சி பெட்டியிலோ பார்த்தனர் என்பதை அறிவோம். பரிதவித்த மக்களைக் கண்டு, இத்தலைவர்கள் பற்றியெரிந்து, பணிபுரிந்ததாகத் தெரியவில்லை; ஆனால், அவர்கள் விடுத்த அறிக்கைகள், பற்றியெரிந்தன; மக்களின் துன்பங்களில் தாங்களும் பங்கேற்பதாக பொய்யைப் பறைசாற்றின.

இந்தியப்பிரதமர், ஹெலிகாப்டரில் பறந்தபடியே சென்னை வெள்ளத்தைப் பார்வையிட்ட காட்சி, ஒரு புகைப்படமாக, மத்திய அரசின் இணையதளத்தில் வெளியானது. இந்தப் படம் வெளியானதிலும் ஒரு வேதனையான குழப்பம் நிகழ்ந்ததை நம்மில் பலர் அறிந்திருக்கக் கூடும். இந்தியப்பிரதமர், ஹெலிகாப்டரில் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே, ஒரு வட்டக் கண்ணாடி சன்னல் வழியே வெள்ளம் சூழ்ந்த சென்னை, மங்கலாகக் காட்சியளித்தது. இது முதலில் வெளியான படம். சில நிமிடங்களில் இந்தப் படத்தில் சில 'திருத்தங்கள்' செய்யப்பட்டன. அந்த வட்டக் கண்ணாடி சன்னல் வழியே வெள்ளத்தின் உண்மையானத் தாக்கம் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை என்ற காரணத்தால், பிரதமர் அலுவகத்தைச் சேர்ந்தவர்கள், 'Photoshop' என்று சொல்லப்படும் கணணி தந்திரத்தைப் பயன்படுத்தி, வெள்ளத்தின் விளைவுகளைத் தெளிவாகக் காட்டும் மற்றொரு புகைப்படத்தை அந்தக் கண்ணாடி சன்னலில் ஒட்டிவைத்தனர். அதாவது, பறக்கும் பல்லக்கில் இருந்தபடியே, பிரதமர், மக்களின் துயரங்களைத் துல்லியமாகப் பார்த்தார் என்ற பிரமையை உருவாக்க, அவருடைய உதவியாளர்கள் மேற்கொண்ட பரிதாப முயற்சி இது. பிரதமரின் இணையதளத்தில் இந்தப் படம் வெளியான சில நிமிடங்களில் இந்தப் பரிதாப முயற்சியைப் பற்றிய கண்டனக் குரல்கள் எழுந்ததால், இந்தப் படம் உடனே நீக்கப்பட்டது.
பற்றியெரிந்த உரோம் நகரைக் கண்டு 'பிடில்' வாசித்த 'நீரோ' மன்னனின் வாரிசுகள், இன்றும் வாழ்கின்றனர் என்பதை, பிரதமரின் உதவியாளர்கள் உணர்த்துகின்றனர். தனிமனிதத் துதிக்காக, மக்கள் படும் கொடுமைகளையும் ஒரு காட்சிப் பொருளாக, பொழுதுபோக்காகப் பயன்படுத்தும் உதவியாளர்களின் வர்க்கத்தனமான எண்ணங்களைத் தோலுரித்துக் காட்டியதும், கண்டனம் செய்ததும், கணணித் தந்திரங்களை நன்கு அறிந்த இளையோரே என்று எண்ணத் தோன்றுகிறது. இத்தகைய அறிவுத்திறன் கொண்ட இளையோர், இன்னும் சிறிது துணிவையும், சமுதாய அக்கறையையும் வளர்த்துக்கொண்டால், நம் விடியல் நெருங்கிவிடும். அந்த விடியலுக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

பறக்கும் பல்லக்கில் வெள்ளத்தைப் பார்வையிட்ட தலைவர்களும், வீட்டில் அமர்ந்து வெள்ளக் காட்சிகளை பார்த்த தலைவர்களும், ஒவ்வொரு நாளும் எதையாவது சொல்லிக்கொண்டே இருந்தனர், இன்னும் சொல்லியபடியே உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர், மழை நீரிலோ, வெள்ளத்திலோ தங்கள் பாதங்களையும் நனைத்திருக்க மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இத்தலைவர்களை, இறைவன் நல்வழியில் நடத்தவேண்டும் என்ற வேண்டுதலுடன், நாம் இன்றைய நற்செய்திக்குத் திரும்புவோம்.

'தவளையும், இளவரசியும்' என்ற பாரம்பரியக் கதை நமக்கு நினைவிருக்கலாம். அக்கதையில், அழகான ஓர் இளவரசி, அழகில்லாத ஒரு தவளையை முத்தமிடுவார். உடனே, அத்தவளையின் சாபம் நீங்க, அது, அழகான ஓர் இளவரசனாக மாறும். சில ஆண்டுகளுக்கு முன், 'Sesame Street' என்ற ஒரு தொலைக்காட்சித் தொடரில், இக்கதை தலைகீழாக மாற்றியமைக்கப்பட்டது. அதாவது, அத்தவளையை இளவரசி முத்தமிட்டதும், அவர் தவளையாக மாறிவிடுவார். இறைவன், மனிதரில் ஒருவரானதை இக்கண்ணோட்டத்தில் நாம் சிந்திக்கலாம். இறைவன் மனுக்குலத்தை முத்தமிட்டதால், அவரே நம்மில் ஒருவராக மாறியதைக் கொண்டாடும் விழாதான், கிறிஸ்மஸ் பெருவிழா.

நம்மில் ஒருவராக வாழ இறைவன் வருகிறார் என்ற மகிழ்வைப் பகிர்ந்துகொள்ள இளம் பெண் மரியாவும், வயதில் முதிர்ந்த எலிசபெத்தும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர், நம்மையும் சந்திக்க வருகின்றனர். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் மரியாவும், எலிசபெத்தும் சொல்லித்தரும் பாடங்கள் பல உள்ளன. இவ்விருவரும் தங்கள் வாழ்வில் இறைவனைத் தேடியவர்கள். தன்னைத் தேடியவர்களைத் தேற்ற, இறைவன் அன்று வந்தார்; இன்று வருகிறார்; இனியும் வருவார் என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் ஓர் அற்புத விழாவே, கிறிஸ்மஸ். இது, மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வதோர் நாட்டில் பேராயராகப் பணிபுரிந்த அருளாளர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், எல் சால்வதோர் மக்களுக்கு வெளியிட்ட கிறிஸ்மஸ் செய்தியின் ஒரு பகுதி இது:
"உண்மையில் ஏழையாக மாறாதவர்கள், கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட முடியாது. தன்னிடம் எல்லாமே உள்ளன, தான் மட்டுமே தனக்குப் போதும் என்ற மமதையில் வாழ்பவர்களுக்கு இறைவன் தேவைப்படுவதில்லை. அவர்களுக்குக் கிறிஸ்து பிறப்பும் தேவைப்படுவதில்லை. ஏழைகள், பசியுற்றோர், தேவையில் இருப்போர்... இவர்களாலேயே கிறிஸ்துபிறப்பு விழாவில் பொருள் காணமுடியும். அவர்களைத் தேடியே எம்மானுவேல், அதாவது, 'கடவுள் நம்மோடு' என்ற பெயர் தாங்கிய இறைவன் வருவார்" என்பது, அருளாளர் ரொமேரோ அவர்கள் வழங்கிய கிறிஸ்மஸ் செய்தி.

தான் மட்டுமே தனக்குப் போதும் என்று வாழ்வோருக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அடிக்கடி எச்சரிக்கை வழங்கிவருகிறார். 2016ம் ஆண்டு புத்தாண்டு நாளன்று கொண்டாடப்படவிருக்கும் 49வது உலக அமைதி நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். 'அக்கறையின்மையைக் களைந்து, அமைதியை வெல்க' (Overcome Indifference and Win Peace) என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அச்செய்தியில், 'அக்கறையின்மையின் பல வடிவங்கள்' என்ற பகுதியில் கூறும் கருத்துக்கள், அருளாளர் ரோமெரோ அவர்களின் கருத்துக்களுக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளன.
அக்கறையின்மையின் முதல் வடிவம், இறைவனைப் பற்றி காட்டும் அக்கறையின்மை. இது, அயலவர் மீதும், சுற்றுச்சூழல் மீதும் அக்கறையற்ற நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நம்மையும், நம் வாழ்வையும், சமுதாயத்தையும் நாமே உருவாக்கிக் கொள்வதாக எண்ணுகிறோம். நமக்கு நாமே போதும் என்ற மனநிலையால், இறைவன் முற்றிலும் தேவையில்லை என்ற உணர்வு கொள்கிறோம் என்று திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.

மரியாவும், எலிசபெத்தும் தான் மட்டும் தனக்குப் போதும் என்ற மாய வலையிலிருந்து விடுதலை பெற்று, இறைவனையும் அடுத்தவரையும் தேடிச் சென்றவர்கள். அவர்களுக்கு இறைவன் வெகுவாகத் தேவைப்பட்டார். குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த எலிசபெத்து, தன் தனிப்பட்ட வாழ்வில் உண்டான குறையைத் தீர்க்க, இரவும் பகலும் இறைவனைத் தேடினார். இறைவனிடம் வேண்டினார்.
மரியா என்ற இளம்பெண்ணும் இறைவனைத் தேடினார். தன் சொந்தத் தேவைகளைக் காட்டிலும், சமுதாயத்தின் தேவைகளுக்காக அவர் இறைவனிடம் வேண்டினார். அவர் வாழ்ந்த காலத்தில், யூதேயா முழுவதும் தன் ஆதிக்கத்தையும், அராஜகத்தையும் உறுதிப்படுத்த, உரோமைய அரசு, படை வீரர்களை அதிகம் பயன்படுத்தியது. அடுத்த நாட்டை அடக்கியாளச் செல்லும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்பட்டது, அந்நாட்டில் வாழ்ந்த பெண்கள், குறிப்பாக, இளம்பெண்கள். பகலோ, இரவோ, எந்நேரத்திலும் அப்பெண்களுக்கு, படைவீர்களால் ஏற்பட்ட ஆபத்துக்கள் ஏராளம். அந்நியநாட்டு, அல்லது, உள்நாட்டுப் படைவீரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் வாழும் பெண்களைக் கேளுங்கள்... அங்கு ஏராளமான கண்ணீர் கதைகள் வெளிவரும்.

தன் சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையிலடைக்கப்பட்டதைப் போல் உணர்ந்த மரியா, இறைவனைத் தேடினார். "இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் காட்டமாட்டாயா இறைவா?" என்ற வேண்டுதலை, அவர், கண்ணீரோடு அடிக்கடி எழுப்பிவந்தார். மரியா எழுப்பிவந்த வேண்டுதல்களுக்கு விடை வந்தது. எப்படிப்பட்ட விடை அது! மணமாகாத அவரை தாயாகுமாறு அழைத்தார் இறைவன்.

இது அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனைக்கான தீர்ப்பு. மணமாகாத இளம் பெண்கள் தாயானால், அவர்களை ஊருக்கு நடுவே நிறுத்தி, கல்லால் எறிந்து கொல்லவேண்டும் என்பது, யூதர்களின் சட்டம். இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. அதுவும் உரோமையப் படைவீரர்களால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி, கருவுற்ற பல இளம்பெண்கள் இவ்வகையில் கொல்லப்பட்டதை மரியா நேரில் கண்டிருக்கவேண்டும். அவர்களில் சிலர், இளம்பெண் மரியாவின் தோழிகளாகவும் இருந்திருக்கக்கூடும். தாங்கள் செய்யாத ஒரு குற்றத்திற்காக, அந்த இளம்பெண்கள் கொடுமையாகக் கொல்லப்பட்டதைப் பார்த்த மரியா, பின்னர், தனிமையில் வந்து கதறி அழுதிருக்க வேண்டும்.
மணமாகாமல் தாயாகும் நிலைக்கு தான் அழைக்கப்படுவதை மரியா உணர்ந்தார். இறைவன் தந்த இவ்வழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக்கொள்வதும், வலியச்சென்று, தூக்குக் கயிறை எடுத்து, கழுத்தில் மாட்டிக்கொள்வதும்... எல்லாம் ஒன்றுதான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை அதீத நம்பிக்கை அந்த இளம் பெண்ணுக்கு! 'இதோ உமது அடிமை' என்று சொன்னார் மரியா. அவரது நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் வானதூதர் இன்னொரு செய்தியைச் சொன்னார். அவரது உறவினராகிய எலிசபெத்து கருதரித்திருக்கிறார் என்பதே அச்செய்தி. குழந்தைப்பேறு இல்லாததால், ஊராரின் பழிச்சொற்களைக் கேட்டு, கேட்டு மனம் வெறுத்து, வீட்டுக்குள் தன்னையே சிறைபடுத்திக்கொண்ட எலிசபெத்தைச் சந்திக்க மரியா சென்றார்.
கன்னியான ஒரு பெண் தாயாகப்போகும் செய்தியை அவரது குடும்பம் ஏற்காது, யூத சமூகம் ஏற்காது. மலடியென்று இகழப்பட்ட ஒரு பெண், அதுவும் குழந்தையைப் பெற்றெடுக்கக் கூடிய வயதைத் தாண்டிய ஒரு பெண், தாயாகப்போகும் செய்தியை, அவரது குடும்பம் நம்பாது, யூத சமூகமும் நம்பாது. ஏற்கமுடியாத, நம்பமுடியாத செய்திகளை உள்ளத்திலும், உடலிலும் தாங்கிய இரு பெண்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பை இன்றைய நற்செய்தி நமக்குக் கூறுகிறது. - லூக்கா நற்செய்தி 1: 39-45

இறைவன் நம் வாழ்வில் செயலாற்றும் அழகை, இவ்விரு பெண்களின் வாழ்வும் சித்திரிக்கிறது. எலிசபெத்தின் வாழ்வில், இறைவன், மெதுவாக, மிக, மிகத் தாமதமாகச் செயல்பட்டார். ஆண்டுகள் பலவாய் குழந்தைப்பேற்றுக்காக எலிசபெத்து வேண்டிவந்தார். வயது கூட, கூட, இனி தன் வாழ்வில் குழந்தைப்பேறு இல்லையென்ற தீர்மானத்திற்கு அவர் வந்த வேளையில், இறைவன் அவர் வாழ்வில் குறிக்கிட்டார். நம்ப முடியாத ஒரு புதுமையை நிகழ்த்தினார். நாமும் வாழ்வில் பல ஆண்டுகளாய் வேண்டிக் காத்திருந்த ஒரு காரியம், திடீரென முன்னறிவிப்பு ஏதுமின்றி நிறைவேறுவதில்லையா?
எலிசபெத்தின் வாழ்வில், மிக, மிகத் தாமதமாகச் செயல்பட்ட இறைவன், மரியாவின் வாழ்வில் ஒரு புயலென நுழைந்தார். மீட்புக்காக மரியா காத்திருந்தது உண்மை; ஆனால், அந்த மீட்புக்கு அவரே வழியாக வேண்டும் என்பதை அவரால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. மிகத் தாமதமாகவோ, அல்லது புயல் வேகத்திலோ வாழ்வில் காரியங்கள் நிகழும்போது, கூடவே கேள்விகள் பலவும் எழுகின்றன. ஏன் எனக்கு? ஏன் இப்போது? போன்ற கேள்விகள், மரியாவின் உள்ளத்திலும், எலிசபெத்தின் உள்ளத்திலும் கட்டாயம் எழுந்திருக்கவேண்டும்.

கேள்விகள் எழுவது இயற்கை. ஆனால், எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள், விளக்கங்கள் கிடைக்காது. மரியா வானதூதரைச் சந்தித்தபோதும், மரியா, எலிசபெத்தைச் சந்தித்தபோதும் ஒரு சில கேள்விகள் வெளிப்பட்டன. பல கேள்விகள் அவர்கள் மனதில் அடைபட்டிருந்தன. அவர்கள் சந்தித்தபோது, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விளக்கங்களைத் தேடவில்லை.
மரியா, எலிசபெத்து இருவரையும், கேள்விகள் கார் மேகங்களாகச் சூழ்ந்திருந்தாலும், அந்த மேகங்களிலிருந்து பெய்த இறைவனின் கருணை என்ற மழையில் அவர்கள் நனைந்தனர். கடவுளைக் கேள்விக் கணைகளால் துளைப்பதற்குப் பதில், கடவுளின் கருணை மழையில் நனைவது மேலான ஒரு வழி. இது, மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் இரண்டாவது பாடம்...

இவ்விருவருக்கும் இடையே நிகழ்ந்த அச்சந்திப்பு ஒருவரை ஒருவர் வாழ்த்துவதிலும், ஆசீர்வதிப்பதிலும், இறைவனைப் புகழ்வதிலுமே நிறைந்தது. எலிசபெத்து மரியாவைப் புகழ்ந்த மொழிகள், மனிதர் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய, சொல்லவேண்டிய அழகான ஆசி மொழிகள்... "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" லூக்கா நற்செய்தி 1: 42 நாம் ஒவ்வொருவரும் தினமும் மற்றவர்களை இத்தகைய வார்த்தைகளால் வாழ்த்தினால், ஆசீர்வதித்தால், இந்த பூமியில் எவ்வளவு நலம் வளரும்! பிறரை வாழ்த்தும்போது, ஆசீர்வதிக்கும்போது நாமும் வாழ்த்தப்பெறுகிறோம், ஆசீர் பெறுகிறோம். வயதில் முதிர்ந்தவர்கள், "மவராசனா இரு" "மவராசியா இரு" என்று வாழ்த்தும்போது எழும் நிறைவு, கேட்பவரையும் நிறைக்கிறது, கொடுப்பவரையும் நிறைக்கிறது. மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் மூன்றாவது பாடம் இது.

நல்லவை வாழ்வில் நடக்கும்போது, கேள்விகள் கேட்டு, விடைகள், விளக்கங்கள் தேடி, நம் அறிவை நிரப்புவதற்குப் பதில், நன்றியால் நம் மனதை நிரப்ப முயல்வோம். கருமேகங்களாய் சூழ்ந்துவரும் பிரச்சனைகள் மத்தியில் மின்னல் கீற்றுபோலத் தோன்றும் நல்லவற்றை உறுதியாகப் பற்றிக்கொள்ளவும், அந்த நல்ல செய்திகளை நான்கு பேரோடு பகிர்ந்து, நம்பிக்கையை வளர்க்கவும், சந்திக்கும் மனிதர்களை மனதார வாழ்த்தும் பக்குவம் பெறவும், மரியா, எலிசபெத்து என்ற இரு அற்புதப் பெண்கள் வழியாகப் பாடங்களைப் பயில்வோம்.
"சுடர்விட்டெரியும் ஒருவரால் சும்மா இருக்க முடியாது" "பற்றியெரியும் மனிதரால், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது" என்ற எண்ணங்களுக்கு ஏற்ப வாழ்ந்த இளம்பெண் மரியாவைப் போல வாழ்வதற்கு, நமக்குள் இறையன்பு பற்றியெரிய மன்றாடுவோம்.