30 September, 2018

Sin against ‘these little ones’ இந்தச் ‘சிறியோருக்கு’ எதிரான பாவம்



26th Sunday in Ordinary Time

In Greek history we read of a young man who so distinguished himself in public games that his fellow citizens raised a statue in his honour, to keep fresh the memory of his victories. This statue so excited the envy of another rival who had been defeated in the races, that, one night he stole out under cover of darkness with the intention to destroy the statue. But he only nicked it slightly. He gave it a final heave and it fell – on top of him and killed him. - Frank Michalic in ‘1000 Stories You Can Use’.
Envy always harms the person who harbours it, and, may, sometimes, harm the person who is the object of envy. Those who suffer from envy, may have to do things ‘under the cover of darkness’ rather than in broad daylight.

Our Sunday Readings, taken from the Book of Numbers (11: 25-29) and the Gospel of Mark (9: 38-48) talk of envy. Envy begins with the formula I-and-you or we-and-they. Once the ‘I’ or the ‘We’ is put on a pedestal, there is no room for others to share the pedestal. Joshua wants Moses to forbid two persons who were prophesying even though they did not come to the tent to receive the spirit. The reply given by Moses is very magnanimous:
Numbers 11: 28-29
And Joshua the son of Nun, the minister of Moses, one of his chosen men, said, "My lord Moses, forbid them." But Moses said to him, "Are you jealous for my sake? Would that all the Lord's people were prophets, that the Lord would put his spirit upon them!"

A similar scene is enacted in the Gospel.
Mark 9: 38-39
John said to Jesus, "Teacher, we saw a man casting out demons in your name, and we forbade him, because he was not following us." But Jesus said, "Do not forbid him; for no one who does a mighty work in my name will be able soon after to speak evil of me.”

What is so striking in these two episodes is, that, envy oozes out of holy people engaged in a holy mission. We are sadly aware, of the scandal of envy that is found among Catholic leaders, Christian leaders and, in general, leaders of all religions. If this is the case with the ‘green tree’, what about the ‘dried tree’ – namely, the envy that rules the commercial and political worlds? While the envy in ‘holy circles’ comes out discreetly, the envy in commercial and political circles is expressed openly as ‘cut-throat-competition’!

The responses of both Moses and Jesus give a very simple solution. Let every one have equal share of all the blessings of God. But, unfortunately, when a few try to grab everything for themselves, troubles multiply. In the second reading taken from the Letter of James, we hear very strong words spoken against the rich who wish to hoard everything for themselves.
James 5:1-6
Come now, you rich, weep and howl for the miseries that are coming upon you. Your riches have rotted and your garments are moth-eaten. Your gold and silver have rusted, and their rust will be evidence against you and will eat your flesh like fire. You have laid up treasure for the last days.  Behold, the wages of the laborers who mowed your fields, which you kept back by fraud, cry out; and the cries of the harvesters have reached the ears of the Lord of hosts. You have lived on the earth in luxury and in pleasure; you have fattened your hearts in a day of slaughter. You have condemned, you have killed the righteous man; he does not resist you.

We can feel that this direct, forthright condemnation of the rich by Apostle James would have hastened his martyrdom. We see a similar straight forward talk from Jesus too. Jesus uses strong language to condemn those who are a cause of sin for the little ones.
“Whoever causes one of these little ones who believe in me to sin, it would be better for him if a great millstone were hung round his neck and he were thrown into the sea.” (Mark 9:42)
When we hear these strong words of Jesus, our minds recall thousands of ‘little ones’ who have been sexually abused by priests and bishops in the Catholic Church. We are also sadly aware of how women (especially nuns) have been exploited by the same group of church personnel. ‘The little ones’ that Jesus is speaking of here are not only children, but also the women, the poor, the excluded, the marginalised … the ‘anawim’, who have nurtured a ‘simple faith in Jesus’.

For those who are prone to sin, Jesus goes on to give a crude solution. He says that it is better to lose a limb than life – eternal life. I am reminded of a news story I read long back. It was about a man working in the railways in a remote part of Australia. As he was engaged in some work, he was bitten on his hand by a poisonous snake. He had hardly any chance to reach the hospital quickly. He knew that every second he waited, would make his life more precarious. He chopped his hand off, using an axe. He continued to live with an amputated hand. For the question of choosing between life and limb, he had chosen, life!

This may be a rare case. But, the question – life or limb – is often asked in our hospitals. This question does not pop up all of a sudden, as in the case of our friend from Australia, bitten by the snake. The question of life or limb that echoes in our hospitals, often comes, as the last resort to those who have not heeded earlier warnings. Imagine a person suffering from diabetes. If he takes care of his eating, and does regular exercises, he can live with this problem. Different warnings may come his way, as for instance, a small wound! But, if he ignores these warnings and goes on with his usual life style, the wound develops into gangrene and he will have to come to the point of ‘life or limb’ choice!

Developing healthy habits is good for all of us. Won’t you agree? Isn’t Jesus saying the same thing in today’s Gospel? A bit too strong, a bitter pill to swallow! Most medicines are bitter!

Christ With Children by Christopher Santer

பொதுக்காலம் 26ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

கிரேக்க நாட்டில் வாழ்ந்த விளையாட்டு வீரர் ஒருவர், பல போட்டிகளில் வெற்றிபெற்று, நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். மக்கள், அவருக்கு சிலையொன்றை செய்து, நகர சதுக்கத்தில் வைத்தனர். அந்த வீரருடன் பலமுறை போட்டியிட்டு, தோற்றுப்போன மற்றுமோர் இளையவர், அச்சிலையைக் கண்டபோதெல்லாம், பொறாமையில் பொங்கினார். ஓர் இரவு, ஊரெல்லாம் உறங்கியபின், அவர் அந்த சிலையை உடைத்து வீழ்த்த, நகரச் சதுக்கத்திற்கு சென்றார். இருளில், தட்டுத்தடுமாறி, சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீதேறி, அச்சிலையைச் சுற்றி கயிற்றைக் கட்டினார். பின்னர், கீழே இறங்கிவந்து, தன் வலிமை அனைத்தையும் சேர்த்து, அந்தக் கயிறை இழுத்தார். சிலை, அவர் மீது விழுந்து, அவரைக் கொன்றது.
பொறாமை என்ற நோயால் பீடிக்கப்பட்டவர்களில், வென்றவர்களை விட, கொன்றவர்களும், கொல்லப்பட்டவர்களுமே அதிகம் என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. காயின், ஆபேல் காலம் முதல், மனிதர்களை வதைத்துவரும் பொறாமை என்ற நோயைக் குறித்து சிந்திக்கவும், இந்த நோயைக் குணமாக்கும் வழிகளைக் கற்றுக்கொள்ளவும், இந்த ஞாயிறு வாசகங்கள் நமக்கு வாய்ப்பளிக்கின்றன.

பொறாமை என்ற உணர்வின் ஊற்றாக இருப்பது, 'நான்-நீ', நாங்கள்-நீங்கள்' என்ற பாகுபாடுகள். மற்றவர்களைவிட நம்மை உயர்வாகக் கருதி, நாம் என்றும், நம்மைச் சாராதவர் என்றும் வேறுபாடுகளை உருவாக்கும்போது, பொறாமை பொங்கியெழுகிறது.
மோசேயுடன் சேராத இருவர், இறைவாக்குரைத்தனர் என்பதைக் கேள்விப்படும் யோசுவா, அவர்களைத் தடுத்து நிறுத்தும்படி, மோசேயிடம் விண்ணப்பிக்கிறார் என்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. இதையொத்த மற்றொரு நிகழ்வை நாம் நற்செய்தியிலும் காண்கிறோம்.
மாற்கு 9: 38
அப்பொழுது யோவான் இயேசுவிடம், "போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார்.

இவ்விரு நிகழ்வுகளிலும், பொறாமையால் தூண்டப்பட்டு, தவறான முடிவுகள் எடுத்தவர்கள், இறை ஊழியர்கள் என்ற உண்மை நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. இறைவாக்குரைத்தல், இறைவன் பெயரால் பேய்களை ஓட்டுதல் ஆகிய புனிதமான பணிகளிலும், பொறாமை நுழையக்கூடும் என்ற உண்மை, வேதனை தருகிறது. பாடங்களும் சொல்லித்தருகிறது.
நாம் வாழும் இன்றைய உலகில், கடவுள் பெயரால், மதங்களின் பெயரால் பொறாமைத் தீ கட்டுக்கடங்காமல் பற்றியெரிவதை ஒவ்வொரு நாளும் நாம் உணர்ந்து வருகிறோம். நமது பொறாமை உணர்வுகள் பொருளற்றவை என்பதை, மோசேயும், இயேசுவும் கூறும் பதிலுரைகள் நமக்கு உணர்த்துகின்றன.

யோசுவாவுக்கு, மோசே, பெருந்தன்மையோடு தரும் பதில் மிக அழகானது.
எண்ணிக்கை 11:29
மோசே அவரிடம், "என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!" என்றார்.
அதேவண்ணம், யோவானிடம் இயேசு கூறும் பதிலும், பரந்ததோர் உள்ளத்தை வளர்த்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறது.
மாற்கு 9: 39
அதற்கு இயேசு கூறியது; "தடுக்கவேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார்" என்றார்.

பொறாமையால் உங்கள் பார்வையை இழந்துவிடாதீர்கள் என்று கூறும் இயேசு, அடுத்து வரும் வரிகளில், உங்கள் பார்வையைப் பறிகொடுத்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தை, மற்றொரு காரணத்திற்காகப் பரிந்துரைக்கிறார். இப்பகுதியில், இயேசு கூறும் சில அறிவுரைகள், கேட்பதற்கு கடினமாக உள்ளன.
சிறியோருக்கு இடறலாக இருப்பவர்களின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி, அவர்களை கடலில் தள்ளிவிடுவது மேல் என்றும், நம்மைப் பாவத்தில் விழச்செய்யும் உடல் உறுப்புக்களை வெட்டி எறியவேண்டும் என்றும், இயேசு கூறும் ஆலோசனைகள், கேட்பதற்கு மிகக் கடினமாக உள்ளன.
நாம் உட்கொள்ளும் பல மருந்துகள் கசப்பானவையெனினும் உடல் நலனை மனதில் கொண்டு அவற்றை உட்கொள்கிறோம், அல்லவா? அதேபோல், இயேசுவின் கூற்றுகள் நம் ஆன்மாவின் நலனுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகள் என்ற கண்ணோட்டத்துடன் இன்றைய நற்செய்தி சொல்லித்தரும் கசப்பான உண்மைகளைப் பயில முயல்வோம்.

சவால்கள் நிறைந்த இயேசுவின் ஆலோசனைகளைப் புரிந்துகொள்ள, அவர் எந்தப் பின்னணியில் இவற்றைச் சொன்னார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். இன்று இயேசு நற்செய்தியில் கூறும் வார்த்தைகளுக்குப் பின்னணி என்ன? சென்ற வார நற்செய்தியின் தொடர்ச்சியாக இதைப் பார்க்கலாம். சென்ற வாரம், ஒரு குழந்தையை மையமாக்கி, இயேசு தன் சீடர்களுக்குச் சவால் விடுத்தார். இவர்களில் ஒருவரை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுங்கள், இவர்களைப்போல் மாறுங்கள் என்று கூறினார் இயேசு. ஆனால், நடைமுறையில் அவர் கண்டது வேறு. அவரது கூற்றுகளுக்கு நேர் மாறாக, குழந்தைகளை, குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளாமல், அவர்களை, வயதில் முதிர்ந்தவர்களின் உலகில், வலுக்கட்டாயமாக திணிப்பவர்களைக் குறித்து, இயேசு இன்றைய நற்செய்தியில் எச்சரிக்கை விடுக்கிறார். மனசாட்சியற்ற இந்த அரக்கர்களால் குழந்தைகள் சந்திக்கும் ஆபத்துக்களை நினைத்து, கொதித்தெழுகிறார்.

குழந்தைகள் மட்டும் அல்ல, குழந்தை மனம் கொண்டவர்கள், ஏழைகள், சமுதாயத்தில் சிறியவர்கள், அனைவரையும் இச்சிறியோருள் என்ற சொல்லில் இணைத்துவிடுகிறார் இயேசு. "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது"  (மாற்கு நற்செய்தி 9: 42) என்று சொல்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக, கத்தோலிக்கத் திருஅவையை பெரிதும் வேதனையில் ஆழ்த்திவரும் ஒரு குற்றச்சாட்டு, சிறியோருக்கும், பெண்களுக்கும் எதிராக, அருள்பணியாளர்களால், ஆயர்களால் இழைக்கப்பட்டுவரும் பாலியல் குற்றங்கள். இனிவரும் காலங்களில், சிறியோரும், பெண்களும், திருஅவையில், பாதுகாப்பை உணரும்வண்ணம், தகுந்த வழிமுறைகள் உருவாக வேண்டுமென்று இறைவனை வேண்டுவோம்.

சமுதாயம் என்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் நஞ்சாக மாறுவதற்கு பதில், ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி யோசித்து, அவரவர் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும் என்ற அறிவரையை, இயேசு, இன்றைய நற்செய்தியில், கடினமான வழியில் கூறியுள்ளார். ஒவ்வொருவரும் தங்களுக்குள் மாற்றங்களை உருவாக்குவதற்கு, அவரவர் உடலில் இருக்கும் தடைகளை நீக்கவேண்டியிருக்கும். இந்தக் கருத்தை வலியுறுத்தவே, கை, கால் இவற்றை வெட்டிப் போடுங்கள், கண்ணைப் பிடுங்கி எறியுங்கள், என்று இயேசு கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவில் நடந்ததாய் சொல்லப்படும் ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. இரயில்வேத் துறையில் பணிபுரிந்த ஒருவர், தனியே ஏதோ ஓரிடத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு பாம்பு அவரது கையில் கொத்திவிடுகிறது. மிகவும் விஷமுள்ள பாம்பு அது. மருத்துவமனை செல்வதற்கு நேரமோ, வாகனவசதியோ இல்லாத நிலை. வாகனத்திற்காகக் காத்திருந்தால், அவரது உயிர் போய்விடும் ஆபத்து இருந்தது. அவர் செய்தது என்ன? அருகிலிருந்த ஒரு கோடாலியை எடுத்தார். தன் கையை வெட்டிக்கொண்டார். இந்நாள் வரை அவர் உயிரோடு இருக்கிறார், வேலை செய்து வருகிறார், ஒரு கையோடு. அவரைப் பொருத்தவரை, கையை விட, உயிரைப் பெரிதாக மதித்ததால், அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.

இது போன்ற பல நிகழ்வுகளை நாம் கேட்டிருப்போம். பல நேரங்களில் மருத்துவ மனைகளில் இந்தக் கேள்வி எழும். உங்களுக்கு கை வேணுமா? உயிர் வேணுமா? கால் வேணுமா? உயிர் வேணுமா? என்ற கேள்விகள் கேட்கப்படும். காயத்தால் புரையோடிப்போன கையையோ, காலையோ வெட்டி, எத்தனையோ பேருடைய உயிரை மருத்துவர்கள் காப்பாற்றுகின்றனர். உயிரா அல்லது உறுப்பா என்ற கேள்வி எழும்போது, ஒரு கையோ, காலோ, கண்ணோ இல்லாமல் உயிர் வாழ்வது மேல் என்று எத்தனையோ பேர் முடிவெடுத்திருக்கலாம். வேறு எந்த வழியும் இல்லை என்ற கடைசி நிலையில் எடுக்கப்படும் முடிவு அது.

உயிரா, உறுப்பா என்ற கேள்வியை வந்தடையும் கடைசி நிலை, ஒரு நாளிலோ, ஓரிரவிலோ வரும் நிலை அல்ல. அந்த நிலை, வழக்கமாக, சிறுகச் சிறுகத்தான் வரும். பாம்பு கொத்தியதால், கையை வெட்டிக்கொள்வது போன்ற நிகழ்வுகள் மிக அரிதாக நடக்கும். ஆனால், மருத்துவமனைகளில் உயிரா, உறுப்பா என்ற கடைசி நிலைக்குத் தள்ளப்படும் நிலை, அடிக்கடி நடக்கும் நிகழ்வுதானே. அந்த நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுடைய வாழ்வைப் புரட்டிப்பார்த்தால், சில பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு வரும் சர்க்கரை வியாதியை எண்ணிப்பார்ப்போம். அந்த நிலை வருவதை, பல வழிகளில் நம்மால் தடுக்கமுடியும். ஒரு சிலருக்கு அது பிறவியிலேயே வந்து சேரும் பிரச்சனையாக இருக்கலாம். சரி... அந்தக் குறை இருக்கிறதென்று கண்டுபிடித்தவுடன், கவனமாகச் செயல்படலாமே. நமது உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி, மருந்துகள் என்று காட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், சர்க்கரை வியாதி என்ற குறையோடு பல ஆண்டுகள் வாழ முடியும்.
ஆனால், அவ்வகை கட்டுப்பாடு ஏதுமில்லாமல், அல்லது, அக்காட்டுப்பாடுகளை அடிக்கடி மீறி, வம்பை வலியச்சென்று வரவழைத்துக் கொள்பவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். வழியோடு போகும் பாம்பைச் சீண்டி, விளையாடுபவர்கள், இவர்கள். இன்னும் சிலரோ, பாம்பு வாழும் புற்றைத் தேடிச்சென்று, புற்றில் கைகளைவிட்டு விளையாட நினைப்பவர்கள். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல பழக்கங்களைத் தேடிச் செல்பவர்களை நாம் அறிவோம். நம் குடும்பங்களில், நண்பர்கள் குழுவில் இத்தகைய ஆபத்தான பழக்கங்களுக்கு அடிமையாகியிருப்பவர்களை, இன்று இறைவனின் சந்நிதியில் கொணர்ந்து, அவர்களுக்காக வேண்டிக்கொள்வோம்.

சர்க்கரை வியாதியால் துன்புறுகிறவர்களை மீண்டும் எண்ணிப் பார்ப்போம். கட்டுப்பாடுகள் இல்லாமல் அவர்கள் வாழும்போது, திடீரென, கையிலோ, காலிலோ, ஒரு காயம் ஏற்பட்டால், அதுவும், அவர்களுக்கு தரப்படும் மற்றோர் எச்சரிக்கை என்று எடுத்துக்கொள்ளலாம், வாழ்வை மாற்றிக்கொள்ளலாம். அந்த எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாமல், அவர்கள் தன்னிச்சையாக வாழும்போது, இறுதியில், மருத்துவ மனைகளில் உயிரா, உறுப்பா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.

உடலுக்கு நலம் தராத பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்... கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும்... தேவையற்ற ஆபத்துக்களை தேடிச்செல்வது, மதியீனம்... என்ற அறிவுரைகள், எல்லாருக்குமே நல்லதுதானே!
இத்தகைய அறிவுரைகளைத்தான், இயேசு, இன்றைய நற்செய்தியில், கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். அவர், இவற்றை, கோபமாக சொல்கிறாரா, சாந்தமாகச் சொல்கிறாரா என்ற ஆய்வுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணரவும், அதன்படி வாழவும் முயல்வோம்!

"இவ்வுலகில் நீ காணவிழையும் மாற்றம் உன்னில் ஆரம்பமாகட்டும்" - “You must be the change you want to see in the world.” என்று சொன்னவர், மகாத்மா காந்தி.
"நான் செல்லும் கடல் பயணத்தில், வீசும் காற்றை என்னால் திசை திருப்ப இயலாது, ஆனால், அந்தக் காற்றுக்கு ஏற்றவாறு, என் பாய்மரத்தை திருப்பி, நான் செல்லவேண்டிய கரையை அடையமுடியும்" என்று சொன்னவர், ஜிம்மி டீன் என்ற புகழ்பெற்ற பாடகர்.
"I can't change the direction of the wind, but I can adjust my sails to always reach my destination." Jimmy Dean

அரண்மனையைவிட்டு ஒருபோதும் வெளியே வராத ஓர் அரசர், ஒருநாள், மாறுவேடத்தில், நகர வீதிகளில் நடந்துசென்றார். ஆனால், வெகு சீக்கிரமே அரண்மனைக்குத் திரும்பிவிட்டார். அவரிடம் மந்திரி காரணம் கேட்டபோது, தான் நடந்து சென்ற பாதையில் கல்லும், முள்ளும் இருந்ததால், அவை, தன் காலைக் காயப்படுத்திவிட்டன என்று அரசர் சொன்னார். அத்துடன், அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. இனி வீதிகளில் நடக்கும் யாருக்கும் முள் குத்தக்கூடாது என்பதற்காக, ஊர் முழுவதும், அனைத்து வீதிகளிலும், மாட்டுத் தோலை பரப்பவேண்டும் என்று ஆணை பிறப்பிக்க நினைத்தார் அரசர். இதைக் கேள்விப்பட்ட மந்திரி, அரசரிடம், "அரசே, ஊரெங்கும் மாட்டுத் தோலைப் பரப்புவதற்குப் பதில், உங்கள் கால்களைமட்டும் மாட்டுத் தோலால் மூடிக்கொண்டு நடந்தால், பிரச்சனை தீர்ந்துவிடுமே" என்று ஆலோசனை கூறினார்.

ஊரையும், உலகத்தையும் மாற்றுவதற்கு ஓர் ஆரம்பமாக, நம்மை மாற்றிக் கொள்வது நல்லது. அந்த மாற்றம் இன்றே ஆரம்பமானால், மிகவும் நல்லது.


23 September, 2018

Learning from ‘little professors’ ‘சின்ன பேராசிரியர்களி’ன் பெரிய பாடங்கள்


Welcoming these children

25th Sunday in Ordinary Time

“She is still a child; she needs to grow up” was the comment made by one politician against another politician in India last week. (Sep.18) The very next day, ‘the child’ retorted saying: “If I had not grown up, then he and his party leader have not grown up as well.” (Sep.19)

On September 11, on the infamous anniversary of U.S. history – the WTC attack, another attack came in the form of a book: “Fear: Trump in the White House”. This was written by Bob Woodward, who has written books on various Presidents of the U.S., from the time of Nixon. Bob claims to have interviewed many top officials of the White House before writing this book. In one of those interviews, Bob claims that the defense secretary, Jim Mattis, during a discussion with President Trump, about the nuclear standoff with North Korea was so exasperated that Mr. Mattis told his colleagues “the president acted like — and had the understanding of — a ‘fifth or sixth grader.’”

These statements by and about politicians, unfortunately, put children in a spot. When ‘adults’ refuse to grow up, we tend to equate them to children, as if, being a child is, in itself, not something great. In my opinion, comparing politicians to children is a grave insult to children!

Christ seems to have different ideas. He actually warns us otherwise: “Truly, I say to you, unless you turn and become like children, you will never enter the kingdom of heaven.” (Mt. 18:3) We agree with what Jesus says, but give our own interpretation on what Jesus meant by asking us to ‘become like children’.  We have invented words like ‘childish’ and ‘child-like’. We like to believe that Jesus was inviting us to become ‘child-like’ and not ‘childish’. This, in my opinion, is a play with words that still looks down on children. But, Jesus seems to tell us to accept children as they are! This Sunday we are invited to reflect on children. Today’s Gospel (Mark 9:30-37) talks of how Jesus placed a child in the midst of the disciples and asked them ‘to receive one such child in his name’.

Children are great gifts that our world is blessed with. Unfortunately, we don’t have the openness to learn from these ‘little professors’. Let us enter the classroom where our ‘little professors’ are on duty.

A Sunday school teacher asked her children, as they were on the way to church service, "And why is it necessary to be quiet in church?" One bright little girl replied: "Because people are sleeping."
‘Out of the mouth of babes’ truth emerges – pure and simple. Beware!

Children can teach us very profound truths, truths that have been stifled in us since we feel we have become ‘grown-ups’! Instead of learning from children, often we tend to ‘teach’ them – sometimes through words, but more often, by how we live.

I learnt one of my lessons about children in a kindergarten school where I had gone to attend the school day celebrations. The LKG angels went on stage to perform a nursery rhyme in which they were singing their daily duties. “I get up from bed, brush my teeth, take a shower…” etc. was the list sung by the children accompanied by actions. When it came to brushing the teeth, all the children were ‘brushing’ their teeth with the index finger of the right hand, while one of them was doing it with the left. When I pointed it out to the Principal sitting next to me, she gave me the ‘lesson’ about children. She said that the kindergarten teacher, teaching a song to the kids, needed to do things in such a way that the children become her mirror images. That is, if the teacher wants the kids to do an action with their right hand, she had to do that action with her left, so that, the children would do it with their right hand. Mirror image!

Whether we like it or not, children are ‘mirror images’ of the adults. Our actions and behaviour are more easily picked up by children than our words. Here is an embarrassing event that happened in a family on a Sunday.
The lady of the house was entertaining some guests who had come unannounced. When she was in their presence, she was all smiles. But, when she went into the kitchen, she was seething with anger and was cursing them. She did not bother about her five year old daughter accompanying her, trying to help her.
It was lunch time. The Dad asked the child to say a prayer before meals. The child said, “But, I don’t know any prayer.” The Dad said, “Don’t worry, dear. Just say what Mom says.” The child closed her eyes and prayed: “God, why do you have to send these guests on a Sunday, to spoil my day? Amen” Beware! Children are ‘listening’ even when we say nothing to them.

More often we are impatient with our kids and force them into the adult world too soon. We have seen many TV programmes where little children perform dances and crack jokes that are beyond their age. Instead of dragging them into our adult world, Jesus wants us to enter their innocent world. Today he tells his disciples to learn from children how to be humble and unassuming.

We need to see why Jesus brought a child in the midst of his disciples. Last Sunday, we saw Jesus posing the two important questions to his disciples: ‘Who do people say that I am?’ and ‘Who do you say that I am?’ Jesus was happy that Peter identified him as the ‘messiah’. It was an appropriate moment for Jesus to tell them about his passion. This first prediction of passion by Jesus shocked the disciples and Peter. Hence, Peter wanted to ‘put some sense’ into Jesus. He received a fitting reply from Jesus – “Get behind me, Satan”.

Today’s Gospel begins with Jesus predicting his passion, the second time. The disciples were scared to respond to him. Soon their minds were preoccupied with other ‘higher’ thoughts like ‘who was the greatest’ among them. Hence, in an attempt to bring them back to the ground, Jesus placed a child in their midst. Here are the closing lines of today’s Gospel:
Mark 9: 35-37
And Jesus sat down and called the twelve; and he said to them, “If any one would be first, he must be last of all and servant of all.” And he took a child, and put him in the midst of them; and taking him in his arms, he said to them, “Whoever receives one such child in my name receives me; and whoever receives me, receives not me but him who sent me.”

As we reflect on ‘accepting children’ and ‘becoming children’, our minds go to children who have been robbed of their childhood. I am thinking especially of child labourers who are being trampled upon by adults in every possible way. I am thinking of children from Syria, who for no fault of theirs, suffer the effects of crimes perpetuated by adults. We bring all these innocent children to the presence of God so that God will ‘take them in His arms’ and remind us once again that in receiving these children, we receive God!

Let me close with a whatsapp clip I received recently, where Kelsey Hines, a 6 year old from Baltimore, U.S.A., speaks about her fear of getting killed due to the unfettered gun violence in her city. Here are her words of sincere appeal:  We don’t want to be killed.
“Why can't you all just let us live? Why can't you just let us grow up? Why can't you all just let us have fun when we want to play for our friends but we can't because you're shooting out here."
Kelsey asked her mother to record the video after she and her grandmother passed the scene of a triple shooting in Baltimore while on their way to church. Kelsey’s mother said since posting the video the family has received hundreds of messages from people, some from as far away as Africa.

One of the sentences spoken by little Kelsey tugs at your heart. “There’s too many killings out here. And we don’t want people killing us. We don’t want to go to heaven yet. We do love the Lord, but when he’s ready for us to come to up to him — we’re ready — but we’re not ready right now.”

This video was posted in April this year and has received more than 4 million views… Can there be a more direct appeal for those ruthless, senseless people who promote gun culture?
A similar appeal can go from children in India, especially female children – “please let us be children, going to school and playing outdoors without fear of rape…”

We also remember the video where a wounded child from Syria who says: “I am going to tell God all that is going on here.” We remember Aylan (Alan) Kurdi, who without saying a word, taught us about the madness of war and refugees, through his dead body, washed ashore (Sep.2, 2015).

May the ‘tiny little professors’ teach us, ‘adults’ how to live as decent human beings!

Becoming the Least

பொதுக்காலம் 25ம் ஞாயிறு

"அவர் இன்னும் குழந்தையாகவே இருக்கிறார்; வளர வேண்டும்"
"நான் வளராத குழந்தை என்று அவர் சொன்னால், அவருடையக் கட்சித்தலைவரும் வளராத குழந்தை என்றுதான் அர்த்தம்"
அண்மையில் (செப்டம்பர் 18,19 தேதிகளில்) தமிழ் நாளிதழ் ஒன்றில், அரசியல்வாதிகள் இருவர், ஒருவரை ஒருவர் குறைகூறி விடுத்த அறிக்கைகள் இவை.

வல்லரசு என்றும், முதல்தர நாடு என்றும் தன்னையே பறைசாற்றிக்கொள்ளும் ஒரு நாட்டின் அரசுத்தலைவர், தன் அரசின் உயர் அதிகாரிகளுடன் எவ்விதம் செயலாற்றுகிறார் என்பதைப்பற்றி, அண்மையில் (செப்டம்பர் 11), நூலொன்று வெளியானது. அதிர்ச்சிதரும் பல தகவல்களை உள்ளடக்கிய இந்நூலில், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர், அரசுத்தலைவரின் செயல்பாடுகள் குறித்து பேசும்போது, "அரசுத்தலைவர், சிந்திப்பதும், செயல்படுவதும், 5ம் வகுப்பு, அல்லது 6ம் வகுப்பு பயிலும் சிறுவனைப்போல் உள்ளது" என்று கூறியுள்ளார்.

தவறுகள் செய்யும் அரசியல் தலைவர்களை குழந்தைகளுக்கு ஒப்புமைப்படுத்திப் பேசுவது, குழந்தைகளுக்கு நாம் இழைக்கும் பெரும் அநீதி, அவமானம். குழந்தைகளாய் இருப்பது, சிறுவர்களாய் இருப்பது, குறைவு என்றும், வயதில் வளர்ந்தவர்களாய் இருப்பது, நிறைவு என்றும் நாம் கருதுவதால், இத்தகைய கூற்றுகள் சொல்லப்படுகின்றன. குழந்தையாய் இருப்பதை ஒரு குறையென்று ஏளனம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு, இன்றைய இரண்டாம் வாசகம், ஒரு சாட்டையடியாக விழுகிறது.
யாக்கோபு திருமுகம் 3: 16, 4: 1-3
பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும்... உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; போராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை. நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில் நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள்.

திருத்தூதர் யாக்கோபு கூறும் இந்தக் கடினமான சொற்கள், குழந்தைகளிடம் காணப்படும் குறைகள் அல்ல, வயதில் வளர்ந்துவிட்டதாய் எண்ணிக்கொண்டிருப்போரிடம் உள்ள குறைகள். குறிப்பாக, 'பொறாமையும் கட்சி மனப்பான்மையும்' கொண்டிருப்போரிடம் உள்ள குறைகள். நம் அரசியல்வாதிகள் அனைவரும், தங்கள் வயதுக்கு ஏற்றவகையில் நடந்துகொள்ளாதபோது, அவர்களை, 'வளர்ந்துவிட்ட குழந்தைகள்' என்று நாம் சுட்டிக்காட்டினால், அது, உண்மையிலேயே, குழந்தைகளுக்கு நாம் இழைக்கும் அநீதி. குழந்தைகள் கட்டாயம் இத்தகைய எண்ணங்களுடன் வாழ்வதில்லை.
வளர்ந்துவிட்ட மனிதர்கள், ஒரு சில வேளைகளில், வெறிகொண்டு அலையும்போது அவர்களை மிருகங்களுக்கு ஒப்புமைப்படுத்தியும் பேசிவருகிறோம். இதுவும் தவறு. எந்த ஒரு மிருகமும், மனிதர்களைப்போல் பழிக்குப்பழி, பொறாமை, பொய்மை என்ற தவறுகளை இழைப்பதில்லை. பின் நாம் ஏன் அவர்களை மிருகங்களுக்கு ஒப்புமைப்படுத்திப் பேசவேண்டும்?
வளர்ந்துவிட்டவர்கள் செய்யும் அற்பத்தனமான செயல்களுக்கு குழந்தைகளையும், அவர்கள் மேற்கொள்ளும் வெறித்தனமான செயல்களுக்கு மிருகங்களையும் ஒப்புமைப்படுத்தி பேசுவதை நிறுத்துவதற்கும், குறிப்பாக, குழந்தைகளை தகுந்த மதிப்புடன் நடத்துவதற்கும், இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், பாடங்களைச் சொல்லித் தருகின்றன. குழந்தைகளைப்பற்றிய பாடங்களைக் கற்றுக்கொள்வோம், வாருங்கள்!

ஞாயிற்றுக் கிழமை. பங்குக் கோவிலில் மறைக்கல்வி வகுப்பு நடந்துகொண்டிருந்தது. மறைக்கல்வி ஆசிரியர், குழந்தைகளிடம், "கோவிலில் திருப்பலி நடக்குபோது நாம் சப்தம் போடக்கூடாது. ஏன்? சொல்லுங்கள்." என்று கேட்டார். ஒரு சிறுவன் எழுந்து, "ஏன்னா, கோவில்ல எல்லாரும் தூங்கிக்கிட்டிருப்பாங்க. அதனாலதான்" என்று தயக்கமில்லாமல் பதில் சொன்னான்.

குழந்தைகள் உலகம் அழகானது. அங்கு உண்மைகள் எளிதாகப் பேசப்படும். அந்த உலகை நாம் கடந்துவிட்டோம் என்பதால், அதை மறந்து விடவேண்டும் என்ற அவசியமில்லை. பார்க்கப்போனால், அவ்வப்போது அந்தப் பள்ளிக்குள் மீண்டும் சென்று, பாடங்கள் பயில்வது நம் வாழ்வை மேன்மையாக்கும், மென்மையாக்கும். இதையொத்த ஓர் ஆலோசனையை இயேசு இன்றைய நற்செய்தி வழியே நமக்குச் சொல்கிறார்.
மாற்கு நற்செய்தி 9: 36-37
பிறகு இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்" என்றார்.

அருள்சகோதரிகள் நடத்தும் மழலையர் பள்ளி ஆண்டு விழா ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. LKG மழலைகள் மேடையில் ஏறினார்கள், அழகான ஒரு நடனம் ஆரம்பமானது. நான் காலையில் எழுவேன், பல் துலக்குவேன், சாப்பிடுவேன்... என்று அன்றாட நிகழ்வுகளின் அட்டவணையைச் சொல்லும் ஒரு பாடல். அதற்கு ஏற்ற நடன அசைவுகள், செய்கைகள். பல் துலக்குவேன் என்று அந்தக் குழந்தைகள் பாடியபோது, எல்லா குழந்தைகளும் வலது ஆள்காட்டி விரலால் பல் தேய்த்தனர். அனால் ஒரு குழந்தை மட்டும் இடது ஆள்காட்டி விரலால் பல் தேய்த்தாள். அருகிலிருந்த அருள்சகோதரியிடம் அக்குழந்தையைச் சுட்டிக்காட்டினேன். அவர் அப்போது சொன்ன ஒரு தகவல், என்னை அதிகம் சிந்திக்கவைத்தது.

LKG குழந்தைகளுக்கு செய்கைகளுடன் பாடல்களைச் சொல்லித்தரும் ஆசிரியர்கள் குழந்தைகளின் கண்ணாடி பிரதிபலிப்பாக இருக்கவேண்டும். அதாவது, குழந்தை ஒரு செய்கையை வலது கையால் செய்யவேண்டும் என்றால், ஆசிரியர் அதை இடது கையால் செய்யவேண்டும். அதைப் பார்க்கும் குழந்தை, செய்கைகளை சரியான வழியில் செய்யக் கற்றுக்கொள்ளும் என்ற கருத்தை, அந்த அருள்சகோதரி எனக்குச் சொன்னார்கள்.

அன்பர்களே, சிந்தித்துப் பார்ப்போம். நமது கண்ணாடி பிரதிபலிப்புகள், குழந்தைகள். நாம் சொல்வதை, செய்வதை பிரதிபலிப்பவர்கள். வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளிகளை உபசரித்துக்கொண்டிருந்தார், ஒரு வீட்டுத்தலைவி. நான்கு அல்லது ஐந்து வயதான அவரது மகள், அம்மாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தாள். வெளியில் வந்து உபசரிக்கும்போது சிரித்துக்கொண்டிருந்த தலைவி, சமையலறைக்குள் போனதும் விருந்தாளிகளைப் பற்றி முணுமுணுத்தார். குட்டிமகள் கூட இருக்கிறாளே என்ற எண்ணம் சிறிதும் இன்றி, வந்திருந்தவர்களை வாய் நிறைய வசைப்பாடிக் கொண்டிருந்தார், அம்மா.
விருந்து நேரம் வந்ததும், அப்பா மகளிடம், "சாப்பாட்டுக்கு முன்னால், செபம் சொல்லும்மா." என்றார். "என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியாதே" என்றாள் மகள். "அம்மா என்ன சொல்வாங்களோ, அப்படி சொல்லும்மா" என்றார் அப்பா. உடனே, மகள் கண்களை மூடி, "கடவுளே, இந்த விருந்தாளிகள் எல்லாம் ஏன் இன்னக்கி பாத்து வந்து, என் உயிரை எடுக்குறாங்களோ, தெரியலியே" என்று வேண்டினாள், மகள். குழந்தைகளுக்கு முன் நாம் சொல்வது, செய்வது, எல்லாம் சரியான முறையில் இல்லாவிட்டால், இது போன்ற சங்கடங்கள் ஏற்படலாம்.

இன்னொரு நிகழ்வு. ஊடக உலகம், ஒவ்வொருவர் குடும்பத்திற்குள்ளும் எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்கிறது என்பதையும், குழந்தைகளிடமிருந்து அவர்களது குழந்தைப் பருவத்தை ஊடகம் எவ்விதம் பறித்துவிடுகிறது என்பதையும் வெளிச்சமிட்டு காட்டும் நிகழ்வு இது.
ஒரு வீட்டுத்தலைவி, தன் வீட்டிற்கு வந்த தோழியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அருகில் ஓடிக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்வில், ஒரு பிரபலமான நடிகை, கவர்ச்சிகரமாக ஆடிக்கொண்டிருக்கிறார். வீட்டுத்தலைவி தன் தோழியிடம், "என் மகளும் இதே மாதிரி ஆடுவா" என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார். அந்நேரம், அங்கு வருகிறாள், LKG படிக்கும் அவருடையக் குழந்தை. ஆர்வமாய் அம்மாவிடம் போய், "அம்மா, இன்னைக்கி ஸ்கூல்ல ஒரு புது ரைம் சொல்லித் தந்தாங்க." என்று சொல்லி, அந்த ரைமைச் செய்கையோடு செய்து காட்டுகிறாள், சிறுமி. அம்மாவும், தோழியும் பாராட்டுகின்றனர். பிறகு, அம்மா மகளிடம், "அந்த டான்ஸ் ஆடும்மா" என்று சொல்லி தொலைக்காட்சியில் ஆடிக்கொண்டிருக்கும் நடிகையைக் காட்டுகிறார். மகளோ, "சினிமா டான்ஸ் வேண்டாம்மா. இன்னொரு ரைம் சொல்கிறேன்." என்கிறாள். அம்மாவுக்கு கோபம். தன் தோழிக்கு முன்னால், மகள் சினிமா டான்ஸ் ஆடவில்லை என்கிற வருத்தம். "ரைம் எல்லாம் ஒன்னும் வேணாம். இந்த டான்ஸ் ஆடு." என்று மீண்டும் வற்புறுத்துகிறார் தாய். குழந்தைகளை, அவர்கள் உலகத்தில் வளர்ப்பதற்கு பதில், நம் உலகத்திற்கு, அதிலும், பளபளப்பாய், செயற்கை பூச்சுக்களுடன் மின்னும் போலியான ஊடக உலகிற்கு, அவர்களை, பலவந்தமாக இழுத்துவரும் முயற்சி இது.

முதிர்ச்சி அடைந்துவிட்டதாய் நினைத்துக்கொண்டிருக்கும் நாம், நம்மைப்போல் குழந்தைகளை மாற்ற முயல்கிறோம். நம்மிடமிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது எண்ணங்களுக்கு நேர்மாறாக, 'குழந்தைகளை, குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்' என்று இயேசு வலியுறுத்துகிறார். இந்தப் பாடத்தை சீடர்கள் மனதில் ஆழப்பதிக்கவே அவர் ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். இயேசு, சீடர்கள் நடுவில், குழந்தையை நிறுத்தியது ஏன் என்ற பின்னணியை அலசிப் பாப்போம்.

சென்ற வாரம், இயேசு, சீடர்களிடம் இரு முக்கியமானக் கேள்விகளைக் கேட்டார். மக்கள் என்னை யாரென்று சொல்கிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்? என்று இயேசு கேட்ட அந்த இரு கேள்விகள், சீடர்கள் மத்தியில் ஒரு தேடலை ஆரம்பித்து வைத்திருக்கும்.
தன் கேள்விகளுக்கு விடையளித்த பேதுருவை, அதுவும் தன்னை "மெசியா" என்று அடையாளப்படுத்திய பேதுருவை இயேசு புகழ்ந்தார். பேதுரு தந்த "மெசியா" என்ற பட்டத்தில் மகிழ்ச்சி, மமதை கொண்டு மயங்கிப் போகவில்லை இயேசு. மாறாக, அந்த பட்டத்தின் பின்னணியில் இருக்கும் துன்பம்சிலுவை இவற்றைப்பற்றி பேசினார். இயேசு இவ்வாறு பேசியது, பேதுருவையும், சீடர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனவே, பேதுரு அவரைத் தனியே அழைத்து அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். தன்னைப்பற்றியும், தன் வாழ்வின் இலக்குபற்றியும் இயேசு தெளிவாக இருந்ததால், பேதுருவைக் கோபமாகக் கடிந்துகொண்டார். சீடர்களிடம், தன் சிலுவையைப் பற்றி, மீண்டும் ஆணித்தரமாக பேசினார், இயேசு. சீடர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை, இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் நாம் வாசிக்கிறோம்.
மாற்கு நற்செய்தி 9: 31-32
"மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று இயேசு தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.

இயேசு, சிலுவையைப்பற்றி பேசியது அவர்களுக்கு விளங்காமல் போனதற்கு ஒரு காரணம் - அவர்கள் வேறு திசைகளில் சிந்தித்துக் கொண்டிருந்தனர். தங்களில் யார் பெரியவன்? என்பது, அவர்களது சிந்தனைகளை நிறைத்த எண்ணமாயிற்று.
இயேசு, அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை ஓரளவு கேட்டார். அவருக்கு அதிர்ச்சி. தான் இவ்வளவு சொல்லியும் இவர்களின் எண்ண ஓட்டம் இப்படி இருக்கிறதே என்ற அதிர்ச்சி. மற்றொரு பக்கம் ஒரு நெருடல். ஒருவேளை அவர்கள் பேசிக்கொண்டதை சரியாகக் கேட்காமல், அவர்களைத் தவறாக எடை போடுகிறோமோ என்ற நெருடல். எனவே, தன் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள, "வழியில் என்ன பேசினீர்கள்?" என்று கேட்கிறார்.

பதில் வரவில்லை. எப்படி வரும்? அவர்கள் பேசிக்கொண்டதெல்லாம் இயேசுவின் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாயிற்றே. தாங்கள் பேசியதை அவரிடம் சொல்லமுடியவில்லை. அவர்களது மௌனம், அவருக்கு எரிச்சலையும், வருத்தத்தையும், ஏன் சலிப்பையும் உண்டாக்கியிருக்க வேண்டும். தன்னையும், தன் கொள்கைகளையும் சீடர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்ற வருத்தம் இயேசுவுக்குள்  இருந்தாலும், சலிப்படையாமல், மீண்டும் அவர்களுக்கு தன் எண்ணங்களைப் புரிய வைக்க முயல்கிறார்.
மாற்கு நற்செய்தி 9: 35
அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார்.
இந்தக் கருத்தை வலியுறுத்தவே, ஒரு குழந்தையை அவர்கள் நடுவில் நிறுத்துகிறார். குழந்தைகளைப் போல் மாறாவிடில் விண்ணரசில் நுழையமுடியாது என ஏற்கனவே அவர்களுக்கு சொல்லியிருந்தார். (மத். 18:3) இப்போது மீண்டும் அந்தச் சிந்தனையை மற்றொரு வழியில் வலியுறுத்துகிறார்.

குழந்தைகளைப் பற்றி பேசும்போது,  குழந்தைப்பருவம் திருடப்பட்ட குழந்தைகளை, வயதில் மட்டும் வளர்ந்துவிட்டவர்கள் உலகில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் குழந்தைகளை, நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. வறுமைப்பட்ட பல நாடுகளில், உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்களை, இவ்வேளையில் நினைத்துப் பார்க்கவேண்டும். நமது உழைப்பால், குழந்தைகளை வளர்க்க வேண்டியது நமது கடமை. மாறாக, அவர்களது உழைப்பில் நாம் சுகம் காண்பது பெரும் குற்றம்.

துப்பாக்கிக் கலாச்சாரத்தை பீடமேற்றி, தூபம் காட்டிவரும் அமெரிக்க ஐக்கிய நாட்டில், வயதில் வளர்ந்தவர்களுக்கு, 6 வயது சிறுமி விடுத்துள்ள ஒரு வேண்டுகோள், சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பால்டிமோர் நகரைச் சேர்ந்த, கெல்சி ஹைன்ஸ் (Kelsey Hines) என்ற சிறுமி, கெஞ்சிக் கேட்பது இதுதான்: "தயவுசெய்து, எங்களை, வீட்டுக்கு வெளியே, பயமின்றி, விளையாட விடுங்கள். நாங்கள் வாழ விரும்புகிறோம். நாங்கள் விண்ணகம் செல்ல விரும்பவில்லை. எங்களுக்கு ஆண்டவர்மீது அன்பு உண்டு. ஆனால், அவர் எப்போது எங்களை அவரிடம் வரச் சொல்கிறாரோ, அப்போது நாங்கள் அவரைச் சந்திக்க தயாராக இருப்போம். அதற்குமுன் நீங்கள் எங்களை அங்கு அனுப்பிவிடாதீர்கள். தயவுசெய்து எங்களைக் கொல்லாதீர்கள்."
துப்பாக்கிக் கலாச்சாரம் எப்படி இளம் உயிர்களை, தேவையில்லாமல் பறிக்கின்றது என்ற கொடுமையை, இதைவிட தெளிவாக யாராவது வெளிச்சமிட்டு காட்ட முடியுமா என்று தெரியவில்லை.

பாலின வன்கொடுமைகளுக்கு பலியாகும் இந்தியச் சிறுமிகளும், "வீட்டுக்கு வெளியிலும், பள்ளியிலும், எங்களை பயமின்றி விளையாட விடுங்கள். கடைக்குப் போய் பொருள்கள் வாங்கிவர விடுங்கள்" என்ற வேண்டுகோளை, வயதில் வளர்ந்துவிட்ட இந்திய ஆண்களிடம் விடுக்கின்றனர்.

இன்றைய நற்செய்தி வழியாக இயேசு சொல்லித் தரும் பாடங்களை நாம் ஓரளவாகிலும் கற்றுக்கொள்ளும் வரத்தை இறைவனிடம் வேண்டுவோம். குழந்தைகளைக் குழந்தைகளாகவே வாழவிடுவோம். அவர்களை நம்மைப்போல் மாற்றாமல், முடிந்த அளவு, நாம் குழந்தைகளின் மனப்பக்குவத்துடன் வாழ முயல்வோம்.


18 September, 2018

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 3


My Story – Chuma Somdaka

இமயமாகும் இளமை காலை இழந்தாலும், கனவை இழக்காமல்...

இளம்பெண் கூமா சொம்டகா (Chuma Somdaka) அவர்கள், தென்னாப்பிரிக்காவின், கேப் டவுன் நகரில் வாழ்பவர். வீடற்ற நிலையில் வாழும் கூமா அவர்களுக்கு, அந்நகரின் கம்பெனி பூங்கா கடந்த சில ஆண்டுகளாக, புகலிடமாய் இருந்து வருகிறது. 2007ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு விபத்தில், கூமா அவர்கள், தன் வலது காலை பாதி இழந்தார். இதைத் தொடர்ந்து, அவர், தன் தாயையும், அவர்கள் வாழ்ந்துவந்த இல்லத்தையும் இழந்தார். அவரது புகலிடமாக மாறிய கம்பெனி பூங்காவில், கூமா அவர்கள், ஒரு நாள், ஒரு குச்சியை எரித்து, அதிலிருந்து உருவான கரித்துண்டைக் கொண்டு, தன் முதல் ஓவியத்தை வரைந்தார்.
நகரின் குப்பைத் தொட்டிகளில் அவர் திரட்டிய வண்ணங்களைக் கொண்டு, கடந்த 10 ஆண்டுகளாக பல ஓவியங்களை அவர் தீட்டியுள்ளார். வாழ்வில் தான் சந்திக்கும் பலரை, தன் ஓவியங்களின் கதாநாயகர்களாக தீட்டியுள்ளார். அவர் பூங்காவில் உறங்கிய வேளையில், அவரது ஓவியங்களில் சிலவற்றை யாரோ எடுத்துச் சென்றனர். எனவே, அன்றுமுதல், அவர் தன் ஓவியங்கள் மீது படுத்துறங்கி, அவற்றைக்  காத்து வந்தார். 2017ம் ஆண்டின் துவக்கத்தில், அவரது ஓவியங்களைக் கண்ட ஒரு சில இளையோர், அந்த ஓவியங்களைக் கொண்டு, ஒரு கண்காட்சியை உருவாக்கினர்.
தன் ஓவியங்கள், கண்ணாடிச் சட்டங்களில் மாட்டப்பட்டு, அழகானதோர் அறையில் கண்காட்சியாக மாறியதைக் கண்ட கூமா அவர்கள், ஆனந்த கண்ணீர் வடித்தார். தற்போது, ஓர் ஓவியப் பள்ளியில் பயின்றுவரும் இளம்பெண் கூமா அவர்கள், "நான் காலை இழந்தேன்; தாயை இழந்தேன்; வீட்டை இழந்தேன். ஆனால், கனவை இழக்காமல் வாழ்ந்தேன். அதன் பயனை இன்று காண்கிறேன். என் ஓவியங்களின் விற்பனை வழியே வரும் தொகையைக் கொண்டு, வீடற்றவர்களுக்கு உதவப் போகிறேன்" என்று தன் ஊடகப் பேட்டிகளில் கூறிவருகிறார்.
இளம்பெண் கூமா அவர்களின் பெயரால் ஒரு வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைத்தளத்தின் விருதுவாக்காக வழங்கப்பட்டுள்ள சொற்கள் - Take your broken heart, make it into art. அதாவது, உன் உடைந்த இதயத்தை எடுத்து, அதை கலையாக உருவாக்கு.

Mary and Martha with their sick brother Lazarus

புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை பகுதி 3

யோவான் நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள இறுதி அரும் அடையாளம், இலாசரை உயிர்பெற்றெழச் செய்யும் புதுமை. இப்புதுமையில் பங்கேற்கும் இலாசர், மரியா, மார்த்தா என்ற மூவரைக் குறித்து, நற்செய்தியாளர் யோவான், 11ம் பிரிவின் முதல் இரு இறைவாக்கியங்களில், வழங்கிய அறிமுகத்தை, சென்றவாரத் தேடலில் சிந்தித்தோம். இந்த அறிமுகத்தைத் தொடர்ந்துவரும் இறைவாக்கியத்தில் இன்று நம் தேடல் தொடர்கிறது: இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, "ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்று தெரிவித்தார்கள். (யோவான் 11:3)

அச்சகோதரிகள் அனுப்பியச் செய்தியை, பல விவிலிய விரிவுரையாளர்கள், அழகியதொரு செபம் என்று கூறியுள்ளனர். அவர்களில், ஜோஹான் ஆல்ப்ரெக்ட் (Johann Albrecht Bengel) என்ற விரிவுரையாளர், இச்சகோதரிகளின் சொற்களையும், அன்னை மரியா கானா திருமணத்தில் கூறிய சொற்களையும் ஒப்புமைப்படுத்தியுள்ளார்.
"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" (யோவான் 2:3) "ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்" (யோவான் 11:3) என்ற இவ்விரு வாக்கியங்களையும் மேலோட்டமாகப் பார்க்கும்போது, அவை இரண்டும், குறையொன்றை வெளிச்சமிட்டுக் காட்டும் தகவல்களைப்போல் தோன்றுகின்றன. ஆனால், இவ்விரண்டுமே அழகிய செபங்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். கானா திருமணப் புதுமையில், "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று அன்னை மரியா கூறியதை சிந்தித்தபோது பகிர்ந்துகொண்ட ஒரு சில கருத்துக்களை மீண்டும் நினைவுக்குக் கொணர்வோம்.

அன்னை மரியா, கானா திருமண வீட்டில் எழுந்த குறையை உணரந்ததும், தன் மகனிடம் சென்று, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார். இரசம் தீர்ந்துவிட்டது என்ற சாதாரணமான, எதார்த்தமான கூற்றை, செபம் என்ற கொணத்தில் எண்ணிப்பார்க்க நாம் தயங்கலாம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், இது ஓர் அழகிய செபம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
செபம் என்றதும், இது வேண்டும், அது வேண்டும் என்ற நீண்ட பட்டியல் ஒன்று நம் உள்ளத்தை நிறைக்க வாய்ப்புண்டு. இல்லையா? கடவுளிடம் நீண்ட பட்டியல்களை அனுப்புவதற்கு பதில், ஒளிவு மறைவு ஏதுமின்றி, நம் உண்மை நிலையைச் சொல்வது, இன்னும் அழகானதொரு செபம். நமது தேவைகளை, நம்மைவிட, நம் இறைவன் நன்கு அறிவார்; அவரிடம் குறையைச் சொன்னால் போதும்; மற்றவை அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார் என்று எண்ணுவதற்கு, ஆழமான நம்பிக்கை வேண்டும். உண்மை நிலையை வெளிப்படுத்துவது எவ்விதம் செபமாக மாறும் என்பதை, ஒரு கற்பனைக்காட்சியின் வழியே புரிந்துகொள்ள முயல்வோம்.

வீட்டுத்தலைவர் ஒருவர், காலையில், செய்தித்தாளைப் படித்தபடி, வீட்டில் அமர்ந்திருக்கிறார். வீட்டுத்தலைவி, அவருக்கு காப்பி கலக்க சமையலறைக்குள் செல்கிறார். சர்க்கரை தீர்ந்துவிட்டது என்பதை உணர்கிறார். சமையலறையில் இருந்தபடியே, "என்னங்க, சக்கர தீந்துடுச்சுங்க" என்கிறார். இதன் பொருள் என்ன? ‘தயவு செய்து, செய்தித்தாளை கீழே வைத்துவிட்டு, கடைக்குப் போய், சர்க்கரை வாங்கி வாருங்கள் என்பதுதானே? அவர் அதைப் புரிந்துகொண்டு, கடைக்குச் செல்வதற்காக சட்டையை மாட்டிக்கொண்டிருக்கும்போது, "ஆங்... சொல்ல மறந்துட்டேன். அரிசியும் தீந்துடுச்சுங்க" என்று சொல்கிறார் வீட்டுத்தலைவி. தலைவர் இந்தத் தேவைகளுக்கு என்ன செய்வார் என்று தலைவிக்குத் தெரியும். அந்த நம்பிக்கையில் சொல்லப்பட்ட உண்மைகள் இவை. "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று சொன்னபோது, மரியாவும் இத்தகையதோர் உண்மையை இயேசுவுக்கு முன்னால் வைக்கிறார். இலாசரின் சகோதரிகளும், இயேசுவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையால், "ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்ற உண்மையை, ஒரு மறைமுகமான செபமாக அனுப்பி வைக்கின்றனர்.

செபத்தைக் குறித்து, செபிப்பதைக் குறித்து பல நூறு கதைகள் உள்ளன. நம் தேவைகளை, நம்மைவிட இறைவன் நன்கறிவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு கதை இது. செபத்தின் எடை (The Weight of Prayer) என்ற இக்கதையின் தலைப்பு நம் கவனத்தை முதலில் ஈர்க்கின்றது. மளிகைக்கடை ஒன்றில் நடப்பதாக இக்கதை கூறப்பட்டுள்ளது.
மளிகைக்கடை முதலாளியிடம் ஓர் ஏழைப்பெண் வந்து, தன் குடும்பத்திற்கு அன்றிரவு மட்டும் உணவு தயாரிக்கத் தேவையான பொருள்களை, கடனாகத் தரும்படி கெஞ்சினார். அப்பெண்ணின் கணவர், உடல்நலமின்றி இருந்ததால், வேலையிலிருந்து அனுப்பப்பட்டுவிட்டார். அவர்களுக்கு ஏழு குழந்தைகள். அவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக பட்டினியால் தவித்தனர் என்பதைக் கூறி, உதவிகேட்ட அப்பெண்ணை, அவ்விடத்தைவிட்டு துரத்திக் கொண்டிருந்தார், கடை முதலாளி.
கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்த வந்த ஒருவர், இந்தக் காட்சியைக் கண்டு மனமிரங்கி, அந்த முதலாளியிடம், "அந்தப் பெண்ணுக்குத் தேவையானதைக் கொடுங்கள். நான் அதற்குரிய பணத்தைத் தருகிறேன்" என்று சொன்னார். முதலாளி சலிப்புடன் அந்தப் பெண்ணிடம், "சரி, உனக்குத் தேவையான பொருள்களை இந்தக் காகிதத்தில் எழுதி, தராசில் வை. அந்தக் காகிதத்திற்கு ஈடான எடைக்கு நான் பொருள்களைத் தருகிறேன்" என்று ஏளனமாகச் சொன்னபடி, அப்பெண்ணிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். காகிதத்தைப் பெற்றுக்கொண்ட அப்பெண், ஒரு நிமிடம் கண்களை மூடி செபித்தார். பின்னர், அந்தக் காகிதத்தில் எதையோ எழுதி, தராசில் அதை வைத்தார். காகிதத் துண்டு வைக்கப்பட்ட தராசுத்தட்டு கீழிறங்கியது. இதைப் பார்த்த முதலாளிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்பெண்ணுக்கு பணவுதவி செய்ய வந்திருந்தவரும் இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

"சரி, உனக்குத் தேவையானப் பொருள்களை மற்றொரு தட்டில் வை" என்று எரிச்சலுடன் சொன்னார் முதலாளி. தனக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், ஆகியவற்றை அந்தப் பெண் அடுத்தத் தட்டில் வைத்தார். அவர் எவ்வளவு வைத்தாலும், காகிதம் வைத்திருந்த தட்டு மேலே எழவில்லை. அந்தப் பெண் தராசில் வைத்த பொருள்களை வேண்டா வெறுப்பாக அவரிடம் கொடுத்தார் முதலாளி. அருகில் இருந்தவர், ‘நான் கண்ட இப்புதுமைக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும் என்று சொல்லியபடியே, மகிழ்ச்சியுடன் அதற்குரிய பணத்தைக் கொடுத்தார். அந்த ஏழைப்பெண் சென்றபின், கடை முதலாளி தராசைச் சோதித்துப் பார்த்தபோது, அது பழுதடைந்து விட்டதென்பதைப் புரிந்துகொண்டார். பின்னர், அந்த ஏழைப்பெண் தராசில் வைத்த காகிதத் துண்டை எடுத்துப் பார்த்தார், முதலாளி. அந்தக் காகிதத்தில், பொருள்களின் பட்டியல் எதுவும் எழுதப்படவில்லை. மாறாக, அப்பெண் காகிதத்தில் ஒரு சிறு செபத்தை எழுதியிருந்தார். "இறைவா, எங்கள் தேவை என்னவென்று உமக்கு நன்றாகத் தெரியும். எங்கள் தேவையை நிறைவு செய்தருளும்" என்பதே அந்தச் செபம்.

இக்கதையை கேட்கும்போது, காகிதம் வைக்கப்பட்டத் தராசுத் தட்டு கீழிறங்கி நின்றது, கடை முதலாளி அதிர்ச்சியில் உறைந்துபோனது, என்ற இரு காட்சிகள், நம் மனதில் ஆழமாய் பதிகின்றன. காற்றில் பறக்கும் அளவுக்கு கனமற்ற காகிதம், கனமான உலோகத்தால் ஆன தராசையும் கட்டி வைக்கும் திறன் பெறுகிறது. எதனால்? அப்பெண் காகிதத்தில் பதித்த செபத்தால்; கடவுளின் கருணையால்! ‘செபத்தின் எடை என்ற இக்கதையின் தலைப்பிற்கு நாம் தரக்கூடிய விளக்கம் இதுதான்: செபம் வெளியாகும் மனதில் உள்ள பாரத்தைப் பொருத்து, செபத்தின் எடையும் கூடும்.

நம்மைவிட, நம் தேவைகளை இறைவன் நன்கு அறிவார் என்ற நம்பிக்கையில் அன்னை மரியாவும், இலாசரின் சகோதரிகளும் எழுப்பிய செபங்கள், நமக்கு செபத்தின் அழகைச் சொல்லித் தருகின்றன. 

இலாசரின் சகோதரிகள் அனுப்பியச் செய்தியில், அவர்கள் தங்கள் சகோதரனுக்கும், இயேசுவுக்குமிடையே நிலவும் உறவை அழகாகக் கூறியுள்ளனர். "உம் நண்பன். நோயுற்றிருக்கிறான்" என்று நாம் வாசிக்கும் இச்சொற்கள், வேறு பதிப்புகளில், "ஆண்டவரே, நீர் அன்பு செய்பவன் நோயுற்றிருக்கிறான்" என்று கூறப்பட்டுள்ளன. இந்த உறவில், 'உம்மை அன்பு செய்பவன்' என்று, தங்கள் சகோதரனை முன்னிலைப்படுத்தாமல், "நீர் அன்பு செய்பவன்" என்று, அச்சகோதரிகள், இயேசுவை முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இயேசுவால் தனிப்பட்ட முறையில் அன்புகூரப்பட்ட யோவான், எந்த ஓர் உறவையும் துவக்கி வைப்பது இறைவனே என்பதை, தன் திருமடலில் அழகாகக் கூறியுள்ளார். "நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது." (1 யோவான் 4:10)
இதே அழகான எண்ணத்தை, இலாசரின் சகோதரிகள் இந்தக் கூற்றில் வெளிப்படுத்தியுள்ளனர். இயேசுவுடன் கொண்டிருந்த நட்பில், அவரே இந்த அன்புக்கு அடித்தளம் என்பதை, இலாசரின் சகோதரிகள், நிச்சயம் சுவைத்திருப்பர். எனவேதான், "நீர் அன்பு செய்பவன்" என்று இலாசரைக் குறித்து தெளிவாகக் கூறியுள்ளனர்.

"ஆண்டவரே, நீர் அன்பு செய்பவன் நோயுற்றிருக்கிறான்" என்று அச்சகோதரிகள் அனுப்பிய செய்தியில், மற்றோர் எண்ணமும் தெளிவாகிறது. அதாவது, இயேசுவால் அன்பு செய்யப்பட்டவர்கள் என்ற காரணத்தால், ஒருவர் துன்பம் அடையமாட்டார் என்பது நிச்சயம் அல்ல. இன்னும் சொல்லப்போனால், இயேசுவால் அன்பு செய்யப்பட்டவர்கள் அனைவருமே, கூடுதலான துன்பத்தைத் தாங்க அழைப்பு பெற்றிருந்தனர் என்பதை நாம் உணரலாம்.

மார்த்தாவும், மரியாவும், இயேசுவின் நெருங்கிய நண்பர்கள் என்பதால், இயேசுவைச் சூழ்ந்து எழுந்த எதிர்ப்புக்களை, அவர்களும் உணர்ந்திருப்பர். இந்த எதிர்ப்புக்களிலிருந்து சிறிது காலம் விலகி இருப்பதற்காக இயேசு யோர்தான் பகுதிக்கு சென்றுள்ளார் என்பதையும் அவர் எருசலேம் நகருக்கருகே உள்ள பெத்தானியாவுக்கு வருவது ஆபத்து என்பதையும், அவர்கள் கட்டாயம் அறிந்திருப்பர். இருப்பினும், அவர்களால், தங்கள் சகோதரனின் நிலையை இயேசுவிடம் கூறாமலும் இருக்க முடியவில்லை. எனவே, இயேசுவை எவ்விதத்திலும் வற்புறுத்த விழையாமல், அதே நேரம், தங்கள் மனதின் கவலைகளை வெளிப்படுத்தும் வண்ணம், "ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்ற செய்தியை, செபத்தை அவர்கள் அனுப்பி வைத்தனர். இச்செய்தியைக் கேட்டபின், இயேசு செய்தது புதிராக உள்ளது. இந்தப் புதிரைப் புரிந்துகொள்ள அடுத்தத் தேடலில் முயல்வோம்.