26 November, 2021

Advent – the Season of Hope திருவருகைக் காலம் – நம்பிக்கையின் காலம்

Lift up your heads

First Sunday of Advent

Typical of last-minute Christmas shoppers, a mother was running furiously from store to store.  Suddenly, she became aware that the pudgy little hand of her three-year-old son was no longer clutched in hers.  In panic, she retraced her steps and found him standing with his little nose pressed flat against a frosty window.  He was gazing at a manger scene.  Hearing his mother’s near hysterical call, he turned and shouted with innocent glee: "Look Mommy!  It’s Jesus - Baby Jesus in the hay!”  With obvious indifference to his joy and wonder, she impatiently jerked him away saying, "We don’t have time for that!" (Taken from sermoncentral.com)

To me this is a parable! The words of the mother – “We don’t have time for that!” – is an alarm to wake us up before it is too late… I wish to extend this parable a bit more. The mother keeps running on the road and the little kid is literally being dragged to keep pace with her. But, he is more than confused about why his mother was in such a hurry. She has been talking about Christmas for the past ten days or more. She has been telling him also that Christmas was possible only because of Baby Jesus. Now, she does not seem to have time to even give a passing glance at Baby Jesus… Why so? The little kid is totally confused.
We are like this kid… being dragged along the busy shopping mall called the world which is stacked with material things up to a choking level. We wish to spend time at the core of this famous event called Christmas; but we don’t seem to have the time! The Mother Church, instead of dragging us away from the core of Christmas, wishes to give us almost four weeks to get ready for Christmas. She has given us the Advent Season.

Getting ready for the feast is more exciting than celebrating the very feast day. The days preceding Christmas are very exciting. Crib to be put up, decorations to be done, new dress to be bought or stitched, sweets and savouries to be prepared… the list is endless. Everyone in the house, especially Mom, is very busy, over-worked, perhaps. I guess this is the same story for any festive season – be it Deepavali, or Pongal in India. Expectation and excitement seem to be twins. The season of Advent brims with joyous expectation.

Strangely, today’s gospel from Luke gives us more of a jolt rather than joy. Two weeks back, the Sunday’s Gospel reading taken from Mark (13:24-32) spoke of the last days. Today, we hear of the last days again… this time, from the Gospel of Luke. Right at the beginning of a new liturgical year, we are asked to think of the end of the world… Why talk about the end at the beginning itself, especially when the end is quite frightful? I look at it this way. When we see what awaits us at the end, we can take enough care to make our journey more meaningful.
Knowing that the end would be terrible, we have two choices: run away from that end (but where?) or face the end. In facing the end, once again, we have two choices: either ‘endure’ the terror with unflinching courage, or ‘cure’ the terror with positive thoughts and feelings… What need not be endured can be cured! This is the topsy-turvy perspective of our usual ‘what cannot be cured must be endured’ stuff!

Well, perspectives can change the way we think and act! Jesus gives us a perspective in today’s gospel. He gives a list of all the terrifying signs first:  "There will be signs in the sun, moon and stars. On the earth, nations will be in anguish and perplexity at the roaring and tossing of the sea. Men will faint from terror, apprehensive of what is coming on the world, for the heavenly bodies will be shaken.” (Luke 21: 25-26)

I feel that this passage comes to us at an opportune moment. In connection with the UN Climate Change Conference COP26, held in Glasco, Scotland, at the beginning of this month (1 to 13 November), the world was abuzz with thoughts about climate change and rising temperatures. The IPCC - The Intergovernmental Panel on Climate Change, an intergovernmental body of the United Nations responsible for advancing knowledge on human-induced climate change – brought out a special report talking about the dangers humankind will be facing in the near future. The UN Secretary-General António Guterres said that the Working Group's report was nothing less than "a code red for humanity. The alarm bells are deafening, and the evidence is irrefutable".
The report, prepared by 234 scientists from 66 countries, highlights that human influence has warmed the climate at a rate that is unprecedented in at least the last 2,000 years. In 2019, atmospheric CO2 concentrations were higher than at any time in at least 2 million years, and concentrations of methane and nitrous oxide were higher than at any time in the last 800,000 years.
Similar to the threatening words of the gospel talking about ‘changes in the sun, moon and stars’, as well as ‘the roaring and tossing of the sea’, IPCC report says that if the human-induced climate change continues at the present rate, ‘coastal areas will see continued sea level rise throughout the 21st century, contributing to more frequent and severe coastal flooding in low-lying areas and coastal erosion. Extreme sea level events that previously occurred once in 100 years could happen every year by the end of this century’.

This report did not seem to have made much impact on the leaders, who were more interested in protecting big companies and rich individuals than people at large. They failed to take a firm stand against the fossil fuel and coal. As we hear this gospel passage, we pray that our world leaders will wake up and protect our common home called the earth and leave a habitable planet for our future generations! 

Getting back to the Gospel of Luke, Jesus does not stop with enlisting terrifying signs, but goes on to give us a perspective: “When these things begin to take place, stand up and lift up your heads, because your redemption is drawing near.” (Luke 21: 28) When all the people in the world faint and are scared of what is coming to the world, we are asked to stand up and lift up our heads. How is this possible? By changing our perspective, namely, looking at that calamity not as an end of the world, but as the beginning of redemption. If the end is seen as destruction, then we need to run away from there, escape destruction… but , if the end is seen as redemption, we don’t need to run away; but rather run towards the bosom of God… the end of the race!

Perspective can change our attitude and action. For the past few years our media was more than saturated with doom and destruction. Added to that COVID pandemic and the virus variants have been, and, still are, on our minds and hearts day and night. This media onslaught of destruction leaves our hearts like trees shedding their leaves, one by one. But, we need to learn from trees to keep our hopes alive and bring forth new shoots in spring! The season of Advent which comes during the autumn season, wishes to instil continuous and consistent hope in our hearts.

Let us conclude our reflection with the famous story of ‘The Last Leaf’ written by O. Henry. This story, once again, serves as a parable for us.

The story begins as Johnsy, the young lady suffering from pneumonia, gives up hope of surviving. The doctor who treats her says to her friend Sue, “She has a chance, if she wants to live. If people don’t want to live, I can’t do much for them.” He suggests to Sue, “Talk to her about new winter clothes. If she were interested in the future, her chances would be better.”
Sue goes to Johnsy’s room to talk about future plans, but when she arrives at her bedside, she sees Johnsy, looking out the window and counting down… “Twelve, Eleven, Ten…” When Sue asks her about the count down, Johnsy says, that she was counting the leaves falling from the tree. She adds that when the last one falls, she would go as well.
Not knowing what to do, Sue talks with Old Behrman who is a painter, living downstairs. Behrman is sixty and he has been painting for more than forty years. Still, he keeps saying that his masterpiece is yet to come. When Sue tells him about Johnsy’s idea of falling leaves, he gets wild. When they both go up, Johnsy is asleep. So, Sue closes the curtain of the window and goes to sleep.

That night there was rain and wind. So, the next morning, Johnsy felt that all the leaves would have fallen and it was time for her to say goodbye. When the curtains were parted, she saw a single leaf still on the tree. The next night, once again, there was rain beating against the window. When it was light, Johnsy looked out the window and the leaf was still there. Enthused by the single leaf, Johnsy began to show signs of improvement and recovered in a few days.

Once she had recovered well, Sue tells her about the ‘last leaf’. Here are the final lines of this story as written by O. Henry:
And that afternoon Sue came to the bed where Johnsy lay. She put one arm around her. “I have something to tell you”, she said. “Mr. Behrman died of pneumonia today in the hospital. He was ill only two days. Someone found him on the morning of the first day, in his room. He was helpless with pain. His shoes and his clothes were wet and as cold as ice. Everyone wondered where he had been. The night had been so cold and wild. And then they found some things. There was a light that he had taken outside. And there were his materials for painting. There was paint, green paint and yellow paint. And—Look out the window, dear, at the last leaf on the wall. Didn’t you wonder why it never moved when the wind was blowing? Oh, my dear, it is Behrman’s great masterpiece—he painted it there the night that the last leaf fell.”

This story serves as an example to what Jesus talks about in today’s Gospel: “When these things begin to take place, stand up and lift up your heads, because your redemption is drawing near.”

Advent is a season that invites us to stand up, lift up our heads and see our salvation. As we begin the Advent Season, let us try to spread this hopeful attitude, in a world burdened with news and thoughts of the pandemic! Let us make sure that not too many leaves fall from the tree of life in despair!
 
The Last Leaf

திருவருகைக் காலம் - முதல் ஞாயிறு

இளம்தாய் ஒருவர், தன் 5 வயது மகனுடன் கடைவீதிக்குச் சென்றார். கிறிஸ்மஸ் கூட்டம் அலைமோதியது. கிறிஸ்மசுக்குத் தேவையான பொருட்களின் பட்டியல் ஒரு கையில், மற்றொரு கையில் மகன் என்று, அந்த இளம்தாய், கடை, கடையாக ஏறி இறங்கினார். இறுதியில், எல்லாப் பொருட்களையும் சுமந்துகொண்டு, கடைவீதியில் நடந்துகொண்டிருந்தவர், திடுக்கிட்டு நின்றார். தன்னுடன் வந்துகொண்டிருந்த மகனைக் காணவில்லை. பதைபதைப்புடன், அவர் மீண்டும் கடைக்குள் சென்றார். அங்கு, கடையில், அலங்காரமாய் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்து பிறப்பு காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான், அவரது மகன். அவனைக் கண்டதும், தாய் கோபத்தில் கத்தினார். சிறுவனோ, அவரது கோபத்தை சற்றும் உணராமல், "அம்மா, இங்க பாருங்க. குழந்தை இயேசு எவ்வளவு அழகா..." என்று ஆர்வமாய் சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்லவந்ததைச் சற்றும் கேளாமல், "அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல" என்று சொல்லியபடி, அவனைத் 'தரதர'வென இழுத்துக்கொண்டு நடந்தார்.

இந்தக் கதையை ஓர் உவமையாக நாம் எண்ணிப்பார்க்கலாம். 'அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல' என்று அந்த இளம்தாய் சொன்னது, நம்மையெல்லாம் விழித்தெழச் செய்யும் ஓர் அழைப்பு... இதை ஓர் எச்சரிக்கை என்றுகூடச் சொல்லலாம். இந்த உவமையை, தொடர்ந்து கற்பனைசெய்து பார்ப்போமே! தன் தாயின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், கூடவே ஓடிக்கொண்டிருக்கும் சிறுவனுக்கு ஒரே குழப்பம். கடந்த சில நாட்களாக, மூச்சுக்கு மூச்சு, 'கிறிஸ்மஸ் வருது, கிறிஸ்மஸ் வருது' என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறான் அச்சிறுவன். அந்தக் கிறிஸ்மசுக்குக் காரணம், குழந்தை இயேசு என்பதையும், அம்மா கதை, கதையாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறான் அவன். இன்றோ, குழந்தை இயேசுவைப் பார்க்கக்கூட நேரமில்லாமல், அம்மாவுக்கு ஏன் இந்த அவசரம் என்பதே அச்சிறுவனின் குழப்பம்.
குழம்பிப் போயிருக்கும் அச்சிறுவனைப் போலத்தான் நாமும். வண்ண விளக்குகளாலும், பொருட்களாலும் குவிந்துகிடக்கும் கடைவீதிதான் இவ்வுலகம். கிறிஸ்மஸ் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு நேரமே இல்லாமல், கடைவீதிகளில் நாமும், அவசரமாக இழுத்துச் செல்லப்படுகிறோம். இந்த அவசரத்தில், ஆரவாரத்தில் நாம் தொலைந்து போகாமல் இருக்கவே, திருஅவை நமக்கு ஓர் அழகிய நேரத்தை, காலத்தை ஒதுக்கியுள்ளது. இன்று துவங்கி, டிசம்பர் 24ம் தேதி இரவு வரை, நமக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அழகிய காலம்தான்... திருவருகைக் காலம்.

ஆர்வத்தை, எதிர்பார்ப்பை, ஆனந்தமான எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கும் காலம், திருவருகைக் காலம். ஆனால், இன்றைய நற்செய்திப் பகுதி, ஆனந்தத்திற்குப் பதிலாக, அச்சத்தை உருவாக்குகிறது. இரு வாரங்களுக்கு முன், உலக முடிவைப்பற்றி மாற்கு நற்செய்தியிலிருந்து ஒரு பகுதியை (மாற்கு 13: 24-32) சிந்தித்தோம். இன்று லூக்கா நற்செய்தியிலிருந்து, உலக முடிவைப்பற்றி மீண்டும் ஒரு வாசகம்.
லூக்கா நற்செய்தி 21: 25-26
அக்காலத்தில் மானிட மகன் வருகையைப் பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது:கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர்.

ஓர் எச்சரிக்கை மணிபோல் ஒலிக்கும் இந்த நற்செய்தி பகுதி, இந்த ஞாயிறன்று நமக்கு வழங்கப்பட்டுள்ளதை, அருள்மிகு ஒரு தருணமாக கருதலாம். காரணம், இந்த நற்செய்திப்பகுதியை ஒத்த எச்சரிக்கை ஒன்றை, ஐ.நா. நிறுவனம், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. நவம்பர் மாதத் துவக்கத்தில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாடு COP26க்கு ஒரு தயாரிப்பாக உருவாக்கப்பட்ட IPCC அறிக்கை, மனித குலத்திற்கு வழங்கப்பட்டுள்ள 'Code Red' அதாவது, 'சிவப்பு குறியீடு' என்ற மிகத் தீவிரமான எச்சரிக்கை என்று, ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

66 நாடுகளை சேர்ந்த 234 அறிவியல் அறிஞர்கள் இணைந்து உருவாக்கிய இந்த அறிக்கையில், மனிதர்களின் நடவடிக்கைகளால், உலக வெப்பநிலை, கடந்த 2000 ஆண்டுகளுக்கு உயராத அளவு தற்போது உயர்ந்துவருகிறது என்று எச்சரித்துள்ளனர். கதிரவன், நிலவு, விண்மீன் ஆகியவற்றில் தோன்றும் மாற்றங்கள், கடல் கொந்தளிப்பு, உலகிற்கு என்ன நேருமோ என்ற அச்சம்... என்று நற்செய்தியில் கூறப்பட்டுள்ள வரிகளைப்போல், ஐ.நா.வின் IPCC அறிக்கையிலும், அச்சமூட்டும் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, தற்போது நிலவும் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்ந்தால், இதுவரை, 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவான கடல்நீர்மட்ட உயர்வு, 21ம் நூற்றாண்டின் இறுதியில், ஒவ்வோர் ஆண்டும் நிகழக்கூடும் என்றும், பல கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளதென்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

இந்த எச்சரிக்கைகள் அனைத்தையும் கேள்விப்பட்ட பின்னரும், கிளாஸ்கோ நகரில் கூடிய தலைவர்கள், நிலத்தடி எரிசக்திகளின் பயன்பாட்டை, குறிப்பாக, நிலக்கரி பயன்பாட்டை முற்றிலும் தடைசெய்யும் முடிவுகளை எடுக்காமல் COP26 மாநாட்டை நிறைவு செய்துவிட்டனர்.

நிலத்தடி எரிசக்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் வளர்த்துக்கொண்ட அளவுக்கு மீறிய பேராசையால், நமது சுற்றுச்சூழல் சீரழிந்து வருவதையும், காலநிலை மாற்றங்களால், மக்கள், குறிப்பாக, வறியோர், பெரும் அழிவுகளுக்கு உள்ளாவதையும் அறிவோம். இந்த அழிவுகளைத் தடுக்க, வலிமை பெற்றுள்ள அரசுகள், மக்கள் நலனை முன்னிறுத்தி, நல்ல முடிவுகளை எடுக்காமல், பேராசை கொண்ட நிறுவனங்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுத்தது, இளையோர் நடுவே பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. இனிவரும் ஆண்டுகளில், இளையோரையும் வருங்காலச் சந்ததியினரையும் அழிவிலிருந்து காப்பதற்குத் தேவையான நல்ல முடிவுகளை, இன்றையத் தலைவர்கள் எடுக்கவேண்டும் என்று இறைவனிடம் உருக்கமாக மன்றாடுவோம்.

சுற்றுச்சூழலைக் காப்பது, அரசுகளின் பணி மட்டுமல்ல; அது நம் ஒவ்வொருவரின் கடமை. நம் தனிப்பட்ட வாழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பல முயற்சிகளை மேற்கொள்ளலாம். நம் இல்லங்களில், தண்ணீர் மற்றும் மின்சக்தியை கவனமாகப் பயன்படுத்துவதில், அலுவலகங்களில் காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதில், நம் முயற்சிகள் துவங்கவேண்டும். சொந்த வாகனங்கள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்துவதிலும், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பதிலும், கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

உலக முடிவைப்பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும்போது, அந்த முடிவைச் சந்திக்கும் மனநிலையைப்பற்றி சிந்திக்கவேண்டும். கடல் கொந்தளிப்பு, கலகம், குழப்பம், அச்சம் என்று பயம்தரும் ஒரு பட்டியலைத் தரும் இயேசு, அந்நேரத்தில் என்ன செய்யச் சொல்கிறார்? பதுங்கி ஒளியச் சொல்லவில்லை, தப்பித்து, தலைதெறிக்க ஓடச் சொல்லவில்லை, மாறாக, தலை நிமிர்ந்து நில்லுங்கள் என்று கூறுகிறார். நாம் சந்திக்கப்போவது அழிவல்ல, மீட்பு என்பதால், நம்மை தலைநிமிர்ந்து நிற்கச் சொல்கிறார்.
அழிவு என்று பார்த்தால், அலறி அடித்து ஓடத்தான் வேண்டும். மீட்பு என்று பார்த்தால், தலைநிமிர்ந்து நிற்போம், நம் கடவுளைச் சந்திக்க. நாம் கொண்டிருக்கும் கண்ணோட்டம், நம் செயல்பாடுகளை மாற்றும்.

அழிவையும், அவநம்பிக்கையையும் வளர்க்கும் செய்திகள், அண்மைய ஆண்டுகளில், நம் உள்ளங்களை நிறைத்துவந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுற்றுச்சூழல் சீரழிவு, இயற்கைப் பேரிடர்கள், பொருளாதார வீழ்ச்சி, பயங்கரவாதம், என்ற பல்வேறு செய்திகளைக் கேட்டு வந்த நாம், கடந்த இரு ஆண்டுகளாக, கோவிட் பெருந்தொற்று என்ற தொடர்கதையை மீண்டும், மீண்டும் கேட்டு, மனம் தளர்ந்துபோயிருக்கிறோம்.
நம்பிக்கையிழந்திருக்கும் நம் உள்ளங்களை, மரங்களுக்கு ஒப்புமைப்படுத்தி சிந்திக்கலாம். இலையுதிர் காலத்தில், தன்னில் வளர்ந்திருக்கும் இலைகளை இழந்து, குளிர்காலத்தில், உயிரற்றதுபோல் நிற்கும் மரங்கள், வசந்தகாலம் வந்ததும், தங்கள் கிளைகளில் இலைகளைத் தோற்றுவித்து, வாழ்வை, மீண்டும் பறைசாற்றுகின்றன. அதேபோல், நம் உள்ளங்களும், நம்பிக்கையில் வேரூன்றி, நன்மைகளை தோற்றுவிக்கவேண்டும்.

வாழ்வைக் குறித்த நம்பிக்கையை வளர்க்க உருவாக்கப்பட்டுள்ளது, திருவருகைக் காலம். வழிபாட்டு ஆண்டைத் துவக்கிவைக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, நம்பிக்கையை வளர்க்கும் ஒரு கதையுடன் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம். குறிப்பாக, மரத்திலிருந்து இலைகள் உதிர்வதை மையப்படுத்தி, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிறுகதை எழுத்தாளர், O.Henry அவர்கள் எழுதிய, '"The Last Leaf", அதாவது, "கடைசி இலை" என்ற கதை, நமக்குள் நம்பிக்கை உணர்வுகளை உருவாக்கட்டும்:

'நிமோனியா' என்றழைக்கப்படும் குளிர்காய்ச்சல் நோயினால் துன்புற்ற ஜான்சி (Johnsy) என்ற இளம்பெண், தான் விரைவில் இறந்துவிடுவோம் என்று ஒவ்வொரு நாளும் எண்ணிவந்தார். அவருக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர், ஜான்சியின் தோழி சூ (Sue) அவர்களிடம், "ஜான்சி உயிர்வாழ நினைத்தால், அவர் குணமாக வாய்ப்பு உண்டு. என்னால், மருந்துகள் தரமுடியும். ஆனால், குணமாகமுடியும் என்ற நம்பிக்கை, அவரிடம் உருவாக, நீங்கள் உதவி செய்யவேண்டும்" என்று கூறிச் சென்றார்.
இளம்பெண் ஜான்சி, ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், அவரது தோழி சூ, ஜான்சி உருவாக்க விழைந்த ஓவியங்களைப்பற்றி பேசி, உற்சாகமூட்டலாம் என்ற நோக்கத்துடன், அவர் படுத்திருந்த அறைக்குச் சென்றார். அவ்வறையில், சன்னலருகே படுத்திருந்த ஜான்சி, அறைக்குள் சூ வந்ததையும் கவனிக்காமல், சன்னல்வழியே வெளியே பார்த்தபடி, "பதினொன்று, பத்து, ஒன்பது, எட்டு..." என்று எண்ணிக்கொண்டிருந்தார். சூ அவரிடம், என்ன செய்கிறாய்?” என்று கேட்டபோது, ஜான்சி, சன்னலுக்கு வெளியே இருந்த மரத்தைக் காட்டி, தன் தோழியிடம், "எனக்கு வியாதி வந்த அன்று, அந்த மரத்தில் நூற்றுக்கும் அதிகமான இலைகள் இருந்தன. கடந்த மூன்று நாள்களில், அவை அனைத்தும் ஒவ்வொன்றாக விழுந்து, இப்போது, அங்கே ஏழு இலைகளே உள்ளன. அந்த மரத்திலிருந்து, கடைசி இலை விழும்போது, நானும் இறந்துவிடுவேன்" என்று கூறினார். அதைக்கேட்டு வேதனையடைந்த சூ, "ஜான்சி, தயவுசெய்து, கண்களை மூடி தூங்கு, சன்னல் வழியே பார்க்காதே" என்று கூறிவிட்டுச் சென்றார். 

தன் தோழிக்கு எவ்விதம் உதவி செய்வதென்று புரியாமல் தவித்த சூ, அவர்கள் வாழ்ந்துவந்த குடியிருப்பின் கீழ்ப்பகுதியில் இருந்த வயது முதிர்ந்த ஓவியர், பெர்மன் (Bherman) அவர்களைத் தேடிச்சென்றார். அவரிடம், தன் தோழி ஜான்சி, மரத்திலிருந்து விழும் இலைகளைப்பற்றி சொன்னதைக் கூறினார். அதைக்கேட்டு கோபம் கொண்ட பெர்மன் அவர்கள், ஜான்சியைப் பார்த்து புத்திமதி சொல்ல மேலேச் சென்றார். ஜான்சி உறங்கிக்கொண்டிருந்ததால், சன்னலின் திரையை மூடிவிட்டு, திரும்பிச்சென்றார்.

அன்றிரவு, பனிப்புயல் ஒன்று வீசியது. அந்தப் புயலில், மரத்தில் மீதம் இருந்த அத்தனை இலைகளும் விழுந்திருக்கும் என்று எண்ணியபடி படுத்திருந்த ஜான்சி, அடுத்தநாள் காலையில், சன்னல் திரையை விலக்கிப்பார்த்தார். அந்த மரத்தில் ஒரே ஓர் இலை மட்டும் தொங்கிக்கொண்டிருந்தது. அதைக்கண்ட ஜான்சியின் உள்ளத்தில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் இலேசாகத் துளிர்விட்டன. மீண்டும் அடுத்த இரவு, காற்று பலமாய் வீசியது. ஆனால், அடுத்தநாள், மீண்டும் அந்த இலை விழாமல் இருந்தது. பனியிலும், காற்றிலும் கீழே விழாமல் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அந்த ஓர் இலை, ஜான்சிக்கு அளித்த நம்பிக்கையால், அவர் குளிர்க்காய்ச்சலிலிருந்து குணமானார்.

இளம்பெண் ஜான்சி நல்ல குணம் பெற்றபின், அவரது தோழி சூ, கீழே விழாமல் தொங்கிக்கொண்டிருந்த அந்த இலையைப்பற்றிய உண்மையை அவரிடம் கூறினார். வீட்டின் கீழ்ப்பகுதியில் வாழ்ந்த ஓவியர் பெர்மன் அவர்கள், பனிப்புயல் அடித்த அன்றிரவு, ஏணிமீதேறி, அந்த சன்னலுக்கு வெளியே, மரத்தையொட்டி இருந்த சுவரில், கடைசி இலையை ஓவியமாக வரைந்தார் என்றும், அந்த ஓவியத்தை முடித்துவிட்டு இறங்கிச்சென்றவர், குளிர்க்காய்ச்சலால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில், அடுத்தநாள் இறந்தார் என்றும் சூ அவர்கள் கூறினார். "ஓவியர் பெர்மன் அவர்கள் தன் வாழ்நாளில் தீட்டிய அனைத்து ஓவியங்களிலும், 'கடைசி இலை' என்ற அந்த சிறு ஓவியமே, தலைச்சிறந்த ஓவியம்" என்று இளம்பெண் சூ, தன் தோழி ஜான்சியிடம் கூறி முடித்தார்.

உங்களைச் சுற்றி அனைத்தும் அழிந்தாலும், நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள், ஏனெனில் உங்கள் மீட்பு அருகில் உள்ளது என்று இயேசு உறுதியளித்திருந்தாலும், அந்த உறுதியால் நிறைவடையாமல், ஏனைய எண்ணங்களால் மனதை நிறைக்கிறோமா? உலகம் என்ற கடைவீதியில் விற்கப்படும் நம்பிக்கையற்றச் செய்திகளை மட்டுமே, காதிலும் கருத்திலும் வாங்கி, நம் உள்ளங்களைத் தொலைத்துவிட்டு அலைகிறோமா?
நம் உள்ளங்களில் நம்பிக்கையை விதைத்த நல்ல பல நிகழ்வுகளை, குறிப்பாக, இந்த பெருந்தொற்றின் வேதனைச் செய்திகளை வெல்லும்வண்ணம் நிகழ்ந்த அன்புச் செயல்களை, இத்திருவருகைக் காலம் முழுவதும் பகிர்ந்துகொள்வோம். நம்பிக்கை தரும் நல்ல செய்திகளை இன்னும் அதிகமாகப்  பரப்ப முயல்வோம்.

23 November, 2021

விவிலியத்தேடல்: திருப்பாடல்கள் 20,21 – அரசரின் வெற்றிக்காக வேண்டுதலும், நன்றியும்


'இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்' என்ற திருநாளை, நவம்பர் 21, கடந்த ஞாயிறன்று கொண்டாடினோம். 1925ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையில், 'கிறிஸ்து அரசர்' திருநாளை உருவாக்குவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது, 1918ம் ஆண்டு முடிவுக்கு வந்திருந்த முதல் உலகப்போர். அரசர்கள் மற்றும், அரசுத்தலைவர்களிடையே வளர்ந்துவந்த அதிகாரப்போட்டிகள், போர்களை உருவாக்கின என்பதை உணர்ந்து, வேதனையுற்ற திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், இந்த உலக அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 'இவ்வுலகைச் சாராத அரசை நிறுவவந்த' (காண்க. யோவான் 18:36) இயேசுவை, 'அனைத்துலக அரசர்' என்று அறிவித்தார்.

கிறிஸ்துவின் அரசத்தன்மை வெளிப்படுத்திய பண்புகளை, காண மறந்த, அல்லது, காண மறுத்த இவ்வுலகத் தலைவர்கள், மீண்டும் ஒருமுறை, 2ம் உலகப்போரை மேற்கொண்டனர். தற்போது, உலகத்தலைவர்கள் நடுவே வளர்ந்துவரும் அதிகாரப் போட்டிகளின் விளைவாக, உலகின் பல பகுதிகளில், மூன்றாம் உலகப்போர், சிறு, சிறு துண்டுகளாக நடைபெற்றவண்ணம் உள்ளன. இந்த எண்ணத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெவ்வேறு தருணங்களில், தன் உரைகளில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய ஒரு சூழலில், குறிப்பாக, 'கிறிஸ்து அரசர்' திருநாளைத் தொடர்ந்துவரும் இன்றைய விவிலியத்தேடலில், அரசரின் வெற்றிக்காக வேண்டல், அரசரின் வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தல் என்ற இரு தலைப்புக்களுடன் பதிவாகியுள்ள 20, மற்றும், 21 ஆகிய இரு திருப்பாடல்களில், நாம் சிந்தனைகளை மேற்கொள்கிறோம். இதை, இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருள் நிறைந்ததொரு வாய்ப்பாகக் கருதலாம். 'அரசரின் வெற்றி' என்ற எண்ணத்தை மையப்படுத்தி பதிவாகியுள்ள இவ்விரு திருப்பாடல்களின் வழியே, இன்றைய உலகிற்குத் தேவையான 'அரசத்தன்மை', 'வெற்றிபெறுதல்' ஆகிய கருத்துக்களை, சரியான முறையில் புரிந்துகொள்ள முயல்வோம்.

அரசர் என்றதும், அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றிபெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. குறிப்பாக, அரசர் மேற்கொள்ளும் போர்களில், அவர் எப்போதும் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டுதல்களும், வேள்விகளும் நடைபெறுவதை வரலாற்றில் காண்கிறோம்.
போருக்குப் புறப்படும் அரசர், அதற்கு முன்னதாக, தன் வெற்றியை உறுதிசெய்யும் ஓர் அடையாளத்தை, கடவுளிடமிருந்து பெறுவதற்கு, ஆலயம் செல்லும் பழக்கம், ஏறத்தாழ, அனைத்து கலாச்சாரங்களிலும் காணப்படுகின்றது. அதேவண்ணம், அரசருக்கு வெற்றி வழங்க, அரசரோடு இணைந்து, மக்கள், பலிகளையும், வேள்விகளையும் நிறைவேற்றுவது, அனைத்து மதங்களிலும் பொதுவாக நிலவும் ஒரு பழக்கம்.

அத்தகைய ஒரு காட்சியைக் கற்பனை செய்துபார்க்க, 20வது திருப்பாடல் உதவுகிறது. போருக்குப் புறப்படும் அரசர் தாவீது, பலிபீடத்திற்கு முன் நிற்பதாகவும், அவரைச் சுற்றிலும், படைவீரர்களும், மக்களும் நின்று, ஒரே குரலில், தங்கள் வேண்டுதலை எழுப்புவதாகவும் நாம் கற்பனை செய்துபார்க்கலாம்.
நெருக்கடி வேளையில் உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக! யாக்கோபின் கடவுளது பெயர் உம்மைப் பாதுகாப்பதாக! தூயகத்திலிருந்து அவர் உமக்கு உதவி அனுப்புவாராக! சீயோனிலிருந்து அவர் உமக்குத் துணை செய்வாராக! (திருப்பாடல் 20:1-2) என்று ஆரம்பமாகும் 20வது திருப்பாடலில், முதல் 5 இறைவாக்கியங்கள், மக்களிடமிருந்து எழும் வேண்டுதலாகவும், அவர்கள், தாவீதுக்கு வழங்கும் ஆசி மொழிகளாகவும் ஒலிக்கின்றன.

ஆசீரும், வேண்டுதலும் கலந்த இந்த ஐந்து இறைவாக்கியங்களைத் தொடர்ந்து, 6வது இறைவாக்கியத்தில், தாவீது, இறைவனிடமிருந்து தனக்குக் கிடைக்கும் பதிலிறுப்பை அறிக்கையிடுகிறார். 7,8 ஆகிய இரு இறைவாக்கியங்களில், இறைமக்கள், ஆண்டவர் மீது தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். இறுதியில், 9வது இறைவாக்கியத்தில் எழுப்பப்படும் ஓர் இறைவேண்டலோடு இப்பாடல் நிறைவடைகின்றது.

20வது திருப்பாடலின் இந்த 9 இறைவாக்கியங்களில் 7வது இறைவாக்கியம் வெளிப்படுத்தும் ஒரு சில எண்ணங்களை அசைபோடுவது உதவியாக இருக்கும்: சிலர் தேர்ப்படையிலும், சிலர் குதிரைப் படையிலும் பெருமை கொள்கின்றனர்; நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரில் பெருமை கொள்கின்றோம். (திருப்பாடல் 20:7) என்ற இச்சொற்களை இஸ்ரயேல் மக்கள் பறைசாற்றிய வேளையில், பல்வேறு எண்ணங்கள் அவர்கள் உள்ளத்தில் அலைமோதியிருக்கும்.

எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டுச் சென்றதும், அவர்களை, தேர்ப்படை, மற்றும் குதிரைப்படை கொண்டு துரத்திச்சென்ற எகிப்தியரிடமிருந்து தங்கள் முன்னோரைக் காத்து, செங்கடலை அவர்கள் கடக்கச்செய்த இறைவன், எகிப்தியரின் படையினர் அனைவரையும் செங்கடலில் மூழ்கச்செய்த நிகழ்வு, தாவீதுக்கும், அவரைச் சுற்றி நின்ற மக்களுக்கும், கட்டாயம் நினைவில் தோன்றியிருக்கும். இந்நிகழ்வை நாம் விடுதலைப்பயண நூல் 14 மற்றும் 15 ஆகிய பிரிவுகளில் காண்கிறோம்.

மோசே, தன் மரணத்திற்குமுன் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கிய தெளிவான விதிமுறைகளில், 'போரைப்பற்றிய விதிமுறைகள்' என்ற பகுதியின் துவக்கத்தில் கூறிய அறிமுகச் சொற்கள், மக்களின் உள்ளங்களில் மீண்டும் ஒலித்திருக்கும்:
நீ உன் பகைவருக்கு எதிராகப் போருக்குப் போகையில், உன்னிடம் உள்ளதைவிட மிகுதியான குதிரைகளையும், தேர்களையும், பெரும் படையையும் நீ கண்டால், அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில், எகிப்திலிருந்து உன்னை வெளியே கூட்டிவந்த உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு உள்ளார். (இணைச்சட்டம் 20:1) 

குதிரைகளையும், தேர்களையும், படைகளையும் நம்புவதற்குப்பதில், ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று தாவீதும், மக்களும், 20வது திருப்பாடலில் வெளிப்படுத்தும் இந்த நம்பிக்கை அறிக்கை, மீண்டும், 33வது திருப்பாடலில் இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது:
தன் படைப்பெருக்கத்தால் வெற்றிபெரும் அரசருமில்லை; தன் வலிமையின் மிகுதியால் உயிர்தப்பிய வீரருமில்லை. வெற்றிபெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்; மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது. தமக்கு அஞ்சி நடப்போரையும், தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும், ஆண்டவர் கண்ணோக்குகின்றார். (திருப்பாடல் 33:16-18)

ஆண்டவர் செய்த அற்புதங்களைக் கண்டு அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள், நாளடைவில், மீண்டும், ஏனைய அரசுகள் போல தங்கள் படைபலத்தை நம்பிவாழ்ந்ததை வரலாறு சொல்கிறது. இஸ்ரயேல் மக்கள், ஆண்டவர்மீது வைத்திருக்கவேண்டிய நம்பிக்கையை விட்டுவிலகி, மீண்டும் எகிப்தியரை நாடிச்செல்லும் ஆபத்து உள்ளதென்று உணர்ந்த இறைவாக்கினர் எசாயா, அவர்களுக்கு வழங்கிய எச்சரிக்கையை, நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: துணை வேண்டி எகிப்துக்குச் செல்வோருக்கு ஐயோ கேடு! அவர்கள் குதிரைகளுக்காகக் காத்துக் கிடக்கின்றர்; பெரும் தேர்ப்படைகளையும் வலிமைமிகு குதிரை வீரர்களையும் நம்பியிருக்கிறார்கள்; இஸ்ரயேலின் தூயவருக்காக ஆவலுடன் காத்திருக்கவில்லை; ஆண்டவரைத் தேடுவதுமில்லை (எசாயா 31:1)

In God We Trust

தங்கள் படைபலத்தையும், அழிவுக்கருவிகளின் சக்திகளையும் நம்பி இன்றைய அரசுகள் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட முயலும் பல்வேறு முயற்சிகளுக்கு, 20வது திருப்பாடலின் 7வது இறைவாக்கியம் ஒரு சாட்டையடிப்போல் விழுவதை நாம் உணர்கிறோம். உலகின் வல்லரசுகளில் ஒன்றாகக் கருதப்படும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, தன் டாலர் நோட்டுகளில் “In God We Trust”, அதாவது, "கடவுளில் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்" என்று பதிவுசெய்திருப்பதை எவ்விதம் பொருள்கொள்வது என்று புரியாமல் திகைத்து நிற்கிறோம். செல்வத்தைக் குவித்து, அதைக் காப்பதற்காக தங்கள் நாட்டு படைபலத்தையும், ஆயுதங்களையும் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துவரும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, 'கடவுளை நம்பியிருப்பதாக' கூறுவது, அதிலும், தங்கள் டாலர் நோட்டுகளில் அவ்வாறு கூறியிருப்பது, முரண்பாடாகவும், ஒரு கோணத்தில், கேலியாகவும் தெரிகிறது.

திருப்பாடல்கள் நூலில், கடவுள் தேர்ந்து கொண்ட அரசர் (2), அரசரின் வெற்றிப் பாடல் (18), அரசரின் வெற்றிக்காக வேண்டுதலும், நன்றியும் (20,21), அரசரின் திருமணப்பாடல் (45), அரசருக்காக மன்றாடல் (72), அரசரின் வாக்குறுதி (101), ஆண்டவரும் அவர் தேர்ந்து கொண்ட அரசரும் (110) ஆகிய 8 திருப்பாடல்கள், அரசரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள பாடல்கள். இவையன்றி, 93வது திருப்பாடல் முதல், 99வது திருப்பாடல் முடிய உள்ள 7 திருப்பாடல்கள், ஆண்டவரை ஓர் அரசராக உருவகித்துக் கூறும் பாடல்களாக அமைந்துள்ளன.

இப்பாடல்களில், கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! (திருப்பாடல் 72:1-2) என்று ஆரம்பமாகும் 72வது திருப்பாடல், இன்றைய அரசர்களும், அரசுத்தலைவர்களும் பதவியேற்கும் வேளையில் சொல்லக்கூடிய அழகான ஓர் இறைவேண்டுதலாக அமைந்துள்ளது.

அதே வண்ணம், நாம் தற்போது தேடலை மேற்கொண்டுள்ள 21வது திருப்பாடலின் வரிகளும், அரசர்களுக்கும், அரசுத்தலைவர்களுக்கும் இறைவன் வழங்கும் ஆசிகளை அறிக்கையிடும் சொற்களாக அமைந்துள்ளன. இந்த ஆசி மொழிகளுடன் இன்றைய தேடலை நாம் நிறைவு செய்வோம்:
திருப்பாடல் 21:1-6,13
ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்; நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்! அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்; அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை.
உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி நீர் அவரை எதிர்கொண்டீர்; அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர். அவர் உம்மிடம் வாழ்வுவேண்டி நின்றார்; நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர்.
நீர் அவருக்கு வெற்றியளித்ததால் அவரது மாட்சிமை பெரிதாயிற்று; மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர், உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை அவர் பெற்றுள்ளார்; உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர்....
ஆண்டவரே, உமது வலிமையோடு எழுந்து வாரும்; நாங்கள் உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவோம்.

19 November, 2021

Enthroning the real King… உண்மை அரசரை அரியணையேற்ற...

  
Pilate presents Jesus to the crowd

34th Sunday - Feast of Christ the King

This Sunday we celebrate the Feast of Our Lord Jesus Christ, King of the Universe. This year, for the first time, along with this Feast, we celebrate the World Day of the Youth. Pope St John Paul II instituted the World Day of the Youth, and from 1986, this Day was celebrated every year on the Palm Sunday.
Last year, when Pope Francis celebrated Mass on the Feast of the Christ the King, he announced that from the next year – that is from 2021 – World Day of the Youth would be celebrated on the Feast of Christ the King. Hence, this Sunday, on the Feast of Christ the King, we also celebrate the World Day of the Youth in all the dioceses of the world.

Celebrating the Feast of Christ, the King and the World Day of the Youth together, gives us an opportunity to reflect on what type of ‘kings’ – world leaders – are presented to our youth these days. In the past two years, the media had published quite a few articles on the ‘deep void in global leadership’ (cf, The Hindu, March 30,2020). The COVID pandemic has exposed how we lack leaders who have strong moral foundation. At this juncture, the Church gives us an opportunity to reflect on Christ, the King and true Leader.

The title - ‘Christ, the Universal King’ - may create uncomfortable feelings in us. Christ, the Shepherd, the Saviour, the Son of David, the Crucified, the Lamb of God, Christ – the Way, the Truth, the Light … all these titles do not create problems for us. Christ, the King? Hmm… ‘Christ’ and ‘King’ seem to be two opposite, irreconcilable poles. Why do we feel so uncomfortable with the title ‘Christ, the King’
The reason for our discomfort lies with the term ‘king’, rather than ‘Christ’. The moment we think of a king, pomp and power, glory and glamour, arrogance and avarice… these thoughts crowd our mind. Would Christ be a pompous, powerful, arrogant, avaricious king? No way… He would be a King on his own terms, in his own style.

Christ does talk about a kingdom. A Kingdom not defined by a territory! No territory? Well, once this is true, then, most of the problems of kingship are over. A king who does not have a territory, need not be at war with other kings.

History tells us that when kings became greedy to grab more and more land and establish more and more of their power, wars broke out. Such power struggle landed Europe in the First World War. This war was one of the main reasons for establishing the Feast of Christ, the King. Within a few weeks after the start of World War I, (July 28, 1914), Pope St Pius X passed away (August 20, 1914). His successor, Pope Benedict XV, who assumed the leadership of the Church on September 3, 1914, bore the full brunt of this war. He called this war “senseless massacre” and “the suicide of the civilized Europe”. Pope Pius XI, who succeeded Pope Benedict XV in 1922, realized that the main reason for the First World War was the insatiable thirst for power. Hence, in 1925, he proposed an alternate model of kingship in Christ. He created the Feast of Christ, the Universal King!

This King is sans power and sans territory. This King lays claims only over human hearts. Is such a king possible? Not only possible, but made factual in the person of Jesus Christ the true King!

So, we are talking of two different worlds, worlds that are poles apart. These two poles are represented by two figures - Pilate and Jesus - given to us in today’s gospel – John 18:33-37.
Who is Pilate? Every Sunday, and on every great feast day, when Christians recite the creed, they use the names of only two human persons in the creed… Virgin Mary and Pontius Pilate – the channel that infused life into Jesus, and the channel that drained life out of Him. What a paradox! The person who was responsible for condemning Jesus to death, has somehow sneaked into the profession of Christian faith.
Who is this Pilate? He was the representative of the great, mighty Roman emperor – Caesar. He is referred to as the fifth Procurator of Judea. His main task was to procure taxes from the Jews and send them over to Rome. Some would even say that he was personally angry with Jesus since he had made two of his tax collectors give up their jobs: the Levi (Matthew) and Zacchaeus. Added to that, the news about Jesus cleansing the temple must have reached his ears and he may have interpreted that action as a precursor to challenging the taxes paid to Caesar. Hence, Pilate must have had a personal score to settle with Jesus.

We have heard the famous axiom: Power corrupts and absolute power corrupts absolutely. Pilate had tasted power, and he was not willing to give it up. He would go to any length to safeguard his position. Here was a threat to his power and ambition – in the form of a young man named Jesus, the Nazarene, the son of a carpenter! The son of who? Pilate couldn’t believe his ears when the priests whispered to him that a young carpenter was challenging the power of Caesar and Rome. How far can a person be disillusioned, thought Pilate! Little did he realise, that it was he, who was the most disillusioned.

On meeting Jesus, Pilate could not but be impressed with the Nazarene. There was something magnetic about Him. He wanted to know what created this aura around this frail carpenter. He tried to engage Him in conversation about His kingdom and kingship. This is what is given in today’s gospel. He could not get any clear answer for his queries. What Jesus told him was way beyond his comprehension, since Pilate could not and, probably, did not want to think of any other way a king or kingdom could exist except the Roman way. Such a poor, narrow view! Jesus tried to tell him that truth would set him free. For Pilate truth was a distant memory. When was the last time he had been truthful? He could not remember! This is the typical image of most of the politicians today, dishing out lies, day after day, without batting an eyelid!

Even now, Pilate knew in his heart of hearts that the one who was standing in front of him was innocent. But, the moment he heard the ominous warning: "If you release this man, you are not Caesar's friend; everyone who makes himself a king sets himself against Caesar" (John 19: 12), he wanted to back off… He was willing to compromise… Yes, all his life Pilate had done only that… Finding compromises or escape routes. Compromise and truth cannot be in the same league. They are actually opposite poles. Just like… Pilate and Jesus. Pilate believed in power… in brute power… while Jesus believed in power that came from above. He warned Pilate about this power (John 19: 11).

Fr Ron Rolheiser, reflecting on this scene, has some good insights: Jesus stands before Pilate and the crowd, shackled, helpless to walk away, seemingly a victim. Yet, in all of literature, one will never find an image of someone more free than Jesus at that moment. When Pilate says to him: “Don’t you know that I have the power to set you free or put you to death,” Jesus answers, “You have no power over me. Nobody takes my life. I lay it down of my own free will.” Pilate understood exactly what that meant, you can’t make a saint into a victim or a martyr into a scapegoat. You can’t take by force what someone has already freely given over.

Between Pilate and Jesus, who was powerful? Who was really in charge? Pilate, who was sitting on the throne so tight that others could easily see that he was ‘nailed’ to the throne; or Jesus who, even to the point of being nailed to the cross would not give up truth… now standing in front of Pilate, calm and dignified? Who was the king… the real King? All of us can answer this question intellectually. Let our prayer be, that all of us enthrone this real King in our hearts!

Pilate – ‘Behold your king’


நவம்பர் 21, இஞ்ஞாயிறன்று, 'இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்' திருநாளை சிறப்பிக்கிறோம். இவ்வாண்டு, முதல் முறையாக, இத்திருநாளை, இளையோர் உலக நாளாகவும் நாம் சிறப்பிக்கிறோம். கத்தோலிக்கத் திருஅவையில், இளையோர் உலக நாளை உருவாக்கிய திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இந்நாளை, ஒவ்வோர் ஆண்டும், புனித வாரத்தின் முதல் நாளான, குருத்தோலை ஞாயிறன்று சிறப்பிக்குமாறு அழைப்புவிடுத்தார்.
2020ம் ஆண்டு, நவம்பர் மாதம், கிறிஸ்து அரசர் திருநாள் திருப்பலியை வத்திக்கானில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருப்பலியின் இறுதியில், 2021ம் ஆண்டு முதல், இளையோர் உலக நாள், கிறிஸ்து அரசர் திருநாளன்று சிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, இவ்வாண்டு, கிறிஸ்து அரசர் திருநாளையும், இளையோர் உலக நாளையும், முதல் முறையாக, நாம் இணைத்து கொண்டாடுகிறோம்.

கண்ணுக்கும், கருத்துக்கும் புலப்படாத கோவிட்-19 கிருமி, உலகமனைத்தையும் தன் அதிகாரப்பிடிக்குள் அடக்கிவைத்திருந்த வேளையில், அதை எதிர்த்துப் போராட, உலகத் தலைவர்கள் யாரும் இணைந்து வரவில்லை என்ற உண்மை, இன்றைய உலகில், தலைமைத்துவம் காணாமல் போய்விட்டதை உணர்த்தியது. இன்றைய உலகத் தலைவர்களில் பெரும்பாலானோர், நன்னெறியின் அடிப்படையில் செயல்படாமல், சுயநலத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருவதால், உண்மையான தலைமைத்துவம் என்றால் என்ன என்பதை இளையோர் புரிந்துகொள்ளாமல் போகும் ஆபத்து உள்ளது.
இத்தகையச் சூழலில், உண்மையான அரசர், அல்லது, தலைவரின் பண்புகளைப்பற்றி சிந்திக்க, 'கிறிஸ்து அரசர்' திருநாளும், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள இளையோர் உலக நாளும் நம்மை அழைக்கின்றன.

இவ்விரு திருநாள்களும் இணைந்துவரும் இஞ்ஞாயிறன்று, உலகத்தலைவர்களின் பிரதிநிதியான பிலாத்து, உண்மைத் தலைவரான இயேசுவைச் சந்திக்கும் காட்சி, இன்றைய நற்செய்தியாக (யோவான் 18: 33-37) நமக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிகாரத்தின் ஆணவத் தளைகளால் கட்டுண்டிருந்த பிலாத்தும், அவருக்கு முன், குற்றவாளியென பொய்க்குற்றம் சுமத்தப்பட்ட இயேசுவும், இன்றைய இளையோருக்கும், நம் அனைவருக்கும், அதிகாரம், தலைமைத்துவம் ஆகியவற்றைக் குறித்து சொல்லித்தர விழையும் பாடங்களைப் பயில, நம் உள்ளங்களைத் திறப்போம்.

கிறிஸ்துவை அரசராகக் கொண்டாடும்போது, நமக்குள் ஒரு சங்கடம் எழ வாய்ப்புண்டு. அதை முதலில் சிந்திப்போம். ஆயன், மீட்பர், போதகர், செம்மறி, வழி, ஒளி, வாழ்வு என்ற பல கோணங்களில் கிறிஸ்துவை எண்ணிப்பார்க்கும்போது, மனநிறைவு பெறுகிறோம். ஆனால், கிறிஸ்துவை அரசராக எண்ணும்போது, மனதில் சங்கடங்கள் உருவாகின்றன. ஏன் இந்த சங்கடம் என்று சிந்திக்கும்போது, ஓர் உண்மை புலப்படுகிறது. சங்கடம், கிறிஸ்து என்ற வார்த்தையில் அல்ல, ‘அரசர் என்ற வார்த்தையில்தான்.

அரசர் என்றதும், நம் மனத்திரையில் தோன்றும் கற்பனைகள், இந்தச் சங்கடத்தின் முக்கியக் காரணம். அரசர் என்றால்?... ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ பராக்கிரம... என்ற அர்த்தமற்ற பல அடைமொழிகளைச் சுமந்துத் திரியும் உருவம்! பட்டாடையும், வைரமும் உடுத்தி, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும் கொழுத்து, பெருத்த உருவம்! ஆயிரமாயிரம் அப்பாவி மக்களைப் படிக்கற்களாக்கி, அரியணை ஏறும் அரக்க உருவம்!
அரசர் என்றதும், குப்பையாய் வந்துசேரும் இந்தக் கற்பனை உருவங்களுக்கும், இயேசுவுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லையே. பிறகு, எப்படி இயேசுவை அரசர் என்று ஏற்றுக்கொள்வது? சங்கடத்தின் அடிப்படை, இதுதான்.

அரசர் என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், தவறான இந்த இலக்கணத்தை வைத்துப் பார்த்தால், இயேசு கட்டாயம் ஓர் அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில், இயேசுவும் ஓர் அரசர், ஓர் அரசை நிறுவியவர்.
அவர் நிறுவிய அரசுக்கு நிலப்பரப்பு கிடையாது... அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, அதைப் பாதுகாக்கக் கோட்டைகள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை... எதுவுமே தேவையில்லை.

இன்னும் ஆழமான ஓர் உண்மை இதில் என்னவென்றால், எதுவுமே தேவையில்லாமல், இறைவன் ஒருவரே தேவை, அவர் ஒருவரே போதும் என்று சொல்லக்கூடிய மனங்களில் மட்டுமே இந்த அரசு நிறுவப்படும். யார் பெரியவர் என்ற எண்ணமே இல்லாத இந்த அரசில், எல்லாருக்கும் அரியணை உண்டு, எல்லாரும் இங்கு அரசர்கள்! இந்த அரசர்கள் நடுவில், இயேசு, ஓர் உயர்ந்த, நடுநாயகமான அரியணையில் வீற்றிருப்பார் என்று நாம் தேடினால், ஏமாந்துபோவோம். காரணம்?... அவர் நமக்குமுன் மண்டியிட்டு, நம் காலடிகளைக் கழுவிக்கொண்டிருப்பார். மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அவர்களது காலடிகளைக் கழுவும் இயேசு என்ற மன்னரின், வேறுபட்ட அரசத்தன்மையைக் கொண்டாடத்தான், இந்த கிறிஸ்து அரசர் திருநாள்.

ராஜாதி ராஜ என்று நீட்டி முழக்கிக்கொண்டு, தன்னை மட்டும் அரியணை ஏற்றிக் கொள்ளும் அரசர்களும் உண்டு. எல்லாரையும் மன்னர்களாக்கி, அனைவருக்கும் மகுடம் சூட்டி மகிழும் அரசர்களும் உண்டு. இருவகை அரசுகள், இருவகை அரசர்கள். இந்த இரு வேறு அரசுகளின் பிரதிநிதிகளான பிலாத்து, இயேசு ஆகிய இருவரையும் இணைத்து சிந்திக்க, இன்றைய நற்செய்தி வாய்ப்பளிக்கிறது.

நற்செய்தியாளர் யோவான், இயேசுவின் பாடுகளைப்பற்றி பதிவு செய்துள்ள 82 இறைவாக்கியங்களில் (பிரிவு 18,19) பெரும் பகுதி, தலைமைக்குரு, மற்றும், பிலாத்து ஆகியோருக்கு முன் நிகழ்ந்த விசாரணைகளாக அமைந்துள்ளது. இவ்விரு விசாரணைகளிலும், இயேசு, குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தாலும், உண்மையில், தலைமைக்குரு, மதத்தலைவர்கள், பிலாத்து, மற்றும் அங்கிருந்த மக்கள் அனைவரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுகின்றனர்.

கரங்கள் கட்டப்பட்டு, கசையடிப்பட்டு, முள்முடி தாங்கி, சக்தி அனைத்தையும் இழந்த நிலையில், மக்கள் முன் நிறுத்தப்பட்டிருந்த இயேசு, சூழ நின்ற அனைவரையும் விட சுதந்திரமாக, சக்திமிகுந்தவராக விளங்கினார் என்பதை, நற்செய்தியாளர் யோவான், இப்பகுதியில், நமக்கு, மீண்டும், மீண்டும் நினைவுறுத்துகிறார்.
அதற்கு நேர்மாறாக, தன் பதவியைக் காத்துக்கொள்வதற்காக, தவறான தீர்ப்பு சொன்ன பிலாத்தும், பொறாமையாலும், வெறுப்பாலும் சிறைப்பட்டிருந்த மதத்தலைவர்களும், சுதந்திரமாகச் சிந்திக்கும் சக்தியை இழந்து நின்ற மக்கள் அனைவரும், பல்வேறு வழிகளில், தங்கள் சுதந்திரத்தை இழந்து, குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

இன்றைய நற்செய்தியில் சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சியில், யார் உயர்ந்தவர்? தன் மனசாட்சியும், மனைவியும் கூறும் உண்மைகளைக் காணமறுத்து, தன் பதவி பறிபோய்விடுமோ என்ற பயத்தில், அரியணையில், தன்னையே இறுக்கமாக அறைந்துகொண்ட பிலாத்து உயர்ந்தவரா? அல்லது, பதவி என்ன, உயிரே பறிபோனாலும், உண்மையை நிலைநாட்டுவதே முக்கியம் என்று, நிமிர்ந்து நிற்கும் ஏழை இளைஞன் இயேசு உயர்ந்தவரா? யார் உண்மையில் அரசர்?

அரியணையில் நிரந்தரமாய் அமரவேண்டும் என்ற வெறியில், உண்மையை, உன்னத இலட்சியங்களை புறக்கணித்த பிலாத்து, இன்றைய உலகத் தலைவர்கள் பலரை நம் நினைவுக்குக் கொணர்கிறார். இவர்கள் அனைவரும், உண்மைக்கு எதிர்சாட்சிகளாக வாழ்பவர்கள்.
உண்மைக்காக வாழ்ந்தவர்கள், இன்றும் வாழ்பவர்கள், அலங்கார அரியணைகளில் ஏறமுடியாது. அவர்களில் பலர், சிலுவைகளில் மட்டுமே ஏற்றப்படுவார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே, இறைவனின் அரசில் என்றென்றும் அரியணையில் அமர்வர் என்ற உண்மையே, இந்தத் திருநாள் நமக்குச் சொல்லித்தரும் பாடம். உன்னதமான இந்தப் பாடத்தைப் பயில, சிலுவை என்ற அரியணையை நாம் நம்பிக்கையுடன் அணுகிச்செல்வோம்.

இறுதியாக, ஒருசில எண்ணங்கள், வேண்டுதல்கள்... முதல் எண்ணம் - "அரசன் எவ்வழி, குடிமக்கள் அவ்வழி" என்ற பழமொழியை நாம் அறிவோம். ஆனால், மற்றொரு கோணத்தில் சிந்தித்தால், "குடிமக்கள் எவ்வழி, அரசன் அவ்வழி" என்றும் சொல்லத் தோன்றுகிறது. அதாவது, குடிமக்கள் அடிமைகளாக வாழத் தீர்மானித்துவிட்டால், அரசர்கள் கட்டுப்பாடற்ற அதிகாரத்துடன் ஆள்வர் என்பதும் உண்மை.
கிறிஸ்துவை அனைத்துலக அரசர் என்று கொண்டாடும் இந்த விழாவன்று, அடிமைகளாக வாழ்வதில் சுகம் கண்டு, தலைவர்களையும், தலைவிகளையும் துதிபாடி வாழும் மக்கள், தங்கள் தவறுகளிலிருந்து விழித்தெழவேண்டும் என்றும், உண்மையானத் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தலைமைப்பொறுப்புகளை வழங்கி, அவர்களுடன் இணைந்து, நீதி நிறைந்த உலகை உருவாக்க முன்வரவேண்டும் என்றும், அனைத்துலக அரசரான கிறிஸ்துவிடம் வேண்டுவோம்.

இரண்டாவது எண்ணம், கிறிஸ்து அரசர் விழா உருவான வரலாற்றுப் பின்னணி... கத்தோலிக்கத் திருஅவையில், கிறிஸ்துவை அனைத்துலக அரசர் என்று கொண்டாடும் இவ்விழா உருவாக, முதல் உலகப்போர் ஒரு காரணமாக அமைந்தது. இந்த வரலாற்றுப் பின்னணி, இவ்விழாவைக் குறித்தும், உண்மையானத் தலைவர்களுக்குத் தேவையான பண்புகளைக் குறித்தும் சிந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது.
முதல் உலகப்போர் நிகழ்ந்த வேளையில், திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய திருத்தந்தை, 15ம் பெனடிக்ட் அவர்கள், அந்தப் போரை, "பயனற்றப் படுகொலை" (useless massacre) என்றும், "கலாச்சாரம் மிக்க ஐரோப்பாவின் தற்கொலை" (the suicide of civilized Europe) என்றும் குறிப்பிட்டார்.
முதல் உலகப்போர் முடிவுற்று, நான்கு ஆண்டுகள் சென்று, 1922ம் ஆண்டு, திருஅவையின் தலைமைப்பணியை ஏற்ற திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், அரசர்கள், மற்றும், அரசுத்தலைவர்களின் அகந்தையும், பேராசையும் முதல் உலகப்போருக்கு முக்கியக் காரணங்களாய் இருந்தன என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அந்த அரசர்களுக்கும், அரசுத்தலைவர்களுக்கும் மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அனைத்துலக அரசரென அவர் அறிவித்தார். கிறிஸ்துவின் அரசத்தன்மையையும், அவர் நிறுவவந்த அரசின் விழுமியங்களையும் கண்டு, இன்றையத் தலைவர்கள், ஒருசிலப் பாடங்களையாகிலும் கற்றுக்கொள்ள வேண்டுமென செபிப்போம்.

மூன்றாவது எண்ணம்... யோவான் நற்செய்தியில், இயேசுவக்கு, அரசர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு சில நிகழ்வுகள், நமக்குப் பாடங்களாக அமைகின்றன. 5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்த புதுமையின் இறுதியில், அந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், தன்னை 'அரசராக்கப் போகிறார்கள்' என்பதை உணர்ந்த இயேசு, அவ்விடத்திலிருந்து தப்பித்துச்சென்றார் (காண்க. யோவான் 6:15) என்று யோவான் கூறுகிறார்.
புதுமை ஆற்றக்கூடிய தன் சக்தியை தவறாகப் புரிந்துகொண்டு, மக்கள், தன்னை அரசராக்க முயன்றவேளையில், அங்கிருந்து தப்பித்துச்சென்ற இயேசு, தன் சக்தியை எல்லாம் இழந்து, குற்றவாளியென கட்டப்பட்டிருந்த வேளையில், தன்னை ஏளனம் செய்வதற்காக, 'அரசர்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொண்டார் என்பதை யோவான் நற்செய்தியில் காண்கிறோம்.

இயேசுவைச் சந்தித்த பிலாத்து, அவரிடம் விளங்கிய அரசத்தன்மையை உள்ளூர உணர்ந்தாலும், தன் பதவிமீது கொண்ட வெறியால், அவரைச் சாட்டையால் அடிக்கச் செய்தார். (காண்க யோவான் 19:1) இயேசுவை, சாட்டையால் அடித்து, முள்முடியைச் சூட்டிய  வீரர்கள், 'யூதரின் அரசே வாழ்க' (யோவான் 19:3) என்று ஏளனம் செய்தனர். அடிபட்டு, உருவிழந்து நின்ற இயேசுவை, 'இதோ உங்கள் அரசன்!' (யோவான் 19:14) என்று, பிலாத்து, மக்கள்முன் அறிமுகம் செய்துவைத்தார். இயேசு அறையப்பட்ட சிலுவையின் மீது, பிலாத்து எழுதிவைத்த குற்ற அறிக்கையில், 'நாசரேத்து இயேசு, யூதர்களின் அரசன்' (யோவான் 19:19) என்று எழுதப்பட்டிருந்தது.
புகழின் உச்சியில் அரசராக்கப்படுவதை விரும்பாத இயேசு, தன் பாடுகளின்போது அரசராக கருதப்பட்டதை, விரும்பி ஏற்றுக்கொண்டார். இயேசு, தன் பாடுகளின்போது, அரசர் என்ற பட்டத்தை, மீண்டும், மீண்டும் பெறுவது, அவரது உண்மையான அரசத்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இப்படிப்பட்ட அரசரை, நம் உள்ளங்களில் அரியணை ஏற்றவும், அவரது அரசப்பண்புகளை நம் வாழ்வில் வெளிப்படுத்தவும், அனைத்துலக அரசராம் கிறிஸ்து நமக்கு உதவி செய்வாராக.
சிறப்பாக, கிறிஸ்து அரசர் திருநாளன்று, தங்கள் உலக நாளைக் கொண்டாடும் இளையோர், உண்மையான தலைமைத்துவத்தின் பாடங்களை பயின்று, எதிர்காலத்தில் உன்னத தலைவர்களாக, இவ்வுலகை கட்டியெழுப்பவேண்டும் என்று மன்றாடுவோம்.