29 June, 2019

Leadership and Discipleship of Love அன்பின் தலைமைத்துவமும், சீடத்துவமும்


The Son of Man has no place to lie down

13th Sunday in Ordinary Time

Of all the places in the world, it was “in Antioch the disciples were for the first time called Christians.” (Acts 11:26). The people of Antioch found something special in the disciples to give them this wonderful title that has become a sublime identity for the past 20 centuries. The Bishop of Antioch, St Ignatius, must have been a great example of this Christian identity. St Ignatius was condemned to death by Emperor Trajan and was taken to Rome for his martyrdom. On his way to Rome, St Ignatius wrote seven wonderful letters to various Christian communities. In the letter addressed to the Christian community in Rome, Ignatius refers to them as the church ‘which presides in charity’.

At the time of St Ignatius of Antioch, Rome was identified more as the centre of politics, commerce and culture. But, St Ignatius wished that the Church in Rome was identified more as a ‘church presiding in charity’. Jesus would not have asked for more! This was precisely what Jesus wanted from his disciples: “By this all men will know that you are my disciples, if you have love for one another.” (John 13:35)

This criterion of love as THE Christian identity was preserved and passed on from generation to generation for the past 20 centuries. On June 29, Saturday, we celebrated the Feast of Sts Peter and Paul, the two pillars of the Christian community, who took enormous effort to cultivate the civilization of love among Christians. Their leadership was steeped in love. Following the feast of these two leaders, comes this Sunday with the theme of leadership and discipleship.
In his letter to Galatians, (given as the II Reading for this Sunday - Galatians 5:1,13-18), St Paul makes a passionate appeal to the churches in Galatia: Through love be servants of one another. For the whole law is fulfilled in one word, ‘You shall love your neighbour as yourself.’ But if you bite and devour one another take heed that you are not consumed by one another. (Gal. 5:13-15)

The Christians being bitten and devoured by the hungry beasts in Roman Colosseum was the imagery very familiar to Paul and his contemporaries. Paul uses this imagery to warn his community. ‘Biting and devouring’ has, unfortunately, become an accepted norm of behaviour in almost all the fields today - be it politics, trade, media, education or healthcare! Unfortunately, biting, especially back-biting has seeped into even the holy realms of religion. In such a situation, it would be helpful if each of us can take an examen of consciousness into how much we indulge in this ‘biting and devouring’!

The Gospel today (Luke 9: 51-62) talks about Jesus, the unique Leader and his followers. In this passage four incidents are mentioned. All the four can teach us lessons for life.

The first one is about the disciples – James and John. Jesus, on his way to Jerusalem, was not received well in a town. James and John were seething with rage. They wished to bring down fire from heaven to destroy the town. For James and John, the ‘sons of thunder’, hurling thunder and lightning, fire and brimstone from heaven, must have been child’s play! Moreover, they were the ones who wanted to be seated at the right and left of the Lord. (Mt. 20:20-21)
I am just wondering what our political leaders would have done in a situation like this. Here are two very energetic, enthusiastic followers who are willing to go the full distance – destroying a town for the ‘crime’ of not giving due respect to their leader. Our leaders would have been thrilled to have such sycophants and, in all probability, they would be given some important portfolios in the ministerial cabinet. Thank God, Jesus is not like them. He turned to his disciples and rebuked them. He was probably very angry with them, since they wanted to use heavenly powers for destruction.

How easy it is to use power for destruction! It is painful that our political leaders seem to judge loyalty in terms of how much destruction can be wrought by the followers. They don’t stop there… When natural calamities occur, they capitalise on the destruction wrought by nature in order to gain political mileage. Be it floods, or drought, or lack of drinking water, our political leaders have mastered the art of playing politics and gaining political mileage from every tragedy. They do this with absolutely no shame or qualm of conscience.

The second incident is about a person who approached Jesus and said: “I will follow you wherever you go.” (Lk 9:57). Jesus must have turned around and looked at this person with deep love and concern. The word ‘wherever’ used by this person must have grabbed the attention of Jesus. Where was Jesus going? To Jerusalem. As the opening lines of today’s Gospel says, he set his face to go to Jerusalem (Lk. 9:51), knowing what was awaiting him there. He was going for a head-on collision with the political and religious authorities. At that moment, should he encourage another disciple to follow him? That was the concern of Jesus.
Inadvertently, our mind goes to the present day political leaders who would be more concerned in taking along more followers, especially during a clash. In the ego clashes that occur between big leaders, the followers get hurt and killed. Rarely do leaders get hurt or killed! As citizens of the world, we feel ashamed of having such pathetic specimens of leadership. We are more ashamed of the followers who have such blind loyalty to these leaders.
Jesus tries to tell this person what would be awaiting him if he were to follow him ‘wherever he goes’. There is really nowhere… “Foxes have holes, and birds of the air have nests, but the Son of Man has nowhere to lay his head.” (Luke 9:58) This statement from Jesus is more of an invitation to share his vagabond life. How many of us really believe that all human beings are only PILGRIMS on earth?

The third and fourth incidents are similar. Two persons want to fulfil their family duties BEFORE following Jesus. At first glance, the response of Jesus seems rather rude. “Don’t bother about burying your parents or saying goodbye to the family members… Just plunge into action. Follow me HERE and NOW. No delays.” The reference of Jesus to the man with a plough, turns our attention to the first reading today. The incident narrated in this passage is quite dramatic:
I Kings 19: 19-21
So Eli′jah departed from there, and found Eli′sha the son of Shaphat, who was plowing… Eli′jah passed by him and cast his mantle upon him. And he left the oxen, and ran after Eli′jah, and said, “Let me kiss my father and my mother, and then I will follow you.” And he said to him, “Go back again; for what have I done to you?” And he returned from following him, and took the yoke of oxen, and slew them, and boiled their flesh with the yokes of the oxen, and gave it to the people, and they ate. Then he arose and went after Eli′jah, and ministered to him.

From this passage it is not clear whether he was allowed to say goodbye to his parents. But, it is quite clear that he said a definitive goodbye to his earlier life. He slaughtered his oxen, burnt his ploughing equipment. The courage and commitment of Eli′sha must have inspired Jesus to challenge one of followers with the words: “No one who puts his hand to the plow and looks back is fit for the kingdom of God.” (Lk. 9:62)

Following Jesus, the real leader, requires a HERE-and-NOW decision. If not, we may be submerged in the flood of cares and concerns of this world. We may also begin to drift along with the flood, namely, going with the crowd! Pope Francis, in one of his Angelus messages made this appeal specially to the youth present in St Peter’s Basilica:
Dear brothers and sisters, remember this well: Do not be afraid to go against the current! Be courageous! And like this, just as we do not want to eat food that has gone bad, we will not carry with us rotten values, that ruin life and take away our hope. Forward!

We  pray that all of us are able to identify the stale food of rotten values served by false leaders and follow our unique Master HERE and NOW! “If today you hear his voice, harden not your hearts…” (Ps.95: 7-8)

Who Puts His Hand to the Plow?

பொதுக்காலம் - 13ம் ஞாயிறு

இயேசுவின் சீடர்களுக்கு, 'கிறிஸ்தவர்கள்' என்ற பெயரை முதன்முதலில் வழங்கியப் பெருமை, அந்தியோக்கியா நகரைச் சேரும் (திருத்தூதர் பணிகள் 11:26). அந்நகரின் ஆயராகப் பணியாற்றிய புனித இக்னேசியஸ் (St Ignatius of Antioch), உரோமைய அரசன் டிராஜனால் (Trajan) கைது செய்யப்பட்டு, உரோம் நகரில் தன் மறைசாட்சிய மரணத்தைச் சந்திக்கச் சென்றார். அவர் சென்ற வழியில், வெவ்வேறு இடங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு அற்புதமான மடல்களை எழுதி அனுப்பினார். இறுதியாக, உரோம் நகரில் இருந்த கிறிஸ்தவக் குழுமத்திற்கு, புனித இக்னேசியஸ் எழுதிய மடலில், "உரோமையத் திருஅவை, பிறரன்பால் தலைமை வகிக்கிறது" என்று கூறினார்.
அன்றைய காலக்கட்டத்தில், உரோம் நகரம், அரசியல், வணிகம், கலாச்சாரம், கலை என்ற பல்வேறு துறைகளுக்கு தலைமைத்துவம் பெற்ற நகரம் என்று கருதப்பட்டது. அந்நகரில் வாழ்ந்த கிறிஸ்தவக் குழுமம், இத்தகையத் துறைகளில் தலைமைத்துவம் பெறுவதைத் துறந்து, பிறரன்பில் தலைமைத்துவம் பெறவேண்டும் என்பதை, புனித இக்னேசியஸ் தன் மடல் வழியே வலியுறுத்தினார். அரசியல், வணிகம், கலாச்சாரம் என்ற பல துறைகளில் தன் தலைமைத்துவத்தை நிலைநாட்டிய உரோமையப் பேரரசு வீழ்ந்துவிட்டது. ஆனால், அன்பை, தலைமைத்துவமாகக் கொண்டாடிய கிறிஸ்தவம், இன்றளவும் வாழ்ந்து வருகிறது.

"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" (யோவான் 13:35) என்று, இறுதி இரவுணவில் இயேசு கூறிய பிரியாவிடைச் சொற்களைப் பின்பற்றி வாழ்ந்த சீடர்கள், அன்பு மட்டுமே கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்தவேண்டும்; அன்பு மட்டுமே, கிறிஸ்தவக் குழுமங்களில் தலைமைத் தாங்கவேண்டும் என்ற பாரம்பரியத்தை, கிறிஸ்தவ வரலாற்றில் நிலைநாட்டினர். இந்த அன்பு பாரம்பரியத்தைக் கட்டிக்காத்த புனித பேதுரு, புனித பவுல் என்ற இரு பெரும் திருத்தூதர்களின் பெருவிழாவை, ஜூன் 29, இச்சனிக்கிழமை சிறப்பித்தோம்.
இப்பெருவிழாவைத் தொடர்ந்து வரும் இஞ்ஞாயிறன்று, வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், தலைமைத்துவம், தலைவர், தொண்டர், தலைவரைப் பின்பற்றுதல் என்ற கருத்துக்களைச் சிந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கின்றன. கிறிஸ்துவின் தொண்டர்களிடையே அன்புக்கு முதலிடம் வழங்கப்படவேண்டும் என்பதை, புனித பவுல் இன்றைய 2ம் வாசகத்தில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்:
கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5: 13-15
சகோதரர், சகோதரிகளே, ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால், ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!

கொலோசெயம் போன்ற உரோமைய அரங்குகளில், கிறிஸ்தவர்களை, விலங்குகள் கடித்து விழுங்குவதை, தன் கண்களால் கண்ட புனித பவுல், அதே உருவகத்தை பயன்படுத்தி, கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது. "ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குதல்" என்று புனித பவுல் பயன்படுத்தியுள்ள உருவகம், இன்றைய அரசியல், வணிகம், ஊடகம், கல்வி, மருத்துவம்... என்ற பல்வேறு துறைகளில், சர்வ சாதாரணமாகப் பின்பற்றப்படும் வெறியாக மாறியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், சிலவேளைகளில், மதம் சார்ந்த துறைகளிலும், பிறரைக் கடித்து விழுங்கும் போக்கு பரவி வருவது வேதனை தரும் உண்மை. இத்தகைய வெறி, நம் வாழ்வை, எவ்வகையில், ஆட்டிப்படைக்கிறது என்பதை, ஓர் ஆன்மீக ஆய்வாக மேற்கொள்வது, நமக்கு உதவியாக இருக்கும்.

இன்றைய நற்செய்தி, இயேசு என்ற தலைவனின் உன்னதப் பண்புகளை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுறுத்துகிறது. அத்துடன், அவரைத் தொடரும் சீடர்களும், தொடர விழையும் ஏனைய இளையோரும் கொண்டிருக்க வேண்டிய பண்புகளைக் குறித்து சவால்களையும் நம்முன் வைக்கின்றது. லூக்கா நற்செய்தி 9ம் பிரிவில் நாம் வாசிக்கும் இப்பகுதியில், நான்கு நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்விலும் நமக்குத் தேவையான பல பாடங்கள் உள்ளன.

முதல் நிகழ்வு, இயேசுவின் சீடர்களைப் பற்றியது. இயேசு எருசலேமுக்குச் செல்லும் வழியில், ஓர் ஊரில் அவருக்குச் சரியான வரவேற்பு இல்லை. உடனே, அவரது சீடர்கள் யாக்கோபு, யோவான் இருவரும் ஆவேசத்தோடு இயேசுவிடம் வந்து, ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். (லூக்கா 9:54) யாக்கோபு, யோவான் இருவரும் 'இடியின் மக்கள்' என்ற பெயர் தாங்கியவர்கள் அல்லவா? எனவேதான் இந்த ஆவேசம். இவ்விருவரும் இயேசுவின் வலப்பக்கமும், இடப்பக்கமும் அமர விரும்பியவர்கள் என்பதும், நம் நினைவுக்கு வருகிறது. (மத்தேயு 20:20-21)
நம்ம ஊர் அரசியல் தலைவர் என்றால், தலைவனுக்காக ஊரையேக் கொளுத்தத் துடிக்கும் தொண்டர்களின் ஆவேசத்தைக் கண்டு, உள்ளம் குளிர்ந்து, அவர்கள் விரும்பிய பதவிகளை ஒதுக்கிக் கொடுத்திருப்பார். இயேசு, நம்ம ஊர் அரசியல் தலைவர் இல்லையே... அவர், உலகத் தலைவர்கள் அனைவரையும் விட, மிகவும் வேறுபட்டவர் ஆயிற்றே! எனவே, ஆவேசப்பட்ட சீடர்களுக்கு, அவர், வேறுபட்ட பதிலைத் தந்தார்.

இயேசு அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார் (லூக்கா 9:55) என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். அவர் அவ்வாறு கடிந்துகொண்டதற்குக் காரணம் இருந்தது. அந்த ஊரை அழிப்பதற்கு, வானத்திலிருந்து சக்தியைக் கொண்டு வர நினைத்தனர், அச்சீடர்கள். கடவுளின் சக்திகளை, தவறான நோக்கங்களுக்கு, அதுவும், அழிவு நோக்கங்களுக்குப் பயன்படுத்த எண்ணிய அச்சீடர்களின் சுயநலத்தை இயேசு  கடிந்துகொண்டார்.
தொண்டர்களின் ஆர்வம், ஆவேசம், தங்களிடம் உள்ள அதிகாரம் ஆகியவற்றை, அழிவுக்குப் பயன்படுத்தும் தலைவர்களை எண்ணி நாம் வெட்கப்படுகிறோம். தன்னலமிக்க இத்தலைவர்களுக்காக, தங்கள் உயிரையும், பிற உயிர்களையும் பலியாக்கும் தொண்டர்களையும் எண்ணி, வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம்.

தாங்கள் அழிவை உருவாக்குவது போதாதென்று, பிற வழிகளில் மக்கள் சந்திக்கும் ஆபத்தையும், அழிவையும் தங்களுக்கு ஆதாயமாக மாற்றிக்கொள்ளும் தலைவர்களையும் நாம் காண்கிறோம். இயற்கைப் பேரிடர்களான வெள்ளமாக இருந்தாலும், வறட்சியாக இருந்தாலும், தண்ணீரின்றி மக்கள் தவித்தாலும், அவற்றை மூலதனமாக்கி, அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளும் வியாபாரங்கள், நம் மனங்களை இரணமாக்குகின்றன. இயற்கை பேரிடர் உட்பட, அனைத்தையும் தங்களுக்கு ஆதாயமாக மாற்ற விரும்பும் இந்த அரசியல் தலைவர்களின் உள்ளங்களில், அடிப்படை மனித உணர்வுகளை, இறைவன் விதைக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் இரண்டாவது நிகழ்வு, இயேசுவைத் தொடர விழையும் ஓர் இளைஞனைப் பற்றியது. "நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்" (லூக்கா 9:57) என்று சொல்லும் அவ்விளைஞனை இயேசு ஆதங்கத்துடன் பார்க்கிறார். "எங்கே சென்றாலும்..." என்று அந்த இளைஞன்  சொன்னதுதான், அந்த ஆதங்கத்திற்குக் காரணம்... தான் எங்கே போகிறோம் என்பது இயேசுவுக்குத் தெளிவாக இருந்தது. அவர் எருசலேம் நோக்கிச் செல்ல தீர்மானித்துவிட்டார் என்று இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளில் வாசிக்கிறோம். எருசலேம் நோக்கிச் செல்வது, அங்கிருந்த அதிகாரங்களுடன் மோதுவதற்கு. இந்த மோதலில் தனக்கு என்ன நிகழும் என்பதையும், இயேசு உணர்ந்திருந்தார். இந்நேரத்தில், இந்த மோதலில், ஒரு தொண்டரையும் ஈடுபடுத்த வேண்டுமா என்பதுதான் இயேசுவின் ஆதங்கம்.
மீண்டும், இன்றையத் தலைவர்கள், நம் நினைவுக்கு வருகின்றனர். போராட்டங்களை முன்னின்று நடத்தி, அடிபட்ட தலைவர்கள், ஆயிரத்தில் ஒருவராக, இல்லை, இல்லை... இலட்சத்தில் ஒருவராகத்தான் இருப்பர். பொதுவாக, போராட்டம், எதிர்ப்பு, மோதல் என்று வந்தால், தொண்டர்களை அந்த மோதலில் ஈடுபடுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்வது, நம் தலைவர்களின் இலக்கணம். இயேசு, இத்தகையத் தலைவர் அல்ல.

தன் போராட்டத்தைப்பற்றி மறைமுகமாகச் சொல்லி, அதில் பங்குபெற இயேசு அந்த இளைஞனுக்கு விடுக்கும் அழைப்பு அழகானது: இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை என்றார். (லூக்கா 9: 58) பறவைகளும், மிருகங்களும் பாதுகாப்பற்றச் சூழலில் ஒவ்வொரு மணித்துளியும் வாழ்கின்றன. எந்த நேரத்தில் அவற்றின் உயிர் வேட்டையாடப்படும் என்பது தெரியாமல், நாள் முழுவதும் பாதுகாப்பற்று வாழும் இவ்வுயிர்கள், மாலையில் திரும்பிச் செல்லும்போது, கூடுகளும், பதுங்குக் குழிகளும் ஓரளவு பாதுகாப்பு தருகின்றன. தனக்கு அந்தப் பாதுகாப்பு கூட இல்லை என்பதை இயேசு அந்த இளைஞனுக்குத் தெளிவாக்குகிறார். இன்றைய அரசுத் தலைவர்களோடு ஒப்பிட்டால், இயேசுவை, பிழைக்கத் தெரியாதத் தலைவர் என்று முத்திரை குத்தலாம்.

பிழைக்கத் தெரியாதத் தலைவர் என்று எண்ணிப்பார்க்கும்போது, இந்தியாவில் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக பணியாற்றிய ஓர் உன்னத மனிதர் நினைவுக்கு வருகிறார். 1998ம் ஆண்டு முதல், 2018ம் ஆண்டு முடிய திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாளர் மானிக் ஷொர்கார் (Manik Sarkar) அவர்களைப் பற்றிய விவரங்கள், நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. சொந்த வீடு எதுவுமில்லாதவர் இவர். வங்கிக் கணக்கில் இவரிடம் உள்ள தொகை, ரூபாய் 10,000க்கும் குறைவு. ஆம்... நான் எந்த பூஜ்யத்தையும் தவற விடவில்லை... அது பத்தாயிரம்தான். கோடியில் ஒருவராய் இருக்கும் இவரைப் போன்ற தலைவர்களுக்கு நேர்மாறாக, கோடி, கோடியாய் சொத்தை குவித்திருக்கும் தலைவர்களை நமக்குத் தெரியும்.

திருவாளர் மானிக் ஷொர்கார் அவர்கள் பணியாற்றிய அதே இந்தியாவில், மக்களுக்குப் பணியாற்றுவதாகக் கூறும் பல்வேறு தலைவர்கள் உடுத்தும் உடை, பல இலட்சம் ரூபாய் என்றும், இவர்கள் ஒரு நாளில் செலவழிக்கும் தொகை, பல கோடி ரூபாய் என்றும் அறியும்போது, நம் உள்ளங்கள் இரத்தக்கண்ணீர் வடிக்கின்றன. உணவு, உடை, உறைவிடம் என்று பல வழிகளிலும் பாதுகாப்பை இழந்து தவிக்கும் கோடான கோடி வறியோர் வாழும் இந்தியாவில், நம் தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, ஒவ்வொரு நாளும், பல்லாயிரம் கோடி ரூபாய். இத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், இத்தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் உண்மையான பாதுகாப்பு உணர்வுடன் ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்கின்றனரா என்று கேள்வி எழுகின்றது!

இன்றைய நற்செய்தியில் நாம் காணும், மூன்றாவது, நான்காவது நிகழ்வுகளில், இரு இளையோர், தங்கள் குடும்பம் சார்ந்த கடமைகளை, முடித்துவிட்டு, இயேசுவைப் பின்தொடர விழைகின்றனர். இயேசு அவர்களிடம் கூறும் பதில்களை, மேலோட்டமாகப் பார்க்கும்போது, கடுமையான வார்த்தைகளாக ஒலிக்கின்றன. தன் பெற்றோரை அடக்கம் செய்துவிட்டு வர விழையும் இளைஞனிடம் "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம்" என்கிறார் இயேசு. வீட்டாரிடம் விடைபெற்று வர விழைந்த மற்றோருவரிடம், "வேண்டாம். இப்போதே புறப்படு. பின்னால் திரும்பிப் பார்க்காதே" என்று சொல்கிறார்.

திரும்பிப் பார்க்காமல், தனக்கு வந்த அழைப்பை ஏற்ற ஓர் இளைஞனைப்பற்றி நமக்கு வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தில், ஒரு நிகழ்வு கூறப்பட்டுள்ளது. எலிசா என்ற இளைஞன், தன் வயலில் ஏர் பூட்டி உழுது கொண்டிருந்த வேளையில், இறைவாக்கினர் எலியா அங்கு வந்து, அவரை, இறைவாக்கு உரைப்பவராகத் தேர்ந்துகொண்டார். அதைத் தொடர்ந்து, எலிசா செய்த செயல், அவரது முழு அர்ப்பணத்தைக் காட்டுகிறது.
அரசர்கள் முதல் நூல் 19: 21
எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

எலிசாவின் இந்தச் செயலை மனதில் வைத்து, இயேசு, கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல (லூக்கா 9:62) என்ற சவாலை தன் சீடர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். இயேசுவைப் பின்பற்றுவது, அவரைப்போல வாழ முற்படுவது மிக, மிக உயர்ந்ததோர் எண்ணம். அந்த எண்ணம் மனதில் தோன்றினால், தாமதிக்க வேண்டாம். நல்லது ஒன்று செய்ய வேண்டும் என்று மனதில் பட்டால், அதை உடனடியாகச் செய்து விடுவது மிகவும் நல்லது. மாறாக, அதை ஆறப்போட்டால்... ஆற்றோடு போய்விடும். அதாவது, நமது ஏனைய எண்ணங்கள், கவலைகள், கணக்குகள், வாழ்வின் நிர்ப்பந்தங்கள் என்ற அந்த வெள்ளம், இந்த நல்லெண்ணத்தை அடித்துச் செல்ல வாய்ப்புண்டு.

நம் வாழ்வைச் சூழும் வெள்ளத்தில் நமது நல்லெண்ணங்கள் அடித்துச் செல்லாமல் இருக்க, அவ்வப்போது, எதிர் நீச்சலும் போடவேண்டியிருக்கும். கல்வியாண்டைத் துவங்கியுள்ள இளையோரே, உங்கள் கல்வி, பொழுதுபோக்கு, வாழ்க்கைமுறை என்ற பல தளங்களிலும் உங்களுக்குள் உருவாகும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயலாற்றுங்கள். நல்லது செய்யும் வேளையில், நீங்கள் சந்திக்கும் ஏளனங்கள், மற்றும் எதிர்ப்பு அலைகளில், எதிர் நீச்சல் போட துணிவு கொள்ளுங்கள்.
ஒருமுறை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய நண்பகல் மூவேளை செபத்தின் இறுதியில், பல்லாயிரம் இளையோரிடம் சிறப்பான ஓர் அழைப்பை விடுத்தார். திருத்தந்தை இளையோருக்கு வழங்கிய இந்த அழைப்புடன், இன்றைய ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்வோம்:
"நான் சொல்வதை நன்கு நினைவில் கொள்ளுங்கள். வெள்ளமெனச் செல்லும் உலக போக்கிற்கு எதிராக, எதிர் நீச்சல் போட தயங்கவேண்டாம். துணிவு கொள்ளுங்கள்... கெட்டுப்போன உணவை நாம் உண்பது கிடையாது. அதேபோல், கெட்டுப்போன விழுமியங்களை மனதில் சுமந்து வாழவேண்டாம். முன்னேறுங்கள்!"
தவறான கருத்தியல்கள் என்ற கெட்டுப்போன உணவைப் பரிமாறும் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களை விட்டு விலகவும், உண்மையான, உன்னதத் தலைவர்களைப் பின்பற்றவும், இறைவன் நமக்குத் தெளிவைத் தருவாராக! அன்பை தலைமைத்துவமாகக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகளாக வாழ்வோமாக!

ஒன்றே செய்யினும், நன்றே செய்க; நன்றே செய்யினும், இன்றே செய்க.


26 June, 2019

விவிலியத்தேடல்: ஒத்தமை நற்செய்தி – கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 2


Biodiversity and Loss

பூமியில் புதுமை – இயற்கையை அழிக்கும் உரிமை கிடையாது

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய, 'இறைவா உமக்கே புகழ்' (Laudato Si' - On Care for Our Common Home) என்ற திருமடலின் முதல் பிரிவில், நம் பொதுவான இல்லத்திற்கு நிகழ்வதென்ன (What is Happening to our Common Home) என்ற கேள்வியை எழுப்பி, ஒரு சில விளக்கங்களை வழங்கியுள்ளார். இப்பிரிவின் மூன்றாம் பகுதியில், உயிர் பன்முகத்தன்மையின் இழப்பு (Loss of Biodiversity) என்ற தலைப்பில் திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்களில் ஒரு சில பகுதிகள்:
பொருளாதாரம், வணிகம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றின் குறுகிய கண்ணோட்ட அணுகுமுறைகளால், பூமியின் ஆதார வளங்கள் சூறையாடப்படுகின்றன. காடுகள், மற்றும் மரங்கள் அடர்ந்த பகுதிகளின் அழிவு, உணவாக மட்டுமல்ல, நோய்களுக்கு மருந்தாகவும் விளங்கும் பல்வேறு உயிரினங்களின் இழப்பை உருவாக்குகிறது.
பாலூட்டிகள், அல்லது, பறவைகளின் அழிவை நாம் கண்கூடாகக் காண்பதால், அது நம்மைக் கலக்கமுறச் செய்யலாம். ஆனால், இயற்கைக் சூழலுக்கு நன்மைகளைக் கொணர்வதற்கும், இயற்கையின் சமநிலைத் தன்மைக்கும் அவசியமான காளான்கள், கடல் பாசிகள், புழுக்கள், பூச்சிகள், எண்ணிலடங்கா நுண்ணுயிர்கள் அழிவதை நாம் காண்பதில்லை.
ஒவ்வோர் ஆண்டும், ஆயிரக்கணக்கான தாவரங்களும், விலங்குகளும் காணாமல் போகின்றன. இவற்றின் அழிவை நாம் உணர்வதில்லை, நம் குழந்தைகள் இந்த உயிரினங்களைக் காணப்போவதில்லை. உயிரினங்களின் அழிவு, மனிதர்களின் செயல்பாடுகளுடன் பெருமளவு தொடர்புடையது. ஆயிரமாயிரம் உயிரினங்கள், தங்கள் வாழ்வால், இறைவனுக்குப் புகழ் வழங்காமல் போவதற்கு, நாமே காரணம். நமக்கு அந்த உரிமை கிடையாது. (எண் – 32,33,34)

They Are Living in a Graveyard
Manila South Cemetery

ஒத்தமை நற்செய்தி கல்லறை மனிதரைக் காத்த இறைவன் - 2

இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த வேளையில், ஹிட்லர், பிரான்ஸ் நாட்டை வென்றதும், நாட்டைவிட்டு யாரும் வெளியேறாதவண்ணம், நாட்டின் எல்லைகளை,  இராணுவத்தைக் கொண்டு கண்காணித்தார். ஆனால், எல்லைப்பகுதியில் இருந்த ஒரு சிறு கிராமத்தில், மக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வந்தது. ஜெர்மன் வீரர்கள் காரணம் புரியாமல் குழம்பினர். பிரான்சின் எல்லையில் இருந்த அந்த கிராமத்திற்கும், ஜெர்மன் ஆதிக்கத்தில் இல்லாத அடுத்த நாட்டுக்கும் இடையே, ஒரு கல்லறை இருந்தது. ஜெர்மன் ஆக்ரமிப்பைத் தொடர்ந்து, அக்கிராமத்தில் அடிக்கடி இறுதி ஊர்வலங்கள் நடைபெற்றன. அந்த இறுதி ஊர்வலங்களில், சவப்பெட்டிகளில் சுமந்து செல்லப்பட்டவர்களும், ஊர்வலங்களில் கலந்துகொண்டவர்களும், கல்லறை சுவரில் இருந்த கதவைத் திறந்து, அடுத்த நாட்டிற்குள் நுழைந்தனர். கிராமத்திலிருந்து கல்லறைக்குச் சென்ற யாரும் மீண்டும் ஊருக்குத் திரும்பவில்லை.

வழக்கமாக, கல்லறைக்கு சுமந்து செல்லும் மனிதரை மட்டும் அங்கு அடக்கம் செய்துவிட்டு, மற்றவர்கள் வீட்டுக்குத் திரும்புவர். ஆனால், இக்கிராமத்திலோ, கல்லறைக்குச் சென்ற யாருமே வீடு திரும்பவில்லை. அவர்கள் அனைவரும், கல்லறையிலேயே குடியேறிவிட்டனரோ என்ற எண்ணத்தை ஜெர்மானியப் படைவீரர்களிடம் உருவாக்கிவிட்டு, அவர்கள் மறைந்தனர்.
கல்லறையிலும் ஒருவரால் குடியேற முடியுமா என்று சிந்திக்கத் தூண்டும் இந்நிகழ்வு, நம்மை இயேசுவின் புதுமைகளுக்கு அழைத்துச் செல்கிறது. கெரசேனர் பகுதியில், தீய ஆவிகளால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவர் கல்லறையில் குடியிருந்ததாக, நற்செய்தியாளர் மாற்கு அறிமுகம் செய்கிறார்:
மாற்கு நற்செய்தி 5:1-3அ
அவர்கள் கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே, தீய ஆவி பிடித்த ஒருவர், கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம்.

கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம் என்ற சொற்கள், நமக்குள் பல சங்கடமான உணர்வுகளை உருவாக்குகின்றன. பொதுவாக, கல்லறைகளில் யாரும் குடியிருப்பதில்லை. ஆனால், நாம் வாழும் இன்றைய உலகில், போர், வறுமை போன்ற கொடுமைகளால், கல்லறையில் குடியிருப்பது மேல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோரைப்பற்றி அவ்வப்போது செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

மூன்று ஆண்டுகளுக்கு முன், பி.பி.சி. ஊடகத்தில் வெளியான ஒரு காணொளிச் செய்தி, நம் தேடல்முயற்சிகளுக்கு உதவியாக உள்ளது. "கல்லறைத் தோட்டத்தில் வாழும் அலெப்போ குடும்பம்" (The Aleppo Family living in the cemetery) என்ற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது.
தீய ஆவிகளால் வதைக்கப்பட்டதால், கல்லறைகளை தன் உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்த ஒருவரை, இயேசு குணப்படுத்தி, மீண்டும் மனித சமுதாயத்தில் இணைத்தார் என்பதை இப்புதுமையில் காண்கிறோம். ஆனால், சிரியாவில் நிகழ்வதோ, தலைகீழான கொடுமையாக உள்ளது. மனித சமுதாயத்தில் வாழ்வோரை, போர் வெறி என்ற தீய ஆவி, கல்லறைகளில் வாழும்படி துரத்தியுள்ளதை, இக்காணொளிச் செய்தியில் காண்கிறோம்.

40 வயதுள்ள ஒரு குடும்பத் தலைவியும், அவரது 10 வயது மகனும் கல்லறையில் அமர்ந்திருப்பதை இக்காணொளி நமக்குக் காட்டுகிறது. ஆயிஷா அலி என்ற அக்குடும்பத்தலைவி, கல்லறைமேல் அமர்ந்தபடி, தங்கள் நிலையை இவ்விதம் கூறியுள்ளார்:
"வேறு எந்த இடத்தையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. குளிர்காலம் நெருங்கிவருவதால், வேறு எங்கு செல்வதென்று தெரியாமல், இங்கு வந்துள்ளோம். பார்க்கப்போனால், இதை ஓர் ஆசீர்வாதம் என்றே கருதுகிறோம். இந்த இடத்தை யாரும் தங்கள் சொந்தமென்று உரிமை கொண்டாடப் போவதில்லை" என்று ஆயிஷா அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது மகனை, ‘வீடியோ காமரா’, நெருக்கமாகக் காட்டுகிறது. அகமது முகம்மது என்ற அந்த 10 வயது சிறுவன், மாற்றுக்கண் பார்வை கொண்டவர் என்பதைக் காண்கிறோம். தன் மகனைப்பற்றி ஆயிஷா அவர்கள் இவ்வாறு கூறுகிறார்:
"எங்கள் வீட்டில் குண்டு விழுந்து, வெடித்தபோது, அகமதுவின் தலையில் பலமாக அடிபட்டது. மூளையில் இரத்தம் உறைந்து, மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதால், மற்றவர்கள் சொல்வதை அவனால் சரிவர புரிந்துகொள்ள முடியாது. தலையில் அடிபட்டதால், அவனுக்கு மாற்றுக்கண் பார்வையும் வந்துவிட்டது" என்று ஆயிஷா அவர்கள் தன் மகனின் நிலைக்கு காரணங்களை விளக்குகிறார்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சிரியாவில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி, பல்வேறு உலக அமைப்புக்கள் அங்குள்ள மக்களுக்கு உதவிகளை கொண்டு சென்றன என்பதை செய்திகளில் வாசித்தோம். இது குறித்து ஆயிஷா அவர்கள் பேசும்போது, "இப்போது சிரியாவில் மக்களுக்கு உதவிகள் வருகின்றன என்று சொல்கிறார்கள். ஆனால், கல்லறையில் இருக்கும் எங்களைத் தேடி யாரும் வருவார்களா என்று தெரியவில்லை" என்று சொல்கிறார்.
அந்தத் தாய் கூறிய சொற்கள், நம் உள்ளங்களை இரணமாக்குகின்றன. ஆனால், இவற்றைச் சொல்லும்போது, அந்தத் தாயின் கண்களில் கண்ணீரோ, அவரது குரலில் அழுகையின் தொனியோ இல்லாதது, நம்மை இன்னும் வேதனைபடுத்தி, ஓர் ஆழமான உண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, கடந்த 8 ஆண்டுகளாய் அந்நாட்டில் நிகழ்ந்துவரும் உள்நாட்டுப் போரின் அழிவுகளை ஒவ்வொரு நாளும் கண்டவர்கள், இப்போது, அழிவையும், மரணத்தையும் கண்டு, கண்ணீர் வடிப்பதை நிறுத்திவிட்டனர் என்பதே, அந்த வேதனையான உண்மை.

அந்த அன்னை பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு சில காட்சிகள் திரையில் தோன்றுகின்றன. அவர், தனக்கும் தன் மகனுக்கும் ரொட்டி தயாரிப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, தலையில் நீர் சுமந்து வருவது போன்ற இக்காட்சிகளுடன், அவரது மகன் ஒரு கல்லறை மீது அமர்ந்து, பூனைக்குட்டியுடன் விளையாடுவதையும் நாம் காண்கிறோம். கல்லறை, அவர்கள் இருவருக்கும், மிகச் சாதாரணமான உறைவிடமாக மாறிவிட்டது என்பதை, இக்காட்சிகள் சொல்லாமல் சொல்கின்றன.

சிரியாவின்  பல நகரங்கள் இன்று பெயரளவில் மட்டும் நகரங்களாக உள்ளனவே தவிர, அவை அனைத்தும் உண்மையில் 'நரகங்களாக' மாறிவிட்டன. இந்நகரங்களில் மிக அதிக அளவு அழிவைச் சந்தித்துள்ள நகரம், அலெப்போ. நரகமாக மாறிவிட்ட அலெப்போவில், வாழமுடியாத எளிய குடும்பங்களில் ஒன்று, இப்போது கல்லறையில் தஞ்சம் புகுந்துள்ளது. சிரியாவின் உள்நாட்டுப் போர், அந்நாட்டின் பாதிப் பகுதியை சிதைத்து, தரைமட்டமாக்கிவிட்டதால், அந்நாடு முழுவதும், பரந்து விரிந்த ஒரு கல்லறையாக மாறிவிட்டது என்று சொன்னாலும் பொருந்தும்.
அதேபோல், மத்தியக் கிழக்குப் பகுதியில் உள்ள சில நாடுகளிலும், ஆப்ரிக்காவின் சில நாடுகளிலும், பல ஆண்டுகளாக, போர்கள் நீடித்துவருவதால், அந்நாடுகளை விட்டு, கடல் வழி தப்பித்துச் செல்ல முயலும் பல ஏழைகளுக்கு, அந்தக் மத்தியத்தரைக் கடலே கல்லறையாகிவிடுவதை நாம் அறிவோம். குடும்பத்தலைவி ஆயிஷா அலி அவர்கள் கூறுவதுபோல், கல்லறைகளைச் சொந்தம் கொண்டாட யாரும் படையெடுத்து செல்லமாட்டார்கள் என்பது, வேதனையான உண்மை.

2018ம் ஆண்டு மார்ச் மாதம், 'த கார்டியன்' (The Guardian) செய்தித் தாளில் வெளியான மற்றொரு வேதனைச் செய்தி இது: "கல்லறை வாழ்க்கை: மணிலாவின் கல்லறைத்தோட்ட சேரிகளுக்கு உள்ளே" (Graveyard living: inside the 'cemetery slums' of Manila) என்ற தலைப்பில் வெளியான அச்செய்தி, வறுமையைக் குறித்தும், கல்லறைக்கு வெளியே நிகழும் விபரீதங்களைக் குறித்தும் சிந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது.
மணிலாவின் வட பகுதியில், 133 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பெரிய கல்லறைத்தோட்டத்தில், 6000த்திற்கும் அதிகமான வறியோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வாழ்ந்து வருவதாக 'த கார்டியன்' நாளிதழ் கூறுகிறது.
2016ம் ஆண்டு, ரொத்ரிகோ துத்தெர்த்தே (Rodrigo Duterte) அவர்கள் பிலிப்பீன்ஸ் நாட்டின் அரசுத்தலைவரான பிறகு, 'போதைப்பொருள் போர்' என்ற பெயரில் நடைபெற்ற கண்மூடித்தனமான 'களையெடுப்பு' முயற்சியில், 12,000த்திற்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இளையோர். எனவே, ஒவ்வொரு நாளும் 80 முதல், 100 அடக்கச் சடங்குகள் மணிலா கல்லறையில் நடைபெற்றது என்றும், அங்கு குடியிருக்கும் வறியோருக்கு நல்ல வருமானம் கிடைத்தது என்றும், இச்செய்தியில் வாசிக்கும்போது, உள்ளம் வேதனை அடைகிறது.

'போதைப்பொருள் போரில்' கொல்லப்பட்ட எரிக்கார்தோ (Ericardo) என்ற இளையவரின் தந்தை, 70 வயதான ரிக்கார்தோ மெதினா (Ricardo Medina) அவர்கள், குற்றமற்ற தன் மகன் அநியாயமாகக் கொல்லப்பட்டார் என்றும், அவரது வழக்கை எடுத்து நடத்த தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறியுள்ளார். அத்துடன், தன் மகன், மனைவி ஆகியோர் புதைக்கப்பட்டுள்ள கல்லறைக்கருகிலேயே தான் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரிக்கார்தோ மெதினா அவர்கள், கூறியதாக, 'த கார்டியன்' நாளிதழ் பதிவு செய்துள்ள கருத்துக்கள் கல்லறையைப் பற்றி நம் சிந்தனைகளை ஆழப்படுத்துகின்றன:
"இக்கல்லறைத் தோட்டத்தில் அனைவரும் சமம். இங்கு புதைக்கப்படும் அனைவரும் - வெள்ளை, கறுப்பு, உயரம், குள்ளம், செல்வந்தர், ஏழை - எல்லாருமே, ஒரே நிறம் கொண்ட மண்ணாகிப் போகின்றனர். கல்லறையில் ஆவிகள் நடமாடுவதாகச் சொல்கின்றனர். என்னைப் பொருத்தவரை, கல்லறைக்கு வெளியில்தான் தீய ஆவிகள் அதிகமாக நடமாடுகின்றன"

சிரியாவின் உள்நாட்டுப் போர், பிலிப்பீன்ஸ் நாட்டின் 'போதைப்பொருள் போர்' ஆகிய போர்களைப்போல், உலகின் பல நாடுகளில் மோதல்களையும், போர்களையும் உருவாக்கும் தீய சக்திகள், கல்லறைகளுக்கு வெளியே, வெறிகொண்டு அலைகின்றன. கல்லறையிலிருந்து வெளியேறிய மனிதரை இயேசு விடுவித்ததுபோல, வறியோர் ஒவ்வொருநாளும் பல்வேறு வடிவங்களில் சந்திக்கும் கல்லறைகளிலிருந்து அவர்களை இறைவன் வெளியேற்ற வேண்டும் என்ற மன்றாட்டுடன், இப்புதுமையில், நம் தேடலை அடுத்த வாரம் தொடர்வோம். 

23 June, 2019

Betrayal turned into Blessing காட்டிக்கொடுத்தாலும் கனிவைக் காட்ட...


On the night Jesus was betrayed…

Feast of the Body and Blood of Christ

With so many incredible technologies at our fingertips, we are flooded with news every day. In this deluge of news items that jostle for our attention, many fall by the wayside without making any impact on us. But, quite a few of them manage to enter our hearts and create pain and despair. Against such negative news, there come some rare, positive news. One such news that appeared last week was about a young priest from Poland, who passed away on June 17, 23 days after his Ordination to Priesthood!

Michał Łos, a young religious, was diagnosed with a rapidly growing and fatal cancer, shortly before Easter. A member of the congregation of founded by St Luigi Orione - the Sons of Divine Providence (F.D.P) - the young man was permitted by his superiors to take his final vows and, after successfully receiving a dispensation from Pope Francis, was ordained to the diaconate and the priesthood in the same ceremony on May 24.
The Ordinations took place in the oncology ward of the Military Hospital in Warsaw, performed by Bishop Marek Solarczyk. Łos was surrounded by his family, his religious superiors, and other members of the his congregation.
Thereafter, Łos’ dying wish was to have the strength to say his first Mass. His congregation turned to social media to publish the news and photos of his ordination and to ask for the nation’s prayers. The mainstream media picked up the story, and Polish Catholics responded with heartfelt generosity. The First Mass celebrated by the new priest, Michał Łos, on his hospital bed, reached thousands via the social media.

On Monday, June 17, the Orianists released a statement announcing the demise of Fr Michał Łos. “We regretfully announce that Fr. Michał Łos FDP, recently ordained, died before noon today. We believe that he has met the Risen Christ, whom he so strongly wished to serve as a priest,” they wrote. The First Mass celebrated by Fr Michał Łos on his death bed, shared on social media, must have surely touched the hearts of thousands of persons as one more powerful witness to the beauty of the Holy Mass. Although this was a Mass celebrated in pain, it had its own holy impact.

Another Mass, under very painful circumstances, was celebrated by Fr Pedro Arrupe, the 28th General of the Society of Jesus and now a Servant of God. While Fr Arrupe was the Novice Master in Hiroshima, the first atom bomb on August 6, 1945, destroyed most of the city. The Jesuit novitiate built in a suburb of Hiroshima was one of the few buildings left standing, though all its doors and windows had been ripped off by the explosion. The novitiate was turned into a makeshift hospital. The chapel, half destroyed, was overflowing with the wounded, who were lying on the floor very near to one another, suffering terribly, twisted with pain. This picture brings to mind the imagery of the ‘Church as a field-hospital’, used by Pope Francis now and then.

In the midst of this broken humanity, the novice master, Fr Pedro Arrupe celebrated Mass the very next day of the disaster. He said: “I can never forget the terrible feelings I experienced when I turned toward them and said, ‘The Lord is with you’. I could not move. I stayed there as if paralyzed, my arms outstretched, contemplating this human tragedy… They were looking at me, eyes full of agony and despair as if they were waiting for some consolation to come from the altar. What a terrible scene!”

Since Fr Pedro Arrupe had studied medicine, he went around helping not only the patients admitted in the Novitiate, but also in the surrounding area. On one such visits, he went to the house of a young lady, Nakamura San. She had suffered deep burns from the atomic explosion. When Fr Arrupe knelt down to dress up her wounds, the young lady asked him, “Father, have you brought the Holy Communion for me?” With tears in his eyes, Fr Arrupe reached into his bag and from the pyx, gave Nakamura the Communion. Ten minutes after receiving the Body of Christ, Nakamura San breathed her last.

Fr Michał Łos, celebrating Mass on his death bed, Fr Pedro Arrupe, celebrating Mass amidst the wounded and dying people, and the young lady Nakamura San, departing from this cruel world with the satisfaction of having received the Holy Body of Christ, are powerful instances that give us a glimpse of the great gifts given by Jesus – the Most Holy Body and Blood.

The Readings for today’s Feast (Gn. 14:18-20; 1 Cor. 11:23-26; and Lk. 9:11b-17) are a treasure for our reflection and meditation. We shall turn our attention to the second reading from the First  Letter of St Paul to the Corinthians – 11:23-26, which talks of the Last Supper. Celebrating the memory of the Last Supper was a great source of strength to the early Christians, who were constantly hunted. Although Paul was not present at the scene of the Last Supper, he claims that he is handing over to the people what he ‘received from the Lord’.

It is interesting to note that this same passage is also read on Maundy Thursday. The words that Paul uses to describe the night of the Last Supper, draw our attention. The night of the Maundy Thursday could have been described as ‘the night of the institution of the Eucharist’, ‘the night of the Holy Orders’ or ‘the night when Jesus taught humility, by washing the feet of the Apostles’. When such lofty ideas are available, Paul uses a sad phrase to describe this night -  “on the night when Jesus was betrayed”. (1 Cor. 11:23)

Was Paul so narrow minded as to identify this night as the night of betrayal? I don’t think so. The four evangelists also give importance to the fact of betrayal as an essential element of the Last Supper. The event of the washing of the feet is recorded only in the Gospel of John and not in the three Synoptic Gospels. The institutional words of the Eucharist uttered by Jesus, are recorded in the three Synoptic Gospels, and not in the Gospel of John. But, all the four Gospels talk about Jesus telling the Apostles that one of them would betray Him.

More than anything else, the notion of betrayal was uppermost in the scene of the Last Supper.  This notion was passed on to the first Christian community. Some scripture scholars are of the opinion that this passage from the Letter of St Paul to the Corinthians was, probably, the very first written account of the Last Supper. So, right from the moment the Last Supper was celebrated, the idea that this was a ‘night of betrayal’ was passed on from generation to generation.

We are aware of many instances of betrayal in human history or in literature. The back-stabbing Brutus in the murder of Caesar, the betrayal of Kattabomman (Tamil king) to the British authorities, by his cousin Ettappan, the killing of Mrs Indira Gandhi, the former Prime Minister of India, by her own bodyguards… are a few examples of betrayal and back-stabbing!

While most of these betrayals resulted in more bitterness and revenge, Jesus responded to his betrayal with love and self-gift! The Lord Jesus on the night when he was betrayed took bread, and when he had given thanks, he broke it, and said, “This is my body which is for you. Do this in remembrance of me.” (1 Cor. 11:23-24) We repeat these words at the consecration during our daily Mass. For Jesus, it was very clear that betrayal is to be met with blessing! Responding to betrayal and hatred with love and self-gift is the core of the Feast of the Most Holy Body and Blood of Christ.

His name shall be called Emmanu-el - which means, God with us. (Mt. 1:23) was the way an angel introduced Jesus to Joseph. Jesus made sure that this ‘Emmanuel’ definition was realized not only during his earthly life, but also after his ascension, by gifting His Most Holy Body and Blood. This self-gift and continuous presence of Christ has inspired countless courageous saints to offer themselves as a holocaust. We shall conclude our reflection with thoughts on one such courageous person - St Isaac Jogues.

St. Isaac Jogues, S.J. was a Jesuit priest, missionary and martyr who travelled and worked among the native populations in North America. During his missionary work in North America, he had a chance to escape from the cruel clutches of the native people and return to France. While there, he wanted to celebrate Mass. Under Church law of the time, the Blessed Sacrament could not be touched with any other finger except the thumb and the forefinger. Jogues was unable to follow this law after the loss of both these fingers due to the tortures he endured in Iroquois captivity. In order to celebrate Mass, he required a special dispensation from the Pope. He was granted a dispensation to say Mass by Pope Urban VIII. Pope Urban's judgement that "it would be shameful for a martyr of Christ not to drink the blood of Christ" renewed the zeal of Isaac to work among the Indians. On a peace mission to the Iroquois in 1646, Isaac was again captured by a renegade Mohawk war party, this time with his assistant Jean de la Lande. On 18 October 1646, the Mohawks killed Jogues with a tomahawk; they killed La Lande the next day.
The story holds a curious double martyrdom of Jogues. Aboriginal allies of the French captured Jogues' killer in 1647 and condemned him to death. While awaiting his execution, this man was baptized and renamed with the Christian name of Fr Isaac Jogues. His death represented a secondary martyring of Isaac Jogues.

May the Feast of the Most Holy Body and Blood of Christ help us personalise the deep experiences of great persons like St Isaac Jogues, Nakamura San, Fr Pedro Arrupe and young priest Michał Łos. Let us celebrate the Loving, Abiding Presence of Christ in our lives!

Fr Michał Łos celebrating Mass in his hospital bed

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்த பெருவிழா

ஒவ்வொரு நாளும், ஊடகங்கள் வழியே, பல செய்திகள் நம்மை வந்தடைகின்றன. ஒரு சில, நம் விழிகளைத் தொட்டதும், விலகிவிடுகின்றன. வேறு சில, உள்ளத்தைத் துளைத்து, நம்மை, வேதனையிலும், விரக்தியிலும் ஆழ்த்துகின்றன. இத்தகைய எதிர்மறை செய்திகள் நடுவே, அவ்வப்போது நம்பிக்கை தரும் நல்ல செய்திகளும் நம்மை வந்தடைகின்றன. அச்செய்திகள், உருவகங்களாக, உவமைகளாக மாறி, உள்ளத்தை உயர்த்துகின்றன. அத்தகையைச் செய்திகளில் ஒன்று இது...

ஜூன் 17, கடந்த திங்களன்று, போலந்து நாட்டில், ஓர் இளம் அருள்பணியாளர் புற்றுநோய் காரணமாக இறைவனடி சேர்ந்தார். மிஹாவ் வோஸ் (Michał Łos) என்ற அந்த இளையவர், அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டு 23 நாள்களில், இறைவனடி சேர்ந்தார். இவ்வாண்டு, உயிர்ப்புப் பெருவிழாவுக்குச் சில நாள்கள் முன்னதாக, மிஹாவ் அவர்களுக்கு இறுதி நிலை புற்றுநோய் இருந்ததென்று கண்டுபிடிக்கப்பட்டது.

புனித லூயிஜி ஓரியோனே (St Luigi Orione) அவர்களால் உருவாக்கப்பட்ட துறவு சபையில், அருள்பணியாளர் பயிற்சியில் இருந்த இளையவர் மிஹாவ் அவர்கள், மே 23ம் தேதி, அச்சபையில், தன் இறுதி அர்ப்பண வார்த்தைப்பாட்டினை, மருத்துவமனை படுக்கையில் இருந்தவண்ணம் வழங்கினார். அதற்கு அடுத்த நாள், மே 24ம் தேதி, Warsaw-Praga மறைமாவட்டத்தின் ஆயர், Marek Solarczyk அவர்கள், இளையவர் மிஹாவ் அவர்களை, தியாக்கோனாகவும், அருள்பணியாளராகவும் திருப்பொழிவு செய்தார். இளந்துறவிக்கு, தியாக்கோன் மற்றும் அருள்பணியாளர் என்ற இரு நிலைகளையும், ஒரே வேளையில் வழங்குவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பான அனுமதி வழங்கியதையடுத்து, மிஹாவ் அவர்களுக்கு திருப்பொழிவு நிகழ்ந்தது.

மே 25ம் தேதி, அருள்பணி மிஹாவ் வோஸ் அவர்கள், தன் குடும்பத்தினருக்கும், நெருங்கிய உறவினருக்கும், முதல் நன்றித் திருப்பலியை நிறைவேற்றினார். மருத்துவமனை படுக்கையில் இருந்தவண்ணம், மிஹாவ் அவர்கள் ஆற்றிய அத்திருப்பலியின் இறுதியில், தனக்காகச் செபிக்கும் அனைவருக்கும் நன்றி கூறியபின், ஒரு புதிய அருள்பணியாளராக, அனைவருக்கும் ஆசீர் வழங்கிய காணொளி, சமூக வலைத்தளங்கள் வழியே, பல்லாயிரம் மக்களைச் சென்றடைந்தது.

ஜூன் 17ம் தேதி, அவரது மரணத்தை அறிவித்த ஓரியோனே துறவு சபையினர், "மிஹாவ் வோஸ் அவர்கள், உயிர்த்த கிறிஸ்துவை நேரில் சந்தித்திருப்பார் என்று நம்புகிறோம். ஓர் அருள்பணியாளராக கிறிஸ்துவுக்குப் பணியாற்றுவது, அவரது பெரும் கனவாக இருந்தது" என்ற சொற்களைப் பதிவு செய்திருந்தனர். மரணப் படுக்கையில் இருந்தவண்ணம், இளம் அருள்பணியாளர் மிஹாவ் வோஸ் அவர்கள், திருப்பலி நிறைவேற்றிய காட்சி, பலரின் உள்ளத்தில், திருப்பலியின் உன்னதத்தைப் பறைசாற்றியிருக்கும் என்பதை நம்பலாம்.

திருப்பலியின் ஆழமானப் பொருளை, காயமடைந்த மக்கள் நடுவே தான் ஆற்றிய திருப்பலியின்போது உணர்ந்ததாக, இயேசு சபையின் முன்னாள் உலகத்தலைவரான இறையடியார் பேத்ரோ அருப்பே அவர்கள் கூறியுள்ளார். அருள்பணி அருப்பே அவர்கள், இயேசு சபையின் தலைவராவதற்கு முன், ஜப்பானில் பணிபுரிந்தார். 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்த காலக்கட்டத்தில், அங்கு அவர், நவதுறவிகளின் பொறுப்பாளராக இருந்தார். 80,000க்கும் அதிகமான உயிர்கள் பலியான அந்தக் கொடுமையின்போது, அந்நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை நவதுறவியர் இல்லம், பெரும் சேதமின்றி தப்பித்தது. அவ்வில்லமும், அங்கிருந்த சிறு கோவிலும், காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. போர்க்களத்தில் அமைந்துள்ள மருத்துவமனையாக திருஅவை விளங்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவ்வப்போது குறிப்பிடும் உருவகத்திற்கு, ஹிரோஷிமாவின் நவதுறவியர் இல்லம் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்ததோ என்று எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது.

அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள், அக்கோவிலில், திருப்பலி நிறைவேற்றிய அருள்பணி அருப்பே அவர்கள், தான் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம் கூறியுள்ளார்: "நான் திருப்பலி நிகழ்த்தியபோது, அங்கு காயப்பட்டுக் கிடந்தவர்களைப் பார்த்து 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கரங்களை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி, என்னை உறைந்துபோகச் செய்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த மனிதர்களை, அவர்களை அந்நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் வெறி நிறைந்த சிந்தனைகளை எண்ணியபோது, என் விரிந்த கரங்கள் அப்படியே நின்றுவிட்டன. அங்கு படுத்திருந்தவர்கள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்தப் பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்கமுடியாத திருப்பலி அது" என்று, அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், தன் நினைவுகளைப் பதிவு செய்துள்ளார்.

அருள்பணி அருப்பே அவர்கள், மருத்துவம் படித்தவர் என்பதால், ஹிரோஷிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்ல, வெளியிலும் சென்று, தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகள் செய்துவந்தார். ஒரு நாள் மாலை, அவர் வீடு வீடாகச் சென்று உதவிகள் செய்து வந்தபோது, நாக்கமுறா சான் (Nakamura San) என்ற இளம் பெண்ணின் வீட்டுக்கும் சென்றார். அணுகுண்டின் கதிர் வீச்சால் அந்த இளம் பெண்ணின் உடல் பெருமளவு எரிந்துபோய், கொடூரமான வேதனையில், அப்பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் இருந்த நிலையைக் கண்ட அருள்பணி அருப்பே அவர்கள், தன் கண்களில் பெருகிய கண்ணீரை அடக்கிக்கொண்டு, அவர் அருகில் முழந்தாள்படியிட்டு, அவரது காயங்களுக்கு மருந்துகள் இட்டபோது, அப்பெண், அருள்பணி அருப்பேயிடம், "சாமி, எனக்கு திருநற்கருணை கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். ஆம் என்று தலையை அசைத்தபடி, தான் கொண்டு வந்திருந்த திருநற்கருணையை அப்பெண்ணுக்குத் தந்தார், அருப்பே. மிகுந்த பக்தியுடன் நற்கருணையை உட்கொண்ட நாக்கமுறா சான் அவர்கள், சில நிமிடங்களில் இறையடி சேர்ந்தார்.

மரணப் படுக்கையில் இருந்தபோதும், இறைமகன் இயேசுவைக் கரங்களில் தாங்கி நிறைவடைந்த இளம் அருள்பணியாளர் மிஹாவ் வோஸ் அவர்கள், காயப்பட்டுக் கிடந்த மக்கள் நடுவே, திருப்பலியாற்றிய இறையடியார் அருப்பே, மரணத்தின் வாயிலில் நின்றபடி, இயேசுவின் திருஉடலைப் பெற்ற நிறைவோடு, இவ்வுலகிலிருந்து விடைபெற்ற இளம்பெண் நாக்கமுறா சான் ஆகிய இம்மூவரும், திருப்பலி, திருநற்கருணை என்ற ஒப்பற்ற கொடைகளின் ஆழத்தை, நாம் ஓரளவாகிலும் புரிந்துகொள்ள உதவுகின்றனர். காயப்பட்ட மனுக்குலம், காயப்பட்டக் கடவுளைக் கொண்டாடும் ஒரு திருவிழா, இன்று நாம் சிறப்பிக்கும் கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்த பெருவிழா.

இவ்விழாவுக்கென நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள் அனைத்தும் பொருள் செறிந்தவை. அவற்றில், புனித பவுல், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகம் (1கொரி. 11:23-26), நம்முடைய கூடுதல் கவனத்தைப் பெறுகிறது. கடுமையான துன்பங்களை அனுபவித்து வந்த முதல் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு நம்பிக்கை வழங்கியது, இயேசுவின் இறுதி இரவுணவை நினைவுகூரும் கொண்டாட்டம். அந்த இறுதி இரவுணவைப் பற்றி, எழுத்துவடிவில் தோன்றிய முதல் பதிவு இது என்பது, விவிலிய ஆய்வாளர்களின் கருத்து.

இறுதி இரவுணவில் பங்கேற்காத புனித பவுல், பின்னர், இந்த முக்கிய நிகழ்வைக் குறித்து தான் ஆண்டவரிடமிருந்து நேரில் பெற்றுக்கொண்டதை, சொற்களாக இங்கு பதிவு செய்துள்ளார். இதே வாசகம், புனித வியாழன் திருவழிபாட்டிலும் வாசிக்கப்படுகிறது. அந்த இறுதி இரவை குறிப்பிட்டுக் காட்ட புனித பவுல் பயன்படுத்தியுள்ள சொற்கள், இன்றைய விழாவைக் குறித்த ஒரு முக்கியப் பாடத்தைச் சொல்லித் தருகின்றன.

அந்த இறுதி இரவை, புனித வியாழன் இரவை, பல்வேறு உன்னத எண்ணங்களால் நம்மால் விவரிக்கமுடியும். இயேசு, சீடர்களின் காலடிகளைக் கழுவி, பணிவைச் சொல்லித்தந்த இரவு, நற்கருணையை நிறுவிய இரவு, சீடர்களை அருள்பணியாளராக அருள்பொழிவு செய்த இரவு என்று, பல்வேறு மேன்மையான வழிகளில் அந்த இரவை குறிப்பிட்டிருக்கலாம். அவற்றையெல்லாம் குறிப்பிடாமல், புனித பவுல், அந்த இரவைக் குறிப்பிட, "ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில்" (1 கொரி. 11:23). என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். அதுவும், இந்த உண்மையை தான் ஆண்டவரிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். காட்டிக்கொடுக்கப்படும் நிகழ்வுக்கு புனித பவுல் தரும் முக்கியத்துவம், நமக்குள் சங்கடங்களை உருவாக்குகிறது. ஆனால், புனித பவுல் மட்டும் அல்ல, இதே முக்கியத்துவம், நான்கு நற்செய்திகளிலும் தரப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்கிறோம்.

இந்த இரவைப்பற்றி, நான்கு நற்செய்தியாளர்களின் பதிவுகளை நாம் வாசிக்கும்போது, இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவும் நிகழ்வு, யோவான் நற்செய்தியில் மட்டும் இடம்பெற்றுள்ளதைக் காண்கிறோம். இயேசு, அப்பத்தையும் இரசத்தையும் பகிரும் நிகழ்வு, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளில் உள்ளன; யோவான் நற்செய்தியில் கூறப்படவில்லை. ஆனால், தான் காட்டிக்கொடுக்கப்படுவதை இயேசு கூறும் நிகழ்வு, நான்கு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த இரவு, மற்ற அனைத்தையும்விட, 'காட்டிக்கொடுக்கப்பட்ட இரவாக' சீடர்களாலும், முதல் கிறிஸ்தவர்களாலும் அடையாளப்படுத்தப்பட்டது என்பதை நாம் உணரலாம்.

இந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி, நாமும், திருப்பலியில், அப்பத்தையும், இரசத்தையும் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றும் அந்தப் புனித நிகழ்வின்போது, "அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில்" என்று கூறுகிறோம். அந்த இரவில் நிகழ்ந்த அத்தனை கொடுமைகளிலும், 'காட்டிக்கொடுத்தல்' மிகக் கொடுமையானதாக, வேதனை நிறைந்ததாக இருந்திருக்கவேண்டும். எனவேதான், முதல் கிறிஸ்தவக் குழுக்களின் காலம் துவங்கி, இன்று வரை, அந்த இரவை, "காட்டிக்கொடுக்கப்பட்ட இரவாக" நினைவுகூர்ந்து வருகிறோம்.

வரலாற்றிலும், காவியங்களிலும் காட்டிக்கொடுத்த பல நிகழ்வுகளைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ப்ரூட்டஸ், சீசரைக் கொலை செய்தது, கட்டபொம்மனை எட்டப்பன் காட்டிக்கொடுத்தது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை, அவரது இரு மெய்க்காப்பாளர்கள் சுட்டுக்கொன்றது... என்று, பல நிகழ்வுகள் உண்டு. இவை அனைத்திலும், நெருங்கிய ஒருவரால் காட்டிக்கொடுக்கப்படுவது, வெறுப்பையும், வேதனையையும் வளர்த்துள்ளது. இங்கோ, இயேசு, தான் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவை, அன்பால், புனிதத்தால் நிறைத்தார். அந்த இரவில், அவர், தன் உடலையும், இரத்தத்தையும் பகிர்ந்தளித்தார். நெருங்கிய நண்பர் ஒருவரால் காட்டிக்கொடுக்கப்படும் வேதனையிலும், தன்னையே முழுவதுமாக வழங்குவது ஒன்றே, மீட்பைக் கொணரும் என்பதை, கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்த பெருவிழா நமக்கு உணர்த்துகிறது.

'இம்மானுவேல்' அதாவது, 'கடவுள் நம்மோடு' என்ற பெயருடன் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இயேசு, இறுதியில், நமக்கும், தன்னை வதைத்தவர்களுக்கும், தன்னையே வழங்கியதன் வழியே, என்றும் நம்மோடு வாழும் இறைவனாக மாறினார். தன் திருஉடல், திருஇரத்தத்தின் வழியாக, நம்முடன் எப்போதும் வாழும் இயேசுவின் பிரசன்னத்தை மையப்படுத்தி பல புதுமைகள், வரலாற்றில் நடந்துள்ளன; இன்றும் தொடர்கின்றன. நம்முடன் இறைமகன் என்றும் வாழ்கிறார் என்ற அந்த ஓர் உணர்வால், எத்தனையோ உன்னத உள்ளங்கள், தங்கள் வாழ்வை, அவருக்காக, அவரைப்போல், தன் பகைவருக்கும் அர்ப்பணித்தனர். அத்தகைய ஓர் உன்னத உள்ளத்தைப் பற்றிய எண்ணங்களுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:
17ம் நூற்றாண்டில் கனடாவில் பழங்குடியினரிடையே பணி புரிந்து, அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை அருள்பணியாளர்களில், புனித ஐசக் ஜோக்ஸ் (Isaac Jogues) அவர்களும் ஒருவர். அந்த மக்களால் அடைந்த சித்ரவதைகள் காரணமாக, அவர் தன் கை விரல்கள் சிலவற்றை இழந்திருந்தார். இந்நிலையில், அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு, திருப்பலி நிகழ்த்த விரும்பினார். அக்காலத்தில் பின்பற்றப்பட்ட திருஅவை விதிமுறையின்படி, அருள்பணியாளர், தன் கட்டைவிரல், மற்றும், ஆள்காட்டி விரல்களால் மட்டுமே அப்பத்தைத் தொடவேண்டும். அருள்பணி ஐசக் அவர்களுக்கு அவ்விரு விரல்களும் இல்லாததால், அவர் வேறு விரல்களைக் கொண்டு அப்பத்தைத் தொடுவதற்கு, திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் உர்பான் அவர்களிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இந்த அருள்பணியாளர் திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். முக்கியமான விரல்கள் இல்லாத நிலையிலும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் விரல்களற்ற தன் கரங்களில் புனித ஐசக் ஜோக்ஸ் அவர்கள் உயர்த்திப் பிடித்தது, கட்டாயம் பலருக்கு, இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.
அருள்பணி ஐசக் ஜோக்ஸ் அவர்கள், தான் பணியாற்றிய கனடா நாட்டு பழங்குடியினர் நடுவே மீண்டும் திரும்பி, அவர்கள் நடுவே மறைசாட்சியாக உயிர் துறந்தார். 1646ம் ஆண்டு, அக்டோபர் 18ம் தேதி, அவரைக் கொன்ற கொலையாளியை, 1647ம் ஆண்டு, பிரெஞ்சு படையினர் கைது செய்து, அவருக்கு மரணதண்டனை வழங்கினர். அந்தக் கொலையாளி, தன் மரணத்திற்கு முன், ஐசக் என்ற பெயருடன் திருமுழுக்கு பெற்றார். இதனால், ஐசக் ஜோக்ஸ் அவர்கள், இருமுறை சாட்சியாக உயிர்துறந்தார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப்போல், நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளை கற்றுக்கொள்ள, கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்த பெருவிழா நமக்கு உதவுவதாக.