31 January, 2010

Prophets still live among us… இறை வாக்கினர் இன்றும் நம் மத்தியில்...





On March 24th, 1980, Archbishop Oscar Romero was celebrating Mass. A professional assassin entered the chapel, aimed at the Archbishop’s heart and shot him. Just one bullet... took away the life of Archbishop Romero. Why was he killed? Romero’s role as a prophet was becoming increasingly uncomfortable for the decent and rich Catholics of El Salvador. After the death of his long time friend, Jesuit Father Rutilio Grande, the Archbishop became more vocal about TRUTH. Truth that was too close to comfort.
On March 23, the previous day to his murder, Archbishop spoke at a public meeting. During that meeting, he saw the rifle wielding soldiers who had surrounded the people… just to frighten the simple folks who had gathered to hear the Archbishop. He made the following appeal to the men of the armed forces: "Brothers, you came from our own people. You are killing your own brothers. Any human order to kill must be subordinate to the law of God, which says, 'Thou shalt not kill'. No soldier is obliged to obey an order contrary to the law of God. No one has to obey an immoral law. It is high time you obeyed your consciences rather than sinful orders. The church cannot remain silent before such an abomination. ...In the name of God, in the name of this suffering people whose cry rises to heaven more loudly each day, I implore you, I beg you, I order you: stop the repression" The day following this speech, Archbishop Romero was murdered. (http://www.silk.net/RelEd/ezineromero.htm)
This was not the first time and will not be the last time when a prophet had to pay a heavy price for what he or she believed in. Prophets are too dangerous for this world. The world thinks that they are too loud in speaking the truth. It wants them to be quieter. When the prophets don’t listen to this basic ‘good manners’ lessons, they are sent away from this world. A prophet is too dangerous for this world, for his/her country and for his/her hometown. Jesus had already spoken about this.

This Sunday’s gospel is a sequel to last Sunday’s. But, what a contrast! Last week we heard that the people in the synagogue of Nazareth were in great admiration of Jesus when he began to speak to them. Today we hear of their eagerness to get rid of Jesus… and how! They wanted to take him up a hill and throw him down – a rehearsal to Jesus dying on the hillock near Jerusalem?
A complete reversal from adulation to annihilation! What triggered such a reversal? Jesus called a spade a spade! Jesus must have observed some hard truths about his own people as he was growing up there. He must have been eager to drive home some basic truth. Speaking the truth brings in enlightenment sometimes and estrangement more often. Jesus probably knew what was awaiting him. So, he began his discourse with the famous saying: “No prophet is acceptable in his hometown.”

Luke 4: 21-30
Jesus began to say to them, "Today this Scripture has been fulfilled in your hearing." And all spoke well of him and marveled at the gracious words that were coming from his mouth. And they said, "Is not this Joseph’s son?" And he said to them, "Doubtless you will quote to me this proverb, 'Physician, heal yourself.' ‘What we have heard you did at Capernaum, do here in your hometown as well’." And he said, "Truly, I say to you, no prophet is acceptable in his hometown. But in truth, I tell you, there were many widows in Israel in the days of Elijah, when the heavens were shut up three years and six months, and a great famine came over all the land, and Elijah was sent to none of them but only to Zarephath, in the land of Sidon, to a woman who was a widow. And there were many lepers in Israel in the time of the prophet Elisha, and none of them was cleansed, but only Naaman the Syrian." When they heard these things, all in the synagogue were filled with wrath. And they rose up and drove him out of the town and brought him to the brow of the hill on which their town was built, so that they could throw him down the cliff. But passing through their midst, he went away.

‘Truth hurts’ is a clichéd statement. We need to add another equally well-known statement: Truth liberates. This liberation is possible only when we ‘see’ truth. Unfortunately, when truth is too close, we fail to recognise it. Let me give you a silly example. When we take food, sometimes, small pieces of food get stuck on our nose or near our lips. We would not be able to see these pieces unless someone tells us or we go in front of a mirror. I am reminded of a funny story I heard a long time back. A grandfather was famous for his moustache since it was oversized and bushy. It was a constant source of amusement to his grandson who was way too mischievous. One day as the grand father was fast asleep on an easy chair, the grandson placed a piece of rotten cheese on his moustache. The grandfather woke up with this unpleasant smell. He tried to find the source of this filthy odour. He went to the next room. The room smelt bad. He went out and the garden too smelt bad. He felt that the whole world was stinking. It took a long time for him to find out that the world was all right and that he had some problem buried in his moustache. When truth, especially uncomfortable truth, is too close, we fail to recognise them or refuse to acknowledge them. A prophet is required to tell us that a spade is a spade. We can surely recall the story "The Emperor's New Clothes" by Hans Christian Andersen where a child cried out the naked truth about the emperor.

The prophets spoke the truth and nothing but the truth. I feel extremely uneasy to use this phrase for the prophets since they are used in our courts! As truth is silenced in our courts, many of the prophets were silenced. They used the word of God as a surgeon’s knife to bring healing to the world suffering from various maladies. The imagery of the word of God as a knife is beautifully expressed in the Letter to the Hebrews: For the word of God is living and active. Sharper than any double-edged sword, it penetrates even to dividing soul and spirit, joints and marrow; it judges the thoughts and attitudes of the heart. (Hebrews 4:12) A prophet may become unpopular in her/his hometown, country and the world… But, believe me, prophets still live among us!

சனவரி 31 - நாளும் ஒரு நல்லெண்ணம்
“இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.”
இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் பொன்மொழிகள் இவை. இந்தக் கூற்றின் ஆழத்தை மனித வரலாறு ஒவ்வொரு நூற்றாண்டிலும் உணர்ந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் இறைவாக்கினராய், கறுப்பின மக்களின் விடுதலை வீரனாய், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்ந்து, அங்கேயே கொல்லப்பட்ட மார்ட்டின் லூதர் கிங் கூறிய பல பொன்மொழிகளில் இரண்டு நமது இன்றைய நல்லெண்ணங்கள் ஆகட்டும்.
இருள் இருளை விரட்ட முடியாது. ஒளியே இருளை விரட்டும். அதுபோல் வெறுப்பு வெறுப்பை வெல்ல முடியாது. அன்பே வெறுப்பை வெல்லும்.
நீ குனிந்து கொடுக்காதே. நீ குனிந்தால் தான் வேறொருவர் உன் முதுகில் ஏறி சவாரி செய்ய முடியும்.
இதையே நம் பழமொழியும் சொல்கிறது: “குட்ட குட்ட குனிபவன் முட்டாள், குனிய குனிய குட்டுபவனும் முட்டாள்” என்று. நம் தேசியக் கவிஞர் தாகூர் இதை வேறொரு வகையில் அழகியதொரு செபமாய்க் கூறியுள்ளார்: “தலைக்கனம் மிகுந்த செல்வந்தர் முன் நான் மண்டியிட்டுப் பணியா சக்தியை எனக்குத் தருவாய்.”

ஞாயிறு சிந்தனை
சரியாக 30 ஆண்டுகளுக்கு முன், 1980ஆம் ஆண்டு மார்ச் 24 காலை 6 அல்லது 7 மணி அளவில் பேராயர் ஒருவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருக்கும் போது, குறிவைத்துச் சுடுவதில் சிறந்த, கூலிப்படையைச் சார்ந்த ஒருவன் கோவிலின் பின் புறம் வந்து நின்று குறிவைத்து சுட்டான். ஒரே ஒரு குண்டு. பேராயரின் இதயத்தில் பாய்ந்தது. திருப்பலியை நிறைவு செய்யாமலேயே, பீடத்தின் மீது சாய்ந்து பலியானார்.
பேராயர் கொலையுண்டதற்கு என்ன காரணம்?
அதற்கு முந்திய நாள், அதாவது மார்ச் 23ஆம் தேதி பேராயர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த மக்களை அச்சுறுத்தும் வண்ணம் அவர்களைச் சுற்றி வளைத்து ஆயுதம் தாங்கி நின்றிருந்த வீரர்களைப் பார்த்து பேராயர் சொன்னது இது: “சகோதரர்களே, இங்கு நீங்கள் சூழ்ந்திருக்கும் இந்த மக்கள் மத்தியில் தான் நீங்கள் பிறந்து வளர்ந்தீர்கள். இவர்கள் உங்கள் சகோதரர்கள். உங்கள் சகோதரர்களையே நீங்கள் கொன்று வருகிறீர்கள். இறைவன் தந்துள்ள 'கொலை செய்யாதே' என்ற அந்த கட்டளையை மீறி உங்களுக்குத் தரப்படும் நெறியற்ற ஆணைகளுக்கு நீங்கள் கீழ்படியத் தேவையில்லை. இந்த நெறியற்ற ஆணைகளுக்கு கீழ்படிவதைவிட, உங்கள் மன சாட்சிக்குக் கீழ்படியுங்கள். இந்த அராஜகத்தைப் பார்த்துக் கொண்டு திருச்சபை மௌனமாய் இராது. கடவுளின் பெயரால், தினமும் விண்ணை நோக்கிக் குரல் எழுப்பும் இந்த மக்கள் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், உங்கள் ஆயர் என்ற முறையில் ஆணை இடுகிறேன், உங்கள் அராஜகத்தை நிறுத்துங்கள்.”
ஆயர் கூறிய சொற்கள், எடுத்துரைத்த உண்மைகள் மிகவும் கசந்திருக்க வேண்டும். அதனால், அடுத்த நாள் காலை அவர் கொல்லப்பட்டார். அன்புள்ளங்களே, நான் சொன்ன இந்த சம்பவம் நடந்தது எல் சால்வதோர் நாட்டில். அங்கு, சான் சால்வதோர் நகரில் பேராயராய் இருந்த ஆஸ்கார் ரொமேரோ 1980, மார்ச் 24 உயிரிழந்தார். இவ்வாண்டு அவர் இறந்து 30 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவரைப் புனிதராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எல் சால்வதோர் தலத் திருச்சபை. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், ரொமேரோ இறந்த பத்து ஆண்டுகளில் அவரை இறைவனின் அடியார் என்ற நிலைக்கு உயர்த்தினார். புனிதராக அவர் இன்னும் உயர்த்தப் படவில்லை எனினும், உலக அரங்கில் பல்வேறு நிலைகளில் அவரை உண்மைக்காக, நீதிக்காக உயிர் துறந்த ஒரு தலைவராகப் போற்றுகின்றனர். பேராயர் ரொமேரோ ஒரு இறை வாக்கினர். இறைவனின் வார்த்தையை, அது கூறும் உண்மைகளைக் கலப்படமில்லாமல், எந்த வித அலங்காரமும் இல்லாமல் எடுத்துச் சொன்னவர். மனித வரலாற்றில் பல ஆயிரம் இறைவாக்கினர்கள் இதையேச் செய்தனர். உண்மையைச் சொன்னார்கள், உயிரைத் தந்தார்கள். உண்மைக்கும், உயிர்பலிக்கும் அப்படி ஒரு நெருங்கிய உறவு.
உண்மை கசக்கும், உண்மை எரிக்கும், உண்மை சுடும் என்று உண்மையின் பல விளைவுகளைச் சொல்கிறோம். உண்மை பல வேளைகளில் நம்மைச் சங்கடப்படுத்தும். உலகத்தின் கண்களைக் கட்டிவிட்டதாய் நினைத்துக் கொண்டு, நம் கண்களை நாமே கட்டிக்கொண்டு தவறுகள் செய்யும்போது, உண்மை வந்து நம் கண் கட்டை அவிழ்க்கும். கட்டவிழ்க்கப்பட்டதும் அந்த ஒளியை, உண்மையைக் காண முடியாமல் நம் கண்கள் கூசி நிற்கும். உண்மை நம்மைத் தோலுரித்துக் காட்டும். உண்மையின் பின் விளைவுகளை இப்படி நாம் பட்டியலிடும் போது, ஒரு முக்கியமான அம்சத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும். உண்மை விடுவிக்கும். உண்மை மீட்பைத் தரும். உண்மை தரும் சங்கடத்தை சமாளிக்க முடியாமல், பல நேரங்களில் உண்மையை மறைத்துவிட, அழித்து விட முயற்சிகள் நடக்கின்றன. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தான் உண்மை பேசும் இறைவாக்கினர்களைப் பல வகைகளில் நிறுத்த முயன்று, எல்லாம் தோல்வி கண்ட பின் இறுதியில் அந்த இறைவாக்கினரின் வாழ்வையே நிறுத்த வேண்டியதாகிறது.
இறைவாக்கினர்கள் சராசரி மனிதர்கள் அல்ல. கூட்டத்தோடு சேர்ந்து கோஷம் போடுபவர்கள் அல்ல. தனித்து நின்று, இறைவனின் வார்த்தையைத் தைரியமாக முழங்குபவர்கள். ஆஸ்கார் ரொமேரோ 80களில் இறைவார்த்தையை முழங்கினார். குண்டடிபட்டு இறந்தார். மார்ட்டின் லூத்தர் கிங் 60களில் அமெரிக்காவில் இறைவாக்கை எடுத்துரைத்தார். குண்டடிபட்டு இறந்தார். மார்ட்டின் லூத்தர் கிங் மனத்தைக் கவர்ந்த நமது காந்தியும் சத்தியத்தை வாழ்வில் மேற்கொண்டார். ஜனவரி 30 காந்தி குண்டடிபட்டு இறந்தார். அன்பர்களே, இந்த பட்டியல் மிக நீளமானது. நேரம் கருதி நிறுத்திக் கொள்கிறேன்.
இறைவாக்கினர் பேசுவது பொதுவாக எல்லாரையும் சங்கடப்படுத்தும் என்பதால், அவருக்கு வரவேற்பு இருக்காது. இந்த எண்ணத்தை இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவாகச் சொல்கிறார். சென்ற வாரம் ஞாயிறு சிந்தனையில் நாம் எடுத்துக்கொண்ட நற்செய்தி பகுதியின் தொடர்ச்சியே இந்த வாரம் நம் சிந்தனைக்குத் தரப்பட்டுள்ளது. நற்செய்தியைக் கேட்போம்.

லூக்கா நற்செய்தி 4: 21-30
இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார். தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

ஏசாயாவின் இறைவாக்கு இன்று, இப்போது, இங்கு நிறைவேறிற்று என்று இயேசு ஆரம்பித்தார். ஆரம்பம் ஆழகாகத்தான் இருந்தது. ஆனால், தொடர்ந்து தான் வளர்ந்த ஊரான நாசரேத்துக்கு இயேசு ஒரு சில உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்தார். வளர்ந்த ஊர் என்பதால், சிறு வயதிலிருந்து இயேசு அங்கு நிகழ்ந்த பல காரியங்களைப் பார்த்து, உணர்ந்து வந்தவர். அவர்கள் எல்லாருக்குமே தெரிந்த பல நெருக்கமான, அதேநேரம் சஙகடமான, உண்மைகளைச் சொன்னார் இயேசு.
பல நேரங்களில் நமக்கு மிக நெருக்கத்தில் இருக்கும் உண்மைகளைப் பார்க்கத் தவறுகிறோம். ஒரு சின்ன உதாரணம். சின்னத்தனமான உதாரணமாகக்கூடத் தெரியும். ஆனால், இதுவும் உண்மை. நாம் சாப்பிடும் போது, சில சமயங்களில் மூக்கின் மீது, அல்லது முகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சாப்பாட்டுத் துகள் ஒட்டிக் கொண்டால், அதை நாம் உணர்வதில்லை. வேறு யாராவது அதை நமக்குச் சொன்னால் உண்டு, அல்லது ஒரு கண்ணாடியின் உதவி நமக்குத் தேவை. உண்மை வந்து நம் முகத்தில் ஒட்டிக் கொண்டிருந்தாலும் நம்மால் பார்க்க முடியாது.
இன்னுமொரு சின்னக் கதை. சின்னத்தனமான கதை. வயதான ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு மீசை அடர்த்தியாக இருந்தது. அந்த மீசை பல கேலிகளுக்கு ஆளான மீசை. அவரது பேரன் பெரிய குறும்புக்காரன். தூங்கிக்கொண்டிருந்த அவர் மீசைக்குள் ஒரு அழுகிய பழத்துண்டை வைத்து விடுகிறான். தூக்கம் கலைந்து எழுந்த தாத்தா முகம் சுளிக்கிறார். ஒரே நாற்றம். வயதான தன் மனைவியைக் கூப்பிட்டு என் இந்த நாற்றம் என்று கேட்கிறார். பாட்டி ‘ஒன்றும் நாறவில்லை’ என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறார். தாத்தா அடுத்த அறைக்குச் செல்கிறார். அங்கும் அதே நாற்றம். வீட்டுக்கு வெளியே செல்கிறார். அங்கும் அதே நாற்றம். உலகமே நாற்றமடிப்பதைப் போல் உணர்கிறார். உலகம் நாறவில்லை. அவரது மீசைக்குள் ஒளிந்திருந்த அழுகிய பழத்துண்டுதான் இந்த நாற்றத்தின் காரணம் என்று அவர் கண்டுபிடிக்க பல மணி நேரங்களாயின.
சங்கடமான உண்மைகள் மிக அருகில் இருந்தாலும் அவைகளை நாம் உணர முடியாமல் போகலாம். யாராவது அந்த உண்மையை எடுத்துச் சொல்லும்போது, நாம் திருந்திக் கொள்ள வாய்ப்புண்டு, திருப்பி அடிக்கவும் வாய்ப்புண்டு. இயேசு தன் சொந்த ஊரில் உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்ததும், அவர்கள் மனதில் இயேசுவின் மீது இதுவரை இருந்த ஈர்ப்பு, மரியாதை, மதிப்பு ஆகியவைக் கொஞ்சம் கொஞ்சமாய் விடை பெற ஆரம்பித்தன.
‘இவர் யோசேப்பின் மகன்’ என்று இயேசுவின் பூர்வீகத்தை அவர்கள் அலசிய போது, அதை நினைத்து பாராட்டியதாக நற்செய்தி சொல்கிறது. ஆனால், பூர்வீகங்கள் அலசப்படும் போது பல நேரங்களில் "ஓ, இவன் தானே" என்ற ஏளனம் அங்கு வந்து சேரும். அதுவும் சாதிய எண்ணங்களில் ஊறிப்போயிருக்கும் இந்தியாவில், தமிழகத்தில் பூர்வீகத்தைக் கண்டுபிடிக்க நாம் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்காக அல்ல. மாறாக, மற்ற தேவையற்ற குப்பைகளைக் கிளற என்பது நமக்குத் தெரிந்த உண்மை. சுடுகின்ற உண்மைகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது, சங்கடமாய் இருந்தாலும், இந்த உண்மையையும் சொல்லியே ஆக வேண்டும்.

உண்மைகளை மருந்துகளோடு ஒப்பிட்டுப் பார்க்க விழைகிறேன். ஏனோ தெரியவில்லை... மருத்துவ உலகில் நலம் விளைவிக்கும் பல மருந்துகள் கசப்பாகவே உள்ளன. கசப்பான மருந்துகள் நாவுக்கு, நமது ருசிக்குப் பகைவர்கள். ஆனால், உடலுக்கு நண்பர்கள். கசப்பு மருந்துகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது, அவைகளைத் தேனில் குழைத்துக் கொடுப்போம். இதே கசப்பு மருந்தை நாம் ‘கேப்ஸ்யூலி’ல் அடைத்து முழுங்குவோம்.
உண்மை என்ற கசப்பையும், தேனில் குழைத்து, ‘கேப்ஸ்யூலி’ல் அடைத்துக் கொடுத்த இறைவாக்கினர்கள் உண்டு. சொல்ல வந்த உண்மையை நேரில் சொல்லாமல், கதை வழியே சொன்ன இறைவாக்கினர்கள் உண்டு. 2 சாமுவேல் நூலில் இப்படி ஒரு நிகழ்வைப் பார்க்கிறோம். (2 சாமு. 12: 1-14) தாவீது அடுத்தவரின் மனைவியை அபகரித்துக் கொண்டதை அவரது நண்பனும், இறைவாக்கினருமான நாத்தான் கதை மூலம் சொல்ல, கதை கேட்ட தாவீது கதையில் சொல்லப்பட்ட ஆள் மீது கோபம் கொண்டார். நாத்தான் அந்த ஆள் நீதான் என்று சொன்னார். நல்லவேளை, உண்மை உள்ளத்தை ஊடுருவிய போது, தாவீது மனம் திருந்துகிறார்.
ஆனால், உண்மைகள் சொல்லப்பட்ட பல நேரங்களில் இவ்வாறு நன்மைகள் நடப்பதில்லை. பெரும்பாலும் உண்மைகள் கோபத்தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்துள்ளன. விவிலியத்தில் பல இடங்களில் உண்மைகள் சொல்லப்பட்ட போது, அந்த உண்மைகளை ஊமையாக்க, உண்மை சொன்னவர்களை ஊமையாக்க, அவர்கள் உயிரைப் பறித்த சம்பவங்கள் பல உண்டு.
இன்று நற்செய்தியிலும் இயேசுவுக்கு அந்த நிலைதான். இயேசு சொன்ன உண்மைகளைக் கேட்க முடியாமல், அவர்கள் கோபம் கொலை வெறியாகிறது. இந்த முறை இயேசு தப்பித்துக் கொள்கிறார். அவர் நம்மைப் போல் ஒரு சராசரி மனிதராய் இருந்திருந்தால், "இந்த ஒரு அனுபவம் எனக்குப் போதும். நான் ஏன் இந்த ஊருக்கு உண்மைகளைச் சொல்லி ஏச்சும், பேச்சும் பெற வேண்டும்? விட்டிருந்தால், இவர்கள் நம்மை இன்று கொன்றிருப்பார்கள். தேவையில்லை இவர்கள் சகவாசம்." என்று இயேசு ஒதுங்கி இருக்கலாம். ஆனால், அன்று இறைவாக்குரைக்கத் தொடங்கிய அவரது பணி, கல்வாரி பலியில் தான் முடிந்தது.
நம் இறுதி சிந்தனை. இறைவாக்கினரின் வழியே கடவுள் பயன்படுத்தும் ஆயுதம் இறைவாக்கு. கொஞ்சமும் பூசி மெழுகாமல், உண்மையைக் கூறும் இறைவாக்கு அறுவைச் சிகிச்சையில் உயிரை எடுப்பதற்கு பதில், உயிரைக் கொடுப்பதற்கு பயன் படுத்தப்படும் கத்தியைப் போன்றது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் இறைவார்த்தையை ஒரு வாளுக்கு ஒப்புமைப்படுத்தி, அழகிய வரிகள் சொல்லப்பட்டுள்ளன. உடலினுள் சென்று உதவிகள் செய்யும் கத்தியைப் போல், மனதினுள் சென்று இறைவாக்கு நமக்கு நலம் தரும்படி, இந்த இறைவாக்குடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 4: 12

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது: இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது: ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது: எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது: உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.

24 January, 2010

If TODAY you hear God’s voice… இன்றே, இப்போதே...


Luke 4: 16-21 is one of my favourite passages in the Bible. This is popularly known as the Manifesto of Jesus. Unfortunately, the word ‘manifesto’ has many shady connotations now since the word has been misused by political parties and candidates. It is quite interesting to see that Jesus did not create this manifesto. He simply borrowed it from Isaiah. He made it his own by the master stroke he gave at the end. The punch line. Here is the gospel passage from Luke.

Luke 4: 16-21
And he came to Nazareth, where he had been brought up. And as was his custom, he went to the synagogue on the Sabbath day, and he stood up to read. And the scroll of the prophet Isaiah was given to him. He unrolled the scroll and found the place where it was written,
"The Spirit of the Lord is upon me,
because he has anointed me
to proclaim good news to the poor.
He has sent me to proclaim liberty to the captives
and recovering of sight to the blind,
to set at liberty those who are oppressed,
to proclaim the year of the Lord’s favor."
And he rolled up the scroll and gave it back to the attendant and sat down. And the eyes of all in the synagogue were fixed on him. And he began to say to them, "Today this Scripture has been fulfilled in your hearing."


The last line in this gospel was Jesus’ master stroke. He gave this punch line when all eyes were turned on him. Hence, his words must have gone home. What was so special about these words? The word ‘Today’ was special. Let me explain.
The Israelites living at the time of Jesus were trained to look to the future. Many of their teachers and prophets had insisted on the time to come. That was a safer bet than telling them that salvation had already come, since things looked as miserable as before. Jesus changed that perspective. He said TODAY fulfilment had come.
We have surely heard of the famous phrase: Grace of the Present Moment. Jesus lived the present, the here-and-now moment all his life. He tried his best to instill this thought into his people through his words and deeds. In his miracle at Cana (labelled as his first sign), “he told the workers, ‘Now draw some out and take it to the master of the banquet.’” (John 2:8). When Jesus told the workers ‘now’, it was not clear whether water had turned into wine. Still, the workers did it and it was already wine!
When he asked the ten leprosy patients to go and show themselves to the priests, they were not cured yet. As they were going, they were healed. (Luke 17). Similarly, he tells the paralytic to carry his bed and walk immediately. (Matthew 9). The miracle of feeding the people stranded in the desert once again illustrates that Jesus believed in the here and now. When the disciples asked Jesus to send the people away, he asked them how much food they had there and then. (Mark 6:38) He began the miracle with what they had not with what they would have or could have had.
In the famous prayer taught by Jesus, he asks us to pray: ‘Give us TODAY our daily bread.’ When he was hanging on the cross, one of them crucified along with Jesus made an impossible request, namely, to give him a place in the Kingdom. How could someone think of a Kingdom while hanging on a cross? Anyone in that position would have given up on the Kingdom or, at least, postponed such thoughts. Not Jesus. Although he was fighting for every breath on the cross, Jesus still spoke with assurance, “I tell you the truth, TODAY you will be with me in paradise.” (Luke 23:43) What better proof is needed to say that Jesus was a PRESENT, HERE-AND-NOW person. The grace of the present moment was overflowing in him.
Living in the present moment is a real challenge. A quick look at a typical day in our life would prove this point. The moment we wake up, many thoughts crowd our mind… most of them either memories of what happened the previous day, especially the sad ones, or anxieties of the day ahead of us. I am not sure how many of us notice the myriad little miracles that happen around us day after day… like the water that refreshes our mouth and face every morning, the exercises that awaken the body fully. If we are in the habit of doing yoga, or meditation in the morning, I don’t know how many of us are aware of the cool air that enters our nostrils when we breathe in and the hot air that is breathed out.
Likewise, one can surely be TOTALLY present at breakfast, at the little journey we take to the school or office, at the work spot, at the party with our friends… myriads of possibilities! If only we are totally involved with the present moment, we can surely avoid many, many mistakes and subsequent regrets. Living in regrets is one sure way to kill TODAY.
Jesus told the people in Nazareth that ‘today’s could bring them salvation. Jesus is still giving us the same good news.
Today, if you hear his voice, do not harden your hearts… (Psalm 95: 7-8)

Here is a song that talks of ‘today’ based on Psalm 95 and Hebrews.
http://www.apologetix.com/music/music.php

Yes Today
Parody of "Yesterday" by The Beatles
(Psalm 95:7-8; Hebrews 3:7-8, 3:15, 4:7)

If today you should hear His voice don't turn away
Now's the time that you should kneel and pray
And finally say yes today
Suddenly you might have to spend eternity
In a place you never want to be
Say yes today and just believe
Christ – He died for all -- there's no soul He wouldn't save
There's just one thing you have to do – say yes today
"Yes" today seems like such an easy thing to say
All you need is faith, so why delay?
Say, "I believe," and "yes" today
Why you might say no, I don't know ... I couldn't say
I'd say something's wrong if you don't say "Yes" today
Yes, today might just be your final chance to pray
All you need is faith, so why delay?
Say, "I believe," and "yes" today
Mmmmmmmmm


©2005 Parodudes Music, Inc.

சனவரி 24 - நாளும் ஒரு நல்லெண்ணம்
வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை என்பது நாம் அடிக்கடி கேட்கும் ஒரு அழகிய வாழ்த்து. இப்படி ஒருமுறை வாழ்வதை கடந்த அல்லது எதிர் காலங்களில் வாழாமல், நிகழ் காலத்தில் வாழ்ந்தால், ஒரு தலைமுறை அல்ல... பல தலைமுறைகள் நம்மை வாழ்த்தும்.
இன்று வாழ்வதை, இப்போது வாழ்வதைப் பற்றி பலர் பல வகையில் கூறியுள்ளனர். அவைகளில் ஒரு சில இதோ:
தொலைபேசியைக் கண்டுபிடித்த Alexander Graham Bell சொன்னது இது: "ஒரு கதவு மூடப்படும்போது, மற்றொரு கதவு திறக்கிறது. மூடிய கதவையே நாம் ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதால், திறந்துள்ள கதவைப் பார்க்கத் தவறுகிறோம்” என்று.
"கடந்த காலத்தை மார்போடு அணைத்துக்கொள்ளும் போது, நிகழ்காலத்தை அணைக்க கைகளும், மார்பில் இடமும் இல்லாமல் போகும்." இதைச்சொன்னவர் Jan Glidewell.
"எந்த ஒரு செல்வந்தனாலும், கடந்த காலத்தை விலை கொடுத்து வாங்க முடியாது." இப்படி சொல்லியிருக்கிறார் Oscar Wilde.
ஒன்றே செய்யினும், நன்றே செய்கவென்றும், நன்றே செய்யினும் இன்றே செய்கவென்றும் நம் தமிழ் மரபில் சொல்லிவந்திருக்கிறோம். செயல் படுத்துவோம் இன்றே. இப்போதே.

ஞாயிறு சிந்தனை
இந்த ஞாயிறு சிந்தனை நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருக்கும் அன்புள்ளங்களே, உங்கள் அனைவரையும் ஒரு கற்பனை வகுப்பறைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நமக்கு வகுப்பு நடத்தப்போகும் ஆசிரியர் யார் தெரியுமா? சரியாகச் சொன்னீர்கள்.. இயேசு.
நாம் அனைவரும் ஏகப்பட்ட மகிழ்ச்சியில், படபடப்பில், எதிர்பார்ப்பில்... கொஞ்சம் பக்தியிலும் கூட அங்கே அமர்ந்திருக்கிறோம். இயேசு வகுப்பறைக்குள் வருகிறார். ஒரே ஆரவாரம், கைதட்டல், வரவேற்பு. இந்த ஆரவாரங்கள் எல்லாம் ஓய்ந்தபின், இயேசு நம்மை பார்த்து எடுத்த எடுப்பில் ஒரு கேள்வி கேட்கிறார்: “இங்கு அமர்ந்திருக்கும் உங்களில் எத்தனை பேர் இன்றைக்கு வாழ்கிறீர்கள்?” இது தான் அவரது கேள்வி. கேள்வியின் அர்த்தம் சரிவரத் தெரியவில்லை. நமது புருவங்கள் சுருங்குகின்றன. ஆனாலும், அனைவரும் கைகளை உயர்த்துகிறோம். இயேசு ஒரு புன்முறுவலுடன், "என் கேள்வியை நன்கு புரிந்து கொண்டு, பிறகு கைகளைத் தூக்குங்கள். மீண்டும் கேட்கிறேன். உங்களில் எத்தனை பேர் உண்மையில் இன்றைக்கு வாழ்கிறீர்கள்?" இயேசு 'இன்றைக்கு' என்ற வார்த்தையை அழுத்திச் சொல்கிறார். நாம் சிந்திக்கத் துவங்குகிறோம். இயேசு தொடர்ந்து பொறுமையாய் விளக்குகிறார். "இன்றைக்கு வாழ்வதென்பது, நேற்றைய நினைவுகளில் சிக்கிக்கொண்டோ, நாளையக் கனவுகளைத் தாங்கிக்கொண்டோ வாழ்வதல்ல. இன்றைய நாளின், நிகழ் காலத்தின் ஒவ்வொரு மணித்துளியிலும், நொடியிலும் வாழ்வது. உங்களில் எத்தனை பேர் இந்த வகுப்பில், இந்த நேரத்தில் முழுமையாக இங்கு இருக்கிறீர்கள், முழுமையாக வாழ்கிறீர்கள்?.." என்று இயேசு விளக்கம் சொல்லி, கேள்வியை மீண்டும் கேட்கும் போது உயர்த்தப்பட்ட நமது கைகள் ஒவ்வொன்றாய் கீழே இறங்குகின்றன.
அன்புள்ளங்களே, இன்றைய நாளில், இந்தப் பொழுதில் வாழ்வதென்பது அவ்வளவு எளிதல்ல.
நம் கற்பனை வகுப்பில் சொல்லித்தந்த இந்த பாடத்தை அன்று நாசரேத்தின் தொழுகைக் கூடத்திலும் தன் மக்களுக்குச் சொல்லித்தந்தார் இயேசு. அந்த நிகழ்வைக் கூறும் இன்றைய நற்செய்திக்குச் செவி மடுப்போம்.

லூக்கா 4: 16-21
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.” பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதற்கு, நாளை நல்ல காலம் பிறக்கும் என்று கனவு காண்பதற்கு அதிகம் பழகிப் போயிருந்தனர். நாளை நமக்கு விடிவு வரும் என்று அடிக்கடி பேசிவந்த அவர்களிடம், இயேசு அந்தத் தொழுகைக் கூடத்தில் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை: "நீங்கள் கேட்ட மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று." இன்று, இப்போது, இங்கே... நிறைவு, விடிவு, மீட்பு வந்து விட்டது என்று இயேசு கூறினார். தான் கூறியதை நம்பியவர். வாழ்ந்தும் காட்டியவர்.
இயேசு உலகில் வாழ்ந்த போது ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு பொழுதையும் முழுமையாக வாழ்ந்தவர். நேற்று, நாளை என்பதெல்லாம் அவர் மனதை, வாழ்வை ஆக்ரமிக்கவில்லை. ஆக்ரமிக்க விடவில்லை அவர். அவர் ஆற்றிய புதுமைகள், சொன்ன சொற்கள், இவைகளைச் சிந்தித்தால், அவர் நிகழ் காலத்தில், நிகழ் நொடியில் வாழ்ந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு சில.
நாம் கடந்த விவிலியத் தேடல்களிலும், ஞாயிறு சிந்தனையிலும் பகிர்ந்து கொண்ட அந்தக் கானாவூர் திருமணப் புதுமை இயேசுவின் முதல் அருங்குறி என்று சொல்லப்படுகிறது. இந்தப் புதுமையில், தண்ணீர் திராட்சை இரசமாய் மாறியதைக் குறிக்க அவர் சொன்ன வார்த்தைகள்: (யோவான் 2:8) "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்." அவர் செய்த முதல் புதுமையிலேயே இப்போது என்ற எண்ணத்தை விதைத்தார்.
லூக்கா நற்செய்தியில் பத்துத் தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கும் போது, "நீங்கள் நாளைச் சென்று, குருக்களிடம் காட்டுங்கள்." என்று சொல்லாமல், (லூக்கா 17:14) நீங்கள் போய் உங்களை குருக்களிடம் காட்டுங்கள் என்றார். இயேசு இப்படி சொன்னபோது, தொழுநோய் அவர்களை விட்டு நீங்கியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் அப்போதே நம்பிக்கையுடன் எழுந்து போனார்கள். போகும் வழியில் குணமடைந்தார்கள். இதே போல், (மத்தேயு 9:6) முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, படுக்கையைத் தூக்கிக்கொண்டு உடனே நடக்கச் சொன்னார். பாலை நிலத்தில் ஐந்தாயிரம் பேருக்கு உணவளித்த புதுமையில் (மாற்கு 6:38) "உங்களிடம் இங்கே எவ்வளவு உணவிருக்கிறது?" என்ற கேள்வியுடன் அந்தப் புதுமையை ஆரம்பித்தார்.
இயேசு சொல்லித்தந்த அந்த அற்புதமான செபத்திலும், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு நாளை தாரும்." என்றா சொல்லித்தந்தார்? இல்லையே. மாறாக, இன்று தாரும் என்றார். இன்றே, இப்போதே எங்களுக்கு உணவைத் தாரும், தந்தையே என்று வேண்ட சொல்லித்தந்தார்.
இன்று இப்போது என்று வாழ்ந்து காட்டிய இயேசு, இறுதியில் கல்வாரியில் சிலுவையில் தொங்கியபோதும் அதே எண்ணங்களை வெளிப்படுத்தினார். (லூக்கா 23:43) "இன்றே என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்று இயேசு கூறியது அவரது இறுதி வாக்கியங்களில் ஒன்று.
இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டவர் விண்ணரசில் நுழைய அனுமதி கேட்டபோது, அந்தக் கொடிய துன்பத்தின் உச்சியில், இயேசு ஒரு விரக்தியுடன் "என்ன பெரிய அரசு... அந்த அரசுக்கு வந்த கதியைத்தான் பார்க்கிறீரே. ஒரு வேளை நாளை அந்த அரசு வரலாம். அப்போது நான் அந்த அரசில் ஒரு வேளை நுழைந்தால், நீரும் நாளை என்னோடு வரலாம்." என்று நம்பிக்கை இழந்து சொல்லியிருக்கலாம். ஆனால், அதற்கு பதில், இயேசு கூறிய நம்பிக்கையூட்டும் சொற்கள் இவை: "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்." இயேசு இன்றையப் பொழுதில், இப்போதைய நொடியில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்பதற்கு இதைவிட சக்திவாய்ந்த சாட்சி இருக்க முடியாது. ‘நிகழ் பொழுதின் அருள்’ என்று பொருள்படும் The Grace of the Present Moment என்ற ஆங்கிலச் சொற்றொடரின் முழு விளக்கமாக இயேசு வாழ்ந்தார்.
நிகழ் பொழுதின் அருளில் நாம் வாழ்கிறோமா என்பதைச் சிந்திப்பது நல்லது. நமது தினசரி நிகழ்வுகளைக் கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.
ஒரு சராசரி காலை நேரத்தைக் கற்பனை செய்து பார்ப்போம். காலை எழுந்ததும், சுய நினைவு தெளிந்ததும், நேற்றைய நிகழ்வுகள், முக்கியமாக கசப்பான நிகழ்வுகள் நமது நினைவை நிறைக்கும். அல்லது அன்று நாம் எதிர்கொள்ள விருக்கும் வேலைகளைப் பற்றிய கவலைகள் உள்ளத்தை நிறைக்கும்.
நம்மில் எத்தனை பேர் பல் துலக்கும் போது வாயில் நடக்கும் விந்தைகளைச் சிந்திக்கிறோம்? அல்லது முகத்தில் நாம் தெளிக்கும் அந்த நீரினால் அங்குள்ள செல்களெல்லாம் கண்விழித்து, குளித்து, சிலிர்த்து முகமெல்லாம் இரத்த ஓட்டம் பரவுவதை உணர்கிறோம்?
அதன் பின் ஒரு வேளை நாம் ஒரு சில உடல் பயிற்சிகள் செய்தால், உடலின் பல பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் பெறுவதை எத்தனை பேர் அனுபவித்து, ரசித்திருக்கிறோம்? காலை வேளையில் நம்மில் சிலர் தியானத்திலோ, யோகப் பயிற்சிகளிலோ ஈடுபட்டால், நாம் உள்ளிழுக்கும் சுவாசம் குளிர்ச்சியாகவும், வெளியில் விடும் சுவாசம் சூடாகவும் இருப்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?
அதன் பின் காபி, காலை உணவு, பள்ளிக்கு அல்லது அலுவலகத்திற்கு மேற் கொள்ளும் பயணம் என்று நாம் அனுபவித்து ரசிக்கக் கூடிய ஆயிரமாயிரம் சின்னச் சின்னச் செயல்கள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. நம்மில் எத்தனை பேர் இந்தச் செயல்களையெல்லாம் முழு ஈடுபாட்டுடன் ரசித்துச் செய்கிறோம்?
முக்கியமாக சாப்பிடும் போது, வேறு சிந்தனைகளில் மூழ்கிப் போய் என்ன சாப்பிடுகிறோம் என்பதையும் மறந்து ஏதோ ஒரு கடமையைச் செய்வதைப் போல் சாப்பிடுவது மருத்துவ கண்ணோட்டத்தின் படி நம் உடலுக்கு நல்லதல்ல என்பதை நாம் அறிந்தவர்கள் தானே. இருந்தாலும், சாப்பிடும் நேரங்களில் பல சிந்தனைகளுடன் சாப்பிட்டு, அதன் பின் விளைவாக, மருத்துவரை எத்தனை முறை நாம் நாடியிருக்கிறோம்? நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், வாழும் ஒவ்வொரு நொடியையும் ஈடுபாட்டுடன் வாழ்ந்தால், மருந்துக்கும் மருத்துவர் பக்கம் போகத் தேவையில்லையே. நிகழ் பொழுதின் அருளில் வாழ்வது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் அதிக பயன் தரும்.
இயேசு நாசரேத்தின் தொழுகைக் கூடத்தில் வாசித்த ஏசாயாவின் சொற்கள் பல சமுதாயச் சிந்தனைகளை எழுப்பக் கூடியது. அவைகளைப் பற்றி சிந்திக்காமல், இன்று இப்போது என்று நான் பேசியது இன்றைய நற்செய்திக்கு சரியான விளக்கம் இல்லை என்று உங்களில் ஒரு சிலர் நினைக்கலாம்.
இயேசுவின் சமுதாயச் சிந்தனைகள் நாம் அடிக்கடி கேட்டும் உணர்ந்தும் உள்ள உண்மைகள். சமுதாய நீதி பற்றிய கனவுகள் என்றோ எப்போதோ நனவாகும் என்று எண்ணிக் கொண்டிருந்த, வாழ்ந்து கொண்டிருந்த யூத மக்களுக்கு இயேசு கொடுத்த இன்றைய, இப்போதைய பாடங்கள் நம்பிக்கையை வளர்த்த முதல் பாடங்கள். சமுதாய மாற்றங்கள் இனிவரும் என்றல்ல, இப்போதே வந்து விட்டது என்பதை அவர்கள் நம்ப வைத்தது இயேசுவின் முதல் வெற்றி என நான் நினைக்கிறேன். இன்று, இப்போது என்று வாழ்வில் நாம் முழுமையாக ஈடுபட்டால், அப்படி நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் ஈடுபட்டால், அந்த ஈடுபாடு நாம், நமது என்ற குறுகிய வட்டத்தை விட்டு நம்மை வெளியேற வைக்கும். சமுதாய ஈடுபாட்டையும் வளர்க்கும். ஈடுபாட்டுடன் ஒவ்வொருவரும் வாழ்ந்தால், சமுதாயத்தில் குறைகள் அதிகம் தோன்றாது. அப்படியே தோன்றும் குறைகளைக் களைய அன்றே, அப்போதே செயல் படுவோம். தீர்வுகளை அன்றே காண்போம். குறையற்ற சமுதாயம் உறுதியாக உருவாகும். மன்னிக்கவும். ‘உருவாகும்’ என்பது எதிர்காலம். சீரியதொரு சமுதாயம் உருவாகிறது. உருவாகிவிட்டது... நல்லவைகள் நடக்கின்றன என்று நம்புகின்றோம்.

20 January, 2010

FILL UP TO THE BRIM… விளிம்பு வரை நிரப்புவோம்...


John 2: 5-12
His mother said to the servants, "Do whatever he tells you."
Now there were six stone water jars there for the Jewish rites of purification, each holding twenty or thirty gallons. Jesus said to the servants, "Fill the jars with water." And they filled them up to the brim. And he said to them, "Now draw some out and take it to the master of the feast." So they took it. When the master of the feast tasted the water now become wine, and did not know where it came from (though the servants who had drawn the water knew), the master of the feast called the bridegroom and said to him, "Everyone serves the good wine first, and when people have drunk freely, then the poor wine. But you have kept the good wine until now." This, the first of his signs, Jesus did at Cana in Galilee, and manifested his glory. And his disciples believed in him.


Some of the Biblical passages are like diamonds. They exhibit different colours and shades. For instance, the famous Psalm 23 – The Lord is my shepherd, The Magnificat, The Sermon on the Mount… The wedding at Cana is also one such passage that lends itself to many deep reflections. We have already gone through this miracle in two parts. Here is the Third Part.
We pick up where we left Part II with the beautiful words of Mary: “Do whatever he tells you.” The workers were awaiting some directions from Jesus. They had plenty to do. They were quite tense about the shortage of wine. Spare a thought for any worker in a wedding celebration. Every Tom, Dick, Harry, Paul, Peter… almost every one would like to order them about. They wouldn’t know whom to oblige and whom to ignore. Although they saw nothing special in this stranger, still they awaited his directions. Though they were’nt impressed with this gentleman, they knew that the lady who directed them to Jesus was very kind and gentle working with them for the past two days. She had solved quite many problems they faced. This young man happened to be her son. So… they awaited his directions.
Jesus looked around. He saw the stone jars nearby. He told the workers to fill those jars with water. I can well Imagine the shock registered on the faces of those workers. Fill up those jars with water? What type of a direction was that? To help us understand better what Jesus asked them to do, we can imagine a present day wedding. Imagine a wedding that takes place in a remote village or a small town where houses or reception halls do not have running water. Naturally, large vessels or plastic buckets filled with water would be placed at the entrance to the dining hall for people to wash their hands. In some places they would have cement tubs filled with water. It is unthinkable that any one would drink water from these vessels. Jesus wanted the workers to fill up those vessels.
Was this a joke? There was shortage of wine and this man told them to fill up jars meant for purification. It was true that those jars were empty since all the guests had used the water before entering the banquet hall. True, it was the duty of the workers to fill them up again. But, this was not the time. Should they fill up those jars? Such thoughts were filling up the minds of the workers. Still, they began doing what Jesus told them to do. Something in Jesus’ voice made them follow his directions. They could see that he was quite serious about what he was saying.
Once the jars were filled up, Jesus said to them, "Now draw some out and take it to the master of the feast." So they took it. When the master of the feast tasted the water now become wine Wait! When did the water become wine? Usually, when Jesus performed a miracle either a word was spoken or a gesture was done. In this event, no such mention is made. There is nothing like “Jesus stretched out his hand and blessed the water…” etc. John mentions nothing of this. Then, how come the water turned into wine?
Here is the master stroke from John. Jesus makes two statements: "Fill the jars with water." and "Now draw some out and take it to the master of the feast." Between these two statements, John’s master stroke comes in the form of a sentence. They (the workers) filled them up to the brim. Dear friends, this act of the workers paved the way for the miracle. This act was part of the miracle.
If the workers had worked under their negative feelings of shock, disbelief, and irritation, they would have done the job half heartedly. Only half jars would have been filled. But, John says that they FILLED THE JARS UP TO THE BRIM. This means that some change had occurred in their hearts. This change of heart paved the way for the change of water into wine. I am sure, dear friends, that most of us have experienced this in our lives. Whenever we had done something with our whole heart, not only were our hearts filled with peace and joy to the brim, but quite a few other changes did happen. Isn’t it true?

What followed this change of water into wine also is worth reflecting on. After tasting the superior wine, the master of the banquet was curious to know what had happened. He checked with the bridegroom and he too was ignorant. Once again, as an aside John mentions that the servants knew. I would like to see this as John’s way of saying that those who were important in the wedding feast, including the bridegroom, were not part of the miracle. Only the workers were.
In a wedding feast we use many articles. Not all of them gain importance. Just check any wedding album. You can see what I am trying to say. In a wedding album the special chairs and the car used by the couple would figure in most of the pictures. What about the wash tubs, the vessels used for washing our hands etc.? Do they figure in our albums? Hardly. Unfortunately, the same is true about the workers. Most of them do appear in the albums, mainly as background doing some odd jobs. Although they slog the whole day, they are hardly given their due recognition.
Changing water into wine was surely a miracle. Changing the order of importance was another miracle that took place in Cana. The workers were an integral part of the miracle. The jars used for washing purposes had become the vessels of God’s grace, abundance and miracle. Fringe persons, fringe things had taken the centre-stage while the central figures had vanished from limelight. The Kingdom of God, as some authors would say, is all about reversals. At Cana in Galilee the Kingdom was inaugurated.Good to think of the core and fringes of our lives at the beginning of another new year. If need be, we should change – change the core into the fringe and vice versa.


ஒரு சில விவிலியப் பகுதிகள் அள்ள, அள்ளக் குறையாத அமுதசுரபியைப் போன்றவை. வைரங்களைப் போல பல்வேறு கோணங்களில் பல்வேறு ஒளியில் பல்வேறு அழகுடன் இப்பகுதிகள் மின்னும். கானாவூர் திருமணப் பகுதியும் இப்படி ஒரு வைரம். இந்த வைரத்தின் இரு பகுதிகளை இதுவரைச் சிந்தித்தோம். இன்று கானாவூர் திருமணம் - பாகம் மூன்று.
திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்று ஆரம்பித்து, மரியன்னையும் இயேசுவும் கூறியவைகளை சென்ற ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்துகொண்டோம். இன்று இந்தப் புதுமையின் மையப்பகுதியான தண்ணீர் திராட்சை இரசமாய் மாறிய நிகழ்வைச் சிந்திப்போம். இந்தப் புதுமை எப்போது, எப்படி நிகழ்ந்தது?
மரியா பணியாளர்களிடம் "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்." என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார். பணியாளர்களுக்குக் குழப்பம்.
மரியன்னை 'அவர்' என்று குறிப்பிட்டுச் சொன்ன அந்தப் புது மனிதரை அவர்கள் இதுவரைப் பார்த்ததில்லை. அந்தப் புதிய இளைஞனைப் பார்த்தால், இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பவர் போல் அவர்களுக்குத் தெரியவில்லை. இருந்தாலும், கடந்து மூன்று அல்லது நான்கு நாட்களாய் தங்களுடன் சேர்ந்து அதிகம் வேலைகள் செய்தவர் மரியன்னை என்பதால், அவர் மட்டில் அதிக மதிப்பு அவர்களுக்கு இருந்தது. அதுவும் அந்த அன்னை இதுவரை பல தேவைகளைப் பூர்த்தி செய்து, பல பிரச்சனைகளைத் தீர்த்தத்தைக் கண்கூடாகப் பார்த்தவர்கள் அவர்கள். எனவே, அந்த அன்னை சொன்னால், அதில் ஏதாவதொரு அர்த்தம் இருக்கும் என்று அவர்கள் நம்பினர். மேலும், இந்த இளைஞன் அந்த அம்மாவுடைய மகன் என்றும் கேள்விப்பட்டதால், அவர் சொல்வதைக் கேட்பதற்கு அவர்கள் மனம் ஓரளவு பக்குவப்பட்டிருந்தது.
இவர்கள் இப்படி சிந்தித்துக்கொண்டிருந்த போது, இயேசு தன்னைச் சுற்றிலும் பார்த்தார். அவர்கள் நின்றுகொண்டிருந்த முற்றத்தில் கை, கால் கழுவுவதற்கென தொட்டிகள் இருந்தன. “யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.” இது யோவான் நற்செய்தியில் நாம் வாசிக்கும் வரிகள்.
இயேசு பணியாளரிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். இயேசு இப்படிச் சொன்னதும், பணியாளர்கள் மனதில் ஓடிய எண்ணங்களைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். இந்தக் காட்சியை நாம் வாழும் காலத்திற்கு ஏற்றது போல் சொல்லவேண்டுமெனில், ஒரு கிராமத்தில், அல்லது சிறு ஊரில் நடக்கும் திருமண வைபவத்தைக் கற்பனை செய்து கொள்வோம். கை, கால் கழுவ குழாய் வசதி இல்லாத இடங்களில், பெரிய பாத்திரங்களில், அல்லது பிளாஸ்டிக் வாளிகளில் வெளியே தண்ணீர் வைத்திருப்போம். அந்தப் பாத்திரங்களுக்குப் பதில் ஒரு சில இடங்களில் சிமென்ட் தொட்டிகளிலும் தண்ணீர் இருக்கும். அந்தத் தண்ணீரை எடுத்து யாரும் குடிப்பதில்லை, இல்லையா? அந்தப் பாத்திரங்களில், அல்லது தொட்டிகளில் தண்ணீரை நிரப்பச் சொன்னார் இயேசு.
தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப இயேசு சொன்னதும், பணியாளர்களுக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, கொஞ்சம் எரிச்சலும் இருந்திருக்கும். பந்தியில் பரிமாற திராட்சை இரசம் இல்லையென்று அலைமோதிக் கொண்டிருக்கும் போது, இப்படி ஒரு கட்டளையை இயேசு தருவார் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விருந்தினர்கள் எல்லாரும் கை, கால் கழுவிவிட்டு பந்தியில் அமர்ந்து விட்டதால், அந்தத் தொட்டிகளில் தண்ணீர் ஏறக்குறைய காலியாகி விட்டது. அவற்றில் மீண்டும் நீர் நிரப்ப வேண்டியது பணியாளர்களின் கடமை. அந்தக் கடமையை அவர்கள் சரிவரச் செய்யவில்லை என்பதை இயேசு சொல்லாமல் சொல்கிறாரோ என்று அவர் மீது எரிச்சல். தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதற்கும், திராட்சை இரசம் கிடைப்பதற்கும் என்ன சம்பந்தம்? இப்படி பல எண்ணங்கள் பணியாளர்களின் மனங்களில் ஓடிக்கொண்டிருந்தன.
திருமண நேரங்களில் பணியாளர்களின் பாடு மிகவும் கடினமான ஒன்று. பலரும் கட்டளை இடுவார்கள். பல பக்கங்களிலிருந்தும் ஏச்சும் பேச்சும் அவர்கள் கேட்க வேண்டியிருக்கும். யார் சொல்வதையும் தட்டிக் கழிக்க முடியாது. யாரையும் பகைத்துக் கொள்ள முடியாது. யார் முக்கியம், முக்கியமில்லை என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. எனவே, எல்லாருடைய போக்குப்படியும் நடக்க வேண்டும். அதுதான் பாதுகாப்பான வழி. கானாவூர் பணியாளருக்கும் இதேநிலை. அந்த இளைஞன் சொன்னதை பேசாமல் செய்து விடுவது நல்லது என்று நினைத்தனர். அவர்கள் அந்த நேரத்தில் மரியன்னையை பற்றியும் நினைத்துப் பார்த்திருப்பார்கள். அந்த அம்மா "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்." என்று சொல்லிச் சென்ற சொற்கள் அவர்கள் உள்ளத்தில் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தன. மேலும், தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்று அந்த இளைஞன் சொன்னபோது, அந்தக் கட்டளையில் ஒலித்த ஒரு தனிப்பட்ட அதிகாரம் அவர்கள் மனதில் எழுந்த பல குழப்பங்களைத் தீர்த்தது போல் உணர்ந்தனர். தாயின் தாலாட்டுக் குரலில் கட்டுண்டு நம்பிக்கையோடு கண்ணுறங்கும் குழந்தையைப் போல் இயேசுவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் தொட்டிகளை நிரப்ப ஆரம்பித்தனர். அங்கு நடந்ததைக் கூறும் யோவான் நற்செய்தி இதோ:

யோவான் நற்செய்தி, 2: 5-9
இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.

பணியாளர்கள் தொட்டியில் ஊற்றியது தண்ணீர். ஆனால், அதை அவர்கள் மொண்டு எடுத்துச் சென்றபோது, அது இரசமாக மாறியிருந்தது. எப்போது, எப்படி இந்த புதுமை நடந்தது?
வழக்கமாக, இயேசுவின் புதுமைகளில் அவர் சொல்லும் ஒரு சொல்லோ, அல்லது அவரது ஒரு செயலோ புதுமைகளை நிகழ்த்தும். ஆனால், இந்தப் புதுமை நடந்த போது, அப்படி தனிப்பட்ட வகையில் இயேசு எதையும் சொல்லவில்லை. செய்யவுமில்லை.
"தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொடுங்கள்" என்றார். இவ்விரு கூற்றுகளுக்குமிடையே, அவர் நீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் மீது கைகளை நீட்டியதாகவோ, வேறு எதுவும் சொன்னதாகவோ நற்செய்தியில் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், இயேசுவின் இந்த இரு கூற்றுகளுக்குமிடையே, யோவான் ஒரு அழகிய வாக்கியத்தைக் கூறியுள்ளார். 'தண்ணீர் நிரப்புங்கள்' என்று இயேசு சொன்னதும், அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள். இதுதான் அந்த வாக்கியம். மிகவும் பொருள்நிறைந்த வாக்கியம். என்னைப் பொறுத்தவரை, எப்போது அந்தப் பணியாளர்கள் விளிம்பு வரை, தொட்டிகள் நிறைந்து வழியும் வரை நீர் நிரப்பினார்களோ, அப்போது அந்தத் தண்ணீர் திராட்சை இரசமாக மாறிய புதுமை நிகழ்ந்தது.
இயேசு சொல்லியதைக் கேட்டு குழப்பம் கோபம் இவைகளையே மனதில் தாஙகி, அந்தப் பணியாளர்கள் செயல்பட்டிருந்தால், அந்தத் தொட்டிகள் அரைகுறையாய் நிரப்பப்பட்டிருக்கும். ஆனால், யோவான் தெளிவாகக் கூறியுள்ளார்: அவர்கள் அத்தொட்டிகளை விளிம்பு வரை நிரப்பினார்கள் என்று. அப்படியெனில் அந்த பணியாளர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. இந்த உள்ள மாற்றம் தான் தண்ணீர் இரசமாக மாறிய அந்த மாற்றத்தையும் உருவாக்கியது. தங்கள் அதிர்ச்சி, தயக்கம், எரிச்சல் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு, அவர்கள் செய்யும் செயலை முழுமையாகச் செய்த அந்த நேரத்திலேயே, அவர்கள் ஊற்றிய தண்ணீர் திராட்சை இரசமாக மாறியது. முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் மன நிறைவைத் தருவதோடு வாழ்வில் மாற்றங்கள் பலவற்றையும் உருவாக்கும்.
இறுதியாக ஒரு சிந்தனை. புதுமையாய்த் தோன்றிய இந்த இரசம் எங்கிருந்து வந்ததென பந்தி மேற்பார்வையாளனுக்குத் தெரியவில்லை. மண மகனைக் கூப்பிட்டு கேட்கிறார். அவருக்கும் தெரியவில்லை. ஆனால், பணியாளருக்குத் தெரிந்திருந்தது. இன்றைய நற்செய்தியில் நாம் கேட்ட இறுதி வாக்கியங்கள் இவை.
“பணியாளருக்குத் தெரிந்திருந்தது” என்ற யோவானின் இந்தக் கூற்றை நான் இப்படி பார்க்க விழைகிறேன். மையங்கள் ஓரமாவதையும், ஓரங்கள் மையமாவதையும் யோவான் இந்த வாக்கியத்தில் சொல்கிறார். இதைப் புரிந்து கொள்ள முயல்வோம்.
திருமண வைபவங்களில் பல பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், எல்லாப்பொருட்களும் முக்கியத்துவம் பெறுவதில்லை. மணமகன், மணமகள் இவர்கள் அமரும் நாற்காலிகள் புகழ் பெறலாம், எல்லா புகைப்படங்களிலும் இடம் பெறலாம். கை, கால்களைக் கழுவும் தொட்டிகள் பொதுவாகப் புகழ் அடைவதில்லை. புகைப் படங்களில் இடம் பெறுவதில்லை. அதே போல், இந்த வைபவங்களில் முழு நேரமும் பணிகள் செய்யும் பணியாளர்களைப் பற்றி யாரும் பெரிதாக நினைப்பதில்லை. திருமணப் புகைப்படங்கள் அடங்கிய எந்த ஒரு ஆல்பத்தையும் திறந்து பாருங்கள். அங்கு பணியாளர்களின் படங்கள் எல்லாமே, ஏதாவதொரு பணியை அவர்கள் செய்வதுபோல் இருக்குமே ஒழிய, அவர்களை மையப்படுத்தி இருக்காது. இயேசுவின் இந்தப் புதுமை வழியாக, அந்தத் திருமணத்தில் மையமான புள்ளிகள் எல்லாமே மறைந்து விட்டனர். ஓரத்தில் இருந்த பணியாளர்கள் இயேசுவுடன் சேர்ந்து, புதுமையின் நாயகர்களாயினர். யாருடைய கவனத்தையும் ஈர்க்காத நீர்த்தொட்டிகள் இறைமகனுடைய கவனத்தை ஈர்த்தன. அவரது புதுமைக்கு மையமாயின. நம் வாழ்விலும், எதை எதை மையப்படுத்துகிறோம். அல்லது ஓரத்தில் ஒதுக்கி வைக்கிறோம் என்பதையெல்லாம் புத்தாண்டின் துவக்கத்தில் நினைத்துப் பார்ப்பது நல்லது. மையங்களும், ஓரங்களும் மாறவேண்டுமெனில், துணிவுடன், முழு மனதுடன் மாற்றங்களைச் செய்ய அந்த இறைவன் துணையை நாடுவோம்.

17 January, 2010

THEY HAVE NO WINE… திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது…


A quick recap. There was a wedding at Cana. The mother of Jesus was there. She was there much ahead of the wedding day to take care of all their needs… very typical of Mary. She realised that wine was running short. This is the summary of the thoughts I shared in Wedding at Cana Part I. Let us proceed to Wedding at Cana Part II.
The wedding dinner at Cana was on. Jesus and his disciples were enjoying a good meal. It may be good to reflect on Jesus being present at the wedding. Why would the Son of God be present in a wedding? Simple. Weddings are happy occasions for people to come together. Wherever people are, God would be there. Already in creating human beings God gave us a clear message: God loves to mix with human beings. God is a ‘family’ person. The very core of God is being a Triune God… no single, solitary Being. Wedding is a unique occasion where two human beings express their special love to one another. So God, in the person of Jesus, was present there to stamp his approval on this special love. Why would the Son of God be present in the wedding? Because, he was the Son of God.
From the point of view of the highly hectic and seemingly more efficient way of life prevalent in the 21st century, one more practical question about Jesus’ presence at Cana would arise: Jesus had very little time to save the world… hardly three years. Shouldn’t he be spending this time more efficiently saving the world by preaching, healing, trying to establish his Kingdom? Good, practical 21st century question. The answer to this lies in the thirty years Jesus spent in Nazareth. We have already spoken about this in one of our earlier reflections: Kindly check the blog I posted on Saturday, January 2, 2010 (SAVE… DELETE… CLEAN UP VIRUSES!) http://moreshareandcare.blogspot.com/
By simply living those 30 years in Nazareth, Jesus was more eloquent about God’s presence and redemptive love. He did not need to preach too much. He was a living sermon. Talking of living sermons, I am reminded of Dr.Albert Schweitzer, who was called ‘a walking sermon’. This is given in: http://www.perryland.com/inspire7.shtml

Reporters and city officials gathered at a Chicago railroad station one afternoon in 1953. The person they were meeting was the 1952 Nobel Peace Prize winner. A few minutes after the train came to a stop, a giant of a man - six feet four inches - with bushy hair and a large mustache stepped from the train. Cameras flashed. City officials approached him with hands outstretched. Various people began telling him how honored they were to meet him.
The man politely thanked them and then, looking over their heads, asked if he could be excused for a moment. He quickly walked through the crowd until he reached the side of an elderly black woman who was struggling with two large suitcases. He picked up the bags and with a smile, escorted the woman to a bus. After helping her aboard, he wished her a safe journey. As he returned to the greeting party he apologized, "Sorry to have kept you waiting."
The man was Dr.Albert Schweitzer, the famous missionary doctor who had spent his life helping the poor in Africa. In response to Schweitzer's action, one member of the reception committee said with great admiration to the reporter standing next to him, "That's the first time I ever saw a sermon walking."


We can surely reflect on Jesus’ presence at Cana from various other angles. But, for the time being, let us approach Jesus and Mary as they are engaged in a hushed conversation. Mary approached Jesus and made this request: “They have no wine.” What type of a request is this? If Mary had followed this up with something like… “Kindly do something about it”, then the request would be complete. But just to say the fact that they don’t have wine does not make it a request. Right? Wrong. Dear Friends, this was not only a proper request but as some spiritual writers say this statement of Mary is a good prayer. A prayer? Yes, a prayer. Most of us think of prayer as a list of petitions. Instead, prayer can also be just a silent acknowledgement of what we are. Sitting in the presence of God silently and laying our life bare in God’s presence can be a good prayer.
I am sure you have heard the story of a person who sat silently for a few moments everyday in a church. A priest who had seen him everyday, asked him one day what he was telling the Lord. The man answered: “Nothing. I look at the Lord and the Lord looks at me.” Such a prayer may seem easy. But, this type of prayer requires more trust and hope than the prayer where we submit a list of to-do’s to God.
Mary stated the true situation at the wedding. Nothing more, nothing less. The reply of Jesus looks a bit rude, at first glance. It was almost like Jesus telling Mary: “Don’t disturb me. I am not yet ready for this.” Whether Mary understood or not what Jesus said, she was sure about one thing. Her son would do something to solve the crisis. So, she turned to the workers standing near by and said, “Do whatever he tells you.” Once again, an excellent statement that calls for total abandonment to God. If only we could do WHATEVER Jesus tells us…
What Jesus told the workers and what they did call for another reflection. We shall meet again in Wedding at Cana Part III.

17-01-10 ஞாயிறு
சனவரி 17 - நாளும் ஒரு நல்லெண்ணம்

சனவரி 17 அமெரிக்க ஐக்கிய நாட்டினை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் (Benjamin Fanklin) பிறந்த நாள்.
இவர் எழுதிய சுய சரிதையில் தான் பின்பற்ற வேண்டுமென உணர்ந்த 13 புண்ணியங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவைகளில் ஒரு சில இதோ:
மௌனம் காத்தல்: உனக்கும் பிறருக்கும் பயனுள்ளதையே பேசு. தேவையற்றவகளைப் பேசாதே.
அளவோடு உண்ணுதல்: உடலும் மனமும் மந்தமாகும் வரை உண்ணாதே. அதிகம் குடிக்காதே.
அளவோடு செலவு செய்தல்: உனக்கும், பிறருக்கும் நல்லவைகள் விளைவதற்குச் செலவு செய். எதையும் வீணாக்காதே.
இதேபோல் சாந்தமாயிருத்தல், பணிவாயிருத்தல், நேர்மையாயிருத்தல்... என்று தான் பின்பற்ற வேண்டிய 13 புண்ணியங்களையும் குறிப்பிடும் பிராங்க்ளின், எல்லா புண்ணியங்களையும் எல்லா நேரங்களிலும் பின்பற்றுவதை விட, வாரத்திற்கு ஒரு புண்ணியத்தை மையப்படுத்தி வாழ முற்பட்டதாக எழுதியிருக்கிறார். தான் இந்தப் புண்ணியங்களைப் பின்பற்றுவதில் பல முறை தவறியுள்ளதைச் சுட்டிக்காட்டும் பிராங்க்ளின், வரும் சந்ததியினர் இந்த புண்ணியங்களிலிருந்து பயனடைந்தால் நல்லது என்று தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு சிந்தனை - கானாவூர் திருமணம் பாகம் இரண்டு
கானாவூரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாய் திருமணத்திற்கானப் பல ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஏற்கனவே அங்கிருந்தார். திருமண நாளன்றும் இயேசுவின் தாய் நடந்த வைபவங்களில் கலந்துகொள்வதை விட, வந்திருந்தவர்களின் தேவைகளை நிறைவு செய்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார். எனவேதான், திருமணப் பந்தியில் இரசம் தீர்ந்து வருவதை அவர் முதலில் கவனித்தார். இவை சென்ற விவிலியத் தேடலில் நாம் சிந்தித்தவைகள். அது கானாவூர் திருமணம், பாகம் ஒன்று.
இன்று, கானாவூர் திருமணம் பாகம் இரண்டு.
கல்யாண பந்தி மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. இயேசுவும் சீடர்களும் பந்தியில் அமர்ந்திருந்தனர். இயேசு அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டதைப் பற்றி முதலில் நம் சிந்தனைகள்.
திருமணங்கள் என்றால், மக்கள் கூடும் இடம். மக்கள் இருக்கும் இடமே, இறைவன் இருக்கும் இடம். அதனால், இயேசு அந்த திருமணத்தில் கலந்து கொண்டார். தன்னுடைய படைப்பின் சிகரமாய் மனிதர்களை இறைவன் படைத்த போதே, மக்களோடு தான் வாழ விழைந்ததை இறைவன் அழுத்தம் திருத்தமாய், ஆணித்தரமாய் சொல்லிவிட்டார். உறவுக்கு ஒரு இலக்கணமாகத்தானே, அந்த இறைவன் மூவொரு கடவுளாக இருக்கிறார். திருமணம் என்பது மனித உறவுகளிலேயே மிக நெருக்கமான, அழகான இலக்கணமாயிற்றே. அந்த இலக்கணத்தில் தன் இறை முத்திரையைப் பதிக்க மூவொரு கடவுளின் இறைமகன் அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டது பொருத்தமான செயல்தானே. இதைப்பற்றி ஏன் கேள்வி எழுப்ப வேண்டும்? உறவுகளை வலுப்படுத்தும் சந்தர்ப்பம் எதுவாக இருந்தாலும், கடவுள் அவைகளைத் தவற விட மாட்டார் என்பதைச் சொல்லாமல் சொல்லும் வண்ணம் இயேசு அந்த திருமணத்தில் கலந்து கொண்டார்.
செயல்திறம், வேகம் இவைகளை மையமாக, முக்கியமாகக் கருதும் நம் இன்றைய தலைமுறையினர் வேறொரு கேள்வியை எழுப்பலாம். உலகத்தை மீட்க வந்த இறைமகனுக்கு இருக்கப்போவதோ மூன்றாண்டுகள். அந்த மூன்றாண்டுகளிலும் மறையுரை நிகழ்த்தி, புதுமைகள் செய்து மக்களை மீட்பதற்கு பதிலாக... இப்படி கல்யாணம், விழாக்கள் என்று நேரத்தைச் செலவழிக்கலாமா? அதுதான் இயேசுவின் அழகு. நமக்கும் இயேசுவுக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு. முன்பு ஒரு முறை சொன்னதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். இயேசு வாழ்ந்தது 33 ஆண்டுகள். அதில் 30 ஆண்டுகள் எதையும் பிரமாதமாகச் செய்ததாகத் தெரியவில்லை. ஒரு எளிய குடும்பத்தில் தன்னையே கரைத்துக் கொண்டார் அந்த இறைமகன். சாதாரண, எளிய, அன்றாட வாழ்வில் இறைவனைக் காண முடியும் என்னும் உண்மையை இயேசு இதைவிட அழகாகச் சொல்லியிருக்க முடியாது. தினசரி வாழ்வில் இறைவனைக் காண முடியும் என்பதை ஒரு பெரிய மறையுரையில் சொல்லாமல், வாழ்ந்தே காட்டினார் இயேசு.
சொல்லும் வார்த்தைகளைவிட, வாழும் வாழ்க்கையே சிறந்த மறையுரையாகும். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு, அசிசியின் புனித பிரான்சிஸ் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். ஒரு முறை அவர் தன் நண்பர்களிடம், "வாருங்கள் நாம் ஊருக்குள் சென்று போதித்துவிட்டு வருவோம்." என்று அவர்களை அழைத்துச் சென்றார். நண்பர்களும் ஆர்வமாய் கிளம்பினார்கள். பிரான்சிஸூம், நண்பர்களும் மெளனமாக அந்த ஊரை ஒரு முறைச் சுற்றிவிட்டு திரும்பினர். "போதிக்கலாம் என்று சொல்லிவிட்டு, ஒன்றும் பேசாமல் திரும்பிவிட்டீர்களே." என்று நண்பர்கள் கேட்டபோது, "இல்லையே, நாம் இப்போது போதித்துவிட்டுதானே வந்தோம்." என்றார் பிரான்சிஸ். வாய் வார்த்தைகளால் போதிப்பது ஒரு வகை. வாழ்க்கையால், நடத்தையால் போதிப்பது மற்றொரு வகை. இயேசு வாழ்ந்த ஒவ்வொரு நாளும் மற்றவருக்கு போதனைகளாகவே இருந்தன. இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், அவர் அந்த திருமணத்தில் பங்கேற்றதும் ஒரு போதனைதான். இயேசு அந்த திருமணத்தில் கலந்து கொண்டதை இன்னும் பல கோணங்களில் சிந்திக்கலாம். இப்போதைக்கு இவை போதும் என்று நினைக்கிறேன்.
சீடர்களுடன் கல்யாண பந்தியில் அமர்ந்திருந்த இயேசுவிடம் தேவதாய் வருகிறார். தாழ்ந்த குரலில் ஏதோ சொல்கிறார். இயேசுவும் பதிலுக்கு ஏதோ சொல்கிறார். அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை யோவான் நற்செய்தி இவ்வாறு கூறுகிறது.

யோவான் 2: 3-4
இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.

இந்த உரையாடலிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய, கற்றுக் கொள்ளவேண்டிய சில பாடங்கள் உள்ளன. நமக்கு ஏதாவது ஒரு பொருள் தேவை என்றால், நம் தேவையை எடுத்துச் சொல்லி, பொருட்களை வாங்குவோம், அல்லது பெறுவோம். அதற்கு பதில் நம்மிடம் ஒரு பொருள் இல்லை என்று மட்டும் சொன்னால், அந்தப் பொருள் நமக்கு வரும் என்பது நிச்சயமில்லை. ஒரு சின்ன கற்பனை:
ஒரு மளிகைக் கடைக்குப் போகிறோம். அங்கே, கடைக்காரரிடம், "எனக்கு ஒரு கிலோ அரிசி, கால் கிலோ சக்கரை குடுங்க." என்போம். இதுதான் வழக்கம். அதற்குப் பதிலாக, "கடைக்காரரே, எங்க வீட்டுல அரிசி இல்ல. சக்கரை இல்ல.." என்று மட்டும் நாம் சொன்னால், கடைக்காரர் நம்மை ஏற இறங்கப் பார்ப்பார்.
மரியா அந்தத் திருமண வீட்டில் எழுந்த தேவையைச் சொல்லிய விதம் இப்படித்தான் இருந்தது. மகனிடம் சென்று, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது." என்றார். பல இறை வல்லுனர்கள் மரியாவின் இந்தக் கூற்றை அழகான ஒரு செபம் என்று கூறுகின்றனர். இரசம் தீர்ந்துவிட்டது என்பது சாதாரண, அன்றாட வாழ்வில் சொல்லப்படும் ஒரு எதார்த்தமான கூற்று. அதை எப்படி செபம் என்று சொல்வது என்று ஒரு சிலர் தயங்கலாம். ஆம், அன்பு உள்ளங்களே, இது ஒரு அழகிய செபம். இயேசு சொல்லித்தந்த ‘வானகத்திலுள்ள எங்கள் தந்தையே’ என்ற செபத்தைப் பார்த்தால், இந்த தயக்கம் தீரும். பெரும் இறையியல், மெய்யியல் தத்துவங்களெல்லாம் இந்த செபத்தில் கிடையாது. அங்கு இயேசு சொல்லித்தரும் விண்ணப்பங்கள் எல்லாமே, அன்றாட வாழ்வுக்கானவை. எங்கள் அனுதின உணவைத் தாரும், மன்னிக்கும் மனதைத் தந்தருளும், தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும். செபம் என்றதும், இது வேண்டும், அது வேண்டும் என்ற நீண்ட பட்டியல் ஒன்று நம் உள்ளத்தில் விரியும். இல்லையா? அதற்கு பதில், இறைவன் முன் அமைதியாக அமர்ந்து, நம் வாழ்வின் உண்மைகளை எளிய வார்த்தைகளில் சொல்வதும் செபம். கடவுளிடம் நீண்ட பட்டியல்களை அனுப்புவதற்கு பதில், உள்ளத்தைத் திறந்து வைப்பது, உண்மைகளைச் சொல்வது இவை இன்னும் அழகான செபங்கள். இந்த செபத்தைச் சொல்வது அவ்வளவு எளிதல்ல. இப்படி ஒரு செபத்தைச் சொல்வதற்கு ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். நமது தேவைகளை நம்மை விட அந்த நல்ல தேவன் நன்கு அறிவார் அவரிடம் குறையைச் சொன்னால் போதும் என்று எண்ணுவதற்கு நிறைவான நம்பிக்கை வேண்டும்.
மீண்டும் அந்த மளிகைக் கடை உதாரணத்திற்கே செல்வோம்.
மளிகைக் கடைக்கு பொருட்கள் வாங்க வீட்டுத்தலைவன் வந்திருக்கிறார். அவர் அங்கு வருவதற்கு முன்னால், வீட்டில் என்ன நடந்திருக்கும்? நம் கற்பனையில் கொஞ்சம் பிளாஷ் பேக் (Flash Back) போவோம். அவர் கடைக்கு வருவதற்கு முன், வீட்டில் ஒரு செய்தித்தாளைப் படித்தபடி அமர்ந்திருக்கிறார். வீட்டுத் தலைவி காப்பி கலக்க சமையலறைக்குள் செல்கிறார். சர்க்கரை தீர்ந்துவிட்டதைப் பார்க்கிறார். அங்கிருந்தபடியே, "என்னங்க, சக்கர தீந்துடுச்சுங்க" என்கிறார். இதன் பொருள் என்ன? தயவு செய்து செய்தித்தாளை கீழே வைத்துவிட்டு, கடைக்குப் போய், சர்க்கரை வாங்கி வாருங்கள் என்பதுதானே? அவர் சட்டையை மாட்டிக்கொண்டிருக்கும் போது, "ஆங்... சொல்ல மறந்துட்டேன். அரிசியும் தீந்துடுச்சுங்க" என்று சொல்கிறார் வீட்டுத் தலைவி. தலைவன் இந்தத் தேவைகளுக்கு என்ன செய்வார் என்று தலைவிக்குத் தெரியும். அந்த நம்பிக்கையில் சொல்லப்பட்ட உண்மைகள். மரியாவும் இப்படி ஒரு உண்மையை இயேசுவுக்கு முன்னால் வைக்கிறார் - "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது." இயேசு புதுமைகள் செய்வாரா என்பதெல்லாம் சரியாகத் தெரியாவிட்டாலும், தன் மகன் பிரச்சனைகளைச் சமாளிப்பார் என்ற நம்பிக்கை அந்தத் தாயை இயேசுவிடம் கொண்டு சேர்த்தது.
இதற்கு இயேசு தரும் பதில்: "அம்மா, இதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? என் நேரம் இன்னும் வரவில்லையே." தன் தாயைக் கொஞ்சம் கடிந்து கொள்வதைப்போல் உள்ளது இந்த வாக்கியங்கள். முதல் வாக்கியம் முற்றிலும் புரிந்து கொள்ளக்கூடிய வாக்கியம். "அம்மா, இது அவங்க வீட்டுக் கல்யாணம். இதையெல்லாம் அவங்க முன்னாலேயே யோசிச்சிருக்கணும். இப்ப வந்து திடீர்னு இரசம் தீர்ந்துடுச்சுன்னு சொன்னா, நாம் என்ன செய்ய முடியும்?" நியாயமான கேள்வி.
"உன் கேள்வியின் நியாயம் எனக்குப் புரிகிறது மகனே. ஆனால், நியாய, அநியாயம் பார்க்க இப்போது நேரமில்லை. அவசரமானத் தேவை. நிறைவு செய்ய வேண்டும்." என்று மனதுக்குள் தன் அன்னை எண்ணியதை இயேசு உணர்ந்திருக்க வேண்டும். தன்னுடைய அடுத்த எண்ணத்தைச் சொல்கிறார்: "என் நேரம் இன்னும் வரவில்லையே".
இயேசு கூறிய 'நேரம் வரவில்லை' என்பதை மரியா உணர்ந்தாரா என்பது நிச்சயமில்லை. முன்பு ஒரு முறை 12 வயது சிறுவனாய் இயேசுவைக் கோவிலில் மரியா மீண்டும் கண்டபோதும், சிறுவன் இயேசு என் தந்தையின் பணிகளில் நான் ஈடுபடவேண்டுமென உங்களுக்குத் தெரியாதா என்று சொன்னார். அப்ப்டோதும் மரியாவுக்கு முழுவதும் விளங்கவில்லை. ஆனால், அவற்றைத் தன் மனதில் சிந்தித்தபடியே வீடு திரும்பினார். இப்போதும் இயேசுவின் கூற்று சரிவரப் புரியவில்லை. ஆனால், தன் மகன் இந்தப் பிரச்சனைக்கு எப்படியாவது ஒரு தீர்வு காண்பார் என்பதில் அந்தத் தாய்க்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. எனவே அவர் பணியாளரை நோக்கி, “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்.” என்றார்.
மரியன்னைச் சொன்னதைக் கேட்டு பணியாளர்கள் இயேசு சொன்னதை எல்லாம், அதற்கு மேலும் செய்தனர். “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்று மரியா பணியாளரிடம் சொன்னதைப்போல் நம்மிடமும் சொல்கிறார். இயேசு சொல்வதையெல்லாம் நாம் செய்தால், தண்ணீர் இரசமாய் மாறியதைப் போல், நமது வாழ்வும் பல வகைகளில் மாறும். இந்தப் புதுமையைத் தொடர்ந்து சிந்திப்போம்.

14 January, 2010

THE MOTHER OF JESUS WAS THERE… இயேசுவின் தாய் அங்கு இருந்தார்


The month of ‘Thai’ in the Thamizh calendar begins with the popular festival Pongal. One of the popular statements about this month is: “Come Thai, avenues will open.” (Thai piranthaal, vazhi pirakkum). Avenues will open… Avenues paved with dreams. The dream of childbirth, graduation, getting employed, getting married, building a house… Human capacity for dreams is endless. Among these dreams some may turn out to be nightmares too. One such dream that has nightmare written all over is the wedding day. Even if every little detail is given utmost care, things do go wrong on the day of the wedding. Most of the troubles on a wedding day revolve around the food. This is what happened at Cana in Galilee. I would like to reflect on this event in two parts. The first part is mainly on Mary.

Here are the opening verses from John’s gospel about this wedding.
John 2:1-3
On the third day there was a wedding at Cana in Galilee, and the mother of Jesus was there. Jesus also was invited to the wedding with his disciples. When the wine ran out, the mother of Jesus said to him, "They have no wine."

The mother of Jesus was there. Was she invited? Not clear; but she was there. This can also be interpreted that she had gone to Cana much ahead of the wedding day, just to help out. She was there taking care of all their needs. This is the beauty of Mary. She goes where there is a need, not waiting for an invitation. Don’t we know how she went in haste to the house of Elizabeth once she learnt that Elizabeth was pregnant? The same readiness to help out must have brought Mary to Cana much ahead of the wedding.
Even on the day of the wedding, she was always on the lookout for anything that was needed. She probably was the first one to notice the shortage of wine. She goes to Jesus with the request: They have no wine. Why did Mary tell Jesus about the shortage of wine? What a stupid question is this? Mary knew that Jesus would do some miracle. That’s why… Not so fast, my friends. Did Mary know that Jesus was able to perform miracles? John says later in this passage that this was the first miracle of Jesus.
If this was Jesus' very first miracle, how then did Mary know that Jesus could do it? Good mothers know their children. They know the hidden talents and potentialities of their children. There are many young men and women who have gone on to accomplish great things in life because their mothers believed in them and encouraged them. A more fascinating question arising from the story is this: Did Mary know all those thirty years she lived with Jesus that she was living with a wonder-worker and yet never she ask him to multiply her bread, turn the water on the dining table into wine, or double her money to make ends meet? How come she never asked Jesus to use his miraculous power to help her out but she was quick to ask him to use it and help others? Think of it. (Fr Munachi E. Ezeogu, cssp)
Even if Mary knew that her son was endowed with some ‘unusual’, special qualities, she would not ask him to use them for her personal gain. That is where Mary stands tall. Now, at Cana, she is keen on seeing that the wedding goes well. Hence, she makes this unusual request to Jesus. “They have no wine”. What kind of a request is this? How did Jesus respond? How did the miracle happen? We shall continue in part II.


தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழியை, திரைப்பட பாடலைக் கேட்டிருக்கிறோம். தை பிறக்கப் போகிறது. வழி பிறக்கும் என்றும் நம்புகிறோம். வழி பிறக்கும் என்று சொல்லும்போது, பல எதிர்பார்ப்புகள் மனதில் எழும். வழிபிறக்கும் என்றால், குழந்தை பிறக்கும்; படிக்கும் குழந்தை நன்கு தேர்ச்சி பெறும்; தேர்ச்சி பெற்று பட்டதாரியான மகனுக்கு, மகளுக்கு வேலை கிடைக்கும்; வேலை கிடைத்த கையோடு வாழ்க்கைத் துணையும் கிடைக்கும்; திருமணம் நடைபெறும்; வீடு கட்டும் வாய்ப்பு வரும்... வழிபிறக்கும் என்பதில்தான் எத்தனை, எத்தனை கனவுகள்?
தை பிறந்தால், வழிபிறக்கும் என்ற வார்த்தைகளை வைத்து இணையதளத்தில் நான் தேடிக்கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் இந்த பழமொழியை "தை பிறந்தால், வலி பிறக்கும்." என்று பதிவு செய்திருந்தார். இன்னொருவர் அதைக் குறிப்பிட்டு, "நண்பா, அது வலி அல்ல, வழி." என்று திருத்தி எழுதி இருந்தார்.
நம் தமிழுக்கே உரிய உச்சரிப்பு பிரச்சனைகளில் ல, ள, ழ என்ற இந்த மூன்றும் பெரும் பிரச்சனைகள். தமிழில், வலி, வளி, வழி என்று மூன்று வார்த்தைகளும் உள்ளன. வலி = துன்பம், வளி = காற்று, வழி = பாதை. தை பிறந்தால், பாதை பிறக்கும் என்பதைத் தான் நம் பழமொழியில் சொல்லிவருகிறோம். ஆனால், அந்த வழி பிறக்க, வலிகளைத் தாங்க வேண்டும். வீசுகின்ற வளியை, சூறாவளியைச் சமாளிக்கவேண்டும். இவைகள் இல்லாமல், எளிதாக வழி பிறக்காது. அப்படி வலிகளைத் தாங்கி, சூறாவளிகளைச் சமாளித்து நாம் மேற்கொள்ளும் ஒரு முயற்சி நமது இல்லங்களில் நடைபெறும் திருமணங்கள். நாம் துவக்கத்தில் பட்டியலிட்ட கனவுகளிலேயே மிகக் கடினமான கனவுகள் என்று நமது பழமொழிகளும் உணர்த்தும் இரு கனவுகள்: "கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்." இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும், கல்யாணங்களும் நடக்கின்றன, வீடுகளும் கட்டப்படுகின்றன.
தை மாதத்தில் பல இல்லங்களில் திருமணங்கள் நடைபெறும். இந்தச் சூழலில் வரும் ஞாயிறன்று இயேசு கலந்து கொண்ட ஒரு திருமணத்தைப் பற்றி சிந்திக்க திருச்சபை நம்மை அழைக்கிறது. கானாவூரில் நடந்த அந்த திருமணத்தை அதில் இயேசு ஆற்றிய புதுமையை இன்றைய விவிலியத் தேடலிலும், வரும் ஞாயிறு சிந்தனையிலும் தொடர்ச்சியாகச் சிந்திப்போம். இன்று நாம் பகிர்ந்து கொள்வது: கானாவூர் திருமணம் - பாகம் ஒன்று.
கானாவூர் திருமணத்தில் கலந்து கொண்ட இயேசுவின் தாயை இந்த விவிலியத் தேடலில் முக்கியமாக சிந்திப்போம். இந்த சம்பவத்தைக் கூறும் யோவான் நற்செய்தியின் முதல் பகுதியை மட்டும் நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

யோவான் 2: 1-3
மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″ திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது ″ என்றார்.

கானாவூரில் திருமணம். இயேசுவின் தாய் அங்கிருந்தார். இயேசுவும், சீடர்களும் அழைப்பு பெற்றிருந்தனர். இரசம் தீர்ந்துவிட்டது. இப்போது நாம் வாசித்த நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் இவை.
இயேசுவின் தாய் அங்கிருந்தார். இயேசுவின் தாய்க்கு அழைப்பு இருந்ததா? சொல்லப்படவில்லை. ஆனால், அவர் அங்கிருந்தார். இருந்தார் என்று சொல்லும் போது, திருமணத்திற்கு முன்பே அவர் அங்கு சென்றிருக்கக் கூடும் என்ற கோணத்திலும் சிந்திக்கலாம்.
ஒரு குடும்பத்தில் திருமணம் என்றால், மிக மிக நெருங்கியவர்கள் ஒரு சில நாட்களுக்கு முன்னரே அங்கு சென்று அந்தத் திருமண ஏற்பாடுகளில் கலந்து கொள்வார்கள், இல்லையா? நமது கிராமங்களில், சின்ன ஊர்களில், ஒரு சில தாராள மனம் கொண்ட நல்ல உள்ளங்கள் அந்த ஊரின் திருமணம் என்றால், அவர்கள் சொந்தம், சொந்தமில்லை என்பதையோ, அழைப்பு வந்தது வரவில்லை என்பதையோ கொஞ்சமும் சிந்திக்காமல், அந்த வீடுகளுக்கு உரிமையுடன் சென்று வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு செய்வதைப் பார்த்திருக்கிறோம். இவர்களில் பலர், திருமணங்கள் முடிந்ததும், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதையும் பார்த்திருக்கிறோம். ஒரு நல்ல காரியம், மிக நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்துடன், வேறு எந்த நோக்கமும் இல்லாமல், வேறு எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செயல் படும் இந்த அன்பு உள்ளங்கள் உலகத்தில் இன்றும் நடமாடுகிறார்கள். அதுவே நாம் சிந்திக்க வேண்டிய முதல் புதுமை! வாழும் இந்தப் புதுமைகளின் முன்னோடியாக, நம் அன்னை மரியா கானாவூர் திருமணத்தில் கலந்து கொண்டார். மரியாவை இந்த கோணத்தில் நாம் பார்க்க உதவியாகத் தான், யோவான் தனது நற்செய்தியில் "இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்." என்று எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ‘சிம்பிளா’ச் சொல்லியிருக்கிறார்.
மரியாவின் அழகே இதுதான். எங்கெல்லாம் அவரது உதவி தேவை என்று உணர்கிறாரோ, அங்கெல்லாம் எந்த வித அழைப்பும் இல்லாமல் சென்று உதவுவார். எலிசபெத்தைப் பற்றி வானதூதர் சொன்னதும், மரியா கிளம்பி சென்றது நமக்கு நினைவிருக்கும்.
கானாவூரிலும் திருமணத்திற்கு முன்னரே அந்த வீட்டுக்குச் சென்று அவர்களது பல தேவைகளை நிறைவு செய்தார் மரியா. கல்யாண நாளன்றும், இந்த அன்புத் தாயின் உள்ளமும், கண்களும் யார் யாருக்கு என்னென்ன தேவை என்பதைத் தேடிக் கொண்டிருந்தன. எனவேதான், குறைந்து வரும் திராட்சை இரசம் அவரது கண்களில் முதலில் பட்டது.
குறையில்லாத திருமணங்கள் உலகத்தில் எங்கும் இல்லை. திருமணங்களில் பெரும்பாலும் சாப்பாட்டு நேரங்களில் தான் குறைகள் கண்டுபிடிக்கப்படும், பிரச்சனைகள் வெடிக்கும். கானாவூரிலும் சாப்பாட்டு விஷயத்தில்தான் குறை ஏற்பட்டது. யூதர்களின் வைபவங்களில், சிறப்பாக திருமணங்களில், இரசம் தீர்ந்து போவதென்பது பெரிய மானப் பிரச்சனை.
இப்படி குறைகள் ஏற்படும் போது, அவைகளை பகிரங்கப் படுத்தி, பெரிதாக்கி வேடிக்கை பார்ப்பவர்கள் உண்டு. பிரச்சனைகளுக்கு விரைவாகத் தீர்வு காண்பவர்களும் உண்டு. மரியா இரண்டாவது வகையைச் சேர்ந்தவர். குறையைக் கண்டதும் அதைத் தீர்க்க நினைக்கிறார். தன் மகனிடம் கூறுகிறார். ஏன் இயேசுவிடம் இதைக் கூற வேண்டும்?
இது என்ன குழந்தைத் தனமான கேள்வி?
இயேசு புதுமைகள் செய்வார் என்று மரியாவுக்குத் தெரிந்திருக்கும். அதனால், அவரிடம் இதைச் சொல்கிறார். ஆனால், யோவான் நற்செய்தியில் இதுதான் இயேசு செய்த முதல் புதுமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருக்க, புதுமைகள் நிகழ்த்தும் ஆற்றல் இயேசுவுக்கு உண்டு என்று மரியாவுக்கு ஏற்கெனவே தெரியுமா? சிந்திக்க வேண்டிய கருத்து.
தன் மகன், மகள் இவர்களிடம் புதைந்திருக்கும், மறைந்திருக்கும் திறமைகளை நல்ல அன்னையர் உணர்ந்திருப்பார். அவர்களது குழந்தை இவைகளை வெளியில் இதுவரைக் காட்டவில்லை எனினும், அவர்களது திறமைகளை நல்ல தாய் உள்ளத்தில் உணர்ந்திருப்பார். இயேசுவின் இந்த அற்புத ஆற்றலை மரியா ஏற்கெனவே உள்ளூர உணர்ந்திருந்தால், அடுத்து ஒரு கேள்வி எழுகிறது. புதுமை நிகழ்த்தும் திறமை இயேசுவுக்கு உண்டு என்பதை மரியா உணர்ந்திருந்தால், அதை ஏற்கனவே பயன்படுத்தியிருக்கலாமே. நாசரேத்தூரில், அவர்களது தினசரி வாழ்க்கைக்குத் தேவையானவைகளை இயேசுவின் மூலம் தீர்த்திருக்கலாமே.
மரியா அப்படி செய்ததாகத் தெரியவில்லை. சுய நலனுக்காக, சுய விளம்பரத்துக்காக தன் திறமைகளை, அதுவும் இயற்கையைத் தாண்டிய திறமைகளை, சக்திகளைப் பயன்படுத்துபவர் வெறும் மந்திரவாதிகளாய் இருப்பார்களே தவிர, இறைவனாகவோ, உண்மையான இறையடியாராகவோ இருக்க முடியாது.
உண்மை இறையடியாரைப் பற்றிய ஒரு சிறுகதை இது: நாள் முழுவதும் தன்னையே நினைத்து, தியானித்து வாழ்ந்து வரும் ஒரு இறையடியாருக்கு முன் கடவுள் தோன்றுகிறார். அவருக்கு ஏதாவது ஒரு வரம் தர விழைகிறார். “இறைவா, உம்மைத் தியானிக்கும் ஒரு வரம் எனக்குப் போதும், வேறு வரம் எதுவும் வேண்டாம்” என்று கூறும் பக்தரிடம், ஏதாவது ஒரு வரம் கேள் என்று அவரைக் கடவுள் கட்டாயப்படுத்துகிறார். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின், பக்தர் சொல்கிறார். "கடவுளே, தரையில் விழும் என் நிழலைத் தொடும் அனைவரும் நலம் பெற வேண்டும். அனால், ஒரு நிபந்தனை. எப்போதெல்லாம் என் நிழல் எனக்குப் பின்னே விழுகிறதோ, அந்த நிழலைத் தொடும் மக்களே குணமாக வேண்டும். எனக்கு முன் விழும் நிழலுக்கு அந்த சக்தி இருக்கக் கூடாது." என்று வரம் கேட்கிறார் அந்த இறையடியார்.தனது சக்தியால் நன்மை நடக்க வேண்டும், ஆனால், அது தனக்குத் தெரியாமல் நடக்க வேண்டும் என்பதில் அந்த இறையடியார் மிகத் தெளிவாக இருந்தார். தன்னலத்தை அறவே துறந்த இறையடியார்களின் ஒட்டுமொத்த உருவாக, அவர்களுக்கெல்லாம் ஒரு முன் மாதிரியாக மரியா வாழ்ந்தார் என்பதற்கு கானாவூர் திருமண நிகழ்வு மற்றொரு எடுத்துக்காட்டு. அற்புதங்கள் நிகழ்த்தும் சக்தி தன் மகனிடம் இருப்பதை அவர் உணர்ந்திருந்தாலும், அந்த சக்தி மற்றவருக்கு மட்டுமே பயன்பட வேண்டுமேயொழிய, தன் நலனுக்காக அல்ல என்பதில் மரியா தெளிவாக, தீர்க்கமாக இருந்தார். மரியாவின் இந்த வேண்டுகோளுக்கிணங்க, இயேசு ஆற்றிய புதுமையை ஞாயிறு சிந்தனையில் தொடர்ந்து சிந்திப்போம்.

11 January, 2010

TO BE BAPTISED WITH FIRE… நெருப்பில் மூழ்கி...

The Baptism of Christ by Leonardo da Vinci from around 1475

What I am going to share now may not be pleasant to many of you. But, I need to share this experience of mine. Fifteen years back a Jesuit friend of mine died in a road accident on the New Year day. He was returning home after celebrating the midnight Mass and the morning Mass. He died due to the rash driving of a bus driver. I accompanied another Jesuit to the mortuary to identify the body. It was the government general hospital in Chennai. Since it was the 1st of Jan, there were many road accidents on the previous night and the mortuary was littered with bodies. Both of us stayed in the mortuary for about five minutes. It looked like 5 hours. The memory of seeing my Jesuit friend ‘dumped’ with so many other dead persons was too much for me. For many days and months that scene was etched strongly in my memory. I must say that that visit to the mortuary was a moment of ‘enlightenment’ for me. It surely gave me a different perspective on life. It helped me make some good decisions in life. This was, in my opinion, another baptism…. Baptism by fire.

I can think of so many who had received such baptism by fire. Saul being blinded on his way to Damascus, the canon ball that shattered the leg of Ignatius of Loyola, Gandhi being thrown out of the train in South Africa, the gutters and slums of Kolkatta for Mother Teresa… These must have been baptism by fire for these great souls. Today we are invited to reflect on the Baptism of Jesus. Here is the passage from Luke’s Gospel:

Luke 3: 15-16, 21-22
The people were waiting expectantly and were all wondering in their hearts if John might possibly be the Christ. John answered them all, “I baptize you with water. But one more powerful than I will come, the thongs of whose sandals I am not worthy to untie. He will baptize you with the Holy Spirit and with fire.”
When all the people were being baptized, Jesus was baptized too. And as he was praying, heaven was opened and the Holy Spirit descended on him in bodily form like a dove. And a voice came from heaven: “You are my Son, whom I love; with you I am well pleased.”


Dear Friends, here is the gist of a cartoon that I saw long back. Two friends are chatting.
First friend: I have just one question to ask God.
Second friend: What is it?
First friend: Why don’t you do something about all the injustice in the world?
Second friend: Good question. Why don’t you ask God?
First friend: I am afraid He would ask me the same question.

Down the centuries millions of people have asked this why-don't-you-do-something question to God and will continue to ask. I have thought of asking God too. But, I was afraid. I knew that this question would come back to me like a boomerang. From a purely human perspective, we can say that Jesus must have grappled with this question too. Although he was leading a peaceful life in Nazareth, he must have been troubled by all that were happening around him. He must have been sad to see how so many of his friends tried to find a solution to these problems by starting or joining some fundamental, even terrorist groups. Was Jesus tempted to follow this way? We can surely add this too as one of his temptations… a quick solution to all the troubles!
Having weighed all the options, Jesus made up his mind. He would simply immerse himself with the people, dissolve himself among the people. Simply being with the people would do a lot of good for himself and the people. He was thinking of the miracle that leaven and yeast could do for the dough. He would later use this imagery to explain what his Kingdom was all about. Again he asked, "What shall I compare the kingdom of God to? It is like yeast that a woman took and mixed into a large amount of flour until it worked all through the dough." Luke 13:20-21
Being identified with the people was the core of the mystery of Incarnation. Jesus stood among the people in Jordan to be baptised.
Jesus was aware that this was not an easy decision. To become a leaven and change the whole lot of people was a tough task. What if the flour was not good? No amount of leaven or yeast could change that dough. From what he had seen among his people, he could only sense more of despair and dejection than any sign of hope among them. How would he change such a despondent people? He could see the tunnel all right… but, the light at the end of the tunnel? Still, Jesus would take up this mission of becoming one among them, since his faith in his Father was immense.
All of us have often heard the popular story of a man slipping and falling down a precipice. On his way down he grabs a plant and hangs on to it for dear life, literally. From such a precarious position his mind turns to God. He calls on God and God answers him. God then asks him a straightforward question: Do you believe in me? “Yes” was the man’s response - more a desperate shriek than a solemn affirmation. Then God says, “If you really believe in me, then let go off the plant.”
I vaguely remember a sequel to this story. When God tells him to let go, there is a moment of silence. Then the man shouts at the top of his voice: “Is there a better God out there?” I wish to take the story further. I can imagine a person with unwavering faith in God hanging on to that plant. God asks him to let go and he does so immediately. The beauty is that when he lets go, he does not fall down the precipice, but begins to float and fly up.
Something similar was happening to Jesus in the river Jordan. He knew that he was in the right place at the right time. His heart was already flying. This happy moment was about to be spoilt by John the Baptist. He seemed to recognise Jesus. He too was longing for some solution to all the woes around him. He saw the solution in the person of Jesus. He wanted to proclaim to the whole world that here was the Christ who would solve all their problems. Jesus had to silence him and receive the Baptism.
God was thrilled to see the mystery of the Incarnation unfold so beautifully in Jordan. God was a proud parent. And a voice came from heaven: “You are my Son, whom I love; with you I am well pleased.”

சனவரி 10 - நாளும் ஒரு நல்லெண்ணம்
ஒரு நாள் மாலை, கடற்கரையில் நடந்து கொண்டிருந்த ஓர் அறிவாளி இந்த உலகத்தை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றி ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தார். உலகத்தின் பிரச்சனைகள் இமயமலை போல் தெரிந்ததால் எங்கு எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பிப் போயிருந்தார். அவருக்கு முன் ஓர் ஏழை மீனவன் கடற்கரையில் எதையோ பொறுக்கி எடுத்து கடலில் எறிந்து கொண்டிருந்தார். அறிவாளி கூர்ந்து கவனித்த போது, அந்த மீனவன் கடற்கரையில் ஒதுங்கிக்கிடந்த சின்னச் சின்ன நட்சத்திர மீன்களை எடுத்து கடலில் எறிந்ததைப் பார்த்தார். "என்ன செய்கிறீர் நண்பரே?" என்று கேட்டார் அறிவாளி. மீனவன் அவரிடம், "கடல் நீர்மட்டம் குறைந்து விட்டதால், இந்த மீன்கள் கரையில் ஒதுங்கி விட்டன. இவை இங்கேயே தங்கிவிட்டால், இறந்துவிடும். அதனால், இவைகளை மீண்டும் கடலுக்குள் அனுப்பிவைக்கிறேன்." என்றார். "அது தெரிகிறது. ஆனால், நீர் இப்படி செய்வதால் என்ன பயன்? இந்தக் கடற்கரையில் பல ஆயிரம் மீன்கள் கரையில் கிடக்கின்றனவே. இது போல் உலகத்தின் பல கடற்கரைகளில் மீன்கள் கிடக்கின்றனவே. உமது இந்த செயலால் எத்தனை மீன்களைக் காப்பாற்ற முடியும் என்று நினைக்கிறீர்?" என்று கேட்டபோது, அந்த மீனவன், "எல்லா மீனையும் காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இதோ, இந்த மீனை என்னால் காப்பாற்ற முடியும்." என்று சொன்னபடி, ஒரு மீனை எடுத்து கடலில் எறிந்தாராம்.
நல்ல செயல்களை யாராவது ஒருவர், எங்காவது ஒரு இடத்தில், என்றாவது ஒரு நாள், எப்போதாவது ஒரு நேரம் ஆரம்பித்தால் போதுமே.

ஞாயிறு சிந்தனை
15 ஆண்டுகளுக்கு முன் புத்தாண்டு தினத்தன்று நடந்த ஒரு சம்பவம், என் மனதில் ஆழமான எண்ணங்களையும், மாற்றங்களையும் பதித்துச் சென்ற ஒரு சம்பவம். நானும், இன்னுமொரு குருவும் புத்தாண்டு தினத்தன்று சென்னை அரசு மருத்துவ மனைக்குச் சென்றோம். எங்கள் இயேசு சபையைச் சார்ந்த ஒரு குரு அன்று காலை சாலை விபத்தில் இறந்து விட்டார். நள்ளிரவு, காலைத் திருப்பலிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அவர் வேறொரு வாகன ஓட்டியின் தவறால் உயிரிழந்தார். அவரது உடலை அந்த மருத்துவமனையின் சவக்கிடங்கிலிருந்து மீட்டு வரச் சென்றோம். அந்த சவக்கிடங்கில் நான் அடைந்த அதிர்ச்சியை என்னால் பல ஆண்டுகள் மறக்க முடியவில்லை. வருடக் கடைசி அன்று இரவு நடக்கும் சாலை விபத்துக்களை நாம் அறிவோம். எனவே, அந்த சவக்கிடங்கில் பல உடல்கள், பலவாறாக சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தன. அத்தனை சவங்களின் மத்தியில் எங்கள் குருவை அடையாளம் காட்டினோம் அங்கிருந்த காவல் துறையினரிடம். நானும், என்னுடன் வந்த குருவும் அங்கிருந்த நேரம் ஒருவேளை 5 நிமிடங்கள் என்று நினைக்கிறேன். ஆனால், அது 5 மணி நேரங்கள் போல் தெரிந்தது. அந்த சவக்கிடங்கில் ஆரம்பித்து பல நாட்கள், இரவும் பகலும் என்னுள் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வி: வாழ்க்கை இவ்வளவு தானா? உயர்ந்த ஒரு மலைமேல் நின்று பார்க்கும் போது ஒரு பரந்துபட்ட பார்வை கிடைப்பதைப் போல், அந்த சவக்கிடங்கில், இறந்த உடல்களுக்கு மத்தியில் வாழ்வைப் பற்றிய ஏதோ ஒரு தெளிவு எனக்குக் கிடைத்ததை உணர்ந்தேன்.
பிணி, முதுமை, சாவு இவற்றைப் பார்த்த புத்தரின் அகக்கண்கள் திறக்கப்பட்டன. அவரது வாழ்க்கை மாறியது. புத்தருக்குக் கிடைத்த ஞான ஒளியில் ஆயிரத்தில் ஒரு பங்கு, அல்லது அதற்கும் சிறிய அளவில் எனக்கும் ஒரு ஞானம், தெளிவு கிடைத்தது உண்மை. அந்த சவக்கிடங்கின் அனுபவம் வாழ்க்கையில் பல முறை என்னைச் சிந்திக்க வைத்தது. நான் எடுத்த பல முடிவுகளை மாற்ற உதவியது.
அந்த புத்தாண்டு தினத்தின் அனுபவம் எனக்குக் கிடைத்த மற்றொரு திருமுழுக்கு என்று சொல்வேன். என்னுடைய இந்த அனுபவம் வரலாறு ஆகுமா என்பது எனக்குப் பின் வருபவர்களது பொறுப்பு. ஆனால், எனக்கு முன் உள்ள வரலாற்றில் எத்தனையோ பேருடைய வாழ்வைப் புரட்டிப் போட்ட சம்பவங்களை நான் அசைபோட ஆசைப்படுகிறேன்.
கொலை வெறியோடு கிறிஸ்தவர்களைக் கைது செய்து எருசலேமுக்குக் கொண்டுவர தமஸ்கு நகர்நோக்கிச் சென்ற சவுலைப் பார்வை இழக்கச் செய்து, பின்னர் மறுபார்வை தந்த இறைவன் சவுலின் வாழ்வைப் புரட்டிப் போட்டார். பாம்பலோனா கோட்டையில், காலில் பட்ட குண்டு, லயோலா இனிகோவின் வாழ்வைப் புரட்டிப் போட்டது.
தென்னாப்பிரிக்காவில், புகைவண்டியிலிருந்து பலவந்தமாய் வெளியேற்றப்பட்ட ராஜ் மோகனின் அந்த பயணம், அவரது வாழ்வைப் புரட்டிப் போட்டது. அவரை மகாத்மாவாக்கியது. கொல்கத்தாவின் சாக்கடைகளும், சேரிகளும் அன்னை தெரசாவின் வாழ்வைப் புரட்டிபோட்டன. ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால், இவர்களுக்குக் கிடைத்த இந்த அனுபவங்கள் எல்லாம் இவர்களுக்குக் கிடைத்த திருமுழுக்கு. இறைமகன் இயேசுவின் வாழ்வைப் புரட்டிப் போட்ட ஒரு நிகழ்வாக அவரது திருமுழுக்கை நாம் சிந்திக்க இன்று ஒரு வாய்ப்பு நமக்கு. இந்த நிகழ்வைக் கூறும் நற்செய்தி இதோ:

லூக்கா நற்செய்தி 3: 15-16,21-22
அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.” மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

முன்பு ஒரு முறை படித்த சிரிப்புத் துணுக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்கின்றனர்.
நான் கடவுளைப் பார்த்தால், ஒரே ஒரு கேள்விதான் கேட்பேன்.
என்ன கேள்வி?
கடவுளே, இவ்வளவு அநியாயம் நடக்குறதைப் பாக்குறியே. ஒன்னும் செய்ய மாட்டியா?
நல்ல கேள்வி. கேட்கவேண்டியது தானே?
அதே கேள்வியை கடவுள் என்கிட்டே திருப்பி கேட்டா?

சிரிப்புகள் பலநேரங்களில் சிந்தனைகளைத் தூண்டிவிடும் நெருப்புக் குச்சிகள். இல்லையா?
கடவுளே, இவ்வளவு அநியாயம் நடக்குறதைப் பாக்குறியே. ஒன்னும் செய்ய மாட்டியா? என்ற இந்தக் கேள்வியைப் பல கோடி மக்கள் இதுவரை கேட்டிருப்பர். இனியும் கேட்பார்கள். நானும் இந்தக் கேள்வியைக் கேட்க நினைத்ததுண்டு. கேட்டதில்லை. எனக்கும் இதே பயம். இந்தக் கேள்வியை விண்ணை நோக்கி நான் ஏவி விட்டால், அது மீண்டும் ஒரு மின்னலாக, இடியாக, எதிரொலியாக என்னைத் தாக்குமோ என்ற பயம்.
சாதாரண மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசுவுக்கும் இந்தக் கேள்வி கட்டாயம் உள்ளத்தில் எழுந்திருக்கும். 30 ஆண்டுகள் அமைதியாக, நாசரேத்தூரில், தானுண்டு, தன் வேலையுண்டு, தன் தாயுண்டு என்று வாழ்ந்து பழகி விட்டாலும், அவ்வப்போது இயேசுவைச் சுற்றி நடந்த பல அநியாயங்கள் அவர் மனதில் பூகம்பங்களாய் வெடித்திருக்கும்.
இந்த அநியாயங்களுக்கு விடை தேடி தன் நண்பர்கள், தெரிந்தவர்கள் பலரும் புரட்சிக் குழுக்களை உருவாக்கியதையும், அந்தக் குழுக்களில் சேர்ந்ததையும் இயேசு கட்டாயம் அறிந்திருந்தார். தீவிரவாதமும், வன்முறையும் தான் தீர்வுகளா? வேறு வழிகள் என்ன? என்று அவரும் கட்டாயம் சிந்தித்திருப்பார். இந்த சிந்தனைகளின் விடையாக அவர் எடுத்த முதல் முடிவு... மக்களோடு மக்களாகத் தன்னைக் கரைத்துக் கொள்ள வேண்டும். அந்த முடிவோடு, அந்த முனைப்போடு யோர்தான் நதியில் இயேசு இறங்கினார்.
மக்களை மீட்க வந்தவர் மக்களோடு மக்களாக மாறுவதா? இவரையெல்லாம் தலைவர் என்று யார் ஏற்றுக்கொள்ள முடியும்? தலைவர் என்றால்... அன்பு நெஞ்சங்களே, ‘தலைவர் என்றால்…’ என்று விரியும் இலக்கணத்தைச் சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. நாம் கேள்விப்பட்டு, பார்த்து சலித்துப் போன பல தலைவர்களுக்கும் இயேசுவுக்கும் ஆறு வித்தியாசங்கள் அல்ல... அறுநூறுகோடி வித்தியாசங்கள் உண்டு.

இயேசு யோர்தானில் மக்களோடு மக்களாய் இறங்குவதற்கு ஒரு முக்கிய காரணம் தந்தையின் மீது அவர் வைத்திருந்த அளவு கடந்த நம்பிக்கை. கடவுள் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்க முடியும் என்பதற்கு பல கதைகள் நாம் கேட்டிருக்கிறோம்.
பாதாளத்தில் தவறி விழுந்து விடும் ஒருவன், ஒரு மரத்தின் கிளையையோ, வேரையோ பற்றிக்கொண்டு கடவுளைப் பார்த்து வேண்டுவதும், கடவுள் அவனிடம் நீ உண்மையிலேயே என்னை நம்புகிறாயா என்று கேட்பதற்கு ஆம் என்று அந்த மரண பயத்தில் அலறுவதும் அந்த மனிதனிடம் கடவுள் “நீ என்னை முழுவதும் நம்புவதாக இருந்தால், நீ பற்றியிருக்கும் அந்த மரத்தின் கிளையை விட்டுவிடு” என்று சொல்வதும் நமக்குத் தெரிந்த கதை.
அந்தக் கதையின் தொடர்ச்சியாக எனது கற்பனை இது. பற்றியிருக்கும் கிளையை விட்டுவிடு என்று கடவுள் சொன்னதும், கொஞ்ச நேரம் மனிதன் யோசிக்கிறான். பின்னர் இன்னும் உரத்தக் குரலில், "வேறு கடவுள் யாராவது இருக்கிறீர்களா, என்னைக் காப்பாற்ற?" என்று அலறுகிறான். இயேசுவைப் போன்ற இறை நம்பிக்கை கொண்டவர் அந்தச் சூழலில் இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று கற்பனை செய்யலாம். கடவுள் அந்தக் கிளையை விட்டுவிடு என்று சொன்னதும், கிளையை ஆனந்தமாய் விட்டு விடுவர். இதில் என்ன அற்புதம் என்றால், அந்தக் கிளையை விட்டதும், அவர்கள் அந்த பாதாளத்தில் கீழே செல்வதற்கு பதில் மேலே பறக்க ஆரம்பித்திருப்பர். இயேசுவுக்கு அப்படி ஒரு அற்புத உணர்வு அந்த யோர்தான் நதியில் ஏற்பட்டது.
ஏழை பணக்காரன், ஆண்டான் அடிமை என்று பிளவுபட்ட, ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சமுதாயத்தைப் பார்த்து அலுத்துவிட்ட யூத மக்கள் எப்போது இந்த வேறுபாடுகள் மறையும் என்று காத்துக் கிடந்தார்கள். இந்த வேறுபாடுகள் மறையும், மலைகள் தாழ்த்தப்படும், பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும் என்று ஏசாயா போன்ற இறைவாக்கினர்கள் பலர் பல நூறு ஆண்டுகளாய்க் கூறிவந்தனர். அந்த இறைவாக்குகளின் ஒரு பகுதியை இன்றைய ஞாயிறு வாசகமும் நமக்குத் தருகிறது.
எசாயா 40: 1-5,9-11


இந்த இறைவாக்குகளை உண்மையாக்கும் முயற்சிபோல் இருந்தது இயேசுவின் இந்தச் செயல். மக்களோடு மக்களாக கலந்து வந்த இயேசுவைக் கண்டு, அவருக்குத் திருமுழுக்கு அளிக்க இருந்த யோவான் திகைத்தார். எனக்குப் பின் வருபவர் என்னைவிட உயர்ந்தவர் என்று மக்களிடம் அடிக்கடி கூறிவந்தவர் யோவான். இயேசுவைக் கண்டதும், "இதோ மெசியா" என்று உரக்கக் கத்த நினைத்தார் யோவான். அவரை இயேசு அமைதிபடுத்தி, திருமுழுக்கு பெறுகிறார். இயேசுவின் இந்த பணிவு, மக்களோடு மக்களாய் கரைந்து விட அவர் கொண்ட ஆர்வம் ஆகியவை விண்ணகத் தந்தையை மிகவும் மகிழ்விக்கிறது.
தன் மகனோ, மகளோ அர்த்தமுள்ள, பெருமை சேர்க்கும் செயல்களைச் செய்யும் போது, நெற்றியில் முத்தமிட்டு, ஆசீர்வதிக்கும், அரவணைக்கும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். நாமும் இந்த ஆசீர், அரவணைப்பு இவற்றை அனுபவித்திருப்போம். அதுதான் அன்று யோர்தானில் நடந்தது. மக்களோடு மக்களாகத் தன்னை முழுவதும் இணைத்துக் கொண்ட இயேசுவைக் கண்டு ஆனந்த கண்ணீர் பொங்க தந்தையாம் இறைவன் சொன்ன வார்த்தைகள்:"என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்." உள்ள பூரிப்புடன், உன்னத இறைவன் இந்த வார்த்தைகளை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லக் காத்திருக்கிறார். நம்மையும் வாரி அணைத்து உச்சி முகந்து இந்த அன்பு மொழிகளை அவர் சொல்லும் வண்ணம் நம் வாழ்வை மாற்றி அமைக்க அதே இறைவனின் அசீரை வேண்டுவோம்.

10 January, 2010

PLEASE TOUCH THE STARS… தயவுசெய்து விண்மீன்களைத் தொடுங்கள்...

MY DREAM TROUPE
In recent years Dubai has grabbed the headlines with audacious offshore islands, rotating buildings and a seven star hotel. On Monday it opens the world's tallest building, Burj Dubai. It is the highest building on earth now. It's about twice the height of the Empire State Building, you can see its spire from 95km away and the exterior is covered in about 26,000 glass panels, which glisten in the midday desert sun. Standing at over 800 metres, Burj Dubai has easily smashed the previous world record, Taiwan's Taipei 101, which is 508 metres high. The last couple of decades have seen a shift in the building of skyscrapers from the West to the East. Four out of five of the world's tallest buildings are in Asia and the Middle East. (From the report given in BBC on Jan.04, 2010)

Why is this sudden interest in high-rise buildings? I have a reason. I am sure all of us still remember Sep.11, 2001 when the twin towers of WTC in NY was attacked. I have heard that the restaurant on the 106th floor of this WTC had an ad slogan which went something like this: “At night, please don't touch the stars!
Ads do have a strong drive towards fantasy, dream. Those who are involved in advertisements know that human beings rely on dreams and fantasy. Touching the stars, reaching the skies are inherent dreams of the human race right from the beginning. There have been hundreds, nay tens of thousands of attempts by human beings to reach the skies. Standing firm on the ground and yet reaching for the stars is one such attempt. This attempt is manifested in the high rise buildings we see today. In the Bible we come across one such attempt by human beings - the tower of Babel. (Gen. 11: 1-9) That God thwarted this dream is another twist to this story. But, this dream has continued down the centuries and now we have Burj Dubai.
Reaching for the stars… need not be manifested only in such ‘concrete’ (pun intended) attempts. There have been various other ways to follow the star, reach for the star, point the star to others and help others too reach for the star… We can surely think of great historical figures like Gandhi, Mother Teresa, Nelson Mandela, Martin Luther King… etc. By following the star and reaching for the star, they have become stars themselves. I wish to talk about smaller stars… One such star is Tai Lihua, a Chinese lady. She is one of the lead dancers in a troupe called MY DREAM. I saw one of their performances in the video and was stunned by the grace and precision of the performance. I was more stunned when I realised that none of those who danced were able to hear the music and the rhythm, since they were all hearing impaired and speech impeded persons.
MY DREAM troupe has more than 200 differently abled persons. Right now (January, 2010) this troupe is touring India and the fortunate ones in Chennai would have seen the performance of this troupe on January 10, Sunday.
Kindly read more on this troupe:
http://www.mydream.org.cn/about.htm
Kindly watch one of their performances in YouTube.
Buddha With Thousand Hands 2008 (High Quality)
http://www.youtube.com/watch?v=5HpWkNsGCms&feature=related
What is more inspiring about this troupe is that they have been a source of inspiration for thousands of people with the message – where there is a will, there is a way. In their website, Tai Lihua talks about their performance in the central jail in China and how after the performance she talked to the prisoners in sign language and touched their hearts. I am sure this troupe would have touched so many hearts in India by now. In many places this troupe is introduced as “A special art star of mankind and image ambassador for 600 million people with disabilities in the world”.

The narrative of the Magi given in Matthew’s Gospel has inspired quite a few other stories. One such story is “The Other Wise Man” written by Henry Van Dyke. This story is sometimes called ‘the Fourth Magi’. Artaban, the fourth magi, was late in joining the other wise men since he had to sell his property to buy gifts for his King. On the way, he was once again delayed in trying to save a sick person. When he reached Bethlehem, he found out that Mary and Joseph had taken Jesus to Egypt. As he was about to leave for Egypt, Herod’s soldiers began killing infants. He bribed these soldiers with one of his precious gifts and saved the infants… The search of Artaban continued for about 30 more years. At last he reached Jerusalem where he learnt that his King was already on his way to be crucified. On the way to Calvary, he had to save a slave girl from some soldiers by giving away the precious pearl, the final gift he had reserved for his King all these years. At that moment, darkness covered the face of the earth. There was an earthquake.
Here are the closing lines of ‘The Other Wise Man’ by Henry Van Dyke:
One more lingering pulsation of the earthquake quivered through the ground. A heavy tile, shaken from the roof, fell and struck the old man on the temple. He lay breathless and pale, with his gray head resting on the young girl's shoulder, and the blood trickling from the wound. As she bent over him, fearing that he was dead, there came a voice through the twilight, very small and still, like music sounding from a distance, in which the notes are clear but the words are lost. The girl turned to see if some one had spoken from the window above them, but she saw no one.
Then the old man's lips began to move, as if in answer, and she heard him say in the Parthian tongue:
"Not so, my Lord! For when saw I thee hungered and fed thee? Or thirsty, and gave thee drink? When saw I thee a stranger, and took thee in? Or naked, and clothed thee? When saw I thee sick or in prison, and came unto thee? Three-and-- thirty years have I looked for thee; but I have never seen thy face, nor ministered to thee, my King."
He ceased, and the sweet voice came again. And again the maid heard it, very faint and far away. But now it seemed as though she understood the words:
"Verily I say unto thee, Inasmuch as thou hast done it unto one of the least of these my brethren, thou hast done it unto me."
A calm radiance of wonder and joy lighted the pale face of Artaban like the first ray of dawn, on a snowy mountain-peak. A long breath of relief exhaled gently from his lips.
His journey was ended. His treasures were accepted. The Other Wise Man had found the King.

http://www.classicreader.com/book/593/1/
Artaban’s story is a clear indication that not every one who followed the star found God. Still, they had become stars leading others to God.
As against the ‘ad-vice’ given by the WTC restaurant not to touch the stars, here is what I would like to share with you: Kindly touch the stars and help others touch the stars.

சனவரி 4, 2010 திங்களன்று துபாயில் உலகத்திலேயே மிக உயரமான கட்டிடம் திறக்கப்பட்டது. 2600 அடி உயரமான இந்தக் கட்டிடம் இதுவரை உலகிலேயே அதிக உயரமாய்க் கருதப்பட்ட Taipei 101 கட்டிடத்தைவிட ஏறக்குறைய 1000 அடி கூடுதலான உயரம் கொண்டது. கடந்த 20 ஆண்டுகளாய் உலகின் மிக உயரமான கட்டிடங்கள் ஆசியாவிலும், அரபு நாடுகளிலும் அதிகம் கட்டப்பட்டுள்ளன. மலேசியாவின் Petronas கோபுரம், Shanghaiயில் உலக வர்த்தக மையம், Taipei 101 இப்போது Burj Dubai என்ற இந்தக் கட்டிடம்.
கட்டிடங்களைப் பற்றிய ஆராய்ச்சி இப்போது ஏன்? காரணம் உள்ளது. அதுவும் உயரமான, மிக, மிக உயரமான கட்டிடங்களைப் பற்றி இன்று நான் சிந்திப்பதற்கு, திங்களன்று வாசித்த Burj Dubai கட்டிடம் ஒரு காரணம். வேறு ஒரு காரணமும் உண்டு.
2001ம் ஆண்டு செப். 11 இரண்டு விமானங்களால் தாக்கப்பட்ட நியூயார்க் வர்த்தக மையங்களின் இரு கோபுரங்களை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. 110 மாடிகளைக் கொண்ட அந்த கோபுரங்களின் 106வது மாடியில் அமைந்திருந்த ஒரு உணவகத்திற்கான விளம்பரம் இப்படி வந்திருந்தது. At night, please don't touch the stars! இரவில் தயவு செய்து விண்மீன்களைத் தொடாதீர்கள். விண்மீன்கள் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பது போலவும், அவைகளுக்குப் பக்கத்தில் நாம் அமர்ந்திருப்பதைப் போலவும் ஒரு உணர்வை ஏற்படுத்த இந்த விளம்பர வரிகள். அந்த வர்த்தக மையங்களின் உயரத்தைச் சொல்லாமல் சொல்லும் விளம்பரம் இது.
பொதுவாகவே, விளம்பரங்களைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பல கனவுகளை உள்ளத்தில் விதைத்து, ஏக்கங்களை உண்டாக்குவதுதான் விளம்பரங்களின் முக்கிய வேலை. விண்மீன்களைத் தொடக்கூடும் என்பதும் அப்படி ஒரு கனவு, கற்பனைதான். அடிப்படையில் மனித குலத்திற்கு இந்த வேட்கை, ஏக்கம் ஆழ்மனதில் குடிகொண்டுள்ளது. வானத்தைத் தொட்டு விட வேண்டும்.
பறக்கும் முயற்சிகள், ராக்கெட் முயற்சிகள் என்று விண்வெளியை வெல்வதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் ஆயிரமாயிரம். பூமியில் காலூன்றி, அதே நேரம் விண்ணைத் தொடும் முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தான் நம் அடுக்கு மாடி கட்டிடங்களைப் பார்க்க வேண்டும். மனித குலம் பாபேல் கோபுரம் கட்டும்போதே இதுபோன்ற முயற்சிகளை ஆரம்பித்தது. தொடக்க நூலில் இந்த முயற்சி பற்றி சொல்லப்பட்டுள்ள வரிகள் இவை.

தொடக்கநூல் (ஆதியாகமம்) 11
அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன... பின், மக்கள் “வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்” என்றனர். மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார்… ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர். ஆகவே அது ‘பாபேல்’ என்று வழங்கப்பட்டது.




இன்றும் இந்த முயற்சி தொடர்கிறது. பூமியில் உறுதியாக நிற்க வேண்டும், அதே நேரம் மேகங்களில் சவாரி செய்து கொண்டு, விண்மீன்களைத் தொட்டு விளையாடிக்கொண்டு, நிலவின் ஒளியில் சாப்பிட்டுக் கொண்டு... மனித குலத்தின் கற்பனைகளுக்கும், கனவுகளுக்கும் வேலிகள் போடுவது கஷ்டம்.
ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது, இந்தக் கற்பனைகள், கனவுகள் தாம் மனித குலத்தை இதுவரைப் பல அழிவுகளிலிருந்து பாதுகாத்திருக்கின்றன. பல அழிவுகளுக்கு நாம் உட்பட்ட போது நம்மை மீட்டு கொண்டு வந்திருக்கின்றன. முன்னேற்றங்களைத் தந்திருக்கின்றன.
இந்த கனவுகள், கற்பனைகள் எல்லாமே கட்டிடங்களையும், கோபுரங்களையும் மட்டும் எழுப்பவில்லை. மனிதர்களையும் கட்டி எழுப்பியுள்ளன. அந்தச் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவே இன்றைய விவிலியத் தேடல். சென்ற ஞாயிறு சிந்தனையில் "விண்மீன்களின் ஒளியில் நடந்தனர் இந்த ஞானிகள்" என்ற ஒரு சிந்தனையைப் பகிர்ந்துகொண்டோம். அந்த சிந்தனையின் இறுதியில்:
“உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்றதால் தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப் போல் எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.” என்று முடித்தேன். அந்த தொடர் சிந்தனை முயற்சிதான் இது.
தங்களையும், உலகத்தையும் மாற்றியவர்கள் என்று நினைக்கும்போது, நம் மனங்களில் கட்டாயம் ஓர் சிலரது பெயர்கள், உருவங்கள் பதிவாகும். பளிச்சிடும். மகாத்மா காந்தி, மதர் தெரசா, நெல்சன் மண்டேலா, மார்டின் லூத்தர் கிங் என்று பலரது பெயர்கள் வந்து போகும். வரலாற்றில் இப்படி இடம் பெறாமல் ஆனால், மக்கள் பலரது உள்ளங்களில் இடம் பெற்று அவர்களது வாழ்வை மாற்றிய ஆயிரமாயிரம் சிறு விண்மீன்களை நினைத்துப் பார்க்கும் ஒரு முயற்சி இது.
நான் இன்று உங்களுடன் பகிர விழைவது 32 வயதான Tai Lihua என்ற பெண்ணைப் பற்றி. சீனாவில் Hubei மாநிலத்தில் 1976ல் பிறந்தவர் Tai Lihua. இவருக்கு 2 வயது நடக்கும் போது, காய்ச்சல் வந்தது. அப்போது தவறுதலாகக் கொடுக்கப்பட்ட ஓர் ஊசியால், கேட்கும் திறனை இழந்தார். இவர் உலகம் மௌனமானது.
நடனம் ஆடுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் ஏழாம் வயதில் செவித்திறன் பேச்சுத் திறன் இழந்தோர் பள்ளியில் சேர்ந்தார். அங்கு ஒரு நடன ஆசிரியர் நடன வகுப்புகள் நடத்தும் போது தன் கால்களால் தரை அதிரும்படி தாளமிடுவார். அவரது கால்கள் அனுப்பிய தாள அதிர்வுகள் அங்கிருந்த Tai Lihuaவின் உடலில் பரவியது. அந்த அதிர்வுகளை உள்வாங்கி அவர் நடனமாட ஆரம்பித்தார்.
நடனக்கலையில் இவர் தேர்ந்ததும், இவரைப் போல செவித்திறனையும், பேசும் திறனையும் இழந்து அதே நேரம் நடனமாடும் கனவு, ஆர்வம் (வெறி) இவைகளை இழக்காமல் வாழ்ந்து வந்த பலரை இணைத்து நடனக் குழுவொன்றை ஆரம்பித்தார். My Dream (என் கனவு) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குழுவில் 200க்கும் அதிகமான கலைஞர்கள் உள்ளனர். உடலால் குறையுள்ள, அங்கங்களை இழந்த இந்தக் கலைஞர்கள் உலகப் புகழ்பெற்ற ஒரு கலைக் குழுவாக இன்று திகழ்கின்றனர்.
2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் ஒலிம்பிக் போட்டி நடந்த போது இந்தக் குழுவினர் அளித்த நிகழ்ச்சி அகில உலக பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்தது. புத்தரின் 1000 கைகள் என்ற இவர்களது நடனத்தை வீடியோவில் பார்த்தேன். அசந்து போனேன். அவ்வளவு துல்லியமாக, அழகாக, கச்சிதமாக, தாளம் தப்பாமல் அவர்கள் ஆடினர். அதைவிட பெரிய ஆச்சரியம் எனக்குக் காத்திருந்தது. அந்த நடனத்துக்கான இசையையோ, தாளத்தையோ அவர்களால் கொஞ்சமும் கேட்க முடியாது என்று அறிந்தபோது என் மனதில் ஏகப்பட்ட பிரமிப்பு.
இந்த நடனக் குழுவைப் பற்றிய இந்த பிரமிப்பு அந்த நடனங்களோடு நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி, இந்தக் குழுவினர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை, நல்லெண்ணங்களை விதைத்துள்ளனரே, அந்தச் செய்திகளைக் கேட்கும் போதும் இந்த பிரமிப்பு பல மடங்காகியது.
ஒரு முறை இந்த நடனக் குழு சீனாவில் மத்திய சிறைச் சாலையில் கலை நிகழ்ச்சிகளை முடித்த பின், Tai Lihua கைதிகளைச் சந்தித்து பேசினார் தன் சைகை மொழியால். அவர் சொன்னது இதுதான்: "கைதிகளாகிய உங்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது பற்றி நாங்கள் முதலில் பயந்தோம், தயங்கினோம். ஆனால், இன்று உங்களைச் சந்தித்து பேசும் போது, பல விதங்களில் நாம் ஒரே மாதிரியாக இருப்பதை உணர்கிறேன். நாங்கள் உடலளவில் ஊனமுற்றவர்கள். நீங்கள் மனதளவில் ஊனமுற்றவர்கள்." என்று அவர் சொன்னதைக் கேட்ட கைதிகள் கண் கலங்கி நின்றனர்.
போலந்து நாட்டில் அந்த நாட்டு அரசுத் தலைவர் உட்பட பல உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற ஒரு மாபெரும் நிகழ்ச்சிக்குப் பின், கலைஞர்கள் உள்ளே சென்று உடைகளை மாற்ற ஆரம்பித்துவிட்டனர். அப்போது நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தவர்கள் கலைஞர்களை மீண்டும் மேடைக்கு வரும்படி அழைத்தனர். அந்த அரங்கம் எழுப்பிய கரவோலியையும் கேட்க இயலாதவர்கள் என்பதால், கரவொலியை உணராமல் வந்துவிட்டதாக சொல்லி அவர்களிடம் Tai Lihua மன்னிப்பு கேட்ட போது, அந்த அரங்கத்தில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் மல்கியது.
இப்படி பல செய்திகள். கலை நிகழ்ச்சிகள் வழியாகவும், அந்த நிகழ்ச்சிகளைத் தாண்டியும் Tai Lihuaவும் அவரது குழுவும் உலகில் பல கோடி மக்களின் மனங்களைத் தொட்டு, அவர்களில் நம்பிக்கையை வளர்த்து வருகின்றனர்.
Tai Lihuaவைப் போல் உடலால் குறைவுபட்ட போதிலும், உள்ளத்தில் நம்பிக்கை குறைவுபடாமல் சாதனைகள் புரிந்த இசை மேதை பீத்தோவன் கவிஞர் ஜான் மில்டன் என்று பலரை உலகம் பாராட்டுவது நமக்குத் தெரிந்த வரலாறுதான்.
My Dream (என் கனவு) என்ற இந்தக் குழுவைப் பாராட்டும் போது பலரும் சொல்லும் ஒரு வாக்கியம் இது: A special art star of mankind and image ambassador for 600 million people with disabilities in the world. "உலகில் இன்று உடல் ஊனத்துடன் வாழும் 60 கோடிக்கும் மேலான மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் இந்தக் கலைக்குழு." என்று சொல்வார்கள். இந்தக் குழுவினர் இந்த சனவரி 10ஆம் தேதி சென்னை, நேரு விளையாட்டரங்கத்தில் மாலை 6 மணி அளவில் தங்கள் கலை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்கள் என்றும், அந்த நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் தொகை தூய இருதய நிலையத்தில் உள்ள தொழுநோயாளிகளின் பணிக்கென வழங்கப்படும் என்றும் செய்தியில் வாசித்தேன்.

விண்மீனைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளின் பயணம் பல நூற்றாண்டுகளாய் பலரிடம் இறைதாகத்தை உண்டாக்கியது என்று ஞாயிறன்று கூறினேன். இந்த ஞானிகளின் கதை வேறு பல கற்பனைக் கதைகளுக்கு வித்திட்டுள்ளது. அவைகளில் ஒன்று Henry Van Dyke எழுதிய "The Other Wise Man" மற்றுமொரு ஞானி என்ற கதையும் ஒன்று. இந்தக் கதையில் வரும் ஞானியின் பெயர் Artaban. மற்ற மூன்று ஞானிகளைப் போல் விண்மீனைக் கண்டு பயணம் ஆரம்பிக்கத் துடித்தார் Artaban. ஆனால், தான் சந்திக்கச் செல்லும் அந்த மன்னனுக்கு பரிசுகள் ஏந்திச் செல்ல நினைத்தார். தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று விலையுயர்ந்த மாணிக்கம், வைரம், முத்து ஆகியவற்றை வாங்கிக் கொண்டார். இதனால், அவரது பயணம் கொஞ்சம் தாமதமானது. பாலை நிலத்தை முடிந்தவரை வேகமாகக் கடந்துகொண்டிருந்த போது, நோயுற்று சாகும் நிலையிலிருந்த ஒரு யூதர் பாலைவனத்தில் மயங்கிக் கிடந்ததைப் பார்த்தார். நோயாளியை விட்டுவிட்டுச் செல்ல நினைத்தார். ஆனால் மனம் இடம் தரவில்லை. தன்னிடம் இருந்த மாணிக்கத்தை விற்று, அந்தப் பணத்தைக் கொண்டு நோயாளியைக் கவனித்தார். தன் பயணத்திற்கும் தேவையானவைகளை வாங்கிக்கொண்டார்.
அவர் பெத்லகேம் வந்தபோது, மற்ற மூன்று ஞானிகளும் மீண்டும் தங்கள் நாட்டுக்குப் போய்விட்டதை அறிந்தார். அதைவிட பெரும் ஏமாற்றம்... குழந்தை இயேசுவை அவரது பெற்றோர் எகிப்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்ற செய்திதான். பயணத்தைத் தொடர நினைக்கும் போது, ஏரோதின் படைவீரர்கள் அங்குள்ள குழந்தைகளைக் கொல்வதற்கு வருவதைப் பார்த்தார். தன்னிடம் இருந்த வைரத்தை அவர்களுக்கு சன்மானமாகக் கொடுத்து, குழந்தைகளைக் காப்பாற்றினார்.
இவ்வாறு, Artaban 33 ஆண்டுகள் தனது மன்னனைத் தேடி இறுதியில் எருசலேம் வந்தார். அங்கு இயேசுவை ஏற்கனவே சிலுவையில் அறைவதற்கு கல்வாரிக்குக் கொண்டு சென்று விட்டனர் என்று கேள்விப்பட்டார். தன் கையிலிருக்கும் விலையுயர்ந்த முத்தை அந்த வீரர்களிடம் கொடுத்து இயேசுவை மீட்டு விடலாம் என்று கல்வாரி நோக்கி விரைந்தார். போகும் வழியில் போர்வீரர்களிடம் சிக்கிக் கொண்ட ஒரு பெண்ணை விடுவிக்க அந்த முத்தையும் கொடுத்தார்.
அந்த நேரத்தில், அந்த பகல் நேரத்தில், திடீரென இருள் சூழ்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டது. Artaban தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக: "இந்தச் சிறியவர்களுள் ஒருவருக்கு நீர் இதைச் செய்யும் போது, எனக்கேச் செய்தீர்." என்ற குரல் கேட்டது. இக்குரலைக் கேட்டதும், Artaban தான் தேடி வந்த அரசனைக் கண்டு கொண்ட திருப்தியோடு கண்களை மூடினார்.
மனதுக்கு நிறைவைத்தரும் ஒரு கதை. விண்மீனைக் கண்டு பயணம் புறப்பட்டவர்களேல்லாம் கடவுளை நேரில் கண்டனரா? இல்லையே. எத்தனையோ பேர், கடவுளை நேரில் காணாத போதும், அந்தக் கடவுளின் நியதிகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்றி, அவர்களே பலரை வழிநடத்தும் வின்மீண்களாயினர் என்பதை Artaban புரிய வைக்கிறார். நடனம் என்ற ஆழ்ந்த தாகத்தின் வழியாய் உள்ளத்தில் தோன்றிய ஒரு விண்மீனைத் தான் தொடர்ந்து, மற்றவர்களுக்கும் அந்த விண்மீனைக் காட்டி வழிநடத்திய Tai Lihuaவும், விண்மீனைத் தொடர்ந்து போயும் இறுதிவரை இறைவனைப் பார்க்காமல், இறைவனின் மறு சாயலாய் வாழ்ந்த Artabanம் மக்களின் மனங்களில் பல அடுக்கு மாளிகையாய் கோபுரங்களை எழுப்பியுள்ளனர். துபாயில் கட்டப்பட்டுள்ள அந்த அடுக்கு மாடியைவிட அதிகம் மதிப்புடைய இந்த கோபுரங்கள் எல்லா நாடுகளிலும் எல்லாருடைய மனங்களிலும் எழுப்பப்படவேண்டுமென இறைவனை வேண்டுவோம்.