24 January, 2010

If TODAY you hear God’s voice… இன்றே, இப்போதே...


Luke 4: 16-21 is one of my favourite passages in the Bible. This is popularly known as the Manifesto of Jesus. Unfortunately, the word ‘manifesto’ has many shady connotations now since the word has been misused by political parties and candidates. It is quite interesting to see that Jesus did not create this manifesto. He simply borrowed it from Isaiah. He made it his own by the master stroke he gave at the end. The punch line. Here is the gospel passage from Luke.

Luke 4: 16-21
And he came to Nazareth, where he had been brought up. And as was his custom, he went to the synagogue on the Sabbath day, and he stood up to read. And the scroll of the prophet Isaiah was given to him. He unrolled the scroll and found the place where it was written,
"The Spirit of the Lord is upon me,
because he has anointed me
to proclaim good news to the poor.
He has sent me to proclaim liberty to the captives
and recovering of sight to the blind,
to set at liberty those who are oppressed,
to proclaim the year of the Lord’s favor."
And he rolled up the scroll and gave it back to the attendant and sat down. And the eyes of all in the synagogue were fixed on him. And he began to say to them, "Today this Scripture has been fulfilled in your hearing."


The last line in this gospel was Jesus’ master stroke. He gave this punch line when all eyes were turned on him. Hence, his words must have gone home. What was so special about these words? The word ‘Today’ was special. Let me explain.
The Israelites living at the time of Jesus were trained to look to the future. Many of their teachers and prophets had insisted on the time to come. That was a safer bet than telling them that salvation had already come, since things looked as miserable as before. Jesus changed that perspective. He said TODAY fulfilment had come.
We have surely heard of the famous phrase: Grace of the Present Moment. Jesus lived the present, the here-and-now moment all his life. He tried his best to instill this thought into his people through his words and deeds. In his miracle at Cana (labelled as his first sign), “he told the workers, ‘Now draw some out and take it to the master of the banquet.’” (John 2:8). When Jesus told the workers ‘now’, it was not clear whether water had turned into wine. Still, the workers did it and it was already wine!
When he asked the ten leprosy patients to go and show themselves to the priests, they were not cured yet. As they were going, they were healed. (Luke 17). Similarly, he tells the paralytic to carry his bed and walk immediately. (Matthew 9). The miracle of feeding the people stranded in the desert once again illustrates that Jesus believed in the here and now. When the disciples asked Jesus to send the people away, he asked them how much food they had there and then. (Mark 6:38) He began the miracle with what they had not with what they would have or could have had.
In the famous prayer taught by Jesus, he asks us to pray: ‘Give us TODAY our daily bread.’ When he was hanging on the cross, one of them crucified along with Jesus made an impossible request, namely, to give him a place in the Kingdom. How could someone think of a Kingdom while hanging on a cross? Anyone in that position would have given up on the Kingdom or, at least, postponed such thoughts. Not Jesus. Although he was fighting for every breath on the cross, Jesus still spoke with assurance, “I tell you the truth, TODAY you will be with me in paradise.” (Luke 23:43) What better proof is needed to say that Jesus was a PRESENT, HERE-AND-NOW person. The grace of the present moment was overflowing in him.
Living in the present moment is a real challenge. A quick look at a typical day in our life would prove this point. The moment we wake up, many thoughts crowd our mind… most of them either memories of what happened the previous day, especially the sad ones, or anxieties of the day ahead of us. I am not sure how many of us notice the myriad little miracles that happen around us day after day… like the water that refreshes our mouth and face every morning, the exercises that awaken the body fully. If we are in the habit of doing yoga, or meditation in the morning, I don’t know how many of us are aware of the cool air that enters our nostrils when we breathe in and the hot air that is breathed out.
Likewise, one can surely be TOTALLY present at breakfast, at the little journey we take to the school or office, at the work spot, at the party with our friends… myriads of possibilities! If only we are totally involved with the present moment, we can surely avoid many, many mistakes and subsequent regrets. Living in regrets is one sure way to kill TODAY.
Jesus told the people in Nazareth that ‘today’s could bring them salvation. Jesus is still giving us the same good news.
Today, if you hear his voice, do not harden your hearts… (Psalm 95: 7-8)

Here is a song that talks of ‘today’ based on Psalm 95 and Hebrews.
http://www.apologetix.com/music/music.php

Yes Today
Parody of "Yesterday" by The Beatles
(Psalm 95:7-8; Hebrews 3:7-8, 3:15, 4:7)

If today you should hear His voice don't turn away
Now's the time that you should kneel and pray
And finally say yes today
Suddenly you might have to spend eternity
In a place you never want to be
Say yes today and just believe
Christ – He died for all -- there's no soul He wouldn't save
There's just one thing you have to do – say yes today
"Yes" today seems like such an easy thing to say
All you need is faith, so why delay?
Say, "I believe," and "yes" today
Why you might say no, I don't know ... I couldn't say
I'd say something's wrong if you don't say "Yes" today
Yes, today might just be your final chance to pray
All you need is faith, so why delay?
Say, "I believe," and "yes" today
Mmmmmmmmm


©2005 Parodudes Music, Inc.

சனவரி 24 - நாளும் ஒரு நல்லெண்ணம்
வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை என்பது நாம் அடிக்கடி கேட்கும் ஒரு அழகிய வாழ்த்து. இப்படி ஒருமுறை வாழ்வதை கடந்த அல்லது எதிர் காலங்களில் வாழாமல், நிகழ் காலத்தில் வாழ்ந்தால், ஒரு தலைமுறை அல்ல... பல தலைமுறைகள் நம்மை வாழ்த்தும்.
இன்று வாழ்வதை, இப்போது வாழ்வதைப் பற்றி பலர் பல வகையில் கூறியுள்ளனர். அவைகளில் ஒரு சில இதோ:
தொலைபேசியைக் கண்டுபிடித்த Alexander Graham Bell சொன்னது இது: "ஒரு கதவு மூடப்படும்போது, மற்றொரு கதவு திறக்கிறது. மூடிய கதவையே நாம் ஏமாற்றத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதால், திறந்துள்ள கதவைப் பார்க்கத் தவறுகிறோம்” என்று.
"கடந்த காலத்தை மார்போடு அணைத்துக்கொள்ளும் போது, நிகழ்காலத்தை அணைக்க கைகளும், மார்பில் இடமும் இல்லாமல் போகும்." இதைச்சொன்னவர் Jan Glidewell.
"எந்த ஒரு செல்வந்தனாலும், கடந்த காலத்தை விலை கொடுத்து வாங்க முடியாது." இப்படி சொல்லியிருக்கிறார் Oscar Wilde.
ஒன்றே செய்யினும், நன்றே செய்கவென்றும், நன்றே செய்யினும் இன்றே செய்கவென்றும் நம் தமிழ் மரபில் சொல்லிவந்திருக்கிறோம். செயல் படுத்துவோம் இன்றே. இப்போதே.

ஞாயிறு சிந்தனை
இந்த ஞாயிறு சிந்தனை நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருக்கும் அன்புள்ளங்களே, உங்கள் அனைவரையும் ஒரு கற்பனை வகுப்பறைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நமக்கு வகுப்பு நடத்தப்போகும் ஆசிரியர் யார் தெரியுமா? சரியாகச் சொன்னீர்கள்.. இயேசு.
நாம் அனைவரும் ஏகப்பட்ட மகிழ்ச்சியில், படபடப்பில், எதிர்பார்ப்பில்... கொஞ்சம் பக்தியிலும் கூட அங்கே அமர்ந்திருக்கிறோம். இயேசு வகுப்பறைக்குள் வருகிறார். ஒரே ஆரவாரம், கைதட்டல், வரவேற்பு. இந்த ஆரவாரங்கள் எல்லாம் ஓய்ந்தபின், இயேசு நம்மை பார்த்து எடுத்த எடுப்பில் ஒரு கேள்வி கேட்கிறார்: “இங்கு அமர்ந்திருக்கும் உங்களில் எத்தனை பேர் இன்றைக்கு வாழ்கிறீர்கள்?” இது தான் அவரது கேள்வி. கேள்வியின் அர்த்தம் சரிவரத் தெரியவில்லை. நமது புருவங்கள் சுருங்குகின்றன. ஆனாலும், அனைவரும் கைகளை உயர்த்துகிறோம். இயேசு ஒரு புன்முறுவலுடன், "என் கேள்வியை நன்கு புரிந்து கொண்டு, பிறகு கைகளைத் தூக்குங்கள். மீண்டும் கேட்கிறேன். உங்களில் எத்தனை பேர் உண்மையில் இன்றைக்கு வாழ்கிறீர்கள்?" இயேசு 'இன்றைக்கு' என்ற வார்த்தையை அழுத்திச் சொல்கிறார். நாம் சிந்திக்கத் துவங்குகிறோம். இயேசு தொடர்ந்து பொறுமையாய் விளக்குகிறார். "இன்றைக்கு வாழ்வதென்பது, நேற்றைய நினைவுகளில் சிக்கிக்கொண்டோ, நாளையக் கனவுகளைத் தாங்கிக்கொண்டோ வாழ்வதல்ல. இன்றைய நாளின், நிகழ் காலத்தின் ஒவ்வொரு மணித்துளியிலும், நொடியிலும் வாழ்வது. உங்களில் எத்தனை பேர் இந்த வகுப்பில், இந்த நேரத்தில் முழுமையாக இங்கு இருக்கிறீர்கள், முழுமையாக வாழ்கிறீர்கள்?.." என்று இயேசு விளக்கம் சொல்லி, கேள்வியை மீண்டும் கேட்கும் போது உயர்த்தப்பட்ட நமது கைகள் ஒவ்வொன்றாய் கீழே இறங்குகின்றன.
அன்புள்ளங்களே, இன்றைய நாளில், இந்தப் பொழுதில் வாழ்வதென்பது அவ்வளவு எளிதல்ல.
நம் கற்பனை வகுப்பில் சொல்லித்தந்த இந்த பாடத்தை அன்று நாசரேத்தின் தொழுகைக் கூடத்திலும் தன் மக்களுக்குச் சொல்லித்தந்தார் இயேசு. அந்த நிகழ்வைக் கூறும் இன்றைய நற்செய்திக்குச் செவி மடுப்போம்.

லூக்கா 4: 16-21
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.” பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதற்கு, நாளை நல்ல காலம் பிறக்கும் என்று கனவு காண்பதற்கு அதிகம் பழகிப் போயிருந்தனர். நாளை நமக்கு விடிவு வரும் என்று அடிக்கடி பேசிவந்த அவர்களிடம், இயேசு அந்தத் தொழுகைக் கூடத்தில் நின்று முழங்கிய வார்த்தைகள் இவை: "நீங்கள் கேட்ட மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று." இன்று, இப்போது, இங்கே... நிறைவு, விடிவு, மீட்பு வந்து விட்டது என்று இயேசு கூறினார். தான் கூறியதை நம்பியவர். வாழ்ந்தும் காட்டியவர்.
இயேசு உலகில் வாழ்ந்த போது ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு பொழுதையும் முழுமையாக வாழ்ந்தவர். நேற்று, நாளை என்பதெல்லாம் அவர் மனதை, வாழ்வை ஆக்ரமிக்கவில்லை. ஆக்ரமிக்க விடவில்லை அவர். அவர் ஆற்றிய புதுமைகள், சொன்ன சொற்கள், இவைகளைச் சிந்தித்தால், அவர் நிகழ் காலத்தில், நிகழ் நொடியில் வாழ்ந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு சில.
நாம் கடந்த விவிலியத் தேடல்களிலும், ஞாயிறு சிந்தனையிலும் பகிர்ந்து கொண்ட அந்தக் கானாவூர் திருமணப் புதுமை இயேசுவின் முதல் அருங்குறி என்று சொல்லப்படுகிறது. இந்தப் புதுமையில், தண்ணீர் திராட்சை இரசமாய் மாறியதைக் குறிக்க அவர் சொன்ன வார்த்தைகள்: (யோவான் 2:8) "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்." அவர் செய்த முதல் புதுமையிலேயே இப்போது என்ற எண்ணத்தை விதைத்தார்.
லூக்கா நற்செய்தியில் பத்துத் தொழுநோயாளர்களை இயேசு குணமாக்கும் போது, "நீங்கள் நாளைச் சென்று, குருக்களிடம் காட்டுங்கள்." என்று சொல்லாமல், (லூக்கா 17:14) நீங்கள் போய் உங்களை குருக்களிடம் காட்டுங்கள் என்றார். இயேசு இப்படி சொன்னபோது, தொழுநோய் அவர்களை விட்டு நீங்கியிருக்கவில்லை. ஆனால் அவர்கள் அப்போதே நம்பிக்கையுடன் எழுந்து போனார்கள். போகும் வழியில் குணமடைந்தார்கள். இதே போல், (மத்தேயு 9:6) முடக்குவாதமுற்றவரைப் பார்த்து, படுக்கையைத் தூக்கிக்கொண்டு உடனே நடக்கச் சொன்னார். பாலை நிலத்தில் ஐந்தாயிரம் பேருக்கு உணவளித்த புதுமையில் (மாற்கு 6:38) "உங்களிடம் இங்கே எவ்வளவு உணவிருக்கிறது?" என்ற கேள்வியுடன் அந்தப் புதுமையை ஆரம்பித்தார்.
இயேசு சொல்லித்தந்த அந்த அற்புதமான செபத்திலும், "எங்கள் அனுதின உணவை எங்களுக்கு நாளை தாரும்." என்றா சொல்லித்தந்தார்? இல்லையே. மாறாக, இன்று தாரும் என்றார். இன்றே, இப்போதே எங்களுக்கு உணவைத் தாரும், தந்தையே என்று வேண்ட சொல்லித்தந்தார்.
இன்று இப்போது என்று வாழ்ந்து காட்டிய இயேசு, இறுதியில் கல்வாரியில் சிலுவையில் தொங்கியபோதும் அதே எண்ணங்களை வெளிப்படுத்தினார். (லூக்கா 23:43) "இன்றே என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்று இயேசு கூறியது அவரது இறுதி வாக்கியங்களில் ஒன்று.
இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்டவர் விண்ணரசில் நுழைய அனுமதி கேட்டபோது, அந்தக் கொடிய துன்பத்தின் உச்சியில், இயேசு ஒரு விரக்தியுடன் "என்ன பெரிய அரசு... அந்த அரசுக்கு வந்த கதியைத்தான் பார்க்கிறீரே. ஒரு வேளை நாளை அந்த அரசு வரலாம். அப்போது நான் அந்த அரசில் ஒரு வேளை நுழைந்தால், நீரும் நாளை என்னோடு வரலாம்." என்று நம்பிக்கை இழந்து சொல்லியிருக்கலாம். ஆனால், அதற்கு பதில், இயேசு கூறிய நம்பிக்கையூட்டும் சொற்கள் இவை: "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்." இயேசு இன்றையப் பொழுதில், இப்போதைய நொடியில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார் என்பதற்கு இதைவிட சக்திவாய்ந்த சாட்சி இருக்க முடியாது. ‘நிகழ் பொழுதின் அருள்’ என்று பொருள்படும் The Grace of the Present Moment என்ற ஆங்கிலச் சொற்றொடரின் முழு விளக்கமாக இயேசு வாழ்ந்தார்.
நிகழ் பொழுதின் அருளில் நாம் வாழ்கிறோமா என்பதைச் சிந்திப்பது நல்லது. நமது தினசரி நிகழ்வுகளைக் கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.
ஒரு சராசரி காலை நேரத்தைக் கற்பனை செய்து பார்ப்போம். காலை எழுந்ததும், சுய நினைவு தெளிந்ததும், நேற்றைய நிகழ்வுகள், முக்கியமாக கசப்பான நிகழ்வுகள் நமது நினைவை நிறைக்கும். அல்லது அன்று நாம் எதிர்கொள்ள விருக்கும் வேலைகளைப் பற்றிய கவலைகள் உள்ளத்தை நிறைக்கும்.
நம்மில் எத்தனை பேர் பல் துலக்கும் போது வாயில் நடக்கும் விந்தைகளைச் சிந்திக்கிறோம்? அல்லது முகத்தில் நாம் தெளிக்கும் அந்த நீரினால் அங்குள்ள செல்களெல்லாம் கண்விழித்து, குளித்து, சிலிர்த்து முகமெல்லாம் இரத்த ஓட்டம் பரவுவதை உணர்கிறோம்?
அதன் பின் ஒரு வேளை நாம் ஒரு சில உடல் பயிற்சிகள் செய்தால், உடலின் பல பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் பெறுவதை எத்தனை பேர் அனுபவித்து, ரசித்திருக்கிறோம்? காலை வேளையில் நம்மில் சிலர் தியானத்திலோ, யோகப் பயிற்சிகளிலோ ஈடுபட்டால், நாம் உள்ளிழுக்கும் சுவாசம் குளிர்ச்சியாகவும், வெளியில் விடும் சுவாசம் சூடாகவும் இருப்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்?
அதன் பின் காபி, காலை உணவு, பள்ளிக்கு அல்லது அலுவலகத்திற்கு மேற் கொள்ளும் பயணம் என்று நாம் அனுபவித்து ரசிக்கக் கூடிய ஆயிரமாயிரம் சின்னச் சின்னச் செயல்கள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. நம்மில் எத்தனை பேர் இந்தச் செயல்களையெல்லாம் முழு ஈடுபாட்டுடன் ரசித்துச் செய்கிறோம்?
முக்கியமாக சாப்பிடும் போது, வேறு சிந்தனைகளில் மூழ்கிப் போய் என்ன சாப்பிடுகிறோம் என்பதையும் மறந்து ஏதோ ஒரு கடமையைச் செய்வதைப் போல் சாப்பிடுவது மருத்துவ கண்ணோட்டத்தின் படி நம் உடலுக்கு நல்லதல்ல என்பதை நாம் அறிந்தவர்கள் தானே. இருந்தாலும், சாப்பிடும் நேரங்களில் பல சிந்தனைகளுடன் சாப்பிட்டு, அதன் பின் விளைவாக, மருத்துவரை எத்தனை முறை நாம் நாடியிருக்கிறோம்? நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், வாழும் ஒவ்வொரு நொடியையும் ஈடுபாட்டுடன் வாழ்ந்தால், மருந்துக்கும் மருத்துவர் பக்கம் போகத் தேவையில்லையே. நிகழ் பொழுதின் அருளில் வாழ்வது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் அதிக பயன் தரும்.
இயேசு நாசரேத்தின் தொழுகைக் கூடத்தில் வாசித்த ஏசாயாவின் சொற்கள் பல சமுதாயச் சிந்தனைகளை எழுப்பக் கூடியது. அவைகளைப் பற்றி சிந்திக்காமல், இன்று இப்போது என்று நான் பேசியது இன்றைய நற்செய்திக்கு சரியான விளக்கம் இல்லை என்று உங்களில் ஒரு சிலர் நினைக்கலாம்.
இயேசுவின் சமுதாயச் சிந்தனைகள் நாம் அடிக்கடி கேட்டும் உணர்ந்தும் உள்ள உண்மைகள். சமுதாய நீதி பற்றிய கனவுகள் என்றோ எப்போதோ நனவாகும் என்று எண்ணிக் கொண்டிருந்த, வாழ்ந்து கொண்டிருந்த யூத மக்களுக்கு இயேசு கொடுத்த இன்றைய, இப்போதைய பாடங்கள் நம்பிக்கையை வளர்த்த முதல் பாடங்கள். சமுதாய மாற்றங்கள் இனிவரும் என்றல்ல, இப்போதே வந்து விட்டது என்பதை அவர்கள் நம்ப வைத்தது இயேசுவின் முதல் வெற்றி என நான் நினைக்கிறேன். இன்று, இப்போது என்று வாழ்வில் நாம் முழுமையாக ஈடுபட்டால், அப்படி நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் ஈடுபட்டால், அந்த ஈடுபாடு நாம், நமது என்ற குறுகிய வட்டத்தை விட்டு நம்மை வெளியேற வைக்கும். சமுதாய ஈடுபாட்டையும் வளர்க்கும். ஈடுபாட்டுடன் ஒவ்வொருவரும் வாழ்ந்தால், சமுதாயத்தில் குறைகள் அதிகம் தோன்றாது. அப்படியே தோன்றும் குறைகளைக் களைய அன்றே, அப்போதே செயல் படுவோம். தீர்வுகளை அன்றே காண்போம். குறையற்ற சமுதாயம் உறுதியாக உருவாகும். மன்னிக்கவும். ‘உருவாகும்’ என்பது எதிர்காலம். சீரியதொரு சமுதாயம் உருவாகிறது. உருவாகிவிட்டது... நல்லவைகள் நடக்கின்றன என்று நம்புகின்றோம்.

No comments:

Post a Comment