04 November, 2010

Guiding us… not dragging us through life. அழைத்துச் செல்வார்... இழுத்துச் செல்லார்...

© 2007 Parents As Teachers of Lake County Indiana
November 1 and 2… All Saints Day and All Souls Day. Although these two days do not have much to do with our series of reflections on Psalm 23, I don’t want to miss out on some thoughts that crossed my mind when I thought of the sequence of these two days. Does one become a saint and die or does one die and become a saint? Usually death is followed by sainthood. But, the Church has assigned this order and that makes some sense to me.
Usually, we speak well of any one who has passed away. Death is a great leveller, they say. It also is a great veil that covers up the bad and allows only the good things to shine through. If only we had said all the good things we say about a dead person while he or she was alive! Wouldn’t that make this world, heaven and all of us, saints? We can encourage one another to become what we truly are… Saints…before we say goodbye to the world. From this perspective, All Saints Day followed by All Souls Day makes sense.

Last week we began our reflections on the verse, “He guides me in straight paths for His name’s sake” from Psalm 23. We spoke about how these ‘straight paths’ mentioned in this verse is very different from geometric straight lines. Today we shall try and see how God guides us through this apparent labyrinth called life.

Most of us do have very pleasant memories of our childhood. Given a chance we would readily go back in time and stay there now and then. Let us get back to our childhood one more time. The very first posture a child takes after birth is to lie on its back and look at the ceiling. Perhaps the child does not wish to look at this world still. After a few weeks the child rolls over and, probably, for the first time looks at the earth at close quarters. Then it begins to sit and crawl on all four. Then comes the important day when the child stands up and takes its first faltering step. This day is celebrated in most families. It is a joy to watch the child walk on its own. The mother or father would encourage the child by stretching out their hands and asking the child to come. This is a key phase in the growth of a child. During this period, the child may fall quite a few times. If parents are over anxious and decide to carry the child all the time, they are doing a great disservice to the child.
Then comes the stage when the parents take the child outdoor. All that the child requires at this stage is to hold on to the finger of the parent. After some time, even this hold disappears… The child is on its own. Through these stages, the child is physically guided into becoming a little boy or a little girl.
The girl or the boy is then guided in various other ways by parents, teachers, relatives and friends to make decisions in life – decisions regarding their education, career, life-partner etc. In many families during these important stages of making decisions, God’s guidance is sought. How would God guide? “He guides me in straight paths for His name’s sake.” This verse is used as a thought or a prayer for divine guidance. Another passage that is often used to seek God’s guidance is taken from the Book of Proverbs 3: 6“In all your ways submit to him, and he will make your paths straight.”

Talking of making paths straight, one is reminded of Isaiah 40: 3-4 “A voice of one calling: ‘In the wilderness prepare the way for the LORD; make straight in the desert a highway for our God. Every valley shall be raised up, every mountain and hill made low; the rough ground shall become level, the rugged places a plain.’”

The phrases: ‘making the highway straight, levelling the mountain and raising the valley…’ etc. gives us a false hope that if God comes, everything would become all right. God would make things easy for us. We also know the popular line: "God writes straight with crooked lines." God is capable of making things easier for us. But God will not act like an over-protective parent making our paths straight and carrying us all the time lest we fall. God will show us the way, lead us in the way and not drag us along straight paths.
Talking of straight paths, I am reminded of driving through long stretches of highways. Driving on a highway that is too straight can be very dangerous. We tend to over speed or doze off at the wheels. The road with twists and turns keeps the driver more alert. Life’s path too needs twists and turns. God’s presence will not make the road straight, but make our vision sharp.
Let me remind you of the central theme of Psalm 23. Just because God is my shepherd, the world will not change over night into heaven. The world will remain the same. The only promise given by the psalmist is that God will be there through all this. God will lead us, guide us and accompany us through the labyrinth of life.

God leading us in life’s paths can also be seen in connection with our idea of ‘fate’ or ‘pre-destination’. Those who believe in fate try to tell us that our life’s paths are determined the moment we were born. Everything about us is pre-determined and there is nothing we can do about this. We are like programmed robots going through motions decided by the date of our birth, the star etc. These and other similar thoughts proposed by ‘fate’ are wrong. God guides us through life with our full consent. He respects our freedom.
There is an old story of the shepherd and the sheep. The shepherd brings all the sheep back home to a fenced off place and leaves them for the night. The next day when he counts the sheep, one is missing. One had escaped through a hole in the fence. He goes after the lost sheep, finds it and brings it back. The next day the same sheep leaves the flock through the same hole. The shepherd brings it back. This goes on for a few days. Then his friend makes a suggestion: “Why don’t you tie up the sheep to a post or, at least close the hole in the fence?” The shepherd replies: “If I do either of them, I shall destroy the freedom of the sheep. I shall not do that.” Well, dear friends, this is an outrageously idealistic reply. But, this is God’s style. God would go miles looking for the lost sheep a hundred times rather than tie up the sheep. God would guide us through life’s straight paths in total freedom, like a gentle parent encouraging the child to walk.

Dear Friends,This homily was broadcast on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch. Thank you.


நவம்பர் 1 அனைத்துப் புனிதர்களின் திருவிழா. நவம்பர் 2 இறந்தோர் அனைவரின் நினைவு நாள். இவ்விரு நாட்களும் ஒன்றையொன்று தொடர்ந்து வருவது மனதில் ஒரு சில எண்ணங்களை எழுப்புகிறது. இவ்விரு நாட்களும் முன்பின் முரணாக வந்துள்ளனவோ என்று சில சமயங்களில் நான் நினைப்பதுண்டு. இறப்புக்குப் பின் புனிதமா? அல்லது புனிதம் அடைந்தபின் இறப்பா?
பொதுவாக ஒருவர் இறந்ததும் அவரைப் பற்றிய நல்லவைகள் பேசப்படும். மரணம் ஒருவரது குறைகளைக் குறைத்துவிடும் வல்லமை பெற்றது. ஒருவர் இறந்தபின், மறைந்தபின் அவரைப் பற்றி நாம் கூறும் நல்லவைகளை அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது முன்னிலையில், அவர் காதுபட கூறியிருந்தால், அவர் இன்னும் நல்ல வழியில் வாழ்ந்திருப்பாரே.
இறந்த பின் வழங்கப்படும் புகழ் மாலைகளை, நல்லவர் என்ற மரியாதையை வாழும்போதே ஒவ்வொருவருக்கும் நாம் கொடுத்தால், இவ்வுலகில் வாழும் புனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே. புனிதர்கள் விண்ணுலகில்தான் இருக்கவேண்டும் என்றில்லையே. தாங்கள் நல்லவர்கள் என்று வாழ்நாள் எல்லாம் உணரும் மனிதர்கள், புனிதர்களான நிறைவோடு இவ்வுலகை விட்டு விடைபெற்று போகலாமே.
இந்த எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்தில்தான் திருச்சபை அனைத்துப் புனிதர்கள் நாள், இறந்தோரின் நினைவு நாள் என்ற வரிசையில் இவ்விரு நாட்களையும் கொண்டாட நம்மை அழைக்கிறதோ? சிந்திக்க வேண்டிய கருத்து.


"தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்." திருப்பாடல் 23ன் மூன்றாம் வரிகளின் பிற்பகுதியில் நம் சிந்தனைகளைச் சென்ற விவிலியத் தேடலில் ஆரம்பித்தோம். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் நேரிய வழி, நீதி வழி ஆகியவை ஜியோமிதி அல்லது வடிவக் கணிதத்தில் நாம் படிக்கும் நேர்கோடு அல்ல. வளைந்து நெளிந்து செல்லும் வழிகள் இவை, பல சமயங்களில் சிக்கலான, நமது பொறுமையைச் சோதிக்கும் வழிகள் இவை என்பவைகளைச் சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இந்தச் சிக்கலான வாழ்வுப் பாதையில் இறைவன் நம்மை எவ்விதம் வழி நடத்துகிறார் என்பதை இன்று சிந்திப்போம்.

நாம் அனைவரும் குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்தவர்கள். இப்பருவத்தில் நாம் தவழ்ந்து, நடந்து வந்த அனுபவங்களைச் சிறிது அசைபோடுவோம். பிறந்ததும், ஒவ்வொரு குழந்தையும் வானத்தைப் பார்த்தபடியே படுத்திருக்கும். சில மாதங்களில் குழந்தை குப்புறப் படுக்கும். அப்போதுதான் தான் பிறந்துள்ள இந்தப் பூமியை அக்குழந்தை பார்க்கும். இன்னும் சில மாதங்களில் இரு கைகளையும், கால்களையும் தரையில் ஊன்றி, தன் படுக்கையை விட்டு, தொட்டிலை விட்டு வெளியேறி, ஒரு சிறு உலகைச் சுற்றி வரும். பின்னர், தட்டுத் தடுமாறி நிற்கும், முதல் அடிகளை எடுத்து வைக்கும்.
குழந்தைகள் தமது சொந்த முயற்சியில் எடுத்து வைக்கும் முதல் அடிகள் எல்லாக் குடும்பங்களிலும் பெருமிதமாகக் கொண்டாடப்படும் நாள். குழந்தை எழுந்து நடக்கும் போது, தந்தையோ, தாயோ அக்குழந்தைக்குப் பின்புறமாய் இருந்து குழந்தை நடப்பதை உற்சாகப்படுத்துவர். அல்லது, முன்னே நின்று கொண்டு குழந்தையைத் தங்களிடம் வரச் சொல்வார்கள். அந்த முதல் நாட்களில் குழந்தை கீழே விழ வாய்ப்புக்கள் அதிகம். அந்த வாய்ப்புக்களைக் குழந்தைக்கு அளிக்கப் பயந்து, குழந்தையைத் தரையிலேயே விடாமல் தூக்கிச் சுமக்கும் பெற்றோர் குழந்தையின் வளர்ச்சியைக் கெடுத்து விடுவார்கள். விழுந்து, எழுந்து பழகினால்தான் குழந்தை தனியே, சுதந்திரமாக நடை பயில முடியும். இந்த நடை பயிற்சிகள் எல்லாமே குழந்தைக்கு மிகவும் பழக்கப்பட்டச் சூழ்நிலையில், வீட்டுக்குள் நடக்கும் பயிற்சிகள்.
இதற்கு அடுத்தபடியாக, அக்குழந்தை வெளி உலகில் அடியெடுத்து வைக்கும்போது, தந்தையின் அல்லது தாயின் கைகளைப் பற்றியவாறு குழந்தை நடக்கப் பழகும். தந்தை அல்லது தாயின் ஒரு விரல் போதும் அக்குழந்தை நடப்பதற்கு. இன்னும் சில மாதங்களில் அந்த விரலும் தேவைப்படாது. குழந்தைகள் சிறுவர்களாய் அல்லது சிறுமிகளாய் இந்த உலகை வலம் வரத் துவங்குவார்கள். இவை அனைத்தும் உடல் அளவில் குழந்தை பெறும் வழி நடத்துதல்.

நம் ஒவ்வொருவருக்கும் தேவையான வழி நடத்துதல் இன்னும் பிற வழிகளிலும் நமக்குக் கிடைத்துள்ளது. பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு, வேலை, என்று வாழ்வின் பல்வேறு நிலைகளில், வாழ்வின் பல முக்கிய முடிவுகளில் தாய், தந்தை, ஆசிரியர், உற்றார், நண்பர் என்று பலர் நமக்கு வழி காட்டியதை நினைத்து பார்க்கலாம். பல குடும்பங்களில் இந்த முக்கியமான நேரங்களில் இறைவனின் வழி நடத்துதலையும் வேண்டுகிறோம். கடவுள் எவ்வகையில் வழி நடத்துவார்? "தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்."
வாழ்வில் இறைவனின் வழிநடத்துதலைத் தேடுவோர் பலருக்கு திருப்பாடல் 23ன் இவ்வரிகள் அறிவுரையாக, செபமாகத் தரப்படும். இதேபோல், நீதிமொழிகள் 3: 6ல் சொல்லப்பட்டுள்ள வரிகளும் பயன்படுத்தப்படும். "நீ எதைச் செய்தாலும், ஆண்டவரை மனதில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்." செம்மையாக்கப்பட்ட, சீராக்கப்பட்ட, நேராக்கப்பட்டப் பாதைகளைக் குறித்து இறை வாக்கினர் எசாயா கூறும் வார்த்தைகள் இவை:
எசாயா 40: 3-4
குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானது நேராக்கப்படும். கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.

ஆங்கிலத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு கூற்று உண்டு: "God writes straight with crooked lines." அதாவது, கோணல் மாணலான வரிகளிலும் கடவுள் நேராக எழுதுவார்.
பாதைகள் நேராக்கப்படும், கரடுமுரடானவைகள் சமமாக்கப்படும் என்ற வார்த்தைகளைக் கேட்கும் போது, மனதில் ஓர் எண்ணம் பிறக்கிறது. இறைவன் வந்துவிட்டால், எல்லாம் எளிதாகிவிடும் என்ற எண்ணம்.
பாதைகளை நேராக்க, சீராக்க, சமமாக்க, கோணல் வரிகளிலும் நேராக எழுத கடவுளுக்கு வலிமையுண்டு. சந்தேகமில்லை. ஆனால், இந்த வல்லமைகளைக் கொண்டு அவர் நமது வாழ்வுப் பாதையை நீண்டதொரு நேர்கோடாக மாற்றி, வாழ்வில் எப்போதும் நம்மைத் தூக்கிக் கொண்டே நடந்தால், நாம் நடக்கும் திறனை இழந்துவிடுவோம். இறைவனின் வழி நடத்துதல் இவ்விதம் இருக்காது.

நேர்கோடான பாதைகள் ஆபத்தானவை என்பதையும் நாம் அறிய வேண்டும். சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது, ஆங்காங்கே வளைவுகள், திருப்பங்கள் இருப்பது நல்லது, அவசியமும் கூட. வாகன ஓட்டிகளுக்கு முன் சாலைகள் நீண்டதாய், நேராய் இருந்தால், இரு ஆபத்துக்கள் உண்டு. ஒன்று... வேகம். நீண்ட நேரான பாதையில் அதிலும் எதிரே எந்தவித வாகனமும் இல்லை என்பதைக் காணும் போது, அளவுக்கு மீறிய வேகம் தலைதூக்கும் ஆபத்து உண்டு. இரண்டாவது ஆபத்து அயர்வு... நீண்ட, நெடிய பாதைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது கண்ணயரும் ஆபத்தும் உண்டு. வாழ்வுப் பாதையும் நீண்ட நேர்கோடாய் இருந்தால், வேகத்தையும், சலிப்பையும் உண்டாக்கும்.
இறைவன் நடத்திச் செல்லும் நம் வாழ்வுப் பாதைகள் வளைந்து, நெளிந்து செல்லும் பாதைகள், திருப்பங்கள் நிறைந்த பாதைகள். எதிர்பார்த்த, எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த இந்தப் பாதைகளில் ஒன்று மட்டும் நிச்சயம். கடவுள் நம்மோடு நடக்கிறார். நம்மை வழி நடத்துகிறார். பாதைகளை நேராக, எளிதாக மாற்றுவதை விட, நம் பார்வைகளை இறைவன் தெளிவாக்குகிறார். திருப்பாடல் 23ன் மையக் கருத்தை மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். ஆண்டவர் நமது ஆயனாக இருப்பதால், இம்மண்ணுலகம் ஒரு நொடியில் விண்ணுலகமாய் மாறி விடாது. நாம் நடக்கும் பாதைகள் எல்லாம் மலர்கள் மட்டும் பூத்துச் சிரிக்கும் பட்டு மெத்தையாய் மாறி விடாது. இருளும், துயரும் நிறைந்த இம்மண்ணுலகில், மலர்களோடு முள்ளும் புதர்களும் உள்ள சிக்கலானப் பாதையில் இறைவன் நம்முடன் இருக்கிறார். இதுதான் திருப்பாடல் 23 நமக்குத் தரும் நம்பிக்கை.

வாழ்க்கைப் பாதையைப் பற்றி சிந்திக்கும் போது, வேறொரு எண்ணமும் மனதில் எழுகிறது. நமது இந்திய மரபில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் 'தலையெழுத்து' என்ற எண்ணத்துடன் வாழ்க்கைப் பாதையை இணைத்துச் சிந்திப்பது பயனளிக்கும்.
நாம் பிறந்த நேரம், நட்சத்திரம், நம் குலம், குடும்பம் இவைகளை வைத்து நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்பதைத் தான் நம் 'தலையெழுத்து' என்ற எண்ணம் வலியுறுத்துகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், நமது வாழ்க்கைப் பாதை நாம் நடக்க ஆரம்பிக்கும் முன்பே தெளிவாக வரையப்பட்டுவிட்டது, தீர்மானிக்கப்பட்டு விட்டது. வேறு வழிகளில் நம்மால் செல்ல முடியாது, இறைவன், அல்லது நமது விதி, அல்லது நமது தலையெழுத்து வரைந்துள்ள பாதையில் நாம் அனைவரும் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல நடக்கிறோம். தலையெழுத்துடன் தொடர்புள்ள இந்த எண்ணங்கள் அனைத்தும் தவறானவை.
ஆயனாம் இறைவன் நம்மை வாழ்வுப் பாதையில் வழிநடத்திச் செல்வதற்கும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு பாதையில் நம்மைக் கட்டி இழுத்துச் செல்வதற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் இவை.
நம்மைப் படைத்து, தினமும் நம்மைப் பேணி வளர்த்து வழி நடத்திச் செல்வது இறைவன் தான். ஆனால், அவர் நம்மை வழிநடத்த நமது சம்மதம் தேவை.
ஆயன், ஆடுகள் என்ற மையக் கருத்துடன் இத்திருப்பாடலை நாம் சிந்தித்து வருவதால், அவைகளுடன் தொடர்புடைய ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஆயன் ஒருவர் தன் கிடையில் ஆடுகளைச் சேர்த்துவிட்டு உறங்கச் செல்கிறார். அடுத்த நாள் காலையில் கிடையிலிருந்து ஓர் ஆடு காணவில்லை. வேலியில் உள்ள ஒரு ஓட்டை வழியே அது வெளியேச் சென்றுவிடுகிறது. காணாமல் போன ஆட்டை மிகச் சிரமப்பட்டுத் தேடி மீண்டும் கொண்டு வந்து கிடையில் சேர்க்கிறார். அடுத்த நாளும் அந்த ஆடு காணாமல் போகிறது. மீண்டும் தேடிக் கண்டு பிடிக்கிறார். பல முறை இவ்வாறு ஆனதால், அவரது நண்பர் ஒருவர் அவருக்கு ஆலோசனைத் தருகிறார். "அந்த ஆட்டைக் கட்டிப் போடு. அதே நேரம் அந்த வேலியில் உள்ள ஓட்டையை அடைத்து விடு." என்பது நண்பரின் ஆலோசனை. ஆயன் அவரிடம், "வேலியில் உள்ள ஓட்டையை அடைத்தாலோ, ஆட்டைக் கட்டிப் போட்டாலோ அந்த ஆட்டின் சுதந்திரம் பறிபோய்விடும். அப்படி நான் செய்ய மாட்டேன்." என்று சொல்கிறார்.
நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு பதில். ஆனால், ஆயனின் இந்த பதில் ஆண்டவனாம் ஆயன் நடந்து கொள்ளும் முறையைத் தெளிவுபடுத்தும் ஒரு பதில். கட்டிப் போடுதல், கடிவாளம் மாட்டி, வலுக்கட்டாயமாய்த் தான் வகுத்த பாதையில் இழுத்துச் செல்லுதல், வேறு பாதைகளையெல்லாம் மூடிவிடுதல் போன்றவை நம் சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சிகள். நாம் எத்தனை முறைகள் காணாமல் போனாலும், நம்மைத் தேடிவரும் ஆயன், நம்மை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள முயல்வாரே தவிர, தன்னுடன் நம்மை கட்டிப் போட மாட்டார். நாம் தவறிச் செல்லும் போது, தவறுகளைச் சுட்டிக் காட்டுவார், தட்டிக் கேட்பார். ஆனால், தவறக்கூடிய பாதைகளை அடைத்து விட மாட்டார். பாதைகளை அடைத்து, வேலிகளை மூடி, நம்மைச் சிறைப்படுத்துவது இறைவனின் பணி அல்ல, இறைவனின் பாணி அல்ல.
நாமாகவே மனம் உவந்து, உளம் மகிழ்ந்து, முழு மன சுதந்திரத்துடன் அவர் காட்டும் பாதையில் செல்வதைத் தான், "தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்." என்ற வரியில் சொல்கிறார் திருப்பாடலின் ஆசிரியர். அந்தப் பாதையில் தட்டுத் தடுமாறினாலும், தவறி விழுந்தாலும் அருகில் வந்து நம்மை எழுப்பி விட்டு மீண்டும் நம்மை நடக்கத் தூண்டுபவர் தாயாய், தந்தையாய், ஆயனாய் நம்மை வழி நடத்தும் இறைவன்.


இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: http://www.vaticanradio.org/

2 comments: