01 December, 2014

Facing Life than Death! சாவை விட வாழ்வைச் சந்திக்க...



The Day of the Lord
Two years back, some of us or most of us may have had anxious moments… anxious because the end of the world was imminent. According to the Mayan prediction, 21-12-2012, that is, 21st December 2012 was to be the end of the world. Such predictions and their subsequent anxiety have filled human history right from the time of Christ… Or, perhaps, even earlier!
  • In A.D. 204, Hippolytus, a Christian writer in Rome, recorded that a bishop was convinced that the Lord was going to return immediately. He urged his followers to sell all their possessions and to follow him into the wilderness to await the Lord’s coming.
  • At the end of the first millennium, anticipation of the Second Coming ran high. On the last day of 999, the basilica of St. Peter’s at Rome was filled with people who were weeping and trembling as they expected the world to end.
  • In 1978 the media flashed the shocking news of the mass suicide of 914 men and women from the U.S.A., belonging to a doomsday cult called The People’s Temple, in Jonestown, Guyana at the instruction of their paranoid leader Rev. Warren (Jim) Jones.
  • In March 1997, 39 members (21 women and 18 men) of a California cult called Heaven’s Gate, headed by Marshall Applewhite, exploded onto the national scene with their mass suicide in a luxurious mansion at Rancho Santa Fe near San Diego in California. This was their preparation for being safely transported to heaven by a UFO, thus avoiding the tribulations accompanying the immediate end of the world.
  • This anxiety ran high, once again, as we approached the end of 1999 and 2000.
  • Books and movies on this topic are far too many to count! The last one was the Hollywood movie 2012 which made good business in 2009.
Whenever we face natural calamities – the last one being the tsunami that hit Japan and the nuclear threat in Fukushima – we speak about the End. Most of our thoughts and conversations are about how ‘terrible that day would be when the Master returns’. I can recall moments in Chennai, when someone would suddenly thrust a paper, a pamphlet or a booklet into my hands as I was walking down the road. Those were the roadside preachers who were trying to warn the people of the impending disaster. “The Day of the Lord is at hand”… was their constant theme.

Today we begin a new liturgical year with the First Sunday in Advent. This season is meant to prepare us for the coming of the Divine Child at Christmas. This is also a season where we can think about the Second Coming of Christ. This is the theme of today’s gospel.
Mark 13: 33-37
Jesus began to say to his disciples: “Take heed, watch; for you do not know when the time will come. It is like a man going on a journey, when he leaves home and puts his servants in charge, each with his work, and commands the doorkeeper to be on the watch. Watch therefore--for you do not know when the master of the house will come, in the evening, or at midnight, or at cockcrow, or in the morning-- lest he come suddenly and find you asleep. And what I say to you I say to all: Watch.”

We are NOT SURE of the when, where and how of this Second Coming and the end of the world. But, we are VERY SURE of our going out of this world one day. Instead of spending our time and energy on the end of the world, it would be surely beneficial to us to spend time on our departure from the world. Once again, instead of spending time on when we would depart, we can think about how we could or should depart. In today’s gospel, Christ gives us the necessary tips as to how we should prepare for our departure... Take heed, be watchful, be responsible!

Being watchful and being responsible have different shades of meaning. We can be watchful and be responsible out of fear or out of love. We can carry out our responsibilities for the sake of pleasing others (trying to be on our best behaviour in front of the Master) or, simply being honest and sincere in what we are doing, irrespective of whether we are being watched or not. Two stories come to my mind…
Some years ago, a tourist visited the Castle Villa Asconti on the shores of Lake Como in northern Italy. Only the old gardener opened the gates, and the visitor stepped into the garden, which was perfectly kept. The visitor asked when the owner was last there. He was told, "Twelve years ago." Did he ever write? No. Where did he get instructions? From his agent in Milan. Does the master ever come? No. "But, you keep the grounds as though your master were coming back tomorrow." The old gardener quickly replied, "Today, sir, today."
Years ago, when 20th Century Fox advertised in the New York papers to fill a vacancy in its sales force, one applicant replied: "I am at present selling furniture at the address below. You may judge my ability as a salesperson if you will stop in to see me at anytime, pretending that you are interested in buying furniture. When you come in, you can identify me by my red hair. And I should have no way of identifying you. Such salesmanship as I exhibit during your visit, therefore, will be no more than my usual workday approach and not a special effort to impress a prospective employer." From among more than 1500 applicants, this person got the job.

Doing something to please one’s own conscience and, ultimately God, would set the enlightened apart from the unenlightened, who keep doing things to please others all the time. Here are a few samples from the lives of the enlightened…
Once John Wesley was asked what he would do if he knew this was his last day on earth. He replied, "At 4 o'clock I would have some tea. At 6 I would visit Mrs. Brown in the hospital. Then at 7:30 I would conduct a mid-week prayer service. At 10 I would go to bed and would wake up in glory."
There is a story about St.Philip Neri. (My friend told me that he had heard the same story attributed to another saint. I guess all saints are of the same mould.) Wikipedia describes the character of St.Philip Neri in the following words: St.Philip possessed a playful humour, combined with a shrewd wit. He considered a cheerful temper to be more Christian than a melancholy one, and carried this spirit into his whole life: "A joyful heart is more easily made perfect than a downcast one." Here is an incident from the life of St.Philip Neri: While Philip was playing cards with his friends, one of them asked him what he would do if he knew that his death was imminent. Without any hesitation, Philip told him that he would continue playing cards.
I can well imagine that if Philip had died playing cards, he would simply continue playing cards on the other side of the grave as well. Only his companions would have changed to… God and angles!

Let us beg of God to give us this enlightenment!

P.S. There are two thoughts that are special for this day – November 30.

1. On November 30, I Sunday of Advent, Pope Francis wishes to inaugurate the Year of Consecrated Life. This Year will conclude on February 2, 2016 – the Feast of the Presentation of Our Lord in the Temple. For the Year of Consecrated Life, Pope Francis has sent a special letter. This letter has three parts:
I. AIMS OF THE YEAR OF CONSECRATED LIFE
II. EXPECTATIONS FOR THE YEAR OF CONSECRATED LIFE
III. THE HORIZONS OF THE YEAR OF CONSECRATED LIFE

2. On November 30, Cities for Life Day is celebrated. This is to commemorate the abolition of Death Penalty enacted by Tuscany on November 30, 1786. So, every year on November 30, thousands of cities around the world celebrate ‘Cities for Life Day’.
For more details on this Day, kindly visit: http://en.wikipedia.org/wiki/Cities_for_Life_Day
In this context, we can recall the talk given by Pope Francis Oct. 23, 2014, in a meeting with representatives of the International Association of Penal Law. For further details, kindly read the news item: Pope Francis calls for abolishing death penalty and life imprisonment
published by the Catholic News Service.
http://www.catholicnews.com/data/stories/cns/1404377.htm
The Pope was emphatic in saying: "It is impossible to imagine that states today cannot make use of another means than capital punishment to defend peoples' lives from an unjust aggressor."

Cities for Life – Community of Sant’Edigio

ஈராண்டுகளுக்கு முன் நம்மில் ஒரு சிலர் அல்லது வெகு பலர் கலக்கத்துடன் இருந்தோம். இந்த உலகம் முடியப்போகிறது என்ற கலக்கம் அது. ஆம், 21-12-2012 அதாவது 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி இந்த உலகம் முடியப்போகிறது என்று மெக்சிகோ நாட்டின் பழம்பெரும் மாயன் கலாச்சாரத்தில் சொல்லப்பட்டிருந்ததாக யாரோ சொல்ல, அது பெரும் தாக்கத்தை மக்களிடையே உருவாக்கியது உண்மை.
மனித வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், உலகம் முடியப்போகிறது என்ற செய்தி அடிக்கடி பேசப்பட்டுள்ளது. கி.பி.204ம் ஆண்டு Hippolytus என்ற கிறிஸ்தவ எழுத்தாளர் அப்போது வாழ்ந்த ஆயர் ஒருவரைப் பற்றி எழுதியுள்ளார். உலகம் முடியப்போகிறது என்பதைத் தீவிரமாக நம்பிய அந்த ஆயர், தன் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்தார். அவர்களிடம் இருந்த சொத்துக்களையெல்லாம் விற்று, ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, அவருடன் பாலை நிலத்திற்கு வரும்படி அவர்களை அழைத்தார். அங்கு அவர்கள் இறைவனின் வரவுக்குக் காத்திருக்கலாம் என்று சொன்னார்.
கி.பி.999ம் ஆண்டின் இறுதி நாட்களில் உலகம் முடியப்போகிறது என்று எண்ணிய பல்லாயிரம் கிறிஸ்தவர்கள் உரோம் நகரில் புனித பேதுரு பேராலய வளாகத்தில் கூடி, அழுகையோடும், அச்சத்தோடும் உலக முடிவை எதிர்பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் உலக முடிவு வந்துவிட்டது என்று தீர்மானித்த இரு குழுக்கள் வேதனையான முடிவுகள் எடுத்ததை செய்திகளில் வாசித்தோம். 1978ம் ஆண்டிலும், 1997ம் ஆண்டிலும் உலக முடிவு வந்துவிட்டதென்று உணர்ந்த இரு குழுவினர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர் என்ற செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தந்தன. 1999ம் ஆண்டு முடிந்து 2000மாம் ஆண்டு ஆரம்பமாக இருந்தபோது, இதே கலக்கம் மீண்டும் தலைதூக்கியது, நமக்கு நினைவிருக்கலாம்.
நான் சென்னையில் பலமுறை பார்த்த ஒரு காட்சி என் நினைவுக்கு வருகிறது. அவ்வப்போது, சாலையோரங்களில் யாராவது ஒருவர் நின்று கொண்டு, போவோர் வருவோர் அனைவரிடமும் துண்டு பிரசுரங்களை அல்லது சிறு புத்தகங்களை இலவசமாக வழங்குவதைப் பார்த்திருக்கிறேன். என் கைகளிலும் அவை திணிக்கப்பட்டன. அந்தப் பிரசுரங்களில் நான் பலமுறை பார்த்த ஒரு செய்தி: "ஆண்டவரின் நாள் அண்மித்துவிட்டது... விழித்தெழு" என்ற செய்தி. ஒவ்வொரு முறையும் உலகில் நிலநடுக்கம், எரிமலை வெடித்தல், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது, உலகமுடிவைப் பற்றி அதிகம் பேசுகிறோம், சிந்திக்கிறோம்.

இன்று தாய் திருஅவை புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கிறது. நமது இறைவனைக் குழந்தை வடிவில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று உலகின் முடிவில் இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.
உலக முடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்லமுடியாது. நாளையே வரலாம்; அல்லது, நாலாயிரம் கோடி ஆண்டுகள் சென்று வரலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த முடிவு வரும் என்பதும் நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு எப்போது வரும் என்பதில் நாம் நேரம், சக்தி இவற்றைச் செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அல்லது எப்படி இருக்க வேண்டும்  என்று சிந்தித்தால் பயனுண்டு. எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச் சந்திக்க, அந்த முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க இன்றைய நற்செய்தி நம்மைச் சிறப்பாக அழைக்கிறது.
மாற்கு நற்செய்தி 13: 33-37
அக்காலத்தில், மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களிடம் கூறியது: கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும்பயணம் செல்லவிருக்கும் ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப் பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும் வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்; விழிப்பாயிருங்கள்.

விழிப்பாயிருங்கள், பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள் என்பவை இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு. பொறுப்புடன் நடந்து கொள்வது என்பது, தலைவர் இருக்கும்போது நல்ல பெயர் எடுக்கவேண்டும்; அவர் இல்லாதபோது எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்று நடிப்பது அல்ல. தலைவர் என்னை மதித்து ஒப்படைத்துள்ள பொறுப்பை எல்லா நேரத்திலும் நானும் மதித்து நடந்து கொள்வதுதான் உண்மையான பொறுப்புணர்வு.

இத்தாலி நாட்டின் வடபகுதியில் Villa Asconti என்ற மிக அழகிய ஒரு மாளிகை இருந்தது. அதைச்சுற்றி அழகான ஒரு தோட்டமும் இருந்தது. சுற்றுலாப் பயணிகளை ஒவ்வொரு நாளும் கவர்ந்துவந்த இந்த மாளிகையும் தோட்டமும் ஒருவரது மேற்பார்வையில் எந்தக் குறையும் இல்லாமல் விளங்கியது. ஒருநாள் சுற்றுலாப் பயணி ஒருவர் அந்த மேற்பார்வையாளரிடம், "இந்த மாளிகையின் உரிமையாளர் இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகின்றன?" என்று கேட்டார். மேற்பார்வையாளர், "12 ஆண்டுகள் ஆகின்றன" என்று சொன்னார். "ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல முதலாளி எதுவும் கடிதமோ, வேறு தொடர்போ வைத்துள்ளாரா?" என்று கேட்டதற்கு, அவர், "இல்லை" என்று பதில் சொன்னார். "நீங்கள் இந்த மாளிகையையும், தோட்டத்தையும் சுத்தம் செய்வதைப் பார்க்கும்போது, உங்கள் முதலாளி ஏதோ நாளையே வரப்போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது" என்று சொன்ன அந்த சுற்றுலாப் பயணியைப் பார்த்து சிரித்தார் மேற்பார்வையாளர். பின்னர், "நாளை இல்லை நண்பரே, இன்றே அவர் வரக்கூடும்" என்று பதில் சொன்னார்.
12 ஆண்டுகளாய் ஒவ்வொரு நாளும் 'தலைவன் இன்றே வரக்கூடும்' என்ற எதிர்பார்ப்புடன் கடமைகளைச் செய்த இந்த மேற்பார்வையாளரைப் போல் நாம் இருக்க வேண்டும் என்பதையே இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.
தலைவன் வந்தாலும் சரி, வராவிடினும் சரி என்று தன் பணிகளை ஒழுங்காகச் செய்த இவர், மற்றொரு சம்பவத்தை நினைவுறுத்துகிறார். 20th Century Fox என்ற திரைப்பட நிறுவனம் 'விற்பனை செய்யும் திறமை பெற்றவர் ஒருவர் தேவை' என்று ஒருமுறை விளம்பரம் வெளியிட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த விளம்பரத்திற்குப் பதில் அனுப்பியிருந்தனர். அவர்களில் ஒரு பெண்மணி அனுப்பியிருந்த பதில் நிறுவனத்தினரின் கவனத்தை ஈர்த்தது. "நான் தற்போது ஒரு கடையில் மேசை, நாற்காலிகள் விற்கும் பணி செய்து வருகிறேன். இந்தக் கடைக்கு நீங்கள் வந்தால் என்னை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். இங்கிருக்கும் பணியாளர்களில் எனக்கு மட்டுமே தலைமுடி சிவந்த நிறத்தில் உள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி நீங்கள் கடைக்கு வந்து, நான் பணிசெய்யும் விதத்தைக் கவனிக்கலாம். நீங்கள் யாரென்று எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனவே உங்கள் நன்மதிப்பைப் பெறும் வகையில், நீங்கள் வரும் நேரம் மட்டும் நான் வித்தியாசமாக நடந்து கொள்ளவும் வாய்ப்பில்லை. நான் ஒவ்வொரு நாளும் விற்பனை செய்யும் திறமையையே நீங்கள் வரும் நாளிலும் நான் வெளிப்படுத்துவேன். அந்தத் திறமை உங்களுக்குப் பிடித்திருந்தால், எனக்கு உங்கள் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுங்கள்." என்று அந்தப் பெண் எழுதியிருந்தார். வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்த பல ஆயிரம் பேரில் அந்தப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று சொல்லவும் வேண்டுமா?

ஒருவரைச் சந்திக்கச் செல்லும் நேரங்களில், பிறரது கவனம் நம்மீது இருக்கிறது என்பதை உணரும் நேரங்களில் நாம் நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமாக இருக்கும். அதுவும் நாம் சந்திக்கச் செல்வது மிக முக்கியமான ஒருவர் என்றால், மிகவும் கவனமாக நாம் நடந்துகொள்வோம். கைக்குழந்தைகளிடமும், மிகவும் வயதானவர்களிடமும் இந்த மாற்றங்கள் இருக்காது. அதேபோல், ஆன்மீகத்தில் மிகவும் ஆழ்ந்து தெளிந்தவர்களிடமும் இந்த மாறுதல்கள் இருக்காது. யார் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் சரி. அவர்கள் எந்த நேரத்திலும் ஒரே விதமான, உண்மையான ஈடுபாட்டுடன் ஒவ்வொரு நாள் செயல்களையும் செய்வர். நேரத்திற்குத் தக்கதுபோல் வாழ்வை மாற்றாமல் வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை நமக்குப் பாடமாக வேண்டும்.

"A joyful heart is more easily made perfect than a downcast one." "துக்கத்தில் வாழும் ஒரு மனதைவிட, மகிழ்வுடன் வாழும் மனம், எளிதில் உன்னதத்தை அடையும்" என்ற தனது விருதுவாக்கிற்கு ஏற்ப, நகைச்சுவை உணர்வுடன் எப்போதும் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் புனித பிலிப் நேரி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இது. புனித பிலிப் நேரி ஒருநாள் நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாவைப்பற்றிய பேச்சு அங்கு எழுந்தது. நண்பர்களில் ஒருவர் பிலிப்பிடம், "பிலிப், இதோ, அடுத்த நிமிடமே நீ இறக்கப் போகிறாய் என்று தெரிந்தால், என்ன செய்வாய்?" என்று கேட்டார். பிலிப் அவரிடம், "தொடர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பேன்." என்றாராம்.
சாவை பயங்கரமான ஒரு மாற்றமாக, முடிவாகப் பார்ப்பவர்கள் அதைக் கண்டு பயப்படலாம். காரணம்? அவர்களது வாழ்வுக்கும், சாவுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கலாம். இந்த முரண்பாடுகளை எல்லாம் சரிசெய்துவிட்டு, சாவைச் சந்திக்க அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்வு முழுவதையும் நல்ல விதமாக பொறுப்புணர்வுடன் வாழ்பவர்களுக்கு, வாழ்ந்தவர்களுக்கு சாவு எந்த வகையிலும் பயத்தை உண்டாக்காது என்பதற்கு புனித பிலிப் நேரி அவர்கள் நல்லதோர் எடுத்துக்காட்டு. சாவின் வழியாகத் தன்னைச் சந்திக்கப் போவது அல்லது தான் சென்றடையப் போவது இறைவன் தான் என்றான பிறகு ஏன் பயம், பரபரப்பு எல்லாம்? தேவையில்லையே. பிலிப் நேரியைப் பொருத்தவரை நான் இப்படியும் கற்பனை செய்து பார்க்கிறேன். அந்த நண்பர் சொன்னது போலவே, சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் போது அவருக்கு சாவு நேரிட்டால், மறு வாழ்வில் அந்த இறைவனோடு தன் விளையாட்டைத் தொடர்ந்திருப்பார் பிலிப். வாழ்க்கையில் இறைவனை அடிக்கடி சந்தித்து வந்த பிலிப்புக்கு பயம் பரபரப்பு எதற்கு? இந்த நிலை எல்லாருக்கும் கிடைக்கும் ஒரு பாக்கியம் அல்ல.
ஜான் வெஸ்லி என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது பொறுப்புடன் சரியான கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் வாழ்வு என்ற எண்ணத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர். இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று இவரிடம் ஒருவர் கேட்டபோது, இவர் சொன்ன பதில் இதுதான்: "நான் மாலை நான்கு மணிக்கு வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன்ஐ மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச் செல்வேன்... விழித்தெழும்போது என் இறைவன் முகத்தில் விழிப்பேன்." என்று சொன்னாராம்.

உலகத்தின் முடிவு, நம் வாழ்வின் முடிவு, அந்த முடிவில் இறைவனைச் சந்திக்கும் வாய்ப்பு இவைகளை நாம் எவ்வகையில் பார்க்கிறோம் என்பதை ஆய்வு செய்வோம். தாயின், அல்லது, தந்தையின் அன்பு அணைப்பிற்குள் அமைதி காணும் குழந்தையைப் போல் வாழ்வின் இறுதியில் நாம் சந்திக்கும் நிரந்தர அமைதி அமையவேண்டும் என்று சிறப்பாக வேண்டிக் கொள்வோம்.

கூடுதல் எண்ணங்கள்....

நவம்பர் 30, இஞ்ஞாயிறன்று கத்தோலிக்கத் திருஅவை, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு உலக ஆண்டை (துறவியர் ஆண்டை) துவக்குகிறது. இத்தருணத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பு மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு உலக ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள சிறப்பு மடல்
அர்ப்பண வாழ்வை மேற்கொண்டவர்கள், வரலாற்றை நன்றியோடு ஏற்கவும், நிகழ்காலத்தை ஆழ்ந்த ஆர்வத்தோடு வாழவும், வருங்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
நவம்பர் 30, இஞ்ஞாயிறு முதல், 2016ம் ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி முடிய கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு உலக ஆண்டையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று சிறப்பு மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அம்மடலின் சுருக்கம் இதோ:

அர்ப்பணிக்கப்பட்ட சகோதரிகளே, சகோதரர்களே,
'உன் சகோதரர்களை உறுதிப்படுத்து' (லூக்கா 22,32) என்று புனித பேதுருவுக்கு இயேசு கூறிய அறிவுரையின்படி, பேதுருவின் வழித்தோன்றல் என்ற முறையிலும், அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள ஒரு சகோதரன் என்ற முறையிலும் நான் உங்களுக்கு இம்மடலை எழுதுகிறேன்.
2ம் வத்திக்கான் சங்கத்தால் உருவாக்கப்பட்ட 'மக்களின் ஒளி' (Lumen Gentium) என்ற ஏடு வெளியிடப்பட்ட 50ம் ஆண்டைச் சிறப்பிக்கும் ஒரு முயற்சியாக, உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டைக் கொண்டாட நான் அழைப்பு விடுத்தேன். நவம்பர் 30, திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறன்று துவங்கும் இந்த உலக ஆண்டு, 2016ம் ஆண்டு, பிப்ரவரி 2ம் தேதி, ஆண்டவர் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட திருநாளன்று நிறைவுபெறும்.

இவ்வாறு துவங்கும் இச்சிறப்பு மடலில், திருத்தந்தை,
1. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் குறிக்கோள்கள்
2. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் எதிர்பார்ப்புகள்
3. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் தொடுவானங்கள்
என்ற மூன்று பகுதிகளில் தன் கருத்துக்களைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

I அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் குறிக்கோள்கள்:

வரலாற்றை நன்றியோடு ஏற்பது, முதல் குறிக்கோள். ஒவ்வொரு துறவு சபையின் வரலாறும், தனி வரங்களும் செறிவுமிக்கவை. இச்செல்வங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்பது அவசியம். இந்த வரலாற்றில் உருவான குறைகளையும், சரியான கண்ணோட்டத்துடன் பார்த்து, பாடங்களைப் பயிலவேண்டும். குறிப்பாக, 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்குப் பிறகு, கடந்த 50 ஆண்டுகள், தூய ஆவியாரின் புதிய 'மூச்சுக் காற்று' ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைக் காண்பது மிகவும் அவசியம்.
நிகழ்காலத்தை ஆழமான ஆர்வத்துடன் வாழ்வது, 2வது குறிக்கோள். ஒவ்வொரு துறவுச் சபையையும் நிறுவியவர்கள், இயேசுவின் மீதும், அவரது பணியின் மீதும் கொண்டிருந்த ஆழமான ஆர்வம், நம் வாழ்வில் தொடர்ந்து வெளிப்படவேண்டும். இந்த ஆர்வம் நம்மிடையே குறைந்து, மங்கிப் போய்விட்டதா என்பதை ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ள உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு ஒரு தகுந்த வாய்ப்பு.
எதிர்காலத்தை நம்பிக்கையுடன் அரவணைப்பது, 3வது குறிக்கோள். மேற்கத்திய நாடுகளில் இறையழைத்தல் குறைந்து, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ளோரின் சராசரி வயது கூடியுள்ளது. பொருளாதார நெருக்கடி, அரசியல் மாற்றங்கள், எதையும் நிரந்தரமற்றதாய் காணும் மனநிலை ஆகியவை, இன்றைய உலகில் வளர்ந்துள்ளன.
இத்தகையச் சூழலில், நமது அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் நம்பிக்கை எங்கிருந்து வருகிறது என்பதை உணரவேண்டும். எண்ணிக்கை, வெற்றி என்று இவ்வுலகம் காட்டும் அளவுகோல், நமது நம்பிக்கையைப் பாதிக்காமல், இறைவனில் நம்பிக்கை கொள்ளவேண்டும். எல்லாமே அழிவு என்று இவ்வுலகம் பறைசாற்றும் கருத்துக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.

இவ்வாறு, தன் குறிக்கோள்களை எடுத்துரைத்தத் திருத்தந்தை, 2வது பகுதியில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் எதிர்பார்ப்புக்களாக 5 எண்ணங்களை முன்வைத்துள்ளார்:

II அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் எதிர்பார்ப்புகள்:

1. அர்ப்பணிக்கப்பட்டோர் இருக்கும் இடத்தில் ஆனந்தம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். உலக மக்களைப் போலவே, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கும் பிரச்சனைகள் உண்டு. ஆனால், இறைவனில் நம்பிக்கை கொண்டு, இந்தப் பிரச்சனைகளைத் தாண்டி, துறவியர் மகிழ்வை வெளிப்படுத்த வேண்டும்.
2. அர்ப்பணிக்கப்பட்டோர் இவ்வுலகை விழித்தெழச் செய்வர் என்று எதிர்பார்க்கிறேன். ஒவ்வொரு துறவுச் சபைக்கும் வழங்கப்பட்டுள்ள தனி வரங்களின் அடிப்படையில் இவ்வுலகை மாற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு கனவுலகை (Utopia) அல்ல, மாறாக, ஒரு மாறுபட்ட உலகை உருவாக்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
3. 'ஒன்றிப்பின் அறிஞர்களாக' (experts of communion) அர்ப்பணிக்கப்பட்டோர் வாழ்வர் என்று எதிர்பார்க்கிறேன். தாங்கள் வாழும் குழுமங்களில் இந்த ஒன்றிப்பு துவங்கவேண்டும். புறம்பேசுதல், பொறாமை, வன்மம் ஆகியவை, துறவற இல்லங்களில் இருப்பதற்குத் தகுதியற்ற பண்புகள். துறவு சபைகள் ஒன்றோடொன்று ஒன்றிப்பை வளர்ப்பதையும் இவ்வாண்டு நான் எதிர்பார்க்கிறேன்.
4. அர்ப்பணிக்கப்பட்டோர், இவ்வாண்டில், சமுதாயத்தின் விளிம்புகளுக்குச் செல்வதை எதிர்பார்க்கிறேன். துறவு இல்லங்களில் உருவாகும் கருத்து வேறுபாடுகளில் சிறைப்பட்டு போகாமல், சமுதாயத் தேவைகளை முன்னிறுத்தும் வழிகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
5. திருஅவைக்கு, குறிப்பாக, துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபட துறவு சபைகள் ஒன்றிணைந்து வருவதை எதிர்பார்க்கிறேன். உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு, ஒரு தனிப்பட்ட, உன்னத காலமாக இருக்க, இறையாவியாரின் அருளை எதிர்பார்க்கிறேன்.

இச்சிறப்பு மடலில், 'அர்ப்பண வாழ்வின் தொடுவானங்கள்' என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைப்பிட்டுள்ள மூன்றாவது பகுதியில், அர்ப்பண வாழ்வு, இன்னும் எவ்வாறு வேறு வழிகளில் தன் எல்லைகளை விரிவாக்க முடியும் என்பதை 5 கருத்துக்களாகப் பகிர்ந்துள்ளார்:

III அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் தொடுவானங்கள்

1. அர்ப்பணிக்கப்பட்டோர் மட்டுமல்லாமல், போதுநிலையினருக்கும் நான் விண்ணப்பிக்கிறேன். துறவு சபைகள், பொது நிலையினரோடு இணைந்து பணியாற்றுவது வரலாற்று உண்மை. அர்ப்பண வாழ்வை வேறு வழிகளில் தேர்ந்துள்ள பொதுநிலையினருக்கும் நான் இந்த சிறப்பு ஆண்டில் விண்ணப்பிக்கிறேன். உங்கள் தனி வரங்களுடன் ஒருவர் ஒருவருக்கு உறுதுணையாக இருங்கள்.
2. உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு, அர்ப்பண வாழ்வில் ஈடுபட்டுள்ள துறவியருக்கு மட்டுமல்ல, மாறாக, அனைத்துலக திருஅவைக்கும் ஒரு சிறப்பான ஆண்டு.
புனிதர்களான பெனடிக்ட், பேசில், அகஸ்டின், பிரான்சிஸ், தோமினிக், லொயோலா இஞ்ஞாசியார், அவிலா தெரேசா, ஆஞ்செலா மெரிசி, வின்சென்ட் தே பால் ஆகியோர் இல்லாத திருஅவையை எண்ணிப்பார்க்க இயலாது. புனித ஜான் போஸ்கோ, முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா என்று, இந்தப் பட்டியல் மிக நீளமானது. இத்தனைப் புனிதர்களின் உதவியால், திருஅவை வளர்ந்துள்ளதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல அனைவரையும் அழைக்கிறேன்.
3. கத்தோலிக்கப் பாரம்பரியத்தைச் சேராத கிறிஸ்தவ பாரம்பரியத்திலும், குறிப்பாக, ஆர்த்தடாக்ஸ் பாரம்பரியத்திலும் அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள அனைவருக்கும் இம்மடல் வழியே நான் அழைப்புவிடத் துணிகிறேன். இந்தச் சிறப்பு ஆண்டில், கிறிஸ்தவ ஒன்றிப்பு, இன்னும் தழைத்து வளர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.
4. துறவு என்ற நிலைப்பாடு, அனைத்து பெரும் மதங்களில் காணப்படும் ஓர் உண்மை. அனைத்து மதங்களுடனும் இன்னும் ஆழமான உறவு வளர்வதற்கும் இவ்வாண்டு ஒரு வாய்ப்பாக அமையவேண்டும்.
5. இறுதியாக, என் சகோதர ஆயர்களுக்கு நான் விண்ணப்பிக்கிறேன். அர்ப்பண வாழ்வும், ஒவ்வொரு துறவுச் சபையின் தனிவரங்களும் திருஅவைக்கு இறைவன் வழங்கியுள்ள கொடைகள் என்பதை ஆயர்கள் உணர்ந்து, ஏற்றுக்கொண்டு, துறவுச் சபைகளை உற்சாகப்படுத்த அழைக்கிறேன்.

ஆழ்நிலை தியானம், ஆண்டவனுக்குச் செவிமடுத்தல் என்ற உன்னத பண்புகளின் எடுத்துக்காட்டான மரியன்னையிடம் இந்த உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டை ஒப்படைக்கிறேன்.

------------------------------------------
நவம்பர் 30 - "வாழ்வை ஆதரிக்கும் நகரங்கள் உலக நாள்"

"வாழ்வை ஆதரிக்கும் நகரங்கள் உலக நாள்" (Cities for Life Day), ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் 30ம் தேதியன்று உலகின் பலநூறு நகரங்களில் கடைபிடிக்கப்படுகிறது. மரணதண்டனைக்கு எதிராகக் கடைபிடிக்கப்படும் இந்த உலக நாள், 2012ம் ஆண்டில், 1625 நகரங்களில் சிறப்பிக்கப்பட்டது. இவற்றில், 72 நகரங்கள், நாடுகளின் தலைநகர்களாக இருந்தன.
1786ம் ஆண்டு, நவம்பர் 30ம் தேதி, இத்தாலியின் டஸ்கனி (Tuscany) மாநிலம் மரணதண்டனையைச் சட்டப்பூர்வமாக இரத்து செய்தது. இந்த நாளைக் கொண்டாட, "வாழ்வை ஆதரிக்கும் நகரங்கள் உலக நாள்" சிறப்பிக்கப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/Cities_for_Life_Day

தண்டனைச் சட்டம் பன்னாட்டு அவை (International Association of Penal Law) என்ற ஒரு பன்னாட்டுக் குழுவின் உறுப்பினர்களை, இவ்வாண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி, வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தபோது, மரணதண்டனைக்கு எதிராகத் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
"மக்களின் வாழ்வை அநியாயமாக ஆக்ரமிக்கும் ஒரு குற்றவாளியை, மரணதண்டனை தவிர, வேறு வழியில் தடுக்க முடியாது என்று கூறுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை" என்று கூறினார்.
"அனைத்துக் கிறிஸ்தவர்களும், அனைத்து நல்மனம் கொண்டோரும் மரணதண்டனையை எதிர்த்துப் போராட அழைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, சிறைக் கைதிகள் மனித மாண்புடன் நடத்தப்படாமல் இருக்கும் சிறைச் சூழலை எதிர்த்தும் போராட அழைக்கப்பட்டுள்ளனர்" என்றும் கூறினார் திருத்தந்தை.

கூடுதல் விவரங்களுக்கு: http://www.catholicnews.com/data/stories/cns/1404377.htm


2 comments:

  1. இன்றையப்பதிவு சொல்லும் விஷயங்கள் பல.கிறிஸ்துவின் வருகைக்கு நம்மைத் தயாரிக்க அழைப்பு விடுக்கும், இந்நாளில் மனிதனின் இறுதி நாட்களைப் பற்றிக்கூறுவது சற்று முரண்பாடானது தான். உலகம்என்று,எப்படி அழிந்தாலும்..நம் இறுதி நாட்கள் நமக்கு என்றி ,எப்படி வரினும் நாம் என்றென்றும் மகிழ்ச்சிகொண்ட மனம் படைத்தோராய் அந்த இத்தாலிநாட்டுத் தோட்ட மேற்பார்வையாளர் போலவும், அந்தத் திரைப்பட நிறுவனத்திற்கு விண்ணப்பித்திருந்த பெண்மணி போலவும் இருப்போமேயானால் நாமும் கூட சாவைப்பார்த்து 'ஹலோ' சொல்லலாம்; ஏன் கை கூட குலுக்கலாம். கூடை நிறைய தகவல்கள் சேகரித்து அவற்றை ஒரு குப்பிக்குள் அடைத்துத் தரும் தந்தைக்கு என் பாராட்டுக்கள்.
    மற்றபடி இந்த ' அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத்' தேர்ந்தெடுத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்காக இறைவனை மன்றாடுவோம்.அவர்கள் வழுக்கி விழும் நேரங்களில் அவர்கள் மீது சேற்றைவாரி இறைக்காமல் அவர்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம்.உலகைத்துறந்தவர்கள் எனினும் உலகத்தின் மத்தியில்தான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் கொண்டு அவர்களுக்காக இறைவனை வேண்டுவோம்...தந்தையே தங்களுக்கும் சேர்த்துத்தான்...அனைவருக்கும் புலர்ந்திருக்கும்' டிசம்பர்' மாதம் புதுப்பொலிவைத்தரட்டும்...

    ReplyDelete
  2. கூடை, குப்பி என்று உருவக மொழியில் கூறியிருக்கும் பாராட்டுக்களுக்கு நன்றி. அர்ப்பண வாழ்வில் சறுக்கல்கள் இருப்பதை, உயர்ந்த உள்ளத்தோடு புரிந்துகொண்டதற்கு நன்றி.

    ReplyDelete