Showing posts with label Humility. Show all posts
Showing posts with label Humility. Show all posts

07 February, 2016

Called to be humble பணிவுடன் வாழ ஓர் அழைப்பு

Jesus Preached at the Lake of Gennesaret in Simon Peter’s Boat
5th Sunday in Ordinary Time

One day, author and educator Howard Hendricks was on a plane that was delayed from takeoff. As passengers became irritated and demanding, Howard noticed how gracious one of the flight attendants continued to be with each passenger. When they were finally in the air he continued to be amazed at her poise and control. When she came by his seat, Howard asked if he could write a letter of commendation to the airline on her behalf. “I don’t work for the airline,” she replied, “I work for Jesus Christ. My husband and I prayed this morning that I would be a good representative of Jesus Christ on this flight.”

This anecdote, shared by Fr Tony Kadavil, bears the title: “Divine call daily executed”. At a superficial glance, this title sounded a bit ‘exaggerated’ for a flight attendant doing her job well. But, on a deeper analysis, I felt that this lady was living her ‘Divine call’ to a T. I guess my initial reaction comes from giving the term ‘call’ a loaded, spiritual significance. In other words, ‘Divine Call’ is usually spoken of as ‘Vocation’, which automatically takes us to the religious sphere of being called to serve as a Religious or a Priest. This is a very limited, narrow meaning of the word ‘Call’.

When we browse through the pages of the Bible, we find that most of the ‘Calls’ from God came – not from the holy of holies, but from very ordinary, day-to-day situations of human life. This Sunday we are ‘called’ to reflect on the ‘Divine call’ in a broader as well as deeper sense. The flight attendant was doing her duty with a fuller commitment and, in so doing, was proclaiming Christ. When an opportunity offered itself, she did not hesitate to proclaim Christ by words too. Total commitment to life and proclamation of God are two corner stones of ‘Vocation’… any ‘Vocation’!

Today’s Gospel (Luke 5: 1-11) gives us a very mundane, day to day situation, where the fist disciples were ‘called’ by Jesus. Although the call of the First Disciples is recorded in all the three Synoptic Gospels, (Matthew, Mark and Luke), only in Luke, this ‘call’ is linked to the miracle of the ‘great haul of fish’. This episode will help us realise how Simon was ‘fished’ by Jesus. Let us try and do a tiny contemplation on what happened on the lake of Gennesaret.

Simon Peter was pretty despondent about toiling the whole night for nothing. What would he do for the day? No fish, no food! He was engrossed with his own life, when he saw his boat rocking a bit. He raised his eyes. He was surprised; a bit furious too. A young man of about thirty was sitting in his boat. The young man asked him to take the boat a bit further into the lake. Peter obliged him. He couldn’t believe this. Just a moment ago, he was so much preoccupied with himself and his life and now…? He was taking a total stranger in his boat out into the lake. Where? Just a little further… For what? Till then Peter had used his boat only for fishing and, sometimes, for resting. Now, his boat had become a pulpit!
This young man began to preach and Peter was quite fascinated with what the stranger was saying. When was the last time Peter had been to the synagogue? No idea… He did not like going there since the teachers in the synagogue were pretty boring, saying the same things over and over again. But, this guy was very different. Peter did not know how long this young man preached. Time stood still. He was surprised how this man’s words could transport him totally out of his small world – his world filled with so many day to day preoccupations.
Peter was happy that he did not give in to his usual anger. If he had done so, this young man would have been asked to leave his boat. Once the preaching was over, the people slowly dispersed. Oh, what a crowd. Only then, Peter had noticed it. No wonder this man wanted to use his boat as his pulpit. The shore was filled with people. Oh, if only he had caught some fish that day, he could have made some money…Peter was back again to his small world. He was taking his boat back to the shore to leave the young man on the shore and go home.

At that time, the young man said something. What did he say? “Put out into deep water, and let down the nets for a catch.” Peter could not believe his ears. The others in the boat with Peter were equally stunned. They looked at each other. A total stranger who was probably a good preacher, was asking them to fish in broad day light. Was he trying to make fun of their trade?
If I were in Peter’s place, I would have said something like this: “Sir, thanks for the suggestion. You are good at preaching. Kindly keep to that. Don’t ask us to do the impossible. If we cast the net now, our companions would think we are out of our mind. This is not the time to fish. Okay? Once again, thanks for your suggestion, but no thanks…”
Instead of such a polite ‘no’, Peter said, “Master, we've worked hard all night and haven't caught anything. But because you say so, I will let down the nets.” (Lk. 5: 5) Did Peter know Jesus earlier? Not much of a chance. Hence, these words seemed to have come out of his heart and not his head. His heart had already recognised ‘the Master’ in this young man. Jesus rewarded this “confession” with a great haul of fish… The nets were breaking and he had to call the neighbouring boat to come to his help. When the boats were filled with the catch, both the boats began sinking.

Not only the boats, but Peter’s heart also was sinking – not in a negative sense; but sinking in the unfathomable love of Christ. In the presence of such a great miracle, he made the best move, namely, a humble surrender. Overwhelmed by the outpouring of God’s immensity, Peter went on his knees… When Simon Peter saw this, he fell at Jesus' knees and said, "Go away from me, Lord; I am a sinful man!" (Lk. 5: 8)

Jesus had entered not only Peter’s boat but his life as well. He did this as if it was his right and then took over Peter’s whole life like a hurricane. The humble response of Simon was not born of self-pity, but self-knowledge, self-enlightenment. He knew he was standing on ‘holy ground’. In the face of immensity, humility is the most appropriate response.

Dear Friends, humility is a common thread that runs through all the three readings found in this Sunday’s liturgy. To be more specific, here are the verses I am referring to:
Isaiah 6:5 – I am a man of unclean lips, and I live among a people of unclean lips
I Cor. 15:8-10 – Last of all he (Christ) appeared to me also, as to one abnormally born. For I am the least of the apostles and do not even deserve to be called an apostle, because I persecuted the church of God. But by the grace of God I am what I am, and his grace to me was not without effect.
Luke 5:8 – When Simon Peter saw this, he fell at Jesus' knees and said, "Go away from me, Lord; I am a sinful man!"

Those who beg for alms sometimes demean themselves as nothing, nobody, etc. Such statements come out of need and desperation. The statements we heard in today’s readings do not come from desperation. On the contrary, Isaiah, Paul and Peter are making these statements after their encounter with the divine, after they have been overwhelmed by God’s presence. These statements are, in essence, what true humility is. A true, proper perspective of who we are and what we can be with God.

Paul the Apostle, while he was still Saul, was so proud to be a Pharisee (Phil. 3:5). Once he received his enlightenment on the road to Damascus; once he became aware of who he was, he turned into a great pillar of the Church. We close our reflection with one of his enlightened statements:
Christ said to me, "My grace is sufficient for you, for my power is made perfect in weakness." Therefore I will boast all the more gladly about my weaknesses, so that Christ's power may rest on me. That is why, for Christ's sake, I delight in weaknesses, in insults, in hardships, in persecutions, in difficulties. For when I am weak, then I am strong. (II Cor. 12:9-10)
Peter: I am a sinner, leave me Lord

பொதுக்காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

ஒரு விமான நிலையத்தில் நடந்த உண்மை நிகழ்வு இது. விமானப் பயணத்திற்கெனக் காத்திருந்தவர்கள், பொறுமை இழக்கத் துவங்கினர். அவர்கள் செல்லவேண்டிய விமானம், அரை மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று சொல்லி, ஒரு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. எனவே, எல்லாப் பயணிகளும் எரிச்சலடைந்தனர். பார்க்கும் அனைத்துப் பணியாளர்களிடமும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். பணியாளர்களும், செய்வதறியாது, ஓடி ஒளிந்தனர்.
ஒரே ஒரு பணிப்பெண் மட்டும், பயணிகளிடம் அன்பாக, பொறுமையாகப் பேசி, அவர்களை ஓரளவு சமாதானப்படுத்தினார். ஒருவழியாக, விமானத்தில் அனைவரும் ஏறி அமர்ந்தனர். விமானத்திற்குள்ளும், அந்த பணிப்பெண் மட்டும், அனைவரிடமும், தொடர்ந்து, கனிவுடன் நடந்துகொண்டார்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பயணி, அப்பெண்ணிடம், "நான் உங்கள் நிறுவனத்திற்கு உங்களைப்பற்றி எழுதி, உங்களுக்குப் பதவி உயர்வு தரும்படி சிபாரிசு செய்யப்போகிறேன்" என்று கூறினார். அதற்கு அப்பெண், "சார், நான் இந்த நிறுவனத்திற்காகப் பணியாற்றவில்லை. இயேசுவுக்காகப் பணியாற்றுகிறேன். இன்று காலை, நானும், என் கணவரும் எழுந்ததும், ஒன்றாக செபித்தோம்... இன்றைய விமானப் பயணம் எவ்வகையில் அமைந்தாலும் சரி, அப்பயணத்தில் நான் இயேசுவின் பிரதிநிதியாகச் செயலாற்ற வேண்டும் என்று இருவரும் செபித்தோம்" என்று கூறியபின், அப்பெண் தன் கனிவுப் பணியைத் தொடர்ந்தார்.

அப்பெண் செய்ததோ, விமானப் பணிப்பெண் என்ற வேலை. ஆனால், அதை அவர் செய்த விதம், அந்த வேலையை ஓர் அழைப்பாக மாற்றியது. அழைப்பைப்பற்றி பேச எத்தனையோ அற்புதமான நிகழ்ச்சிகள் இருக்கும்போது, ஒரு விமானப் பணிப்பெண், தன் கடமையைச் செய்ததை முன்னிறுத்தி நான் அழைப்பைப் பற்றி பேசுவதை ஒரு சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். இந்தப் பெண் தன் கடமையை இன்னும் சிறிது கருத்தோடு, கனிவோடு செய்தது, அதற்கும் மேலாக, தான் அவ்விதம் பணியாற்றுவதற்கு, இயேசுவே காரணம் என்று தயக்கமின்றி அறிக்கையிடுவது இவற்றை வைத்தே, இந்த நிகழ்வைப் பகிர்ந்துகொண்டேன். கொடுத்த பணியை முழுமையாகச் செய்வதும், வாய்ப்பு கிடைக்கும்போது, அந்தப் பணியின் வழியே கடவுளைப் பறைசாற்றுவதும்தானே அழைப்பு!

'அழைப்பு' என்ற வார்த்தையைக் கேட்டதும், நாம் அதற்கு, 'தேவ அழைத்தல்' என்ற ஓர் ஆன்மீக வண்ணம் பூசி, உயரத்தில் வைத்துவிடுகிறோம். 'அழைப்பு' என்ற எண்ணத்தை நம் அனுதின வாழ்விலிருந்து அன்னியப்படுத்திவிடுகிறோம். எனவேதான், இந்த விமானப் பணிப்பெண் நிகழ்வை, 'அழைப்பு' என்ற கோணத்தில் சிந்திக்கத் தயங்குகிறோம். இந்த ஞாயிறன்று, 'அழைப்பு' என்ற எண்ணத்தை சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள, அதை, நம் தினசரி வாழ்வின் ஓர் அங்கமாகச் சிந்திக்க, நமக்கோர் அழைப்பு தரப்பட்டுள்ளது. தங்களுக்குக் கிடைத்த அழைப்பை அசைபோடும், இறைவாக்கினர் எசாயாவையும், திருத்தூதர் பவுலையும் முதல் இரு வாசகங்களில் சந்திக்கிறோம். இயேசு தன் முதல் சீடர்களை அழைத்த நிகழ்வு இன்று நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது.

விவிலியம் முழுவதும் நாம் காணும் பெரும்பாலான 'அழைப்புக்கள்', கோவிலில், இறைவனின் சந்நிதியில் வந்தவை அல்ல. அவை, சாதாரண, தினசரி வாழ்வு நிகழ்வுகளில் வந்தவை என்பதை, விவிலியம் மீண்டும், மீண்டும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
கிறிஸ்தவர்களைக் கொல்வதற்கு, அல்லது, கைதுசெய்வதற்கு வெறிகொண்டு குதிரையில் விரைந்துகொண்டிருந்த பவுலை, அந்தக் குதிரையிலிருந்து கீழே தள்ளி, இயேசு அழைத்தார். மீன்பிடித்துக் கொண்டிருந்த பேதுருவை, இயேசு, அந்த மீன்பிடிப் படகில் நின்றபடி அழைத்தார்.

இயேசு, பேதுருவை 'மனிதர்களைப் பிடிக்கும்' பணிக்கு அழைத்த காட்சி, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தியில் மட்டும் இந்த அழைப்பு நிகழ்வு, ஓர் அற்புத மீன்பிடிப்புடன் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு நடைபெறும் இடம், கெனசரேத்து ஏரி என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிடுகிறார். மத்தேயு, மாற்கு இருவரும் இதே இடத்தை, கலிலேயக் கடல் (மத். 4,18; மாற். 1,16) என்று குறிப்பிடுகின்றனர். இதே இடத்தை, இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் நடைபெறும் ஒரு நிகழ்வுக்குப் பின்னணியாக, திபேரியக் கடல் என்று நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுகிறார் (யோவான் 21:1).

கெனசரேத்து ஏரி, கலிலேயக் கடல், அல்லது, திபேரியக் கடல் என்று பலவாறாக அழைக்கப்படும் இந்த நீர்நிலை, நல்ல, குடிநீர் நிறைந்த பெரிய ஏரி. இந்த ஏரியின் நீளம் 21 கி.மீ. அகலம், 13 கி.மீ. மேலும், காற்றின் வேகத்தால் இந்த ஏரியில் அலைகளும் எழுவதுண்டு. எனவே, இயேசுவின் காலத்தில், வாழ்ந்தவர்கள், இதனை ஒரு கடல் என்று எண்ணியதில் வியப்பில்லை. இந்த ஏரியைச் சுற்றி, பத்துக்கும் மேற்பட்ட நகரங்கள் அமைந்திருந்ததென சொல்லப்படுகிறது. அம்மக்களின் முக்கியத் தொழில் மீன்பிடிப்பு. பல்லாயிரம் மீனவர்களின் வாழ்வு ஆதாரமாக விளங்கிய கெனசரேத்து ஏரியில், பேதுருவைச் சந்திக்க இயேசு வருகிறார். நற்செய்தியாளர் லூக்கா விவரிக்கும் இக்காட்சியை நாம் சிறிது அசைபோடுவோம். - லூக்கா நற்செய்தி  5 : 1-3

இயேசு ஏரிக்கரை ஓரமாய் நிற்கிறார். மலைப் பொழிவில் அவர் சொன்னதைக் கேட்டு மனதைப் பறிகொடுத்தவர்கள், இன்னும் பலரைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தனர். எனவே திரளான மக்கள் இயேசுவை நெருக்கிக் கொண்டிருந்தனர் என்று நற்செய்தி ஆரம்பமாகிறது. அப்போது, இயேசு சில புதுமைகளையும் ஆரம்பித்து வைக்கிறார். சீமோனின் படகில் இயேசு ஏறியது, முதல் புதுமை. இயேசுவைப் பற்றி முன்பின் அறியாவதர் சீமோன். அவர் வழக்கம் போல் மீன் பிடிக்க வந்தவர். அதுவும் முந்திய இரவு முழுவதும் உழைத்தும் ஒரு பயனையும் காணாமல், மனம் நொந்து போய் அமர்ந்திருந்தார் அவர். மீன் பிடிப்பு இல்லையென்றால்... வருமானம் இல்லை, வீட்டில் உணவுக்கு வழியில்லை... இப்படி, தன் சொந்தக் கவலையில் மூழ்கியிருந்த சீமோனின் படகு அசைகிறது. நிமிர்ந்து பார்க்கும் சீமோனுக்கு ஆச்சரியம், கொஞ்சம் கோபமும் கூட இருந்திருக்கும். முன்பின் தெரியாத ஒரு புது மனிதர், அவரது படகில், அவரது உத்தரவு இல்லாமல் ஏறியிருந்தார்.

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர், முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், நம் வாழ்வில் நுழைந்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கலாம். இன்னும் மூன்று நாட்களில் நாம் துவங்கவிருக்கும் தவக்காலம், இது போன்ற நுழைவுகளை நினைத்துப் பார்க்க ஒரு நல்ல காலம். இந்த நுழைவு, நல்ல விளைவுகளை உருவாக்கினால், வாழ்நாள் முழுவதும் அழகான ஒரு நட்புறவு மலரும். இந்த நுழைவு, தேவையற்ற ஒரு குறுக்கீடாக அமைந்தால், பிரச்சனைகள் என்ற களைகள், வெட்ட, வெட்ட வளரும்.

உரிமையோடு சீமோனின் படகில் நுழைந்த இயேசு, சீமோனின் வாழ்விலும் நுழைந்தார். புதுமையை ஆரம்பித்து வைத்தார். தன் படகிலிருந்து இயேசு போதித்தவற்றை, சீமோனும் கேட்டார். இரவு முழுவதும் முயற்சிகள் செய்தும், மீன்பிடிப்பு இல்லையே என்ற தன் கவலைகளில் மூழ்கியிருந்த சீமோனின் உள்ளத்தில், இயேசுவின் வார்த்தைகள் மாற்றங்களை உருவாக்க ஆரம்பித்தன.
சீமோனின் படகை தன் பிரச்சார மேடையாகப் பயன்படுத்திவிட்டு, இயேசு அவர் வழியே போயிருந்தால், புதுமை தொடர்ந்திருக்காது. தன் சொந்த பயனுக்காக மற்றவரைப் பயன்படுத்திவிட்டு பிறகு மறைந்து போகும் பழக்கம், இயேசுவுக்குக் கிடையாது. சீமோனின் படகில் ஏறியது மட்டுமல்லாது, அதை, கரையிலிருந்து ஏரிக்குள் கொண்டு செல்லக் கட்டளையிடுகிறார்.

"ஆழத்திற்கு தள்ளிக்கொண்டு போகும்படி" (லூக்கா 5:4) இயேசு கட்டளையிடுகிறார். அவ்விதம் ஆழத்திற்குச் செல்லும் படகில் அவரும் உடன் இருக்கிறார். ஆழத்திற்குச் செல்வது, எளிதான காரியம் அல்ல... ஆழத்திற்குச் செல்வதற்கு, ஏகப்பட்டத் தயக்கங்கள் நமக்குள் எழலாம். குறிப்பாக, எதையும் மேலோட்டமாகச் சிந்திப்பதும், 'மேம்புல் மேயும்' மனநிலையுடன் வாழ்வதும் சிறந்ததெனக் கூறும் இன்றையப் பாடங்களுக்கு எதிராக, எதையும், ஆழ, அறிந்து செயல்படுவதற்கும், ஆழமான அர்ப்பண உணர்வுடன் வாழ்வதற்கும், தனிப்பட்டத் துணிச்சல் தேவை. மேலும், ஆழத்திற்குச் செல்லுமாறு பணிக்கும் ஆண்டவன் நம்மோடு வரும்போது, துணிந்து செல்ல முடியும். அத்தகைய நம்பிக்கைக்காக செபிப்போம்.

முன்பின் தெரியாத தன்னை நம்பி, தனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு, படகை ஆழத்திற்குக் கொண்டு சென்ற சீமோனின் எளிய, வெள்ளை உள்ளம் இயேசுவைக் கவர்ந்திருக்கவேண்டும். தங்கள் சொல்லுக்குக் கட்டுப்படும் கள்ளமற்ற உள்ளங்களை, சொந்த இலாபங்களுக்குப் பயன்படுத்தும் தலைவர்களை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். இயேசுவின் எண்ணங்கள் வேறுபட்டவை. சீமோனை இன்னும் தன் வயப்படுத்த, அவர் வழியாக இன்னும் பலரைத் தன் வயப்படுத்த நினைத்தார் இயேசு. அவரை மனிதரைப் பிடிப்பவராக்குவதற்கு முன், புது வழியில் மீன்பிடிக்கும் வழியை சொல்லித் தர விழைந்த இயேசு, ஏரியில் வலைகளை வீசச் சொன்னார்.

இயேசு விடுத்த இந்தக் கட்டளையைக் கேட்டு, சீமோனும், அவரைச் சுற்றியிருந்தோரும் அதிர்ச்சியும், எரிச்சலும் அடைந்திருக்கலாம். மீன்பிடிக்கும் தொழிலில் பல ஆண்டுகள் ஊறி, தேர்ந்த அவர்களது திறமையையும், அனுபவத்தையும் கேலி செய்வது போல் இருந்தது, இயேசுவின் கட்டளை. சீமோன் நினைத்திருந்தால், இயேசுவிடம் இப்படி சொல்லியிருக்கலாம்: "ஐயா, இந்தப் பகல் நேரத்தில் நாங்கள் வலை வீசினால், பார்ப்பவர்கள் எங்களைப் பைத்தியக்காரர்கள் என்று சொல்வார்கள். உங்கள் ஆலோசனைக்கு நன்றி. என்ன செய்வதென்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று, பேதுரு, தன் நிலைப்பாட்டை, நல்லவிதமாகக் கூறியிருக்கலாம்; மாறாக, கள்ளம் கபடமற்ற சீமோன், தன் இயலாமையையும், இயேசுவின் மீது தனக்கு உருவாகியிருந்த நம்பிக்கையையும் இவ்விதம் சொல்கிறார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்என்றார். (லூக்கா 5:5) பல நல்ல பாடங்கள் இந்தக் கூற்றில் புதைந்துள்ளன. உண்மையை எவ்விதப் பூச்சும் இல்லாமல் சொல்வது; சொல்பவரது பின்னணியைப் பற்றி எடைபோடாமல், அவர் சொல்வதற்கு மதிப்பு கொடுப்பது... இப்படி பல பாடங்கள். சீமோனின் நம்பிக்கை வீண்போகவில்லை. 'வலைகள் கிழியும் அளவுக்கு' மீன்கள், அந்தப் பகல் நேரத்தில் பிடிபட்டன.

மீன்பிடிப்பைக் கண்டதும், சீமோனின் சொல்லும், செயலும் ஆச்சரியத்தைத் தருகின்றன. இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் என்றார். (லூக்கா நற்செய்தி  5:8)
புனித பேதுரு மட்டுமல்ல, இறைவாக்கினர் எசாயா, திருத்தூதர் பவுல் என்ற மூன்று விவிலியத்தூண்களும் உள்ளத் தாழ்ச்சியோடு தங்களைப்பற்றிக் கூறும் வார்த்தைகளை இன்றைய ஞாயிறு வாசகங்கள் தாங்கி வருகின்றன.

முதல் வாசகத்தில் இறைவனின் மாட்சியைக் கண்ணாரக் கண்டு எசாயா கூறும் வார்த்தைகள் இவை: தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான். (எசாயா 6:5)
இரண்டாம் வாசகத்தில், இயேசு, திருத்தூதர்கள் பலருக்குக் காட்சியளித்ததை வரிசைப்படுத்திச் சொல்லும் பவுல், இறுதியாக, தனக்கும் அவர் தோன்றினார் என்பதை, இவ்வாறு கூறுகிறார்: எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். (1 கொரி. 5:8)

எசாயா, பவுல், பேதுரு என்ற மூவருமே தங்களைப்பற்றி கொண்டிருந்த உண்மையானத் தெளிவிலிருந்து பேசிய வார்த்தைகள் இவை. தன்னிரக்கத்தில், வேதனையில், இயலாமையில் தங்களையே வெறுத்து, தங்களையே தாழ்த்திச் சொன்ன வார்த்தைகள் அல்ல. இது நமக்குத் தரும் முக்கியமான பாடம்: தாழ்ச்சி அல்லது, பணிவு என்பது, உள்ள நிறைவிலிருந்து, உண்மையானத் தெளிவிலிருந்து வரும்போதுதான் உண்மையாக இருக்கும், உண்மையாக ஒலிக்கும் என்ற பாடம்.
தன்னிறைவு, தன்னைப்பற்றிய தெளிவு, தன்னைப் பற்றிய உண்மையான பெருமை இவை இல்லாதபோது, அடுத்தவர்களை எப்போதும் நமக்குப் போட்டியாக நினைப்போம். இந்தப் போட்டியைச் சமாளிக்க, ஒன்று நம்மையே அதிகமாகப் புகழ வேண்டியிருக்கும் அல்லது, மிகவும் பரிதாபமாக போலித் தாழ்ச்சியுடன், போலிப் பணிவுடன் நடிக்க வேண்டியிருக்கும்.

அகந்தையில் சிக்கி, கிறிஸ்தவர்களை அழித்து வந்த சவுல், இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, திருத்தூதர் பவுலாக மாறியபின், உண்மையான உள்ள நிறைவோடும், பெருமையோடும், அதே நேரம் பணிவோடும் சொன்ன வார்த்தைகள் நமது சிந்தனைகளை இன்று நிறைவு செய்யட்டும்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12: 9-10
கிறிஸ்து என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.


07 February, 2010

Proud to be HUMBLE… துணிவிலிருந்து பிறப்பதே பணிவு...




“Humility is the foundation of all the other virtues hence, in the soul in which this virtue does not exist there cannot be any other virtue except in mere appearance.” Saint Augustine.

Ladies and Gentlemen, I am proud to introduce Humility. Pride (the real, healthy pride) and humility are two sides of the same coin. Humility is, probably, one of the most misunderstood virtues. The moment we think of humility, our minds would, probably, picture a silent, reserved person who does not even raise his / her head, a person who will seek the corner seat in the last row… etc. This is not the true picture of humility. Such humility, more often, would be false humility. True humility overflows from a heart filled with healthy pride. Here is a sample from Sir Isaac Newton: “If I have seen further than others, it is by standing upon the shoulders of giants.” Newton begins this quote by saying that he had seen further than others. There is a sense of pride and fulfilment in that statement. But, he acknowledges the help of others in his life. That is humility.
You may be wondering whether I am writing a treatise on humility. Dear Friends, humility is a common thread that runs through all the three readings found in this Sunday’s liturgy. To be more specific, here are the verses I am referring to:

Isaiah 6:5I am a man of unclean lips, and I live among a people of unclean lips
I Cor. 15:8-10Last of all he (Christ) appeared to me also, as to one abnormally born. For I am the least of the apostles and do not even deserve to be called an apostle, because I persecuted the church of God. But by the grace of God I am what I am, and his grace to me was not without effect.
Luke 5:8 When Simon Peter saw this, he fell at Jesus' knees and said, "Go away from me, Lord; I am a sinful man!"

Those who beg for alms sometimes demean themselves as nothing, nobody, etc. Such statements come out of need and desperation. The statements we heard in today’s readings do not come from desperation. On the contrary, Isaiah, Paul and Peter are making these statements after their encounter with the divine, after they have been overwhelmed by God’s presence. These statements are, in essence, what true humility is. A true, proper perspective of who we are and what we can be with God.
I am sure all of us have met truly great persons in our lives. They hardly seem great; much less they impose their greatness on others. They don’t take any special effort to be humble or great. Both greatness and humility simply emanate from them. On the contrary, those who are small, need to exhibit their greatness as well as their other ‘virtues’.
Here is a nice story from ‘Illumination-Experiences on Indian Soil’ by Sri Chinmoy:
The King's Humility
One day a sage came to a King for an interview. The sage had to wait for a long time because the King was very busy. Finally, the King said he could come in.
When the sage entered the hall, the first thing he did was to take off his hat and bow to the King. Immediately the King took off his crown and bowed to the sage. The ministers and others who were around the King asked, "What are you doing? He took off his hat because he is an ordinary man. But you are the King. Why should you take off your crown?"
The King said to his ministers, "You fools, do you think I wish to remain inferior to an ordinary man? He is humble and modest. His humility is a peerless virtue. He showed his respect to me. If I did not take off my crown, then I would be showing less humility than an ordinary man, and I would be defeated by him. If I am the King, I should be better than everybody in everything. That is why I took off my crown and bowed to him!”

http://www.writespirit.net/stories_tales/stories_by_sri_chinmoy

Here are the words from one of the great pillars of Christianity – St Paul:
Christ said to me, "My grace is sufficient for you, for my power is made perfect in weakness." Therefore I will boast all the more gladly about my weaknesses, so that Christ's power may rest on me. That is why, for Christ's sake, I delight in weaknesses, in insults, in hardships, in persecutions, in difficulties. For when I am weak, then I am strong. (II Cor. 12:9-10)

பிப்ரவரி 07 - நாளும் ஒரு நல்லெண்ணம்
Bankei என்ற சென் குரு உரையாற்றுகையில் மாணவர்கள் மட்டுமல்ல, உயர் பதவியிலிருப்பவர்களும் அவரது உரையைக் கேட்க கூட்டமாய் வருவது வழக்கம். இதைக் கண்ட Nichiren என்ற மற்றொரு குருவுக்கு பொறாமையும், கோபமும் அதிகமானது. எனவே அவர் Bankei போதித்துக் கொண்டிருக்கும் போது, அவருடன் வாதிடும் நோக்கத்தில் அங்கு வந்து உரத்தக் குரலில், "ஏய், போதகரே, உம்மை மதிக்கும் எவரும் நீர் சொல்வதற்கு முற்றிலும் கீழ்படிவார்களாமே. எங்கே, என்னைக் கீழ்ப்படிய வைத்துவிடும், பார்ப்போம்." என்றார். Bankei அவரிடம், "இங்கே அருகில் வாருங்கள். நான் இதை எப்படி செய்கிறேன் என்று காட்டுகிறேன்." என்றார்.
Nichiren அவர் அருகில் சென்றார். Bankei புன்முறுவலுடன், "என் இடது பக்கமாய் வாருங்கள்." என்றார். Nichiren அப்படியே செய்தார். "மன்னிக்கவும். என் வலது பக்கம் வந்தால், நாம் இதைப் பற்றி இன்னும் தெளிவாகப் பேசலாம்." என்றார். Nichiren அப்படியே செய்தார். இப்போது, Bankei அவரிடம், "பார்த்தீர்களா? நான் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் செய்தீர்கள். நீங்கள் ஒர் உன்னதமானவர். இப்போது அமரவும், நாம் பேசுவோம்." என்றார்.
வெள்ளம் வரும் போது, வளைந்து கொடுக்கும் நாணல் பின்னர் நிமிர்ந்து நிற்கும். எதிர்த்து நிற்கும் பெரும் மரம் வேரோடு, வெள்ளத்தோடு போய்விடும்.

ஞாயிறு சிந்தனை
Shakespeare எழுதிய புகழ் பெற்ற ஒரு நாடகத்தில் வரும் பிரபலமான வரிகள் இவை:
A rose by any other name would smell as sweet
ரோஜா மலரை என்ன பெயரிட்டு அழைத்தாலும், அதன் மணம் அதே இனிமையோடு இருக்கும் என்பது அதன் பொருள். எந்த மலருக்கும் இது பொருந்தும். பெயரை மாற்றுவதால் ஒரு பொருளின் அடிப்படை குணம் மாறுவதில்லையே.
அதேபோல், மனிதர்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு புண்ணியத்தைப் பல பெயர்களால் அழைக்கிறோம். அடக்கம், பணிவு, தாழ்ச்சி என்று பல பெயர்களால் இந்த புண்ணியம் அழைக்கப்படுகிறது. இந்தப் புண்ணியத்தைப் பற்றி பேசாத பெரியவர்கள் இல்லை.
தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம், ஆதாரம்” என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கமுடைமை என்று வள்ளுவர் அறத்துப்பாலில் கூறும் பத்து குறள்களை, அன்பர்களே, தயவுசெய்து ஒருமுறை இன்று வாசித்துப்பாருங்கள். 121 முதல் 130 வரையிலான பத்து குறள்களில் நாம் அனைவரும் மகிழ்வோடு, நிம்மதியோடு பெருமையோடு தலை நிமிர்ந்து வாழக்கூடிய வழிகளை மிக எளிமையாக வள்ளுவர் கூறியுள்ளார்.
தன்னடக்கம், புலனடக்கம் சிறப்பாக நாவடக்கம் என்ற பல எண்ணங்களைக் கூறியுள்ளார். நாம் அடிக்கடி இந்தக் குறள்களைக் கேட்டிருக்கிறோம். இவ்வாறு அடிக்கடி கேட்கும் உண்மைகள் உள்ளத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் போக வாய்ப்புண்டு. நீங்கள் அடிக்கடி கேட்டிருந்தாலும், இன்று மீண்டும் ஒருமுறை இக்குறள்களில் ஒரு சிலவற்றைக் கேட்போம்:
குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.
குறள் 125:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.
குறள் 127:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

குறள் 129:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

திருவள்ளுவர், திருக்குறள் பற்றிய விளக்கவுரை இப்போது ஏன் என்று குழம்பிப் போயிருக்கும் அன்பர்களே, இன்றைய ஞாயிறு வாசகங்களையும், இக்குறள்களோடு இணைத்து சிந்திக்க அழைக்கிறேன்.
இந்த ஞாயிறு திருவழிபாட்டில் நமக்குத் தரப்பட்டுள்ள மூன்று விவிலிய வாசகங்களிலும் பொதுவான ஒரு எண்ணம் உள்ளது. எசாயா, பவுல், பேதுரு என்ற மூன்று விவிலியத் தூண்களும் உள்ளத் தாழ்ச்சியோடு தங்களைப் பற்றிக் கூறும் வார்த்தைகளை இந்த மூன்று வாசகங்களும் தாங்கி வருகின்றன.
முதல் வாசகத்தில் இறைவனின் மாட்சியை கண்ணாரக் கண்டு எசாயா கூறும் வார்த்தைகள் இவை: எசாயா 6:5 - தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்.
இரண்டாம் வாசகத்தில், இயேசு அப்போஸ்தலர்கள் பலருக்குக் காட்சியளித்ததை வரிசைப்படுத்திச் சொல்லும் பவுல், இறுதியாக, இயேசு தனக்கும் தோன்றினார் என்பதை இவ்வாறு கூறுகிறார்: 1 கொரி. 15:8 - எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்.
நற்செய்தியில் இயேசு பேதுருவின் படகில் ஏறி போதித்தபின், அவர்களை அந்த நடுப்பகலில் மீன் பிடிக்கச் சொன்ன அந்த நிகழ்ச்சியில், பெருந்திரளான மீன்பிடிப்பைக் கண்டு பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து கூறும் வார்த்தைகள் இவை: லூக்கா. 5:8 - “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்”

எசாயா, பவுல், பேதுரு என்ற மூவருமே உள்ளத்தின் நிறைவிலிருந்து பேசிய வார்த்தைகள் இவை. தன்னிரக்கத்தில், வேதனையில், இயலாமையில் தங்களையே வெறுத்து, தங்களையே தாழ்த்திச் சொன்ன வார்த்தைகள் அல்ல. இது நமக்குத் தரும் முக்கியமான பாடம்: தாழ்ச்சி என்பது, பணிவு என்பது உள்ள நிறைவிலிருந்து வரும் போதுதான் உண்மையாக இருக்கும், உண்மையாக ஒலிக்கும். குறையில் உள்ளவர்கள் தங்களையே தாழ்த்திச் சொல்லும் வார்த்தைகள் ஏக்கத்திலிருந்து வருவன. பிறரிடம் கையேந்தி தர்மம் தேடுவோர் தங்களையேத் தாழ்த்திக் கொள்வது போன்ற நிலை அது. நிறைவிலிருந்து சொல்லப்படும் உண்மைகளில் எந்த உள்ளர்த்தமோ, தேடலோ, ஏக்கமோ இருக்காது.
தன்னிடம் உள்ள நிறை குறைகளை முழுவதும் அறிந்த ஒருவர், தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்வதே பணிவு. ஒரு சின்ன உதாரணம்: நான் கல்லூரியில் வகுப்புகள் எடுக்கும் போது, அன்றைய பாடத்திற்கு என்னால் முடிந்தவரை தயாரிப்போடு செல்வது வழக்கம். அன்றைய பாடத்தோடு தொடர்புடைய, அதுவும் அண்மையில் வந்த தகவல்களைச் சேகரித்து செல்வேன். இருந்தாலும், என்னை விட தொடர்பு சாதனங்களில் அதிகம் திறமையும், அறிவும் கொண்ட மாணவர்கள் என் வகுப்பில் இருந்தனர் என்பதும் எனக்கு நன்கு தெரியும். அவர்களில் ஒரு சிலர் தங்களுக்குத் தெரிந்தது ஆசிரியருக்குத் தெரிகிறதா என்று பார்ப்பதற்கு கேள்விகள் கேட்பர். வேறு சிலர் உண்மையில் அந்த விஷயங்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் கேள்விகள் கேட்பர். கேள்வி எந்த கோணத்தில் வந்தாலும் சரி, அவர்கள் கேட்கும் கேள்விக்கு முழுமையான பதில் தெரிந்தால், நான் விளக்கம் தருவேன். பாதி தெரிந்தால், அல்லது சரிவரத் தெரிய வில்லை என்றால், அடுத்த நாள் அதைப்பற்றி சொல்வதாகச் சொல்லியிருக்கிறேன். தனக்குத் தெரியவில்லை, அடுத்த நாள் அது பற்றி தெரிந்து கொண்டு சொல்கிறேன் என்று சொல்லும் ஆசிரியர்கள் மேல் மாணவர்களுக்கு மதிப்பு கூடுமே தவிர குறையாது. ஆனால், இப்படிச் சொல்வதற்கு துணிவு, தன்னம்பிக்கை, தன்னைப் பற்றிய தெளிவு இவைகள் தேவை. இவைகள் இல்லாத போது, சில ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களை இழிவாக, குறைவாக நினைப்பார்களோ என்ற பயத்தில் தெரியாதவைகளை, தெரிந்தது போல் அரையும் குறையுமாகச் சொல்லும் போது மாணவர்கள் மதிப்பில் பல படிகள் இறங்கி விடுவர் அந்த ஆசிரியர்கள்.
நிறைவும், குறையும் இரட்டைப் பிறவிகள். துணிவும் பணிவும் அதேபோல் இரட்டைப் பிறவிகள். இன்னும் சொல்லப்போனால், துணிவிலிருந்து பிறப்பதே பணிவு. மேலோட்டமாகப் பார்க்கும் போது இது முரண்பாடாகத் தெரியலாம். ஆனால், நிதானமாகச் சிந்தித்தால், தெளிவு கிடைக்கும். நான் சொல்லும் துணிவு உண்மையின் அடிப்படையில் எழுகின்ற துணிவு. வன்முறையையே வாழ்வாக்கி இருக்கும் ரவுடிகள், தாதாக்கள் காட்டும் துணிவு உண்மையில் துணிவல்ல, தங்கள் பயத்தை மூடி மறைக்கும் ஒரு வேஷம். தன்னை நன்கு உணர்ந்தவர்கள் தங்கள் திறமைகள், குறைகள் இவைகளை ஏற்றுக் கொண்டவர்கள், தங்கள் திறமைகள் மேல் நம்பிக்கை கொண்டு துணிந்து செயல்களில் இறங்குவார்கள். குறையுள்ள பகுதிகளில் பணிவோடு விலகிக் கொள்வார்கள். இவர்கள் இறை நம்பிக்கை உடையவர்களானால், தனது திறமை, சக்தி இவைகளை மட்டும் நம்பாமல், இறைவன் நமக்குபின் இருந்து செயல் படுகிறார் என்ற நம்பிக்கையோடு குறையுள்ள பகுதிகளிலும் துணிந்து இறங்குவார்கள். துணிவில் பிறக்கும் பணிவுக்கு இதுதான் நான் காணும் விளக்கம். இந்தத் துணிவை, அதில் பிறந்த பணிவை பெரும் சாதனையாளர்களிடம் பார்க்கிறோம். அறிவியல் மேதை ஐசக் நியூட்டன் சொல்வது இது: மற்றவர்களை விட நான் இன்னும் அதி தூரம் பார்க்க முடிந்ததற்கு ஒரு முக்கிய காரணம், நான் எனக்கு முன் சென்றவர்களின் தோள்களின் மேல் ஏறி நின்றேன்.
இறைவனின் தோள்களில் துணிவுடன் ஏறி நின்ற எசாயா, பவுல், பேதுரு இவர்களின் பணிவை இன்றைய வாசகங்களில் கேட்டோம்.
தன்னிறைவு, தன்னைப் பற்றிய தெளிவு, துணிவு இவைகள் இல்லாத போது அடுத்தவர்களை எப்போதும் நமக்குப் போட்டியாக நினைப்போம். இந்தப் போட்டியைச் சமாளிக்க, ஒன்று நம்மையே தேவைக்கும் அதிகமாகப் புகழ வேண்டியிருக்கும், அல்லது தற்பெருமையோடு தவிக்க வேண்டியிருக்கும். அல்லது, மிகவும் பரிதாபமாக போலி தாழ்ச்சியுடன், பணிவுடன் நடிக்க வேண்டியிருக்கும். போலி தாழ்ச்சிபற்றி பல கதைகள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று. இந்திய ஆன்மீகவாதி ஒருவர் சொன்ன கதை இது:
தற்பெருமைக்கு இலக்கணமாய் வாழ்ந்த ஒரு அரசனை ஞானி ஒருவர் பார்க்க வந்தார். அரசன் அவரை உடனே சந்திக்கவில்லை. பல அலுவல்களில் மூழ்கி இருப்பது போல் நடித்துக் கொண்டு, அந்த ஞானியை காத்திருக்கச் செய்துவிட்டு பிறகு அரசன் அவரைச் சந்தித்தான். அரசனுக்கு முன் ஞானி வந்ததும், தன் தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி அரசனை வணங்கினார். உடனே, அரசனும் தான் அணிந்திருந்த மகுடத்தைக் கழற்றி ஞானியை வணங்கினான். இதைக் கண்ட அமைச்சர்களுக்குப் பெரும் ஆச்சரியம். அவர்களில் ஒருவர், "அரசே, என்ன இது? அந்த மனிதன் சாதாரண குடிமகன். அவன் தன் தொப்பியைக் கழற்றி வணங்கியது முறையே. அதற்காக நீங்கள் ஏன் உங்கள் மகுடத்தை கழற்றினீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அரசன் சொன்ன விளக்கம் இது: "முட்டாள் அமைச்சரே, அந்த மனிதனை விட நான் குறைந்து போக வேண்டுமா? அவன் தன் பணிவைக் காட்ட தொப்பியைக் கழற்றி எனக்கு வணக்கம் சொன்னான். அவனுக்கு முன் நான் என் மகுடத்தைக் கழற்றவில்லையெனில், அவன் பணிவில் என்னை வென்றுவிடுவான். நான் அவன் முன் தோற்றுவிடுவேன். யாரும், எதிலும் என்னை வெல்லக்கூடாது. புரிகிறதா?"

அரசன் தந்த விளக்கத்தைக் கேட்டு, தன் தாழ்ச்சியிலும் தன் பெருமையை நிலை நாட்டிய அரசனைக் கண்டு அமைச்சர் வாயடைத்து நின்றார். போலியான பணிவுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு இது.
வாழ்வில் சாதனைகள் பல புரிந்தாலும், தன்னடக்கத்தோடு வாழ்ந்த பலர் தாழ்ச்சியைப் பற்றி கூறியுள்ளனர்.
நம்மை விட உயர்ந்தோரிடம் பணிவாயிருப்பது நம் கடமை. நமக்கு இணையாய் இருப்போரிடம் பணிவாய் இருப்பது நல்ல பழக்கம். நமக்குக் கீழே பணிபுரிவோரிடம் பணிவாய் இருப்பதே உன்னதமானது, பெருமைக்குரியது. Benjamin Franklin
தாழ்ச்சி ஏன் இவ்வளவு விரும்பத்தக்கதெனின், கடவுளிடம் மிக நெருங்குவதற்கு இதுவே வழிவகுக்கும். Monica Baldwin
இதையே நம் தேசியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரும் வேறொரு வகையில் சொல்கிறார்: அனைத்துக்கும் மேலானவரை நெருங்க, தாழ்ச்சியில் மேலோங்க வேண்டும்.

இறுதியாக, அன்புள்ளங்களே, தன்னிறைவு, தன்னம்பிக்கை இவைகளில் வளர்ந்து, இறைவனின் அருளோடு செயல்பட்ட பவுல் அடியார் சொல்லும் வார்த்தைகள் நமது இந்த ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்யட்டும்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12 9-10

கிறிஸ்து என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.