10 June, 2017

God is ‘essentially’ a family இறைவனின் இயல்பு, இணைந்திருப்பது



The Holy Trinity, Mignard, Pierre (1612-95)

The Holy Trinity Sunday

We have entered the ‘Ordinary Time’ of the liturgical year. This implies that we have been having a ‘special time’ till now in our liturgical cycle. Yes, right from the start of the Lenten season through the Easter Season we have had a special time. Today’s feast, the Feast of the Most Holy Trinity, is like a crowning event of this special season. This crowning feast does not warm our hearts like, say, the feast of Christmas or Easter. This feast seems more ‘intellectual’. When I think of the Feast of the Most Holy Trinity, I get more of the image of an international conference than a festive gathering.

The Holy Trinity is a mystery to be contemplated than a concept to be discussed. Most of us remember a very old and much-repeated story about St. Augustine, one of the intellectual giants of the Church. He was walking by the seashore one day, attempting to conceive of an intelligible explanation for the mystery of the Trinity. As he walked along, he saw a small boy on the beach, pouring seawater from a shell into a small hole in the sand. "What are you doing, my child?" asked Augustine. "I am trying to empty the sea into this hole," the boy answered with an innocent smile. "But that is impossible, my dear child,” said Augustine. The boy stood up, looked straight into the eyes of Augustine and replied, “What you are trying to do - comprehend the immensity of God with your small head - is even more impossible.” Then he vanished. The child was an angel sent by God to teach Augustine a lesson. Later, Augustine wrote: "You see the Trinity if you see love." According to him the Father is the lover, the Son is the loved one and the Holy Spirit is the personification of the very act of loving. This means that we can understand something of the mystery of the Holy Trinity more readily with the heart than with our feeble mind. Evagrius of Pontus, a Greek monk of the 4th century said: "God cannot be grasped by the mind. If God could be grasped, God would not be God."

Many of the deep realities of life and the world are there simply as a gift to be admired and a mystery to be contemplated than an idea to be dissected and labelled into packages. An incident from the life of Franklin D.Roosevelt (FDR), the well-known president of the U.S., is worth remembering here. FDR and one of his close friends, Bernard Baruch, talked late into the night one evening at the White House. At last, President Roosevelt suggested that they go out into the Rose Garden and look at the stars before going to bed. They went out and looked into the sky for several minutes, peering at a nebula with thousands of stars. Then the President said, "All right, I think we feel small enough now to go in and go to sleep." The wonder of the power and wisdom of God puts things in perspective for us humans. Being the President of the U.S. can easily turn an individual into a megalomaniac. FDR must have stayed sane by seeing himself in the proper perspective. How we wish some of the present Presidents and Prime Ministers of various countries learn this lesson of ‘proper perspective’ from FDR!

When we think of the mystery of the Most Holy Trinity, one is easily reminded of the famous quote from the Bible: "Be still, and know that I am God; I will be exalted among the nations, I will be exalted in the earth." (Psalm 46:10) This brings to mind the famous saying of a great scientist: “The most beautiful and deepest experience a man can have is the sense of the mysterious. It is the underlying principle of religion as well as all serious endeavour in art and science. He who never had this experience seems to me, if not dead, then at least blind. To sense that behind anything that can be experienced there is a something that our mind cannot grasp and whose beauty and sublimity reaches us only indirectly and as a feeble reflection, this is religiousness. In this sense I am religious. To me it suffices to wonder at these secrets and to attempt humbly to grasp with my mind a mere image of the lofty structure of all that there is.” - Albert Einstein, The World As I See It (1949)

If at all we wish to ‘understand’ the great mystery of the Holy Trinity, then we need to raise the proper questions. Not trying to understand the ‘how’ of the mystery, as St Augustine tried, but more in terms of the ‘why’ of the Triune God. Why is our God a Triune God? To instil in us the simple but profound truth that relationships are very important, rather, they are the most important aspect of human life. The important question for us to ask today is: What does the doctrine of the Blessed Trinity tell us about the kind of God we worship and what does this say about the kind of people we should be?

God does not exist in isolated individualism but in a community of relationships. In other words, God is not a loner or a recluse. This means that a Christian in search of Godliness (Matthew 5:48) must shun every tendency to isolationism and individualism. If our God exists in a ‘family’, then our Christian roots begin with family bonding. This day calls us to examine our attitude to relationships in general and, in particular, our attitude towards family relationships. Quite often, our priorities get a bit topsy-turvy when we place more stress on wealth and fame than our relationships. We pray that the Triune God helps us to re-organise our priorities.

Last week we reflected on the Coming of the Holy Spirit on June 4, immediately followed by the World Environment Day on June 5. This week, the Feast of the Holy Trinity on June 11, is followed by the World Day Against Child Labour on June 12. Once again, we are staring at a day that cannot be celebrated right now. I wish we do have a chance to CELEBRATE this day when child labour is totally eradicated from the world.
I would like to reflect on the Feast of the Holy Trinity and the World Day Against Child Labour together. The Feast of God’s Family Day is followed by a day when we think of children suffering from lack of family love. The proximity of the Feast of the Holy Trinity and the World Day Against Child Labour, seems like a God-given chance for us to reflect on children who have to face a difficult childhood, children who do not have a childhood or lose their childhood very early in their lives.

The World Day Against Child Labour is an ILO (International Labour Organization) –sanctioned holiday for the purpose of raising awareness and activism to prevent child labour in both economic and military fields. It is currently held each June 12. The ILO created this observance in 2002 and it has been held annually since then. (Wikipedia)
It is painful to note that the world had taken 20 centuries to take note of a horrible crime committed against children. It is more painful to see that in the past few decades children are forcefully employed in the military. The adult world is already guilty of waging senseless wars. To add insult to injury, we have got children also involved in this insanity of the adults.
This day offers us another opportunity to seriously think of this problem and muster up enough courage to eradicate such a crime from the world. We pray that the Triune God, who, in essence, is a ‘family’, may give us the precious gifts of wisdom and courage to guide our children out of their slavery and help them re-enter the human family as their rightful place.

World Day Against Child Labour

மூவொரு இறைவன் பெருவிழா ஞாயிறு

உயிர்ப்பு ஞாயிறு துவங்கி ஒன்றன்பின் ஒன்றாக நாம் பல விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளோம். இவ்விழாக்களின் சிகரமாக, இன்று, மூவொரு இறைவன் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். கொண்டாட்டங்கள், ஒன்றை ஒன்று தொடர்ந்து வரும்போது, நமது மனநிலை எப்படி இருக்கும்? ஒன்றுக்கு மேல் ஒன்றாக, பெரிதான, பிரமிப்பான, உண்மைகள், நம்மை மகிழ்வில் ஆழ்த்தும்போது, பேச்சிழந்து போவோம். கண்களில் கண்ணீர் பெருகும். அப்படி ஓர் அனுபவத்தை நமக்குத் தருவது, அல்லது, தரவேண்டியது, இன்றைய மூவொரு இறைவன் திருவிழா. ஆனால், கண்களில் நீர் வழிய, கரங்களைக் குவித்து, உணர்வுப்பூர்வமாக கொண்டாடப்படும் ஒரு விழாவாக இது அமையாமல், நம் சிந்தனையளவில் நின்றுபோகும் விழாவாக இது அமைந்துவிடுகிறது.

மூவொரு இறைவனை தன் சிந்தனையால் அளக்கமுயன்ற மறைவல்லுனரான புனித அகஸ்டின் அவர்களைப் பற்றிய கதை நம்மில் பலருக்கு நினைவிலிருக்கும். கடற்கரை மணலில் ஒருநாள் நடந்துகொண்டிருந்த புனித அகஸ்டின் அவர்கள், நம் இறைவன் மூன்று ஆட்களாய், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து விடை தேடிக் கொண்டிருந்தார். அக்கடற்கரையில் எதையோ மும்முரமாகச் செய்துகொண்டிருந்த ஒரு சிறுவன், புனித அகஸ்டின் அவர்களின் கவனத்தை ஈர்த்தான். அச்சிறுவன் ஒரு சிறிய சிப்பியில் கடல் நீரை அள்ளியெடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தான். நான்கு அல்லது ஐந்து முறை சிறுவன் இதுபோல் செய்ததைப் பார்த்த அகஸ்டின், சிறுவனிடம் சென்று, "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். சிறுவன் அவரிடம், "பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறேன்." என்றான்.
அந்தக் குழந்தைத்தனமான பதிலைக் கேட்டு, இலேசாகப் புன்னகைத்த அகஸ்டின், அச்சிறுவனிடம், "இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?" என்று கேட்டார். அச்சிறுவன் அகஸ்டினை ஆழமாகப் பார்த்து, "உங்களுடைய சிறிய அறிவைக் கொண்டு அளவு கடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்துகொள்ள முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனான்.
ஒரு குழந்தையின் வழியே அதிர்ச்சி மருத்துவம் கொடுத்து, தன்னைப்பற்றிய ஒரு புதுப்பாடத்தை இறைவன் சொல்லித்தந்தார் என்பதை, புனித அகஸ்டின் உணர்ந்தார். "அன்பைக் காணமுடிந்தால், மூவொரு இறைவனையும் காணமுடியும்" என்று அந்த இறைவனைப்பற்றி, புனித அகஸ்டின் பின்னொரு காலத்தில் சொன்னார். நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம், 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த Evegrius என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது. "கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்க முடியாது" என்றார் Evegrius.

அமெரிக்க அரசுத்தலைவராய் இருந்த Franklin D.Roosevelt (FDR) அவர்களைப்பற்றி சொல்லப்படும் ஒரு கதையும் இங்கு உதவியாக இருக்கும். Roosevelt அவர்களும், அவரது நெருங்கிய நண்பர் Bernard Baruch அவர்களும், ஒருநாள் வெள்ளை மாளிகையில் சந்தித்து, அன்று முழுவதும் உலகப் பிரச்சனைகளைப்பற்றிப் பேசினார்கள். இரவு உறங்கச் செல்வதற்கு முன், Roosevelt அவர்கள், தன் நண்பரிடம், "வாருங்கள் நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களைச் சிறிதுநேரம் பார்த்துவிட்டு வருவோம்" என்றார். Roosevelt அவர்கள் சொன்னதை நண்பர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும், அவர் உடன் சென்றார். அவர்கள் தோட்டத்தில் நின்று, தெளிவான அந்த இரவு வானில் கண்சிமிட்டிய விண்மீன்களைப் பார்த்தனர். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக விண்மீன்களைப் பார்த்தபின், Roosevelt அவர்கள் தன் நண்பரிடம், "சரி, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது இப்போது புரிகிறது. வாருங்கள், உறங்கச் செல்வோம்." என்று சொன்னார்.
அமெரிக்க அரசுத்தலைவராக இருப்பதால், தானே இந்த உலகம் முழுவதையும் சுமப்பதுபோல் Roosevelt அவர்கள் உணர்வதற்கு ஒவ்வொரு நாளும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால், இரவில் அவர் மேற்கொண்ட இந்த ஒரு சிறு பழக்கத்தின் வழியாக, தனது உண்மை நிலையை அவரால் உணர முடிந்தது. அந்த மனநிலையோடு அவர் உறங்கச்சென்றது, அவர், தனக்குத் தானே கற்றுத்தந்த ஓர் அழகிய பாடம். கடவுளுக்கு முன், அவரது படைப்புக்கு முன், நாம் யார் என்பதை உணர்ந்தால், அவரை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியும் என்ற கனவுகளும், அடக்கிவிடும் முயற்சிகளும் விலகி, உண்மைக் கடவுளை உய்த்துணர முடியும்.

கடவுள் நமக்குப் பல திறமைகளைக் கொடுத்துள்ளார். தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், என்று பல நிலைகளில் நாம் நம் அறிவை வளர்க்க முடியும். இவற்றிற்கெல்லாம் மேலாக, உணர்ந்து கொள்ளுதல், உய்த்து உணர்தல் ஆகிய ஆழ்நிலை தியானத் திறமைகளையும் நாம் பெற்றுள்ளோம். தெரிந்துகொண்டதை, அறிந்துகொண்டதை, புரிந்துகொண்டதை நாம் வார்த்தைகளால் விளக்கிவிட முடியும். ஆனால், வாழ்வின் மிக ஆழமான பல உண்மைகளை, நம் மனத்தால் உய்த்துணர்ந்த உண்மைகளை, வார்த்தைகளால் விளக்க முடியாது.

புனித அகஸ்டின் தன் மனதின் ஆழத்தில் உய்த்துணர வேண்டிய மூவொரு கடவுள் என்ற உண்மையை தன் அறிவுத்திறன் கொண்டு அறிந்து, தெரிந்து, புரிந்துகொள்ள முயன்றார். எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் தனக்குள் எழுப்பி, விடைகள் தேட முயன்றார். எப்படி என்ற கேள்விக்குப் பதில் ஏன் என்ற கேள்வியை புனித அகஸ்டின் எழுப்பியிருந்தால், ஆழமான, வித்தியாசமான, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளைப் படித்திருக்கலாம்.
நம் இறைவன் எப்படி மூவொரு கடவுளாய் இருக்கிறார்? என்ற கேள்விக்கு பக்கம் பக்கமாக இறையியல் விளக்கங்கள் சொல்லலாம். அந்த விளக்கங்கள் எல்லாமே நம் அறிவுப்பசிக்கு உணவூட்டும், நம் மனதைத் தொடாமலேயேச் சென்றுவிடும். எப்படி என்பதற்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவோம். நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்? அவரைப்பற்றிய ஒரு சில அழகான உண்மைகளையும், அதன் விளைவாக, நம் வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளையும் சொல்லித்தர, நம் இறைவன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்.

நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதை நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசுவின் காலம்வரை, இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை, தந்தை, மகன், தூயஆவியார் என்ற, ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர், இயேசு. இயேசு இவ்விதம் அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம், நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன், உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்?
உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய இன்று நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம்.

உறவுகளே வாழ்வின் உயிர்நாடி என்பதை ஆணித்தரமாக நம் உள்ளத்தில் பதிக்கும் மூவொரு இறைவன் திருவிழாவைத் தொடர்ந்துவரும் திங்களன்று, நெருடலான எண்ணங்களை உருவாக்கும் ஒரு நாளை நாம் சிறப்பிக்கவிருக்கிறோம். சென்ற வாரம், தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைத் தொடர்ந்து வந்த உலகச் சுற்றுச்சூழல் நாள் நம் உள்ளங்களை கேள்விகளால் நிறைத்தன. அதேபோல், இந்த ஞாயிறு, நாம் கொண்டாடும் மூவொரு இறைவன் திருவிழாவைத் தொடர்ந்து வரும் ஜூன் 12ம் தேதி, நமக்குள் சங்கடங்களை உருவாக்குகிறது. அதுதான், குழந்தைத் தொழிலை எதிர்க்கும் உலக நாள் (World Day Against Child Labour). உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மூவோரு இறைவன் திருநாளைத் தொடர்ந்து, குழந்தைத் தொழிலை எதிர்க்கும் உலக நாள் வருவது, உறவுகளை இழந்திருக்கும் குழந்தைகளைப்பற்றி எண்ணிப்பார்க்க நமக்குத் தரப்பட்டுள்ள ஓர் அழைப்பு!

மனித வரலாற்றில், குழந்தைகள் எப்போதும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். குடிசைத் தொழில் அல்லது குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இது, குழந்தைகள் மேல் சுமத்தப்பட்டத் தொழில் அல்ல; அவரவர் குடும்பத் தொழிலைக் கற்பதே ஒரு கல்வி என்றுகூட சமாதானங்கள் சொல்லப்பட்டன.
தொழில் புரட்சி வந்தபின், அந்தப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்த இயந்திரங்கள், மனிதர்களை விட முக்கியத்துவம் பெற்றன. அந்த இயந்திரங்களைத் தொடர்ந்து இயக்குவதற்கு, பெரியவர், சிறியவர் என்று, எல்லாரும், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் வேலைகள் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. சிறுவர்கள், ஆலைகளில், தொழிற்சாலைகளில் ஆபத்தானச் சூழல்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். சிறுவர்களில் பலர் அந்த இராட்சத இயந்திரங்களுடன் மேற்கொண்ட போரில், உடல் உறுப்புக்களை இழந்தனர், பல வேளைகளில் உயிரையும் இழந்தனர்.
பெரும் செல்வந்தர்களின் வீடுகளில் பணிக்கு அமர்த்தப்பட்ட சிறுமிகள், இரவும் பகலும் தொடர்ந்து உழைக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இவர்களில் பலர், இச்செல்வந்தர்களின் உடல் பசியை, வெறும் உணவால் மட்டுமல்ல, தங்கள் உடலாலும் தீர்க்க வேண்டிய கொடுமைகள், இந்த மாளிகைகளில் நிகழ்ந்தன.
இங்கே பட்டியலிடப்பட்டுள்ள அவலங்கள், எங்கோ, எப்போதோ, நடந்துமுடிந்த வரலாறு என்று எண்ணவேண்டாம். இன்றும் இத்தகைய அவலங்கள் தொடர்கின்றன. இதைவிட ஒரு பெரும் கொடுமை, கடந்த 50 ஆண்டுகளில் அதிகம் வளர்ந்துள்ளது. சிறுவர், சிறுமியர், போர்ச் சூழல்களில், படைவீரர்களாகவும், மனிதக் கேடயங்களாகவும் பயன்படுத்தப்படும் கொடுமை அது. அதேவண்ணம், உலகில், கட்டுப்பாடின்றி வளர்ந்துள்ள போதைப்பொருள் வர்த்தகத்திலும் சிறுவர், சிறுமியர் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுவது, வருங்காலத் தலைமுறைகளுக்கு நாம் இழைக்கும் மிகப்பெரிய குற்றம்.

மூவொரு இறைவன் திருநாளை, ஒரு குடும்பத் திருநாளாக, ஜூன் 11, இஞ்ஞாயிறன்று, அர்த்தமுள்ள வகையில் கொண்டாடமுடியும். அதேபோல், குழந்தைத் தொழிலை எதிர்க்கும் உலக நாளையும் ஒரு திருநாளாக நாம் கொண்டாடமுடியும். எப்போது? உலகில், குழந்தைத் தொழிலாளிகள், சிறார் படைவீரர்கள் என்று யாரும் இல்லாதபோது, ஜூன் 12ம் தேதியையும், நாம், நெஞ்சுயர்த்தி, ஒரு திருநாளாகக் கொண்டாடமுடியும். அதுவரை, குழந்தைகளுக்கு எதிராக நாம் இழைத்துள்ள குற்ற உணர்வுகளால் பாரமான மனதோடு, தலைகுனிந்தே நாம் வாழவேண்டும். குழந்தைகளுக்கு எதிராகக் குற்றம் புரிவோரின் கழுத்தில் பாரமான ஏந்திரக் கல்லைக் கட்டி கடலில் அமிழ்த்துவது நலம் என்று (மத். 18:6; மாற். 9:42; லூக். 17:2) இயேசு கூறியது நினைவிருக்கலாம். குழந்தைகளை வதைக்கும் குற்றங்களால் பாரமாய்ப் போன நம் மனங்களே, எந்திரக் கல்லாக, நம் கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளதைப்போல் நாம் உணர்கிறோம்.

உலகெங்கும் துன்புறும் குழந்தைத் தொழிலாளிகளை விடுவிக்கும் வழிகளைச் சிந்திக்க, சென்ற ஞாயிறு நாம் கொண்டாடிய ஞானத்தின் ஊற்றான தூய ஆவியார் நமக்கு அருள்தர மன்றாடுவோம். அக்குழந்தைகளை மனித குடும்பத்தில் இணைத்து, வளர்க்கும் வழிகளை நடைமுறைப்படுத்த, உறவுகளின் ஊற்றாக விளங்கும், மூவொரு இறைவன், தெளிவையும், துணிவையும், தரவேண்டும் என்று இந்த ஞாயிறன்று மன்றாடுவோம்.


06 June, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 23

Mother Teresa Quotes
அன்னை ஏற்றிவைத்த ஒளி, இன்னும் ஒளிர்கிறது

வறுமையில் வாடிய வயதான ஒருவரைச் சந்திக்கச் சென்றார், அன்னை தெரேசா. அந்த முதியவர் வாழ்ந்துவந்த அறை, மிகவும் மோசமான நிலையில் இருந்தது. காற்றும், ஒளியும் புகமுடியாதவாறு அவர் அந்த அறையை அடைத்து வைத்திருந்ததால், துர்நாற்றம் வீசியது.
அன்னை அங்கு சென்றதும், அந்த அறையைச் சுத்தம் செய்து, சன்னலைத் திறந்துவிட்டு, காற்றும், ஒளியும் உள்ளே வரும்படி செய்தார். அன்னையின் முயற்சிகளை அந்த முதியவர் தடுக்கப்பார்த்தார். ஆனால், அன்னை விடுவதாக இல்லை.
அந்த அறையின் மூலையில் கிடந்த ஒரு பெட்டியில் அழகான எண்ணெய் விளக்கு ஒன்று இருந்தது. அழுக்கடைந்து கிடந்த அந்த விளக்கை அன்னை சுத்தம் செய்தபோது, "ஏன் இந்த விளக்கை நீங்கள் பயன்படுத்துவதில்லை?" என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், "நான் ஏன் அதைப் பயன்படுத்தவேண்டும்? என்னைப் பார்க்க யாரும் வருவதில்லை, நானும் யாரையும் பார்க்க விரும்புவதில்லை" என்று சலிப்புடன் கூறினார். அன்னை அவரிடம், "சரி, உங்களைச் சந்திக்க யாராவது இங்கு வந்தால், இந்த விளைக்கை ஏற்றிவைப்பீர்களா?" என்று கேட்க, அவர், "நிச்சயமாக. என் வாசலில் மனிதக் குரல் கேட்டதும், நான் இவ்விளக்கை ஏற்றிவைப்பேன்" என்று பதில் சொன்னார்.
அன்னை தெரேசா நிறுவிய துறவு சபையைச் சேர்ந்த இரு சகோதரிகள், அந்த முதியவரை அடிக்கடிச் சந்திக்கச் சென்றனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் அங்கு சென்றபோது, அந்த முதியவர் விளக்கை ஏற்றிவைத்தார். அவரது வாழ்வில் அழகான மாற்றங்கள் உருவாயின.
சில மாதங்கள் சென்று, அவர், அச்சகோதரிகளிடம், "சகோதரிகளே, உங்கள் வருகைக்கு நன்றி. இனி, நீங்கள் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறரோடு இணைந்து வாழமுடியும் என்ற நம்பிக்கையும், ஆவலும் எனக்கு வந்துவிட்டன. ஆனால், எனக்காக ஓர் உதவியைச் செய்யுங்கள். இந்த விளக்கை முதன் முதலில் ஏற்றிவைத்த அந்த அன்னையிடம், ‘என் வாழ்வில் அவர் ஏற்றிவைத்த ஒளி, இன்னும் ஒளிர்கிறது என்று மட்டும் சொல்லிவிடுங்கள். அது போதும்." என்று கூறினார்.

Job and his three friends
விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 23

யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்கள் எழுதியுள்ள 'யோபு நூல் - நல்லவர் ஒருவருக்கு பொல்லாதவை நிகழ்ந்தபோது' என்ற நூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை, நம் விவிலியத் தேடலில் அவ்வப்போது பயன்படுத்தி வருகிறோம். இந்நூலின் 7ம் பிரிவுக்கு குஷ்னர் அவர்கள் அளித்துள்ள தலைப்பு : "ஒரு குழப்பம், ஒரு புதிர், ஓர் ஆச்சரியமான உச்சக்கட்டம்" (A Confusion, a Perplexity, and a Surprising Climax). இப்பிரிவில், யோபுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே நிகழும் மூன்றாவது சுற்று உரையாடல் பற்றி விளக்கம் அளித்துள்ளார், குஷ்னர்.

யோபு நூல் 22ம் பிரிவு முதல், 31ம் பிரிவு முடிய, மூன்றாவது சுற்று உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சுற்றில், யோபின் நண்பர்களான எலிப்பாசும், பில்தாதும் மட்டுமே பேசுகின்றனர். மூன்றாவது நண்பர் சோப்பார் எதுவும் பேசவில்லை. 22ம் பிரிவில் எலிப்பாசு பேசி முடித்தபின், யோபு அளித்த பதில்மொழி, 23, 24 ஆகிய இரு பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 25ம் பிரிவில், பில்தாது பேசுவது, 6 இறைச்சொற்றொடர்களில் இடம்பெற்றுள்ளது. யோபு நூலில் காணப்படும் 42 பிரிவுகளில், இப்பிரிவே மிகக் குறுகிய பிரிவாகும். இதற்கு, யோபு கூறும் பதிலுரை, 26 முதல், 31 முடிய, 6 பிரிவுகளில் மிக நீண்டதாக அமைந்துள்ளது. மூன்றாவது சுற்று உரையாடலில் குழப்பமும், புதிரும் கூடுகின்றன என்ற எச்சரிக்கையை குஷ்னர்  அவர்கள், தன் நூலின் 7ம் பிரிவின் ஆரம்பத்தில் குறிப்பிடுகிறார்.

முதல் இரு சுற்று உரையாடல்களில், யோபு மீது, நண்பர்கள் கொண்டிருந்த மரியாதை சிறிது சிறிதாகக் குறைந்து வந்ததை உணர்ந்தோம். அதன் உச்சக்கட்டமாக, 3வது சுற்றின் துவக்கத்தில், எலிப்பாசு, யோபை நேருக்கு நேர் தாக்குவதைக் காண்கிறோம். யோபு, தன் வாழ்வில், குற்றம் ஒன்றையே புரிந்துள்ளார் என்ற பாணியில், எலிப்பாசு, அவர் மீது, குற்றச்சாட்டுகளைக் குவித்து வைக்கிறார்:
யோபு நூல் 22: 5-7,9
உமது தீமை பெரிதல்லவா? உமது கொடுமைக்கு முடிவில்லையா? ஏனெனில், அற்பமானவற்றுக்கும் உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்; ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்! தாகமுள்ளோர்க்குக் குடிக்கத் தண்ணீர் தரவில்லை; பசித்தோர்க்கு உணவு கொடுக்க முன்வரவில்லை... விதவைகளை நீர் வெறுங்கையராய் விரட்டினீர்; அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர்.

எலிப்பாசு குவித்துவைக்கும் இப்பட்டியலில், இருவகையானக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தேவையில் இருப்போருக்குச் செய்யத் தவறிய கடமைகள், மற்றும், தேவையில் இருப்போரை கூடுதலாக வதைத்தக் கொடுமைகள் என்று இருவகையானக் குற்றச்சாட்டுகளை எலிப்பாசு முன்வைக்கிறார்.
"தாகமுள்ளோர்க்குக் குடிக்கத் தண்ணீர் தரவில்லை; பசித்தோர்க்கு உணவு கொடுக்க முன்வரவில்லை" (யோபு 22:7) என்பதை, கடமை தவறியக் குற்றமாக எலிப்பாசு கூறுகிறார். இவ்வரிகளைக் கேட்கும்போது, நற்செய்தியாளர் மத்தேயு சித்திரிக்கும் இறுதித் தீர்வை காட்சி நினைவுக்கு வருகிறது. இறுதித் தீர்வையில் நம்மைத் தீர்ப்பிடவரும் அரசர், நம்மை 'ஆசி பெற்றவர்கள்' என்று அழைத்துச் செல்வதற்கும், 'சபிக்கப்பட்டவர்கள்' என்று விரட்டியடிப்பதற்கும், பயன்படுத்தும் அளவுகோல்களில் ஒன்று இதோ:
மத்தேயு 25: 35,42
பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்;... ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்" என்பார்.
பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள்... ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை" என்பார்.
பசித்தவருக்கு உணவு தருதல், தவித்த வாய்க்குத் தண்ணீர் தருதல் என்ற கடமைகளில் தவறும்போது, அது இறுதித் தீர்விலும் கணக்கில் எடுக்கப்படும் என்பது நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஓர் எச்சரிக்கை. பசித்தவருக்கு உணவளிப்பது, தாகமுற்றோருக்கு தண்ணீர் தருவது என்ற நற்செயல்களை, அனைத்து உண்மையான மதங்களும் பரிந்துரைக்கின்றன.

தேவையில் இருப்போரை யோபு வதைத்தார் என்ற இரண்டாவது வகைக் குற்றச்சாட்டைக் கூறும் எலிப்பாசு, குறிப்பாக, விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளைச் சுட்டிக்காட்டுகிறார்: விதவைகளை நீர் வெறுங்கையராய் விரட்டினீர்; அனாதைகளின் கைகளை முறித்துப்போட்டீர். (யோபு 22:9)
மோசே வழங்கிய சட்டங்களில், கைம்பெண்கள், அன்னியர், அனாதைகள் சார்பில், இறைவன், எப்போதும் இருப்பவர் என்பது, தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:
இணைச்சட்டம் 10:17-19
உங்கள் கடவுளாகிய ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவர்க்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுததற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை; கையூட்டு வாங்குவதும் இல்லை. அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே. அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள்.

"அனாதைகளின் கைகளை முறித்துப்போட்டீர்" என்று எலிப்பாசு கூறும் குற்றச்சாட்டு, தொன்று தொட்டு நிகழும் ஒரு கொடூரத்தை நம் நினைவுக்குக் கொணர்கிறது. வேறு யாரையும் நம்பி வாழமுடியாத அனாதைகள், தங்கள் கரங்களை நம்பி வாழமுடியும். ஆனால், அதையும் அவர்களிடமிருந்து பறித்துவிடும் கொடுமை, மனித வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. உலக அதிசயங்களாகக் கருதப்படும் அழகிய நினைவுச் சின்னங்களை உருவாக்கிய உழைப்பாளர்களின் கரங்கள் உடைக்கப்பட்டதையும், வெட்டப்பட்டதையும் பாரம்பரியக் கதைகளாக நாம் கேட்டிருக்கிறோம். இது உண்மையா, இல்லையா என்பதை அறிய வாய்ப்பில்லை. ஆனால், இன்று நடக்கும் ஒரு கொடுமை, இதையொத்தது. பல்லாயிரம் சிறுவர், சிறுமியர் கடத்தப்பட்டு, பிச்சையெடுக்கும் தொழிலில் புகுத்தப்படும்போது, அவர்களது கண்களைக் குருடாக்குதல், கை, கால்களை உடைத்து ஊனமாக்குதல் போன்ற மிகக் கொடிய குற்றங்கள் நிகழ்வது, வேதனைதரும் உண்மை.

யோபு மீது சுமத்தியக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இறைவனிடம் அவர் திரும்பிவந்தால் நிகழும் நன்மைகளை, எலிப்பாசு எடுத்துரைக்கிறார். " நீர் எல்லாம் வல்லவரிடம் திரும்பி வருவீராகில், நீர் கட்டியெழுப்பப்படுவீர்" (யோபு 22:23) என்று கூறும் எலிப்பாசு, யோபு திரட்டிவைத்திருக்கும் போன், தங்கம், வெள்ளி ஆகியவற்றை அவர் வீசி எறியவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
யோபு 22: 24,25
தீயவற்றை உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்! பொன்னைப் புழுதியிலே எறிந்து, ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்! எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும், வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.

இவ்வரிகளைக் கேட்கும்போது, போன், தங்கம், வைரம் இவற்றை பல்வேறு வடிவங்களில் திரட்டிவைக்கும், அல்லது, பகட்டாகப் பயன்படுத்தும் உலகத் தலைவர்கள், செல்வந்தர்கள் ஆகியோரை வேதனையோடு நினைவுகூருகிறோம்.
தங்க, வைர ஆபரணங்கள் செய்வதில் திறமைமிக்க Stuart Hughes என்பவர், 2013ம் ஆண்டு, உருவாக்கிய ஒரு iPhoneன் விலை, 1 கோடியே, 53 இலட்சம் டாலர்கள் - அதாவது, 98 கோடியே, 40 இலட்சம் ரூபாய். தங்கத்தால் செய்யப்பட்டு, வைரங்கள் பதிக்கப்பட்ட இந்தத் தொலைப்பேசியை, பெயர் வெளியிட விரும்பாத ஒரு சீன வர்த்தகர் வாங்கினார் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.
இதேபோல், தங்கம், வைரம் கொண்டு உருவாக்கப்படும் உடைகள், காலணிகள், பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவை குறித்தும் நாம் கேள்விப்படுகிறோம். பல தலைவர்களின் இல்லங்களில், அவர்கள் குளிக்கும் தொட்டிகள், பயன்படுத்தும் கழிவறை இருக்கைகள் அனைத்தும் தங்கத்தால் ஆனவை என்று கேள்விப்படும்போது, அவர்கள் எவ்வளவு தூரம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக மாறியுள்ளனர் என்பதை எண்ணி, வெட்கமும், வேதனையும் அடைகிறோம்.

யோபு, இறைவனிடம் திரும்பிவந்தால், இறைவன் என்ன செய்வார் என்பதை, 22ம் பிரிவின் இறுதியில் எலிப்பாசு இவ்வாறு கூறுகிறார்.
யோபு 22: 26-29
அப்போது எல்லாம் வல்லவரில் நீர் நம்பிக்கை கொள்வீர். கடவுளைப் பார்த்து உம் முகத்தை நிமிர்த்திடுவீர்.  நீர் அவரிடம் மன்றாடுவீர்; அவரும் உமக்குச் செவி கொடுப்பார். நீர் நினைப்பது கைகூடும்; உம் வழிகள் ஒளிமயமாகும். ஏனெனில், அவர் செருக்குற்றோரின் ஆணவத்தை அழிக்கின்றார்; தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார்.

இவ்வரிகளைக் கேட்கும்போது, அன்னை மரியா பாடிய புகழ்ப்பாடல் நினைவில் எழுகிறது:
லூக்கா 1: 50-53
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்... உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

எலிப்பாசு கூறிய குற்றச்சாட்டுகளுக்கும், அவர் வழங்கிய ஆலோசனைகளுக்கும் யோபு கூறிய பதிலுரையில் நம் தேடலை அடுத்தவாரம் தொடர்வோம்.


04 June, 2017

The Holy Spirit moving over Creation படைப்பின்மீது அசைவாடும் தூய ஆவியார்

 Spirit over water
Pentecost Sunday

Today, the Feast of the Pentecost, is celebrated on the fiftieth day after Easter. The word ‘Pentecost’ means the fiftieth day. In the last 50 days we have celebrated quite a few festivals, starting from Easter. We celebrated Divine Mercy Sunday, the Good Shepherd Sunday, Ascension Sunday and now Pentecost Sunday. Celebrations continue with the Holy Trinity Sunday next week and the Corpus Christi Sunday the week after. Whenever we use the word ‘celebrate’, we do have certain notions about it. How were the first Easter, Ascension and Pentecost – the core events of our Christian Faith – ‘celebrated’? Were they ‘celebrated’ at all? I wonder…

The commercial world would insist that the first Easter should have taken place in full splendor, with blaring trumpets and dazzling pyrotechnics. But, it was a non-event, judging by the standards of celebration set by the world. The first Ascension, once again, was a very quiet affair with Jesus spending quality moments with the disciples on a hillock, before being taken up into heaven. The first Pentecost too was simply the outpouring of the Holy Spirit on Mother Mary and the disciples gathered in prayer in the upper room. These events are not even a pale shadow of what is defined as ‘celebration’ by the world.

The definition of ‘celebration’ according to the commercial world is pretty clear… Grand, Glamorous, Great, Gigantic… Even if there is nothing to celebrate about, the commercial world would invent reasons to celebrate. The frills are more important than the core in these celebrations. In most of these celebrations ‘what’ is celebrated is less important than the ‘how’ of it. When I think of these commercial celebrations, I am reminded of the famous Shakespearean line from Macbeth: ‘sound and fury signifying nothing’. Such celebrations are fleeting, leaving no lasting impact on the individual. Perhaps it leaves one empty!

Jesus and his disciples defined ‘celebrations’ in a totally different way. They were more interested in the ‘what’ of the event than the ‘how’ of the event. This ‘what’ left a lasting, life-long impression on the disciples. The ‘what’ of these celebrations has left a deep impression on human history for the past twenty centuries. They have become the tenets of our Christian Faith!

While talking of ‘celebrations’, we need to talk about ‘non-celebrations’ too. While the commercial world invents reasons for ‘celebrations’, we are sadly reminded of the darker side of the world, where there are issues that are seemingly impossible to celebrate. One such issue is the issue of our Environment. June 5, coming Monday, is the World Environment Day. Although we wish to ‘celebrate’ this Day, it has left us with anxious feelings.
On June 1, last Thursday, the President of the United States, Mr Donald Trump, said that his country was pulling out of the Climate Change accord reached in Paris in 2015. This is one more instance to show how powerful individuals can ‘play God’ and can make or break our planet! Such decisions puts interests of individuals or specific groups over and above the care of our Common Home – the Planet! (Laudato Si)

It is significant that this year the Feast of Pentecost is followed by the World Environment Day. The Bible, in its opening lines introduces us to the Holy Spirit saying, that “the Spirit of God was moving over the face of the waters.” (Genesis 1:2) The Holy Spirit is the prime-mover in the creation history. Human beings have pushed aside the Spirit of Creation from the face of the earth and have put themselves as creators.

The World Environment Day invites us to look at ourselves as creatures living in harmony with other created beings. Every year the World Environment Day is observed (I am hesitant to say ‘celebrated’) on June 5. It was the day that the first United Nations Conference on the Human Environment began in Stockholm in 1972. Although the World Environment Day, established in 1972, is completing 45 years of its existence, the human family has not treated our environment as a 45 year adult would! We have not made much progress in learning how to protect our environment. 25 years back, a 13 year old girl tried to teach the world some lessons. The Earth Summit 1992 held in Rio, Brasil was swept away by Severn Cullis-Suzuki, a 13 year old girl from Canada. The six minutes talk that she gave in the summit is still doing enough rounds on the internet. The full text is available on: http://ssjothiratnam.com/?p=747

Here are some excerpts from Severn Suzuki’s talk:

“Hello, I'm Severn Suzuki speaking for E.C.O. - The Environmental Children's Organisation. We are a group of twelve and thirteen-year-olds from Canada trying to make a difference… We raised all the money ourselves to come five thousand miles to tell you adults you must change your ways. Coming here today, I have no hidden agenda. I am fighting for my future…

I am afraid to go out in the sun now because of the holes in the ozone. I am afraid to breathe the air because I don't know what chemicals are in it.  I used to go fishing in Vancouver with my dad until just a few years ago we found the fish full of cancers…  Did you have to worry about these little things when you were my age?
All this is happening before our eyes and yet we act as if we have all the time we want and all the solutions. I'm only a child and I don't have all the solutions, but I want you to realise, neither do you!
  • You don't know how to fix the holes in our ozone layer.
  • You don't know how to bring salmon back up a dead stream.
  • You don't know how to bring back an animal now extinct.
  • And you can't bring back forests that once grew where there is now desert.
If you don't know how to fix it, please stop breaking it!

In my country (Canada), we make so much waste, we buy and throw away, buy and throw away, and yet northern countries will not share with the needy. Even when we have more than enough, we are afraid to lose some of our wealth, afraid to share.
Two days ago here in Brazil, we were shocked when we spent some time with some children living on the streets. And this is what one child told us: "I wish I was rich and if I were, I would give all the street children food, clothes, medicine, shelter and love and affection." If a child on the street who has nothing, is willing to share, why are we who have everything still so greedy? I can't stop thinking that these children are my age, that it makes a tremendous difference where you are born, that I could be one of those children living in the Favellas of Rio; I could be a child starving in Somalia; a victim of war in the Middle East or a beggar in India.
I'm only a child yet I know if all the money spent on war was spent on ending poverty and finding environmental answers, what a wonderful place this earth would be!

At school, even in kindergarten, you teach us to behave in the world. You teach us:
  • not to fight with others,
  • to work things out,
  • to respect others,
  • to clean up our mess,
  • not to hurt other creatures
  • to share - not be greedy.
Then why do you go out and do the things you tell us not to do?

Do not forget why you're attending these conferences, who you're doing this for -- we are your own children. You are deciding what kind of world we will grow up in. Parents should be able to comfort their children by saying "everything's going to be alright", "we're doing the best we can" and "it's not the end of the world". But I don't think you can say that to us anymore. Are we even on your list of priorities? My father always says "You are what you do, not what you say."
Well, what you do makes me cry at night. You grown ups say you love us. I challenge you, please make your actions reflect your words. Thank you for listening.”

One of the most powerful lines from this speech was: “If you don't know how to fix it, please stop breaking it!” If only we could listen to our future generations and stop breaking the universe, the environment and the human family… If we cannot leave a wholesome universe for our next generation, let us at least leave a broken world instead of a completely devastated one for them!
Warning bells do ring now and then about this impending devastation… the last one being from Fukushima, Japan. The earthquake and the tsunami in Japan were loud warning bells indeed. But, the consequent fear of leakage of the atomic radiation is a warning we cannot afford to ignore.
The theme for the World Environment Day 2017 is: “Connecting People to Nature”!

We pray that the Holy Spirit comes down in a special way to renew the face of the earth and help us connect with nature, so that we can truly celebrate both the Feast of the Pentecost as the World Environment Day meaningfully!

Severn Cullis-Suzuki
தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா

உயிர்ப்புப் பெருவிழாவிலிருந்து ஐம்பதாம் நாளான இன்று, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இவ்விழாவுக்கு வழங்கப்படும் மற்றொரு பெயர் பெந்தக்கோஸ்து. பெந்தக்கோஸ்து என்ற சொல்லுக்கு, ஐம்பதாம் நாள் என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில், பல விழா நாட்கள் தொடர்ந்து வந்துள்ளன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு, சென்ற வாரம், விண்ணேற்றப் பெருவிழா, இந்த ஞாயிறு, தூய அவியாரின் வருகைப் பெருவிழா என்று... வரிசையாக, நாம் பல விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தோம். இனிவரும் நாட்களிலும், மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா என்று விழாக்கள் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடினோம், அல்லது, கொண்டாடுகிறோம், என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆணிவேரான உண்மைகள். இந்த மறையுண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், அப்படி நடந்ததாகத் தெரியவில்லை! மாறாக, இந்நிகழ்வுகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன.
எப்போது, எப்படி நடந்ததென்றே தெரியாமல் நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை, உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம், விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் வருகை, அன்னை மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இம்மறையுண்மைகள் அனைத்துமே, உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.

உலக விழாக்களில், பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவையே உயிர்நாடியாக அமைகின்றன. விழாவின் உள் நோக்கத்தை விட, வெளித் தோற்றங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரங்கள், ஆகியவை, மக்களை ஈர்க்கவேண்டும் என்ற நோக்கமே முக்கியம். இவ்விழாக்களைப்பற்றி அடுத்த நாள் கேட்டால்கூட நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அல்லது, அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே நமது நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும். உலகக் கொண்டாட்டங்களின் இலக்கணம் இது.

கொண்டாட்டம் என்ற சொல்லுக்கு புது இலக்கணம் தரும் வகையில், இவ்விழாக்களை கொண்டாடிய இயேசுவும், அவரது அன்னையும், சீடர்களும், நமக்குப் பாடங்களைச் சொல்லித் தருகின்றனர். கொண்டாட்டம் என்பது, பிறரது கவனத்தை ஈர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிராமல், நாம் கொண்டாடும் விழாவின் மையக்கருத்து, எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருக்கவேண்டும். அவ்விதம் அமையும் கொண்டாட்டங்கள், ஒருநாள் கேளிக்கைகளாக இல்லாமல், வாழ்நாளெல்லாம் நமக்குள் மாற்றங்களை உருவாக்க வழி வகுக்கும். இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள், முதல்முறை கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல், ஆழமான அர்த்தங்களை விதைத்ததால், இருபது நூற்றாண்டுகள் சென்றபின்னரும், இவ்விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண முடிகிறது.

கொண்டாட்டங்களைப்பற்றிச் சிந்திக்கும் வேளையில், கொண்டாடமுடியாத சில நாட்களைப்பற்றியும் நாம் பேசியாகவேண்டும். அவற்றில் ஒன்று, ஜூன் 5, இத்திங்களன்று நாம் கொண்டாடவேண்டிய, ஆனால், கொண்டாடமுடியாமல் தவிக்கின்ற  உலகச் சுற்றுச்சூழல் நாள்.
ஜூன் 1, கடந்த வியாழனன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், டொனால்டு டிரம்ப் அவர்கள், காலநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து தங்கள் நாடு விலகுவதாக அறிவித்துள்ளார். 2015ம் ஆண்டு, பாரிஸ் மாநகரில், 197 நாடுகள் ஒன்று கூடி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, கால நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த முடிவெடுத்தன. அந்த முடிவிலிருந்து, தங்கள் அரசு விலகிக்கொள்வதாக டிரம்ப் அவர்கள் அறிவித்திருப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் தீமையை விளைவிக்கும் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்ஸைடு), மிக அதிக அளவில் வெளியேற்றிவரும் அமெரிக்க ஐக்கிய நாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகியிருப்பது, வேதனை தரும் உண்மை. இந்நிலையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை, அழுது புலம்பும் ஒரு நாளாக மட்டுமே நம்மால் கடைபிடிக்கமுடியும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஜூன் 4, ஞாயிறன்று, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவும், ஜூன் 5, திங்களன்று, உலகச் சுற்றுச்சூழல் நாளும் ஒன்றையொன்று தொடர்ந்து வருவது, நம்மைச் சிந்திக்க அழைக்கிறது. விவிலியத்தின் ஆரம்ப வரிகளில் தூய ஆவியார் நமக்கு அறிமுகமாகிறார். "நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது" (தொ.நூ. 1:2) என்று தொடக்க நூலில் வாசிக்கிறோம். படைப்பு அனைத்தின் ஊற்றாக, அடிப்படையாக விளங்கும் தூய ஆவியாரை, படைக்கப்பட்ட உலகிலிருந்து அகற்றிவிட்டு, இவ்வுலகையும், சுற்றுச்சூழலையும் நாம் உருவாக்கியதுபோல் மமதையுடன் நடந்துகொள்கிறோம்.
படைப்பின் சிகரமாக மனிதர்களை உருவாக்கிய இறைவன், அவர்களுக்கு தன் முதல் ஆசியை வழங்கிய வேளையில், "பலுகிப் பெருகி, மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்" (தொ.நூ. 1:28) என்று கூறினார். மண்ணுலகை, உயிரினங்களை, நமது சுற்றுச்சூழலை 'நம் ஆற்றலுக்கு உட்படுத்துவதற்கு'ப் பதில், நம் அகங்காரத்திற்கும், அடங்காத பேராசைக்கும் அடிமையாக்கிவிட்டோம். கட்டுக்கடங்காத நமது பேராசையால், நமது பூமியையும், நாம் வாழும் சூழலையும் காயப்படுத்தி வருகிறோம்.

ஸ்வீடன் அரசின் முயற்சியால், ஐ.நா. பொதுஅவை, உலகச் சுற்றுச்சூழல் கருத்தரங்கு ஒன்றை 1972ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி துவக்கியது. இதற்குப் பின், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5ம் தேதியை உலகச் சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகச் சுற்றுச்சூழல் நாளைக் கொண்டாட அதிகம் காரணங்கள் இல்லை. ஆனால், இந்த நாளைப்பற்றி பாடங்கள் பயில ஆயிரம் காரணங்கள் உள்ளன. பாடங்கள் பயிலவேண்டிய அவசியத்தை உலகம் இப்போது உணர்ந்துவருகிறது. நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடத்தை Severn Cullis-Suzuki என்ற 13 வயது சிறுமி, 25 ஆண்டுகளுக்குமுன், உலகத் தலைவர்களுக்குச் சொல்லித்தந்தார்.
ஸ்வீடன் நாட்டு கருத்தரங்கு முடிந்து, 20 ஆண்டுகளுக்குப் பின் 1992ல் பிரேசில் நாட்டில் பூமிக்கோளத்தின் உச்சி மாநாடு (Earth Summit 1992) ஒன்று நடந்தது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள 172 நாடுகளிலிருந்து பல உயர்மட்டத் தலைவர்கள் வந்திருந்தனர். அவர்களை, அதிர்ச்சியில், அமைதியில் ஆழ்த்தியது, அச்சிறுமி வழங்கிய 6 நிமிட உரை. இதோ Severn Suzukiயின் உரையிலிருந்து ஒரு சிலப் பகுதிகள்:

நான் என் எதிர்காலத்திற்காகப் போராட வந்திருக்கிறேன். இன்று உலகில் பட்டினியால் இறக்கும் என்னைப்போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகள் சார்பில் பேச வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உலகின் பல பகுதிகளில் அழிந்துவரும் உயிரினங்கள் சார்பில் நான் பேச வந்திருக்கிறேன்.
வெளியில் சென்று சூரிய ஒளியில் நிற்பதற்கோ, வெளிக் காற்றைச் சுவாசிப்பதற்கோ எனக்குப் பயமாக உள்ளது. சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைப்பற்றி ஒவ்வொரு நாளும் நான் கேள்விப்படுகிறேன். அதனால், எனக்குப் பயமாக உள்ளது. நீங்கள் சிறுவர்களாய் இருந்தபோது என்னைப் போல் சூரியனையும், காற்றையும் பற்றி பயந்தீர்களா? கவலைப்பட்டீர்களா?”

இவ்விதம் தன் உரையைச் சூடாக ஆரம்பித்த சிறுமி Severn Suzuki, உலகத் தலைவர்களை நோக்கிச் சில உண்மைகளை இடித்துரைத்தார். அன்று அம்புகளாய் அவர்களை நோக்கிப் பாய்ந்த அவ்வுண்மைகள், இன்று, நம்மையும் நோக்கி பாய்ந்து வருகின்றன.
நான் வாழும் இவ்வுலகில் நடக்கும் பயங்கரங்களுக்கு என்ன பதில் என்று சிறுமி எனக்குத் தெரியாது. உங்களுக்கும் அந்தப் பதில்கள் தெரியாது என்ற உண்மையை கூறவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
விண்வெளியில் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டையை அடைக்க உங்களுக்குத் தெரியாது.
இறந்து போகும் உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க உங்களுக்குத் தெரியாது.
காடுகள் அழிந்து பாலை நிலங்களாய் மாறிவருவதைத் தடுக்கும் வழிகள் உங்களுக்குத் தெரியாது.
உடைந்து போன இயற்கையைச் சரி செய்ய உங்களுக்குத் தெரியாதபோது, அதை மேலும் உடைக்காமல் விடுங்கள். அது போதும் எங்கள் தலைமுறைக்கு.

Severn Suzukiபேசியபோது பல உலகத் தலைவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பலர், அச்சிறுமியை, ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாமல், குற்ற உணர்வோடு, தலை குனிந்து அமர்ந்திருந்தனர். தொடர்ந்து உண்மைகளைப் பேசினார் அச்சிறுமி:
நான் வாழும் கனடாவில் நாங்கள் அதிகப் பொருட்களை வீணாக்குகிறோம். பல பொருட்களை முழுதாகப் பயன்படுத்தாமல் தூக்கி எறிகிறோம். அதே நேரத்தில், எத்தனையோ நாடுகளில் தேவைகள் அதிகம் இருக்கும் கோடிக்கணக்கானோர் வாழ வழியின்றி இறக்கின்றனர். தூக்கி ஏறிய எண்ணம் உள்ள எங்களுக்கு, இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணம் எழுவதில்லை.
நான் சிறுமிதான். ஆனால், எனக்குத் தெரியும் சில உண்மைகள் ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை? நாம் இன்று போருக்குச் செலவிடும் பணத்தைக் கொண்டு இவ்வுலகின் ஏழ்மையை முற்றிலும் ஒழிக்கமுடியும், நமது இயற்கையை காக்கமுடியும் என்ற பதில்கள் எனக்குத் தெரிகிறதே; ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை?

குழந்தைகளாய் நாங்கள் வளரும்போது, எங்களுக்குப் பல பாடங்கள் சொல்லித் தருகிறீர்கள்:
மற்ற குழந்தைகளுடன் சண்டை போடக்கூடாது;
மற்றவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்;
நாங்கள் போட்ட குப்பையை நாங்களே சுத்தம் செய்ய வேண்டும்;
மற்ற வாயில்லா உயிரினங்கள் மேல் பரிவு காட்ட வேண்டும்;
எங்களிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்; எல்லாவற்றையும் நாங்களே வைத்துக் கொள்ளக் கூடாது...
என்று எங்களுக்கு எத்தனைப் பாடங்கள் சொல்லித் தருகிறீர்கள். பிறகு, நீங்கள் ஏன் இந்தப் பாடங்களுக்கு எதிராக நடந்து கொள்கிறீர்கள்?”

இவ்வாறு, பாலர்பள்ளிப் பாடங்களை உலகத்தலைவர்களுக்குச் சொல்லித்தந்த சிறுமி Severn Suzuki, இறுதியாக, அவர்கள் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் வகையில் பேசி முடித்தார்.

நீங்கள் ஏன் இந்தக் கருத்தரங்கை நடத்துகிறீர்கள் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். எங்களுக்கு, உங்கள் குழந்தைகளுக்கு நல்லவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே கூடியிருக்கிறீர்கள். நாங்கள் எவ்வகையான உலகில் வாழப்போகிறோம் என்பதை நீங்கள் தீர்மானிக்க வந்திருக்கிறீர்கள்.
பயந்து, கலங்கிப் போயிருக்கும் குழந்தைகளை, பெற்றோர் அரவணைத்துத் தேற்றும்போது, ‘எல்லாம் சரியாகிப் போகும் என்று சொல்லி, குழந்தைகளைச் சமாதானம் செய்வார்கள். எங்கள் தலைமுறைக்கு இந்த வார்த்தைகளை உங்களால் சொல்ல முடியுமா? ‘எல்லாம் சரியாகிப் போகும் என்று மனதார உங்களால், எங்களைப் பார்த்து சொல்ல முடியுமா? எங்கள் மீது அன்பு கொண்டிருப்பதாக நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மையென்றால், அதைச் செயலில் காட்டுங்கள்.  இது நான் உங்கள் முன்வைக்கும் ஒரு சவால். இதுவரைப் பொறுமையுடன் எனக்குச் செவிமடுத்ததற்கு நன்றி.

அந்த ஆறு நிமிடங்கள் உலகச் சமுதாயத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்பி, தலைவர்கள் அணிந்திருந்த முகமூடிகளைக் கிழித்தெறிந்தார், அச்சிறுமி. இது நடந்து இப்போது 25 ஆண்டுகள் கழிந்துவிட்டன. Severn Suzuki அன்று இடித்துரைத்த உண்மைகள், இன்று, அச்சமூட்டும் வகையில் நம்மைச் சூழ்ந்து நெருக்குகின்றன. இந்தக் கேள்விக்கணைகளுக்குப் பதில்சொல்ல இயலாமல், நாமும் தலைகுனித்து நிற்க வேண்டியுள்ளது.
World Environment Day - 2017

‘Connecting People to Nature’ - "மக்களை இயற்கையோடு இணைக்க" என்பது, இவ்வாண்டு, ஜூன் 5ம் தேதி கடைபிடிக்கப்படும் உலகச் சுற்றுச்சூழல் நாளுக்கெனத் தெரிவு செய்யப்பட்டுள்ள மையக்கருத்து. தூய ஆவியார் வருகைப் பெருவிழாவையும், உலகச் சுற்றுச்சூழல் நாளையும் ஒன்றன்பின் ஒன்றாக சிறப்பிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள நாம், தூய ஆவியாரின் தூண்டுதலால், வழிநடத்துதலால், இயற்கையோடு இணைந்து வாழ, சுற்றுச்சூழலைப் பேணிக்காக்க கற்றுக்கொள்வோம்.