16 December, 2015

விவிலியம்: காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - 1


Holy Year of Mercy Banner



Jubilee of Mercy Logo

2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, கத்தோலிக்கத் திருஅவையி்ன் தலைமைப் பொறுப்பிற்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை 8 மணியளவில், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தின் மேல்மாடியில் மக்களைச் சந்திக்க வந்தார். அவர், எளிய வெண்ணிற ஆடை அணிந்து வந்தது, "மாலை வணக்கம்" என்று மக்களிடம் சொன்னது, ஆகியவை, மக்களுக்கு புதிய அனுபவமாக இருந்தன. அச்சந்திப்பின் இறுதியில், ஊருக்கும், உலகிற்கும் (Urbi et Orbi) என்ற சிறப்பான ஆசீரை தான் வழங்குவதற்குமுன், மக்கள் தனக்காகச் செபிக்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களுக்கு முன் தலைவணங்கி நின்றது, திருஅவையையும், உலகத்தையும் ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது.
அன்று முதல், இன்று வரை, யாரும் எதிர்பாராத வகையில், பலமுறை, ஆச்சரியம் தரும் செய்திகளை வெளியிடுவதும், மனதைத் தொடும் செயல்களைச் செய்வதும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணி பதித்துள்ள தனி முத்திரை என்று சொன்னால், அது மிகையல்ல. இந்த 'ஆச்சரிய வரிசை'யில், இவ்வாண்டு, மார்ச் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க உலகிற்கு, ஏன், சொல்லப்போனால், உலகம் அனைத்திற்கும் ஆனந்த அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றைத் தந்தார். அவர் தந்த ஆனந்த செய்தியைக் கேட்பதற்குமுன், மார்ச் 13ம் தேதியைக் குறித்து இரு எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வோம்.

மார்ச் 13ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்ற 2ம் ஆண்டு நிறைவு என்பது, முதல் எண்ணம். அன்று, மார்ச் 13, வெள்ளியன்று, 'இறைவனுக்கு 24 மணி நேரங்கள்' என்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னின்று நடத்தினார்.
தவக்காலத்தின் 4ம் ஞாயிறு, 'Laetare Sunday', அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று கொண்டாடப்படுகிறது. இந்த ஞாயிறுக்கு முந்திய வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களில், 'மன்னிப்பின் விழா' கொண்டாடப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2014ம் ஆண்டு அறிவித்தார். வெள்ளி மாலை முதல், சனிக்கிழமை மாலை முடிய, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கக் கோவில்கள் பல, 24 மணி நேரமும் திறந்திருக்கவேண்டும் என்றும், ஒப்புரவு அருள் அடையாளம் வழங்குவதற்கு, அருள் பணியாளர்கள் கோவில்களில் காத்திருக்கவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விருப்பம் தெரிவித்தார். அவ்வண்ணம், 2014ம் ஆண்டு, மார்ச் 29, 30 ஆகிய இருநாட்கள், 'இறைவனுக்காக 24 மணி நேரங்கள்' என்ற வழிபாட்டு நிகழ்ச்சி வழியே, 'மன்னிப்பு விழா' அகில உலக கத்தோலிக்கத் திருஅவையில் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது.

அந்த மன்னிப்பு விழாவைத் துவக்கிவைக்க, வெள்ளி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் மன்னிப்பு வழிபாடு நிகழ்ந்தது. அந்த வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பகிர்ந்த எண்ணங்களில் ஒரு சில இதோ:
"நம்மில் பாவமற்றவர் யார்? ஒருவரும் கிடையாது. திருத்தூதர் யோவான் கூறுவது இதுதான்: "பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர்" (1 யோவான் 1: 8-9). இதுதான் இந்த மன்னிப்பு விழாவில் நமக்கு நிகழ்கிறது... நம் தந்தை அன்புகூர்வதில் களைப்படைவதே இல்லை. காணாமற்போன மகன் மீண்டும் இல்லம் வந்து சேரும் அந்தப் பாதையையே பார்த்துக் கொண்டிருந்த தந்தையின் கண்கள் களைப்படையவேயில்லை. தன்னுடன் வீட்டிலேயே தங்கிய மகன் தன் மகிழ்வில் பங்குகொள்ள மறுத்தாலும், அவர் மீது தந்தையின் அன்பு குறையவேயில்லை.... இந்த வழிபாடு முடிந்ததும், உங்களில் பலர் கடவுளுடன் நீங்கள் கொண்ட ஒப்புரவை பிறருக்கு எடுத்துச்சொல்லும் நற்செய்திப் பணியாளர்களாக மாறப்போகிறீர்கள்"

அன்றைய மாலை செபவழிபாட்டை, புனித பேதுரு பசிலிக்காவில் முன்னின்று நடத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒப்புரவு அருள் அடையாளத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்தபோது, யாரும் எதிர்பாராத ஒரு செயலைச் செய்தார். தான் முதலில் ஓர் அருள் பணியாளரிடம் சென்று, முழந்தாள் படியிட்டு, ஒப்புரவு அருள் அடையாளத்தை நிறைவேற்றினார். பின்னரே, அவர் மற்றவருக்கு அந்த அருள் அடையாளத்தை வழங்கச் சென்றார். மக்கள் கூடியிருக்கும் ஒரு கோவிலில், திருத்தந்தை ஒருவர், ஒப்புரவு அருள் அடையாளம் பெற மண்டியிட்ட காட்சி, அதுவரை யாரும் பார்த்திராதக் காட்சி.

அந்த 'மன்னிப்பு விழா'வில், மக்கள், குறிப்பாக, இளையோர் பெருமளவில் கலந்துகொண்டதையடுத்து, அதே முயற்சியை, திருஅவை இவ்வாண்டு கடைபிடித்தது. மார்ச் 13, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்ற நாளின் 2ம் ஆண்டு நிறைவும், 'மன்னிப்பு விழா'வும் இணைந்து வந்ததை, இறைவனின் செயல் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில், மன்னிப்பு, இரக்கம், கருணை, பரிவு ஆகியவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உள்ளத்திற்கு மிக நெருங்கிய உணர்வுகள், உண்மைகள் என்பதை, இவ்வுலகம் நன்கு அறியும்.

மார்ச் 13, வெள்ளியன்று, மாலை 5 மணியளவில், புனித பேதுரு பசிலிக்காவில், திருத்தந்தை முன்னின்று நடத்திய 'இறைவனுக்கு 24 மணி நேரங்கள்' வழிபாட்டில், லூக்கா நற்செய்தி, 7ம் பிரிவில் இடம்பெற்றுள்ள ஒரு நிகழ்வு நற்செய்தியாக வாசிக்கப்பட்டது. (லூக்கா 7: 36-50)
பரிசேயரான சீமோன் இல்லத்தில் இயேசு உணவருந்திக் கொண்டிருந்தபோது, அந்நகரில் பாவியான ஒரு பெண், அழையாத விருந்தினராக அங்கு நுழைந்தார். "இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ‘இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார் (லூக்கா 7:38-39) என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்நிகழ்வில் சித்திரிக்கப்பட்டுள்ள பெண்ணையும், பரிசேயரையும் ஒப்புமைப்படுத்தி, திருத்தந்தை தன் மறையுரையில் கூறிய கருத்துக்கள் இதோ:
"அந்தப் பெண், ஆண்டவரை உண்மையிலேயேச் சந்தித்தார். அவரை பொருத்தவரை, இரக்கத்தின் தீர்ப்பைத் தவிர, வேறெந்தத் தீர்ப்பும் ஆண்டவரிடமிருந்து வராது என்று நம்பினார். வீட்டுத் தலைவரான சீமோனோ, அளந்து, யோசித்து, அனைத்தையும் செய்தார். அவர் இயேசுவை தன் இல்லத்திற்கு அழைத்திருந்தாரேத் தவிர, உண்மையில் அவரைத் தகுந்த வகையில் வரவேற்கவில்லை. அந்தப் பெண்ணை, தன் உள்ளத்தில் தீர்ப்பிட்டதால், அவர் அப்பெண்ணிடமிருந்து மட்டுமல்ல, இறைவனிடமிருந்தும் தன்னைத் தூரப்படுத்திக் கொண்டார்.
மேலோட்டமானப் பார்வையுடன் நாம் வாழக்கூடாது என்பதை, இயேசுவின் சொற்களும், செயலும் நமக்குச் சொல்லித் தருகின்றன. குறிப்பாக, நமக்கு முன் ஒரு மனிதர் இருக்கும்போது, அவரை, மேலோட்டமானப் பார்வை கொண்டு தீர்ப்பிடக்கூடாது. பாவங்கள் குவிந்துள்ள ஓர் இதயத்தில் பாவங்களுக்கான மனத்துயரம் இருக்கும்போது, அங்கு திருஅவை அதிக இரக்கம் காட்டவேண்டும்.
காணாமற்போன மகன் தன் தந்தையிடம் திரும்பிவரும்போது (லூக்கா 15:17-24), அவரிடம் தான் சொல்லவேண்டும் என்று எண்ணிவந்த வார்த்தைகளை அவர் பேச ஆரம்பித்ததும், அவரைப் பேசவிடாமல் தடுத்து, அரவணைக்கும் தந்தையைப் போலத்தான் இயேசுவும் நம்மிடம் நடந்துகொள்கிறார்" என்று தன் எண்ணங்களைப் பகிர்ந்த திருத்தந்தை, தன் மறையுரையின் இறுதி சில நிமிடங்களில், ஆனந்த அதிர்ச்சியளிக்கும் வார்த்தைகளைச் சொன்னார்:
"அன்பு சகோதர, சகோதரிகளே, 'இரக்கத்தின் சாட்சி என்ற மறைப்பணியை, திருஅவை இவ்வுலகில் எவ்விதம் முழுமையாக நிறைவேற்றமுடியும் என்று நான் அடிக்கடி சிந்தித்துள்ளேன். எனவே, இறைவனின் இரக்கத்தை மையப்படுத்தி, சிறப்பு யூபிலி ஒன்றை அறிவிக்க முடிவு செய்துள்ளேன். இது இரக்கத்தின்  ஆண்டாக இருக்கும்.
இறைவனின் இரக்கத்தை மீண்டும் ஒருமுறை தேடிக் கண்டுபிடிக்கவும், பறைசாற்றவும் இந்த யூபிலி உதவி செய்யும் என்று நம்புகிறேன். கடவுள் எல்லாரையும் மன்னிக்கிறார்; எப்போதும் மன்னிக்கிறார் என்பதை மறக்கவேண்டாம். மன்னிப்பு கேட்பதில் நாம் ஒருபோதும் சோர்வடையக் கூடாது"
அற்புதமான இந்த வார்த்தைகளோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை இவ்வாண்டு மார்ச், 13ம் தேதியன்று அறிவித்தார்.

டிசம்பர் 8, கடந்த செவ்வாய், அமல அன்னை மரியாவின் பெருவிழாவன்று, இந்த சிறப்பு யூபிலி ஆண்டின் ஆரம்பத் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஆற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியின் இறுதியில் பேராலய முகப்பில் அமைந்துள்ள புனிதக்கதவை திறந்துவைத்தார்.
டிசம்பர் 13, இஞ்ஞாயிறன்று, உரோம் மறைமாவட்டத்தின் ஆயர் என்ற முறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மறைமாவட்டத்தின் பேராலயமான புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் புனிதக்கதவைத் திறந்துவைத்தார். இதே ஞாயிறன்று,

உலகெங்கும் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்களின் பேராலயங்களிலும், திருத்தலங்களிலும் உள்ள புனிதக்கதவுகள் திறந்துவைக்கப்பட்டன.
திறக்கப்பட்டுள்ள புனிதக் கதவுகள் வழியே, இறைவனின் இரக்கம் இவ்வுலகை நிறைக்கும் என்ற நம்பிக்கையுடன், இந்த யூபிலி ஆண்டினில் அடியெடுத்து வைப்போம். உங்கள் வானகத்தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல்...(லூக்கா.6:36) என்ற விருதுவாக்குடன் துவங்கியுள்ள, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் பொருளை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள, நம் விவிலியத் தேடல்கள் வழியே முயல்வோம். நம் தேடல்களின் முதல் படியாக, யூபிலி, புனிதக்கதவு ஆகிய எண்ணங்களில் நம் பயணத்தை அடுத்த வாரம் தொடர்வோம்.
 
 

13 December, 2015

The Extraordinary Jubilee of Mercy இரக்கத்தின் சிறப்பு யூபிலி

 Pope Francis pushes open the Holy Door on St. Peter's Basilica. December 8

Third Sunday of Advent

On December 8, the Feast of the Immaculate Conception of Our Lady, Pope Francis inaugurated the Extraordinary Jubilee of Mercy. On that day he opened the Holy Door at St Peter’s Basilica. On December 13, the III Sunday of Advent, (also known as ‘Gaudete Sunday’ – Rejoice Sunday), as the Bishop of Rome, Pope Francis opens the Holy Door at the Cathedral of the Diocese of Rome, namely, St John Lateran Basilica. On the same day, in almost all the Cathedrals and Co-cathedrals of Catholic Dioceses and at the Shrines of various countries, Holy Doors are opened. We shall spend time to reflect on this Extraordinary Jubilee Year.
On December 8, 1965, the Second Vatican Council was officially closed. To commemorate the Golden Jubilee of this great event, Pope Francis announced the Extraordinary Jubilee Year. The Holy Father spoke of the Second Vatican Council in glorious terms during the inaugural Mass on December 8. Here is an extract from the Pope’s homily:
“Today, as we pass through the Holy Door, we also want to remember another door, which fifty years ago the Fathers of the Second Vatican Council opened to the world… Before all else, the Council was an encounter.  A genuine encounter between the Church and the men and women of our time.  An encounter marked by the power of the Spirit, who impelled the Church to emerge from the shoals which for years had kept her self-enclosed so as to set out once again, with enthusiasm, on her missionary journey.  It was the resumption of a journey of encountering people where they live: in their cities and homes, in their workplaces.”

Celebrating the Golden Jubilee of the Second Vatican Council is called for. But, why call this a Jubilee of Mercy? Pope Francis talks of this connection in his Bull of Indiction – ‘Misericordiae Vultus’, (‘The Face of Mercy’) – which announced this Jubilee:
“With the Council, the Church entered a new phase of her history. The Council Fathers strongly perceived, as a true breath of the Holy Spirit, a need to talk about God to men and women of their time in a more accessible way. The walls which for too long had made the Church a kind of fortress were torn down and the time had come to proclaim the Gospel in a new way. It was a new phase of the same evangelization that had existed from the beginning. It was a fresh undertaking for all Christians to bear witness to their faith with greater enthusiasm and conviction. The Church sensed a responsibility to be a living sign of the Father’s love in the world.”
Three phrases in this paragraph caught my attention, namely: ‘To talk of God in a more accessible way’, ‘to tear down the apparent fortress called the Church’ and ‘to be a living sign of the Father’s love in the world’. I remember how, in the pre-Vatican Council days, God seemed a ‘far-away’ reality when the Priest was celebrating Mass turning his back to the people, thus telling them indirectly that God was not that easily accessible. The Second Vatican Council made this God more accessible!
Pope Francis goes on to quote the words of the Good Pope St John the XXIII who opened the Council and Blessed Paul VI who closed the Council.
“We recall the poignant words of Saint John XXIII when, opening the Council, he indicated the path to follow: ‘Now the Bride of Christ wishes to use the medicine of mercy rather than taking up arms of severity… The Catholic Church, as she holds high the torch of Catholic truth at this Ecumenical Council, wants to show herself a loving mother to all; patient, kind, moved by compassion and goodness toward her separated children’. (Opening Address)
Blessed Paul VI spoke in a similar vein at the closing of the Council: “We prefer to point out how charity has been the principal religious feature of this Council… the old story of the Good Samaritan has been the model of the spirituality of the Council… a wave of affection and admiration flowed from the Council over the modern world of humanity. Errors were condemned, indeed, because charity demanded this no less than did truth, but for individuals themselves there was only admonition, respect and love. Instead of depressing diagnoses, encouraging remedies; instead of direful predictions, messages of trust issued from the Council to the present-day world. The modern world’s values were not only respected but honoured, its efforts approved, its aspirations purified and blessed… Another point we must stress is this: all this rich teaching is channelled in one direction, the service of mankind, of every condition, in every weakness and need”. (Concluding speech)

Pope Francis has made it more than clear that the Second Vatican Council was a sincere attempt to make the merciful presence of God more alive in this world. Naturally, when we celebrate the Golden Jubilee of this Council, we need to keep that spirit alive. More than that, the world today needs to bathe in mercy.
To help humanity bathe in the Mercy of God, Holy Doors are opened all over the Catholic world this Sunday, thus allowing the mercy of God to flood the world. To allow Holy Doors to be opened all over the world, is a historic exception made by Pope Francis to make God and his Mercy more accessible to people the world over. In the Church history of the Jubilees, Holy Doors were assigned only to the Four Major Basilicas in Rome (and some shrines of exceptional importance). Hence, people had to make a pilgrimage to these four Basilicas during the Holy Year to obtain Plenary Indulgence. Now, during this Jubilee of Mercy people can obtain Plenary Indulgence by crossing the Holy Door of diocesan cathedrals as well as holy shrines. It is as if they are asked to meet God, just by crossing the street!
Going one step further, Pope Francis has indicated that those who are bed-ridden or in prison can obtain plenary indulgence by fulfilling certain duties right where they live. It is a consoling thought that God goes in search of ‘immobile people’ to impart his blessings. To make the Jubilee of Mercy more meaningful, on December 18, Friday, Pope Francis will go to the Caritas Hostel in Rome to open the Holy Door in its premises. (Diocese of Rome - Caritas Hostel on Via Marsala)

We can easily see that Pope Francis wants this Jubilee to be a world wide experience, not only for the Catholics but also for all believers. Towards the end of his Bull – Misericordiae Vultus, he has spoken about this:
There is an aspect of mercy that goes beyond the confines of the Church. It relates us to Judaism and Islam, both of which consider mercy to be one of God’s most important attributes… As we have seen, the pages of the Old Testament are steeped in mercy, because they narrate the works that the Lord performed in favour of his people at the most trying moments of their history.
Among the privileged names that Islam attributes to the Creator are “Merciful and Kind”. This invocation is often on the lips of faithful Muslims who feel themselves accompanied and sustained by mercy in their daily weakness. They too believe that no one can place a limit on divine mercy because its doors are always open.
I trust that this Jubilee year celebrating the mercy of God will foster an encounter with these religions and with other noble religious traditions; may it open us to even more fervent dialogue so that we might know and understand one another better; may it eliminate every form of closed-mindedness and disrespect, and drive out every form of violence and discrimination.

The Jubilee announcement of Pope Francis has made even pundits from other religions acknowledge appreciate his effort. Prof M. Qasim Mathar, who teaches at the Islamic University of Makassar (Indonesia), says that Pope Francis’ words reinforce Muhammad’s message. For him, ‘Misericordiae Vultus’ has a universal message, valid for all political and religious leaders in the world. For this reason, the papal statement should be “spread throughout the world” and closely vetted regardless of one’s religion, said Prof M. Qasim Mathar. (Asia News)
Mr Ram Puniyani, an Indian activist, said that the Jubilee of Mercy offered humanity a chance for peace. According to the activist, we have to praise Pope Francis’ initiative, which “must be viewed as an opportunity to move together along the path of peace through the concept of mercy. The current political situation in the world and India is full of situations in which large parts of the population are victims of intolerance because of their religious and social background,” Puniyani said.
The lay activist believes that “we have reached a point in which religion is used as a 'cover' for [someone’s] political agenda. The key aspect of religion – love for humanity – is threatened by a push towards aggression and hatred for others. This is causing a lot of violence against innocent people in India and other parts of the world”.
For Ram Puniyani, the Jubilee of Mercy is a unique opportunity to embark on a path of peace. “I hope the Jubilee is successful,” he said. “I hope that everyone, including us in India, will be enriched by this journey towards protecting dignity so that everyone’s right to live in peace can be reaffirmed.” (Asia News)

Let us hope and pray that this world surrenders itself to the healing embrace of God. Let us become the hands of God to make this embrace more of a reality. As one can see easily, for Pope Francis, Mercy is not a concept, but a person – the Person of Jesus, the Face of Father’s Mercy. 
Pope Francis prays after opening the Holy Door in St Peters Basilica –Dec 8 2015 launching the extraordinary jubilee of mercy – Credit: L’Osservatore Romano-CNA

திருவருகைக்காலம் 3ம் ஞாயிறு (மகிழும் ஞாயிறு)

டிசம்பர் 8, அமல அன்னை பெருவிழாவன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் புனிதக் கதவைத் திறந்து, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினைத் துவக்கிவைத்தார். டிசம்பர் 13, இஞ்ஞாயிறன்று, அனைத்துலக கத்தோலிக்க மறைமாவட்டங்களின் பேராலயங்களிலும், திருத்தலங்களிலும் உள்ள புனிதக் கதவுகள் திறக்கப்படுகின்றன. துவங்கியிருக்கும் இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டைக் குறித்து இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த ஞாயிறு சிந்தனையில் - வழிபாட்டில் –  முயல்வோம்.
இரண்டாம் வத்திக்கான் சங்கம், 1965ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி நிறைவுற்றது. அதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டினை திருத்தந்தை அறிவித்தார். இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கும், இரக்கத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்குப் பதில் தருவதுபோல், யூபிலி ஆண்டின் துவக்கத் திருப்பலியில் திருத்தந்தை தன் மறையுரையில் பின்வரும் கருத்தைப் பகிர்ந்துகொண்டார்:
இன்று நாம் புனிதக் கதவைக் கடந்து செல்லும்போது, மற்றொரு கதவையும் நினைவுகூருவோம். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் கலந்துகொண்ட தந்தையர், 50 ஆண்டுகளுக்கு முன், இவ்வுலகிற்குத் திறந்துவைத்த அக்கதவை நினைவில் கொள்வோம். இச்சங்கம், அனைத்திற்கும் மேலாக, ஒரு சந்திப்பின் சங்கமாக அமைந்தது. பல ஆண்டுகளாக தனக்குள்ளேயே வாழ்ந்துவந்த திருஅவை, தூய ஆவியாரின் தூண்டுதலால், வெளியேறி வந்து, மக்களுடன் மேற்கொண்ட சந்திப்பு அது. மக்களை, அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சந்திக்க திருஅவை வந்தது.

'இரக்கத்தின் முகம்' என்ற பெயரில் இந்த யூபிலி ஆண்டைக் குறித்து வெளியிட்டிருந்த அதிகாரப்பூரவமான ஆவணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்கும், இரக்கத்திற்கும் உள்ள தொடர்பை, இன்னும் ஆழமாக விளக்கியிருந்தார். திருத்தந்தை வழங்கிய விளக்கம் இதோ:
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வழியாக, திருஅவை, தன் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்தது. இறைவன், மனிதர்களுக்கு நெருக்கமானவர் என்ற பாணியில் பேச, சங்கத்தின் தந்தையர் தீர்மானித்தனர். அதேவண்ணம், மதில் சுவர்களால் சூழப்பட்டிருந்த கோட்டைபோல் தோன்றிய திருஅவை, அந்நிலையிலிருந்து வெளியேறி, புதிய வழியில் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும் என்றும் சங்கத் தந்தையர் முடிவெடுத்தனர்.

2ம் வத்திக்கான் சங்கம் துவக்கி வைத்த மாற்றங்களைக் குறித்து, தன் ஆவணத்தில் இவ்வாறு கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மாற்றங்களுக்கும், இரக்கத்திற்கும் உள்ள தொடர்பை, சங்கத்தின் துவக்கத்திலும், முடிவிலும் பேசிய இரு திருத்தந்தையரின் வார்த்தைகள் வழியே நினைவு கூர்ந்துள்ளார். 2ம் வத்திக்கான் சங்கத்தின் துவக்கத்தில், புனித 23ம் ஜான் அவர்கள் கூறிய மனதைத் தொடும் வார்த்தைகள் இதோ:
கிறிஸ்துவின் மணமகளான திருஅவை, கண்டிப்பான கரத்தை உயர்த்துவதற்குப் பதில், இரக்கத்தின் மருந்தைப் பயன்படுத்த விரும்புகிறார். பொறுமை, கனிவு, பரிவு கொண்ட அன்னையாக, அனைவருக்கும், குறிப்பாக, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற குழந்தைகளுக்கு தன்னை வெளிப்படுத்த விரும்புகிறார்
அதே பாணியில், சங்கத்தின் இறுதியில் அருளாளர் ஆறாம் பவுல் அவர்கள் பேசியது இவ்வாறு இருந்த்து:
"2ம் வத்திக்கான் சங்கத்தின் தலையாயப் பண்பாக விளங்கியது, பிறரன்பு. நல்ல சமாரியர் என்ற மனநிலையே சங்கத்தின் ஆன்மீகமாக விளங்கியது. திருஅவையும், ஏனையச் சபைகளும் ஒருவர் ஒருவர் மீது கொண்டிருக்கும் பாசமும், மதிப்பும், இச்சங்கத்தில் வெளிப்பட்டன. குற்றங்கள் கடிந்துகொள்ளப்பட்டன; ஆனால், தவறு செய்தவர் மீது, அன்பும், மதிப்பும் காட்டப்பட்டன. நம்மைச் சூழந்துள்ள நோய்களைக் குறித்து, மனம் தளரும் வண்ணம் ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பதில், மனதைத் தேற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன."

இரக்கத்தை வலியுறுத்தி இரு திருத்தந்தையர், சங்கத்தின் துவக்கத்திலும் இறுதியிலும் கூறிய வார்த்தைகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இரக்கத்தை திருஅவை தொடர்ந்து சுவைக்கவும், குறிப்பாக, வன்முறைகளாலும், வெறுப்பாலும் காயப்பட்டு, கதறியழும் மனித குலத்திற்கும், பூமிக் கோளத்திற்கும் இரக்கம், மிக, மிக அவசியமான மருந்து என்பதை மனிதர்களாகிய நாம் உணரவும், இந்த யூபிலி ஆண்டு உதவவேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுத்துள்ளார்:
2ம் வத்திக்கான் சங்கத்தின் வழியே வெளிப்பட்ட உணர்வுகளை நன்றியோடு பெற்றுக்கொள்ளும் நாம், புனிதக் கதவை, நம்பிக்கையோடு கடந்து செல்வோம். இறைமக்களை இதேவழியில் நடத்தி, இரக்கத்தின் முகத்தைத் தியானிக்க அழைத்துச் செல்வோம். யூபிலியின் துவக்கத் திருப்பலியில் வழங்கிய மறையுரையின் இறுதியிலும் இந்த எண்ணங்களை மீண்டும் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை: அருளாளர் 6ம் பவுல், சங்கத்தின் இறுதியில், சொன்ன நல்ல சமாரியரின் உணர்வு, நம்மிடமும் விளங்குவதாக. புனிதக் கதவின் வழியே நாம் கடந்து செல்லும்போது, நல்ல சமாரியரின் இரக்கம் நமதாக விளங்க, நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம்.

டிசம்பர் 13, இஞ்ஞாயிறன்று, உரோம் மறைமாவட்டத்தின் ஆயர் என்ற முறையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மறைமாவட்டத்தின் பேராலயமான புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் புனிதக் கதவைத் திறக்கிறார். இதே ஞாயிறன்று, உலகெங்கும் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்களின் பேராலயங்களிலும், திருத்தலங்களிலும் உள்ள புனிதக் கதவுகள் திறக்கப்படுகின்றன.
உலகெங்கும் இரக்கத்தின் புனிதக் கதவுகள் திறக்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்திருந்த இந்த முடிவு, திருஅவை வரலாற்றில், புதுமையான முடிவு. இதுவரை கொண்டாடப்பட்ட யூபிலி ஆண்டுகளில், உரோம் நகரில் உள்ள நான்கு பசிலிக்கா பேராலயங்களில் மட்டுமே புனிதக் கதவுகள் குறிக்கப்பட்டன. இவையன்றி, சில சிறப்புக் காரணங்களுக்காக, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளில் அமைந்துள்ள மூன்று திருத்தலங்களில் புனிதக் கதவுகள் குறிக்கப்பட்டிருந்தன. எனவே, இதுவரை கொண்டாடப்பட்ட யூபிலி ஆண்டுகளில், பரிபூரண பலனைப் பெற விழைவோர், இந்த ஏழு கோவில்களின் புனிதக் கதவுகளைத் நாடி, திருப்பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இந்த நிலையை மாற்றி, மக்கள் தாங்கள் வாழும் இடங்களுக்கருகிலேயே புனிதக் கதவுகளைக் கடந்து, இறை ஆசீரின் நிறைவான பலன்களைப் பெறமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார். இதையும் தாண்டி, பரிபூரணப் பலனைப் பெறுவதற்கு, மேலும் சில புதுமையான, அதேநேரம் அர்த்த்தமுள்ள வழிகளையும் அவர் அறிவித்துள்ளார்.
நோயினாலும், வயது முதிர்ச்சியாலும் வீட்டிலேயே அடைபட்டிருப்போர், தாங்கள் வாழும் இடங்களிலேயே, திருப்பலியில் பங்கேற்று, ஒரு சில வேண்டுதல்களை நிறைவேற்றுவதால், அவர்கள் நிறைவான பலன்களைப் பெறமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைபட்டிருப்போர், சிறையில் உள்ள சிற்றாலயங்களின் கதவுகள் வழியே நுழைவது, புனிதக் கதவின் வழி செல்வதற்கு ஈடு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இல்லங்களிலும் புனிதக் கதவுகள் உண்டு என்பதைக் காட்டும்வண்ணம், டிசம்பர் 18, வருகிற வெள்ளிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் இயங்கி வரும் காரித்தாஸ் பிறரன்பு இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் புனிதக் கதவைத் திறந்து வைக்கச் செல்கிறார் (Diocese of Rome - Caritas Hostel on Via Marsala). இப்புனித ஆண்டில், பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவோரும் நிறையாசீர் பலன்களைப் பெறமுடியும் என்று திருத்தந்தை அறிவித்துள்ளார்.

பிறரன்பு இல்லங்கள், சிறைச்சாலைகள், வயது முதிர்ந்தோர் தனியே வாழும் இல்லங்கள் அனைத்திலும் புனிதக் கதவுகள் உள்ளன, அங்கும் இறைவனின் ஆசீரை நிறைவாகப் பெறலாம் என்ற பரந்து விரிந்த உணர்வு, இந்த யூபிலி ஆண்டில் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. நாம் இறைவனைத் தேடிச் செல்வதைவிட, அவர் நம்மைத் தேடிவருவதே எப்போதும் நிகழும் உண்மை என்பதை, இந்த யூபிலி ஆண்டு நமக்கு உணர்த்தவேண்டும். இதையொத்த எண்ணங்களை, யூபிலி ஆண்டின் துவக்கத் திருப்பலியில், திருத்தந்தை தன் மறையுரையில் குறிப்பிட்டார்:
புனிதக் கதவு வழியே நாம் செல்லும்போது, நம் ஒவ்வொருவரையும் தனித் தனியே சந்திக்க வரும் இறைவனின் அளவற்ற அன்பை மீண்டும் கண்டுணரப் போகிறோம். கடவுளின் இரக்கத்தைக் குறித்து நாம் இந்த ஆண்டில் உறுதி பெறுவோம். கடவுளின் இரக்கத்தால் நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று பேசுவதற்கு முன், அவரது தீர்ப்பினால் தண்டிக்கப்படுவோம் என்று பேசும்போது, இறைவனுக்கும், அவரது இரக்கத்திற்கும் நாம் தவறிழைக்கிறோம் (புனித அகுஸ்தீன்). தீர்ப்புக்கு முன், இரக்கத்தை வைக்கவேண்டும்; இரக்கத்தின் ஒளியில்தான் இறைவனின் தீர்ப்பு எப்போதும் செயலாற்றும். அன்பு செய்யப்படுகிறவர்கள், பயம் கொள்ளக்கூடாது என்பதால், புனிதக் கதவின் வழியே செல்லும்போது, நமது பயத்தை ஒதுக்கிவிடுவோம்.

இறைவனின் இரக்கம், பரிவு, கனிவு, பாசம், அன்பு, இவை அனைத்தின் ஒட்டுமொத்த வடிவமாக நம்மைத் தேடி, நம்மில் ஒருவராக வரும் குழந்தை இயேசுவை வரவேற்க நமக்கு வழங்கப்பட்டுள்ள காலம், திருவருகைக் காலம். இறைவனைத் தேடி, ஏழு மலைகள், ஏழு கடல்கள் தாண்டிச் செல்லவேண்டாம். இறைவனும், அவரது திருமகனும் நம்மைத் தேடி ஏற்கனவே வந்து, நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்; எனவே நாம் மகிழந்து ஆர்ப்பரிக்கவேண்டும் என்பதை வலியுறுத்த, திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறை, ‘Gaudete Sunday’ அதாவது, ‘மகிழும் ஞாயிறு என்று கொண்டாடுகிறோம். இறைவனைச் சந்திப்பதால் எழும் மகிழ்வைப்பற்றி அழுத்தமாகக் கூறுகின்றன, இன்றைய வாசகங்கள்.

"இறைவன் வருகிறார். சந்திக்கத் தயாராகுங்கள்" என்று திருமுழுக்கு யோவானின் குரல் பாலைவனத்தில் ஒலித்ததாக, சென்ற வார நற்செய்தியில் வாசித்தோம். இறைவனைச் சந்திக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று மக்கள் எழுப்பியக் கேள்விகளுக்கு, "சாக்குத் துணி அணிந்து, சாம்பல் பூசி, சாட்டைகளால் உங்களையே அடித்துக்கொண்டு கடும் தவம் செய்யுங்கள்" என்ற பதிலை யோவானிடமிருந்து எதிர்பார்த்தனர், மக்கள். ஏனெனில் யோவானே அத்தகைய கடும் தவங்களைச் செய்து வந்தவர். ஆனால், யோவான் கூறிய பதில் மிக எளியது. பகிர்வு, மன்னிப்பு, இரக்கம், நீதி இவற்றைக் கடைபிடிக்கும்படி திருமுழுக்கு யோவான் வலியுறுத்தினார்.
லூக்கா நற்செய்தி 3: 10-18
 “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்
உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் வசூல் செய்யாதீர்கள்
நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்
என்ற மிக எளிதான, அடிப்படையான பதில்களே திருமுழுக்கு யோவானிடமிருந்து வந்தன. யோவானின் பதில்கள், இன்று, நமக்கும், நம்மைச் சுற்றி சமுதாயத்தின் பல நிலைகளில் இருப்பவருக்கும், குறிப்பாக, அரசுத் துறை, காவல்துறை, நீதித் துறை ஆகிய துறைகளில் பணியாற்றுவோருக்குச் சொல்லப்பட்டதுபோல் ஒலிக்கின்றன.

வாழ்வின் அடிப்படை உண்மைகள் மிக மிக எளிமையானவை. அவற்றைத் தேடி எங்கும் செல்லவேண்டாம், அவை நம்மைத் தேடி வருகின்றன, அவை நம்மைச் சுற்றியே எப்போதும் உள்ளன. நாம்தான் அவற்றைக் காணத் தவறுகிறோம். இந்த அற்புத பாடத்தைச் சொல்லும் விழாதானே, கிறிஸ்மஸ்! கடவுளைத் தேடி காடு, மலை, பாலைநிலம் என்று இஸ்ரயேல் மக்கள் அலைந்தபோதுஅவர் ஒரு பச்சிளம் குழந்தையாய் மக்கள் மடியில் வந்து அமர விரும்பினார். கடவுளை இவ்வளவு எளிமையாய் காணமுடியும், அடையமுடியும் என்று சற்றும் கற்பனை செய்து பார்க்கமுடியாத அம்மக்கள், இக்குழந்தை கடவுளாக இருக்கமுடியாது என்று தீர்மானித்து, மீண்டும் கடினமான வழிகளில் கடவுளைத் தேடிக் கொண்டிருந்தனர்.

நம் கதை என்ன? நாம் எவ்வகையான கடவுளை, எந்தெந்த இடங்களில் தேடுகிறோம்? எளிய வடிவில் நம் மத்தியில் வாழும் இறைவனைச் சந்திக்க நாம் என்னென்ன முயற்சிகள் எடுத்து வருகிறோம்? கிறிஸ்மஸ் விழாவுக்கு முன்னர், நாம் மேற்கொள்ளக்கூடிய நல்லதோர் ஆன்ம ஆய்வு இது. இந்த ஆய்வில் நாம் காணும் எளிய பதில்கள் நம்மை வியப்படையச் செய்யும். சுற்றி வளைக்காமல் சொல்லப்படும் நேரடியான, எளிதான, தெளிவான, பதில்கள் பல நேரங்களில் நம் நெற்றியில் வந்து அறையும் அடிபோல் இருக்கும். இத்தகைய எளிய பதில்கள் நம்மைப் பொறிகலங்கச் செய்யும்.
இத்தகைய எளிய உண்மைகளை நாம் துவங்கியுள்ள இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டு முழுவதும் உணர முயல்வோம். இரக்கமே இறைவன், அன்பே இறைவன் என்பது வெறும் சொற்களாக விவிலியத்தை அலங்கரிக்காமல், நம் வாழ்வில் அந்த உண்மையை உணரவும், அதை பிரதிபலிக்கவும் யூபிலி ஆண்டு நமக்கு உதவட்டும்.





06 December, 2015

Christmas… on sale… கிறிஸ்மஸ்... தள்ளுபடி விற்பனையில்...

 Prepare the Way of the Lord

Second Sunday of Advent

With a heavy heart I come to this Sunday reflection. The havoc caused by non-stop rains and floods in Tamil Nadu, especially in Chennai, is weighing heavy on my mind and heart. When natural disasters happen around the world – even in other parts of India – they have remained more of a news item to me. But, when it happens closer home, as in the case of Chennai, I feel helpless and sad.
The tragedy that has engulfed Chennai is as much human-made as it is a natural disaster. Many lakes in and around Chennai, dried up for many years due to lack of rain, have been sold out as plots for buildings. The storm drains have been blocked by garbage and nobody cared. All the parties that have ruled Tamil Nadu… well, it is the same old story and hence let us not waste our thoughts and words on them.
Every time a natural disaster strikes a country, a city, the tragic effect of nature’s fury is multiplied many times due to the crooked manipulations of the wealthy, with the connivance of the politicians. The tragedy of Chennai is not unique. When rains and floods lashed Mumbai in 2005, and when floods engulfed Jammu Kashmir last year, the same old questions of corruption, greed of the rich and the politicians were raised. Even the global question of Climate change is very much connected with the insatiable greed of the powerful people.
All that we can do right now is… PRAY… Pray that the world leaders gathered in Paris will have enough guts and conscience to take the necessary decisions to save our planet, and, more especially the poor who, time after time bear the brunt of all the natural disasters, for no fault of theirs. We also raise our hearts to God for the people of Tamil Nadu and Chennai. We beg of God to touch the hearts and minds of politicians so that they listen to their conscience, long muted by crimes.

Last week we began our Advent reflections on a busy street with lots of Christmas shoppers. We met a young mother who was busy with her last minute shopping. She did not have time… time even to look at baby Jesus, pointed out to her by her son. Today we are back again in a shopping mall. Here is a story shared by Father Joseph Pellegrino in his homily for the 2nd Sunday of Advent.
I heard a story about a man in one of those high price shopping malls, the Galleria.  He caused quite a commotion among those doing their Christmas shopping.  He would sit near a beautifully decorated fountain near the mall's food court and would talk to people who would relax on the benches next to him. He wasn't offensive, not really.  In fact, there was a certain kindness and sincerity about him that drew people to him.
But he was not good for business. He would ask people why they spent so much money for Christmas, and why they allowed themselves to become so obsessed and stressed over this tinselled holiday. Sometimes he would tease, "We like our Christmas with a lot of sugar on it, don't we?" Then he would say, "Christmas is about hope and love, isn't it?  The best gifts we can give is to give kindness and compassion to each other.  Why don't you forgive or reconcile with family or friends you've lost over the years?  The Spirit of the Christ child should embrace the entire year, not just Christmas."
Many of the people who listened to him would nod in agreement.  Some decided to quit shopping for the time being and go home to be with their families. Others went and bought an extra toy or some clothes for charity.  Some even left the mall to find a quiet place for a few moments of prayer.
Soon, word got out to the store managers about this man.  They had security escort him from the premises.  They realized that he wasn't really hurting anyone.  But he had to go, they said.  He was ruining everyone's Christmas.

When I read the last line of this story, I was struck by what the managers said… They said that the man was ‘ruining everyone’s Christmas’. Who is this ‘everyone’? The managers could have spoken for themselves saying that the man was ruining ‘their’ Christmas. Instead, they spoke for all of us… They spoke of everyone’s Christmas. This is a well cultivated strategy of the business people. They would speak for us… think for us… Thus, they would try to define for us what Christmas is… We can easily pick up the false façade they were putting up to hide their selfish interest. When we think of the man, we can also sense that he had no selfish motives to question the customers coming to the mall. I felt as if this man was the modern ‘avatar’ of John the Baptist.

If John the Baptist had come to our shopping malls, he would have raised similar questions. Being the firebrand that he was, he would have gone one step ahead to question the motives of the managers too. His confrontation would have been more dramatic… More about John the Baptist, in the 3rd week of Advent!
For the time being, let’s turn our attention to the managers. Although the hidden agenda of these managers do not deserve our attention, we need to learn a lesson or two from their dedication in making every festival count.

For the business people, Christmas arrived in October… Yes, most of the business centres in Europe began celebrating Christmas in October. In the U.S., it was soon after the Thanksgiving Day. In India, soon after Deepavali. Rain or shine, floods or draught, their business plans do not change much. For them, extending festivities is a sure way to make more money. The list of official festivals released by the government and other religious institutions are not enough for them. They would surely add some more… Mother’s Day, Father’s Day, Valentine’s Day…Take out your calculators… For the business people every day offers a chance to celebrate. Given a chance, they would be happy to have even 400 days per year and all of them… festival days! The more, the merrier…

We can surely learn a lesson or two from the business people. Lesson number one:  If they can extend the festival season, if they can invent festival days for their own end, we can as well convert our dull dreary days into days of celebration. It just requires a change in perspective, a change in attitude and a change of heart - a heart that is willing to celebrate even the small miracles of daily life!
Lesson number two: I am sure we have heard of brainstorming sessions. Business people make use of this more often. They spend lots of time and energy in these sessions to come up with their campaigns for the festival. This session also talks of innovations. No two festivals, no two seasons can be the same. Every festival, every season should be unique, special.

How I wish that all of us sit down to do some brainstorming before every festival we celebrate. Such brainstorming will help us celebrate these festivals in unique, special, meaningful ways. Probably we don’t have the time for such sessions. We need to buy things, decorate the house, entertain guests… Hence, no time for innovations… just take the beaten track. As long as we take this safe route, the business world will win. If we sit down and look at these festivals from different perspectives, we can surely bring more meaning to these special days, as the man in the mall was trying to do.
Whether we like it or not, the business world, especially the advertising world imposes itself on us day after day with its messages – the ‘what’ and ‘how’ of every festival. Instead of accepting such impositions passively, we can approach these festivals on our terms. We can surely make every day of the year special… every day can become Christmas. Christmas can start in October… no, no, even earlier.

On December 8 – the Feast of the Immaculate Conception of Our Lady – we begin the Extraordinary Jubilee of Mercy. We pray that we become ‘merciful as the Father’, so that through us God can bring more tenderness and healing into the world torn to pieces by violence and hatred.

Christmas Sale Tags on christmas signs. Illustration


திருவருகைக்காலம் 2ம் ஞாயிறு

கனத்த இதயங்களுடன் கடவுளை நாடி வந்துள்ளோம். கடந்த இருபது நாட்களுக்கும் மேலாகப் பெய்துவரும் கன மழையாலும், வெள்ளத்தாலும் தமிழக மக்கள் அடைந்துவரும் துயரங்கள், குறிப்பாக, சென்னை வாழ் மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் நம்மை நிலைகுலையச் செய்துள்ளன. இத்துயரங்களுக்குக் காரணம், இயற்கையின் சீற்றம் என்று ஒரு பக்கம் சொன்னாலும், மனிதர்களின் மனசாட்சியற்ற சுயநலமும், பேராசையும், இத்துன்பத்தை பல மடங்காகக் கூட்டியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. ஏரிகள் வீட்டு மனைகளாகவும், மழை வடிகால் பாதைகள், குப்பை மேடுகளாகவும் மாறியதே, சென்னை பெருநகர் மக்களின் துன்பங்களுக்கு முக்கியக் காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஒவ்வொரு முறையும் இயற்கைப் பேரிடர் மனிதர்களைச் சந்திக்கும்போது, அதன் விளைவுகளை இன்னும் கூட்டி, பெரும் ஆபத்தாக மாற்றுவது, மனிதரின் பேராசையே என்ற கசப்பான உண்மையும் உணரப்படுகிறது. சென்னை மட்டுமல்ல, 2005ம் ஆண்டு மும்பை நகரமும், 2014ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமும் வெள்ளத்தில் மூழ்கியபோது, இதையொத்த உண்மைகள் வெளிவந்தன. இப்போது, பாரிஸ் மாநகரில், உலகத் தலைவர்கள் கூடி, காலநிலை மாற்றம் குறித்து பேசும்போதும், மனிதர்களின் பேராசையால் விளைந்துள்ள இயற்கைச் சீரழிவு என்ற உண்மை, நம்மை முகத்தில் அறைகிறது.
சுயநலமும், பேராசையும் மனித சமுதாயத்தில் புரையோடிப்போன புண்ணாக மாறி, உள்ளவர், இல்லாதவர் என்ற பாகுபாட்டை வெகு ஆழமாகப் பதித்துவிட்டன. மனிதர்களின் பேராசையால் ஏனைய மனிதர்கள் துன்புறுவது போதாதென்று, இப்போது, பூமிக்கோளமும், துன்புறுகின்றது. மனிதரின் கட்டுக்கடங்காத பேராசை வெறியால், காலநிலையில் ஆபத்தான அளவு வெப்பம் உயர்ந்து, அண்மையக் காலங்களில், இயற்கைப் பேரிடர்கள், அடிக்கடி, அதிக சக்தியுடன் நிகழ்கின்றன. இந்தப் பேரிடர்களில் தங்கள் வாழ்வையும், வாழ்வாதரங்களையும் மீண்டும், மீண்டும் இழப்பது, சுயநலச் சுறாமீன்கள் அல்ல, வறியோரே!
காலநிலை உச்சி மாநாட்டில், மக்கள் நலனை மையப்படுத்திய துணிவான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று மன்றாடுவோம். சென்னையையும், தமிழ்நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ள மழையும், வெள்ளமும் ஓயவேண்டும் என்று இறைவனை வேண்டும் அதே நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில், நம் அரசியல் தலைவர்களின் மனசாட்சியை இறைவன் தட்டி எழுப்பவேண்டும் என்றும் இறைஞ்சுவோம்.

மனசாட்சியற்ற தலைவர்களும், பேராசை பிடித்த செல்வந்தர்களும் இயற்கைச் சீரழிவுகளுக்கும், சமுதாய அவலங்களுக்கும் காரணம் என்று நாம் குற்றம் சுமத்திவிட்டு ஒதுங்கிவிட முடியாது. எப்போதெல்லாம் நம் சுட்டுவிரல் அடுத்தவரை நோக்கி நீள்கிறதோ, அப்போதெல்லாம் மற்ற விரல்கள் நம்மையும் குத்திக்காட்டுகின்றன என்பதை உணர வேண்டும். இன்றையச் சமுதாயச் சீரழிவுக்கு நாமும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறோம் என்பதை, பணிவுடன் ஏற்றுக்கொண்டு, நம் வாழ்வுப் பாதையைச் சீராக்க முயல்வோம்.. பாதையைச் செம்மையாக்குங்கள், மேடுபள்ளங்களைச் சமமாக்குங்கள், என்ற எச்சரிக்கை இன்றைய நற்செய்தியில் ஒலிக்கிறது. நம்மில் ஒருவராகப் பிறக்கவரும் இறைவனை, தகுந்த முறையில் வரவேற்க நமக்கு வழங்கப்பட்டுள்ள அருள் நிறை காலம், திருவருகைக் காலம்.

கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாட நாம் எடுக்கும் முயற்சிகளைவிட, பல நூறு மடங்கு அதிக முயற்சிகள் எடுத்துவருகிறது, வர்த்தக உலகம். கிறிஸ்மஸ் விழாவுக்கென்று, கடைவீதியில், பொருள்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருந்த ஓர் இளம் தாய் நம் திருவருகைக் காலச் சிந்தனைகளை ஆரம்பித்து வைத்தார். அவரது ஐந்து வயது மகன், ஒரு கடையில் அலங்காரமாய் வைக்கப்பட்டிருந்த குழந்தை இயேசுவைக் காண அம்மாவை அழைத்தபோது, அந்த இளம் தாய், "அதுக்கெல்லாம் இப்ப நேரமில்ல" என்று சொன்னது நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நாம் சிந்தித்தோம். திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று, நாம் மீண்டும் கடைவீதிக்கு வந்துள்ளோம். 'நேரமில்ல' என்று சென்ற வாரம் சிந்தித்ததுபோல, 'நேரம் வந்துவிட்டது' என்று இன்று சிந்திக்க வந்துள்ளோம்.

கிறிஸ்மஸ் அலங்காரங்களுடன் மின்னும் ஒரு கடைவீதியில் நாம் நடந்து செல்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். அங்கே... "இறுதிநாள் நெருங்கியுள்ளது ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்" என்ற குரல் ஒரு பக்கம் ஒலிக்கிறது. "இன்றே இறுதிநாள்... தள்ளுபடி விற்பனையில் பொருள்களை அள்ளிச் செல்லுங்கள்" என்று வேறொரு குரல் மறுபக்கம் ஒலிக்கிறது. இவ்விரு குரல்களுக்கும் போட்டி வந்தால், எந்தக் குரல் வெல்லும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். தள்ளுபடி விற்பனையைப்பற்றி குரல் வரும் திசை நோக்கி, முட்டி, மோதிக்கொண்டு, கூட்டம் அலைமோதும்.

பெருநகரங்களில், கடைவீதிகள், அடுக்குமாடி கட்டிடங்களாய் மாறி உள்ளன. இக்கடைவீதிகளுக்கு Shopping Mall என்று பெயரிட்டிருக்கிறோம். அமெரிக்காவின் Shopping Mall ஒன்றில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி இது:
அந்த Mallஇல் கிறிஸ்மஸ் வியாபாரம் வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்தது. பொருட்கள் வாங்கிக் களைத்துப் போனவர்கள் இளைப்பாறுவதற்கு அந்த Mallன் ஒரு பகுதியில் தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தில் அமர்ந்திருந்த ஒருவர், பொருள்கள் வாங்கியவர்களிடமும், அல்லது, வாங்க வந்திருப்பவர்களிடமும் வலியச்சென்று பேச ஆரம்பித்தார். அவர் மிகவும் கண்ணியமாக, கனிவாகப் பேசியதால், அவர் சொன்னதை மக்கள் கேட்டனர். அவர் அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் ஒரு சில கேள்விகள் மட்டும் கேட்டார்: "ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? கிறிஸ்மசுக்கு இத்தனை பரிசுகள் வாங்கத்தான் வேண்டுமா? நீங்கள் செலவு செய்யும் பணத்தில் பாதியை ஏழைகளோடு பகிர்ந்துகொண்டால், உங்கள் கிறிஸ்மஸ் இன்னும் மகிழ்வாக இருக்காதா? நீங்கள் பல நாட்களாக மன்னிக்க முடியாமல் கஷ்டப்படும் ஒருவரைத் தேடிச்சென்று, அவருடன் ஒப்புரவனால், அதைவிட சிறந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இருக்க முடியுமா? இந்தக் கடைகளில் காணப்படும் கிறிஸ்மஸ் மகிழ்ச்சி உங்களுக்குச் செயற்கையாக தெரியவில்லையா?" என்று அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையில் கேள்விகளை எழுப்பி வந்தார்.
அவர் சொன்னதில் இருந்த உண்மைகளை உணர்ந்த பலரும், தலையசைத்தனர். பொருள்கள் வாங்க வந்த ஒரு சிலர் மீண்டும் திரும்பிச்சென்றனர். வேறு சிலர் தாங்கள் புதுப்பிக்க விரும்பிய உறவுகளுக்காக பரிசுப் பொருள்கள் வாங்கிச்சென்றனர். இன்னும் ஒரு சிலர் அந்த Mallஇல் நேரத்தைச் செலவிடுவதற்குப் பதில், அருகிலிருந்த ஒரு கோவிலுக்குச் சென்று அமைதியாக நேரத்தைச் செலவிட்டனர்.

கடைகளின் உரிமையாளர்கள் இந்த மனிதரைப் பற்றிக் கேள்விப்பட்டனர். Mallன் காவலாளிகளிடம் சொல்லி, அந்த மனிதர் மீண்டும் Mallக்குள் நுழையாதவாறு தடுத்தனர். அந்த மனிதரை ஏன் அவர்கள் தடைசெய்தனர் என்ற கேள்வி எழுந்தபோது, "அவர் நம் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்" என்று பதில் சொன்னார்கள். "அவர் எங்கள் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்தார்" என்று அந்த வியாபாரிகள் தங்களைப்பற்றி மட்டும் சொல்லாமல், மக்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு, "அவர் நம் கிறிஸ்மஸ் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்" என்று நமக்கும் சேர்ந்து பதில் சொன்னார்கள். இது, அவர்கள் படித்து, பழகி வைத்துள்ள வியாபாரத் தந்திரம். நமக்கும் சேர்த்து சிந்திப்பது, முடிவெடுப்பது என்று பல வழிகளிலும் வியாபாரிகள் நம்மை ஒரு மாய வலையில் கட்டிப்போட்டு வைத்துள்ளனர். வியாபாரிகள் விரித்த வலைகளில் மக்கள் சிக்காமல் இருக்க, Mallஇல் அமர்ந்து கேள்விகள் எழுப்பிய அவர், கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை கெடுத்தாரா, அல்லது அந்த மகிழ்ச்சிக்குப் புதியத் தெளிவுகளை தந்தாரா என்பது நாம் சிந்திக்கவேண்டிய கேள்வி.
கிறிஸ்மஸ் மகிழ்ச்சி என்றால் என்ன, இவ்விழாவை எவ்விதம் கொண்டாடுவது என்ற கேள்விகளுக்கு வியாபாரிகள் 'ரெடிமேட்' பதில்களை வைத்திருக்கின்றனர். அந்தப் பதில்களை, எண்ணங்களை நம்மீது திணிக்க முயன்று, வெற்றியும் பெறுகின்றனர். வியாபாரிகள் தயாரித்து வைத்திருக்கும் 'ரெடிமேட்' எண்ணங்களுக்குப் பின்னணியில் அவர்களது சுயநலம் ஒளிந்திருப்பதை எளிதில் உணரலாம். ஆனால், Mallக்கு வந்த மக்களிடம் கேள்விகள் எழுப்பிய மனிதரோ, எவ்வித சுயநலமும் இல்லாமல், கிறிஸ்மஸ் விழா இன்னும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடப்படவேண்டும் என்ற எண்ணத்தில், தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். Shopping Mall என்ற மாய வலையில் சிக்கியிருந்த மனிதர்களை விழித்தெழச் செய்த அந்த மனிதர், பல வழிகளில் திருமுழுக்கு யோவானை நமக்கு நினைவுபடுத்துகிறார்.

திருமுழுக்கு யோவான் நம் நகரங்களில் உள்ள கடைவீதிகளுக்கு இன்று வந்தால், மனதைப் பாதிக்கும் கேள்விகள் எழுப்பியிருப்பார். திருமுழுக்கு யோவான், ஒரு தீப்பிழம்பாக இருந்ததால், இன்னும் ஒரு படி மேலேச் சென்று, அந்த வியாபாரிகளையும் தங்கள் வழியிலிருந்து மாறச்சொல்லி சவால் விட்டிருப்பார்.
சுயநலக் கலப்படம் எதுவும் இல்லாமல், அந்த Mall மனிதரோ, அல்லது திருமுழுக்கு யோவானோ கிறிஸ்மஸ் என்றால் என்ன, அதை எப்படிக் கொண்டாடுவது என்று சொல்லித்தருவதைக் கேட்கப் போகிறோமா? அல்லது, சுயநல இலாபங்களுக்காக நமது விழாக்கள் மீது வேறுபட்ட அர்த்தங்களைத் திணிக்கும் வியாபாரிகள் சொல்லித் தருவதைக் கேட்கப் போகிறோமா? "இறுதிநாள் நெருங்கியுள்ளது ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்." என்று திருமுழுக்கு யோவான் எழுப்பும் குரலைக் கேட்கப் போகிறோமா? அல்லது, "இன்றே கடைசி நாள்... தள்ளுபடி விற்பனையில் பொருள்களை அள்ளிச் செல்லுங்கள்." என்று வியாபாரிகள் எழுப்பும் குரலைக் கேட்கப் போகிறோமா? 

வியாபாரிகளும், விளம்பரதாரர்களும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் தயாரிக்கும் ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கு, நாம் ஆன்மீக வழிகளில் திருநாட்களுக்கு தயாரிக்கும் ஆர்வமாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆன்மீக உலகம் கூறும் தயாரிப்பு என்ன? நாம் எதிர்நோக்கியிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு என்ன வகையில் தயாரிக்கலாம்? இந்தக் கேள்விகளுக்கு இன்றைய நற்செய்தி வரிகள் விடைபகர்கின்றன. இறைவாக்கினர் எசாயா இன்றைய நற்செய்தியின் வழியாக நம் அனைவருக்கும் விடுக்கும் அறைகூவல் இதுதான்:
லூக்கா நற்செய்தி 3: 4-6
பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.

தற்பெருமையில் பூரித்துப்போய், தலைகனம் மிகுந்து வாழும்போது உள்ளத்தில் மலைகள் தோன்றும். துன்பத்தைக் கண்டு நொறுங்கிப் போகும்போது, பள்ளங்கள்பள்ளத்தாக்குகள் உருவாகும். இந்த மலைகளைத் தாழ்த்தி, பள்ளங்களை நிரப்புவதற்குத் தேவையான ஆயுதங்கள் எங்கே? தேடி எங்கும் போகவேண்டாம். அவை நம்மிடமே உள்ளன. ஒருவேளை, அவற்றை அதிகம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டதால், தூசி படிந்து, துரு பிடித்துப் போயிருக்கலாம். அந்த ஆயுதங்கள் எவை? தாழ்ச்சி, நம்பிக்கை... தாழ்ச்சி, நம்பிக்கை இவற்றைக்கொண்டு மனதை பண்படுத்துவோம். இறைவன் இந்தப் பாதையில் வருவார். நம் மனதில் தங்குவார்.
இறுதியாக, டிசம்பர் 8, வருகிற செவ்வாய், அமல அன்னைத் திருநாளன்று, நாம் இரக்கத்தின் யூபிலி ஆண்டினைத் துவங்குகிறோம். அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பேதுரு பசிலிக்காவில் புனிதக் கதவுகளைத் திறக்கும்போது, இறை பிரசன்னத்திலிருந்து வெள்ளமாகப் பெருகிவரும் இரக்கம், இரத்தக்கறை படிந்த இவ்வுலகைக் கழுவவேண்டும் என்று உருக்கமாக மன்றாடுவோம். இரக்கத்தின் யூபிலி ஆண்டு முழுவதும், மனிதக் குடும்பம், அன்பு, பரிவு ஆகிய உணர்வுகளால் மென்மையடைந்துமேன்மையடைய வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.