28 March, 2010

Palm Sunday Tornado… சூறாவளியாய் வரும் குருத்து ஞாயிறு...


“Palm Sunday Tornado 1920” – I could not have asked for a better starting point for my homily today. Tornados, I am told, are a common feature in the US especially in the months of March, April going up to June or even July. What pulled me to this bit of information from Wikipedia was not only that this occurred on a Palm Sunday, but also that this Palm Sunday happened to fall on March 28. Here is the excerpt from Wikipedia:
The Palm Sunday tornado outbreak of 1920 was an outbreak of at least 38 significant tornadoes across the Midwest and Deep South states on March 28, 1920. The tornadoes left over 380+ dead, and at least 1,215 injured. Many communities and farmers alike were caught off-guard. Most of the fatalities occurred in Georgia, Indiana, and Ohio, while the other states had lesser amounts.

Here is another excerpt from the same article that mentions the discrimination prevalent in those days. I just wanted to mention this part too, although I won’t delve deeper into this.
According to Thomas P. Grazulis, head of the Tornado Project, the death toll in the southern states on Palm Sunday 1920, could have easily been much higher, since the deaths of non-whites were omitted as a matter of official state protocol, even when it came to fatalities from natural disasters.

Tornados must have occurred on Palm Sunday on different occasions. There is also a mention of a tornado in 1965 on April 11, which was a Palm Sunday. Palm Sunday and Tornado – a combination that can give us food for thought. I want to reflect on the tornado that swept over Jerusalem on the very first Palm Sunday. Only very few events are recorded in all the four Gospels and the Palm Sunday event is one of them (Mt. 21: 1-11; Mk.11: 1-11; Lk. 19: 28-38; Jn. 12: 12-16). Most of the people in Jerusalem, especially those in power, were caught off-guard by this ‘intruder’ called Jesus.

Jesus’ entry into Jerusalem must have turned the lives of the religious leaders and the Roman officials topsy-turvy. As if this was not enough, Jesus entered the very fortress of the religious leaders – namely, the Temple – and began to put things in order. Put things in order? Well, depends on which perspective one takes. For those in power, things were thrown completely out of gear; but for Jesus and for those who believed in His ways, this was a way to set things straight. This is typical of a tornado… uprooting, turning things topsy-turvy. A tornado is possibly a call to begin again with fresh energy!

With the Palm Sunday begins the Holy Week. Most of the events that took place during this week cannot be easily called holy. What is so holy about the betrayal of a friend, the denial of another friend, the mock trial, the condemnation of the innocent and the brutal violence unleashed on Jesus… none of them would hardly come close to the definition of holiness. But, for Jesus definitions are there only to be ‘redefined’. By submitting Himself to all the events of the Holy Week, he wanted to redefine God – a God who was willing to suffer in order to define love. He had already defined love as “Greater love has no one than this, that someone lay down his life for his friends.” (John. 15: 13) If human love can go to the extent of laying down one’s life for friends, then God’s love can go further… to lay down His life for all, including the ones who were crucifying Him. Such a God would normally be unthinkable unless otherwise one is willing to redefine God. Jesus did that. He had also redefined holiness and made it very clear that in spite of all the events that took place during this week, one could call this week Holy since these events resulted in the Supreme Sacrifice.

The first Palm Sunday, again, gave a new meaning to the symbol of a palm. Palm signified victory for the Romans, peace and prosperity for the Jews. Jesus brought all of them into Jerusalem and into the world, of course with a twist. He had redefined what was known as victory, peace and prosperity. Victory is almost always associated with defeat. Only if someone is defeated, the other person is declared victorious. In war, victory comes via the loss of lives. In Jesus’ victory no one is defeated. Everyone wins. No one loses life… all of us gain it, courtesy Jesus! This King is surely very different. Here is the testimony of another king:

“I know men; and I tell you that Jesus Christ is not a man… Alexander, Caesar, Charlemagne and I myself have founded great empires; but upon what did these creations of our genius depend? Upon force. Jesus alone founded His empire upon love, and to this very day millions will die for Him. . . . I think I understand something of human nature; and I tell you, all these were men, and I am a man; none else is like Him: Jesus Christ was more than a man…” (Napoleon Bonaparte: 'Emperor' to EMPEROR)

One final thought. The entry of Jesus into Jerusalem was already dreamt by
Zechariah 9: 9-10.
Rejoice greatly, O Daughter of Zion! Shout, Daughter of Jerusalem!
See, your king comes to you, righteous and having salvation,
gentle and riding on a donkey, on a colt, the foal of a donkey.

This dream is further expanded to include the mission of this king:
I will take away the chariots from Ephraim and the war-horses from Jerusalem, and the battle bow will be broken. He will proclaim peace to the nations. His rule will extend from sea to sea and from the River to the ends of the earth.

Isn’t this our dream too? A world without war? A world where there will be more and more disarmament to the point of no arms? If only Jesus Christ, the Palm Sunday Tornado, could sweep the whole world off its feet with thoughts of peace…

Dear Friends,Let me invite all of you to listen to this homily on Vatican Radio (Tamil Service). Kindly visit www.vaticanradio.org and keep in touch with us. Thank you.


போன வருடம், இதே நாள்... சரியாக பத்து வருடங்களுக்கு முன்னால், இதே நாள்... என்றெல்லாம் ஆரம்பித்து வாழ்வில் நடந்த சம்பவங்களை அசை போடுகிறோம்.
அறுபது வருடங்களுக்கு முன்னால், இதே நாள், இதே கிழமை இதே நேரம் என்று வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி பேசும்போது, நாள், கிழமை, நேரம் இவைகளெல்லாம் பொருந்தி வருவதை சுட்டிக் காட்டும் நமது கூற்றுகளில் அழுத்தம் அதிகம் இருக்கும். Numerology, நாள், நட்சத்திரம் இவைகளில் பிடிப்பு உள்ளவர்களுக்கு இதுபோன்ற பேச்சுக்கள் இன்னும் ஆழமாக, அர்த்தமுள்ளதாகத் தெரியும். எனக்கு இவைகளில் ஈடுபாடு, நம்பிக்கை இல்லை.
இன்று நாம் கொண்டாடும் குருத்து ஞாயிறு பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக ஒரு வரலாற்றுப் பதிவைப் பார்த்தேன். அந்தத் தலைப்பு என் எண்ணங்களை ஆரம்பிப்பதற்கு உதவியது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மற்றபடி நாள், நட்சத்திரம் பற்றி பேசுவதாக எண்ண வேண்டாம்.
தற்செயலாக நான் பார்த்த அந்த வரலாற்றுப் பதிவின் தலைப்பு: The Palm Sunday Tornado 1920 அதாவது, குருத்து ஞாயிறு சூறாவளி 1920. சரியாக 90 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவின் Georgia, Indiana, Ohio பகுதிகளில் குருத்து ஞாயிறன்று சூறாவளிக் காற்று, மழை, புயல் இவைகளால் ஏறக்குறைய 400 பேர் இறந்தனர். 1200 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் இன்னொரு பொருத்தம் என்னவென்றால், 1920ஆம் ஆண்டு குருத்து ஞாயிறு வந்த தேதி - மார்ச் 28. இதேபோல், 1965 ஆம் ஆண்டும் குருத்து ஞாயிறன்று, ஆனால் வித்தியாசமான ஒரு தேதியில் (ஏப்ரல் 11), சூறாவளி வீசியது என்று சொல்லப்பட்டுள்ளது.
எண்கள், நாள், நட்சத்திரம் பற்றிய எண்ணங்களை ஒதுக்கிவிட்டு, நான் சொல்ல வந்த மையக் கருத்திற்கு வருவோம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் சூறாவளிகள் ஏற்படுவது அமெரிக்காவின் வானிலை அறிக்கைகளில் அடிக்கடி வரும் ஒரு செய்திதான். சூறாவளி வரும் மாதங்களில் தான் குருத்து ஞாயிறும் வருகிறது. குருத்து ஞாயிறு... சூறாவளி... இவை இரண்டையும் இணைத்து சிந்திப்பதற்குத்தான் இந்த வரலாற்றுப் பதிவுகளைப் பற்றி பேசினேன்.

முதல் நூற்றாண்டில், முதல் குருத்து ஞாயிறு நடந்த போதும் சூறாவளி ஒன்று எருசலேம் நகரைத் தாக்கியது. சூறாவளி என்ன செய்யும்? சுழற்றி அடிக்கும்; மரங்களை, வீடுகளை வேரோடு சாய்க்கும்; பொதுவில் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போடும்.
இந்தக் கோணத்தில் பார்க்கும் போது, முதல் குருத்து ஞாயிறு நிகழ்வுகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றின. வழக்கமாய், எருசலேமில் நடத்தப்படும் வெற்றி ஊர்வலங்கள் அரசு அதிகாரிகளால், அல்லது மதத் தலைவர்களால் ஏற்பாடு செய்யப்படும். குருத்து ஞாயிறன்று நடந்த இந்த ஊர்வலமோ மக்களால் எதேச்சையாக, மானசீகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. “ஏற்பாடு செய்யப்பட்டது” என்பதை விட “தானாகவே ஏற்பட்டது” என்று சொல்வதே மிகவும் பொருந்தும். திருவிழா நாட்களில் எருசலேமில் இப்படி தானாகவே ஏற்படும் கூட்டங்கள், கொண்டாட்டங்கள் மதத் தலைவர்களுக்கும், ரோமைய அரசுக்கும் பலவித பயங்களை உருவாக்கும். இயேசுவைச் சுற்றி எழுந்த இந்த ஊர்வலமும் அதிகார வர்க்கத்தை ஆட்டிப் படைத்திருக்க வேண்டும். அவர்களது உலகத்தைத் தலைகீழாக்கியிருக்க வேண்டும். இந்த நிகழ்வைக் கூறும் நற்செய்தி இதோ:

மத்தேயு நற்செய்தி 21: 6-11
சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், “தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, “இவர் யார்?” என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், “இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று பதிலளித்தனர்.

இயேசு தன் பணி வாழ்வை ஆரம்பித்ததிலிருந்து, யூத மதத் தலைவர்களுக்கு எல்லாமே தலைகீழாக மாறியது போல் இருந்தது. இந்தத் தலைகீழ் மாற்றங்களின் சிகரம் இந்த குருத்து ஞாயிறு. இதைத் தொடர்ந்து, இயேசு அந்த மத குருக்களின் அரணாக இருந்த எருசலேம் கோவிலில் நுழைந்து, அங்கிருந்த அமைப்பையும் தலை கீழாக்கினார். எனவே, இந்த குருத்து ஞாயிறு அதிகார அமைப்புகளைப் பல வழிகளிலும் புரட்டிப் போட்ட ஒரு சூறாவளிதானே!

இந்த குருத்து ஞாயிறு துவங்கி, உயிர்ப்பு ஞாயிறு வரை உள்ள இந்த எழுநாட்களையும் தாய் திருச்சபை புனித வாரம் என்று அழைக்கிறது. வருடத்தின் 52 வாரங்களில் இந்த வாரத்தை மட்டும் ஏன் புனித வாரம் என்று அழைக்க வேண்டும்? இயேசுவின் உலக வாழ்வின் இறுதி நாட்களை நாம் நினைவு கூறுகிறோமே. அதனால்... அந்த இறுதி நாட்களில் நடந்தவைகள் பலவற்றில் புனிதம் எதுவும் காணப்படவில்லையே! நம்பிக்கைக்குரிய நண்பர் காட்டிக் கொடுத்தார். மற்றொரு நண்பர் மறுதலித்தார். மற்ற நண்பர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். மனசாட்சி விலை போனது. பொய்சாட்சிகள் சொல்லப்பட்டன. வழக்கு என்ற பெயரில் அரசியல் சதுரங்கம் விளையாடப்பட்டது. இயேசு என்ற இளைஞன் நல்லவர், குற்றமற்றவர் என்று தெரிந்தும் தவறாகத் தீர்ப்பு சொல்லப்பட்டது. இறுதியில் அந்த இளைஞனை அடித்து, நொறுக்கி ஒரு கந்தல் துணி போல் சிலுவையில் தொங்க விட்டனர்.
நான் இப்போது பட்டியலிட்டவைகளில் புனிதம் எங்காவது தெரிந்ததா? புனிதம் என்பதற்கே வேறொரு இலக்கணம் எழுத வேண்டியுள்ளதே. ஆம், வேறொரு இலக்கணம் தான் எழுதப்பட்டது. கடவுள் என்ற உண்மைக்கே மாற்று இலக்கணம் தந்தவர் இயேசு. கடவுள் துன்பப்படக் கூடியவர்தான். அதுவும் அன்புக்காக எந்த துன்பத்தையும் எவ்வளவு துன்பத்தையும் ஏற்பவரே நம் கடவுள் என்று கடவுளைப் பற்றி வித்தியாசமான ஓர் இலக்கணத்தை இயேசு அந்தச் சிலுவையில் சொன்னாரே, அதேபோல் இந்த வாரம் இயேசுவின் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்வுகளும் புனிதத்தை இந்த பூமிக்குக் கொண்டு வந்த கால்வாய்கள் என்று நம்மை உணரவைத்தார் இயேசு. எனவே, இது புனித வாரம்தான்.
இயேசு என்ற சூறாவளி எப்படி அதிகார வர்க்கத்தைப் புரட்டிப் போட்டதோ, அதேபோல் புனிதம், கடவுள் என்ற இலக்கணங்களையும் புரட்டிப் போட்டது. வேறு பல தலைகீழ் மாற்றங்களையும் இந்த நாளில், இந்த வாரத்தில் நாம் கற்றுக் கொள்ள முடியும். கற்றுக்கொள்ள முயல்வோம்.

போட்டிகளில், போரில் வெற்றி பெற்று வரும் வீரர்களுக்கு குருத்து வழங்குவது ரோமையர்களின் பழக்கம். யூதர்கள் மத்தியிலோ குருத்து சமாதானத்தை, நிறைவான வளத்தைக் குறிக்கும் ஒரு அடையாளம். வெற்றி, அமைதி, நிறைவு எல்லாவற்றையும் குறிக்கும் ஓர் உருவமாக இயேசு எருசலேமில் நுழைந்தார். வெற்றியின் இலக்கணத்தையும் இயேசு மாற்றினார்.
வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள், வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் வெற்றி பெற்றது ஒரு போட்டியின் வழியாக, போரின் வழியாக. போட்டியில் ஒருவர் வெற்றி பெற்றால், மற்றவர்கள் தோற்க வேண்டும். பிறரது தோல்வியில் தான் இந்த வெற்றிக்கு அர்த்தமே இருக்கும். போரில் வெற்றி என்றால், பல உயிர்கள் இறக்க வேண்டும்.
போட்டியின்றி, போரின்றி அனைவருக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்த, இன்றும் பெற்றுத் தரும் மன்னன், வீரன் இயேசு. போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் வரலாற்றில் புகழோடு வாழ்ந்து மறைந்துள்ளனர். ஆனால் இந்த ஒரு இளைஞனோ வாழ்ந்தார். மறையவில்லை. இன்னும் வாழ்கிறார். இந்தக் கருத்துக்களை நான் சொல்லவில்லை, ஒரு பேரரசர் சொல்லியிருக்கிறார். ஆம் அன்பர்களே, வரலாற்றில் புகழுடன் வாழ்ந்து மறைந்த பேரரசன் நெப்போலியன் போனபார்ட் இயேசுவைப் பற்றி சொன்ன கூற்று சிந்திக்க வேண்டியதொன்று:

"மனிதர்களை எனக்குத் தெரியும். இயேசு சாதாரண மனிதர் அல்ல. அலெக்சாண்டர், சீசர், சார்ல்மேய்ன் (Charlesmagne), நான்... இப்படி பலரும் பேரரசுகளை உருவாக்கியிருக்கிறோம். இவைகளை உருவாக்க நாங்கள் படைபலத்தை நம்பினோம். ஆனால், இயேசு அன்பின் பலத்தை நம்பி தன் அரசை உருவாக்கினார். இத்தனை நூற்றாண்டுகள் ஆன பிறகும், அவருக்காக உயிர் துறக்க கோடிக்கணக்கானோர் இன்னும் இருக்கின்றனர்."

ஒரு பேரரசர் மற்றொரு பேரரசரைப் பற்றி இவ்வளவு உயர்வாகப் பேசியுள்ளது வியப்புக்குரியது தான். வரலாற்றில் கத்தியோடு, இரத்தத்தோடு உருவான பல ஆயிரம் அரசுகள் இன்று நமது வலாற்று ஏடுகளில் மட்டுமே உள்ளன. அந்த அரசர்களுக்கும் அதே கதிதான். ஆனால், கத்தியின்றி, தன் இரத்தத்தால் இயேசு என்ற மன்னன் உருவாக்கிய அந்த அரசு மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறது. அந்த அரசைப் பறைசாற்ற திருச்சபை நமக்கு அளித்துள்ள ஒரு வாய்ப்பு இந்த குருத்து ஞாயிறு. புனிதம், வெற்றி, அரசு என்பனவற்றிற்கு புது இலக்கணம் வகுத்து, இறுதியில் கடவுளுக்கும் புது இலக்கணம் சொன்ன இயேசு, இந்த தவக்காலத்தின் இறுதி வாரத்தில் தொடர்ந்து புது பாடங்களை நமக்குச் சொல்லித்தர வேண்டுமென மன்றாடுவோம்.

இறுதியாக ஒரு சிந்தனை: இயேசு என்ற இந்த எளிய மன்னன் எருசலேமில் நுழைவதைக் குறித்து இறைவாக்குரைத்த செக்கரியாவின் வார்த்தைகளைக் கேட்போம்.

செக்கரியா 9: 9-10
மகளே சீயோன்! மகிழ்ந்து களிகூரு: மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்: வெற்றிவேந்தர்: எளிமையுள்ளவர்: கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். அவர் எப்ராயிமில் தேர்ப்படை இல்லாமற் போகச்செய்வார்; எருசலேமில் குதிரைப்படையை அறவே ஒழித்து விடுவார்; போர்க் கருவியான வில்லும் ஒடிந்து போகும். வேற்றினத்தார்க்கு அமைதியை அறிவிப்பார்: அவரது ஆட்சி ஒரு கடல்முதல் மறு கடல் வரை, பேராறுமுதல் நிலவுலகின் எல்லைகள்வரை செல்லும்.

போர்க்கருவிகள் எல்லாம் அழிக்கப்பட்டு, போரே இல்லாமல் போகும் புத்தம் புது பூமி ஒன்று உருவாக நாம் இப்போது கனவுகள் கண்டு வருகிறோம். இதே கனவுகள் அன்றும் காணப்பட்டன. அந்தக் கனவை நனவாக்க இறைமகன் இயேசு எருசலேமில் நுழைந்தார். இன்று மீண்டும் அவர் அமைதியின் அரசராய் நாம் வாழும் இல்லங்களில், ஊர்களில், நகரங்களில், இந்த உலகத்தில் நுழைய வேண்டுவோம்.

இந்த நிகழ்ச்சியை வத்திக்கான் வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் கேட்டுப் பயன் பெறவும், உங்கள் கருத்துக்களைக் கூறவும் அழைக்கிறேன். வத்திக்கான் வானொலியின் இணையதள முகவரி: www.vaticanradio.org

No comments:

Post a Comment