15 November, 2015

Not an end, but a beginning முடிவல்ல... ஆரம்பம்...



Second Coming
33rd Sunday in Ordinary Time

The Mount of Olives Hotel, situated next to the Church of the Ascension on the summit of the Mount of Olives, is an ancient hostelry in Jerusalem. It has been in Muslim hands ever since 1187, though has always catered mainly for Christian visitors. By the end of  1998, this hotel, run by Palestinian Muslims, wrote to 2,000 Christian groups in the U.S. asking "How would you like to be reserving your rooms at the Mount of Olives Hotel, to wait for  the ‘second coming’ of  Jesus on the first day of the new millennium, 2000 A.D.?" 
I am at a loss to figure out what the owners of this hotel were thinking when they sent out this message. They wanted to cash in on the occasion? They took the ‘second coming’ as a joke? Not clear. But one thing is clear. They wanted to make some quick bucks. The passion that drives the commercial world to turn every event, including the end of the world, into money making opportunities is not that evident among believers.

This Sunday gives us an opportunity to reflect on the end of the world and our own end. Quite a few religions have spoken of the end of times. The Israelites did talk of this quite often. There are quite a few passages in the Bible that tell us about the how this end would be… It is called Apocalypse, Parousia etc.
None of us have the capacity to predict when the world would end… but we have the capacity to prepare ourselves for such an eventuality. Do we wait till the ‘last minute’ to get ready for this special moment? Or do we prepare ourselves throughout our lives?

The English expression: ‘last minute preparation’ blends quite a few emotions… expectation, excitement, tension, anxiety... After having done enough to prepare for the exams, it still seems not enough unless we turn over some pages at the entrance of the exam hall. After having done enough to prepare for the wedding in the family, having checked the list, still there are last minute frantic calls… I am sure each of us has a list of ‘last minute adventures’.
In the above instances, probably the end result is something desirable. Hence, the excitement and anxiety that accompany them are desirable. We don’t crib about last minute efforts getting doubled or tripled for these exciting events. But, if the event is not something desirable, then tension and anxiety overpower us - the tension that is palpable on hospital corridors, outside ICUs.

Expectation is in the air as we approach the final moments of this year’s liturgical calendar. This is the last Sunday of the Ordinary Time. Next week we celebrate the Feast of Christ the King and then we begin a new liturgical cycle with the first Sunday of Advent. The first reading from the book of Daniel and the gospel of Mark talk about the end of times.

End of times… I can recall the occasions I was walking down the roads in Chennai, when someone would suddenly thrust a paper, a pamphlet or a booklet into my hands. Those were the roadside preachers who were preoccupied with ‘saving the world’ from the impending disaster. The Day of the Lord is Near… was their constant theme. This frenzy would reach a feverish pitch when something disturbing happens… The devastating earthquake in Gujarat, Pakistan, the twin tower attack in USA, the tsunami in Asia, the ash clouds that erupted at Eyjafjallajökull in Iceland, the tsunami in Japan, the senseless violence of fundamentalists… all these events – natural as well as human-made – naturally brought us to think about the end. Many explanations were easily available during these disasters… Among them Nostradamus was the most popular name.

In 2009, a Hollywood film was released with an intriguing title - 2012. The film talks of the Mayan doomsday prophecy and has some link to…? Yes, you guessed it right… Nostradamus! The film portrays the end of the world as on December 21, 2012. Roland Emmerich who has directed 2012, has done a hat-trick. Three films on the destruction of the world: Independence Day (1996), The Day After Tomorrow (2004) and now 2012 (2009).
Talking of the end and interpreting it – are they just pastime? For Emmerich or Hollywood it could be pastime… all entertainment. When Hollywood talks of apocalypse, it does so with lots of special effects. This makes the catastrophic, cataclysmic end… glamorous, desirable. There lurks a danger when we see destruction in such monster-budgeted special effects movies. The ‘wow-effect’ created by such movies make us more and more desensitized about real disasters, real destructions. When giant waves sweep over New York’s skyscrapers, it really looks ‘good’... ‘attractive’! But, we know that tsunami which brought giant waves to the shores of Asia and Japan, was not good. Reality calls for a different mindset.

Many of us take lots of efforts to know the future. If at the end of such efforts, the future we hear of is all fairy tale of happiness, it is okay. But, if the future foretold is not so good, then we regret having taken such efforts. The future is a mixed bag of good and bad. The famous line: “For all that has been… thanks. For all that will be… yes.” crosses my mind. This yes to the future can be said from a heart that trusts in itself and in the Lord. May we pray for this trust to grow in us. May we foster such trust in people around us. This is a special call for us through the readings of today’s Liturgy.

Soon (December 8, 2015), we shall begin the special Jubilee Year of Mercy. We pray that this Jubilee year washes the blood-stained world with God’s infinite, never-tiring mercy and compassion!


பொதுக்காலம் - 33ம் ஞாயிறு

எருசலேம் நகரில், இயேசுவின் விண்ணேற்ற குன்றுக்கருகே 'ஒலிவ மலை ஹோட்டல்' (Mount of Olives Hotel) என்ற விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியை நடத்தும் உரிமையாளர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் பல்லாயிரம் கிறிஸ்தவர்களுக்கு 1998ம் ஆண்டு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தனர். அந்தக் கடிதத்தில் காணப்பட்ட விளம்பர வரிகள் நம் ஞாயிறு சிந்தனைகளைத் துவக்க உதவியாக உள்ளன. இதோ அந்த வரிகள்:
"2000மாம் ஆண்டு, இயேசுவின் 'இரண்டாம் வருகை' நிகழும்போது, ஒலிவ மலையில் நீங்கள் காத்திருக்க வேண்டாமா? எங்கள் ஹோட்டலில் ஓர் அறையை உங்களுக்காக ஒதுக்கி வைக்கிறோம். முன்பதிவு செய்துகொள்ளுங்கள்" என்று அக்கடிதத்தில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
2000மாம் ஆண்டு நெருங்கியபோது, உலக முடிவுபற்றிய பல வதந்திகள் உலவி வந்தன.
இந்த வதந்திகளை மூலதனமாக்கி, வர்த்தக உலகம் இலாபம் தேட விழைந்தது; முயற்சிகளும் மேற்கொண்டது. உலகம் முடிந்தபின்னரும் தாங்கள் சேர்த்துவைக்கும் பணம் நீடிக்கும் என்று வர்த்தகர்கள் எண்ணுகின்றனரா? அல்லது, 'உலக முடிவு' என்பதை, ஒரு விளையாட்டாக மாற்றி, வேடிக்கை செய்கின்றனரா என்பது தெளிவில்லை. தங்களைச் சுற்றி நடப்பதையெல்லாம், அது, உலக முடிவேயானாலும் சரி... அதை, பணத்தின் கண்ணோட்டத்தில் காண்பது, அவர்கள் கொண்டுள்ள தீர்க்கமான எண்ண ஓட்டங்களைச் சொல்கிறது. வர்த்தக உலகம் காட்டும் ஆர்வம், உறுதி, தீர்மானம், ஆகியவை, ஆன்மீக உலகத்தைச் சார்ந்தவர்களிடம் உள்ளனவா என்பது சந்தேகம்தான். உலக முடிவு என்ற உண்மை, நம்மில் எவ்வகை எண்ணங்களை எழுப்பவேண்டும், எவ்வகையான உறுதியைத் தரவேண்டும் என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

உலகமுடிவு பற்றிய கருத்துக்களை, குறிப்பாக, உலகம் முடியும்போது என்னென்ன நடக்கும் என்பதை, பல்வேறு கலாச்சாரங்களும், மதங்களும் சொல்லி வைத்துள்ளன. இஸ்ரயேல் மக்கள் மத்தியிலும் இவ்வெண்ணங்கள் பரவலாகப் பேசப்பட்டன. விவிலியத்தின் பல இடங்களில் உலக முடிவைப்பற்றி கூறப்பட்டுள்ளது. அவற்றில் இரு பகுதிகளை இன்றைய ஞாயிறு வழிபாட்டில் சிந்திக்க திருஅவை நம்மை அழைக்கிறது. இவ்வழைப்பு இன்று நம்மை வந்தடைவதற்குக் காரணம் உண்டு...

கத்தோலிக்கப் பாரம்பரியத்தில், ஒவ்வோர் ஆண்டையும் ஐந்து வழிபாட்டு காலங்களாகப் பிரித்துள்ளோம். திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்பு காலம், தவக்காலம், உயிர்ப்பு காலம், பொதுக்காலம். இந்தப் பொதுக்காலத்தின் இறுதியை நாம் நெருங்கியுள்ளோம். அடுத்த ஞாயிறு கிறிஸ்து அரசர் திருநாள், அதற்கு அடுத்த ஞாயிறு இடம்பெறும் திருவருகைக்கால முதல் ஞாயிறுடன், திருவழிபாட்டின் புதிய ஆண்டைத் துவக்குகிறோம். பொதுக்காலத்தின் இறுதியில், இறுதிக் காலத்தைப்பற்றி சிந்திக்க, இன்றைய இறைவாக்கு நம்மை அழைக்கிறது. இறுதிக் காலம், எப்போது, எவ்விதம் வரும் என்பது தெரியாது. ஆனால், அந்தக் காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதே இறைவாக்கு நமக்குத் தரும் அழைப்பு. இறுதிக் காலத்தைச் சந்திக்க எவ்விதம் தயார் செய்வது?

ஆங்கிலத்தில், "last minute preparation" – ‘கடைசி நிமிட தயாரிப்பு என்ற ஒரு சொற்றொடர் உண்டு: எல்லாரும் வாழ்க்கையில் அனுபவித்த, அனுபவிக்கும், இனியும் அனுபவிக்கவிருக்கும் ஓர் அனுபவம் இது. தேர்வுகளுக்காக பல நாட்கள், பல மாதங்கள் தயார் செய்தாலும், கடைசி நேரத்தில், தேர்வு எழுதும் அரங்கத்தின் வாசலில் நின்றபடி எத்தனை தயாரிப்புகள்! வீட்டில் நிகழும் வைபவங்களுக்கு பல நாட்கள் தயாரித்தாலும், வைபவத்திற்கு முந்திய இரவு, வைபவத்தன்று காலை, அரக்க, பரக்க, ஓடியாடி, வேலைகள் செய்கிறோம். அதேபோல், வேலைக்கான நேர்காணல் (interview), வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரிக்க... என்று, கடைசி நேர தயாரிப்புக்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். மேலே சொன்ன அனைத்திலும் பொதுவாக மேலோங்கியிருக்கும் ஓர் உணர்வு, எதிர்பார்ப்பு.

நல்ல காரியங்களை எதிர்பார்க்கும்போது, ஆனந்தம், ஆர்வம் இவை நம்மைச் செயல்பட வைக்கும். ஆனால், நல்லவை அல்லாத சூழல்களை நாம் எதிர்பார்க்கும்போது, நமது மனநிலை எப்படி இருக்கும்? அதுவும், நமக்கு மிக நெருங்கியவர்கள், மருத்துவமனையில், உடல்நலமின்றி, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, எவ்வித எதிர்பார்ப்பு இருக்கும்? அதை எதிர்பார்ப்பு என்றுதான் சொல்லமுடியுமா? எதிர்பார்ப்பு, நல்லதோ, கெட்டதோ, அது எதிர்காலத்தோடு தொடர்புடையது...

எதிர்காலத்தைப்பற்றி தெரிந்து கொள்ளும் சக்தி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவ்வப்போது நமக்குள் ஏக்கம் எழுவதில்லையா? இத்தகைய சக்திக்காக இளவயதில் நான் ஏங்கியதுண்டு. எடுத்துக்காட்டாக, படிக்கும் காலத்தில், அடுத்த நாள் தேர்வுக்கு என்னென்ன கேள்விகள் வரும்னு தெரிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்... என்று ஏங்கியதுண்டு. நமக்குக் கிடைக்கப்போகும் வேலை, நமக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை, நமது ஒய்வுகால வாழ்க்கை இவற்றைப்பற்றி முன்கூட்டியே தெரிந்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எத்தனை பேர் ஏங்குகிறோம்?

எதிர்காலத்தைத் தெரிந்துகொள்வதற்கு எத்தனை வழிகளை நாம் பின்பற்றுகிறோம்? கைரேகையைப் பார்த்து, கிளியைக் கேட்டு, நாள், கோள், நட்சத்திரங்களைப் பார்த்து... எத்தனை வழிகளில் எதிர்காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்... எதிர்காலம் முழுவதும், "நல்ல காலம் பொறக்குது" என்ற சொற்களையே நாம் கேட்டுக் கொண்டிருந்தால் பரவாயில்லை. அந்த எதிர்காலத்தில் பிரச்சனைகள் மலைபோல் காத்துக் கிடக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டால்... ஏன் இதைத் தெரிந்து கொண்டோம் என்று வருத்தப்படுவோம்.

எதிர்காலத்தைப்பற்றிய கேள்விகளில் மிக முக்கியமான கேள்வி: நம் ஒவ்வொருவரின் இறுதி நாள் பற்றியது... Simple ஆகச் சொல்லவேண்டுமெனில், நான் எப்போது, எப்படி இறப்பேன்? நாம் அனைவரும் மரணத்தை, ஒரு நாள் சந்திக்க இருக்கிறோம். ஆனால், அதைப்பற்றி எண்ணவும், பேசவும் தயங்குகிறோம். மரணத்தைப்பற்றி, மரித்தோரைப்பற்றி சிந்திக்க திருஅவை நமக்கு வழங்கியுள்ள ஒரு மாதம்... நவம்பர் மாதம். இன்றும் நமது இறுதி காலம்பற்றி, இந்த உலகத்தின் இறுதி காலம்பற்றி சிந்திக்க நமக்கு மற்றொரு வாய்ப்பு.

2009ம் ஆண்டு, நவம்பர் மாதம், அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. படத்தின் பெயர் 2012. 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது என்பதை, பிரம்மாண்டமாகக் காட்டியத் திரைப்படம் 2012. வசூலில் சாதனை படைத்ததாகச் சொல்லப்படும் இத்திரைப்படத்தில், ‘special effects’ எனப்படும் திரைப்பட வித்தைகளைப் பயன்படுத்தி, உலக அழிவு, அழகாகச் சொல்லப்பட்டது. அழிவு, அழகாகக் காட்டப்பட்டது.
உலக முடிவைப்பற்றி, சிறப்பாக, உலக அழிவைப்பற்றி, இதுவரை, நூற்றுக்கும் மேற்பட்ட ஹாலிவுட் திரைப்படங்கள் வந்துள்ளன. இனியும் வரும். இவற்றில் பெரும்பாலானவை மக்களைக் கவர்ந்த வெற்றிப் படங்கள்.

ஞாயிறு சிந்தனையில் திரைப்படங்களைப் பற்றிப் பேசுகிறேனே என்று ஒரு சிலர் சங்கடப்படலாம். ஆனால், இத்திரைப்படங்கள் ஏன் வெற்றி அடைந்தன என்பதை அலசிப்பார்த்தால், மனித இயல்பு பற்றிய ஓர் உண்மையை உணரலாம். அழிவைப் பார்க்க நமக்குள் ஆசை உள்ளது. இந்த அடிப்படை ஆசையை மூலதனமாக்கி, நமது தொடர்பு சாதனங்கள், முக்கியமாக, திரைப்படங்கள், திரைப்பட வித்தைகள் வழியே, அழிவை, பிரம்மாண்டமாக, கவர்ச்சியாக காட்டுகின்றன. இந்த பிரம்மாண்டங்கள், அழிவைப்பற்றிய துன்ப உணர்வுகளிலிருந்து நம்மை அந்நியப்படுத்தி, நமது மனங்களை மழுங்கடித்து விடுகின்றன. இது ஆபத்தான ஒரு போக்கு.
TV, சினிமா, பத்திரிகைகள் வழியே அழிவை அடிக்கடி பார்ப்பதும், அழிவைப் பிரம்மாண்டமாய்ப் பார்ப்பதும் ஆபத்து. படங்களில் பார்க்கும் அழிவுக்கும் வாழ்க்கையில் சந்திக்கும் அழிவுக்கும் பல வேறுபாடுகள். நிழல் படங்களில் அழிவைப் பார்த்து, பார்த்து பழகிவிட்டு, நிஜமாய் நடக்கும் அழிவுகளில், உயிர்கள் அழிக்கப்படுவதையோ, அல்லல்படுவதையோ உணரமுடியாமல் போகக்கூடிய ஆபத்து உள்ளது.

அழிவுகளைப்பற்றி அடிக்கடி பேசுவதும், கேட்பதும் இன்னொரு ஆபத்தை உண்டாக்கும். அழிவுகளை அடிக்கடி பார்க்கும்போது, மனதில் நம்பிக்கை வேர்கள் கொஞ்சம், கொஞ்சமாய் அறுந்துவிடும் ஆபத்தும் உள்ளது. நம்பிக்கை வேரறுக்கப்படும் போது, அவநம்பிக்கை விதைக்கப்படும், அது வேர்விட்டு வளர்ந்துவிடும். உலக முடிவையும், அழிவையும் கவர்ச்சிகரமாகக் கூறும் ஊடகங்களாகட்டும், அல்லது இந்த முடிவுகளைப் பற்றி மக்களுக்குச் சொல்லி பயமுறுத்தும் போலி மதத் தலைவர்களாகட்டும், அவர்களிடமிருந்து நாம் பெறும் செய்தி... பெரும்பாலும் அவநம்பிக்கையே.

இன்று நாம் கேட்ட இறைவாக்குகளில் அச்சத்தையும், கவலையையும் உருவாக்கக் கூடிய வார்த்தைகள் ஒலித்தாலும், நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளும் ஒலிக்கின்றன.
நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்: அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்: வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.
என்று தானியேல் நூலிலும்,
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.
என்று மாற்கு நற்செய்தியிலும் நம்பிக்கை அளிக்கும் இறைவார்த்தைகள் ஒலிக்கின்றன.

இறுதியாக, ஓர் எண்ணம். 'எதிர்' என்ற தமிழ் சொல்லுக்குள் எத்தனை பொருள் இருக்கிறது! எதிர்காலம் என்பதை, எதிர் வரும் காலம், எதிர் பார்க்கும் காலம், நமக்கு எதிராக வரும் காலம், நமக்கு எதிரியாக வரும் காலம், நாம் எதிர்த்து நிற்கவேண்டிய காலம், நாம் எதிர்கொண்டு சென்று வரவேற்கவேண்டிய காலம்... என்று பல பொருள்பட பேசலாம். 'எதிர்' என்ற சொல்லில் ஆனந்தம், ஆர்வம் இருக்கும். ஆபத்தும், ஆதங்கமும் இருக்கும். இந்த உணர்வுகளெல்லாம் நடக்கப்போகும் சம்பவங்களில் இருக்கின்றன என்பதைவிட, இவற்றை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தைப் பொறுத்தே நம் உணர்வுகளும், செயல்பாடுகளும் இருக்கும். எதிர்காலத்தைப் பற்றி, சிறப்பாக இறுதிக் காலத்தைப் பற்றி நமது கண்ணோட்டம் என்ன?

எதிர் காலத்தைத் தெரிந்து கொள்வதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியையாவது அந்த எதிர் காலத்தை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்ப்பதில் செலவிட்டால், எவ்வளவோ பிரச்சனைகளைச் சமாளிக்கலாம், வெல்லலாம். ஆங்கிலத்தில் அழகிய பொன்மொழி ஒன்று உண்டு: "For all that has been...thanks! For all that will be...yes!"இதுவரை நடந்தவற்றிற்குநன்றி! இனி நடக்கப் போகின்றவற்றிற்கு ஆகட்டும்!” என்ற கண்ணோட்டம் பதட்டமில்லாத நம்பிக்கையை வளர்க்கும். எதிர்காலம் என்பது, பிரச்சனைகளை கூட்டமாகச் சேர்த்துக்கொண்டு வந்தாலும், அந்தக் கூட்டத்தின் மத்தியில் நல்லவற்றை, நல்லவர்களைப் பார்த்து, கைகுலுக்கிக் கொள்ளும் பக்குவத்தை நாம் பெறவேண்டும்.

இதை ஓர் உருவகத்தில் சொல்ல வேண்டுமெனில், எதிர்காலம் மலைபோல் குவிந்த ஒரு குப்பையாக தெரிந்தாலும், அந்த குப்பையின் நடுவிலும் வைரங்கள் மின்னுவதை நம் கண்கள் பார்க்கும்போது, குப்பை மறைந்துவிடும்... (வெளியில் மறைந்துவிடாது... நமது பார்வையில் மறைந்துவிடும்.) வைரங்கள் மட்டும் தெரியும். குப்பைகளை விலக்கி, குண்டுமணிகளை, வைரங்களைப் பார்க்கும், வைரங்களைச் சேர்க்கும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள இறைவன் துணையை நாடுவோம்.
விரைவில் - டிசம்பர் 8ம் தேதி - நாம் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டைத் துவக்கவிருக்கிறோம். இரத்தக் கறைபடிந்த இவ்வுலகம், இறை இரக்கத்தில் முற்றிலும் நனைந்து, கழுவப்பட்டு, அமைதியில், அன்பில் வாழும் என்ற நம்பிக்கையை வளர்க்க, இந்த யூபிலி ஆண்டு நமக்கு வழங்கப்பட்டுள்ளது. அழிவைப்பற்றி அடிக்கடி பேசி, அவநம்பிக்கை என்ற நோயைப் பரப்பிவரும் உலகப் போக்கிற்கு ஒரு மாற்று மருந்தாகஇறைவனின் இரக்கம், இறுதிகாலம் வரைத் தொடரும் என்ற நம்பிக்கையை நமக்குள் நாமே வளர்ப்போம். பிறரிடமும் இந்த நம்பிக்கையை வளர்ப்போம். 

No comments:

Post a Comment