28 February, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 9

Job and his friends by Iliá Repin
https://www.pinterest.com

விமான நிலையம் ஒன்றில், நீண்ட வரிசைகளில், மக்கள் காத்திருந்தனர். அவ்வேளையில் அங்கு ஒருவர் வந்தார். தன்னைத்தானே ஒரு முக்கியப்புள்ளி என்று கருதிய அவர், வரிசையில் நிற்காமல், முன்னே சென்றார். பயணச் சீட்டுக்களை வழங்கிக்கொண்டிருந்த பணியாளர், அவரை, வரிசையில் வரும்படி சொன்னார். உடனே அவர் குரலை உயர்த்தி, "நான் யாரென்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார். பணியாளர், அவர்மீது கவனம் செலுத்தாமல், அடுத்தவரை வரச்சொன்னார். அந்த முக்கியப்புள்ளி, "நான் யாரென்று உனக்குத் தெரியுமா?" என்று மீண்டும் கத்தினார். உடனே அந்தப் பணியாளர், தனக்கு முன்னிருந்த 'மைக்'கில், "பயணிகளின் கவனத்திற்கு: இங்கு ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு, தான் யார் என்பது தெரியவில்லை. தயவுசெய்து யாராவது அவருக்கு உதவி செய்யுங்கள்" என்று அறிவித்துவிட்டு, மீண்டும் தன் பணியில் ஈடுபட்டார்.

'நான் யார்' என்பதை அறிந்துகொள்வது, வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளக் கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியப் பாடம். இந்தப் பாடத்தை முதலில் நாம் கற்றுக்கொள்ளாமல், நாம் யார் என்பதை, மற்றவர்கள் அறிந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது, சங்கடங்களை உருவாக்கும். தன்னைப் பற்றிய சரியான, தெளிவான புரிதல் இருந்தால், அதைவிட உயர்ந்த அறிவு இவ்வுலகில் இல்லை என்பதை, அறிஞர்கள் பலரும் கூறியுள்ளனர்.
"தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்" என்பது திருமூலர் சொல்லித்தந்த பாடம். இதையே, சாக்ரடீஸ் போன்ற உயர்ந்த மேதைகளும் சொல்லித் தந்துள்ளனர். "உன்னையே நீ அறிவாய்" என்பது, பிறக்கும் ஒவ்வொரு மனிதப் பிறவியும் அடையக்கூடிய மிக உன்னத அறிவு, என்று, பாரம்பரிய மதங்களும், கலாச்சாரங்களும் சொல்லித்தந்துள்ளன.

மார்ச் 1, திருநீற்றுப் புதனன்று, தவக்காலத்தைத் துவங்குகிறோம். நாற்பது நாள்கள் நாம் மேற்கொள்ளும் இம்முயற்சி வழியே, நம்மை நாமே தேடிக் கண்டுபிடிக்க, நம்மை நாமே வெற்றிகொள்ள, நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அருள்நிறை இக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் செபம், தவம், அறச்செயல், நோன்பு ஆகிய முயற்சிகள், நம்மை நாமே அறிந்துகொள்வதற்கும், நம்மை நாமே வெல்வதற்கும் பயன்படுத்தப்படவேண்டும். இது சரியான தவமுயற்சி. இதற்கு மாறாக, அடுத்தவரின் கவனத்தை ஈர்க்கும்வண்ணம் மேற்கொள்ளப்படும் தவமுயற்சிகள், வெறும் விளம்பரங்கள் என்றும், அதனால், எவ்வித பயனும் இல்லை என்றும், திருநீற்று புதனன்று வழங்கப்பட்டுள்ள நற்செய்தியில், இயேசு எச்சரிக்கிறார்.

மத்தேயு 6: 1,16-18
மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள்... நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது.

தன்னறிவு பெறவும், தன்னை வென்று, புனித நிலைக்கு உயரவும், தரப்பட்டுள்ள இந்த தவக்காலத்தில், நாம், யோபு நூலில் தேடல்களைத் தொடர்வது, பொருத்தமாகத் தெரிகிறது. கடந்த 8 வாரங்களாக நாம் மேற்கொண்ட தேடலில், நீதிமானாகிய யோபு, தன் பணியாளர்கள், உடமைகள், புதல்வர், புதல்வியர் அனைவரையும் இழந்ததோடு அல்லாமல், தன் உடல் நலனையும் இழந்து, துன்புற்றதை புரிந்துகொண்டோம். இந்த இழப்புக்களைத் தொடர்ந்து, யோபு, ஒரு தேடல் பயணத்தைக் தொடங்குகிறார்.
தன்னறிவு பெறுவதற்கு யோபு மேற்கொண்ட இத்தேடல் பயணம், யோபு நூல், 3ம் பிரிவு முதல், 42ம் பிரிவு முடிய, 40 பிரிவுகளில், இடம்பெறுகின்றது. யோபு, தனக்குத்தானே சொன்னவை, யோபுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல், இறுதியில், யோபுக்கும், இறைவனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் என்று... 40 பிரிவுகள் வழியே, யோபின் தேடல் சித்திரிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, யோபு தன் வாழ்வில் அனைத்தையும் இழந்தபின், அவர், இந்தத் தேடல் பயணத்தைக் துவக்குகிறார் என்று, இந்நூல் சுட்டிக்காட்டுவது, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

சொத்து, சுகம், சுற்றம் ஆகியவை, நம்மைச் சூழ்ந்திருக்கும்போது, வாழ்க்கை சுமுகமாகச் செல்லும்போது, பொதுவாக, நம்மைப் பற்றியோ, அடுத்தவரைப் பற்றியோ, இறைவனைப் பற்றியோ, நாம் ஆழமாகச் சிந்திப்பது கிடையாது. ஆனால், நம் வாழ்வில் இழப்புக்கள் நேரும்போது, நம் சிந்தனைகளில் சிக்கல்கள் உருவாகின்றன. அவ்வேளைகளில் நமக்குள் எழும் கேள்விகள், மிக ஆழமாக நம்மை ஊடுருவிச் சென்று, நம்மைப் பற்றியும், நம்மைச் சார்ந்தோரைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் தேடல்களை மேற்கொள்ள, நம்மைத் தூண்டுகின்றன.
அனைத்தையும் இழக்கும்போது, அல்லது, அனைத்தையும் துறப்பதற்கு நாம் தயாராகும்போது, நமது தேடல் பயணம், பயனுள்ளதாக அமையும் என்பதைக் கூறும் ஒரு சிறுகதை இது. ஆன்மீக எண்ணங்களை, தன் உரைகள் வழியாகவும், நூல்களாகவும் வழங்கிவரும் T.T.ரங்கராஜன் அவர்கள், 'தாயம்' என்ற நூலில் இந்தச் சிறுகதையைக் கூறியுள்ளார்:
"குருவே, தயவு செய்து என்னை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று ஒருவர் கூறினார். "நீ யார் என்பதை எனக்குச் சொல்," என்று குரு கேட்டார். "ராமச்சந்திர ராவ்" என்று அவர் பதிலளித்தார். "அது உன் பெயர். அதை உதறிவிட்டு நீ யார் என்பதை எனக்குச் சொல்," என்று குரு மீண்டும் கேட்டார். "நான் ஒரு தொழிலதிபர்," என்று அவர் கூறினார். "அது உன் தொழில். அதை விட்டுவிட்டு, நீ யார் என்பதைக் கூறு."
"நான் ஓர் ஆண்."
"அது உன் பாலினம். அதை அகற்றிவிட்டு நீ யார் என்பதைக் கூறு."
"குருவே, இப்போது நான் யார் என்பது எனக்குத் தெரியவில்லை!"
"மிகவும் நல்லது, இதுதான் தேடுபவனுக்கான துவக்கப் பள்ளி. உன் முத்திரைகள் அனைத்தையும் களைந்துவிட்டு, நீ நீயாக மட்டும் வருகிறாய் அல்லவா, அதுதான் தேடுபவனின் துவக்கப் பள்ளி. உன் பெயர் அச்சிடப்பட்ட அட்டை, பூசாரிகளிடம் வேலை செய்யும். ஆனால், கடவுளிடம் அதற்கு எந்த மதிப்பும் கிடையாது," என்று குரு வலியுறுத்தினார்.

நிறுவனங்களில் பணிபுரிவோர், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர், ஒருவர் ஒருவரைச் சந்திக்கும்போது, தாங்கள் யார் என்பதை அறிமுகப்படுத்த, 'விசிடிங் கார்ட்' அல்லது, 'பிசினஸ் கார்ட்' என்று சொல்லப்படும் அடையாள அட்டைகளைப் பரிமாறிக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். தங்கள் பெயர், வாங்கியப் பட்டங்கள், வகிக்கும் பதவிகள் என்ற பல அடையாளங்கள், அந்த அட்டைகளில் அச்சிடப்பட்டிருக்கும். அந்த அட்டைகள் எவ்வளவுக்கெவ்வளவு நிரப்பப்பட்டுள்ளதோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் முக்கியமானவர்கள் என்பது பொதுவான கணிப்பு.

நமது பிறப்பின் வழியே நம்மை வந்தடையும் ஒரே ஓர் அடையாளம், நாம் மனிதப்பிறவிகள் என்ற அடையாளம் மட்டுமே. ஆனால், வளர, வளர, நாம் சேகரித்துக்கொள்ளும் ஏனைய அடையாளங்கள், பல நேரங்களில், நமது அடிப்படை அடையாளமான 'மனிதப்பிறவி' என்ற இயல்பை மறைத்துவிட, அல்லது, மறந்துவிட வழி வகுக்கின்றன. நாமாகவே சேர்த்துக்கொண்ட அடையாளங்கள், நம்மைவிட்டு விடைபெறும்போது, நமது அடிப்படை அடையாளமான 'மனிதப்பிறவி' என்ற இயல்பு வெளிப்படுகிறது. பலர், அந்த அடிப்படை அடையாளத்தை மறந்துவிட்டு, தாங்கள் சேகரித்த அடையாளங்களிலேயே பல ஆண்டுகள் வாழ்ந்து பழகிப்போனதால், 'மனிதப்பிறவி' என்ற இயல்பான, முதலான, அடிப்படையான அடையாளத்தை, ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

அனைத்தையும் இழந்து நிற்கும் யோபு, தான் ஏன் பிறந்தோம் என்ற கேள்வியை எழுப்பி, தன் தேடலைத் துவக்குகிறார். தான் பிறக்காமல் போயிருந்தால், நலமாக இருந்திருக்கும் என்று கூறுகிறார். யோபு பகிர்ந்துகொள்ளும் வேதனைமிகுந்த சொற்கள், நம் வாழ்வில் அல்லது, நமக்குத் தெரிந்தவர்கள் வாழ்வில் அவ்வப்போது ஒலித்துள்ளன என்பதை அறிவோம். யோபின் உள்ளத்தைக் கீறி வெளியேறும் இச்சொற்கள் சிலவற்றிற்கு செவிமடுப்போம்:

யோபு நூல் 3: 1-4, 11, 22-24, 26

இதன்பிறகு யோபு வாய்திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார். யோபு கூறியது: "ஒழிக நான் பிறந்த அந்த நாளே!... அந்த நாள் இருளாகட்டும்; மேலிருந்து கடவுள் அதை நோக்காதிருக்கட்டும்; ஒளியும் அதன்மேல் வீசாதிருக்கட்டும்.... கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா? கருவறையினின்று வெளிப்பட்டவுடனே நான் ஒழிந்திருக்கலாகாதா?
கல்லறை காணின் களிப்பெய்தி அகமகிழ்வோர்க்கு, வாழ்வு வழங்கப்படுவதேன்?  எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ, எவரைச் சுற்றிலும் கடவுள் தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ, அவருக்கு ஒளியால் என்ன பயன்? பெருமூச்சு எனக்கு உணவாயிற்று; வேதனைக்கதறல் வெள்ளமாய் ஓடிற்று. எனக்கு நிம்மதி இல்லை; ஓய்வு இல்லை; அமைதி இல்லை; அல்லலே வந்துற்றது."

யோபுக்கு நிகழ்ந்த அனைத்து துன்பங்களுக்கும் இறைவனே காரணம் என்று முடிவு செய்த அவரது மனைவி, "கடவுளைப் பழித்து மடிவதுதானே?" என்று தூண்டிவிட்டாலும், யோபின் உள்ளக்குமுறல்களில் இறைவனைப் பழித்தோ, குறை கூறியோ எதுவும் அவர் சொல்லவில்லை. யோபின் உள்ளத்திலிருந்து வெளியான இந்த அவலக்குரலுக்கு, அவரது நண்பர்கள் ஒவ்வொருவராகப் பதில் சொல்ல முற்படுகின்றனர்.
யோபுக்கும், நண்பர்களுக்கும் இடையே நிகழும் இந்த உரையாடல், மிக உயர்ந்த கவிதை நடையில் அமைந்திருப்பதாலும், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் நம் வழக்கமான எண்ணங்களை, புரட்டிப் போடுவதாலும், பல விவிலிய ஆய்வாளர்களுக்கு சவாலாக இருந்து வருகின்றது. இந்த உரையாடல் வழியே கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல நமக்காகக் காத்திருக்கின்றன. தொடர்வோம் நம் தேடல்களை.



26 February, 2017

Serving God, money and worry கடவுள், காசு, கவலை - பணிவிடை

 Serving Two Masters

8th Sunday in Ordinary Time

We have been reflecting on the different sections of the Sermon on the Mount for the past four Sundays. Today, we conclude this ‘mini-series’. Reflecting on the Sermon on the Mount - where Jesus has constantly challenged us to change our perspective and direction in life - is an excellent preparation for the Lenten Season which begins coming Wednesday.
“A Few Buttons Missing” is a book written by James T.Fisher and L.S.Hawley in 1951. Fisher, a psychiatrist by profession, talks about the Sermon on the Mount in his book:
"If you were to take the sum total of all authoritative articles ever written by the most qualified of psychologists and psychiatrists on the subject of mental hygiene--if you were to combine them and refine them and cleave out the excess verbiage--if you were to take the whole of the meat and none of the parsley, and if you were to have these unadulterated bits of pure scientific knowledge concisely expressed by the most capable of living poets, you would have an awkward and incomplete summation of the Sermon on the Mount. And it would suffer immeasurably through comparison. For nearly two thousand years the Christian world has been holding in its hands the complete answer to its restless and fruitless yearnings. Here ... rests the blueprint for successful human life with optimum mental health and contentment."
Harry S.Truman, the 33rd President of the U.S. paid this compliment on the Sermon on the Mount: I do not believe there is a problem in this country or the world today which could not be settled if approached through the teaching of the Sermon on the Mount.

Many world leaders and great thinkers agree that the Sermon on the Mount is indeed a rich resource of happy, healthy living. In today’s Gospel passage (Matthew 6: 24-34) Jesus gives us sharp insights as to how to lead uncompromising lives worthy of Christians. Unfortunately, today’s world has made the attitude of compromise as the norm and uncompromising, noble ways as the exception and, sad to say, eccentric!
Jesus’ idea of uncompromising life comes through in some of his statements - call them suggestions, advice, challenges - in today’s Gospel:
  • You cannot serve both God and money.
  • Do not worry about your life, what you will eat or drink; or about your body, what you will wear.
  • Do not worry about tomorrow, for tomorrow will worry about itself. Each day has enough trouble of its own.
All these statements sound very ideal and out-of-this-world. But, on deeper analysis, they can be seen as very down-to-earth. They are not exceptional or eccentric! It is a question of perspective!

Jesus begins today’s Gospel with the opening salvo: “No one can serve two masters”. While reading this line, my mind instinctively thought of politicians. They would easily serve several masters at the same time, not letting any of them know where their true allegiance lies. Their ultimate master is money. They would do anything; go any distance to serve their great master - Mammon. Jesus makes a specific reference to this in the very next sentence: You cannot serve God and money.

What did Jesus mean by this? Depending on which word we lay the emphasis, the meaning would change as well. I would like to emphasise the word SERVE. A true disciple of Jesus cannot SERVE God and money.
For Jesus, there is nothing wrong with money, provided it is kept in its proper place. One can earn, save, and share money; but cannot SERVE money. I was struck by Jesus putting money on par / in competition with God. Can money compete with God? Unfortunately, yes… and, worse still, it seems to be winning the race, mainly in the world of politics and business where money has assumed a divine status.

To worry or not to worry is a crucial human question. In the second part of today’s Gospel, Jesus answers this question in his own style. Erma Louise Bombeck was an American humorist who achieved great popularity for her newspaper column that described suburban home life from the mid-1960s until the late 1990s. Bombeck also published 15 books, most of which became best-sellers. She once wrote about a little guy named Donald. Donald was worrying about going to school. Here is how he expressed his anxieties. “My name is Donald. I don’t know anything. I have a new underwear, a loose tooth and I didn’t sleep last night because I’m worried. What if the bell rings and a man yells, ‘Where do you belong,’ and I don’t know? What if the trays in the cafeteria are too tall for me to reach? What if my loose tooth comes out when we have our heads down and are supposed to be quiet? Am I supposed to bleed quietly? What if I splash water on my name tag and my name disappears and no one knows who I am?”

I am sure most of us smiled reading the list of worries enlisted by poor little Donald. If we pity poor Donald, we need to pity all of us! Inside every one of us there lives a Donald. We tend to drown in a teaspoon of worry. To worry or not to worry? Does Jesus tell us simply to brush aside worries; sweep them under the carpet; pretend that there is no care in the world? What does Jesus mean by saying ‘do not worry about your life’? I would like to see this as a sequel to the previous section of today’s Gospel, where Jesus had indicated how money can replace God. Here Jesus indicates that we can be drowned in worries so much, that God would disappear from our life. Once again God is put in competition with worries.
In today’s Gospel, Jesus tries to tell us in a very simple but elegant way that God is much bigger than our worries. Unfortunately, when we are beset with worries it is much harder for us to believe these words of Jesus. Our worries seem much more tangible and over powering than God. Granted. But, by just worrying about actual and imagined things – like poor Donald – what do we achieve? Can any one of you by worrying add a single hour to your life? This challenge of Jesus is pretty simple and straightforward.

Thomas Borkovec, a professor of Psychology at Penn State University, is (like many of us), an expert in the field of worry. The key difference is that Dr. Borkovec makes his living by diagnosing what other folks are worried about. He has determined that the single most common source of worry is not the fear of war, financial disaster, holes in the ozone layer, AIDS, cancer, loss of a job, divorce or any of those other topics that one might place atop a traditional worry list. Instead, Dr. Borkovec claims that the single most frequent source of worry is other people's opinions of our lives. "If this happens, what will they think? What will people say? Will I be laughed at? Will I be excluded?"

By placing ‘others’ as the centre of our worries, and anxieties, we get drowned in them. Jesus says that by placing God at the centre of our lives, we can come out of the ocean of worries. The closing words of Jesus in today’s Gospel are truly golden words: Do not worry about tomorrow, for tomorrow will worry about itself. Each day has enough trouble of its own. (Mt. 6: 34)

I am not sure whether these words of Jesus inspired Marijohn Wilkin and Kris Kristofferson to write that famous song – ‘One Day at a Time’. When we tend to be submerged with worries about tomorrow, about what to eat, drink, wear, etc., we can surely pray these lines which help us take life ‘one day at a time’. Here are the lines of this famous song / prayer:

I'm only human, I'm just a man/woman
Help me believe in what I could be
And all that I am
Show me the stairway I have to climb
Lord for my sake, teach me to take
One day at a time

One day at a time sweet Jesus
That's all I'm askin' of you
Just give me the strength
To do every day what I have to do
Yesterday's gone sweet Jesus
And tomorrow may never be mine
Lord, help me today, show me the way
One day at a time

Do you remember when you walked among men
Well Jesus you know
If you're lookin' below, it's worse now than then
Pushin' and shovin' and crowdin' my mind
So for my sake, teach me to take
One day at a time

Two Masters – God and money

பொதுக்காலம் 8ம் ஞாயிறு

மனநல மருத்துவரான James T.Fisher என்பவர், எழுதிய ஒரு நூலின் பெயர், A Few Buttons Missing, அதாவது, "ஒரு சில பொத்தான்களைக் காணோம்". கவலைகளாலும், மன  அழுத்தங்களாலும் பாதிக்கப்பட்டோரின் பகிர்வுகளிலிருந்து, தான் புரிந்துகொண்ட உண்மைகளை, Fisher அவர்கள், இந்நூலில் பதிவு செய்துள்ளார். நூலின் இறுதி பக்கங்களில், தான் வாழ்வில் கற்றுக்கொண்ட சில பாடங்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். அப்பாடங்களில் ஒன்று, இயேசுவின் மலைப்பொழிவைப் பற்றியது: "உலகின் புகழ்பெற்ற மனநல மருத்துவர்கள், அறிஞர்கள் கூறியுள்ள அனைத்து கருத்துக்களையும் ஒன்று திரட்டுவோம். அவற்றில் உள்ள தேவையற்ற வார்த்தைகளையெல்லாம் அகற்றிவிடுவோம். மனநலம் பற்றி, ஆடம்பரமற்ற, கலப்படமற்ற உண்மைகளை எல்லாம் திரட்டினால், அவற்றில் இயேசு போதித்த மலைப்பொழிவின் சில பகுதிகளையாவது காணலாம். கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக இவ்வுலகம், வீணாகச் சுமந்து திரியும் கவலைகளுக்கும், ஏக்கங்களுக்கும், மலைப்பொழிவில், முழுமையான தீர்வுகள் உள்ளன" என்று Fisher அவர்கள் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் 33வது அரசுத் தலைவராக இருந்த Harry Truman அவர்கள், "மலைப்பொழிவு தரும் பாடங்களைப் பயன்படுத்தினால், தீர்க்கமுடியாத பிரச்சனைகள் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டிலோ, உலகிலோ எதுவும் இருக்கமுடியாது" என்று கூறியுள்ளார். கிறிஸ்தவம், சமயம் என்ற எல்லைகளைக் கடந்து, தலைவர்களையும், அறிஞர்களையும் கவர்ந்துள்ள மலைப்பொழிவின் கருத்துக்களை, கடந்த நான்கு ஞாயிற்றுக் கிழமைகள் சிந்தித்துவந்த நாம், இன்று, இறுதி முறையாக, சிந்திக்க வந்திருக்கிறோம். மலைப்பொழிவு, நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள், வருகிற புதனன்று நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்திற்குத் தகுந்ததொரு தயாரிப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன், நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

இன்றைய நற்செய்தியில், இயேசு, நமக்கு, மூன்று அறிவுரைகளைத் தருகிறார்:
·         நீங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது.
·         எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? என, கவலை கொள்ளாதீர்கள்.
·         நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்... அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.

"எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது". இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளில், இயேசு விடுக்கும் இச்சவால், உண்மையான பணியாளர்களை மனதில் வைத்து, விடுக்கப்பட்ட சவால். நாளுக்கொரு முகமூடியை அணியும் அரசியல் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், இயேசு கூறும் வார்த்தைகள், அர்த்தமற்றதாகத் தெரியும். பணம் தந்தால், 'இரு தலைவர்கள்' என்ன, 'ஈராயிரம் தலைவர்களுக்கும்' தங்களால் பணிவிடை செய்யமுடியும் என்பதை, நம் அரசியல்வாதிகள், இயேசுவுக்குச் சொல்லித்தர முற்பட்டாலும், ஆச்சரியமில்லை.

இச்சவாலைத் தொடர்ந்து, இயேசு விடுக்கும் அடுத்த எச்சரிக்கை: "கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது". இந்த எச்சரிக்கையைக் கேட்கும் அரசியல் தலைவர்களும், தொண்டர்களும், உள்ளூர ஏளனமாய்ச் சிரித்துக்கொள்வார்கள். அவர்கள் சிரிப்பதற்குக் காரணம், இதுதான்...கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது என்று யார் சொன்னது? நாங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்கிறோம். ஏனெனில் எங்கள் கடவுளே, செல்வம்தான்என்று சொல்பவர்கள் இவர்கள்.

"கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது" என்று இயேசு சொல்வது, செல்வத்திற்கு எதிராக, செல்வத்தைக் கண்டனம் செய்து, சொல்லப்பட்ட கூற்றாகத் தோன்றலாம். செல்வம் சேர்ப்பது, செல்வத்தைப் பகிர்வது, இவற்றை, இயேசு குறை கூறவில்லை. செல்வத்திற்குப் பணிவிடை செய்வதையே அவர் தவறு என்று எச்சரிக்கிறார். செல்வம், நமக்குப் பணிவிடை செய்யவேண்டும். அதற்கு மாறாக, உயிரற்ற செல்வத்திற்கு, உயிரும், அறிவும் கொண்ட நாம் பணிவிடை செய்வது தவறு என்று, இயேசு எச்சரிக்கிறார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் அடுத்த அறிவுரை: எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? என, கவலை கொள்ளாதீர்கள்.
இந்த அறிவுரையைப் பற்றி அழுத்திப் பேச எனக்குச் சிறிது தயக்கம், பயம். என் உடன்பிறந்தோர், உறவினர், நண்பர்கள் மத்தியில் அவ்வப்போது நான் இந்த அறிவுரையை நினைவுறுத்தியிருக்கிறேன். அவர்களில் பலர் எனக்குத் தந்த பதில் இதுதான்: "சாமி, உங்களுக்கென்ன, புள்ளயா, குட்டியா, கவலைப்படுவதற்கு? கவலைப்படவேண்டாம்னு நீங்க சுலபமா சொல்லிடுவீங்க. ஆனா, எங்க நிலைல இருந்தீங்கனாத் தெரியும்" என்பது, அவர்களின் வாதம். குடும்ப பாரம் என்றால் என்ன என்பதை, அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நானல்ல, ஏற்றுக்கொள்கிறேன். குடும்ப பாரங்களைச் சுமப்பவர்களின் கவலைகள், ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. உண்மைதான். ஆனால், கவலைகளின் சுமைகளால், நமது உள்ளங்கள் நொறுங்கிப் போகாமல் காக்கும் வழிகளை முயன்று பார்க்க, இஞ்ஞாயிறு, நமக்கு வாய்ப்பளிக்கிறது.

கடவுளையும், செல்வத்தையும், இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியில் இணைத்துப் பேசிய இயேசு, கடவுளையும், கவலைகளையும் இரண்டாம் பகுதியில் இணைத்துப் பேசுகிறார். செல்வத்தைக் கடவுளுக்கு இணையாக வைத்து வழிபடுவதும், பணிவிடை செய்வதும் தவறு என்று கூறும் இயேசு, கடவுளை நம் கண்களிலிருந்து மறைக்கும் அளவு, நம்மை நாமே, கவலைகளில் மூழ்கடித்துக்கொள்வது பற்றியும் எச்சரிக்கிறார். சிறு, சிறுத் துளிகளாய் சேரும் கவலைகளைத் தீர்க்கும் வழிகளைச் சிந்திக்காமலிருந்தால், விரைவில், அவை, கடலாக மாறி, நம்மை மூழ்கடிக்கும்.

Erma Louise Bembeck என்ற எழுத்தாளர், 1960களில் அமெரிக்க நகர வாழ்வைப்பற்றி, சிறு பகுதிகளாக நாளிதழ்களில் எழுதிவந்தார். நகைச்சுவையோடு ஆழ்ந்த கருத்துக்களை இணைத்து இவர் சொன்ன எண்ணங்கள், 15 புத்தகங்களாய் வெளிவந்துள்ளன. புதிதாகச் சேர்ந்துள்ள பள்ளிக்குச் செல்ல பயந்த Donald என்ற சிறுவனைப்பற்றி Erma அவர்கள் எழுதிய ஒரு சிறு பகுதி இது: "என் பெயர் டொனால்டு. என்னுடைய ஒரு பல் ஆடிக்கொண்டிருக்கிறது. நான் இதைப்பற்றி அதிகம் கவலைப்பட்டதால், இரவு சரியாகத் தூங்க முடியவில்லை. நாளை நான் செல்லவிருக்கும் புதிய பள்ளியின் உணவகத்தில், நாற்காலிகள் அதிக உயரமாய் இருந்தால், நான் எப்படி அதில் ஏறி அமரமுடியும்? நான் பள்ளியில் முகம் கழுவும்போது, என் சட்டையில் குத்தப்பட்டுள்ள அட்டையில் தண்ணீர்பட்டு, என் பெயர் அழிந்துவிட்டால், என்ன செய்வேன்? ஆடிக்கொண்டிருக்கும் என் பல், வகுப்பு நேரத்தில் விழுந்துவிட்டால், என்ன செய்வேன்? கொட்டும் இரத்தத்தை யார் துடைப்பார்கள்?"
சிறுவன் டொனால்டின் இந்தக் கவலைப்பட்டியலை வாசிக்கும்போது, வயதில் வளர்ந்துவிட்ட நமக்குள், இலேசான கேலிச்சிரிப்பு தோன்றுகிறது... பாவம் டொனால்டு என்ற பரிதாபமும் எழுகிறது... இல்லையா? மனதைத் தொட்டுச்சொல்வோம். எத்தனை முறை நாம், சிறுவன் டொனால்டாக மாறியிருக்கிறோம், இன்றும் மாறிவருகிறோம்? பெரிதும், சிறிதுமாக, எத்தனை கவலைகள் நம் தூக்கத்தை துரத்தியடித்துள்ளன?

அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றும் Thomas Borkovec என்ற பேராசிரியர், கவலைகளைப்பற்றி ஆய்வுகளை மேற்கொண்டவர். எந்தக் கவலை, பெரும்பாலான மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது என்பதை அறிய அவர் மேற்கொண்ட ஆய்வு, நமக்கு ஆச்சரியம் தரும் ஒரு முடிவை வழங்கியுள்ளது. போர்கள் பற்றிய அச்சம், பொருளாதாரச் சிக்கல்கள், இயற்கைச் சூழலின் சீரழிவு, தொற்றுநோய்கள், மணமுறிவு போன்ற காரணங்கள், பெரும்பாலான மனிதர்களை, பெரும் கவலைக்குள்ளாக்குவது கிடையாது என்பதை, பேராசிரியர் Borkovec அவர்கள், கண்டுபிடித்துள்ளார். நம்மில் பலரை அலைக்கழிக்கும் ஒரு பெரும் கவலை: அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை. "இது நடந்தால், அவர்கள் என்ன நினைப்பார்கள், என்ன சொல்வார்கள், அவர்கள் நம்மைப் பார்த்து சிரிப்பார்களே!" என்ற எண்ணங்களே, பெரும்பாலானவர்கள் தன்னிடம் பகிர்ந்துகொண்ட கவலைகள் என்று, பேராசிரியர் Borkovec அவர்கள் கூறியுள்ளார்.

அடுத்தவரை மையப்படுத்தி, கவலைகளில் மூழ்கிப் போவதற்குப் பதில், ஆண்டவனை மையப்படுத்தி, நம் கவலைகளிலிருந்து வெளியேறுமாறு இயேசு அழைப்பு விடுக்கிறார். கவலைகளுக்குப் பதில், கடவுள் நம்பிக்கையால் மனதை நிரப்புவதே, கவலைகளிலிருந்து வெளியேறும் சிறந்த வழி என்று இயேசு சொல்லித் தருகிறார். கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்டமுடியும்? என்று அவர் நமக்கு முன் வைக்கும் ஓர் எதார்த்தமான சவால், நம்மை விழித்தெழச் செய்கிறது. கவலைப்படுவதால், ஒருவேளை, நாம் குறுகிப் போக, உடல்நலம் குறைந்துபோக அதிக வாய்ப்புக்கள் உண்டு.
முன்னேற்றத்தில் வளர்ந்துள்ளதாக முரசுகொட்டும் முதல்தர நாடுகளில், தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்துள்ளது என்பது நமக்குத் தெரியும். தற்கொலைக்கு அடுத்தபடியாக, கவலைகளால் உருவாகும் வயிற்றுப்புண், இரத்த அழுத்தம், இதயக் கோளாறு ஆகியவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்று சொல்கின்றன, இன்றையப் புள்ளிவிவரங்கள். கவலைப்படுவதால், உடல் உயரத்தைக் கூட்டமுடியாது, உடல் நலத்தையும் கூட்டமுடியாது.

செல்வம் சேர்க்காதீர்கள், கவலைப்படாதீர்கள் என்று இயேசு சொல்லவில்லை. காசையும், கவலைகளையும் கடவுளுக்கு இணையாகவோ, கடவுளாகவோ மாற்றவேண்டாம்; அவற்றிற்குக் கோவில் கட்டவோ, அவற்றிற்கு அடிமைகளாய் பணிவிடை செய்யவோ வேண்டாம் என்பதே, இயேசு ஆணித்தரமாகக் கூறும் ஆலோசனைகள்.
இயேசு, இன்று, நற்செய்தியின் இறுதியில் கூறும் வார்த்தைகள், நம் மனதில் ஆழமாய் பதியவேண்டும். வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய, மிகவும் எளிதான அறிவுரை இது: நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்... ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், Marijohn Wilkin, Kris Kristofferson என்ற இருவரும் உருவாக்கிய “One Day At A Time” அதாவது, ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு நாளாக... என்ற புகழ்பெற்ற பாடல், பல்லாயிரம் மக்களின் மனங்களிலிருந்து எழும் வேண்டுதலாக, ஒவ்வொரு நாளும் விண்ணைநோக்கிச் செல்கிறது. வாழ்வை, ஒவ்வொரு நாளாக எதிர்கொள்ளும் பக்குவத்தை நாம் பெறவேண்டும் என்ற உணர்வுடன், பல்லாயிரம் உள்ளங்களுடன் நாமும் இச்செபத்தில் இணைவோம்:
நான் ஒரு சாதாரண மனிதப்பிறவி.
இறைவா, நான் யார் என்பதையும்,
யாராக இருக்கமுடியும் என்பதையும், நம்புவதற்கு உதவும்.
இறைவா, நான் ஏறிச்செல்ல வேண்டிய படிக்கற்களைக் காட்டும்.
நேற்று என்பது போய்விட்டது, நாளை என்பது வராமலேயே போகலாம்...
எனவே, இன்று மட்டும் எனக்கு உதவி செய்யும்...
வாழ்வை, ஒவ்வொரு முறையும்,
ஒவ்வொரு நாளாக எடுத்துக்கொள்ள
இறைவா, எனக்குச் சொல்லித்தாரும்.



21 February, 2017

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 8

Job and his wife by Ilya Yefimovich Repin

ஒரு வீடு வாங்கச் செல்வதாக கற்பனை செய்துகொள்வோம். அந்த வீட்டின் வரவேற்பறையைப் பார்த்ததும், அந்த வீட்டை வாங்க முடிவு செய்துவிட மாட்டோம். அதேபோல், கார் ஒன்றை வாங்கச் செல்பவர், அந்தக் காரின் ஒரு 'டயரை'ப் பார்த்துவிட்டு, அது நல்ல கார் என்று முடிவெடுக்கமாட்டார். வீட்டையோ, ‘காரையோ, பகுதி, பகுதியாகவும், முழுமையாகவும் பார்த்தபின்னரே நாம் முடிவெடுப்போம்.
வாழ்வில் நாம் சந்திக்கும் அனுபவங்களையும் அவ்வாறே கண்ணோக்க வேண்டும். ஓரிரு அனுபவங்களை வைத்து, நம் வாழ்வு இப்படித்தான், அல்லது, அப்படித்தான் என்று நாம் முடிவெடுப்பது சரியா என்று சிந்திக்கவேண்டும். 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற பழமொழியை அவ்வப்போது பயன்படுத்துகிறோம். ஒரு பானையிலுள்ள சோறு, முழுவதும் வெந்துவிட்டதா என்பதை தீர்மானிக்க, ஓரிரு பருக்கைகளை சோதித்து தெரிந்துகொண்டால் போதும் என்பது உண்மைதான். ஆனால், அந்த வழிமுறை, நம் வாழ்வின் அனைத்து அனுபவங்களுக்கும் பொருந்தும் என்று தீர்மானிப்பது சரியல்ல.
இருப்பினும், வாழ்வில் பல வேளைகளில் இந்த பழமொழியைப் பின்பற்றியுள்ளோம் என்பதை மறுக்க இயலாது. எடுத்துக்காட்டாக, ஒரு தனி மனிதர் நடந்துகொள்ளும் முறையை வைத்து, அவர் சார்ந்திருக்கும் குழுவினரை நாம் எடைபோடுகிறோம். அல்லது, ஒருவர் செய்த ஓரிரு செயல்களை வைத்து, 'அவர் எப்போதும் அப்படித்தான்' என்று முடிவெடுக்கிறோம். இந்த முற்சார்பு முடிவுகளுக்குப் பக்க பலமாக, 'ஒரு சோறு பதம்' என்ற இந்தப் பழமொழியையும் பயன்படுத்துகிறோம். இத்தகைய அவசர முடிவுகள், நம் வாழ்விலும், மற்றவர் வாழ்விலும் குழப்பங்களை உருவாக்கியுள்ளதை நாம் அறிவோம்.

அவசர, அரைகுறை முடிவுகள் எடுப்பதைப்பற்றி சிந்திக்கும்போது, கதையொன்று நினைவுக்கு வருகிறது. இது, பலருக்கும் தெரிந்த கதை என்றாலும், இன்று மீண்டும் அதை ஒருமுறை அசைபோடுவது பயனளிக்கும். ஒரு சிற்றூரில் வாழ்ந்த ஒரு விவசாயி, அழகான வெள்ளைக் குதிரையை வளர்த்துவந்தார். சுற்றுவட்டாரத்தில் இருந்த அனைத்து ஊர்களிலிருந்தும், அந்தக் குதிரையைப் பார்க்க பலர் வந்தனர். பல செல்வந்தர்கள் அந்தக் குதிரையை வாங்க முன்வந்தனர். ஆனால், விவசாயியோ, "இக்குதிரை என் நண்பன். ஒரு நண்பனை என்னால் விற்கமுடியாது" என்று மறுத்துவிட்டார். ஒருநாள் காலை அக்குதிரையைக் காணவில்லை.
ஊர் மக்கள் விவசாயியிடம் வந்து, "நாங்கள் எவ்வளவோ சொல்லியும், அந்தக் குதிரையை நீ விற்கவில்லை. இப்போது, யாரோ ஒருவர், அதை திருடிச் சென்றுவிட்டார். இது உனக்கு வந்த சாபக்கேடு" என்று சொன்னார்கள். விவசாயி அவர்களிடம், "என் குதிரை இப்போது இங்கு இல்லை. அது மட்டும்தான் உண்மை. மற்றபடி, அது திருடப்பட்டது, அது, எனக்கு வந்த சாபக்கேடு என்று சொல்வதெல்லாம், நீங்கள் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள்" என்று கூறினார்.
ஒரு சில நாட்கள் சென்று, அந்த வெண்குதிரை திரும்பி வந்தது. அத்துடன், வேறு நான்கு காட்டுக் குதிரைகளும் வந்து சேர்ந்தன. கிராமத்தில் இருந்தவர்கள், "நீ உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்று வாழ்த்தினர். விவசாயி மறுமொழியாக, "மீண்டும் சொல்கிறேன். அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். என் குதிரை மீண்டும் வந்துள்ளது; அத்துடன், இன்னும் நான்கு குதிரைகள் வந்துள்ளன. இதுதான் உண்மை" என்றார்.
வீட்டுக்கு வந்த காட்டுக் குதிரைகளைப் பழக்குவதற்கு, விவசாயியின் மகன் முயன்றபோது, ஒரு குதிரை அவனைத் தூக்கி எறிந்ததால், அவனது கால்கள் உடைந்தன. மீண்டும் ஊர்மக்கள் கூடிவந்து, "காட்டுக் குதிரைகள் வந்தது, ஒரு சாபம்" என்று சொல்ல, விவசாயி, மீண்டும் அதை மறுத்து, "என் மகனுக்குக் கால்கள் உடைந்தன என்பது மட்டுமே உண்மை" என்று அமைதியாகப் பதிலளித்தார்.
அதற்கடுத்த வாரம், ஊருக்கு வந்த இராணுவ அதிகாரிகள், அங்கிருந்த இளைஞர் அனைவரையும் இராணுவத்தில் பணியாற்ற வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். விவசாயியின் மகன் காலுடைந்து படுத்திருந்ததால், அவனை மட்டும் விட்டுச் சென்றனர்.
இம்முறை, ஊர்மக்கள் கூடிவந்து, விவசாயியின் மகனுக்கு கால் உடைந்ததும் ஒருவகை ஆசீர்வாதம்தான் என்று சொல்ல, மீண்டும் விவசாயி அவர்களிடம், "என் மகனை இராணுவத்திற்கு இழுத்துச் செல்லவில்லை என்பது மட்டுமே உண்மை. மற்றபடி, இதை ஆசீர் என்றோ, சாபம் என்றோ நான் சொல்ல விரும்பவில்லை. அது, கடவுளுக்கு மட்டுமே தெரியும்" என்று தெளிவாகக் கூறினார்.

நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும், நல்லது, அல்லது, தீயது என்று தீர்மானித்து, அதை, ஆசீர், அல்லது, சாபம் என்று முடிவெடுத்த ஊர் மக்கள் நடுவே, நடந்தவற்றை நிகழ்வுகளாக மட்டுமே கண்டுவந்த அந்த விவசாயியின் மனநிலையை, விவிலியத்தில் கூறப்பட்டுள்ள யோபிடம் நாம் காண்கிறோம். யோபு, தன் சொத்துக்கள், பணியாளர்கள், இறுதியில், தன் புதல்வர், புதல்வியர் என்று அனைத்தையும் இழந்தபின்னரும், "ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!" (யோபு 1: 21) என்று கூறினார்.
யோபின் உடல், வேதனைத் தீயில் வெந்துகொண்டிருந்தபோது, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல், அவரது மனைவி அவரிடம், "இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?" (யோபு 2:9) என்று கூறுகிறார். அக்கொடிய வேதனையின் நடுவிலும், "நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம், ஏன் தீமையைப் பெறக்கூடாது?" (யோபு 2:10) என்று கூறக்கூடிய மனப் பக்குவத்தைப் பெற்றிருந்தார் யோபு.

இந்நிகழ்வைக் குறித்து சிந்திக்கும், யூத மத குரு, ஹெரால்டு குஷ்னர் அவர்கள், 'யோபு நூல் - நல்லவர் ஒருவருக்கு பொல்லாதவை நிகழ்ந்தபோது' என்ற தன் நூலில், யோபின் மனைவியும், சாத்தானும், தங்கள் எண்ண ஓட்டங்களில் ஒருமித்திருந்ததைப் பற்றி குறிப்பிடுகிறார்.
மனிதர்கள், துன்பங்களைச் சந்திக்கும்போது, கடவுளைப் பழித்து, சாபமிடுவர் என்பது, சாத்தானின் எதிர்பார்ப்பு. தன் எதிர்பார்ப்பு சரியானது என்பதை, கடவுளுக்குக் காட்டவே, சாத்தான், யோபின் உடைமைகள் மீதும், உடல் மீதும் துன்பங்களைச் சுமத்துகிறான். இத்தனை துன்பங்களுக்குப் பிறகும், யோபு இறைவனைப் பழிக்காமல் இருப்பது, சாத்தானைத் தோல்வியுறச் செய்கிறது. தன் தோல்வியை, எரிச்சலை, யோபின் மனைவி வழியே சாத்தான் வெளிப்படுத்துகிறான்: "இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?" (யோபு 2:9) என்பது, உண்மையிலேயே சாத்தான் கூற விழைந்த வார்த்தைகள் என்று, ஹெரால்டு குஷ்னர் அவர்கள் கூறுகிறார்.

நாம் அனைவரும் வாழ்வில் இழப்புக்களையும், நோயையும் அனுபவிக்கிறோம். அவ்வேளைகளில், நம் நெருங்கிய உறவுகள், நண்பர்கள் வழியே ஆறுதல் வருகிறது. ஒரு சில நேரங்களில், உறவுகளும், நண்பர்களும் ஆறுதல் வழங்குவதோடு நின்றுவிடுவதில்லை; மாறாக, நம் துயரங்களுக்கு காரணம் என்ன என்ற ஆய்விலும் இறங்கிவிடக்கூடும். அவ்வேளைகளில், அவர்களது பிரசன்னம், பிரச்சனையாக மாறவும் வாய்ப்புண்டு.
இதையொத்த சூழல், யோபின் வாழ்வில் உருவானது. வேதனையின் பிடியில் யோபு சிக்கித் தவித்தபோது, அவரது மனைவி, 'கடவுளைப் பழித்து மடியச்' சொன்னது, யோபுக்கு உதவியாக இல்லை. இதைத் தொடர்ந்து, யோபின் நண்பர்கள் மூவர் வந்து சேர்ந்தனர். இந்தக் காட்சி, யோபு நூல் 2ம் பிரிவின் இறுதியில் இவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளது:

யோபு நூல் 2:11-13
அப்போது யோபின் நண்பர் மூவர், அவருக்கு நேர்ந்த இத்தீமை அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டனர். தேமாவைச் சார்ந்த எலிப்பாசு, சூகாவைச் சார்ந்த பில்தாது, நாமாவைச் சார்ந்த சோப்பார் ஆகியோர், தம்மிடத்திலிருந்து கிளம்பி வந்து, அவரிடம் துக்கம் விசாரிக்கவும், அவருக்கு ஆறுதல் கூறவும் ஒன்றுகூடினர்.
தொலையிலிருந்தே கண்களை உயர்த்திப் பார்த்தபோது, அவரை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவர்கள் வாய்விட்டு அழுதார்கள்; ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். வானத்தை நோக்கித் தங்கள் தலையில் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டார்கள்.
அவரோடு அவர்கள் ஏழு பகலும், ஏழு இரவும் தரையில் உட்கார்ந்திருந்தனர். அவருடைய துயரின் மிகுதியைக் கண்டு எவரும் ஒரு வார்த்தைகூட அவருடன் பேசவில்லை.

யோபும், அவரது நண்பர்களும், ஏழு நாட்கள், இரவும் பகலும் காத்த அந்த மௌனத்தைத் தொடர்ந்து, யோபு தனக்குள் புதைத்து வைத்திருந்த எண்ணங்களை ஓர் அருவிபோல கொட்டுகிறார்.

தன் நண்பர்களின் தோழமையில், தன் வேதனைகளை யோபு பகிர்ந்துகொள்வதைப் பார்க்கும்போது, புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர், ஆல்பிரெட் டென்னிசன் (Alfred Tennyson) அவர்கள் எழுதிய, "Home They Brought Her Warrior Dead" அதாவது, அவளது இறந்த வீரனை இல்லம் கொணர்ந்தனர் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது.
போரில் இறந்த இளம் வீரரின் உடல், இல்லத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. அந்த உடலைக் கண்ட வீரரின் மனைவி, எவ்வித உணர்வும் இன்றி, ஒரு சிலைபோல அமர்ந்திருக்கிறார். இதைக் காணும் அவரது தோழியர், "அவள் அழவேண்டும், இல்லையெனில் இறந்துவிடுவாள்" என்று தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். அவரை அழவைப்பதற்காக, வெவ்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். வீரரின் குணம், அவர் அடைந்த புகழ் அனைத்தையும் பற்றி பேசுகின்றனர். வீரரின் முகத்தை மூடியிருந்த துணியை அகற்றுகின்றனர். எனினும், அவ்விளம்பெண் சிலைபோல அமர்ந்திருக்கிறார். அவ்வேளையில், 90 வயது நிறைந்த ஒரு மூதாட்டி, அவ்விளம் பெண்ணின் கைக்குழந்தையை, அவரது மடியில் வைக்கிறார். உடனே, அவ்விளம்பெண்ணின் உள்ளத்தில் புதைந்திருந்த துயரம், ஒரு கோடைப் புயலாக கொந்தளிக்கிறது. கண்ணீரோடு அவர் அக்குழந்தையிடம், "என் இனிய செல்லமே, உனக்காக நான் வாழ்கிறேன்" என்று கூறுகிறார்.
குழந்தையின் வருகை, அந்த இளம்பெண் பூட்டிவைத்திருந்த அனைத்து உணர்வுகளையும் வெளிக் கொணரந்ததுபோல், நண்பர்களின் வருகை, யோபின் உள்ளத்தில் பூட்டிவைக்கப்பட்டிருந்த உணர்வுகளைத் திறந்து விட்டன. நண்பர்கள் முன் யோபு வேதனையோடு கொட்டிய வார்த்தைகள், எழுப்பிய கேள்விகள் அனைத்தும், அடுத்தத் தேடலில், நம்மை வழிநடத்திச் செல்லட்டும்.